சனி, 24 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 15

யோகப் பயிற்சியில் "பிராணாயாமம்" என்ற ஒரு பயிற்சி சொல்லிக் கொடுப்பார்கள். அது சாதாரணமான மூச்சுப் பயிற்சி. ஆஸ்த்மா வியாதியஸ்தர்களுக்கும் இன்னும் சிலருக்கு மூச்சு ஒழுங்கு செய்யவும் பயன்படும் இது. இதற்கும் குண்டலினி யோகம் என்பதற்கும் ரொம்பவே வேறுபாடு உண்டு. மூச்சுப் பயிற்சியே ஆசான் இல்லாமலோ சரியாகச் செய்யாவிட்டாலோ பக்க விளைவுகள் ஏற்படும். மூச்சைச் சரியாக உள்ளடக்காவிட்டாலோ வெளிவிடும் போது தவறாய் விட்டாலோ வயிற்றில் அல்சர் உள்ளவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. மற்றவருக்கும் ஏற்படும். இது அனுபவபூர்வமான உண்மை. ஆகையால் குண்டலினி யோகம் என்பது நம் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது கண் என்று சொல்லப்படும் ஞானக் கண்ணைத் திறந்து அதன் மூலம் இறைவனும் அவன் சக்தியும் நம்முள்ளேயே உறைவதைக் காண்பது. இதைத் தான் சமாதி நிலை என்றும் சொல்லுகிறார்கள். இனி குண்டலினி யோகத்தைப் பற்றி. இதைப் பற்றி இங்கே எழுதுவது தேவையா எனவும் நினைத்தேன். சிதம்பர ரகசியத்தின் உள் அர்த்தம் புரியத் தேவை எனறே தோன்றியது. நம் உடலில் முதுகெலும்பின் கீழ்ப்பாகத்தில் மூன்று நாடிகள் ஒன்று சேர்கின்றன. தலை உச்சியில் இருந்து கீழ் இறங்கி இருக்கும் சூஷ்மன நாடியானது இட பிங்கள நாடியுடன் அங்கே தான் ஒன்று சேர்கிறது. அது ஒரு பாம்பு போல் சுருட்டிக் கொண்டிருக்கும் எனச் சொல்கிறார்கள். இங்கே இருக்கும் உள்சக்தியை எழுப்பிக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்து தலை உச்சிக் கொண்டு வந்து சேர்ப்பது தான் குண்டலினி யோகம். இந்தப் பிரபஞ்சமானது எவ்வாறு பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனதோ அவ்வாறே மனித சரீரமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு சக்தி. அதாவது ஒவ்வொரு பஞ்சபூதங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன. நம் நாட்டுக் கோயில்களும் முக்கியமாய்த் தமிழ் நாட்டுக் கோயில்களும் நம் மனித உடல் அமைப்பைக் கொண்டது. இதை மனதில் இருத்திக் கொண்டு சிதம்பரம் கோயிலின் ரகசியத்தைப் பார்க்கவேண்டும்.

மூன்று நாடிகள் ஒன்று சேரும் இடம் "மூலாதாரம்" எனப்படுகிறது. இது நம் உடலில் முதுகெலும்பின் கீழ் மலத்துவாரத்துக்குச் சற்று மேலே அமைந்துள்ளது. 4 இதழ் கொண்ட அமைப்புடன் கூடிய இதைப் பூமிக்குச் சமமாகச் சொல்கிறார்கள். மஞ்சள் நிறம் கொண்ட 4 இதழ் தாமரைப் பூவுக்குச் சொந்தமானது. இதற்கெனத் தனியான குணங்களும் உண்டு. அவை பின்னால் பார்ப்போம்.
மூலாதாரத்துக்கு 2 விரல் கடை மேலே அமைந்துள்ளது "ஸ்வாதிஷ்டானம்" 6 இதழ் கொண்ட தாமரைப்பூவின் அமைப்புக் கொண்ட இது நீருடன் சம்மந்தம் கொண்டது. உருக்கி வார்த்த சுத்த வெள்ளியின் நிறம் கொண்டது.

மிண்டும் நாளை சந்திக்கலாம்
சிதம்பர ரகசியம் பகுதி : 16
இந்த பகுதி சற்று மாருதலும் கொஞ்சம் தேவையானதும் கூட

மூலாதாரம் : 4 இதழ் கொண்ட தாமரைப்பூவின் வடிவில் இருக்கும் இங்கே தான் குண்டலினி சக்தியானது ஒரு பாம்பைப் போல் உறங்குகிறது. மலத்துவாரத்திற்கு மேல் இருக்கும் இது பூமியின் சக்தியைக் கொண்டது. மஞ்சள் நிறமானது. எலக்ட்ரிகல் சர்க்யூட்டில் உள்ள நெகட்டிவ் போலைப் போல் வேலை செய்யும் இது குண்டலினி சக்தி எழும்புவதற்குக் காத்திருக்கிறது. இட, பிங்கள, சூஷ்மன நாடிகள் மூன்றும் இங்கே தான் ஒன்று சேர்ந்து உள்ளது. அதற்கு இது தான் ஆதாரமாயும் உள்ளது. இதன் அதி தேவதை : விநாயகர், இந்திரன், பிரம்மா, தாகினி. இது நம் உடலில் மலத்துவாரம், மூக்குத் துவாரம், பாதங்கள், ஆடுசதை, தொடையின் மறுபக்கம் காலை நம் இஷ்டத்துக்கு வளையவும், நடக்கவும் வைக்கும் நரம்பு மண்டலம். உணர்வுகள்; மலத்தை வெளியேற்றுதல், பலவிதமான அனாவசிய பயங்கள், குற்ற உணர்ச்சி.

ஸ்வாதிஷ்டானம் : மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலே ப்யூபிக் போனில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட இது நீரின் சக்தியைக் கொண்டது. வெள்ளியை உருக்கி வார்த்தாற்போல் இருக்கும்.

உணர்வுகள் : மயக்கநிலை, தன்னை மறந்த நிலை என்றும் சொல்லலாம். பாலுணர்வுத் தூண்டுதல் ஏற்படும். இங்கே இருந்து குண்டலினையை மேலே எழுப்ப மிகப் பிரயத்தனப் பட வேண்டும். பாலுணர்வை முற்றிலும் வெல்ல வேண்டும். இதன் அதி தேவதை: வருணன், விஷ்ணு, ராகினி நம் உடலில் உள்ள சிருஷ்டிக்குக் காரணமான டெஸ்டெஸ் மற்றும் ஓவரிஸ் இதனோடு சம்மந்தப் பட்டது. செக்ஸுவல் ஹார்மோன் உற்பத்தி ஆகும் இடம்.

மணிப்பூரம் : தொப்புள் இதன் இருப்பிடம். 10 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்பின் சக்தியுடன் சம்மந்தப் பட்டது. சிவந்த நிறம் கொண்டது.

உணர்வுகள் : தாகம், பசி, பொறாமை, ஏமாற்றுதல், வெட்கம், பயம், அசட்டுத் தனம், துக்கம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மன உறுதியுடன் சம்மந்தப் பட்ட இது நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும் உறுப்புக்களையும் தூண்டும்.

அதி தேவதை : வாஹினி, ருத்ரன், லாகினி

உடல் பாகங்கள் : ஜீரண உறுப்புக்கள், கண்கள், பாதங்கள், கணையத்துடன் சம்மந்தப் பட்டு ஜீரண நீர் உற்பத்தி அடையச் செய்கிறது.

இந்த சக்கரங்களுக்கும் நாளமில்லச் சுரப்பிகளுக்கும்( endocrine glands) பல நேரடித் தொடர்புகள் உண்டு.

மூலாதாரம் - adrenal gland
அனாஹதம் - thymus
ஆக்ஞா -pieneal
சஹஸ்ராரா - pitutary
விஷுத்தி - thyroid(இதை நீங்களும்
குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். )

மணிபூரம் - solar plexus (இதுநாளமில்லாச் சுரப்பி அல்ல. நாபிக்கருகிலுள்ள நரம்புக் கூட்டம் )
ஸ்ரீ நாம பலம்

சரி..... இன்னைக்கு மஹாபாரத பதிவு போடலாம்ன்னு யோசிச்சா கடைசி வரை போதாந்திராளே ஞாபகத்துக்கு வந்துட்டு இருக்கார்... எல்லாம் இந்த பயபுள்ள  காலைல பண்ணின வேலையாத்தான் இருக்கும்ன்னு நினைச்சிட்டு பகவான் நாமம் பற்றி கோடானகோடியில் ஒரு துளி எழுதுகிறேன்...

ஏன்னா ! போதாந்திராள் நாமத்துக்காகவே வாழ்ந்து அதை பரப்பி அந்த நாமமாகவே ஆனவர். தன் குரு ஸ்தானத்தில் செய்து கொண்ட சபதத்திற்க்காக தினமும் 100008 ராம நாமம் சொன்னவர். இவரும் நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திரரும் ஆத்ம நண்பர்கள். சரி... லட்சத்து எட்டாயிரம் ஜபம்தானே அப்படின்னு சும்மாவும் சொல்ல முடியாது. ஏன்னா ஒரு நாளைக்கே 86400 நொடி தான்... அப்ப நீங்களே யோசிச்சுக்கோங்க... இவருதான் இப்படின்னா நம்ம தியாக பிரம்மம் தினமு ம் 125000 ராம நாம ஜபம் முடிச்சார். இப்படி 21 வருடத்தில் 96 கோடி ஜெபத்தை சங்கல்பித்து முடித்தார்...

அந்த நாம சாகரத்தின் மதிப்பு அப்படி....

 போதாந்திராள் பகவன் நாம ரஸாயனம் அப்படிங்கர புத்தகத்தில் சொல்லிருப்பார்...

" ஸதானந்த: ஸ்ரீமான் அனுபதிக்காருண்யவிவாஸோ! ஜகத்ஷேமமாய ஸ்ரீ ஹரிகிரிஸ்ரூபம் வித் ரூதவான்!... " இப்படிங்கர ஸ்லோகத்தில் சொல்லுவார்...

காரணமேதுமின்றி கருணை செய்பவருமான நிர்வ்யாஜ கருணா மூர்த்தியான பகவான் மஹா விஷ்ணு, பரமசிவன் என்ற ரூபம் தரித்தாலும்... இது உலகை உய்விக்க போதாதென்று நினைத்து விஷ்ணு, சிவன் நாம ரூபமாக எழுச்சியுடன் நின்றாராம். (பகவான் நம்ம மேலே கருணை செய்யருக்கு காரணமே வேண்டியதில்லைங்கரார்).

விஷ்ணு சஹஸ்ரநாமம் முன்னுரையில் சொல்லும் போதும்... இதர தர்மத்தை நோக்குங்கால், அவைகளை விட சிறந்ததாக நாம சங்கீர்த்தனம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது. ப்ரஹமாண்ட புராண ஆரம்பத்தில் "ஹரி கீர்த்தனம்' என்ற ஸ்துதிக்கு உபதேசம் பெறுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுத்தம் அசுத்தம் என்ற காரணமும் இல்லை ஆதலால் உடனே சொல்லவேண்டும் என்று சொல்லப்படுகிறது.  அதாவது " ச ஸ்மஸானச்ண்டாலவாடிகாதினிஷித்ததேஸேஸு ந கார்யம் அனிஷித்தேஸேஷ்வேவ கார்யமிதி....." அப்படிங்கர வாக்கியத்தில், இடு/சுடுகாடு, தீண்டத்தகாதோர் வசிக்கும் இடம், புனிதமான இடம், ஜனன, மரண தீட்டுக்கள், நள்ளிரவு, காலை, மாலை என்ற கால நியதியும் இந்த நாம சங்கீர்த்தன ஜபத்திற்க்கு இல்லை. கடுமையான கலிதோஷம் வாசுதேவரின் நாம ஸங்கீர்த்தனத்தால் நீரில் உப்பு கரைவது போலே கரைகிறது.

"ஹரி" என்னும் இரண்டு எழுத்துக்கள் ஒர் எழுத்தாக சொலப்படும் போது நூற்றுக்கணக்கான ஜென்மங்களில் சேற்றுவைக்கப்பட்ட பாவகுவியலை கூட பஞ்சு பொதியை நெருப்பு நிர்மூலமாக்குவது போல பொசுக்கிவிடும் என்று போதாந்திராள் எடுத்துக்காட்டுகிறார். பத்து அஸ்வ மேத யாகம் செய்தவன் கூட மறுபிறவி அடைவான். ஆனால் கிருஷ்ணருக்கு நமஸ்காரம் செய்தவனுக்கு மறுபிறவி இல்லவே இல்லை. கிரஹண காலத்தில் கோடி கோதானம் செய்தல், பிராயகை, காசி, கங்கை முதலிய புண்டணிய ஷேத்திரங்களில் கல்பகோடி காலங்களில் வசித்தல், பல்லாயிரக்கணக்கான வேள்வி செய்தல், மேரு மலையளவு தங்கம் தானம் செய்தல் இவையனைத்தும் " கோவிந்த " சப்தத்திற்க்கு இணையாகா!!! பல்லாயிரக்கணக்கான கொலைகள் செய்த்தல், கடுமையான மதுபானங்கள், கோடிக்கணக்கான ஆசானின் மனைவியை நாடுதல் எண்ணற்ற திருட்டுக்கள் என்ற இவை அனைத்து பாபங்களும் "கோவிந்தா" என்ற நாம சங்கீர்த்தனத்தால் ஒரு நொடியில் அழிக்கப்பட்டு விடுகின்றன.

"நரகே பச்யமானஸ்து" நரகத்தில் வாட்டப்படுபவனுக்கு என்று சொல்லும் போது பூஜை செய்த்தல் என்று சொல்லப்படவில்லை. " கிருஷ்ணருக்கு நமஸ்காரம் " என்று சொன்ன உடனேயே நமஸ்காரம் செய்தல் என்ற செய்கையின் பலன் சென்றடைந்து காப்பாற்றபடுகிறான். ரிக்வேதத்தில் "ஆஸ்ய ஜானந்தோ நாம சித்விவக்தன மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம் பஜாமஹே" என்று சொல்லும் பிரஹரணத்தில், ஒரு தடவை உச்சரிக்கப்படும் நாம சங்கீர்த்தனம் தங்கு தடையின்றி ஆத்ம ஸாக்‌ஷாத்காரம் என்ற ஞானத்திற்க்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்ருதி, ஸ்மிருதி, புராணத்தில் எந்த நாமம் ஆத்யாத்மைகம், ஆதிதைவீகம், ஆதிபூத என்ற தாபங்களை தாண்டுவிக்குமோ எல்லாவித பாபங்களை நீங்க செய்யுமோ எல்லா பாபத்திற்க்கும் பிராய்ச்சித்தமாக அமைகிறதோ இதற்கு மேற்பட்ட புண்ணியம் மூவுலகிலும் இல்லை என்று சொல்லப்படுகிறதே அதுவே "ராம" நாமமாகும் என்று கூறப்படுகிறது.

ஸ்கந்த புராணத்தில் வரும் காசி காண்டத்தில் சொல்லப்படுவது போல ராம நாமமே விஸ்வ நாதர் வாக்கினால் வந்து அனைத்து ஜீவராசிகளை முக்தி அடைய செய்கின்றது. ராம நாமம் அசுரர்களை நடுங்க் வைக்கும் என்று வால்மீகி பகவானும் ராமாயணத்தில் பதிவு செய்கிறார். அதனாலே இது தாரக மந்திரம் என்று சொல்லப்படுகிறது. இதற்க்கு கால நேர விதி நியதி என்ற எந்த தடையுமில்லை. எந்த காலத்திலும் ஜெபிக்கலாம். தியாகராஜர் கீர்த்தனையில் குறிப்பிடும் போது " ராம! உன் நாம பலம் யாருக்கு தெரியும்? ஈஸ்வரரை தவிர? " என்பார். பரமேஸ்வரருக்கு மட்டுமே ராம நாமத்தை பற்றி தெரியுமாம்!!!!.....

"கிரக பலமேமி ராம! நின்னு அனுகிரஹபலமுந்தி"---  கிரஹபலம் என்னை என்ன செய்யும் ராம உன்னுடைய அனுகிரஹ பலம் இருக்கும் போது அப்படின்னு தியாக பிரம்மம் பாடினது போல... எல்லா கிரஹ பிரச்சனைகளை ராம நாம பலம் போக்கிவிடும்... ஆதலால் அனைவரும் தினமும் ஒரு குறிப்பிட்ட 5-10 நிமிடமாவது நாம ஜெபம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள். நாம ஜெபத்தின் சிகரம் தொட்ட நாம போதாந்திராள் மற்றும் தியாகபிரம்மம் அதிஷ்டானங்களை உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசித்து அந்த நாம சாம்ராஜ்யத்தில் இணைய ஆசீர்வாதிக்க பிராத்தனை செய்யுங்கள்.

நாம போதாந்திராள் அதிஷ்டானம் கும்பகோணம் மாயவரம் சாலையில் திருவிடைமருதூர் அடுத்து கோவிந்தாபுரம் என்னும் ஊரில் உள்ளது.

தியாகபிரம்மம் அதிஷ்டானம் திருவையாறு தியாகராஜர் கோவிலுக்கு எதிரில் உள்ளே ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
கிருஷ்ணர் துதி!

கிருஷ்ணாய வாஸுதேவாய தேவகி நந்தநாய
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோநம:

பொருள் : தேவகிக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனும், வாசுதேவனும், நந்தகோபனின் குமாரனும், கிருஷ்ணனுமாகிய கோவிந்தனை வணங்குகிறேன்.

நம: பங்கஜநாபாய நம: பஞ்சத மாலிநே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாஸ்ரியே

பொருள் : நாபியில் தாமரையை உடையவரும், தாமரை மாலையைத் தரித்தவரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், அழகான பத்ம ரேகையைக் கால்களில் உடையவருமான தங்களைப் பலதடவை வணங்குகிறேன்.

மூகம் கரோதி வாசாலம் பங்கும் வங்கதே கிருஹம்
யத்கிருபா பரமம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

பொருள் : பேசவே இயலாதவரையும் கூட பேச்சாற்றல் மிக்கவராக மாற்றக் கூடியவரும், குடிசையையே மாளிகையாக்கக் கூடியவருமான அந்தப் பரமானந்த மாதவனின் கருணையை வணங்குகிறேன்.

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலையார்ச்சுத:
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்

பொருள் : சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தரித்தவரும், த்வாரகாபுரியின் அதிபரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், பசுக்களைப் பரிபாலிக்கிறவருமான பிரபுவே, தங்களைச் சரணடைந்த என்னைக் காப்பாற்றுங்கள்.

த்வம் ஆதி அந்தோ பூதானாம் த்வமேவ ச பராகதி:
விஸ்வாத்மன் விஸ்வ ஜநக: விஸ்வகர்த்த: பிரபோவ்ய:

பொருள் : உலகத்தை தேகமாகக் கொண்டவரே, உலகத்தைப் படைத்தவரே, உலகத்தை அழிப்பவரே, ஹே பிரபோ, அழிவற்றவரே, பிராணிகளின் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என (ஆக்கல், காத்தல், அழித்தல்) முத்தொழிலையும் செய்பவரே உம்மை வணங்குகிறேன்.

யத்ர யோகேஸ்வர: கிருஷ்ணோ
யத்ர பாத்ரோ தனுர்த்தர:
பத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்
த்ருத்வா நீதிர் மதிர் நம:

பொருள் : எங்கு யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு வில்லேந்திய வீரன் அர்ஜுனன் இருக்கிறானோ அங்கெல்லாம் மகாலட்சுமியின் கடாட்சத்தோடு மிகுந்த ஜெயமும், அழியாத ஐஸ்வர்யமும், நீதியும் நிச்சயம் இருக்கும்.

தேவகி ஸூத கோவிந்த வாஸுதேவ ஜெகத்பதே
தேஹிமே தநயம் கிருஷ்ணா த்வாம் அஹம் சரணம் கத:

பொருள் : தேவகியின் மகனான கோவிந்தனே வாசுதேவனே, உலகத்தின் தலைவனே எனக்கு ஒரு மகனைத் தந்து அருள்வீர்.

பகவான் கூறியது

நாகம் வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே
தத்ர நிதஸ்யாமி யத்ர காயந்தி மத் பக்தா ! நிருத்யே !!

பொருள் : நான் எனது இருப்பிடமான வைகுண்டத்தில் வெகுகாலம் வசிப்பதில்லை. யோகிகளின் இதயத்திலும், வசிப்பதில்லை. எந்த இடத்தில் என் பக்தர்கள் பாடியும் ஆடியும் களிப்படைகிறார்களோ அந்த இடத்தில் நான் வசிப்பேன். அவர்கள் மனதில் நிறைந்திருந்து அவர்கள் வேண்டுவதை அருள்வேன். இது நிச்சயம் !
-----------------------------------------
ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.
-----------------------------------------
மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.
-----------------------------------------
ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.
-----------------------------------------
மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.
-----------------------------------------
பாவம் போக்கும் 12 ஜோதிர்லிங்க துதி!

புனிதமும் அழகும் நிறைந்த சவுராஷ்டிர தேசத்தில் ஜோதிமயமாக இருப்பவரும்; தலையில் பிறைச் சந்திரனைச் சூடியவரும்; எல்லையற்ற கருணை காரணமாக எல்லாருக்கும் பக்தியை அளிப்பதற்காகவே அவதாரம் செய்தவருமாகிய சோமநாதர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன். மேலான இமயமலையின் தாழ்வுப் பிரதேசத்தில், கேதாரம் என்ற இடத்தில் ஆனந்தமாகக் குடிகொண்டிருப்பவரும்; சிறந்த முனிவர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் யட்சர்களாலும் நாகர்களாலும் எப்போதும் பூஜிக்கப்படுபவரும்; இரண்டற்றவருமான கேதாரேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

மிக உயர்ந்த ஸ்ரீசைலம் என்ற மலையில், அறிஞர்களின் சத்சங்கத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு வசிப்பவரும்; சம்சாரம் என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு உதவும் தோணி போன்றவருமாகிய மல்லிகார்ஜுனர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். நல்லவர்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவந்திகா (உஜ்ஜயினி) நகரத்தில் அவதாரம் செய்தவரும்; தேவர்களுக்குத் தலைவனுமாகிய மகாகாலேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை எனக்கு அகால மரணம் நேராமல் இருக்கும் பொருட்டு வணங்குகிறேன்.  நர்மதை நதி பாயும் தூய்மையான இடத்தில், நல்லவர்களைக் காக்க எப்போதும் மாந்தாத்ரு என்ற ஊரில் வசிப்பவரும்; ஓங்காரேஸ்வரர் என்ற அத்விதீயருமான (இரண்டற்ற) சிவபெருமானை வணங்குகிறேன்.

வடகிழக்கு திசையில் கொழுந்துவிட்டு எரியும் தீ ஜ்வாலை உள்ள மயானத்தில் வசிப்பவரும்; கிரிஜா என்ற பார்வதிதேவியுடன் எப்போதும் சேர்ந்திருப்பவரும்; தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவருமாகிய வைத்தியநாதர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். தென்திசையில் மிகவும் அழகிய ஸதங்கம் என்ற நகரத்தில், நன்கு அலங்கரிக்கப்பட்ட அங்கங்களோடு நிகரற்ற செல்வங்கள் நிறைந்தவரும்; உயர்ந்த பக்தியையும் முக்தியையும் வழங்கும் ஒரே தெய்வமாகத் திகழ்பவருமாகிய நாகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன்.

தாமிரபரணி நதி கடலில் கலக்கும் இடத்தில், எண்ணற்ற அம்புகளைக் கொண்டு அணையைக் கட்டிய ஸ்ரீராமராவ் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட ராமேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை முறைப்படி வணங்குகிறேன்.

அழகாகவும் விசாலமாகவும் இருக்கும் இளாபுரம் என்ற இடத்தில் விளங்குபவரும்; பெருங்கருணையைத் தமது இயல்பாகக் கொண்டவரும்; கிருஷ்ணேஸ்வரர் (குசுருணேஸ்வரர்) என்ற பெயர் பெற்ற வருமாகிய பரமேஸ்வரனைச் சரணடைகிறேன்.

புனிதமான ஸஹ்ய மலையில், பவித்ரமான கோதாவரி நதிக்கரையில் எழுந்தருளியிருப்பவரும்; எவருடைய தரிசனத்தால் எல்லாப் பாவங்களும் விலகி விடுகின்றனவோ, அந்த த்ரியம்பகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

டாகினீ, சாகினீ முதலிய பூதகணங்கள் வசிக்கும் இடத்தில், அரக்கர்களால் வணங்கப்படுபவரும்; என்றும் பீமேஸ்வரர் என்று புகழப்படுபவரும்; பக்தர்களுக்கு நன்மை செய்பவருமாகிய சங்கர பகவானுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.

காசியில் ஆனந்தபவனத்தில் பேரானந்தத்துடன் வசிப்பவரும், மகிழ்ச்சிக் குவியலாக விளங்குபவரும்; பாவம் அகற்றுபவரும்; வாரணாசியின் தலைவரும்; ஆதரவற்ற அநாதைகளுக்கு நாதனுமாகிய விஸ்வநாதரைச் சரணடைகிறேன்.
ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம்!

சிவ வழிபாட்டின் உன்னத நோக்கத்துக்கு, பயனுக்கு நம் வேதாந்திகளின் முதல்வர் - மதச் சீர்திருத்தம் செய்தவரும் ஷண்மத ஸ்தாபகருமான ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம் என்னும் பாக்களே சிறந்த சான்று. ஆதிசங்கரர் அருளிய ஆனந்த நிலையின் ஆறு சுலோகங்கள் : (நிர்வாணாஷ்டகம்)

1. மனமும் நானல்ல; புத்தியும் நானல்ல;
நான் என்ற அகங்காரமும் நானல்ல;
அறிவும் சக்தியும் நானல்ல.
உடலின் அங்கங்களும் நானல்ல; ஆகாயம், பூமியும் நானல்ல;
ஜோதியும் நானல்ல; காற்றும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

2. உச் சுவாச, நிச் சுவாச மூச்சினால் ஆனவன் அல்ல, நான்.
கப, பித்தம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனவனுமல்ல; பஞ்ச (ஐந்து) கோசத்தால் ஆனவனும் அல்ல.
வாக்க நான் அல்ல, கை கால்களும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

3. துவேஷம் எனக்கில்லை; ராகமும் (அன்பும்) எனக்கு இல்லை. லோபமும் எனக்கில்லை; மோகமும் எனக்கில்லை.
மதமும் எனக்கில்லை, மாத்சர்யமும் (சினமும்) எனக்கில்லை, தர்மத்துக்கும் தொடிசு இல்லை, சம்பத்துக்கும் சம்பந்தமில்லை.
ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

4. புண்ணிய பாவமும் எனக்கேது? ஓதுவது, தீர்த்தாடனம் எனக்கேது? வேதம், வேள்வி எனக்கேது? சுகம் ஏது? துக்கம் ஏது?
ஹவிஸ் நானல்ல; அனுபவிக்கிறவனும் நானல்ல; அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே நான்; நானே சிவன்.

5. மிருத்யுவிடம் (மரணத்திடம்) எனக்குப் பயமில்லை. ஜாதி வித்தியாசம் எனக்கில்லை.
தகப்பனும் இல்லை; தாயும் இல்லை; பிறவியும் எனக்கில்லை;
பந்துவும் இல்லை; சினேகிதனும் எனக்கில்லை. ஆசானும் இல்லை; சிஷ்யனும் எனக்கில்லை. ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

6. சஞ்சலம் இல்லாதவன்; உருவங்களால் கட்டுப்படாதவன்; இந்திரியங்கள் அனைத்தையும் ஜயித்தவன்; பற்றை அறவே துறந்தவன்; எனக்கு முக்தியே.

பந்தமோ விஷயமோ இல்லை. ஆனந்தமய சிவனே நான் - நானே சிவன். சொல்லும் அதன் பொருளும் போல் இணைபிரியாத ஜகத்துக்கே தாய் தந்தையராக விளங்கும் பார்வதி பரமேசுவரரை நான் வணங்குகிறேன். சொல்லும் அதன் பொருளும் நான் நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.
-----------------------------------------
இதை படிச்சாலே மோட்சம் தான்!

ஏகாதசி விரதமிருந்தால் மோட்சம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசியன்று, மரணம் அடைபவர்கள் எவ்வளவு பாவம் செய்தவராக இருந்தாலும், வைகுண்டத்துக்கு சென்று விடுவார்களாமே... எனக்கு அந்த விரதம் பற்றி எதுவுமே தெரியாதே! சாப்பிடக்கூடாது, தூங்கக்கூடாது என்கின்றனர். இப்படி, கடுமையாக உடலை வருத்திக் கொண்டால் மட்டும் மோட்சம் கிடைத்து விடுமா என்ன... என்று, பலர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். ஆனால், இதெல்லாம் இல்லாமலே, பரந்தாமனை அடைந்து விட்டது ஒரு தயிர்ப்பானை. கிருஷ்ணன், ஒரு வீட்டில் வெண்ணெய் திருடிக் கொண்டிருந்தான். அவ்வீட்டுப் பெண், கிருஷ்ணனை விரட்டி வந்தாள். அவன் அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த தன் நண்பன், ததிபாண்டனிடம், கெஞ்சிக்கூத்தாடி, ஒரு பானைக்குள் ஒளிந்து கொண்டான். நண்பனும் கிருஷ்ணனை மறைத்துக் கொள்ளும் விதமாக, பானை மீது ஏறி அமர்ந்து கொண்டான். அந்தப்பெண், அங்கு வந்து, கிருஷ்ணனைத் தேடிய போது, இங்கு வரவில்லையே... என்று சொல்லி விட்டான் நண்பன். அவள் போனதும், நண்பா... பானையை விட்டு இறங்கு. நான் வெளியே வர வேண்டும்... என்றான் கிருஷ்ணன்.

முடியாது. எனக்கு மோட்சம் அளிப்பதாக வாக்கு கொடு. அப்போது தான் இறங்குவேன்... என்று நிர்ப்பந்தித்தான் ததிபாண்டன். வேறு வழியில்லாமல், கிருஷ்ணனும், உனக்கு மட்டுமல்ல. இந்த பானைக்கும் சேர்த்தே மோட்சம் தருகிறேன். முதலில் பானையை விட்டு இறங்கு... என்று வாக்குறுதி அளித்தான். ஆபத்து காலத்தில், உதவி செய்த காரணத்தால், இப்படி, ஒரு ஜடப்பொருள் கூட மோட்சத்தை அடைந்திருக்கிறது. இந்தக் கதையை தெரிந்து வைத்திருந்தார், ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராக இருந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.
அவர், ஒருமுறை, ரங்கநாதரிடம், ரங்கா... எனக்கு மோட்சம் தா... என்றார். திடீரென ஏன் இப்படி கேட்கிறீர்? என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ரங்கன். அதென்னவோ தெரியவில்லை. எனக்கு இன்றே மோட்சம் வேண்டும்.... மோட்சம் போவதென்றால் சாதாரண விஷயமா... இந்த உலகம் பொய்யானது என்ற ஞானம் உமக்கு வந்து விட்டதா... ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் பற்றியெல்லாம் தெரியுமா? என்று கேட்டார்.

தெரியாது... போகட்டும். யாருக்காவது அன்னதானம் செய்திருக்கிறீரா அல்லது என் பக்தன் தங்க இடவசதியாவது செய்து கொடுத்தீரா?
இல்லை... ரங்கநாதனுக்கு கோபம் வந்து, பாம்பு படுக்கையை விட்டு, எழுந்து விட்டார். ரங்கநாதனை அமர்ந்த கோலத்தில், அநேகமாக பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மட்டும் தான் தரிசித்திருப்பார். ஏனய்யா பிள்ளை பெருமாள் ஒன்றுமே செய்யாமல், மோட்சம் கேட்கிறீரே... அதெப்படி தர முடியும்? என்று கேட்டார் ரங்கன். ஐயங்காரும் சளைக்காமல், ஏ பெருமாளே... என்னை இத்தனை கேள்விகள் கேட்கிறாயே... ஒரு பானைக்கு, எதை வைத்து மோட்சம் கொடுத்தாய்... அதற்கென்ன பக்தியோகம், கர்மயோகம் எல்லாம் தெரியுமா... ஒரு ஜடப் பொருளுக்கே மோட்சம் தந்த நீ, எனக்கு தர மறுப்பதேன்? என்றார் விடாக்கண்டனாய். ரங்கநாதனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. திரும்பவும் படுத்து விட்டார். இந்தச் சம்பவம் மூலம் நாம் அறிவது, ஆன்மிக விஷயங்களை, தெய்வங்களின் வரலாறை நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், இவன், உலகியல் வாழ்வில் என்ன தான் நாட்டம் கொண்டவனாக இருந்தாலும், பக்தி சமாசாரங்களையும் காது கொடுத்து கேட்டிருக்கிறான். இவனை மோட்சத்துக்கு அனுப்பலாம் என்று, பரந்தாமன் முடிவு செய்வான். எனவே, ஆன்மிக நூல்களை நிறைய படியுங்கள். உடலை வருத்தி பட்டினி கிடப்பது என்பதெல்லாம், இரண்டாம் பட்சம் தான்!
-----------------------------------------
சத்ய நாராயண விரதமுறையும் பலனும்!

அனுஷ்டிக்க விதிமுறைகள்: ஆந்திராவில் மிகவும் பிரபலமானது சத்ய நாராயண விரதம். சமீப காலமாக தமிழக பக்தர்களும் இதைகடைபிடிக்கின்றனர். மகாவிஷ்ணுவே சத்ய நாராயணர். இந்தவிரதத்தை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கடைபிடிக்க வேண்டும். (பவுர்ணமியன்று பெண்களுக்கு வசதிப்படாவிட்டால், தமிழ் மாதப்பிறப்பு அல்லது வளர்பிறை ஏகாதசி திதியன்று விரதமிருக்கலாம்) இந்தவிரதம் எளிமையானது. இதைகணவனும், மனைவியும் சேர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30-6.00 மணிக்குள் உறவினர்கள், நண்பர்கள், அயல்வீட்டாரை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும். சத்ய நாராயணர் படத்தின் முன், நெய் விளக்கேற்ற வேண்டும். பழம், பால், வெல்லம், தேன், கோதுமை நெய் அப்பங்களை சத்திய நாராயணருக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அந்நாளில், சத்யநாராயணர் விரதக்கதைகளை படிக்க வேண்டும். இந்தவிரதத்தைகடைபிடிக்க இத்தனை வாரம் தான் நியதி இல்லை. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், தொடர்ந்து அனுஷ்டித்தால், நம்மை ஜெயிக்க யாரும் இல்லை என்ற நிலை உருவாகும். பணவசதி பெருகும். புதுமணத்தம்பதிகள், வாழ்வின் துவக்கம் முதலே இதைதகடைபிடித்தால் தீர்க்காயுள் உள்ள புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறப்பார்கள். வசதி உள்ளவர்கள், கலசம் வைத்து புரோகிதர்களைதகொண்டு இந்தபூஜையை நடத்தலாம்.

ஆந்திராவில் சத்தியநாராயணர்: ஆந்திர மக்கள் சத்யநாராயண விரதத்தை தவறாமல் கடைபிடிக்கின்றனர். செல்வந்ததம்பதிகள், இந்தவிரதம் துவங்குவதற்கு முன்னதாக ஆறுமாதங்கள் வரை, ஏதாவது ஒரு புனிதத்தலத்தில் தங்கி வந்து இந்தவிரதத்தைதுவங்குகிறார்கள். விரதபூஜையை, பவுர்ணமியன்று பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00) நடத்துகிறார்கள். அன்று, மாலையில் அன்னதானம் செய்யும் நோக்கத்தில் பெருமளவு சமைக்கிறார்கள். சமைத்ததில் கால் பங்கை மட்டும் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் எடுத்துதகொண்டு, மீதியை தானம் செய்து விடுகிறார்கள்.

பணம் வரப்போகுது சொல்பவர் நாரதர்: கலியுகத்தில், மனிதனுக்கு தேவை அதிகம். அவனது தேவைகளை நிறைவேற்ற பணம் வேண்டும். அது கிடைக்க எளிய வழி சத்ய நாராயண விரதம் என்கிறார் நாரதர்.சுதானந்தர் என்பவர் இந்த விரதத்தை முறையாகக் கடைபிடித்ததால், மறுபிறவியில் சுதாமா (குசேலர்) என்னும் பெயரில் பிறந்து, கிருஷ்ண தரிசனத்துடன் பெரும் செல்வத்தைப் பெற்றார். விறகு விற்றுக் கொண்டிருந்த பல்லன் என்ற தொழிலாளி, இந்த விரத மகிமையால், மறுபிறவியில் குகன் என்னும் பெயரில் பிறந்து ராமதரிசனம் பெற்று, அழியாச் செல்வமான முக்தியை அடைந்தான். உல்காமுகன் என்ற அரசரோ, இதை முறையாகச் செய்து, மறுபிறவியில் தசரதராகப் பிறந்து 60ஆயிரம் ஆண்டுகள் சகல செல்வத்துடன் வாழும் பாக்கியம் பெற்றதுடன், ராமனுக்கே தந்தையும் ஆனார்.  ஸ்காந்த புராணத்தில் (கந்த புராணம்) வரும் ஸ்லோகம் ஒன்றில், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கஷ்டங்கள் குறையும். பணமும், தானியமும் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
-----------------------------------------
சத்ய நாராயண விரதமுறையும் பலனும்!

அனுஷ்டிக்க விதிமுறைகள்: ஆந்திராவில் மிகவும் பிரபலமானது சத்ய நாராயண விரதம். சமீப காலமாக தமிழக பக்தர்களும் இதைகடைபிடிக்கின்றனர். மகாவிஷ்ணுவே சத்ய நாராயணர். இந்தவிரதத்தை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கடைபிடிக்க வேண்டும். (பவுர்ணமியன்று பெண்களுக்கு வசதிப்படாவிட்டால், தமிழ் மாதப்பிறப்பு அல்லது வளர்பிறை ஏகாதசி திதியன்று விரதமிருக்கலாம்) இந்தவிரதம் எளிமையானது. இதைகணவனும், மனைவியும் சேர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30-6.00 மணிக்குள் உறவினர்கள், நண்பர்கள், அயல்வீட்டாரை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும். சத்ய நாராயணர் படத்தின் முன், நெய் விளக்கேற்ற வேண்டும். பழம், பால், வெல்லம், தேன், கோதுமை நெய் அப்பங்களை சத்திய நாராயணருக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அந்நாளில், சத்யநாராயணர் விரதக்கதைகளை படிக்க வேண்டும். இந்தவிரதத்தைகடைபிடிக்க இத்தனை வாரம் தான் நியதி இல்லை. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், தொடர்ந்து அனுஷ்டித்தால், நம்மை ஜெயிக்க யாரும் இல்லை என்ற நிலை உருவாகும். பணவசதி பெருகும். புதுமணத்தம்பதிகள், வாழ்வின் துவக்கம் முதலே இதைதகடைபிடித்தால் தீர்க்காயுள் உள்ள புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறப்பார்கள். வசதி உள்ளவர்கள், கலசம் வைத்து புரோகிதர்களைதகொண்டு இந்தபூஜையை நடத்தலாம்.

ஆந்திராவில் சத்தியநாராயணர்: ஆந்திர மக்கள் சத்யநாராயண விரதத்தை தவறாமல் கடைபிடிக்கின்றனர். செல்வந்ததம்பதிகள், இந்தவிரதம் துவங்குவதற்கு முன்னதாக ஆறுமாதங்கள் வரை, ஏதாவது ஒரு புனிதத்தலத்தில் தங்கி வந்து இந்தவிரதத்தைதுவங்குகிறார்கள். விரதபூஜையை, பவுர்ணமியன்று பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00) நடத்துகிறார்கள். அன்று, மாலையில் அன்னதானம் செய்யும் நோக்கத்தில் பெருமளவு சமைக்கிறார்கள். சமைத்ததில் கால் பங்கை மட்டும் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் எடுத்துதகொண்டு, மீதியை தானம் செய்து விடுகிறார்கள்.

பணம் வரப்போகுது சொல்பவர் நாரதர்: கலியுகத்தில், மனிதனுக்கு தேவை அதிகம். அவனது தேவைகளை நிறைவேற்ற பணம் வேண்டும். அது கிடைக்க எளிய வழி சத்ய நாராயண விரதம் என்கிறார் நாரதர்.சுதானந்தர் என்பவர் இந்த விரதத்தை முறையாகக் கடைபிடித்ததால், மறுபிறவியில் சுதாமா (குசேலர்) என்னும் பெயரில் பிறந்து, கிருஷ்ண தரிசனத்துடன் பெரும் செல்வத்தைப் பெற்றார். விறகு விற்றுக் கொண்டிருந்த பல்லன் என்ற தொழிலாளி, இந்த விரத மகிமையால், மறுபிறவியில் குகன் என்னும் பெயரில் பிறந்து ராமதரிசனம் பெற்று, அழியாச் செல்வமான முக்தியை அடைந்தான். உல்காமுகன் என்ற அரசரோ, இதை முறையாகச் செய்து, மறுபிறவியில் தசரதராகப் பிறந்து 60ஆயிரம் ஆண்டுகள் சகல செல்வத்துடன் வாழும் பாக்கியம் பெற்றதுடன், ராமனுக்கே தந்தையும் ஆனார்.  ஸ்காந்த புராணத்தில் (கந்த புராணம்) வரும் ஸ்லோகம் ஒன்றில், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கஷ்டங்கள் குறையும். பணமும், தானியமும் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
-----------------------------------------
முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும்!

முருகன் - அழகன்.
பிள்ளையார் - சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.
சித்தன் - அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.
சேயோன் - செந்நிறம் உடையவன்.
வேள் - எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் உடையவன்.
வேலன் - வெற்றி தரும் வேலை உடையவன்.
அரன் மகன் - சிவனின் புத்திரன்.
அறுமீன் காதலன் - கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.
அறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
குரு - சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் உரைத்தவன்.
கோழிக்கொடியோன் - சேவலைக் கொடியாக உடையவன்.
கங்கை மைந்தன் - தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.
கடம்பன் - கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.
கந்தன் - வலிமையான தோள்களை உடையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன்.
காங்கேயன் - கங்கை மைந்தன்
கார்த்திகேயன் - கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.
குகன் - மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.
குமரன் - சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.
குழகன் - அழகன், இளமையானவன்.
குறிஞ்சி வேந்தன் - மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.
குன்றெறிந்தோன் - கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.
கவுரி நந்தனன் - உமாதேவியின் மைந்தன்.
சண்முகன் - ஆறு முகம் கொண்டவன்.
சரவணபவன் - நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.
சிலம்பன் - காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.
சுரேசன் - துன்பம் நீக்குபவன்.
சூர்ப்பகைவன் - எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.
செட்டி - உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.
சேந்தன் - சிவப்பு நிறமுடையவன்
சேவற்கொடியோன் - சேவலைக் கொடியில் தாங்கியவன்.
தெய்வானை காந்தன் - தெய்வானையின் கணவன்.
தேவசேனாபதி - சேனைக்குத் தலைவன்.
பாவகி, பாவகாத்மஜன் - பரிசுத்தம் உடையவன்.
மஞ்ஞையூர்தி - மயிலை வாகனமாகக் கொண்டவன்.
மாயோன் மருகன்-திருமாலின் மருமகன்.
வள்ளி மணாளன் - வள்ளியின் கணவன்.
பாகுலேயன் - கார்த்திகேயன்.
விசாகன் - வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.
சங்கத்தலைவன் - கலைகளை உணர்ந்த புலவன்.
சாமி - செல்வன்.
முத்தையன் - முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.
சுப்பிரமணியன் - வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.
-----------------------------------------
“தாலி மகிமை”

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார் பாலகிருஷ்ணசாஸ்திரிகள். தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின் போது நடந்த திருமணங்களில் புது மணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் ”தாலம்” என்ற பெயர் தான் தாலியாக மாறியிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டில் தான் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “தமிழர் திருமணம்” என்கிற புத்தகம். மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.
-----------------------------------------
ஸ்ரீ சைலத்தை சுற்றி 12 வீர சைவ மடங்கள் இருந்ததாகவும் தற்போது ஆறு மடங்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அவற்றில் ஒன்று தான் மணிமடம் எனப்படும் ஸ்ரீ கண்ட்ட மடம் ஆகும். மணிமடத்தின் சிறப்பு இங்குள்ள பழைமையான மணி தான் இங்கு உறையும் இறைவரின் திருநாமம் ஸ்ரீ கண்ட்டார்கஸித்தேஸ்வரர் ஆகும்.. இம்மடம் தற்போது Archeological துறையின் வசம் உள்ளது.. இம்மடத்தில் மூன்று நபர் சேர்த்து ஒரே சமயத்தில் வழிபாடு செய்வது வழக்கும் அதாவது ஒருவர் இங்குள்ள மணியை ஒலிக்க செய்ய மற்றொருவர் அமிர்த்த குண்டத்தில் நீர் எடுக்க மற்றொருவர் ஸ்வாமியை அபிஷேகிக்க வேண்டும் அடியேனும் செய்துள்ளேன் இங்கு எந்த ஒரு நன்கொடையும் வசூலிப்பதில்லை.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தற்போது மடம் விரிவாக்கம் செய்து வருகின்றனர் மூலவர் சுயம்பு மூர்த்தி தற்போது உள்ளே இல்லை எப்படி கலாகர்ஷணம் செய்தனர் தெரியவில்லை.... தற்போது சூண்ய தேவாலயமாகவே காட்சியளிக்கிறது இங்கு சில சூரியன் பிரதிஷ்டை செய்த சூரிய லிங்கம் மற்றும் நகுலன் பிரதிஷ்டை செய்த நகுல லிங்கமும் ஒரு வீரசைவ சாதுவின் அதிஷ்டானமான இராஜ ராஜ முனிஷ்வரரின் சமாதியையும் தரிசிக்கலாம்... ஸ்ரீ சைலம் வரும் ஏழை மக்கள் தங்குமாறு பெரிய அளவில் தர்மசாலா கட்ட உள்ளனர் என்பது சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏

ஸ்ரீ கண்ட்டஸித்தேஸ்வராய நம 🙏
மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ள எலந்தங்குடிக்கு கிழக்கில் உள்ளது அறிவாளூர்.
முழுவதும் சிதிலமடைந்துவிட்டது,

இறைவன் சுயம்புநாதர் கருவறை மட்டும் மீதம் உள்ளது, இருந்த கதவின் அருகிலும் யாரோ சூடம் ஏற்றி கதவினை அக்னிக்கு இறையாக்கிவிட்டனர்

 கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்,
ஆலயம் தொழுவது சாலவும் நன்று,  இப்படி பழமொழிகள் பலவிருக்க கோயில்கள் சிதிலமடைவது ஏன்? பல நூறு ஆண்டுகளாக இருந்த கோயில்கள் நவீன வசதிகள் நிறைந்த இக்காலத்தில் பராமரிக்க இயலாமல் விடுவது ஏன்? சிந்திப்பீர்களா?

காரணங்கள் பல உண்டு அவற்றில் சில காரணங்கள் பட்டியலில் முதன்மையானது

கிராம சிவாலயங்கள் முன்பு உயர் வகுப்பினரால் வழிபடபெற்று, பராமரிக்கப்பெற்றன, அவர்கள் தற்போது கிராமத்தில் இருந்து பல்வேறு காரணங்களால் நகரத்திற்கு இடம் பெயர்ந்து விட்டனர். 

 அடித்தட்டு மக்கள் தமக்கென்று தனி தெய்வங்களை கொண்டுள்ளனர் அவர்கள் சிவாலய வழிபாடோ, அல்லது அதன் முறைகளை அறிந்திலர். அதனால் அவர்கள் இகோயிலை விரும்பி வருவதில்லை.

 நகரத்து மக்கள் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று பரிகார கோயில்களில் மட்டும் வரிசை கட்டி நிற்கின்றனர். பணக்கார கோயில்களுக்கு மட்டும் திரும்ப திரும்ப செல்வது , வேண்டுதல் என்ற பெயரில் அங்குள்ள உண்டியல் நிறைப்பது , இப்படி பலர்.

சிலர் கட்டுக்கடங்காத கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு கசக்கி பிழியப்பட்டு இறைவனை ஒரு செகண்டு நேரம் மட்டும் பார்த்து வெளிவரும் அவலத்தினை காண்கிறோம்.

உருவம், அருவுருவம், உருவமில்லா நிலை இப்படி பல படிகள் கடந்து செல்ல வேண்டிய நாம் இன்னும்  பக்தி என்ற பெயரில் கூண்டுக்குள்ளும், இரும்பு குழாய் பாதைகளிலும் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறோம்
அதனால் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் , ஜோதிடர்களும், போலி சாமியார்களும், யாகம், அபிஷேகம், பரிகாரம் என பக்தியை வியாபாரமாக்கிவிட்டனர்.

அன்பர்களே ஓடும் நீங்கள் சற்றே நில்லுங்கள் யோசியுங்கள் கிராம கோயில், ,  நகரகோயில்,பெரியகோயில், சிறிய கோயில் என்று பாராமல்

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
 எனும் திருமூலர் வரிகளை மனதில் கொண்டு  அனைத்து சிவாலயங்களிலும் உங்கள் பொருளை செலவிடுங்கள்

உங்கள் பெயர் எழுதப்பட்ட கடைசி அரிசி உங்களை தேடிவரும். உங்களுக்கு கொடுக்கப்படவேண்டியதும், கொடுக்கப்படாமல் இருக்கப்படவேண்டியதும் உங்களுக்காக காத்திருக்கிறது.
நாம் பிறந்த போது யார் வந்து பார்த்தார்கள் என்று நமக்கு  தெரியாது?

நாம் இறந்த பிறகு யார் வந்து பார்க்க போகிறார்கள் என்று நமக்கு தெரியாது?

இருக்கும் வரை பார்க்கும் மனிதர்களிடம் அன்பாய் இருப்போம்.

மனிதநேயத்துடன் பழகுவோம்
மனிதனாய் இருந்து வாழ்வோம்.

தவம் என்பது என்ன?

இறைவனிடம் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் அடைய வேண்டுமென்றால் நீ கடும் தவம் செய்ய வேண்டும். தவம் என்பது குறிக்கோளின்றி அங்குமிங்கும் அலைவதல்ல; நிலைதடுமாறாது. நாள் தவறாது செய்யப்படும் ஜபம், தியானம் மற்றும் புலனடக்கம் ஆகியவையே தவமாகும் -சுவாமி அபேதானந்தர்.
---------------------------------------
இன்பமாய் வாழ

அநந்தாநந்த ஸுகத:ஸுமங்கள ஸுமங்கள:

இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:

ஸுபகா ஸம்ஸ்ரிதபத:லலிதா லிதாஸ்ரய:

காமிநீ காமந:காம:மாலிநீ கேளிலாலித:

இதை காலையில் 10 முறை ஜபம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.
---------------------------------------
கேது - சனி : புலாச புஷ்பஸங்காசம்
தாரகாக்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்
---------------------------------------
இதயத்து உணர்வு

இறைவன் இதயத்து உணர்வையே ஏற்றுக் கொள்கிறார். ஒருவன் எதைக் கருத்திற் கொண்டு சாதனை செய்கிறானோ, அதுவே அவனுக்கு அமைகிறது. இதயத்து உணர்வு எவ்வாறோ, அவ்வாறே பயனும் கிடைக்கும். -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை
---------------------------------------
1. வாழ்க்கை ஒரு சவால்
அதனை சந்தியுங்கள்.

2. வாழ்க்கை ஒரு பரிசு
அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்
அதனை மேற்கொள்ளுங்கள்.

4. வாழ்க்கை ஒரு சோகம்
அதனை கடந்து வாருங்கள்.

5. வாழ்க்கை ஒரு துயரம்
அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.

6. வாழ்க்கை ஒரு கடமை
அதனை நிறைவேற்றுகள்.

7. வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுங்கள்.

8. வாழ்க்கை ஒரு வினோதம்
அதனை கண்டறியுங்கள்.

9. வாழ்க்கை ஒரு பாடல்
அதனை பாடுங்கள்.

10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

11. வாழ்க்கை ஒரு பயணம்
அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.

12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி
அதனை நிறைவேற்றுங்கள்.

13. வாழ்க்கை ஒரு காதல்
அதனை அனுபவியுங்கள்.

14. வாழ்க்கை ஒரு அழகு
அதனை ஆராதியுங்கள்.

15. வாழ்க்கை ஒரு உணர்வு
அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

16. வாழ்க்கை ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்ளுங்கள்.

17. வாழ்க்கை ஒரு குழப்பம்
அதனை விடைகாணுங்கள்.

18. வாழ்க்கை ஒரு இலக்கு
அதனை எட்டிப் பிடியுங்கள்.
---------------------------------------
சிவபெருமான்

கருத்திற்கு எட்டாத,
வண்ணமில்லாத,
குணமில்லாத,
அறியமுடியாப் பொருளாய்,
எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவராய்,
அழியா சோதியாய் அமைந்துள்ளவர் சிவபெருமான்.

அவர் அனைத்து ஆன்மாக்களிலும் ஆணவம் மட்டும் நிலையாக இருப்பதை அறிந்தார். அதனை அகற்ற அருள் செய்தார். அதனால் ஞானத்தை கொடுத்து அதன் மூலமாக ஆணவம், கன்மம், மாயையை அகற்றி இறுதியில் தூய்மையான தன்னை வந்து அடையும்படி செய்தார். எனவே ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல் என ஐந்து வகையானத் தொழில்களைச் செய்து வந்தார்.ஊழிக்காலத்தில் உலகிலுள்ள அனைத்து உயிரிகளும் தன்னிடம் ஒடுங்க, தன் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன.

இவர் எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும்
இவரிடமே ஆரம்பிக்கின்றன,
இவரிடமே முடிகின்றன.
இவர் தனியானவர் முதன்மையானவர்.
இவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன.
இவரிடமே தஞ்சமடைகின்றன.
இவரை வணங்கியே அனைத்து தேவர், மூர்த்திகளும் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்றனர்.
இவர் உலகின் முதன்மையானவராவர்.
---------------------------------------
உன் ஆன்மாவே உன் ஆசிரியர்

நீயே உன்னுள்ளிருப்பதை வெளிவரச் செய்ய வேண்டும். ஒருவராலும் உனக்குக் கற்பிக்க முடியாது. யாராலும் உன்னை ஆன்மீகவாதியாக்க முடியாது. உன் ஆன்மாவைத் தவிர வேறெந்த ஆசிரியரும் இல்லை -சுவாமி விவேகானந்தர்
---------------------------------------
ஓம் சிவாய நம

சி-சிவன்
வா-அருள்
ய-உயிர்
நம-மும்மலங்கள் [மாயை,ஆணவம்,கர்வம்]

ஸ்தூலபஞ்சாட்சரம்-------- நமசிவாய
சூட்சுமபஞ்சாட்சரம்---------சிவயநம
அதி சூட்சுமபஞ்சாட்சரம்--சிவய சிவ
காரண பஞ்சாட்சரம்-------- சிவ சிவ

இம்மந்திரத்தை சொல்லி இறைவனை வேண்டும்போது, கர்வம், ஆணவம் மற்றும் உலக மாயையிலிருந்து விடுபடலாம்.
---------------------------------------
லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. .

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு <உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்
லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர். இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.
---------------------------------------
"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம்.
சிவம் என்றால் காரணமில்லாத மங்களம் என்று பொருள்.

யஜுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம். அதன் நடுநாயகமே "நமசிவய". தீக்கை பெற்றிருந்தாலும், பெறாவிடினும் "நமசிவய" என தாயைக் கூவியழைக்கும் சேய்போல் அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு. கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில் வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப்போல்,
சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களை எல்லாம் சிவமயமாக்குகிறார்.

பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின் தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்.

திருமந்திரம்
நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமுந்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமஞ் சிவநட மாகுமே."

"நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானன்றே."

நாதத்தின் நாயகனை நாதத்தால்தான் கட்ட இயலும். "நமசிவய" என்னும் மூலமந்திரத்தை ஓதவேண்டும்.

மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லுதல் தூலஜபம். ஒலி வெளிவராமலும் நாவசைந்து ஓதுதல் சூக்கும ஜபம். நாவசையாது, ஒலி வெளிவராது உள்ளுக்குள்ளே (உள்ளுக்கு உள்ளே) ஓதுதல்தான் உன்னத காரண நிலை.

நாதத்தின் தலைவன் நாதன். அப்படிப்பட்ட நாதனின் தாள் வாழ்க.இது பக்தி மார்க்கத்தில் உள்ளவருக்கு.

இதன் ஞான நிலை:சிவவாக்கியர்
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே!"

தாள் என்பது சிவனின் மலர்ப்பாதம்.
நம் உடலில் மலர் போன்ற பகுதி நம் கண்களே.
அதுவே இறையின் மலர்ப்பாதங்கள்.

இவைகளைப்(சூரியகலை, சந்திரகலை) பயன்படுத்தி, அக்கினி கலையுடன் கூட "நமசிவய" எனும் மந்திரம் நம்முடலினுள்ளே கேட்கும்.
---------------------------------------
தமிழ் வருடங்களுக்கு சரியான ஆங்கில ஆண்டுகள்!

பிரபவ:1867-68 1927-28 1987-88
விபவ:1868-69 1928-29 1988-89
சுக்கில:1869-70 1929-30 1989-90
பிரமோதூத:1870-71 1930-31 1990-91
பிரஜோத்பத்தி:1871-72 1931-32 1991-92
ஆங்கீரஸ:1872-73 1932-33 1992-93
ஸ்ரீமுக:1873-74 1933-34 1993-94
பவ:1874-75 1934-35 1994-95
யுவ:1875-76 1935-36 1995-96
தாது:1876-77 1936-37 1996-97
ஈஸ்வர:1877-78 1937-38 1997-98
வெருதான்ய:1878-79 1938-39 1998-99
பிரமாதி:1879-80 1939-40 1999-2000
விக்ரம:1880-81 1940-41 2000-01
விஷு:1881-82 1941-42 2001-02
சித்ரபானு:1882-83 1942-43 2002-03
சுபானு:1883-84 1943-44 2003-04
தாரண:1884-85 1944-45 2004-05
பார்த்திப:1885-86 1945-46 2005-06
விய:1886-87 1946-47 2006-07
சர்வஜித்து:1887-88 1947-48 2007-08
சர்வதாரி:1888-89 1948-49 2008-09
விரோதி:1889-90 1949-50 2009-10
விக்ருதி:1890-91 1950-51 2010-11
கர:1891-92 1951-52 2011-12
நந்தன:1892-93 1952-53 2012-13
விஜய:1893-94 1953-54 2013-14
ஜய:1894-95 1954-55 2014-15
மன்மத:1895-96 1955-56 2015-16
துன்முகி:1896-97 1956-57 2016-17
ஹேவிளம்பி:1897-98 1957-58 2017-18
விளம்பி:1898-99 1958-59 2018-19
விகாரி:1899-1900 1959-60 2019-20
சார்வரி:1900-01 1960-61 2020-21
பிலவ:1901-02 1961-62 2021-22
சுபகிருது:1902-03 1962-63 2022-23
சோயகிருது:1903-04 1963-64 2023-24
குரோதி:1904-05 1964-65 2024-25
விசுவாவசு:1905-06 1965-66 2025-26
பராபவ:1906-07 1966-67 2026-27
பிலவங்க:1907-08 1967-68 2027-28
கீலக:1908-09 1968-69 2028-29
சௌமிய:1909-10 1969-70 2029-30
சாதாரண:1910-11 1970-71 2030-31
விரோதிரிகிருது:1911-12 1971-72 2031-32
பரிதாபி:1912-13 1972-73 2032-33
பிரமாதீச:1913-14 1973-74 2033-34
ஆனந்த:1914-15 1974-75 2034-35
இராக்ஷஸ:1915-16 1975-76 2035-36
நள:1916-17 1976-77 2036-37
பிங்கள:1917-18 1977-78 2037-38
காளயுக்தி:1918-19 1978-79 2038-39
சித்தாத்ரி:1919-20 1979-80 2039-40
ரௌத்ரி:1920-21 1980-81 2040-41
துன்மதி:1921-22 1981-82 2041-42
துன்துபி:1922-23 1982-83 2042-43
ருத்ரோத்காரி:1923-24 1983-84 2043-44
ரக்தாக்ஷி:1924-25 1984-85 2044-45
குரோதன:1925-26 1985-86 2045-46
அக்ஷய:1926-27 1986-87 2046-47.
---------------------------------------
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஏன்?

சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் சஞ்சரிக்கிறார். அதில், மகர ராசிக்குள் அவர் நுழையும் நாளை தைப்பொங்கல் என்று குறிப்பிடுவர். வடநாட்டில் இதை மகர சங்கராந்தி என்பர். இந்நாளில் வீட்டு வாசலில் கோலம் இட்டும், மாவிலைத் தோரணம் இட்டும் அலங்கரிப்பர். மார்கழி மாதத்தின் கடைசி நாளான  போகியன்று பழைய பொருள்களை தீயிட்டுக் கொளுத்துவதும் வீட்டின் தூய்மைக்காகவே. வேண்டாத பழமையை விலக்கி, புதுமையை வரவேற்கும் விதமாக பொங்கல் அமைந்துள்ளது. அதனால், வாழ்வில் முன்னேறுவதற்கான வழிவகை உண்டாவது இயற்கை. இதனால் தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்வழக்கு ஏற்பட்டது. வயலில் விளைந்த புது நெல்லில் குத்திய அரிசியில் பொங்கலிட்டு, கண் கண்ட தெய்வமான சூரியனுக்குப் படைப்பர். பொங்கல் பானையில் பொங்கும்போது, பொங்கலோ பொங்கல் என்று ஒலி எழுப்புவர். ஒருமித்த குரலில், இதைச் சொல்லும்போது, எல்லா மங்களங்களும், நன்மைகளும் வீட்டிற்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.
----------------------------------------



பொங்கல் பூஜை செய்வது எப்படி?

இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, ""பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்கலிட வேண்டும்.

பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.

பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும் ஒரு தேங்காயை உடைத்து அதன் நீரை பானையில் விட வேண்டும்.

சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.

இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன் பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின் காய்கறி வகைகள் சமைத்து வெண் பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து இனிப்பு வகைகள் புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.
----------------------------------------
காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க )

ராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை செய்யலாம். குறிப்பாக, நவராத்திரி காலத்தில் இதைச் செய்தால் மிகவும் நல்லது.எண் கணிதப்படி ராகுவுக்குரிய எண் 4. இந்த எண் தடைகளை  தரும் என்பது நம்பிக்கை. எனவே தான் 22 (கூட்டினால் 4) ஸ்லோகம் கொண்ட அர்ச்சனையை காளிக்காக வடித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது. இந்த ஸ்லோகத்தை வீட்டில் மாரியம்மன் அல்லது துர்க்கை படம் முன் அமர்ந்து சொல்லலாம். கொலு வைத்திருந்தால் மேடை முன் அமர்ந்து சொல்லலாம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, செவ்வரளி மலர்களை தூவ வேண்டும்.

ஓம் காள்யை நம:
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம:
ஓம் பராத்மகாயை நம:
ஓம் முண்டமாலாதராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் கராளிகாயை நம:
ஓம் ப்ரேதவாஹாயை நம:
ஓம் ஸித்தலக்ஷ்மையை நம:
ஓம் கால ஹராயை நம:
ஓம் ப்ராஹ்மை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் கவுமார்யை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் வராஹ்யை நம:
ஓம் நாரஸிம்ஹாயை நம:
ஓம் கபாலின்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:
----------------------------------------
தாயார் திருவடிகள் சரணம்!

கமல வல்லி கனகவல்லி கற்பகவல்லி பாதம் !
அமுதவல்லி அம்ருதவல்லி அழகியவல்லி பாதம் !

குமுத வல்லி குருகூர்வல்லி குழைக்காதவல்லி பாதம் !
புஷ்பவல்லி பூர்ணவல்லி பளவவல்லி பாதம் !

அபிஷேக வல்லி அம்புஜவல்லி அஞ்சிலைவல்லி பாதம் !
செண்பகவல்லி செங்கமலவல்லி கோமளவல்லி பாதம் !

ஆதிநாதவல்லி அம்ருதகடவல்லி அரவிந்தவல்லி பாதம் !
குறுங்குடி வல்லி கோளூர்வல்லி குளந்தைவல்லி பாதம் !

வஞ்ஜுளவல்லி வாத்ஸல்யவல்லி வரகுணவல்லி பாதம் !
வேதவல்லி வேளுக்கைவல்லி வைகுந்தவல்லி பாதம் !

மதுரவல்லி மரகதவல்லி வித்துவகோட்டுவல்லி பாதம் !
சுதாவல்லி சுந்தரவல்லி புண்டரீகவல்லி பாதம் !

கல்யாணவல்லி செங்கமலவல்லி சௌந்தர்யவல்லி பாதம் !
ரமாமணி வல்லி மோகூர்வல்லி நேர்ஒருவரில்லா வல்லி பாதம்!

தஞ்தை நாயகி ரங்கநாயகி பரிமளரங்கநாயகி பாதம் !
சார நாயகி லோகநாயகி புரு÷ஷாத்தமநாயகி பாதம் !

பூமிதேவி பூர்வாதேவி சிறுதேவி பாதம் !
மகாதேவி இந்திராதேவி வாத்ஸல்ய தேவி பாதம் !

செண்பகச்செல்வி பங்கயச்செல்வி பொற்றாமரையாள் பாதம் !
மலர்மகள் பூமகள் கடல் மகள் பாதம் !

செங்கமலநாச்சியார் மதுரவேணி நாச்சியார் தாமரை நாயகி பாதம் !
தலைச்சங்க, திருப்பேரை நாச்சியார் நரசிங்கவல்லி பாதம் !

கல்யாண நாச்சியார் உபயநாச்சியார் பாமாருக்மணி பாதம் !
அல்லிமாமலர் திருமாமகள் பூங்கோவல் நாச்சியார் பாதம் !

மலர்மங்கை நிலமங்கை மடவரல் மங்கை பாதம் !
கிரீவரமங்கை அலர்மேல் மங்கை அணிமாமலர் மங்கை பாதம் !

பொற்கொடி ஆண்டாள் செல்வத்திருக்கொழுந்து பாதம் !
பத்மாசனி பத்மாமணி பெருஞ்செல்வநாயகி பாதம் !

பெருந்தேவி கண்ணபுரநாயகி உய்யவந்த நாச்சியார் பாதம் !
லட்சுமி ஹரிலட்சுமி கருந்தடக்கண்ணி பாதம் !

செல்வநாயகி செம்மலர் பாதங்களை மனம்குளிர நினைந்திடுவோம்!
தாயார் திருவடியை தினமும் நாம் தொழுது தனமழையில் நனைந்திடுவோம்!
----------------------------------------
சூரியனின் குடும்பம்!

பெற்றோர்:காஷ்யப முனிவர்,அதிதி.
சகோதரர்கள்:கருடன்,அருணன்
மனைவியர்:உஷா,பிரத்யுஷா(சாயாதேவி)
மகன்கள்:எமதர்மன்,சனீஸ்வரர்,அஸ்வினி தேவர்கள்,கர்ணன்,சுக்ரீவன்
மகள்கள்:யமுனை,பத்திரை

பார்த்தபின் சாப்பிடுங்க:தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை, ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

முதல் கடவுள்:மனிதன் தோன்றிய காலம் தொட்டே சூரியவழிபாடு இருந்து வருகிறது. இருளில் தவித்த மனிதன், தினமும் காலையில் கிழக்கு வெளுத்து சூரிய உதயமாவதைக் கண்டு மகிழ்ந்தான். தன் இருகைகளைக் குவித்து வணங்கி வழிபட்டான். விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய தெய்வ வழிபாடுகள் பிற்காலத்திலேயே தோன்றின. சூரிய வழிபாட்டுக்குரிய மதத்தை "சவுரம் என அழைத்தனர். இதனால் சூரியன், "முதல் கடவுள் என்ற சிறப்புக்கு <உரியவராகிறார்.

அம்பாளின் வலக்கண்: சூரியனைச் சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாகக் கொண்டு சூரியநாராயணர் என்றும் சொல்வர். இவர் அம்பிகையின் வலக்கண்ணாக இருப்பதாகவும் கூறுவர். ஜோதிட சாஸ்திரம் சூரியனை நவக்கிரக நாயகனாகப் போற்றுகிறது. இவரைச் சுற்றியே மற்ற கிரகங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. நவக்கிரக மண்டபத்தில் நடுவில் வீற்றிருந்து அருளுகிறார் சூரியன். இதுதவிர, சிவாலயங்களில் இவர் தனது துணைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் தனி சந்நிதியிலும் இருப்பார்.

சூரியமந்திரம் சொல்வோமா:சூரியவழிபாட்டுக்கு உகந்த நாள் ஞாயிறு. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள் சிறந்தவை. திதிகளில் வளர்பிறை சப்தமி ஏற்றது. இந்த நாட்களில் காலையில் நீராடிய பிறகு, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்க வேண்டும்.

நம:ஸவித்ரே ஜகதேச சக்ஷúஷே
ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாச ஹேதவே
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே
ஜபாகு ஸும ஸங்காசம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இதன் பொருளையும் சொல்லலாம்.

பொருள்:உலகிற்குக் கண்ணாக இருப்பவனே! முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே! வேத வடிவமே! முக்குணங்களைப் பெற்றவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே! உமக்கு நமஸ்காரம். காஷ்யப முனிவரின் மகனே! செம்பருத்திப்பூவின் நிறத்தைக் கொண்டவனே! இருளின் எதிரியே! பேரொளி உடையவனே! பாவங்களைப் போக்குபவனே! திவாகரனே! உம்மைப் போற்றுகிறேன். இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும்.
----------------------------------------
எவ்வாறு பொங்கல் வைக்க வேண்டும்?

கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, பொங்கல் திருநாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம். பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே  சிறப்பாகும். வீட்டு வாசலில் திருவிளக்கை ஒரு பலகையிட்டு அதன் மேல் வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறைவிளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலை விரித்து, வலது ஓரத்தில் சாணப்பிள்ளையாரையும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்கவேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் பல் சேர்த்து தயாரித்த காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். தேங்காய் உடைத்து, அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். பனை அல்லது தென்னை ஓலை கிடைத்தால் அதைக் கொண்டு அடுப்பு எரிக்கலாம். கிடைக்காதவர்கள் காய்ந்த சுள்ளி விறகுகளைப் பயன்படுத்தலாம். மண்ணெண்ணெய் விட்டு அடுப்பு பற்ற வைப்பதைத் தவிர்க்கவும்.

பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், குலவையிடுங்கள். குலவையிடத் தெரியாதவர்கள் பொங்கலோ பொங்கல் என்று முழங்கலாம். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி பொங்க இருக்கிறோமோ, அந்தளவுக்கு முகர்ந்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல எரிபொருளின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள். பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், பிற ஸ்லோகங்கள், பாடல்களைப் பாடுங்கள். பின்னர், இவற்றை வீட்டுக்குள் எடுத்துச் சென்று விடலாம். முதலில், பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து காகத்துக்கு வைக்க வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு குடும்பத்தார் ஒற்றுமையுடன் சாப்பிட வேண்டும். வெறுமனே  டிவி பார்ப்பது பொங்கலன்று செய்யும் பணியல்ல. இப்படி, பொங்கலிட்டு பாருங்கள். சூரியபகவானின் அருள்பெற்று நலமுடன் வாழ்வீர்கள்.
----------------------------------------
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஏன்?

சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் சஞ்சரிக்கிறார். அதில், மகர ராசிக்குள் அவர் நுழையும் நாளை தைப்பொங்கல் என்று குறிப்பிடுவர். வடநாட்டில் இதை மகர சங்கராந்தி என்பர். இந்நாளில் வீட்டு வாசலில் கோலம் இட்டும், மாவிலைத் தோரணம் இட்டும் அலங்கரிப்பர். மார்கழி மாதத்தின் கடைசி நாளான  போகியன்று பழைய பொருள்களை தீயிட்டுக் கொளுத்துவதும் வீட்டின் தூய்மைக்காகவே. வேண்டாத பழமையை விலக்கி, புதுமையை வரவேற்கும் விதமாக பொங்கல் அமைந்துள்ளது. அதனால், வாழ்வில் முன்னேறுவதற்கான வழிவகை உண்டாவது இயற்கை. இதனால் தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்வழக்கு ஏற்பட்டது. வயலில் விளைந்த புது நெல்லில் குத்திய அரிசியில் பொங்கலிட்டு, கண் கண்ட தெய்வமான சூரியனுக்குப் படைப்பர். பொங்கல் பானையில் பொங்கும்போது, பொங்கலோ பொங்கல் என்று ஒலி எழுப்புவர். ஒருமித்த குரலில், இதைச் சொல்லும்போது, எல்லா மங்களங்களும், நன்மைகளும் வீட்டிற்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.
----------------------------------------
பொங்கல் பூஜை செய்வது எப்படி?

இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, ""பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்கலிட வேண்டும்.

பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.

பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும் ஒரு தேங்காயை உடைத்து அதன் நீரை பானையில் விட வேண்டும்.

சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.

இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன் பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின் காய்கறி வகைகள் சமைத்து வெண் பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து இனிப்பு வகைகள் புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.
----------------------------------------
நாம் தினமும் குளித்து முடித்தவுடன்

நாம் தினமும் குளித்து முடித்தவுடன்  உடம் துடைக்கும் போது முதலில் முதுகை தான் துடைக்க  வேண்டும்.பின் தான் முன்பக்கம் துடைக்க  வேண்டும்.ஏன்னேண்றால் முன்பக்கம் ஸ்ரீ தேவியும் பின்பக்கம் மூதேவியும் இருப்பாற்கல் முதலில் முன்பக்கம் துடைத்தால்  ஸ்ரீ தேவி நம்மைவிட்டு பொய்விடுவாள்.

தசாவதார ஸ்தோத்ரங்கள்


1. மத்ஸ்யாவதாரம் (கேது)

நிர்மக்ந ச்ருதிஜால மார்கணதஸா
தத்தக்ஷணைர் வீக்ஷணை:
அந்தஸ்தந்வ திவாரவிந்த கஹநாந்
யௌதந்வதீநா மபாம்
நிஷ்ப்ரத்யூஹ தரங்க ரிங்கண மிக:
ப்ரத்யூட பாதச்ச்டா
டோலாரோஹ ஸதோஹலம் பகவதோ
மாத்ஸ்யம் வபு: பாது ந:

2. கூர்மாவதாரம் (சனி)

அவ்யாஸுர் புவநத்ரயீ மநிப்ருதம்
கண்டூயநை ரத்ரிணா
நித்ராணஸ்ய பரஸ்ய கூர்மவபு÷ஷா
நிச்வாஸ வாதோர்மய:
யத்வி÷க்ஷபண ஸம்ஸ்க்ருதோததி பய:
ப்ரேங்க்கோல பர்யங்கிகா
நித்யாரோஹண நிர்வ்ருதோ விஹரதே
தேவ: ஸஹைவ ச்ரியா

3. வராஹாவதாரம் (ராகு)

கோபாயே தநிசம் ஜகந்தி குஹநா
போத்ரீ பவித்ரீக்ருத
ப்ரஹ்மாண்ட ப்ரளயோர்மிகோஷ குருபிர்
கோணாரவைர் குர்குரை:
யத்தம்ஷ்ட்ராங்குர கோடிகாட கடநா
நிஷ்கம்ப நித்யஸ்த்திதி
ப்ரஹ்மஸ்தம்ப மஸெள தஸெள பகவதீ
முஸ்தேவ விச்ஸ்வம்பரா

4. நரஸிம்ஹாவதாரம் (செவ்வாய்)

ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம:
க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா
வைகுண்ட கண்டீரவ:
யத்ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா
யாத்ருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸுர க்ருஹ
ஸ்த்தூணா பிதாமஹ்யபூத்

5. வாமனாவதாரம் (குரு)

வ்ரீடாவித்த வதாந்ய தாநல யசோ
நாஸீர தாடீபடஸ்
த்ரையக்ஷம் மகுடம் புநந்நவது நஸ்
த்ரைவிக்ரமோ விக்ரம:
யத்ப்ரஸ்தாவ ஸமுச்சரித த்வஜபடீ
வ்ருத்தாந்த ஸித்தாந்திபி:
ஸ்ரோதோபி: ஸுரஸிந்து ரஷ்டஸு
திஸா ஸெளதேஷு தோதூயதே

6. பரசுராமவதாரம் (சுக்ரன்)

க்ரோதாக்நிம் ஜமதக்நி பீடநபவம்
ஸந்தர்ப்பயிஷ்யந் க்ரமாத்
அக்ஷத்ராமபி ஸந்ததக்ஷய இமாம்
த்ரிஸ்ஸப்த க்ருத்வ: க்ஷிதிம்
தத்வா கர்மணி தக்ஷிணாம் க்வசந தா
மாஸ்கந்த்ய ஸிந்தும் வஸந்
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவா
நாப்ரஹ்ம கீடம் முநி:

7. ராமாவதாரம் (சூரியன்)

பாராவார பயோவிசோஷண கலா
பாரீண காலாநல
ஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக
வ்யாபார கோரக்ரம:
ஸர்வாவஸ்த்த ஸக்ருத்ப்ரபந்ந ஜநதா
ஸம்ரக்ஷணைக வ்ரதீ
தர்மோ விக்ரஹவா நதர்ம விரதிம்
தந்வீ ஸ தந்வீத ந:

8. பலராமாவதாரம் (குளிகன்)

பக்கத்கௌரவ பட்டணப்ரப்ருதய:
ப்ராஸ்த ப்ரலம்பாதய:
தாலாங்கஸ்ய ததாவிதா விஹ்ருதயஸ்
தந்வந்து பத்ராணி ந:
க்ஷீரம் சர்க்கரயேவ யாபி ரப்ருதக்பூதா:
ப்ரபூதைர் குணை:
ஆகௌமாரக மஸ்வதந்த ஜகதே
க்ருஷ்ணஸ்ய தா: கேலய:

9. க்ருஷ்ணாவதாரம் (சந்திரன்)

நாதாயைவ நம: பதம் பவது நச
சித்ரைச் சரித்ர க்ரமை:
பூயோபிர் புவநாந்யமுநி குஹநா
கோபாய கோபாயதே
காலிந்தீ ரஸிகாய காலிய பணி
ஸ்ப்பார ஸ்ப்படா வாடிகா
ரங்கோத்ஸங்க விசங்க சங்க்ரம துரா
பர்யாய சர்யாய தே:

10. கல்கி அவதாரம் (புதன்)

பாவிந்யா தசயா பவந்நிஹ பவ
த்வம்ஸாய ந: கல்பதாம்
கல்கீ விஷ்ணுயச: ஸுத: கலிகதா
காலுஷ்ய கூலங்கஷ:
நிச்சேஷ க்ஷமகண்டகே க்ஷிதிதலே
தாரா ஜலௌகைர் த்ருவம்
தர்மம் கார்த்தயுகம் ப்ரரோஹயதி யந்
நிஸ்த்ரிம்ச தாராதர:
----------------------------------------
பால முகுந்தாஷ்டகம்

கராரவிந்தேன பதாரவிந்தம்
முகாரவிந்தே வினிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே
சயான மாத்யந்த விஹீனரூபம்
ஸர்வேச்வரம் ஸர்வஹிதாவதாரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

இந்தீவர ச்யாமள கோமளாங்கம்
இந்த்ராதி தேவார்சித பாதபத்மம்
ஸந்நான கல்பத்ருமமாச்ரிதானாம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

லம்பாலகம் லம்பித ஹாரயஷ்டிம்
ச்ருங்கார லீலாங்கித தந்தபங்க்திம்
பிம்பாதாரம் சாருவிசால நேத்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

சிக்யே நிதாயாத்ய பயோததீநி
பஹிர்கதாயாம் வ்ரஜநாயிகாயாம்
புக்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

களிந்தஜாந்தஸ்கித காளியஸ்ய
பணாக்ரரங்கே நடனப்ரியந்தம்
தத்புச்சஹஸ்தம் சரதிந்துவக்த்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

உலூகலே பத்தமுதார சௌர்யம்
உத்துங்கயுக்மார்ஜுன பங்கலீலம்
உத்புல்ல பத்மாயத சாருநேத்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

ஆலோக்ய மாதுர் முக மாதரேண
ஸதன்யம் பிபந்தம் ஸரஸீருஹாக்ஷம்
ஸச்சின்மயம் தேவமனந்தரூபம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
----------------------------------------
சிவன் துதி

நமாமி சங்கர பவானி சங்கர
உமாமகேஸ்வர தவ சரணம் (நமாமி)

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்பா
அர்த்தனாரீஸ்வர தவ சரணம் (நமாமி)

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஸ்ரீ சைலேஸ்வரா தவ சரணம்

நந்தி வாஹனா நாக பூஷனா
சந்திர சேகரா ஜடாதரா

சூலாதார ஜோதி ப்ரகாசா
விபூதி சுந்தர விஸ்வேசா (நமாமி)

கால கால காம தஹனா
காசி விஸ்வேசா தவ சரணம் (நமாமி)

பம்பம் பம்பம் பமருக நாதா
டம்டம் டம்டம் டமருக நாதா
பம்பம் டம்பம் பமருக நாதா
ஸ்மசான வாசா தவ சரணம்

கிரிஜா ரமணா தவ சரணம்
ஹரே பசுபதே தவ சரணம் (நமாமி)

சிவபெருமான் பாடல்கள்

1. சரணம் ஈஸ்வரா... (ஹரிவராசனம் மெட்டு)

சரணம் ஈஸ்வரா ஸ்வாமி சரணம் ஈஸ்வரா
சரணம் ஈஸ்வரா ஸ்வாமி சரணம் ஈஸ்வரா

உலகம் படைப்பவர் ஈசன் உயிர்கள் காப்பவர்
உட்பகை அழிப்பவர் ஈசன் உண்மையானவர்

நலங்கள் தருபவர் ஈசன் நமது நாயகர்
நடன சுந்தரர் ஈசன் நாத ரூபமே

கங்கை கொண்டவர் ஈசன் கைலை வாசனே
கருணை மிக்கவர் ஈசன் கவலை தீர்ப்பவர்

மங்கை பாகனே மூன்று கண்ணனே
மதனை அழித்தவர் ஈசன் மௌன மூர்த்தியே  (சா)

நமசிவாயமே ஈசன் நந்தி வாகனர்
நீறணிந்தவர் ஈசன் நீலகண்டரே

அமிர்தலிங்கமே ஈசன் அம்மையப்பனே
அன்பு வடிவமே ஈசன் அம்மையப்பனே  (சரணம்)

2. பவனி வருகிறார் ஈசன்...

பவனி வருகிறார் ஈசன் பவனி வருகிறார்
பக்தர் நம்மை காப்பதற்கு பவனி வருகிறார்
வருகிறார் வருகிறார் வருகிறார்

1. உலகமெல்லாம் காக்கும் ஈசன் பவனி வருகிறார்
லோகமாதா பராசக்தி கூட வருகிறார்
நலங்களெல்லாம் தந்தருள பவனி வருகிறார்
நந்தி வாகனத்திலேறி பவனி வருகிறார்  (பவனி)

2. எங்குமுள்ள ஈசனிங்கு பவனி வருகிறார்
எட்டு திக்கும் புகழ்ந்து பாட பவனி வருகிறார்
தங்க தேரில் அமர்ந்து கொண்டு பவனி வருகிறார்
தம்மை மக்கள் நேரில் காண பவனி வருகிறார் (பவனி)

3. ப்ரம்மா விஷ்ணு தேவரெல்லாம் சூழ்ந்து வருகிறார்
சிவ கணங்கள் பூதமெல்லாம் தொடர்ந்து வருகிறார்
வரம் கொடுத்து வாழ்வருள ஈசர் வருகிறார்
வலிய பகை அழித் தொழிக்க பவனி வருகிறார் (பவனி)

4. மகாலெக்ஷ்மி அருமையாகப் பாடி வருகிறார்
சரஸ்வதியார் வீணையிலே நாதம் தருகிறார்
மகா நந்தி மிருதங்கத்தில் தாளமிடுகிறார்
தேவலோகப் பெண்களெல்லாம் ஆடி வருகிறார் (பவனி)

5. முனிவர் ரிஷி ஞானியர்கள் வேதம் சொல்கிறார்
தேவரெல்லாம் ஈசனுக்கு போற்றி சொல்கிறார்
கனிந்த கருணை உள்ளத்தோடு ஈசன் வருகிறார்
கண்டு வணங்கிப் பயன்பெறவே மக்கள் திரள்கிறார் (பவனி)

6. கண்ணை எட்டும் தூரம் வரைக்கும் பவனி வருகிறார்
காவடியாட்டம் கரகத்தாட்டம் முன்னால் வருகுது
விண்ணை முட்டும் அதிர்வேட்டு வெடிகள் முழங்குது
பம்பை மேளம் தவில் சப்தம் நம்மை அழைக்குது (பவனி)

7. அன்பர்களே தாய்மாரே விரைந்து வாருங்கள்
அம்மையப்பன் பவனி காண ஒன்று கூடுங்கள்
நல்லவை என்றும் நடை பெற வேண்டுங்கள்
நன்றியோடு என்றும் ஈசன் புகழைப்பாடுங்கள் (பவனி)

8. வீதியெங்கும் தோரணங்கள் வளைவுகள்கட்டுங்கள்
வீடுதோறும் கோலமிட்டு விளக்கு ஏற்றுங்கள்
மாதரெல்லாம் ஒன்று சேர்ந்து நாமம் கூறுங்கள்
மகத்தான நன்மைகள் எல்லாம் வந்து சேரும் (பவனி)

9. பக்தரெல்லாம் ஒன்று கூடி பஜனை செய்யுங்கள்
பாபமெல்லாம் தீரும் மனம் உருகிப் பாடுங்கள்
சக்தி உமை நாயகனை சரணம் அடையுங்கள்
சர்வேஸ்வரன் பவனி கண்டு சுகமாய் வாழுங்கள் (பவனி)

3. சந்திர சேகர சம்பு...
(அயிகிரி நந்தினி மெட்டு)

சந்திர சேகர சம்பு மகேஸ்வர சாம்ப சதாசிவ சங்கரனே !
சுந்தர சொக்கனே சச்சிதானந்தனே ஜோதி பிரபாகர சற்குருரே !
பரமனே பார்வதி நேசனே பைரவா தூய பஞ்சாட்சரனே !
ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
கங்கஜடாதர கௌரி மனோஹர கல்யாணி மனமகிழ் கருணாகரா !
குங்கும மேனியே கணங்களின்நாதனே குற்றங்கள் பொறுத்தருள் குணநிதியே !
அம்பிகை பாகனே அம்பலவாணனே அரவினையணிந்தவனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
சிதம்பர நாதனே தீனதயாளனே சாமகானப் ரியனே !
மதியணி விமலனே மன்மத தகனனே மௌன முக்கண்ண மகேஸ்வரனே !
இறைவனே முதல்வனே ஏழைபங்காளனே எழில் நீலகண்ட ஏகாம்பரனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
தில்லையில் ஆடிடும் வேதம் பாடிடும் தேவர்கள் போற்றிடும் நடராஜா !
எல்லையில் கணங்களும் விஷ்ணுவும் பிரமனும் துதித்திடும் சிவராஜா !
திரிபுர சுந்தரா ராமலிங்கேஸ்வரா தாயுமான பரமேஸ்வரனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
அம்மையே அப்பனே அமிர்தகடேஸ்வர ஆனந்த மூர்த்தியே பசுபதியே !
உம்மையே நம்பினேன் உனதடி வணங்கினேன் ஓங்காரநாத உமாபதியே !
அருள்தரும் நந்திமேல் அமர்ந்துடன் வருகவே ஆதியே போற்றி போற்றி
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !

4. ஒன்றானவன் உருவில்...

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நம சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்கு ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சிந்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அனையொன்று தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன் - ஒளியானவன்
நீரானவன் - நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையானவன்
ஊற்றாகி நின்றானவன் - அன்பின்
ஒளியாகி நின்றானவன்

5. சித்தமெல்லாம் எனக்கு....

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே (சித்தமெல்லாம்

அப்பனில்லாமல் ஒரு அம்மை இல்லை - அந்த
அம்மையில்லாமல் இந்த பிள்ளை யில்லை (சித்த

பக்திப் பெருக்கில் எந்தன் ஊர் உருக - அந்த
பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன்
சந்ததியே உந்தனுக்கு அடிபணிய இறைவா  (சித்த

கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே ... கோவில்
கதவை திறந்தழைத்த திருவருளே
வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே வந்து
என்னை என்றும் ஆளுகின்ற பரம் பொருளே இறைவா (சித்தமெல்லாம்

6. ஆதிசிவன் தாள் பணிந்து...

ஆதிசிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே - எங்கள்
ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே
வேதங்கள் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீறும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே - அவன்
அடியார்க்கும் அன்பருக்கும் தொண்டுசெய்வோமே (ஆதி

நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா
நாதத்திற்கே பெருமை தந்த ஜீவனல்லவா
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தையல்லவா ... அதை
பிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா  (ஆதி

7. தாள் திறவாய் மணிக்கதவே...

தாள் திறவாய் மணிக்கதவே தாள் திறவாய்
ஆலய மணிக்கதவே தாள் திறவாய் ... மறை
நாயகன் முகம் காண தாள் திறவாய் மறை  (ஆலய

ஆ.... ஆ.... மனக்கதவைத் திறந்த பரம் பொருளே
திருக்கதவும் திறக்க வர திருவருளே ஆ..ஆ..ஆ..
சிவமயமாய் மலர தாள் திறவாய்  (ஆலய

ஆடுந்திருவடி கோலமறிந்திட அரனே தாள் திறவாய்
அன்னையின் மார்பினில் பொன்மணிக் கண்டிட
சிவனே தாள் திறவாய்
அருள்நெறி தெளிவுற திருமறை புகழ்பெற
அன்பே தாள் திறவாய்
ஒருமுறை இருமுறை கேட்டேன் ஒளியே தாள் திறவாய்
இறைவா தாள் திறவாய் என் தலைவா தாள் திறவாய்
இறைவா தாள் திறவாய் என் தலைவா தாள் திறவாய்
கதவே தாள் திறவாய் தாள் திறவாய்

8. அறிவே நிறைவே... (ஜனனீ ஜனனீ - மெட்டு)

அறிவே நிறைவே அருளே பொருளே
அழகானந்தனே நடராஜனே
அர்த்தநாரீசனே சர்வேஸ்வரனே
திரிலோகேசனே பிரகதீஸ்வரனே
நந்திவாகனனே சுந்தரேஸ்வரனே (அறி)

நால் வேதங்களும் பிரம்ம தேவருடன்
மால் ஓதுவதும் நமச்சிவாய மன்றோ
சுபயோகங்களும் தவயோகங்களும்
இவை வேண்டுவதும் சிவபோக மன்றோ  (அறி)

உலகாதியும் நீ வளர் ஜோதியும் நீ
இன்பம் ஓங்கிடவும் துன்பம் நீங்கிடவும்
எந்தன் நெஞ்சில் நாதம் கொஞ்சிடவே
உந்தன் தஞ்ச மலர்ப்பாதம் தஞ்சமய்யா
ஆலமுண்டவனே நீலகண்டேசனே  (அறி)

9. ஆடுகின்றானடி தில்லையிலே...

ஆடுகின்றானடி தில்லையிலே - அதைப்
பாடவந்தேன் அவன் எல்லையிலே
திங்களும் ஆட சூலமும் ஆட
விரிசடை மீதொரு கங்கையும் ஆட
உலகெனும் மாபெரும் மேடையிட்டான்... அதில்
உயிர்களை எல்லாம் ஆடவிட்டான்
அசைந்திடும் மரம் செடி கொடிகளிலே - அந்த
அம்பலத்தரசன் ஆடுகின்றான் (ஆடு)

தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்... ஒரு
தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
ஆடிய ஆட்டம் முடியவில்லை
புட்டுக்கு ஏனோ ஆசை கொண்டான் - அவன்
பிரம்படித் தனையே தாங்கிக் கொண்டான்
மண்ணைப் படைத்தவன் மண்சுமந்தான் அது
மதுரையில் ஆடிய ஆட்டமன்றோ  (ஆடு)

10. சிவபெருமானே எங்கள்...
(தீனரட்சகி - மெட்டு)

1. சிவபெருமானே எங்கள் சிவபெருமானே
சிந்தையில் குடிகொண்டவனே சிவபெருமானே - உன்
சீர்பாத சேவை செய்ய சிவபெருமானே
சீக்கிரமே வந்திடுவாய் சிவபெருமானே

2. பாம்பு தனை கழுத்தில் அணிந்த சிவபெருமானே
பார்வதியை இடத்தில் வைத்த சிவபெருமானே
பாங்காக நாங்கள் வாழ சிவபெருமானே
பாலமாக அமைந்திடுவாய் சிவபெருமானே

3. கங்கை தனை தலையில் வைத்த சிவபெருமானே
கண்ணப்பருக்கு அருள் செய்த சிவபெருமானே
கணபதியை எமக்களித்த சிவபெருமானே
கந்தனையும் சேர்த்தளித்த சிவபெருமானே

4. சந்திரனுக்கு அபயமளித்த சிவபெருமானே
சக்திசிவன் ஆனவனே சிவபெருமானே
சர்வலோக நாயகனே சிவபெருமானே
சகல பாக்கியம் அளிப்பவனே சிவபெருமானே

5. மண்டையோடு மாலையணிந்த சிவபெருமானே
மங்காத புகழ் வாய்ந்த சிவபெருமானே
மங்களங்கள் தருபவனே சிவபெருமானே
மக்கள் குறை தீர்ப்பவனே சிவபெருமானே

11. சிவனுக்கிசைந்தது....

சிவனுக்கிசைந்தது சிவராத்திரி
அவன் தேவி புகன்றது நவராத்திரி
அவளின் துணையே ஒரு சக்தி
இந்த அகிலம் காண்பது நவசக்தி  (சிவ)

தவத்தில் நிலைக்கும் ஒரு பாதி
தன் சந்ததி காக்கும் மறுபாதி
விதைக்கும் உழவன் சிவனென்றால்
அதன் விளைவை சுமப்பவள் உமையன்றோ  (சிவ)

இரவில் ஒரு நாள் அது மலரும்
என்றோ ஒரு நாள் அது உலரும்
இடையில் மடியில் இருத்தி வைத்து
எம்மை வளர்ப்பாள் அம்மையன்றோ  (சிவ)

தாயாய் வந்தாள் ஒரு சக்தி தாகம் தீர்த்தாள் ஒரு சக்தி
ஆயகலைகள் அருள் பவளாய்
ஆக்கம் தந்தாள் ஒரு சக்தி
செல்வம் தந்தென்னை சீராட்டி
செழிக்கச் செய்தாள் ஒரு சக்தி
அல்லும் பகலும் அருகிருந்தே
ஆற்றல் கொடுத்தாள் ஒருசக்தி
உடன் பிறந்தவள் ஒரு சக்தி
உள்ளம் நிறைந்தவள் ஒரு சக்தி
தோள் தவழ்ந்தவள் ஒரு சக்தி
வாழ்வு முழுவதும் சிவசக்தி
என்பதும் ஓர் உருவாய் நின்றதும் ஆணவம் சென்றதுவே
ஒன்பது இரவுகள் அவள் நினைவாய்
ஒளிவிளக்கு ஏற்றுவோம் வாரீரோ.

சிவ நாமாவளிகள்

1. ஸம்போ புராரே ஸங்கர புராரே
ஸூலதர பணிவர கங்கண புராரே

2. மறாதேவ ஸிவ ஸங்கர ஸம்போ
உமாகாந்த ஹர த்ருபுராரே
ம்ருத்யுஞ்ஜெய வ்ருஷபத்வஜ சூலின்
கங்காதர ஹர மதனாரே

3. ஸிவ ஸங்கர பரமேஸ தயாளோ
கருணாகர ஸுரநாயக காமிதபலவர தாயக  (ஸி)
ஸுத்தஸ்படிக ஸம்காஸ ஸுப்ர கைலாஸநிவெஸ (ஸி)
----------------------------------------
பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்

பிரார்த்தனாவளி

ஓம் !..... ஓம் !.... ஓம் !....

ஜய கணேச ஜய கணேச ஜய கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷமாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷமாம்

ஜய ஸரஸ்வதி ஜய ஸரஸ்வதி ஜய ஸரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்ரீ ஸரஸ்வதி ரக்ஷமாம்

மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி பாஹிமாம்
ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ரக்ஷமாம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பாஹிமாம்
ஆதிசக்தி ஆதிசக்தி ஆதிசக்தி ரக்ஷமாம்

ராஜேஸ்வரி ராஜேஸ்வரி ராஜேஸ்வரி பாஹிமாம்
திரிபுரசுந்தரி திரிபுரசுந்தரி திரிபுரசுந்தரி ரக்ஷமாம்

ஜய குரு சிவ குரு ஹரி குரு பாஹிமாம்
ஜகத் குரு பரம் குரு ஸத் குரு ரக்ஷமாம்

ஆதி குரு அத்வைத குரு ஆனந்த குரு பாஹிமாம்
சித்குரு சித்கனகுரு சின்மயகுரு ரக்ஷமாம்

ஓம்சிவாய ஓம்சிவாய ஓம்சிவாய பாஹிமாம்
ஸ்ரீசிவாய ஸ்ரீசிவாய ஸ்ரீசிவாய ரக்ஷமாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீஸ சபரிகிரீஸ சபரிகிரீஸ ரக்ஷமாம்

ஆஞ்ஜனேய ஆஞ்ஜனேய ஆஞ்ஜனேய பாஹிமாம்
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம்

தத்தாத்ரேய தத்தாத்ரேய தத்தாத்ரேய பாஹிமாம்
தத்தகுரு தத்தகுரு தத்தகுரு ரக்ஷமாம்

கௌரஹரி கௌரஹரி கௌரஹரி பாஹிமாம்
கௌராங்கஹரி கௌராங்கஹரி கௌராங்கஹரி ரக்ஷமாம்

கங்காராணி கங்காராணி கங்காராணி பாஹிமாம்
பாகீரதி பாகீரதி பாகீரதி ரக்ஷமாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷமாம்

ஓம் குருநாதா ஜெய குருநாதா ஓம் குருநாதா பாஹிமாம்
சிவ குருநாதா ஜெய குருநாதா ஓம் குருநாதா ரக்ஷமாம்

ஸத்குரோ ஸத்குரோ ஸத்குரோ பாஹிமாம்
பரமதயாளு பரமதயாளு பரமதயாளு ரக்ஷமாம்

ஸத்குரோ ஸத்குரோ ஸத்குரோ பாஹிமாம்
பரமக்ருபாலு பரமக்ருபாலு பரமக்ருபாலு ரக்ஷமாம்

சிவானந்த சிவானந்த சிவானந்த பாஹிமாம்
சிவானந்த சிவானந்த சிவானந்த ரக்ஷமாம்

அஷ்ட பைரவர்கள் போற்றி

ஓம் கால பைரவா போற்றி
ஓம் கல்பாந்த பைரவா போற்றி
ஓம் குரோத பைரவா போற்றிஓம் கபால பைரவா போற்றி

ஓம் சம்ஹார பைரவா போற்றி
ஓம் உன்மத்த பைரவா போற்றி
ஓம் கண்ட பைரவா போற்றி
ஓம் உக்கிர பைரவா போற்றி

காலபைரவர் போற்றி

ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டரூபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன்குருவே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்கபைரவனே போற்றி

ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக் காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
ஓம் உக்ரபைரவனே போற்றி
ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழத்தருள்வோனே போற்றி

ஓம் எல்லைத்தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வபங்கனே போற்றி
ஓம் கல்பாந்தபைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
ஓம் கருமேகநிறனே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி

ஓம் களவைக்குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் காலபைரவனே போற்றி
ஓம் காபாலிகர்தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல்தெய்வமே போற்றி
ஓம் கிரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

ஓம் சண்டபைரவனே போற்றி
ஓம் சட்டை நாதனே போற்றி
ஓம் சம்ஹார பைரவனே போற்றி
ஓம் சம்ஹாரகால பைரவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
ஓம் சிக்ஷகனே போற்றி
ஓம் சீர்காழித்தேவனே போற்றி
ஓம் சுடர்ச்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி

ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
ஓம் தனிச்சன்னதியுளானே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி

ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரஸரூபனே போற்றி
ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்வோனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணனே போற்றி

ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையழிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
ஓம் பாபபக்ஷயனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணியனே போற்றி
ஓம் பிரளயகாலனே போற்றி

ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மஹா பைரவனே போற்றி
ஓம் மணி ஞாணனே போற்றி
ஓம் மகர குண்டலனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி

ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி

ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி
ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி.

மஹா ம்ருத்யுஞ்ஜய கவசம்
பைரவ உவாச

ச்ருணுஷ்வ பரமேசானி கவசம் மன்முகோதிதம்,
மஹா ம்ருத்யுஞ்சய ஸ்யாஸ்ய ந தேயம் பரமாத்புதம்

யம் த்ருத்வாயம் படித்வா ச யம் ச்ருத்வா கவசோத்தமம்
த்ரைலோக்யாதிபதிர்பூத்வா ஸுகிதோ (அ) ஸ்மி மஹேச்வரி

ததேவ வர்ணயிஷ்யாமி தவ ப்ரீத்யா வரானனே
ததாபி பரமம் தத்வம் ந தாதவ்யம் துராத்மனே

ஓம் அஸ்ய ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய கவசஸ்ய ஸ்ரீ பைரவ
ருஷி : காயத்ரீச்சன்த: ஸ்ரீ ம்ருத்யுஞ்சய ருத்ரோ தேவதா
ஓம் பீஜம், ஜம் சக்தி: ஸ: கீலகம் ஹெளம் இதி
தத்வம் சதுர்வர்கபல ஸாதனே பாடே வினியோக :
ஓம் சந்த்ர மண்டல மத்யஸ்தே ருத்ரமாலே விசித்ரிதே,
தத்ரஸ்த்தம சின்தயேத் ஸாத்யம் ம்ருத்யும் ப்ராப்தோபி ஜீவதி

ஓம் ஜூம் ஸ: ஹெளஓம் சிர: பாது தேவோ ம்ருத்யுஞ்சயோ மம
ஸ்ரீ சிவோ வை லலாடம்ச ஓம் ஹெளம் ப்ருவெள ஸதாசிவ:

நீலகண்டோ(அ)வதான்நேத்ரே கபர்த்தீ மே(அ)வதாச்ச்ருதீ,
த்ரிலோசன(அ)வதாத் கண்டௌ நாஸம் மே த்ரிபுரான்தக:

முகம் பீயுஷக்கடப்ருத் ஓஷ்டௌ மேக்ருத்திகாம்பர:
ஹனும் மே ஹாடகேசானோ முகம் வடுகபைரவ:

கன்தராம் காலமதனோ கலம் கண ப்ரியோ(அ)வது
ஸ்கன்தௌ ஸ்கந்தபிதா பாது ஹஸ்தௌ மே கிரிசோ(அ)வது

நகான்மே கிரிஜாநாத: பாயாதங்குளி ஸம்யுதான்,
ஸ்தனௌ தாராபதி: பாது வக்ஷ: பசுபதிர்மம்

குக்ஷிம் குவேரவதேன: பார்ச்வெள மே மாரசாசன:
சர்வ: பாது ததா நாபிம் சூலீப்ருஷ்டம் மமாவது

சிச்னம் மே சங்கர: பாது குஹ்ய குஹ்யகவல்லப:
கடிம் காலாந்தக: பாயாத் ஊரூ மே(அ)ந்தககாதக:

ஜாகரூகோ(அ)வதாஜ்ஜானூ ஜங்கே மே காலபைரவ:
குல்பௌ பாயாஜ்ஜடாதாரீ பாதௌ ம்ருத்யுஞ்சயோ(அ)வது

பாதரதிமூர்த்த பர்யந்தம் ஸத்யோ ஜாதோ மமாவது,
ரக்ஷõஹீனம் நாமஹீனம் வபு: பாத்வம் ருதேச்வர: (பாது அம்ருதே ச்வர:)

பூர்வே பலவிகரணோ தக்ஷிணே காலசாஸன :
பச்சிமே பார்வதீநாத உத்தரே மாம் மனோன்மன:

ஜசான்யாமீச்வர: பாயாத் ஆக்னேய்யாம் அக்னிலோசன:
நைர்ருத்யாம் சம்புரவ்யான்மாம் வாயவ்யாம் வாயுவாஹன:

ஊர்த்வம் பலப்ரமதனே: பாதாலே பரமேச் வர:
தச திக்ஷú ஸதா பாது மஹாம்ருத்யுஞ்சயச் ச மாம்

ரணே ராஜகுல த்யூதே விஷமே ப்ராணஸம்ச யே
பாயாத் ஓம் ஜூம் மஹாருத்ரோ தேவதேவோ தசாக்ஷர:

ப்ரபாதே பாது மாம் ப்ரும்மா மத்யாஹ்னே பைரவோ(அ)வது
ஸாயம் ஸர்வேச் வர: பாது நிசா யாம் நித்யசேதன:

அர்த்தராத்ரே மஹாதேவோ நிசான்தே மஹோதய:
ஸர்வதா ஸர்வத: பாது ஓம் ஜூம்ஸ: ஹெளம் ம்ருத்யுஞ்சய:

இதீதம் கவசம் புண்யம் த்ரிஷுலோகேஷு துர்லபம்
ஸர்வமந்த்ரமயம் குஹ்யம் ஸர்வயந்த்ரேஷு கோபிதம்

புண்யம் புண்யப்ரதம் திவ்யம் தேவ தேவாதிதைவதம்
ய இதம்ச படேன் மந்த்ரம் கவசம் வாசயேத்தத

தஸ்யஹஸ்தே மஹாதேவி த்ர்யம்பகஸ்யாஷ்ட ஸித்தய :
ரணே த்ருத்வா சரேத்யுத்தம் ஹத்வா சத்ரூன் ஜயம் லபேத்

ஜபம் க்ருத்வா க்ருஹே தேவி ஸ்ம்ப்ராப்ஸ்யதி ஸுகம் புன:
மஹாபயே மஹா ரோகே மஹாமாரீபயே ததா
துர்பி÷க்ஷ சத்ருஸம்ஹாரே படேத்வசமாதராத்

(இதி மஹாம்ருத்யுஞ்சய கவசம் ஸம்பூர்ணம்)

பைரவர் காயத்ரி

ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே  க்ஷேத்ர பாலாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே
ஸூலஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரஜோதயாத்

காலபைரவர் ஸ்துதி

அதிக்ருர மஹாகாய கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸிப

வடுக பைரவர் மஹாமந்திரம்

ஓம் - ஹ்ரீம் - க்லீம் - க்ஷ்மர்யூம் - வம் - வடுகாய
ஆபதுத்தாரணாய குரு குரு: வடுகாய - மஹா பைரவாய -
மஹா ம்ருத்யுஞ்ஜயாய - மஹா கால ராத்ரி ஸ்வரூபாய -
மஹா ப்ரளய காலாக்நி ஸ்வரூபாய - மஹா கால பைரவாய
பரசு - சக்தி - கட்க - கேட - தோமர தராய - மஹாகால கண்ட
ஸ்வரூபிணே - ப்ரத்யக்ஷருத்ர ரூபிணே - சீக்ரமஷ்டகுல
நாகானாம் - விஷம் தஹ தஹ: பந்த: பந்த: சேதய சேதய:
ஸர்வ ஜ்வரான் பக்ஷய பக்ஷய - க்ஷúத்ரான் ப்ரஹர ப்ரஹர
வித்வம்ஸய வித்வம்ஸய - பூதப்ரேத பிசாச க்ரஹாந்
ஸம்ஹர ஸம்ஹர - சிர: ப்ரப்ருதி ஸர்வாங்க சூல
பாண்டு ரோகாதீன் ஹந, ஹந, ஆசு விஷம்
ஸம்ஹர ஸம்ஹர - த்வாதசாதித்ய ஸ்வரூப வ்ருத்யசூல
தாரிணே ஏகாஹிக - த்வயாஹிக - த்ரயாஹிக -
சாதுர்யாஹிகார்த மாஸிக - ஷாண்மாஸிக, வார்ஷீக
ஸாத்ய தாஹவாத - பித்த - ச்லேஷ்ம ஸாந்நிபாதிகாதி
ஸர்வஜ்வரம் ஹந, ஹந, தஹதஹ - பசபச -
க்ருஹ்ண க்ருஹ்ண - ஆவேசய ஆவேசய - ஆர்க்ஷய ஆர்க்ஷய
ஸ்தம்பய ஸ்தம்பய - மோஹய மோஹய - பீக்ஷய பீக்ஷய -
பாசுபதாஸ்த்ரணே பந்த பந்த - சூலேன க்ருந்தய
க்ருந்தய - ப்ரஹ்ம ராக்ஷஸாந் பக்ஷய பக்ஷய ஜ்வல
ஜ்வல - மஹா பைரவாய - மஹாபதுத்தாரணாய - மம
ஸர்வ வித்யாம் குரு - மம ஸர்வ கார்யாணி
ஸாதய ஸாதய ஓம் ஹ்ராம் - ஹ்ரீம் - ஹ்ரூம் - ஹும்பட் ஸ்வாஹா

கால பைரவாஷ்டோத்ரம்
த்யானம்

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்

(சிவந்த ஜடையும், பரிசுத்தமான உடலும், சிவந்த தேஜஸூம், சூலம், கபாலம், உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும், நிர்வாணமாகவும், நாயினை வாஹனமாகவும் கொண்டு, முக்கண்ணனாக, ஆனந்த வடிவினனாக பூத, ப்ரேத நாதனாக ÷க்ஷத்ரங்களை ரக்ஷிப்பவராக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன்.)

பைரவோ பூத நாதஸ்ச - பூதாத்மா - பூதபாவந:  க்ஷேத்ரத: க்ஷேத்ரபாலஸ்ச - க்ஷேத்ரக்ஞ : க்ஷத்ரியோ விராட்

ஸ்மசான வாஸீ மாம்ஸாசீ - ஸர்ப்பராசி : ஸ்மராந்தக்ருத்
ரக்தப : பாநப : ஸித்த : - ஸித்தித : ஸித்தஸேவித :

கங்கால : கால சமந : - காலகாஷ்டா தநு : கவி :
த்ரிநேத்ரோ பகுநேத்ரஸ்ச - ததா பிங்கல லோசந :

சூலபாணி : கட்கபாணி : - கங்காளீ தூம்ரலோசந :
அபீருர்பைரவோ நாதோ - பூதபோ யோகிநீ பதி :

தநதோ தநஹாரீச : தநவாந் ப்ரீதி பாவந :
நாகஹரோ நாகபாசோ - வ்யோம கேச : கபால ப்ருத்

கால : கபாலமாலீச - கமநீய : கலாநிதி:
த்ரிலோசநோஜ்ஜவலந் நேத்ர : த்ரிசிகீ ச த்ரிலோகப :

த்ரிநேத்ர தநயோ டிம்ப : சாந்த : சாந்தஜனப்ரிய :
வடுகோ வடுவேஷஸ்ச : கட்வாங்க வர தாரக :

பூதாத்யக்ஷ : பசுபதி : - பிக்ஷúக : பரிசாரக :
தூர்தோ திகம்பர : சூரோ - ஹரிண : பாண்டுலோசந :

ப்ரசாந்த, சாந்தித : ஸித்த : - சங்கர : ப்ரிய பாந்தவ :
அஷ்டமூர்த்திர் நிதீசஸ்ச - ஞான சக்ஷúஸ் தபோமய :

அஷ்டோதார : ஷடாதார : - ஸர்பயுக்த : சிகீஸக :
பூதரோ பூதராதீச : - பூபதிர் பூதராத்மஜ :

கங்காலதாரீ முண்டீச - நாக யக்ஞோபவீதவாந்
ஜ்ரும்பணோ மோஹந : ஸ்தம்பீ மாரண : க்ஷேபணஸ்ததா

சுத்த நீலாஞ்ஜந ப்ரக்ய : - தைத்யஹா முண்டபூஷித
பலி புக்பலி புக் நாதோ - பாலோ பால பராக்ரம :

ஸர்வாபத் தாரணோ துர்கோ - துஷ்டபூதநிஷேவித :
காமீ கலா நிதி காந்த : - காமிநீ வசக்ருத்வசீ

ஸர்வ ஸித்திப்ரதோ வைத்யோ - ப்ரபுர் விஷ்ணு ரிதீ வஹி
அஷ்டோத்தரசதம் நாம் நாம் - பைரவஸ்ய மஹாத்மந:

(இதை அர்ச்சனையும், பாராயணமும் செய்வதால், இருமல், கக்குவான், இழுப்பு, காசம் முதலிய நோய்கள் அகலும்.)

ஸ்ரீ சங்கராசார்யார் அருளிய கால பைரவாஷ்டகம்

1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த - வந்தினம் திகம்பரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும், திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

2. பானுகோடி - பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்
நீலகண்ட - மீப்ஸிதார்த்த - தாயகம் த்ரிலோசனம்
காலகால - மம்புஜாக்ஷ - மக்ஷசூல - மக்ஷரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றுபவரும், முதல்வரும், நீலகண்டத்தை உடையவரும், அடியார்கள் வேண்டும் பொருளை அளிப்பவரும் முக்கண்ணரும், காலனுக்கு காலனாக இருப்பவரும், தாமரைமலர் போன்ற கண்ணையுடையவரும், சொக்கட்டானில் சூரரும், குறைவற்றவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

3. சூலடங்க - பாச - தண்ட - பாணி - மாதிகாரணம்
ச்யாமகாய - மாதிதேவ - மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர - தாண்டவப்ரியம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : சூலம், மழு, பாசம், தண்டம் இவைகளை கையில் ஏந்தியவரும், முதல் காரணரும், கரிய திருமேனி வாய்ந்தவரும், முதல் கடவுளரும், அழிவற்றவரும், பிணியற்றவரும், பயமுறும் பராக்கிரமமும் வாய்ந்தவரும், முக்திச் செல்வரும், அற்புத தாண்டவங்களில் ஆவல் கொண்டவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

4. புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த - சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம்
நிக்வணன் - மனோஜ்ஞஹேம - கிங்கிணீலஸத்கடிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : போகம், மோக்ஷம் இவைகளை அளிப்பவரும் பிரசித்தி பெற்றதும் அழகியதுமாகிய வடிவமுடையவரும், அடியார்களிடம் அன்புள்ளவரும், காத்தல் கடவுளாய் இருப்பவரும், எல்லா உலகத்தையும் தன் வடிவமாகக் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

5. தர்மஸேபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும்
ஸ்வர்ண வர்ணசேஷபாச - சோபிதாங்கமண்டலம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : தர்மமாகிய அணையை பாதுகாப்பவரும், அதர்ம வழியை அழிக்கிறவரும், கன்மமாயா, மலங்களை போக்குபவரும், நற்சுகம் அளிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், பொன்மயமான சடை கற்றையால் விளங்கும் திருமேனி உடையவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

6. ரத்னபாதுகா - ப்ரபாபிரமபாத - யுக்மகம்
நித்யமத்வீதிய -மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யுதர்ப்ப - நாசனம் கராலதம்ஷ்ட்ர - மோக்ஷணம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : ரத்ன பாதுகைகளின் ஒளியால் அழகு பெற்ற இரு திருவடிகளை உடையவரும், நித்யரும், இரண்டற்றவரும் இஷ்ட தெய்வமாக உள்ளவரும், குற்றமற்றவரும். மறிலியின் கர்வத்தை அடக்குபவரும், கூரிய அகன்றப் பற்களால் பயமுறச் செய்பவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

7. அட்டஹாஸ - பின்னபத்மஜாண்ட - கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத - நஷ்டபாப - ஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி - தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : அட்டகாச ஒலியினால் தாமரையில் தோன்றிய அண்ட கோசங்களை பிளக்குபவரும், கண்விழி நோக்கத்தால் பாபக் குவியலை அழிக்கின்றவரும், பாபம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை விதிப்பவரும், அஷ்ட சித்தியை அளிப்பவரும், கபால மாலையால் விளங்கும் கழுத்தை உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

8. பூதஸங்க - நாயகம் விசாலகீர்த்திதாயகம்
காசிவாஸ - லோகபுண்ய - பாபசோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : பூத கூட்டங்களுக்கு தலைவரும், விரிந்த புகழை அளிப்பவரும், காசியம்பதியில் வசிக்கும் மக்களது பாப புண்ணியங்களை பரிசோதிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், நீதி வழியில் கைதேர்ந்தவரும், பழமையானவரும், உலகத்துக்கு கர்த்தரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

9. காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர - புண்ய - வர்த்தனம்
சோகமோ ஹதைன்யலோப - கோபதாபநாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்

பொருள் : மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, சாதகத்தையும், பல வகைப்பட்ட புண்ணிய விருத்தியையும், வருத்தம், மயக்கம், ஏழ்மை, பேராசை, கோபம், தாபம் ஆகியவைகளின் நீக்கத்தையும் அளிக்கவல்லதாகிய இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள் படிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக கால பைரவ மூர்த்தியின் திருவடியருளைப் பெறுகின்றார்கள்.

(இதி ஸ்ரீமத் சங்கராசார்ய - விரசிதம் கால பைரவாஷ்டகம் ஸம்பூர்ணம்)

கால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்

பைரவ மூலமந்திரம்

ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் : ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம், க்ஷேத்ரபாலாய நம:

பைரவ அருளை ஈட்டித் தரும் மூலமந்திரத்திற்குரிய பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம் பின்வருமாறு

1. ஓம் ஹோம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய ஈசானமூர்த்தியே நம:
2. ஓம் ஹோம் க்ஷத்ரபாலாய தத்புருஷவக்த்ராய நம:
3. ஓம் ஹும் க்ஷம் க்ஷேத்ரபாலாய அகோர ஹ்ருதயாய நம:
4. ஓம் ஹும் க்ஷம் க்ஷேத்ரபாலாய வாமதேவகுஹ்யாய நம:
5. ஓம் ஹிம் க்ஷம் க்ஷேத்ரபாலாய ஸத்யோஜாதாயபாதாப்யாம் நம :
6. ஓம் ஹம் க்ஷேத்ரபாலாய ஸ்ருதாய நம:
7. ஓம் ஹாம் க்ஷம் க்ஷேத்ரபாலாய சிரசேஸ்வாஹா
8. ஓம் ஹும் க்ஷம் க்ஷேத்ரபாலாய சிகாயைவஷட்
9. ஓம் ஹைம் க்ஷம் க்ஷேத்ரபாலாய கவசாயஹும்
10.ஓம் ஹெளம் க்ஷம் க்ஷேத்ரபாலாய நேத்ரத்யாய வெளஷட்
11. ஓம் ஹ: க்ஷம் க்ஷேத்ரபாலாய அஸ்த்ராயபட்

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஸ்ரீம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா

உன்மத்த பைரவர் மந்திரம்

ஓம் ஹ்ரீம் அங்க் - க்லீம் உன்மந்தானத்த பைரவ
சர்வ சத்ரு நாசய குரு குரு ஸ்வாஹா

(தீவிரமான மனநோய்கள், சித்தபிரமை, ஹிஸ்தீரியா நோய் நீங்க)

ஸ்வர்ணாகர்ஷண பைரவ லக்ஷ்மி குபேர மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய லக்ஷ்மி கணபதயே
வர வரத ஸர்வ தனம்மே வசமானாய ஸ்வாஹா !

ஓம் மஹாலக்ஷ்மீர் மஹாகாளி மஹாகன்யா சரஸ்வதி
போக வைபவ சந்தாத்திரி பக்த அனுக்கிரஹ காரிணி

ஓம் அன்னம்தா தனம்தா பூதா த்வணி
மாதி பலப்ரதா ஸித்திதா புத்திதா
சூல சிஷ்டா சார ப்ரயணா !

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாய கமலதாரிண்யை
சக்தியை ஸிம்ஹ வாரின்யை பலாயை ஸ்வாஹா !

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரணாய
தனதான்ய பதயே தனதான்ய ஸம்ருதிர்ம்மே
தேஹி தாபாய ஸ்வாஹா !

ஓம் ஐம் க்லீம் ஸெளம் ஸர்வ மந்த்ர சொரூபிணி !
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பாலா புவனேஸ்வரீம்
ஹ்ரம் ஹ்ரீம் ஸ்ரூம் ஸகல ஜயகரி நமோஸ்துதே !

ஓம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ
ஆபதோ தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய
மம தாரித்தரிய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹ !

ஓம் சுவாநத் த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே !
வாயுபுத்ராய தீமஹி !
தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத் !!

கால பைரவ பஞ்சரத்னம்

கட்கம் கபாலம் டமருகம் த்ரிஸுலம் ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம் நமாம்யஹம் பைரவமிந்துசூடம்

கவித்வதம் ஸத்வரமேவ மோதான் நதாலேயே ஸம்பு மனோபிராமம்
நமாமி யானீ க்ருத ஸார மேயம் பவாப்தி பாரம் கம்யந்த மாஸு

ஜராதி துக்கௌக விபேத தக்ஷம் விராகி ஸமஸேவ்ய பாதாரவிந்தம்
நரபதிபத்வ ப்ரதமாஸு நந்த்ரே ஸுராதிபம் பைரவ மானதோஸ்மி

ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ ரமா தவாத்யாசித பாதபத்மம்
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம் நமாம்யஹம் பைரவமாதிநாதம்

கிராமகம்யம் மனஸாபி தூரம் சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம் பராவரம் பைரவமான தோஸ்மி

பைரவர் மூலமந்திரங்கள்

அஸ்யஸ்ரீ பைரவ மஹாமந்த்ரஸ்ய ப்ருஹதாரண்ய ரிஷி: அனுஷ்டு சந்த : பைரவொ தேவதா
வம் பீஜம், மாயா சக்தி: கம் கீலகம், மம அபீஷ்ட ஸித்யர்தே ஜபே விவியோக :

ஏக ஷஷ்டி அக்ஷரம் மந்திரம் லகு சித்திப்ரதாயகம்
ஏக ஷஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்திரஸ்ய சித்தியே

ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபதுத்தாரணாய குரு குரு வடுகாய ஹ்ரீம்.

ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்: ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம், க்ஷேத்ரபாலாய நம :

இலுப்பைக்குடி பைரவர் தோத்திரம்

ஒரு கையிலுடுக்கு மற்றையொரு கையினாக பாச மொருகையின் முத்தலை சூலொரு கையிற் கபாலங்கொண்டீ
ரிருகையுங் குரைப்பாமோத்தை யிசைக்கு நாய் சூழவில்வ
மிருகையுங் சூழ்வனத்திலியல் வயிரவன்றாள் போற்றி.
- சதாவதானம் சுப்பிரமணிய அய்யர்

பைரவர் அஷ்டோத்தர சதநாமாவளி

ஓம் பைரவாய நம
ஓம் பூத நாதாய நம
ஓம் பூதாத்மனே நம
ஓம் பூதபாவநாய நம
ஓம் க்ஷேத்ரதாய நம
ஓம் க்ஷேத்ரபாலாய நம
ஓம் க்ஷேத்ரக்ஞாய நம
ஓம் க்ஷேத்ரியாய நம
ஓம் விராஜே நம
ஓம் ஸ்மசானவாஸிநே நம

ஓம் மாம்ஸாசிநே நம
ஓம் ஸர்ப்பராசஸே நம
ஓம் ஸ்மராந்தக்ருதே நம
ஓம் ரக்தபாய நம
ஓம் பானபாய நம
ஓம் ஸித்தாய நம
ஓம் ஸித்திதாய நம
ஓம் ஸித்தஸேவிதாய நம
ஓம் கங்காளாய நம
ஓம் காலசமனாய நம

ஓம் கலாய நம
ஓம் காஷ்டாய நம
ஓம் தநவே நம
ஓம் கவயே நம
ஓம் த்ரிநேத்ரே நம
ஓம் பஹுநேத்ரே நம
ஓம் பிங்களலோசனாய நம
ஓம் சூலபாணயே நம
ஓம் கட்கபாணயே நம
ஓம் கங்காளிநே நம

ஓம் தூம்ரலோசனாய நம
ஓம் அபீரவே நம
ஓம் பைரவாய நம
ஓம் நாதாய நம
ஓம் பூதபாய நம
ஓம் யோகிநீபதயே நம
ஓம் தநதாய நம
ஓம் தநஹாரிண நம
ஓம் தநவதே நம
ஓம் ப்ரீதிபாவனாய நம

ஓம் நாகஹாராய நம
ஓம் நாகபாசாய நம
ஓம் வ்யோமகேசாய நம
ஓம் கபாலப்ருதே நம
ஓம் காலாய நம
ஓம் கபாலமாலிநே நம
ஓம் கமநீயாய நம
ஓம் கலாநிதயே நம
ஓம் த்ரிலோசனாய நம
ஓம் ஜ்வலந் நம
----------------------------------------