சனி, 6 ஜூன், 2020

குரு பார்வை கோடி நன்மை !!!

ஒருமுறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான்.

அவர் தனக்கு தெரிந்ததை எல்லாம் அவனுக்கு கற்று கொடுத்தார்.

சந்திரன் அதனைக் கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான்.

சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான்,

பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் சரியாக கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.

சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான்.

அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான்.

ப்ரஹஸ்பதி சந்திரனை சில மாதங்கள் கழித்து வரவழைத்தார்.

அச்சமயம் சந்திரன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன.

சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.

குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது.

தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க,

குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது.

திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி,

மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க,

பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.

தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய,

குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது.

குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.

அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது.

சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

தன் கணக்கு சரியாகவே இருந்ததுபோலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.

ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது?

குழந்தை எப்படிப் பிழைத்தது?

தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது.

புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார்

ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்?

சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றான்.

ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்தபோதும், கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை உணர முடியும்.

குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.

சில நேரங்களில் நமது குரு (ஆசாரியன் பார்வை ஆசி பூரணமாக நம்மிடம் இருந்தாலும்) கடாச்சம் கூட கோடி நன்மை தரும். எனவே

எப்பொமுதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஆசாரியனை சேவிக்க சென்று வருவோம்- காரணமே இல்லாவிட்டால் கூட.

 *ஆசாரிய தேவோ பவ:*
ததீசி _ இந்திரன்
வஜ்ராயுதம்
பரம் வீர் சக்ரா

ததீசி முனிவர் வேத கால மகாரிசிகளுள் ஒருவர்.

இவர் அதர்வண மகரிஷி மற்றும் சிட்டி தேவி ஆகியோரின் மகனாவார்.
அதர்வண வேதத்தை தந்தவர் அதர்வண மகரிஷி ஆவார்.

இவரது மனைவியின் பெயர் சுவர்ச்சா.

ததீசி - சுவர்ச்சா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர்
பிப்பலாத மகரிஷி ஆவார்.

ததீசி முனிவர் மிகச்சிறந்த சிவபக்தர்.

அவர், தம் மனைவியுடன் பல்லாண்டு காலம் நைமிசாரண்யத்தில் இன்றைய லக்னோ உத்திரபிரதேசம் அருகே பல காலம் தவம் புரிந்து சிவனைப் பூஜித்து வந்தார்.

ஒருநாள் க்ஷுவது என்ற மன்னனுடன் கருத்து வேறுபாடு காரணமாக இவர் போர் புரியும் சூழல் ஏற்பட்டது.

போரில் இவர் க்ஷுவது மன்னனின் பின்னந்தலையை தாக்க அவன் மூர்ச்சித்து வீழ்ந்தான்.

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து முன்பை விட உக்கிரத்துடன் போரிட்டான்.

ததீசியின் உடலை க்ஷுவது மன்னன் பிளந்தான்.

ததீசி முனிவர் சுக்கிராச்சாரியாரின் உதவியை நாட அவர், இவரது காயங்களை தனது யோக சக்தியினால் குணப்படுத்தினார்.
உடலை சீர்படுத்தினார்.

பின்னர் இவருக்கு மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார்.

இருப்பினும் செய்த தவறுக்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்.

இவரது தவத்தை கண்டு இரங்கிய சிவபெருமான் இவருக்கு காட்சி தந்து

1) இவரது எலும்புகள் வஜ்ஜிரத்தை (மின்னல்) போல உறுதியுடையதாக ஆகட்டும்.

2) இவரை எவரராலும் கொல்ல முடியாது

3) இவரை எவரும் துன்புறுத்தவும் முடியாது.

என்ற வரங்களை வழங்கினார்.

பாற்கடலில் அமுதம் கடைவதற்காக தேவர்களும், அசுரர்களும் முடிவு செய்தனர்.

தேவர்களும் தங்களின் ஆயுதங்கள் தீய சக்திகளிடம் சிக்காமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தேவரிஷி நாரதர் “தேவர்கள் தங்களின் ஆயுதங்களைப் ததீசி முனிவரிடம் கொடுத்து பாதுகாக்க சொல்வதே சிறந்தது” என்று கூறினார்.

தேவர்களும் தங்களின் ஆயுதங்களை ததீசியிடம் கொடுத்து “நாங்கள் திரும்பி வந்து கேட்கும் வரை ஆயுதங்களை பாதுகாக்க வைத்திருங்கள்” என்று கூறினர்.

முனிவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஆயுதங்களை தன்வசம் வைத்துக் கொண்டார்.

பாற்கடலை கடைந்த பின்பு வந்த அமிர்தத்தை தேவர்கள் பருகி சீரஞ்சீவி ஆயினர். தங்களின் ஆயுதங்கள் குறித்து மறந்து போயினர்.

ததீசி முனிவரும் தேவர்களிடம் அவர்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தார். நாட்கள் நகர்ந்தன. தேவர்கள் திரும்பி வரவில்லை.

ததீசி முனிவரும் தேவர்களின் ஆயுதங்களை பாதுகாக்க முடியாமல் தனது
தவ வலிமையால் அவற்றை திரவமாக்கி குடித்து விட்டார். தேவ ஆயுதங்களின் சக்தி முழுவதும் முனிவரின் முதுகெலும்பில் போய் சேர்ந்தது.

இந்நிலையில் விருத்தாசுரன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனுடைய தவத்தினைப் பாராட்டி பிரம்மதேவர் அவர் முன் தோன்றினார்.

அவரிடம் இருந்து அசுரன் “எனக்கு உலகின் உலோகம் மற்றும் மரத்தால் ஆன ஆயுதத்தாலோ, பஞ்சபூதத்தாலும், எந்த உயிரிகளாலும் ஆபத்து ஏற்படக் கூடாது” என்ற வரம் வேண்டும் என்று கேட்டான்.

பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அருளினார்.

பிரம்மாவின் இந்த வரத்தால் மிகவும் கர்வம் கொண்ட விருத்ராசுரன் அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான்.

யாராலும் அவனை வெல்ல இயலவில்லை. ரிஷிகள் தேவர்களும் கூட அவனை வெல்ல முடியாமல் திகைத்தனர்.

எந்த ஆயுதம் கொண்டு அவனைத் தாக்கினாலும் மரணம் கிடையாது என்ற சாகாவரம் பெற்ற காரணத்தால் அவனை வீழ்த்த இயலவில்லை.

தேவர்கள் அனைவரும்
சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர்.

உலக உயிர்களின் துன்பம் கண்டு சிவன் அவர்களுக்கு அனுக்ரகம் செய்ய எண்ணினார். “ததீசி முனிவர் மனமுவந்து தனது முதுகெலும்பை கொடுத்தால் அதை ஆயுதமாக்கி அந்த அசுரனை நீ வென்று விடலாம்”
என்றார்.

நைமிசாரண்யம் அருகே ஒரு மலை மீது ஒரு காலில் நின்றபடியே தவம் செய்யும் ததீசி மகரிஷியை கண்டான்.

நேரே அவர் முன் சென்று நின்று கைதொழுதான். வெகு நேரம் கழித்துக் கண் திறந்த ரிஷி ததீசி இந்திரனை ஆச்சரியமாகப் பார்த்தார்.

தான் வந்த காரணத்தையும் சிவபெருமான் கூறியதையும் கேட்டபோது, “ஓ…. இதற்காகத் தான் அப்படியெல்லாம் நடந்ததா?” என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார். காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை அல்லவா…?

ததீசி முற்றும் துறந்தவர். இந்த உடல் மீது பற்றற்றவர்.

மேலும் உலக நன்மைக்காகவும் விருத்ராசுரன் அழிக்கப்படவும் தனது எலும்பு பயன்படுவதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

“தாரளமாக எடுத்துக்கொள் தேவேந்திரா…! இது நான் செய்த பாக்கியம்!!” என்கிறார் புன்முறுவலுடன்.

ததீசி முனிவர் சம்மதித்துவிட்டாலும் இவரது முதுகெலும்பை சேதமின்றி எப்படி எடுத்துக்கொள்வது என்று தேவேந்திரனுக்கு புரியவில்லை.

அவனது தவிப்பை உணர்ந்த ததீசி மகரிஷி, “தேவந்திரா பசுமாடு ஒன்றை அழைத்து வா…. என் உடல் முழுதும் உப்பை தடவு. நான் யோக நிஷ்டையில் ஆழ்ந்துவிடுகிறேன். பசுவை கொண்டு என் உடல் மீது உள்ள உப்பை நாவினால் அகற்றச் செய். சதை அப்படியே தனியே வந்துவிடும். பின்னர் நீ தேவையான எலும்பை சேதமின்றி எடுத்துக்கொள்ளலாம்…” என்கிறார்.

அதன்படியே தேவேந்திரன் ஒரு பசுவைக் கொண்டு ததீசி முனிவரின் சருமத்தை நாவினால் நக்கச் செய்து எவ்வித சேதமும் இன்றி முதுகெலும்பை எடுத்துவிடுகிறான்.

பின்னர் அதை ஆயுதம் செய்ய தேவலோக சிற்பி விஸ்வகர்மாவிடம் கொடுக்கிறான்.
விஸ்வகர்மா அந்த எலும்பை செதுக்கி வஜ்ராயுதம் செய்கிறார்.

அவர் அதற்காக அந்த எலும்பை செதுக்கும்போது அதன் ஒரு சில துளிகள் பூமியில் சில இடங்களில் விழுகின்றன.

அந்த துளிகளின் வீரியத்தால் அங்கு வைர சுரங்கங்கள் தோன்றுகின்றன.

பூமியில் வைர சுரங்கங்கள் தோன்றிய வரலாறு இது தான். வஜ்ராயுதத்தின் மற்ற துளிகள் பட்ட இடங்களில் நவரத்தினங்களில் மற்ற ரத்தினங்கள் தோன்றின.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற வஜ்ராயுதத்தை வைத்து விருத்ராசுரனை இந்திரன் வென்று விடுகிறான்.

வஜ்ராயுதம் இந்திரனின் வலிமை மிக்க ஆயுதமாகவும் விளங்கியது.

பலசாலிகளான கருட பகவானும், அனுமனும் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டனர்.

கருட பகவான் தனது ஒரு சிறகினை இழந்தும், அனுமன் மூர்ச்சை அடைந்தும் இவ்வாயுதத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

தற்போது இந்திய அரசின் உயரிய விருதான பரம் வீர் சக்ராவின் மேல் ததீசி முனிவரின் முதுகெலும்பு படம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈவ் யுவோன் மேடே டி மரோஸ்
சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்.

சுவிட்சர்லாந்தில் ஒரு ஹங்கேரிய தந்தை ஆண்ட்ரே டி மேடே மற்றும் ரஷ்ய தாய் மார்த் ஹென்ட்ஸெல்ட் ஆகியோருக்குப் பிறந்த ஈவ் தனது ஆரம்பகால குழந்தைப் பருவத்தை ஜெனீவாவில் கழித்தார்,

1929 ஆம் ஆண்டில், அவர் இளம் வயதிலேயே , ​​தனது வாழ்க்கையில் விக்ரம் ராம்ஜி கானோல்கரை சந்தித்தார்.
காதல் கொண்டார்.
கானோல்கர் யுனைடெட் கிங்டமில் உள்ள சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள ராயல் மிலிட்டரி அகாடமியில் பயிற்சியளிக்கும் ஒரு இளம் இந்திய ராணுவ கேடட் ஆவார்

1932 இல், ஈவ் மற்றும் விக்ரம் லக்னோவில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்திய
மேஜர் ஜெனரல் விக்ரமுடன்
திருமணத்திற்குப் பிறகு ஈவ் சாவித்ரி பாய் கானோல்கர் ஆனார்.

சைவ உணவு உண்பவர் ஆனார் சரளமாக மராத்தி, சமஸ்கிருதம் மற்றும் இந்தி பேசக் கற்றுக்கொண்டார்.

அவர் இந்திய பாரம்பரிய இசை, நடனம் மற்றும் ஓவியம் கற்றுக்கொண்டார்.

அவர் எப்போதுமே ஒரு இந்தியர் “ஐரோப்பாவில் தவறாக பிறந்தார்” என்று கூறிக்கொண்டார்.
அயல்தேசத்தை சேர்ந்தவள் என்ற வார்த்தையை வெறுத்தார்கள்.

இந்து புராணங்களில் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார், இந்து வேதங்கள் பண்டைய வரலாறு
ஆகியவற்றை கரைத்து குடித்தார்.
இதுவே
பரம் வீர் சக்ராவின் படைப்பாளரான மேஜர் ஜெனரல் ஹிரா லால் அடால், பதக்கத்தை வடிவமைப்பதில் சாவித்ரி பாயின் உதவியைக் கேட்க வழிவகுத்தது,

இந்திரனுக்கு உதவி செய்த ததீசி முனிவர் தன் தியாகத்தால் கொடுத்த முதுகெலும்பே
விருத்ராசுரனை கொல்ல உதவியதை நினைத்து
தியாகத்தின் பதக்கத்தை
சாவித்ரி ஒரு எளிய ஊதா நிற நாடாவுடன் வடிவமைத்தார்.

பதக்க முகத்தில் பதிக்கப்பட்டிருப்பது இந்திரனின் வஜ்ராவின் நான்கு பிரதிகளாகும், இது ததீசியின் தியாகத்தை பிரதிபலிக்கிறது.
வஜ்ராக்களுக்கு இடையில் புடைப்பு- அசோக சின்னம். பதக்கம் வெண்கலத்தால் செய்யப்பட்டது.
கல் நாதஸ்வரம்

இசை உலகின் *கலை பொக்கிஷம்!*
கோயில் நகரம்  என்றழைக்கப்படும்   *கும்பகோணத்தில்* அமைந்துள்ள மகாமக *தீர்த்தவாரியின்* முதன்மை திருக்கோயிலான  *ஆதி கும்பேஸ்வரர்* கோயிலில் உள்ள *பெட்டகத்தில் பொக்கிஷமாக* பாதுகாக்கப்பட்டு வருகிறது *கல் நாதஸ்வரம் ஒன்று*.

*சிற்பியின்  கை  வண்ணத்தில்* கல் நாதஸ்வரமாக  *பிறந்து,* இசை வல்லுநர்களின் உயிர் காற்றுடன் கலந்து இதயத்தை மயங்க வைக்கும்  இன்னிசையாக  தவழ்ந்து *ராகங்களின் சுவடுகளை சுமந்து வரும்* இந்த  கல் நாதஸ்வரம்  *உருவாகி* ஆண்டுகள்   பல நூறு   இருக்கலாம் என்பது   ஆய்வாளர்கள்  கருத்து.

இந்தக் *கல் நாதஸ்வரம்,* சாதாரண  நாதஸ்வரத்தை  விட  *சுமார்  ஆறு மடங்கு கூடுதல்* எடையுடையது. 

சுமார் *இரண்டடி நீளமுடையதாகவும்*  வட  இந்தியக் குழல் இசைக்கருவியான  *ஷெனாய்  மாதிரியான* அமைப்பிலும்  உள்ளதாகும்.

*மூவாயிரம் ஆண்டுகள்* பாரம்பரியம் கொண்ட தமிழர் இசையானது *அதிகாலை துயில் எழுப்புவதில்* தொடங்கி,  *நள்ளிரவு உறங்கும் காலம் வரை* இசைக்கும் *தமிழர் மரபாகும்.*

*பருவத்துக்கு  ஏற்ற* கருவிகளை உருவாக்கி அதில் *உருவாகும்  இசையினை* இசைத்து இறைவனை வணங்கினர்  *ஆதி தமிழர்கள்* என்பது வரலாறு.  

மரத்தில் செய்வதற்கும் *முந்தைய ஆதிகாலத்தில்* இக்கருவியை *கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம்* என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் *கணிப்பு.*

இதற்குச் சான்றாக, *ஆயிரம் ஆண்டுகளுக்கு* முற்பட்டதாகக் கருதப்படும் *கல் நாதஸ்வரம்* கும்பகோணம் *ஆதிகும்பேஸ்வரர்* ஆலயத்திலுள்ளது.

மற்றொரு கல் நாதஸ்வரம்: தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான  *ஆழ்வார் திருநகரியில்* உள்ள *ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும்* ஒரு *கல் நாதஸ்வரம்* உண்டு.

சுமார் *350 ஆண்டுகளுக்கு முன்* அரசாண்ட *கிருஷ்ணப்ப நாயக்கர்* என்ற மன்னரால் *இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட   இந்த கல் நாதஸ்வரம்.*

இப்போது *வெறும் காட்சிப்பொருளாக* மட்டுமே பாதுகாக்கபட்டு வருகிறது.
*கல் நாதஸ்வரத்தின் உடல் அமைப்பு* :

*முகப்பில்* உள்ள முக்கிய பாகமான *சீவாளி,* காவிரிக்கரையில் விளையும் *ஒரு நாணல் புல்லில்* செய்யப்படுகிறது.

கல் நாதஸ்வரத்தில், *உலவுப்பகுதி மூன்று* உறுதியான கருங்கற்களால் தனித்தனியாகச் செய்யப்பட்டு *வெண்கலப்பூணல்* இணைக்கப்பட்டு *வெங்கல அனசுடன்*   மிக நேர்த்தியாக  *உருவாகி உள்ளது     இந்த கல் நாதஸ்வரம்.*

"" *மரத்தால் செய்யப்படும்   நாதஸ்வரங்களில்*   ஏழு  ஸ்வரங்கள் இருக்கும், ஆனால், *கல் நாதஸ்வரத்தில்* 6 ஸ்வரங்கள் *மட்டுமே இருக்கும்.*

அதனால்   *சண்முகப்ரியா, கல்யாணி* போன்ற *பிரதி மத்திம ராகங்கள்* மட்டுமே *வாசிக்க முடியும்.* 

இதில்  *3முதல் 3- 1/2  கட்டை  சுதியில்*   வாசிக்க இயலும். 

மேலும், சங்கராபரணம், *கரகரப்பிரியா, தோடி* போன்ற *சுத்த மத்திம ராகங்களை* இந்த நாதஸ்வரத்தால் *வாசிக்க முடியாது.* 

முழுமையாகவும் அடர்த்தியாகவும் *மூச்சை உள்ளே செலுத்தினால்* மட்டுமே  இதில்  *நல்இசை  கிடைக்கும்* எனவும்   *பயிற்சி இருந்தால்* மட்டுமே *இதை வாசிக்க முடியும்''* என்கிறார் திருக்கோயில் *வித்வான்  சாமிநாதன் பிள்ளை*.

குடந்தையில் வாழ்ந்து *மறைந்த   நாதஸ்வர மேதை  கும்பகோணம்  பக்கிரி சாமி  பிள்ளை* சுமார் 60 வருடங்களுக்கு முன்   கும்பேஸ்வரர் ஆலய முக்கிய விழாக்களில்  இந்த *கல் நாதஸ்வரத்தை* வாசித்துள்ளார். 

அவருக்கு பின்   திருக்கோயில் நாதஸ்வர  வித்வானாக   இருந்த *குஞ்சிதபாதம்  பிள்ளை,* 30 ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வந்துள்ளார்.  

அவருக்கு பின் வாசித்து வருபவர் தற்போதுள்ள *நாதஸ்வர கலைஞர்*   ஆவார்.

""சுமார்   15   வருடங்களுக்கு முன் *நடிகர் திலகம் சிவாஜி கணேசன்*   மனைவி   கமலா கும்பகோணம்  ஆதிகும்பேஸ்வரர்  ஆலயத்திற்கு வந்தபோது      கல் நாதஸ்வரத்தினை இசைக்க சொல்லி  கேட்டு சென்றார்  என்பதையும்     அதன்பின்  ஒரு விழா காலத்தில் நடைபெற்ற  *சப்தாவர்ணம்*  எனும் திருநாள் விழாவில்   திருக்கோயில்   *இசைக்கலைஞர்*  இதனை வாசித்தார். 

அவரே மறுபடியும் *29 செப்டம்பர் 2017* அன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு *கல் நாதஸ்வரத்தில்* ஒரு மணி நேரம் வாசித்தார்'' என்று திருக்கோயில் நிர்வாக  அதிகாரி  தெரிவித்தார்:

சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர்.

*ஸ,ரி,க,ம,ப, த,நி* ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று  மஹாபாரதம் கூறும்.

ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.

இசை ஒலியைக் கூர்ந்து நுட்பமாகக் கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள்.

*சட்ஜமம்* மயில் அகவுதலையும்;
*ரிஷபம்* மாடு கத்துதலையும்;
*காந்தாரம்* ஆடு கத்துவதையும்;
*மத்யமம்* அன்றில் பறவை கூவுதலையும்;     *பஞ்சமம்* குயில் கூவுதலையும்;
*தைவதம்* குதிரை கனைப்பதையும், *நிஷாதம்* யானை பிளிறுவதையும் ஒத்து இருக்கிறது என்று தமிழர்கள் இனம் கண்டனர்.
👏👏👏👏👏
படித்ததில் வியந்தது..
கருத்துகள்
😇😇😇😇😇
                               🤗🤗🤗🤗🤗🤗
*லிங்க புராணம் ~ பகுதி — 10*

  *மாயனை வென்ற ததீசி*
=======================

சனத்குமாரர் நந்தியை வணங்கி., ஐயனே., ததீசி முனிவர் மாயனை வென்ற., தாங்கள் கூற்றினைக் கடந்த வரலாற்றினை அன்பு கூர்ந்து சொல்ல வேண்டும் என்று வேண்டினார். ஒரு சமயம் பிரம்மன் தூங்கிய போது எழுந்த தும்மலிலிந்து சுபன் தோன்றினான். அவன் இந்திரன் அருளால் வஜ்ராயுதம் பெற்றும் மக்கள் நலம் காக்கும் மன்னனாகத் திகழ்ந்தான். மன்னனும்., ததீசியும்., ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது யார் பெரியவர் என்ற போட்டி எண்ணம் தோன்ற ஒவ்வொருவரும் தானே பெரியவன் என்று வாதித்தனர். மன்னவர்களை அண்டியே மறையோர் வாழ்கிறார் என்று கூற., ததீசி முனிவருக்குக் கோபம் வந்தது. அவர் அந்தணனே பெரியவர். எம்மை நீங்கள் பூஜிக்க வேண்டும் என்று கூறி அரசன் தலையில் ஓங்கி அறைந்தார். மன்னன் மிக்க கோபத்துடன் வஜ்ராயுதத்தை எடுத்து ததீசி மார்பிலே அடிக்க., அவர் ரத்தம் கக்கி துடிதுடித்து மயங்கி விழுந்தார். நினைவு திரும்பியதும் முனிவர் அரண்மனையை விட்டு வெளியேறினார். ததீசி சுக்கிராச்சாரியாரை நோக்கித் தவம் இயற்ற அவர் தோன்றினார். அவரிடம் நிகழ்ந்ததை எல்லாம் கூறி., அரசரின் வஜ்ராயுதத்தால் ஊறு நேர்வதற்கு முன் இருந்த உடலைப் பெற வேண்டினார். அப்போது சுக்கிரர் தனக்கு அச்சக்தி இல்லை என்றும் பரமனை வழிபட்டுக் கோரியதை பெறுமாறும் அறிவுறுத்தினார். ததீசி முனிவர் சிவனை வழிபட., அவர் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க முனிவர் வஜ்ராயுதத்தால் ஊறு நேரா தேகத்தை அருள வேண்டினார். அவ்வாறே ஈசனார் வரம் அருள ததீசி அரசனுடைய அரண்மனைக்கு வந்தார்.

வந்தவர் மன்னனிடம் இப்போது உன் பலத்தைக் காட்டு என்று கூற., மன்னன் மறுபடியும் முனிவரை வஜ்ராயுதத்தால் தாக்க., வஜ்ராயுதம் பொடிப் பொடியாகி விட்டது. முனிவர் கேலியாகச் சிரித்து விட்டுச் சென்றார். மன்னன் திருமாலைக் குறித்து தவமியற்ற., அவரும் அவன் முன் தோன்றினார். மன்னன் நிகழ்ந்தவற்றைக் கூறி ததீசியின் உடலைச் சோதிக்க ஒரு ஆயுதம் வேண்ட., ஈசனார் திருவருள் பெற்ற முனிவரைப் பணிய வைப்பது எப்படி முடியும். எனினும் தானே அந்தணனாக அங்கு வருவதாகக் கூறினார். இவ்வாறு தோன்றிய திருமாலைப் பார்த்த முனிவர்., பரந்தாமா அன்பனுக்கு அருள் புரிய ஏன் இந்த வேடம்? என்று கேட்க., என திருமால் சுய உருவில் தோன்றி முனிவரிடம் வேணியன் அருள் பெற்றவரால் ஆகாதது உண்டோ..! மன்னன் சுபன் என் பக்தன். அவனுடன் நட்புடன் இருக்க வேண்டுகிறேன் என்றார். ததீசி அதை ஏற்கவில்லை. தான் நேரில் வந்து கேட்டும் ஏற்காத முனிவர் மீது கோபம் கொண்ட திருமால்., அவர் மீது சக்கராயுதத்தை வீச., முனிவர் ஈசனைத் தியானித்து நின்றார். சக்கரம் முனிவரை மும்முரம் வலம் வந்து திருமாலிடமே திரும்பியது. அப்போது முனிவர்., "இந்தச் சக்கரம் நீலகண்டன் தந்ததல்லவா..! அது அவர் பக்தருக்குத் துன்பம் தருமா..?" என்று கேட்டார்.

இப்போரில் மாதவனுக்கு உதவ வந்து தேவர்கள் தோற்று ஓடினர். தன்னந்தனியாய் நின்ற மாதவன் மாயையால் முனிவரைக் குழப்ப., ஈசன் தந்த ஞானக்கண் மூலம் முனிவர் எதையும் நன்கு காண முடிந்தது. இவ்வாறு ததீசி முனிவரை வெல்ல முடியாமல் விஷ்ணு மயங்கி இருக்கையில் அங்கே பிரம்மன்., சிவன் தோன்றி இருவரையும் கோபம் நீங்கி சாந்தமடையுமாறு வேண்டினார். திருமால் ததீசியிடம் அவர் தவத்துக்குத் தலை வணங்குவதாகக் கூறி பாற்கடல் திரும்பினார். அது கண்ட சுபன் பாற்கடல் சென்று மாதவனிடம் தன் நிலைமை என்ன என்று கேட்க திருமால் விரோதம் நீக்கி நட்பு பெறுமாறு கூற., மன்னன் ததீசியை வணங்கித் தான் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். முனிவரும் முன்போல் அவனிடம் நட்பு கொண்டிருந்தார். அடுத்து., நந்தி காலனைக் கடந்த விவரத்தைக் கூறலானார்.

தொடரும்.....


*சிவாஷ்டகம்*

*ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஸ்வனாதம்* *ஜகன்னாத னாதம் ஸதானம்த பாஜாம் |*
*பவத்பவ்ய பூதேஸ்வரம் பூதனாதம்., சிவம் ஸம்கரம் ஸம்பு மீஸானமீடே || 1 ||*
அம்பா ஆராதனை

அம்பாளை ஆராதிப்பதற்கு ரொம்ப உத்க்ருஷ்டமான சாஸ்த்ரத்திலே சொல்லி இருக்கிற சம்ப்ரதாயத்தை அனுசரித்து எல்லோரும் அனுஷ்டானம் செய்து கொண்டு வருகிறோம்.

அம்பாளை நாம் சாதாரணமாக ஸஹஸ்ர நாமங்கள் சொல்லி ஆராதிப்பது உண்டு.

ஸஹஸ்ர நாமங்கள் என்று சொன்னால் நாம் சொல்லி வருவது சாதாரணமாக லலிதா ஸஹஸ்ர நாமம்தான்.

அந்த லலிதா ஸஹஸ்ர நாமத்தைச் சொல்லி நாம் அம்பாளை ஆராதிப்போம்.

நிஜமாக அந்த ஸஹஸ்ர நாமத்தினுடைய அர்த்தத்தை நாம் புரிந்து கொண்டால் அது ஒரு ரொம்பப் பெரிய விஷயம். அது புரிந்து கொண்டு அதன்படி நாம் நடந்துகொண்டால் நாம் அம்பாளுடைய பரிபூரண க்ருபைக்குப் பாத்ரமாவோம்.

ஸஹஸ்ர நாமங்களில் அம்பாளுடைய மகிமை எவ்வளவு? என்பதைச் சொல்லியிருக்கிறது.

அம்பாளுடைய பூஜை பண்ணக் கூடியவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறது.

வேதாந்தத்து சித்தாந்தம் என்ன என்பதையும் இங்கு சொல்லியிருக்கிறது. எல்லாமே சொல்லி இருக்கிறது.

அம்பாளுடைய மகிமை என்ன என்பதன் விஷயம் வரும்போது

“பவதாவ ஸூதா வ்ருஷ்டி: பாபாரண்ய தவானனா
தௌர்பாக்ய தூல வாதூனா
ஜராக் வாந்த ரவிப்ரபா
பாக்யாப்தி சந்த்ரிகா
பந்த சித்த கேகி கனாகனா
போக பர்வத தம்தூளி;
ம்ருத்யு தாரு குடாரிகா

என்று சொல்லியிருக்கிறது.

அவளை (அம்பாளை) பூஜித்தால் என்ன வெல்லாம் கிடைக்கும்? என்றால் கிடைக்காதது ஒண்ணுமில்லை.

 “பவதாவ ஸுதா வ்ருஷ்டி; ‘பவம்’ என்று சொன்னால் இந்த ஒரு சம்சார சக்கரம். சம்சார சக்ரம் என்று சொன்னால் ஜனன மரணாத்மக ஒரு ப்ரவாகம். பிறக்கிறோம். கொஞ்சம் வருஷம் இந்தப் பூமண்டலத்தில் இருக்கிறோம். திரும்ப இந்த சரீரத்தை விட்டு விடுகிறோம். இன்னொரு சரீரம் வருகிறது. அந்த சரீரத்துலே கொஞ்சம் சுகமோ, துக்கமோ அனுபவிக்கிறோம். போய் விடுகிறோம். திரும்ப இன்னொரு சரீரம். இந்த ஒரு சக்ரம், இது தான் சம்சார சக்ரம் என்பது.

எத்தனை காலம் இந்த சக்ரத்தில் சுற்றிக் கொண்டு இருப்பது? இதில் என்ன சௌக்யம் இருக்கிறது? பார்த்தால் இதில் ஒரு சௌக்யமும் இல்லை.

இந்த சக்ரத்திலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அம்பாளுடைய தயவு வேண்டும். அதிலிருந்து விடுதலை கொடுக்கக் கூடியவள் அம்பாள்.

 “பவதாவ ஸூதா வ்ருஷ்டி;” அதாவது அந்த நாமத்துக்கு நேரடியாக அர்த்தம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் காட்டிலே தீப்பிடித்து விட்டால் அந்தத் தீ அணைய வேண்டும் என்று சொன்னால் நாம் ஒரு குடம் ஜலம் கொண்டு போனால் அது ஒண்ணும் அணையாது. ஆனால் ஆகாசத்துலேருந்து பெரிய வ்ருஷ்டி: (மழை)வந்தால்தான் அந்தக் காட்டுத் தீ அணையும். இந்த சம்சார சக்ரம் என்கிற இந்த காட்டுத் தீக்கு அவளுடைய அனுக்ரஹம் என்பது ஒரு பெரிய மழை. அப்பேர்ப்பட்டவள் என்று சொன்னால் இந்த சம்சார பயத்தை போக்கக் கூடியவள்.

இரண்டாவதாக “பாபாரண்ய தாவன லா” என்று சொல்லி இருக்கிறது. பாபங்கள், பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.

பாபங்கள் செய்யாதவன் யார்? என்று கேட்டால் யாருமே இல்லை. எல்லாரும் ஏதோ ஒரு விதமாக பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.

சிலர் சொல்வார்கள். நான் ஒரு பாபமும் செய்யவில்லை என்று சொல்வார்கள். அது சும்மா நீங்கள் சொல்வதோடு சரி. செய்கையிலே உங்களுக்கு அப்படி இருக்க முடியாது. அது தான் பகவத் பாதாள் ஓர் இடத்திலே, மனிதன் பிறந்த அன்றிலிருந்து சாகிற வரையிலும் ஒரு விதமான பாபமும் செய்யவில்லை என்று நெஞ்சு தட்டிக் கொண்டு சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.

“வாசா’ ஜன்ம ப்ராயண யோஹோ
அந்த ராளே காம்ய ப்ரதி ஸித்த போஹோ ஸர்வாத் மனா வர்ஜனம்
கேனி சித் ப்ரதிக்ஞாதம் அசக்யம்”
பகவத் பாதருடைய வாக்யம் இது.

 “ஸ்வநிபுணானாம் அபி ஸுஷ்மா பராத தர்சனா” அதாவது சம்ஸ்க்ருதத்துலே அவருடைய வார்த்தைக்கு அர்த்தம்.

எவனுமே பிறவியிலிருந்து சாவதற்குள்ளே அந்த சமயத்துலே எந்த விதமான ஒரு காம்ய கர்மத்தையோ, நிஷித்த கர்மத்தையோ அதாவது பாபத்தையோ செய்யவில்லை என்று “ப்ரதிக்ஞா’ செய்ய முடியாது.

எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொள்ளும் நபர்களுக்கும், தனக்குத் தெரியாமலே சில தப்பிதங்கள் நடந்து போய் விடும். அதனாலே நம்மால் பாபங்கள் நடக்கவில்லை என்று நாம் சொல்லவே முடியாது. பின்பு என்ன சொல்லலாம்? நான் தெரிந்து ஒரு தப்பிதமும் செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். தெரியாமல் எவ்வளவு தப்பிதங்கள் நடக்கிறதோ தெரியாது. தெரியாமல் தப்பிதம் நடந்தால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமோ என்று யாரும் சொல்லக் கூடாது.

 ஏனென்றால்

“அனிச்ச யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ
தஹத்யே விஹி பாவத:
நெருப்பு இருக்கிறது.

ஒரு சின்னக் குழந்தை நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது தெரியாது. நெருப்பைத் தொட்டு விட்டது. அப்போது அந்த நெருப்பு அந்தக் குழந்தையின் கையில் சுடாமல் விடுமா? சுடும். அப்போது நாம் போய் அதுகிட்ட “என்ன குழந்தை தெரியாமல் தொட்டு விட்டால் அதையே நீ சுட்டு விட்டாயே!” என்று நாம் யாராவது அந்த நெருப்பை சத்தம் போடலாமா?அதே போல் நாம் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாபத்துக்குப் பலன் இருக்கவே இருக்கிறது. அதேபோல் புண்யத்துக்கும் பலன் இருக்கிறது.

ஒருவனுக்குத் தெரியவில்லை. அது புண்யம் என்று சொல்லி பண்ணி விட்டான். ஆனாலும் அந்த புண்யத்துடைய பலன் கிடைக்கத்தான் செய்யும்.அதாவது ஓர் இடத்துலே இந்த மாதிரி ஒரு  ஸத்காலட்சேபம் நடந்து கொண்டு இருந்தது. ஒருவன் வந்தான். இங்கு காலட்சேபம் நடக்கிறது என்பதே தெரியாது. அந்த இடத்துலே உட்கார்ந்தான். ஸ்வாமி தர்சனம் பண்ணினான். போய் விட்டான். அவனுக்கு அந்த பலன் இருக்கவே இருக்கும். பஜனை நடந்து கொண்டு இருந்தது. அவனும் அவர்களோடு சேர்ந்து அந்த பஜனை நாமத்தை உச்சரித்தான். அதனுடைய பெருமை என்ன என்பது தெரியாது. எல்லாரும் பகவான் நாமா சொல்கிறார்கள். அவனும் சொல்லிவிட்டான். அந்த பலன் அவனுக்கு இருக்கவே இருக்கும். அதுதான் பூர்வார்த்தத்துலே சொன்னார்,

 “தஹரர் ஹரதி பாபானே
திஷ்ட தித்மதர விஸ்ம்ருத:
என்று சொன்னார். அதனால் நாம் பாபங்கள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாபம் பாபம்தான். அதற்கு பலனை அனுபவிக்க வேண்டியது உண்டு. அப்போது எத்தனையோ பாபங்கள் நடக்கிறதே இந்த எல்லாப் பாபங்களுக்கும் நாம் ப்ராயச்சித்தத்துக்கு  எங்கே போவது? அந்த ப்ராயச்சித்தங்கள் நமக்குத் தெரியவும் தெரியாது. அதனால் இந்த இத்தனை பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் தேவியினுடைய நாமத்தை உச்சாரணம் செய்தால், தேவியினுடைய மகிமையைச் சொல்லும் போது

ஏகஸ்ய நாம்ணே ஞான  சக்தி:
பாப கானான் நிவர்த்தயே
தன் நிவர்த்ய மதே கர்த்தம்
மானன் லோகாய் ஸதுர்தசே”

இந்தப் பதினான்கு லோகங்களிலே இருக்கக் கூடிய ஜனங்கள் அத்தனை பேரும் செய்த பாபங்கள் எல்லாவற்றையும் தேவியுடைய ஒரு நாமமே போக்கும் என்று அதற்கு அர்த்தம்.

அம்பாளை எப்படியெல்லாம் ஆராதிக்கலாம் என்பதை மேலும் சிந்திப்போம்.