வியாழன், 10 செப்டம்பர், 2020

கடவுள்

கடவுள் யாரையும் கை‌

விடுவ‌தி‌ல்லை!


ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.

துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”

கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.

“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.

புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.

“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.

அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.

“இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.

மேலும் கடவுள் என்னிடம், “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய்.

மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.

“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவை தான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”

நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”

“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.

“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.

நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.



திரௌபதி


திரௌபதி ஏன் ஐவரை மணக்க நேர்ந்தது?

பாஞ்சாலி ஏன் ஐந்து பேரை மணக்க நேர்ந்தது என்னும் கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.  ஆனால் சில காரியங்களுக்குக் காரணமோ, அல்லது அது ஏன் நடக்கிறது என்பதோ நமக்குத் தெரியவே போவதில்லை.  

இந்த சந்தேகம் புதுசா நமக்கு மட்டும் ஏற்படவில்லை.  வியாசரின் சீடராக வியாசரோடு கூடவே இருந்து இந்நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த ஜைமினி முனிவருக்கும் ஏற்பட்டது.  மார்க்கண்டேயரை அணுகிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி அவர் அறிவுறுத்தப்பட அவரும் மார்க்கண்டேய முனிவரை அணுகிக் கேட்டார்.  

மார்க்கண்டேயரோ விந்திய மலையில் இருக்கும் நான்கு பறவைகளைக் கேட்கும்படி சொல்கிறார்.  அந்த நான்கு பறவைகளும் வேதம் ஓதிக் கொண்டிருந்தன.  ஒரு சாபத்தால் துரோணரின் மகன்களான அவர்கள் பறவைகள் ஆகிவிட்டதாயும் கூறினார். (இவர் மஹாபாரத துரோணர் இல்லை!)

அந்தப் பறவைகளிடம் சென்று ஜைமினி மஹாபாரதத்தில் உள்ள தன் சந்தேகங்களை ஒவ்வொன்றாய்க் கேட்டார். முதல் கேள்வியே பாஞ்சாலி ஐவரை மணந்தது குறித்துத் தான். அதற்கு அந்தப் பறவைகள்

 சொன்ன மறுமொழியாவது.  தேவேந்திரனுக்கும் தேவகுரு பிரஹஸ்பதிக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் பிரஹஸ்பதி மறைந்துவிட, தேவேந்திரன் குரு இல்லாமல் துவஷ்டாவின் மகன் விஸ்வரூபனைத் தன் குருவாய்க் கொண்டான். விஸ்வரூபனோ அசுரர்களிடம் பிரியம் உள்ளவன்.  

ஆகவே தேவர்களுக்கான அவிர் பாகத்தில் ஒரு பகுதியை அசுரர்களுக்கும் அளித்து வர, இதைத் தெரிந்து கொண்ட தேவேந்திரன் விஸ்வரூபனைக் கொன்றுவிடுகிறான். கோபம் கொண்ட துவஷ்டா தன் ஜடாமுடியிலிருந்து விருத்திராசுரனை உருவாக்குகிறான். விருத்திராசுரனிடம் நட்புப் பாராட்டி நயவஞ்சகமாய் அவனையும் தேவேந்திரன் கொல்கிறான்.

தேவேந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொள்ள, அவன் பலத்தில் பாதி, யமன், வாயு, அஸ்வினி தேவர்களைச் சென்றடைகிறது.  அசுரர்களுக்கும், தேவர்களுக்கும்மீண்டும் போர் ஆரம்பிக்க மஹாவிஷ்ணு பூமி பாரம் குறைக்கக் கிருஷ்ணனாய் அவதரித்தார்.

 அவருக்குத் துணையாக தேவேந்திரனைப் பாண்டவர்களாய்ப் பிறக்க வைத்ததாக ஐதீகம்.  தேவேந்திரனின் பெருமை யுதிஷ்டிரனாகவும், பலம் பீமனாகவும், பாதி அம்சம் அர்ஜுனனாகவும், அஸ்வினி தேவர்களின் அழகு நகுல, சகாதேவர்களாகவும் பிறப்பு எடுத்ததாகச் சொன்னது அந்தப் பறவை.  

ஆகவே பாஞ்சாலி ஐவரைத் திருமணம் செய்து கொண்டதாய்ச் சொல்லப் பட்டாலும்  அவள் திருமணம் செய்து கொண்டது ஒருவரைத் தான் என்றும் கூறியது.

இது மார்க்கண்டேய புராணத்தில் உள்ள கதை.  ஆனால் திரௌபதி முந்தைய பிறவியில் நளாயினியாக இருந்தாள் எனவும் கூறுவார்கள்.  நளனின் மகள் ஆன நளாயினி விதி வசத்தால் மௌட்கல்ய முனிவரை /(சிலர் முனிவர் பெயர் கௌசிகர் என்பார்கள்.)

மணந்து கொள்ள நேரிடுகிறது.  தொழு நோயால் பீடிக்கப்பட்ட முனிவர் அவளை மிகவும் பாடாய்ப் படுத்தி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்குகிறார்.  ஒரு சமயம் முனிவர் தனக்கு இஷ்டமான தாசி ஒருத்தரிடம் தன்னை அழைத்துச் செல்லுமாறு நளாயினியிடம் கட்டளை இட, அவளும் அவரை ஒரு கூடையில் வைத்துத் தலையில் தூக்கிச் சென்றாள்.  

அப்போது  அங்கே கழுவில் ஏற்றப்பட்டிருந்த மாண்டவ்ய ரிஷியின் மேலே கூடை இடிக்க, மாண்டவ்யர் வலி பொறுக்க முடியாமல், "காலை சூரியோதயத்துக்குள்ளாக மௌட்கல்ய ரிஷி தலை வெடித்து இறக்கட்டும்!" என சாபம் கொடுத்துவிடுகிறார்.

இதைக் கேட்ட நளாயினி தான் பத்தினி என்பது உண்மையானால் நாளை சூரியனே வரக் கூடாது என ஆணையிடுகிறாள்.  மறுநாள் சூரியனே உதிக்கவில்லை.  உலகம் இருட்டில் மூழ்குகிறது.

ஹோமம்

ஹோமங்

களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..? அப்படி எடுத்துக்கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?


முதலில் ஹோமத்தின் போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன. வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது. இந்தவகை ஹோமங்களில் இறைவனை அக்னியில் ஆவாஹனம் செய்வதில்லை.

‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார். இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.

பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப்படுகின்றன. ஒரு சில இடங்களில் விசேஷமாக அறுகம்புல், வெள்ளை எள், நெல் முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள். இந்த முறையில் பூர்ணாஹுதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி ஹோமத்திற்குள் இடுவது இல்லை.

அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும், சக்தி வழிபாடு ஆன சாக்த முறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்வார்கள். இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்வார்கள்.

இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில் கொப்பரை முதலானவற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச் செய்வார்கள். இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்று சொல்லும்போது நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலான எளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம். மாறாக எளிதில் உருகாத இரும்பு, நிக்கல் முதலான உலோகங்களை இடுவது கூடாது.

பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்த இந்த சில்லரை காசுகளைப் போடுவது என்பது தவறு. நாம் எந்த ஒரு பொருளை யாகத்தில் செலுத்தினாலும் அது நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும். அந்த ஹோம பஸ்மத்தினையே நாம் இறைவனின் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக் கொள்வது என்பது தவறு. ஆக, இவ்வாறு ஹோமத்திற்குள் காசு போடுவது என்பது சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றி சாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.

ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும், அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது தரையினில் பள்ளம் வெட்டி அதற்குள் புதைத்து வைப்பது போன்ற செய்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே. ஒருமுறை இறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாது என்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்னமும் ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிக மிக நல்லது. அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இறைவனுக்கு ஆஹுதியாக அக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும் நம் செயல். ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்து நாம் இட்டுக்கொள்ளும் ரக்ஷையும், அந்த சாம்பலுமே ஆகும். ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அதனையே வாயிற்படியில் மஞ்சள்துணியில் கட்டியும் வைக்கலாம்.

ஸ்ரீ வேதநாயகன் சிவன் ஸ்ரீசிவனும், வேதமும்

ஸ்ரீ வேதநாயகன் சிவன்
ஸ்ரீசிவனும்,வேதமும்


==============

வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது நாதம் நாமம் நம:சிவாயவே என்பதை அனைவரும் அறிவோம்
.
"வேத:ஶிவ: ஶிவோ வேத:=சிவனே வேதம்,
வேதமே சிவம்
ஸ்ரீபரமேஸ்வரரின் மூச்சு காற்று வேதம்.ஆதலால் என்றும் நிரந்தரமானது.அழிவில்லாதது.அபௌருஷேயமானது.
அப்பேற்பட்ட வேதம்

 ஸ்ரீசிவனுக்கு எப்படியெல்லாம் சேவை செய்தது என  புராணங்கள் கூறுவதைக்காண்போம்
1.வேதப்பாதுகை
===========
ஸ்ரீசிவனின்
பாதுகை வேதம்.
ஸ்ரீசிவபெருமான் திருமணக்கோலம்கொண்டபோது தேவர்கள் வேதப்பாதுகையை சமர்பித்ததாக சிவபுராணம் கூறுகிறது.திருமணம் முடிந்தபிறகு
அந்தப்பாதுகையை திருத்துருத்தி
 (மாயவரம் அருகில் உள்ள குற்றாலம்)ஸ்தலத்தில் உத்தாலமரத்தடியில் விட்டுச்சென்றார் என்பர்.இன்றும் அத்தலத்தில் தரிசிக்கலாம்.
திருநாவுக்கரசர் தனது பாடலில்  ஓதியஞானமும் ,ஞானப்பொருளும்

ஒலி சிறந்த வேதியர் வேதமும்  வேள்வியும் ஆவன........ஐயாறன் அடித்தலமே.என்கிறார்
 
2.வேத நந்தி
=========
ஒருமுறை நான்கு வேதங்களும் வெள்ளைக்காளையாக மாறி
ஸ்ரீசிவனை வாஹனமாகி தாங்கி நின்றனர்.
(வேதமே தர்மம் ,தர்மமே வேதம். தர்மமே நந்தியின் ஸுரூபம்)

ஸ்ரீசிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது.

ஸ்ரீநந்திதேவர்
தன் மூச்சுக்காற்றால் ஸ்ரீசிவனுக்கு சாமரம் வீசுவதாக ஐதீகம்
அவ்வாறு சென்றால் சென்ற நிமிடம் வரை நம் வாழ்க்கையில் செய்த
புண்யபலன் வீணாகும் என்பர்

3. வேத மலைகள்
==========
 நான்கு வேதங்களும் நான்கு மலைகளாக திகழும் ஸ்தலம் வேதகிரி எனப்போற்றப்படும் திருக்கழுகுன்றம்
.ஒவ்வோரு யுகத்திலும் ஒவ்வொரு மலைகளில் ஸ்ரீபரமேஸ்வரன் எழுந்தருள்வதாக புராணம் கூறுகிறது.இது நான்காவதான சதுர்யுகம் கலியுகம் அதனால் அதர்வண வேதகிரியில் ஸ்ரீபரமேஸ்வரன் அமர்ந்து அருள்புரிகிறார்

4,வேதவனம்
============
நான்கு வேதங்களும் ஆரண்யமாகவும்,மனித உருவில் ஸ்ரீசிவனை
வழிபட்ட ஸ்தலம் வேதாரண்யம்.(திருமறைக்காடு.)
திறக்க முடியாமல்  ரொம்ப நாட்கள்மூடியிருந்த  கதவை  திறக்க திருநாவுக்கரசர் பதிகம் பாடி திறந்த புண்யஸ்தலம்.பிறகு திருஞானசம்பந்தர்
கதவை மூட  "சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும்.......என்றபதிகம் பாடி கதவை மூடினார்.


5.வேதமான்
==========

ஸ்ரீசிவபெருமானின் கையில் உள்ள மான் வேதத்தின் சின்னம்.எப்போதும் ஸ்ரீசிவன் நோக்கி அவரது செவிகளில் வேதம்  ஓதிக்கொண்டே இருக்கும்.

தமிழ் மறைகள் "வேதம் நான்மறியே எனப்போற்றுகிறது"
ஸ்ரீகங்காளர்,ஸ்ரீபிக்ஷாடனர்,ஸ்ரீசந்த்ரசேகர், என சிவனின் பலவிசேஷ ரூபங்களில்  இந்த   மான் உள்ளது


6. வேதக்குதிரை
=============
திரிபுர சம்ஹாரத்தின் போது   சிவபெருமான் பூமியைத் தேராக்கி நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி  பிரம்மாவை சாரதியாக்கி     சூரிய சந்திரர்களை     சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். நிகழ்ந்த ஸ்தலம்=திருவதிகை வீரட்டானம்

7.வேத மரங்கள்
( ஸ்தலவிருக்ஷம்)
======================
வேதாரண்யத்தில் ஒவ்வொரு யுகத்திற்கு ஒவ்வொரு வேதம் ஸ்ரீசிவன்  கோயிலுள்ள ஸ்தல விருக்ஷமாகிறது.
காஞ்சியில்  மாமரம் வேதஸ்ஸுரூபம்.
திருக்குற்றாலத்தில் பலாமரம் வேதஸ்ஸுரூபம். என ஸ்தலபுராணங்கள் கூறுகின்றன.


8.வேதச்சிலம்பு
============
காஞ்சியில் உள்ள சிவாலயங்களில் ஒன்று மறை நூபுரம் ஆகும்.
இத்தலத்தில் யுக முடிவில் வேதம் வழிப்பட்டு  காற்சிலம்பாயின.
ப்ரஹ்மாவுக்கு ஸ்ரீபரமேஸ்வரன் தூக்கிய திருவடியை அசைத்து
 சிலம்பொலி மூலம் வேதத்தை உபதேசித்த ஸ்தலம்

9.வேதவீணை
=========
ஸ்ரீசிவனின் கையிலுள்ள வீணை வேதவீணை.அவர் வேதவீணைதரித்து ஸ்ரீவீணாதர தக்ஷிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். இந்த வீணையைப் தக்கயாகப் பரணி (தக்ஷயாகம்) போற்றப்பட்டுள்ளது

திருச்சிற்றம்பலம்

ஓம் ஸ்ரீ மஹாசாஸ்தா தாஸன்
பா. சிவகணேசன்
ஓம் ஸ்ரீ மஹாசாஸ்த்ரு பரபிர்ம்ம ஸ்தானம் திருகாடந்தேத்தி

ஐந்து

 #எல்லாம்_ஐந்து_தான்
#சிவபெருமானுக்கு

1.பஞ்ச பூதங்கள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

2. பஞ்சாட்சரம் ஐந்து

நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ     - காரண பஞ்சாட்சரம்
சி                  - மகா காரண பஞ்சாட்சரம்

3.சிவமூர்த்தங்கள்

1.பைரவர்                      -வக்கிர மூர்த்தி
2.தட்சிணாமூர்த்தி   -சாந்த மூர்த்தி
3.பிச்சாடனர்               -வசீகர மூர்த்தி
4.நடராசர்                     -ஆனந்த மூர்த்தி
5.சோமாஸ்கந்தர்    - கருணா மூர்த்தி  

4.பஞ்சலிங்க சேத்திரங்கள்

1.முக்திலிங்கம் -கேதாரம்
2.வரலிங்கம்       -நேபாளம்
3.போகலிங்கம்  -சிருங்கேரி
4.ஏகலிங்கம்        -காஞ்சி
5.மோட்சலிங்கம் -சிதம்பரம்

5.பஞ்சவனதலங்கள்

1.முல்லை வனம்   -திருக்கருகாவூர்
2.பாதிரி வனம்         -அவளிவணல்லூர்
3.வன்னிவனம்        -அரதைபெரும்பாழி
4.பூளை வனம்         -திருஇரும்பூளை
5.வில்வ வனம்       -திருக்கொள்ளம்புதூர்

6.பஞ்ச ஆரண்ய தலங்கள்

1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம்
2.மூங்கில் காடு     -திருப்பாசூர்
3.ஈக்காடு                  -திருவேப்பூர்
4.ஆலங்காடு          -திருவாலங்காடு
5.தர்ப்பைக்காடு    -திருவிற்குடி

7.பஞ்ச சபைகள்

1.திருவாலங்காடு -இரத்தின சபை
2.சிதம்பரம்               -பொன் சபை
3.மதுரை                    -வெள்ளி சபை
4.திருநெல்வேலி   -தாமிர சபை
5.திருக்குற்றாலம் -சித்திர சபை

8.ஐந்து முகங்கள்

1.ஈசானம் - மேல் நோக்கி
2.தத்புருடம் -கிழக்கு
3.அகோரம் -தெற்கு
4.வாம தேவம் -வடக்கு
5.சத்யோசாதம் -மேற்கு

9.ஐந்தொழில்கள்  

1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.மறைத்தல்
5.அருளல்

10.ஐந்து தாண்டவங்கள்

1.காளிகா தாண்டவம்
2.சந்தியா தாண்டவம்
3.திரிபுரத் தாண்டவம்
4.ஊர்த்துவ தாண்டவம்
5.ஆனந்த தாண்டவம்  

11.பஞ்சபூத தலங்கள்  

1.நிலம்        -திருவாரூர்
2.நீர்               -திருவானைக்கா
3.நெருப்பு   -திருவண்ணாமலை  
4.காற்று      -திருக்காளத்தி   
5.ஆகாயம் -தில்லை

12.இறைவனும் பஞ்சபூதமும்

1.நிலம்        - 5 வகை பண்புகளையுடையது
  (மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
2.நீர்               - 4 வகை பண்புகளையுடையது
            (சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
3.நெருப்பு   - 3 வகை பண்புகளையுடையது
            (ஒளி ,ஊறு ,ஓசை )
4.காற்று      - 2 வகை பண்புகளையுடையது
             (ஊறு ,ஓசை )
5.ஆகாயம் - 1 வகை பண்புகளையுடையது
              (ஓசை )

13.ஆன் ஐந்து

பால் ,தயிர் ,நெய் ,கோமியம் ,கோசலம்

14.ஐங்கலைகள்

1.நிவர்த்தி கலை
2.பிரதிட்டை கலை
3.வித்தை கலை
4.சாந்தி கலை
5.சாந்தி அதீத கலை

15.பஞ்ச வில்வம்  

1.நொச்சி
2.விளா
3.வில்வம்
4.கிளுவை
5.மாவிலங்கம்

16. ஐந்து நிறங்கள்

1.ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
2.தத்புருடம் -கிழக்கு           - பொன் நிறம்
3.அகோரம் -தெற்கு              - கருமை நிறம்
4.வாம தேவம் -வடக்கு      - சிவப்பு நிறம்
5.சத்யோசாதம் -மேற்கு    - வெண்மை நிறம்

17.பஞ்ச புராணம்
1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5.பெரியபுராணம்

18.இறைவன் விரும்ப நாம் செய்யும்  ஐந்து

1.திருநீறு பூசுதல்
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4.வில்வ அர்ச்சனை புரிதல்
5.திருமுறை ஓதுதல்

19.பஞ்சோபசாரம்
1.சந்தனமிடல்
2.மலர் தூவி அர்ச்சித்தல்
3.தூபமிடல்
4.தீபமிடல்
5.அமுதூட்டல்  
    
#திருச்சிற்றம்பலம்


காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டியவை

 காலையில் எழுந்தவுடன்  சொல்ல வேண்டியவை




ஐந்துகரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !
 
கராக்ரே வஸதே லக்ஷ்மீ : கரமத்யே ஸரஸ்வதீ |
கரமூலே து கௌரீ ஸ்யாத் ப்ரபாதே கர தர்சனம் ||

ஸமுத்ர வஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே |
விஷ்ணுபத்னீ நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வ மே  ||

அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா |
பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதக நாசனம் ||

காயத்ரீம் துளசீம் கங்காம் காமதேனும் அருந்ததீம்
பஞ்சமாத்ரூ ஸமரேந்நித்யம் மஹாபாதக நாசனம்

புண்யஸ்லோகோ நளோ ராஜா
                     புண்யஸ்லோகோ யுதிஷ்டிர:  |
புண்யஸ்லோகா ச  வைதேஹீ
                      புண்யஸ்லோகோ ஜனார்தன:  ||

கார்க்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்ய ச |
ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே கீர்த்தனம் கலிநாசனம் ||

அஸ்வத்தாமா பலிர்வ்யாஸ: ஹனுமான் ச                   
விபீஷண :  |
க்ருப: பரசுராமஸ்ச ஸப்தைதே ஸிரஞ்சீவின : ||

ப்ரும்மா முராரீ த்ரிபுராந்தகஸ் ச
 பானுச்சசீ பூமி ஸுதோ புதஸ் ச
குரு ஸுக்ர சனீப்யஸ் ச ராகு கேதவஸ் ச
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ப்ருகுர்வஸிஷ்ட:  க்ரதுராங்கிராச்ச
மனு :  புலஸ்த்ய: புலஹச்ச கௌதம: |
ரைப்யோ மரீசி: ச்யவனோத தக்ஷ :
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
           ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌ ச |
ஸப்தஸ்வராஸப்த ரஸாதலானி
           குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ஸப்தார்ணவா ஸப்தகுலாசலாச்ச
         ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த
பூராதி லோகா:  புவனானி ஸப்த
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்த்தா$$ப :
               ஸ்பர்சச்ச  வாயூர்ஜ்வலிதம் ச தேஜ:  |
நபஸ் ஸ சப்தம் மஹதாஸஹைவ
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்  ||

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு:
    குருர் தேவோ மஹேஷ்வர:  |
குருர் சாக்ஷாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம :  ||

து: ஸ்வப்ன து: ஸகுன துர்கதிர் தௌர்மனஸ்ய
துர்பிக்ஷ துர்வ்யஸன து : ஸஹதுர்யஸாம்ஸி
உத்பாத தாப விஷபீதீம் அஸத்க்ருஹார்த்தீம்
வ்யாதீம்ஸ்ச  நாசயது மே ஜகதாம் அதீஷ : ||

****************************************************

சனீஸ்வரன்

 *சனீஸ்வர் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்*

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்தர் சொன்ன பரிகாரமுறை இது.

நீங்கள் எத்தனை கோடி ,
கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,

நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.

தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் , உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி.

அப்படிப்பட்ட ஒரு தேவரகசியம் போன்ற தகவலை , நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மட்டற்றமகிழ்ச்சி…….

தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.

உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.

இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படைத்தாலும், ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா.. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!..

ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான்.

உங்கள் முன்னோர்களுக்கே  நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும்
என்று நினைக்கும் சுமங்கலி பெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.
தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,
தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்த காணுப் பிடி பூஜையை செய்கிறார்கள்.

திறந்தவெளியில் தரையைத்
தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள்.

அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து,
ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி
அளவு எடுத்து வைத்து,

காக்கைகளை “கா…கா…’
என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.
அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.
அப்படிச் சுவைக்கும் போது அந்தக் காக்கைகள்,

 “கா…கா…’என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்த க்காக்கைகள் உணவினை சாப்பிட்டுச் சென்றதும்,

அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.

இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும்
கருதுகிறார்கள்.

காக்கை சனிபகவானின் வாகனம்.
காக்கைக்கு உணவு அளிப்பது
சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.

காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சிலவகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு
எந்தப் பறவைகளிடமும் காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.

அதனால் காக்கைக்கு உணவு
அளித்தால் எமன் மகிழ்வாராம்.

எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.
தந்திரமான குணம் கொண்ட காகம்.

காலையில் நாம் எழுவதற்கு முன்,
காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தகாரியம் வெற்றிபெறும்.
நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக்கரைந்தால் நல்ல பலன் உண்டு.

வீடுதேடி காகங்கள் வந்து கரைந்தால்
அதற்கு உடனே உணவிடவேண்டும்.

எனவே, காக்கை வழிபாடு செய்வதால்
சனிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மன மகிழ்வுடன் வாழலாம்.


நாராயணபட்டத்திரி

நாராயணபட்டத்திரி


வரலாறு :

நமது இந்து மதத்தில் நிறைய தெய்வீக நூல்கள் உள்ளன. அதில் ஒரு புகழ்பெற்ற நூல் தான் நாராயணீயம். இதை எழுதியவர் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி ஆவார்.

இவர் கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் கிருஷ்ணனின் மேல் பற்றற்ற பக்தியை கொண்ட மஹான் ஆவர்.

வேத வியாசா பாடியுள்ள ஷீமத் பாகவத பூர்ண காவியத்தை அதே கவிநயத்துடன் சுருக்கப் புனைந்தவர் தான் பட்டத்திரி. இது தான் நாராயணீயம் என்றும் பெயர் பெற்றது. இவர் நிறைய தெய்வீக நூல்கள் இயற்றி இருந்தும் நாராயணீயம் தான் இவருக்கு புகழைத் தேடி தந்தது.

*நாராயணீயம் நூலமைப்பு :*

ஸ்ரீமத் பாகவத பூர்ணம் வடமொழியில் தொன்று தொட்டு பழக்கத்திலிருந்தது. இது 18000 ஸ்லோகங்களை கொண்டிருக்கும். இதையே பட்டத்திரி 1036 ஸ்லோகங்களுடன் 100 பிரிவுகளில் அழகிய கவிநயத்துடன் சுருக்கப் புனைந்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதன் கருத்துக்கள் தவறாமல் பொருள் மாறாமல் எழுத்துக்கள் பிறலாமல் அப்படியே பக்திமயம் சொட்ட சொட்ட, காவிய நயம் மிளர வாசிப்பவர்களை திரும்ப திரும்ப வாசிக்கத் தூண்டும் அளவிற்கு ஒரு அற்புதமான படைப்பாகும்.

இந்த தெய்வீக நூல் கவிநயமான வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து சமஸ்கிருத மொழியில் வழங்கியுள்ளார். இதை படிக்கும் போது ஸ்ரீமத் கிருஷ்ண பரமாத்மா உங்கள் முன்னால் இருப்பதை போன்று தோன்றும்.

சரி வாங்க இன்னைக்கு இந்த நாராயணீயம் பற்றி தெரிந்து கொள்ளவோம். உங்களுக்கு சமஸ்கிருத மொழி புரியவில்லை என்றால் அதன் மொழிபெயர்ப்பு உள்ளது அதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

*நாராயணீயம் தோன்றிய கதை :*

இந்த நாராயணீயம் குருவாயூரில் கோயில் கொண்டிருக்கும் குருவாயூரப்பனுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டது. கடவுள் கிருஷ்ணனுக்காக ஒரு கோயில் குருவாயூரில் உள்ளது. எனவே இந்த கிருஷ்ணன் குருவாயூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். எனவே இங்கு எழுந்தருளியுள்ள கிருஷ்ணனை குருவாயூர் தலைமை அல்லது தந்தை என்று அழைக்கின்றனர்.

இந்த நூல் நோய்களை தீர்க்கும் புகழ் பெற்றது. இதை படித்தால் எல்லாம் கிடைக்கும் இருப்பினும் ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கும். இறக்கும் தருவாயில் இருக்கும் நோய்களை கூட தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

மேல்பத்தூர் பட்டத்திரி ஒரு ஆசிரியரும் ஆவார்.
இவர் அச்சுத பிஷா ரோதி என்றும் அழைக்கப்பட்டார். பட்டத்திரி பக்திப் பாதையில் இருக்கும் போதே அவர் பக்கவாத நோயால் அவதிப்பட்டார். தன்னை அந்த நோயிலிருந்து காப்பாற்ற வேண்டி குருவாயூரப்பனிடம் வேண்டினார். இதற்காக அவர் எழுதத் தொடங்கிய நூல் தான் நாராயணீயம்.

*நோய் தீர்ந்த கதை :*

இதை எப்படி தொடங்குவது என்ற தயக்கம் எழ அவர் பெரும் கவிஞர் எழுதச்சனுக்கு கடிதம் எழுதினார். தனக்கு அதில் தக்க யோசனை தருமாறு கேட்டுக் கொண்டார். அவரும் "மீன் தொட்டு உண்" என்று எழுதி அனுப்பி இருந்தார்.

பட்டத்திரியோ சைவம் சாப்பிடுபவர் ஆனால் இந்த பொருளின் ஆழப் பொதிந்து இருக்கும் கருத்தை உணர்ந்த பட்டத்திரி கிருஷ்ணனின் மச்சவதாரத்தை முதன்மையாகக் கொண்டு நாராயணீயம் எழுதத் துவங்கினார்.

100 நாட்களுக்கு ஒரு சதகம் (10 மற்றும் மேற்பட்ட ஸ்லோகங்களை கொண்டிருக்கும்) என்ற கணக்கில் 1036 ஸ்லோகங்களை எழுதினார். ஒவ்வொரு சதகமும் முடியும் போது தான் கொண்டிருக்கும் பக்கவாதம் நோயிலிருந்து தம்மை காத்து அருளும் படி வேண்டினார். 100 நாட்கள் முடியும் போது அவரது நோயும் குணமானது.
இப்படி தான் நாராயணீயம் தீவிர நோய்களை தீர்க்கும் ஒரு தெய்வீக நூல் ஆனது. இதை இந்துக்கள் தங்கள் வீடுகளில் நாள்தோறும் படித்து பயன்பெறுகின்றனர்
இங்கே அதன் ஒவ்வொரு பகுதிகளும் அதை படித்தால் என்ன பயன்கள் நமக்கு கிடைக்கும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

*தசகம் பயன்கள் :*

2-சொர்க்கத்தில் மரியாதை கிடைக்கும்
12-நல்ல நிலைமை கிடைக்கும்
13- நீண்ட ஆயுள், புகழ் மற்றும் செல்வம் கிடைக்கும்
15-கிருஷ்ணின் தாமரை அல்லது அவர் பாதத்தை சென்றடைவீர்கள்
16-நீண்ட ஆயுள் கிடைக்கும் மற்றும் செய்த பாவங்கள் அழியும்
17-அபாயம் வராது
18-வெற்றி மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
19-பற்றற்ற வாழ்க்கை கிடைக்கும்
22-கெட்ட செயல்களை செய்யாமல் மனசு இருத்தல்
23-பயம் போகும், பாவங்கள் அழியும்
24-பற்றற்ற வாழ்க்கை கிடைக்கும்
25-பயத்தினை வராமல் தடுத்தல்
26-பாவம் அழியும் மற்றும் மனசு பயம் வருவதை முன்கூட்டியே அறிதல்
27, 28-எல்லா தொழில்களிலும் வெற்றி கிடைத்தல்
30,31-பாவங்கள் அழிதல் மற்றும் இரட்சிக்கப்படுதல்
32-எல்லா எண்ணங்களும் ஈடேறும் மற்றும் பக்தி அதிகரித்தல்
33-பக்தி அதிகரித்தல் மற்றும் நினைத்தது நடக்கும்
40- பக்தி வாய்ப்படுதல்
51-நினைத்தது எல்லாம் கிடைக்கும்
52- எல்லாம் நடக்கும்
60-(1-3வரிகள்) - விரைவில் திருமணம் நடக்கும்
69-பக்தி கிடைக்கும்
80-பாவங்கள் மன்னிக்கப்படும் மற்றும் உங்களை பற்றிய வதந்திகள் மறையும்
82-தொழில்களில் வெற்றி அடையலாம்
83- எல்லா பாவங்களும் துடைக்கப்படும்
85-வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் காணாமல் போகும்.
87-செல்வம் மற்றும் பற்றற்ற வாழ்க்கை கிடைக்கும்
88-எல்லா பிரச்சினையும் சரியாகும்
89-(வரிகள் 7-10)-பிரச்சினைகள் வராது தடுக்கப்படும் மற்றும் இரட்சிக்கப்படுவர்
97-பற்றற்ற வாழ்க்கை கிடைக்கும்
100-நீண்ட ஆயுள், சந்தோஷம், நோய் குணமாகும் மற்றும் ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கும்
இந்த அற்புதமான கிருஷ்ணனின் பொன் காவியமான நாராயணீயம் தினமும் படித்து நாமும் பயன் பெறுவோம்.

ஸ்ரீ திரிபுர ரஹஸ்யம்


 ஸ்ரீ திரிபுர ரஹஸ்யம் எனும் ஓர் அரிய நூலில் காணப்படும் ஒரு மஹோன்னத பொக்கிஷம் இந்த “ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்”.  

இதனை காமேஷ்வரனான சிவனே காமேஷ்வரியான தேவிக்கு அருளியதாக ஸ்ரீ பரசுராமருக்கு, ஸ்ரீ தத்தாத்ரேயர் உபதேஸிக்கிறார். இதிலுள்ள நாமாவளிகள் அனைத்தும் “ஸ்ரீ ஸௌபாக்ய வித்யா” மந்திரத்தை முன் வைத்து அமைக்கப்பட்டது.

“ஸ்ரீ வித்யா” என்ற அம்பிகையின் ஆராதனையை உபாஸிப்பவர்களுக்கு, பஞ்ச தஸாக்ஷரியிம் அதிலிருந்து பெறப்பட்ட ஸ்ரீ லலிதா த்ரிசதியும் இன்றியமையாதவை.  ஸ்ரீ வித்யா பூஜாவிதிகளை கடைப்பிடிக்க மிகக்கடுமையான நியம, நிஷ்டைகள் மிக அவசியம்.

ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தை கடைப்பிடித்து, உய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் எளிதில் கிட்டாது.  அம்பிகையே விரும்பினால் தான், இம்மார்கம் வயப்படும் என்பது சான்றோர் வாக்கு.

அப்படிப்பட்ட அம்பிகையை எல்லோரும் வணங்கி, உய்யவே ஐயன் நந்தி வாஹனன், ஸ்ரீ தத்தர் – ஸ்ரீ பரசுராமர் மூலமாக உலகிற்கு இதை உறைத்தார் என்பது சான்றோர் கருத்து.

மாத்ருகா பஞ்சகம்

மாத்ருகா பஞ்சகம்


ஸ்ரீஆதிசங்கரர் பகவத்பாதாள் “மாத்ரு பஞ்சகம்" மகிமை!

அம்மா உனக்கு பல கோடி
நமஸ்காரம்!

ஆதிசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது.

தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன் துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார்.

இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை.

தாயின் அனுமதியில்லாமல் துறவியாகவோ ஆதிசங்கரருக்கு சம்மதமில்லை.

ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை ஒரு பற்றிக் கொண்டது.

ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார்.

“அம்மா என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் சன்னியாசி ஆக நீ அனுமதி தந்தாயானால் அது என்னை விட்டு விடும்”.

ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒத்துக் கொண்டார்.

ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார்.

முதலை அவர் காலை விட்டு விட்டது.

(அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)

கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை.

வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹி” என்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும்.

முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார்.

உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால்

துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார்.

‘உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்”

ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார்.

ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள்.

சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார்.

அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர்

தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்” மிகவும் நெகிழ்ச்சியானது.

அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே.
ஒரு ஜகத்குரு ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப் பாடிய #மாத்ரு #பஞ்சகம் இது தான்.

1.ஆஸ்தம் தாவதி³யம் ப்ரஸூதிஸமயே து³ர்வாரஶூலவ்யதா²
   நைருச்யம் தநுஶோஷணம் மலமயீ ஶய்யா ச ஸம்வத்ஸரீ ।
ஏகஸ்யாபி ந க³ர்ப⁴பா⁴ரப⁴ரணக்லேஶஸ்ய யஸ்யாக்ஷம:
   தா³தும் நிஷ்க்ருʼதிமுந்நதோঽபி தநயஸ்தஸ்யை ஜநந்யை நம: ॥

தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!

2.கு³ருகுலமுபஸ்ருʼத்ய ஸ்வப்நகாலே து த்³ருʼஷ்ட்வா
   யதிஸமுசிதவேஶம் ப்ராருதோ³ மாம் த்வமுச்சை: ।
கு³ருகுலமத² ஸர்வம் ப்ராருத³த்தே ஸமக்ஷம்
   ஸபதி³ சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம: ॥

ஹே தாயே! c ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!

3.ந த³த்தம் மாதஸ்தே மரணஸமயே தோயமபிவா
   ஸ்வதா⁴ வா நோ த³த்தா மரணதி³வஸே ஶ்ராத்³த⁴விதி⁴நா ।
ந ஜப்த்வா மாதஸ்தே மரணஸமயே தாரகமநு-
   ரகாலே ஸம்ப்ராப்தே மயி குரு த³யாம் மாதுரதுலாம் ॥

தாயே! c மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. c மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!

4.முக்தாமணி த்வம் நயநம் மமேதி
    ராஜேதி ஜீவேதி சிர ஸுத த்வம் ।
இத்யுக்தவத்யாஸ்தவ வாசி மாத:
   த³தா³ம்யஹம் தண்டு³லமேவ ஶுஷ்கம் ॥

என் முத்தல்லவா c ! என் கண் அல்லவா c ! c என் ராஜா, என் குழந்தை c சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !

5.அம்பே³தி தாதேதி ஶிவேதி தஸ்மிந்
   ப்ரஸூதிகாலே யத³வோச உச்சை: ।
க்ருʼஷ்ணேதி கோ³விந்த³ ஹரே முகுந்த³
   இதி ஜநந்யை அஹோ ரசிதோঽயமஞ்ஜலி: ॥

அன்று ப்ரஸவ காலத்தில் ‘அம்மா’ அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.


கடவுளை தேடி

 கடவுளைத் தேடி….
~~~~~~~~~~~~~
ஷவரில் தலை அலசி குளித்த உடம்பு, கங்கையில் இறங்கி கும்மாளம் போட்டது.

பத்து பாக்கெட்டுகள் பிஸ்கெட் வாங்கி அதை சாதுக்களுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு போனேன். சாதுக்கள் யாரும் பிஸ்கெட்டை லட்சியம் செய்யவில்லை.

சிறுவர்கள்தான் வாங்கிக்கொண்டு போனார்கள். அதில் ஒரு சிறுவன் பிஸ்கெட்டுகளைப் பிரித்து நாய்களுக்கு வினியோகித்தான். தானம் யாருக்கு செய்தால் என்ன. எல்லாமும் சாதுக்களே என்பதுபோல உணர்வு வந்தது.

கங்கைக் கரையிலேயே வாழ்ந்து, அங்கேயே இறந்துபோக ஆசைப்பட்டு, அவ்விதம் இறந்தவர்களை தகனம் செய்யும் இடம் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்.

அங்கு போகும் ஆசை வந்தது.....

கருப்பு வெள்ளைப் புகை. பிண நாற்றம். பல்வேறு சிதைகள். அங்கு இரண்டு தகதகத்துக் கொண்டிருந்தன. ஒன்று கனன்றுகொண்டிருந்தது. மற்ற மூன்றும் அமைதியாகி அடங்கிக் கிடந்தது. அதிலிருந்து அதிகம் புகை வந்தது.

தெருவின் விளிம்பிலிருந்து பிணங்கள் எரிவதைப் பார்க்கமுடிந்தது. விறகுக் கட்டைகள் மாட்டு வண்டியில் வந்து இறங்கின. கைமாற்றிக் கொண்டுபோய் அடுக்கி வைத்தார்கள்.

ஏதோ ஒரு புதிய பிணம் வர, இறக்கச் சொல்லி தூக்கி வந்தவரிடம் காசு வாங்கினார்கள். பிறகு சிதை தயாரித்தார்கள். வயதான ஆணின் பிணம் சிதைமீது வைக்கப்பட்டது. அதன்மீதும் விறகுகள் வைக்கப்பட்டது.

“ராம் நாம் சத்யஹ‘ என்பது இடையறாத வாக்கியமாக இருந்தது. எது விசாரிக்கப்பட முடியாத ஒரு விஷயமோ, எது விளங்காத ஒரு விஷயமோ, எது நம்மை ஆளுமை செய்கிறதோ, எந்த சக்தி நம்மீது படர்ந்து நம்மை இயங்க வைக்கிறதோ அதுவே சத்தியம்.

நானும் இறங்கி அந்த அடுக்கிய சிதைமீது வைத்திருந்த பிணத்தை உற்றுப் பார்த்து, அதன் காலைத் தடவி தலையில் வைத்துக் கொண்டு “போய் வாரும்’ என்று சொல்லி, “ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ‘ என்று அரற்றினேன்.

காலெல்லாம் சுடுகாட்டுப் புழுதி. எங்கோ உட்கார வேட்டியிலும் கருப்பு. பிணவாடை பழகிவிட்டது. முகத்திலும் புகை படிந்திருக்க வேண்டும். கங்கையில் குளித்த தலைமுடி சடையாகத்தான் இருந்தது. பரட்டையாகத்தான் கிடந்தது.

ஆண் நண்பரின் சிதைக்கு தீ வைக்கப்பட்டது. நான் கைகூப்பி வணங்கினேன்.

கண்கள் கலங்கின. எனக்கென்னவோ யாருக்காவது சமஸ்காரம் செய்யவேண் டும் என்ற எண்ணம் இருந்தது.

அரைமணியில் இன்னொரு சடலம் வந்தது. அது பெண். எண்பது வயதிற்குமேல் இருக்கும். மழித்த தலை. பொக்கை வாய். சுருங்கி கோணலான கால்கள். சுருக்கமான தோல் உடம்பு. வற்றிய முலை. மார்பெலும்பு. நெற்றியில் சந்தனக் கீற்று. வட இந்திய விதவையாக இருக்கக்கூடும்.

அந்த சிதை உரிமையாளருக்கு கொஞ்சம் ஆங்கிலம் புரிந்தது. “சமஸ்காரம் நான் செய்கிறேன்’ என்று கேட்டதற்கு அவன் நான்கு விரல்களை நீட்டினான்.

எனக்குப் புரியவில்லை. விரலை சுண்டிக் காட்டினான். அந்த சமஸ்காரம் செய்வதற்கு நான் காசு கொடுக்கவேண்டும் என்று சொல்ல, இடுப்பு பெல்ட்டிலிருந்து நாநூறு ரூபாய் காசு எடுத்து அவனுக்குக் கொடுத்தேன். பையை ஓரம் வைத்தேன்.

ஒரு அந்தணர் வந்தார். அவருக்கு அவன் இருநூறு ரூபாய் கொடுத்தான். அவர் என் கையில் கண்டங்கத்திரி நூலைக் கட்டினார். பிரேதத்தின் நோய் என்னைத் தாக்காமல் இருப்பதற்காக அப்படி செய்வது வழக்கம் என்பது எனக்குத் தெரியும்.

நான் தர்ப்பை வளையத்தை கையில் தரித்துக்கொண்டேன். தர்ப்பைப் புல்லை இடுக்கிக்கொண்டேன். உட்கார்ந்து காலின்கீழ் தர்ப்பையை போட்டுக்கொண்டேன்.

அவர் சொன்ன மந்திரங்கள் எனக்குப் புரிந்தன. அந்த மந்திரங்கள் ஒரு நாவலுக்காக நான் திரும்பத் திரும்ப படித்து மனதில் ஏற்றிக்கொண்டவை.

ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன அர்த்தம் என்று தெளிவாகத் தெரியும். இதுபற்றி பேசியும் நான் அறிந்திருக்கிறேன். என் தந்தை இறந்தபோது இந்த மந்திரங்களைச் சொல்லி, அர்த்தம் கேட்டு மனதில் பதியவைத்தேன். இதுபற்றி எழுதியும் இருக்கிறேன்.

எனவே இது அர்த்தமற்ற ஒரு விஷயமாக எனக்கில்லை. “ஏஷான்ன மாதா ந பிதா ந பந்துகு ந அன்னிய கோத்ரக'' என்ற மந்திரத்தின் அர்த்தம் எனக்குத் தெரியும்.....

“இந்த பிரேதமானது எனக்கு தாயாக, தந்தையாக, உறவினராக, என் வர்க்கத்தினராக இல்லாதுபோனாலும், இதன் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு திருப்தியத திருப்தியத திருப்தியத’' என்று கட்டை விரல் வழியே மறித்து நீர் வார்த்தேன்.

நான் சொல்வதைக் கேட்டு அந்த அந்தணர் 'அட!' என்று வியந்தார். தமிழர்கள் கெட்டிக்காரர்கள் என்று தன் நெற்றியை சுட்டிக்காட்டினார். நான் நீர்க்குடத்தோடு அந்த அம்மையாரை வலம் வந்தேன். பானையை உடைத்து தரையில் வீசினேன்.

வாயில் அரிசி போட்டேன். முன் நெற்றியை அவர் பாதத்தில் வைத்துக்கொண்டேன்.

“அம்மா, நீ எந்த ஜென்மத்தில் என் தாயோ, எந்த ஜென்மத்தில் என் சகோதரியோ எனக்குத் தெரியவில்லை. என் தாயே, உன் உள்ளம் குளிர மந்திர ஜெபம் சொல்லி, சிவ நாமம் சொல்லி, விஷ்ணு நாமம் சொல்லி உன்னை கரையேற்றுகின்றேன்’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

அந்த பிணம் வைக்கின்ற ஆள், “இறந்தவர்கள் இங்கு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்’ என்று சொன்னான்.

எல்லாரும் என் முகத்தையே பார்த்தார்கள்.

“இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன் கழல் தொழுதெழுவேன் கடலினில் அமுதொடு கலந்த நஞ்சை மிடரினுள் அடக்கிய வேதியனே’' என்று பாட, என்னை அறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது.

“தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்களென்றும் நோயே பட்டொழிந்தேன் உன்னை காண்பதோர் ஆசையினால் வேயே பூம்பொழில் சூழ் கனமாமலை வேங்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆளென்னை கொண்டருளே’' என்று அந்த அம்மையாரின் சார்பாக நான் பாட, அங்குள்ளவர்கள் தலையை அசைத்து ரசித்தார்கள்.

அவர்களுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனால் பாட்டின் இனிமை புரிந்தது. நெய்யில் தோய்த்து பற்றி எரியும் கொள்ளிக்கட்டையை அந்த சிதைக்கு அடியில் சொருகினேன்.  சுற்றிலும் நெய் வார்த்தேன்.

“பற்றே ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன் மற்றே ஒன்றறியேன் எங்கள் மாயனே மாதவனே’' என்று மனசு அலற பாடினேன்.

“ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ‘'.

சிதை பற்றிக்கொண்டது. பச்சென்று மேலே எழுந்தது. உலர்ந்த கட்டைகள், நிறைய நெய், கோடை காற்று. சிதை திகுதிகுத்து எழுந்தது.

''போ. போ போ.'' விரட்டினார்கள்.

நான் மேலேறி, வேறு பக்கம் படியிறங்கி முங்கி முங்கி கங்கை நீரில் குளித்தேன். இரண்டு கைகளிலும் நீர் எடுத்து அந்த அம்மாவின் வாயில் ஊற்றுவதுபோல நீர் வார்த்தேன்.

“சந்தோஷமா?" என்று மனதிற்குள் வினவினேன். “நிம்மதியாகப் போய் வா!" என்று கைகூப்பினேன். ஒரு பித்து நிலையில் கொஞ்சம் பேசினேன்.

“நான் இறக்கும்போது நீ வா. அடுத்த ஜென்மத்தில் ஒரே இடத்தில் பிறப்போம். ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டவராய், அறிந்து கொண்டவராய், ஏதோ ஒரு உறவாய் வாழ்வோம். பேசுவோம். சிரிப்போம். இந்த தகனத்தோடு உன் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. என் இறப்போடு என் வாழ்க்கை முடிந்துவிடாது. இது தொடர்கதை. முன்னம் வினைப்பயன். மாறிமாறி வந்துகொண்டிருக்கும்........

உன் தகனத்தினால் என் வினையின் ஒரு பகுதி அறுந்தது. நான் உன்னை தகனம் செய்ததால் உன் வினையின் ஒரு பகுதி அறுந்தது. எனவே இப்படி வினைகளை அறுத்து அறுத்து எறிந்து, எந்த எதிர்பார்ப்புமின்றி வாழ்ந்து நாம் உன்னதமான இடத்திற்குப் போகலாம்.’'

மனம் செயல்களை செய்யக்கூடாது. மனம் சாட்சியாக இருக்கவேண்டும். எந்த யோசனையும், எந்த திட்டமிடலும், எந்த உந்துதலும் இருக்கக்கூடாது.

உணவு கிடைத்ததா சாப்பிடு. மழை பெய்ததா குளி. செத்தாரைப்போல திரி என்று ஏதேனும் ஒரு ஜென்மத்தில் வாழ்க்கை நடக்கவேண்டும். உந்துதல் அற அற இப்படிப்பட்ட ஒரு ஜென்மம் கிடைக்கும்.

“அய்யா, உமக்கு என்ன பெயர்?.’'  “எனக்கா, என்ன பெயர் தெரியவில்லையே....'’ என்று விழிக்கவேண்டும். இந்த நிலை ஒரு கனவா, என் கற்பனையா, ஒரு வெற்று ஆசையா. இப்படி வாழமுடியுமா?.

பெயர் அறுத்துப் போகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். கங்கைக்கரை சாதுக்களெல்லாம் பெயர் அறுத்தவர்கள் அல்ல. இது ஒரு ஸ்திதி. இதிலிருந்து இரண்டு மூன்று ஜென்மங்களுக்குப் பிறகு அவர்கள் பெயர் அறுத்த மனிதர்களாக வாழ்வார்கள்.
எவரும் இல்லாது கங்கைக் கரையில் கிடைத்ததை உண்டு வாழ்வதும் ஒரு அழகான இடம்தான்.

எங்கோ மயிலாப்பூரில் இரண்டு மனைவியரோடு வாழ்ந்து, இங்கே எவருக்கோ தகனம் செய்து கங்கைக் கரையில் உட்கார்ந்து கொண்டிருப்பதும் ஒரு அழகான இடம்தான். இது ஒரு ஜென்மம். இம்மாதிரி பல ஜென்மங்கள் தாண்டித்தான் நான் உன்னத நிலைக்குப் போக முடியும்.

அந்த தகனத்திற்குப் பிறகு நான் பல மணிநேரம் கங்கைக்கரை படியில் உட்கார்ந்திருந்தேன். வேறுவிதமாக நடிக்கிறேனோ என்ற எண்ணத்தை சோதித்துக் கொண்டேன்.

இல்லை என்று புரிந்துகொண்டேன். எங்கோ இருக்கின்ற வீட்டின்மீது பற்றும், இப்பொழுது இந்த இடத்தில் அமர்ந்திருக்கின்ற தனிமையும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றே. இது ஒரு வேலை. இது ஒரு பயிற்சி. இது ஒரு ஒர்க் ஷாப். இது ஒரு பள்ளிக்கூடம்!


எலுமிச்சை

 *தூங்கும் போது பக்கத்தில் எலுமிச்சை துண்டுகளை வையுங்கள்! நடக்கும் அதிசயம் இதோ!*

🔳எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அல்லவா?

🔳அந்த வகையில் அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் நடக்கும் அதிசயங்கள் இதோ!

🔳எலுமிச்சை துண்டுகளை தூங்கும் போது வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

🔳► சிலருக்கு இரவில் தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க, இரவில் படுக்கும் போது, ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்கும் திறன் மேம்படும்.

🔳► எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவுகிறது.

🔳► இரவில் படுக்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்துக் கொண்டு தூங்கினால், அதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் உடல் மற்றும் மனம் அமைதியாகி, மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும்.

🔳► எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணம் நமது உடம்பில் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீராக்குகிறது. எனவே படுக்கும் போது எலுமிச்சை துண்டுகளை வைத்திருப்பது மிகவும் நல்லது.

🔳► எலுமிச்சை ஒரு நல்ல இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. ஏனெனில் இந்த எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணம், பூச்சிகள் நம்மை அண்டாமல் தடுக்கிறது.

🔳► இரவில் படுக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால், இரவு முழுவதும் அதன் காற்றினை சுவாசித்து, மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதை உணரக்கூடும்.

🔳► எலுமிச்சை பழத்தில் இருந்த வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்க உதவுகிறது.


ருத்ராஷம்


ருத்ராட்ச மாலையை எப்போது அணியக் கூடாது?

நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது.

மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும்
தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக
தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.

துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.

இன்றைய சமுதாயத்தில் உலகசுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம் - உலக சுகம் இரண்டையும் ஏற்றுக் கொண்டு தான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால்,
ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின் போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம்
காப்பாற்றப்படும்.காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ,கூட்டியோ அணியக்கூடாது.

ருத்ராட்ச மாலையை அணியும் முறை:-


குடுமியில் அணியவேண்டியது - 1
தலை உச்சியில் அணியவேண்டியது - 13
தலையில் அணியவேண்டியது - 36
காதில் அணிய வேண்டியது 1அல்லது 6
கழுத்தில் அணியவேண்டியது - 32
புஜத்தில் (கை 1க்கு) அணியவேண்டியது - 16
ஒரு மணிக்கட்டில் அணியவேண்டியது - 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்கவேண்டியது - 25
இம்மை மறுமை பலன்களைஅடைய உதவும்
ஜெபமாலையில் (கையில்வைத்துக் கொள்ள) கட்டவேண்டியது 27,53 அல்லது 108.

ருத்ராட்ச வடிவங்கள்:-

ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன்
கொடுக்கிறது. சிவபுராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும்
ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு முகம் - சிவ வடிவம்
இரு முகம் - தேவி வடிவம்
மூன்று முகம் - அக்னி சொரூபம்
நான்கு முகம் - பிரம்ம வடிவம்
ஐந்து முகம் - ருத்ர வடிவம்
ஆறு முகம் - சண்முக வடிவம்
ஏழு முகம் - அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் - கணபதி வடிவம்
ஒன்பது முகம் - பைரவர் வடிவம்
பத்து முகம் - திருமால் வடிவம்
11 முகம் - ஏகாதச ருத்திரவடிவம்
12 முகம் - துவாதச ஆதித்யவடிவம்
13 முகம் - முருகன் வடிவம்
14 முகம் - சிவ வடிவம்.

ருத்ராட்சையின் பிற பெயர்கள்:-

ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி,அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என
ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன.


ஸ்ரீலக்ஷ்மியும் வில்வமும்

 ஓம் ஸ்ரீ மஹாலெட்சுமியே போற்றி


ஸ்ரீலக்ஷ்மியும் வில்வமும்



=================

1.ஸ்ரீலக்ஷ்மி தாயார் நித்யவாசம் செய்யுமிடமாக  ஸ்ரீநாராயணரின் ஹ்ருதயம்,தாமரைப்பூ,வில்வம்,யானையின் மஸ்தகம்,பசுவின் குறி,குதிரை முகம்,சுமங்கலி வகிடு  எனக்கூறுவர்

2.வில்வமே ஸ்ரீலக்ஷ்மியின் ஸுரூபம்,நித்யவாசஸ்தலம்  "வில்வதவ்யம் மஹாலக்ஷ்மி ரூபஸ்தே வில்வநாயகம்"

3.ரைவத மன்வந்திரத்தில் ஸ்ரீலக்ஷ்மி தாயார் வில்வமரத்திலிருந்து வெளிவந்ததாக புராணம் கூறுகிறது.

4.வாமனபுராணம் ஸ்ரீலக்ஷ்மியின் கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாக காத்யாயனர் கூறுகிறார்

5.காளிகாபுராணம் ஸ்ரீலக்ஷ்மி தாயார்  வில்வக்காட்டில் தவம்
செய்ததாக கூறுகிறது

6.பில்வ மஹிம்ன ஸ்தோத்ரம் ஸ்ரீலக்ஷ்மி தாயாரின் ஸ்தனங்களிலிருந்து வில்வம் தோன்றியதாக கூறுகிறது


7.ஸ்ரீசூக்தம்

. "ஆதித்யவர்ணே தப(அ)ஜாதோ  வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோ(அ)த பில்வ:
தஸ்யபலானி தபஸாநுதந்து மாயாந்தராச்ச பாஹ்யா லக்ஷ்மி:"

சூரியனைப்போல் ப்ரகாசிப்பவளே உன்னுடைய தவத்தால் வனத்திற்கு அதிபதியான வில்வவிருக்ஷம் உண்டாயிற்று.
அதனுடைய பழங்கள் உள்ளேயுள்ள அவித்தைகளையும்
,வெளியேயுள்ள அசுபங்களை போக்கட்டும்.

. அக்ஞானம் அகல ஒரே வழி ஞானம் பெறுவது ஞானம் வந்துவிட்டால்  அது நம்மை மோக்ஷபாதையில் அழைத்துச்செல்லும்
வில்வபழம் அக்ஞானத்தை அகற்றி ஞானத்தை கொடுக்கட்டும்.ஞானம் அடைந்தால் அகமும்,புறமும் சுத்தமாகி மோக்ஷலக்ஷ்மி அருள்கிட்டும்.அதாவது மோக்ஷம் கிட்டும்

8.பில்வ பழத்திற்கு ஸ்ரீபலம் என்றுபெயர்.

9.வில்வ விருக்ஷத்திற்கு  "ஸ்ரீவிருக்ஷம்" என பெயருண்டு

10.சௌபாக்ய சஞ்சீவினி வில்வக்காட்டில் ஸ்ரீலக்ஷ்மிதாயார்  தவம்  செய்பவளாக வர்ணிக்கிறது

11.திருவஹந்திபுரம் தாயாருக்கு வில்வார்ச்சனை நடைபெறுவதாகவும், கூறுவர்

12.ஸ்ரீவெங்கடேச அஷ்டோத்த சதநாமாவளியில் "ஓம் பில்வ பத்ரார்ச்சன ப்ரியாய நம: என நாமம் உள்ளது.(வருடத்திற்கு ஒருநாள்
பில்வார்ச்சனை ஸ்ரீபெருமாளுக்கு நடைபெறும் க்ஷேத்ரங்கள் சில கேள்விபட்டிருக்கிறேன் )

13.திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில்
"கள்ளார்  துழாயும் கணவலரும் கூவிளையும்
முன்னார் முனரியும் ஆம்பலும் முன்கண்டக்கால் " என்கிறார்
கூவிளை=வில்வம்

ஓம் நமோ நாராயணா


ஓம் ஸ்ரீ மஹாசாஸ்தா தாஸன்
பா. சிவகணேசன்
ஓம் ஸ்ரீ மஹாசாஸ்த்ரு பரபிர்ம்ம ஸ்தானம்
திருகாடந்தேத்தி

வேதம்


ஒரு சுவாரஸ்யமான ஆனால் ஆராய்ச்சிக்கான விஷயம்....

வேதத்தில் ருத்ரம் எனும் பகுதி மிக ப்ரபலம் மற்றும் மிக உயர்ந்த அர்த்தங்களை கொண்டது..
இதின் இறுதியில் சமகம் என்பதாகும்.
11 ப்ரஸ்னங்களை கொண்டது.
11 வது ப்ரஸ்னம்..

ஏகா' ச மே
திஸ்ரஷ்ச' மே
பஞ்ச' ச மே
ஸப்த ச' மே
நவ' ச ம ஏகாதச ச மே
த்ரயோதச ச மே
பஞ்சதச ச மே
இப்படியாக ஆரம்பித்து.. 1,3,5,7,9,11,13,15... 33 வரை சென்று முடியும் அதற்கு மேலெழுந்த வாரியாக பல பொருள் இருந்தாலும்.. யோசித்து பார்க்கையில்..  மனித உடற்கூறு செல்லின் மைடொ காண்ட்றியா எனப்படுவது மிக முக்கிய பகுதியாகும். செல் பயாலஜி அறிந்தோர்க்கு இதன் முக்கியத்துவம் புரியும். மனித
 டி என் ஏ வில் இந்த மைடோ காண்ட்ரியா என்பது மிகச்சரியாக 16500 அடிப்படை ஜோடிகளைக் கொண்டது (33 thaousadan bases pair). ஆக அத்தனையும் கூட்டினால் சரியாக 33000
சமகம் 33அடிப்படையாக  எண்ணை நிறுத்துகிறது. இதில் இந்த 33 க்கும் 33 ஆயிரத்துக்கும் என்ன தொடர்பு என யோசித்தால்..
ருத்ரமானது பொதுவாக #ஏகாதச_சத_ருத்ரம் என கூறுவதுண்டு.
அதாவது 11 பேர் சேர்ந்து நூறு முறை கூறுவார்கள்.... 33 × 100 ×11   = 36300  தடவை வந்து விடும்..
((சற்றேறக்குறைய 33 ஆயிரத்தை தாண்டி 300 வரை  கணக்கு வரும்...காரணம்.எங்கேயாவது தவறுதலாக விட்டு போயிருந்தாலும் 33000 க்கு குறையக்கூடாது என்பதற்காக இருக்கும்))

இது அதற்கு அடுத்தது மேம்பட்ட கணக்கு முறை.. அதாவது ஒன்றை  இன்னும்( fine tune) துல்லியமாக செய்வது..

த்வேச மெ
சதுஸ்சமே.
ஷஷ்ட ச.மே
.அஷ்ட சமே
.தச ச மே.
த்வாதச ச மே.    ..என்று
 2,4, 6 81ல் 10 12 15 16...என 48ல்  இரட்டை என .இலக்கை  நிறுத்துகிறது...

மனித  டி என் ஏ வில் நியூக்ளியர் அடிப்படை எண்ணிக்கை.அடிப்படையாக base..  #48மில்லியன்..
(அதிக பட்சம் 250 மில்லியன் வரை)..

சஹஸ்ர ருத்ரம் என்பது 1000 பேர் சேர்ந்து 1000 முறை சொல்வது..
சரியாக 48 மில்லியன் வரும்.

வேதம் வேண்டுதல்களை டி எம்.ஏ வரை வைக்கிறது..அதில்தான் தலைமுறைகள் தொடர்பு உள்ளது. நம்ம டிசைன்.. சங்கிலித்தொடர் போன்று  அமைக்கப்பட்டு அடுத்த தலைமுறை க்கு எடுத்துச் செல்லப்படுவது இவற்றால்தான்.. ஆக சமகம் நமக்கு செல் பயாலஜியை கூறவறுகிறது..
சுவாரஸ்யமான விஷயமாக உள்ளதல்லவா.!

7:ஸ்ரீ அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (கி.மு.124-55)

நமது ஏழாவது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

ஏழாவது ஆச்சார்யர் ஸ்ரீ


அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                           (கி.மு.124-55)

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சேர நாட்டில் வாழ்ந்த சூரிய நாராயணமஹி என்பவரின் தவப் புதல்வர். பெற்றோர் இவருக்கு இட்ட நாமம் சின்னையா சக்தி உபாசகர். அஷ்டமி, பௌர்ணமி வெள்ளிக்கிழமைகளில் கௌரி தேவிக்கு விசேஷ பூஜை செய்வார். அம்பிகையின் அருளால் அளவிட முடியாத படி இலக்கிய ஆற்றல் பெருகியது. ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கும், ஸ்ரீ சுரேஸ்வரர் அருளிய வார்த்திகங்களுக்கும் எளிய நடையில் குறிப்புரை எழுதினார். அதற்கு "ஆனந்த கிரி டீகா" என்று பெயர். இவர் வட நாடெங்கும் விஜயயாத்திரை புரிந்து திரும்பும் போது நடுவழியில் ஆந்திராவிலுள்ள ஸ்ரீ சைலத்தில் கி.மு.55 ஆம் ஆண்டு, குரோதனவருஷம், வைகாசிமாதம், கிருஷ்ணபக்ஷம், நவமியன்று சித்தியடைந்தார்.

6:ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி.மு.205 -124}

நமது ஆறாவது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

                   6:ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                            {கி.மு.205 -124}



காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் மருத்துவராகப் பணியாற்றிய பார்வு பண்டிதர் என்பவரின் திருமகனாவார். இவரும் திராவிட அந்தணர். தந்தை இவருக்கு வைத்த நாமதேயம் விஸ்வநாதர். ஹிந்து மதம் வளர பெரும் பாடு பட்டவர். ஸ்ரீசந்திர மௌலீஸ்வர பூஜையை பெரும் ஈடுபாட்டோடு செய்து வந்த ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கி.மு.124ல் நாளாம் வருடம் சித்திரை மாதம் சுக்லபக்ஷம், சஷ்டி திதியில் காஞ்சியில் சித்தியுற்றார்.

5:ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் (கி.மு.268-205)

5:ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள்
            (கி.மு.268-205)

சோழ நாட்டிலுள்ள மங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் அவதரித்தார். திராவிட அந்தண குலத்தவரான நாகேசன் என்பவரின் புதல்வர். ஞானோத்தமன் என்பது இவறது இயற்பெயர். தர்க்க சாஸ்திரத்தில் நிபுணர் ஸ்ரீகாமகோடி பீடத்தின் 2வது ஆச்சார்யரான ஸ்ரீசுரேஸ்வரர் இயற்றிய 'நைஷ்கர்ம்ய சித்தி'என்ற நூலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். அதன் பெயர் சந்திரிகை. அந்நூலில் இவர் ஸ்ரீசுரேஸ்வரரையும் அடுத்து வந்த குருவையும் போற்றியிருக்கிறார். இவர் மன்மத ஆண்டு, மார்கழி மாதம், சுக்லபக்ஷ பஞ்சமியில் (கி.மு.205)காஞ்சியில் சித்தியடைந்தார்.