வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

**இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா**

பிரம்மாவின் மகன்
மரீசீ

மரீசீயின் மகன்
கஷ்யபர்

கஷ்யபரின் மகன்
விவஸ்வான்

விவஸ்வானின் மகன்
மனு

மனுவின் மகன்
இஷ்வாகு

இஷ்வாகுவின் மகன்
விகுக்ஷி

விகுக்ஷியின் மகன்
புரண்ஜயா

புரண்ஜயாவின் மகன்
அணரன்யா

அணரன்யாவின் மகன்
ப்ருது

ப்ருதுவின் மகன்
விஷ்வாகஷா

விஷ்வாகஷாவின் மகன்
ஆர்தரா

ஆர்தராவின் மகன்
யுவான்ஷ்வா-1

யுவான்ஷ்வாவின் மகன்
ஷ்ரவஷ்ட்

ஷ்ரவஷ்டின் மகன்
வ்ரதஷ்வா

வ்ரதஷ்வாவின் மகன்
குவலஷ்வா

குவலஷ்வாவின் மகன்
த்ருதஷ்வா

த்ருதஷ்வாவின் மகன்
ப்ரோமத்

ப்ரோமத்தின் மகன்
ஹர்யஷ்வா

ஹர்யஷ்வாவின் மகன்
நிகும்ப்

நிகும்பின் மகன்
சன்டஷ்வா

சன்டஷ்வாவின் மகன்
க்ருஷஸ்வா

க்ருஷஸ்வாவின் மகன்
ப்ரஸன்ஜீத்

ப்ரஸன்ஜீத்தின் மகன்
யுவான்ஷ்வா-2

யுவான்ஷ்வாவின் மகன்
மன்தாத்தா

மன்தாத்தாவின் மகன்
அம்பரீஷா

அம்பரீஷாவின் மகன்
ஹரிதா

ஹரிதாவின் மகன்
த்ரதஸ்யு

த்ரதஸ்யுவின் மகன்
ஷம்பூத்

ஷம்பூத்தின் மகன்
அனரண்யா-2

அனரண்யாவின் மகன்
த்ரஷஸ்தஸ்வா

த்ரஷஸ்தஸ்வாவின் மகன்
ஹர்யஷ்வா 2

ஹர்யஷ்வாவின் மகன்
வஸுமான்

வஸுமாவின் மகன்
த்ரிதன்வா

த்ரிதன்வாவின் மகன்
த்ரிஅருணா

த்ரிஅருணாவின் மகன்
திரிசங்கு

திரிசங்கு வின் மகன்
ஹரிசந்திரன்

ஹரிசந்திரநநின் மகன்
ரோஹிதாஷ்வா

ரோஹிதாஷ்வாவின் மகன்
ஹரித்

ஹரித்தின் மகன்
சன்சு

சன்சுவின் மகன்
விஜய்

விஜயின் மகன்
ருருக்

ருருக்கின் மகன்
வ்ருகா

வ்ருகாவின் மகன்
பாஹு

பாஹுவின் மகன்
சாஹாரா

சாஹாராவின் மகன்
அசமஞ்சன்

அசமஞ்சனின் மகன்
அன்ஷுமன்

அன்ஷுமனின் மகன்
திலீபன்

திலீபனின் மகன்
பகீரதன்

பகீரதனின் மகன்
ஷ்ருத்

ஷ்ருத்தின் மகன்
நபக்

நபக்கின் மகன்
அம்பரீஷ்

அம்பரீஷனின் மகன்
சிந்து த்வீப்

சிந்து த்வீப்பின் மகன்
ப்ரதயு

ப்ரதயுவின் மகன்
ஸ்ருது பர்ணா

ஸ்ருது பர்ணாவின் மகன்
சர்வகாமா

சர்வகாமாவின் மகன்
ஸுதஸ்

ஸூதஸின் மகன்
மித்ரஷா

மித்ராஷாவின் மகன்
சர்வகாமா 2

சர்வகாமாவின் மகன்
அனன்ரண்யா 3

அனன்ரண்யாவின் மகன்
நிக்னா

நிக்னாவின் மகன்
ரகு

ரகுவின் மகன்
துலிது:

துலிதுவின் மகன்
கட்வாங் திலீபன்

கட்வாங் திலீபனின் மகன்
ரகு 2

ரகுவின் மகன்
அஜன்

அஜனின் மகன்
தசரதன்

தசரதனின் மகன்

**ஸ்ரீ ரகு ராம**

ராமாரின் குல வம்சத்தை பற்றி அறிவதே  பெரும் புண்ணியம்

#ஜெய்ஸ்ரீராம்#

அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ******
சிதம்பர ரகசியம் பகுதி : 14

யோகம் அறிந்தவர்களும் அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்த முயன்றவர்களுமே அறிந்த உண்மை இது. நாம் இப்போ தினமும் செய்யற ஆசனங்கள் எல்லாம் யோகம் ஆகி விடாது. உண்மையாக யோகக் கலையைக் கற்றவர் இன்று மிகச் சிலரே இருக்கின்றனர். இந்த யோகக் கலையின் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி வேண்டியபோது விடுவதற்கும் இழுப்பதற்கும் தெரிந்தவரே யோகி ஆவார். இது சித்தர்களால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன். பதஞ்சலி முனிவரும் வியாகரம பாதரும் சித்தர்களில் சேர்ந்தவர்கள். அவர்களால் முடிந்தது. இவர்கள் இருவரும் முக்தி அடைந்ததும் ராமேஸ்வரத்தில் என்று சொல்லுவார்கள். தென்னாட்டைச் சேர்ந்த இவ்விரு சித்தர்களும் சேர்ந்து இறைவனுக்கு எழுப்பிய கோயில் தான் இந்கச் சிதம்பரம் கோயில். நம் உடலின் அமைப்புத் தான் பொதுவாகக் கோயில் அமைப்பும். இதில் சிதம்பரம் கோயில் ஞான ஆகாசம் எனப்படும். "சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசத்தையும்" முறிக்கும். சித்தர்கள் மூச்சுக்கலையை விஞ்ஞானத்தின் உதவியின்றியே பயின்றவர்கள். மூச்சைக் கட்டுப் படுத்தத் தெரிந்தவர்கள். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தரம் மூச்சு விடுகிறான் என்பதைக் கண்டறிந்து அதைக் கட்டுப் படுத்தி ஞானம் அடைந்து சகல சித்தியும் கைவரப் பெற்றவர்கள். ஒரு சாதாரண மனிதன் 4 வினாடிகளுக்கு ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுகிறான். ஒரு நிமிஷத்திற்குப் பதினைந்து முறையும், ஒரு மணி நேரத்திற்கு 900 முறையும் ஒரு நாளுக்கு 21,600 முறையும் மூச்சு விட்டு இழுக்கிறான். இதைக் குறைக்கத் தான் யோகக் கலை பயன்படுகிறது. அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி 21/2(இரண்டரை) மணி நேரத்துக்கு ஒரு முறை மூச்சை இழுத்து வெளியிட்டால் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலரைப் போலவும் மார்க்கண்டேயரைப் போலவும் இருக்க முடியும் வாழ முடியும். ஒரு பிறந்த குழந்தையைப் பாருங்கள். அது மூச்சு விடுவதை! முதலி பிறந்து கொஞ்ச நாட்களுக்கு மிகச் சரியாக முச்சை விட்டு இழுக்கும். குழந்தையின் மூக்கு நுனியில் இருந்து அதன் உச்சிக் குழி இருக்கும் உச்சந்தலைக்கு 12 அங்குலம் நீளம் இருக்கும். குழந்தையின் உச்சந்தலை "படபட"வென அடித்துக் கொண்டே இருப்பதைக் கண்டிருக்கலாம். குழந்தையின் உள்நாக்குக்கும் இந்த உச்சந்தலைக்கும் ரகசிய வழி இருப்பதாயும் அதுதான் இறைவன் இருப்பிடம் எனவும் சொல்லப் படுகிறது. அதனால் தான் குழந்தை பிறந்ததும் தானே சிரிப்பதற்கும் அழுவதற்கும் இறைவன் விளையாட்டுக் காட்டுகிறார் என்று சொல்கிறோம். 6 மாதத்துக்கு மேல் ஆகிக் குழந்தையின் உச்சிக் குழி மூடியதும் இதில் 4 அங்குலம் குறைகிறது. குழந்தையும் நம்மைப் போல் மூச்சு விட ஆரம்பிக்கிறது. 21,600 ஒரு நாளைக்கு என்ற கணக்குப்படி நம் வாழ்நாள் பூராவுக்கும் வேண்டிய மூச்சை நாம் அதிகமாய்ச் செல்வழிக்கிறோம். நடக்கும்போது, நிற்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும், தூங்கும்போதும் என்று செலவு செய்வதால் குறைந்து வருகிறது. இந்த ரகசிய வழியானது முறையான யோகப் பயிற்சியில் மீண்டும் திறந்து கொள்ளும். நம் உள்மனதில் உள்ள மூன்றாவது கண் எனச் சொல்லப் படும் ஞானக் கண் திறந்து கொள்ளும். உள்ளொளி பிறக்கும். ஞானம் சித்தியடையும்.

அடுத்து இந்த ஞானக் கண் திறக்கும் முறையான "குண்டலினி யோகம்" பற்றி விவரம் கொடுக்கப் போகிறேன். யாரும் தவறிக் கூட முயற்சி செய்து பார்க்கவேண்டாம். விளைவுகள் மோசமாக இருக்கும். முறையான குருவிடம் முறையான பயிற்சி இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகளில் மரணம் கூட சம்பவிக்கலாம். திரு ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய "பாபா" திரைப்படத்தில் காட்டிய யோக முத்திரை தவறு எனவும் அதனால் தான் படம் தோல்வி அடைந்ததோடு அல்லாமல் வேறு மோசமான விளைவுகளைச் சந்தித்தார் எனவும் சொல்லப் பட்டது. ஆகவே படிக்கிறதோடு நிறுத்திக் கொள்வோம்.

மிண்டும் நாளை சந்திக்கலாம்