புதன், 2 செப்டம்பர், 2015

ஒன்றை கோடியாக்கலாம்

மற்றவர்களின் தவறைத் திருத்தி நல்வழிப் படுத்த அன்பு ஒன்றே சிறந்த வழி.
🔔 ஒரே தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபட்டால் மனம் ஒருமைப்படும்.
🔔 ராமாயண அணில் போல இயன்ற உதவியை பிறருக்கு செய்வது அவசியம்.
🔔 வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி என்பதன் பொருள் பேசுவதிலும் உண்பதிலும் மனிதன் கட்டுப்பாடோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
🔔 மனம் உவந்து செய்யும் தர்மம் ஒரு ரூபாய் என்றாலும் அதை கடவுள் கோடியாக மதித்து அருள்புரிவார்.
🔔 எல்லாச் செயலிலும் நல்லதை வெளிப்படுத்துங்கள்.
🔔 காஞ்சி மஹா பெரியவா 

மகா பெரியவாளின் அளவற்ற அன்புக்குப் பாத்திரமானவர் எனப் பிரதோஷம் மாமாவைச் சொல்வார்கள், எல்லோரும்! ஓரிருக்கையில், காஞ்சி மகானின் மணிமண்டபம் அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், அவர். பிரதோஷம் மாமா குறித்த சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார், பெரியவாளின் பக்தர்களில் ஒருவரான அகிலா கார்த்திகேயன்.”அதிகாலை நான்கு மணி தரிசனத்தின்போது ஒருநாள், பிரதோஷம் மாமாவை அருகில் அழைத்த மகாபெரியவாள், ‘உனக்கு மாணிக்கவாசகர் பாடின திருவாசகம்- கோயில் திருப்பதிகத்துல வரிகள் ஏதாவது தெரியுமோ?’ என்று கேட்டார். பிறகு பெரியவாளே, ‘தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா ஆர்கொலோ சதுரர்-னு பாடியிருக்கார். எங்கே, நீ அதைத் திருப்பிச் சொல்லு!’ என்றார்.
அப்படியே பிரதோஷம் மாமா சொல்ல, மகா பெரியவாளும் அதைத் தொடர்ந்து சொல்ல… ஏதோ மந்திர உச்சாடனம்போல், ‘தந்தது உன் தன்னை, கொண்டது என்தன்னை’ என மாற்றி மாற்றி இருவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர். நிசப்தமான அதிகாலை வேளையில், இப்படிப் பெரியவாளும் பிரதோஷம் மாமாவும் சொல்வதைக் கேட்டு அனைவரும் அதிசயித்துப் போனார்கள். ‘இப்படியரு பாக்கியம் எவருக்குக் கிடைக்கும்?’ எனத் திளைத்தார் பிரதோஷம் மாமா. நிமிட நேரத்தில், கரகரவென வழிந்தது கண்ணீர்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த பிறகு, அடுத்தடுத்துத் தொடர்ந்தன ஆச்சரியங்கள்!
கடம் வித்வான் விநாயக்ராம், அவரின் சகோதரர் சுபாஷ் சந்திரன், வயலின் கலைஞர்கள் கணேஷ்- குமரேஷ் போன்ற பக்தர்கள் பலரும் பிரதோஷம் மாமாவிடம் பேசும்போது, அவர் கட்டளை போலவோ, அறிவுறுத்துவது போலவோ ஏதேனும் சொல்வதைக் கேட்டனர். அடுத்து அவர்கள் மகா பெரியவாளைத் தரிசனம் செய்கிறபோது, பிரதோஷம் மாமா ஏற்கெனவே தங்களிடம் சொல்லிய அதே வார்த்தைகளையே மகா பெரியவாளும் சொல்வதைக் கேட்டு வியந்தனர்.
இப்படித்தான் ஒருமுறை சுபாஷ் சந்திரன், கணேஷ்-குமரேஷை அழைத்துக்கொண்டு பிரதோஷம் மாமாவின் இல்லத்துக்குச் சென்றார். சாந்நித்யம் நிறைந்த புனிதமான இடம் அது. வயலின் கலைஞர்கள் இரண்டு பேரும் அங்கேயிருந்த பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன்னே பவ்யமாக அமர்ந்து இசைத்தனர். பிறகு மாமாவை நமஸ்கரித்து, ‘உங்கள் கையால் தங்கக் காசு கிடைத்தால், அது எங்களுக்குப் பொக்கிஷம்’ என வேண்டினர். உடனே மாமாவும், ‘அதற்கென்ன குழந்தைகளா, அடுத்த மாசம் 23-ஆம் தேதி வாங்கோ; கட்டாயம் தரேன்!’ எனச் சொல்லி அவர்களை வாழ்த்தினார்.
அதன்படி அவர்கள், அந்தக் குறிப்பிட்ட தேதியில் காஞ்சிபுரம் வந்தபோது, பிரதோஷம் மாமாவின் வீட்டுக்குச் செல்லாமல், முதலில் பெரியவாளைச் சந்திக்க மடத்துக்குச் சென்றனர். பெரியவாளைத் தரிசித்து விடைபெறும் வேளையில், அவர்களைச் சற்றே காத்திருக்கச் சொல்லிவிட்டு, மடத்துச் சிப்பந்திகளிடம் ஏதோ சொன்னார் பெரியவா.
பெரியவாளின் ஆசீர்வாதமாகவும் பிரசாதமாகவும் பழங்கள் மற்றும் சால்வைகளைப் பெறுவது பக்தர்களின் வழக்கம். ஆனால், மூங்கில் தட்டில் வெற்றிலை-பாக்கு, பழங்களுடன் அந்த முறை தங்கக் காசுகளையும் அளித்தார், காஞ்சி மகான். ஆம், பிரதோஷம் மாமா தருவதாகச் சொன்ன தேதி; அதே தங்கக் காசு! இருவரும் அதிர்ந்தனர்.
‘தந்தது உன்தன்னை; கொண்டது என்தன்னை’ என மகாபெரியவா, தன்னுள் பக்தரை ஐக்கியமாக்கிக் கொண்டுவிட்டதுபோல அமைந்தது, அந்த நிகழ்வு!
இந்த வார்த்தைகளை மேலும் மெய்ப்பிப்பது போலான இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. அது…
கையில் ஏதுமின்றி, சிவனாருக்குக் கோயில் எழுப்பப் புறப்பட்டாரே, பூசலார்நாயனார்! அதே போல், பெரியவாளுக்கு கோயில் எழுப்ப வேண்டும் எனும் ஆசை, பிரதோஷம் மாமாவுக்கு. முதலில், கோயில் கட்டுவதற்கான நிலத்தைத் தேடினார் பிரதோஷம் மாமா. நண்பர்களிடமும் இதுகுறித்துச் சொல்லி வைத்திருந்தார். இப்படி, இரண்டு பக்தர்கள் இடம் தேடிச் சென்றபோது, காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஓரிருக்கையில், பாலாற்றங் கரையில் கோயில் எழுப்பினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணினார்கள், அவர்கள்.
அன்று மாலை, பிரதோஷம் மாமா வின் வீட்டுக்குச் சென்றவர்கள், ‘பாலாற்றங்கரையில் ஓர் இடம் இருக்கு. ரம்மியமான சூழல் அங்கே நாலஞ்சு குடியானவப் பிள்ளைகள் விளையாடிண்டிருந்தாங்க. பக்கத் துலயே பாலாறு’ என்று தெரிவித்தனர். அப்போது, அந்த அறையின் மின் விளக்கு கொஞ்சம் ஒளி மங்கி, அந்த விநாடியே சட்டெனப் பிரகாசமானது. ‘இது நல்ல சகுனமா இருக்கே!’ என்று பூரித்துப்போன பிரதோஷம் மாமா, உடனே பெரியவாளைத் தரிசிக்கச் சென்றார். அப்போதைய அவரின் ஒரே பிரார்த்தனை… ‘கோயிலுக்கான நிலத்தை சூட்சுமமாக அங்கீகரிக்கணும், பெரியவா!’ என்பதுதான்.
மடத்தை அடைந்தபோது, பெரியவா விச்ராந்தியாக ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டதால், திரையிடப்பட்டிருந்தது. வருத்தமாகிப் போனார் பிரதோஷம் மாமா. அந்த வருத்தம், உள்ளே பெருங்கவலையாக மெள்ள மெள்ள வளர்ந்த நிலையில், மடத்தில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த வேதபுரி என்பவரை, அருகில் வரும்படி அழைத்தார் மகாபெரியவா. அவரும் பெரியவாளுக்கு அருகில் செல்ல, அவரிடம் பெரியவாள் பேசுவது தெளிவாகக் கேட்டது.
‘காஞ்சியிலேருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்துல, வந்தவாசி போற வழியில நான் போயிண்டிருக்கேன். அங்கே ஒரு மணல் மேடு. நாலஞ்சு குடியானவப் பிள்ளைங்க விளையாடிண்டிருந்தா. திடீர்னு இருட்டிடுத்து. அப்புறம் சட்டுனு பிரகாசமாச்சு. நான் அங்கேயே தங்கிடறேன். அங்கே ஒரு பாட்டியம்மா இருந்தா!’ என்று தாம் கண்ட கனவை பெரியவா சொல்லச் சொல்ல… சிலிர்ப்பில் உடம்பே நடுங்கிப் போனது, வெளியே இருந்து கேட்டுக்கொண்டு இருந்த பிரதோஷம் மாமாவுக்கு. எதற்காக வந்தோமோ அதற்கான சம்மதத்தை, ‘நான் அங்கேயே தங்கிடறேன்’ என்று சூட்சுமமாக பெரியவாள் அருளினால், யாருக்குத்தான் தூக்கிவாரிப் போடாது?! தன்னைத் தன்னுள் இருந்தபடி இயக்குவது, அந்தக் கருணைத் தெய்வமே என நினைத்துப் பூரித்தார் மாமா.
தனது பக்தியாலும் பெரியவாளின் அனுக்கிரகத்தாலும் 1992-ஆம் வருடம் பிரதோஷம் மாமா வாங்கிய அந்த ஆறு ஏக்கர் நிலம் மகா பெரியவாளின் மணிமண்டபமாக இப்போது மாறியிருக்கிறது.அன்பர்களின் பேருதவியாலும் கடும் உழைப்பாலும் ஓரிருக்கையில் உருவாகியுள்ள இந்த நன்னாளில் மணிமண்டபத்தைத் தரிசியுங்கள்; காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்!

* எப்போதும் செல்லும் "நோட்டு'*
* எண்ணம்,சொல்,செயல் மூன்றாலும் ஒருவன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.இதற்கு நம்மிடம் இருக்கும் செல்வம் நம்முடையதல்ல என்ற எண்ணம் முதலில் இருக்க வேண்டும்.
* உடை,உடம்பு இருக்கும் இடம் ஆகியவை தூய்மையுடன் இருந்தால் போதாது.கள்ளம்,கபடம்,வஞ்சனை போன்ற அழுக்குகள் மனதில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* செய்யும் செயல் அனைத்தும் தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும்.செல்வத்தை புண்ணிய காரியங்களுக்கு செலவழித்தால் பணம் அனைத்தும் தர்மம் என்னும் "நோட்டாக'மாறி விடும்.அந்தப்பணம் எந்தக் காலத்திலும் செல்லுபடியாகும்.
* உயிர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும். மனதில் அன்பு இருந்தால் ஆனந்தம் நிலைத்து இருக்கும்.ஒருவர் தவறு செய்யும்போது அன்பால் திருத்துவது தான் பெருமை.அது தான் நிலைத்தும் நிற்கும்.
* ஆடம்பர பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது.
* காஞ்சி மஹா பெரியவா *

திருவாசகம் -திருச்சதகம் (அநுபோக சுத்தி) (தடையில்லாச்சிவாநுபவம்)
(சிவானுபவத்தினால் ஆன்மா தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ளுதலாம்.)
ஈசனே என் எம்மானே
எந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமொன்
றல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு
நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே
செய்வ தொன்றும் அறியேனே.
செய்வ தறியாச் சிறுநாயேன்
செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும்
பெறுதற் குரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம்
மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்
கிருப்ப தானேன் போரேறே.
போரே றேநின் பொன்னகர்வாய்
நீபோந் தருளி யிருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளோ
டுடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியார் நின்பாதஞ்
சேரக் கண்டுங் கண்கெட்ட
ஊரே றாய்இங் குழல்வேனோ
கொடியேன் உயிர்தான் உலவாதே.
உலவாக் காலந் தவமெய்தி
உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாடப்
பாவி யேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க
மாட்டேன் மணியே உனைக்காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன்
என்கொண் டெழுகேன் எம்மானே.
மானோர் நோக்கி உமையாள்
பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின்
தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக்
கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தானேன் உடையானே.
உடையா னேநின் றனைஉள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதஞ்
சேரக் கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன்
கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தாக முடித்தாயே.
முடித்த வாறும் என்றனக்கே
தக்க தேமுன் னடியாரைப்
பிடித்த வாறும் சோராமற்
சோர னேன்இங் கொருத்திவாய்
துடித்த வாறும் துகிலிறையே
சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து
கேடென் றனக்கே சூழ்ந்தேனே.
தேனைப் பாலைக் கன்னலின்
தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை
உம்ப ரானை வம்பனேன்
நானின் னடியேன் நீஎன்னை
ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே யருளலாந்
தன்மை யாம்என் தன்மையே
தன்மை பிறரால் அறியாத
தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டையா
புறமே போக விடுவாயோ
என்னை நோக்கு வார்யாரே
என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி
எந்தாய் எங்குப் புகுவேனே.
புகுவேன் எனதே நின்பாதம்
போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி
நாண மில்லா நாயினேன்
நெகும்அன் பில்லை நினைக்காண
நீஆண் டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே
எந்தாய் அந்தோ தரியேனே.
பெயருடன் திரு.. திருமதி சேர்ப்பது ஏன்?
பெரியவர்களின் பெயருடன் திரு திருமதி என்றோ அல்லது ஸ்ரீ ஸ்ரீமதி என்று சேர்த்து சொல்வர். இதற்கான காரணம் தெரிந்தால் அதன் அருமை புரியும்.செல்வத்திற்கு அதிபதி திருமகளாகிய லட்சுமி.இவளை ஸ்ரீதேவி என்றும் குறிப்பிடுவர்.நாராயணரின் மார்பில் லட்சுமி நித்ய வாசம் செய்வதால் அவருக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயர்.மாலவனோடு லட்சுமி இணை பிரியாமல் எப்போதும் இருக்கிறாள் என்பதால் திரு..மால் என்று பெயர்.பெரியவர்களைக் குறிப்பிடும் போது மரியாதை கருதி மட்டும் திரு சேர்ப்பதில்லை.திருமகளின் அருளும் பொருளும் அவர்களைச் சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த அடைமொழியைச் சேர்க்கிறோம்.

ஸ்ரீகாமாக்ஷி துனண

                                                                                                   பல்லவி
காணக்கண் கோடி வேண்டும் காஞ்சி குருநாதரின்
தினசரி பூஜையைக் காணக் கண் கோடி வேண்டும்.
                                                                                                   சரணம்
வெள்ளியினால் பூஜை மண்டபம் அமைத்து ( 1)
சுவர்ணத்தினால் அதில் ஊஞ்சலைக்கட்டி
சந்தண மேருவில் சக்தியை அழைத்து
சந்திர மௌளி ஸ்வாமியை பக்கத்தில் வைப்பதை
                                                                                                      (காணக்கண் கோடி)
வேதத்தின் ஒலியுடன் வேதியர் கூட்டம் (2)
பாதத்தை நாடி வந்து பக்தர்கள் கூட்டம்
சில முள்ள தெய்வம் சிவக்கோலம் கொண்டு
பால் அபிஷேகத்தை பாங்குடன் செய்வதைக்
                                                                                                     (காணக்கண் கோடி)
மாணிக்க வைரம் மரகத மிழைத்து புடம் போட்ட (3)
பொன்னால் பூஷணங்கள் பூட்ட
மஞ்சள் குங்குமம் மணமுள்ள மலர்கள்
அட்க்ஷதை கொண்டு அர்ச்சிக்கும் அழகை
                                                                                                    (காணக்கண் கோடி)
வில்வத்தால் அர்ச்சனை வேதத்தின் பின்னனி (4)
குவலயம் காத்திட குங்கும அர்ச்சனை
சக்கரைப் பொங்களும் பலவித அண்ணமும்
வித வித மாகவே அன்னைக்கு அளிப்பதை
                                                                                                    (காணக்கண் கோடி)
தீங்கையெல்லாம் களைய தீபத்தின் அடுக்குகள் (5)
கர்ப்பூர ஹாரத்தி மங்கள தீபங்கள்
ஓம் ஓம் ஓம் என மணிகள் ஒலித்திட
சங்கத்தின் நாதமே பூம் பூம் என்பதைக்
                                                                                                    (காணக்கண் கோடி)
தாமரைக் கையால் தங்கக் குடை பிடித்து (6)
சாமரம் விசிட சாம காணம் ஒலித்திட
மாணிக்க வீணையை மாதேவர் வாசித்து
மாதாவின் மடியினில் பணிவுடன் வைப்பதைக்
                                                                                                  (காணக்கண் கோடி)
பிரதட்சணம் செய்து பூஜையை முடித்து (7)
தியானத்தில் ஆழ்ந்து தன்மயமாகி
"தன்னலம்"மறந்து பிறர் நலம் வேண்டி
தெய்வத்தை தெய்வமே வணங்கிடும் கோலத்தைக்
                                                                                                  (காணக்கண் கோடி)
                                    பெரியவா சரணம்
                          ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
                         காஞ்சி சங்கர காமகோடி சங்கர



இன்றைய பிரார்த்தனை
பட்ட ராகிலென் சாத்திரம் கேட்கிலென் இட்டு மட்டியு மீதொழில் பூணிலென் எட்டு மொன்று மிரண்டு மறியிலென் இட்ட மீச னெனாதவர்க் கில்லையே

அர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்

சாம்பேயகௌரார்தசரீரகாயை கர்பூரகௌரார்தசரீரகாய | 
தம்மில்லகாயை ச ஜடாதராய நம: சிவயை ச நம: சிவாய ||1||
கஸ்தூரிகாகுங்குமசர்சிதாயை சிதாரஜ:புஞ்ஜவிசர்சிதாய |
க்ரூதஸ்மராயை விக்ரூதஸ்மராய நம: சிவாயை ச நம: சிவாய ||2||
சலத்க்வணத்கங்கணநூபுராயை பாதாப்ஜராஜத்பணிநூபுராய |
ஹேமாங்கதாயை புஜகாங்காதாய நம: சிவாயை ச நம: சிவாய ||3||
விசாலநீலோத்பலலோசநாயை விகாஸிபங்கேருஹலோசனாய |
ஸமேக்ஷணாயை விஷமேக்ஷணாய நம: சிவாயை ச நம: சிவாய ||4||
மந்தாரமாலாகலிதாலகாயை கபாலமாலாங்கிதகந்தராய |
திவ்யாம்பராயை ச திகம்பராய நம: சிவாயை ச நம: சிவாய |5||
அம்போதரச்யாமளகுந்தளாயை தடித்ப்ரபாதாம்ரஜடாதராய |
நிரீச்வராயை நிகிலேச்வராய நம: சிவாயை ச நம: சிவாய ||6||
ப்ரபஞ்சஸ்ருஷ்ட்ர்யுன்முகலாஸ்யகாயை ஸமஸ்தஸம்ஹாரகதாண்டவாய |
ஜகஜ்ஜனன்யை ஜகதேகபித்ரே நம: சிவாயை ச நம: சிவாய ||7||
ப்ரதீப்தரத்னோஜ்ஜ்வலகுண்டலாயை ஸ்புரன்மஹாபந்நகபூஷணாய |
சிவான்விதாயை ச சிவான்விதாய நம: சிவாயை ச நம: சிவாய ||8||
ஏதத்படேதஷ்டகமிஷ்டதம் யோ பக்த்யா ஸ மான்யோ புவி தீர்கஜீவீ |
ப்ராப்னோதி ஸௌபாக்யமனந்தகாலம் பூயாத்ஸதா தஸ்ய ஸமஸ்தஸித்தி: ||9||
இதி ஸ்ரீமத்பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யஸ்ரீகோவிந் தபகவத் பூஜ்ய பாதசிஷ்ய ஸ்ரீமச்சங்கரபகவத்ப்ரணீதம் அர்தநாரீநடேச்வரஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||10||

                                                  சிவாய நம: ||
பயனுள்ள தகவல்கள்
ஈ தொல்லை ஒழிய : டைனிங்டேபிள் மீது ஒரு கிண்ணத்தில் சிறிதளவு புதினா இலையைப் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பையும் கலந்து வையுங்கள் ஈத் தொல்லை இருக்கவே இருக்காது.
லெதர் பொருட்கள் பலபலக்க : தோலில் செய்த எந்தப் பொருளையும் பாலில் நனைத்த துணியால் துடைத்தால் நல்ல பளபளப்பாகி விடும்.
உப்புப் பாதிப்பிலிருந்து பாத்திரங்களை பாதுகாக்க : உப்புத்தண்ணீரினால் பாத்திரங்கள் வெள்ளையாக,சொர,சொரப்பாக இருந்தால்,மோர் ஊற்றி வைத்து 4 முதல் 5 மணி நேரம் களித்து பாத்திரத்தை கழுவிப் பாருங்கள் பாத்திரம் பளிச்சென்று மின்னும்.
மாவு அரைக்கீறீர்களா? : மாவு மிஷினில் மாவு அரைப்பதற்கு முன் சிறிதளவு அரிசியைப் போட்டு அரைத்தபின் எந்த மாவு வேண்டுமானாலும் அரைக்கலாம்.நமக்கு முன்பு கம்பு,கேழ்வரகு, கோதுமை,பருப்பு அரைத்தாலும் கவலை வேண்டாம்.மாவு சுத்தமாக இருக்கும்.
டீ.வி., ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் டிப்ஸ் : டீ.வி., ஃப்ரிட்ஜ்,ட்யூப் லைட் போன்ற சாதனங்களின் ஸ்விட்ச்களை அணைத்தவுடனேயே(மனம் மாறி)மீண்டும் போடாதீர்கள்.ஃப்ரிட்ஜில் உள்ள கம்ப்ரசரும்,டி.வியில் உள்ள பிச்சர் டியூப்பும்,டியூப் லைட்டில் உள்ள பால்ஸ்டும் இதனால் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதாகும்.
மூட்டைப்பூச்சி ஒழிய : கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.
மல்லிகைப்பூ அதிக நாள் வாடாமல் இருக்க : ஃபிரிஜ்ஜில் கருவேப்பிலை, கொத்தமல்லி,வெற்றிலை மற்றும் மல்லிகைப்பூ போன்றவற்றை அலுமினியம் ஃபாய்ல் கவரில் வைத்தால் பத்து நாட்கள் ஆனாலும் அழுகாது.
பூ வாடாமல் இருக்க : மல்லிகைப்பூ மாலையில் வாங்கி அடுத்தநாள் அப்படியே வாடாமல் இருக்க ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும்.மறுநாள்வரை பூக்கள் வாடாமல், மனம் குறையாமல் இருக்கும்.
சுவாமி படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க : சுவாமி படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து சுவாமி படங்களை துடைக்க வேண்டும்.
பித்தளை,வெள்ளிப்பாத்திரம் பளபளக்க : பித்தளை,வெள்ளிப்பாத்திரங்கள் கறுத்துக் காணப்பட்டால் அதற்கு சாதம் வடித்த கஞ்சியில் சிறிது நேரம் ஊறவைத்து பின் எடுத்துத் துலக்கினால் பாத்திரம் பளபளக்கும்.
பளிச்சிடும் வெண்மைக்கு : பழுப்பேறிய வெள்ளைத் துணிகளை வெண்மையாக்க அழுகிய எலுமிச்சை பழத்தையோ நல்லதையோ பிழிந்து சாறு எடுத்து கால் வாளித்தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின் அலசி உலர்த்துங்கள்.பிறகு பாருங்கள் வெண்மையை.
ஊருக்கு போகிறீர்களா? : ஊருக்கு போகும்போது கக்கூஸ்,வாஸ்பேசின் ஆகியவற்றில் கொஞ்சம் பிணாயில் ஊற்றி விட்டுச் செல்லுங்கள்.தாங்கள் திரும்பி வரும்போது துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
பெயிண்ட் வாடை நீங்க : புதிதாக அடித்த பெயிண்ட் வாடை நீங்க ஒரு வெங்காயத்தை நறுக்கி வீட்டின் நடுவே வைத்து விட்டால் பெயிண்ட் வாடை நீங்கும்.
பூச்சிகள் வராமல் தடுக்க : புத்தகம் வைக்கும் அலமாரி,டி.வி.ஸ்டாண்டு,பீரோ மற்றும் பொம்மைகள் வைக்கும் "ஷோகேஸ்"களில் வசம்பு வாங்கி போட்டு விட்டால் ஆண்டுகள் ஆனாலும் பூச்சியும் வராது, மணமும் தொடர்ந்து இருக்கும்.
தேங்காய் சமமாக உடைய : தேங்காயை சிறிது நேரம் தண்ணீரில் ஊரவைத்து நடுவில் தட்டி உடைத்தால் சமமாக உடையும்.
விளக்கு அதிக நேரம் எரிய : விளக்கு அதிக நேரம் எரிய ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையும் நல்லெண்ணையும் கலந்து ஏற்ற வேண்டும்.
கொத்தமல்லி உபயோகம் : சாதரணமாக கொத்தமல்லி,கருவேப்பிலை போன்றவைளை ஒரு எவர் சில்வர் டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை புதிதாகவே இருக்கும்.
எறும்பிடமிருந்து சர்க்கரையை காப்பாற்ற : ஒரு பூண்டுப் பல் எடுத்து கையினானேலேயே நசுக்கி மூடிப்பகுதிக்கு சற்று கீழே வளையம் போல் சுற்றி தடவி விட்டால் எறும்புகள் அண்டவே அண்டாது.
தீப்பெட்டி ஈரமானால் : தீப்பெட்டி ஈரமாகி நமத்துவிட்டால் அரிசி மாவை அதன் மீது தடவி விட்டுக் கொளுத்தினால் டக் என்று ஏற்ற வரும்.
ஜாச் செடி அழகாக பூக்க : ரோஜாச் செடி அழகாக பூக்க,பீட்ரூட்டின் தோலையும்,வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாகப் போட வேண்டும்.
தேங்காய் எண்ணெய் உறைவதை தடுக்க:குளிர்காலத்தில்,ஆமணக்கு எண்ணெய் சில சொட்டு தேங்காய் எண்ணெயில் சேர்த்தால்,எண்ணெய் உறைவதை தடுத்து எப்போதும் நீர்த்து இருக்கும்.
டிபன் பாக்ஸ் திறக்க : டிபன் பாக்ஸ் திறக்க முடியவில்லை எனில்,குழாய்த்தண்ணீரில் சிறிது நேரம் காண்பித்து பின்னர் முயற்சி செய்யுங்கள் எளிதாகும் இருக்கும்.