வியாழன், 30 ஜூலை, 2020

அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்

2. ஆதிலட்சுமி : ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட பொலிவும் நல்ல அழகும் கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும் அபய கரமுள்ளவள். பூமாலை அணிந்தவள் என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப்பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச் சுற்றிலும் அழகு வெள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள் சக்தியின் திருநாவத்தை உடையவளும் அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூலமுதலான ஆதிலட்சுமியே ஆவாள்.