வெள்ளி, 12 நவம்பர், 2021

பிறப்பு, இறப்பு தீட்டு

பிறப்பு, இறப்பு தீட்டு சம்பந்தமாக பலருக்கும் ஸந்தேகங்கள் உண்டு.

ஸ்ரீமதாநந்த குருப்யோ நமஹ || கருட புராணம் கூறும் தீட்டு ||

தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றைய பொழுது அவனுக்குத் தீட்டு.

தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு [ஸங்கவ காலம்] மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு, மாதவிடாய் [தூரம்] இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை [270 நிமிடங்களுக்கு] முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.

ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஸந்யாசிகளுக்கு [முன் ஆச்ரம] மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நானம்.

88 அடிகளுக்குள் பிணம் [சவம்] இருந்தால் எடுக்கும் வரை சமைப்பது, சாப்பிடுவது கூடாது.

ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.

நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.

ஸ்நானம் பண்ண முடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டு விட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.

அது போல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.

ச்ராத்தத்தின் நடுவில் [ஸ்ராத்த சங்கல்பம் ஆன பின்] தீட்டுத் தெரிந்தால் ஸ்ராத்தம் முடியும் வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை. வரித்த பின் போக்தா [ஸ்ராத்த ஸ்வாமிக்கு] தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும் வரை தீட்டில்லை.

விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.

ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும். ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.

துர் மரணம் செய்து கொண்டவனுக்கு ஆறு மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் இருபத்தி நான்கு நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.

தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.

தற்கொலை செய்து கொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.

கர்மா செய்பவனுக்கு பதினோராம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.

கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.

பிறப்புத் தீட்டுள்ளவனை நான்கு நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.

ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.

தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.

பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் [உதகதானம்] தனியாக இல்லை.

மனைவி கர்பமாக இருக்கும் போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.

சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.

சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.

ஸ்ராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.

தன் மனைவி கர்பமாய் இருக்கும் போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.

ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.

தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.

தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.

ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.

சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாட வேண்டும்.

சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல் தான் தீட்டு. தீட்டில் வேறு தீட்டு சோ்ந்தால்?” பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும் போது பின் வந்த தீட்டும் முடிந்து விடும்.

உதாரணமாக பத்து நாள் தீட்டில் நாளாம் நாள் மற்றொரு பத்து நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் பத்தாம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்து விடும். ஆனால் முன் வந்த மூன்று நாள் தீட்டுடன் பின் வந்த பத்து நாள் தீட்டு முடியாது.

பத்து நாள் தீட்டின் இடையில் வந்த மூன்றாம் நாள் தீட்டுடன் பத்தாம் நாள் தீட்டு முடியாது. பத்தாம் நாள் தான் சுத்தி.

பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக மூன்று நாள் மட்டும் காத்தால் போதும். ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் மூன்றாம் நாள் காக்கத் தேவையில்லை.

மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம். மரணத் தீட்டின் போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.

பெற்ற குழந்தை பத்து நாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து பத்து நாள் விலகும். ஒரு வேளை பத்தாம் நாள் மரணமானால் மேலும் இரண்டாம் நாள் அதிகரிக்கும். பத்தாம் நாள் இரவு ஆனால் மூன்று நாள்.

பங்காளிகளுக்கு மேற்படி மூன்று நாள் தீட்டில்லை.

அதிக்ராந்தாசெளசம் என்பது தீட்டு காலம் முடிந்த பின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.

பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசெளசம் இல்லை.

பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்கு மேல் மூன்று மாதங்களுக்குள் கேட்டால் மூன்று நாள் தீட்டு.

மூன்று மாதத்திற்கு மேல் ஆறு மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள். ஆறு மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள். அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

மூன்று நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் மூன்று நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.
 
ஒரு நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசெளசம் கிடையாது.

மாதா, பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து பத்து நாள் தீட்டு உண்டு. ”தீட்டு முடிவில் யார் யாருக்கு க்ஷவரம் உண்டு?” சில தீட்டின் முடிவில் புருஷர் [ஆண்களுக்கு] ஸர்வாங்க க்ஷவரம் [வபனம்] செய்து கொண்டால் தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம்.

ஸர்வாங்கம் என்பது : தலையில் சிகை [குடுமி] தவிர்த மற்ற இடம்

முகம், கழுத்து, இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம். கழுத்துக்கு கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும்.

கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் [முடிகின்ற நாள் அன்று – அதாவது பத்து நாள் தீட்டில் பத்தாம் நாள் காலை] ஸர்வாங்கம் அவசியம்.

இறந்த பங்காளி தன்னை விட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.

மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணணத்தில் வபனம் உண்டு.

இறந்தவர் பெரியவரா, இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்து கொள்வதே சிறந்தது.

தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல் நாளான வியாழக்கிழமையிலேயே வபனம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ”ஜனனத்தால் [பிறப்பால்] ஏற்படும் தீட்டுகள்” கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.

பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.

பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு நாற்பது நாட்கள் தீட்டு

ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு முப்பது நாட்கள் தீட்டு

பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர். மறு மனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள், அது போல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள், குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்
[பிதாமஹர்] அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு மூன்று நாள் தீட்டு குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பா, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால் ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு. ”பெண்களுக்கும் மட்டும் ஏற்படும் தீட்டுகள்” ஜனனத்தில் குழந்தை பெற்றவளுக்கு மட்டும் சட்டி தொடுதல் அதாவது சமையலறைக்கு வந்து சமையல் செய்ய வீட்டுக் காரியங்களில் அனைவருக்கும் உள்ள பத்து நாள் தீட்டு முடிந்தவுடன் ஈடுபட முடியாது. ஆண் குழந்தையானால் முப்பது நாளும், பெண் குழந்தையானால் நாற்பது நாளுக்கு பிறகே வீட்டுக் காரியங்களில் ஈடுபட முடியும்.

இனி மரணத்தினால் பெண்களுக்கு மட்டில் [கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்குக் கிடையாது] ஏற்படும் தீட்டுகள் விபரம் கீழ்வறுமாறு..

பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை [சந்ததியைச்] சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் மூன்று நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.

பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் மூன்று நாள் தீட்டு: உபநயனமான உடன் பிறந்த ஸஹோதரன்

உபநயனமான மருமான் [ஸஹோரதன் பிள்ளை]

உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை

இளைய அல்லது மூத்த தாயார் [தந்தையின் வேறு மனைவிகள்]

பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசி பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்து விட்டதாகவே பொருள்.

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. [ஒன்றரை நாள்] தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா.

தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா.

தாயின் ஸஹோதரர்கள் [மாதுலன்]

தந்தையின் ஸஹோதரிகள் [அத்தை]

மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்

தந்தையின் தந்தை – பிதாமஹன்

தந்தையின் தாய் – பிதாமஹி

தாயின் தந்தை – மாதாமஹன்

தாயின் தாய் – மாதாமஹி

உடன் பிறந்த ஸஹோதரி

ஸஹோதரியின் பெண்கள்

மருமாள் [ஸஹோதரனின் பெண்]

கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் ஒரு நாள் தீட்டு. தாயின் மூத்தாள் அல்லது இளையாள் [ஸபத்னீ மாதா] குமாரன்

ஸபத்னீ மாதா புத்ரீ [குமாரத்தி]

ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள்

ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண்

ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண்

ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை, பெண் ”மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள்” மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள் ஒருநாள், ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள் என நான்கு வகைப்படும். அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின் மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது என தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள் இருக்கலாம். அப்படி இருக்கும் போது அதிகப்படியான தீட்டு எந்த உறவினால் ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்க வேண்டும். பத்து நாள் தீட்டு பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் ஏழு தலை முறைகளுக்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் பத்து நாள் தீட்டு உண்டு.

பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ [ஆண்] குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு. இறந்தவர் [குழந்தையின் தந்தை] தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்.

மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் குழந்தை ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் பதுது நாள் தீட்டு.

ஏழு வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் பத்து நாள் தீட்டு. ஏழு வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லா விட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் பத்து நாள் தீட்டு. மூன்று நாள் தீட்டு கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுகு்கும் மூன்று நாள் தீட்டு. தாயின் தந்தை [மாதாமஹர்]
தாயின் தாய் [மாதாமஹி], தாயின் ஸஹோதரன் [மாதுலன்], மாமன் மனைவி [மாதுலானி], மாமனார், மாமியார், தாயின் உடன் பிறந்த ஸஹோதரி [சித்தி, பெரியம்மா], தந்தையின் ஸஹோதரிகள் [அத்தைகள்], ஸஹோதரியின் மகன் [உபநயனமானவன்] மருமான்
உபநயனமான பெண்வயிற்றுப் பேரன் [தெளஹித்ரன்] ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் [ஸமானோதகர்கள்], கல்யாணமான பெண், கல்யாணமான ஸஹோதரி, ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் [ஜனனீ], ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை [ஜனக பிதா], ஸ்வீகாரம் போன மகன் [தத்புத்ரன்], ஏழு வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண், இரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள், ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள், பக்ஷிணீ பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசி பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்து விட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்து விட்டாலும் மறு நாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. [ஒன்றரை நாள்]. அத்தையின் பிள்ளை அல்லது பெண்,
மாமனின் பிள்ளை அல்லது பெண், தாயின் ஸஹோதரியின் பெண்கள், பிள்ளைகள், தன்னுடைய ஸஹோதரியின் பெண், தன் ஸஹோதரனின் மணமான பெண், சிற்றப்பன், பெரியப்பன், பெண்கள், தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி [பெளத்ரீ] பெண் வயிற்றுப் பேத்தி [தெளஹித்ரி], உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை [தெளஹித்ரன்], உபநயனமாகாத மருமான் [ஸஹோதரி புத்ரன்] 

கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. [இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்]. ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி, ஸபத்னீ மாதாவின் பெண், மற்றும் மேற் சொன்ன மூன்று வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள், ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை, ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா, கல்யாணமாகாத ஆறு வயதுக்குட்பட்ட இரண்டு வயதுக்கு மேற்பட்ட பங்காளிகளின் பெண், ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த முன் கோத்ர ஸஹோதரர்கள், ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை.

மஹாளய பக்ஷம்

மஹாளய பக்ஷம் - செப்டம்பர் 21 ஆரம்பம்.   

மஹான்களான பித்ருக்கள் அனைவரும் இரண்டு மாஸங்கள் வரை இந்த பூலோகத்தில் தங்கி தத்தம் ஸந்ததியினர் மஹாளய ச்ராத்தம் அல்லது தர்ப்பணம் செய்வார்கள் என்று ஆசைப்பட்டு இங்கு வந்து தங்குவதால் அந்த காலத்தில் இந்த பூலோகமே மஹான்களுக்கு ஆலய(இருப்பிட) மாக ஆவதால் இது பெருமை பொருந்திய ஆலயமாக மஹாள(ல), யமாகக கூறப்படுகிறது.  இதனால் இந்த பூலோகத்தை மஹாள(ல) யமாக்கும் காலத்திற்க்கும் மஹாள(ல) யம் என்று பெயர் உண்டாயிற்று என்று பெரியோர்கள் கருதுகின்றனர்.   இந்த மஹாளய ச்ராத்தம் பக்ஷ மஹாளயம் ஸக்ருந் மஹாளாய ச்ராத்தம் என்று இரு வகைப்படும்.    பக்ஷ மஹாளய ச்ராத்தம் -  இந்த பாத்ரபத க்ருஷ்ண பக்ஷம் 15 நாட்களுடன் அடுத்த சுக்லபக்ஷ ப்ரதமையும் சேர்த்து 16 நாட்களிலும் அனுஸ்டிக்கப்படுவதாகும்.  இதை அன்ன தானமாகவோ — தரப்பணமாகவோ செய்யலாம்.  இப்பொழுதும் ஆஸ்திகர்கள் சிலர் அநுஷ்ட்டித்து வருகிறார்கள்.  இப்படி பக்ஷம் முழுவதும் செய்யப்படுவதால் இது பக்ஷ மஹாளயமாகும்.  இதில் திதிவார தோஷம் எதையும் பார்க்க வேண்டாம்.    *ஸக்ருந்மஹாளயம்*   இந்த மஹாளயபக்ஷத்தில் என்றேனும் ஒரு திதியில் ஒரு தடவை அநுஷ்ட்டிக்கப்படும் ச்ராத்தம் அல்லது தர்ப்பணம் ஸக்ருந்மஹாளயம் எனப்படும்.   இந்த ஸக்ருந்மஹாளய ச்ராத்தத்தை பஞ்சமீ முதற்க்கொண்டு செய்வது உசிதம்.  ஆனால் பஞ்சமிக்கு முன்னாள் மஹாபரணி வந்தால் அப்பொழுது மஹாளய ச்ராத்தத்தை செய்யலாம்.   இந்த ஸக்ருந்மஹாளய ச்ராத்தத்தை சதுர்த்தசி,  ப்ரதமை ஷஷ்டி,  ஏகாதசி ஆகிய திதிகளிலும்,  வெள்ளிக்கிழமையிலும்,  ரேவதி,  மகம்,  தன்னுடையதும்,  தன் பத்னீ- புத்ரன் இவர்களுடையவும் நக்ஷ்த்திரங்கள்,  ரோஹிணீ இவற்றிலும்,  பார்யை ரஜஸ்வலையாயிருக்கும் போதும்  செய்யக்கூடாது.   மாதாபிதாக்களின் ச்ராத்தம் வருகிற மாஸத்தில் ச்ராத்தத்திற்க்கு முன் மஹாளய தரப்பணம் பண்ணக்கூடாது.   இந்த மஹாளய தர்ப்பணத்தை அநுஷ்ட்டிக்கப்பவர் முதல் நாள் இரவு பலாஹாரம் செய்யவேண்டும்.   மஹாளயபக்ஷ தர்ப்பணத்தை (அமாவாஸ்யை தர்ப்பணத்தைப் போல்) இரண்டு வர்க்கங்களுக்கும் புக்நங்களுக்கிடையே மேலும் இரண்டு புக்நங்கள் காருண்ய பித்ருக்களுக்காக சேர்த்து ஆவாஹநாதிகளைப் பண்ணித் தர்ப்பிக்கவேண்டும்.  *Understanding Mahalaya paksham.*   21st September, 2021 Mahalaya Paksham begins  During the Mahalaya Paksham, our Pitrus are said to descend on earth to receive the Pindam and Tilodakam being given by their descendents.   When our Pitrus are here on the earth, our earth becomes a Maha Aalayam, a Great Temple for us. Hence the name Mahalayam.   Our Pitrus are said to arrive here with great expectations that their children would perform the Shradhas and they could receive Tilodakas.   So, it is very necessary for every son whose parents are not alive, to perform the Mahalaya Shradham without fail.  There are two types of mahalayam being observed .:  1. Paksha mahalayam 2. Sakrun mahalayam  *Paksha mahalayam*  for observing everyday of the entire mahalayam paksham (16 sraddhams - Krishna  Prathamai to Shukla Prathamai);  *Sakrun mahalayam*-  one day  sraddham or tarpanam. This is in addition to Mahalaya Amavasyai sraddham or tarpaNam.   *Restrictions*:1.  1. Sakrun Mahalaya sradham should be observed from Krishna Panchami thithi.   2. If a pitru sraddham falls within mahalayam, then mahalayam (sraddham)  can be observed only after performing the pitru sraddham. Mahalayam can be performed on the next day after the pitru sraddham.  3. For sakrun mahalayam (one day),  on Fridays, prathamai, sashti, chaturdasi, ekadasi tithis, Revati, makam nakshatrams, self -janma nakshatram, patni-janma nakshatram or son's-janma nakshatram days should not be observed.   4. For some reason, if mahalayam can not be observed in bhadrapada krishna paksham, there is time up to thula (aiyppasi) masam.  *Exceptions*: 1. For paksha mahalayam, the above days of tithi, vara and nakshatra dosha restrictions do not apply.  2. For sakrun mahalayam, Certain days in this period are considered important:   For example the day with bharani is called *Mahabharani*;   Krishna paksha ashtami called *Madhyashtami*; navami called *Vyatipadam*; Thrayodasi called *Gajachaayai*.  In these days (mahabharani, madhyashtami, vyatipadam or gajachayai), one should not be concerned about restricted vara, nakshatram or tithis dosham as above (under restrictions)  for sakrun mahalayam.  sakrun mahalaya sraddham can be observed from Panchami days, on Panchami, saptami, ashtami, navami, dasami,dwadasi, thrayodasi and also pita tithi (excluding pitru sraddham day within mahalayam).  Just like Amavasyai Tharpanam keep buknam for both vargam i.e Pithru as well as Mathru vargam. In between these two, keep extra buknam for Karunya Pithru and do Aavahanam and tharpanam accordingly.

ஏழுமலையான் பகுதி - ஆறு

ஏழுமலையான் பகுதி - ஆறு




தன் கணவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை போக்குவதற்காக லக்ஷ்மி மகேஸ்வரனிடம் சென்றாள். தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடை அவரிடம் சொல்லி தனது அவசரம் காரணமாக திருமால் பூலோகம் சென்று ஒரு புளியமரத்தின் கீழ் அன்ன பானமின்றி தவமிருப்பது பற்றி எடுத்துச் சொன்னாள். மகேஸ்வரன் அவளது கஷ்டத்தை போக்குவதற்கு வாக்களித்தார். பிரம்மாவை வர வழைத்தார். பிரம்மனே! நாம் இருவரும் பசு, கன்றுவாக மாறி நாராயணனின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும். நம்மை லக்ஷ்மி சந்திரகிரி நாட்டின் அரசன் சோளராஜனுக்கு விற்று விடுவாள். நாம் அந்த நாட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் நாராயணனை தேடிச் சென்று அவரது பசி போக்க பாலூட்டுவோம் என்றார். லக்ஷ்மி மகிழ்ச்சி அடைந்தாள். இதன் பிறகு பிரம்மா பசுவின் வடிவையும், மகேஸ்வரன் கன்றுக் குட்டியின் வடிவையும் அடைந்தனர். லக்ஷ்மிதேவி அவற்றை மேய்ப்பவள் போல வேடமணிந்தாள். பசு, கன்றுகளை ஓட்டிக்கொண்டு சந்திரகிரிக்கு வந்து சேர்ந்தாள். அந்த பசுவும் கன்றும் அந்நாட்டு மக்களை கவர்ந்தன. இதுபோன்ற உயர்ந்த ஜாதி பசுவை நாங்கள் இதுவரை கண்டதில்லை. இதன் மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஒரு முறை பால் கறந்தால் உலகத்திற்கே போதும் என்கிற அளவிற்கு பெரிதாக மடு கொண்ட பசுவை அதிசயப்பிறவி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இது எங்கள் தேசத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்றே கருதுகிறோம். இந்த மாட்டுக்கு சொந்தக்காரி பேரழகு பொருந்தியவளாக இருக்கிறாள். லக்ஷ்மி கடாக்ஷம் இவள் முகத்தில் தாண்டவமாடுகிறது என்று புகழ்ந்து பேசினர். தங்கள் நாட்டிற்கு வந்திருக்கும் அதிசய பசு, கன்று பற்றிய தகவல் அரண்மனைக்கு சென்றது.

மன்னன் சோளராஜன் அவற்றை பார்க்க விரும்பினான். இதை எதிர்பார்த்து காத்திருந்த லக்ஷ்மி பிராட்டியார், பசுக்களை ஓட்டிக்கொண்டு அரண்மனைக்கு சென்றாள். மன்னன் அந்த பசுக்களை பற்றி விசாரித்தான். பெண்மணியே! உனது நாடு எது? எந்த நாட்டில் இது போன்ற உயர் ஜாதி பசுக்கள் இருக்கின்றன? இதன் சிறப்பம்சம் என்ன? தெளிவாகச் சொல் என கேட்டான். லக்ஷ்மி பிராட்டி அவனிடம் மன்னனே! இந்த பசுக்களுக்கு உணவிட சாதாரண மனிதர்களால் முடியாது. இவை மிக அதிகமாக சாப்பிடும். ஆனால் உணவிற்கேற்ற பாலை இந்த ஊருக்கே தரும். நீ அரண்மனைவாசி. உன்னால் இதை வளர்க்க முடியும். இந்த பசுக்களுக்கு தேவையான உணவை கொடுத்து வா. உன் நாடே வளமாகும், என தெரிவித்தாள். சோளராஜனுக்கும், அவனது மனைவிக்கும் அந்த பசுக்களை மிகவும் பிடித்து விட்டது. உலகத்திற்கே படியளக்கும் லக்ஷ்மி பிராட்டிக்கு பணம் கொடுத்து அந்த பசுக்களை வாங்கிக் கொண்டனர். அரண்மனை கொட்டிலில் அந்த பசுக்கள் அமைதியாக நின்றன. அவற்றை கட்டிப்போட வேண்டும் என்ற அவசியம் வரவில்லை. எந்தப் பிரச்னையும் செய்யாமல் சாப்பிட்டன. அதுவரை அப்படிப் பட்ட பசுக்களை பார்க்காத பராமரிப்பு ஊழியர்கள் ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டனர். சோளராஜன் தலைமை பசு பராமரிப்பாளரை அழைத்து சேவகனே! இந்த பசு கரக்கும் பாலை மட்டும் அரண்மனையில் ஒப்படைத்து விட வேண்டும். இதன் பால் தெய்வாம்சம் மிக்கது என இதை என்னிடம் விற்ற பெண்மணி சொல்லியிருக்கிறாள். இவற்றை வேங்கடாசல மலைக்கு அழைத்து சென்று மேயவிடு. மிகவும் கவனமாக பார்த்துக்கொள் என சொல்லி அனுப்பினான்.

பராமரிப்பாளர்கள் அந்த பசுக்களை வேங்கடாசல மலைக்கு ஓட்டிச் சென்றனர். சேவகர்கள் மதியவேளையில் ஓய்வெடுக்கும் நேரத்தில் அந்த பசுக்கள் மந்தையை விட்டு பிரிந்து மலையிலிருந்த புளியமரத்தின் அருகில் சென்றன. புற்றுக்குள் ஸ்ரீமந் நாராயணன் தவத்தில் இருந்தார். அவர் மீது அந்த பசு பாலை சொரிந்தது. திடுக்கிட்டு விழித்த நாராயணன் மேல் நோக்கி பார்த்தார். பால் வழிந்து கொண்டிருந்தது. வாய் திறந்து அந்த பாலை பருகினார். இப்படியாக தினமும் அந்த பசுக்கள் புற்றுக்கு சென்று அதனுள் அமர்ந்திருந்த ஹரிக்கு பாலை சொரிந்துவிட்டு வந்தன. மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கப்பட்ட பசு, பால் கொடுக்காததால் அரண்மனையில் பிரச்னை ஏற்பட்டது. இவற்றை விற்கவந்த பெண்மணி அரசனையே ஏமாற்றிவிட்டாளோ என்று பேசிக் கொண்டனர். மகாராணி பராமரிப்பாளனை அழைத்து இந்த மாடு பால் கொடுக்கிறதா? இல்லையா? ஒரு வேளை நீயே இந்த பாலை குடித்து விடுகிறாயா? உண்மையை சொல்லா விட்டால் உன் தலையை எடுத்து விடுவேன் என எச்சரித்தாள். அவன் பதறிப்போனான். மகாராணி! எல்லா பசுக்களையும் போல இதையும் திருவேங்கடமலைக்கு ஓட்டிச் செல்கிறேன். எங்கள் பார்வையில் தான் இந்த பசுக்கள் மேய்கின்றன. மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஆனால் கறந்தால் பால் வருவதில்லை. இது என்ன அதிசயம் என்று எங்களுக்கு புரியவில்லை. மாயப்பசுக்களாக இவை உள்ளன என்று சொல்லி அவளது காலில் விழுந்தான். மகாராணிக்கு அவனது பேச்சில் நம்பிக்கை வரவில்லை. பொய்யனே! உன் பேச்சை நான் நம்பமாட்டேன். மிகச்சிறிய கன்றை ஈன்றுள்ள இந்த பசுவிற்கு எப்படி பால் இல்லாமல் போகும்? இன்று ஒரு நாள் அவகாசம் தருகிறேன். நாளை முதல் எப்படியும் இந்த பசுவின் பால் அரண்மனைக்கு வந்தாக வேண்டும். இல்லா விட்டால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி அனுப்பினாள்.

என்ன செய்வதென அறியாத பராமரிப்பாளன் மறுநாள் அந்த பசுவின் மீது ஒரு கண் வைக்க ஆரம்பித்தான். மதிய வேளையில் அவன் ஓய்வெடுக்கவில்லை. பசுக்கள் புற்றை நோக்கி சென்றன. பராமரிப்பாளன் பின்தொடர்ந்தான். புற்றின் அருகே சென்ற பசு, பால் சொரிய ஆரம்பித்தது. அவன் அதிர்ச்சியடைந்தான். கடும் கோபம் ஏற்பட்டது. தனது கையில் இருந்த தடியுடன் பசுவை அடிக்க பாய்ந்தான்.

தொடரும்....

வியாழன், 11 நவம்பர், 2021

ஏழுமலையான் பகுதி - ஐந்து

ஏழுமலையான் பகுதி - ஐந்து




லக்ஷ்மி ஒரு இடத்தில் இருக்கும் வரை தான் யாருக்குமே மதிப்பு... நம் வீட்டிலேயே எடுத்துக் கொள்வோமே! வேலைக்கு போகும் வரை மனைவி கணவனை கொண்டாடுவாள், பிள்ளைகள் ஒன்றாம் தேதியானால் சுற்றி சுற்றி வருவார்கள். வேலையில் இருந்து நின்ற பிறகு பென்ஷன் வாங்கினால் ஏதோ கொஞ்சம் மதிப்பிருக்கும். ஒன்று இல்லா விட்டால்... கண்டு கொள்வார் யார்?

லட்சுமி பிராட்டியார் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தங்கி விட்டதால் வைகுண்டத்தின் செல்வச்செழிப்பு அகன்றது. ஸ்ரீதேவி சென்று விட்டதால் தரித்திர தேவி உள்ளே புகுந்தாள். தேவர்களெல்லாம் கலங்கினார்கள். அவர்கள் திருமாலிடம், பெருமாளே! தாங்கள் லக்ஷ்மி தாயார் எங்கிருந்தாலும் கண்டு பிடித்து அவர்களைச் சமாதானம் செய்து மீண்டும் வைகுண்டம் அழைத்து வர வேண்டும். தேவலோகமே வறுமைக்கு ஆட்பட்டால் செல்வம் வேண்டி வணங்கும் நம் பக்தர்களுக்கு எப்படி வாரி வழங்குவது! உலக உயிர்களுக்கு படியளக்காவிட்டால் நமக்கு எப்படி மதிப்பிருக்கும்? என்றனர். திருமாலும், அவர்கள் முன்னால் நாடகமாட ஆரம்பித்து விட்டார்.

ஆமாம்... ஆமாம்... லக்ஷ்மி இங்கிருந்து செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். பிருகுவைக் கண்டித்திருந்தால் அவள் இங்கிருந்து சென்றிருப்பாளா? பின் விளைவுகளைப் பற்றி சிந்தியாமல் இருந்து விட்டேனே என வருத்தப்படுவது போல நடித்தவர் பூலோக சஞ்சாரத்துக்கு தயாராகி விட்டார். லக்ஷ்மி அங்கேயே இருந்திருந்தால் பூலோகத்தில் முனிவர்களின் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்? கலியுகத்தில் நடக்கும் பாவங்களை எப்படி தடுக்க முடியும்? இந்தக் காரணத்தால் லக்ஷ்மிக்கு கோபம் வரச் செய்த திருமால் அவளுக்கு பூலோகம் செல்லும் மனநிலையை உண்டாக்கி விட்டு தானும் அங்கே செல்ல தயாரானார். தேவர்களே! லக்ஷ்மி எங்கிருந் தாலும் நான் அழைத்து வருகிறேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்றவர் அவள் மறைந்திருக்கும் இடத்தை தேடியலைவது போல் பல இடங்களிலும் சுற்றினார்.

சீதையைப் பிரிந்த ஸ்ரீராமன் காட்டில் எப்படியெல்லாம் தேடியலைந்தாரோ! செடி, கொடிகளிடம் எல்லாம் என் சீதையைப் பார்த்தீர்களா! என்று கேட்டு புலம்பினாரோ அது போல திருமால் என் லக்ஷ்மியைப் பார்த்தீர்களா! என்று செடி, கொடிகளிடமெல்லாம் கேட்டுக் கொண்டே நடந்தார். எங்கு தேடியும் லக்ஷ்மி கிடைக்காமல் ஏழு மலைகளை உள்ளடக்கிய திருமலை என்னும் மலைக்கு வந்தார். அப்பகுதியில் ஆதிவராஹர் குடியிருந்தார். திருமால் எடுத்த அவதாரங்களில் பன்றி முகம் கொண்ட வராஹ அவதாரமும் ஒன்று. வராஹமாக அவதாரமெடுத்து பூமியைத் தோண்டி வேதங்களைக் கண்டெடுத்து பிரம்மாவிடம் ஒப்படைத்த பிறகு அதே வடிவில் திருமலையில் அவர் குடியிருந்தார். ஆதியில் தோன்றியவர் என்பதால், அவர் ஆதிவராஹர் எனப்பட்டார். இதனால், திருமலையில் அவர் தங்கியிருந்த இடமும் ஆதிவராஹ க்ஷேத்ரம் எனப்பட்டது. இந்த தலத்தை ஆதிவராஹ நரசிம்ம க்ஷேத்ரம் என்றும் அழைப்பர்.

நரசிம்மரும் இதே மலையை ஒட்டிய அஹோபிலத்தில் தன்அவதார காலத்தை முடித்து விட்டு தங்கியிருந்தார். திருப்பதி வெங்கடாசலபதியின் செல்வச்செழிப்புக்கு காரணமே இந்த நரசிம்மர் தான் என்ற கருத்தும் உண்டு. இங்கு வந்த திருமால் ஒரு புளியமரத்தில் இருந்த புற்றில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்து விட்டார். திருமால் ஒருபுறம் லக்ஷ்மி ஒருபுறம் இருந்தால் உலக இயக்கம் என்னாகும்? இதை சரிசெய்ய எண்ணினார் கலக முனிவர் நாரதர். அவர் தன் தந்தையான பிரம்மாவிடம் சென்றார். தந்தையே! பிருகு முனிவர் செய்த சோதனையால் கோபமடைந்த லக்ஷ்மி தாயார் இப்போது கொல்லாபுரத்தில் இருக்கிறாள். திருமாலோ ஆதிவராஹ க்ஷேத்ரத்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் லக்ஷ்மியைக் காணாமல் அன்னம் கூட புசிப்பதில்லை. இப்படியே போனால் என்ன செய்வது? முதலில் திருமாலுக்கு அன்னம் புகட்ட வேண்டும். அதற்கு தாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். பிரம்மா உடனடியாக சிவபெருமானிடம் சென்றார். நடந்த விஷயத்தைச் சொன்னார். மேலும் பெருமானே! நாம் இருவரும் பசு, கன்று வேடத்தில் செல்வோம். அவருக்கு பால் புகட்டி வருவோம் என்று வேண்டுகோள் விடுத்தார். மைத்துனருக்கு ஒரு பிரச்னை என்றால் சிவனுக்கு பொறுக்குமா? இப்போதும் கூட கிராமங்களில் மைத்துனன் இருந்தால் மலையேறி பிழைக்கலாம் என்பார்கள். இதன் பொருள் தெரியுமா?மைத்துனரான திருமால் திருமலையில் இருக்கிறார். அவரது பசி போக்க கைலாயமலையில் இருக்கும் சிவன், திருமலையில் ஏறப்போகிறார்.

இதனிடையே நாரதர் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தவத்தில் இருந்த லக்ஷ்மி தாயாரைச் சந்தித்தார். நாராயணா என்ற திருநாமம் முழங்க வந்த அவரை லக்ஷ்மி வரவேற்றாள். தாயே! தாங்கள் சிறு பிரச்னைக்காக கோபித்துக் கொண்டு வந்து விட்டீர்கள். நீங்கள் இல்லாமல் திருமாலால் ஒரு கணமாவது வைகுண்டத்தில் இருக்க முடியுமா? அவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே! தாங்கள் அவரைப் பிரிந்த ஏக்கத்தால் அவர் மனம் பட்ட பாடு தெரியுமா? அவர் உங்களைத் தேடி காடுகள், மலைகள், குகைகளில் எல்லாம் அலைந்தார். எங்கும் கிடைக்காமல் இப்போது திருமலையிலுள்ள ஆதிவராஹ க்ஷேத்ரத்தில் தங்கியுள்ளார். தங்களை எண்ணி புலம்பி அலைந்த அவர் சாப்பாடு, உறக்கம் ஆகியவற்றை மறந்து தாங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரு புளியமர பொந்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். தாங்கள் அவரைக் காப்பாற்ற உடனடியாக கிளம்ப வேண்டும் என்றார். லட்சுமிக்கு பகீரென்றது. அவசரப்பட்டு விட்டோமே என வருந்திய அவள் திருமாலைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாள்.

தொடரும்...


நவபுலியூர் தரிசனம் ஏன் ?

நவபுலியூர் தரிசனம் ஏன் ?

1. பெரும்பற்றப்புலியூர்
2. திருப்பாதிரிப்புலியூர்
3. எருக்கத்தம்புலியூர்
4. ஓமாம்புலியூர்
5. சிறுபுலியூர்
6. அத்திப்புலியூர்
7. தப்பளாம்புலியூர்
8. பெரும்புலியூர்
9. கானாட்டம்புலியூர்
நவபுலியூர.:சில உண்மைகள்

தற்காலத்தி உள்ள பலருக்கும் ஆலய தரிசனம், ஆன்மீக வழிபாட்டு முறைகள் என்பதோ, அவற்றின் முக்கியத்துவம் என்ன, அல்லது அது எப்படி துவங்கியது என்ற விவரங்களோ தெரிந்திருக்க முடியாது. அதில் நவபுலியூர் யாத்திரையும் அடங்கும். பூர்வ ஜென்மங்களில் மற்றும் இந்த ஜென்மத்திலும் அறிந்தோ, அறியாமலோ செய்த பிழைகளினால் ஏற்பட்ட கர்மாக்களை தொலைத்துக் கொள்ள முன் ஒரு காலத்தில் இந்த யாத்திரையை பலரும் மேற்கொண்டு இருந்திருக்கின்றார்கள். முக்கியமாக வாழ்நாளின் இறுதி கட்ட நிலையில் வாழ்ந்திருந்த முதியோர்கள் தமக்கு பிறப்பு இறப்பில் இருந்து விடுதலை தரும் மோட்ஷ கதியை அடைய வேண்டும் என்பதற்காக இந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ளார்கள்.

இப்படிப்பட்ட புனித யாத்திரையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக *மஹரிஷி வியாக்ரபாதர்* மற்றும் *மஹரிஷி பதஞ்சலி* யும் மேற்கொண்டு உள்ளார்கள். மோட்ஷத்துக்கு செல்ல தடையாக இருக்கும் தமது பூர்வஜென்ம வினைப் பயன்களினால் ஏற்பட்ட கர்மாக்கள் விலக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் சிவபெருமானை துதித்தபடி பயணம் மேற்கொண்டார்கள். அப்படி பயணம் மேற்கொண்ட அந்த இரு மஹரிஷிகளுக்கு தரிசனமும் தந்து இந்த யாத்திரையின் மகத்துவத்தையும் சிவபெருமானே அவர்களுக்கு போதித்ததாகவும், அதன் மூலமே இந்த யாத்திரையின் மகத்துவம் வெளி உலகிற்கு தெரிய வந்தது என்பதாகவும் கூறுகின்றார்கள்.

வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி எனும் மஹரிஷிகள் சிவபெருமானின் முடிவற்ற பேரானந்தம் தரும் அற்புத நடனத்தைக் கண்டு களித்த பின் தமக்கு மோட்ஷமும் கிடைக்க அவர் அருள் புரிய வேண்டும் என்ற ஆவலில் சிதம்பரத்துக்கு சென்றபோது, நடன முடிவில் அவர்களுக்கு காட்சி தந்த சிவபெருமான் தான் ஸ்வயம்புவாக எழுந்துள்ள ஒன்பது தலங்களைக் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறிய பின் அந்த தலங்களுக்கு சென்று தம்மை வழிபட்ட பிறகு அவர்கள் *திருப்பட்டூரில் உள்ள பிரும்மதேவரை* வழிபட்ட பின் முடிவாக ஸ்ரீரங்கத்தில் *ஸ்ரீ ரங்கநாத பகவானாக எழுந்துள்ள விஷ்ணு பகவானையும்* தரிசனம் செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமானை தரிசனம் செய்த உடனேயே மோட்ஷத்துக்கு தடையாக இருக்கும் கர்ம வினைகளை தான் அகற்றுவேன் என்றும், அதன் பின், மும்மூர்த்திகளில் மோட்ஷத்திற்கு செல்ல அருள் தரும் சக்தியை கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாத பெருமான் அவர்களுக்கு மோட்ஷம் கிடைக்க அருள் புரிவார் என்பதாகவும் கூறினாராம்.

நவபுலியூர் யாத்திரையில் முதலில் ஒன்பது சிவாலயங்களில் தரிசனம் செய்த பின்னரே பிரும்மதேவர் மற்றும் விஷ்ணுவை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படைக் காரணம் என்ன? நவ என்றால் ஒன்பது என அர்த்தம். ஆகவே ஒன்பது என்பது சிவபெருமானின் ஒன்பது ஆலயங்களையும் அந்த ஒன்பது ஆலயங்களில் உள்ள ஒன்பது கிரகங்களின் நாயகர்களையும் (நவகிரகங்கள்) குறிக்கின்றதாகும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் சுக துக்கங்களை நிர்ணயிப்பது மூல தெய்வங்களின் சார்பாக செயல்படும் நவக்கிரகங்களின் தாக்கம்தான். ஆகவே இந்த ஒன்பது சிவாலயங்களில் அவருக்கு பணிவிடை செய்தபடி அமர்ந்துள்ள நவக்கிரகங்களுக்கு தம்மை தேடி வந்து பிரார்த்தனை செய்யும் மக்களின் கர்ம வினைகளை களையும் விசேஷ சக்திகளை சிவபெருமான் தந்துள்ளாராம்.

பூர்வ ஜென்மங்களிலும், வாழும் ஜென்மத்திலும் அவரவர் செய்த பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்பவே கர்மவினைகள் ஒருவரை தாக்குகின்றன. அந்த கர்மாக்களின் அளவுக்கேற்ப தண்டனை தரும் சக்தி ஒவ்வொரு நவக்கிரக நாயகர்களுக்கும் தனித்தனியே தரப்பட்டு உள்ளது. ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் குறிப்பிட்ட காலங்கள் நவக்கிரக நாயகர்களின் ஆட்சியில் இருக்கின்றன. என்னென்ன வினைப் பலன்களை அவர்களால் அழிக்க முடியும் என்ற விதிப்படி இயங்கும் வகையில் நவகிரகங்களின் சக்திகள் வரையுறுத்தப்பட்டு உள்ளன. ஆகவே ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அனுபவிக்க வேண்டிய கர்மவினைப் பலன்களை, தம்முடைய ஆட்சி காலத்தில் அவர்கள் இருக்கும்போது நவகிரக நாயகர்கள் நிறைவேற்றுகிறார்கள். இதனால்தான் கர்மவினைப் பலங்களினால் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பவர்கள் நவகிரக ஆலயங்களுக்கு சென்று நவகிரகங்களை வழிபட்டு அவர்களுடைய அருளை வேண்டி நிற்கிறார்கள்.

ஆலயங்களில் பொதுவாக நவகிரகங்கள் அனைத்தும், வெவ்வேறு திசைகளை நோக்கியபடி ஒரே பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். அதே போல நவக்கிரகங்கள் அவற்றுக்கென நிர்மாணம் செய்யப்பட்டு உள்ள தனித்தனி ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏற்படும் கர்மவினைகளின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள கிரகங்களுக்கு உரிய குறிப்பிட்ட தினங்களில் ஆலயங்களுக்கு சென்று நவகிரகங்களை பூஜித்து ஆராதிக்கின்றார்கள். ஆனால் அதே நவக்கிரங்களும் தம் பெற்று இருந்திருந்த சில சாபங்களை களைந்து கொள்ள சில பிரதான தெய்வங்களை ஆராதித்து சாப விமோசனம் பெற்றார்கள். அதனால் எந்த ஆலயத்தில் அவை சாப விமோசனம் பெற்றனவோ அங்குள்ள மூலவருக்கு பணிவிடை செய்தபடி அங்கும் அந்த நவகிரகங்கள் தங்கி உள்ளார்கள். அதனால் அந்த ஆலயங்களில் உள்ள மூலவர் தனக்கு பணி புரியும் அந்த நவகிரகங்களுக்கு கர்மவினைப் பலன்களை நீக்கும் மேலும் சில விசேஷ சக்திகளை தம்மிடம் உள்ள சக்தியில் இருந்து கொடுத்து அவற்றை தம்முடைய சார்ப்பில் நிறைவேற்றுமாறு கட்டளை இட்டு உள்ளார்கள். அதனால் அங்குள்ள நவக்கிரகங்களுக்கு கர்மாக்களை அகற்றும் விசேஷ சக்தி மற்ற ஆலயங்களில் அவை கொண்டுள்ள சக்திகளை விட அதிக அளவில் இருக்கும். நவபுலியூர் ஆலயங்களில் உள்ள நவகிரகங்களை குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே சென்று ஆராதித்து பூஜிக்க வேண்டியது இல்லை. தனி ஆராதனை முறைகளும் கிடையாது. அந்த ஆலயங்களில் சென்று மூலவரை வழிபட்ட பின் அங்குள்ள நவகிரகங்களை வழிபடும்போது அதுவரை அவர்களுக்கு சேர்ந்துள்ள அனைத்து கர்மாக்களையும் அங்கேயே அவை விலக்கி விடுகின்றன. இதனால்தான் நவபுலியூர் யாத்திரை மோட்ஷம் பெறுவதற்காக மட்டும் அமைந்து இருக்காமல் கர்ம வினைப் பலன்களை அகற்றும் தலங்களாகவும் உள்ளன என்பது தெளிவாகும்.

பண்டிதர்களின் கூற்றின்படி இந்த தத்துவ உண்மைகளை வெளிப்படுத்தவே ஒரு நாடகமாடி சிவபெருமான் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மகரிஷிகளை பூமியிலே பிறப்பு எடுக்க வைத்து, தான் ஸ்வயம்புவாக எழுந்து பல அவதார தோற்றங்களில் உள்ள அந்த ஒன்பது ஆலயங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில் இந்த நவபுலியூர் யாத்திரையை மேற்கொள்ள வைத்து இருக்கின்றார் என்கின்றார்கள்.

இந்த நவபுலியூர் யாத்திரை 12 ஆம் நூற்றாண்டுவரை மிகப் பிரபலமான யாத்திரையாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் சைவ மற்றும் வைஷ்ணவ வழிபாடு என்ற பிரிவினை பேதத்தினால் இந்த யாத்திரை பெரும் அளவில் தடைப்படலாயிற்று என்றாலும், உண்மையை உணர்ந்திருந்த சிறு அளவிலான சைவ மற்றும் வைஷ்ணவ பக்தர்களால் தொடர்ந்து அந்த யாத்திரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதும் உண்மையே.

இந்த யாத்திரைக்கு செல்பவர்கள் பதஞ்சலி முனிவர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். பாற்கடலில் பகவான் மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த தெய்வீக நாகமான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானுடைய நாட்டியத்தைக் காண ஆசைப்பட்டு மகாவிஷ்ணுவிடம் தனது ஆசையை வெளிப்படுத்த மகாவிஷ்ணு அவரிடம் கூறினார் ‘ஆதிசேஷா நானே சிவபெருமானின் நடனக் காட்சியைக் கண்டு சொக்கிப் போய், அந்த ஆனந்தத்தை அடக்க முடியாமல் உம்மிடம் சிவபெருமானின் நடனத்தின் அற்புதத் தன்மையைக் குறித்துக் கூறினேன். அந்த மனநிறைவை, மன மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை எனும்போது அதைக் கேட்கும் அனைவரும் அந்த நடனத்தைக் காண ஆசைப்படுவார்கள் என்பதிலும் ஐயம் இல்லை. ஆகவே என் மகிழ்ச்சியைக் கேட்ட பின் அதைப் பார்க்க உமக்கு ஆவல் ஏற்படுவதில் வியப்பில்லைதான். அதற்கு நான் தடையாக இருப்பது தவறு. ஆகவே நீயும் பூலோகம் சென்று தக்க நேரத்தில் பாதி மனிதன், பாதி நாகம் எனும் உருவத்தில் பதஞ்சலி எனும் உருவம் கொண்டு பிறந்து அந்த உருவில் யோகக் காலையில் வல்லுவனாக இருக்கும் வகையில் யோகக் கலையின் அனைத்து நுணுக்கங்களையும் பெற்றுக் கொண்ட பின் சிவபெருமானின் அற்புத நடனத்தையும் கண்டு களிப்பாய்” என ஆசிகளை வழங்கினார்.

விஷ்ணு பகவான் தொடர்ந்து கூறினார் “இப்போது நீ அதே பதஞ்சலி எனும் உருவம் கொண்டு நாகலோகத்துக்குப் போ. அதற்குள் ஒரு மலையும் அந்த மலைக்குள் ஒரு துவாரமும் உள்ளது. அந்த துவாரத்தின் வழியே நீ சென்றால் சிதம்பரத்தை (தில்லைவானம்) அடையலாம். அங்கு வியாக்ரபாத முனிவர் என்பவர் பேரந்தம் தரும் சிவபெருமானின் நடனக் காட்சியை காண வேண்டும் என்று சிவபெருமான் ஸ்வயம்புவாக எழுந்துள்ள சிவலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு உள்ளார். நீயும் அங்கு சென்று அவரோடு சேர்ந்து பூஜை செய்தால் சிவ தரிசனத்தை பெற்று அவரது நடனத்தையும் கண்டு களிக்க முடியும்”

அடுத்து விஷ்ணு பகவான் ஆதிசேஷனுக்கு ஆசிகளை அளித்து அவரை பூமியிலே பதஞ்சலியாக பிறப்பு எடுக்க அனுப்பி வைக்க அவரும் பதஞ்சலி மாமுனிவராக பிறப்பு எடுத்து வியாக்ரபாத மகரிஷியை சந்தித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து சிவபெருமானை துதித்து தவம் இருந்து சிவபெருமானின் தரிசனத்தை பெற்று, அவரது ஆனந்த நடனத்தையும் கண்டு களித்த பின் முடிவில் சிவபெருமானிடம் இருந்து போதனைகளையும் பெற்றார்கள். அதன் முடிவில் அவர்கள் இருவரும் வாழ்வின் இறுதிக்கு கட்ட நிலையை அடைந்திருந்தார்கள். சிவபெருமான் அவர்களுக்கு கொடுத்து இருந்த போதனையின்படி அவர்கள் சிவபெருமான் ஸ்வயம்புவாக தோன்றி இருந்த அனைத்து ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்த பின் முடிவாக மோட்ஷத்தையும் அடைந்தார்கள்.

அடுத்து வியாக்கியபாதர் யார் என்பதை தெரிந்து கொள்வோம். முன் ஒரு காலத்தில் மத்தியனதின முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மனதில் சிவபெருமானைத் தவிர வேறு எந்த சிந்தனையே இல்லாமல் இருந்தவர் என்றாலும் விஷ்ணு பகவான் மீது ஆழ்ந்த பற்றுதலும் கொண்டிருந்தவர். ஒருநாள் அவரிடம் அவரது மகன் வியாக்ரபாத மகரிஷி வினைப்பயன்களில் இருந்து விடுதலை பெற்று மோட்ஷம் அடையும் வழிமுறையைக் கூறுமாறு வேண்டிக் கேட்டதும், மத்தியனதின முனிவர் அவரை தில்லைவனத்துக்கு சென்று தவம் இருந்து அங்கு சிவபெருமானை வணங்கி துதித்து வந்தால் அவர் அவருக்கு மோட்ஷம் கிடைக்க அருள் புரிவார் என்றும், அப்படி அவர் தோற்றம் தந்தால் பேரானந்தம் தரும் சிவபெருமானின் நடனத்தையும் காண அவருடைய அருளைக் கேட்டுப் பெறுமாறு அறிவுரை கொடுத்தார்.

அதுவரை பால முனிவர் என்ற பெயரில் இருந்த மகரிஷி வியாக்ரபாதரும் தந்தை கூறியபடி பல ஊர்கள் வழியே சென்று சிதம்பரத்தை அடைந்தார். தில்லைவனத்தை அடைந்தவர் சிவகங்கை எனும் குளத்தின் அருகே இருந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு அங்கு தானாகவே எழுந்திருந்த சிவலிங்கத்தை வணங்கி வரலானார். தில்லை எனும் பெயர் கொண்ட மரங்கள் சூழ்ந்த அடர்ந்த காடாக அது இருந்ததினால் அந்த ஊரின் பெயரும் தில்லைவனம் என்று ஆயிற்று.

அங்கிருந்த வனப் பகுதிக்குச் சென்று மரங்களிலும் ஏறி தினமும் பல பூக்களை பறித்து வந்து அந்த லிங்கங்களுக்கு பூஜை செய்து வந்தபோது, நாளடைவில் பூக்கள் கிடைப்பதும் அரிதாயிற்று. மரங்களில் ஏறினால் மரத்தின் முட்கள் அவ்ருடைய உடலில் குத்தி வேதனை செய்தன. அவர் மன உறுதி பெற்றிருந்தது போல இயற்கையை எதிர்த்து நிற்க அவருடைய உடல் உறுதி படவில்லை. மனதில் வேதனை அடைந்தார். சிவபக்தனின் மனக் குமுறலைக் கேட்ட சிவபெருமான் மனம் மகிழ்ந்து மரத்தின் மீது சிரமம் இன்றி ஏறி பூக்களைப் பறிக்க புலிக்கு உள்ளதை போன்ற கால் மற்றும் கண்களைக் கொடுத்து அருள் புரிந்தார். அதனால் வியாக்கிய என்றால் புலி என்றும் பாதர் என்றால் பாதத்தைக் கொண்டவர் என்றும் பொருள் தரும் வகையில் புலியைப் போன்ற உடல் அமைப்பைக் கொண்ட அவர் வியாக்ரபாதர் என்ற பெயரைப் பெற்றார்.

இப்படியாக வியாக்ரபாதர் தன்னுடன் பதஞ்சலி மஹரிஷியையும் அழைத்துக் கொண்டு சிவபெருமான் கூறியபடியே சிதம்பரத்தில் துவங்கி ஒன்பது சிவாலயங்களில் அவரை தரிசனம் செய்த பின் இறுதியாக திருப்பட்டூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆலயங்களில் தரிசனம் செய்த பின் ஆத்ம சமாதி அடைந்து மோட்ஷத்தை அடைந்தார்கள். இதனால்தான் புலிக்கால் கொண்ட வியாக்ரபாதர் துதித்த ஒன்பது தலங்கள் நவபுலியூர் தலங்கள் என்ற பெயரை பெற்றன.
திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வியாக்ரபாதரின் சமாதி உள்ளது. அதை போல மகரிஷி பதஞ்சலியின் சமாதி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. திருப்பட்டூரில் பகவான் பிரும்மாவை வணங்கித் துதித்தப் பின் மகரிஷி பதஞ்சலியின் சமாதியில் வணங்கித் துதிக்க வேண்டும். அதன் பின் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று அங்குள்ள மகரிஷி வியாக்ரபாதர் சமாதியிலும் வணங்கித் துதிக்க வேண்டும். கடைசியாக ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு சென்று ஸ்ரீரங்கநாதரை வணங்கித் துதித்து மோட்ஷம் அளிக்குமாறு வேண்டிக் கொண்டு நேராக தம் வீட்டிற்கு சென்று விட வேண்டும். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானிடம் இருந்து சாப விமோசனம் பெற்றார் பிரும்மதேவர். ஒருகாலத்தில் படைப்புத் தொழிலில் இருந்த பிரும்மா ஆணவத்துடன் நடந்து கொண்டபோது சிவபெருமான் அவருடைய படைப்புத் தொழிலை தடை செய்யும் வகையில் சாபம் தந்து விட்டார். இந்த ஆலயத்தில் சிவபெருமானை வணங்கித் துதித்து அந்த சாபத்தில் இருந்து விடுதலை பெற்ற பிரும்மாவுக்கு மீண்டும் படைக்கும் தொழில் கிடைத்தது என்பதினால் இந்த ஆலயத்தில் தமது ஜாதக புத்தகத்துடன் வந்து, அதை பிரும்மா மற்றும் சிவபெருமான் சன்னதியில் வைத்து பூஜை செய்தபின் எடுத்துச் சென்றால், அனைத்து பாபங்களும் விலகி மீண்டும் மகிழ்ச்சி நிறைந்த மறுவாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்கள் யாத்திரை காலத்தில் முடிந்த அளவு சைவ உணவருந்தி, முழு நம்பிக்கையுடன் பக்தியோடு யாத்திரையை மேற்கொண்டால் அனைத்து கர்மாக்களை விலகி மோட்ஷம் பெற வழி கிடைக்கும் என்பதாக நம்பிக்கை. நவபுலியூர் யாத்திரையை செய்து முடித்ததுமே வாழ்வில் புதிய பொலிவு ஏற்படுவதையும், குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைப்பதையும், நடைபெறாமல் தடைபட்டுக் கொண்டே உள்ள திருமணங்கள் எதிர்பாராத விதத்தில் நடப்பதையும், பணத் தட்டுப்பாடுகள் விலகுவதையும் பலரும் கண்கூடாக அனுபவித்து இருக்கின்றார்கள் என்பதில் இருந்தே இந்த யாத்திரையின் மகத்துவம் புரியும். நாம் இந்த யாத்திரையை மேற்கொள்ளும்போது நம்மை அறியாமலேயே நம்முடன் மகரிஷி வியாக்ரபாதர் மற்றும் மகரிஷி பதஞ்சலி எனும் இருவரும் நமக்கு வழிகாட்டும் விதத்தில் நம்முடன் பயணிக்கின்றார்களாம்.

துலா ஸ்நான ஸங்கல்பம்


துலா ஸ்நான ஸங்கல்பம்  அச்ச - ஸ்வச்ச - லஸத் - துகூலவஸனாம் பத்மாஸனாத்யாயினீம் ஹஸ்த - ந்யஸ்த - வராபயாப்ஜ - கலஸாம் ராகேந்து - கோடி - ப்ரபாம் பாஸ்வத் - பூஷண - கந்த - மால்ய - ருசிராம் சாரு - ப்ரஸன்னானனாம் ஸ்ரீகங்காதி - ஸமஸ்த - தீர்த்த - நிலயாம் த்யாயாமி காவேரிகாம்   காவேரீ ஸ்நான ஸங்கல்ப:  ஆசமனம்: அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:   கேசவா + தாமோதரா   ஶூக்லாம் + ஸாந்தயே, ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்   ததேவ லக்னம்  + அங்க்ரியுகம் ஸ்மராமி அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே   ப்லவ நாம ஸம்வத்ஸரே த³க்ஷிணாயனே ஶரத்³ ருʼதௌ துலா மாஸே ஶுக்ல பக்ஷே அத்³ய அஷ்டம்யாம்ʼ ஶுப⁴திதௌ² ப்⁴ருʼகு³ வாஸர யுக்தாயாம்ʼ ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம்ʼ வ்ருʼத்³தி⁴ நாம யோக³ யுக்தாயாம்ʼ ப⁴வ நாம கரண யுக்தாயாம்ʼ ஏவங்கு³ண விஶேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமாணாயாம் அஷ்டம்யாம்ʼ ஶுப⁴திதௌ²  மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வார ஸ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த்தம் பகவத: நாராயணஸ்ய பரமேஶ்வரஸ்ய அஶிந்த்யயா அபரிமிதயா ஶக்த்யா ப்ரியமானஸ்ய மஹாஜலௌகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அநேக கோடி ப்ருஹ்மாண்டானாம் ஏகதமே ஶதுர்தஶ புவனாந்தர்கதே பூமண்டலே ஸப்தத்வீபமத்யே ஜம்பூத்வீபே நவவர்ஷமத்யே பாரதவர்ஷே நவகண்டமத்யே பரதகண்டே ஹிமாசல - கைலாஸ - விந்த்யாசலாதி - அநேகபுண்யஶைல - ஶிகரிதே தண்டகாரண்ய - விந்த்யாரண்ய - வேதாரண்யாதி - அநேகபுண்யாரண்ய - வனஸ்ரீ - பாஸ்வரே அஸ்மின் பாரததேஶே   த்ரிராத்ரம் ஜாஹ்னவீதீரே பஞ்சராத்ரம் து யாமுனே  ஸத்ய: புனாதி காவேரீ பாபம் ஆ- மரணாந்திகம்   இதி ப்ரஸ்தாயாம் ஸ்ரீவைகுண்ட - ரூபாந்தர - ஸ்ரீரங்க - க்ஷேத்ர - மண்டிதாயாம்.  ஏவமாதிபஹுகுணவிசேஷணவிசிஷ்டாயாம் அஸ்யாம் காவேரீ மஹாநத்யாம் ஸமஸ்த ஹரிஹர தேவதா குருசரண ஶ்ரோத்ரிய ஸந்நிதௌ ப்ரஹ்மண த்விதீயபரார்தே பஞ்சாசத் அப்ததௌ ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்ஷே ப்ரதமே திவஸே அக்னி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸப்தமே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே அஸ்மின் வர்த்தமாணே வ்யாபஹாரிகாணாம் ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே நாமஸம்வத்ஸரே அயனே ருதௌ மாஸே பக்ஷே ஶுபதிதௌ வாஸர யுக்தாயாம் நக்ஷத்ர யுக்தாயாம் யோக கரண யுக்தாயாம் அஸ்யாம் ஶுபதிதௌ துலாகதே தேவகுரௌ புஷ்கர புண்யகாலே அஸ்மாகம் ஸர்வேஷாம் க்ஷேம - ஸ்தைர்ய - வீர்ய - விஜய - ஆயு: - ஆரோக்ய - ஐஸ்வர்யாணாம் அபிவ்ருத்த்யர்த்தம் தர்ம அர்த காம மோக்ஷ ரூப சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் இஷ்ட காம்யார்த ஸித்யர்த்தம் பகவதோ ப்ருஹஸ்பதே: புண்யகால ப்ரயோஜக சங்கரமண கர்த்து: தேவானாம் ச ருஷீணாம் ச குரும் காஞ்சன ஸந்நிபம் புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்  இதி ப்ரணுதஸ்ய பூஜாம் ததனு யதாசக்தி விஹிதானி தானானி அன்யானி ச தர்மகார்யாணி யதாஸம்பவம் கரிஷ்யே

புதன், 10 நவம்பர், 2021

ஏழுமலையான் பகுதி - நான்கு

ஏழுமலையான் பகுதி - நான்கு

பகவானின் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு. மஹா லட்சுமி எங்கிருக்கிறாள்? பெருமாளின் மார்பிலே இருக்கிறாள். தந்தையை மிதித்தது கூட மன்னிக்கத் தகுந்த குற்றம், இங்கே தாயார் மிதி பட்டிருக்கிறாள். அவளை மிதித்தது கொடிய பாவம். தாயை அவமதிப்பவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. இங்கோ அவளை மிதிக்கவே செய்திருக்கிறார் பிருகு. அவருக்கு கண் போய் விட்டது.

ஐயையோ! அப்படியானால் எல்லாருமே கோபக்கார தெய்வங்கள் தானே! கண்ணைப் பறித்துக் கொண்டாரே பெருமாள் என எண்ணி விடாதீர்கள். பெருமாள் முகத்திலுள்ள கண்ணைப் பறிக்கவில்லை. பிருகுவுக்கு கால்களில் கண்கள் உண்டு. அது ஞானக்கண். அதன் மூலம், எதிர்காலத்தில் பிறருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் கணித்துச் சொல்லி விடுவார். இதனால் எல்லார் ஜாதகமும் தன் கையில் என்ற மமதை தான் பிருகுவின் இந்த ஆர்ப்பாட்டங்களுக் கெல்லாம் காரணம். ஆனால் எல்லார் எதிர்காலத்தையும் தெரிந்து வைத்திருந்த அவர் தன்னைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் விட்டது தான் இப்போது இந்த அவலத்துக்கு காரணம்.

ஞானக்கண் இருப்பதால் தானே பிருகு ஆட்டம் போடுகிறான். பெற்ற தாய்க்கு சமமான, உலகத்துக்கே படியளக்கிற லட்சுமி தாயாரை எட்டி உதைத்தானே! இவனுக்கு எதற்கு ஞானக்கண்! மற்றவர்கள் சொன்னார்களே என்பதற்காக தெய்வங்களை இவன் சோதித்ததற்குப் பதிலாக அவர்களில் எல்லாரையும் இறைஞ்சி யார் முதலில் வருகிறாரோ அவருக்கு யாகபலனைக் கொடுப்போம் என்று முடிவெடுத்திருந்தால் இவன் ஞானி! பதிலுக்கு ஆணவத்தால் அறிவிழந்த இவனுக்கு இதுவே தக்க தண்டனை எனக்கருதி  பெருமாள் பிருகுவின் காலிலுள்ள கண்ணை அவர் அறியாமலேயே பறித்து விட்டார். ஆனால் ஏதும் அறியாதவர் போல் சயனத்தில் இருந்படியே முனிவரே! மன்னிக்க வேண்டும். தாங்கள் இங்கு வந்ததை நான் கவனிக்கவில்லை. ஐயோ! தங்கள் திருப்பாதங்கள் என்னை மிதித்த போது என் மீதுள்ள ஆபரணங்களால் தங்கள் கால்களில் காயம் ஏதும் ஏற்பட்டதா? அமருங்கள், அமருங்கள் எனது மஞ்சத்தில் அமரும் தகுதி தங்களுக்குண்டு. தாங்கள் வந்த விபரம் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஆவன செய்கிறேன் என்று ஆறுதல் மொழி சொன்னார்.

பிருகுவுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது. ஆஹா... இவரல்லவோ பொறுமையின் திலகம். இவரை எட்டி உதைத்து விட்டோமே! பதிலுக்கு இவரை யாகபலனை வாங்க வரும்படி யாசித்திருக்கலாமே! என நினைத்த போது கண்ணைப் பிடுங்கிய இடத்தில் வலிக்க ஆரம்பித்தது. அவர் அம்மா... அப்பா... எனக் கதறினார். அதே நேரம்  இறைவனை மிதித்ததற்காக தனக்கு இந்த தண்டனையும் தேவை தான் என்றபடியே லட்சுமி நரசிம்மரை துதிக்க ஆரம்பித்தார். மனிதனுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால் உடனே லட்சுமி நரசிம்மரை பிடித்துக் கொள்ள வேண்டும். அவரை நினைத்து லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே எனச் சொன்னால் கஷ்டம் பறந்தோடி விடும். தன் பக்தன் பிரகலாதானுக்கு ஒரு கஷ்டம் என்றவுடன் எங்கும் பரவிநின்ற அவர், அவன் குறிப்பிட்ட தூணில் இருந்து வெளிப்பட்டு பாதுகாத்தவர்.

அப்படிப்பட்ட கருணாமூர்த்தி தன் கண்ணெதிரில் சயனித்திருக்க  லட்சுமி நாராயணான அவரை லட்சுமி நரசிம்மராகக் கருதிய பிருகு  லட்சுமி நரசிம்மா! அறியாமல் செய்த தவறுக்கு என்னை மன்னிக்க வேண்டும் என்றார். மஹா விஷ்ணு அவரிடம் சமாதானமாக, கவலை வேண்டாம் முனிவரே! பக்தனின் பாதம் பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள், என்றார். பிருகுவும் யாகபலனை பெற பூலோகம் வரவேண்டும் என்று சொல்ல அவ்வாறே ஆகட்டும் என பெருமாள் அருள் பாலித்தார். பிருகு புறப்பட்டார். மஹா லட்சுமிக்கோ கடும் கோபம். இங்கே என்ன நடக்கிறது? இந்த முனிவர் என்னை எட்டி உதைக்கிறார்? நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்களே! [முனிவரின் கண்ணைப் பறித்தது லட்சுமிக்கு தெரியாது] இவரை இதற்குள் அழித்திருக்க வேண்டாமா? நம்பி வந்த மனைவியைக் காப்பாற்றுவது கணவனின் கடமை. இந்த தர்மத்தைக் கடைபிடிக்காத உங்களுடன் வாழ எனக்கு விருப்பமில்லை. நான் பூலோகம் செல்கிறேன். என்னை அங்கு வந்து பாருங்கள் என்று சொல்லி விட்டு சயனத்தில் இருந்து எழுந்து வேகமாக எழுந்தாள் லட்சுமி தாயார்.

பகவான் அவளைச் சமாதானம் செய்தார். லட்சுமி! பொறுமைக்கு இலக்கணமான பெண்களுக்கு கோபம் வரக்கூடாது. பிருகு யார்? நம் பக்தன்! பக்தர்கள் நமது குழந்தைகள். பல குழந்தைகளை பூமிக்கு அனுப்பினோம். சிலர் நம்மை வணங்குகிறார்கள், சிலர் தூஷிக்கிறார்கள். நம்மை தூஷிக்கிற குழந்தைகளுக்கு தான் நாம் ஏராளமான செல்வத்தைக் கொடுக்கிறோம் அவர்களையும் கருணையுடன் பார்க்கிறோம். காரணம் என்ன! அவன் தூஷணையை கை விட்டு நற்கதிக்கு திரும்ப வேண்டுமே என்பதற்காகத் தான்! பிருகு ஒரு சோதனைக்காகவே இங்கு வந்தான்.

அந்த சோதனையில் வெற்றி பெற நான் அவனுக்கு உதவினேன். நீயும் அவனை ஆசிர்வதிக்காமல் விட்டு விட்டாயே என்றார். லட்சுமி அவரிடம் தாங்கள் சொல்லும் சமாதானத்தை ஏற்க முடியாது. கணவனிடம் என்று பாதுகாப்பு கிடைக்கவில்லை என ஒரு பெண் உணர்கிறாளோ, அதன் பின் அவனை நம்பிப் பயனில்லை. நான் தங்களை விட்டுப் பிரிகிறேன். மேலும் நீர் சந்தர்ப்பவாதி எந்த விஷயமாக இருந்தாலும் சமாதானம் கூறி மாயம் செய்து தப்பித்து விடுவீர்! என்னை அவமதித்த பிருகுவைத் தண்டித்தே தீருவேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

பூலோகத்திலுள்ள ஒரு புண்ணியத்தலத்துக்கு வந்தாள். ஊரின் பெயரிலேயே பேரழகு.... ஆம்... அவ்வூரின் பெயரிலேயே ஜீவகாருண்யம் இருந்தது... அதுதான் கொல்லாபுரம்.

தொடரும்....


ஏழுமலையான் பகுதி - மூன்று

ஏழுமலையான் பகுதி - மூன்று

பிருகு முனிவர் சத்யலோகம் சென்ற போது அங்கே அன்னை சரஸ்வதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பிரம்மா. அனர்கள் வெள்ளை பொற்றாமரை சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர். அங்கே ஏராளமான மகரிஷிகள் அமர்ந்திருந்தனர். தேவரிஷிகள், பிரம்மரிஷிகளும் அவர்களில் அடக்கம். அனைவரும் வேதத்தின் பொருளை பிரம்மா மூலம் கேட்டுக் கொண்டிருந்தனர். பிருகு முனிவர் சோதிக்க வந்த வரல்லவா! பிரம்மாவுக்கு கோபமூட்டினாலும், தன்னை வரவேற்கிறாரா அல்லது எடுத்தெறிந்து பேசுகிறாரா என பரீட்சை வைக்கும் பொருட்டு, பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பிரதாயத்துக்காக வணக்கம் கூட தெரிவிக்காமல் அங்கிருந்த ஆசனத்தில் மிகவும் கர்வத்துடன் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டார்.

பிரம்மாவுக்கு கோபம் இந்த பிருகு வந்தான், ஒரு வணக்கம் கூட சொல்லவில்லை எனக்குத்தான் சொல்ல வேண்டும், இங்கே அவனை விட உயர்ந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற பிரம்மரிஷிகளெல்லாம் வீற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லியிருக்கலாம். இவனது வாய் பேசுவதற்கு காரணமான சரஸ்வதிக்கு சொல்லியிருக்கலாம். இவனை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்றெண்ணியவராய், முகத்தில் கடும் கோபத்தைத் தேக்கி, ஏ பிருகு! என் வம்சத்தில் பிறந்த நீ, பிறருக்கு மரியாதை செய்வது என்ற சாதாரண தர்மத்தைக் கூட பின் பற்றவில்லை. இப்படிப்பட்ட, உன்னால் மற்ற உயர்ந்த தர்மங்களை எப்படி காப்பாற்ற முடியும்? இங்கே இருக்கும் விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்றவர்களெல்லாம் நாராயணனையே வழி நடத்தியவர்கள். இதோ இருக்கிறாரே! அத்திரி! அவர் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய பெருமையை உடையவர். இதோ இருக்கிறாரே! ஜமதக்னி! அவருடைய மகனாக பெருமாளே அவதரித்தார். பரசுராமராக இருந்து இவரது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பெற்றவளையே வெட்டித்தள்ளினார். இதோ இங்கே பவ்யமாக அமர்ந் திருக்கிறாரே, கவுதமர்! அவரது மனைவியை இழிவுபடுத்திய காரணத்துக்காக இந்திரனுக்கே சாபமிட்டவர்... இப்படிப் பட்ட உயர்ந்தவர்கள் முன்னால் நீ கொசுவுக்கு சமமானவன். அப்படியிருந்தும் இந்த சபையை அவமதித்தாய் என்று சத்தமாகப் பேசினார். பிருகுவுக்கு வந்த வேலை முடிந்து விட்டது. ஆனாலும் அவர் பிரம்மனுக்கு ஒரு சாபத்தைக் கொடுத்தார். நான் முனிவனாயினும் மனிதன், நீயோ தெய்வம்.. அதிலும் படைப்பவன், உனக்கு பொறுமை இல்லை. நான் ஒரு தேர்வுக்காக இங்கு வந்தேன், அந்தத் தேர்வில் நீ தோற்றாய் வருகிறேன் என்று கிளம்பினார்.

அடுத்து அவர், சிவலோகத்தை அடைந்தார். அங்கே நந்தீஸ்வரர் வாசலில் நின்றார். சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் தனித்திருந்தார். வாசலில் பூதங்களும், துவார பாலர்களான காவலர்களும் பாதுகாத்து நின்றனர். நந்திதேவர் வாசலை மறித்துக் கொண்டிருந்தார். பிருகுவோ இவர்கள் யாரையும் மதிக்கவில்லை. அங்கே நடந்த தியான வைபவத்தை பார்வையிட்டபடியே அத்துமீறி புகுந்தார். நந்தியிடமோ, பிற காவலர்களிடமோ அனுமதி பெறவில்லை. சிவன் கோபத்தின் பிறப் பிடமல்லவா! தாங்கள் தனித்திருந்த போது உள்ளே நுழைந்த பிருகுவிடம் நீ பிரம்ம வம்சத்தில் பிறந்திருந்தும் தர்மங்களை அறியாமல் உள்ளே வந்து விட்டாய். தம்பதியர் தனித்திருக்கும் போது அங்கே செல்லக்கூடாது என்ற எளிய தர்மம் கூட புரியாத உனக்கு தபஸ்வி என்ற பட்டம் எதற்கு? இதோ! உன்னைக் கொன்று விடுகிறேன் என்றவராய் திரிசூலத்தை எடுத்தார். ஆனால்  அன்னை பார்வதி சிவனைத் தடுத்து விட்டார். நாம் தனித்திருக்கும் வேளையில் நம் பிள்ளை தெரியாமல் வந்து விட்டது. உலக உயிர்கள் அனைத்துமே நம் பிள்ளைகள் தானே! அதிலும் பிருகு தவத்தால் உயர்ந்தவன். எந்நேரமும் இறைநாமம் சொல்பவன். அவன் தெரியாமல் ஏதோ செய்து விட்டான் என்பதற்காக இப்படி சூலத்தை ஓங்குகிறீர்களே என்று பிருகுவுக்கு சாதகமாகப் பேசினாள். ஆனாலும் பிருகு இந்த சமாதானத்தைக் கண்டு கொள்ளவில்லை. அவர் வந்த வேலை முடிந்து விட்டது. கோபப்படுவது போல் நடித்து அங்கிருந்து வைகுண்டம் சென்றார்.

ஹரி ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்னை மஹாலட்சுமியின் கடாட்சத்தால் எங்கும் நவரத்தினங்களின் ஒளி வெள்ளம் பாய்ந்தது. அது ஒரு அருமையான நகரம். அந்த நகரத்தில் மாளிகைகளெல்லாம் தங்கத்தால் எழுப்பப் பட்டிருந்தன. வைகுண்டத்திலுள்ள ஒரு அரண்மனையில் மஹா விஷ்ணு துயிலில் இருந்தார். மஹாலட்சுமி அவரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தாள். பிருகு வந்தது மஹா விஷ்ணுவுக்கு தெரியும். ஆனாலும் அவன் மாயவன் ஆயிற்றே! எந்த பரீட்சை வைத்தாலும் தேறி விடுவானே! படிக்கிற குழந்தைகள் மஹா விஷ்ணுவை தினமும் வணங்க வேண்டும். அவர் கல்வியின் அதிபதியான ஹயக்ரீவராகத் திகழ்கிறார். ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மகே என்ற ஸ்லோகத்தை தினமும் சொன்ன பிறகு  கேசவா... கேசவா... கேசவா என ஏழு தடவைகள் தொடர்ச்சியாக சொன்ன பிறகு கல்விக்கூடத்துக்கு கிளம்பும் குழந்தைகள் மிகப்பெரிய தேர்ச்சி பெறுவார்கள். பெருமாள் கோயிலுக்குப் போனால் முதலில் தாயாரை வணங்க வேண்டும். அப்படி அல்லாமல் நேராகப் பெருமாளை போய் வணங்கினால் கோரிக்கை அவ்வளவு எளிதில் நிறைவேறாது. பிருகுவோ மஹாலட்சுமியைக் கண்டு கொள்ளவே இல்லை. அது மட்டுமல்ல! ஏ நாராயணா! பிரம்மலோகத் துக்கும், சிவலோகத்துக்கும் போய் அவமானப்பட்டு உன் லோகம் வந்தேன். நீயோ எழக்கூட இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். பக்தனின் கோரிக்கைகளை கவனிக்காமல் இப்படி உறங்கினால் உலகம் என்னாவது? எழுந்திரு  என கத்தினார். மஹா விஷ்ணு அது காதில் விழாதது போல் இருந்தார். எல்லாரும் பகவானின் திருவடி தன் மீது படாதா என நினைப்பார்கள். இங்கே பகவானோ பக்தனின் திருவடி தன் மீது படாதா என காத்திருந்தார். இதோ! அது பட்டுவிட்டது.

தொடரும்


செவ்வாய், 9 நவம்பர், 2021

ஏழுமலையான் பகுதி - இரண்டு

 ஏழுமலையான் பகுதி - இரண்டு
 



ஒருவன் பசியால் மயக்கமடைந்து விட்டால், உடனே என்ன செய்வோம்? ஒரு உருண்டை சோறை எடுத்து அவன் வாயில் ஊட்டினால், அது தொண்டைக்குள் இறங்குமா? அதனால், முதலில் சிறிது தண்ணீரை அவன் முகத்தில் தெளிக்கிறோம். அவன் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்க்கிறான். உடனே சிறிது நீரை அவனுக்குப் புகட்டுகிறோம். இப்போது, அவன் பெருமூச்சு விடுகிறான். அதாவது, நிற்க இருந்த மூச்சு தண்ணீரின் தூண்டுதலால் மீண்டும் துளிர்த்தது. நாரம் என்றால் தண்ணீர். இந்தச் சொல்லில் இருந்தே நாரதர் என்ற வார்த்தை பிறந்தது.

பாவம் செய்தவர்களின் ஆதிக்கத்தால், உலகம் தத்தளித்த போது உயிர் கொடுக்க வந்தவர் நாரதர். அவர் கங்கைக்கரையில் வசித்த முனிவர்களில் தலை சிறந்தவரான காஷ்யபரைச் சந்தித்தார். அப்போது, காஷ்யபரின் தலைமையில் மிகப் பெரும் யாகம் நடந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய தபஸ்விகள் எல்லாம் இணைந்து, உலகத்தின் நலன் கருதி இந்த யாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர். நாரதர் மிகுந்த ஆனந்தமடைந்தார். காஷ்யபரே! தங்கள் தலைமையில் நடக்கும் இந்த யாகத்தின் நோக்கம் புனிதமானது. ஆனால், எனக்கொரு சந்தேகம், என்று தன் கலாட்டாவை ஆரம்பித்தார்.

நாரதர் பேச ஆரம்பித்தாலே கலகம் தானே! மகரிஷியே! தாங்கள் யாகம் நடத்துகிறீர்கள் சரி... இந்த யாகத்தின் பலனை எந்த தெய்வத்துக்கு கொடுத்தால், உலகம் சேஷமமடையும் என நினைக்கிறீர்கள்! யாராவது தேவருக்கு இதை அர்ப்பணிக்கப் போகிறீர்களா? அல்லது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்களில் யாருக்கேனும் தரப் போகிறீர்களா? உங்கள் யாகத்தின் குறிக்கோள் உலக அமைதி. அதைத் தரவல்லவர் யாரோ அவருக்கு இந்த யாகத்தின் பலனை அளித்தால் தானே சரியாக இருக்கும், என்றார். இந்தக் கேள்வியால், காஷ்யபரே சற்று மிரண்டு விட்டார் என்றால், மற்ற மகரிஷிகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். முக்காலமும் அறிந்த முனிவரே! சர்வலோக சஞ்சாரியே! இந்தக் கேள்வியின் நாயகனான நீரே அதற்கும் பதிலும் சொல்லி விட்டால் நன்றாக இருக்கும், என்று அவர் தலையிலேயே பாரத்தைத் தூக்கி வைத்து விட்டார் காஷ்யப மகரிஷி.

நாரதருக்கு சிண்டு முடிய சரியான சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. முனிவர்களே! கர்வம், கோபம், சாந்தம் என்ற மூன்று குணங்களில் சாந்தமே உயர்ந்தது. எவரொருவர் எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல், உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறாரோ, அவர் எந்தச் செயலிலும் வெற்றி வாகை சூடுவார். அவ்வகையில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரில் யார் சாந்தகுணம் மிக்கவரோ அவருக்கே யாகத்தின் பலனைக் கொடுங்கள், என்றார். முனிவர்கள் சிக்கிக் கொண்டனர். அதெப்படி முனிவரே! மூன்று ரத்தினங்கள், முக்கனிகள்... இவை நம் கண் முன் தெரிந்தால் எதை வேண்டாமென்று ஒதுக்க முடியும். அனைவருமே சமவல்லமை உடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க, இதில் யார் சிறந்தவர் என்று சோதித்துப் பார்த்தால், அது நெருப்போடு விளையாண்ட கதையாக அல்லவா இருக்கும், என்றனர்.

ஆமாம்... இது கஷ்டமான காரியம் தான்! ஆனாலும், உங்கள் யாகம் வெற்றி பெற வேண்டுமே! அதற்கு இந்த பரீட்சையை செய்து தானே ஆக வேண்டும். அப்படி செய்தால் தானே ஏதாவது ஒரு தெய்வம் இந்த பூமிக்கு வரும். முந்தைய யுகங்களில் தெய்வங்கள் பல அவதாரங்கள் எடுத்து பூமிக்கு வந்தனர். தர்மத்தை நிலைநிறுத்தினர். கலியுகத்தில் இறைவன் அர்ச்சாவதாரம் (கடவுள் மனிதனாகப் பிறத்தல்) செய்ய வேண்டுமென்றால், அதற்கு தகுந்தவர் யார் என்பதைத் தெரியாமல் யாகம் செய்து என்ன பலன்? என்றார்.

நாரதரின் பேச்சு முனிவர்களைக் குழப்பினாலும், அவர் சொல்வதிலும் ஏதோ அர்த்தமிருப்பதாகப்பட்டது. உடனடியாக, அவர்கள் தங்களில் சிறந்த ஒரு முனிவரை இந்த சோதனைக்காக அனுப்புவது குறித்து விவாதித்தனர். ஒரு பெரிய மனிதரைப் பார்க்க போக வேண்டுமென்றால் அவரைச் சென்று சந்திப்பவர் சகல ஞானங் களிலும் விபரம் அறிந்தவராக இருக்க வேண்டும். அந்தப் பெரிய மனிதர் ஏதாவது தவறாகச் சொன்னால் கூட, அவரை எதிர்த்து வாதிடும் திறமையும் இருக்க வேண்டும். மனிதனின் வாழ்வியலுக்கே இப்படியென்றால், மூன்று கடவுள்களைச் சந்திக்கச் செல்பவர் மகாதிறமைசாலியாக இருக்க வேண்டுமே! அதற்குத் தகுந்தவர் பிருகு என்னும் மாபெரும் தபஸ்வி என முடிவு செய்யப்பட்டது.பிருகு முனிவர் ஆனந்தமடைந்தார். சில தபஸ்விகளுக்கே இத்தகைய யோகம் கிடைக்கும். தங்களைத் தரிசிக்க மகா தபஸ்விகளுக்கு இறைவன் அருளும் மாபெரும் பாக்கியம் அது. அதே நேரம், இந்த பிருகு முனிவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? மகா அகம்பாவி. யாரையும் மதிக்க மாட்டார். அவருடைய தவவலிமை உயர்ந்தது தான்! ஆனால், ஆணவம் இருக்குமிடத்தில் பக்திக்கு இடமில்லையே! அவருக்கு ஆணவம் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா?

எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண் இருக்கும். ஆனால், இவருக்கு காலில் ஒரு கண் இருந்தது. அது ஞானக்கண், பிறர் வாழ்வில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே உணர்த்தும் கண். இந்தக் கண்ணைப் பெற்றதால் அவருக்கு திமிர். எல்லார் வாழ்வும் தன் கையில் இருப்பது போன்ற ஒரு நினைப்பு.

நாரதருக்கு பிருகு மீது மிகுந்த அன்புண்டு. மகாதபஸ்வியான இவர், ஆணவத்தால் அழிந்து விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில், அவரது கர்வத்தை பங்கம் செய்யும் விதத்தில், பிருகு முனிவரே தெய்வலோகங்களுக்கு செல்லலாம் என ஒப்புக்கொண்டார். பின்னர், அங் கிருந்து விடை பெற்று, பிற லோகங்களுக்கு புறப்பட்டுச் சென்றார். பிருகு முனிவரும் தெய்வலோகங்களுக்கு ஆனந்தமாகப் புறப்பட்டார்.

தொடரும்

ஏழுமலையான் பகுதி ஒன்று


இன்று முதல் ஏழுமலையான் தொடர் ஆரம்பம்..‌.
 

ஏழுமலையான் பகுதி - ஒன்று
 

பாரதத்தில் நைமிசாரண்யம் என்ற காடு இருக்கிறது. நமது தேசத்தின் கிழக்குப்பகுதியில் கோல்கட்டாவுக்கும், டேராடூனுக்கும் இடையில் உள்ளது இந்தக் காடு. தற்காலத்தில் பெருமாளின் 108 திவ்யதேசங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த தேசங்களில் இதுவும் ஒன்று. இந்த காட்டையே பெருமாளாக கருதி வழிபடுகிறார்கள்.
 

திருமங்கையாழ்வார் இங்கே சென்றிருக்கிறார். இவ்வூர் பற்றி பாசுரம் பாடியுள்ளார். தற்போது இங்கே பெருமாளுக்கு கோயில் இருக்கிறது.இந்த வனத்துக்கு புராணங்களில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எவ்வித இடைஞ்சலும் இன்றி தவம் செய்ய சிறந்த இடம் எது என்று திருமாலிடம் முனிவர்கள் கேட்டனர். பெருமாள் தனது சக்கரத்தை உருட்டி விட்டு, இது எங்கே போய் நிற்கிறதோ அந்த இடமே சிறந்த இடம் என்றார். சக்கரத்துக்கு நேமி என்ற பெயர். ஆரண்யம் என்றால் காடு. அந்தச்சக்கரம் உருண்டு சென்று விழுந்த இடம் நேமிஆரண்யம் என்றானது. பின்னர் இதுவே நைமிசாரண்யம் ஆகி விட்டது.இந்தக் காட்டில் சூதர் என்ற முனிவர் வசித்தார். இவரே புராணங் களுக்கு மூலகர்த்தா. 

வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களையும் மற்ற முனிவர்களுக்கு உபதேசித்தவர் இவர். இதுதவிர, எல்லா தெய்வங்களின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார்.ஒருமுறை, நைமிசாரண்யத்து முனிவர்கள் சூதமுனிவரை அணுகி, சுவாமி! தாங்கள் எங்களுக்கு, வேங்கடம் என்னும் மலையில் குடிகொண்டுள்ள சீனிவாசனின் வரலாறை உரைக்க வேண்டும், என்றனர்.சூதருக்கு மிகுந்த மகிழ்ச்சி.சீனிவாசனின் கதையைக் கேட்டால் சகல பாவங்களும் நீங்கி விடும். நீங்கள் சரியானதொரு சந்தர்ப்பத்தை எனக்கும் தந்ததுடன், உங்களுக்கும் முக்தி கிடைக்கும். பக்தியுடனும், கவனமாகவும் யார் இதைக் கேட்கிறார் களோ, அவர்களுக்கு மறுபிறப்பில்லை. நீங்கள் முற்றும் துறந்த முனிவர்கள். உலகவாழ்வு பற்றிய கவலையில்லாதவர்கள். எனவே, உங்கள் கவனம் சிதற வாய்ப்பில்லை. இல்லறத்தில் இருப்பவர்களும் கூட, இந்தக் கதையைக் கவனமாக கேட்டால் போதும். அவர்களுக்கு செல்வவளம் சித்திக்கும், வாழ்வுக்குப் பின் ஆனந்தமயமான வைகுண்டத்துக்கும் செல்லும் பாக்கியம் பெறுவார்கள், என்று சொல்லி கதை சொல்ல ஆரம்பித்தார்.
 

இந்த உலகிற்கு சீனிவாசன் வருவதற்கு காரணமே நாரத முனிவர் தான். இவர் ஓரிடத்தில் இருக்கமாட்டார். நாரம் என்றால் தண்ணீர். ஆம்... பசியாலும், களைப்பாலும் மயக்கமடையும் ஒருவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் போதும். போகும் உயிர் திரும்பிவிடும். நாரதரும் அப்படியே. கலகங்கள் செய்தாவது உயிர்களுக்கு நன்மை தந்து விடுபவர். அதனால் தான் தண்ணீர் போல் உயிரூட்டுபவர் என்ற பெயரில் அவரது திருநாமம் அமைந்தது. தேவர்களின் நல்வாழ்வுக்காக, அசுரர்களிடையே கலகத்தை உருவாக்கி அல்லது அவர்களை இக்கட்டில் சிக்க வைக்கும் உபாயங்களை சமயோசிதமாகச் செய்யும் தைரியசாலியும் கூட. பிரம்மனின் புத்திரர் இவர்.
 

எந்நேரமும் நாராயண மந்திரத்தைச் சொல்பவர்.அவர் ஒருநாள் தன் தந்தையைக் காண பிரம்மலோகம் வந்தார். அப்போது, இந்திரனின் தலைமையில் தேவர்களும் தங்கள் குறைகளைச் சொல்ல அங்கு வந்திருந்தனர். ஆனால், சரஸ்வதியின் வீணாகானம் கேட்ட அவர்கள் மெய்மறந்து நின்றனர்.நாரதர் பிரம்மாவிடம், தந்தையே! திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்த பிறகு பூமியில் மீண்டும் பிறக்கவில்லை. இதனால் பாவிகள் உலகத்தில் அதிகரித்து விட்டனர். இதற்கு மூல காரணம் செல்வம் சேர்க்கும் ஆசை. செல்வ ஆசை மண்ணாசையையும், பெண்ணாசையையும் தூண்டுகிறது. உலக மக்களில் நல்லவர்களைக் காப்பாற்றவும், பாவிகளைச் சீர்திருத்தவும் மீண்டும் அவர் அவதாரம் எடுத்தால் தான் பூலோகம் பிழைக்கும். எனவே, திருமாலை இவ்வுலகில் பிறக்கச் செய்வதற்குரிய கோரிக்கையை தாங்கள் தான் அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
 

படைத்தவருக்கு, உயிர்களைப் பாதுகாப்பதிலும் பொறுப்பு இருக்கிறதல்லவா? என்றார். பிரம்மா நாரதரிடம், மகனே! நீ கலகக்காரன் என்பது ஊரறிந்த உண்மை. இன்று தந்தையிடமே கலகம் செய்ய வந்திருக்கிறாய் போலும்! நீ சகல லோகங்களிலும் சஞ்சரிப்பவன். சகல சக்திகளையும் தவத்தின் மூலம் பெற்றுள்ளாய். நீ நினைத்தாலே சகலமும் நடந்து முடிந்து விடும். நாராயணனின் திருப்பாற்கடல் முன்னால் நாங்கள் செல்ல முடியாது. ஜெய, விஜயர்கள் தடுத்து விடுவார்கள். பகவானின் அனுமதி பெற்று கரையில் நின்றே அவரைத் தரிசிக்க முடியும். நீ அப்படியா? அவரது திருவடி தரிசனத்தை கடலில் நின்றே காண்பவன் நீ.
மேலும், உன் வாயில் நாராயண நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சக்திமிக்க உன்னாலேயே அது முடியுமே! நீயே போய் நாராயணனைப் பார், என்றார்.
 

ஒருவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லும் முன்பு, பிறர் சொன்னதை வைத்து சொல்லக்கூடாது. அதில் முன்பின்னாக விஷயங்கள் இருக்கும். நேரில் போய் பார்த்து கேட்டறிந்தால் சரியான தகவல்களைப் பெறலாம். நாராயணனிடம் புகார் சொல்லும் முன்பு, பூலோகத்தின் நிலைமையை நேரில் கண்டறியவும், நாராயணன் அங்கு பிறப்பதற்கு ஏற்ற இடத்தையும், அவரைப் பிறக்கப்போவதை முன்கூட்டியே முனிவர்களுக்கு அறிவிக்கவும் நாரதர் பூலோகம் வந்து சேர்ந்தார்.எத்தனையோ லோகங்கள் இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டாலும், இந்த உலகத்தின் பெயரில் தான் பூ இருக்கிறது. பூ மணக்கும் தன்மையும், வாடும் தன்மையும் உடையது. மலர்ந்த பூவைக் காணும் போது, மனம் மகிழ்கிறது. இதுபோல், நல்லவர்கள் பலர் தங்கள் செயல்பாடுகளால் இவ்வுலகை மகிழச் செய்கிறார்கள். ஆனால், இதே உலகில் பிறந்த வேறுசிலரோ, தங்கள் செயல்பாடுகளால் உலகை வாடச் செய்கிறார்கள்.
 

கெட்டவர்கள் செய்யும் கைங் கர்யத்தால் உலகமே வாடத்தானே செய்கிறது! இதனால், இந்த உலகை பூலோகம் என்றார்கள்.இத்தகைய அருமை யான உலகத்தை வாழச்செய்ய வந்தார் நாரதர். மற்ற தேவர்கள் இங்கு வந்திருக்கலாமே. அவர்கள் பூமிக்கு வராமல் இவர் இங்கு வந்த காரணம் என்ன?
 

தொடரும்...