திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அருள் மிகு தக்கோலம் வாலீஸ்வரர் திருக்கோவில்

பெயர்கள் : மகா தேவனாய மும்மலை ஈஸ்வரன்
ஊர் : தக்கோலம்
வட்டம் : அரக்கோணம்
மாவட்டம் : வேலூர்
மூலவர் பெயர் : வாலீஸ்வரர்
அம்மன் பெயர் : சௌந்தரநாயகி

வரலாறு : தக்கன் என்ற அசுரன் ஓலமிட்டுச் சிவனை வழிபட்டதால் தக்கன் ஓலம் தக்கோலம் ஆயிற்று என்கிறது தலபுராணம். தக்கனை அழித்த வீரபத்திரர் கோயில் ஊருக்கு மேற்கில் உள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
தொல்லியல் சின்னங்கள் :
திருவாலங்காடு, பழையனூர் கற்கிடைதக்கோலம் ஊருக்குக் கிழக்கில் திருவாலீஸ்வரம் என்ற சிதைந்த கோவில் உள்ளது. தாங்கு தளத்திலிருந்து கொடுங்கை வரை கல்லாலும் விமானம் செங்கல்லாலும் கட்டப்பட்டது. தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. விமானம் தற்போது வட்டவடிவில் உள்ளது. ஒரு தளக் கற்றளியாக இக்கோவில் இருந்திருக்க வேண்டும். இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் தக்கோலப் போரில் இராசாதித்தனைக் கொன்ற வரலாறு பலரும் அறிந்ததாகும். இவ்வூரில் அவன் தந்தை முதலாம் இராசேந்திரன் ஒரு கோயிலைக் கட்டியிருக்கலாம். அக்கோயில் இதுவாயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. குலோத்துங்க சோழபுரம் என்று இவ்வூர் பிற்காலச் சோழர் கல்வெட்டில் காணப்படுகிறது.

காலம் ஆட்சியாளர் : கி.பி. 11-ஆம் நூற்றாண்டு முதலாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டு செப்பேடு உள்ளது. முதலாம் இராஜேந்திரனுடைய எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டே வாலீஸ்வரர் கோயிலின் தொன்மையான கல்வெட்டாகும். எனவே கி.பி. 1020க்கு முன் இக்கோயில் கட்டப்பட்டது என்பது தெரிகிறது. இறைவன் மஹா தேவனாய மும்மலை ஈஸ்வரன் எனவும் இவ்வூர் திருப்பா முதல் எனவும் கல்வெட்டில் வழங்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குச் சுவரில் விக்கிரமச் சோழனின் கல்வெட்டு உள்ளது. கருவறை வடக்கில் உள்ள கல்வெட்டு மூன்றாம் இராசேந்திரன் காலத்தியது ஆகும். உமாமகேசுவரர், தேவன், விநாயகர் போன்றோருக்கு செப்புப் படிமங்கள் எடுத்து வழிபாட்டுக்கு மன்னன் கொடை வழங்கிய விவரம் கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. இவ்வூர் குலோத்துங்க சோழபுரம் என்றும் இக்கல்வெட்டில் கூறப்படுகிறது.

சிற்பங்கள் : இக்கோவிலில் தற்போது நந்தி சிற்பமும், மூலவர் இலிங்கமும் தவிர வேறு எந்த சிற்பமும் காணப்படவில்லை.

கோவிலின் அமைப்பு : இக்கோவில் ஒரு தளமுடையதாக தற்போது விளங்குகிறது. கருவறை விமானத்தின் கூரைப்பகுதி வரை கல்ஹாரமாகவும் அதற்கு மேல் பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோயில் முழுவதும் கற்றளியாக சோழர்காலத்தில் கட்டப்பட்டது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். தக்கோலப் போரில் இறந்த தனது மைந்தன் இராசாதித்தன் நினைவாக அவன் தந்தை இராசேந்திரன் இக்கோயிலைக் கட்டியிருக்கலாம்.
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
  நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
  பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
  மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
  அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
 
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
  தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
  காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
  ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
  ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.
------------------------------------------