வியாழன், 24 ஏப்ரல், 2014

இப்படியும் தர்மம் செய்தாங்க!

உஞ்சவ்ருத்தி என்றால் பிச்சை ஏற்பது, அல்லது வீடு, வீடாகச் சென்று அரிசி போன்றதானியங்களை பெற்றுக் கொள்வது. தர்ம சாஸ்திரம் கூறும் உஞ்சவிருத்தி இதிலிருந்து வேறானது. அந்தக் காலத்தில் வயலில் நெல்லை அறுத்து, களத்து மேட்டில் குவிப்பார்கள். நெற்கதிரை அடித்து நெல்லை மலைபோல ஒன்று திரட்டி மூடையாக கட்டுவார்கள். எடுப்பதெல்லாம் கொடுப்பதற்கே என்னும்சிந்தனையோடு களத்தில் சிறிது அளவு நெல்லை விட்டுச் செல்வர். இதை தர்மம் செய்வதாகக்கருதினர். சோற்றுக்கு வழியில்லாத ஏழைகள் களத்தில் சிதறி கிடக்கும் நெல்லை எடுத்துச் செல்வர். உஞ்சவிருத்திஎன்பதற்கு சிதறிக் கிடப்பதை ஒன்று திரட்டுவது என்றும் பொருள் உண்டு.

ஸ்ரீயும் வேணும்! ஹ்ரீயும் வேணும்!!

பிறருக்கு தானம் அளிக்கும் போது மனசு ஸ்ரீயாக(லட்சுமிகரமாக) மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும். அப்போது ஹ்ரீயும் (வெட்கமும்) உண்டாக வேண்டும்என்கிறது தைத்திரீயோபநிஷத் என்னும் நூல். தானம் கொடுப்பவன் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பது சரி. ஏன் வெட்கப்பட வேண்டும் என்றுஎண்ணலாம். இந்த வெட்கம், கவுரவக் கூச்சத்தால் உண்டாவது.தன்னை நாடி வந்தவருக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்க முடியவில்லையே என்பது ஒருபுறம். தானம் செய்வது வெளியில் நாலுபேருக்குத் தெரிந்து பாராட்டத் தொடங்கினால், நான் என்ற எண்ணம் வந்து விடுமே என்பதுமறுபுறம். அதனால், தானம்கொடுக்கிறோம் என்று கருதாமல். நம்மை இவ்வாறு கொடுக்க வைத்த கடவுளுக்கு நன்றி என்றஉணர்வோடு தானம்அளிக்க வேண்டும்.
உ போட்டு ஏன் எழுதுகிறோம்?

பிரணவ மந்திரமான ஓம் என்பது அ, உ, ம என்னும் மூன்று எழுத்துக்களின் கூட்டாகும். அ என்பது படைத்தலையும், உ என்பது காத்தலையும், ம என்பது அழித்தலையும் குறிக்கும். இதனை அகார, உகார, மகார சேர்க்கை என்று குறிப்பிடுவர். இந்த மூன்றிற்கும் இதயமாக நடுவிலுள்ள உ என்பதே பிள்ளையார் சுழியாக உள்ளது. இதயமே மனிதனைக் காக்கிறது. இதயம் நின்று போனால் ஜீவன் போய் விடும். அதுபோல், தன்னை நம்பி வந்தவரை காப்பது தான் என் கடமை என விநாயகர் காத்தல் எழுத்தான உ வைத் தனக்குரியதாக கொண்டிருக்கிறார். அதனால் தான், எதை எழுத ஆரம்பித்தாலும், உ என்ற பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம். அம்பிகைக்குரிய தேவி பிரணவம் எனப்படும் உமா என்ற மந்திரத்திலும் உ என்பது முதல் எழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
குளிச்சா புண்ணியம் போச்சு!

காவிரி, கங்கை போன்ற நதிகள், ராமேஸ்வரம், சேதுக்கரை, திருச்செந்தூர் போன்ற கடல்களில் புனித நீராடிவிட்டு, மீண்டும், தங்கியிருக்கும் விடுதியிலோ (லாட்ஜ்), வீடுகளிலோ குளிக்கக்கூடாது. இவ்வாறு செய்தால், அந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம்கிடைக்காமல் போய்விடும். புனித நீராடல் மட்டுமில்லாமல், மந்திரச் சடங்குகளுக்கும் இது பொருந்தும். ஹோமம், யாகம் போன்றவற்றில் கலந்து கொண்டபின், வீட்டுக்கு வந்து குளித்தாலும் புண்ணியம் இல்லை.
பலிபீடத்தை தொடாதீர்!

கோயிலில் கோபுரவாசலுக்கும், கொடி மரத்திற்கும் இடையில் உள்ள மேடைக்கு பலிபீடம் என்று பெயர். நித்யபூஜையின் முடிவில், பலிபீடத்தில் கோயிலிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாகஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்கிறது ஆகமங்கள்.
அரசுத்தேர்வில் வெற்றி பெற எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?

தேர்வில் வெற்றி பெற, முதலில் அன்றாடம் நன்கு படித்து பயிற்சி பெறுங்கள். அறிவு வளம் பெற சரஸ்வதியை வழிபடுங்கள். பயிற்சியும்,வழிபாடும் மனோபலத்தை அளிக்கும். பிறகு வெற்றிக் கனியை எளிதில் பறித்து விடலாம். வெற்றி பெற வழிபாடு மட்டுமே போதும் என்றால் புத்தகம், பேனா இவையெல்லாம் தேவையில்லாமல் போய் விடுமே!
நோய் நொடி நீங்க எந்த ஹோமத்தை வீட்டில் நடத்தலாம்?

தன்வந்திரி ஹோமம் செய்ய வேண்டும். மூலிகைப்பொருட்களால் இந்த ஹோமத்தைச் செய்வது நல்லது. கூடவே, மிருத்யுஞ்ஜய ஹோமமும் செய்யலாம்.
வடை மலை எந்தெந்த கடவுளுக்கு உகந்தது?

ஆஞ்சநேயருக்கு மட்டுமே வடைமாலை சாத்தும் வழக்கம் இருந்தது. இப்போது பைரவர், துர்க்கை போன்ற தெய்வங்களுக்கும் வடைமாலை அணிவிக்கிறார்கள். ஆபரணம் அணிவிப்பது போல பழம், காய்கறி, பட்சணம் போன்றவற்றாலும் அலங்கரித்து வழிபடும் முறையில் இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.
மந்திரம் கால்... மதி முக்கால் என்பது உண்மையா?

முயற்சியே செய்யாமல் மந்திரத்தில் மாங்காய் விழும் என்று வீணே இருப்பவர்களை எப்படியாவது திருந்தச் செய்ய இந்த முதுமொழி ஏற்பட்டது. மதி என்றால் அறிவு. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து முயற்சிக்கும் போது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதே மந்திரம். அதாவது முயற்சியே செய்யாமல் மந்திரத்தை மட்டும் நம்பி சோம்பேறிகளாகும் பலருக்கு சொல்லப்பட்டதே இந்த முதுமொழி. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற திருக்குறளும் இங்கு சிந்திக்கத்தக்கது.
கோயிலில் நீராடச் செல்லும் போது வீட்டில் நீராடி விட்டுத் தான் போக வேண்டுமா?

குளிப்பது என்பது வேறு. புனித நீராடல் என்பது வேறு. சோப்பு முதலியவற்றைஉபயோகித்து அழுக்கைப் போக்கிக் கொள்ள புண்ணிய தீர்த்தங்கøளைப் பயன்படுத்தக் கூடாது. கோயில் குளத்தில் இறைவன் திருநாமத்தைஉச்சரித்தவாறு மூழ்கி எழ வேண்டும். இதற்கே புனித நீராடல் என்று பெயர். கோயில் குளத்தில் பல் துலக்குவது,குளிப்பது, துணி துவைப்பது போன்ற அன்றாடக் கடமைகளைச் செய்வது பாவமாகும். பலரும் புனித நீராட வேண்டிய தீர்த்தத்தை மாசுபடுத்தாமல் இருப்பது அவசியம். கோயிலில் நீராடும் முன் வீட்டில் குளித்து விட்டுச் செல்வது அவசியம்.
இன்று பறித்தாலும் என்றும் பூஜிக்கலாம்!

தெய்வங்களுக்கு பூஜை செய்வதற்குரிய மலர்கள், வீட்டுத் தோட்டத்தில் பூஜைநேரத்தில் பறித்ததாக இருப்பது ரொம்பவும் விசேஷம். இதற்காக பெரிய இடமெல்லாம் தேவையில்லை. வீட்டில் ஒரு தொட்டியை வைத்து, ஏதேனும் ஒரு மலர்ச்செடி வளர்த்தாலே போதும். இந்தப் பூக்களை பறித்த அன்றேசூட்டினால் முழு பலனும் கிடைக்கும். மறுநாள் சூட்டினால் சுமாரான பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். குளத்தில் பூக்கும் தாமரை, அல்லிப் பூக்கள் மற்றும் வில்வம், துளசி, விபூதிப் பச்சிலை, மருக்கொழுந்து, வெள்ளி, தங்கப் பூக்களுக்கு தோஷம் கிடையாது. அதாவது, இவற்றை எப்போது பறித்தாலும், குறிப்பிட்ட நாள் என்று இல்லாமல் எத்தனை நாள் கழித்து வேண்டுமானாலும் சூட்டலாம். அதே போல, கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகளின் தீர்த்தத்திற்கும் தோஷம் கிடையாது. இந்த தீர்த்தங்களை எப்போது வேண்டுமானாலும் பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
ழுகையை ஆப் பண்ணுங்க!

சந்தியா என்றால் சேர்க்கை அதாவது சந்திக்கும் நேரம் என்று பொருள். பகலும், இரவும் சந்திக்கும் மாலையிலும், இரவும், பகலும் சந்திக்கும் காலையிலும் வரும் இரண்டு நாழிகையை (48 நிமிடம்) சந்தியாகாலம் என்பர். சூரிய உதயம், மறைவுக்கு முன்வரும் 36 நிமிடமும், சூரிய உதயம், மறைவுக்குப் பின்வரும் 12நிமிடமும் இதில் அடங்கும். இந்த சமயத்தில் வாசல் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆண்கள் சந்தியாவந்தனம், பூஜையில் ஈடுபட வேண்டும். லட்சுமி வீட்டுக்கு வரும் இந்த நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஜெபிப்பது சிறப்பு. இந்த சமயத்தில் சாப்பிடுவதோ, தூங்குவதோ, வீண் பேச்சு பேசுவதோ கூடாது என்கிறது சாஸ்திரம். குறிப்பாக டிவியில் வரும் அழுகைத் தொடர்களைப் பார்க்காமல் ஆப் செய்து விட வேண்டும். இன்று முதலாவது சந்தியா நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துங்களேன்!
உனக்கு என்ன லாபம்!

பிரச்னோத்ர ரத்ன மாலிகா என்னும் நூலில் ஆதிசங்கரர்,சம்சாரம் என்னும் பிறவிச்சக்கரத்தில் சுழன்று கிடப்பதால் உனக்கு என்ன லாபம்? என்று கேட்கிறார். இந்த கேள்வியை எப்போதும், உனக்குள்ளேயே கேட்டுக் கொண்டே இரு. அதுவே பிறவிப் பயன், என்று அவரே பதிலும் அளிக்கிறார். அதாவது,நாம் பூமியில் பிறந்த நோக்கம் என்ன? நமக்கு ஏன் ஆசை, கோபம், பாவம் இவையெல்லாம் வருகிறது. எப்போதும் ஆனந்தமாக இருக்க முடியாதா? என்றெல்லாம் அடிக்கடி எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினால் கோப தாபம் மனதில் எழாது. மனம் பக்குவப்படும். புளித்துக் கிடந்த மாங்காய், கனிந்து பழமாவது போல், மோட்சம்கிடைத்து விடும்.
குணம் தருள்வாள் பணம் தருவாள்!

எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப் படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில் அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் பலச்ருதி என்னும் ஸ்லோகமாக இருக்கும். சவுந்தர்ய லஹரி ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா என்னும் ஸ்லோகத்தில் அம்பிகையை வணங்குவோருக்கு உண்டாகும் பலன் பட்டியலாக இடம் பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள், சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம் சேர்ந்தால் தீமையே உண்டாகும். அதனால், பராசக்தியான அம்பிகை, தன்னை வழிபடுவோருக்கு முதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வ வளத்தை அருள்கிறாள்.
அரைகுறை வீட்டில் கிரகப்பிரவேசம் கூடாது

குடியிருக்கும் வீட்டை க்ருஹ லட்சுமி என்று தெய்வத்திற்கு ஒப்பிடுவர். நல்லநாள் பார்த்து, வாஸ்துபூஜை நடத்தி, பூமி பூஜையோடு கட்டிடப்பணி தொடங்க வேண்டும். முழுவதும்கட்டிய பிறகு, நல்லநாளில் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும். புதுவீட்டில் எல்லா பணிகளும் முடிந்த பிறகு, குடிபுகுவதே உத்தமம் என்று சாஸ்திரம் சொல்கிறது. குறிப்பாக, வீட்டின் நிலை, பிரதான கதவு, மேல்கூரை அமைக்காமலும், வாஸ்துபலியிடாமலும், உறவினருக்கு உணவிடாமலும் கிரகப்பிரவேசம் செய்வது கூடாது. தற்காலத்தில் நவீன வேலைப்பாடுகள் அமைந்த புதுவீட்டில் ஹோமப்புகை பட்டால் பளபளப்பு குறைந்து விடும் என்ற எண்ணத்தில், அரைகுறையாக வேலை முடிந்திருக்கும் போதே ஹோமம் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வீடுகளில் புகுந்தால் சோதனைகள் வர வாய்ப்புண்டு. எனவே, கிரகப்பிரவேச விஷயத்தில் கவனமாய் இருங்கள்!
குணம் தருள்வாள் பணம் தருவாள்!

எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப் படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில் அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் பலச்ருதி என்னும் ஸ்லோகமாக இருக்கும். சவுந்தர்ய லஹரி ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா என்னும் ஸ்லோகத்தில் அம்பிகையை வணங்குவோருக்கு உண்டாகும் பலன் பட்டியலாக இடம் பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள், சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம் சேர்ந்தால் தீமையே உண்டாகும். அதனால், பராசக்தியான அம்பிகை, தன்னை வழிபடுவோருக்கு முதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வ வளத்தை அருள்கிறாள்.
சந்தேகம் தான் தீயை வைக்கும்!

எந்தப் பொருளைப் பார்த்தாலும், மெய்ப்பொருளான கடவுளையே பார்க்கப் பழகுங்கள். இதனால், நான் என்னும் சிறிய எண்ணம் அற்றுப் போய் விடும்.அன்பும் தெய்வமும் ஒன்றே. தெய்வமாகிய இறைநிலையை உணர்ந்தால், மனம், அன்பு நிலையில் மலரத் தொடங்கும். உலகில் நிகழும் ஒவ்வொன்றும் கடவுளின் செயலே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இயற்கை, நீதி, தர்மம் இவற்றுக்கு முரண்படாமல் வாழ முடியும்.கடமையை உணர்ந்துசெயலாற்றினால், சமுதாயத்தில் எல்லா மக்களின் உரிமையும், நலமும் காக்கப்படும்.கடமையில் சிறந்தவன் கடவுள் நாட்டமுடையவனாக இருப்பான். கடவுளை உணர்ந்தவன்கடமையில் ஈடுபாட்டுடன் இருப்பான்.உள்ளத்தில் கருணை,உடையில் ஒழுக்கம், நடையில் கண்ணியம் இவையேநல்லோரின் அடையாளங்கள்.ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். வாழ்வில் உயர்வு அடைவீர்கள்.கடவுளே எல்லாமுமாக இருக்கிறார். நமக்கும்கடவுளுக்கும் ஒரு சங்கிலிப்பிணைப்பு இருக்கிறது.

வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வில் துன்பமே அதிகமாகும். இன்பம்பெற வேண்டுமானால், உணவு, உறக்கம், உழைப்பு, எண்ணம் என ஒவ்வொன்றையும் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.இனிய மொழி பேசுபவர்கள், உலகையே வசப்படுத்துவதோடு, வெற்றிகரமான வாழ்வு நடத்தும் ஆற்றல் பெற்றிருப்பர்.பிறக்கும் போது யாரும் எதுவும் கொண்டு வந்ததில்லை. போகும் போதும் கொண்டு போவதும் இல்லை. இந்தசமுதாயமே நமக்கு வாழ்வு அளித்துக் கொண்டிருக்கிறது.அறிவாற்றல், உடல் ஆற்றல் இரண்டாலும் முடிந்த செயல்களை, சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டியது மனிதனின் கடமை.வாழ்க வளமுடன் என்று ஒருவருக்கொருவர் வாழ்த்தும் போது, பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப் படுகிறது.பிறருக்கு நன்மையைச் செய்வதும், பயன் பெற்றவர்கள் நிறைவோடு வாழ்த்துவதும் தான் உண்மையான புகழாகும்.உண்மையில் மனிதனுக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்றால், அது அவன் உள்ளத்தில்எழுகின்ற ஒழுங்கற்ற எண்ணங் களும் சந்தேகமும்தான். சந்தேகம் வாழ்வில் தீயை வைக்கும்.எண்ணத்தில் உறுதியும், ஒழுக்கமும், நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டால், எண்ணிய அனைத்தையும் எண்ணிய படியே பெற்று மகிழலாம்.

நம்பிக்கை வாழ்வில் தீபமேற்றும். மனதை அடக்க நினைத்தால் அலையும். அதையே அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும்.உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் நம்மனதில்தான் இருக்கிறது. தன்னை தானே சீர்படுத்திக் கொண்டு விட்டால், இந்த மண்ணிலுள்ள எல்லா இன்பமும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.வாழ்வில் வெற்றி பெற விரும்பினால், எதிர் வரும் பிரச்னையை நேருக்கு நேர் துணிவுடன் மோதும் அணுகுமுறை வேண்டும்.ஆசையை அடியோடு ஒழித்து விடுவது இயலாத காரியம். ஆசையை சீர்படுத்திக் கொண்டால் வாழ்வில் துன்பம் குறைந்து விடும்.எந்தச் சூழ்நிலையிலும்,ஒருவரை கோபம் அணுகாவிட்டால், அவரது மனம்பக்குவம் அடைந்து விட்டதாக கொள்ளலாம்.
பக்கத்திலே நான் இருக்கேன்!

கவுரவர் சபையில் திரவுபதி நிறுத்தப்பட்டாள்.துரியோதனன், தன் தம்பி துச்சாதனனை அழைத்து,இவளது ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்து என்று உத்தரவிட்டான். துச்சாதனனும் அவ்வாறே செய்ய முற்பட்டான்.கணவன்மாரோ, பீஷ்மர், துரோணர் போன்றமகானுபவர்களோ உதவி செய்ய முன்வராத நிலையில், அபலையாய் நின்று கதறினாள் பாஞ்சாலி. வேறு யாரும்கதியில்லை என்ற நிலையில், கிருஷ்ண பரமாத்மாவை அழைத்துக் கதறினாள்.கண்ணா! மதுசூதனா!திரிவிக்கிரமா! பத்மநாபா! கோவிந்தா! புண்டரீகாக்ஷõ, கிருஷ்ணா, கேசவா, சங்கர்ஷணா, வாசுதேவா,புரு÷ஷாத்தமா, அச்சுதா, வாமனா, தாமோதரா, ஸ்ரீதரா... என்றெல்லாம் அழைத்தாள்.அடுத்து, துவாரகா வாசா என்று கூப்பிட்டாள். கண்ணன் வந்தான். ஆடையை வளரச் செய்தான். அவளது மானம் காப்பாற்றப்பட்டது. பின்னொரு நாளில், இதுபற்றி திரவுபதி கண்ணனிடம் கேட்டாள். அண்ணா! நான் அன்று அப்படி கதறினேனே! நீ ஏன் வருவதற்கு தாமதித்தாய்? என்றாள். கண்ணன் சிரித்தான். திரவுபதி! எனது எல்லாநாமங்களையும்சொல்லிஅழைத்த நீ, துவாரகாவாசா என்றும்சொன்னாய்அல்லவா! நான்துவாரகையில்இருந்து வரவேண்டாமா! அதனால்தான் தாமதம் ஆகிவிட்டது. அதற்குப் பதிலாக இருதய வாசா என்று அழைத்திருந்தால், உன் இதயத்திலிருந்து உடனே வெளிப் பட்டிருப்பேன், என்றார். பார்த்தீர்களா! இறைவனை நம் நெஞ்சில் குடியமர்த்த வேண்டும். அப்படி அமர்த்தி விட்டால், எந்தக் கஷ்டம் வந்தாலும், அவன் உடனே வருவான்.
முழு மனதுடன் கொடுங்கள்!

பாரசீக மன்னர் ஒருவர் ஆண்டுதோறும் தன் நாட்டு வீரர்களுக்கு போட்டி ஒன்றை நடத்துவார். ஆனால், கஞ்சப்பிரபுவான அவருக்கு பரிசு கொடுக்க மனம் வராது. ஒருமுறை, நவரத்தினங்கள் பதித்த மோதிரம் ஒன்றை ஒரு கயிற்றில் கோர்த்து, அரண்மனை மேலுள்ள மினாரில் தொங்கவிட்டார். அந்த மோதிரம் யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவ்வாறு செய்தார்.மோதிரத்தை எடுக்க வேண்டும் என்பதே போட்டி! அதை எடுக்க பல வீரர்கள் வந்தனர். அதன்மீது அம்பை எய்தனர். ஊஹும்... யாருக்கும் மோதிரம் கிடைக்கவில்லை. அரசருக்கு சந்தோஷம். இன்னும் ஒரே ஒருநாள் தான் பாக்கி! அதற்குள் யாருக்குமோதிரம் கிடைத்து விடப்போகிறது! என்ற நினைப்பில் இருந்தார். அரண்மனையின் எதிரே ஒரு சிறுவன் விளையாட்டு வில் அம்பை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் விட்ட அம்பு நேராக மோதிரத்தை அறுத்துத் தள்ளியது. பிறகென்ன! சிறுவனுக்கே மோதிரத்தைபரிசாகக் கொடுக்க வேண்டியதாயிற்று! ஒன்றைக் கொடுக்க நினைப்பவர்கள், நிறைந்த மனதுடன்பிறருக்குக் கொடுக்க வேண்டும். கொடுப்பது போல் நடித்து தாங்களே வைத்துக் கொள்ள நினைத்தால், அந்தப் பொருள் ஏதோ ஒரு வழியில் போய்விடும்.
சிவ பெருமானின் தத்புருச முகத்தில் ஜெபம் செய்ய உகந்த மந்திரங்களும் பலாபலன்களும்!

1.ஒம் கிலியும் யநமசிவ என்று ஜெபம் செய்ய அரசர்கள் முதல்
உலக ஜீவராசிகள் அனைத்து; வசியமாகும்.

2.அங் சிவயநம என்று ஜெபம் செய்து வர புத்திர பாக்கியம் உண்டாகும்.

3.ஹரி ஓம் நமசிவய என்று ஜெபம் செய்து வர தேகத்தில் நோய் அணுகாது.

4.அம் கிலி சிவாயநம என்று ஜெபம் செய்து வர யோக சித்தி உண்டாகும்.

5.லங் சிவாயநம என்று ஜெபம் செய்து வர ஆயுள் விருத்தி உண்டாகும்.

6.இம் ஏ சிவாயநம என்று ஜெபம் செய்து வர பேய் பூதங்கள் ஓடும்.

7.ஓம் கிலியும் நமசிவய என்று ஜெபம் செய்து வர அரசர்கள் மனுக்கள்
ஆகியோர்கள் ஸ்தம்பனமாகும்.
ஸ்ரீ பாலாம்பிகே ஸமேத வைத்தியநாத ஸ்வாமிநே நம:

1. ஸ்ரீ ராம ஸெளமித்ரி, ஜடாயுவேத
ஷடாந நாதித்ய, குஜார்ச்சி தாய
ஸ்ரீ நீலகண்டாய, தாயமயாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய

2. கங்கா ப்ரவாஹேந்து, ஜடாதராய
த்ரிலோச நாய ஸ்மரகால ஹந்த்ரே,
ஸமஸ்த தேவைரபி பூஜிதாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய:

3. பக்தப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிதே, துஷ்ட ஹராய நித்யம்,
ப்ரத்க்ஷலீலாய, மனுஷ்ய லோகே
ஸ்ரீ வைத்ய நாதாய நம: சிவாய.

4. ப்ரபூதவரதாதி, ஸமஸ்த ரோக
ப்ரணாசகர்த்ரே, முநிவந்திதாய,
ப்ரபாகரேந்த்வக்நி, விலோசனாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

5. வாக். ச்ரோத்ர, நேத்ராங்க்ரி விஹீநஜந்தோ:
வாக் ச்ரோத்ர, நேத்ராங்க்ரி முகப்ரதாய
குஷ்டாதி, ஸர்வோன்னத ரோக ஹந்த்ரே,
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

6. வேதாந்த வேத்யாய ஜகன்மயாய
யோகீச்வரத்யேய பதாம்பு ஜாய,
த்ரிமூர்த்தி ரூபாய ஸஹஸ்ர நாம்நே
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

7. ஸ்வதீர்த்த, ம்ருத், பஸ்மப்ருதங்க பாஜாம்
பிசாச துக்கார்த்தி பயாபஹாய,
ஆத்ம ஸ்வரூபாய சரீர பாஜாம்
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

8. ஸ்ரீ நீலகண்டாய, வ்ருஷத்வஜாய,
ஸ்ரக், கந்த, பஸ்மாத்யபி சோபிதாய,
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய,
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

9. ஸ்வாமின், ஸர்வ ஜகந்நாத்,
ஸர்வரோக சிகித்ஸக
க்ஷúத்ரரோஜ பயார்த்தான்.
நஸ்த்ராஹி மஹாப்ரபோ.

10. அசிகித்ஸா சிகித்ஸாய
சாத்யந்த ரஹிதாயச,
ஸர்வலோகைக வந்த்யாய
வைத்ய நாதாய தே நம:

11. அப்ரமேயாய மஹதே
ஸுப்ரஸன்ன முகாய ச,
அபீஷ்ட தாயிநே நித்யம்
வைத்ய நாதாய தே நம:

12. ம்ருத்யஞ் ஜாயாய சர்வாய
ம்ருடாநீ வாமபாகி நே,
வேதவேத்யாய, ருத்ராய
வைத்யநாதாய தே நம:

13. ஸ்ரீ ராமபத்ர வந்த்யாய
ஜகதாம் ஹிதகாரிணே
ஸோமார்த்த தாரிணே துப்யம்,
வைத்யநாதாய தே நம:

14. நீலகண்டாய ஸெளமித்ரி
பூஜிதாய ம்ருடாய ச
சந்த்ர வஹ்ந்யர்க்க நேத்ராய
வைத்யநாதாய தே நம:

15. சிசிவாஹந வந்த்யாய
ஸ்ருஷ்டி, ஸநித்யந்தகாரிணே
மணிமந்த்ரௌஷ தேசாய,
வைத்யநாதாய தே நம:

16. க்ருத்ர ராஜாபி வந்ந்யாய
திவ்ய கங்காதராய ச,
ஜகந்மயாய ஸர்வாய
வைத்யநாதாய தே நம:

17. குஜ, வேத, விதீந்த்ராத்யை
பூஜிதாய, சிதாத்மநே,
ஆதித்ய, சந்த்ர வந்த்யாய.
வைத்யநாதாய தே நம:

18. வேதவேத்ய, க்ருபாதார
ஜகந்மூர்த்தே சுபப்ரத,
அநாதி வைத்ய, ஸர்வஜ்ஞ,
வைத்யநாதா நமோஸ்து தே.

19. கங்காதர, மஹாதேவ
சந்த்ர வஹ்ந்யர்க்க, லோசன
பிநாகபாணே, விச்வேச,
வைத்யநாத நமோஸ்து தே.

20. வ்ருஷவாஹந, தேவேச,
அசிகித்சா சிகித்ஸக
கருணாகர கௌரீச
வைத்யநாத நமோஸ்து தே.

21. விதி விஷ்ணு முகைர் தேவை:
அர்ச்யமான பதாம் புஜ.
அப்ரமேய ஹரேசாந
வைத்யநாத நமோஸ்து தே.

22. ராம லக்ஷ்மண ஸூர்யேந்து
ஜடாயு ச்ருதி பூஜித
மத நாந்தக ஸர்வேச,
வைத்ய நாத நமோஸ்து தே.

23. ப்ரபஞ்ச பிஷகீசாந
நீகண்ட மஹாச்வர
விச்வநாத மஹா தேவ
வைத்யநாத நமோஸ்து தே.

24. உமாபதே லோகநாத
மணி மந்த்ரௌஷ தேச்வர,
தீ நபந்தோ, தயாசிந்தோ
வைத்யநாத நமோஸ்து தே.

25. த்ரிகுணா தீத சித்ரூப
தபாத்ரய விமோசந,
விரூபாக்ஷ, ஜகந்நதா
வைத்யநாத நமோஸ்து தே.

26. பூதப்ரேத பிசாசாதே;
உச்சாடந விசக்ஷண
குஷ்டாதி ஸர்வ ரோகாணாம்
ஸ்ம்ஹர்த்ரே தே நமோ நம:

27. பாதயந்த பங்கு குப்ஜா தேர்
திவ்யரூப ப்ரதாயிநே,
அநேக மூக ஜந்தூநாம்
திவ்யவாக் தாயிநே நம:
கணேச நாமாவளிகள்

ஜெய கணேச ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய பாஹிமாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷமாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷமாம்

ஜெயஸரஸ்வதி ஜெயஸரஸ்வதி ஜெயஸரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீஸரஸ்வதி ஸ்ரீஸரஸ்வதி ரக்ஷமாம்

மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீதேவி ஸ்ரீதேவி ரக்ஷமாம்

ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷ்மி ஸ்ரீலெக்ஷ்மி ஸ்ரீலெக்ஷ்மி ரக்ஷமாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷமாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீசிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷமாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீஸ சபரிகிரீஸ சபரிகிரீஸ ரக்ஷமாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷமாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷமாம்

கௌரி நந்தானா கஜவதனா கணேச வரத மாம்பாஹி
அம்பிகைபாலா அன்பர்கள் சீலா தும்புருநாரதர் ஸேவித லோலா

பாரதமெழுதிய பரமசரித்ரா ஆரமுதருளிய ஐங்கர சித்ரா
லம்போதர கங்கா தரபுத்ரா அம்பாமுகபங் கேருகமித்ரா

அரஹர வரஹர வாதியனே அரனருள் விநாயக ஜோதியனே
கஜமுகத்தரசே கணபதியே கற்பகத்தருவே குணநிதியே

பிரணவப் பொருளே பெம்மானே பேசருமறை புகழ்எம்மானே
இபமாமுகனே இகமாவரதா சுபமாகவும் சுமுக அருள்வாய்

ஸ்ரீ ஜயசீல விநாயகனே தேவர் தொழும் தெய்வநாயகனே!
12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!
---------------------------------------------
மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !

ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்
---------------------------------------------
ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ
---------------------------------------------
மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
---------------------------------------------
கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:
---------------------------------------------
சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:
---------------------------------------------
கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:
---------------------------------------------
துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:
---------------------------------------------
விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்.
---------------------------------------------
தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:
---------------------------------------------
மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:
---------------------------------------------
கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:
---------------------------------------------
மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:
*******************************************************************
வைகாசி விசாகம்: விரதமுறையும் பலனும்!

வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
முருகனின் பிறந்த நாள்!

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்றுதான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான் என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப் படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.

விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.

பன்னிரு கரங்களின் பணி: முருகனின் பன்னிரு கரங்கள் செய்யும் பணிகள் என்னவென்று தெரியுமா? இரு கைகள் தேவரையும் முனிவரையும் காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் இருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அருள்பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை மணியை ஒலிக்கின்றது (அருளோசை). பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.
வைகாசி விசாக விரதமுறை!

வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

*பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும்.

* நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால்,பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

* முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.

* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.

* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.

* முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோயிலுக்கு குழுவாகச் செல்லலாம். ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.

* முருகன் கோயில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இமயமலை திருக்கோயில்கள்:- மானா கிராமம் (மகாபாரதம் எழுதப்பட்ட தலம்)

மானா என்னும் தலம் பத்ரிநாத் திருக்கோயிலில் இருந்து 2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்திய எல்லையின் கடைசி கிராமமாகவும் இத்தலம் அறியப்பட்டு வருகிறது.

பிரமன் வியாசரை மகாபாரதம் இயற்றுமாறு பணித்தார். இத்திருப்பணி இனிது நிறைவேற விநாயகப் பெருமானின் உதவியைக் கோருமாறும் வியாசருக்கு அறிவுறுத்தினார் நான்முகன். வேத வியாசர் முழுமுதற் கடவுளை நோக்கி தவம் புரியவும், கோடி சூர்ய பிரகாசமாய் ஆனைமுகக் கடவுள் தோன்றி அருளினார்.

வியாசர் விநாயகரைப் போற்றிப் பணிந்து, தாம் இயற்றும் மகாபாரத இதிகாசத்தை எழுதித் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். விநாயகப் பெருமான் 'தான் எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுத்து வியாசர் பாடல்களை பாட வேண்டும்' என்னும் நிபந்தனையோடு இசைந்து அருளினார்.

நடுநடுவே சிறிது அவகாசம் பெறும் பொருட்டு 'பாடல்களின் பொருளை உணர்ந்த பின்னரே எழுதி அருள வேண்டும்' என்று கணபதியிடம் வேண்டினார் வியாசர். பெருமானும் புன்சிரிப்புடன் உடன் பட்டு அருளினார். ஒவ்வொரு 5000 பாடல்களின் முடிவிலும் இரு அர்த்தம் தோன்றுமாறு ஒரு பாடலை பாடுவார் வியாசர்.

கருணைக் கடலான ஆனைமுக இறைவனும் வியாசருக்கு சிறிது அவகாசம் தந்தருளும் பொருட்டு சில நொடிகள் சிந்திப்பதைப் போல் பாவனை புரிந்துப் பின் எழுதி அருளுவார். அந்த சில கணங்களில் வியாசர் அடுத்த 5000 பாடல்களை மனதில் முறைப் படுத்திக் கொள்வார்.

இப்படியாக கணேசப் பெருமான் எழுதி அருளியது 60 லட்சம் பாடல்கள். அவற்றுள் பூவுலகில் தங்கியது 1 லட்சம் பாடல்களே. 'மானா' தலத்தில் வேத வியாசர் தங்கி இருந்த குகையையும், ஐந்தாம் வேதமாக போற்றப் படும் மகாபாரத இதிகாசத்தை விநாயகப் பெருமான் எழுதி அருளிய குகையையும் தரிசித்து மகிழலாம்.


 
 
 
முருகப் பெருமானுக்கு காவடி வழிபாடு தோன்றிய சுவையான வரலாறு

குமர வேளுக்கும், சூரனுக்கும் நடந்த பெரும் யுத்தத்தில் தப்பிப் பிழைத்த மிகச் சில அசுரர்களில் இடும்பனும் ஒருவர். யுத்தத்துக்குப் பின், தவறு உணர்ந்து நல்வழி செல்ல விரும்பிய இடும்பனை, அகத்திய முனிவர் சீடனாக ஏற்றார். சிவகிரி - சக்திகிரி என்னும் இரு மலைகளை, தென் பகுதியில் அமைந்துள்ள தனது இடத்திற்கு எடுத்து வருமாறு இடும்பனை பணித்தார் கும்ப முனியான அகத்தியர்.

காவடி போன்ற அமைப்பில், இருபுறமும் இரு மலைகளை வைத்து சுமந்த படி, ஆகாய மார்கமாக பயணித்தார் இடும்பன். செல்லும் வழியில் சிறிது ஓய்வு பெரும் பொருட்டு, 'பழனி' அருகில் காவடியை நிலத்தில் வைத்தார். ஓய்விற்குப் பின், பெரிதும் முயன்றும் இடும்பனால் காவடியை அசைக்க முடியவில்லை. அச்சமயம் மலை மேல் ஒரு பாலகன் நின்றிருப்பது இடும்பனின் கண்களுக்கு புலப்பட்டது.

கோபமுற்ற இடும்பன் மலையை விட்டு வெளியேறும் படி பாலகனிடம் கூற, பாலகனோ தன் நிலையில் இருந்து சிறிதும் அசையவில்லை. படைத்தல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் - அருளல் என்று ஐந்து தொழில்களையும் ஒருங்கே புரியும் பரம்பொருளே குமாரக் கடவுளாக, பால உருவம் தரித்து நிற்பதை இடும்பன் உணரவில்லை.

பழனி ஆண்டவனுடன் போரிட முனைந்த இடும்பனை பெருமான் சம்ஹரித்து அருளினார். பெருமான் இடும்பனையா அழித்தார் ? - கோடிப் பிறவிகளில் தொடர்ந்து வரும் இடும்பனின் சஞ்சித வினையை அன்றோ அழித்தார்!! பின்னர் பழனி இறைவனின் அருளால் மீண்டு எழுந்த இடும்பன், பெருமானின் திருவடிகளை கண்ணீருடன் தொழுது மன்னிப்பு வேண்டினார்.

பழனியில் காவல் பணி புரிதலையும், காவடி சுமந்து பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுதலையும் - இரு வரங்களாக வேண்டி நின்றார் இடும்பன். கருணைக் கடலான பழனி இறைவனும் இடும்பனுக்கு அருள் புரிந்து, சிவ ஜோதியாய் பழனியில் வீற்றிருந்தார்.

பின்னாளில் 'போகர்' நவ பாஷாணத்தால் பழனி இறைவனின் திரு உருவத்தை செய்வித்து, அதில் பால தண்டாயுதபாணிப் பெருமானை எழுந்தருளச் செய்தார். பழனியில் தொடங்கிய காவடி வழிபாடு, இன்று கந்தவேளின் ஆலயங்கள் யாவற்றிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. மலை அடிவாரத்தில் இடும்பனின் ஆலயத்தை தரிசித்துப் பின் பழனி ஆண்டவனை தரிசிப்பது முழுப் பலனையும் நல்கும்.

திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புதம் (ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு)

முருகப் பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். 1648 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் (Dutch) படையினர் திருச்செந்தூர் திருக்கோயிலைக் கைப்பற்றினர். அப்பகுதியை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் சிறந்த முருக பக்தர். பெரும் படையுடன் சென்று டச்சுப் படைகளை எதிர்க்க முனைந்தார். எனினும் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.

திருக்கோயில் நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், ஷண்முகர் - நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் (தங்க விக்கிரகங்கள் எனக் கருதி) எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும், செல்லும் வழியிலேயே உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் மிகவும் கலங்கி, ஏக மனதாக முடிவெடுத்து, தாங்கள் கைப்பற்றிய உற்சவ மூர்த்திகளை கடலில் சேர்ப்பித்து விட்டனர்.

அந்த கணமே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது கண்டு டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இந்த வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின், உற்சவ மூர்த்திகளை மீண்டும் செய்விக்கும் பணி தொடங்கப் பெற்றது.

அதே சமயம், வடமலையப்பர் என்னும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றி, உற்சவ மூர்த்திகள் கடலில் எழுந்தருளி இருக்கும் இடத்தை காண்பித்து, அடையாளமாக கருடப் பறவையும் தோன்றும் என்று அறிவித்து அருளினார். திருவருள் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர், கடலில் மூர்த்திகளை தேடும் பணியைத் துவங்கினார்.

குறிப்பிட்ட இடத்தில், கருடப் பறவையும் வானில் தோன்ற, கடலுக்கு அடியில் நீந்திச் சென்று உற்சவ மூர்த்திகளை வெளிக் கொணர்ந்தனர். திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு சுபயோக தினத்தில் மீண்டும் ஷண்முகப் பெருமானை பிரதிஷ்டை செய்தனர். திருச்செந்தூர் வாழ் மக்களும், தங்கள் வாழ்வோடும், ஆன்மாவோடும் கலந்து விட்ட ஷண்முகக் கடவுளை போற்றித் துதித்தனர்.

காஞ்சீபுரம்:- நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை தரிசனம் தந்தருளும் அத்தி வரதர்

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் காஞ்சியில் அமைந்து உள்ள வரதராஜப் பெருமான் ஆலயமும் இடம் பெறுகிறது. இத்தலத்தில் ஆதியில் எழுந்தருளி இருந்த மூலமூர்த்தியின் திருநாமம் அத்தி வரதர். பிரமனின் யாகத்தில் இருந்து வெளிப்பட்ட மூர்த்தியான இப்பெருமானின் திருமேனி அத்தி மரத்தால் அமையப் பெற்ற சிறப்புப் பொருந்தியது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அந்நியப் படையெடுப்பில் மூல மூர்த்தி சிறிது பிண்ணம் அடையும் நிலை ஏற்பட்டது. 'அனந்த சரஸ்' என்று அழைக்கப் படும் திருக்கோயில் தீர்த்தத்தின் நீருக்கு அடியில் ஒரு மண்டபம் அமைத்து அதில் மூலவரான அத்தி வரதப் பெருமானை எழுந்தருளச் செய்தனர்.

பின்பு 'பழைய சீவரம்' என்னும் இடத்தில் இருந்து மற்றொரு மூல மூர்த்தியை அமைத்து, பெருமானை ஆகம விதிப்படி அம்மூர்த்தியில் ஆவாகனம் செய்வித்து திருக்கோயிலில் எழுந்தருளச் செய்தனர். இப்பெருமானே தற்பொழுது நாம் தரிசித்து மகிழும் வரதராஜப் பெருமான் ஆவார்.

திருக்குள நீருக்கு அடியில் அமைந்துள்ள மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ஆதி மூர்த்தி அத்தி வரதர், நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்பட்டு திருக்கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் எழுந்தருளுவார். பத்து நாட்கள் பெரு மகிழ்வுடன் அனைவருக்கும் திவ்ய தரிசனம் அளித்துப் பின் மீண்டும் தீர்த்த மண்டபம் புகுந்து அருளுவார்.

கடந்த முறை அத்தி வரதப் பெருமான் தரிசனம் அளித்தது 1979 ஆம் ஆண்டில். அடுத்த முறை தரிசனம் தர இருப்பது 2019 ஆம் ஆண்டில். ஆழ்வார்களும், ஆச்சாரியர்களும் பாடிப் பரவிய அத்தி வரதரை கட்டாயம் தரிசித்துப் பிறவிப் பயன் பெறுவோம்.

வள்ளி மலை (ஸ்ரீவள்ளியின் அவதாரத் தலம்)

1. வள்ளி மலை வேலூர் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
2. வேடர் தலைவனான நம்பிராஜன் ஸ்ரீ வள்ளியை குழந்தையாகக் கண்டெடுத்து வளர்த்த தலம்.
3. முருகக் கடவுள் வேடனாக வந்து ஸ்ரீவள்ளியிடம் தன் காதலை தெரிவித்த தலம்.
4. (பின்னர்) முருகப் பெருமான் வயோதிக வேடத்தில் தோன்றி ஸ்ரீவள்ளியிடம் தேனும், தினை மாவும் பெற்றுப் பின் தன்னை மணம் புரியுமாறு கேட்டு திருவிளையாடல் புரிந்து அருளிய தலம்.
5. ஸ்ரீவிநாயகர் யானை உருவில் வந்து ஸ்ரீ வள்ளியை பயம் கொள்ளச் செய்து, தன் சகோதரனின் காதலுக்கு உதவி அருளிய தலம்.
6. குமரக் கடவுள் ஸ்ரீவள்ளியை மணம் புரிந்து அருளிய தலம்.
7. தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எண்ணற்ற திருப்பணிகள் செய்விக்கப் பட்ட தலம்.

தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள்:
1. மலை அடிவாரத்தில் உள்ள திருக்கோயில். புனிதத் தன்மை வாய்ந்த சரவணப் பொய்கை தீர்த்தம்.
2. மலை உச்சியில் உள்ள குடவரைக் கோயில்: அடிவாரத்தில் இருந்து 444 படிகளைக் கடந்து இக்கோயிலை அடையலாம்.
3. குமரி தீர்த்தம்: ஸ்ரீவள்ளி வயோதிக வேடத்தில் வந்த தமிழ்க் கடவுளுக்கு அருந்த நீர் கொடுத்து அருளிய இடம் (மலைக் கோயில்).
4. கணேச கிரி: ஸ்ரீவிநாயகர் வடிவில் அமைந்துள்ள பாறை (மலைக் கோயில்). இப்பெருமானே ஸ்ரீவள்ளி நாயகியின் கரம் பற்ற குகக் கடவுளுக்கு உதவி புரிந்து அருளியவர்.
5. திருமால் கிரீஸ்வரர்: சிவபெருமான் பரந்தாமனின் திருநாமம் தாங்கி சிவலிங்க வடிவில் வீற்றிருக்கிறார் (மலைக் கோயில்).
6. வள்ளி மலை சுவாமிகளின் ஜீவ சமாதிக் குகை (மலைக் கோயில்).

பக்குவம் அடைந்த ஜீவாத்மாவை பரமாத்மா தேடி வந்து ஆட்கொள்ளும் அருட்செயலே ஸ்ரீவள்ளி திருமணம் உணர்த்தும் உட்குறிப்பு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத புனிதத் தன்மை பொருந்திய தலம் வள்ளி மலை. கட்டாயம் தரிசித்துப் பயன் பெறுவோம்.
 
 
 
 
 
 
 
 
 
 

திருவண்ணாமலையில் அற்புதம் - அனைவருக்கும் கிடைத்த மயில் வாகனின் பேரின்ப தரிசனம்

அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர். முருக வழிபாட்டு சமயத்திற்கு தனிப்பெரும் குருநாதர். இவரின் காலத்தில் வாழ்ந்த சம்பந்‌தாண்டான் என்னும் காளி உபாசகன் அருணகிரிநாதரின் புகழ் மீது மிகுந்த பொறாமை கொண்டு இருந்தான். ஒரு முறை இவன் அரசனான பிரபுடதேவராயனை ஏவி, அருணகிரிப் பெருமானை அரசவைக்கு அழைத்து வரச் செய்தான்.

மன்னன் அருணகிரிநாதர் மீது பெருமதிப்புக் கொண்டவன். இருப்பினும் சம்பந்‌தாண்டானுக்கு அஞ்சி இதற்கு உடன்பட்டான். அவைக்கு வந்த அருணகிரிநாதரைப் பார்த்து 'உம் மார்கம் உண்மை எனில் முருகக் கடவுளை வரவழைத்துக் காட்டும்' என்று சம்பந்‌தாண்டான் சூளுரைத்தான். அன்பே உருவான அருணகிரியாரும் சம்மதித்து அருளினார்.

சம்பந்‌தாண்டான் இரவு முழுவதும் காளி பூஜை செய்து, தன் 12 ஆண்டு வழிபாட்டின் எஞ்சிய பலனாக 'முருகக் கடவுளை காலையில் தோன்ற விடாமல் செய்தருள வேண்டும்' என்று காளியிடம் வஞ்சகமாக பிரார்த்தித்தான். காளி தேவியும் 'உன் வழிபாட்டின் பலன் இத்துடன் நிறைவுற்றது. யாம் குமரவேளை தடுத்து அருள்வோம். இருப்பினும் உன் எண்ணம் ஈடேறாது' எனக் கூறி மறைந்தருளினாள்.

மறு நாள் காலையில் திருவண்ணாமலை திருக்கோயிலில் அமைந்துள்ள முருகக் கடவுளின் சந்நிதி முன்பு அனைவரும் கூடினர். அருணகிரியார் திருப்புகழ் பாடல்களால் குமரவேளை துதித்துப் பாடியும், பெருமான் தரிசனம் அளித்தருளவில்லை. ஞானக் கண் கொண்டு தரிசித்த அருணகிரியார், காளி தேவியின் பிடியில் குமரவேள் கட்டுண்டு இருப்பதைக் கண்ணுற்றார்.

பின்னர் அருணகிரியார் பெருமானின் வாகனமான மயிலை நினைந்து 'மயில் விருத்தம்' பாடி அருள, அப்பாக்களால் மெய் மறந்த காளி தேவியின் பிடி தளர்ந்தது. அக்கணமே திருக்கோயில் தூண் பிளந்து, கோடி சூர்ய பிரகாசமாய் குழந்தைக் கடவுள் மயில் மீது காட்சி அளித்து அருளினார். 'என்னே ஆச்சரியம்; என்னே வியப்பு; குமரவேளின் கருணைக்கு எல்லை என்பதும் உளதோ? !!!

கற்ப கோடி காலம் தவம் இருந்தாலும் புலப்படாத பரம்பொருளை - சிவ ஜோதியான ஆறுமுகக் கடவுளை கண் முன் நிறுத்தியது தமிழ்ப் பாக்கள் அன்றோ!!! என்னே அருணகிரிநாதரின் மாண்பு!! 'நல்லார் ஒருவர் உளரேல் - அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்றாள் அவ்வை. அருணகிரியாரால் ஆயிரக் கணக்கானோர் முருக தரிசனம் பெற்று உய்ந்தனர்!!!!!
ஸ்ரீவள்ளி - தெய்வயானை அவதாரம்: பாற்கடல் வாசனுக்கும் முருகப் பெருமானுக்கும் உள்ள உறவு (கந்த புராணம் விளக்கும் சுவையான நிகழ்வுகள்)

பாற்கடலில் உறையும் ஸ்ரீமன் நாராயணரின் திருக்கண்களில் வெளிப்பட்ட ஆனந்தக் கண்ணீரில் இருந்து அமிர்தவல்லி - சுந்தரவல்லி என்ற இரு கன்னிகைகள் தோன்றினர். பரந்தாமனின் ஆசி பெற்ற இருவரும், முருகப் பெருமானை மணம் புரிய விருப்பம் கொண்டு, இமயமலைச் சாரலில் பனிரெண்டு ஆண்டுகள் கடும் தவம் புரிந்தனர்.

கன்னியர் இருவரின் தவத்திற்கு உகந்த ஷண்முகப் பெருமான் தரிசனம் அளித்து அருளினார். அருள் சக்திகளான தேவியர் உடனிருப்பது சம்ஹாரத்திற்கு தடையென உணர்த்தி, சூர சம்ஹாரத்துக்குப் பின்னர் இருவரையும் மணம் புரிந்து அருள்வதாக வாக்களித்தார்.

மேலும் சம்ஹாரக் காலம் வரையில் அமிர்தவல்லி இந்திரனின் வளர்ப்பு மகளாகவும், சுந்தரவல்லி வள்ளி மலையிலும் வளர்ந்து வருமாறும் ஆணையிட்டு அருளினார். அதன் படி, குழந்தை வடிவம் தாங்கிய அமிர்தவல்லியை இந்திரனின் வாகனமான ஐராவதம் வளர்த்து வந்தது. ஆதலால் அக்குழந்தை 'தெய்வ யானை' என்ற திருப்பெயரால் அழைக்கப் பெற்றது.

இது ஒரு புறம் இருக்க, வள்ளி மலையில் மற்றொரு தெய்வ நாடகம் அரங்கேறியது. சிவமுனி என்னும் முனி வேடம் தாங்கி ஸ்ரீமகாவிஷ்ணு தவநிலையில் இருந்து வந்தார். அத்தருணம் ஸ்ரீமகாலக்ஷ்மி பெண் மான் வடிவம் தாங்கி முனிவரை கடந்து செல்ல, பரந்தாமனின் திருப்பார்வை கடாட்சத்தால் அம்மான் ஒரு பெண் மகவை அக்கணமே ஈன்று அருளிப் பின் மறைந்தது.

வேடர் தலைவர் நம்பிராஜன், வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் கண்டெடுத்த தெய்வக் குழந்தைக்கு 'வள்ளி' என்னும் திருநாமம் சூட்டி இனிது வளர்த்து வந்தான். செந்தில் வேலவன் சூர சம்ஹார நிகழ்வுக்குப் பின்னர், தெய்வயானைத் தாயாரை திருப்பரங்குன்றத்திலும், ஸ்ரீவள்ளி அம்மையாரை வள்ளி மலையிலும் மணம் புரிந்து அருளினார்.

ஸ்ரீவள்ளி அம்மையும், தெய்வயானைத் தாயாரும் இச்சா சக்தி - கிரியா சக்தியின் திருவடிவங்கள். இவர்களோடு ஆறுமுகப் பெருமான் ஞான சக்தியாய் வீற்றிருப்பார். இந்நிகழ்வுகளால் குமரவேள் 'மால் - மருகன் (திருமாலின் மருமகன்)' என்னும் திருநாமம் பெற்றார்.
சென்னி மலை (சஷ்டிக் கவசம் அரங்கேறிய தலம்)

சென்னி மலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புப் பொருந்திய திருத்தலம். இத்தலம் 'சிரகிரி' என்னும் பெயராலும் அறியப் படுகிறது (சென்னி என்பது 'சிரம்' எனவும், மலை என்பது 'கிரி' எனவும் பொருள்படும்). 'சஷ்டிக் கவசம்' என்னும் சக்தி வாய்ந்த பாராயணப் பாடலை 'பாலன் தேவராய சுவாமிகள்' இத்தலத்திலேயே அரங்கேற்றம் செய்து அருளினார்.

மூலவர் 'சிரகிரி வேலவர்' என்னும் திருநாமம் தாங்கி எழுந்தருளி உள்ளார். சஷ்டிக் கவசத்தில் 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற பாடல் வரியில் தேவராய சுவாமிகள் குறிப்பது இத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானையே. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல இறைவனை போற்றிப் பாடி மகிழந்துள்ளார்.

இம்மலைக் கோயில் 1320 படிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் 'சிரகிரி வேலவர்' பால உருவத்திலும், ஸ்ரீவள்ளி அம்மை - தெய்வயானைத் தாயார் இருவரும் தவக்கோலத்திலும் எழுந்தருளி உள்ளனர். மூலவர் இத்தலத்தில் எழுந்தருளிய நிகழ்வு அற்புதம் நிறைந்தது.

ஆதியில், நிலத்தின் அடியில் இருந்து இப்பெருமான் தன்னை வெளிப்படுத்தி அருளினார். மூல மூர்த்தியின் திருவடிவத்தில், இடைப் பகுதியில் இருந்து திருவடிகள் வரை வேலைப் பாடுகள் இன்றி இருந்தது. உளி கொண்டு செதுக்க முயன்ற பொழுது குருதி பீறிட்டுக் கிளம்பியது.

அதனால், கிடைக்கப் பெற்ற அதே திருவடிவுடன் 'சிரகிரி வேலவரை' திருக்கோயிலில் எழுந்தருளச் செய்தனர். மூலவர் திருவுடலில் இடைப் பகுதியில் இருந்து கவசம் அணியப் பெற்றுள்ளதை இன்றும் கண்டு மகிழலாம். எண்ணற்ற அற்புதங்களை தன்னுள் கொண்டு அமைந்துள்ள சென்னிமலை தலத்தை கட்டாயம் தரிசித்துப் பயன் பெறுவோம்.

நினைவில் கொள்ள வேண்டிய ஆறுமுகக் கடவுளின் சில முக்கிய சுலோகங்கள்:

அனுதினமும் பூஜை அறையில் ஆறுமுகக் கடவுளை போற்றி மகிழ சில முக்கிய சுலோகங்கள் இவை. இப்பாடல்கள் முருகப் பெருமானின் திருவருளைப் பெற்றுத் தரும் என்பது திண்ணம். ஓம் சரவண பவ!!!

(கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர்):-
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஓளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

(திருவண்ணாமலை திருப்புகழ் - அருணகிரிநாதர்):-
ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று
ஆறு முகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!!

(திருமுருகாற்றுப்படை - நக்கீரர்):-
அஞ்சு முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும்
வெஞ் சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும்
-தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!!!

(கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சரியார்):-
ஆறிரு தடந்‌தோள் வாழ்க அறுமுகம் வாழ்க -வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க -செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்!!

(கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர்):-
நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை -நாடிவந்த
கோள் என்செயும் கொடும் கூற்று என்செயும் -குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் -சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து -தோன்றிடினே!!

இந்து சனாதன தர்மம்: எது தலையாய அறம் ?.

'அறம் செய்ய விரும்பு' என்றாள் தமிழ் மூதாட்டி. இந்து தர்மம் உணர்த்தும் உன்னதமான அறங்கள் பலப்பல. அறங்களில் தலையாயது எது? பார்ப்போம்!!!

திருவள்ளுவர் 'கொல்லாமை - புலால் மறுத்தல்' என்று இரு அதிகாரங்களில் 'எக்காரணம் கொண்டும் ஒரு உயிரை கொல்லாது இருத்தல் - புலால் உணவை உண்ணாது இருத்தல்' என்ற இவ்விரு செயல்களுமே அறங்களில் எல்லாம் தலைசிறந்த அறம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

'அன்பே சிவம்' என்று முழங்கிய பரம ஞானி திருமூலர் 'கொல்லாமை - புலால் மறுத்தல்' என்ற பகுதிகளில் அறம் அல்லாத இவ்விரு செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறார். 'கொல்லாமை' என்ற மலரே பூஜைக்கு உகந்த முதன்மையான மலர் என்றும், 'புலால் உணவை உட்கொள்வது' நரகத்துக்கு இணையான பெரும் துன்பத்தைப் பெற்றுத் தருவது உறுதி என்றும் குறிக்கிறார் திருமூலர்.

திருமந்திரம் - கொல்லாமை:-
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர்
அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்...

திருமந்திரம் - புலால் மறுத்தல்:-
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்து வைப்பாரே.

19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருட்சுடரான வள்ளலார் 'புலால் உணவை உட்கொள்ளும் வரை இறைவனின் அருளைப் பெற முடியாது' என்று அறுதியிட்டுக் கூறுகிறார். இறைவன் கருணை வடிவானவன். கருணை எங்கு இல்லையோ - அங்கு இறைவன் வசிப்பதில்லை.

(இராமலிங்க வள்ளலார்):-
கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் -வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் -அன்றே!!!!

புண்ணிய நதிகளில் நீராடினாலும், இறை வழிபாடுகள் செய்து வந்தாலும், ஞான நூல்களைக் கற்றிருந்தாலும், தான தர்மங்கள் பல புரிந்தாலும், புலால் உணவு உட்கொள்ளும் செயல் அந்த நற்செயல்களின் பலன்கள் அனைத்தையும் செயல் இழக்கச் செய்து, முடிவில் நரகத்துக்கு ஒப்பான துன்பத்தையே தேடித் தரும் என்று எச்சரிக்கிறார் வள்ளலார்.

வேதங்கள் - உபனிடதங்கள் - சாத்திரங்கள் - பக்தி இலக்கியங்கள் - ஞானிகளின் வாக்குகள் - இவை உணர்த்தும் நீதிகள் என்றுமே இப்புவியில் பொய்ப்பதில்லை. அறம் செய விரும்புவோம்!!!!

இந்து சனாதன தர்மம் - பக்திக்கு அகிம்சை என்னும் தர்மமே ஆதாரம்:-

இறைவனின் ஆணையான தர்மங்களை முழுமனதாக ஏற்று, அவற்றை பின்பற்றுவதாகவும் உறுதி பூண்டு, பின்னர் இறைவனிடம் அன்பு செலுத்தும் முறையே 'பக்தி' என அழைக்கப் பெறும். தர்மங்களை முழுவதுமாக புறக்கணித்து விட்டு இறைவனிடம் கொள்ளும் அன்பு 'பக்தி' ஆகாது என்ற புரிதல் மிகவும் அவசியம் ஆகிறது.

மணிக்கணக்கில் கிருஷ்ண நாம ஜெபம் செய்ய விழையும் மனம், கண்ணனின் வாக்கான கீதையை பின்பற்ற மறுக்கிறது. ஸ்ரீராமாயண நிகழ்வுகளை ரசித்து மகிழும் மனம், ஸ்ரீராமாயணம் உணர்த்தும் தர்மங்களை உணர மறுக்கிறது. சீரடி பாபாவின் பஜனைகளுக்கு பழகிய மனம் - அப்பரம ஞானியின் போதனைகளை தெரிந்து கொள்ள ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை.

எண்ணற்ற மகான்களை வணங்கத் தயங்காத மனம் - அந்த அருளாளர்களின் தெய்வ வாக்கில் இருந்து உதிக்கும் தர்மங்களை கடைபிடிக்க மறுக்கிறது. ஞானிகளின் படங்களை விட அவர்களின் பாடங்கள் மிக முக்கியம். படங்களால் முக்தி பெற முடியாது - அப்பெருமக்களின் பாடங்களான தர்மங்களே முக்தி நெறிக்கு நம்மை இட்டுச் செல்ல வல்லது.

தர்மமே பக்திக்கு ஆதாரம். தர்மத்தை பின்பற்றாத நிலையில் பக்தி செயல் இழக்கிறது. எது தர்மம் ? அகிம்சையே உயர்ந்த தர்மம். அகிம்சையே உன்னதமான கடமை. 'மற்றொரு உயிருக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதே' ஞானப் பாதையில் பயணிக்க விரும்பும் ஒவ்வொருவரின் லட்சியமாக இருத்தல் வேண்டும்.

மனு தர்ம சாத்திரம் (அத்தியாயம் 5 - சாத்திரம் 51 & 52):-
ஒரு உயிரினத்தை கொல்ல அனுமதிப்பவர் - கொல்பவர் - கூறுகளாக வெட்டுபவர் - மாமிசமாக்கி விற்பவர் - வாங்குபவர் - சமைத்து உணவாக்குபவர் - பரிமாறுபவர் - உட்கொள்பவர் - இவர்கள் அனைவருமே அந்த உயிரைக் கொன்றவர்களாகவே கருதப் படுவர். தன் உடம்பை வளர்க்கும் பொருட்டு பிற உயிர்களின் மாமிசத்தை உண்பதை விட பெரிய பாவச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

அகிம்சையை முன்னிருத்தும் இந்து தர்மம்:- அகிம்சை குறித்த சில நுட்பமான கருத்துக்கள்!!!

ஒரு குழந்தையை வதைத்துப் பின் அதன் தாயிடமே சென்று அன்பு பாராட்டி, உதவியையும் கோரும் செயலை யாரும் செய்வரோ? தன் குழந்தை வதைக்கப் படுவதை பதைப்பதைப்புடன் கண்னுற்ற எந்த ஒரு தாயின் மனமாவது சீற்றம் கொள்ளாமல் இருக்குமா? இப்புவியில் வாழ்ந்து வரும் கோடான கோடி ஜீவராசிகளுக்கும் தாய் - தந்தையாய் விளங்கி வருபவன் இறைவன்.

கருணையே வடிவான இறைவன் தன்னுடைய குழந்தைகளான உயிரினங்களை வதைத்கும் செயலை ஒரு பொழுதும் அங்கீகரிப்பது இல்லை - பொறுப்பதும் இல்லை. 'வதைக்கும் செயல் புரிந்தால் சர்வ நிச்சயமாய் வதைபட வேண்டி வரும்' என்பது இந்து தர்ம சாத்திரங்கள் அறுதியிட்டுக் கூறும் படைப்பின் நியதி.

ஆன்மாக்கள் கர்ம பலனைப் பொறுத்து வெவ்வேறு வடிவங்கள் எடுத்துக் கொள்கின்றன என்பது இந்து தர்மத்தின் முக்கியக் கோட்பாடு. ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரு ஜீவாத்மா உறைந்துள்ளது. இறைவன் ஒருவனே பரமாத்மா. ஒரு ஜீவாத்மா மனித உடலில் உறையும் பொழுது அது வதைப்பட்டால் அதற்குப் பெயர் கொலை - வன்முறை - தீவிரவாதம்.

அதே ஆத்மா வேறு ஒரு உயிரினத்தில் உறையும் பொழுது வதைபட்டால் அதை உணவு என்று கருதுவது ஏற்புடையது அல்ல. இறைவனின் படைப்பு மனித குலத்திற்காக மட்டுமே என்று எண்ணுவது பெரும் பிழை. அனேக கோடி ஜீவராசிகள் வாழும் பொருட்டே இறைவனால் இப்புவியில் படைப்பு நிகழ்த்தப் படுகிறது.

ஒரு தொடர்பு ஏற்படுத்தப் பட வேண்டும் என்றால் இரு முனையிலும் பரிமாற்றம் இருத்தல் அவசியம். இறைவனுடன் நாம் தொடர்பு ஏற்படுத்த விரும்புகிறோம். நாம் பேசுவதை மட்டும் இறைவன் செவி மடுக்க வேண்டும் என்று விழைகிறோம். இறைவனின் வார்த்தைகளான தர்மங்களை செவி மடுக்க மறுக்கிறோம். இதனால் அன்றோ இறைத் தொடர்பு ஏற்படாமலே வாழ்நாள் வீணே கழிகின்றது.

ஒவ்வொரு உணவு வேளையிலும் 'அகிம்சை - தர்மம் - கருணை - நீதி' இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உணவை தேர்ந்தெடுக்கும் சக்தியும், அதிகாரமும் நம்மிடம் உள்ளது. புலால் உணவை மறுப்போம் - நலம் பெறுவோம்!!!

புலால் உணவு உட்கொண்டும் கண்ணப்ப நாயனார் சிவ பதம் பெற்றது எவ்வாறு ? சில விளக்கங்கள்.

'புலால் உணவை கைவிடுவது இல்லை' என்னும் முடிவுக்கு முன்னமே வந்து, பின்னர் அம்முடிவுக்கு சாதகமான புராண- இதிகாச நிகழ்வுகளை சேகரித்து வைத்துக் கொண்டு வாதிடுவது முறையன்று. தர்மங்களை புராணங்கள் - சாத்திரங்கள் - நீதி நூல்கள் மூலம் முறையாகக் கற்று, அதன் பின்னரே தர்ம - அதர்மம் குறித்த முடிவுக்கு வருதல் வேண்டும்.

கண்ணப்பர் வேடர் மரபில் தோன்றிய அருளாளர். தர்ம அதர்மம் குறித்த புரிதல் பெரிதாக இல்லாத வேடர்கள் நிறைந்த சூழலில் - வனப் பகுதியில் உதித்தவர். ஆனால் நம் நிலையோ முற்றிலும் மாறுபட்டது. எண்ணற்ற தர்ம சாத்திரங்களை கற்று உணர வாய்ப்பும், கல்வியும் நமக்கு இன்று அமையப் பெற்றுள்ளது. ஆகவே, கண்ணப்பரின் சூழலையும் நம் சூழலையும் ஒப்பு நோக்குவது முறையன்று.

நம் உடலின் ஊடு-கதிர்ப்படத்தை (எக்ஸ்-ரே) மருத்துவத் துறையில் வல்லுனரான ஒருவரின் துணையைக் கொண்டே அறிய முயல்கிறோம். அது போல புராண நிகழ்வுகளில் இருந்து நாம் உணர வேண்டிய நீதிகளை, சமயத் தொண்டாற்றும் ஆச்சார்யார்கள் மூலமே கற்றுத் தெளிய வேண்டும். அது விடுத்து, புராண நிகழ்வுகளை மேலோட்டமாக அணுகுவது நுனிப் புல் மேய்வதை ஒக்கும்.

கண்ணப்பர் வரலாறில் உள்ள சாரம் யாது எனில் 'இறை வழிபாட்டில் அன்பே பிரதானம். ஆச்சாரமும் நெறிமுறைகளும் அவசியமே. ஆனால் அவையால் மட்டும் வழிபாடு முழுமை பெறுவதில்லை. ஆச்சாரம் மிகுந்த வழிபாடு நாளடைவில் அன்பு வழிபாடாக பரிணாமம் பெறுகிறது. விதி முறைகள் வழிபாட்டின் தொடக்க நிலை; அன்பே அதன் இறுதி நோக்கம்'.

கண்ணப்பர் தன்னலமில்லா அன்பின் உறைவிடம். அன்பின் வெள்ளமான அப்பெருந்தகையுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதோ? அவ்வன்பில் கோடியில் ஒரு பங்கு வாய்ப்பினும் நாம் உய்வு பெறுவது உறுதி. இறைவனுக்கு கண்களை அகழ்ந்து அளிக்க நம்மால் ஆகுமா ? 'ஊக்கமது கைவிடேல்' என்னும் ஆத்திச்சூடி வாசகத்திற்கு 'ஊக்கத்தை தரும் மதுவை கைவிடேல்' என்றா பொருள் கொள்வது?

அடியவரை ஆட்கொள்ள எண்ணற்ற எளிய முறைகள் இருக்க, இக்கடுமையான முறையை சிவப்பரம்பொருள் தேர்ந்தெடுக்க 'வேடர் மரபின் காரணமாக அகிம்சையை பின்பற்ற முடியாத கண்ணப்பரின் சூழலும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்' என்பதும் சிந்திக்க வேண்டிய மற்றொரு கோணம்.

இந்து தர்மத்தின் ஞானிகள் - அருளாளர்கள் - ஆச்சாரியர்கள் அனைவரும் ஏக மனதாக, ஒருமித்தக் கருத்துடன் புலால் உணவை அறவே தவிர்க்குமாறு அறிவுறுத்தி வந்துள்ளனர். விதிவிலக்குகள் விதிகள் ஆகிவிடாது. தர்மமாகிய விதிகளை பின்பற்றுவோம். விதி விலக்கான நிகழ்வுகளை முறையாகப் புரிந்து கொள்வோம்!!

தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிருந்தாவனம் (காங்கேயநல்லூர்)

வாரியார் சுவாமிகள் பிறவாமையை பெற்று அருளிய தினம் 7 - 11 - 93. சொற்பொழிவின் பொருட்டு லண்டன் சென்று இருந்த சுவாமிகள் விமானம் மூலம் மும்பையை அடைந்தார். பின்பு, மற்றொரு விமானம் மூலம் மும்பையில் இருந்து சென்னைக்கு வருகை தரும் வேளையில், சுவாமிகளின் ஆன்மாவை பரமபதியான குமரவேள் (ஆகாயத்தில் பயணிக்கும் பொழுதே) தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டருளினார்.

தொண்டு; ஒழுக்கம்; பக்தி; நியமம்; புலமை; தியாகம்; ஈகை இவை அனைத்திலும் மிகவும் உயர்ந்து விளங்கிய தன்மையால், விண்வெளியில் உயரப் பறந்து கொண்டிருக்கும் நிலையில் வாரியார் சுவாமிகளை குமரக் கடவுள் ஆட்கொண்டார் போலும்! தொண்டால் பழுத்த உத்தம சீலரின் புனித உடலை, சுவாமிகளின் தலமான காங்கேய நல்லூருக்கு எடுத்துச் சென்றனர்.

காங்கேய நல்லூர் முருகப் பெருமானின் ஆலயத்துக்கு நேர் எதிரில், சுவாமிகளுக்கு சமாதிக் கோயில் எழுப்பி, அதில் சுவாமிகளின் புனித உடலைக் கோயில் கொள்ளச் செய்தனர். மிக அழகிய முறையில் அமையப் பெற்றுள்ளது வாரியார் பெருமானின் பிருந்தாவனம். இக்கோயிலில் சுவாமிகளின் திருவுருவம் தத்ரூபமாக வடிக்கப் பட்டுள்ளது.

நேரில் சுவாமிகளை தரிசிப்பதைப் போன்ற உணர்வை சர்வ நிச்சயமாய் ஏற்படுத்தும். அதீத சாந்தம் நிறைந்த, அதே கனிவான புன்னகையுடன் சுவாமிகள் இக்கோயிலில் அருள் புரிந்து கொண்டு இருக்கிறார். அடியவர் வழிபாடு இந்து தர்மத்தில் மிகமுக்கிய இடம் பெறுகிறது. அடியவர் வழிபாடு இறை வழிபாட்டை விட சிறப்புப் பொருந்தியது என்று குறிக்கிறார் திருமூலர்.

சுவாமிகளின் அவதாரத் தலம் காங்கேய நல்லூர். இத்தலத்தில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானின் ஆலயத்துக்கு எண்ணற்ற திருப்பணிகளை சுவாமிகள் புரிந்துள்ளார். இத்தலத்தில் வசித்து வரும் அனைத்து குடும்பங்களும் சுவாமிகளை குல தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். சுவாமிகள் சிறுவயதில் வசித்த வீடு தற்பொழுது நினைவாலயமாக மாற்றப் பட்டுள்ளது.

காங்கேயநல்லூரில் உறையும் முருகப் பெருமானின் ஆலயத்தையும், அதன் நேரெதிரில் வீற்றிருந்து அருளும் பரம குருநாதரான வாரியார் சுவாமிகளின் பிருந்தாவனத்தையும், கட்டாயம் தரிசித்து வினைகள் நீங்கப் பெறுவோம்.


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஓளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
விநாயகர் அகவல் (ஔவையார் அருளியது)

ஒரு சமயம், ஔவையார் ஆனைமுகக் கடவுளைப் பூஜித்துக் கொண்டு இருந்தார். அவ்வேளையில், சுந்தர மூர்த்தி நாயனார் ஆகாய மார்கமாக கயிலை மலைக்கு ஏகுவதைக் கண்னுற்றார். சுந்தரர், தன் அவதார நோக்கம் நிறைவுற்றதால், சிவபெருமான் ஏவலால் தம்மை அழைப்பிக்கும் பொருட்டு வந்த வெள்ளை யானையின் மீது ஆரோகணித்து, கயிலையம் பதிக்கு சென்று கொண்டிருந்தார்.


ஔவை பிராட்டி 'கயிலை மலைக்கு முன்னமே சென்று, சுந்தரருக்கு சிறப்பான வரவேற்பு புரிதல் வேண்டும்' என்ற எண்ணம் கொண்டார். பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.


புன்முறுவல் பூத்த ஸ்ரீகணேச மூர்த்தி 'ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை புரிவாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார். இத்தருணத்தில் ஔவையார் பாடி அருளியது தான் 'விநாயகர் அகவல்' என்னும் ஒப்பற்ற பாடல் தொகுப்பு. 72 வரிகளைக் கொண்டது. பாராயணம் புரிய மிகவும் எளிதானது.


அகவல் துதியால் பெரிதும் மகிழ்ந்த விநாயகக் கடவுள், தன் துதிக்கையால் ஔவையைப் பற்றித் தூக்கி, ஒரு நொடியில் கயிலை மலையில் சேர்ப்பித்து அருளினார். இந்நிகழ்வு நடந்தேறி வெகுநேரம் சென்ற பின்பே, சுந்தர மூர்த்தி சுவாமிகள் கயிலை மலை ஏகினார். ஔவை பிராட்டியும் வரவேற்றுப் பேருவகை கொண்டார். முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் கருணைக்கு எல்லை என்பதும் உளதோ?


'வி' நாயகன்' என்னும் பதம் 'தனக்கு மேல் ஒரு நாயகன் இல்லாத' பரம்பொருளின் தன்மையைக் குறிக்கும். அனைத்து வழிபாடுகளும் - யாகங்களும் - பூஜைகளும் இப்பெருமானின் ஆசியோடு அன்றோ தொடங்கப் பெறுகிறது! அனைத்து தொடக்கங்களின் தொடக்கமும் இப்பெருமான் அன்றோ!!


ஒரு ஆன்மா முக்தி நிலையை அடைய, ஆறு சக்கரங்களை கடந்து சகஸ்ராரம் என்னும் ஏழாம் சக்கரத்தை அடைதல் வேண்டும். முதல் சக்கரமான மூலாதாரத்தின் உபாசன தெய்வம் 'ஸ்ரீவிநாயக மூர்த்தி'. 'சைவமோ - வைணவமோ' விநாயகக் கடவுளின் திருவடி தொழுதால், ஒரு நொடியில் நம்மை முக்தி நிலையான 'கைலாயம் - வைகுந்தம்' முதலிய பதங்களில் சேர்ப்பித்து அருளுவார்.


விநாயகர் அகவலைப் பாராயணம் செய்வோம். ஆனைமுக இறைவனின் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோம்.
திருநாரையூர் - பொல்லா பிள்ளையார் (நம்பி ஆண்டார் நம்பி வணங்கிய ஸ்ரீவிநாயகர்)

திருநாரையூர் என்னும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலம் சிதம்பரம் அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் விநாயகப் பெருமான் 'பொல்லாப் பிள்ளையார்' என்னும் திருநாமம் கொண்டு எழுந்தருளி உள்ளார். 'பொல்லா' என்னும் பதம் 'உளியால் செதுக்கப் படாத' தன்மையைக் குறிக்கும். சுயம்பு மூர்த்தி இப்பெருமான்.

இத்தலத்தில் 'நம்பி ஆண்டார் நம்பி' என்பார் வாழ்ந்து வந்தார். பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல் பதினோரு திருமுறைகள் வரைத் தொகுத்த அருளாளர். பதினோராம் திருமுறையின் சில தொகுப்புகளுக்கு இவர் ஆசிரியரும் கூட. திருநாரையூரில் உறையும் 'பொல்லாப் பிள்ளையார்' இவரின் குருவாக அமைந்தது ஒரு சுவையான வரலாறு.

நம்பிக்கு அப்பொழுது பள்ளிப் பருவம். நம்பியின் தந்தை அர்ச்சகராகத் தொண்டு புரிந்து வந்தார். ஒரு முறை, தந்தைக்கு உடல் நலம் குன்றிய காரணத்தால், நம்பி திருக்கோயிலுக்கு நிவேதன உணவை எடுத்துச் சென்றார். 'பொல்லாப் பிள்ளையார்' சந்நிதி முன்பு வைத்தார். பெருமான் உண்மையில் நிவேதன உணவை உட்கொள்வார் என்று அவரின் பிஞ்சு உள்ளம் நம்பியது.

ஆனால் நம்பியின் எண்ணமோ ஈடேறவில்லை. பெருமான் நிவேதன உணவை ஏற்காதது கண்டு நம்பி பதறித் துடித்தார். பெரும் தவறு இழைத்து விட்டதாக எண்ணினார். தந்தையின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே என்றும் அஞ்சினார். தன் இன்னுயிரை போக்கும் எண்ணத்தில், பெருமானின் திருவடியில் தலையை மோதிக் கொள்ளத் துவங்கினார்.

உண்மை அன்புக்கும் பக்திக்கும் மட்டுமே அகப்படும் பரம்பொருளான ஸ்ரீவிநாயகப் பெருமான், தன் விக்கிரக நிலையில் இருந்து நீங்கி, ஸ்தூல வடிவில் திருக்காட்சி அளித்து, நம்பியை தடுத்து ஆட்கொண்டார். நம்பி நேரில் காண, நிவேதன உணவை உண்டு அருளினார். நம்பியும் பெருமகிழ்வு கொண்டு வீடு திரும்பினார். நம்பியின் தந்தையோ 'பிள்ளையின் கூற்றை' அறவே நம்ப மறுத்தார்.

மறுநாள், பக்தனான நம்பியின் கூற்றை மெய்ப்பிக்க, பெருமான் நம்பியின் தந்தையும் காணும் படி, நிவேதன உணவை உட்கொண்டு அருளினார். மேலும் நம்பியின் வேண்டுகோளுக்கு இணங்க, நம்பியை சீடனாகவும் ஏற்று அருளினார். இம்மூர்த்தியே பின்னாளில் 'தேவாரப் பதிகங்கள் அனைத்தும் சிதம்பரம் திருக்கோயிலில், திருக்காப்பிட்ட ஒரு அறையில் உள்ளது' என்று நம்பி ஆண்டார் நம்பிக்கு உணர்த்தி அருளியவர்.

திருநாரையூர் தலம் சென்று 'பொல்லாப் பிள்ளையாரை' தரிசித்து உய்வு பெறுவோம்.
புராணங்களை இயற்ற வேத வியாசருக்கு அருளிய ஸ்ரீவிநாயகர் (விநாயகர் புராணம் விளக்கும் சக்தி வாய்ந்த 16 திருநாமங்கள்)

பதிணென் புராணங்களும் ஆதியில் சிவபெருமானால் நந்திதேவருக்கு உபதேசிக்கப் பட்டது. நந்திதேவர் சனத்குமார முனிவருக்கு உபதேசித்தார். சனத்குமார முனிவரிடம் இருந்து வேத வியாசர் புராணங்கள் யாவையும் உபதேசமாகப் பெற்றார். பின்னர் புவியில் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், 18 புராணங்களையும் எழுத்து வடிவில் சுலோகங்களாக இயற்றும் எண்ணம் கொண்டார்.

புராணங்களை எழுத முனைந்த வியாசரின் மனதில் பெரும் குழப்பம் பரவத் தொடங்கியது. புராண நிகழ்வுகள் அனைத்தும் அறிந்திருந்தும் ஒரு சுலோகம் கூட முழுமையாக இயற்ற முடியாத நிலை உருவானது. பணியின் தொடக்கத்திலேயே இவ்வித விக்கினம் தோன்றியதால், பிரமலோகம் சென்று நான்முகனிடம் 'இந்நிலை உருவாகக் காரணம் யாது' என வினவினார்.

பிரமன் வியாசரிடம் 'முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி ஆசி பெறாது தொடங்கிய காரணத்தால் உம் பணியில் இவ்விதம் விக்கினம் உருவானது' என்று விளக்கினார். மேலும், 'ஸ்ரீகணேசரை வணங்காது கற்ப கோடி காலம் முயன்றாலும் ஒரு பாடலைக் கூட புனைய இயலாது' என்றும் அறிவுறுத்தினார்.

வியாசருக்கு ஸ்ரீவிநாயகரை மகிழ்விக்கும் முக்கிய திருநாமங்கள் அடங்கிய மந்திரத்தையும் உபதேசித்தார் நான்முகன். பூலோகம் திரும்பிய வேத வியாசர் அம்மந்திரங்களால் ஸ்ரீவிநாயகரை துதித்து, 12 ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். வியாசரின் தவத்துக்கு மகிழ்ந்து கோடி சூர்ய பிரகாசமாய் திருக்காட்சி அளித்து அருளினார் ஸ்ரீவிநாயக மூர்த்தி.

பணிந்து போற்றிய வியாசருக்கு ஆசியளித்து, புராணங்களை இயற்றும் வல்லமையையும் அளித்து அருளினார் ஆனைமுகக் கடவுள். வியாசர் துதித்த ஸ்ரீவிநாயகரின் 16 திருநாமங்கள் மிகவும் சக்தி பொருந்தியவை. அனுதினமும் இம்மந்திரங்களால் ஆனைமுகக் கடவுளை துதித்து, அப்பெருமானின் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோம்.

1. ஓம் சுமூகாய நம;
2. ஓம் ஏகதந்தாய நம;
3. ஓம் கபிலாய நம;
4. ஓம் கஜகர்ணகாய நம;
5. ஓம் லம்போதராய நம;
6. ஓம் விநாயகாய நம;
7. ஓம் விக்கினராஜாய நம;
8. ஓம் கணாத்பதியே நம;
9. ஓம் தூமகேதவே நம;
10. ஓம் கணாத்யஷாய நம;
11. ஓம் பாலசந்திராய நம;
12. ஓம் கஜானனாய நம;
13. ஓம் வக்ர துண்டாய நம;
14. ஓம் சூர்ப்பகன்னாய நம;
15. ஓம் ஏரம்பாய நம;
16. ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம;

அருணகிரிநாதருக்கு அருளிய பொய்யா கணபதி {வயலூர் முருகன் திருக்கோயில்}
 திருச்சிராப்பள்ளிக்கு மிக அருகில் அமைந்துள்ளது வயலூர் என்னும் சிறப்புப் பொருந்திய தலம். முருகப் பெருமான் இத்தலத்தில் 'சுப்ரமண்ய சுவாமி' என்னும் திருநாமம் கொண்டு ஸ்ரீவள்ளி - தெய்வயானையோடு எழுந்தருளி உள்ளார். திருமுருக வாரியார் சுவாமிகளால் எண்ணற்ற திருப்பணிகள் நடந்தேறிய தலம்.
*
மூலவர் ஸ்ரீசுப்ரமண்யர் தன் திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஞான வேலால் உருவாக்கி அருளியது இத்தல தீர்த்தமான 'சக்தி தீர்த்தம்'. இந்து சனாதன தர்மத்தின் ஒரு பிரிவான 'கௌமாரம்' என்னும் முருக வழிபாட்டு சமயத்துக்கு தனிப்பெரும் குருநாதராக விளங்குபவர் அருணகிரிநாதர். இவர் முதன் முதலில் திருப்புகழ் பாடல்களை பாடத் துவங்கிய தலம் வயலூர்.
*
இத்தலத்தில் 'பொய்யா கணபதி' என்னும் திருநாமத்துடன் விநாயகப் பெருமான் எழுந்தருளி உள்ளார். அருணகிரிநாதர், பொய்யா கணபதியைப் போற்றிப் பாடி, ஆசி பெற்ற பின்னரே, முருகக் கடவுளைப் பாடத் துவங்குகிறார். 'கைத்தல நிறை கனி' என்ற இத்திருப்புகழ் பாடல் மிகவும் பிரசித்தம்.
****
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் என வினை கடிதேகும்
*
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
*
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடிசெய்த அதி தீரா
*
அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே!!!!
****
எண்ணற்ற சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள வயலூர் தலம் சென்று ஸ்ரீபொய்யா கணபதியையும், இரு தேவியரோடு அருள் புரியும் ஸ்ரீசுப்ரமண்யரையும், முருகக் கடவுள் பூஜித்த சிவலிங்கத் திருமேனியான ஆதிநாதரையும், ஆதிநாயகி அம்பிகையையும் தரிசித்துப் பிறவிப் பயன் பெறுவோம்.

ஸ்ரீவிநாயகர் அவதாரம் (விநாயகர் புராணம் விளக்கும் அவதார ரகசியம்

விநாயகப் பெருமான், அனைத்தையும் உள்ளடக்கிய, அனைத்துக்கும் மூலமான பிரணவத்தின் பரிபூரண திருவடிவம். ஒரு முறை சிவபெருமானும், அம்பிகையும் திருக்கயிலை மலையில் அமைந்துள்ள பிரணவ மண்டபத்துக்கு எழுந்தருளும் பொழுது, திருச்சுவற்றில் உள்ள 'யானை வடிவ' சிற்பத்தில் இறைவன் - இறைவி' இருவரின் திருப்பார்வையும், ஒருசேரப் பதிந்தது.

அச்சிற்பத்தில் இருந்து கோடி சூர்ய பிரகாசமாய் பிரணவ ரூபரான 'ஸ்ரீகணேசர்' யானை முகம் கொண்டு வெளிப்பட்டார். இந்த அவதாரத்தையே ஸ்ரீவிநாயகரின் முதல் அவதாரமாகக் குறிக்கிறது விநாயகர் புராணம். பின் பற்பல யுகங்களில் பல்வேறு அவதாரங்களை ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு எடுத்து அருளினார் ஸ்ரீவிநாயகர் .

பின்பொரு சமயம், மூஷிகாசுரனை வதைக்கும் பொருட்டு, சிவபெருமானின் இடபாகத்தில் கோயில் கொண்டருளும் அம்பிகைக்கு, திருப்புதல்வனாக மீண்டும் அவதாரம் புரிந்து அருளினார். இந்நிகழ்வு ஸ்ரீவிநாயக மூர்த்தியின் தோற்றத்தைக் குறிக்க வந்தது அன்று - 'அப்பெருமானின் எண்ணற்ற அவதாரங்களில் இதுவும் ஒன்று' என்ற புரிதல் மிக அவசியம்.

(பதினோராம் திருமுறை - ஸ்ரீவிநாயகர் இரட்டை மணி மாலை):-
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் -தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
*51 சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு (முக்கிய சிவ புராண நிகழ்வுகள்

*பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சர்வேஸ்வரரான சிவபெருமானிடம் 'பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும்' வரமாகப் பெற்றான்'. மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.

*எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். சில தொடர் நிகழ்வுகளால், வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான்.

*ஹரித்வாரில் அமைந்துள்ள 'கனகல்' என்னும் தலத்தில் யாகம் தொடங்கப் பட்டது. அன்னை சதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி, யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.

*இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாக சாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதை சிவபுராணம் விரிவாகப் பேசுகிறது. இத்தலத்தில் 'அம்பிகை தன் தெய்வ உடலை மாய்த்துக் கொண்ட ஹோம குண்டத்தை' இன்றும் தரிசிக்கலாம். இறைவனின் கருணையால் ஆட்டின் தலையுடன் மீண்டும் உயிர்த்து எழுந்தான் தட்சன்.

*சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன.

*இறைவனின் இருப்பை உணரவும், தர்மங்களை பின்பற்றவும் மறுக்கும் ஒவ்வொருவரும் தட்சனின் வடிவங்களே. ஆன்மாக்கள், முதலில் இறைவனை மறுப்பதும், அறியாமையால் எதிர்ப்பதும், பின்னர் ஞானம் பெற்றுப் பணிவதும் காலகாலமாக நடந்து வரும் போராட்டம். ஆட்டின் தலை அஞ்ஞானத்தைக் குறிப்பது. ஞானம் என்றுமே அஞ்ஞானத்தை வெல்லும் என்பது இந்நிகழ்வின் உட்குறிப்பு.

51 சக்தி பீடங்கள் (தல யாத்திரை குறித்த முக்கியத் தகவல்கள்):
 *அம்பிகையின் உடற்கூறுகள் விழுந்த சக்தி பீடங்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. சில புராணங்கள் பீடங்களின் எண்ணிக்கை 108 என்றும், வேறு சில புராணங்கள் 51 என்றும், 64 என்றும் குறிப்பிடுகின்றன. இருப்பினும் வடமொழியில் 'அ' முதல் 'ஷ' வரையிலான 51 பீஜ அட்சரங்கள் தோன்றிய தலங்களில் விழுந்த உடற்கூறுகளே பிரதான சக்தி பீடங்களாக வழிபடப் பட்டு வருகிறது.

*மற்ற தலங்கள் உப பீடங்களாகவே அறியப்பட்டு வருகின்றன. பிரதான பீடங்களைப் பற்றிய ஆதார பூர்வமான தகவல்களை '51 அட்சர சக்தி பீடங்கள்' என்னும் நூலின் வாயிலாக அறியலாம். இவ்வரிய நூலின் ஆசிரியர் 'திரு. ஜபல்பூர் நாகராஜ் சர்மா' அவர்கள். இவர் காஞ்சி மகாப் பெரியவரின் பரிபூரண ஆசியைப் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

*51 பீடங்களுக்கும் நேரில் சென்று தரிசித்து, அரிய பல அனுபவங்களையும் பதிவு செய்து உள்ளார் நூலின் ஆசிரியர். மேலும் தல புராணம் - மூர்த்தி; தலம்; தீர்த்தம் இவைகளின் சிறப்பு அம்சங்கள் - கல்வெட்டுச் செய்திகள் - திருக்கோயில் அமைவிடம் - செல்லும் வழி - முதலிய பல அரிய விவரங்கள் இந்நூலில் சிறப்பான முறையில் விளக்கப் பட்டுள்ளது.

*51 சக்தி பீடங்களில், பாரத நாட்டில் 43 பீடங்களும், பங்களாதேஷ் நாட்டில் 2 பீடங்களும், நேபாளத்தில் 3 பீடங்களும், திபெத்தில் 2 பீடங்களும், பாகிஸ்தானில் ஒரு பீடமும் அமைந்துள்ளது. பாரத நாட்டின் 43 பீடங்களும், இருபது மாநிலங்களில் பரந்து, நிலை கொண்டுள்ளது.

*மிகவும் சக்தி வாய்ந்த இப்பீடங்களுக்கு யாத்திரை மேற்கொள்வது, அம்பிகையின் பரிபூரணத் திருவருளைப் பெற வழி வகுக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தல யாத்திரை மேற்கொள்வோருக்கு இந்நூல் 'ஒரு உன்னதமான வரம்' என்று கூறுவது மிகையாகாது.

*(நூல்: 51 அட்சர சக்தி பீடங்கள், ஆசிரியர்: ஜபல்பூர் நாகராஜ் சர்மா, விகடன் பிரசுரம். சென்னையில் 'கிரிட்ரேடர்ஸ்' நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்).

இந்து தர்ம நுட்பங்கள் (ஆலயங்களில் திருவிளக்கு ஏற்றுதல் - விளக்கமும் பயன்களும்):
*
ஆலயங்களில் திருவிளக்கு ஏற்றுவதால் விளையும் நற்பயன்களை புராணங்கள் வெகுவாக சிறப்பித்துக் கூறுகின்றன. விளக்கின் ஒளி புற இருளைப் போக்க வல்லது. திருக்கோயிலில் திருவிளக்கு ஏற்றுதல் அக இருளாகிய அறியாமையைப் போக்கி, ஞானத்தையும் வழங்க வல்லது.
*
'விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்' என்று தன் தெய்வ வாக்கால் (தேவாரத்தில்) குறிக்கிறார் திருநாவுக்கரசர்.
*
சோழ நாட்டில் அமைந்துள்ள தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்). தேவாரப் பாடல் பெற்ற இத்தல ஆலயத்தில் திருவிளக்கு ஒன்று அணையும் தருவாயில் இருக்க, அவ்விளக்கில் உள்ள நெய்யை உண்ணும் பொருட்டு வந்த எலி ஒன்றினால் திரியானது நன்கு தூண்டப் பெற்று, பிரகாசித்து ஒளிவிடத் தொடங்கியது.
*
அப்புண்ணியத்தால் அந்த எலியானது அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாய் பிறப்பெடுத்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அபுத்தி பூர்வமாய் ஏற்றிய விளக்கிற்கே இத்தகு சிறப்பு எனில், அதன் ஏற்றம் அறிந்து திருவிளக்கு ஏற்றுவோர் பெறும் பலனை சொல்லவும் வேண்டுமோ!
*
அற்புதமான இந்நிகழ்வை திருவருட்பாவில் வள்ளலாரும், தேவாரத்தில் அப்பர் சுவாமிகளும் குறித்து உள்ளனர்.
*
இராமலிங்க வள்ளலார் (திருவருட்பா):-
நீளுகின்ற நெய் அருந்த நேர் எலியை மூவுலகும்
ஆளுகின்ற மன்னவன் ஆக்கினையே.
*
திருநாவுக்கரசர் (அப்பர்) - தேவாரம்:-
திருமறைக் காடு தன்னில் நீண்டெறி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிட கணன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் -உலகமெல்லாம்
குறைவரக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.
*
இந்த மகாபலிச் சக்கரவர்த்தியிடமே 'வாமன மூர்த்தியாய்' அவதரித்த ஸ்ரீமகாவிஷ்ணு மூன்றடி மண் தானமாகக் கேட்டு, விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூபம் எடுத்துப் பின் தன் திருவடியால் மகாபலியை ஆட்கொண்டும் அருளினார்.
*
இனி ஒவ்வொரு முறை திருக்கோயிலுக்கு செல்லும் பொழுதும் (எவ்வேளை ஆயினும்), மறவாது திருவிளக்கில் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவோம். அறியாமை இருள் நீங்கப் பெற்று, உள்ளொளியாகிய ஞானம் பிரகாசிக்கப் பெறுவோம்..
பத்ராசலம் ஸ்ரீசீதாராமர் திருக்கோயிலும் பக்த ராமதாசரும் (கிளியை கூண்டில் அடைத்ததால் 12 வருட சிறை தண்டனை):
*
பத்ராசலம் என்னும் பிரசித்தி பெற்ற தலம் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. தென் அயோத்தி என்று அழைக்கப் பெறும் சிறப்புப் பொருந்தியது. தலத்தின் மூலவரான ஸ்ரீராமசந்திர மூர்த்தி அன்னை சீதையை மடியில் அமர்த்திய நிலையில், இலக்குவனும் உடன் இருக்க, அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
*
ஸ்ரீராமதாசர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர். 'கோல்கொண்டா' பகுதியின் மன்னன் 'தானேஷாவிடம்' பணிபுரிந்து வந்தார். மன்னனின் ஆணையால் பத்ராசலப் பகுதியின் தாசில்தாராக பொறுப்பேற்றார். அங்கு சிறிய ஆலயத்தில் ஸ்ரீசீதாராமர் எழுந்தருளி இருப்பதைக் கண்ணுற்று வருந்தினார். பெருமானுக்கு பெரியதொரு ஆலயம் புதுக்க சங்கல்பம் பூண்டார்.
*
தன் செல்வமனைத்தும் திருப்பணிக்கு அர்ப்பணித்தும், நிதி போதாத நிலை உருவாக, அத்தல மக்கள் உதவ முன்வந்தனர். தங்கள் வரிப் பணத்திலிருந்து வேண்டிய நிதியை தற்சமயம் எடுத்துக் கொள்ளுமாறும், அவ்வருட விளைச்சலுக்குப் பின் தங்கள் பங்கை கொடுத்து விடுவதாகவும் வாக்களிக்க, திருப்பணியும் இனிதே நடந்தேறியது.
*
மன்னன் செய்தி அறிந்து வெகுண்டு, ஸ்ரீராமதாசரை கைது செய்து, சித்திரவதை செய்ய ஆணையிட்டான். சிறையில் அனுதினமும் கீர்த்தனைகள் புனைந்து, பெருமானிடம் தன்னைக் காத்தருளுமாறு கண்ணீர் மல்க முறையிடுவார் ஸ்ரீராமதாசர். 12 ஆண்டுகள் இதே முறையில் கழிய, ஸ்ரீராமர் இலக்குவனுடன் இரு வீரர்களின் உருக் கொண்டு அரண்மனையில் தோன்றி அருளினார்.
*
மன்னனிடம், ஸ்ரீராமதாசர் எடுத்த செல்வத்தை வட்டியுடன் செலுத்தி, ரசீதும் பெற்று மறைந்தார். இன்றும் பெருமான் செலுத்திய பொன் நாணயங்களை திருக்கோயிலில் தரிசிக்கலாம். பின்னர் ஸ்ரீராமர் சிறையில் ராமதாசருக்கு காட்சி அளித்து, ரசீதையும் சேர்ப்பித்தார். ராமதாசர் விழி நீர் மல்க, பன்முறை பெருமானைப் பணிந்து போற்றினார்.
*
'12 வருடங்களாக மனமுருக அழைத்தும், தன்னைக் காத்தருள வராததன் காரணம் யாது?' என பணிவுடன் வினவினார். 'முற்பிறவியில் ஒரு கிளியை கூண்டில் பல காலம் அடைத்து வைத்த பாவத்தால், இப்பிறவியில் ஸ்ரீராமதாசர் 12 வருடங்கள் சிறையில் துன்புறும் நிலை எய்தியது' என்று விளக்கியருளினார் ஸ்ரீராமர். ராமதாசர் சிறையிருந்த கோல்கொண்டா கோட்டையை இன்றும் தரிசிக்கலாம்.
*
இந்நிகழ்வில் இருந்து ராம பக்தியை மட்டும் அல்லாது, அகிம்சையையும் பாடமாகக் கற்போம். பரம பக்தரான ஸ்ரீராமதாசரையும் கர்மவினை விடவில்லை. உயிரினங்களை அடைத்து வைப்பது கொடிய பாவம். எனில், உயிரினங்களை வதைத்து உட்கொள்வது எவ்வளவு பாவம் என்று உணர்தல் மிகவும் அவசியம். இறைவன், பக்தியோடு அகிம்சையையும் நிச்சயம் எதிர்பார்க்கிறான்