புதன், 3 ஜூன், 2020

*லிங்க புராணம் ~ பகுதி — 07*

         *தாருகாவனத்தில்*
       *திகம்பர சந்நியாசி*
   =======================

தாருகாவனத்திலிருந்த முனிவர்களுக்கு உண்மையை உணர்த்த எண்ணிய சிவபெருமான்., திகம்பரராய்., சிறந்த அழகனாய்., கையில் ஓடு ஏந்தி பிக்ஷாடனாராய் புறப்பட்டார் ஈசன். அவரைக் கண்ட ரிஷி பத்தினிகள் தம் சுய அறிவின்றி., ஈசன் வசத்தினராகி அவரைப் பின் தொடர அனைவருடனும் முனிவர்கள் இருந்த யாகசாலைக்கு அருகில் வந்தார் ஈசன். இந்நிலையில் முனிவர்கள் சினம் கொண்டு யாரோ ஒரு காமுகனை தம்முடைய பத்தினிகள் பின் தொடர்ந்து வந்திருப்பதைக் கண்டு நிலை குலைந்தனர். அவர்கள் அந்த திகம்பர சன்னியாசியை சபித்தனர். ஆனால்., அவர்களுடைய சாபம் பலனற்றுப் போகவே திகைப்படைந்தனரே அல்லாமல்., வந்தவர் பரமன் என்பதை அறிந்து கொள்ளவில்லை. அப்போது சன்னியாசி தீடீரென்று மறைந்துவிட்டார். சன்னியாசி மறைந்தவுடன் கொடுந்துன்பங்கள் முனிவர்களைப் பற்றிக் கொண்டன. செய்வதறியாது அவர்கள் உதவிக்காக பிரம்மனை நாடினர். நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த பிரம்மன் முனிவர்களிடம் கீழ்க்கண்டவாறு கூறினார். நீங்கள் பெரும் தவறு இழைத்து விட்டீர்கள். முக்கியமாக அனைத்துக்கும் மேலான பரம்பொருள் ஒன்று இருப்பதை ஏற்கவில்லை. அதனை உணர்த்துவதற்கே எம்பெருமான் உங்களிடையே வந்தார். அவரை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை., சாபமும் கொடுத்தீர்கள். அந்த அபசாரமே வெப்ப நோயால் உங்களைத் துன்புறுத்துகிறது என்றார். ஈசனிடம் பக்தி உள்ளவன்., அதிதியாக வருபவரை., ஈசனாகவே எண்ணி உபசரிக்க வேண்டும் என்ற முறைகளின் கூற்றை நீங்கள் அறியவில்லை. அதிதியை உபசரித்து அழியாப் பேரின்பம் பெற்ற சதரிசனன் வரலாற்றைக் கேளுங்கள் என்று அந்த வரலாற்றைக் கூறினார் பிரம்மன்.

தொடரும்...

*அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்*
*ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் |*
*அஷ்டதரித்ர வினாஸன லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*
இன்று வைகாசி விசாக திருநாள். வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர்.

சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து அவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.

இது ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. வைகாசி மாதம்  விசாகம் நட்சத்திரம் தினத்தன்று இந்த அவதாரம் நிகழ்ந்தது. இதன் காரணமாக வைகாசி  விசாகம் தினம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுதுதான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. முருகனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.

பகை விலகும்.பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

விசாக நட்சத்திர தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும்.  பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம்

சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும் எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்தும் போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

இதனால்தான் வைகாசி விசாகம் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் முருகன் திருத்தலங்களில் கோலாகல விழா கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீகச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கை தோற்றப்பொழிவு அன்று தரிசனமாகும்.  பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

கன்னியாகுமரி அம்மனுக்கு ‘ஆராட்டு விழா’ இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமி மலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் விசாக திருவிழா தனித்தன்மை கொண்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் மண்ணை எடுத்து தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து சுயம்புநாதர் ஆலயத்தின் அருகில் குவிப்பார்கள். இதனால்  பாவ வினைகளும், நோய்களும் தீரும்.

செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

வைகாசி மாதம் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும், அரிசியும் தலையில் வைத்துக் கொண்டு உத்திரகோச மங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமியம் இவற்றை சிரசில் தெளித்துக் கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். பின் தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
சாண்டில்ய ரிஷி

ஒருமுறை ஜமதக்னி, யக்ஞவல்கியர், வசிஷ்டர் ஆகியோர் மற்ற ரிஷி, முனிகளுடன் கலந்தாலோசித்து வரகத் என்ற யாகத்தை நர்மதைக் கரையில் செய்ய முனைந்தனர்.

அனைத்து முனிவர்களும் அதில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
.
ஆனால் வேள்வி தொடங்கும் முன்புவரை மகரிஷி காஷ்யபர் வந்து சேரவில்லை.

அவர் பங்கேற்பு இல்லாமல் யாகம் முடிவு பெறாது என்பதை ஏனைய முனிவர்டள் உணர்ந்தனர்.

அவரது பெயரை தர்ப்பைப் புல்லில் கிரந்த எழுத்துகளில் எழுதி பூஜை செய்து ஆவாஹன முறைப்படி அவரை எழுப்ப முயன்றனர்.

அப்போது அங்கு காஷ்யப முனியும் வந்து சேர்ந்தார்.

அங்கு நடத்திக் கொண்டிருக்கும் பூஜை விவரத்தை அவர் கேட்டறிந்தார்.

`தங்களது ஸங்கல்பம் விரயம் ஆகக் கூடாது!' என அவர்களுக்கு உரைத்தவர், மந்திரங்களைத் தானும் உச்சரித்தபடி கமண்டலத்திலிருந்து நீரை அந்த தர்ப்பைப் புல்லின்மீது தெளிக்கிறார்.

ஜடாமுடியும் மரவுரியும் தரித்த ஒரு முனிவர் அந்த தர்ப்பை புல்லிலிருந்து எழுந்து காஷ்யபரையும் மற்ற முனிவர்களையும் வணங்குகிறார்.

அந்த இளம் முனிவருக்கு `சாண்டில்யர்' என்ற பெயரை மகரிஷி காஷ்யபர் அவருக்கு சூட்டுகிறார்.

மகரிஷி உபமன்யு அந்த யாகத்தில் பங்கேற்றவரிடம்
காஷ்யபர் சாண்டில்யருக்கு தங்களது புதல்வி சாண்டிலாவை
திருமணம் செய்விக்க வேண்டி
கோரிக்கை வைக்க,
உபமன்யு மகரிஷி உடன்பட்டு
சாண்டிலாவின் விவாகம் சாண்டில்யருடன் நடத்தப்படுகிறது.

சாண்டில்யரும் சாண்டிலாவும் நீண்ட நாட்கள் அந்த நர்மதை தீரத்தில் தவம் புரிகின்றனர்.

இவரின் குருக்கள் கவுசிகர்
கௌதம மகரிஷி
கைசூர்ய காப்பியா
வாத்ஸய வைசரப்
குஸ்ஸிரி
கௌடிண்யா
அக்னிவாசா
வாத்யவமக்ஸயன்
வைஸ்தபுரியா
பரத்வாஜ் ஆகியோர்.

சாண்டில்யர் சாண்டில்ய கோத்திரத்தின் முன்னோடி ஆவார்.

சாண்டில்யர் சாண்டில்யா உபநிஷத்தினை எழுதியவர் ஆவார்.

சாண்டில்யா பக்தி சூத்திரத்தை எழுதிய பெருமையும் அவருக்கு உண்டு

பகவத புராணத்தின் கூற்றுப்படி, ஹஸ்தினாபுர மன்னர் பரிக்ஷித்
அர்ச்சுணனின் பேரன்
அபிமன்யுவின் மகன் பரிக்ஷித்.
மற்றும் துவாரக மன்னர் வஜ்ரா
கிருஷ்ணரின் பேரன் வஜ்ரா ஆவார்.
இவர்களின் சில மனோதத்துவ சந்தேகங்களை தீர்ப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

சாண்டில்ய மஹரிஷிக்கும், கிருஷ்ணனுக்கும் தொடர்புண்டு.

இவர் கிருஷ்ணனது வளர்ப்புத் தந்தையான நந்தகோபனது குடும்ப குரு
என்று புராணங்கள் சொல்கின்றன.

துவாரகை மன்னர் வஜ்ரனுக்கு ஆலோசனை சொல்ல
சாண்டில்ய ரிஷியை அழைத்ததால்,
இந்தத் தொடர்பு உறுதியாகிறது.

இந்த சாண்டில்ய ரிஷி 12 ஜோதி லிங்கங்களில் முதல் ஜோதி லிங்கமான
சோமநாதரை, பிரபாச க்ஷேத்திரத்தில் நிறுவினார்
என்று பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.

கஜினி முகம்மதுவால் 17 முறை படையெடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட
சோமநாதர் ஆலயம் இது.

தக்ஷனால் சபிக்கப்பட்டு, அதனால் தேய்ந்த சந்திரன், சிவனிடம் அடைக்கலாகி,
சாப விமோசனம் பெறுகிறான்.

சிவன் முடியில் பிறைச் சந்திரனாகத் தங்கி விடுகிறான்.
சந்திரனால் வழிபடப்பட்ட அந்த சிவ ரூபமே,
சோமநாதர்
என்றழைக்கப்பட்டது. 

இங்கு பிறைச் சந்திரனை வழிபடுவது விசேஷம்.

குறுந்தொகையில் கடம்பனூர்ச் சாண்டில்யனார் என்னும் பெயரில்
இடம் பெற்றுள்ள பாடலில்,

பிறைச் சந்திரனைக் கன்னிப் பெண்கள் தொழும் விவரம்
கொடுக்கப்பட்டுள்ளது என்பதே.

“வளையுடைத் தனையதாகிப் பலர் தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே யன்னா”
(கு-தொ 307)

என்னும் அவரது பாடலில்

பெண்களது உடைந்த வளையலைப் போல
உருவத்துடன் பிறைச் சந்திரன் வானத்தில் தோன்றும் காட்சியையும்,
அதைப் பெண்கள் வழிபட்டதையும்
உவமையாகச் சொல்கிறார்.
ஶ்ரீ மஹாலிங்கஸ்வாமி மஹிமை:

"மஹாலிங்கம்!! மத்யார்ஜுனா!!" என்றபடி திருவிசைநல்லூர் க்ருஹத்திலிருந்து வெளியில் எட்டிப் பார்த்தார் ஶ்ரீதரஐயாவாள். பேய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. இம்மழையைத் தாண்டி, காவேரி வெள்ளம் ஓடும் வாய்க்காலைத் தாண்டி திருவிடைமருதூர் கோவிலுக்கு எப்படி போக முடியும்!! ஶ்ரீதர ஐயாவாளுக்கு ஒரே கவலை!! மஹாலிங்கத்தை தர்சிக்காமல் அன்னம் புசிப்பதில்லை என்ற வ்ரதத்தில் இருக்கும் ஶ்ரீதர ஐயாவாள் அன்றிரவு உபவாஸம் இருப்பதாகத் தீர்மாணித்துக்கொண்டார்!!

திடீரென்று ராத்ரி நேரத்தில் வீட்டுக் கதவை யாரோ படபடவென்று தட்டும் சப்தம்!! கதவைத் திறக்கிறார் ஶ்ரீதரர். திருவிடைமருதூர் மத்யார்ஜுனர் கோவில் சிவாச்சாரியார்!!

"அடாடாடாடா!! ஸ்வாமி!! இந்த கொட்ற மழைல நனைஞ்சுண்டு வந்துருக்கேளே!! உள்ளே வாங்கோ!! வாங்கோ!!" தொப்பலாக மழையில் நனைந்துகொண்டு வந்திருக்கும் மஹாலிங்கஸ்வாமி அர்ச்சகரை உள்ளே அழைத்துக்கொண்டு வந்தார் ஶ்ரீதர ஐயாவாள்!!

"மஹாலிங்கஸ்வாமி ப்ரஸாதம் கிடைக்காத நீங்க சாப்பிட மாட்டேள்ன்னு நேக்குத் தெரியும்!! இந்த மழையில நீங்க எப்படி வர முடியும்!! சரின்னு நானே வந்துட்டேன்!!" ஶ்ரீதர ஐயாவாள் கண்களில் ஜலம் தளும்பி வழிகிறது!! மஹாலிங்கத்தின் கருணையை நினைத்தா அல்லது சிவாச்சாரியாரின் அன்பை நினைத்தா!! இரண்டுமே கலந்து தான்!!

புது வஸ்த்ரம் கொடுத்து அவரை உடுத்திக்கச்சொல்லி விட்டு, இருவருமாக பேசிக்கொண்டே ஶ்ரீதர ஐயாவாளின் மனைவி பரிமாறிய அன்னைத்தை இருவரும் சாப்பிடனர்!! "ஆஹா!! ஸ்வாமி!! மழைல நினைஞ்சுண்டு வந்தது ரொம்ப பசிக்க ஆரம்பிச்சுடுத்து!! உங்க பார்யை கையாலே புசிக்கற அன்னம் தேவாம்ருதமா இருக்கு!!"

இருவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டின் கூடத்திலேயே படுத்துக்கொண்டனர்!! இருவரும் பேசிக்கொண்டே இருந்துவிட்டு எப்போது தூங்கினாரென்றே தெரியாதபடிக்கு ஶ்ரீதர ஐயாவாள் அசந்து விட்டார்!!

விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து பார்த்தால், பக்கத்தில் படுத்திருந்த சிவாச்சார்யாரைக் காணவில்லை.
"காலம்பற சீக்ரம் எழுந்து போய்ட்டார் போலருக்கே!! என்ன கார்யம்ன்னு தெரியல்லே!! நோக்கு ஏதாவது தெரியுமோ!! எப்போ புறப்பட்டார்ன்னு!!" தன் மனையாளிடம் கேட்டார் ஶ்ரீதர ஐயாவாள்.

"தெரியலியேந்நா!! நானும் உள்ள அசந்து தூங்கிட்டேன்!! சரி எழுப்ப வேண்டாமேன்னு கிளம்பிட்டார் போலருக்கு அண்ணா!! விடுங்கோ!! கோவிலுக்கு போறேளோன்னோ!! அங்க தான் இருப்பார்!! விஜாரிச்சுக்கலாம்!!" இது மனைவி.

"இல்லேடீ!! வாய்க்கால்லே வெள்ளமா ஜலம் ஓடறதேடீ!! எப்படி அவர் தாண்டி திருவிடைமருதூர்க்கு போவார்ன்னு தெரியல்லியே!!"

"ஏன்னா!! இதே வெள்ளம் தானே நேத்து ராத்ரியும் இருந்துருக்கும்!! எப்படி அவர் வந்தார்ன்னு நீங்க கேட்கல்லியே!!"

"அடாடாடா!! அது ஞாபகமில்லையே!! இந்த ப்ரளய ஜலத்துல மனுஷன் எப்படி நீந்திண்டு வந்தார்!! மஹாலிங்கம்!! மஹாலிங்கம்!!" என்றபடி அங்கலாய்த்துவிட்டு ஸ்நாநம் ஸந்த்யாவந்தனம் சிவபூஜை எல்லாம் முடித்து மத்யார்ஜூனேச்வரன் கோவிலுக்கு கிளம்பினார் ஶ்ரீதர ஐயாவாள்.

மழை நன்றாக விட்டிருந்தது!! வாய்க்காலில் முட்டிக்கால் அளவு ஜலம் ஓடிக்கொண்டிருந்தது!! எப்படியோ தாண்டி மத்யார்ஜுனர் கோவிலை அடைந்தார் ஶ்ரீதர ஐயாவாள்!!

நேராக மஹாலிங்கம் ஸந்நிதிக்கு சென்றார்!! அர்ச்சகரிடம் "ஏன் ஸ்வாமி!! மஹாலிங்கம் ஏதோ ரொம்ப களைப்பா இருக்கறாப்ல இல்லே!! மழை கொட்றதோல்லியோ!! ஒத்துக்கலை போலருக்கு!!" என்றார்!!

"இருக்கட்டும் ஸ்வாமி!! ஒரு நாள் தவறாத மஹாலிங்கம் ஸந்நிதியை தர்சிக்காத ப்ரஸாதம் வாங்காத நீங்க சாப்டதே இல்லே!! நேத்து ப்ரளயம் மாதிரி மழை!! என்னாலேயும் வந்து ப்ரஸாதம் கொடுக்க முடியல்லே!! என்ன பண்ணினேள்!! சிவாச்சாரியாரின் கேள்வியில் அதிர்ந்தார் ஶ்ரீதர ஐயாவாள்.

"ஸ்வாமி!! என்ன சொல்றேள்!! நீங்க தானே!! கொட்ற மழைல காவேரி வாய்க்காலைத் தாண்டி ஆத்துக்கு வந்து ப்ரஸாதம் கொடுத்தேள்!! புது வஸ்த்ரம் கூட கொடுத்தேன்!! அதைக் கட்டிண்டு எங்கூட சாப்டேள்!! விடியகாலம்பற தானே கிளம்பா போனேள்!! ராத்ரி எப்படி ப்ரளய ஜலம் மாதிரி ஓடற வாய்க்காலைத் தாண்டினேள்ன்னு கேட்கனும்ன்னு நினைச்சுண்ட்ருக்கேன்!!"

"என்ன சொல்றேள்!! நானா!! நான் வரவேயில்லையே!! இந்த மழைல வரமுடியல்லியேன்னு நீங்க என்ன பண்ணுவேளோன்னு நினைச்சுண்ட்ருந்தேனே!!"

"அப்போ!! வந்தது!!" மஹாலிங்கம் ஸந்நிதியில் பார்த்தால், நேற்று இரவு எந்த வஸ்த்ரத்தினை சிவாச்சாரியாருக்கு அளித்தாரோ, அதே வஸ்த்ரம் மஹாலிங்கத்தின் மேல்!!

ஶ்ரீதர ஐயாவாளுக்கு விதிர்விதித்து போய்விட்டது!! "ஆஹா!! ஆஹா!!அப்பா !! மஹாலிங்கம்!! மஹாலிங்கம்!! மத்யார்ஜுனா!! சங்கரா!! நீயா வந்தே!! எனக்காகக் கொட்ற மழைல நினைஞ்சுண்டு, உன் ப்ரஸாதத்தை நீயே கொடுத்து, புது வஸ்த்ரம் கட்டிண்டு, என் பக்கத்துலயே உட்கார்ந்து சாப்பிட்டு, என் கூடவே இருந்துண்டு, பரமேச்வரா!! பரமேச்வரா!! ஸர்வேச்வரா!! என்னால தாங்க முடியல்லே!!" இரண்டு கண்களும் ஜலத்தை ப்ரவாஹமாக பொழிந்தது!!

மஹாலிங்கத்தினுடைய அவ்யாஜ கருணையை என்னவென்று கூறுவது!! பக்தனுக்கும் பரமனுக்கும் இருக்கும் உறவே அலாதியானது!! பக்தனுக்காக பரமேச்வரன் எதையும் செய்வார் என்பதற்கான ப்ரத்யக்ஷ ஸாக்ஷியே ஶ்ரீதர ஐயாவாளுக்காக பரமேச்வரன் செய்தது!!

சிவ திவ்ய நாமங்கள், சிவ தோடயமங்கலம், சிவ நாம ஸங்கீர்த்தனம் பஜனை ஸம்ப்ரதாயத்தில் உயிர்ப்புடன் இன்றும் விளங்குவதற்கு  ஶ்ரீதர ஐயாவாளன்றோ காரணம்!!                                                                                                                                                                                                           
📕📕📕📕📕📕📕📕📕📕📕

*என் தடைப்பட்ட இமயப் பயணம்*
*பகுதி - 6*
*~~~~~~~~~~~~~~~~~~~~~~~*

     "நேற்று என் சகோதர அதிகாரியும் நானும் மிகுந்த ஆவலுடன் குறிப்பிட்ட அம்மரத்தடிக்கு சென்றோம். அங்கே இருந்த அந்தச் சாது அவரது கையைச் சோதித்துப் பார்க்க எங்களை அனுமதித்தார். அங்கு வடுவோ காயம் பட்ட அடையாளமோ இல்லை!

    "நான் ரிஷிகேசம் வழியாக இமயத்தின் தனிமையை நாடிச் செல்கிறேன்.' அந்தச் சாது எங்களுக்கு ஆசி கூறி உடனே புறப்பட்டார். அவருடைய புனிதத் தன்மையினால் என் வாழ்வு உயர்ந்ததாக உணர்கிறேன்."

    அந்த அதிகாரி பக்தி கலந்த ஆச்சரியத்துடன் கதையை முடித்தார்; அவரது அனுபவம் அவரை வழக்கத்தைவிட அதிகமாக நெகிழ வைத்திருந்தது. ஒரு கம்பீரமான சைகையுடன் அவர் அச்செய்தி வெளியாகி இருந்த பத்திரிக்கைத் துண்டை என்னிடம் கொடுத்தார். பரபரப்பான செய்திகளைத் திரித்துக் கூறும் பத்திரிக்கைகளுக்குரிய பாணியில் (அந்தோ, இந்தியாவில் கூட இந்நிலை இல்லாமலில்லை!) அப்பத்திரிகையின் நிருபர் அச்செய்தியை சற்று மிகைப்படுத்தியே இருந்தார்.சாதுவின் தலையே துண்டிக்கப்பட்டது போல அந்தச் செய்தி வெளியாகி இருந்தது.

    அமரும் நானும் தன்னைத் துன்புறுத்தியவனை,
கிறிஸ்துவைப் போன்று, மன்னிக்கும் தன்மை படைத்த அப்பெரிய யோகியைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினோம். இந்தியா, சென்ற இரண்டு நூற்றாண்டுகளாகப் பொருட் செல்வத்தில் ஏழையாக இருந்தாலும் அள்ள அள்ளக் குறையாத அருட் செல்வத்தை இன்றும் பெற்றுத்தான் உள்ளது; இந்தப் போலீஸ்காரரைப் போன்று சாதாரண உலக வாழ்க்கையில் ஈடுபட்ட மனிதர்கள் கூட எப்பொழுதாவது ஆன்மிகத்தின் சிகரங்களைச் சந்தித்து விட முடிகிறது.

     அவருடைய அதிசயமான கதையினால் எங்கள் அலுப்பைப் போக்கியதற்கு அந்த அதிகாரிக்கு நன்றி கூறினோம். அவர் எங்களை விட அதிர்ஷ்டசாலி என்பதை அவர் குறிப்பிட்டிருக்கலாம்; எவ்வித முயற்சியும் இன்றியே தெய்வீக ஒளி பெற்ற ஒரு மகானை அவரால் சந்திக்க முடிந்தது; எங்களுடைய தீவிரமான நாட்டம் ஒரு குருவின் திருவடிகளை அடையாமல் வன்மையான ஒரு போலீஸ் நிலையத்தில் முடிந்தது!

   இமயத்திற்கு மிக அருகில் இருந்தும், நாங்கள் பிடிபட்டு விட்டதால், எவ்வளவு தூரத்திலிருந்தோம்; சுதந்திரத்தை நாடும் எனது அவா இரு மடங்காகி விட்டது என்று அமரிடம் கூறினேன்.

    "சந்தர்ப்பம் கிடைத்ததும் நழுவிவிடலாம். நாம் புனிதமான ரிஷிகேசத்திற்கு நடந்தே செல்லலாம்." நான் ஊக்கமூட்டும் வகையில் புன்முறுவல் செய்தேன்.

    ஆனால் பலமான ஆதாரமாயிருந்த எங்கள் பணம் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டதால் என் தோழன் நம்பிக்கை இழந்தவனாகிவிட்டன்.

     "நாம் இந்த ஆபத்தான காட்டு பிரதேசங்களில் நடக்கத் தொடங்கினால் நாம் மகான்கள் வசிக்கும் இடத்திற்குப் பதிலாக புலிகளின் வயிற்றுக்குள் சென்று முடிவோம்."

     அனந்தாவும் அமரின் சகோதரனும் மூன்று நாட்கள் கழித்து வந்து சேர்ந்தனர். அமர் தன் சகோதரனை பாசம் கலந்த நிம்மதியுடன் வரவேற்றான். நான் சமாதானமடையவில்லை. அனந்தாவிற்கு என்னிடமிருந்து கடுமையான வசைச் சொற்களைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை.

    "உன் உணர்ச்சியை நான் புரிந்து கொள்கிறேன்," என் அண்ணன் ஆறுதலாக  மொழிந்தான். "நான் உன்னிடம் கேட்பதெல்லாம், நீ என்னுடன் காசிக்கு வந்து ஒரு முனிவரைச் சந்திக்க வேண்டும். பிறகு கல்கத்தாவிற்கு வந்து மிகுந்த துக்கத்தோடு இருக்கும் நம் தந்தையுடன் சில நாட்கள் தங்க வேண்டும். பிறகு நீ இங்கே  உன் குருவைத் தேடுவதை மறுபடி தொடங்கலாம்.

-பரமஹம்ஸ யோகானந்தர்

📕📕📕📕📕📕📕📕📕📕📕

தொடர்ந்து படிப்போமாக🙏
நமது #ஆலயங்களெல்லாம் எப்படி #மசூதிகளாக மாற்றப்பட்டது என்று பாருங்கள் நடுநிலை ஹிந்துக்களே...

நாம் முகலாயர்களால் கட்டப்பட்டது என நம்பிக் கொண்டிருக்கும் அத்தனை கட்டிடங்களும் அது தாஜ்மஹாலாக இருந்தாலும், தில்லி செங்கோட்டையாக இருந்தாலும், ஜூம்மா மசூதியானாலும், குதுப்மினாரானாலும் அல்லது எந்த முஸ்லிம்களால் கட்டப்பட்டவை எனப்படும் கோட்டைகள், மசூதிகளானாலும் சரி. அவை ஹிந்து அரசர்களால் கட்டப்பட்டவையே என ஆதாரங்களுடன் எடுத்து விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் முகலாய ஆட்சியில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற எந்தக் கட்டிடமும் முகலாயர்களால் கட்டப்படவேயில்லை என்கிறார் வரலாற்றாசிரியர் K.M. Elliot. The so called Mogul rule is the biggest fraud of Indian history என்கிறார் அவரது The History of India as told by its Historians book

 முகலாயர்கள் ஹிந்து அரசர்களால் கட்டப்பட அரண்மனைகள் அல்லது ஆலயங்களின் மேல்பகுதியில் மட்டுமே மாற்றங்களைச் செய்து அதனைத் தாங்கள் கட்டியதாகக் காட்டிக் கொண்டார்கள். உதாரணமாக தாஜ்மஹாலில் செதுக்கப்பட்டிருக்கும் குரானிய எழுத்துக்கள்.

பொ.யு. (பொது முகம்)பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால் உண்மையில்

ராஜபுத்திர அரசரான ஜெய்சிங்கிற்கு
 சொந்தமான

*"தேஜோ மஹாலயா"*

 என்றழைக்கப்பட்டதொரு அரண்மனை.. (அதனை சிவன் கோவில் என்றும் கூறுவதுண்டு). ராஜா ஜெய்சிங், ஷாஜஹானுக்கு அடிபணிந்து கப்பம் கட்டி வந்தவர்.

*ஷாஜஹான் அவரது மனைவி மும்தாஜின் மரணத்தை சாக்காக வைத்து அவரிடமிருந்து அந்த அரண்மனையை பிடுங்கிக் கொண்டார்.* ஷாஜஹானின்  "காதல்" மனைவியான மும்தாஜ் 1628-ஆம் வருடம் பாகல்பூரில் இறந்து அங்கேயே புதைக்கப்பட்டார். *ஆறுமாதம் கழித்து அதனைத் தோண்டியெடுத்து "தாஜ் மஹால்" என்றழைக்கப்படுகிற அரண்மனையின் நிலவறையில் மீண்டும் புதைக்கப்பட்டார்.* அப்படியானால் தாஜ்மஹால் ஆறே மாதத்தில் கட்டிமுடிக்கப்பட்ட ஒன்றா என்ன? *ஆனால் அதன் பின்னர் கிட்டத்தட்ட 22 வருட காலம் தாஜ்மஹால் மூடிக்கிடந்தது.* ஷாஜஹான் அதில் இன்றைக்கு நாம் காண்கிற மாற்றங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தார்.

தாஜ்மஹால் 1661-ஆம் வருடம் திறந்து வைக்கப்பட்டதாகக் கூறுவது மற்றொரு பொய்.

அவுரங்கஷீப் 1658-ஆம் வருடமே ஷாஜஹானை சிறையிலடைத்துவிட்டார் என்பதனைக் கவனிக்கையில் அது ஒரு பித்தலாட்டம் என்று தெரியவரும்.

 மேலும் ஷாஜஹான் ஒரு வடிகட்டின கஞ்சன். கிட்டத்தட்ட நூறு அறைகளும், சுரங்க வழிகளும் கொண்ட தாஜ்மஹாலைக் கட்டி முடிக்க அன்றைக்கே பல கோடி ரூபாய்கள் வேண்டும்.

அத்தனை பணத்தை செலவு செய்து ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜிற்காக தாஜ்மஹாலைக் கட்டினார் என்பது பெரும் புளுகு. அவரது அரண்மனை அந்தப்புரத்தில் ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். ஷாஜஹானுக்கும் அவரது மகளுக்கும் இருந்த தகாத உறவு நிரூபிக்கப்பட்ட ஒன்று. அப்படியாகப்பட்ட மனிதர் 25 வருடங்களாக தாஜ்மஹாலைக் கட்டினார் என்பது அண்டப்புளுகுதான். ஆனால் அப்படித்தான் நாம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம்.

ஷாஜஹான் ஒன்றும் பணக்கார அரசருமல்ல. அவரது ஆட்சி அமைதியானதாகவும் இருக்கவில்லை. ஷாஜஹானின் 30 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் 48 போர்கள் நடந்தன. தாஜ்மஹாலில் நடந்த குரானிய வசனங்களைப் பொருத்தும் வேலைகளைக் கண்ட 'டாவர்னியர்' என்கிற ஃப்ரெஞ்சுக்காரர் சாதாரண சாரம் கட்டுவதற்கு மரம் இல்லாமல் செங்கற்களைக் கொண்டு சாரம் கட்டியிருந்ததாகக் கூறுகிறார்.

 இவ்வளவு செலவு செய்து தாஜ்மஹாலைக் கட்டுகிற ஷாஜஹானுக்கு மரம் வாங்கக் கூடக் காசில்லை என்பது ஆச்சரியம்தான்.*

*இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்ட எத்தனை திட்டமிடல் இருந்திருக்க வேண்டும்? எவ்வளவு வரைபடங்கள் வரைந்திருக்கப்பட வேண்டும்? அப்படி எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை.... !

 ஷாஜஹான் தும்மினால் கூட எழுதி வைக்கும் அவரது வரலாற்றாசிரியர்கள் ஒருவர் கூட இந்தக் கட்டிடம் கட்ட நிகழ்ந்த திட்டமிடல்களை, செலவுகளைக் குறித்து ஒருவார்த்தை கூட எழுதவில்லை.

அப்படி எதுவும் நடந்திருந்தால்தானே எழுதி வைப்பார்கள்.

இன்றைக்கு இஸ்லாமிய கட்டிடக் கலையாக அறியப்படுகிற கும்மட்டங்கள் யாவும் ஹிந்துக் கட்டிடக்கலையே..!!* என்று ஆராய்ந்து முடிவிற்குக் வந்திருக்கிறார்கள்.

*They, the mugals and muslims in general, highjacked the hindu architecture and announced it as their own என்பது அவர்களின் இறுதியான முடிவு.*

*இஸ்லாம் பரவத் துவங்கிய நாளிலிருந்து கொலையும், கொள்ளையும் மட்டுமே நடத்தி வந்தவர்களுக்கு தங்களுக்கென ஒரு கட்டிட பாணியை உருவாக்கிக் கொள்ள எங்கே நேரமிருக்கும்?*

தாங்கள் வென்ற இடங்களில் இருந்த கட்டிடங்களை தங்களுடையதாக அறிவித்துக் கொண்டார்கள். படையெடுத்து வந்த பெரும்பாலான முஸ்லிம்கள் படிப்பறிவில்லாதவர்கள். தாஜ்மஹாலைப் போன்றதொரு மாபெரும் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கற்பனையோ அதற்கான கணித அறிவோ இல்லதவர்கள் அவர்கள்.

*ஆனால் இந்திய அரசர்கள் காலம்காலமாக பெரும் அரண்மனைகளையும்,  பேராலயங்களையும் கட்டியவர்கள். அவர்களிடம் பணிபுரிந்த ஹிந்து கட்டிடக் கலைஞர்கள் பெரும் திறமைசாலிகள். இந்தியாவிற்கு வந்தேறிய மொகலாயர்களிடம் அவர்களைப் போன்றவர்கள் அறவே இல்லை. இன்றைக்கு இருக்கும் முஸ்லிம் கட்டிடக் கலைஞர்கள் கூட முன்னால் ஹிந்துக்கள்தான். ஷாஜஹானால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் அவர்கள்.

இந்திய வரலாறெங்கும் நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட சுவாரசியமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆரம்பத்தில் நான் இதையெல்லாம் நம்பவில்லை. ஆனால் இதன் பின்னனியில் செய்யப்பட்டிருக்கும் ஆராய்ச்சிகள் சாதாரணமானவையல்ல என்று உணர்ந்த பின்னர் மேலும், மேலும் படிக்கத் தூண்டியது. 
..............🙏...........
படித்ததில் பிடித்த து