ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

17:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

               17:ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                 (கி.பி. 367 -கி.பி.375 வரை)

ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (பாலகுரு)காஷ்மீர் நாட்டு மந்திரியான 'தேவமிச்ரன்'என்பவரிவரின் திருமகனார்.பிறந்து பேசத் தொடங்கியது முதல் அத்வைத்தைப் பற்றியே பேசினார்.இவர் பிந்த பின் ஜைன மதத்தை தழுவினார் தேவமிச்ரன்.மகனது அத்வைத நெறியை மாற்ற சாம,தான,பேத,தண்டப் பிரயோகங்களை நடத்தினார்.
இரணியகசிபுவின் முயற்ச்சிகள் பிரகலாதனிடம் பலிக்காதது போல் தேவமிச்ரரின் முயற்ச்சிகள் மகனிடம் பலிக்காமல் போயின. இருதியில் தேவமிச்ரரின் புதல்வனை சிந்து நதியில் வீசி எறிந்தார் தந்தை.நீரில் தத்தளித்துத் தடுமாரிய சிறுவனை பாடலிபுரத்து
அந்தணரான'பூரிவசு'என்பவர் காப்பாற்றினார்.'சிந்து தத்தன்'எனப் பெயர் சூட்டி,வேத சாஸ்திரங்களைக் சொல்லிக்கொடுத்தார்.அச்சமயம் காஷ்மீரத்தில் விஜய யாத்திரையாக வந்த ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் இச்சிறுவனை ஒப்படைத்தார்.இதுவும் கடவுள் சித்தமே.அவரை 'பாலகுரு'என மக்கள் அன்போடு அழைத்தார்கள்.இவர் தனது 17வது வயதில் ஸ்ரீ காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக பதவி ஏற்றார்.தினமும் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தார்.பாலிக,பௌத்த மதத்தினரோடு வாதிட்டு அவர்களை நாட்டை விட்டுப் போகுமாறு செய்தார்.காஷ்மீர் மக்கள் இவருக்கு தங்கப் பல்லக்கை பரிசளித்தனர்.அதில் அமர்ந்து இந்தியா முழுவதும் விஜய யாத்திரை புரிந்தார்.எட்டாண்டு காலமே பீடாதிபத்யம் வகித்த இந்த குருரத்தினம் தமது இருபத்தி ஐந்தாவது வயதில் கி.பி.375-ஆம் ஆண்டு,பவ வருடம் ஆனி மாதம் க்ருஷ்ண பட்சம் தசமியன்று'நாசிக்'நகருக்கு அருகிலுள்ள 'த்ரயம்பகத்தில்'   சித்தியடைந்தார்.

சனி, 28 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 46 ॐ

பலரும் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு விஷயம் சிதம்பரம் கோயிலில் தமிழ்த் தேவாரத் திருவாசகங்கள் பாடப்படவில்லை என சிலர் தெரியாமல் சொல்லுகின்றார்கள் என்பதை நான் உறுதியாய்ச் சொல்லுவேன் பல வருஷங்களாய்ச் சிதம்பரம் கோயிலுக்குச் சென்று வருவதாலும் பல காலங்களிலும் கால பூஜை பார்த்திருப்பதாலும் எந்த எந்தச் சமயங்களில் திரு முறை ஓதுகின்றார்கள் என்பது நன்றாகவே தெரியும். கடைசியாய்ப் சென்ற வருஷம் கும்பாபிஷேஹத்துக்கு முதல்நாள் போன போது யாகம் நடக்க இருந்தது. அதற்கு முன்னால் ஓதுவார்கள் "திருமுறை" ஓதிய பின்னரே யாகம் ஆரம்பிக்கப்பட்டது. யாகம் நடக்கும் இடம் கருதியும் அதைப் புகைப்படம் எடுக்க முடியாது என்பதாலும் படங்கள் எடுக்க முடியவில்லை. மேலும் எங்களிடம் டிஜிட்டல் காமிராவும் கிடையாது. ஓதுவாரைத் தனியே கூப்பிட்டுப்படம் எடுத்துப் பேச வைத்து இணைப்பது என்றாலும். தீட்சிதர்களின் தனிப்பட்ட அவர்கள் வாழ்வைப் பற்றி நான் இங்கே எழுதவில்லை என்பதால் மற்றவற்றைத் தவிர்த்துக் கோயில் வழிபாட்டில் திருமுறை கட்டாயம் ஓதுகின்றார்கள் என்பதை மீண்டும் உறுதி கூறுகின்றேன். மேலும் அனைவரும் கூறும் இன்னொரு விஷயம் சிதம்பரம் கோயிலின் வைதீக முறை பூஜை பற்றி. அது என்னமோ நடுவில் வந்ததாய்ச் சிலர் கூறுகின்றனர். சைவ ஆகம முறைப்படி தான் முன்னர் இருந்ததாயும் பின்னர் வந்த தீட்சிதர்கள் அதை மாற்றி விட்டதாயும் சொல்கின்றனர். ஒருவேளை அவர்கள் சொல்வது சைவ ஆகமங்கள் கிரந்தத்தில் இருந்ததால் இருக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் ஆகமமும் வேதத்தின் ஒரு பகுதியே எனவும் ஆகமத்தை ஐந்தாவது வேதம் எனச் சொல்லுவார்கள் எனவும் ஒருமுறை படிச்சேன். சில புத்தகங்கள் கிடைக்கவில்லை. முக்கியமாய் தருமபுர ஆதீனத்தில் போட்டிருக்கும் புத்தகம் கிடைக்க வேண்டும். சிலவற்றைக் கூகிளாண்டவர் மூலம் தேடி எடுத்து விட்டேன். முக்கியமாய் ஆகமத்துக்கும் வைதீக முறைக்கும் உள்ள வித்தியாசம். ஆகமத்திலும் வடமொழி உண்டு. தென்னாட்டில் தான் ஆகம முறைப் பூஜை என்பதால் அது தமிழ் மொழியில் இருந்தது எனச் சிலர் கூறுகின்றார்கள். அது பற்றியும் தகவல் திரட்டுகிறேன்.

The worship services that follow at about 9:30, and then at noon, and at 5 in the evening and at 7 pm involve a combination of rituals involving ablutions to the Crystal Lingam and the ceremonial show of lamps to Nataraja and Sivakami amidst the chanting of Vedic and Tamil hymns. The Shiva Agama system of temple rituals followed in almost all of the Saivite temples in Tamilnadu, is not followed at Chidambaram. It is a unique worship protocol said to have been prescribed by Patanjali that is followed at this temple.

www.indiantemples.com/Tamilnadu/chidchid.html

மேலே குறிப்பிட்டிருக்கும் லிங்கில் போய்ப் பார்த்தால் தமிழிலும் திரு முறைகள் சொல்லுவதும் வைதீக முறைப்படிப் பூஜை செய்யப்படுவது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறதைப் பார்க்கலாம். மற்றவை நன்கு படித்துப்பார்த்துப் புரிந்து கொண்டு உள்வாங்கிக் கொண்டு வருகிறேன். தாமதத்துக்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதிகம் யாரும் படிக்கிறதில்லை என்றாலும் படிக்கிற ஒருத்தர் இரண்டு பேருக்காவது தாமதத்துக்குக் காரணம் தெரியணும் இல்லையா? ஒருவேளை கூகிளிலேயே சிதம்பரம் பற்றிய அனைத்துத் தகவல்களும் கிடைப்பதால் யாருக்கும் அவ்வளவாய் இதில் ஆர்வம் இல்லையோ என்னமோ என்று தோன்றுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 47 ॐ

ஆகமங்களைப் பற்றித் திருமூலர் கூறியவை தொகுத்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருமூலரின் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே வேதத்தின் சிறப்பைப் பற்றி 6 பாடல்களும் அதற்குப் பின்னர் ஆகமச் சிறப்பு என்ற தலைப்பிலே 10 பாடல்களும் வருகின்றன.

1.அதில் ஆகமங்கள் மொத்தம் 28 எனவும் அவை யாவுமே சிவபெருமான் அருளிச் செய்தவை எனவும் கூறுகின்றார். ஈசனின் ஈசான முகத்தில் இருந்து இவ்வாக்கியங்கள் வந்து ஆகமமாய் நிலை பெற்றது எனவும் சொல்கின்றார்.

அதற்கான பாடல்:

//அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.//

2.இந்த ஆகமங்களை எண்ணினால் 28 என்றாலும் அவை இந்த அளவில் நில்லாமல் அளவின்றியும் உள்ளன. இவற்றைப் பற்றிக் கூறிய 66 பேர்களைத் தவிர யானும் இது பற்றிச் சிந்தித்துத் துதிக்க ஆரம்பித்தேன்.

//அண்ண் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.//

3.இறைவன் அருளால் அருளப் பட்ட இந்த ஆகமம் ஆனது வானோர்களாலும் அறியப் படாத ஒன்றாகும். இவை அனைத்தும் சொல்லப்பட்டால் பூவுலக மாந்தர்க்கு அறிய முடியாத ஒன்றாகும்.

//அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.//

4.சிவலோகத்தில் "சதாசிவ"மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலானோர்க்கு உணர்த்திய ஈசன் அவற்றைப் பூலோக மாந்தர் அறியும்படி உரைத்த போது"சீகண்ட பரமசிவன்" ஆக இருந்து உணர்த்த அதைக் கேட்ட நந்தி எம்பெருமான் மெய்யுணர்வோடு அவற்றை உணர்ந்தவராய் மெய்யுணர்வோடு விளங்கப் பெற்றார்.

//பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.//

5.இத்தனை ஆகமங்களில் சிறந்ததான ஒன்பது ஆகமங்கள் நாத தத்துவத்தில் நிலைத்த சிவத்திடம் இருந்து வந்த காலத்தில் சிவமானது விந்து தத்துவத்தில் நிலைத்த சத்தியினிடத்தில் இதை உணர்த்த சத்தியானது தன்னில் இருந்து தோன்றிய சதாசிவருக்கும் சதாசிவர் சம்பு பட்ச மகேசுவரருக்கும் அங்கிருந்து அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர் பின்னர் உருத்திரர், திருமால், பிரம்மா என அனைவருக்கும் சென்றடைந்த இந்த ஆகமங்களில் ஒன்பதை எங்கள் ஆசிரியர் ஆன நந்தி எம்பெருமான் சீகண்ட பரமசிவனிடமிருந்து பெற்றார்.

//சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.//

6. அந்த ஆகமங்கள் முறையே 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6......7.....8.... சுப்பிரபேதம், 9. மகுடம் ஆகியவை ஆகும்.

//பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.//

7. இறை அருளால் சொல்லப்பட்ட இந்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும் அவற்றின் உட்பொருளை இப்பூவுலக மக்கள் அறியவில்லை எனில் அது அவர்களுக்குச் சரிவரப்பயன்படாது.

// அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.//

8.மக்கள் அனைத்து மெய்யுணர்வையும் உணராது புலனுணர்வே மிகப் பெற்று வாழுங்காலத்து அதைப் போக்கும் வண்ணம் சிவபெருமான் உமாதேவியார்க்கு "ஆரியம் தமிழ்" என்னும் இரு மொழிகளை உலகம் உய்யச் சொல்லித் திருவருள் செய்ய எண்ணங்கொண்டான்.

//மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.//

9.இறைவன் உயிர்களைப் பாசத் தளையினின்று விடுவிக்கின்ற முறையையும் பின் உயிர்கள் தன்னிடம் செலுத்தும் அன்பால் அவற்றைத் தன்னிலேயே நிலை நிறுத்தும் முறையையும் அவ்வாறு நிலை நிறுத்தும்போது உயிரானது பண்டைய நினைவுகளால் மோதி அலைப்புண்டு பாசத்திலே பொருந்தி நிற்பதையும் "தமிழ் மொழி வடமொழி" இவ்விரு மொழிகளுமே ஒரே மாதிரியாக உணர்த்தும். அவற்றைச் சரியானபடி உணராதவருக்குச் சிவஞானம் கை கூடுவது அரிதே யாகும்.

// அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.//

10.மொழிகள் பதினெட்டு உள்ளன அனைத்து மொழிகளுமே சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும் சிறப்பாகவும் அனைவரும் உணர அமைத்த வாயிலே. அதை உணராத கற்றோர் எத்தனை தான் கற்றிருந்தாலும் "கல்லாதவர்" என்றே உணரப் படுவார்கள்.

//பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.//

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

ஸாம வேதிகளின் புரட்டாசி மாத அமாவாஸ்யை  தர்பபணம்

28.09.2019  சனிக்கிழமை

ஆசமனம்.

அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவா + தாமோதரா

வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.

ஶூக்லாம் + ஸாந்தயே,
ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்
மோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸ்திர வாஸர யுக்தாயாம் உத்திரபல்குனீ நக்ஷ்த்ர யுக்தாயாம், சுப்ர யோக, சதுஷ்பாத கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ

ப்ராசீனாவீதி

தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

........கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம்

தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

…............கோத்ராணாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸமத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஶபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்

அமாவாஸ்ய புண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால்
துடைத்துக்கொள்ளவும்.
பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும். கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்

ஆவாஹந மந்த்ரம்

ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சன: ஸர்வவீரம் நியச்சத உசந்தஸ்வா ஹவாமஹ உசந்த ஸமிதீமஹி உசன்உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.

ஆஸன மந்த்ரம்

ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான் வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.

ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //

பித்ருவர்க்கம்

......கோத்ரான் ........ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

......கோத்ரான் ........ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

......கோத்ரான் ........ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் இல்லாதவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாத்ருஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாதாமஹவர்க்கம்

.....கோத்ராணாம்........ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: மாதுப்
பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஞாதாக்ஞாத, வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை)

கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்

மந்த்ரம்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

ப்ரதக்ஷிண மந்த்ரம்

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம: யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே

ப்ராசீனாவீதி

யதாஸ்தான மந்த்ரம்

ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சன: ஸர்வவீரம் நியச்சத உசந்தஸ்வா ஹவாமஹ உசந்த ஸமிதீமஹி உசன்உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே// அஸ்மாத், கூர்ச்சாத், வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்

மந்த்ரம்

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

மந்த்ரம்

ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர - ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து

பவித்ரத்தை பிரித்துபோட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்

ஶுபம்
ருதுக்கள்

சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸர
திங்கள் - இந்து வாஸர
செவ்வாய் - பவும வாஸர
புதன் - சவும்ய வாஸர
வியாழன் - குரு வாஸர
வெள்ளி - ப்ருகு வாஸர
சனி - ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸே
வைகாசி - ரிஷப மாஸே
ஆனி - மிதுன மாஸே
ஆடி - கடக மாஸே
ஆவணி - ஸிம்ம மாஸே
புரட்டாசி - கன்யா மாஸே
ஐப்பசி - துலா மாஸே
கார்த்திகை - வ்ருச்சிக மாஸே
மார்கழி - தனுர் மாஸே
தை - மகர மாஸே
மாசி - கும்ப மாஸே
பங்குனி - மீன மாஸே.
 ால் சாமி கோவில் - ஓர் அதிசயம்.

சுமார் 900 வருடங்களுக்கு முன்பு திருமங்கலத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவில் "மோதகம் " என்ற இடத்தில் இருக்கும் ஒரு குன்றின் மேல் கட்டப்பட்ட குடவரைக் கோவில்.

இன்றைக்கு மோதகம் என்றழைக்கப்பட்ட அந்த ஊர் இல்லை.

முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன மண்டபங்கள், அவற்றைத் தாங்கும் பிரமாண்ட தூண்கள், அதில் திருமாலின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் சிற்பங்கள் என அனைத்தையும் ஒரே ஒரு செங்குத்துப் பாறை போன்ற ஒரு குன்றில், குன்றைக் குடைந்து அடிவாரத்தில் அரங்கநாதருக்கு ஒரு குடவரைக் கோயிலும், குன்றின் மேல் கோபால் சாமிக்கு ஒரு கோவில் என இரு வகையானக் கோயில்களைக் அக்காலத்தில் கட்டியிருக்கிறார்கள்.

வழக்கம்போல பாறைகளை எப்படி எதை வைத்துப் பிளந்தார்கள்? எப்படி சிற்பங்களை செதுக்கினார்கள்? எப்படி கீழிருந்து மேலே கொண்டு சென்றார்கள் போன்ற. வியப்புகளையெல்லாம் தாண்டி, அதிசயிக்க வைக்கும் ஒரு விசயம் Nature ventilation by air circulation - அதாவது இயற்கையின் துணை கொண்டு அமைக்கப்பட்ட காற்றோட்டம்.

குன்றின் மேல் கோபால் சாமி சந்நிதி மிகக்குறுகியது. மிக அதிகம் புளுக்கம் கொண்ட இடம். அந்த இடத்தில் குளுகுளு காற்றோட்டத்தை அதுவும் 900 வருடங்களுக்கு முன்னர் இயற்கையான முறையில் உருவாக்கியிருப்பது "காற்றோட்ட அறிவியலின் உச்சம் "

நம் வியப்பிற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் இருப்பது அறிவியலால்கூட. விளக்க முடியாமல் இருப்பது. அந்த செங்குத்துக் குன்று இரண்டாகப் பிரிந்து, அதில் கருடன் கை கூப்பி வணங்கியது போன்ற ஒரு சிலை மாதிரியான அமைப்புத் தெரியும்.

உண்மையில் இது சிலையுமல்ல! யாரும் செதுக்கியதும் அல்ல!

கருடன் தன் முதுகில் கோபால் சாமியை வைத்துக் கொண்டு வணங்கியது போல, தானாகவே காற்றின் போக்கால் இயற்கையாக அமைந்தப் பாறை.

இதை இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட இந்தக் கோணத்தில் பார்த்தால் மட்டுமே தெரியும்.

அப்பண்ண சுவாமிகள்!

நாலு முழ வெள்ளைக் கதர் வேட்டியும், ஜிப்பாவுமே அவரின் வழக்கமான ஆடைகள். கிராம வாசிகளோடு சேர்ந்து நின்றால், அவரைத் தனியாக இனம் காண முடியாது. அந்த அளவுக்கு எளிமை. ஆனால், அவரது கண்களில் அபரிமிதமான ஈர்ப்பு சக்தி இருந்தது. அவர்தான் அப்பண்ண சுவாமிகள்.அவர் ஒருமுறை திருவண்ணாமலை சென்று சேஷாத்ரி சுவாமிகளைத் தரிசனம் செய்தார். அப்போது, போக்குவரத்து குறைந்த ஒரு பின்தங்கிய பகுதியில் நிரந்தரமாகத் தங்கிக் கொண்டு, அங்குள்ள மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய். உன் ஆத்ம சாதனையையும் தொடர்ந்து வா! என அறிவுறுத்தினார் சேஷாதிரி சுவாமிகள். அதன்படியே, அப்பண்ண சுவாமிகள் வட குமரையை தன் நிரந்தர தங்குமிடமாகக் கொண்டார். அவ்வூரில் தம் அன்பர்களின் நிதி உதவியுடன் ஒரு பள்ளியை நிறுவினார். குடிநீர் கிணறு தோண்டினார்; மாவட்ட ஆட்சியரையும் வளர்ச்சி அலுவலரையும் அணுகி சாலை வசதிக்கு ஏற்பாடு செய்தார். கோயில்களைப் புதுப்பித்தார். இப்படிப் பல திருப்பணிகள் செய்தார். காஞ்சி மகாசுவாமிகள், ஒருமுறை கள்ளக் குறிச்சியில் இருந்து ஆத்தூருக்குப் பயணம் செய்தார்.வடசென்னிமலையில் பல்லக்கை நிறுத்தச் சொல்லி அருகிலிருந்தவரிடம், இவ்விடம் வைஷ்ணவ குலத்து அதிவர்ணாச்ரமி ஒருவர் இருக்கிறாரே! அவரை அழைத்து வாருங்கள் என்றார். அப்பண்ண சுவாமிகளை, பெரியவரிடம் அழைத்து வந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, காஞ்சி முனிவர் தன் கழுத்திலிருந்த துளசி மாலையை எடுத்து அப்பண்ண சுவாமிகளுக்கு அணிவித்தார். பின்னர் அருகிலிருந்தவர்களிடம், இவர் நல்ல அநுபூதிமான் என்றார்.

அப்பண்ண சுவாமிகள், திருவண்ணாமலை ரமண மகரிஷியையும், திருக்கோவிலூர் ஞானானந்தரையும் தரிசித்து ஆசி பெற்றுள்ளார். இப்படி மகான்களோடு மகானாய் வாழ்ந்த சுவாமிகள், தம் அன்பர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். ஒருமுறை சுவாமிகள் ராமேஸ்வரத்தில் சோமநாதன் செட்டியார் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். சுவாமிகள் தங்கியிருந்த அறை, செட்டியார் பணம் வைக்கும் அறையாக இருந்தது. அச்சத்தின் பேரில் செட்டியார், சுவாமிகள் இரவு தங்கியிருந்த அறைக்கு வெளிப்பூட்டு போட்டுவிட்டார். விடியற்காலையில் எழுந்து குளித்து வழக்கம்போல சிவபூஜையில் ஈடுபட்டார் செட்டியார். சுவாமிகள் தங்கியிருந்த அறை பூட்டியபடியே இருக்க, பொழுது புலர்ந்தவுடன் சுவாமிகள் பல்குச்சியுடன், வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததைக் கண்ட செட்டியாருக்கு பெரும் அதிர்ச்சி. தன் தவறை உணர்ந்து சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். தண்ணீரைப் பாலாக்கியும், நீரில் விளக்கெரித்தும், காசநோயை குணமாக்கியும், நள்ளிரவில் அந்தரத்தில் நிஷ்டையில் இருந்தும் சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பல. அந்த மகான், நாளைக்கு இங்கு பலர் வருவார்கள். எதற்கும் ஆயத்தமாக இருங்கள் என்று தன் இறுதித் தருணத்தைக்கூட சூசகமாகச் சொல்லி, தமது 48-ஆம் வயதில் முக்தி அடைந்தார். அவரது அதிஷ்டானத்தில், பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் ஜயந்தி விழாவும், முக்தி அடைந்த தினமான மகாளய அமாவாசையில் ஆராதனை விழாவும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 45 ॐ

சிதம்பரம் கோவிலின் பூஜை முறைகள் தீட்சிதர்களால் வைதீக முறைப்படி செய்யப்படுகிறது. மற்றச் சிவன் கோயில்களில் சைவ ஆகம முறைப் படியான வழிபாடுகள் நடந்து வருகின்றன என்றாலும் இன்றளவும் சிதம்பரம் கோயிலின் வழிபாட்டு முறைகள் மற்றச் சிவன் கோயில்களில் இருந்து வேறுபட்டதாயும் சொல்லப் படுகிறது. கோயில்களுக்கெல்லாம் கோயில் என்று சொல்லப்படும் இந்தச் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் "போதாயனர்" என்னும் ரிஷியின் சூத்திரங்களின் வழி முறைகளைப் பின் பற்றுவதாய்ச் சொல்லப்படுகிறது. மேலும் பூஜாவிதிகள்"பதஞ்சலி" முனிவரால் நடராஜரின் ஆக்ஞைப் படி எழுதப்பட்டதாயும் சொல்லப்படுகிறது. பூஜா பதஞ்சலம் என்னும் இந்தப் பூஜாவிதிகளே இன்றளவும் பின்பற்றப்படுவதாயும் சொல்கின்றனர். ஸ்ரீ சிதம்பரேஸ்வர நித்ய பூஜா சூத்திரம் என்னும் இந்த பதஞ்சலி பத்ததியே இன்றளவும் அனுசரிக்கப் படுகிறது. நடராஜரும் தங்களில் ஒருவர் என்னும் இவர்கள் எண்ணமும் இன்றளவும் மாற்ற முடியாமல் யாராலும் அதை உடைக்க முடியாமலும் உள்ளது. சரித்திர பூர்வமாய்ப் பார்த்தால் இந்தச் சிதம்பரம் கோயிலுக்குப் பல அரசர்கள் சக்கரவர்த்திகள் திருப்பணிகள் செய்து வந்திருக்கிறார்கள் என்றாலும் அந்நிய தேசப் படை எடுப்புக்கும் இது ஆளாகி இருக்கின்றது. முஸ்லிம்களின் படை எடுப்பின்போது மாலிக்காஃபூர் வந்து சிதம்பரம் கோயிலை ஆக்கிரமித்த போது நடந்த ஒரு விஷயம்.

இதோ: ஹிந்து சமுதாயத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தில்லை வாழ் அந்தணர்கள் ஆற்றியுள்ள சேவை அளப்பரிய ஒன்றாகும். மாலிக் காஃபூரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் போது தமது உயிரினை தியாகம் செய்து தமிழகத்தின் ஆன்மிக கலைப் பொக்கிஷங்களான தெய்வத் திருவுருவச்சிலைகளை காத்தவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். அமீர் குஸ்ரு தாரிக்-இ-அலை எனும் நூலில் பின்வருமாறு தில்லை வாழ் அந்தணர் அனுபவித்த கொடுமைகளை கூறுகிறான். மாலிக் மிகுந்த கவனத்துடன் அஸ்திவாரங்களை பெயர்த்தெடுத்தான். பிராம்மணர்கள் விக்கிர ஆராதனையாளர்கள் தலைகள் அவர்கள் கழுத்துக்களிலிருந்து நடனமாடியபடி தரையில் அவர்கள் கால்களில் விழுந்தது. இரத்தம் ஆறாக ஓடிற்று. என்ற போதிலும் அந்தணப்பெருமக்கள் தம் தலைகளை கொடுத்த போதிலும் தர்மத்தை விடவில்லை. தெய்வத் திருவுருவச்சிலைகளை காப்பாற்றினர். இன்று உலகெங்கிலும் நடராஜ தாண்டவ சிற்பம் அடைந்துள்ள மேன்மையான வணக்கத்திற்கு தெய்வத்திருவருளும் உங்கள் முன்னோர்களின் தியாகங்களுமே காரணம். அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இந்தக் கட்டுரை தீட்சிதர்களின் நடராஜ பக்தியை வெளிக்காட்டுகிறது. இது தவிரத் திப்பு சுல்தான் வந்த போது நடராஜத் திருமேனியை தீட்சிதர்கள் எடுத்துக் கொண்டு போய்த் திருச்சூரில் மறைத்து வைத்திருந்ததாயும் ஆலப்புழையில் மறைத்து வைத்திருந்ததாயும் செவிவழிச் செய்திகளும் கூறுகின்றன. 1781-ல் நடைபெற்ற இரண்டாவது மைசூர் யுத்தத்தில் "கூட்" என்னும் தளபதி சிதம்பரம் கோயிலைத் தாக்கியதாகவும் பின்னர் துரத்தி அடிக்கப் பட்டதாயும் கர்நாடக நவாபுகளைப் பற்றிய சரித்திரக் குறிப்புக்களில் காணக் கிடைக்கிறது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடம் மேலக் கோபுரம் என்றும் அதன் அடையாளங்கள் இன்னும் அந்தக் கோபுரத்தின் மாடங்களில் காண முடிகிறது எனவும் சொல்கின்றனர். இந்தச் சமயத்தில் தீட்சிதர்கள் நடராஜத் திருமேனியை எடுத்துக் கொண்டு திருவாரூர் போய் அங்கே சபாபதி மண்டபத்தில் மறைத்து வைத்திருந்ததாயும் தஞ்சையை அப்போது ஆண்டு வந்த மராட்டிய அரச வம்சத்தினர் இதற்கு உதவியதாயும் கூறப் படுகிறது. இதற்குச் சான்றாக ஆயிரக்கால் மண்டபத்தில் க்ரந்த எழுத்துக்களால் அமைந்த ஒரு ஸ்லோகத்தில் இந்த விஷயம் சொல்லப் பட்டு நடராஜர் சக வருஷம் 1695 கலியுகாதி 4874 அதாவது கி.பி. 1773-ம் வருஷம் திருவாரூரில் இருந்து "சித்சபை" வந்தடைந்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது.

இதைப் பற்றி வரும் நாட்களில் விரிவாய்க் காண்போம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
மயிலாடுதுறை மாவட்டத்தில்  கோழிகுத்தி என்ற கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ வானமுட்டி பெருமாள் கோவிலில் இந்த மாதம் முப்பதாம் தேதி சனிக்கிழமை விஜயதசமி அன்று காலை பன்னிரெண்டு மணியளவில் அக்னியால் அம்பு எரியும் திருவிழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்படவுள்ளது. இந்த அம்பு எரியும் விழாவில் கலந்து கொண்டு தரிசித்தால் நாம் செய்த பாபங்கள் போகும். எரியும் அம்பு மூலம் நமது பாபங்கள் விலகும். நம்மிடம் உள்ள கஷ்டங்கள் எல்லாம் விலக்கி நல் வழி படுத்துவார் வானமுட்டி பெருமாள். தீராத வியாதிகள் எல்லாம் நீங்கப்பெறலாம்.
இந்த விழாவானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆகையால் இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி நாம் செய்த பாபங்களை போக்கிக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அனைவரும் வருக வானமுட்டி பெருமாளின் அருளை பெருக. இக்கோவில் சுமார் 800 வருடங்கள் பழமையானது. மூலவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் ஸ்வாமிக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்வாமிக்கு அதி விஷேசமான தைலம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 800 வருடங்களாக  ஈரமாகவே இருக்கின்றார். வேருடன் கூடிய மூலவர் அதனால் ஸ்வாமி வளர்ந்து கொண்டே இருப்பது மிகவும் அரிதான ஒன்று. அதனால் தான் என்னவோ இவருக்கு வானமுட்டி பெருமாள் என்ற திருநாமமோ என்று என்று கிறேன்.
முழுவதையும் படியுங்கள் நண்பர்களே!!!

மிக பழமைவாய்ந்த பெருமையுடையதும்; காவிரி வடகரை வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும்; பிதுர் தோஷம், ஹத்திதோஷம், சனி தோஷம் போன்ற தோஷங்களுக்கு நிவர்த்தி தலமாகவும் விளங்குகின்ற தலம் கோழிகுத்தி ஸ்ரீ வானமுட்டி பெருமாள் கோவில்.

மூலவர் திருநாமம் : ஸ்ரீவானமுட்டி பெருமாள், பக்தப்ரியன், வரதராஜன்.

இறைவி : ஸ்ரீதயாலட்சுமி {மூலவரின் திருமார்பிலே உள்ள தாயார்}, பூமாதேவி {சிலாரூபம்}

விமானம் : சத்திரவிமானம் (குடை போன்ற அமைப்பு).

தீர்த்தம் : விஸ்வபுஷ்கரணி, பிப்பிலமகரிஷி தீர்த்தம்.

ஸ்தல வரலாறு : குடகுமலைச்சாரலில் வாழ்ந்த நிர்மலன் என்ற அரசன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். ஒருமுறை அவன் காட்டு வழியாக வந்து கொண்டிருந்த போது நாரத மாமுனிவர் மிக இனிமையாகப் வீணை இசைத்துக்கொண்டிருந்த தெய்வீகமான ஒலியை செவியுற்று வணங்கி அடிபணிந்து நின்றான். முனிவர் உபதேசித்த மந்திரத்தை உருகி ஜெபிக்க தொடங்கினான். அப்போது அசரீரி ஒலித்தது. நான் பெருமாளின் குரலாய் ஒலிக்கிறேன். உனக்கு ஒரு கடுமையான தோஷம் உள்ளது. இந்த தோஷம் நீங்க காவிரிக்கரை வழியாக உன் யாத்திரையை தொடங்கு. மூவலூரில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் {சிவன்} உனக்கு வழிகாட்டியாக வருவார். வழியில் உள்ள திருத்தலங்களில் எல்லாம் நீராடு. எங்கு உன்மேனி பொன் வண்ணமாக மாறுகிறதோ அங்கேயே தங்கிவிடு என்றது.

அதன்படி மன்னன் காவிரிக்கரை வழியாக தன் பயணத்தை துவக்கினான்.
ஓரிடத்தில் அவனது மேனி பொன்நிறமாக மாறியது. மகிழ்ச்சியடைந்த மன்னன் பெருமாளுக்கு நன்றி கூறி மனமுருகி வழிபட்டான். அந்த இடத்தில் தோன்றிய பெரிய அத்தி மரத்தில் நாராயணன், சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் மன்னனுக்கு காட்சி கொடுத்தார். மன்னனின் பாவங்கள் இங்கு உடனடியாக நீங்கியதால் இத்தலம் கோடிஹத்தி என அழைக்கப்பட்டது.
கோடிஹத்தி என்றால் சகல பாவமும்நீங்குமிடம் என்று பொருள்.
இதுவே காலப்போக்கில் மருவி கோழிகுத்தி ஆனது. இதன் பின் மன்னன் பெருமாள்  பக்தனாகி தவமிருந்து ரிஷியாகவே மாறி விட்டான். பிப்பல மகரிஷி என மன்னனை மக்கள் அழைத்தனர்.

பிப்பலர் காவிரிக்கரையில் தவம் புரிய ஆரம்பித்தார். அவர் தவம் செய்த இடத்தில் தற்போது ஒரு மண்டபம் உள்ளது. இதன் அருகில் ஓடும் காவிரி தீர்த்தத்தை பிப்பல மகரிஷி தீர்த்தம் என அழைக்கிறார்கள்.
பிப்பிலர் தவம் செய்த சிறுமண்டபம் தீர்த்தக்கரையோரத்தில் இன்றும் உள்ளது.
பெருமாள் வானமுட்டி பெருமாள் என்று அனைவராலும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறார்.

பிப்பிலர் அருளிய சனி ஸ்தோத்திரம்

ஓம் கோணஸ்த பிங்கலே பப்ரு
கிருஷ்ணோ ரௌத்ராந்த கோயம்
சௌரீ- சனைச்ரே மந்த பிப்பலா தேன ஸமஸ்ஸதுத்
ஏதானி தச நாமானி பிராத ருத்தாய ய: படேத்
சனைச்சர கிருதா பீடநகதாசித் பவிஷ்யதி.

கோழிகுத்தி வானமுட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட
சரபோஜி மகராஜா தனது யுத்ததோஷம்  நீக்க  வேண்டிக்கொண்டார். பிப்பிலர்க்கு அருளியது போல் {வானளாவிய காட்சி}
சரபோஜி மகாராஜாவுக்கும் இந்த அத்திமரத்தில் காட்சி தந்தருளினார்.
ஆஹா! கனவிலும் நினைவிலும் காணக்கிடைக்காத காட்சியென்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மன்னர் தன்னைப் போல அனைவரும் பலனடைய வேண்டும் என்று எண்ணினார்.

சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் கொண்டு சதுர்புஜனாய் தனக்கு பெருமாள் காட்சி தந்த அற்புத திருக்கோலத்தை ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சிலைவடித்து ஆலயம் எழுப்பி பூஜை செய்தார். விஸ்வரூப பெருமாள் என்பதால்
வானமுட்டி பெருமாள் என்ற திருநாமம் கொண்டார். மகேந்திரவர்மன் போன்ற பிற மன்னர்களும் திருப்பணி செய்துள்ளார்கள் என்பதற்கு 7ஆம் நூற்றாண்டு, 10ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் உள்ளன.
அந்தக் கல்வெட்டில் பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. மூன்று நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டு வைணவ ஆகம விதிப்படி  சுற்றுப்பெருமதில்களுடன் ஆலயம் அமைத்து முறைப்படி காலபூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ராஜகோபுரத்தின்கீழ் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயனின் அருட்காட்சியை வணங்கி விட்டு பலிபீடம் கொடிமரத்தைக் கடந்து ஸ்ரீவிநாயகப் பெருமானை தரிசிக்கலாம். கருடாழ்வாரிடம் உத்தரவு பெற்று உள்மண்டபத்தில் நுழைந்து ஆலயக் கருவறை விமானத்தின் கீழ் 14 அடி உயரத்தில் மார்பில் ஸ்ரீ தயாலக்ஷ்மியுடன் விளங்கும் வானமுட்டி பெருமாளின் தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம் பெறலாம்.

மூலிகை வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. இன்று வரை காயாமல் வேர்களும் நிறம் மாறாமல் ஈரத்தன்மையுடன் வேரே திருவடியை தாங்கி நிற்கும் அதிசய தோற்றத்துடன் அருகில் பூமாதேவி சிலாரூபத்துடன் ஸ்ரீவானமுட்டி பெருமாளின் வடிவழகை மெய்ம்மறந்து மெய்யுணர்வோடு வணங்கலாம்.

பெருமாள் மார்பில் மகாலட்சுமி
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளையும் தரிசிக்கலாம். தாயாருக்கு தனிச்சந்நிதி கிடையாது.
உள்மண்டபத்தில் மூலவருக்கு வலப்புறம் சக்கரத்தாழ்வாரும் இடப்புறம் யோக நரசிம்மரும் கிழக்கு நோக்கியவாறும்
நர்த்தன கிருஷ்ணர் தெற்கு நோக்கியவாறும் அருள் புரிகின்றனர்.
மூலவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. சாம்பிராணி, தைலக்காப்பு மட்டுமே.

பெருமாள் வளர்ந்து கொண்டே செல்வதால் அவர் மேலும் வளராமல் இருக்க தானியம் அளக்கும் மரக்காலை கிரீடம் போன்று திருமுடியில் சாற்றியுள்ளனர். அபிஷேகம் செய்ய விரும்புபவர்கள் யோக நரசிம்மருக்கும் வருண மூலையில் உள்ள வரதராஜப் பெருமாளுக்கும் செய்து பலனடையலாம்.

வெளிப்பிராகாரத்தின் வடதிசையில் தெற்கு நோக்கிய வண்ணம் விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பிலமகரிஷி இம்மூவரும் அருள்புரிகின்றனர். பிப்பில மகரிஷி அருளிய சனி ஸ்தோத்திரம் பெருமாள்
தியான ஸ்லோகம் ஆலய வழிபாட்டு நேரங்களில் ஓதப்படுகின்றன.
ஈசான்ய திக்கில் மேற்கு நோக்கி தனிச்சந்நிதி கொண்டு ஏழு ஸ்வரங்களையும் தன்னில் கொண்டவராக சப்தஸ்வர ஸ்வரூப ஆஞ்சனேயர் அருள்புரிகிறார்.

சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஞ்சனேயரை வழிபட்டு இன்னல்கள் நீங்கப்பெறுகிறார்கள். சங்கீதம், நாட்டியம் போன்ற கலைத்துறைகளில் வளம் பெற தரிசித்து பயனடையலாம். அனுமன்  சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது. ஆஞ்சநேயரின் வாலில் கட்டப்பட்டுள்ள மணியை தலை மீது தூக்கி வைத்துள்ளதும் சிறப்பு.

திருப்பதி சீனிவாசப் பெருமாளையும்,
சோளிங்கர் யோக நரசிம்மரையும்,
காஞ்சிபுரம் அத்திவரதராஜப் பெருமாளையும் ஒன்றாக தரிசித்த பலன் கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாளை தரிசித்தால் கிடைக்கும் என்று ஸ்தலபுராணம் சொல்கிறது. மகத்துவம் வாய்ந்த மார்கழி மாதத்தில் இங்கு வழிபாடுகள் செய்தால் பன்மடங்கு பலனைப் பெறலாம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா சனிக்கிழமை வருவதால் வெகுசிறப்பாக இருக்கும். சிந்தையில் மாலவனை நிலை நிறுத்தி வழிபடுவதும் வீதி தோறும் இறைவன் திருநாமத்தைப் போற்றிப்பாடுவதும் ஆடுவதும் வைணவமரபு. பக்தர்கள் கூடும் கூட்டத்தில் இறைவனும் இணைந்து உடனிருப்பான் என்று நம்மாழ்வார் தமது பாசுரத்தில் கூறுகிறார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ வளப்படுத்தும் வானமுட்டி பெருமாளை வழிபடுவோம்.

ஆலயத் தொடர்புக்கு: எம்.எஸ். வரதராஜ பட்டாச்சார்யார், செல்: 97872 13226.

அமைவிடம் : மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையிலுள்ள மூவலூருக்கு வடக்கே, சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கோழிகுத்தி. மயிலாடுதுறையிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் சோழம் பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கி அரை கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு கோழிகுத்தி செல்லலாம். மினி பஸ்ஸில் ஆலய வாசலுக்கே செல்லலாம். காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் கோவில்  திறந்திருக்கும்.
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.16:ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
(கி.பி. 329 -கி.பி.367 வரை)

ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர். இவரது தந்தை பெயர் கேசவ சங்கரர். பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் "அச்சுத கேசவர்" இவர் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இவர் பல முறை விஜய யாத்திரைகளை மேற்க்கொண்டவர். அப்போது ச்யாநந்தூர நாட்டு மன்னரான குலசேகரனை தன் அருள் நோக்கால் கவிஞ்சராக்கியவர். ஜைனராக மாரிய அந்தணர்களுக்கு "ஜராத்ருஷ்டி" எனப் பெயரிட்டு அவர்களை சிந்து நதிக்கு அப்பால் செல்லும் படி கட்டளை பிறப்பித்தார். பிற மதங்கள் இப்படி ஆக்கிரமிக்காமலிருக்க அரும்பாடுபட்டவர். இவர் கி.பி. 367ஆம் ஆண்டு அக்ஷய வருடம் சுக்ல பக்ஷம் அஷ்டமியன்று காஷ்மீரத்திலுள்ள 'கலாபூரி' என்னுமிடத்தில் சித்தி அடைந்தார். அந்த ஸ்தலம் அது முதல் இன்று வரை 'உஜ்வல மஹாயதி பரம்' என்றழைக்கப்பட்டுகிறது.

வியாழன், 26 செப்டம்பர், 2019

16:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

              16:ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                               (கி.பி. 329 -கி.பி.367 வரை)

ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர்.இவரது தந்தை பெயர் கேசவ சங்கரர்.பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம்"அச்சுத கேசவர்"இவர் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இவர் பல முறை விஜய யாத்திரைகளை மேற்க்கொண்டவர்.அப்போது ச்யாநந்தூர நாட்டு மன்னரான குலசேகரனை தன் அருள் நோக்கால் கவிஞ்சராக்கியவர்.ஜைனராக மாரிய அந்தணர்களுக்கு "ஜராத்ருஷ்டி"எனப் பெயரிட்டு அவர்களை சிந்து நதிக்கு அப்பால் செல்லும்படி கட்டளை பிறப்பித்தார்.பிற மதங்கள் இப்படி ஆக்கிரமிக்காமலிருக்க அரும்பாடுபட்டவர்.இவர் கி.பி. 367ஆம் ஆண்டை,அக்ஷய வருடம் சுக்ல பக்ஷம்,அஷ்டமியன்று காஷ்மீரத்திலுள்ள 'கலாபூரி'என்னுமிடத்தில் சித்தி அடைந்தார்.அந்த ஸ்தலம் அது முதல் இன்று வரை 'உஜ்வல மஹாயதி பரம்' என்றழைக்கப்பட்டுகிறது.
ஸ்வஸ்தி வாசனம்

|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார- த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித- ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத- ஸ்ரீமதேகாம்ரநாத- ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத- ஸாக்ஷாத்கார- பரமாதிஷ்ட்டான- ஸத்யவ்ரத நாமாங்கித- காஞ்சீ திவ்யக்ஷேத்ரே- சாரதாமட ஸுஸ்த்திதாநாம்- அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ- ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த- துந்துலித- மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத- சாந்தி தாந்தி பூம்நாம்- ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக- ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம்- நிகில பாஷண்ட ஷண்ட- கண்டகோத்காடநேந- விசதீக்ருத வேத வேதாந்த மார்க- ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய- ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே- ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம்- அந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் ததந்தே அதிஸ்ட்டானே சிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் ஜயேந்த்ர சரஸ்வதீ ஸம்யமீந்த்ரானாம் ததந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் அந்தே வாஸிவர்ய சங்கர விஜயேந்த்ர சரஸ்வதீ பாதானாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

நம் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை இந்த ஸ்வஸ்தி வாசன ஸ்லோகம் பாராயணம் செய்து வணங்குதல் என்பது நம் பாரம்பரியம் என்கின்றனர் நம் பெரியோர்கள். வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 44 ॐ

இந்தக் கோயிலின் சகல நிர்வாகங்களும் தீட்சிதர்களையே சார்ந்தது. தீட்சிதர்கள் தவிர மற்றப் பணியாளர்களும் உண்டு. ஓதுவார்கள் மடப்பள்ளிச் சமையல்காரர்கள் சுத்தம் செய்பவர்கள் மற்றப் பணியாளர்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள்  இருக்கின்றனர். முன் காலங்களில் அனைவருக்கும் கோயிலில் இருந்து உணவு கொடுத்து வந்த பழக்கம் போல தற்சமயமும் கொடுத்து வந்தாலும் தற்காலத் தேவையை அனுசரித்து அவர்களுக்குச் சிறிய அளவில் சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு உள்ளேயே ஏற்படும் வழக்குகளைக் கோவிலில் கூட்டம் கூட்டி விவாதித்து அவர்களுக்குள்ளேயே தீர்த்தும் கொள்கின்றனர். ஒரு பொது மனிதன் அனைத்துத் தீட்சிதர்கள் வீட்டுக்கும் சென்று கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைத் தெரிவிக்கிறார். கூட்டம் "தேவசபை" அல்லது "கல்யாண மண்டபத்"தில் ஏற்பாடு செய்யப்படும். கட்டாயமாய் தீட்சிதர் குடும்பத்து அனைத்து ஆண்களும் கூட்டத்துக்கு வர வேண்டும் என்பதை ஒரு நியதியாகவே கடைப்பிடிக்கிறார்கள். கனகசபையிலிருந்து ஒரு விளக்கு மிகப் புனிதமாய்க் கருதப் பட்டு எடுத்து வரப்படுகிறது. அந்த விளக்கு வந்தாலே நடராஜரே நேரில் வந்ததாய்க் கருதப்படுகிறது. அவர்களுக்குள் உள்ள தனிப்பட்ட மனமாற்சரியங்களைக்களைந்து விட்டுக் கோயிலின் பொதுவான நிர்வாகச் சீர்திருத்தத்தில் மாற்றங்களோ முடிவுகளோ ஏகமனதாய்க் கொண்டு வரப்படுகிறது. ஒரு தனி தீட்சிதர் தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் அதை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம் எனினும் பொதுவாக அனைத்தும் ஏற்கப்படுகிறது. அவை தனியான ஒரு புத்தகத்தில் பதிவும் செய்யப்படுகிறது. கோவிலின் தினசரி நிர்வாகம் மட்டுமில்லாமல் உற்சவ காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வேலைகள் கோவிலின் தினசரி பாதுகாப்பு இரவு பாதுகாப்பு என அனைத்துமே விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு அவைகள் பதிவு செய்யப்படுகின்றன.

கோவிலின் மொத்த வழிபாடும் ஐந்து வகையாகப் பிரிக்கப் படுகிறது. 1. நடராஜர் கோவில், 2. அம்மன் கோவில், 3. மூலஸ்தானக் கோவில், 4. தேவசபை, 5. பாண்டியநாயகர் கோவில் என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு குறிப்பிடப்பட்ட தீட்சிதர் குழு எனவும் பிரித்துக் கொண்டு செயல்படுகின்றனர். இம்முறையில் அனைத்து தீட்சிதர்களும் அனைத்து இடங்களிலும் பாகுபாடு இன்றிப் பணிபுரிய முடியும். ஒரு முறை என்பது 20 நாட்களைக் குறிக்கும். அந்த நாட்களில் கோவிலின் சாவிகள், நகைப்பெட்டிகளின் சாவிகள் என அனைத்துமே மாறி மாறி ஒவ்வொருத்தர் பாதுகாப்பிலும் 20 நாட்கள் இருக்கும். பொது தீட்சிதர்கள் 9 பேர் கொண்ட நிர்வாகக்குழுவையும் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் ஒருத்தர் காரியதரிசியாக அந்த வருடம் நியமனம் பெறுவார். துணைக்காரியதரிசியை காரியதரிசி நியமிப்பார். கோவிலின் நந்தவனம் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பும் தீட்சிதர்களையே சாரும். இம்முறையில் இவர்கள் சுழற்சி முறையில் எந்த விதமான வருத்தமோ தடங்கலோ இல்லாமல் அனைத்து தீட்சிதர்களுமே கோவிலின் நிர்வாகத்திலும் பூஜை முறைகளிலும் பங்கு பெறுகின்றனர்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

புதன், 25 செப்டம்பர், 2019

கேட்டை - மூட்டை - செவ்வாய்

ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில் பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி - வார - நக்ஷத்ர - யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம் என்பது சாஸ்திர வாக்கியம்.

ஒரு அமாவாஸ்யை திதியன்று செவ்வாய் கிழமையும் கேட்டை நட்சத்திரமும் கூடியிருந்தன. இன்னைக்கு கேட்டை, மூட்டை, செவ்வாய்க்கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு அதை ஒரு தோஷம் என்பார்கள். பரிகாரம் செய்யணும்" என்றார்கள். பெரியவா "அப்பா குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு.  லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச்சொல்லு..."

பரிகார ஹோமம் நடந்து கொண்டிருந்த போது பெரியவா அங்கே வந்து பார்த்தார்கள். கேட்டை, மூட்டை, செவ்வாய்க்கிழமை என்றால் என்ன அர்த்தம்? கேட்டை என்பது நட்சத்திரம், செவ்வாய் என்பது கிழமை, மூட்டை என்றால் என்ன? என்று கேட்டார்கள். எவருக்கும் பதில் சொல்லத் தெரிய வில்லை.

பெரியவாளே சொன்னார்கள்.

அது மூட்டை இல்லை மூட்டம். மூட்டம் என்றால் அமாவாஸ்யை பேச்சு வழக்கில் மூட்டை, மூட்டை என்று மோனை முறியாமல் வந்துடுத்து. தொண்டர்களுக்கெல்லாமே ஆச்சரியமாக இருந்தது. பெரியவா இம்மாதிரி நுட்பமான விஷயங்களை எங்கிருந்து தெரிந்துகொண்டார்கள்?
புதுப்பெரியவாள் 1971-71 கேரளத்துக்கு விஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில் நகர்வல்த்திற்கு ஏற்பாடு
 
செய்திருந்தார்கள். ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல் வரிசையில் ஊர்வலம் வந்துக் கொண்டிருந்தார்கள். தீடீரென்று ஏற்பட்ட
 
மின் தடையால் எல்லா விளக்குகளும் அணைந்தன. குட்டி யானை மிரண்டது. நல்ல காலமாக இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்
 
விளக்குகள் எரியத்தொடங்கியது. இடையில் புதுப் பெரியவாளும் யானையிலிருந்து பத்திரமாக இறங்கி விட்டிருந்தார்கள்*.

*வீதிவிளக்குகள் அணைந்ததும், பக்தர் திரு.டி.வி.சுவாமிநாதன் தன் இல்லத்திற்கு விரைந்து விளக்குகள் அணைந்த காரணத்தைக்
 
கேட்க மின் வாரியத்துடன் தொடர்பு கொண்டார். அதற்குள் எல்லாம் சரியாயிற்று. மீண்டும் அவர் ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளப்
 
புறப்படும் சமயம் காஞ்சியிலிருந்து டெலிபோன் அழைப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.நாகராஜ அய்யர்
 
விசாரித்தார். “ஊர்வலத்தில் ஏதாவது குழப்பம் உண்டாயிற்றா?” திரு.டி.வி.சுவாமிநாதன் நடந்ததை விவரித்துவிட்டு, வியப்புடன்
 
வினவினார், “சம்பவம் நடந்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் எப்படி உங்களுக்குத் தெரிந்தது?”
 
அதற்கு ஏ.நாகராஜ அய்யர், ”ஸ்ரீ பெரியவாள் சிவாஸ்தானத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்களாம், “நாற்பத்தைந்து வருஷங்களுக்கு
 
முன் நான் மலையாள ராஜ்ஜியத்தில் யாத்திரை செய்த போது இருந்ததை விட, புது சுவாமிகள் ஊர்வலத்திற்க்கு இன்று
 
தடபுடலான் ஏற்பாடுகள்…” இவ்விதம் சொன்ன பெரியவா, தீடீரென்று, “ஒரே இருட்டாய் போயிடுத்தே, யானை மிரண்டுடுத்தே?”
 
என்று சொன்னாராம், உடனே எர்ணாகுளத்திலிருந்த உங்களை கூப்பிட்டு, “என்ன நடந்தது?”” என்று அறியப் பணித்தார் என்று
 
கூறினார்.

அங்கு நடந்தது சிவாஸ்தானத்தில் இருந்த பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?, பெரியவாளுக்கு,, சிவாஸ்தானம் தான்
 
நேத்ரஸ்தானமா???
மாதன்னா/அக்கன்னா

கோபண்ணாவின் அந்த உறவினர் இருவருமே கோபண்ணாவின் தாய்வழி மாமன்மார் ஆவர். அவர்களில் பெரிய மாமன் பெயர் மாதன்னா- இளைய மாமன் பெயர் அக்கன்னாவாகும். இவர்கள்தான் கோபண்ணாவை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஹைதராபாத்தை தானீஷா எனும் நிஜாம் ஆட்சி புரிந்து வந்தார். இந்த தானீஷா இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் ஓர் அரசனுக்குரிய தலைமைப் பண்பு அவ்வளவும் இவரிடம் நிரம்பி இருந்தது. குடிமக்களை பாரபட்சமின்றி வழி நடத்தி ஆட்சி புரிந்து வந்தார். இவரது ஆட்சியில் வரி வசூல் மிகச் சிறப்பான முறையில் இருந்தது. நலத்திட்டங்களும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த தானீஷாவின் அவையில் இந்துக்களும் நல்ல நல்ல பதவிகளில் இருந்தனர். பிற மதத்தவரின் சுதந்திரத்தில் தானீஷாவும் தலையிடாதபடி ஒரு நல்லாட்சி நடைமுறையில் இருந்தது.

தானீஷாவிடம் கோபண்ணாவின் மாமன்மார்கள் இருவருக்கும் நல்ல பெயரும் வரவேற்பும் இருந்தது. அதுவே கோபண்ணாவுக்கும், தானீஷாவுக்கும் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது. கோபண்ணாவை விதிதான் வழி நடத்தியபடி இருந்தது. அந்த விதியே கோபண்ணாவுக்கு தானீஷா மூலமாக தாசில்தார் என்னும் வேலையை வாங்கித் தந்தது. ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக அந்த நாளில் பத்ராசலம் எனும் ஊர் விளங்கிற்று. இங்கே கோதாவரி நதியின் பாய்ச்சல் ஒரு புறம்- மறுபுறம் ஒரு குன்றின் மேல் ராமபிரானது திருக்கோயில்! இந்தத் திருக்கோயிலை ஒரு காலத்தில் தம்மல்லி என்னும் பிராம்மணப் பெண் தன் சுய முயற்சியால் கட்டியிருந்தாள். அவள் இருந்த வரை கோயிலில் ஆறுகால பூஜைகளும் அன்னதானங்களும் தடபுடலாக நடந்தன. அவள் காலத்துக்குப் பிறகு அந்தக் கோயிலையும் கலிமாயை சூழ்ந்து கொண்டது. அந்தக் கோயிலில் ஒரு வேளை பூஜை நடைபெறுவதே பெரும் பாடாக இருந்தது. அப்படி ஒரு கோயில் கொண்ட பத்ராசலத்துக்கு ஒரு தாசில்தார் இருந்து அவர் காலமாகி விடவும் அங்கே ஒரு தேவை இருந்தது.

ஹைதராபாத் தானீஷாவும் மிகச் சரியாக கோபண்ணாவை பத்ராசலத்துக்கு தாசில்தாராக நியமனம் செய்தார். கோபண்ணாவுக்கு மனமெல்லாம் ராமபிரான் மேல்தான் இருந்தது. ஆகையால் ஆன்மீக வழியில் செல்லவே விரும்பியது. ஆனால் வயிற்றுப் பாடும் கொல்லம் கொண்ட பெல்லத்து அனுபவங்களும் வேறு வழியின்றி இந்த தாசில்தார் பொறுப்பை ஏற்க வைத்தன. மாமன்னர்களுக்கு நன்றி கூறி விட்டு பத்ராசலத்துக்கு வந்து பொறுப்பை ஏற்று அதை திறம்படவே செயல்படுத்தினான் கோபண்ணா. ஒரு தாசில்தாரின் கடமைகளை மிக நேர்மையாக நிறைவேற்றினான். குறிப்பாக வரிவசூலில் ஒரு பொன் கூட வீணாகதபடி அதை வசூல் செய்து அவ்வளவு பொன்னையும் யானை மேல் ஏற்றி வீரர்களின் காவலுடன் ஹைதராபாத்துக்குக் கொண்டு சென்று அங்க கஜானாவில் ஒப்படைத்து தானீஷாவின் தனிப்பட்ட பாராட்டையும் பெற்றுக் கொண்டான். வாழ்க்கை இப்படியே போய்விடுமா என்ன? பத்ராசலத்துக்கு வந்த நாள் முதலாக மலை மேல் உள்ள அந்த ராமன் கோயில் கோபண்ணாவின் கவனத்துக்கே வரவில்லை. ஒருநாள் ஒரு கால பூஜைக்காக பட்டாச்சாரி ஒருவர் கோயிலுக்குப் போவதை கோபண்ணா கவனிக்கவும் தான் விதியும் தன் விளையாட்டை கோபண்ணாவிடம் தொடங்கியது.

நெற்றியில் திருமண் காப்போடு கையில் திருத்துழாய் தட்டும் நைவேத்ய பிரசாதமுமாக மலை ஏறப்போன அந்தப் பட்டரை தடுத்து கோபண்ணா விசாரிக்கத் தொடங்கினான். அப்போது தான் மலை மேல் ராமர் கோவில் இருப்பதே தெரிய வந்தது.ஹேராம்!இது என்ன கொடுமை...

பத்ராசலத்தில் ஒரு ராமாகோயில் இருக்க நான் அது தெரியாத ஒரு அதிகாரியாக மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேனே... என்று கோபண்ணா மனது பதைத்துப் போனது. அவரோடு சேர்ந்து மலைமேல் சென்று பார்க்கவும் கண்களைக் கரித்தது. கோயில் அந்த அளவு பாழ்பட்டு தூர்ந்து போய் கிடந்தது.பட்டரே, என்ன இது அநியாயம்... என் பிரபுவின் கோயில் இப்படியா இடிபாடுகளோடு இருப்பது?

நான் என்ன செய்யட்டும்... தம்மக்கா இருந்தவரை குறையில்லை. அதன்பின் இந்த பத்ராசலத்தில் எவ்வளவோ மாற்றங்கள். பிறமதத்தவர்களும் அதிகரித்து விட்டனர். உத்சவங்கள் கொண்டாடவோ, திருவிழாக்கள் காணவோ யாரும் ஒன்று சேர்வதில்லை. அதோடு பலர் ஊரை விட்டே போய் விட்டனர். நான் இருக்கும் வரை ஏதோ ஒரு கால பூஜை நடக்கும். எனக்குப் பிறகு அதுவும் கேள்விக்குறிதான்...பட்டர் சொன்னது கோபண்ணாவின் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.இல்லை பட்டரே! இந்த கோயிலை நான் இனி இப்படியே விடமாட்டேன். என்னை பிரபு எதற்காக இந்தப் பகுதிக்கு தாசில்தார் ஆக்கினார் என்பது தெரிந்து விட்டது. ஒரு அரசாங்க அதிகாரியாக இப்போதே உத்தர விடுகிறேன்.

இனி ஆறுகால பூஜைகள் நடக்கட்டும். இடிபாடுகளை சரிசெய்து இந்தக் கோயிலை நான் புதுப்பித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கப் போகிறேன்... என்ற கோபண்ணா சொன்னபடியே செய்தும் முடித்ததுதான் விந்தை.பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப்பணம் அவ்வளவும் கோயிலுக்கே செலவாயிற்று. மலைமேல் உயர்ந்த கோபுரத்தோடு கோயிலும் கம்பீரமாக நிமிர்ந்து எழும்பி நின்றது.உள்ளே சீதா ராம லட்சுமணனோடு அனுமனுக்கும் சேர்த்து சன்னதி. கோவிலின் அழகும் எழிலும் அக்கம் பக்கத்தவர்களை எல்லாம் சுண்டி இழுத்தது. சாரிசாரியாககோயிலுக்குவந்துமனம்குளிரராமபிரானையும்வணங்கினார்கள்.கோபண்ணாவுக்கும் அரிய செயலை செய்துவிட்ட பூரிப்பு. அதேசமயம் தானீஷாவுக்கு வசூலித்த வரிப்பணத்தை சென்று கட்ட வேண்டிய நாளும் வந்தது. ஆனால் அதையெல்லாம்தான் கோயில் கட்ட செலவழித்தாகி விட்டதே...?

இப்போது என்ன செய்வது?

கோபண்ணா மனைவி கலங்கிப்போய் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்டாள்.என்ன செய்தேனோ அதைச் சொல்வேன்... நான் என்ன நம் குடும்பத்துக்கா செலவு செய்தேன்... அவ்வளவும் கோயிலுக்குத்தானே போனது. ஒரு ஊரில் கோயில் சிறப்பாக இருந்தால் அல்லவா மழை பொழியும். மக்களும் மன அமைதி யோடு வாழ்வார்கள். எனவே நான் மக்களுக்கான நல்லதைத்தான் செய்துள்ளேன். இதை தானீஷா பாராட்டவே செய்வார். சொல்லப்போனால் அவர் செய்யத் தவறியதை நான் செய்துள்ளேன். எனவே எனக்குப் பரிசுகளும் அளிப்பார்... என்றான் கோபண்ணா.

வாழ்வில் நாம் நினைப்பது போலவா எல்லாமே நடக்கிறது?

தானீஷா முன்னால் கோபண்ணா ஒரு குற்றவாளியாக நிறுத்தப்பட்டான். தானீஷா அவன் சொன்ன எதையும் கேட்கவே இல்லை. நீ தன்னிச்சையாக நடந்து கொண்டாய்... அரசாங்கப் பணத்தைக் கொண்டு கோயில் கட்டினாய். இது ராஜ துரோகம் எனவே உன்னைச் சிறையில் இடுகிறேன்- என்று கோபண்ணாவுக்கு சிறைத்தண்டனை விதித்து விட்டார்.சிறையில் அடைக்கும் முன் கோபண்ணாவிடம் இன்னும் கூட வரிப்பணம் இருக்கக்கூடும் என்று கருதி கோபண்ணாவை சவுக்கால் அடித்து சித்ரவதை செய்தும், ஹைதராபாத் நகரமே தெருவில் நின்று பார்த்திட கட்டி இழுத்துச் சென்றும் செய்த கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.ஒரு மனிதன் பக்தியோடு கோயில் கட்டியதற்கா இத்தனை பெரிய தண்டனை? கோயில் கட்டிய விதம் தவறாக இருந்தாலும் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை என்பது எந்த வகையில் சரி?
இவ்வளவு தூரம் கொடுமைகள் நடக்கும்போதும் அந்த ராமன் என்ன செய்தான்? ஏன் வேடிக்கை பார்த்தான்? இது என்ன சோதனை...?

கேள்விகள் எழுகிறதல்லவா?

இந்தக் கேள்விகள் கபீர்தாசரிடமும் எழும்பியது.

பக்தன் பொருட்டு அவரே ராமபிரானிடம். பிரபு இதெல்லாம் எந்த வகையில் சரி? என்று கேட்கவும் செய்தார். ராமபிரானும் அதற்கான பதிலைக் கூறினான்...கபீர்... கலியுகத்தில் எப்போதும் விளைவுகளுக்காகவே செயல்பாடுகள். ஆனால் நாம் உலகமாயை காரணமாக செயலுக்குத்தான் விளைவு என்று கருதுவதும் பேசுவதுமாக இருக்கிறோம்.கோபண்ணா என் பரம பக்தன்தான்! பக்தி கராணமாக அவன் உண்மையாக வாழ்கிறவனும்கூட... ஆனால் இப்போது அவன் அனுபவிக்கும் கொடுமைக்கெல்லாம் காரணம் அவனது பூர்வ கர்மம்தான்!

முன் ஜென்மத்தில் அவன் அனேக கிளிகளை கூண்டில் அடைத்து வளர்த்தான். அப்போது அவைகளின் சிறகுகளை வெட்டியும் அவைகளுக்குச் சரியாக உணவளிக்காமலும் அவைகளை சித்ரவதை செய்தான். அதனால் பல கிளிகள் இறந்து போயின. அந்தப் பாவம்தான் இப்போது அவனுக்கான சிறைவாசமாகவும் பழியாகவும் உருவாகியுள்ளது.எதற்கும் ஒரு அளவு உண்டு. இந்தத் துன்பத்துக்கும் அளவு இருக்கிறது. இவை அவ்வளவும் இன்றிரவோடு தீர்ந்து விடும். நாளை முதல் அவன் கோயில் கட்டிய புண்ணியமும் பக்தியின் பயனும் அவனை இனி வழி நடத்தும். அதுமட்டுமன்றி காலகாலத்துக்கும் அவன் பக்தி இனி வரும் மாந்தர்களால் போற்றும் ஒன்றாகவும் இருக்கும். கூடவே அவர்கள் கோபண்ணாவின் கர்மத்துய்ப்பையும் சேர்த்தே எண்ணுவார்கள்.

நம் வாழ்வில் நம் மனமறிந்து தவறுகள் செய்திடாத நிலையில் ஒரு துன்பம் நேர்கிறதென்றால் அதை பூர்வ கர்மம் என்று கருதி மகிழ்ச்சியோடு ஏற்று அனுபவிக்க வேண்டும். வெற்றிகரமான வாழ்வும் இன்பமான வாழ்வும் எந்த நிலையிலும் ஞானத்தைத் தராது. அது ஆசாபாசங்களை வளர்த்து கலிமாயையில் நம்மை நிரந்தரமாக சிக்க வைத்து விடும். எனவே நிரந்தரமற்ற மாயா இன்பங்களை பற்றற்ற பற்றோடு அனுபவிக்க வேண்டும். துன்பத்தையே உளமாற விரும்ப வேண்டும். அதைக் கண்டு அச்சம் கூடாது. நடுநிலையான ஞானிகள் இவ்வாறுதான் நடந்து கொள்வர். கோபண்ணாவும் எல்லா துன்பங்களையும் பார்த்து விட்டான். பழிச் சொல்லையும் கேட்டு விட்டான். அவன் இனி மாயை வசம் சிக்காமல் பக்குவமாக நடந்து கொள்வான் என்றார். கபீருக்கும் பெரும் ஞானோபதேசம் கிடைத்தது. கபீர் மூலமாக இந்த உலகுக்கும் கிடைத்தது. அன்று இரவு கோபண்ணாவின் பக்திக்குண்டான வரசித்தி செயல்படத் தொடங்கியது. ராமனும் லட்சுமணனுமே தானீஷாவுக்கு கோபண்ணா செலுத்த வேண்டிய பொன் மூட்டையை எடுத்துக் கொண்டு இரண்டு வேடுவர்கள் போல தானீஷா முன் போய் நின்றனர்.

பொற்காசுகளை தானீஷா முன் கொட்டினர். அரசே... இது கோபண்ணா செலுத்த வேண்டிய வரிப்பணம். அவரை சிறையில் இருந்து விடுவியுங்கள் என்றனர். தானீஷாவும் நீங்கள் யார் என்று கேட்காமல் இருப்பாரா? நாங்கள் கோபண்ணாவின் ஏவலர்கள். அவர் தரும் பிரசாதத்துக்காக நாங்கள் எதையும் செய்வோம்... அடேயப்பா... இவ்வளவு நாட்கள் எங்கே போய் விட்டீர்கள்? நாங்கள் யாத்திரை போயிருந்தோம், இங்கு வந்து பார்க்கவும்தான் உண்மை தெரிந்தது. உடனே எங்கள் உழைப்பில் சம்பாதித்த பொன்னோடு புறப்பட்டு வந்துவிட்டோம்.

அது சரி... உங்கள் பெயர்?

என் பெயர் ராம்ஜி... இவன் லஷ்மண்...

நல்லது... இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

ஊருக்கு வெளியே உள்ள சிறையில் இருக்கும் கோபண்ணாவை விடுவியுங்கள். முன்னதாக வரிப்பணம் பெற்றுக்கொண்ட ரசீதும் அத்துடன் விடுதலைப் பத்திரமும் எழுதி கையெழுத்திட்டு தாருங்கள்...
தானீஷாவும் அப்படியே செய்தார் ராம லட்சுமணர்களும் புறப்பட்டனர்!
ஊருக்கு வெளியில் உள்ள சிறைச் சாலையில் கோபண்ணா மனம் உடைந்து போயிருந்தான். போதும் நான் பட்ட பாடு... என்னைப் பார்ப்பவர்கள் இனி எந்த நல்ல காரியத்தையும் செய்ய முன்வர மாட்டார்கள். நானும் இனி வாழ்வதை விட சாவது மேல்... ராமபிரபுவும் என்மேல் கருணை காட்டப் போவதில்லை. அவர் வரையில் நானொரு பாவி.

இனி இந்த பாவியும் உயிர் வாழக் கூடாது...- என்கிற முடிவுக்கு வந்து விஷத்தைக் குடிக்க முடிவு செய்கிறான் கோபண்ணா. அதன் பொருட்டு சிறைத் தோட்டத்தில் பணியாற்றும்போது விஷச்செடி ஒன்றை அடையாளம் கண்டு கொண்டு அதில் இருந்து பறித்து வந்திருந்த விஷ இலைகள் அரைக்கப்பட்டு விழுதாக அவன் பக்கத்தில் அவன் சாப்பிடத் தயாராயின! முன்னதாக இறுதியாக தியானிக்க எண்ணி தியானத்தில் ஆழ்ந்தான்! இதற்குப் பிறகே அற்புதங்கள் அரங்கேறத் தொடங்கின. ராம லட்சுமணர்கள் சிறைக்கு வந்து அங்குள்ள அதிகாரியிடம் விடுதலைப் பத்திரத்தைக் காட்டி அவரையும் அழைத்துக் கொண்டு கோபண்ணா இருந்த இருண்ட சிறைக்கு வந்தனர்.

சிறையில் கோபண்ணா! சிறை அதிகாரி கதவைத் திறந்து விட்டவனாக விலகிட ராம லட்சுமணர் கோபண்ணா அருகில் சென்றனர். அந்த விஷவிழுது தீயவாடையோடு அவர்கள் நாசியைக் குடைந்தது. ராமன் லட்சுமணனை அர்தபுஷ்டியோடு பார்க்கவும் அந்த விஷ விழுதை லட்சுமணன் எடுத்து விழுங்கினான்.

ஆதிசேஷனின் அம்சம்... விஷமெல்லாம் ஒரு பொருட்டா என்ன...? பதிலுக்கு தானீஷா கொடுத்த ரசீதை விஷம் இருந்த இடத்தில் வைத்தான் ராமன். பின் இருவரும் ஒரு சேர ஆசிர்வதித்தவர்களாக சிறைக்கதவு திறந்திருக்க வந்த சுவடு தெரியாமல் திரும்பத் தொடங்கினர்.கோபண்ணாவிடம் இது எதுவுமே தெரியாதபடி த்யானம்!

தானீஷா ராம லட்சுணர்கள் தந்த பொற்காசுகள் மலைபோல குவிந்திருப்பதைப் பார்த்தபடியே இருந்தார். இவ்வளவு காசுகளை எப்படி இருவரால் சுமந்து வர முடிந்தது என்பது அவருக்குள் கேள்வியாக உறுத்திக் கொண்டிருந்தது. அடுத்து அதன் ஜொலிக்கும் ஒளி... அதில் ஒரு காசை எடுத்து உற்றுப் பார்க்கவும் அதில் ராம் எனும் எழுத்து!
அடுத்த நொடி தானீஷாவுக்கு சுரீர் என்றது! வந்தவர்கள் சாமான்ய மனிதர்கள் அல்ல என்பதும் புரியத் தொடங்கியது.
மாதன்னா/அக்கன்னா

கோபண்ணாவின் அந்த உறவினர் இருவருமே கோபண்ணாவின் தாய்வழி மாமன்மார் ஆவர். அவர்களில் பெரிய மாமன் பெயர் மாதன்னா- இளைய மாமன் பெயர் அக்கன்னாவாகும். இவர்கள்தான் கோபண்ணாவை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஹைதராபாத்தை தானீஷா எனும் நிஜாம் ஆட்சி புரிந்து வந்தார். இந்த தானீஷா இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் ஓர் அரசனுக்குரிய தலைமைப் பண்பு அவ்வளவும் இவரிடம் நிரம்பி இருந்தது. குடிமக்களை பாரபட்சமின்றி வழி நடத்தி ஆட்சி புரிந்து வந்தார். இவரது ஆட்சியில் வரி வசூல் மிகச் சிறப்பான முறையில் இருந்தது. நலத்திட்டங்களும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த தானீஷாவின் அவையில் இந்துக்களும் நல்ல நல்ல பதவிகளில் இருந்தனர். பிற மதத்தவரின் சுதந்திரத்தில் தானீஷாவும் தலையிடாதபடி ஒரு நல்லாட்சி நடைமுறையில் இருந்தது.

தானீஷாவிடம் கோபண்ணாவின் மாமன்மார்கள் இருவருக்கும் நல்ல பெயரும் வரவேற்பும் இருந்தது. அதுவே கோபண்ணாவுக்கும், தானீஷாவுக்கும் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது. கோபண்ணாவை விதிதான் வழி நடத்தியபடி இருந்தது. அந்த விதியே கோபண்ணாவுக்கு தானீஷா மூலமாக தாசில்தார் என்னும் வேலையை வாங்கித் தந்தது. ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக அந்த நாளில் பத்ராசலம் எனும் ஊர் விளங்கிற்று. இங்கே கோதாவரி நதியின் பாய்ச்சல் ஒரு புறம்- மறுபுறம் ஒரு குன்றின் மேல் ராமபிரானது திருக்கோயில்! இந்தத் திருக்கோயிலை ஒரு காலத்தில் தம்மல்லி என்னும் பிராம்மணப் பெண் தன் சுய முயற்சியால் கட்டியிருந்தாள். அவள் இருந்த வரை கோயிலில் ஆறுகால பூஜைகளும் அன்னதானங்களும் தடபுடலாக நடந்தன. அவள் காலத்துக்குப் பிறகு அந்தக் கோயிலையும் கலிமாயை சூழ்ந்து கொண்டது. அந்தக் கோயிலில் ஒரு வேளை பூஜை நடைபெறுவதே பெரும் பாடாக இருந்தது. அப்படி ஒரு கோயில் கொண்ட பத்ராசலத்துக்கு ஒரு தாசில்தார் இருந்து அவர் காலமாகி விடவும் அங்கே ஒரு தேவை இருந்தது.

ஹைதராபாத் தானீஷாவும் மிகச் சரியாக கோபண்ணாவை பத்ராசலத்துக்கு தாசில்தாராக நியமனம் செய்தார். கோபண்ணாவுக்கு மனமெல்லாம் ராமபிரான் மேல்தான் இருந்தது. ஆகையால் ஆன்மீக வழியில் செல்லவே விரும்பியது. ஆனால் வயிற்றுப் பாடும் கொல்லம் கொண்ட பெல்லத்து அனுபவங்களும் வேறு வழியின்றி இந்த தாசில்தார் பொறுப்பை ஏற்க வைத்தன. மாமன்னர்களுக்கு நன்றி கூறி விட்டு பத்ராசலத்துக்கு வந்து பொறுப்பை ஏற்று அதை திறம்படவே செயல்படுத்தினான் கோபண்ணா. ஒரு தாசில்தாரின் கடமைகளை மிக நேர்மையாக நிறைவேற்றினான். குறிப்பாக வரிவசூலில் ஒரு பொன் கூட வீணாகதபடி அதை வசூல் செய்து அவ்வளவு பொன்னையும் யானை மேல் ஏற்றி வீரர்களின் காவலுடன் ஹைதராபாத்துக்குக் கொண்டு சென்று அங்க கஜானாவில் ஒப்படைத்து தானீஷாவின் தனிப்பட்ட பாராட்டையும் பெற்றுக் கொண்டான். வாழ்க்கை இப்படியே போய்விடுமா என்ன? பத்ராசலத்துக்கு வந்த நாள் முதலாக மலை மேல் உள்ள அந்த ராமன் கோயில் கோபண்ணாவின் கவனத்துக்கே வரவில்லை. ஒருநாள் ஒரு கால பூஜைக்காக பட்டாச்சாரி ஒருவர் கோயிலுக்குப் போவதை கோபண்ணா கவனிக்கவும் தான் விதியும் தன் விளையாட்டை கோபண்ணாவிடம் தொடங்கியது.

நெற்றியில் திருமண் காப்போடு கையில் திருத்துழாய் தட்டும் நைவேத்ய பிரசாதமுமாக மலை ஏறப்போன அந்தப் பட்டரை தடுத்து கோபண்ணா விசாரிக்கத் தொடங்கினான். அப்போது தான் மலை மேல் ராமர் கோவில் இருப்பதே தெரிய வந்தது.ஹேராம்!இது என்ன கொடுமை...

பத்ராசலத்தில் ஒரு ராமாகோயில் இருக்க நான் அது தெரியாத ஒரு அதிகாரியாக மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேனே... என்று கோபண்ணா மனது பதைத்துப் போனது. அவரோடு சேர்ந்து மலைமேல் சென்று பார்க்கவும் கண்களைக் கரித்தது. கோயில் அந்த அளவு பாழ்பட்டு தூர்ந்து போய் கிடந்தது.பட்டரே, என்ன இது அநியாயம்... என் பிரபுவின் கோயில் இப்படியா இடிபாடுகளோடு இருப்பது?

நான் என்ன செய்யட்டும்... தம்மக்கா இருந்தவரை குறையில்லை. அதன்பின் இந்த பத்ராசலத்தில் எவ்வளவோ மாற்றங்கள். பிறமதத்தவர்களும் அதிகரித்து விட்டனர். உத்சவங்கள் கொண்டாடவோ, திருவிழாக்கள் காணவோ யாரும் ஒன்று சேர்வதில்லை. அதோடு பலர் ஊரை விட்டே போய் விட்டனர். நான் இருக்கும் வரை ஏதோ ஒரு கால பூஜை நடக்கும். எனக்குப் பிறகு அதுவும் கேள்விக்குறிதான்...பட்டர் சொன்னது கோபண்ணாவின் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.இல்லை பட்டரே! இந்த கோயிலை நான் இனி இப்படியே விடமாட்டேன். என்னை பிரபு எதற்காக இந்தப் பகுதிக்கு தாசில்தார் ஆக்கினார் என்பது தெரிந்து விட்டது. ஒரு அரசாங்க அதிகாரியாக இப்போதே உத்தர விடுகிறேன்.

இனி ஆறுகால பூஜைகள் நடக்கட்டும். இடிபாடுகளை சரிசெய்து இந்தக் கோயிலை நான் புதுப்பித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கப் போகிறேன்... என்ற கோபண்ணா சொன்னபடியே செய்தும் முடித்ததுதான் விந்தை.பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப்பணம் அவ்வளவும் கோயிலுக்கே செலவாயிற்று. மலைமேல் உயர்ந்த கோபுரத்தோடு கோயிலும் கம்பீரமாக நிமிர்ந்து எழும்பி நின்றது.உள்ளே சீதா ராம லட்சுமணனோடு அனுமனுக்கும் சேர்த்து சன்னதி. கோவிலின் அழகும் எழிலும் அக்கம் பக்கத்தவர்களை எல்லாம் சுண்டி இழுத்தது. சாரிசாரியாககோயிலுக்குவந்துமனம்குளிரராமபிரானையும்வணங்கினார்கள்.கோபண்ணாவுக்கும் அரிய செயலை செய்துவிட்ட பூரிப்பு. அதேசமயம் தானீஷாவுக்கு வசூலித்த வரிப்பணத்தை சென்று கட்ட வேண்டிய நாளும் வந்தது. ஆனால் அதையெல்லாம்தான் கோயில் கட்ட செலவழித்தாகி விட்டதே...?

இப்போது என்ன செய்வது?

கோபண்ணா மனைவி கலங்கிப்போய் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்டாள்.என்ன செய்தேனோ அதைச் சொல்வேன்... நான் என்ன நம் குடும்பத்துக்கா செலவு செய்தேன்... அவ்வளவும் கோயிலுக்குத்தானே போனது. ஒரு ஊரில் கோயில் சிறப்பாக இருந்தால் அல்லவா மழை பொழியும். மக்களும் மன அமைதி யோடு வாழ்வார்கள். எனவே நான் மக்களுக்கான நல்லதைத்தான் செய்துள்ளேன். இதை தானீஷா பாராட்டவே செய்வார். சொல்லப்போனால் அவர் செய்யத் தவறியதை நான் செய்துள்ளேன். எனவே எனக்குப் பரிசுகளும் அளிப்பார்... என்றான் கோபண்ணா.

வாழ்வில் நாம் நினைப்பது போலவா எல்லாமே நடக்கிறது?

தானீஷா முன்னால் கோபண்ணா ஒரு குற்றவாளியாக நிறுத்தப்பட்டான். தானீஷா அவன் சொன்ன எதையும் கேட்கவே இல்லை. நீ தன்னிச்சையாக நடந்து கொண்டாய்... அரசாங்கப் பணத்தைக் கொண்டு கோயில் கட்டினாய். இது ராஜ துரோகம் எனவே உன்னைச் சிறையில் இடுகிறேன்- என்று கோபண்ணாவுக்கு சிறைத்தண்டனை விதித்து விட்டார்.சிறையில் அடைக்கும் முன் கோபண்ணாவிடம் இன்னும் கூட வரிப்பணம் இருக்கக்கூடும் என்று கருதி கோபண்ணாவை சவுக்கால் அடித்து சித்ரவதை செய்தும், ஹைதராபாத் நகரமே தெருவில் நின்று பார்த்திட கட்டி இழுத்துச் சென்றும் செய்த கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.ஒரு மனிதன் பக்தியோடு கோயில் கட்டியதற்கா இத்தனை பெரிய தண்டனை? கோயில் கட்டிய விதம் தவறாக இருந்தாலும் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை என்பது எந்த வகையில் சரி?
இவ்வளவு தூரம் கொடுமைகள் நடக்கும்போதும் அந்த ராமன் என்ன செய்தான்? ஏன் வேடிக்கை பார்த்தான்? இது என்ன சோதனை...?

கேள்விகள் எழுகிறதல்லவா?

இந்தக் கேள்விகள் கபீர்தாசரிடமும் எழும்பியது.

பக்தன் பொருட்டு அவரே ராமபிரானிடம். பிரபு இதெல்லாம் எந்த வகையில் சரி? என்று கேட்கவும் செய்தார். ராமபிரானும் அதற்கான பதிலைக் கூறினான்...கபீர்... கலியுகத்தில் எப்போதும் விளைவுகளுக்காகவே செயல்பாடுகள். ஆனால் நாம் உலகமாயை காரணமாக செயலுக்குத்தான் விளைவு என்று கருதுவதும் பேசுவதுமாக இருக்கிறோம்.கோபண்ணா என் பரம பக்தன்தான்! பக்தி கராணமாக அவன் உண்மையாக வாழ்கிறவனும்கூட... ஆனால் இப்போது அவன் அனுபவிக்கும் கொடுமைக்கெல்லாம் காரணம் அவனது பூர்வ கர்மம்தான்!

முன் ஜென்மத்தில் அவன் அனேக கிளிகளை கூண்டில் அடைத்து வளர்த்தான். அப்போது அவைகளின் சிறகுகளை வெட்டியும் அவைகளுக்குச் சரியாக உணவளிக்காமலும் அவைகளை சித்ரவதை செய்தான். அதனால் பல கிளிகள் இறந்து போயின. அந்தப் பாவம்தான் இப்போது அவனுக்கான சிறைவாசமாகவும் பழியாகவும் உருவாகியுள்ளது.எதற்கும் ஒரு அளவு உண்டு. இந்தத் துன்பத்துக்கும் அளவு இருக்கிறது. இவை அவ்வளவும் இன்றிரவோடு தீர்ந்து விடும். நாளை முதல் அவன் கோயில் கட்டிய புண்ணியமும் பக்தியின் பயனும் அவனை இனி வழி நடத்தும். அதுமட்டுமன்றி காலகாலத்துக்கும் அவன் பக்தி இனி வரும் மாந்தர்களால் போற்றும் ஒன்றாகவும் இருக்கும். கூடவே அவர்கள் கோபண்ணாவின் கர்மத்துய்ப்பையும் சேர்த்தே எண்ணுவார்கள்.

நம் வாழ்வில் நம் மனமறிந்து தவறுகள் செய்திடாத நிலையில் ஒரு துன்பம் நேர்கிறதென்றால் அதை பூர்வ கர்மம் என்று கருதி மகிழ்ச்சியோடு ஏற்று அனுபவிக்க வேண்டும். வெற்றிகரமான வாழ்வும் இன்பமான வாழ்வும் எந்த நிலையிலும் ஞானத்தைத் தராது. அது ஆசாபாசங்களை வளர்த்து கலிமாயையில் நம்மை நிரந்தரமாக சிக்க வைத்து விடும். எனவே நிரந்தரமற்ற மாயா இன்பங்களை பற்றற்ற பற்றோடு அனுபவிக்க வேண்டும். துன்பத்தையே உளமாற விரும்ப வேண்டும். அதைக் கண்டு அச்சம் கூடாது. நடுநிலையான ஞானிகள் இவ்வாறுதான் நடந்து கொள்வர். கோபண்ணாவும் எல்லா துன்பங்களையும் பார்த்து விட்டான். பழிச் சொல்லையும் கேட்டு விட்டான். அவன் இனி மாயை வசம் சிக்காமல் பக்குவமாக நடந்து கொள்வான் என்றார். கபீருக்கும் பெரும் ஞானோபதேசம் கிடைத்தது. கபீர் மூலமாக இந்த உலகுக்கும் கிடைத்தது. அன்று இரவு கோபண்ணாவின் பக்திக்குண்டான வரசித்தி செயல்படத் தொடங்கியது. ராமனும் லட்சுமணனுமே தானீஷாவுக்கு கோபண்ணா செலுத்த வேண்டிய பொன் மூட்டையை எடுத்துக் கொண்டு இரண்டு வேடுவர்கள் போல தானீஷா முன் போய் நின்றனர்.

பொற்காசுகளை தானீஷா முன் கொட்டினர். அரசே... இது கோபண்ணா செலுத்த வேண்டிய வரிப்பணம். அவரை சிறையில் இருந்து விடுவியுங்கள் என்றனர். தானீஷாவும் நீங்கள் யார் என்று கேட்காமல் இருப்பாரா? நாங்கள் கோபண்ணாவின் ஏவலர்கள். அவர் தரும் பிரசாதத்துக்காக நாங்கள் எதையும் செய்வோம்... அடேயப்பா... இவ்வளவு நாட்கள் எங்கே போய் விட்டீர்கள்? நாங்கள் யாத்திரை போயிருந்தோம், இங்கு வந்து பார்க்கவும்தான் உண்மை தெரிந்தது. உடனே எங்கள் உழைப்பில் சம்பாதித்த பொன்னோடு புறப்பட்டு வந்துவிட்டோம்.

அது சரி... உங்கள் பெயர்?

என் பெயர் ராம்ஜி... இவன் லஷ்மண்...

நல்லது... இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

ஊருக்கு வெளியே உள்ள சிறையில் இருக்கும் கோபண்ணாவை விடுவியுங்கள். முன்னதாக வரிப்பணம் பெற்றுக்கொண்ட ரசீதும் அத்துடன் விடுதலைப் பத்திரமும் எழுதி கையெழுத்திட்டு தாருங்கள்...
தானீஷாவும் அப்படியே செய்தார் ராம லட்சுமணர்களும் புறப்பட்டனர்!
ஊருக்கு வெளியில் உள்ள சிறைச் சாலையில் கோபண்ணா மனம் உடைந்து போயிருந்தான். போதும் நான் பட்ட பாடு... என்னைப் பார்ப்பவர்கள் இனி எந்த நல்ல காரியத்தையும் செய்ய முன்வர மாட்டார்கள். நானும் இனி வாழ்வதை விட சாவது மேல்... ராமபிரபுவும் என்மேல் கருணை காட்டப் போவதில்லை. அவர் வரையில் நானொரு பாவி.

இனி இந்த பாவியும் உயிர் வாழக் கூடாது...- என்கிற முடிவுக்கு வந்து விஷத்தைக் குடிக்க முடிவு செய்கிறான் கோபண்ணா. அதன் பொருட்டு சிறைத் தோட்டத்தில் பணியாற்றும்போது விஷச்செடி ஒன்றை அடையாளம் கண்டு கொண்டு அதில் இருந்து பறித்து வந்திருந்த விஷ இலைகள் அரைக்கப்பட்டு விழுதாக அவன் பக்கத்தில் அவன் சாப்பிடத் தயாராயின! முன்னதாக இறுதியாக தியானிக்க எண்ணி தியானத்தில் ஆழ்ந்தான்! இதற்குப் பிறகே அற்புதங்கள் அரங்கேறத் தொடங்கின. ராம லட்சுமணர்கள் சிறைக்கு வந்து அங்குள்ள அதிகாரியிடம் விடுதலைப் பத்திரத்தைக் காட்டி அவரையும் அழைத்துக் கொண்டு கோபண்ணா இருந்த இருண்ட சிறைக்கு வந்தனர்.

சிறையில் கோபண்ணா! சிறை அதிகாரி கதவைத் திறந்து விட்டவனாக விலகிட ராம லட்சுமணர் கோபண்ணா அருகில் சென்றனர். அந்த விஷவிழுது தீயவாடையோடு அவர்கள் நாசியைக் குடைந்தது. ராமன் லட்சுமணனை அர்தபுஷ்டியோடு பார்க்கவும் அந்த விஷ விழுதை லட்சுமணன் எடுத்து விழுங்கினான்.

ஆதிசேஷனின் அம்சம்... விஷமெல்லாம் ஒரு பொருட்டா என்ன...? பதிலுக்கு தானீஷா கொடுத்த ரசீதை விஷம் இருந்த இடத்தில் வைத்தான் ராமன். பின் இருவரும் ஒரு சேர ஆசிர்வதித்தவர்களாக சிறைக்கதவு திறந்திருக்க வந்த சுவடு தெரியாமல் திரும்பத் தொடங்கினர்.கோபண்ணாவிடம் இது எதுவுமே தெரியாதபடி த்யானம்!

தானீஷா ராம லட்சுணர்கள் தந்த பொற்காசுகள் மலைபோல குவிந்திருப்பதைப் பார்த்தபடியே இருந்தார். இவ்வளவு காசுகளை எப்படி இருவரால் சுமந்து வர முடிந்தது என்பது அவருக்குள் கேள்வியாக உறுத்திக் கொண்டிருந்தது. அடுத்து அதன் ஜொலிக்கும் ஒளி... அதில் ஒரு காசை எடுத்து உற்றுப் பார்க்கவும் அதில் ராம் எனும் எழுத்து!
அடுத்த நொடி தானீஷாவுக்கு சுரீர் என்றது! வந்தவர்கள் சாமான்ய மனிதர்கள் அல்ல என்பதும் புரியத் தொடங்கியது.
மாவளத்தான்!

நலங்கிள்ளி என்பவன் சங்கக் காலச் சோழ அரசன். பேராற்றல் கொண்ட அவனுக்கு, தம்பி மாவளத்தான் என்பவன். மிகுந்த ஆற்றல் படைத்தவன் என்பதை அவனது பெயரே சொல்லும். ஒரு நாள் மாவளத்தான் அரச மாளிகையில் அழகான மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றான். அப்போது தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் அங்கே வருகிறார். தாமப்பல் என்பது ஓர் ஊர். இவ்வூர் இப்போது காஞ்சிபுரத்திற்கு அண்மையில் தாமல் என்று சிதைந்து அவரது வழங்கி வருகின்றது. கண்ணன் என்பது அவரது இயற்பெயர். உயர்வுச் சிறப்புக் கருதி அவரை கண்ணனார் என அனைவரும் அழைத்தனர். வந்த புலவரை எழுந்து வரவேற்று இருக்கையில் அமரச் செய்கிறான் மாவளத்தான். அவன் முன்பு வட்டாடு அரங்கம் அமைக்கப்பட்டு வட்டாடு கருவியும் உள்ளதை ஆவலோடு  புலவர் பார்க்கிறார். அவரது ஆவலை உணர்ந்து கொண்ட மாவளத்தான் அவரை வட்டாட அன்போடு அழைக்கிறான். வட்டாடுதல் என்பது சங்க கால விளையாட்டு. இருவரும் ஆடத் தொடங்குகின்றனர். சிறு பொழுதுக்குள் ஆட்டம் விறுவிறுப்பு அடைய புலவர் தோல்வியை நோக்கி மெல்ல மெல்லத் தள்ளப்படுகின்றார்.

தோல்வி பெற விரும்பாத புலவர், மாவளத்தான் கண் இமைக்கும் நேரத்தில் வட்டைத் தன் வலக்கையில் மறைத்துக் கொண்டு அது எங்கோ தொலைந்து போய்விட்டது போலத் தேடத் தொடங்கினார். அகத்தின் அழகு முகத்தில் தெரிவதை மாவளத்தான் புரிந்து கொண்டான். அவ்வளவுதான், புலவர் சற்றும் எதிர்பாராதவாறு சட்டென்று அவரது வலக்கையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக் கொண்டு உள்ளங்கையில் அவர் மறைத்து வைத்திருந்த வட்டை எடுத்தான். மாளவத்தானுக்குப் புலவரது செயல் மிகுந்த கோபத்தைத் தந்ததால் வட்டை அவர் மீதே விட்டெறிந்தான். கோபம் குடியைக் கெடுக்கும் அல்லவா? மாவளத்தான் இவ்வாறு குணம் கெட்டு நடந்து கொண்டபோது புலவரும் தம் நிலை மறந்து கொதித்தெழுந்தார். விளையாட்டு வினையானது! மாவளத்தானைப் பார்த்து சொல்லக் கூடாத சொற்களால் அவனைச் சுட்டார் புலவர். இது கொன்றிடல் போன்ற ஒரு சொற்றொடர். புலவர், மாவளத்தானிடம் சொன்ன கொடுஞ்சொல்: நீ சோழனுக்குப் பிறந்தவன் இல்லை.

அவ்வளவுதான், இந்த வசைமொழிக்குப் பின் அந்த இடத்தில் என்ன நிகழ்ந்திருக்க வேண்டும்? நாம் நினைப்பது போல, புலவரது தலை மாவளத்தானின் வாளால் துண்டாடப்படவில்லை, புயல் வீசவும் இல்லை; எரிமலை வெடிக்கவும் இல்லை. அப்போது அங்கே முழு அமைதி நிலவியது. சோழப் பேரரசின் பேராற்றல் மிக்க இளவரசன் தலைகுனிந்தவாறு மவுனமாக நின்றான். ஆம், புலவர் மேல் வட்டை எறிந்த தன் செயலுக்காக அவன் நாணி வருந்திக் கொண்டிருந்தான். மாவளத்தானின் இந்த நிலையைக் கண்ட தாமப்பல் கண்ணனார் அதிர்ந்து போனார். நாவடக்கம் இன்றி தாம் சொன்ன சொற்களுக்காக அவர் அச்சமும், அளவில்லாத துயரும் கொண்டார். என்ன நிகழுமோ எனச் செயலற்று நின்ற அவர், தாம் மாவளத்தானுக்குப் பெரும் பிழை செய்திருக்க, அவனோ தமக்குப் பெரும் பிழை செய்ததுபோல நாணித் தலை கவிழ்ந்த பெரும்பண்பை நினைத்துக் கலங்கினார். இளவரசே! உன்னை நான் கூறத்தகாத சொல்லால் சுட்டதற்கு கோபப்படாமல் ஏதோ எனக்குக் குற்றம் செய்ததுபோல வெட்கமும், வேதனையும் படுகின்றாய். உனது இந்த அருஞ் செயல், எனக்கு எதனை உணர்த்துகின்றது தெரியுமா? சோழ மரபில் பிறந்தவர்கள் தமக்குப் பிறர் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும் பண்புடையவர்கள் என்பதைத் தான். உண்மையில் நான்தான் உனக்குக் குற்றம் செய்தவன் (என்னைப் பொறுத்த ஏந்தலே) காவிரி நீர் கொழித்துக் கரையில் சேர்த்த  ஆற்று மணலினும் பலவாக உன் வாழ்நாள் சிறக்க வேண்டும் எண்ணற்ற ஆண்டுகள் வாழ வேண்டும்.

இதனால் வசையைப் பொறுத்தவன் புகழ் பெறுவான் என்பது புலப்படுகின்றது அல்லவா? மாவளத்தான் புலவரைத் தன் பொறுமையால் வென்று விட்டான் என்பது வரலாறு. இன்று அறியாமையால் அல்லது ஆணவத்தால் நம்மைச் சிலர் வசைபாடலாம்: பழித்துப் பேசலாம். அவற்றை எல்லாம் பொறுமையால் நாம் வென்றுவிட வேண்டும். பொறுத்தவர் பூமி ஆள்வார்

நான் யார்? ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!

நான் யார்? ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!

உலகத்தில் மக்களிடையே பேதங்கள் நிலவிய சூழ்நிலையில் காலடி க்ஷேத்திரத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் மகான் ஆதிசங்கரர். தாயின் அனுமதியுடன் சந்நியாசம் பெற்ற ஆதிசங்கரர் அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர். அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவது போல் ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும் போது எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர் நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர் அவரை வழியை விட்டு விலகிப் போக சொல்கிறார். எதிரில் வந்தவர் 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும் தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல் பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ விலங்குகளோ தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம் தானே? அப்படி இருக்கும்போது என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம் தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்? எனக் கேட்டார். ஆதிசங்கரருக்கு அப்போது தான் புரிந்தது தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப்பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அது தான் மனீஷா பஞ்சகம். அந்தப் பஞ்சகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே...

விழிப்பிலும், கனவிலும், உறக்கத்திலும் எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் பிரபஞ்சத்தின் சாட்சியாக ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்த்தப்பட்டவரோ யாராக இருந்தாலும் அவரே என் குரு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

“ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்விதுஜ்ரும்பதே!
யா ப்ரஹ்மாதிபிபீலிகாந்ததனுஷு ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணீ !!
ஸைவாஹம் ந ச த்ருஶ்யவஸ்த்விதி த்ருடப்ரக்ஞாபி யஸ்யாஸ்தி சேத்!
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம !!

எவன் ஒருவனுக்கு தானே ஆத்மஸ்வருபம்தான் என்பதில் திட நம்பிக்கை உள்ளதோ விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய 3 ஸ்திதிகளிலும் பரமாணுவிலிருந்து பரப்ரம்மம் வரை எல்லாவற்றிலும் எக்காலத்திலும் கண்ணுக்குத் தெரியாத ஸாக்ஷியாக உயிர்ப்பு சக்தியாக செயல்படுவதும் அதே ஆத்மாதான் என்பதையும் அவன் அறிகிறானே அவன் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் அவனே உயர்ந்த ஆசானாகக்கருதப்படுவான்.

பரம்மைவாஹமிதம் ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா த்ரிகுணயாஶேஷம் மயாகல்பிதம்!
இத்தம் யஸ்ய த்ருடாமதி: ஸுகதரே நித்யே பரே நிர்மலே
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் உணர்கிறார். எனக்குத் தெரியும் யார் உயர்நத குரு என்று ப்ராம்மணனோ, சூத்ரனோ, யார் அந்த சுத்த ஸத்வமான ப்ரம்மத்திலேயே லயித்து தானே அதுவாக உணர்கிறார்களோ அவர்தான் எல்லாம் உணர்ந்த ஆசாரியராக முடியும். ஸத்வ, ரஜஸ், தமஸ், ஆகிற முக்குணங்களின் பாதிப்பினாலும் அறியாமையினாலும் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாம் வெவ்வேறாகத் தெரிந்தாலும் ஒரே பரமாத்மா பரப்ரஹ்மத்திலிருந்து உண்டானவையே அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டவனே ஸத்குரு என்கிறார் அவர்.

ஶஶ்வன்னஶ்வரமேவ விஶ்வமகிலம் நிஶ்சித்ய வாசா குரோ:
நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருஶதாம் நிர்வியாஜ ஶாந்தாத்மனாம்!
பூதம் பாவி ச துஷ்க்ருதம் ப்ரதஹதாம் ஸம்வின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்ப்பிதம் ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம!!

குருவின் வார்த்தைகளில் எனக்குப் பரிபூரண நம்பிக்கை இருப்பதால் இந்தப்பிரபஞ்சம் முற்றும் நிலையற்ற உருவெளித்தோற்றம் என்பதும் பரமாத்மாவைக் குறித்து ஆழ்ந்த தியானத்தைச் செய்து நிஸ்சலனமான மனதுடன் பாவத்தீயையெல்லாம் அந்த ஸாதனையாகிற தீயில் எரிக்க வேண்டும் என்பதும் தெரிகிறது.

யா திர்யங்நரதேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே
யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேஹவிஷயா பாந்தி ஸ்வதோ சேதனா:!
தாம் பாஸ்யை: பிஹிதார்க்கமண்டலநிபாம் ஸ்பூர்த்திம் ஸதா பாவயந்
யோகீ நிர்வ்ருதமானஸ: ஸ குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் கூறுவதாவது : என் அபிப்ராயப்படி உயர்ந்த யோகி யார் என்றால் பரமாத்மாவின் உண்மை ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் உணர்ந்தவர்தான். அதாவது அனைத்துச் செயல்களும் யாரால் நடத்தப்படுகிறது என்பதும் அப்பேர்ப்பட்ட கடவுளின் ஒளி அறியாமையினால் மறைக்கப்பட்டிருக்கிறது (மேகங்கள் எப்படி சூரியனின் ஒளியை மறைக்கிறதோ அப்படி) என்பதும் தான்!

யத்ஸௌக்யாம்புதிலேஶலேஶத இமே ஶக்ராதயோ நிர்வ்ருதா:
யச்சித்தே நிதராம் ப்ரஶாந்தகலனே லப்த்வா முனிர்நிர்வ்ருத:!
யஸ்மிந்நித்ய ஸுகாம்புதௌ கலிதர்தீ ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித்
ய: கஶ்சித் ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூநம் மனீஷா மம!!

இந்திரனாலும் மற்ற தேவர்களாலும் துதிக்கப்படும் அந்தப்பரமாத்மாவிடம் எப்போதும் மனதைச் செலுத்திப் பரிபூரண அமைதியுடன் எவர் இருக்கிறாரோ அவர் அந்த பரப்ரம்ஹ்மத்தை அறிந்து கொண்டவர் மட்டுமல்ல அந்த ப்ரஹ்மமாகிவிடுகிறார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

தாஸஸ்தேஹம் தேஹத்ருஷ்ட்யாஸ்மி சம்போ ஜாதஸ் தேம்சோ ஜீவத்ருஷ்ட்யா த்ரீத்ருஷ்டே!
ஸர்வஸ்யாஸ்மந்நாத்மத்ருஷ்ட்யா த்வமேவேத் யேவம் மே தீர்நிஸ்சிதா ஸர்வ சாஸ்த்ரை:!!

பகவானே! நான் இந்த உடலில் இருக்கும்போது உன் சேவகன் முக்கண்ணனே! இந்த உயிராக இருக்கையில் உன்னில் ஒரு பாகமாகிறேன். ஆத்மாவாக இருந்தால் நீ என்னுள்ளும் இன்னும் மற்றெல்லா ஆத்மாக்களுக்குள்ளேயும் இருக்கிறாய். என் புத்தி பூர்வமாகவும் பல நூல்களைப்படித்தும் நான் வந்த முடிவு இதுதான்.
வலங்கைமான் கோவிந்த செட்டியார்!

செட்டியார்வாள், காணாமால் போன என் பரம்பரை நகைகளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று மயிலம் ஜமீன்தார் அழாக் குறையாகக் கூறினார். கோவிந்த செட்டியார் என்ற சோதிடர் கண் மூடினார். ஜமீன்தாரின் படபடப்பு தணிந்தது. சோதிடர் என்ன கூறுவாரோ என்ற எதிர்பார்ப்பில், ஜமீன்தார் நிலைகொள்ளாதிருந்தார். சோதிடர்கண் திறந்து, ஜமீன்தார்வாள், உமது மாளிகையில் உள்ள கிணற்றில் அந்த நகை முழுவதும் பத்திரமாக இருக்கு என்றார். ஜமீன்தார் வாயெல்லாம் வெற்றிலைப் பல்லாக, போன உயிர் வந்ததுபோல் ஓடினார். உடன் வந்த கணக்குப் பிள்ளையைச் சோதிடர் தனியாக அழைத்தார். அவரை உற்றுப் பார்த்து, ஏன் ஓய், உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றீர்? ஜமீன்தாருடனே இருந்து கொண்டு, அவரது சொத்தையே திருடிவிட்டீர் இல்லையா? என்று சற்று கடுமையாகக் கேட்டார் செட்டியார். கணக்குப் பிள்ளை செட்டியாரின் காலில் வீழ்ந்தார். சரி சரி இனிமேலாவது தர்ம வழியில் வாழ முயற்சி செய்யும் என அவரை மன்னித்து அனுப்பினார். கோவிந்த செட்டியாரின் சித்திகளும் அதன் சக்திகளும் பிரசித்தி பெற்றவை. அதைவிட முக்கியம் தான் சம்பாதித்ததை ஏழைகளுக்காகச் செலவழிப்பார். ஏழைகளின் ஆடுகள், கோழிகள் காணாமல் போய்விட்டால், அந்த ஜனங்கள் அவரது ஓட்டு வீட்டின் முன் நிற்பார்கள். சோதிடர் அவர்களைப் பார்த்ததும், காணாமல் போனதைப் பற்றி உடனே கூறிவிடுவார்.

இப்படியாக அவரது புகழ் தனது சொந்த ஊரான வலங்கைமானிலிருந்து மைசூர் வரை சென்றது. வந்து விட்ட சங்கடங்களையும் வரப் போகும் அச்சுறுத்தல்களையும் தீர்த்துக் கொள்ள பெரும் செல்வந்தர்களும் ஆங்கிலேய கனவான்களும் வந்தனர். சோதிடர் இப்படி வாழ்ந்து வந்தபோது அவரைக் காண, ஜீவர்களைக் கடைத்தேற்றும் சிந்தாமணி சுவாமி விவேகானந்தர் வந்தார். சுவாமிஜி அமெரிக்கா செல்வதற்கு முந்தைய காலம். 1893-ஆம் ஆண்டு பரிவ்ராஜகராக சுவாமிஜி தமிழ்நாட்டில் சஞ்சரித்து வந்தார். சென்னையில் சுவாமிஜி இருந்த நேரம் ஒரு நாள் கனவு ஒன்று கண்டார். திடுக்கிட்டு எழுந்து தவித்த தம் குருவிடம் அளசிங்கப் பெருமாள், சுவாமிஜி, ஏதாவது சொப்பனமா? என விசாரித்தார்.  ஆம் அளசிங்கா. என் தாய் தவறி விட்டதாக ஒரு கனவு. அவரைப் போய் பார்த்து வர மனம் விழைகிறது. ஆனால் முடியாதே... என்று விவேகானந்தர் ஒரு தலைமகனாகத் தனியே தவித்தார். இது வெறும் கனவுதான் சுவாமிஜி, விடுங்கள் என்று மன்மத் பட்டாச்சார்யர் என்ற அன்பர் ஆறுதலளித்தார். சுவாமிஜி அமைதியாகவில்லை. அதைக் கவனித்த அளசிங்கர் வலங்கைமான் சோதிடரிடம் சென்று குறி கேட்டால், தெளிவு பிறக்கும் என்றார். புறப்பட்டார் சுவாமிஜி இந்த இருவருடன்.முதலில் ரயிலில், பின் நடந்து வலங்கைமானை அடைந்தார்கள். சோதிடரின் வீட்டைத் தேடிப் பிடித்தனர். அளசிங்கா, இவரைப் பற்றி நீ பெருமையாகச் சொல்கிறாய். எனக்கு இவரிடம் மூன்று கேள்விகள் உள்ளன. அவற்றைக் கேட்டு இவரின் சித்திகளைச் சோதித்துப் பார்க்கலாம் என்றார் சுவாமிஜி. சோதிடரின் கூரை வீட்டுக்குள், தாழ்வாரத்தில் மன்மத், அளசிங்கர் மற்றும் சுவாமிஜியும் கோவிந்தசெட்டிக்காகக் காத்திருந்தனர். கோவிந்த செட்டி வந்தார். அவரது முகம் காய்ச்சல் வந்ததுபோல் கருமையாக, இறுக்கமாக இருந்தது. வந்துள்ளவர்களைப் பார்த்தும் பார்க்காதவர் போல் இருந்தார். போய் விடலாமா என்று சுவாமிஜி சீடரைக் கேட்டார். அதற்குள் செட்டியாரே அவர்களிடம் அமைதி காக்க சைகை செய்தார். பிறகு எழுந்து வந்து, என் உடம்பு சரியில்லை. இன்று சோதிடம் சொல்ல முடியாது. சொல்லித்தான் ஆகணும்னா பத்து ரூபா எடுத்து வையும் என்றார். சீடர்கள் பணத்தைத் தரத் தயாராய் இருந்தனர். பிறகு செட்டியார் தனது அறைக்குச் சென்றார். முகம் கழுவினார். வெளியே வந்தார். சுவாமிஜியை உற்றுப் பார்த்தார். அந்தத் திருமுகத்தில் செட்டியார் என்ன கண்டாரோ? சுவாமிஜியைக் கனிவுடன் பார்த்தார். உடனே வீட்டினுள்ளே சென்றார்.விபூதிப் பையை எடுத்து வந்து சுவாமிஜியிடம் நீட்டி, சாமி, எனக்கு இந்த விபூதியைப் பூசினால் என் காய்ச்சல் குணமடையும், பிறகு நான் உங்களுக்குக் குறி சொல்வேன் என்று தமிழில் கூறினார். அளசிங்கர் ஆங்கிலத்தில் சுவாமிஜியிடம் கூறினார். சுவாமிஜி வினயத்துடன், ஐயா என்னிடம் அது போன்ற சித்திகள் ஏதுமில்லை என்றார். ஆனாலும் செட்டியார்  சுவாமிஜி விபூதி தர வேண்டும் என்று வலியுறுத்தினார். சுவாமிஜி விபூதி வழங்கினார். உடனே செட்டியார் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி, அதை சுவாமிஜியிடம் கொடுத்துக் கையொப்பமிடும்படிக் கூறினார். பிறகு அந்தத் தாளை மன்மத்தின் சட்டைப் பையில் வைத்தார். சுவாமிஜிக்கு இது வியப்பை ஏற்படுத்தியது. செட்டியார் சுவாமிஜியை ஒரு நோட்டமிட்டபடி, சாமி, துறவியான நீங்கள் ஏன் உங்கள் அம்மாவைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்? என யாரும் எதுவும் சொல்வதற்கு முன்பே கேட்டார். தமது மனதில் உள்ளதைத் தெளிவாகச் சொல்பவரைப் பார்த்து வியந்த சுவாமிஜி அவரது கேள்விக்கு விடையாக, ஐயா, ஆதிசங்கரர்கூட தமது தாயைப் பற்றிக் கவலைப்பட்டாரே...! என்றார். அந்தப் பதிலால் மகிழ்ந்த செட்டியார், உங்கள் தாய் நலமாகவே இருக்கிறார் என்றார்.

செட்டியார் மிக அமைதியாக மன்மத் சட்டைப் பையிலிருந்து காகிதத்தை எடுக்கச் சொன்னார். அதில் சுவாமிஜியின் தாயாரின் சொந்தப் பெயரும் அவரைப் பற்றிய பல தகவல்கள் எழுதப்பட்டிருந்ததையும் தெளிவாகக் கூறினார். தமது குருவின் திருநாமத்தைச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். சோதிடர் சரியாகக் கூறினார். சாமி, அதுவும், அதோடு நீங்கள் என்னிடம் கேட்க நினைத்த திபெத்திய மந்திரத்தையும் நான் ஏற்கனவே காகிதத்தில் எழுதிவிட்டேன் என்றார். சுவாமிஜி அளசிங்கரைப் பார்த்தார். அளசிங்கர் வாசித்தார். உங்களது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்துவிட்டார். ஆனாலும் அவர் சூட்சும சரீரத்தில் இருந்தபடி உங்களைக் காத்து வருகிறார் என்று இருந்தது. தாய் நலமென அறிந்ததுடன் தாயும் தந்தையுமாகிவிட்ட குருதேவர் தம்மைக் காத்து வருகிறார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானதால் சுவாமிஜியின் கண்களில் கண்ணீர் பெருகிற்று. பிறகு செட்டியார், சுவாமி, நீங்கள் விரைவில் தூர தேசங்களுக்குச் சென்று நமது மதத்தைப் பிரச்சாரம் செய்வீர்கள் என்றார். அளசிங்கர் உடனே பெருமிதமாய் சுவாமிஜியை நோக்கினார். சுவாமிஜி சோதிடரின் நடவடிக்கைகளைப் பார்த்தார். சுவாமிஜியிடமிருந்து அவர் பணம் பெற மறுத்துவிட்டார். தமது குடும்பத்தினரை அழைத்து சோதிடர், வாங்க எல்லோரும். இவர் ஒரு பெரிய பரமஹம்சரோட சீடர். காலில் விழுந்து நமஸ்காரம் செய்யுங்க. சாமி கையிலிருந்து விபூதி வாங்கிக்குங்க என்றார். அதன்படியே நடந்தது. சுவாமிஜிக்காகச் சோதிடர் நீண்ட நேரம் செலவழித்ததால், வெளியில் தங்கள் பிரச்சனைகளின் தீர்வுக்காக காத்திருக்கும் கிராம மக்களின் கூட்டம் அதிகரித்தது.சுவாமிஜியிடம் சோதிடர் கூறிவிட்டு, வெளியே சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்குக் குறி சொன்னார். சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டினுள் நுழைந்தார். கூடத்தில் இருந்த சுவாமிஜியிடம், சுவாமி, நீங்கள் அடியேனின் சேவையை ஏற்றுக் கொண்டு என்னை ஆசீர்வதியுங்கள் என்றார். சோதிடரின் வற்புறுத்தலுக்காக சுவாமிஜி அவர் தந்த பாலை அருந்தினார். பிறகு சுவாமிஜி, ஐயா, இந்த அனுமாஷ்யமான ஆற்றலை எப்படி பெற்றீர்கள்? என்று கேட்டார். முதலில் சோதிடர் பதில் கூறவில்லை. பிறகு அவர் சுவாமிஜியிடம் மெல்ல, சாமி தேவியின் சகாயத்தால் பெறப்பட்ட சித்தி மந்திரங்களால் இவை நடைபெறுகின்றன என்றார். ஓ அப்படியா! என்று சுவாமிஜி செட்டியாரிடம் ஏதோ கூற நினைத்தும், அந்தக் கிராம மக்களைப் பார்த்து ஏதும் கூறாது கிளம்பினார். கோவிந்த செட்டியார் குறி சொன்னவாறே, சுவாமிஜி தமது குருதேவரின் அருளால் மேலைநாடுகளில் இந்து மதத்தைப் பரப்பினார். 1897-ல் தாயகம் திரும்பினார் வேதாந்த வெற்றி வீரராக. இலங்கை முதல் ஒவ்வோர் ஊராகச் சமய முழக்கமிட்டபடி வந்தார். பிப்ரவரி 3-ஆம் தேதி கும்பகோணத்தில் வேதாந்தத்தின் செய்தி என்ற அற்புத உரையை நிகழ்த்தினார் சுவாமிஜி. ஆயிரக்கணக்கான மக்கள் அலைமோதிய அந்தக் கூட்டத்தில் கோவிந்த செட்டியும் இருந்தார். சுவாமிஜியைப் பார்த்ததும், அடடா, இவர் முன்பு வலங்கைமான் வந்த வங்கத் துறவி யல்லவா என்று நினைவுகூர்ந்தார். அன்று பிரபலமாகாதவர், இன்று பிரபஞ்ச நாயகனாக வந்துள்ளாரே என ஒதுங்கியே நின்றார்.

கோவிந்த செட்டியாரை சுவாமிஜி பார்த்து விட்டார். உடனே அருகிலிருந்த ஒருவரிடம், அந்தச் சோதிடரிடம் என்னைச் சந்திக்கும்படி கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். விவரமறிந்து செட்டியார் சுவாமிஜியைத் தனியே சந்தித்தார். சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். சுவாமிஜி நலம் விசாரித்தார். ஓரிரு பொதுவான கேள்விகளைக் கேட்டுவிட்டு, சோதிடரே, உங்களுக்கு வாய்த்துள்ள சித்திகள் உங்களுக்குப் பெயரும் புகழும் பணமும் தருகின்றன. தவறில்லைதான். ஆனால் அதுவே உங்கள் வாழ்க்கையைக் கடைத்தேற்றி விடுமா? என்று சுவாமிஜி கேட்டதும், கோவிந்த செட்டியார் மவுனமானார். சுவாமிஜியின் தீர்க்கமான கண்களிலும் அவரது வார்த்தையிலும் உள்ள சத்தியத்தைக் கண்டார் சோதிடர். அன்பரே, சமயச் சடங்கு, சமுதாயக் கடமை போன்ற வாழ்க்கை எல்லாம் சரிதான். ஆனால், ஆன்மிகம் என்று வந்தால் நீங்கள் எங்கு ஆரம்பித்தீர்களோ, அங்குதானே நிற்கிறீர்கள்... இல்லையா? செட்டியாரின் கண்களில் நீர் பெருகியது. அது சுவாமிஜியின் நெஞ்சில் ஊற்றெடுத்த கருணையால் வந்த விளைவு. கைகூப்பி, தன் ஜீவனைக் கடைத்தேற்றுமாறு பணிந்து நின்றார் செட்டியார். சுவாமிஜி ஆனந்த மேலீட்டால் அவரை ஆலிங்கனம் செய்தார். ஸ்ரீராமர் அனுமனுக்குத் தந்த ஆசிர்வாதம் போன்றதல்லவா, அது! சுவாமிஜி புறப்பட்டார். சோதிடரும் தமது நூறு சதவிகித ஆன்மிக வாழ்வை நோக்கிப் புறப்பட்டார். இதன் பின் சோதிடருக்கு எல்லாம் முன்பு போலவே இருந்தது. ஆனால், தெய்வம் அவருக்கு முன்பு எல்லாமாகி நின்றது. சில வருடங்களுக்குப் பிறகு....

ஒவ்வொரு வருடமும் நவமியன்று ஸ்ரீராமரின் ஊர்வலம் சோதிடரின் வீட்டு முன் நிறுத்தப்பட்டு உறியடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த ஆண்டு சோதிடர் ஏனோ, உறியடித்தல் நிகழ்ச்சி தமது வீட்டு முன்பு நடக்க வேண்டாம் என்று கூறினார். ஸ்ரீராம ஊர்வலம் புறப்பட்டது. வாசலிலிருந்து சோதிடர் ஸ்ரீராமரைப் பக்தியுடன் வணங்கி நின்றார். உறியடித்தலைத் தன் வீட்டுமுன்பு நடத்த வேண்டாம் என்று சொன்ன சோதிடரின், தொங்கிக் கொண்டிருந்த வாழ்க்கை எனும் உறியடிப் பானையை அன்று ஸ்ரீராமரே அடித்து அனுக்கிரகித்தார் போலும். ஆம், சோதிடர் அன்று பகவானின் தரிசனமே பெற்றார். ஸ்ரீராமதரிசனம் பெற்ற அந்த மேலான நிலையிலேயே ராமருடனேயே ஐக்கியமானார். இது சத்குருவின் ஸ்பரிச தீட்சை தந்த விளைவோ! மான் சஞ்சலமே உருவானது. தனது அன்னை குறித்த சஞ்சலத்திற்காக வலங்கைமானுக்கு வந்த சுவாமிஜி, கோவிந்த செட்டியாருக்குச் சம்சார சஞ்சலத்தை நீக்கி யோக ÷க்ஷமம் வழங்கினார். அது வலக்கையில் மானைக் கொண்ட சிவனின் கருணையைப் போன்றதல்லவா!
நான் யார்? ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!

உலகத்தில் மக்களிடையே பேதங்கள் நிலவிய சூழ்நிலையில் காலடி க்ஷேத்திரத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் மகான் ஆதிசங்கரர். தாயின் அனுமதியுடன் சந்நியாசம் பெற்ற ஆதிசங்கரர் அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர். அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவது போல் ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும் போது எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர் நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர் அவரை வழியை விட்டு விலகிப் போக சொல்கிறார். எதிரில் வந்தவர் 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும் தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல் பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ விலங்குகளோ தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம் தானே? அப்படி இருக்கும்போது என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம் தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்? எனக் கேட்டார். ஆதிசங்கரருக்கு அப்போது தான் புரிந்தது தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப்பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அது தான் மனீஷா பஞ்சகம். அந்தப் பஞ்சகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே...

விழிப்பிலும், கனவிலும், உறக்கத்திலும் எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் பிரபஞ்சத்தின் சாட்சியாக ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்த்தப்பட்டவரோ யாராக இருந்தாலும் அவரே என் குரு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

“ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்விதுஜ்ரும்பதே!
யா ப்ரஹ்மாதிபிபீலிகாந்ததனுஷு ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணீ !!
ஸைவாஹம் ந ச த்ருஶ்யவஸ்த்விதி த்ருடப்ரக்ஞாபி யஸ்யாஸ்தி சேத்!
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம !!

எவன் ஒருவனுக்கு தானே ஆத்மஸ்வருபம்தான் என்பதில் திட நம்பிக்கை உள்ளதோ விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய 3 ஸ்திதிகளிலும் பரமாணுவிலிருந்து பரப்ரம்மம் வரை எல்லாவற்றிலும் எக்காலத்திலும் கண்ணுக்குத் தெரியாத ஸாக்ஷியாக உயிர்ப்பு சக்தியாக செயல்படுவதும் அதே ஆத்மாதான் என்பதையும் அவன் அறிகிறானே அவன் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் அவனே உயர்ந்த ஆசானாகக்கருதப்படுவான்.

பரம்மைவாஹமிதம் ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா த்ரிகுணயாஶேஷம் மயாகல்பிதம்!
இத்தம் யஸ்ய த்ருடாமதி: ஸுகதரே நித்யே பரே நிர்மலே
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் உணர்கிறார். எனக்குத் தெரியும் யார் உயர்நத குரு என்று ப்ராம்மணனோ, சூத்ரனோ, யார் அந்த சுத்த ஸத்வமான ப்ரம்மத்திலேயே லயித்து தானே அதுவாக உணர்கிறார்களோ அவர்தான் எல்லாம் உணர்ந்த ஆசாரியராக முடியும். ஸத்வ, ரஜஸ், தமஸ், ஆகிற முக்குணங்களின் பாதிப்பினாலும் அறியாமையினாலும் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாம் வெவ்வேறாகத் தெரிந்தாலும் ஒரே பரமாத்மா பரப்ரஹ்மத்திலிருந்து உண்டானவையே அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டவனே ஸத்குரு என்கிறார் அவர்.

ஶஶ்வன்னஶ்வரமேவ விஶ்வமகிலம் நிஶ்சித்ய வாசா குரோ:
நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருஶதாம் நிர்வியாஜ ஶாந்தாத்மனாம்!
பூதம் பாவி ச துஷ்க்ருதம் ப்ரதஹதாம் ஸம்வின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்ப்பிதம் ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம!!

குருவின் வார்த்தைகளில் எனக்குப் பரிபூரண நம்பிக்கை இருப்பதால் இந்தப்பிரபஞ்சம் முற்றும் நிலையற்ற உருவெளித்தோற்றம் என்பதும் பரமாத்மாவைக் குறித்து ஆழ்ந்த தியானத்தைச் செய்து நிஸ்சலனமான மனதுடன் பாவத்தீயையெல்லாம் அந்த ஸாதனையாகிற தீயில் எரிக்க வேண்டும் என்பதும் தெரிகிறது.

யா திர்யங்நரதேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே
யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேஹவிஷயா பாந்தி ஸ்வதோ சேதனா:!
தாம் பாஸ்யை: பிஹிதார்க்கமண்டலநிபாம் ஸ்பூர்த்திம் ஸதா பாவயந்
யோகீ நிர்வ்ருதமானஸ: ஸ குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் கூறுவதாவது : என் அபிப்ராயப்படி உயர்ந்த யோகி யார் என்றால் பரமாத்மாவின் உண்மை ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் உணர்ந்தவர்தான். அதாவது அனைத்துச் செயல்களும் யாரால் நடத்தப்படுகிறது என்பதும் அப்பேர்ப்பட்ட கடவுளின் ஒளி அறியாமையினால் மறைக்கப்பட்டிருக்கிறது (மேகங்கள் எப்படி சூரியனின் ஒளியை மறைக்கிறதோ அப்படி) என்பதும் தான்!

யத்ஸௌக்யாம்புதிலேஶலேஶத இமே ஶக்ராதயோ நிர்வ்ருதா:
யச்சித்தே நிதராம் ப்ரஶாந்தகலனே லப்த்வா முனிர்நிர்வ்ருத:!
யஸ்மிந்நித்ய ஸுகாம்புதௌ கலிதர்தீ ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித்
ய: கஶ்சித் ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூநம் மனீஷா மம!!

இந்திரனாலும் மற்ற தேவர்களாலும் துதிக்கப்படும் அந்தப்பரமாத்மாவிடம் எப்போதும் மனதைச் செலுத்திப் பரிபூரண அமைதியுடன் எவர் இருக்கிறாரோ அவர் அந்த பரப்ரம்ஹ்மத்தை அறிந்து கொண்டவர் மட்டுமல்ல அந்த ப்ரஹ்மமாகிவிடுகிறார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

தாஸஸ்தேஹம் தேஹத்ருஷ்ட்யாஸ்மி சம்போ ஜாதஸ் தேம்சோ ஜீவத்ருஷ்ட்யா த்ரீத்ருஷ்டே!
ஸர்வஸ்யாஸ்மந்நாத்மத்ருஷ்ட்யா த்வமேவேத் யேவம் மே தீர்நிஸ்சிதா ஸர்வ சாஸ்த்ரை:!!

பகவானே! நான் இந்த உடலில் இருக்கும்போது உன் சேவகன் முக்கண்ணனே! இந்த உயிராக இருக்கையில் உன்னில் ஒரு பாகமாகிறேன். ஆத்மாவாக இருந்தால் நீ என்னுள்ளும் இன்னும் மற்றெல்லா ஆத்மாக்களுக்குள்ளேயும் இருக்கிறாய். என் புத்தி பூர்வமாகவும் பல நூல்களைப்படித்தும் நான் வந்த முடிவு இதுதான்.
அன்னை மாயம்மா!

ஒழுங்காக வாரப்படாததால் பறக்கும் கேசம் கந்தலைவிட மோசமாகத் தென்படும் உடை தோற்றத்தில் வினோதமாக அமைந்த சுருக்கங்கள்.. இப்படித்தான் தோற்றமளித்தார் மாயம்மா. தபோ வனத்தில் தம்முடைய அதிஷ்டானத்தை அமைத்துக் கொண்ட சத்குரு ஞானானந்தகிரி சுவாமிகள் ஒரு முறை தன் பக்தர்கள் கேட்டபோது சொன்னார். கன்யாகுமரி கோயிலில் பகவதியாக இருப்பவள்தான் கடற்கரையில் மாயம்மாவாக உலவி வருகிறாள் என்று. மகான்களைப் பற்றி மகான்களே அறிவார்கள் போலும். இறையருள் பெற்று பகவதியம்மன் பார்வையிலேயே இருந்த மாயம்மாவை பலரும் கண்டுகொள்ளவில்லை. தன்னை எவரும் வந்து வணங்கவில்லையே என்று மாயம்மா வருந்தியதும் இல்லை. எனது பிள்ளைகளைப் பாதுகாத்திடவே நான் இங்கு வந்தேன் என்பதே மாயம்மாவின் கூற்று. ஒருநாள் மாயம்மா பகவதியம்மன் கோயிலின் உணவு விடுதியில் மதிய உணவை உட்கொண்ட சமயத்தில் அங்கு வந்த ஒரு தொழிலாளி வயிற்று வலியால் துடித்தபடி உருண்டு புரண்டான். எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்களே தவிர ஒருவரும் உதவி செய்யவில்லை. மாயம்மா அவனிடம் எழுந்திரு மகனே இந்த உணவை உட்கொள்! என்று தனது கைப்பிடி சோறை அந்தத் தொழிலாளிக்கு வழங்கினார். அதனை வாங்கி உண்ட அந்தத் தொழிலாளியின் வயிற்றுவலி சட்டென்று நீங்கியது. இந்நிகழ்வே மாயம்மாவின் கருணை உலகமெங்கும் பரவ காரணமாக அமைந்தது.

ஒருசமயம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பஸ் ஒன்று சாலையில் படுத்திருந்த நாயின் மீது ஏறி இறங்கியது. பஸ் ஏறியதால் குடல் வெளியே வந்து உயிருக்குப் போராடிய நாயை அங்கு இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். மாயம்மா அடிபட்டுக் கிடந்த நாயைத் தூக்கி தனது மடியில் கிடத்தி நாயின் குடலை வயிற்றுக்குள் தள்ளி தான் வைத்திருந்த வைக்கோலால் நாயின் கிழிந்த வயிற்றைத் தைத்து தனது கையில் இருந்த கிழிந்த துணிகளைக் கொண்டு காயம்பட்ட பகுதிகளைச் சுற்றிக் கட்டினார். பின்னர் நாயின் உடலை நீவி விட்டார். அவ்வளவுதான்! மடியில் கிடந்த நாய் துள்ளிக்குதித்து எழுந்து ஓடியது. இந்நிகழ்வுக்குப் பின்னர் மாயம்மாவைச் சுற்றி நாய்கள் கூட்டமும் மிகுந்த அன்புடன் சுற்றிவர ஆரம்பித்தது. இப்படி பல சம்பவங்களைச் சொல்லலாம்.இதன்பின்னர் பக்தர்களின் கூட்டம் அவரை நாடி வந்தது. தன்னை நாடிவந்த அடியவர்களை மாயம்மா நல்வழிப்படுத்தியதுடன் தடுமாறுபவர்களை தனது அருளால் திருத்தவும் செய்தார். இந்நிலையில் அவரது பக்தரான ராஜமாணிக்கம் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மாயம்மா தங்குவதற்கு கடற்கரையில் குடில் அமைத்துக் கொடுத்தார். இதன்பின்னர் அன்னை மாயம்மாவின் நினைவாக அவர் வாழ்ந்த கன்னியாகுமரியில் தனிக் கோயில் எழுப்பப்பட்டு இன்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அன்பின் உருவமான அன்னை மாயம்மாவை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. திருமணம்,புத்திர பாக்கியம்,தொழில் அபிவிருத்தி என பல்வேறு கோரிக்கைகளுடன் வந்து பக்தர்கள் அன்னையை வணங்கிச் செல்கின்றனர்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 43 ॐ

தீட்சிதர்கள் எப்போது இந்தக்கோவிலில் வழிபாடு செய்ய வந்தார்கள் என்று சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும் சரித்திரச் சான்றுகளின் படி ராஜா ஹிரண்யவர்மன் காலத்தில் இருந்து இக்கோவிலில் நடராஜருக்கு வழிபாடுகள் செய்து வருவதாய்த் தெரிய வருகிறது. சோழ அரசர்களுக்குப் பட்டாபிஷேஹம் செய்யும் உரிமையும் இவர்களுக்கு இருந்திருப்பதாய்த் தெரிய வருகிறது. ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்தும் திரு நீலகண்டரின் கதை பற்றிய சிவ பக்த விலாசம் என்ற புத்தகத்தில் இருந்தும் தில்லை தீட்சிதர்கள் கோவிலில் முக்கிய அங்கம் வகித்து வந்தது தெரிய வருகிறது. ஆரம்பத்தில் 3,000 பேர் இருந்ததாய்ச் சொல்லப்பட்டாலும் தற்சமயம் 420 பேர் தான் இருக்கின்றனர். அதுவும் பிறப்பு, இறப்பு விகிதத்தை ஒட்டி ஏறி இறங்குவது உண்டு. கிருத யுகத்தில் 3,000 பேரும், திரேதா யுகத்தில் 2,000 பேரும், துவாபர யுகத்தில் 1,000 பேரும், தற்சமயம் கலியுகத்தில் 420 பேரும் இருக்கின்றார்கள் என்று அடியேனின் கட்டளை தீட்சிதர் சாம்ப நடேஷ தீட்சிதர் அவர்கள் சொன்னார்கள். கோவிலின் அனைத்து உரிமைகளும் தீட்சிதர்களையே சார்ந்துள்ளது. கோவிலின் பரம்பரை அறங்காவலர்களும் இவர்களே. இது தகப்பன் வழிச் சொத்து பிள்ளைக்கு என்ற முறைப்படி இல்லாமல் தீட்சிதர்கள் குடும்பங்களில் பிறக்கும் அனைத்து நபர்களுமே உரிமை பெற்று விடுகிறார்கள். தகப்பனும் பிள்ளையும் சம உரிமை அனுபவிக்கும் இந்தக் கோயிலுக்கு எனச் சொத்து எதுவும் தனியாகக்கிடையாது. பல அரசர்கள் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருந்தாலும் சில பல சொத்துக்கள் அவர்கள் அளித்திருந்தாலும் தற்சமயம் கோவிலுக்கு என எந்தவிதமான சொத்தும் கிடையாது. கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் அளிக்கும் சிறு சிறு மான்யத் தொகைகளில் இருந்து பெரும் மான்யத் தொகைகள் வரை சேர்ந்து வரும் பணத்தில் இருந்து தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இது தவிர சில கட்டளை தாரர்களும் இருக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் பெரும் தொகைகளும் கோவிலின் வழிபாட்டுக்கும் உற்சவங்களுக்கும் பயன்படுகின்றது. பச்சையப்ப முதலியார் ஏற்படுத்திய அறக்கட்டளை, வி.எஸ்.எஸ்டேட், ராஜா தொண்டைமான், புதுக்கோட்டை அவர்களின் அறக்கட்டளை, தருமபுரம் ஆதீனம், முகையூர் சுப்ரமணியபிள்ளை அவர்களின் அறக்கட்டளை, ராஜா சர். முத்தையாச் செட்டியார் அவர்களின் அறக்கட்டளை போன்றவை கோவிலுக்கு நிரந்தரமாக ஒரு தொகை கிடைக்க வழி செய்துள்ளது. அவற்றின் கணக்கு வழக்குகள் அந்த அந்தக் கட்டளை தாரர்கள் நியமிக்கும் நிர்வாகியைச் சேர்ந்தது. அவர்கள் கோவிலுக்குப் பணமாகவோ பூஜையின் போது தேவைப்படும் பொருளாகவோ கொடுத்துத் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். தீட்சிதர்கள் இந்தக் கணக்கு வழக்கு பற்றிக் கட்டளை தாரர்களிடம் கேட்டுக் கொள்ளுவது இல்லை. பிரம்மோற்சவங்களுக்கான செலவுகள் ஊரில் உள்ள அனைத்து ஜாதியினராலும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. இது போல மற்ற உற்சவங்களும் சில தனிப்பட்ட உபயதாரர்களாலும் பொதுவாக வசூல் செய்யப்பட்ட பணத்தாலுமே கொண்டாடப்படுகின்றது.

இது தவிர சில பக்தர்கள் தங்கள் பெயரிலோ, குடும்பத்தின் பெயரிலோ,குறிப்பிட்ட நாளில், நட்சத்திரத்தில் அபிஷேஹம், அர்ச்சனை செய்ய என வருஷத்துக்கு ஒரு முறை கொடுக்கும் பணமும் வழிபாடுகளுக்கு உதவுகின்றது. இந்தக் கோயிலில் எங்கேயும் உண்டியலும் கிடையாது. எல்லாச் செலவுகளும் போக மிதி என்பது வருவது மிகவும் அரிது. ஒரு வேலை வரும் தொகை பற்றாவிட்டால் அனைத்து திட்டங்களும் சமமாக பணத்தை போட்டு விழாக்களை சிறப்பாக பூர்த்தி செய்கின்றார்கள். பொதுவாக யாரும் சிவன் கோவிலின் வருமானத்தையோ சொத்தையோ வைத்துச் சாப்பிடுவது இல்லை. சிவன் சொத்து குலநாசம் எனச் சொல்லப் படுவதுண்டு. ஆனால் இந்தக் கோயிலில் சிவனே தீட்சிதர்களில் ஒருத்தன் எனச் சொல்லப்படுவதாலும் கோயிலை தீட்சிதர்கள் தங்கள் குடும்பத்தின் முக்கிய இருப்பிடமாய்க் கருதுவதாலும் இறைவனின் நித்திய வழிபாடுகளை வீட்டில் செய்யும் பூஜை போல ஈடுபாட்டுடனும் வைதீக முறையிலும் செய்வதாலும் இறைவனே தங்களில் ஒருவன் என்பதாலும் அவனுடன் இருந்து உண்ணுவது தங்கள் உரிமை என்ற நினைப்பும் இவர்களுக்கு உண்டு.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
அதிசய வழிகள் நான்கு: இதற்கான அதிசய வழிகள் நான்கு உள்ளன. சந்தோஷ சாதுசங்கஸ்ச விசாரோத்ய சமஸ்ததா ஏத ஏவபவாப்யோத்யாவுபாயாஸ்தரணே ந்ருகாம  (21618) சந்தோஷம் (எப்போதும் திருப்தி), நல்லோர் இணக்கம் (சாதுக்களுடன் சேர்தல்) விசாரம், அமைதி, இவையே மனிதருக்கு உலகம் என்னும் சாகரத்தைக் கடக்கும் வழிகளாகும். இதை எளிதாக நான்கு ஸ காரங்களாக ஸந்தோஷம், ஸத்சங்கம், ஸத்விசாரம், ஸமஸ்தம் என்று நினைவில் கொள்ளலாம்.
சந்தோஷம் : விஷயங்களில் ஆசையில்லாது, சந்தோஷமாக (திருப்தியுடன்) இருக்கும் ஒருவனுக்குப் பெரும் சக்திகள் (வளங்களும் கூட) ஒரு அரசனிடம் இருக்கும் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும் என்பதை உறுதியாக யோக வாசிஷ்டம் தெரிவிக்கிறது. எவ்வளவு அரிய செய்தி இது!

நல்லோர் இணக்கம் : மனதில் இருக்கும் இருளை சாதுக்கள் அகற்றுவர். சூரியஒளி போன்ற ஞானத்தைத் தருவர். தர்மங்கள் செய்வதாலும், புனிதத்தல யாத்திரை மேற்கொள்வதாலும் விரதங்களாலும் மதச் சடங்குகள் மற்றும் யாகங்களாலும் என்ன பயன், ஒருவன் சாதுக்களுடன் சேர்ந்து இருக்கும்போது!

விசாரம் : நான் யார்? உலகில் பிறப்பு என்ற தோஷம் எப்படி வந்து சேர்ந்தது? இப்படி தர்க்கரீதியாக ஆய்வு செய்வதே விசாரம்!

சமஸ்தம் : அனைத்து உயிர்களிடமும் நட்பாக இருந்தால் உயரிய ஆன்மா தன்னைத் தானே சுத்தப்படுத்துகிறது. ஆக இந்த நான்கு வழிகளில் எந்த ஒரு வழியை மேற்கொண்டாலும் இறை சக்தி அருளைப் பாலித்து பெரும் வளங்களைத் தந்து முக்தியை நல்கும் என யோக வாசிஷ்டம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது. அதி சுலப வழி விசாரமே..: மேலே கூறிய நான்கு வழிகளில் மிகச் சுலபமான வழியாக ரமண மஹரிஷி கூறுவது நான் யார் என்று இடைவிடாது உன்னைக் கேள்வி கேள்! அனைத்து மர்மங்களும் தானே பிடிபடும் என்பதே! எப்போதும் திருப்தி, நிஜமான உயரிய பண்புகள் உள்ள சாதுக்களை நாடுதல், அனைத்து உயிர்களிடமும் சமத்துவம் என்பதெல்லாம் பலருக்கும் கடைப்பிடிக்க சற்று சிரமமான வழிகள். ஆனால் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் சற்றும் செலவின்றி ஆண் பெண் யாரானாலும் அந்தஸ்து பேதமின்றி நாடு, இனம், மொழி தாண்டி சுலபமாக செய்யக்கூடியது விசாரமே! அதனால்தான் அவர், ஆன்ம வித்தை உரை என்ற அற்புதமான பாடலில் பல்லவி அனுபல்லவி ஐந்தே ஐந்து சரணங்களில்.

ஐயே! அதி சுலபம் ஆன்மவித்த ஐயே! அதி சுலபம் என்று கூறி விளக்குகிறார்.

பொருள் பொதிந்த அடுக்குமொழித் தமிழ்க் கவிதை வரிகளை இந்தப் பாடலில் படித்தால் மஹரிஷி ஒரு மஹாகவியும் கூட என்பதை உணர்ந்து விடலாம்! சரணங்களின் கடைசி வரிகளைப் பார்ப்போம்! பொய் உருவாக்கிய அகங்காரத்தை நான் யார் என்ற இடைவிடாத கேள்வி மூலம் ஒழித்து விட்டால். சுயமான்மா விளக்குமே இருள் அடங்குமே, இடர் ஒடுங்குமே, இன்பம் பொங்குமே என்றும். மாம்சமான சரீரத்தை நான் என்று எண்ணாமல் நான் யார்? இடம் எது என்று விசாரிப்பதால். இதய குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம ஞானமே! இதுவே மோனமே. ஏக வானமே என்றும் உண்மை சொரூபத்தை உணர்ந்து விட்டால் பின் அறிவதற்கு என்ன இருக்கிறது? தன்னைத் தன்னில் உணர்ந்து விட்டால். தன்னுள் மின்னும் ஆன்ம பிரகாசமே அருள் விலாசமே அக விநாசமே இன்ப விகாசமே என்றும் கர்மங்களின் கட்டு அவிழ, இம்மார்க்கம் மிக்கு எளிது! சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ஜோதியே; நிதானுபூதியே இராது பீதியே; இன்ப அம்போதியே (இன்ப அம்போதி ஆனந்தக் கடல்) என்றும். அண்ணாமலையானைக் காண அவன் அனுக்ரஹம் வேண்டும். உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா காணுமே அருளும் வேணுமே அன்பு பூணுமே இன்பு தோணுமே என்றும் அற்புதமான சிறிய ஐந்து வரிப் பாடல்கள் ஐந்தின் மூலம் விளக்குகிறார். யோக வசிஷ்டம் கூறும் அதிசய வழிகள் நான்கில் அதிசுலபமான நான் யார் என்ற விசார வழியை அனுபூதியாக உணர்ந்தவர் மஹரிஷி ரமண மகான்! அனைவரையும் உய்விக்க எண்ணும் அருளுடன் ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை என்று அவர் கூறும் போது யோக வாசிஷ்டத்தின் உண்மைக் கூற்றையும் அதை மெய்ப்பிக்கும் மஹரிஷியின் மாண்பையும் எண்ணி எண்ணிநம் மெய் சிலிர்க்கும்! அவருடன் இணைந்து அதி சுலபம் ஆன்ம வித்தை என்று பாடியவாறே நான் யார் என்ற விசார மார்க்கத்தை மேற்கொண்டு சம்சார சாகரத்தைக் கடந்து விடலாம்! அப்போது..... சுயமான்மா விளங்குமே; இருள் அடங்குமே. இடர் ஒடுங்குமே இன்பம் பொங்குமே.

இன்னும் சுமந்து கொண்டு நாளை வருகிறேன் 👣

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

*பசுவின் பால் சைவமா அசைவமா ?*

மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது.

அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள்.

இன்றும் அந்த கிண்டல் தொடர்ந்தபடிதான் உள்ளது.

அதற்கு காரணம் அவர்களின் விளக்கக் குறைவே.

முதலில் அசைவம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம்.

பால் அப்படியல்ல.

பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும்.

ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும்.

பசுவுக்கு நான்கு மடு இருக்கும்.

இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும்.

பசும்பால் மனிதனுக்கு (சத்வ)சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது.

அது புனிதமானதும் கூட.

பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.

 பஞ்ச கவ்யம் (பால்,தயிர்,நெய்,பசும்சாணம்,பசுங்கோமியம்) விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்கிறோம்
இதிலிருந்தே புரியாத பலரும் பால் சைவமா அல்லது அசைவமா என்று புரிந்து கொள்ளலாம்.

எது எப்படி புரிந்து கொண்டாலும் சைவ உணவு உண்பவர்களுக்கு எதிராக கோஷம் போட ஒரு கோஷ்டி இருந்து கொண்டுதான் இருக்கும்.

*பசு காயத்ரி மந்திரம்:-*

ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு
பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக்
கொண்டவளாகவும், இருக்கிறாள்.

பசுவை அடிக்கவோ, விரட்டவோ
கூடாது. பூஜிக்க வேண்டுமென
வேதம் சொல்கிறது.

பிரும்ம சிருஷ்டியில்
உலகம் உய்ய முதலில்
பசுவைப்படைத்து அதன் உடலில்
பதினான்கு உலகையும் முப்பத்து
முக்கோடி தேவர்களையும்
இருக்கச் செய்தார் பகவான்

அதில் முதலில்
வந்தவர்களான தர்மராஜனும்
காலதேவனும்தான் முகத்தில்
இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும்
குடியேறினார்கள். இதில் இரண்டு
பேர்கள் தாமதமாக வந்தார்கள்.

அவர்கள் மஹாலட்சுமியும்
கங்கையும். பசுவின் உடலில்
இவர்களுக்கு இடம் இல்லை.

லட்சுமியும் கங்கையும் பசுவை
மிகவும் வேண்டினார்கள்.
எங்கேயாவது இருக்க ஓர் இடம்
கொடுத்தால் போதும் என்று
கெஞ்சினார்கள்.

பசுவும்,
தாய்மார்களே, உங்கள் மீது எனக்கு
அனுதாபம் இருக்கிறது. ஆனால்
இடமே இல்லையே, ஒன்று
வேண்டுமானால் செய்யுங்கள், என்
உடலிலிருந்து வரும் சாணம்,
கோமூத்ரம் இரண்டும் யாருக்கும்
சொந்தமாகவில்லை.

நீங்கள்
விரும்பினால் அதில் இருக்கலாம்
என்று சொல்ல லட்சுமியும்
கங்கையும் மிகுந்த
சந்தோஷத்துடன் அந்த இடத்தில்
வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள்.

அதனால் இன்றைக்கும் பசுவின்
பின் புறத்தில் லட்சுமியும்,
கங்கையும் இருப்பதாக சாஸ்திரம்.
அதனால் பசுவின் சாணமும்,
கோமூத்ரமும் சகல
பாபங்களையும் போக்கி லட்சுமி
கடாட்சம் அளிக்கக் கூடியது
என்கிறது சாஸ்திரம்.

ஹரே கிருஷ்ண

*பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்.!*

பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்.,
 *முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

 *கொலை களவு செய்வதால் உண்டாகும்
  பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.

 *நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

 *பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

பசுவும் புண்ணியங்களும்.....
*******************************

 *பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.

 *பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

 *பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.

 *பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

 *பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

`மா’ என்று பசு கத்தும் ஓசை..
அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.

 *பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

 *மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.

 *ஒருவர் இறந்த பின் நரகலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் கலந்து ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது.

 *பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

 *உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.