வெள்ளி, 4 அக்டோபர், 2019

விழிப்புணர்வு...

சமையலறையில் எப்போதும் ஒரு பை கோதுமை மாவு வைத்திருங்கள். அது எங்குள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

#தயவு செய்து படிக்காமல் இருக்க வேண்டாம். நான் சோளம் கொதிக்கவைத்தேன். சோளம் தயாரா என்று பார்க்க சிறிது குளிர்ந்த நீரை கொதிக்கும் நீரில் ஊற்றினேன். தவறுதலாக நான் கையை கொதிக்கும் நீரில் பட்டுவிட்டது... வியட்நாமிய கால் நடை மருத்துவராக இருந்த எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். நான் வேதனையுடன் அலறும் போது, ​​என்னிடம் வீட்டில் கோதுமை மாவு இருக்கிறதா என்று கேட்டார். நான் கொஞ்சம் கொடுத்தேன். அவர் என் கையை மாவில் வைத்து சுமார் பத்து நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார்.

வியட்நாமில் ஒரு பையன் ஒரு முறை தீயில் ஒரு விபத்தில் எரிந்ததாக அவர் என்னிடம் கூறினார். அவர் மீது நெருப்பு மற்றும் பீதியுடன் யாரோ ஒருவர் தனது உடலெங்கும் ஒரு சாக்கு கோதுமை மாவு ஊற்றி தீயை அணைக்க முயன்றார். தீ அணைக்கப்பட்டது மட்டுமல்ல, சிறுவன் மீது தீக்காயங்கள் எதுவும் இல்லை !!!!

என் சொந்த விஷயத்தில், நான் பத்து நிமிடங்கள் மாவுப் பையில் என் கையை வைத்தேன். பின்னர் அதை அகற்றி விட்டேன். அதன் பிறகு எரிந்த எந்த சிவப்பு அடையாளத்தையும் நான் பார்க்க முடிய வில்லை. இன்று நான் ஒரு பை கோதுமை மாவு குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறேன். நான் தீ படும் ஒவ்வொரு முறையும் மாவைப் பயன் படுத்துகிறேன். உண்மையில் குளிர்ந்த மாவு அறை வெப்பநிலையில் இருப்பது மிகவும் சிறந்தது. ஒரு முறை என் நாக்கை சுட்டு கொண்டேன். அதன் மீது சுமார் பத்து நிமிடங்கள் மாவு வைத்தேன். வலி நின்று விட்டது. எனவே எப்போதும் உங்கள் குளிர்சாதன பெட்டியில் குறைந்த பட்சம் ஒரு கோதுமை மாவு பாக்கெட் வைத்திருங்கள். மாவு வெப்பத்தை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது. இது வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் எரிந்த நோயாளிக்கு பதினைந்து நிமிடங்களுக்குள் பயன் படுத்தினால் அது உதவுகிறது.

உங்களுக்கு நன்மை பயக்கும் மதிப்பை யாராவது பகிர்ந்து கொள்ளும் போது ​​அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு தார்மீகக் கடமை இருக்கிறது. எனவே இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பித்ருக்கள் பூஜை
{நம் மன்னர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை}

1:ஒவ்வொரு மனிதனும் இயற்ற வேண்டிய மிக முக்கியமான கடமை பித்ருக்கள் பூஜை ஆகும்.

2:பித்ருக்களைப் பூஜிப்பதற்குத் தினமும் சில நேரங்கள் மற்றும் திதி, காலம்,ஆகியவை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலூம் ஒவ்வொரு தினமும் அவர்களை நன்றியுடன் நினைத்து வணங்கி வரவேண்டியது அவசியமாகும்.

3:பித்ருக்கள் கருனையே வடிவானவர்கள் முக்கியமாக நமது பெற்றோர்கள்  மறைந்த தினம்,அமாவாசை, மாதப்பிறப்பு, சூரிய,சந்திர கிரகண காலங்கள் ஆகியவற்றின் போது பூஜை செய்ய வேண்டியது அவசியம்.

4:சுவரின் மேல் எறியும் பந்து மீண்டும் நம்மையே வந்து அடைவது போல் நாம் பக்தியுடன் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் நம்மையே மீண்டும் வந்து அடையும் பித்ருக்களின் ஆசியாக இந்த ஆதியின் சக்தி அளவிடற்கரியது.

5:குடும்பத்தில் தொடர்ந்து வரும் கடன் பிரச்சனைகளும், நோய்களும்,நிம்மதிகுறைவும், விவாஹங்கள் தடைபடுவதும் பித்ருக்களை உள்ளன்புடன் பூஜிப்பதனால் உடனடியாக நீங்கும்.

6:பித்ரு பூஜையை அதிகபணம் செலவு செய்து தான் செய்ய வேண்டும் என்பதில்லை. அவரவர்கள் சக்திக்கு ஏற்ப செய்தாலே பித்ருக்கள் திருப்தி அடைந்து உள்ளம் பூரித்து மகிழ்வார்கள்.

7:கையில் மருந்து இருக்க அதனை உண்ணாமல் உடல் உபாதைகளுடன் போராடும் நோயாளியைப் போல் பித்ரு பூஜை என்ற அளவற்ற சக்தி நம் கையில் இருக்க அதனை விடுத்து வேறு பரிகாரங்களை தேடி ஓடுவது கண் இருந்தும் குருடனைப் போல நடந்தது கொள்வதற்குச் சமமாகும்.

8:பித்ருக்களை பூஜிப்பதும் புண்ணிய காலங்களில் திதி, தர்பணம்,ஆகியவை செய்வதும் வாழ்வின் இருதி  காலம் வரை அனைத்து நன்மைகளையும் அளிக்கும். பித்ருக்களை மறப்பவன் மஹாபாபி ஆகிறான்.

9:குடும்பத்தில் விவாஹம் போன்ற காரியங்கள் நிகழும் போது முதலில் பபித்ருக்களை வழிபடுவது அவசியமாகும். அவர்களை பூஜித்து அவர்களது ஆசியையும் அனுமதியையும் பெற்ற பின்னரே விவாஹத்தை நடத்த வேண்டும்.

10:இந்த ஆசீர்வாதம் கிரக தங்களையும் செய்வினை போன்ற கொடிய அனுபவங்களையும் உடனடியாக நீக்கக் கூடிய சக்தி வாய்ந்தது ஆகும்.

11:திதியின் போது பசு,நெய், தயிர், பால், தேன்,முப்பழங்கள் {மாம்பழம்,பலாப்பழம், வாழைப்பழம்}ஆகியவற்றினால் பித்ருக்கள் அளவற்ற திருப்தியும் மகிழ்சியும் அடைகிறார்கள்.

12:சிராத்த தினத்தன்று அதற்கு முன் தினமும் ஸ்தீரி சேர்க்கை பிறர் விடுகளில் புசிப்பது க்ஷவரம் செய்து கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். முடிந்தமட்டில் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களையே பித்ரு பூஜைக்கு அழைக்க வேண்டும்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி :52 ॐ
           ஆதிரைச் சிறப்பு

இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு" என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்" என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும் சோதிடத்திலும் பேசப் படும் 6 வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை ஓரியன் குழுவில் சொல்லப்படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப்படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும் மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆட வல்லான் தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப்பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

ஆதிரை நன்னாள் மட்டுமின்றி அம்பா ஆடல் என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர் சிவகாமி பிள்ளையார் சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே சொல்லப்படுகின்றது. மிக ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை "ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்று காலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவிலிருந்து அதிகாலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப்படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலக் கணக்கின்படி டிசம்பர் 15-தேதிக்குப் பின்னர் ஜனவரி 15 தேதிக்குள் வரும் ஒரு நாள் தான் திருவாதிரை நாள் ஆகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர். இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும் சேந்தனார் அளித்த களிக்காகவே அன்று களி நைவேத்தியம் செய்யப்படுவது பற்றியும் அடுத்துப் பார்ப்போம். கிழே காணப்படும் ககன கந்தர்வ கனக விமானம். மேலும் இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும் இது உலகளவிலும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் இங்கே காணலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 51 ॐ
சித்தம் போக்கு சிவன் போக்கு!

திருவாரூரில் திருச்சிற்றம்பலம் என்று சொல்லுவது இல்லை. அதற்குப் பதிலாக ஆரூரா தியாகராஜா என்றே சொல்லப்படுகிறது. மேலும் வன்மீகம் என்னும் புற்றில் இருந்து ஈசன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியமையால் இது ப்ருத்வித் தலம் என அழைக்கப்படுவதாயும் அறிகிறோம். திருமாலால் பாற்கடலில் வழிபடப்பட்டு பின்னர் அவரிடமிருந்து இந்திரன் பெற்று இந்திரனிடமிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியை வந்து அடைந்து ஆரூரில் கோயில் கொண்ட தியாகராஜருக்கே இங்கே முதல் மரியாதை! தில்லையில் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜரின் அழகை இப்போது சற்று பார்ப்போம். குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே! என்றார் நாவுக்கு அரசர். இறைவனின் திரு அழகில் மயங்கிய அவர் இம்மாதிரி வர்ணிப்பது மிகை அன்று என்றாலும் அவர் தம் வர்ணனையில் மறைந்திருக்கும் பொருள் என்ன வென்றால் குனித்த புருவமும் = பரத நாட்டியத்தில் புருவங்கள் ஏறி இறங்குவதின் மூலம் பாவங்களை வெளிப்படுத்தும் கலை உண்டு அல்லவா? இங்கே இறைவன் தன் புருவங்களைக் குனிப்பதின் மூலம் அடியார்களின் குறைகளைக் கூர்ந்து கேட்டு அறிந்து தன்னையே சரண் என வந்தவர்களின் குறைகளைக்களையும் விதமாய்ப் புருவம் குனித்துக் கொள்வதாயும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் = தன்னை அடைக்கலம் என நம்பி வந்தோரை வருக என வரவேற்று அவர்களின் பிழைபொறுக்கும் விதமாய் கருணையுடன் கூடிய சிரிப்பையும் பனித்த சடையும் = சிவ நெறியாளர்க்கு உரிய ஒழுக்கத்தைக் காட்டும் விதமாய் அமைந்ததாம் அந்தச் சடை பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் = நெருப்பை ஒத்த வண்ணத்தை ஒத்த இறைவன் தன்னிடம் நெருங்கும் பொருட்களை நெருப்பானது எவ்விதம் எரித்துத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறதோ அவ்வாறே இறைவனும் தன்னிடம் நெருங்கும் அடியார்களை தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறான் என்னும் விதமாய் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் = இறைவன் தன் தூக்கிய திருவடியால் அனைத்து உயிர்களையும் பிறவிக்கடலில் இருந்து விடுவிக்கிறான். ஊன்றிய திருவடியால் இப்பிறவியின் அனைத்துக் கருமங்களான ஆணவம், கன்மம், மாயையை அழுந்தித் தேய்த்து அவற்றை அகற்றுகிறான். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல் வல்லானின் ஆடல் திருக்கோலத்தைக் காணப் பெறுவோருக்கு வேறு என்ன வேண்டும் இந்த உலகில்? இதைவிடப் பேரானந்தம் வேறே உண்டோ? என்கிறார் அப்பர்.

இறையவன் ஆடல் தெற்கு நோக்கியே இருக்கிறது. தென் திசை யமதர்மனின் திசை என்பர். அந்த யமபயத்தை நீக்கி நம்மைப் பேரருட்கடலில் ஆழ்த்தி நம்மை உய்விக்கவும் தெற்கே இருந்து வீசும் தென்றல் காற்று சுமந்து வரும் தென் தமிழின் மகத்துவத்துக்கும் மணத்துக்காகவும் கூட இருக்கலாம். சித்தம் போக்கு சிவன் போக்கு என்பர். இவன் போக்கை யாரோ கண்டார்? தன் கையில் உள்ள உடுக்கையைக் கொட்டிக் கொண்டு இவ்வுலக ஆன்மாக்களின் மாயையை உதறுகிறான். ஏந்திய நெருப்பால் கன்ம மலத்தைச் சுட்டுப் பொசுக்குகிறான். ஊன்றிய திருவடியால் ஆணவத்தை அகற்றுகிறான். தூக்கிய திருவடியால் பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கிறான். அபய ஹஸ்தம் காட்டி உயிர்களுக்கு "அஞ்சேல்" என அபயம் அளிக்கின்றான். தண்ணொளி வீசும் திருமுகத்தினால் அனைவருக்கும் அனைத்துக்கும் நானே தலைவன் எனத் தெரியப் படுத்துகிறான். திருமுடியில் சுமந்திருக்கும் கங்கையின் மூலம் அவன் பேராற்றலையும் உயிர்களைத் தடுத்தாட்கொள்ளும் வேகத்தையும் வெளிக்காட்டுகின்றான். பித்தனாகிய அவன் பிறையைத் தன் தலையில் சூடியதின் மூலம் தன்னைச் சரண் என வந்தடைந்தவர்களைக் கைவிடாமல் காப்பான் எனவும் தெரிவிக்கின்றான். ஆடலரசனே
சரணம் அவன் திருவடிகளே போற்றி போற்றி

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம்  ॐ