வியாழன், 11 ஜூலை, 2019

சுலோகம் 110

த்யானம் யதா பவதி தத்விஷயோ யதா த்வம்
யாத்ருக்குண : ச பகவந் அதிகாரிவர்க : |
ஸர்வாணி தாநி பவதாகம ஸம்ஹிதாபி :
கல்ல்பைரிவாத்வரவிதே : உபபாதிதாநி ||
பதவுரை

த்யானம் – மனதை ஒரே விஷயத்தில் ஏகாக்ரமாக செலுத்துவது, யதா பவதி – எப்படிச் செய்யவேண்டுமோ. அதுவும் தத் விஷய: த்வம் – அந்த த்யானத்துக்கும் விஷயமானது, த்யானம் செய்யப்பட்ட வேண்டிய நீர், யதா – எந்த எந்த குணங்களோடு கூடியிருக்கிறீர் என்பதும், அதிகாரி வர்க்க:- த்யானம் செய்ய யோக்யதையுள்ள ஜனங்கள் யாத்ருக்குண: ச – எவ்விதமான குணங்களோடு கூடியிருக்க வேண்டுமென்பதும், பகவந் – பகவானே, தாநி ஸர்வாணி – அவையெல்லாம், பவத் ஆகம ஸம்ஹிதாபி:- உமது ஆகமம் என்கிற, சிவாகமம் என்ற ஸம்ஹிதைகளால் (வேத துல்யமானதால் வேதவாசகமான ஸம்ஹிதாபதம், ஆகமத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது) அத்வரவிதே :- யாகம் செய்ய வேண்டிய விதியின், தந்த்ராணி – முறைகள் கல்ப்பைரிவ – கல்ப்பஸூத்ர க்ரந்தங்களில் போல, உபபாதி தாநி – ரிஷி, சந்தஸ் தேவதா, விந்யோகம், ப்ராம்மணம், இவ்வைந்துகள் உள்பட நிருபிக்கப்பட்டிருக்கின்றன.
திருச்சி உறையூர் தில்லை காளி குங்கும அலங்காரம் திரு உருவம் இன்று 10:07:19 புதன்கிழமை பதிவு செய்துள்ளோம். திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். வ்வொரு மாதப் பிறப்பை முன்னிட்டு இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு, சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது. ஓம் சக்தி ஓம்

ஒவ்வொரு வருடமும் தைமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாதமாக இருக்கும் பெண்ணிற்கு என்னென்ன திருச்சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளனவோ அனைத்தையும் தான்தோன்றீஸ்வரர் உடனுறை குங்குமவல்லிக்கு செய்வித்து, பொன், காப்பு, வெள்ளிக் காப்பு, வேப்பிலை காப்பு மற்றும் ஐந்து விதமான சித்ரான்னங்கள் நிவேதனம் செய்வார்கள்.    லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும், மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர்.



 லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும் மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர். முதல் நாள் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி பிரசாதம் வழங்கப்படும். இரண்டாம் நாள் சந்தான பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கு அம்பாள் குஹாம்பிகையாக காட்சியளிக்கின்றாள். சந்தான பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கும் வளையல் பிரசாதமாக வழங்கப்படும் மூன்றாம் நாள் அம்பாள் கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். அவளை தரிசனம் செய்தால் மணமாகாத (ஆண்-பெண்) இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் வேண்டிக்கொண்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர்.

இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது.

அதன்பிறகு அதற்கு பாதாளத்தில் கோயில் கட்டி பாதாள காளி என பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேற்பரப்பில் தில்லை காளி அமர்ந்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் கோபுரத்தில் ஆகாச காளி எழுந்தருளியிருக்கிறாள். இவளை அமாவாசையன்று மட்டுமே தரிசிக்கலாம். (அமாவாசை அன்று இரவு 8.30 - 10.00 மணி) இதுவரை எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத வகையில் பாதாள காளி, தில்லை காளி, ஆகாச காளி என மூன்று வகையான காளிகள் எழுந்தருளியுள்ளார்கள். பாதாளம் முதல் ஆலயம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்த ஆலயம் இதுவேயாகும். இக்காளியை வழிபாடு செய்வது பெரும் பாக்கியமாக மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் இப்பிரபஞ்சத்தில் காளி சக்தியை மொத்தமாக வழிபாடு செய்யும் ஒரே இடம் இக்காளி ஆலயம்தான். இக்காளியை வழிபட்டால் எல்லாவிதமான பெண் தெய்வங்களையும் வழிபாடு செய்த பெரும் புண்ணியம் கிடைக்கும். அமாவாசையன்று மட்டும்தான் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும்.

ஜெயகாளி: தில்லை காளிக்கு அருகில் ஜெயகாளி சந்நதியும் உள்ளது. ஜெயகாளியின் கோஷ்டத்தில் பிரத்யங்கரா, தக்ஷண காளியும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அமாவாசையன்றும் காளிக்கு வரமிளகாய் தீபம் ஏற்றப்படுகிறது. மிளகாய் தீபம் ஏற்றுவதால் பங்காளி சண்டை, பில்லி சூன்யம் நிவர்த்தி, குடும்பத்தில் அமைதி, தீராத வியாதிகள் நிவாரணம் அடைதல், வராத கடன் திரும்ப வருதல், செய்வினை கோளாறு, கண் திருஷ்டி ஆகியவற்றுக்கு சிறந்த பரிகாரம் என மிளகாய் தீபத்தை ஏற்றிக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இந்த தீபம் ஏற்றப்படும். மேலும் ஜெயகாளிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகு காலத்தில் வாய் பேச இயலாத குழந்தைகள் சரளமாகப் பேசவும், கல்வியில் சிறக்கவும் இஞ்சி, தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனைத்து சிவாலயங்களில் பைரவர் விக்ரகம் காணப்படும். பைரவர் ஆலயத்திற்கு காவலாக இருக்கக் கூடியவர்.

 இந்தக் கோயில் கி.பி. 871ல் ராசகேசரிவர்மன் என்ற சிறப்பு பெயர் பெற்ற ஆதித்த சோழனால் கட்டப்பட்டிருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் தான்தோன்றீஸ்வரர். இறைவி குங்குமவல்லி. அன்னைக்கு காந்திமதி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தக் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் இவற்றுடன் கூடியதாக உள்ளது. அர்த்த மண்டபத்திற்குள் நுழையும்முன்பு வாயிலின் இருபுறமும் மிகப்பெரிய இரண்டு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. கருவறையில் இறைவன் பெரிய உருவில் சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார்.

மகாமண்டபத்தில் அம்மன் சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். உட்பிராகாரத்தில் இறைவனின் எதிரே நந்தியும் தென்புறம் தட்சிணாமூர்த்தியும் செல்வ விநாயகரும், மேல்புறம் தண்டாயுதபாணியும், வடக்கே சண்டிகேஸ்வரும், வடகிழக்கு மூலையில் நவகிரக மண்டபமும், தேவகோட்டத்தின் மேல்புறம் பிரம்மா மற்றும் துர்க்கையின் திருமேனிகளும் அழகுற அமைந்துள்ளன. உறையூரை ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் என்ற மன்னன் சாரமா முனிவரின் செவ்வந்தி மலர் நந்தவனத்தில் ஆதிசேஷனின் மகள்களாகிய ஏழு நாக கன்னியரைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்தில் மோகம் கொண்டான். அவன் அவர்களை மணம் செய்துகொள்ள ஆசைப்பட்டான். ஆனால், அந்த கன்னிகையர் மறுத்துவிட்டனர். அரசன் நாகலோகம் சென்று ஆதிசேஷனின் அனுமதி பெற்று அந்த கன்னிகையரில் ஒருத்தியான காந்திமதியை மணந்தான்.

காந்திமதி சிவபக்தி மிகுந்தவள். அந்த பக்தியுணர்வு காரணமாக திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவரை நாள்தோறும் சென்று வணங்கி வந்தாள். அவள் கர்ப்பவதியானபோதும் தினந்தோறும் நடந்து சென்று இறைவனை வழிபட்டு வந்தாள். ஒருநாள் கொடிய வெப்பம் காரணமாக வழியில் மயங்கி விழ அன்று இறைவனை வழிபட இயலவில்லையே என வருந்தினாள். இந்தப் புராணச் சான்றாகவும் கர்ப்பவதியான காந்திமதி அம்மையின் நினைவாகவும் ஒவ்வொரு வருடமும் தைமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாதமாக இருக்கும் பெண்ணிற்கு என்னென்ன திருச்சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளனவோ அனைத்தையும் தான்தோன்றீஸ்வரர் உடனுறை குங்குமவல்லிக்கு செய்வித்து, பொன், காப்பு, வெள்ளிக் காப்பு, வேப்பிலை காப்பு மற்றும் ஐந்து விதமான சித்ரான்னங்கள் நிவேதனம் செய்வார்கள்.

லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும், மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர். முதல் நாள் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி பிரசாதம் வழங்கப்படும். இரண்டாம் நாள் சந்தான பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கு அம்பாள் குஹாம்பிகையாக காட்சியளிக்கின்றாள். சந்தான பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கும் வளையல் பிரசாதமாக வழங்கப்படும் மூன்றாம் நாள் அம்பாள் கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். அவளை தரிசனம் செய்தால் மணமாகாத (ஆண்-பெண்) இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் வேண்டிக்கொண்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆலயமானது ராஜகேசரிவர்மா என்ற சிறப்புப் பெயர் பெற்ற ஆதித்த சோழன் காலத்தில் கி.பி. 871-907ல் கட்டப்பட்டது. தேவகோட்டத்தின் மேற்புறம் லிங்கோத்பவர் காணப்படுகிறது. இக்கோயிலில் அம்மையப்பர் திருஉருவம் காணப்படுவதால் இக்கோயிலிலும் ஆதித்த சோழன் காலத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஒவ்வொரு மாதப் பிறப்பை முன்னிட்டு இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு, சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது.

அதன்பிறகு அதற்கு பாதாளத்தில் கோயில் கட்டி பாதாள காளி என பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேற்பரப்பில் தில்லை காளி அமர்ந்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் கோபுரத்தில் ஆகாச காளி எழுந்தருளியிருக்கிறாள். இவளை அமாவாசையன்று மட்டுமே தரிசிக்கலாம். (அமாவாசை அன்று இரவு 8.30 - 10.00 மணி) இதுவரை எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத வகையில் பாதாள காளி, தில்லை காளி, ஆகாச காளி என மூன்று வகையான காளிகள் எழுந்தருளியுள்ளார்கள். பாதாளம் முதல் ஆலயம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்த ஆலயம் இதுவேயாகும். இக்காளியை வழிபாடு செய்வது பெரும் பாக்கியமாக மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் இப்பிரபஞ்சத்தில் காளி சக்தியை மொத்தமாக வழிபாடு செய்யும் ஒரே இடம் இக்காளி ஆலயம்தான். இக்காளியை வழிபட்டால் எல்லாவிதமான பெண் தெய்வங்களையும் வழிபாடு செய்த பெரும் புண்ணியம் கிடைக்கும். அமாவாசையன்று மட்டும்தான் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும்.

ஜெயகாளி: தில்லை காளிக்கு அருகில் ஜெயகாளி சந்நதியும் உள்ளது. ஜெயகாளியின் கோஷ்டத்தில் பிரத்யங்கரா, தக்ஷண காளியும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அமாவாசையன்றும் காளிக்கு வரமிளகாய் தீபம் ஏற்றப்படுகிறது. மிளகாய் தீபம் ஏற்றுவதால் பங்காளி சண்டை, பில்லி சூன்யம் நிவர்த்தி, குடும்பத்தில் அமைதி, தீராத வியாதிகள் நிவாரணம் அடைதல், வராத கடன் திரும்ப வருதல், செய்வினை கோளாறு, கண் திருஷ்டி ஆகியவற்றுக்கு சிறந்த பரிகாரம் என மிளகாய் தீபத்தை ஏற்றிக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இந்த தீபம் ஏற்றப்படும். மேலும் ஜெயகாளிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகு காலத்தில் வாய் பேச இயலாத குழந்தைகள் சரளமாகப் பேசவும், கல்வியில் சிறக்கவும் இஞ்சி, தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனைத்து சிவாலயங்களில் பைரவர் விக்ரகம் காணப்படும். பைரவர் ஆலயத்திற்கு காவலாக இருக்கக் கூடியவர்.

இன்றும் கடைசியாக பைரவர்க்கு பூஜை நடத்தி ஆலயத்தின் சாவியை வைத்து பூஜித்து எடுத்துச் செல்வது சிவாலயங்களில் நடைபெறுவது வழக்கம். ஏனைய ஆலயங்களில் ஒரு பைரவர் மட்டும்தான் இருப்பார். இவ்வாலயத்தில் மட்டும்தான் சிறப்பாக அஷ்ட பைரவர் தமது மனைவி மற்றும் வாகனத்துடன் சிறப்பாக காட்சி தருகின்றார். பைரவர் திருவுருவத்தை பழங்காலம் தொட்டு அறிந்திருந்தாலும் இந்த சொர்ண பைரவர் திருவுருவத்தைக் கண்டறிவது அரிது. குறிப்பிட்ட சில ஆலயங்களில் இந்த சொர்ண பைரவரின் திருமேனி உள்ளது. இவ்வாலயத்தில் மட்டும்தான் நான்கரை அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் பொன்குடம் ஏந்திச் சொர்ண தேவியை அணைத்தவாறு, மக்கள் கேட்கக்கூடிய வரங்களையும், பொன் பொருள் தரக்கூடிய நிலையில் சொர்ண பைரவர் எழுந்து அருளியுள்ளார். இவ்வாலயத்தில் தேய்பிறை அஷ்டபூஜை சிறப்பு வாய்ந்தது. தில்லை காளிக்கு இடதுபுறம் கருடவராகியின் திருமேனி உள்ளது. நாமும் ஒருமுறை இறைவன் தான்தோன்றீஸ்வரரையும், அன்னை குங்குமவல்லியையும் தரிசித்து நற்பயனைப் பெறுவோம்.


108 திவ்ய தேசங்கள் : 19
அருள் மிகு பக்தவத்சல பெருமாள் கோவில்

மூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
உற்சவர் : பெரும் புறக்கடல்
தாயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)
ஸ்தல விருட்சம் : மகிழ மரம்
தீர்த்தம் : தர்ஷன புஷ்கரிணி
பழமை : 3000 வருடங்களுக்கு மேல்
புராண பெயர் : லட்சுமி வனம்
ஊர் : திருக்கண்ண மங்கை
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்
   
 
மங்களாசாசனம் : பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன். திருமங்கையாழ்வார்

திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
   
முகவரி : அருள் மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில்  திருக்கண்ணமங்கை : 610104 திருவாரூர் மாவட்டம். போன் : +91 4366 278 288, 98658 34676

பொது தகவல் : தரிசனம் கண்டவர்கள், வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள்.
   
ஸ்தலபெருமை : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்', "ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள். இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள் பாலிப்பதால் பக்தர் ஆவி என்றாகி "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.

தர்ஷன புஷ்கரிணி : மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன)புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி (தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.

திருக்கண்ண மங்கையாண்டான் : நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒரு நாள் இவர் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது.

ஸ்தல வரலாறு : பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது. லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும் இங்கேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.