சனி, 12 அக்டோபர், 2013

படலம் 70: ஸிம்மாசன பிரதிஷ்டா விதி

70வது படலத்தில் ஸிம்மாசனம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் தேவர்களுக்கும் அரசர்களுக்குமான ஸிம்மாசன விதியும் மற்ற மகான்களின் ஸிம்மாசன, விதியும் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு தேவர்கள் சிவன் முதலானவர்கள் என்பது பிரசித்தமானதே. அரசர்களில் சக்ரவர்த்தி, அதிராஜன், நரேந்திரன் என்று விசேஷமாக எண்ணத்தகுந்தது ஆகும். நான்கு சமுத்திரம் வரையிலான பூமியையார் பரிபாலனம் செய்கிறானோ, அவன் சக்ரவர்த்தி என கூறப்படுகிறான். யார் ஏழு ராஜ்யத்தை ஆள்கிறானோ அவன் அதிராஜன் எனப்படுகிறான். யார் மூன்று ராஜ்யத்தை சாசனம் செய்கிறானோ அவன் நரேந்திரன் எனப்படுகிறான். கால்படை தலைவர்களும் மற்ற அரசர்களாக விளங்குகிறார்கள் இவர்களின் ஆசனங்கள் பல விதமாகும் என கூறப்படுகின்றன. பிறகு ஸிம்மாசனங்களில் பலவித அளவுகள் உயரத்திலும், அகலத்திலும் அளவுகள் கூறப்பட்டு தேவர்களுக்கும் அரசர்களுக்கும், ஸிம்ம பீடம், சம சதுரமாகவும் வட்டமாகவோ, செய்யலாம் என கூறப்படுகின்றது. ஸிம்மாசனத்தில் பித்திகல்பனம் என்கிற சாய்மான சுவர் கூறப்படுகிறது. பிறகு உபபீடத்தில் பாதங்களின் நடுவிலோ பாதங்கள் அமைக்கவும் அங்கு பாதத்தில் பாதங்களின் நடுவில் அல்லது வேறு இடத்தில் ஸிம்ம ரூபங்களை செய்யவும். பெரிய மீன், முதலை, இலைகள் போன்ற பலவித சித்ரங்களால் அழகுபடுத்தவும் என கூறப்படுகிறது. பிறகு உபபீடத்தின் அளவு கூறப்படுகிறது. உபபீடம் ஸ்தாவரம் ஜங்கமம், என்றும் சலாசலம், என்று இருவிதமாக உதாரணம் செய்யப்பட்டுள்ளது. அந்த உபபீடமும் கருங்கல், மண், விருக்ஷம், உலோகம், சந்தனம், இவைகளாலோ பிறகு சுண்ணாம்பு பூச்சினாலோ செய்யவும் அதில் சைல பீடம் மனிதர்களுக்கு விரும்பதக்கதல்ல, தேவர்களின் விஷயத்தில் எல்லா திரவ்யமும் ஏற்றுக்கொள்ள தக்கதாகும். சந்தனம், விருக்ஷம், இவைகளால் செய்யப்பட்ட உபபீடம் தங்கம், ரத்னம், இவைகளால் அலங்கரிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு அரசர்களுக்கு ஸிம்மாசனம் சிரேஷ்டமாகும். அதன் லக்ஷணம் கூறப்படுகிறது என கூறி ஸிம்மாசனத்தின் உச்சியில் வைக்கப்பட வேண்டிய தாமரை முதலான பலவித உருவ விசேஷங்களை விதிப்படி கூறி பத்திரகம் சவும்யம் என்ற ஸிம்மாசனங்களின் இரண்டுவித ஸ்வரூபத்தை விளக்குகிறார். பிறகு இரண்டு விதமான சவுபத்திரம் வாஹம் என்கிற ஸிம்மாசனத்தின் ஸ்ரூப லக்ஷணம் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இந்த ஐந்துவித ஆசனங்களின் பின்பக்கத்தில் விஜி என்ற பெயர் உள்ள அங்க விசேஷம் செய்யப்படவேண்டும் எனக் கூறி விஜி லக்ஷணம் கூறப்படுகிறது. பிற ஸிம்மாசனத்தில் தோரணம் அமைக்கும் முறையும் நிரூபிக்கப்படுகின்றன. அங்கு தோரனத்தின் பின்பக்கத்தில் தங்க மயமான கற்பகவிருக்ஷம் அமைக்கப்படவேண்டுமென கூறப்படுகிறது. உபபீடவிஷயத்தில், பஞ்சாங்கம், அஷ்டாங்கம் 12 அங்கம் 14 அங்கம் என உபபீடங்களை செய்யும் முறை கூறப்படுகிறது.

பிறகு ஆசனங்களின் ஆயாதி என்கிற அளவு முறைகளின் விதி நிரூபிக்கப்படுகின்றன பிறகு ஆசனத்திற்காக தயார் செய்யவேண்டிய மரங்கள் கூறப்படுகின்றன. பிறகு அரசர்களின் ஸிம்மாசன விஷயத்தில் ஸம்ஸ்காரமுறை நிரூபிக்கப்படுகிறது. அதில் யஜமானனுக்கு அனுகூலமான முன்பு கூறப்பட்ட நன்மைபயக்கும் காலமே ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என கூறப்படுகிறது. சில்பியை திருப்தி செய்வித்து புண்யாகபிரோக்ஷணத்திற்கு பிறகு கிருத மந்திரத்தினால் பஞ்சகவ்ய பிரோக்ஷணம் எட்டு மிருத் ஜலத்தினாலும், தர்ப ஜலத்தினாலும் சுத்தி செய்வித்து சுத்தோ தகத்தினால் ஸ்நபனம் செய்வது பிறகு பஞ்சபிரும்ம மந்திரத்தை கூறிக்கொண்டு சந்தனாபிஷேகம் செய்விப்பது ஆகியவை கூறப்படுகின்றன. பிறகு ஸ்தண்டிலத்திற்கு மேல் ஸிம்மாசனத்தை வைத்து வஸ்திரம், தர்பம், இவைகளை அதன் மேல் போர்த்தவும். ஸிம்மாசன மந்திரத்தினால் சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்கவும் என கூறி பூஜைக்காக ஸிம்மாஸந மந்திரம் கூறப்படுகிறது. பிறகு சிம்மாசனத்திற்கு முன்பாக ஸதண்டிலம் அமைத்து அங்கு சமித்து முதலான திரவ்யங்களால் ஹோமம் செய்யவும் ஹோம முறை கூறப்படுகிறது. பிறகு பூர்ணாஹுதிசெய்து சாந்தி கும்ப தீர்த்தத்தால் ஸிம்மாசனத்தை பிரோக்ஷித்து மறுபடியும் சந்தன புஷ்பங்களால் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு நல்ல முகூர்த்தலக்னத்தில் ஸ்நானம் செய்து வெண்பட்டாடை உடுத்தி கிரீடம் எல்லா ஆபரணங்களையும் தரித்தவனாக சம்ஸாரத்துடன் கூடியவரான ராஜாவை ஸிம்மாசனத்தில் அமர்த்தவும் என ஸம்ஸ்காரமுறை கூறப்படுகிறது. பிறகு தேவனுக்கு ஸிம்மாசன ஸம்ஸ்கார விதியில் விசேஷம் உண்டு என கூறி அந்த விஷயத்தில் கும்பஸ்தாபன விதி, ஹோம விதி, கும்பதீர்த்த அபிஷேகவிதி விசேஷார்ச்சனை பூர்வமாக ஸ்வாமிக்கு ஸிம்மாசனம் ஸமர்ப்பண முறை ஆசார்யனுக்கு வஸ்திர சொர்ணாங் குலீயங்களால் ஆகிய தட்சிணை கொடுப்பது, என்ற விஷயங்கள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு மற்ற மஹான்களின் ஆசன முறையும் நிரூபிக்கப்படுகின்றன. அதில் ஆசன அளவு ஆசனம் அமைக்க உபயோக திரவ்ய குறிப்பு, ஆசனம் செய்யும் முறை ஆகிய விஷயங்களும் நிரூபிக்கப்படுகின்றன. இங்கு ஆசனத்திற்கு பாதம் அமைக்கும் முறை பலமுறைகளாக வர்ணிக்கப்படுகின்றன. பலகாசனம், கூர்மா சனத்திற்கு, யோனி அமைக்கும் முறை விசேஷமாக கூறப்பட்டுள்ளன. சிம்மாசனத்திற்கு கூறப்பட்ட முறைப்படியே ஆயாதி என்ற கணக்கு முறையும் செய்யவும் என அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறாக 70வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிராம்மணோத்தமர்களே! தேவர்கள், அரசர்கள், மனிதர்கள், பெரியோர்களினுடையதுமான ஸிம்மாஸன விதியை கேளுங்கள்.

2. சிவன் முதலானோர் தேவர்கள் ஆவார். அரசர்கள் பலராவர். அதில் சக்ரவர்த்தி முதலிலும் அதிராஜன் இரண்டாவதாக கூறப்படுகிறது.

3. நரேந்திரன் மூன்றாமவர். அவர்களின் லக்ஷணம் கூறப்படுகிறது. நான்கு சமுத்ரம் வரை பரவியுள்ள பூமியை பரிபாலிப்பவன்.

4. சக்ரவர்த்தியானவான், ஏழுராஜ்யத்தை காப்பாற்றுபவன் அதிராஜன், மூன்று ராஜ்யத்தை காப்பாற்றுபவன்.

5. நரேந்திரனாவான். யானை படை தலைவன் முதலானோர் பல ராஜாக்களாக கூறப்படுகிறது. அவர்களின் ஆஸனங்கள் பலவிதமாகும்.

6. வாசற்படி உயரத்தின் மூன்றில் ஒருபாகம் உத்தமமாகும். அதில் அரைபாகம் அதிகமாகும். வாசற்படியின் அகலத்தை எட்டு பங்காகச் செய்து ஒன்பது வகையான உயரங்களாக கூறப்படுகின்றது.

7. வாசற்படியின் ஆரம்ப பாகம் எட்டு பாகம் அல்லது ஒன்பது பாகமோ அதற்கு குறைவாகவோ அரசனுக்கு சமமாக கை, துடை, தொப்பூழ் வரையிலுமோ உள்ளது.

8. பிரதேசமானம் என அரசர்களுக்கு கூறப்படுகிறது. பதினைந்து அங்குலம் முதல் இரண்டிரண்டு அங்குலமாக கூறப்படுகிறது.

9. ஐம்பத்தைந்து அங்குலம் வரை உள்ள அம்சங்கள் வரையிலாக உயரங்கள் கூறப்பட்டுள்ளன. உயரத்தின் சமமாகவோ முக்கால் பங்குக்கு மேற்பட்டதாகவோ

10. அகலத்தை இரண்டு பங்காக்கினால் நான்கு பாகமாகி புதிய அளவாகிறது. ஹீநர்களுக்கு குறைந்த அளவாயும், உயர்ந்தவர்களுக்கு எல்லாமும் கூறப்பட்டுள்ளது.

11. சிம்ம பீடம் நான்கோணமாகவோ செவ்வகமாகவோ இருக்க வேண்டும். நாற்கோணத்திற்கு சமமான விருத்தமாகவும் (வட்டம்) சக்ரவர்த்திகளுக்கு செய்ய வேண்டும்.

12. எட்டிலொரு பாகம் ஆரம்பித்து, அதில் இரண்டு பாகம் அதிகரித்து ஸிம்மாஸனத்தின் நீளம் அங்குல அளவுகளால் செய்ய வேண்டும்.

13. இரண்டங்குலம் முதல் இரண்டிரண்டங்குல அதிகரிப்பால் ஆறங்குலம் வரை செய்யவும் ஆயாம கணக்கிலும் இவ்வாறேயாம்.

14. தேவர்களுக்கு பாதத்திற்கு மேற்பட்டும் சக்ரவர்த்திகளுக்கு கால்கள் நடுவிலும் மற்றவர்களுக்கு கால்கள் முடிவிலும் வரையாக ஆயாமாதி அளவு கூறப்பட்டுள்ளது.

15. யாவர்க்கும் எல்லா அளவும் பொருத்தமானது என்று கூறி பாத அளவு கூறப்பட்டுள்ளது. ஒன்றரை அங்குலம் முதல் அரை அங்குல அதிகரிப்பாக

16. ஐந்தங்குலம் வரை பாத விஸ்தாரமாகும். அதன் சாய்வு சுவர் பாதத்தின் நான்கில் ஒருபங்கு வெளிக்கொணர்ந்து நல்ல பலமாகவும் அழகாகவும் செய்யலாம்.

17. ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு பாக விஸ்தார அளவில் ஆஸன பித்தியாகும். நீளத்தில் ஒன்பதிற்கும் அதிகமாக நீளமுடைய பித்தியின் அளவு முன்பு கூறப்பட்ட பிரிவுகளாக கூறப்படுகிறது.

18. பாதங்களின் நடுவில் உபபீடத்தில் பாதங்களை அமைக்க வேண்டும். பாதத்திற்கும், பாதநடுவிலும் சிங்க உருவங்களையும் வரையவும்.

19. முதலை, சுறாமீன் இலை வடிவான பல சித்ரங்களால் அலங்கரிக்கவேண்டும், சிம்மாஸன மூன்று பாகத்தினாலோ நான்கு பாகத்தினாலோ கீழ்பாகத்தில்

20. ஒன்று, மூன்று, இரண்டு, நான்கு மாத்ராங்குலங்களால் விஸ்தாரத்திற்காக உபபீடமாக அறிய வேண்டும். அதன் வடிவம் கூறப்படுகிறது.

21. உபபீடம் ஸ்தாவரம், ஜங்கமம் என இரு வகைப்படும். மண், கல், மரங்களாலும், தந்தங்களாலும் உலோகங்களாலும் சுண்ணாம்புக் கலவை பூச்சுகளாலும் செய்யலாம்.

22. மனிதர்களுக்கு கருங்கல்லாலான உபபீடம் கூடாது. தேவர்களுக்கு எல்லா திரவ்யமும் யோக்யமாகும். தந்தம், மரங்கள், தங்கம், ரத்னம் இவைகளினால் அலங்கரிக்கப்பட்ட

23. ராஜ சிம்மாஸனம் உயர்ந்து. அதன் உருவ அமைப்பு கூறப்படுகிறது. ஸிம்மாஸன உயரத்தில் இருபத்தியேழு பாகத்தில் ÷க்ஷபணம், பங்கஜம், களம்

24. வேத்ரம், களம், பத்மம், குமுதம், பத்ம பட்டிகை, வேத்ரம், கர்ணம், வேத்ரம், கம்பபத்ரம், கபோதம்

25. வேத்ரம், கர்ணம், நித்ரா, மசூரா, அதாரபட்டிகா இவைகளை ஏழு ஒன்றை அரைபாகமோ ஐந்து, நான்கு அதன் பாதியோ

26. அரைபங்கு, அதன்பாதி, அரையின் கால் பாகங்களாலும் அரை, கால், அரைக்கால் பாகங்களாக அமைக்கவேண்டும். அரைபாகத்துடன் பத்தொன்பது அம்சம் வரை செய்வது பத்ரகம் என்ற ஸிம்மாசனமாகும்.

27. அதன் உயரத்தில் முப்பதம்சத்தில் நான்கின் பாதி, இரண்டின் பாதி, ஒன்றரை, அரை, இரண்டின் பாதி, ஒன்றரை எட்டின் ஒருபாகம், ஒன்றரை பாகங்களால்

28. அரை, கால், இரண்டின்பாதி, ஒன்றரை, ஐந்தின் பாதி இவைகளின் தொடர்ந்ததாக (பத்மகம்) பத்மம், கம்பம், கர்ணம், கம்பம், பத்மம் வாஜனம்

29. பத்மம், கம்பம், கர்ணம், கண்டம், நித்ரா, பட்டிகா, பாதம், மேலுள்ளபட்டி நித்ரா பத்மம், கபோதகம்

30. நடுவில் நன்கு சேர்ந்ததாக மேல் நோக்கி வெளிப்பட்டு தெளிவாக அங்கங்களோடு கூடியது சவும்யம் என்று கூறப்பட்டுள்ளது. இருபத்தொரு அம்சங்களோடு கூடியது.

31. மேற்கூறியவற்றையே முன்பக்கமும் பின் பக்கமும் உடையதும், பத்ரங்களோடு கூடியது சவுபத்ரம் எனப்படும். இரண்டு பக்கமும் பத்ரத்துடனுள்ளது ஸ்ரீவஹமாகும்.

32. ஐந்து வகை ஆஸனங்களுக்கும் விஜி என்ற அமைப்பு பின்பாகம் கூறப்படுகிறது. ஆஸமனமானது பிரிக்கப்பட்ட உயரத்தையுடையதாயும் மஸூரா என்பது ஆதாரபீடத்தில் சேர்ந்ததாகும்.                     

33. விருப்பப்பட்ட உயரம் விஸ்தாரமாகவும் கூறப்பட்டுள்ளது. ஆஸன உயரபாக நடுவில் மகரதோரணம்

34. தோரண மத்தியில் பத்மாபிஷேக ஸம்பந்தமாக இருக்க வேண்டும். நக்ரபட்டிகை தோரணத்தில் கால்பாக அளவாகவும்

35. கைவைத்துக் கொள்ளுமிடம் யாளித்தலையுடையதாகவும் இருக்க வேண்டும். சிறிய தூணை வைத்து, கபோதங்களை பலவிதமாக அலங்கரிக்க வேண்டும்.

36. முதலை, சுறா மீன்கள் போன்ற பலவித சித்ரங்களாலும் அலங்கரிக்கவும். இரும்பிலானான நாராசம், கீலங்கள், பட்டிகைகளையும் சேர்க்க வேண்டும்.

37. தங்க ஜரிகைகளாலான பட்டுகளாலும், ரத்னங்களாலும் அலங்கரிக்கவும். தோரணத்தின் பின்புறம் தங்கத்தாலான கற்பக வ்ருஷத்தை அமைக்க வேண்டும்.

38. பலவிதமான ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட பலவித படங்களை உடையதான பாம்புகளையும், விஜி என்ற அமைப்பை விட்டு கற்பக வ்ருஷத்தையாவது செய்ய வேண்டும்.

39. தோரணமில்லாத விஜியையோ ஆஸனத்தை மட்டுமோ, செய்ய வேண்டும். ஐந்து அங்கத்துடன் கூடிய உபபீடம் பத்மத்தின் கீழ் சேர்க்க வேண்டும்.

40. பத்மகம் முதலியவை நான்கு வகைப்படும். பன்னிரண்டங்கம் உடையது உபாஸநம். உபபீடத்தின் பத்திலொரு பங்கில் நான்கு பாகங்களால் கண்டம் கூறப்படுகிறது.

41. க்ஷúத்ர கம்பங்களை அதன் மேலும் கீழுமான பாகத்தில் அமைக்கவும். இரண்டம்ச அளவால் இரண்டு மஹாகம்பம் செயற்பாலது. இது ஐந்து அங்கத்துடன் கூடிய உபபீடத்தை அமைக்க வேண்டியது.

42. பதினான்கம்சம் உடைய உயரத்தில் இரண்டு, ஒன்றரை, அரை, நான்கு, அரை, அரை இரண்டு, ஒன்று, அரை, அரை என்ற அளவுகளால் வரிசையாக.

43. பாதுகம், பங்கஜம், வேத்ரம், கம்பம், கண்டம், வேத்ரகம் என்றும் வேத்ரம், அப்ஜம், வாஜநம், பத்மம், கம்பம், வேத்ரம் என்று வரிசைப்படி

44. பன்னிரெண்டு பிரிவுகளை உடையதாக அழகான உபபீடம் அமைக்கவும். இருபத்தியெட்டம்சமுடைய உயரத்தில் ஜகதீ, பங்கஜம், களம்

45. வேத்ரம், களம், பத்மம், குமுதம், பத்மம், கம்பம், வேத்ரம், களம், வேத்ரம், கம்பம், நித்ரா, கபோதம்.

46. மேல்பாகத்திய மத்தியில் நன்கு சேர்க்கப்பட்ட பிரதிவாஜநமும், அதற்கு மேல் மஸூரகாதாரபட்டிகா ஆகும். கீழிருந்து மேலாக

47. ஒன்றரை அம்சங்கள் ஒன்று, அரை, அரை, அரை, அரை, ஒன்று, அரை, ஏழு பாகங்களால் அரை, அரை, ஒன்றரை,

48. அரை, அரை, ஒன்றரை ஒன்பதரை மஸூரகா தாரபட்டிகா அளவுகளால் ஸ்ரீகாந்தம் என்று பொருள்படும். இதுவே களத்திற்கு கீழ் உள்ளவைகள் இரண்டு, அரை, ஒன்றரை பாகங்களால்

49. கர்ணம், வாஜநம், நித்ரை, என்ற அளவுகள் வேதியுகைடன், பத்மம், கம்பகம், சேர்த்தால் வ்ருத்த காந்தம் என்ற பீடமாகும். முப்பத்திரண்டு பாகங்களால் நிர்மாணிக்கப்பட்டதாயும் இருக்க வேண்டும்.

50. ஒன்பதும், பத்தும் ஆன 14 அம்சத்தில் அரை, ஒன்றரை, இரண்டு, அரை, மூன்று, பாதி அரை, இரண்டு, பாதி பாதி, பாதி ஒரு பாகங்களால்

51. பாதுகம், பங்கஜம், நேத்ரம், பங்கஜம், குமுதம், பங்கஜம், வாஜநம், பத்மவேத்ரம், பங்கஜம், வாஜநம்,  தாமரை

52. வேத்ரம், வாஜநம், இவைகள் அடியிலிருந்து பதினான்கங்கத்துடன் கூடியதாகும். ஸ்ரீகாந்தம் முதலிய நான்கிற்கும் எட்டு அங்குமுடைய உபபீடமாகும்.

53. இரண்டு, ஒன்று, அரை, நான்கு, அரை அரை இரண்டு அரை பாகங்களால் பாதுகம், பங்கஜம், வேத்ரம், பத்மவேத்ரம், வாஜநம்

54. பட்டிகா, வாஜநம், பதினொன்றாக பிரிக்கப்பட்ட உயரத்தில் எல்லா இடத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அஷ்டாங்கமுடைய உபபீடம் ஆகும்.

55. முன்பே பிரசாத லக்ஷணத்தில் பல விபரங்கள் கூறியுள்ளேன். எல்லா அதிஷ்டானங்கள் உபபீடத்துடன் கூடியவைகள்

56. தேசிகர்களால் நியாயமாக ஏற்றுக் கொள்ளப்படுபவையாகும். விசேஷமாக தேவர்களுக்கு தொங்குகிற பாதமாக இருப்பது நல்லது.

57. ஸிம்மாஸநாங்கத்தை தொட்டுக் கொண்டதான பாத பீடம் கூறப்பட்டுள்ளது. சிம்மாஸன அகல, உயரத்தின் நான்கிலொரு பாக அளவில்

58. கண்டத்தின் மேலும் கீழுமானவைகளால் கம்பம், பத்மம், கம்பங்களால் அலங்கரிக்கவும். நன்கு அழகான ஏழுபாகங்களால் வட்ட அளவில்

59. யவைமுதல் மாத்ர அளவுவரை அதிகத்தையும், குறைகளையும் அறியவும். எல்லா ஆஸனமும் பத்ராஸனமாகவோ செய்ய வேண்டும்.

60. கால், அரை, முக்கால் பாகமாகவோ எல்லா இடத்திலும் வெளிப்படையாகவும் அவயவத்தை வெளிப்படுத்தவும் கவர்ச்சியோடும் பலத்தோடும் நுழைவை செய்ய வேண்டும்.

61. எல்லா ஆஸனத்திலும் முதலில் செய்யும் முறை கூறப்படுகிறது. பரிதி, விபுலம், தைர்க்யம், துங்கம், ஸகலம்

62. பந்தவேதம், சதுர்பந்தக்ரஹம், முதலிய வரிசை முறைகளால் எண்ணி அறியவும். ஏழு, ஐந்து, ஒன்பது, எட்டு, ஏழு ஸங்க்யையுடைய பாகங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

63. ஆயம், வ்யயம், நக்ஷத்ரம், ஸோநி, வாரம் இவைகளை பார்த்து செய்யவும். காய்கறிகளை கொடுக்கும் மரம், மரமல்லிகை, பலாமரம், சிம்சுபம், சந்தனம்

64. திந்துகம், மருதமரம், காரகில், வேப்பமரம், பூவரசு, எலும்பிச்சை, மாமரம், வெண்பால்மரம், தேக்குமரம்.

65. பில்வம் ஆகிய ஜாதி விருக்ஷங்களில் பாலுள்ள வ்ருக்ஷங்கள் நான்கு வகைப்படும். நாவல், இலுப்பை, நரிமூக்கை, இவைகள்

66. த்ரவ்ய ஸங்க்ரஹண விதிப்படி ஆஸனதிற்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிம்மாஸனம் செய்து அதன் ஸம்ஸ்காரத்தை செய்ய வேண்டும்.

67. காலமும் முன்பே கூறப்பட்டுள்ளது. மற்றும் யஜமானனின் நக்ஷத்ரத்தை அனுசரித்து காலத்தை பார்த்து சில்பியை திருப்தி செய்து அவரை அனுப்பி விட்டு புண்யாஹ ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

68. ஹ்ருதய மந்திரத்தினால் பஞ்ச கவ்ய ப்ரோக்ஷணம் செய்து தர்பை நுனிதீர்த்தத்தாலும் எண்வகை மண்கலந்த நீரால் சுத்தம் செய்து

69. பஞ்சப்ரம்ம மந்திரத்தால் சுத்த ஜலத்தை அபிஷேகித்து சந்தனம், கலந்த வாசனையுள்ள நீரால் மறுபடியும் அபிஷேகம் செய்ய வேண்டும்.

70. ஸ்தண்டிலத்தில் மேல் வைத்து தர்பை, வஸ்திரங்களால் போர்த்தி சந்தனம், புஷ்பம், தூபம் இவற்றை அதன் மந்திரத்தினால் அர்ச்சிக்கவும்.

71. சிம்மாஸநாய ஹும் பண்ணம: என்று தன் பீஜ மந்திரத்தோடு கூறி

72. மந்திரத்தை கூறி (தேசிகன்) ஆசார்யன், உத்தமன் பூஜிக்க வேண்டும். சிம்மாஸ னத்தின் முன்பு ஸ்தண்டிலத்தில் ஸமித்து முதலியவைகளால் ஹோமம் செய்ய வேண்டும்.

73. சமித்து, நெய், அன்னம், எள், பொறி இவைகளை சிவமந்திரத்தை கூறி நூற்றியெட்டு ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும்.

74. பிறகு பூர்ணாஹூதி செய்து, சாந்தி கும்ப தீர்த்தத்தால் பிரோக்ஷித்து சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் சிம்மாஸனத்தை மறுபடியும் பூஜிக்க வேண்டும்.

75. ஸ்னானம் செய்து வெண்மையான வஸ்திரம் தரித்து எல்லாவித ஆபரணங்களுடன் கிரீடம் அணிந்து, குடை, சாமரங்களுடன் கூடிய

76. ராஜாவை நல்ல சுபமுஹூர்த்த லக்னத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். சிம்மாஸனம், இதுவரை ராஜசிம்மாஸன ஆரோபணம் கூறப்பட்டது. இனி தேவர்களுக்கு கூறப்படுகிறது.

77. தத்வதத்வேஸ்வர நியாஸம், மூர்த்தி மூர்த்தீஸ்வர ந்யாஸத்துடனும், ஆஸன, மூர்த்தி பூஜை, தத்வதத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வர ஹோமமும் செய்ய வேண்டும்.

78. ஆதார சக்தி முதற் கொண்டு, சிவாஸனம் வரை பூஜித்து இந்திரனுக்கும் ஈசானத்திற்கும் மத்தியில் சிவகும்பத்தையும், எட்டு திக்கில் அஷ்டவித்யேச கும்பங்களை ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும்.

79. தங்கம், வஸ்திரங்களோடு கூடிய பிரதான கும்பத்தில் சிவனை பூஜித்து, அவற்றின் வெளியில் அஷ்டகும்பங்களில் இந்திராதி லோகபாலர்களை பூஜிக்க வேண்டும்.

80. தேசிகோத்தமன் இவ்வாறு பூஜித்து முன்பு பூஜித்த மந்திரங்களால் ஹோமம் செய்து முடிவில் பூர்ணாஹூதியை செய்ய வேண்டும்.

81. ஸிம்மாஸனத்தில் ஆஸன மூர்த்தி மூலத்துடன் அர்ச்சிக்கவும். கும்பத்தில் ஆவாஹித்த சிவனை மூலமந்திரம் உச்சரித்து சிம்மாஸனத்தில் ஆவாஹித்து

82. எட்டு வித்யேச்வரர்களை எட்டு லோகபாலர்களை இவற்றை நியஸித்து அபிஷேகம் செய்யவும். அந்தந்த மந்திரங்களால் ஆசார்யன் சந்தனம், புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.

83. விசேஷார்ச்சனையுடன் பரமேஸ்வரனை அபிஷேகிக்கவும். நல்ல முஹூர்த்தத்தில் நல்ல லக்னத்தில், பரமேச்வரனை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

84. வஸ்திரம், தங்க மோதிரங்களால் ஆசார்யரை பூஜித்து முடிந்தவரை தட்சிணையை குருமூர்த்தியோ ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும்.

85. மற்ற ஆஸனங்களின் அளவு கூறப்படுகிறது. தங்கம், வெள்ளி, தாம்பரம், பித்தளை, வெண்கலம்

86. கலப்பு உலோகம், கற்சிலை, மரம், மண் (மண்சாந்து) ரத்னங்களாலும், க்ஷüத்ர சித்திக்காக தந்தங்களாலும், தகரம், ஈயம் இரும்புகளாலும் செய்யலாம்.

87. பீடத்திற்கான திரவ்யம் கூறப்பட்டுள்ளது. அந்தந்த ஆஸன பலத்தால் இரண்டு, மூன்றங்குல முதல் ஒவ்வொரு அங்குல அதிகரிப்பால்

88. ஐந்தங்குலம் வரை விஸ்தார அளவாகும். ஒன்றேகால், ஒன்றரை, எட்டின் ஒரு பாகமான ஒன்றரையரக்கால் முக்கால் பாகமதிகமாவும்

89. இரண்டங்குலம், ஒவு அங்குலம் முதல் நூறங்குலம் வரை ஆயாமத்தின் அளவு கூறப்பட்டுள்ளது. பாதத்தின் அளவு கூறப்பட்டுள்ளது.

90. ஒரு மாத்திரை முதல் ஐந்து மாத்திரை அதிகரித்து ஐம்பது முழம் வரையிலாக பாதங்களின் நீளம் கூறப்படுகிறது.

91. அரையங்குலம் முதல் காலங்குல அதிகரிப்பால் அகலத்தில் (ஏழங்குலம் வரையும்) பதினான்கங்குலம் வரை காலின் நீளம் கூறப்பட்டுள்ளது.

92. பாதங்கள் நேராகவும், ஸிம்மபாதம், யாளிபாதம், வ்ருஷபபாதம், பூதபாதம், கழுதைக்கால் போலும் சக்ரத்தோடு கூடியதாகவோ, ஸ்வயாவமாக உள்ளதாகவோ

93. பறவை பாதம் போல், மனுஷ்ய பாதம் போல், மீதியை நல்லவைகளின் உருவம் போலாவது செய்யவும். ஸிம்மாஸனம் பத்ம பீடத்தில் இருப்பதாக செய்ய வேண்டும்.

94. ஸிம்ம சிரஸ் பாதத்துடன் கூடியதாகவாவது சிம்மாஸனம் செய்ய வேண்டும். உள்ளிட்ட முகமோ, வெளிக்கொணர்ந்த முகத்தையுடையதாகவோ  பாதத்தின் அலங்காரத்துடன் கூடியதாகவோ

95. பலவித பட்டை அமைப்பு, குச்சியமைப்புகளாலும், பறவைகள் போன்றும் தாமரைப்போன்று பத்ரங்களால், பத்ம தளங்களாலும் ரத்னங்களாலும் அலங்கரிக்கப்பட வேண்டும்.

96. அதன் முகப்பில் வளைவான அமைப்பை உடைய பலகையை சேர்க்கவும். இடைவெளியுள்ள மேலும் கீழும் உயரமான அந்த பாதங்களுடன் சேர்க்க வேண்டும்.

97. பாத்திற்கு மேல் உசிதமான பலகையை சேர்க்கவும். யவை யளவு முதல் அரை யவை அளவு அதிகரிப்பால் பதினோரு மாத்ரையளவு வரை

98. (ஸ்வர்ணம்) தங்கம் முதலிய திரவ்யங்களால் ஆன பலகாஸனம் கூறப்பட்டுள்ளது. பறவைகள் போன்ற அமைப்பு தாமரை இதழ்களாலும், மாலை முதலிய அமைப்புகளாலும் சேர்க்கப்பட்டவைகளாலும்

99. ரத்னங்களால் ஆன தாமரைகளாலும், பலவித தண்ட அமைப்புகளாலும், பலகையை அலங்கரிக்கவும். அல்லது இயற்கையழகான பலகையாவது செய்யவும்.

100. அதற்கு மேல் உருண்டை போன்ற அமைப்புள்ள பாதங்களையும், பல கலம்பங்களை யுடையதாகவும், பல சித்ரங்களை (நாடக) உடையதாகவும், இரும்பிலானான தாழ்பாளையுடையதாகவும்

101. பல பட்டங்களாலும், புஷ்பங்களாலும், நல்லத்ருடமாக சேர்க்கவும். சதுரஸ்ரம், வட்டவடிவமாகவோ அந்தந்த நீள அளவிலாவது

102. எண்கோணம், பதினாறுகோணம், பதினைந்து கோணம் முதல் ஆஸனம் செய்ய வேண்டும். அதன் பாதமும் அவ்வாறே இருத்தல் வேண்டும்.

103. மூன்று, நான்கு, ஐந்து பாதத்தையுடையதாக விருப்பப்படியாக பாதங்களை செய்ய வேண்டும். நான்கு கால், தலை, புச்சம் (வாலுடன்) கூடிய ஆமைபோல்

104. கூர்மாஸனம் செய்ய வேண்டும். மற்ற ஆஸனங்களை இவ்வாறே அறியவும் (பூஜிக்கவும்) தங்கம், புலித்தோல் முதலிய தோல்களால் முழுவதுமாக விரிக்க வேண்டும்.

105. ஆயாதி லக்ஷணங்கள் ஸிம்மாஸன விதிப்படி செய்யவும். பலகையின் பலத்தைக் கொண்டு அளவை செய்து மேற்படி கிரியையகளை செய்ய வேண்டும்.

106. மேற்கூறிய அமைப்புகளுடன் வெளியிலும் தங்கங்களின் வெளியிலும் அளவைச்செய்யவும். இந்த ஆஸனங்களில் ஸம்ஸ்காரம் முன்பே கூறப்பட்டுள்ளது.

107. ஆயாதிகளின் லக்ஷணம் முன்பு செல்லப்பட்டபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸிம்மாஸனம் அமைக்கும் முறையாகிற எழுபதாவது படலமாகும்.
படலம் 73: சவுக்யகர்ம விதி

73வது படலத்தில் சவுக்யகர்ம விதி அல்லது சுத்த நிருத்த விதியோ கூறப்படுகிறது. முதலில் பிரதிஷ்டை உத்ஸவம் முதலிய கர்மாக்களில் முதலில் அவ்வாறே நித்யோத்ஸவத்தின் முடிவில் சவுக்ய கர்மவிதி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சவுக்ய கர்மமாகவோ அல்லது சுத்த நிருத்தமோ ருத்திர கன்னிகைகளால் செய்ய வேண்டும் என கூறி ருத்திர கன்னிகை உற்பத்தி இரண்டு விதமாக கூறப்படுகிறது. ருத்ரனால் இந்திரன் பிரதிக்காக சிருஷ்டிக்கப் பட்டதில் அப்ஸரசுகளின் குலத்தில் உண்டானவர்கள் முதலாவதான ருத்திர கன்னிகைகள் ஆவார்கள். மற்றவர்கள் தாருகாவனத்தில் விளையாடுவதற்காக சுந்தரமான உருவத்துடன் சஞ்சாரம் செய்த பகவான், தேவனான சிவனின் அழகினால் மயக்கம் அடைந்த முனி பத்தினிகளுக்கு பரமேஸ்வரனால் பார்த்த மாத்திரத்தினாலே கர்பத்தை அடைந்தவர்களில் உண்டான சந்ததிகள் ஆவர். அவர்களில் இரண்டு வித ருத்ரகன்னிகைகளுக்கும் பரதசாஸ்திரத்தில் கூறி உள்ள லக்ஷணத்துடன் கூடிய சுத்த நிருத்த ஆசரண ரூபமான அர்ச்சனையே பிழைப்பு என்றும் அவர்களின் பிரார்த்தனையை அனுசரித்து பகவான் ஆன சிவனால் கூறப்பட்டது. பிறகு சந்தோஷம் அடைந்த சிவனாலேயே இரண்டு விதமான ருத்திர கன்னிகைகளுக்கும் தீøக்ஷ செய்யப்பட்டது. பிறகு நந்தியை கூப்பிட்டு அவன் கையிலுள்ள வேத்திரம் என்ற தண்டத்தினால் ஸ்பர்சிக்கப்பட்டார்கள். பிறகு அந்த குலத்தில் உண்டான நத்தினி என்னும் பெயர் உள்ளவர்கள் பூமியில் வியவஹாரம் செய்யப்படுகிறார்கள் என்று ருத்திர கன்னிகையின் உற்பத்தியும் அவர்களின் தொழிலும் கூறப்படுகின்றன. பிறகு சுத்த நிருத்தம் ருத்திர கன்னிகைகளால் பஞ்ச ஆசார்யர்களுடன் கூடி நர்தக, மர்த்தக, காயக, வாம்சிக மவுர்விக என்று 5 ஆசார்யர்களின் பெயர் கூறப்படுகிறது. பிறகு நாட்ய வேதத்தால் சிரமம் அடைந்தவர்களும் (நாட்டிய வேதத்தை அறிந்தவர்களும்) நடிப்புடன் கூடிய பாட்டு நாட்டியம் இவைகளை அறிந்தவர்களும் சிரேஷ்டமானவர்களும் நவநாட்யங்களை அறிந்தவர்களும் குற்றமில்லா மனதை உடையவர்களும் சிவ பக்தர்களுமான சதுர்வர்ண அனுலோம ஜாதியில் பிறந்தவர்கள் பஞ்சாசாரியன் என கூறி அவர்களின் லக்ஷணம் கூறப்படுகின்றன.

பிறகு அவர்களின் தனித்தனி லக்ஷணமும் நாட்டிய காலத்தில் அவர்களின் ஸ்தானமும் அங்கு செய்ய வேண்டிய கர்மாக்களும் கூறப்படுகின்றன. முன்பே ருத்திர கன்னிகைகள் தீட்சிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் பிறகு பிறப்பதால் மறுபடியும் தீøக்ஷ செய்யப்படவேண்டும். அந்த தீøக்ஷயும் சுருக்கமாக கூறப்படுகிறது என்று கூறி ருத்திர கன்னிகா தீக்ஷõ முறை கூறப்படுகிறது. பிறகு ருத்திர கன்னிகைகள் 5 வயதுக் மேற்பட்டு 50 வயதுக்கு உட்பட்டவர்கள் தீøக்ஷ கர்மாக்களில் யோக்யர்கள். மற்றவர்கள் யோக்யர்கள் இல்லை. பிறகு சுத்த நிருத்தத்திற்காக மண்டபம் அமைக்கும் முறை சொல்லப்படுகிறது. பிறகு மண்டப மத்தியில் நடேச பூஜை முறை, பஞ்சாக்ஷரம் முதலான மந்திரத்தால் ஜபித்து சங்க தீர்த்தத்தால் ருத்ரகன்னிகைகளுக்கு பிரோக்ஷணம் செய்யும் முறையும், மண்டபத்தில் தண்டத்தை ஸ்தாபிக்கும் முறை, நந்தி பூஜா முறை பிறகு குருவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தட்சிணைகளுடன் கூறி அந்த ஆசார்யனாலோ அல்லது சிஷ்யனாலோ வேத்திர தண்டத்தை ருத்ரகன்னிகளின் சிரசில் வைக்கும் முறையும் அவர்களுக்கு பெயர்வைக்கும் முறையும், புஷ்பாஞ்சலி தானம் செய்யும் முறையும், பிறகு சிவசன்னதியில் பரதரரால் கூறப்பட்ட பஞ்சபதி என்று பெயர் உள்ள நாட்டிய முறையும் ஆகிய இந்த விஷயங்கள் ருத்திர கன்னிகையின் தீøக்ஷ விதியில் விளக்கப்படுகின்றன. பிறகு ஐந்து ஆசார்யர்களுக்கும் செய்ய வேண்டிய தீக்ஷõவிதி கூறப்படுகிறது. ஆசார்யன் தன்னுடைய கிரஹத்திலோ ருத்ர கன்னிகைகளின் ஆசார்ய கிரஹத்திலோ சுத்தியுள்ள இடத்தில் மத்ய பாகத்தில் பரமேஸ்வரனை பரிவார ஸஹிதமாக பூஜித்து அதற்கு முன்னதாக ஸ்வர்ணம் வஸ்திரம் இவைகளுடன் கூடிய கும்பத்தை வைத்து, அந்த ஜலத்தை பஞ்சாக்ஷர மந்திரம் ஜபிக்கவேண்டும். பிறகு ஸ்நானம் செய்து வெள்ளை வஸ்திரம் தரித்த ஆசார்யர்களை கும்பதீர்த்தத்தால் பிரோக்ஷித்து பஞ்சாக்ஷரம் ஜபித்து கூர்சத்தினால் சிரசை ஸ்பரிசிக்கவும் அப்பொழுது கர்ம அதிகாரம் ஏற்படுகிறது என்று பஞ்சாசார்ய தீக்ஷõகர்மா கூறப்படுகிறது. ருத்ர கன்னிகைகளின் நாட்யத்திற்காக நுழையும் முறை கூறப்பட்டு பிறகு குறிப்பிட்ட தினத்திற்கு முன் தினம் அங்குரார்ப் பணம் செய்யவும்.

பிறகு ஆலயத்தை சுற்றி 4 மண்டபம் அமைக்கவும். கிழக்கு முகமாக இரண்டு மண்டபம் அமைக்கவும். மண்டபத்தில் பலிபீட அளவுள்ள பீடம் அமைக்கவும். எல்லா மண்டபத்திலும் ஹோமத்திற்காக குண்டமோ, ஸ்தண்டிலமோ, அமைக்கவும். பிறகு ஆரம்ப தினத்திற்கு முன் பரமேஸ்வரனை பூஜிக்கவும். நான்கு நபர்கள் ஸ்நானம் செய்தவர்களும், எல்லா அவயவ பூஷணம் தரித்தவர்களும் ஸர்வமங்களத்துடனும் ஈசனை நமஸ்கரித்தவர்களும், சாந்தர்களாயும் நியமம் உள்ளவர்களுமான ருத்ரகன்னிகைகளும் அதே லக்ஷணம் உள்ள ஐந்து ஆசார்யர்களும் மண்டபத்தில் அதிவாசம் செய்யப்படவேண்டியவர்கள் என்று பூஜைக்கு முன் தினத்தில் செய்ய வேண்டிய அதிவாச விதி கூறப்படுகிறது. பிறகு மறுதினம் காலையில் செய்யவேண்டிய கிரியைகள் கூறப்படுகின்றன. பிறகு முதலில் ஸஹஸ்ரகலச, ஸ்நபனத்துடன் கூடியதும் பிரபூத ஹவிஸ் நிவேதனம் செய்யப்பட்டதுமான பரமேஸ்வரனை பூஜிக்கவும் என்று ஆலயத்தினுள் பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. பின்பு மண்டப சம்ஸ்காரத்திற்கு பிறகு மத்யபீட மத்தியில் ஸதாசிவனையோ தேவியுடன் கூடிய நடராசரையோ ஆவரண சஹிதமாக பூஜிக்கவும். பிறகு அங்கு பிரம்மாவை சாங்கமாக பூஜிக்கவும். பிறகு ஆவரண விஷயத்தில் முறையாக நான்கு திக்குகளிலும் நந்தீ பிரம்மா, ஸ்கந்தர், மஹாவிஷ்ணு இவர்களை முதல் ஆவரணத்தில் பூஜிக்கவும். அதற்கு வெளியில் லோகபால ஆவரணமும், லோகபால ஆவரணத்திற்கு வெளியில் ஆயுத ஆவரணமும் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு கிழக்கு மண்டபத்தில் கவுரியுடன் கூடிய ருத்திரனையும் முன் போல் ஆவரண ஸஹிதம் பூஜிக்கவும். தெற்கு மண்டபத்தில் ஸரஸ்வதியுடன் கூடி பிரம்மாவை லோகபாலகர் முதலான ஆவரணத்துடன் பூஜிக்கவும். மேற்கு மண்டபத்தில் யோகபாலர்களுடன் ஸ்கந்தரை பூஜிக்கவும். வடக்கு மண்டபத்தில் லோகபாலக ஆவரணசஹிதமாக மஹாவிஷ்ணுவை பூஜிக்கவும் என்று பூஜா முறை கூறப்படுகிறது. பிறகு குண்டசம்ஸ்காரம் அக்னி சம்ஸ்காரம் செய்து அந்தந்த இடத்தில் செய்ய வேண்டிய ஹோமம் கூறப்படுகிறது.

பிறகு அரங்கத்தில் ஸ்வாமியை பூஜித்து சுத்த நிருத்தம் செய்யவும். நாட்டிய ஆரம்பத்தில் ஆசார்யனை விசேஷமாக வஸ்திர ஆவரணங்களால் பூஜை செய்யவும், ஐந்து ஆசார்ய ருத்ர கன்னிகைகளின் விஷயத்தில் வஸ்திரம் முதலான பூஷணங்களுடன் கூடியதான கூலி கொடுப்பதை அவர்கள் திருப்தி அடையும் வரை கொடுக்கவும் என கூறப்படுகிறது. இங்கு ருத்ர கன்னிகையும் பஞ்சாசார்யர்களும் முன்பு கூறப்பட்ட தீøக்ஷயினால், தீøக்ஷ செய்யப்படாமல் இருந்தால் முன்பு கூறியபடி நாட்டியம் ஆடவும் என கூறப்படுகிறது. இவ்வாறு ருத்திர கன்னிகைகளின் நாட்டிய பிரவேசத்திற்கு முதலில் நுழையும் கார்ய முறை கூறப்பட்டது. பிறகு நித்யோத்ஸவத்திற்கு பிறகு செய்ய வேண்டி சுத்த நிருத்தம் கூறப்படுகிறது. பிறகு ஸ்நானம் செய்து ஸர்வ அலங்கார பூஷிதமாயும் வெள்ளை மாலை தரித்தவளாயும் உள்ள ருத்ரகன்னிகையோடு அரங்கத்தில் உள்ள பரமேஸ்வரனை பூஜித்து அதற்காக ஸ்லோகத்தில் உள்ள அர்த்தத்தை பாவனையுடன் கூடி சுத்த நிருத்தத்தை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ருத்திரன் இவர்கள் மூன்று சந்திகளுக்கும் அதிபர் என கூறி புஷ்பாஞ்சலி சமயத்தில் சொல்லவேண்டிய மூன்று ஸ்லோகம் கூறப்படுகிறது. அவர்களுக்கு முடிவில் ஸ்தாபனம், பிரோக்ஷணம், பிராயச்சித்தம், உத்ஸவம், ஸ்நபனம், மாச பூஜை ஹோம கர்மா, திவஜாரோஹண காலங்கள், காம்யகர்மா அனுஷ்டிக்கும் முறை தினம் ஆகிய இந்த சமயங்களில் சுத்த நிருத்தம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 73வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே அந்தணர்களே, பிரதிஷ்டை, திருவிழா முதலான நிகழ்ச்சிகளிலும், நித்யோத்ஸவத்தின் முடிவிலும் செய்ய வேண்டிய சவுக்ய கர்மாவை கேளுங்கள்.

2. ருத்ர கன்னிகைகளால் சவுக்ய கர்மா செயற்பாலது. அது இரு வகைப்படும். கவுசிகரின் ப்ரீதிக்காக, ருத்ரன், அப்ஸர ஸ்தீரிகளை படைத்தார்.

3. அந்த அப்ஸர ஸ்தீரிகளின் வெகு நாளைய வம்சமானது ருத்ர கன்னிகை குலமாகும். ப்ரதிலோமர்களால் தொடப்படாதவர்கள் பொது மனிதராக இருப்பார்கள்.

4. அவர்களே ருத்ர கன்னிகைகளாவார்கள், வேறு விதமாகவும் கூறப்படுகிறது. உயர்ந்த அந்தணர்களே, முன்பு தேவதாரு வனத்தில் என்னால் விளையாட்டாக

5. கல்யாண கோலமாக அங்கு பிரவேசித்தேன் அவ்வமயம் அங்குள்ள ரிஷிர பத்னிகள் இமை கொட்டாமல் மயக்கத்துடன் பார்த்து

6. காம வேட்டை உள்ளவர்களாக நழுவிய வஸ்திரம் கேசமுடையவர்களாக ஆனார்கள். அப்பேர்பட்டவர்களை என் கருணையால் பார்த்தேன்.

7. நான் பார்த்த மாத்ரத்தில் குறைவில்லா கர்பமடைந்தார்கள், அவரவர் கர்பத்திலிருந்து உண்டானவர்கள் ருத்ர கன்னிகையராவர்.

8. அவர்கள் யாவரும் ஒன்று கூடி எங்களுக்கு என்ன தொழில் இருக்கிறது என்று கேட்க நான் கூறுகிறேன் கேளுங்கள் என்று சிவனால் கூறப்பட்டது.

9. சவுக்ய ஸஹிதமான என் அர்ச்சனாதி பூஜா சிரேஷ்டமாகும். அந்த சவுக்யம், சுத்த ந்ருத்தம் ஆகும். பரத நாட்டிய விஷயத்தில் அதன் லக்ஷணம் கூறப்பட்டுள்ளது.

10. பிரதி தினமும் என் ப்ரீத்திக்காக சவுக்ய கர்ம பூஜையில் சேர்க்கப்படவேண்டும். அந்த வம்சத்தில் ஜனித்த ஸ்திரீகளால் ஐந்து ஆசார்யனுடன் கூட செய்ய வேண்டும்.

11. இவ்வாறு பூமியில் லீலை செய்ததாக சங்கரனால் கூறப்பட்டதாகும். என்னால் சந்தோஷிக்கப்பட்டு, தீøக்ஷயால் அவர்கள் தீக்ஷிக்கப்பட்டவர்களாவர்.

12. நந்தியை கூப்பிட்டு, கையிலுள்ள தண்டத்தை கொடுத்தார். நந்தியிடமிருந்து எந்த ருத்ர கன்னிகைகளின் சிரஸில் வேத்ரமென்ற, தண்டத்தால் தொடப்பட்டதோ

13. அது முதற்கொண்டு நந்தன் என்ற பெயரால் பூமியில் இருக்கிறார்கள். நந்தி தண்டத்தினால் ஸ்பர்சிக்கப்பட்டவர்கள் சிரோதண்டிநர் எனப்படுகிறார்கள்.

14. அந்த குலத்திலுண்டானவர்களால் சுத்த ந்ருத்தம், அனுஷ்டிக்கப்பட வேண்டும். நர்தகர், மர்தகர், காயகர், வம்சகர்

15. மவுரவிகர், ஆகியவர்கள் பஞ்சாசார்யர்கள் ஆவார்கள். நான்கு வம்சத்தை அனுசரித்தவர்கள், நாட்ய வேதங்களை அறிந்தவர்கள்,

16. பாவனை, பாட்டு, ந்ருத்தங்களை அறிந்தவர்கள், வாத்யஞானத்தில் உயர்ந்தவர்கள் நவ நாட்யரஸத்தை அறிந்தவர்கள், குற்றமில்லாத என் பக்தர்களாவர்.

17. அவர்களில் உயர்ந்தவர், நடன கல்வியை அறிந்த நர்தகராவர். அவர் மாத்ரை என்னுவதில் சிரேஷ்டமும், நர்த்தனத்தில் சிரேஷ்டருமாவார்.

18. மல்ல வித்யையில் நன்கு அறிந்தவர். மர்தகராவர். அவர் சுத்த ந்ருத்தத்தில் ஈடுபட்டவரும் அங்க லக்ஷணத்தில் ஈடுபட்டவருமாவர்.

19. ஏழு ஸ்வரத்தை அறிந்தவரும் கான வித்யையை அறிந்தவரும், பாடகர் ஆவார். அவர் ஸப்தஸ்வர பேதம் அறிந்து, கானம் செய்பவராவார்.

20. குழலூதுபவரும், அவ்வாறே குழல் வித்தையில் வல்லவராயிருப்பவன், உதாத்த முதலிய பேதங்களுடன் சவுக்யத்தில் குழலூதுபவராவர்.

21. சவுக்ய காலத்தில் முரவவாத்யத்தால் சங்கீதம் செய்பவர், மவுர விகாரவர், தென் பாகத்தில் நர்த்தகரும், மர்தகரும் இருக்க வேண்டும்.

22. காயகரும் வம்சகரும் உத்தர பாகத்தில் இருக்க வேண்டும். முன் பக்கத்தில் மவுரவிகருபாக சவுக்ய காலத்தில் முரவ வாத்யம் வாசிக்க வேண்டும்.

23. முன்பு கூறப்பட்டவர்களுக்கு மறு பிறப்பு ஏற்பட்டிருந்தால் சண்டேச ஹோமத்தின் பிறகு மறுபடியும் தீøக்ஷ செய்யப்படவேண்டும். அந்த தீøக்ஷ சுருக்கமாக கூறப்படுகிறது.

24. அனுகூலமான தினத்தில் தன்னுடைய ஐந்து வயதிலிருந்து அதிகரித்து ஐம்பது வரை வயதுள்ளவர்கள், யோக்யமானவர்கள் மற்றவர்கள் ஒரு போதும் யோக்யம் இல்லாதவர்கள்.

25. சவுக்ய நிருத்தத்திற்காக லக்ஷணமுள்ள மண்டபம் செயற்பாலது. முற்பத்தி மூன்று கரத்திலிருந்து இரண்டிரண்டு ஹஸ்த அளவாக குறைக்க வேண்டும்.

26. தேவன் முதல் சூலம் வரை உள்ள இடங்கள் முறையே சிரேஷ்டம், மத்யமம், அதமம் என மூன்று விதமான இடமாகும். ஒவ்வொன்றும் மூன்று, மூன்று அளவினாலும் அவைகளில் விருப்பமானதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

27. தேவாதி நான்கு வகைகளில் தேவன் முதலான வரிசை முறைப்படி ஏற்றுக் கொள்ளவும். அல்லது எல்லோர்க்கும் ஸாமான்யமான முன்பு நிர்மாணிக்கப்பட்ட மண்டபங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

28. நர்தனத்திற்கு, (பங்க்தி) பத்துமுழம் என்ற அளவு பேதத்தால் ஏற்றுக் கொள்ளவும். எல்லா மண்டபங்களையும், நிவ்ருத்தி முதலிய கலாமயமாக பாவிக்கவேண்டும்.

29. மண்டபத்தின் நடுவில் சுத்த ந்ருத்தத்தை செய்யவும். மண்டபத்தில் நடராஜரை சந்தனம் முதலியவைகளால் அங்க பூஜையுடன் கூடியதாக பூஜிக்கவேண்டும்.

30. ருத்ர கன்னிகைகளை கூப்பிட்டு சங்க தீர்த்தத்தால் பிரோக்ஷிக்கவும். பஞ்சாக்ஷரத்தால் ஜபிக்கப்பட்டு ஸ்வாமியின் முன்பு மெழுகப்பட்ட இடத்தில்

31. பிரணவாசனமிட்டு அதன் நடுவில் ஹா என்ற தீர்த்தத்தால் சுத்தி செய்த தண்டத்தை எடுத்து

32. பூர்வாக்ரம், உத்ராக்ரமாக தண்டத்தை ஸ்தாபித்து அதில் நந்தியை சந்தன, புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.

33. புதிய வஸ்திரம், மாலை, வெண்ணீர், உத்திரீய புஷ்பமாலை, வெள்ளை சந்தனம் பூசி, அங்குலீயம் (மோதிரம்) தரித்த ஆதிசைவனானவன்

34. ஆசார்யன் ஐந்து நிஷ்க அளவு தட்சிணை முதலியவைகளை பெற்று அவரின் சிஷ்யனாவது அந்த தண்டத்தை எடுத்து தலைமுதலாக நியாஸம் செய்யச் சொல்ல வேண்டும்.

35. சிவாய நம என்று எல்லோருடைய தலையிலும் நியாஸம் செய்ய வேண்டும். சந்தனம் முதலியவைகளால் முன்பு போல் தண்டத்தை பூஜிக்க வேண்டும்.

36. ஹே நந்த என்று விளி வேற்றுமையுடன் கூடியதாக, தண்டிநீ வரையிலான சிரேஷ்டமான வேறு நாமாக்களை தருகிறேன் என்று

37. என்னுடைய உத்ஸவ காலத்தில் உன்னுடைய நாட்யத்தை அனுசரித்து இருப்பாயாக, என்று கட்டளையிட்டு சிஷ்யனின் கையில் புஷ்பங்களை கொடுக்க வேண்டும்.

38. புஷ்பாஞ்சலியை வாங்கி நமஸ்காரத்துடன் குருவிடம் கொடுக்க வேண்டும். மறுபடியும் புஷ்பங்களை எடுத்து பரமேஸ்வரனிடம் நிவேதிக்க வேண்டும்.

39. பிறகு பரத நாட்டியத்திலுள்ள பஞ்சபதி என்றதான நர்தனத்தை, சிவ சன்னதியில் சிவனின் திருப்திக்காக சவுக்ய கர்மாவிற்கு செய்ய வேண்டும்.

40. இவ்வாறே ஸ்தீரிகளின் தீக்ஷõ விதி கூறப்படுகிறது. இது பஞ்சாசார்ய விஷயங்களாகும், தேசிகருடைய வீட்டிலோ தன்னுடைய வீட்டிலோ அழகான நடுபாகத்தில்

41. அர்ச்சனாங்க விதிப்படி தேவேசரை பூஜை செய்து, ஸ்வர்ண வஸ்திரத்துடன் கூடிய கும்பத்தை ஈசன் முன்பு ஸ்தாபித்து

42. பஞ்சாக்ஷரத்தால் தீர்த்தத்தை அபிமந்திரனம் செய்து, ஸ்நானம் செய்து வெள்ளை வஸ்திரம் முதலியவைகளுடன் கூடி ஐந்து ஆசார்யர்களை

43. சிவ தீர்த்தத்தால் பிரோக்ஷித்து கூர்ச்சத்தால் தலையை தொட்டுக் கொண்டு பஞ்சாக்ஷரத்தோடு கூடியதால் கார்யங்களுக்கு உகந்தவராக ஆகிறார்கள்.

44. ருத்ர கன்னிகைகளின் நுழைதல் சுருக்கமாக கூறப்படுகிறது. நிச்சயித்த உத்ஸவ தினத்தின் முன் தினம் அங்குரார்பணம் செய்ய வேண்டும்.

45. கோயிலின் நான்கு திக்குகளிலும், கிழக்கு முகமாக இரண்டு மண்டபம் அமைக்கவும். மண்டபத்தில் பலிபீடம் போல் பீடம் செய்ய வேண்டும்.

46. எல்லா மண்டபத்தின் முன்பாக குண்டம் அமைத்து ஸ்தண்டிலம் அமைக்கவும். உத்ஸவத்தின் முன் தினம் தேவ தேவனை பூஜிக்க வேண்டும்.

47. நான்கு ருத்ர கன்னிகைகள் உணவு உட்கொள்ளாமலும், சந்தனம் முதலியவைகளுடனும் பல்துலக்கியவர்களாயும், நீராடியும் அழகான அவயங்களை உடையவர்களாயும்

48. ஸர்வமங்களமுடையவர்களாகவும், உள்ள பஞ்சாசார்யர்கள் ஈசனை நமஸ்கரிக்கப்பட்டவர்களாகவும், ரக்ஷõபந்தனமுடையவர்களாகவும்

49. உத்ஸவத்தின் முன்தினம் அதிவாசம் செய்ய வேண்டும். ஸஹஸ்ர கலசாபிஷேகம் பரமேஸ்வரனுக்கு செய்து

50. சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து அதிகப்படியான நிவேதனங்களை செய்யவும். மண்டப நிர்மாணத்திற்கு பின் சில்பியை திருப்தி செய்து பசுஞ்சாணம் மெழுகிட்டு

51. புண்யாஹப்ரோக்ஷணம், அந்தணர்க்கு உணவளித்து நடு பீட நடுவில் ஸதாசிவரை பூஜிக்க வேண்டும்.

52. நடராஜர், தேவியுடனோ பிரம்மாவையுமோ கிழக்கிலுள்ள இரண்டாவது மண்டபத்தின் ஆவரண பூஜையுடன் கூடியதாக பூஜிக்கவும். ஈசனின் ஆவரணமானது

53. கிழக்கில் நந்தியையும் வடக்கில் பிரம்மாவையும் பூஜிக்கவும், ஸ்கந்தரை மேற்கு திக்கிலும் விஷ்ணுவை வடக்கிலும் பூஜிக்க வேண்டும்.

54. அதற்கு வெளியில் லோக பாலர்கள் அதற்கு வெளியில் ஆயுதங்களை பூஜிக்கவும். முன்புள்ள ஆவரணப்படி கிழக்கில் கவுரி தேவீ ஸஹிதம் ருத்ரனையும்

55. தெற்கில் பிரம்மாவையும் அந்த பிரம்மாவை ஸரஸ்வதி, லோகபாலர்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

56. மேற்கு மண்டபத்தில் ஸ்கந்தரை லோக பாலர்களுடன் கூடியதாக பூஜிக்கவும். வடக்கு மண்டபத்தில் லோக பாலருடன் கூடியதாக மஹாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.

57. பிறகு குண்ட, வன்னி ஸம்ஸ்காரம் செய்து, அந்தந்த வஹ்நியில் அந்தந்த தேவர்களை சந்தனம் முதலியவைகளால் ஆவாஹித்து பூஜித்து நாடீசந்தனம் செய்து ஹோமம் செய்யவேண்டும்.

58. நூறு ஆவ்ருத்தி ஹோமம் பத்து ஆவ்ருத்தி சமித்து, நெய், அன்னம், பொறி, எள் இவைகளால் ஹோமம் செய்து பூர்ணாஹுதி செய்யவேண்டும்.

59. மண்டபத்தில் தேவரை பூஜித்து சுத்த ந்ருத்தம் செய்யவும். ருத்ர கன்னிகைகளுக்கு முன்பு கூறப்பட்ட ஸம்ஸ்காரத்தையுடைவர்களோ

60. ஸம்ஸ்காரமின்றி இருந்தால் ஸம்ஸ்காரம் செய்து ந்ருத்தம் செய்விக்க வேண்டும். ந்ருத்த ஆரம்பத்தில் தேசிகருக்கு விசேஷ பூஜை செய்து

61. பஞ்சாசார்ய கன்னிகைகளை வஸ்த்ராதி, பூஷணங்களால் உபசரித்து எவ்வளவு கொடுத்தால் திருப்தி ஏற்படுமோ அவ்வளவு கூலியை அந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.

62. நித்யோத்ஸவத்தின் முடிவில் சவுக்யம், சொல்ல வேண்டும். ஸ்நாநம் முடித்து அணிகலன் தரித்து வெள்ளை மாலை அணிந்து

63. பஞ்சாச்சர்யர்களுடன் கூட முன்பு கூறிய ஆவரணத்துடன் நடராஜரை அர்ச்சித்து அதன் முன்பு நவநாட்டிய ரஸத்துடன்

64. ஸ்லோகத்தின் அர்த்த பாவனையோடு சுத்த ந்ருதத்தை செய்யவும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரனிவர்கள் மூன்று கால சந்த்யாதிபர்கள் ஆவர்.

65. காலை, மதியம், ஸாயங்காலம், கிரமமாக மூன்று ஸ்லோகங்களை படிக்கவும். மந்தார புஷ்பம் இரைத்ததினால் பலவித வாசனையால் மதங்கொண்ட வண்டு கூட்டங்களால் அழகான பாட்டு சப்தத்தையுடையதும், பலவித அங்க கரணங்களால் துதிக்கக் கூடியதுமான எனது புஷ்பாஞ்சலியானது பிரம்மாவிற்காக ஆகட்டும்.

66. பாவத்தோடு கூடியதும் ரஸத்தோடு கூடிய ந்ருத்தத்தினாலும் ந்ருத்தத்தால் உண்டானதும் வாசனை யோடும் மதங்கொண்ட வண்டுகளால் சப்திக்கப்படுவதுமான புஷ்பாஞ்சலியானது விஷ்ணுவின் பொருட்டு ஆகுக.

67. ஸாந்தாதிகர் முதலிய சிவஸம்காரம் செய்யப்பட்ட ருத்ர கன்னிகைகளால் பலவித அபிநயங்களால் கொண்டாடப்பட்டதும், பலவித புஷ்பக் கலப்புகளால் அரச அரசாங்க வளர்ச்சியின் பொருட்டு புஷ்பாஞ்சலியானது பரமேஸ்வரனின் பொருட்டு ஆகுக.

68. ஸ்தாபனத்திலும் பிரோக்ஷணத்திலும், பிராயச்சித்தத்திலும், அற்புத சாந்தியிலும், உத்ஸவத்திலும், ஸ்னபனத்தில், மாஸ பூஜையிலும், ஹோம கர்மாக்களிலும்

69. த்வஜா ரோஹண காலத்திலும் காம்ய கர்மாக்களிலும் சவுக்ய கர்மா விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சவுக்ய கர்ம விதியாகிற எழுபத்தி மூன்றாவது படலமாகும்.
படலம் 72: கரண லக்ஷண முறை

72வது படலத்தில் கரண லக்ஷண முறை கூறப்படுகிறது. முதலில் சமித்து, பின்னல் போன்ற அமைப்புமுறைகள், விஷ்டரம், பரிதி, கூர்ச்சம் என்று இவைகளின் லக்ஷணமும் அமைப்பு முறையும் அதை உபயோகிக்கும் இடமும் அதை செய்ய உபயோகமான திரவ்யங்களும் விளக்கப்படுகின்றன. கூர்ச்ச விஷயத்திலோ உத்கூர்ச்சம், அதக்கூர்ச்சம், அந்தக் கூர்ச்சம், என்று மூன்று பேதம் கூறப்படுகிறது. உத்கூர்ச்சம் சாந்தி கர்மாவிற்கும், அதக்கூர்ச்சம் புஷ்டிகர்மாவிற்கும் அந்த கூர்ச்சம் ஆபிசாரத்திற்கும், செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு பவித்ர லக்ஷணமும் அதை உபயோகிக்கும் முறையும், அதன் திரவ்யமும் கூறப்படுகின்றன. பிறகு பவித்திரத்திற்காக ஸ்வர்ணத்தால் நிர்மாணம் பண்ணப்பட்ட பவித்ர மோதிரமும் விரும்ப தக்கது என கூறப்படுகிறது. தர்பமாலையின் லக்ஷணமும், அதை அமைக்கும் முறையும், அதன் திரவ்யமும் விளக்கப்படுகின்றன. பிறகு பிரதிஷ்டையில் செய்யவேண்டிய தான தோரணத்தின் அளவு தோரண திரவ்யம், அதை உபயோகிக்கும் முறை, ஏற்படுத்தும் முறை இவைகள் கூறப்படுகின்றன. பிறகு தர்பணம், பூர்ணகும்பம், வருஷ்பம், யுக்ம சாமரம், ஸ்ரீவத்சம், ஸ்வதிகம், சங்கம், தீபம் ஆகிய சிவனின் அஷ்டமங்களம் என்று பெயர்களை கூறி அதை செய்யும் லக்ஷணம், அதன் அளவு முறை அதன் உருவ அமைப்பு, அதற்கு உபயோக மான திரவ்யங்கள் ஆகியவைகள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு மற்ற தேவர்கள், தேவீ, இவைகளுக்கு இந்த விஷயத்தில் விருஷபத்தை விட்டு அந்த மூர்த்திகளின் வாகனத்தை பூஜிக்கவும் என்று விசேஷமாக கூறப்படுகிறது. கிராமம் முதலான இடங்களிலோ தன்னுடைய கிராஹத்திலோ யஜமானனின் உருவத்திற்கு தக்கவாறு தர்பணம் முதலான திரவ்யங்களை வரைய வேண்டும் என கூறி, அதன் அளவுகளை கூறுகிறார். ஸ்திரீகளின் சிரசில் இருக்கும் படியாகவோ தர்பணம் முதலிய அஷ்டமங்கலங்களை செய்யவும் என கூறுகிறார். தர்பணம் முதலிய அஷ்டமங்கலங்களில் பூஜிக்க வேண்டிய தேவதைகளை நிரூபிக்கிறார். பிறகு வஜ்ரம், சக்தி, தண்டம், கட்கம், பாசம், அங்குசம், த்வஜம், சூலம், பத்மம், சக்ரம் என தசாயுதங்களின் பெயர் நிரூபிக்கப்படுகின்றன.

பிறகு த்வஜமோ, கதையோ யென்று வேற்றுமையாக கூறப்படுகிறது. பிறகு தண்டத்தை தவிர்த்து, த்வஜமோ, அங்குசமோ செய்யலாம். தசாயுதங்கள் யாகத்திற்கு சம்மந்த பட்ட விருக்ஷங்களாலோ, உலோகங்களாலோ செய்யப்படவேண்டும் என கூறப்படுகிறது. தேவர்களை அஞ்சலி கையுடன் கூடியதாக செய்து அவர்கள் சிரசில் தசாயுதங்களை கல்பிக்கவும் என கூறப்படுகிறது. தசாயுதங்களில் சக்தியும் கதையும், ஸ்திரீ ரூபமாகும். மற்றவை புருஷலக்ஷணங்கள் என கூறப்படுகின்றன. தசாயுதங்களின் விஷயத்தில் அளவுகள் அதை செய்யும் முறை பிறகு ஸ்ருக்சுருவம் அமைக்கும் முறை விஸ்தாரமாக கூறப்படுகிறது. கரணங்கள் செய்யும் விஷயத்தில் புதியதாக செய்தால் சிரேஷ்டமானது. அது முடியாவிட்டால் பணத்தை கொடுத்து பழைய கரணங்களை ஆசார்யனிடமிருந்து வாங்கிக்கொள்ளவும். முன்பு செய்யப்பட்டதான திரவ்யங்களை கிரஹிக்கும் விஷயத்தில் பிராயசித்தம் செய்யவும் எனக் கூறி பிராயச்சித்த முறை கூறப்படுகிறது. பிறகு எந்த சாஸ்திரத்தினால் எந்த கார்யம் முன்பு அனுஷ்டிக்கப்படுகிறதோ அங்கு அந்த சாஸ்திரசித்தத்தினால் செய்யப்பட்ட கரணமே கிரஹிக்க வேண்டும். அங்கு சொல்லப் படாததை வேறு கிரந்தத்தினால் கிரஹிக்க வேண்டும். சொல்லப்படாததை உத்ஸவம் முதலியகர்மாக்களில் அஸ்திரம், பிரதிமை தேவ உபகர்ணாதிகள் எல்லாம் அந்த ஆலய சித்தமாகவே இருப்பது சிரேஷ்டம். அந்தலிங்கம் முதலியவைகளின் வேற்றுமை ஆயாதி முதலான அளவுகளால் அமைப்புடன் கூடியதாகவோ வேறு ஆலயத்தில் இருந்ததாகவோ கிரஹித்து கொள்ளக் கூடாது என கூறப்படுகிறது. பிறகு ஒருஸ்தானத்திலிருந்து வேறு ஸ்தானத்திற்கு கொண்டு செல்லும் தோஷ சாந்திக்காக, அனுஷ்டிக்க வேண்டிய பிராயசித்தவிதி கூறப்படுகிறது. முடிவில் யாகசாலை முதலியவைகளில் செய்ய தோரண விஷயங்களின் லக்ஷணம் அளவுமுறைப்படி கூறப்படுகிறது. இவ்வாறு 72வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பூஜைக்கு உபயோகிக்கும் பொருட்களின் அமைப்பு முறையை சுருக்கமாக கூறுகிறேன். யக்ஞ சம்பந்தமான மரங்களிலிருந்து உண்டானதும், பன்னிரண்டங்குலமுடையதாகவும் உள்ளது சமித்துக்களாகும்.

2. அந்த ஸமித்துக்களும் தோலுடன் கூடியதாகவும், ஸமமாக வெட்டியதாகவும் வளைவு, முடிச்சு இல்லாததாகவும் இருக்க வேண்டும். முப்பது தர்ப தளங்களில் நெருக்கமானதும் ஒருமுழ அளவாக வெட்டப்பட்டதாகவும்

3. பின்னல் போன்றதாகவோ, முறுக்கியதாகவோ, தர்பைகளால் நிர்மாணிக்கப்பட்டதாக (விஷ்டரம்) இருக்க வேண்டும். அந்தந்த குண்ட மேகலை அளவுள்ளதாகவும் நுனியுள்ளதாகவும் நேரானதாகவும் அந்த குண்டத்திற்கு ஏற்பட்ட சமித்து உடையதாகவும்

4. திவாரம் முதலியன இல்லாததாகவும் ஸமமாக வெட்டியதாகவும் பரிதிகள் (சமித்து) இருக்க வேண்டும். நான்கு விஷ்டரமும் பரிதியும் அவ்வாறே (4) உள்ளதாக நினைக்க வேண்டும்.

5. மூன்று தர்பம் முதற்கொண்டு ஒவ்வொரு தர்பம் அதிகரித்ததாக முப்பத்தியாறு தர்பம் வரையிலும் கூர்ச்சத்திற்காக தர்பையை கிரஹிக்க வேண்டும்.

6. அதே முப்பத்தாறு மாத்ர அளவான நீளமும் ஆகும், பதினோரு மாத்ர அங்குல அளவினால் முடிச்சாகும். அரையங்குல பத அதிகரிப்பால் இரண்டங்குல அளவு வரையில்

7. முடிச்சு பிரதட்சிணையாக சுற்றப்பட்டு, சிகையளவு இரண்டு மாத்ரையாக அமைக்கவும். ஒரு மாத்ரையங்குல அதிகரிப்பால் ஒன்பது மாத்ரையளவு வரையிலும்

8. முடிச்சு உள்ளதாகவும், நுனி முடிச்சு இல்லாமலும் கூர்ச்சங்கள் கூறப்பட்டன. பிரம்மா, விஷ்ணு, ருத்ரர்கள் கூர்ச்சத்தின் முறையே அடி, நுனி, நடுபாகங்களில் இருப்பவர்களாக எண்ணவேண்டும்.

9. இது உத்கூர்ச்ச நியாஸபக்ஷமாகும். அத: கூர்ச்சத்திற்கு விலோமமான முறையாகும். உத்கூர்ச்சம் சாந்தியையும், அத: கூர்ச்சம் புஷ்டியையும் கொடுக்க வல்லதாகும்.

10. அந்த கூர்ச்சம் (உள்கூர்ச்சம்) செய்யக் கூடாது. அது ஆபிசாரத்திற்கு சொல்லப்பட்டது. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து தர்பங்களால் அடிநுனியுடன் கூடியதாகவோ இல்லாமலோ அமைக்க வேண்டும்.

11. பவித்ரத்தை வலப்பக்கமாக சுற்றியபடி முடிச்சு போடப்பட்டோ இல்லாமலோ, மோதிரவிரலுக்கு உகந்த தான திவாரத்தை உள்ளதாக வேண்டும்.

12. முன்பு கூறப்பட்ட முடிச்சை மேலே உடையதாகவும் மிக அழகாகவும் முன்பு கூறியதுபோல வலப்பக்கமும் இரு பக்கங்களிலும் தேவதாதிஷ்டி தமாகச் செய்து

13. கையில் சேர்க்க வேண்டும். தேவார்ச்சனை செய்யும் காலத்தில் ஸ்வர்ணத்தால் (தங்கம்) நிர்மாணிக்கப்பட்ட அங்குலீயபவித்ரம் விருப்பப்பட்டதாகும்.

14. இருபத்தி மூன்று எண்ணிக்கையுள்ள தர்பைகளால் நிர்மாணிக்கப்பட்டதும், பன்னிரண்டு மாத்ரை முதல் முப்பத்தாறங்குலம் வளைந்ததாகவும்

15. விருப்பப்பட்ட இடைவெளியுடையதாக தொங்குவதாக நிர்மாணிக்கப்பட்டதும், சுண்டுவிரல் கணமுள்ளதாகவும் தர்பமாலையை செய்ய வேண்டும்.

16. அரசிலைகளால் அழகுபடுத்தப்பட்ட ரஜ்ஜூவாவது செய்ய வேண்டும். ஒருமுழ அளவு முதல் மூன்றங்குல அதிகரிப்பால்

17. பதினைந்து முழ அளவு வரை நீளமாகும், அதன் பாதி அளவு அகலமாகும். ஸமான மானதாகவும், நடுவில் எட்டில் ஓர்பங்காகவோ ஒன்பது அளவுள்ளதாகவோ கூறப்பட்டுள்ளது.

18. வாயிற்படி அளவு உயர, அகல, கனஅளவுகளாலோ தூண்களுக்கும் திவார ஆஸனங்களுக்கும் மூன்றங்குல அளவு அதிகரித்ததாக அளவாகும்.

19. நான்கங்குல அதிகரிப்பால், முப்பதங்குலம் வரையிலான அளவுள்ளதாக யக்ஞவ்ருக்ஷ மரங்களால் பிரதிஷ்டை முதலான கார்யங்களில் தோரணம் செய்தல் வேண்டும்.

20. கற்சிலையினாலோ, செங்கல்லினாலோ மரங்களினாலோ, தோரணம் செய்தல் வேண்டும். விருப்பப்பட்ட அளவு குழிதோண்டியும் அதே போல் அளவும் ஆகும்.

21. வாயிற்படியின் குறுக்கு பட்டையில் த்ரிசூலம், ஒன்பது சூலம், பஞ்ச சூலமோ ஏழங்குலம் ஆரம்பித்து ஐந்தங்குல வ்ருத்தியாக

22. பதினைந்து மாத்ரங்குலம் வரையில் த்ரிசூலத்தின் நீளம் (உயரம்) அமைக்கவும். அகலத்திலிருந்து கால்பாக அதிக அளவால் இரண்டங்குலத்திலிருந்து பன்னிரெண்டங்குலம் வரையிலும்

23. எவ்வளவு அளவு கணம் வேண்டுமோ, அந்த அளவு கனத்தை விருப்பமுள்ள அளவுப்படி செய்யவும். இவ்வாறு வாசற்படி தோரண அளவு கூறி அஷ்டமங்கலம் கூறப்படுகிறது.

24. ஒன்பதங்குலம் முதல் ஐந்தங்குல அளவு அதிகரிப்பால் முப்பத்தாறங்குல அளவு வரை கனமான அஷ்டமங்கலத்தின் அளவை கல்பிக்கவும்.

25. மேற்கூறிய அளவில் கால்பாகம், அரை பாகம், மூன்றில் ஒருபாக அளவோ, அவைகளின் அளவாக அமைக்கவும். இடைவெளியின் எட்டு பாகத்தில் ஒன்பதளவு உதாஹரணமாக்கப்பட்டுள்ளது.

26. கனமானது ஓரங்குலத்திலிருந்து கால் அங்குல அதிகரிக்கையால் ஏழங்குலம் வரையில் யக்ஞஸம்பந்த வ்ருக்ஷங்களாலோ உலோகங்களாலோ அஷ்டமங்கலம் செய்ய வேண்டும்.

27. தர்பணம் (கண்ணாடி) பூர்ணகும்பம், வ்ருஷபம், இரட்டைச்சாமரம், ஸ்ரீவத்ஸம், ஸ்வஸ்திகம், சங்கு, தீபம் இவைகளின் சிவனின் அஷ்டமங்கலமாகும்.

28. மற்ற தேவர்களுக்கும், தேவீகளுக்கும் வ்ருஷபத்தை விட்டுவிட்டு அந்த ஸ்தானத்தில் அவரவர்களின் வாஹனங்களை கிரஹிக்க வேண்டும்.

29. சைவாஷ்டமங்கலம் தேவர்களுக்கும், ஆச்ரமத்தை உடையவர்களுக்கு கிராமங்களிலோ தன் வீட்டிலோ, யஜமானனை அனுசரித்த உருவமுடையதாக

30. தர்பணம் முதலியவைகளை வரையவும், அதன் அளவு இப்பொழுது கூறப்படுகிறது. ஐந்தங்குலம் முதல் ஓரங்குல அதிகரிப்பதால்

31. இருபத்தைந்து மாத்ரை அளவுள்ளது வரை அதன் கனம் அமைக்க வேண்டும். மேற்கூறிய அளவை அனுசரித்து அகல அளவை பாதத்துடன் கூடியதாகவோ தர்பணம் (கண்ணாடி) அமைக்க வேண்டும்.

32. கால்பாக அளவோ, அல்லது அரைபாக அளவாலோ அதற்கு பாதம் அமைக்க வேண்டும். அவ்வாறே பூர்ணகும்பத்திலும் பாதஅளவு அமைக்க வேண்டும்.

33. தன்முகம் குறுக்களவாக இருந்தும் கொடியுடன் கூடியதாகவும் கொடியின் அளவு வெளிக் கொணர்ந்ததாகவும் அவ்வாறே வ்ருஷபத்தின் பாத அளவும் நின்ற கோலத்துடனோ அமர்ந்த கோலத்துடனோ

34. தாமரை போன்ற பாதமுடையதாகவும், மேலே குடை சின்னமுடையதாகவும், ஸ்ரீவத்ஸமானது கூறப்பட்டு கிராம அளவை உடையதாக இருக்கும்.

35. சங்கமானது ஊர்த்வமுகமாகவும் கீழே ஸ்பர்ச்சிக்காமலோ அமைக்கவும். ஸ்ரீவத்ஸத்தில் தாமரை போன்ற பாதமும், குடையும் அமைக்க வேண்டும்.

36. மேற்கூறிய அஷ்டமங்கலங்களை ஸ்தீரி களின் (பெண்) தலையில் வைத்ததாகவோ அமைக்கவும். அவர்களின் தேவதைகளை ஹே, பிராம்மணர் களே, கேளும், கண்ணாடியில் சூர்யனும் பூர்ண கும்பத்தில் வருணனும் பூஜிக்காதவர்களாவர்

37. சாமரத்தில் வாயுபகவானையும், ஸ்வஸ்திகத்தில் ஸரஸ்வதியையும், சங்கத்தில் விமலனாகிய சந்திரனையும், தீபத்தில் அக்னி பகவானையும் பூஜிக்க வேண்டும்.

38. ஸ்ரீவத்ஸவத்தில் லக்ஷ்மியையும், வ்ருஷபத்தில் வ்ருஷபத்தையும் அவரவர் மந்திரத்தினால் பூஜிக்கவும். கிழக்கு, மேற்கு திக்கை நோக்கியதாக இரட்டைசாமரம் அமைக்க வேண்டும்.

39. ஒவ்வொன்றையும் வேதிகையின் வலது, இடது பாகமாக வைத்து பூஜிக்கவும். அஷ்டமங்கலத்ரவ்ய ரூபமாக வைக்காமல் அந்த ஸ்தானத்தில் அவற்றை பூஜிக்க வேண்டும்.

40. வஜ்ரம், சக்தி, தண்டம், கட்கம், (கத்தி) பாசம், அங்குசம், த்வஜம் (கொடி) கதை சூலம், பத்மம், சக்ரம் என்று தசாயுதம் அமைக்க வேண்டும்.

41. தண்டம் என்ற ஆயுதத்தை எடுத்து விட்டு த்வஜமும், அங்குசமுமோ அமைத்து பூஜிக்கவும். ஹே, பிராம்மணர்ளே, உலோகங்களாலோ, யக்ஞவ்ருக்ஷங்களாலோ அமைக்கவும். உலோகத்தால் செய்தால் பிம்ப அளவு முறைப்படி செய்ய வேண்டும்.

42. தேவரூபங்களை கைகளால் கூப்பிய கரமுடையதாக அமைக்கவும். சக்திக்கும், கதைக்கும் ஸ்தீரி (பெண்) உருவமாக அமைக்கவும். மற்றவைகளை ஆண் உருவமாக அமைக்க வேண்டும்.

43. ஒன்பது தாள அளவுள்ளதாக அமைப்பு முறை கூறப்படுகிறது. அவைகளின் தலைமேலோ, கையிலோ, கிரீடத்தின் மேலோ வஜ்ரம் முதலியவைகளை அமைக்க வேண்டும்.

44. தேகலப்தாங்குல அளவினால் அவைகளின் அளவு முறை கூறப்படுகிறது. அவைகளை முப்பத்தாறங்குல நீளமும், எட்டங்குல அகலமுமாகவும்

45. பதினைந்தங்குலம் முதல் இரண்டங்குல அதிகரிப்பால், நாற்பத்தியொன்பது மாத்ரங்குல அளவுவரை நீளமாகும்.

46. இதுவரை உலோக பிம்ப அளவு கூறி தாருஜ (மரம்) பிம்பஅளவு கூறப்படுகிறது. மாத்ராங்குல அளவினால் விருப்பப்பட்ட முறைப்படி செய்யவேண்டும், அதன் விஸ்தார அளவு கூறப்படுகிறது.

47. ஸ்ருக், ஸ்ருவம், முறைப்படி செய்யவேண்டும். அதன் அமைப்பு முறை கூறப்படுகிறது. அதன் பக்கவாட்டிலோ, அந்த மரத்தின் நடுவிலோ அதற்கு திவாரம் அமைக்க வேண்டும்.

48. முப்பத்தாறங்குலம் அல்லது முப்பத்தைந்து அங்குல அளவு நீளமாகவோ, அதன் கனமானது ஆறங்குலமும், வேதிகை ஆறங்குலத்திலும் கட்டை விரம் பருமன் கர்ணிகையும் அமைக்க வேண்டும்.

49. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்ற அளவினால் குழியானது அமைக்கவும். ஏழரை அங்குல அளவு இடைவெளி விடாததான ஓட்டையையும், சதுரச்சரம் போன்ற அழகான முகத்தையுடையதாக அமைக்க வேண்டும்.

50. சுண்டுவிரல் அளவு நெய் செல்லும் உத்தமமான திவாரத்தை (ஓட்டையை) அமைக்கவும். சுருக்கின் அடிபாக கலச அளவு ஆறங்குல நீளம்வரை தண்டத்தின் நுனிவரையிலும் நான்கங்குல அளவில் வேதிகையும் அமைத்துக் கொள்ளவேண்டும்.

51. விருப்பப்படி கலசத்தின் அளவையும் இரண்டங்குல அளவால் வேதிகையையும் அமைக்கவும். பலவித மரத்துண்டுகளால் தாமரையிதழ்கள் போல் அலங்கரிக்கப்பட்ட

52. ஸ்ருக்கை மடக்கின் அடிபாகம் எவ்வாறிருக்குமோ அவ்வாறாகவும் பக்கத்திலுள்ள கர்ணபாகம் ஒருபாகம் குறைந்த ஐந்து மாத்ரையால் (4 மாத்ராங்குல அளவில்)

53. சுண்டுவிரல் பருமன் தண்டமும், நேரானதாக அமைத்து ச்ருக்கை செய்ய வேண்டும். அல்லது முப்பதங்குல நீளஅளவும் எட்டங்குல விஸ்தாரமும் (அகலம்)

54. அதன் பாதி நான்கங்குல கனமும், முகமானது ஐந்து மாத்ராங்அகுல அளவுமாகும். முகமானது முக்கோணமாகவும், நடுவில் ஓட்டை யையுடையதாகவும் அமைக்க வேண்டும்.

55. பக்கவாட்டுபாகம், இரண்டங்குலமும், வேதிகை எட்டங்குலமும் ஆகும். அதனடிபாகம் கண்டிகையை அமைத்து அரை மாத்ராங்குலத்திலிருந்து ஒவ்வொரு அரைமாத்ராங்குல வ்ருத்தியாக

56. தண்டம் ஒன்பது அங்குலமாகும். அதன் அகலம் ஆறங்குலம், கைப்பிடி எட்டங்குல அளவிலும் அதன் நீளம் எட்டங்குல அளவுமாகும்.

57. அல்லது வேறுவிதமாக ஸ்ருக்கின் அளவு கூறப்பட்டுள்ளது. முப்பத்திரண்டு அங்குல நீளமும், ஏழங்குல அகலமுமாகும்.

58. அதன் கனம் நான்குமாத்ரையளவையும், முகத்தின் அகலம் ஆறங்குலமும் கர்ணமென்ற பக்கவாட்டுப்பக்கம் பதினைந்தங்குலமும், அகலம் ஐந்து மாத்ராங்குல அளவுமாகும்.

59. வேதிகை ஏழங்குல நீளமும், தாமரை பதினைந்தங்குலம் ஆகும். கண்டிகை ஓரங்குலமும், அதன் நீளம் ஏழுமாத்ரங்குலமும் ஆகும்.

60. பன்னிரெண்டு அங்குலம் தண்டபாகமும் (அதன்) அகலம் ஆறங்குலமும் ஆகும். அதன் அடியில் கலசாதாரமாக இரண்டங்குல நீளத்தில் பத்தங்குல சுற்றளவு உடையதாக அமைக்க வேண்டும்.

61. கலசத்தின் அடியில் பாதத்தை அமைக்கவும். வேறு விதமாகவும் கூறப்படுகிறது. முப்பத்தாறங்குல நீளமும், ஏழங்குல அகலமுமாகும்.

62. அகல விஸ்தாரத்தின் அரைபாகமான நான்கங்குல கனமும், முகம் ஏழங்குல அளவும் விஸ்தார நீளத்தினால் பன்றி முகம் போலும் அமைக்க வேண்டும்.

63. மூன்றிலொருபாகம் அக்ர (நுனி) பாகம் செய்து மற்ற பாகங்களை விட்டுவிடவும். பக்கவாட்டு கனம் இரண்டுமாத்ரையும், விஸ்தாரம் நான்கங்குலமாகும்.

64. வேதிகை எட்டங்குல நீளமும், அதே அளவு அகலமுமாகும். நான்கு மாத்ரை அல்லது மூன்று மாத்ரையளவில் அதன் நடுவில் (வேதிகை) திவாரம் அமைக்க வேண்டும்.

65. தண்ட அளவு ஆறங்குலமும், அதன் மத்தியில் மூன்றங்குல அளவில் கண்டிகையும் அமைக்கவும். அந்த கண்டிகையானது அரையங்குல வ்ருத்தியால் நான்கங்குலம் வரை செய்யவேண்டும்.

66. பதிமூன்றங்குலம் தண்டமும், அதன் அடியில் முன்புபோல் கும்ப அமைப்பும் உள்ளதாக ஸ்ருக் செய்யவும். ஸ்ருவமும் அவ்வாறே அந்த அளவுள்ளதாகவும் யோநி அமைப்பு உள்ளதாகவும் அமைக்க வேண்டும்.

67. ஒன்று, இரண்டு, மூன்றங்குல அளவு குறைந்ததாகவோ, நீளம் அமைக்கவும். ஆறங்குல அகலமாகவும், தண்டத்தின் அடியில் தாமரை போன்ற அமைப்பும் செய்ய வேண்டும்.

68. அதன் பாதிஅளவான மூன்றங்குலம் கண்டபாகமாகவும் முறைப்படி மெலிந்ததாக அமைக்கவும். கோபுரம் போன்ற அமைப்புள்ளதாக நெய் எடுக்கும் ஸ்தானம் நுனியிலுள்ளதாக அமைக்க வேண்டும்.

69. ஸ்ருவத்தின் பின்புறம் இரண்டு கும்பம் போல் அமைப்புள்ளதாகவும், முன்பக்கம் பதினாறு உளுந்து முழுகும் அளவுள்ளதாக ஆழ அளவும் உள்ளதாக அமைக்கவும். புதிதாக அமைத்து செய்வது உத்தமம், கிடைக்காவிடில் பழமையானதை கிரஹிக்கவும் (எடுத்துக்கொள்)

70. அந்த திரவ்யமதிப்பிற்குள்ளான (பொருளுக்குள்ள) பணத்துகையை கொடுத்து பழமையான ஸ்ருக், ஸ்ருவத்தை கிரஹிக்கவும். குருவின் அனுமதி பெற்று அந்த திரவ்யத்தை உபயோகிக்க வேண்டும்.

71. பழமையான கரணங்களை (உதவிப் பொருள்களை) உபயோகித்தால் ஆயிரம் ஆவ்ருத்தி அகோர மந்திர ஜபம் செய்யவும். எந்த சாஸ்திரத்தினால் பரமேஸ்வரனுக்கு பூஜாக்ரியைகள் நடைபெறுகிறதோ

72. அங்கு அந்த சாஸ்திர ஸம்பந்தப்பட்ட கார்ய உபகரணங்களை கிரஹிக்கவும். உத்ஸவம் முதலிய கர்மாக்களில் கூறப்படாததை வேறு விதமாக கிரஹிக்க வேண்டும்.

73. அஸ்திரதேவர், உற்சவபிம்பம், தேவனின் உபகரணத்ரவ்யங்கள், அந்த ஆலயத்தைச் சேர்ந்ததாக கிரஹிப்பது உத்தமமாகும். வேறு ஆலயத்தில் உள்ளதை எடுத்துக் கொள்ளக்கூடாது.

74. ஆயாதி முதலிய அளவுகளால் அசுபமானதாக லிங்கம் முதலானவைகளின் திரவ்யங்கள் விருத்தமானதாக (மாறுபட்டதாக) ஆகும். அந்த லிங்காநுகூலமாக பிம்பம் முதலியவை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தால்

75. அந்த பிம்பத்தினால் உத்ஸவ கார்யங்கள் செய்யலாம். ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு கரணங்கள் எடுத்துச் செல்வதற்காக சுத்தியை அனுஷ்டிக்க வேண்டும்.

76. ஸமித்து, நெய், அன்னம் இவைகளால் ஆயிரம் (முறை) ஆவ்ருத்தி சாந்தி ஹோமம் செய்யவும். குறைந்த மாத்ரை அளவுள்ள (ஹ்ரஸ்வப்ராஸாத) மூலமந்திரத்தினால் அதிகமான பூஜைகளுடன் செய்ய வேண்டும்.

77. பாலுள்ள ஜாதிமரங்களால் அழகுடையதாக தோரணங்கள் அமைக்கவும். ஐந்து, ஆறு, ஏழு முழ அளவுள்ளதாக அதம (கடைநிலை) தோரணங்களின் நீளமாகும்.

78. முப்பத்திரண்டங்குல நுனியுள்ளதாக மற்றவைகளை அமைக்கவும். அவைகளில் ஒருமுழத்திற்கு மேற்பட்டதாக அந்த வ்ருத்தியளவின் பாதியாலும் அழகானதாக அமைக்க வேண்டும்.

79. இரண்டு சாகைகளின் நடுபாகம் சமமான உயரமாகவோ, குறைவான உயரமாகவோ அமைக்கவும். சூலபாகம் எட்டங்குலத்தினால் மற்றவைகள் பதினாறங்குலத்தினால் செய்யவேண்டும்.

80. இவ்வாறு ஒன்று முதல் நான்கு முழம் வரையுள்ள க்ஷúத்ரமயமான தோரணத்தில் நுனியின் அரைபாக அளவிலோ யாகாதி கார்யங்களில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கரணலக்ஷண விதியாகிய எழுபத்தியிரண்டாவது படலமாகும்.
படலம் 71: ரத ஸ்தாபன முறை

71வது படலத்தில் ரதஸ்தாபன முறை கூறப்படுகிறது. முதலில் அமைக்கும் முறையை முன்னிட்டு தேர் இவைகளின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு தேரும் சக்கர அமைப்புகளால் பலவிதமாக கூறப்படுகிறது. அதில் மூன்று சக்கரம் முதல் 9 சக்கரம் வரையிலான ஏழு ரத பேதங்கள் கூறப்படுகின்றன. இரண்டு சக்கரம் உடையது. சகடம் என்று கூறி ரத பேதமான சகட விஷயம் கூறப்படுகிறது. பிறகு ரதவிஷயத்தில் உள் அமைப்பு, வெளி அமைப்பு என்ற இவைகளில் நிர்மாண விதியும் அவை சேர்க்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு வெளி அமைப்புகளின் நிரூபண விஷயத்தில் பாரம், அ÷க்ஷõத்தரம், சிகை, விஷ்டை, அக்ஷம், சக்கரம், உபபீடம் என்று உருப்புகள் கூறப்பட்டுள்ளன. வெளி அமைப்பு நிரூபணத்தில் உபபீடத்திற்கு மேல் அதிஷ்டானம் அமைக்கவும் அதிஷ்டானத்திற்கு மேல் பாதவர்க்கம், பாதவர்க்கத்திற்கு மேல் பிரத்யரவர்க்கம் செய்யவும் என கூறப்படுகிறது. இவைகளை அமைக்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு இந்த முறைப்படி அமைக்கப்பட்டது முதல் தளமாகும். இந்த முதல் தளத்துடன் கூடியது ஏகதளரதம் என்றும் ஒரு தளத்தை உடைய தேரை அமைக்கும் முறை. பிறகு இரண்டுதளம் உடைய தேர் இருக்கிறதா இல்லையா என சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் இரண்டுதளம், மூன்று தளம் உடைய ரதங்களை செய்யும் விஷயத்தில் அமைக்கும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அனேக தளத்தை உடைய தேர் அமைக்கும் விஷயத்தில் செய்யவேண்டிய விசேஷ அமைப்பு நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு தேர் அமைக்கும் முறை கூறி அந்த விஷயத்தில் சுபம் ஆயாதி என்ற கணக்கிடும் முறை வர்ணிக்கப்படுகிறது. முடிவில் இங்கு சகடை, பல்லக்கு முதலியவைகளில் சுபத்திலும் சுபஆயாதி அளவு முறை சம்மதம் என அறிவிக்கப்படுகிறது. பிறகு ரதத்தை ஸ்தாபனம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. அதில் சில்பியை திருப்தி செய்வது முறையாக பிரோக்ஷணம் முதலான சம்ஸ்காரங்கள் கூறப்படுகின்றன. பிறகு ரக்ஷõ பந்தன முறை கூறப்படுகிறது. பிறகு ரத்தின் உருவமானது சக்ரம் முதலான இடங்களில் பூஜிக்கவேண்டிய சூர்யன் முதலான தேவதைகளின் நிரூபணம், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், இவர்கள் ரதத்தின் அதிபர்கள் சிகரத்தின் அதிபதி சதாசிவன், ஸ்தூபிநாயகன் சிவன், தாமரை மொட்டுக்களின் அதிபன் அனந்தன் பிறகு, ரதத்தின் முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து ஸ்தண்டிலத்தில், கும்பஸ்தாபன முறை கூறப்படுகிறது.

அதில் 9 கும்பங்களை ஸ்தாபித்து மத்ய கும்பத்தில் சிவனையும், கிழக்கில் சூர்யனையும், ஆக்னேயதிக்கில் சந்திரனையும் தெற்கில் மஹாவிஷ்ணுவையும், நிருதியில் ஆதாரசக்தியையும் மேற்கில் விருஷபரையும் வாயு திக்கில் அனந்தரையும், வடக்கு திக்கில் தர்மாதிகளையும் ஈசான கும்பத்தில் சேஷனையும் கும்பமூர்த்தித் தன்மையாக பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஹோம விதி நிரூபிக்கப்படுகிறது. அங்கு ஸ்தாபிக்கப்பட்ட கடங்களுக்கு தேரை சுற்றிலுமோ 9 அல்லது 5 குண்டமோ அல்லது கிழக்கு திக்கில் 1 குண்டமோ அல்லது எல்லா இடத்திலும் ஸ்தண்டிலமோ அமைத்து குண்ட அக்னி ஸம்ஸ்கார முறையாக ஹோமம் செய்யும் முறை கூறப்படுகிறது. இங்கு 9,5,1 என்ற குண்டங்களை அனுசரித்து ஹோமம் செய்யும் முறையில் விசேஷம் கூறப்படுகிறது. இவ்வாறாக அதிவாச விதியில் செய்முறைகள் விளக்கப்பட்டது. பிறகு இரண்டாம் நாள் காலையில் நல்ல முகூர்த்த காலத்தில் மந்திரந்நியாச பூர்வமாக அந்தந்த கும்பத்தில் உள்ள ஜலங்களால் அந்தந்த பிரதேசத்தில் சம்ப்ரோக்ஷிக்கவும் என்று ரத சம்ப்ரோக்ஷண விதி சொல்லப்பட்டது. முடிவில் யார் இவ்வாறாக ரதத்தை தயார் செய்து சம்ப்ரோக்ஷணம் செய்கிறானோ அந்த மனிதன் இந்த லோகத்தில் தனவானாகவும், ஸ்ரீமானாகவும், விருப்பப்பட்ட பயனையும் அடைகிறான் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு ரதத்தை நன்கு தயாரித்து வெள்ளோட்டம் என்கிற ரதயாத்திரை செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக ரதஸ்தாபனத்தில் செய்முறை விளக்கம் கூறப்பட்டுள்ளது. பிறகு பல்லக்கானது பைடீ, சேகரீ, மண்டீ, என மூன்று விதமாக ஆகும் என கூறி அந்த மூன்று விதங்களின் செய்முறை விளக்கம் அதற்கு உபயோகமான விருக்ஷங்கள் நிரூபிக்கப்படுகின்றன. சிபிகாப்ரோக்ஷணமானது. சிம்மாசன பிரதிஷ்டா விதியில் கூறியுள்ளபடி செய்யவும் என அறிவிக்கப்படுகிறது. பிறகு கட்டில், மஞ்சம், அமைக்கும் முறை அதை செய்வதற்கு உபயோக மான திரவ்யங்கள் விளக்கப்படுகின்றன. இவ்வாறு சிறிய மஞ்சம் கட்டில் செய்யும் முறையும், விளக்கப்படுகிறது. இவ்வாறாக 71வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. லக்ஷணத்துடன் ரத பிரதிஷ்டையைக் கூறுகிறேன். சக்கரத்தின் கணக்கை கொண்டு ரதம் பலவிதமாக சொல்லப்படுகிறது.

2. மூன்று சக்கரம், நான்கு சக்கரம், ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என பலவகையிலும் ஆகும். ஆனால் இரண்டு சக்கரமுள்ளது சகடம் என்றும் சொல்லப்படும்.

3. சக்ரத்தின் மேலுள்ள பலகை அமைப்பின் அகலம் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது முழம் உள்ளதாக இருக்கும். அதன் நீளமும் இப்பொழுது சொல்லப்படுகிறது.

4. அச்சின் மேல்பாகமாக கூறப்பட்டுள்ளது. தேரின் மேல்பாகம் கூறப்படுகிறது. படகு போன்று வளைவான அமைப்பாக அமைக்கவும். தேரின் கீழ் விரிப்பு நீளம்போல் கனமாக உள்ளதாகவும்

5. தேரின்கீழ் விரிப்பின் வெளி அகல அளவின் அரைபாக அளவு நீளமோ கால்பாக அதிகமோ, கால்பாக குறைந்ததாகவோ அதற்கிடைப்பட்டதான ஆறு அளவு உடையதாக

6. தேரின் கீழ் விரிப்பு பாகத்தின் ஆதாரத்திற்கு கீழாக அச்சின் மேல் பாகம் அமைக்கவும். எங்கெங்கு பாரத்தை உடைய அச்சுக்கும் சேர்க்கை உள்ளது என்பது இப்பொழுது சொல்லப்படுகிறது.

7. இரும்பு பட்டைகளாலும் முளைகளாலும், மிகப்பெரிய முனையுள்ள ஆணிகளாலும் எப்படி கட்டினால் அது வலுவாக இருக்குமோ அப்படி மிக வலுவாக கட்ட வேண்டும்.

8. அச்சைக் காப்பதற்காக நடுபக்கம் இவைகளில் அவைகளின் நடுவிலுள்ள இரு பக்கங்களில் அவைகளின் கனத்திற்கு ஸமமாக பலவித சிகைகளாக உடையதாக செய்தல் வேண்டும்.

9. அச்சுவரை தொங்குகிறதாக இரும்பு பட்டையால் நன்கு கனமாக உள்ளதாக அமைத்தல் வேண்டும். ஒவ்வொரு சக்ரத்திற்கும், ஸமமாகவோ, ஸமமில்லாமலோ அச்சாணி அமைத்தல் வேண்டும்.

10. மேல் நோக்கிய தலைபாகத்தை விட்டு பூமியை நோக்கி கீழே உள்ளதாக சிறிது வெட்டப்பட்டதாகவும் அச்சின் மேல்பாகத்தில் நுழைவதற்காகவும் அல்லது மேல் பாகத்தையோ செய்ய வேண்டும்.

11. எல்லா அச்சுகளிலும் மேல் பாகமாக இருப்பதற்காகவும் திவாரத்தில் நுழைப்பதற்காகவும் குறைக்கவும் தேரில் கீழ்பலகை அகலத்தை அறுபது பாகமாக பிரிக்க வேண்டும்.

12. அதற்கு ஸமமாகவோ அறுபதுக்கு ஐந்து பாகமாகவோ அதிகரிக்கவும். கால்பாகம், குறைந்த அளவின் இரண்டு மடங்கு நீளமுடைய அடிபாகமாக கூறப்பட்டுள்ளது.

13. அதன் நுனி, அடி பாகத்தின் பாதியை, எட்டு பாகமாக அதிகரிக்கவும். ஓர் பாகத்திலோ, முக்கால், அரை பாகத்தினாலோ, நீளத்தில் அமைக்கப்படவேண்டும்.

14. அதன் நுனியிலோ, அதை அடைந்ததாலோ, ஸமபத்ரம் என்ற அமைப்பை செய்யவும். அவைகளின் அளவு பாதத்திற்கு கூறப்பட்ட முறைப்படி செய்ய வேண்டும்.

15. பின்பாகமான பத்ர அமைப்பிலிருந்து அதிகமானதாக நுனிபாக பத்ரம் அமைக்கப்படவேண்டும், பத்ரத்தை பத்ரத்தின் நுனிகள் விருப்பப்பட்ட அளவுகளால்

16. பிரும்மாஸனத்தை செய்தோ, செய்யாமலோ இருக்கவும், பத்ரம், உபபத்ரம் இவைகளின் அளவு ஒன்று பட்டதாகவோ வேறுபாடான அதிகமாகவோ இருக்கலாம்.

17. தேரின் பத்ர, உபபத்ரங்களின் அளவு எவ்வாறு நன்கு சேர்க்கப்பட்டு இருக்கிறதோ அந்த எல்லா அளவும் தேர்கீழ்பரப்பு பலகைக்கு கனமாகும். கீழ்பரப்பு பலகையில் இடைவெளி அமைக்க கூடாது.

18. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு முழங்கை அளவு நீளமுள்ளதாகவும் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பாகம் அகலமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

19. அச்சுக்குமேல் பாகத்தில் இரண்டு முதல் ஒன்பது எண்ணிக்கை வரையிலாக பாரம் என்ற கீழ்விரிப்பு பாகமாகும். மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு பாகமாக அகலத்தில் அரைபாகமாக கொடுங்கை அமைப்புகளை

20. சேர்க்கவும், கம்பங்களின் நடுவில் பலகைகளுக்கு வேறு ஆஸனங்களை (விட்டங்களை) அமைக்கவும். கீழ் விரிப்பு அமைப்புகளில் நுனி, அடி, நடுவிலோ விருப்பப்பட்ட விட்டங்களை சேர்க்க வேண்டும்.

21. மேல் பாகத்தில் வெளியில் தெரியும்படி துவாரங்களை ஐந்து முடிச்சுக்களை உடையதாகவும், நான்கு பாகம் முதல் பதினெட்டு பாகம் வரையிலாக

22. அதிகமான விஸ்தாரத்தை செய்யவும், சக்ரத்தின் கடையாணி, இடைவெளி ஐந்து பாகத்திலிருந்து பாகம் அதிகமானதாக இருக்க வேண்டும்.

23. பந்துபாகம் வரையிலும் சக்ரத்தின் அச்சு கனமும் ஏதுண்டோ அதை வெளியில் தலைபாகம் தெரியும்படி கீழ் வெளிபரப்பு அச்சின் இடைவெளி இதற்கு சமமாகும்.

24. இவைகள் எல்லாம் அச்சின் நீளமாகும். அச்சு உருண்டையாகவோ சதுரமாகவோ இருக்கலாம்.

25. அகன்ற அமைப்பை உடைய நடுபாகத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ ஐந்து உருப்பு அமைப்பென்பதான கார்யங்களை மரத்தினாலும் இரும்பினாலும் செய்ய வேண்டும்.

26. எவ்வாறு பலமுள்ளதாகவும், அகலமாகவும் இருக்குமோ அவ்வாறே கனமுள்ளதாகவும் அமைக்கவும், சக்ரங்களுக்கு பிரமாணம் தேருக்கு வெளியிலும் பாரத்திற்கு இடைவெளியிலும் ஆகும்.

27. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறுபாக குறைந்தோ அதிகப்படுத்தியுமோ செய்து இரண்டு பாகத்திலிருந்து, எட்டு பாகம் வரை சக்ரங்களின் கனமாக கூறப்பட்டுள்ளது.

28. ஒன்று, இரண்டு, மூன்றங்குல மதிகமாக நாபி தேசத்தில் ஆகும் அவ்வாறே வெளிபாக சக்ரத்தின் வட்டமும் அவைகளின் நடுவில் கோடு போன்ற அமைப்பை

29. கீழும், மேலும், ஒன்று, இரண்டு, மூன்றம்சங்களால் மெலிந்ததாகவும், இருபத்திநான்கு முதல் எட்டு அதிகத்தால் அறுபத்திநான்கு வரை எண்ணிக்கையுள்ள அம்சங்களால் மெலிந்ததாகவும் அமைக்க வேண்டும்.

30. தேரோட்டுபவர் முருகன், அல்லது நந்திகேஸ்வரர் அல்லது பிரம்மா, அல்லது விஷ்ணு, இந்திரன் இப்படியும் இருக்கலாம்.

31. கீழ்விரிப்பு பலகையின் மேல் உபபீடம் அமைக்கவும். அதன் அளவு கூறப்படுகிறது. ஓர் பாகத்திலிருந்து இரண்டுமுழம் வரை ஓர்பாக அதிகரிப்பால்

32. பாரத்தின் உபான அமைப்பிலிருந்து வெளிக்கொணர்ந்து பாரத்தின் வெளியில் ஓர் அம்சத்திலிருந்து பாகத்தின் வெளி அமைப்பு அதிகரிப்பால் ஆறு பாகம் வரையிலோ

33. இருபத்தி ஒன்பது அம்சம் வரையிலோ பீட உயரத்தை பிரிக்கவும். மூன்று, இரண்டு, ஐந்து, ஒன்று, ஒன்பது, ஒன்று மூன்று என்ற அம்சங்களாலும்

34. மூன்றுபாக, ஒவ்வோர் பாகத்தினால், கீழிருந்து ஆரம்பித்து செய்யவும். உபாநம், பத்மம், கம்பம், கர்ணம், கம்பம் இவைகளும்

35. பத்மம், வாஜநம், கம்பம் இவைகளை மேற்கூறிய அளவுகளால் கூறப்பட்டுள்ளது. கால்பாகம், அரைபாகம், மூன்றுபாகம், இரண்டு பாகத்தினாலோ

36. மூறு பாகத்தினாலோ நான்கு பாகங்களால் குறைவாகவோ, அதிகமாகவோ அமைக்கவும். இவைகளின் நுழைவு, வெளிக் கொணர்தலை அழகின் அதிகரிப்பால் செய்ய வேண்டும்.

37. ஆலயத்திற்கு சொல்லப்பட்ட உபபீடம் ஏதுண்டோ அதை இங்கு செய்யலாம். நாற்கோணங்களிலும் நடுவிலும், அவ்வாறே பத்ரம், உபபத்ரம் என்ற அமைப்புகளிலும்

38. பொம்மை போன்ற அமைப்புகளால் நாடக அமைப்புகளாலும் கழுத்து பாகத்தை அலங்கரிக்கவும். உபபீடத்தின் உயரளவிலாவது உபபத்ரபீடம் செய்ய வேண்டும்.

39. உபபத்ர பீடத்திற்கு மேல் நன்கு கனமான பலகையால் மேலே மூடுவதை செய்யவும். பலகையின் பாரமத்தியில் பாதம் முதலியவைகளால் அலங்கரிக்க வேண்டும்.

40. பலகையின் நடுவிலிருந்து பாரம் என்ற தாமரை மொட்டு அமைப்புகளை காம்புடன் கூடியதாக செய்யவும். தண்டின் அளவு இரண்டு, ஏழு, மூன்று அங்குலத்திற்கு மேற்பட்டதாகவும்

41. நூறு அம்சம் வரையிலும் கூறப்பட்டுள்ளது. அதன் அடிபாகம் நான்கு பாதத்திலிருந்து எட்டம்சம் வரை கனத்தையுடையதாக வட்டவடிவமாகவோ, எண்கோண வடிவமாகவோ அமைக்கலாம்.

42. ஆறு, பன்னிரெண்டு பாகம் வரை நுனியில்லாமல் வளைந்ததாக செய்து கும்பம் போல் அழகுடன் கூடியதாகவோ இரண்டு கண்டிகையை அடிப்படையாகவோ

43. தாமரையை பலகையுடன் கூடியதாயும், அதற்குமேல் தாமரை மொட்டையும் செய்யவும். அதையும் நான்கம்சம் ஆரம்பித்து ஓர்பாக அதிகரிப்பால்

44. எட்டம்சத்துடன் கூடியதாய் அந்த விஸ்தார நடுவரையிலுமாக அதன் முக்கால் பாகம் அகலமுமோ, அதன் கடைசிக்கு ஸமமான அளவிலுமோ

45. மெலிந்த நுனியையுடையதாகவும், வட்ட வடிவமாகவும் எண்கோண வடிவமாகவும் விரிந்த வெளிப்பட்ட இதழை உடையதாகவும், வெளிப்பக்கத்தில் அலங்காரம் செய்ய வேண்டும்.

46. கீழ்விரிப்பு பலகையின் மேல் சிறிது வெளிப்பட்ட அமைப்பை உடைய வாஜநத்தை அமைக்கவும். விருப்பப்பட்ட பலஅமைப்புடன் மேலே வாஜனத்தின் இடைவெளியில்

47. அது வெளிக்கொணர்ந்ததாகவோ, கழுத்து பாகம் வரை உபபீடத்தை அமைக்கவும். இரண்டுவித மரங்களாலோ, ஓர் மரத்தினாலோ

48. அதற்கு சம்பந்தப்பட்டதாக செய்யவும், விருப்பப்படி அச்சுக்கு மேற்பட்ட தேசத்தில் பஞ்சக்ரஹி என்ற இரண்டு கட்டின் அமைப்பை அறிஞர்களால் செய்ய வேண்டும்.

49. விடுபட்ட கனமும் விஸ்தாரமும் அதன் சம்பந்தப்பட்ட வேறு அமைப்புகளையும் பத்ரத்தின் அடியிலும் நுனியிலும், ஸமபத்ரம் என்ற அமைப்பிலும் அவ்வாறே செய்ய வேண்டும்.

50. உட்பட்ட வாஜனத்தின் மேல் உபபீட களத்தின் முடிவு வரை உபபீடத்தின் முடிவில் பாதங்களை செய்யவேண்டும்.

51. அந்த பாதத்தின் மேல் இரண்டு பலகை செய்யவும். பஞ்சக்ராஹி என்ற அமைப்பை உடைய நன்கு சேர்க்கப்பட்ட இரண்டு விட்டங்களை செய்ய வேண்டும்.

52. பத்ரமென்ற அமைப்பின் நுனியிலும், நடுவிலும் மேற்கூறியபடி செய்யவும். உபபீடத்திற்கு மேல் அதிஷ்டானம் என்ற அமைப்பை செய்ய வேண்டும்.

53. அந்த அதிஷ்டானம் உபபீடத்திற்கு ஸமமாகவோ, அதன் அரை பாகமாகவோ, ஒன்றரை பங்காகவோ, அதன் நடுவில் ஆறுபாக அளவினாலோ எது பொருந்துமோ அதை ஏற்க வேண்டும்.

54. 28 பாகமாக, அதன் உயரமானது ஸமமாகும். பத்து, இரண்டு, ஒன்று, ஏழு, ஒன்று, ஒன்று, இரண்டு, ஒன்று, ஒன்று, இரண்டு

55. பத்மம், கர்ணம், பத்மம், குமுதம், பத்மம், வாஜனம், சதந்தத்தை கண்டத்தை கம்பத்தை, மஹாவாஜனத்தையும் செய்ய வேண்டும்.

56. உபபீடத்திற்கு கூறப்பட்டபடி கூடுதல் குறைத்தலை செய்ய வேண்டும். உள்ளடக்கமும் வெளிக்கொணர்தலும் முன்பு கூறியபடியே செய்ய வேண்டும்.

57. இந்த உபபத்ரம், பத்ரம் என்ற அமைப்பை உள்பக்கமாக அமைக்கவும். அதிஷ்டானத்திற்குமேல் பாதவர்கம் செய்தல் வேண்டும்.

58. அதிஷ்டானத்திற்கு ஸமமாகவோ இருமடங்காகவோ செய்ய வேண்டும். அதற்கு இடைபட்டு ஒன்பது அளவிலோ, பாதத்தின் எட்டில் ஓர் அம்சமாகவோ

59. பொம்மை போன்ற பாதங்களால் நாட்டிய அமைப்புகளாலும் பெரிய யாளி உருவங்களாலும், லிங்கம், பூதம், யானை போன்ற பாதங்களாலும் வர்க அமைப்பை எங்கும் அலங்கரிக்க வேண்டும்.

60. அதற்கு இடைவெளியில் திவாரமிட்டு ஆணி போன்றவைகளால் நன்கு செப்பனிடவும். பாதவர்கத்தின் மேல் விரிப்பு அமைக்கவும். அதன் அமைப்பும் முகப்பும் கூறப்படுகிறது.

61. மூன்று பாகம் முதல் ஒவ்வோர்பாக அதிகரிப்பால் ஒன்பது பாகம் வரை அலங்கரிப்பு கூறப்படுகிறது.

62. பாரத்தின் உச்சம் பதினாறு பாகத்தில் மூன்று, ஒன்று, இரண்டு, ஏழு இவைகளாலும் ஒன்று, ஒன்று, ஒன்று, அம்சங்களால் மேற்பட்ட வாஜநம்

63. நித்ரா, கபோதம், ஆலிங்கம், வாஜநம், பிரதிவாஜநம், பிரவேசம், நிர்மகம் என்ற பெயருள்ள குறிப்புகளை ஆலய அமைப்பு முறைப்படி செய்ய வேண்டும்.

64. இது முதல் தளத்திற்கு கூறப்பட்டுள்ளது. ஸமமான ஆரம்பத்தையுடைய பத்ரமானது ஆகும். பாதம் வரையிலுமோ, பத்மம்வரை அடியிலிருந்து குறைந்ததாகவோ

65. இரண்டு பக்கத்திலும், ஒன்று முதல் ஆறு பாகம் வரை நுழைவின்றியோ அமைப்புடையது உபபத்ரமாகும்.

66. ஓர் தளமுடைய தேர் அமைப்பு கூறப்பட்டு இரண்டு தளத்துடன் கூடியதாகவோ அமைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆறு முதல் முப்பது அம்சம் வரை அடிபாகம் வரை ஸமமாகவோ

67. விளிம்பின் உயரம் வரை இரண்டு தளத்தின், பாதம், கபோதம் இவைகளின் உயரமாகும். இந்த முறைப்படியே மூன்று தள தேரையும் அமைக்க வேண்டும்.

68. நல்ல மரத்தின் ஓர் அங்குல கனம் அல்லது வேண்டிய அளவு கனமுள்ள பலகைகளால் மேல் பாகத்தை வலுவாக மூடவேண்டும்.

69. பத்ர பீடத்தையும் உபபத்ர பீடத்தையும் இவ்விதமே செய்ய வேண்டும். இவ்வாறே போவதற்கும் வெளியில் வருவதற்கும் அமைக்க வேண்டும்.

70. போவதற்கும், வெளியில் வருவதற்கும் வழியில்லாது போனால் நல்ல கயிற்றையாவது வைக்க வேண்டும்.

71. பல தளங்கள் இருக்குமேயானால் அதில் விசேஷம், சொல்லப்படுகிறது. தேரில் ஏறுவதற்காக படிகட்டுபோல் அமைக்கவும்.

72. பத்ரபீட அமைப்பிற்கு கூறியபடி அகல நீளத்தை முன்பும், பின்பும் அமைக்கவும். பத்ர பீடத்திற்கு ஒவ்வொரு பக்கத்திலும் நுழைவு அமைப்பு இருக்க வேண்டும்.

73. அதன் அமைப்பு முறை படிக்கட்டை மேல் அமைக்கவும். உபபத்ர பீடமின்றியோ பத்ர பீடத்தை பாரம் என்ற விரிப்புத்தளம் வரையிலுமோ செய்ய வேண்டும்.

74. இவைகள் இல்லாமல் இருந்தாலும் உபபீடம் மட்டும், அமைத்து அதன் மேல் இறைவனை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

75. உபபீடமின்றி மசூரம் என்ற அமைப்பை மட்டுமோ செய்யவும். வெளியில் உள்ளபடி செய்வது கூறி உள்ளே செய்வது இங்கு கூறப்பட்டுள்ளது.

76. பாத வர்க்கத்தின் இடைவெளியில் கம்பத்தின் மேலாக, க்ஷúத்ர பாதங்களை அமைக்கவும். மேல்பாக கம்பத்தை கட்டப்பட்டதாக அமைக்கலாம்.

77. அதற்கு மேல் நுனியாக விளிப்பை பஞ்சக்ராஹி என்ற அமைப்பை கூடியதாகவோ, இல்லாமலோ அமைக்கவும் பலவித ஆஸன அமைப்புகளை ஒவ்வொன்றுக்கும் அமைக்க வேண்டும்.

78. மிகுந்த காந்தியை உடையதாயும், தராசின் முகஅமைப்பை அனுசரித்ததாயும் அதற்குமேல் ஜயந்தீ என்ற அமைப்புகளையும், அதற்குமேல் விரிப்பையும் அமைக்க வேண்டும்.

79. விருப்பப்பட்ட கனம், உயரத்திலிருந்தவாறு விஜியை அமைக்கவும். பலவித தாழ்பாள், பட்டிகை, பஞ்ச க்ராஹி என்ற அமைப்புகளால்

80. பெரிய ஆணிகளாலும், பெரிய தாழ்பாளாலும் உயர்ந்த கீல்களாலும் கூர்மையான வளைந்த பட்டைகளாலும் நன்கு கட்ட வேண்டும்.

81. இது ரங்கம் என்ற அமைப்பை கூறியுள்ளது, தோரணத்துடன் கூடியோ, தோரணமின்றியோ பாதங்களுடன் சேர்ந்துள்ளதோ தேர் எனப்படுகிறது. அதன் அளவு கூறப்பட்டுள்ளது.

82. நான்கு தளம் ஆரம்பித்து அரை தாள அளவாக அதிகரிக்கவும். மூன்றங்குலம் முதல் எட்டு அங்குலம் வரை காலின் கன அளவாகும்.

83. கால்பாக அங்குல அதிகரிப்பால் மூன்றங்குலம் வரை பாதத்தின் அகலம் கூறப்பட்டு ஆலயம் போன்ற பாதத்தின் அளவு கூறப்படுகிறது.

84. நுனியிலும் அடியிலும் சிகையுடன் கூடியதாயும், கும்பம் முதலான அமைப்புகளுடன் கூடியதாய் பாதங்களை அமைக்கவும். பலவித கூர்மையான அமைப்புகளை பலகைகளில் அமைக்க வேண்டும்.

85. தாள அளவிற்கு கீழிருக்கும் விட்டங்களால் பாதத்தின் அடிபாகத்தை கட்ட வேண்டும். அவ்வாறே இரும்பு கம்பிகளால் தாங்கும்படி நன்கு இறுக்கமாக கட்ட வேண்டும்.

86. பாதத்திற்கு மேல் விரிப்பை அமைக்கவும். கொடுங்கை அமைப்பதற்கு உரியதாகவும் அந்த விரிப்பு சிகை போன்ற அமைப்பினால் கொடுங்கை என்ற அமைப்பை உடையதாயும்

87. தங்கம், வெள்ளி, ஆகிய தகடினாலும், தாமிரங்களால் பலகைகளாலும் மற்ற இடங்களை பிரகாசிக்கின்ற ஸ்தூபியுடன் கூடியதாக மூட வேண்டும்.

88. சுபம், ஆயாதி, என்று கணக்களவுடன் கூடியதாக ரதம் கூறப்பட்டது. அந்த ரதம், அகல, நீளத்தால் சிறு குறிப்புடன் கூறப்படுகிறது.

89. இரண்டு ஸகள பிம்பமூர்த்திக்கும் நீள அகலத்திலோ இரண்டு, மூன்று நான்கு அளவுகளால் குறைத்தோ, கூட்டியோ செய்யவேண்டும்.

90. ஏழு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய அளவுகளால் நீளத்தையும், அகலத்தையும் மூன்று, பதினைந்து அளவாக அமைக்கவும். முற்பது முழம் இந்த ரதத்தில் கூறப்பட்டுள்ளது.

91. சட்டத்தேர் பல்லக்கு முதலியவைகளிலும் சுபாசுபம் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த பிரதிஷ்டை சொல்லப்படுகிறது.

92. ரதசில்பியை அனுப்பிவிட்டு சுத்தமான ஜலத்தால் ரதத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். கோஜலம், கோமயம், தர்பை தீர்த்தம் இவைகளாலும் சுத்தம் செய்ய வேண்டும்.

93. பஞ்ச கவ்யத்தால் பிரோக்ஷித்து புண்யாக தீர்த்தத்தாலும், அஸ்த்ரமந்ர தீர்த்தத்தாலும் புரோக்ஷித்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

94. தாமரை மொட்டு போன்ற இடத்தில் ரக்ஷõபந்தனம், ஹ்ருதயமந் திரத்தால் செய்ய வேண்டும். வஸ்த்ரம் ஸமர்பித்து ஆலயத்திற்குச் சொன்னவாறு தத்வ தத்வேஸ்வரர்களோடு கூடவும்,

95. மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களோடு கூடவும், தெற்கு வடக்கிலுள்ள சக்ரத்தில் சூர்ய, சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.

96. அச்சில் விஷ்ணுவையும் கீழ் விரிப்பு பலகையில் ஆதார சக்தியையும், உபபீடத்தில் வ்ருஷபத்தையும் ஆதாரத்தில் அனந்தனையும் பூஜிக்க வேண்டும்.

97. தர்மாதிகளையும் அதர்மாதிகளையும் பாதத்தில் பூஜித்து அதற்கு மேல் அதச்சனம் ஊர்த்வச்சத்தையும் இவைகளை பூஜிக்க வேண்டும்.

98. விரிப்பு பலகையில் மேலும் கீழும் பத்மகர்ணிகையையும் பூஜித்து நவ சக்திகளையும் பூஜித்து சிவாஸனத்தை கல்பிக்க வேண்டும்.

99. பிரும்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன் இவர்கள் ரதத்தின் அதிபர்கள், சிகரத்தில் ஸதா சிவபெருமானும், ஸ்தூபியில் சிவபெருமானும் நாயகராவார்.

100. தாமரை, மொட்டுகளில் அனந்தன் ஆலய அமைப்பினால் வ்யாப்த்தமாக அறியவும். அதில் நூல் வஸ்திரம், கூர்ச்சம் இவைகளோடு கூடிய

101. தங்கம், கூர்ச்சம், ஒன்பது கும்பங்களை வைத்து நடுகும்பத்தில் சிவபெருமானையும் கிழக்கில் உள்ள கும்பத்தில் சூர்யனையும், தென்கிழக்கில் சந்திரனையும்

102. தெற்கில் விஷ்ணுவையும், வடமேற்கில் உள்ள கும்பத்தில் சக்தியையும், மேற்கில் வ்ருஷபத்தையும் வடமேற்கில் உள்ள கும்பத்தில் அனந்தரையும் பூஜிக்க வேண்டும்.

103. தர்மாதிகளை வடக்கில் உள்ள கும்பத்திலும், ஈசான கும்பத்திலும் சேஷனையும் சந்தன, புஷ்பங்களாலும், பூஜித்து ஹோம கர்மாவையும் செய்ய வேண்டும்.

104. நிறுவப்பட்ட கும்பங்களை சுற்றியோ அல்லது இரதத்தின் நான்கு பக்கங்களிலோ ஒன்பது குண்டங்களையோ ஐந்து குண்டங்களையோ அல்லது கிழக்கில் ஒரு குண்டத்தையே அமைக்க வேண்டும்.

105. குண்டஸம்ஸ்காரத்தையும் செய்து, பிரதானத்தில் ஸாங்கமாக சிவபெருமானை நூற்றுக்கணக்கான ஹோமத்தால் சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

106. அந்தந்த திக்குகளில் உள்ள குண்டங்களில் சூர்யன் முதலியவர்களையும் ஐந்து குண்டமாக இருக்குமேயானால் ஒவ்வொரு குண்டத்திலும் இரண்டிரண்டு தேவதைகளையும் பூஜிக்க வேண்டும். ஒரே குண்டமாக இருக்குமேயானால் எல்லா தேவதைகளையும் பூஜிக்கவும். (சூர்யன், சந்திரன், விஷ்ணு - ஆதாரசக்தி, வ்ருஷபன், ஆனந்தன், தர்மாதிகள், அதர்மாதிகள், சேஷன், சிவபெருமான்.

107. ஸமித்து, நெய், அன்னம், பொறி, எள், இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். தத்வ தத்வேஸ்வரர்களையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும்.

108. பலா, அத்தி, அரசு, ஆல், இவைகளை கிழக்கு முதலிய திக் குண்டங்களுக்கு உகந்தது. வன்னி, நாயுறுவி, பில்வம், இச்சி இவைகளை தென் கிழக்கு முதலிய குண்டங்களில் ஹோமம் செய்ய வேண்டும்.

109. பிரதானத்திற்கு பலாச சமித்து சிறந்ததாகும் என சொல்லப்படுகிறது. பூர்ணாஹுதியையும் கொடுத்து, இரண்டாம் நாளில் கும்ப, அக்னி, இவைகளை பூஜித்து

110. நல்ல முஹுர்த்த வேளை வந்தபொழுது ஆசார்யன் மந்திரம் நியாஸம் செய்து ஜ்யோதிஷர் சில்பி இவர்களுடன் கூடினவராய்

111. அந்தந்த கும்பங்களில் உள்ள தீர்த்தங்களால் அந்தந்த இடங்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இங்கு சொல்லாதவை பொதுவான ஸ்தாபன கர்மாவில் சொல்லப்பட்டபடி செய்யவேண்டும்.

112. எவன் இவ்வாறு ரதத்தை அமைத்து பிரதிஷ்டை செய்கிறானோ அவன் இங்கேயே செல்வந்தனாகவும் லக்ஷ்மீகடாக்ஷம் பொருந்தியவனாகவும் ஆகி விரும்பிய பயனையும் அடைவான்.

113. ரதத்தை இவ்வாறு தயார்செய்து தேரோட்டத்தையும் செய்ய வேண்டும். பைடீ, சேகரீ, மண்டீ, என தேர் மூன்று வகைப்படும்.

114. பதினைந்து அங்குலம், முதற்கொண்டு ஐந்தைந்து அங்குலமாக விருத்தி செய்து, தொண்ணூற்றாவது அங்குலம் வரை பல்லக்கின் விஸ்தாரம் கூறப்பட்டுள்ளது.

115. இருபத்தியோரு அங்குலம் முதல் ஒரு மாத்ரையளவு அதிகரிப்பால் நூற்றி தொண்ணூற்றி ஒன்பது அங்குலம் நீளம் அமைக்க வேண்டும்.

116. யானை கண் விழி அமைப்பை வெளி, நடு உள்பக்கம், உதாரணமாக கூறப்பட்டுள்ளது. தேவர்களுக்கும், அரசர்களுக்கும் பாதத்திற்கு வெளிப்பட்டதாக அமைக்க விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

117. பாத நடுவில் பொதுவான பரப்பளவு முறையை அறியவும், இவ்வாறு யவை அளவால் யானைக் கண் அமைப்பை செய்வது நடுநிலையாக கூறப்பட்டுள்ளது.

118. கால் பாகமளவு யானைக் கண் அமைப்பை உள்ளிட்டதாக செய்வதை எல்லாவற்றிற்கும் கூறப்பட்டுள்ளது. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது ஆகிய மாத்ரை அளவுகளால் அகலத்தை செய்ய வேண்டும்.

119. கனத்தின் முடிவில் பதினான்கு விதஸ்தி அளவாக கூறப்பட்டுள்ளது. விதஸ்தி என்பது நீட்டப்பட்ட கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரையுள்ள அளவாலோ ஆயாமம் என்ற அளவுகளை அறிய வேண்டும்.

120. பரப்பளவினால் நீளத்திலிருந்து அல்லது எல்லா அமைப்பிலிருந்து அளவை கிரஹிக்கவேண்டும். எட்டு. மூன்று, எட்டு, பன்னிரெண்டு, பதினான்கு என்ற அமைப்புகளால் அமைக்கவேண்டும்.

121. எட்டு இருபத்தியேழு, குறைந்ததாகவோ முப்பது, ஏழு இவைகளால் வரிசையாக ஆயம் முதலிய அமைப்புகளை அறியவேண்டும்.

122. ஆயம், வ்யயம், யோநி, நக்ஷத்ரம், வாரம் இவைகளை விஸ்தாரத்திலோ ஆயாமம் என்ற அளவினால் வ்யயம் (கழிப்பதை) செய்ய வேண்டும்.

123. ஆயாமென்ற அளவினால் யோநியையும் அந்த அளவினால் நக்ஷத்ர அமைப்பினால் கூறப்பட்டுள்ளது. ஆயாயமென்ற அளவால் விஸ்தாரத்தை சேர்த்து திதிவார அமைப்பை உயரமாக செய்ய வேண்டும்.

124. மூன்று மாத்திரை, ஒரு மாத்திரை அளவுகளால் அதன் பிரிவுகளால் இரண்டாக கூறப்பட்டுள்ளது. ஓர்முழ அளவு உயரத்தை அறியவும், அலங்காரம் கூறப்பட்டுகிறது.

125. மூன்று மாத்திரை முதல் கால்பாத மாத்திரை அதிகரிப்பால் பதினெட்டங்குலம் வரை யானை கண் அமைப்பின் அகலமாகும்.

126. ஐந்து மாத்ரை ஆரம்பித்து கால்மாத்ரை அதிகரிப்பால் ஏழு மாத்ரை வரை யானைக்கண் அமைப்புகளை அதிகரிக்கவும் செய்யலாம்.

127. ஐந்து மாத்ரை முதல் கால்பாக மாத்ரை முதலான ஏழு மாத்ரை வரை ஓர்முழம் அளவு வட்ட வடிவமாகவோ, நாற்கோணமாகவோ அமைக்க வேண்டும்.

128. நீள்வட்டவடிவமாகவோ, செவ்வகபாகமாகவோ கைஅமைப்பாக கூறப்பட்டுள்ளது. பதினெட்டம்சத்திலிருந்து அம்ச வ்ருத்தியால் தன்பரப்பால் ஆறம்சம்வரை

129. இஷ்டிகை இரண்டுகை பாகங்களாலும் கர்ணம் கூறப்படுகிறது. ஆனால் கை அமைப்பால் அதன் பிரிப்பின் எட்டு அம்சம் வரையக விசேஷம் கூறப்பட்டுள்ளது.

130. கால் மாத்ரையிலிருந்து, கால்மாத்ரை அதிகரிப்பால் நான்கு மாத்ரைவரை பட்டிகையின் கனமும், அகலமும் முறைப்படி அமைக்க வேண்டும்.

131. ஸர்பம், சிங்கம், யானை, குதிரை, மனிதர்கள், வித்யாதரர்களாலும் பொம்மை போன்ற அமைப்பு பாதங்களாலும் பட்டைகளின்றி வாஜனம் என்ற அமைப்புகளாலும்

132. பெரிய கம்பங்களாலும், கொடிகளாலும் பெரிய ஆணிகளாலும், மூளையில் கட்டப்பட்டவைகளால் நல்ல அம்சங்கள் புறா தங்குமிடம் பிரதிவாஜனங்களாலும் அழகுள்ளதாக செய்ய வேண்டும்.

133. மீன்களாலும் வலயங்களாலும், சிறிய குண்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கம், தாம்ரம், தந்தம், மரவேலைப்பாடுகளால்

134. அழகான பல்லக்கு செய்ய வேண்டும். இது பைடீ எனப்படும். சிகரத்தோடு கூடியது சேகரீ எனப்படும்.

135. பாதங்களோடு கூடிய மஞ்சங்களால் மண்டபாகரமாக உள்ளது மௌண்டீ எனப்படும். பெருவாகை, கருப்புநிறமுள்ள மரம் (கருங்காலி) பலா, வேம்பு, அர்ஜூனம்

136. இலுப்பை, கருங்காலி மற்றும் பாலுள்ள மரங்கள் பல்லக்கு அமைப்பிற்கு கூறப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் உயர்ந்த மரங்களால் லக்ஷணங்களோடு பல்லக்கு தயாரிக்க வேண்டும்.

137. இதற்கும் ஸிம்மாஸனத்தைப்போல் புரோக்ஷணம் செய்ய வேண்டும். (பர்யங்க அளவுடன்) பாதத்துடன் பல்லக்கின் விஸ்தாரத்தை சொல்லப் போகிறேன்.

138. மூன்று மடங்கு இடைவெளி உள்ளதாக விஸ்தாரமும், நான்கு பாதங்களுடன் கூடியதாகவும், பாதத்தின் அளவும் கூறப்பட்டுள்ளது.

139. மூன்றங்குலத்திலிருந்து மூன்றங்குல அதிகரிப்பால் ஐம்பதுமுழம் வரை பாதத்தின் நீளம் கூறப்பட்டு, இரண்டங்குலத்தால் பாத வ்ருத்தியுடன் கூறப்பட்டுள்ளது.

140. பாதத்தின் அடியில் பதினைந்து மாத்திரை அகலமாகும். பலவித கெண்டி அமைப்புடனும் பலவித தாமரை, பலகோடு அமைப்புகளோடும்

141. பல கர்ணபாகங்களுடனும் மூன்று மடங்கு இருப்பினால் கூடியதும் அதன் பக்கங்களில் யானைக் கண் போன்ற அமைப்புகளை உடைய பலகையையோ செய்ய வேண்டும்.

142. அதிகமான பலகையையோ, நன்கு அழகாகவும் பலமாகவும் இருக்கும்படி அமைக்கவும். பலவித பட்டைகளும் பலவித கம்பங்களையும் உடையதாக வேண்டும்.

143. பலவித ஆப்புகளையும் பலவித உயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டும், உலோகத்தாலோ தந்தத்தாலோ, மரத்தினாலோ எல்லா திரவ்யங்கள் கலந்ததாகவோ

144. பல்லக்கை ஆயம் என்ற கணக்கு வகைகளால் சேர்ந்ததாக செய்வது ஐச்வர்யத்தை கொடுக்கும். இது பர்யங்கம் (விரிப்பு) என்ற அமைப்பை உடையதாகும். பாலபர்யங்கமும் அவ்வாறேயாகும்.

145. பல்லக்கைப்போல் நீட்டப்பட்ட கர்ண வேலைப்பாடின்றி கேடயத்தின் பாகத்துடன் கூடி ஓர்பட்டிகையோடு கூடியதும்.

146. காலின் அடியில் வேம்பு முதலிய மரங்களால் ஏற்படுத்தப்பட்ட சிறிய சக்கரத்தோடு கூடியது பாலபர்யங்கம் என்று பெயர்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தேர் முதலியவைகளின் அமைப்பு முறையாகிற எழுபத்தோராவது படலமாகும்.
படலம் 69: திரிசூல ஸ்தாபன விதி

69வது படலத்தில் திரிசூலஸ்தாபன விதி கூறப்படுகிறது. முதலாவதாக லக்ஷண முறைப்படி திரிசூலஸ்தாபனம் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு ஸ்வர்ணம், வெள்ளி, தாமிரம், இரும்பு இவைகளில் ஏதாவது ஒரு பொருளால் திரிசூலம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு திரிசூல லக்ஷணத்தை கூறிய பிறகு சூலத்திற்காக எந்த விருக்ஷங்கள் முன்பு சொல்லப்பட்டதோ அவைகள் இங்கு கிரஹிக்கப்படவேண்டும் என்று விருக்ஷங்களாலும் திரிசூலம் செய்யலாம் என விளக்கப்படுகிறது. கற்பகிரஹ அளவால் திரிசூலத்தின் அளவு குறிப்பிட்டு, வாயில் படியின் அளவினாலோ, தூண்களின் உயர அளவினாலோ செய்யப்படவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு கை அளவாலும் திரிசூலம் செய்யலாம் என அறிவிக்கப்படுகிறது. பிறகு திரிசூல விஷயத்தில் யவுகிகம், லவுகிகம், என்று இருவிதம் உண்டு என கூறி அதன் லக்ஷண அமைப்பு கூறப்படுகிறது. திரிசூலவிஷயத்தில் முதலில் மத்யபத்திரத்திற்கும் இருபக்கமும் உள்ள பத்திரத்திற்குமாக செய்முறை விளக்கப்படுகின்றன. பத்திரத்தின் அடிபாகத்தில் பாதமும், பாதத்தின் அடிபாகத்தில் பாலிகையும் அல்லது பெண், சிங்கம் போன்ற அமைப்பும் தண்டம் அமைக்கும் முறை இம்மாதிரியான திரிசூல உருப்பு செய்யும் முறைக் கூறப்படுகிறது. பிறகு மத்யபத்திரத்தின் மத்தியில் தாமரை பூ அமைக்கவும் அல்லது மத்யபத்திரத்தின் அடிபாகத்தில் அம்பாளுடனோ, அம்பாள் இல்லாததாகவோ விருஷபாரூட மூர்த்தியையோ அல்லது விருஷபருடனோ, விருஷபம் இல்லாததாகவோ வேறு மூர்த்தியை அமைக்கவும். அல்லது லோகேசர்களை அவர்களின் ஆயுத லக்ஷணபடியாகவாவது விருப்பப்பட்ட அளவிலாவது அமைக்கவும். மத்ய பத்ரவிஷயத்தில் தேவதையை பூஜிக்கும் முறைகூறி அல்லது பாலிகைகளின் ஆக்னேய கோணத்தில் அரசிலை போல் நான்கு அமைக்கவும் என கூறப்படுகிறது. இந்த அரசிலை அமைப்பு இல்லாமலும் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு பாலிகையின் மேல் நான்கு மூலையிலும் விருஷபத்தை அமைக்கவும் என கூறப்படுகிறது.  பிறகு கருங்கல், மண் இவைகளால் சூலம் செய்யும் விஷயத்தில் ஒரு சில விசேஷம் இருப்பதாக கூறி அந்த விசேஷம் விவரிக்கப்படுகிறது.

இவ்வாறு திரிசூல லக்ஷணம் கூறி திரிசூலத்தை ஆலய விருஷபத்தின் முன்பாகம் பின்பாகம் பலிபீடத்தின் முன் பாகமோ, ஸ்தாபிக்கவும் என கூறி திரிசூலத்தை பிரதிஷ்டை செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்டுள்ளபடி நல்ல, நக்ஷத்திர கிழமைகளோடு கூடிய காலத்தை பரீசிட்சித்து அங்குரார்பணம் செய்து திரிசூலத்தின் மேல் பாகம், கீழ் பாகம், தண்டம் இவைகளுடன் அஷ்டபந்தனத்தால் நன்கு சேர்க்கவும் ரத்னன் நியாசமும், நயனேன் மீலனமும் செய்யவேண்டாம் என கூறப்படுகிறது. அசலஸ்தாபனமாய் இருப்பின் ரத்னன்நியாசம் செய்யவும். பிறகு அந்த சூலத்தில் பிரதிமைகள் இருந்தால் அதற்கு நயனோன்மீலனம் செய்து, மண் இவைகளால் சுத்தி செய்து கிராமப் பிரதட்சிணம் செய்து ஜலாதிவாசம் செய்யவேண்டும் என ஜலாதிவாசம் வரையிலான கிரியைகள் கூறப்படுகின்றன. பிறகு முன்பு மாதிரியே யாக சாலை அமைத்து மண்டபம் குண்டம் வேதிகை அமைத்து அங்கு சில்பியை திருப்தி செய்வித்து பிராம்மண போஜனம் புண்யாக பிரோக்ஷணம், வாஸ்த்து ஹோமம் செய்து, வேதிகையில் ஸ்தண்டிலம் அமைத்து அண்டஜம் முதலான சயன திரவ்யங்களால் சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதி வாசத்திலிருந்து மண்டபத்திற்கு எடுத்து வந்து திரிசூலங்களை ஸ்நானம் செய்வித்து திரிசூலத்திற்கு பத்மம், மூன்று, பத்திரம் தேவபிம்பம், விருஷபம், இவர்களுக்கு ரக்ஷõபந்தனம் செய்வித்து அவைகளை சயனத்தில் கிழக்கே தலைவைத்து மேல் நோக்கிய முகம் உடையதாக சயனம் செய்விக்கவும். வெள்ளை சிவப்பு வஸ்திரங்களால், அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு பிம்பங்களை மூடவும் என சயனாதிவாச முறை விளக்கப்படுகிறது. பிறகு திரிசூலத்தின் சிரோதேசத்தில் வஸ்திரம், ஸ்வர்ணம் இவைகளை உடைய ஒரு கும்பம் ஸ்தாபித்து அதில் சிவாஸ்திரத்தை பூஜிக்கவும் என கூறி தியானத்திற்காக சிவாஸ்திரத்தின் ரூபலக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமி, அம்பாள் பிரதிமை இருந்தால் அப்பொழுது சிவகும்பம், வர்தனி கும்பம் ஸ்தாபிக்கவும் விருஷபம் இருந்தால் அதற்கும் கும்பம் ஸ்தாபிக்க வேண்டும்.

கும்பத்தை சுற்றி எட்டு கும்பங்கள் ஸ்தாபித்து அதில் வஜ்ராதிகளை ஸ்தாபிக்கவும், தத்வ தத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாசம் செய்யவும் திரிசூல விஷயத்தில் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்கள் கூறப்படுகின்றன. இவ்வாறு திரிசூலபத்ரத்தின் அங்கங்களில் ருத்ராதி தேவர்களை பூஜிக்கும் முறையும் கூறப்படுகின்றன. இவ்வாறு கும்ப அதிவாசமுறை நிரூபிக்கப்பட்டது. பிறகு திரவ்யங்களின் விபரங்களை கூறும் ஹோம முறை கூறப்படுகின்றது. கும்ப அதிவாச விதியில் கூறப்பட்ட ருத்திராதி தேவர்களின் பிரயோஜன்ம பிறகு கும்ப ஜலங்களால் திரி சூலத்தை அபிஷேகம் செய்யவும் என்று கும்பாபிஷேக முறை கூறப்படுகிறது. பிறகு ஸ்நபணமும் அதிகமாக நிவேதனமும் செய்யவேண்டும் சல பிம்பமாக இருப்பின் உத்ஸவம் செய்யவும் என கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டும். பிறகு திரிசூலத்தை ஸ்தாபனம் செய்தவனுக்கு பலன்கள் கூறப்படுகின்றன. இவ்வாறாக 69வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. திரிசூலம் என்ற அஸ்த்ர தேவரை அதன் அமைப்பு முறைப்படி கூறுகிறேன். தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கற்சிலை முதலிய திரவ்யங்களாலோ அமைக்கலாம்.

2. கர்பக்ருஹத்தின் ஒன்பதின் ஓர் பங்கிலும், ஒன்பது பாகத்தில் மூன்று பாகம் வரையிலும், பெரிய அளவில் ஓர் பாகமும் சூலங்களின் அளவாக கூறப்படுகிறது.

3. மேற்கூறிய அளவுகளை எட்டாக பிரித்தோ பலவகையான அளவுகளாலோ வாயிற்படி, தூண்களின் அளவு முறைப்படியோ அளவை அறியலாம்.

4. இரண்டு முழ அளவிலிருந்து நான்கு முழம் வரையிலுமோ, ஜாத்யம்சம் என்ற அளவை முன்பு போல் செய்தோ அமைக்கவும்.

5. முப்பதம்சம் முதல் நூறு அம்சம் வரை எந்த அளவு கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளவும். சுபம் என்ற அளவுகளின் நிச்சயத்திற்காக ஓர் பாக அளவாவது ஏற்றுக் கொள்ள வேண்டும்.

6. லவுகிகம், யவுகிகம் என்று சூலம் இருவகைப்படும். எஜமானன், அரசன் கிராமங்கள் இவைகளை அனுசரித்து செய்வது லவுகிகம் எனப்படும்.

7. ஆலயத்தின் ஜாதி, உயரம், அம்சம் இவைகளுடன் கூடியதும், ஈச்வரன், நக்ஷத்ரம் இவைகளை அனுசரித்தும் (11, 27 என்பதான அளவுடன் கூடியதும்) அங்குலம் முதலான அளவுகளால் நிர்மாணிக்கப்பட்டது என எது உண்டோ அது யவுகிக சூலம் எனப்படும்.

8. மற்றொரு லவுகிகம் வேறு ஆலயத்திலுள்ள பிம்பங்களை அனுசரித்தும் ஆகும். மற்றொரு யவுகிகம் வேறு நகரம் அவைகளினிடம் யஜமானனிவர்களை அனுசரித்தும் ஆகும்.

9. யவுகிகமானது வேறு இடத்தில் செய்யப்பட்டதாகவோ, பிம்பங்களில் அமைக்கப்பட்டதாகவோ இருக்கலாம். உயரத்தை பத்து பங்காக்கி ஒன்று, இரண்டு, மூன்று அளவுகளாலோ

10. அதன் நடுவில் எட்டில் ஓர்பங்காகவோ, நடுபத்ரத்தின் உயர அளவாகும். நான்கில் ஓர் பங்காகவோ, அதன் அளவை தனித்தனியாகச் செய்ய வேண்டும்.

11. கர்பக்ருஹ உயரத்தை முப்பது பங்காக்கி அதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்றும் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என்ற அம்சங்களால் நடுபத்ரத்தின் விஸ்தாரமாகும்.

12. பத்ர அளவை நாற்கோண ஸமமாக ஏற்று செய்யவும். பத்ரத்தின் அளவை இரண்டு பக்கத்திலும் தள்ளி செய்யவும்.

13. அதில் இரண்டு பக்கத்திலும் வட்ட வடிவமாக பத்ர அளவை செய்யவும். நடுவிலுள்ள பத்ரத்தின் உயரம் போன்றே இரண்டு பக்கத்திலுமுள்ள பத்ரத்தின் உயர அளவை செயற்பாலது.

14. அல்லது நடுபத்ரத்திலிருந்து நான்கு, ஐந்து ஆறம்ச அளவை குறைத்தோ, கூட்டியோ இரண்டு பக்க பத்ர அளவை செய்யலாம். நடுபத்ரத்திற்கு வெளியும், உள்ளும் நடுக்கோட்டை சேர்ந்ததாகவோ அமைக்க வேண்டும்.

15. மேலும், கீழும் மெலிந்ததான அமைப்புடையதாக பக்கத்திலுள்ள இரண்டு பத்ரங்களை அமைக்கவும். பத்ரத்தின் அடிபாகம் பலமுள்ளதாக இருப்பதற்கு அடிபாகத்தை அதிகரிக்க வேண்டும்.

16. பத்ரத்தின் கீழ் பாகத்தை அழகுபடுத்தி, பத்ரத்தின் நுனியை மெலிந்ததாகச் செய்யவும். நுனியில் பத்ர உயரத்தினால் பாதியோ, கால் பாகமாகவோ

17. அதனிரு பக்கத்திலுள்ள பத்ர நுனிகளுக்கு அதிகமாகவோ நடுபத்ரத்தின் நுனியை முன்போ போன்றோ விசேஷமாகவோ அமைக்க வேண்டும்.

18. அவ்வாறே இரண்டு பக்க பத்ரங்களின் அடிபாக இடைவெளியும் முன்போலவே ஆகும். பத்ரத்தின் உயரத்தை நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்ற பாகத்திலிருந்தும்

19. ஒன்பது அம்சத்தினால் பத்ரங்களின் கனம் ஆகும் எனக் கூறப்படுகிறது. அல்லது வேறு முறையாகவும், யவையின் பாதி அளவு முதல் நான்கில் ஒன்று பங்காக யவையளவின் அதிகரிப்பால்

20. அங்குல அளவு வரையிலாவது சூலத்தின் நடுப்பகுதியின் கனமாகும். நடுபத்ரத்தினுடைய நடுவிலிருந்து பக்கத்திலிருக்கும் பத்ர நடு அளவு குறைந்ததாக இருக்க வேண்டும்.

21. நடு பத்ரத்தினுடைய நுனி, நடு அடிபாகத்திலும் இரண்டு பக்கத்திலும் ஒன்று, இரண்டு, மூன்று யவை அளவுகளாலோ மொட்டு போன்ற அமைப்பையோ செய்ய வேண்டும்.

22. பத்ரத்தின் அகலத்தை மூன்று, ஐந்து பங்காக்கி இரண்டு, மூன்று பாகங்களால் அடியில் கால்பாகம் நீளமாகும். அதன்பாதி பக்கவாட்டிலுள்ள பக்கங்களின் அளவாகும்.

23. அதன் பாதிபாக அகலமோ, கால்பாக அகலமாகவோ கூறப்பட்டுள்ளது. நடுவிலுள்ள பாதத்தின் இரு மடங்கால் பக்கத்திலுள்ள பாதங்களின் அகலம் கூறப்பட்டுள்ளது.

24. பத்ரங்களின் பாத அடியில் சித்ரவேலைப்பாட்டால் அழகுபடுத்த வேண்டும். பத்ர உயரத்தின் அரையளவால் பத்ரத்தின் அடியில் பாலிகை போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

25. பதினொன்று அம்சத்தில் ஓர் அம்சம் குறைந்ததாகவோ, இரண்டு மூன்று அளவுகளால் அதிகமானதாகவோ பலகையின் பரப்பளவை செய்து அதை ஒன்பதாக பிரித்து ஒன்றாகவோ அரை பாகமாகவோ

26. கால் பாகத்திலோ, முக்கால் பாக அளவாகவோ கனமுள்ளதாக கீழ்பாகத்தில் இரண்டு தாமரை அமைப்பை செய்து ஓர் பாகத்தால் விருப்பப்பட்ட அம்சத்தால் கர்ண அளவை செய்யவும்.

27. பாலிகையின் பாதியளவால் கும்ப அமைப்பையும் உயரத்தை முக்கால் பாகத்தாலும் அமைக்கவும். உயரத்தின் பாதி அளவால் கழுத்தும் முன்போல் அமைக்க வேண்டும்.

28. கும்ப அளவின் முக்கால் பாக அளவாலோ அரைபாக அளவாலோ கும்பமுகத்தை அமைக்க வேண்டும். தண்டின் அளவு கும்பத்தின் அளவு போல அதை சரிபாதியாக பிரித்தல் வேண்டும்.

29. ஓர்பாக இடைவெளியுடனோ அதே அளவுள்ளதாகவோ (மாலையை) தாமரையை அமைக்க வேண்டும். மாலைக்கு கீழ் தண்டத்தை முறைப்படி அமைக்க வேண்டும்.

30. மேல்பாக முகத்தின் ஓர்பாகமோ முக்கால் பாகமோ தண்டத்தின் அளவாகும். உலோக தண்டமாயிருப்பின் மேற்கூறியதில் பாதியளவும் அழகாக இருக்கும்படி அமைக்க வேண்டும்.

31. தண்டத்தின் அடியில் தாமரையை நடுவில் உள்ள தாமரையை போல் அமைக்கவும். அதன் பாதியளவு இடைவெளியில் எட்டிலொரு பங்கும் ஒன்பது பங்காகவோ பிரித்து செய்யும் அளவு

32. அகலம் ஆகும். அதற்கு சமமாக அரை பங்கோ, முக்கால் பங்கே, கால் பாகமோ அதற்கும் இடைப்பட்ட அளவோ உயரமாகும். அந்த உயரத்தை பத்தாக பிரித்து

33. ஓர்பாகம் பட்டிகையும், மூன்றில் இரண்டோ, இரண்டு பங்கு அம்சங்களாகவோ தாமரையை, வட்டவடிவமாகவோ, சதுர வடிவமாகவோ, இரண்டும் கலந்ததாகவோ அமைக்க வேண்டும்.

34. தாமரையின் ஸம அளவால் அதன் மேல் பட்டிகை அமைக்கவும். நடுபத்ரத்தின் நடுவில் அதன் முக அமைப்பால் தாமரையை வரைய வேண்டும்.

35. அல்லது நடுப்பக்கத்தின் அடியில் விருஷப வாகனத்தை பத்ரத்தின் உயரத்தில் ஒன்பது பாகத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என பாகமுள்ளதாகச் செய்ய வேண்டும்.

36. தேவியுடன் கூடியதாகவோ வ்ருஷபத்துடனோ இல்லாமலோ வேறு தேவரையோ லோக பாலர்களையோ, தசாயுதங்களையோ விருப்ப அளவுப்படி அமைக்க

37. அல்லது பாலிகையில் தென்கிழக்கு கோணங்களில் அரசிலை போல் அமைக்கவும். சுற்றிலும் நான்கு மாலையையோ அல்லது மாலையின்றியோ அமைத்தல் வேண்டும்.

38. டங்கமுகத்துடனோ தண்டத்தின் நுனியை செய்ய வேண்டும். பாலிகையின் மேல் மூலைகளில் வ்ருஷபத்தையோ செய்ய வேண்டும்.

39. சிலையினாலோ மண் முதலியவை களாலான சூலத்தின் விசேஷம் கொஞ்சம் கூறப்படுகிறது. நடுப்பத்ரத்தின் ஸமமான அளவாலோ, முக்கால் பாகத்தாலோ பாதி அளவாகவோ

40. கால் பாகமோ, எட்டில் ஒரு பங்கு அளவாகவோ தண்டத்தின் அகல அளவு இருத்தல் வேண்டும். அகல அளவின் சமமான உயரமும் அவ்வாறே விஸ்தாரமுமோ தண்டத்திற்கு இருத்தல் வேண்டும்.

41. எவ்வாறு தண்டத்தின் தடிமனோ அவ்வாறே பத்ரங்களின் கனமும் ஆகும். பாதத்தை அலங்கரிப்பவைகளில் பத்ரத்தில் கீழேயோ அமைக்க வேண்டும்.

42. சதுரமான சிலா பாகத்தில் சூலவடிவத்தை எழுதலாம். அதன் மற்ற பாகத்தில் வ்ருஷபத்தையோ எழுதலாம்.

43. அல்லது தண்டத்தின் அளவால் ஜடையுடன் கூடிய புருஷனை முன்பக்கமாக அமைத்து பின்பாக தண்டத்தின் மேல் சூலத்தை அமைக்கவும்.

44. வ்ருஷபத்தின் முன்னாலோ, பின்னாலோ, பலிபீடத்தின் முன்னிலோ சூலத்தை திடமாக ஸ்தாபிக்க வேண்டும். அதன் பிரதிஷ்டை விதி கூறப்படுகிறது.

45. மரங்களிலிருந்தும் சூலத்தை அதற்குண்டான விதிப்படி எடுத்துக் கொள்ளலாம். கூறப்பட்ட காலம், நக்ஷத்ரம், கிழமையில் அவ்வாறே அங்குரார்பணத்தையும்

46. ஆசார்யர் தண்டத்தை அஷ்டபந்தனம் முதலியவற்றால் ஸ்தாபிக்க வேண்டும். அதன் மேல் கீழ் பாகங்களில் ஸ்வர்ண பத்மத்தை (தங்கதாமரையை) வைக்க வேண்டும்.

47. ரத்ன நியாஸம் செய்ய வேண்டியதில்லை. அவ்வாறே நயோன்மீலனமும் ஆகும். அசையாத ஸ்தாபனமாகில் ரத்ன நியாஸத்தைச் செய்ய வேண்டும்.

48. சூலத்தில் பிரதிமை இருந்தால் அதற்கு நயோன்மீலனம் செய்ய வேண்டும். மண் முதலியவற்றால் சூலத்தை பிம்பசுத்தி செய்து கிராம பிரதட்சிணை செய்ய வேண்டும்.

49. ஜலாதி வாஸத்தைச் செய்து பின் மண்டபத்தை அடைய வேண்டும். முன் சொன்ன அளவுப்படி ஐந்து, ஒன்று, ஒன்பது குண்டங்களை ஏற்படுத்த வேண்டும்.

50. சில்பியை திருப்தி செய்து அனுப்பிவிட்டு அந்தணர்களுக்கு உணவளித்து புண்யாஹம், வாஸ்து ஹோமத்தையும் செய்து வேதிகையில் ஸ்தண்டிலத்துடன் கூட

51. மயில்தோகை முதலான முட்டையிலிருந்து உண்டான ஐந்து வகையிலான சயனத்தை அமைத்து பிறகு பிம்பத்தைக் கொண்டு வந்து முன்சொன்னபடி அபிஷேகிக்க வேண்டும்.

52. ஆசார்யர் பிறகு ரக்ஷõபந்தனத்தைக் கட்ட வேண்டும். மூன்று பத்ம பத்ரத்திலோ பேரத்திலோ, விருஷபத்திலோ, ரக்ஷõபந்தனத்தைச் செய்ய வேண்டும்.

53. கிழக்கில் தலையாகவும் உயரப் பார்த்த முகமாய் சயனத்தில் பிம்பத்தை படுக்க வைக்க வேண்டும். வெண்மை, சிவப்பு நிறபட்டு வஸ்த்ரங்களால் அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்து மூடி

54. திரிசூலத்தின் தலைபக்கத்தில் வஸ்த்ரம், தங்கத்துடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட சிவாஸ்திரகும்பத்தை பூஜிக்கவும். நான்கு கைகள் உடையவராய், சந்திரனை தரித்தவராய்

55. நான்கு முகமுடையவராய் ஜ்வாலா கேசம், மூன்று கண்களுடன் விளங்குபவராய் தன் முகத்தில் தித்திப்பல் உடையவராய் சக்தி, சூலம், அபயம், வரதம் தரித்தவராய்

56. மின்னல் போன்ற காந்தியையுடையவராய் பயங்கரமான இடி சப்தத்தோடு கூடியவராய் பதினாறு வயதோடு கூடியவராய் பிரகாசிக்கின்ற ஸ்வஸ்திகத்தோடு கூடியவராய்

57. அஸ்திர சூலத்தில் ஈச்வரனின் உருவம் இருப்பின் சிவகும்பத்தையும் வர்த்தனியையும் வ்ருஷபமிருப்பின் வ்ருஷப கும்பத்தையும் அவைகளில் வரிசைப்படி சிவன், தேவி, வ்ருஷபர்களை பூஜிக்க வேண்டும்.

58. வஜ்ராதிகளை சுற்றியுள்ள எட்டு கும்பங்களிலும், தத்வேச்வர்களுடன் மூர்த்தி, மூர்த்தீச்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.

59. ஆசார்யர், முன்போல் பிரதிமையிலும் வ்ருஷபத்திலும், தண்டமத்யபாகம், நுனிபாகம், பத்ரங்களின் கடைசிகளில் தத்வதத்வேச்வரர்களை பூஜிக்க வேண்டும்.

60. சூலத்தின் மூர்த்திகள் முன்பு போல் க்ஷமா முதலானவர்கள். சூலத்தின் மூர்த்தீச்வரர்கள் வஜ்ரம் முதலானவர்கள் ஆவர். இவ்வாறு ஆசார்யன் நியஸித்து மூர்த்தி மூர்த்தீசர்களையும் சிவாஸ்த்ரத்தையும் பூஜிக்க வேண்டும்.

61. பிறகு வியாபாகத்தால் எல்லா தேவமந்திரங்களாலும் பூஜிக்கவும். மத்ய பத்ரத்தில் ருத்ரனையும் வலது பத்ரத்தில் பிரம்மாவையும்

62. இடது பாகத்தில் விஷ்ணுவையும் ஆவாஹித்து, பாலிகையில் பார்வதியையும், கும்பபிரதேசத்தில் ஷண்முகரையும், கும்ப அமைப்பின் முகத்தில் வினாயகரையும் பூஜிக்க வேண்டும்.

63. தண்ட நுனியில் சாஸ்தாவையும், தண்ட மத்தியில் ஆதித்யர்களையும், தண்ட அடியில் சிவ சண்டரையும் கிழக்கு தள நுனியில் லக்ஷ்மியையும்

64. தெற்குபாக தளத்தில் ஸப்த மாத்ருக்களையும் மேற்கு தளத்தில் ஜ்யேஷ்டா தேவியையும் வடக்கு தளத்தில் துர்க்கா தேவியையும் ருத்ரர், சூர்யர்கள், வசுக்களையும்

65. தண்டத்தினடியில் அச்வினீ தேவதைகளையும், பதிணெண் கணங்களையும் பூஜித்து, குண்ட ஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து முடிவில் ஹோமத்தை செய்ய வேண்டும்.

66. சமித்து, நெய், அன்னம், பொறி, எள், பயிர் வகைகள் இவைகளுடன் புரசு, அத்தி, அரசு, ஆல் முதலானவற்றை கிழக்கு முதலான திக்குகளிலும்

67. எல்லா குண்டங்களிலும் புரசும் மற்றவையும் ஏற்புடையன. ஆசார்யர் பிரதான குண்டத்தில் சுவாமியை ஸாங்கமாகப் பூஜிக்க வேண்டும்.

68. கிழக்கு குண்டத்தில் பார்வதியையும், தெற்கில் பிரம்மாவையும், வடக்கில் விஷ்ணுவையும், மேற்கில் முருகனையும் (சேனானீ) தென்கிழக்கு குண்டத்தில் சூர்யனையும்

69. தென் மேற்கு குண்டத்தில் விக்னேசரையும், வடமேற்கு குண்டத்தில் மன்மதனையும் ஈசான குண்டத்தில் சண்ட ருத்ரரையும், மீண்டும் கிழக்கில் லக்ஷ்மியையும் தெற்கில் சப்தமாத்ருக்களையும்

70. மேற்கு குண்டத்தில் ஜ்யேஷ்டா தேவியையும் வடக்கு திக்கில் துர்க்கா தேவியையும் அந்தந்த திக்குகளில் லோகபாலர்களையும் முன் சொன்ன எண்ணிக்கையுடன் ஹோமம் செய்ய வேண்டும்.

71. ருத்ரர்கள் ஆதித்யர்கள், அஷ்டவசுக்கள், அச்வினீ தேவதைகள், பதினெட்டு கணங்களுக்கும் பிரதான குண்டத்தில் ஒவ்வொரு ஆஹுதியை செய்ய வேண்டும்.

72. வ்ருஷாரூடர் முதலானவர்களுக்கும் முன் போல் ஆசார்யர் ஹோமம் செய்யவும். பத்மத்தில் வஜ்ராதிகளையும் எல்லா தேவர்களையும் முன்போல் பூஜிக்க வேண்டும்.

73. அந்தந்த கும்ப ஜலத்தினால் சூலத்தை முறைப்படி அபிஷேகிக்க வேண்டும். உத்ஸவமூர்த்தியான அஸ்த்ர தேவராக இருப்பின் ஸ்நபன அபிஷேகத்தையும் அதிகமான நைவேத்தியத்துடன் உத்ஸவத்தை செய்விக்க வேண்டும்.

74. இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவும். இவ்வாறு திரி சூலஸ்தாபனத்தை எந்த மானிடர் செய்கிறாரோ அவர்

75. இங்கு எல்லா போகங்களையும் அனுபவித்து கடைசியில் மோக்ஷத்தை அடைவர்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் திரிசூல ஸ்தாபனம் செய்முறையாகிற அறுபத்தியொன்பதாவது படலமாகும்.
படலம் 68: தசாயுத பிரதிஷ்டை

68வது படலத்தில் தசாயுத பிரதிஷ்டாவிதி கூறப்படுகிறது. முதலில் இலக்கண முறைப்படி தசாயுத பிரதிஷ்டை கூறப்படுகிறது என்பது உத்தரவு. வஜ்ரம் முதலான தசாயுதங்களின் பெயர் கூறப்படுகின்றன. இங்கு அங்குசத்தை விட்டு அந்த ஸ்தானத்தில் த்வஜத்தையோ ஸ்தாபிக்கலாம் என விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு பிம்பலக்ஷண முறைபடி ஒரு முகம், இரண்டுகண், கரண்டமகுடம் அஞ்சலி ஹஸ்தத்துடன் கூடிய இருகை, ஸர்வலக்ஷணம் இவைகளுடன் கூடியதான மூர்த்தி ரூபத்தை, கல்பிக்கவும், தசாயுதங்களில் சக்தியும், கதையும், ஸ்திரீருபம் சக்ரமும், பத்மமும், நபும்சகரூபம் மற்றவைகள் புருஷ ரூபம் என கூறப்படுகிறது. வஜ்ராதி ஆயுதங்கள் அஸ்திர வர்க்கத்தில் கூறி உள்ளபடி அமைத்து, அந்தந்த மூர்த்தியின் சிரஸில் கிரீடத்தின் மேலோ அல்லது இருகைகளின் நடுவிலோ அல்லது, வலது கையிலோ ஸ்தாபிக்கவும் என்று தசாயுதங்களின் உருவ அமைப்பு கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. அங்கு முதலில் ரத்னன் நியாம் செய்யவும் என ரத்னந் நியாசவிதி கூறப்படுகிறது. பிறகு நயனோன் மீலனவிதியும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் யாகசாலா நிர்மாண விதி கூறப்படுகிறது. அங்கு நான்கு துவாரத்துடன் கூடியதாக ஒரு வேதிகையுடன் கூடிய ஒரு மண்டபமோ 10 வேதிகையுடன் கூடிய 10 மண்டபமோ செய்யவும் என இரண்டு இடத்திலும், குண்டம் அமைக்கும் முறை கூறப்படுகிறது.

பிறகு மண்டபத்தில் பிராம்மண போஜனம், புண்யாக பிரோக்ஷணம் செய்யவும் என கூறி வாஸ்து ஹோமம் செய்யவும் என கூறி மண்டபத்தை அனுசரித்து வாஸ்து ஹோமம் ஒவ்வொரு மண்டபத்திலோ செய்ய வேண்டும் என விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து அங்கு பல வஸ்திரங்களினாலோ அல்லது ஒரு வஸ்திரத்தினாலோ சயனம் அமைத்து பிரணவத்தினால் ஆசனம் கொடுத்து தர்பம், புஷ்பம், இவைகளால் பரிஸ்தரணம் அமைக்கவும். ஜலாதி வாசம், முடித்து ஸ்நபனம் செய்விக்கப்பட்ட பிம்பங்களை ரக்ஷõபந்தனம் செய்வித்து. சயனத்தில் பிரதட்சிணமாக சிரசை உடையதாக படுக்கவைக்கவும். வஸ்திரங்களால் ஆச்சாதனம் செய்யவும் என சயனாதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு கும்ப அதிவாச முறை நிரூபிக்கப்படுகிறது. இங்கு தசாயுதங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் ஒரு கும்பம் அதை சுற்றிலும் 8 கலசங்களை ஸ்தாபிக்கவும். மத்ய கும்பத்தில் அந்தந்த எழுத்துக்களையும் மூல மந்திரத்தையும் திசைகளில் பிரம்ம மந்திரத்தையும் ஆக்னேயாதி கோணங்களில் அங்க மந்திரத்தையும் பூஜிக்கவும் என்று கும்ப அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு திரவ்யங்களை குறிப்பிடும் முறையாக ஹோமவிதி மந்திரத்துடன் கூடி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு காலையில் பூர்ணாஹுதி கொடுத்து மந்திரந்நியாசம் செய்ய வேண்டும். சந்தன, புஷ்பம் இவைகளுடன் நைவேத்யத்துடன் கூடியதாக பூஜிக்க வேண்டும். பிறகு ஸ்நபனம் உத்ஸவம் செய்யவேண்டுமா இல்லையா என வேறுபாட்டுடன் கூறப்படுகிறது. பிறகு இவ்வாறாக ஸ்தாபன முறை மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. முடிவில் தசாயுதத்தை பிரதிஷ்டை செய்பவன் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறான். இவ்வாறாக 68வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தசாயுத பிரதிஷ்டையை லக்ஷணத்துடன் கூடியதாக கூறுகிறேன். வஜ்ரம், சக்தி, தண்டம், கத்தி, பாசம், அங்குசம்.

2. கதை, திரிசூலம், பத்மம், சக்ரம் என்பதாக பத்து ஆயுதங்களாகும். இவர்களை ஒருமுகம், இரு கண்கள் கரண்ட மகுடமுடையவராய்

3. கூப்பிய இருகைகளை உடையவர்களாயும் எல்லா லக்ஷணத்துடனும் பிரதிமா லக்ஷணங்களுக்கு கூறப்பட்ட அளவுப்படி செய்ய வேண்டும்.

4. சக்தியையும் கதையும் பெண்பால் என்றும் சக்ரத்தையும், தாமரையையும் பலவின் பால் (நபும்ஸகமென்றும்) மற்றவைகள் ஆண் பால் என்றும் அறியவும் இவைகளை எட்டு தாள அளவில் செயற்பாலதாகும்.

5. தன் தலையில் ஆயுதம் உடையதாயும், தன் தலையிலிருந்து ஓர் தாளம் முதல் தாளம் என்ற அளவின் எட்டின் ஒரு பாக அதிகரிப்பால் நான்கு தாள அளவு வரையிலுமாக

6. ஆயுதங்களின் அமைப்பு முறைப்படி அறிஞன் தசாயுதத்தை செய்யவும், அந்த உருவ அமைப்பை உடையவர்களின் தலையிலோ கிரீடத்திலோ தசாயுதத்தை அமைக்க வேண்டும்.

7. இரு கைகளின் நடுவிலோ அல்லது வலது கையிலோ ஆயுதங்களை ஏந்திய வண்ணம் அமைக்கவும். அந்த இடத்தில் அங்குச ஆயுதத்தை விட்டு விட்டு அதற்கு பதிலாக த்வஜத்தையும் அமைக்கலாம்.

8. பிறகு பிரதிஷ்டா கார்யங்களையும் செய்ய வேண்டும். அதன் முறைகள் இங்கு கூறப்படுகிறது. ரத்ன நியாஸம் செய்து பிறகு நயோன்மீலனம் செய்ய வேண்டும்.

9. கண்களில் தேன், நெய் இவைகளால் தர்ப்பணத்தை செய்து தான்யங்களை தர்சிக்க செய்ய வேண்டும். பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட ஆயுதத்தை அலங்கரித்துக் கொண்டு வரவேண்டும் பிறகு

10. கிராம பிரதட்சிணத்தை செய்துவிட்டு ஜலத்தின் நடுவில் படுக்க வைக்க வேண்டும். முன் கூறியபடி மண்டபத்தை நான்கு திரவ்யங்களுடன் கூடியதாக செய்து

11. ஒரே வேதிகையுடன் கூடியதாகவோ அல்லது தனித்தனி வேதிகையுடன் கூடியதாகவோ அமைக்கவும். பத்து எண்ணிக்கை கொண்ட மண்டபமாகவோ (கொட்டகை) தனித்தனி குண்டங்களுடன் கூடியதாகவோ

12. கிழக்கு முதலாக அந்தந்த ஆயுதங்களின் திக்குகளில் குண்டங்களை உடையதாக அமைத்தோ, ஒரே மண்டபத்தில் எட்டு திக்குகளிலும் குண்டங்களை சுற்றிலுமாகவும் அமைக்க வேண்டும்.

13. கிழக்கிற்கும் ஈசான திக்கிற்கும் நடுவில் வட்ட வடிவ குண்டத்தையும் தென்மேற்கு, மேற்கு திக்குகளின் நடுவில் வ்ருத்த குண்டத்தையும் ஆக குண்டங்கள் எண்ணிக்கையானது பத்தாகும்.

14. பிராம்மண போஜனம் வாஸ்து ஹோமத்தை தனித்தனியாகவோ செய்து புண்யாஹ பிரோக்ஷணம் செய்து முடிவில் லக்ஷணத்துடன் கூடியதான ஸ்தண்டிலம் அமைத்து

15. ஒரு வஸ்திரத்தாலோ அல்லது பலவஸ்திரங்களாலோ சயனத்தை அமைக்க வேண்டும். ஆஸனத்தில் பிரணவத்தை எழுதி தர்ப்பங்களாலும் புஷ்பங்களாலும் பரிஸ்தரணம் போட வேண்டும்.

16. பிறகு ஜலத்திலிருந்து ஆயுதங்களை எடுத்து கொண்டு வந்து அபிஷேகம் செய்து பூஜித்து ரக்ஷõபந்தனம் செய்து பிம்பத்தை சிரங்கள் சுற்றி வரிசையாக இருக்கும்படி படுக்க வைக்க வேண்டும்.

17. குருவானவர் வஸ்திரங்களால் எல்லா ஆயுதங்களையும் மூடி சுற்றிலும் எட்டு திக்குகளிலும் எட்டு கும்பங்களை வைக்க வேண்டும்.

18. அந்தந்த ஆயுதங்களின் பெயர்களை மூலமந்திரத்துடன் பஞ்சப்ரம்ம அங்க மந்திரங்களினால் பூஜிக்க வேண்டும். நடு கும்பத்தில் மூலமந்திரங்களையும் திக்குகளில் பிரம்ம மந்திரங்களையும் பூஜிக்க வேண்டும்.

19. விதிக்குகளில் அங்க மந்திரங்களை பூஜித்து தத்புருஷம் முதலியவர்களிடத்தில் சேர்ந்ததாக அறிந்து அந்தந்த மந்திரங்களால் ஹோமத்தை சமித்து நெய் எள்ளுடன்

20. அன்னத்தாலும் நிறைந்ததாக அந்தந்த அக்னியில் அந்தந்த ஹோமத்தை செய்ய வேண்டும். புரசு, அத்தி, அரசு, ஆல் முதலியவற்றை திக்குகளிலும்

21. வன்னி, கருங்காலி, மயிற் கொன்றை வில்வம் முதலியவை விதிக்ஷúகளிலும் கூறப்பட்டுள்ளது. புரசு பிரம்ம ஸ்தானத்திலும் வில்வம் விஷ்ணு ஸ்தான குண்டத்திலும் ஏற்புடையன.

22. மறுநாள் காலையில் பூர்ணாஹுதியை செய்து மந்த்ர ந்யாஸத்தை செய்ய வேண்டும். சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து மஹா நைவேத்யத்தையும் செய்து

23. ஸ்நபனத்தை செய்தோ செய்யாமலோ அவ்வாறே உத்ஸவமும் நடத்தவும், இவ்வாறு எவர் தசாயுத பிரதிஷ்டை செய்கிறாரோ அவர் எல்லா இடையூறுகளில் இருந்தும் விடுபடுவர்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் தசாயுத பிரதிஷ்டா விதியாகிற அறுபத்தி எட்டாவது படலமாகும்.
படலம் 67: வித்யாபீட பிரதிஷ்டை

67வது படலத்தில் வித்யா பீட பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் வித்யையானது. சமஸ்கிருத பாஷையுடன் கூடியது, வேறு பாஷையுடன் கூடியது என இருவிதமாகும் என கூறப்படுகிறது. பிறகு வித்யா பீடத்திற்கு ஸ்தாபிக்க உரியதான ஸ்தாபன நிரூபணம், புஸ்தக அளவு முறை புஸ்தக நிர்மாணம் செய்ய காட்டு புரசு இலை, முதலிய திரவ்ய நிரூபணம், புஸ்தகத்தில் அக்ஷரம் எழுதும் முறை ஆகிய விஷயங்கள் கூறப்படுகின்றன. பிறகு புஸ்தகம் எழுதும் முறையின் முன்பும் படிக்கும் முன்பும் செய்ய வேண்டிய பூஜாமுறை கூறப்படுகிறது. கால வசத்தாலும் அறியாமையாலும் அழிந்ததும் சிற்றறிவு உடைய ஆசார்யர்களால், சோதிக்கப்பட்டதும், வீணான பதத்தை உடையதும் கூறியதை திரும்பவும் கூறப்பட்டுள்ளதும் முன்பின் என்ற முறையற்றதும், தன் சித்தாந்தத்திற்கு விரோதமான அர்த்தங்களை கூறியதுமான தோஷங்களை உடைய சிவஞானத்தை சொல்கிற சித்தாந்த சாஸ்திரத்திற்கு சம்ஸ்காரம் செய்யும் முறையும். அவ்வாறு பரமேஸ்வரனுடைய வித்யைகளை சிவபக்த சிஷ்யர்களுக்கு நன்கு கற்பிக்கும் முறையும், சிஷ்யனை அனுசரித்து தேச பாஷைகளின் உபாயத்தால் சுத்தமான சமஸ்கிருத சப்தங்களாலும், பிராகிருத சப்தங்களாலும், லவுகீக சப்தங்களாலும், சுலபமான வழியால் பரமேஸ்வரனுடைய வித்யையை கல்பிக்கவும் என்பதான முறையுடன் கூடியதான கல்வியை போதிக்கும் முறை. பலவித விசேஷமாக கூறப்படுகிறது. எவ்வாறு சம்பூர்ணமான, மஹாத்மாவான சிவனுக்கு முடிவு இல்லையோ அவ்வாறே சைவவித்யையை சொல்லி கொடுப்பதற்கு முடிவில்லாத பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. சிவஞானத்தால் பிரகாசிக்கிறவன் பரமேஸ்வரனை போல் பூஜிக்க தக்கவன் என கூறப்படுகிறது. பிறகு சிவஞான ஸ்வரூப முடைய சிவசாஸ்திரத்தை புஸ்தகத்தில் நன்கு யார் எழுதுகிறானோ, அவனுக்கு விசேஷமான பலன்கள் நிரூபிக்கப்படுகின்றன.

சிவஞான ஸ்ரூபம் உடைய சிவ சாஸ்திரத்தை படிப்பது கேட்பது சிந்தனை செய்வது இவைகளின் பலன்கள் கூறப்படுகின்றன. போஜனம், வஸ்திர, தானம் சிவஞானத்தை உடையவர்களுக்கும் சிவஞானத்தை காப்பாற்றுபவர்க்கும் வித்யாதானத்திற்கு சொல்லப்பட்ட பலன் கூறப்படுகிறது. பிறகு எந்த ராஜ்யத்தில் சிவஞானரூபமான சிவசாஸ்திர வியாக்யானம் நன்கு நடக்கிறதோ அந்த ராஜ்யத்தில் ராஜா. அரசர்களுக்கு அரசராக ஆகிறான் எந்த ராஜ்யத்தில் ராஜ குருஸ்தானத்தில் அமைச்சர் அவையிலும், புரோகித ஸ்தானத்திலும் மற்ற எல்லா ராஜ கார்யத்திலும் சுத்த சைவம் பிரயோகிக்கப்படுகின்றனவோ அந்த ராஜ்ய அதிபர் ஸ்ரேஷ்டமான ராஜாவாகிறான். பிறகு யார் சைவ சித்தாந்தற்கு விரோதமின்றி வேதம் வேதாந்தங்கள் பாசுபதம், காரூடம், முதலிய தந்திரங்களின் அர்த்த நிச்சயத்தை செய்கிறானோ அவன் அனேக தர்மத்தை அறிந்தவன் மற்றவன் இல்லை என்கிறார் யார் சுத்த சைவ விரோதமாக சாஸ்திரத்தின் அர்த்தத்தை நிச்சயம் செய்கிறானோ அவன் தர்மத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். இவ்வாறு பலவிதமாக சைவ வித்யையின் பெருமை கூறப்படுகிறது. பிறகு சைவ சாஸ்திரம் அறிந்த ஆசார்யனாலேயே அரசர்களுக்கு சாந்திகம், பவுஷ்டிகம், முதலியகர்மாக்களை முடித்து கொடுக்கவேண்டுமென கூறப்படுகிறது. இவ்வாறு வித்யாபீட பிரதிஷ்டை கூறப்படுகிறது. அங்கு வித்யாபீட பிரதிஷ்டையானது. ஆலயத்திலோ, மண்டபத்திலோ, சாலையிலோ, செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வித்யா பீடம் செய்யும் முறை கூறப்படுகிறது. வித்யாபீடம் சம சதுரஸ்ரமாகவோ, நீண்ட சதுரஸ்ரமாகவோ செய்ய வேண்டும். வித்யா பீடத்தை நிர்மாணம் செய்து அதை பஞ்ச கவ்யத்தால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வித்யாபீட பிரதிஷ்டை விஷயத்தில் செய்ய வேண்டிய கும்பஸ்தாபனம், கும்பபூஜை, ஹோம விதி, மந்திரன்நியாம் முதலியவைகள் விளக்கப்படுகிறது. இவ்வாறு 67வது படலத்தில் கருத்து சுருக்கமாகும்.

1. சுருக்கமாக வித்யா பீட பிரதிஷ்டையை கூறுகிறேன். அந்த வித்யையானது ஸம்ஸ்க்ருதா, ஆத்மிகா என்று இரு வகைப்படும்.

2. பிரகாரத்தின் முன்பாக நான்கு திக்குகளிலும், விதிக்குகளிலும் அந்தராளத்திலும் பக்தர்களை பிரதிஷ்டை செய்யும் இடத்திலோ வித்யா பீடத்தை அமைக்க வேண்டும்.

3. மூன்று அங்குலம் முதல் ஐந்து அங்குலம் அதிகமான இருபத்தைந்து மாத்ராங்குலம் வரை புஸ்தங்களின் நீளம் இருக்க வேண்டும்.

4. ஐந்து, அங்குலத்திலிருந்து கால், கால் பாகம் கூடுதலாக பன்னிரெண்டு அங்குலம் வரை உள்ளதாகும். பெரிதெனில் பட்டி பதினைந்து அங்குலம் உள்ளதாக அமைக்கலாம்.

5. காட்டு புரசு இலை, ஸ்ரீதாளம் என்ற ஓர்வகை பனைஓலை இவைகளால் நிர்மானித்தோ தங்கம் முதலியவைகளால் நிர்மானிக்கப்பட்டது.

6. கருங்கல் போன்ற ஒரு விதமரம். மரப்பலகை, முதலியவற்றால் செய்யப்பட்டதிலோ குங்குமம் முதலியவைகளாலோ புஷ்பங்கள் முதலியவைகளாலேயோ தயாரிக்கப்பட்ட மையினால் அழகிய எழுத்துக்களால் எழுத வேண்டும்.

7. தூரிகையால் ஆன எழுதுகோலாலோ ஆசிரியரோ, சிஷ்யரோ எழுத வேண்டும். சுபமான கிழமை, யோகம், சுபநக்ஷத்ரம் கூடிய தினத்தில் ஆரம்பிக்க வேண்டும்.

8. சாதாரண ஆத்மாவினால் முயற்சியோடு சிவக்ஞானத்தை எழுதக்கூடாது. ஆத்மாக்களின் அருகில் படிக்க கூடாது.

9. பலவகை தேசங்களிலிருந்து உண்டானதும், அழகானதும் ஆன எழுத்துக்களால் நேர்மையாக எழுதவும். அந்த எழுத்தை பத்ரத்தின் ஓரத்தில் எழுதக் கூடாது.

10. சந்தனம், முதலியவைகளால் சிவமயமான மாத்ருகா எனப்படும் அக்ஷரங்களில் ஈஸ்வரனை பூஜித்து குருவுக்கு வஸ்திரம் முதலியவற்றை விருப்பத்துடன் கொடுத்து எழுத்துப் பலகையையும் பூஜிக்க வேண்டும்.

11. பசுஞ்சாணத்தால், மெழுகி கோலமிடப்பட்ட இடத்தில் வாரி இறைக்கப்பட்ட புஷ்பத்தை உடையதாகவும் தூபம் இடப்பட்டதாயும்

12. ஜ்வலிக்கின்ற தீபங்களுடன், சுத்த சைவர்களால் சூழப்பட்டு ஆசார்யர், எழுதியோ சொல்லிக் கேட்கப்பட்டோ படிக்க வேண்டும்.

13. எவ்வாறு எழுதிபடிக்க முடியுமோ அவைகளால் பிழையின்றி எழுதவும், சிவஞானத்திற்கு காலத்தினாலும் ஏமாற்றம் அடைந்ததாலும் அழிவடைந்தாலும்

14. கவனக் குறைவுள்ளவர்களாலோ எழுதப்பட்டவையாகவோ குறைவாகவோ, அதிகமாக இருந்தாலும் குறைவுள்ள அறிவுடையவர்கள் கவனமற்றவர்களால் செய்யப்பட்டதும் அழிவு அடைந்ததுமான

15. குறைந்த அறிவுடைய ஆசார்யர்களால் பரிசோதிக்கப்பட்டதும் அவசியமில்லாத பதங்களுடன் கூடியதும், சொன்னதையே திரும்பவும் கூறிய பொருளுக்கும்

16. முன் பின் தொடர்பின்றியும், தன் கோட்பாட்டிற்கும் எதிரியாயும் அதிகமாக விடுபட்ட சேர்க்கையையுடையதும்,  சொல்லிற்கு பொருளின்றி யுமாக உள்ளதுமாக

17. மேற்கூறிய முறைப்படி குற்றங்களை சிற்சில இடங்களில் யார் செய்கிறானோ அவனை ஆசார்யன், நன்கு முறைப்படுத்துதல் வேண்டும்.

18. எவன் சிவதத்வத்தை அறிந்த அறிஞனாக இருக்கிறானோ அவன் பரமேஸ்வரனுடைய வித்யைகளை சிவ பக்தர்களுக்கும் சிவ சிஷ்யர்களுக்கும் சொல்லிக் கொடுத்து அறிவிக்க வேண்டும்.

19. சிவ விதியை அனுசரித்து, வித்யாதாநமானது கூறப்படுகிறது. ஸம்ஸ்க்ருதத்தாலும் நெருக்கமான சொற்களாலும் தேசத்தின் பாஷை முறைப்படியும் வித்யாதானம் கூறப்படுகிறது.

20. பழமையான சொற்களாலும் சுத்தமான ஸம்ஸ்க்ருத சப்தங்களாலும் இங்கு உலக வழக்கு சொற்களாலும் அனுசரித்துள்ள எந்த சிஷ்யன் உள்ளானோ அவன்

21. தேசத்தின் சொல் முதலியவைகளாலும் அப்பேற்பட்ட ஆகமங்களாலும் அவ்விடத்தில் உள்ளவைகளாலும் எல்லா தேசத்திலுள்ளவர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.

22. பெரியோரான முழுமையான சிவனுக்கு எவ்வாறு முடியவில்லையோ அவ்வாறு எல்லா குணத்தையும் உடைய வித்யையை கொடுப்பதற்கும் முடிவில்லை என்பதாகும்.

23. வித்யையை கொடுப்பதின் பயன், ஐச்வர்யத்தையும் சிவனை அடையும் வரையிலான குணமும், புகழ், செல்வம், ஸரஸ்வதி, திருவருள், பேரொளி, பொருட் செல்வம் நன்மை இவைகளால் கிடைக்கும்.

24. எவன் சுத்தமற்ற வித்தையை அபஹரித்து உயர்ந்ததான அறிவை போதிக்கிறானோ அவன் பயங்கரமான நரகத்தையும், பாபம் செய்தவனாகவும் அறிவை அழிக்கிறவனாகவும் ஆகிறான்.

25. சிவஞானத்தை அளிக்கக் கூடிய புஸ்தகத்தை சிவனைப் போல் பூஜிக்கவும். தன்னால் இயன்றபடி தினந்தோறும் சிவாகமங்களை எழுத வேண்டும்.

26. சிவஞான புஸ்தகத்தில் எவ்வளவு எண்ணிக்கையில் எழுத்துக்கள் இருக்கின்றதோ அவ்வளவாயிரம் சிவலோகத்தில் கொடையாளியாக இருக்கிறான்.

27. முன்னதாக பத்து தலைமுறை பித்ருக்களை கரையேற்றி மற்றுமுள்ளதான பத்து தலைமுறைக்காரர்கள் தாய், தந்தை, மனைவி இவர்களுடன் ஸ்வர்கத்தை அடைந்து

28. அந்த ஸ்வர்கத்தில் மேற்கூறியவர்களை நிறுத்தியிருத்தி தான் மட்டும் சிவலோகத்தை அடைகிறான். ஒரு ஸ்லோகத்தையோ பாதி ஸ்லோகத்தையோ சிவஞானத்தை உடையதாக எவன் படிக்கிறானோ அவன்

29. படிப்பிக்கவோ, சொல்கிறானோ, நினைக்கவோ, எழுதவோ, எழுதும்படி செய்யவோ ஒரே மனதுடன் கேட்கவோ அதன் பொருளை ஆராயவோ

30. பிறர்க்கு கேட்கும்படி செய்யவோ யார் முனைகிறானோ மேற்கூறிய கார்யங்களை செய்பவனுக்கு சிவஞானமுடைய அவனுக்கு உணவு, உடை முதலியவைகளால் பெரிய புண்யபலன் கிடைக்கும்.

31. அவர் ஆயுள் முழுவதும் வரை காக்க வேண்டும். இவ்வாறாக கல்வியை கொடுப்பதின் பயனும் ஆகும். பண உதவி செய்தாவது, (செய்வதாலே) அந்த பலனை அடைகிறான்.

32. எந்த அரசாங்கத்தில் சிவாகம விரிவுரை புஸ்தகம் உள்ளதோ அந்த ராஜாவும் அந்த அரசாங்கமும் வளர்வதாகும். அவன் அரசனுக்கு அரசனாக விளங்கப்படுகிறான்.

33. அரசாங்கத்திலும் அரச குருவினிடத்திலும் மந்திரியிடத்திலும் மற்ற கார்யங்களில் புரோஹிதரிடத்திலும் மற்ற எல்லா கார்யத்திலும் மற்றவர்களின் தர்சனத்திலும்

34. சுத்த சைவனும் யோக்யனுமாக ஆவான். அவனே சாந்தாநிகனாகவும் உயர்ந்தவனாகவும் இருக்கிறான். எவன் சைவ சித்தாந்தத்திற்கு விரோதமில்லாமலுள்ள வேத வேதாங்கமும்

35. அவ்வாறு பாசுபதம் முதலிய தந்திரங்களும் காருடம் முதலிய பலவகை சாஸ்திரங்களையும் சாஸ்திரத்திற்காக நிச்சயம் செய்கிறானோ அவனே தர்மத்தை அறிகிறான். மற்றவன் அறிவதில்லை.

36. எவன் சுத்த சைவத்திற்கு முரன்பாடாக சாஸ்திரத்திற்கு நிச்சயம் செய்கிறானோ அவனுடைய புத்தி தாமசம் என்றும், அவன் தர்மத்திலிருந்து தள்ளப்பட்டவன் என்றும் கூறப்படுகிறது.

37. ஆகையால் ஆதரவோடு சுத்த சைவனானவன், சித்தாந்த சைவத்தால் சாந்தி கர்மா, பவுஷ்டிக கர்மாவை அரசன் செய்தல் வேண்டும்.

38. மற்ற எல்லோருக்கும் ஆபிசாரம் முதலான கர்மாவானது, தர்மத்தை கடைபிடித்து உயர்ந்த சாந்தானிகனால் செயற்பாலதாகும்.

39. அவனால் அனுஷ்டிக்கப்பட்ட கர்மாவானது எப்பொழுதும் அரசர்களுக்கு பலனை தரக்கூடியதாகும். இவ்வாறாக கல்வியின் பெருமை கூறப்பட்டு புஸ்தகத்தை வைக்கும் முறை கூறப்படுகிறது.

40. வித்யா சாலையின் விசாலமானது. பிராஸாதத்திலோ மண்டபத்திலோ மூன்று முழம் ஆரம்பித்து முப்பத்தி மூன்று முழம் வரை இருக்க வேண்டும்.

41. ஒரு சாலை முதலிய விதமான சாலைகளில் சாலையானது லக்ஷணத்துடன் கூடியதாக இருக்க வேண்டும். வித்யா பீடத்தின் அகலம் ஏழங்குல அளவாகும்.

42. இரண்டிரண்டு அங்குலமாக அதிகரித்து முற்பத்தியொன்று அங்குலத்தினால் அகலமும் அதே அளவு நீளமும் ஆகும், ஐம்பது முழ நீள அளவுள்ளதாகவும்

43. நாற்கோணமாகவோ, நீண்ட சதுரமாகவோ ஆகும். மற்ற ஆஸன முறைப்படியான வழியினால் எல்லாவற்றையும் செய்யலாம்.

44. பிறகு ஸம்ஸ்காரங்களை செய்து பஞ்சகவ்யத்தினால் பிரோக்ஷணம் செய்யவும். மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து வஸ்திரத்திற்கு மேல் பீடத்தை வைக்க வேண்டும்.

45. சிவனிடத்தில் பூஜை செய்வது போல் ஆஸனம் முதலியவைகளையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும் சிவ பேதத்தில் சிவனையும், ருத்ர பேதத்திலும் சிவனையும் பூஜிக்க

46. நடுவில் சிவ கும்பத்தையும் பக்கங்களில் இரண்டு வர்தனியையும் இரண்டிலும், சிவனையும் வெளி ஆவரண தேவதைகளாக வித்யேசர்களையும்

47. சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜித்து ஹோமம் முன்போல் செய்யவும். ஸமித், நெய், எள், ஹவிஸ் இவைகளுடன் கூடவும்

48. யவை தான்யத்தால் நூற்றி எட்டு ஆவிருத்தி ஹோமம் செய்து பூர்ணாஹூதி செய்யவும் பெற்றுக் கொண்ட தட்சிணையையுடையவனாய் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.

49. புஸ்தகத்தின் நடுவில் சிவனையும் அட்டைகளில் தேவியையும் பூஜிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் வித்யா பீட பிரதிஷ்டா விதியாகிற அறுபத்தேழாவது படலமாகும்.