ஞாயிறு, 28 ஜூலை, 2019

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

1)   அர்த்த தோஷம்
2)   நிமித்த தோஷம்
3)   ஸ்தான தோஷம்
4)   ஜாதி தோஷம்
5)   சம்ஸ்கார தோஷம்   

1 )   #அர்த்த  தோஷம்

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா என்ன தவறு செய்து விட்டோம் இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். இது பொருளால் வரும் தோஷம் அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

2)  #நிமித்த  தோஷம்

அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும். அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய், எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும் அவசியம். அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை. உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது. பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் அம்மா நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார். அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும். தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும். நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.

3)  #ஸ்தான  தோஷம்

அடுத்தது ஸ்தான தோஷம் எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அது மட்டுமின்றி கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன் முயன்றான். ஆனால் அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்த முற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்.

4 )  #ஜாதி  தோஷம்

அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது. தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.

5)  #சம்ஸ்கார  தோஷம்

அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம். அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன. தட்டுகள் உரிய முறைப்படி கழுவப்படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது. அதன் விளைவையும் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம் {பாலாம்பிகை}

வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்.

வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் || ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
வளி வினிர்ஜித மௌக்திகாபே |
ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் || ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத: ||


மெய்யூர் ஸ்ரீ சுந்தரராஜ  பெருமாள்

ஆதியில் சத்யபுரி என்று அழைக்கப்பட்ட மெய்யூர் கிராமத்தில் ஸ்ரீ சுந்தரராஜ  பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஆனந்த விமானத்தைக்கொண்ட இத்திருக்கோயில் பாஞ்சராத்திர ஆகமத்தை சேர்ந்தது. பிரகாரத்தில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயாரும் ஸ்ரீ ஆண்டாளும் தனிக்கோயில் கொண்டு காட்சி கொடுக்கின்றனர். விஸ்வக்சேனர், நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கை ஆழ்வார், மணவாளமாமுனிகள் ஆகிய ஆழ்வார் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் இவ்வூரில் உள்ள ஒரு பெரியவருக்கு கனவில் யான் ஆற்றங்கரையில் உள்ளேன் நானே நாகை சுந்தரராஜன் என்று உரைத்திட ஊர் மக்கள் மறு நாள் ஆற்றங்கரையில் நான்கு பஞ்சலோக விக்கிரகங்களை கண்டு கொண்டு வந்து  இத்திருக்கோயிலில் சேர்த்ததாக  கூறப்படுகிறது. ஸ்ரீ அன்னம்மாசாரியார் இத்திருக்கோயில் பற்றி சுலோகம் செய்துள்ளார். இங்கு ஆவணி மாதம் பவித்ரோத்சவம், ஆழ்வார்கள் திருநட்சத்திரங்கள்  திருக்கல்யாண உற்சவம்  ஆகியவை நடைபெறுகின்றன. செங்கல்பட்டு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பாலாறு தாண்டிய உடன் செக்போஸ்ட் நிறுத்தத்தில் இறங்கி இவ்வூருக்கு வரலாம்.




பாடல் பெற்ற சிவாலயங்கள் : அருள் மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : சத்தியகிரீஸ்வரர்
அம்மன் : சகிதேவியம்மை
தல விருட்சம் : ஆத்தி
தீர்த்தம் : மண்ணியாறு, சத்திய புஷ்கரிணி
பழமை : 2000 வருடங்களுக்கு மேல்
புராண பெயர் : சேய்ஞலூர், திருச்சேய்ஞலூர்
ஊர் : சேங்கனூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
பாடியவர் : திருஞானசம்பந்தர்
காடடைந்த ஏனமொன்றின் காரணமாகி வந்து வேடடைந்த வேடனாகி விசயனொடு எய்ததென்னே கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய் சேடடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே.(திருஞானசம்பந்தர்)
      
விழா : தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சண்டேஸ்வர நாயனார் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
      
ஸ்தல சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். எல்லா சிவன் கோயில்களிலும் அருள் பாலிக்கும் சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார். மகா மண்டபத்தில் தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர் சன்னதி உள்ளது.  
      
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி : அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர்: 612 504, திருப்பனந்தாள் போஸ்ட், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91- 435-2457 459, 93459 82373



பொது ஸ்தகவல் : மேருமலையின் ஒரு சிறு பகுதி விழுந்த தலமாதலால், கோயில் சிறு மலையில் அமைந்துள்ளதை போன்ற தோற்றத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.  மேலே ஒரு பிரகாரம், கீழே ஒரு பிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் உள்ளன. மேலே மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்ளன. மஹா மண்டபத்தில் நடராஜர், தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

ஸ்தலபெருமை : அருபத்திமுவர் நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். இத்தலத்தில் இவர் வேறெங்கும் காணாத நிலையில் அர்த்தநாரி திருக்கோலத்தில் உள்ளார். அருகிலுள்ள திருவாய்ப்பாடி இவரது முக்தி பெற்ற தலமாக போற்றப்படுகிறது. சிவன் காட்சி கொடுத்ததால், சண்டேஸ்வரரே பிறை, சடை, குண்டலம், கங்கையுடன் காட்சி தருகிறார். சிபிச்சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இத்தல மகிமையை கூறியுள்ளார். சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் இதுவும் ஒன்று.வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாய்ச்சான் பிள்ளை அவதார தலம் இது. எதிரே இவருக்கு கோயில் உள்ளது.

முருகன் வழிபட்ட ஸ்தலம்: பிரணவமந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரமனை சிறையிலடைத்தார் முருகன். இதனால் பிரணவத்தின் பொருள் கூறும்படி சிவன் கேட்டார். அதற்கு சீடனாக கேட்டால் தான் கூறுவேன் என்றார் முருகன். இதனால் தந்தை சிஷ்யனாகவும், மகன் குருவாகவும் இருக்கும்படியான விபரீதம் ஏற்பட்டது. எனவே முருகனுக்கு சிவத்துரோக தோஷம் ஏற்பட்டது. இதை போக்க முருகன் இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி தினமும் நீராடி சிவனை வழிபட்டு தன் தோஷம் நீங்கினார். ஒரு முறை முருகன் சூரபத்மனை அழிக்க வரும் போது இத்தலத்தில் தங்கி சிவபூஜை செய்து உருத்திரபாசுபதப்படையை பெற்றார். அப்போது தேவதச்சன் இத்தலத்தை ஒரு நகரமாக ஆக்கினான். இதனால் இத்தலம் குமாரபுரம் என்றும், முருகன் வழிபட்டதால் சேய்(முருகன்)நல் ஊர் - சேய்ஞலூர் என்றும் பெயர் பெற்றது. முருகனுக்கு பெரிய தனி சன்னதி உள்ளது.

ஸ்தல வரலாறு : ஒரு காலத்தில் வாயுவுக்கும் ஆதிசேஷனுக்கும் பலப்பரீட்சை ஏற்பட்டது. ஆதிசேஷன் மேருமலையை இறுகிப்பிடிக்க, வாயுதேவன் பெருங்காற்றால் மலையை அசைக்க முயன்றான். இதில் ஒரு சிறு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இதனால் இத்தலம் சத்தியகிரி எனப்பட்டது. முருகக்கடவுள் பூஜித்ததால் சேய்ஞலூர் என்ற பெயரும் உண்டு.  இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார்.அப்பகுதி அந்தணர்களின் பசுக்களை விசாரசருமன் தானே மேய்த்து வந்தார். தாயன்புடன் இவன் மேய்த்ததால் அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால் மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர் வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன் பால் குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன் பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன் என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர் ஆக்கினார்.
108 திவ்ய தேசங்கள்:அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் 

மூலவர் : எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் )
உற்சவர் : வைத்திய வீரராகவர்
அம்மன்/தாயார்    :     கனகவல்லி
தீர்த்தம் : ஹிருதாபதணி
ஆகமம்/பூஜை  : பாஞ்சராத்திரம்
பழமை  : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : எவ்வுளூர், திருஎவ்வுள்
ஊர் : திருவள்ளூர்
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கைஆழ்வார், திருமழிசைபிரான், ஸ்ரீ வேதாந்த தேசிகன்.

தையலாள் மேல் காதல் செய்த தாளவன் வாளரக்கன் பொய்யிலாத பொன்முடிக ளொன்ப தோடொன்றும் அன்று செய்த வெம்போர் தன்னிலங்கோர் செஞ்சரத் தாளூருள எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.-திருமங்கையாழ்வார் 



திருவிழா:பிரம்மோற்சவம் - தைமாதம் - 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். பிரம்மோற்சவம் - சித்திரைமாதம் - 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். பவித்ர உற்சவம் - 7 நாட்கள் திருவிழா - இத்திருவிழாவிலும் பெருமளவில் பக்தர்கள் கூடுவர் இவை தவிர தை அம்மாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.       




தல சிறப்பு:மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். இத்தலத்து ஹிருதாபதணி தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.      

திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.     

முகவரி:    அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்-602 001, திருவள்ளூர் மாவட்டம்.போன்:+91-44-2766 0378, 97894 19330       


பொது தகவல்:இங்குள்ள விமானம் விஜயகோடி. வனம்: வீஷாரண்யம்.      
 பிரார்த்தனை:வைத்திய வீரராகவர் - பிணி தீர்க்கும் வீரராகவர். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும் .குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது. தவிர கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.     

நேர்த்திக்கடன்:பப்ளி துப்பட்டி (மேல் வஸ்திரம் - அங்கி) வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம்.இந்த அங்கி வெளியில் எங்கும் கிடைக்காது. திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும்.இதன் விலை ரூ.300 .இத்தலத்தில் இந்த நேர்த்திகடன் மிகவும் விசேஷமானது. உருவத்தகடுகளை (வெள்ளி ,தங்கம்) செய்து போடுதல். தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல் , நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தாயாருக்கு 9 கஜ பட்டுப் புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது. உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றனர்.     

தலபெருமை:தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம். ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.      

தல வரலாறு:சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் 1 வருடம் தவம் இருந்தார்.தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு ஆகாரத்துக்காக மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார்.வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார்.கிழவரும் புசித்து பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார். முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் 1 வருடம் கழித்து திரும்பவும் தபம் செய்தார். 1 வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க, அதேபோல் அதே கிழவர் வந்து மாவு கேட்க, முனிவரும் தந்தார்.பிறகு படுத்துறங்க அந்த கிழவர் ""எவ்வுள்' என்று வினவ முனிவரும் தன் இடத்தையே காட்டி "இவ்விடம் படுத்துக் கொள்ளவும்' என்றார். மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார். முனிவரிடம் ""வரம் கேள்' என கூற இங்கு வரும் பக்தர்களுக்கு அவரது பிரச்னைகளை நிறைவேற்றி வைக்கும்படி கேட்க, பகவானும் அவ்வாறே அருளி இங்கு எழுந்தருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.
274 சிவாலயங்கள்:அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் :  தயாநிதீஸ்வரர்
உற்சவர் :  குலை வணங்கி நாதர்
அம்மன் :  ஜடாமகுட நாயகி
தல விருட்சம் :  தென்னை
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :கபிஸ்தலம், ஆடுதுறைப்பெருமாள் கோவில், திருவடகுரங்காடுதுறை
ஊர் :  வடகுரங்காடுதுறை
மாவட்டம் :  தஞ்சாவூர்
மாநிலம் :  தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தரர்,தேவாரப்பதிகம்
நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில் ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே.-திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 49வது தலம்.

திருவிழா:பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.  
      
தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிறப்பு கர்ப்பிணிப்பெண்கள் வணங்க வேண்டிய கோயில்.  
      
திறக்கும் நேரம்:காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும், அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோயில், வடகுரங்காடுதுறை - 614 202. தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91 4374 240 491, 244 191


     
பொது தகவல்:நடராஜரின் கல் சிற்பம், சிவகாமி அம்பிகை, அர்த்தநாரீஸ்வரர், இரட்டை பைரவர், சூரியன், நாகர், சனீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மா, சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.  
      
 பிரார்த்தனை:சில பாவங்கள் நீங்க அனுமானும் இங்கு பூஜை செய்துள்ளார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தியை தரிசித்தால் குருபலம் பெருகுகிறது.

நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


    
தலபெருமை:கோயிலின் சிறப்பம்சம்  : இக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள். கர்ப்பமான பெண்களை பொதுவாக கோயிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்வதுண்டு. ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.  திருஞான சம்பந்தர், அருணகிரி நாதரால் பாடல் பெற்றது.

நவராத்திரி காலத்தில் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் செல்வச்சிறப்பு கூடும்.

துர்க்கையின் சிறப்பு: இங்கு விஷ்ணுதுர்க்கை கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறாள். எட்டு புஜங்கள் கொண்ட இந்த துர்க்கைக்கு பாலபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக காட்சியளிப்பது சிறப்பாகும்.  வேறு எந்த துர்க்கை தலத்திலும் இம்மாதிரியான அதிசயம் நிகழ்வதாக தெரியவில்லை. நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரியம் அதிகரிக்கும்.

தல வரலாறு:சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால் அறுந்துபோனது எப்போது என்பது பற்றி கேள்வி எழலாம். வாலியைக்கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான். அவனை வாலால் அடிக்கும்போது ஒரு வேளை வால் அறுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் சிவனை வணங்கினான்.

குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது வால் மீண்டும் வளர்ந்தது. இங்கு சிவன் தயாநிதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் ஜடாமகுட நாயகி. சிட்டுக்குருவி ஒன்றிற்கும் சிவபெருமான் மோட்சம் அளித்துள்ளார். எனவே இவர் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப கருணை மழை பொழிந்துள்ளார்.

செட்டிப்பெண் எனப்படும் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்துவிடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை வணங்கினாள்.  சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக்கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு குலைவணங்கிநாதர் என்ற பெயரும் உள்ளது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
274 சிவாலயங்கள்: அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்)
அம்மன் : மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை)
தீர்த்தம் : அர்ஜுன தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவிசயமங்கை
ஊர் : திருவிஜயமங்கை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம் : மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர் தண்ணறுஞ் சாந்தமும் பூவு நீர்கொடு விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே. திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 47வது தலம்.  
      
திருவிழா : திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனியில் திருக்கல்யாணம் நடைபெறும்.  
      
தல சிறப்பு: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். 
    
முகவரி : அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை : 612 301. தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91- 435- 294 1912, 94435 86453, 93443 30834 
     
பொது தகவல் : மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர்.

ஆயுள் விருத்தி வழிபாடு : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் இத்தலத்தைப் போற்றி தேவாரம் பாடியுள்ளனர். திருநாவுக்கரசர் எமனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இதனால் ஆயுள் விருத்திக்காகவும் ஆயுள் தோஷம் நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். அம்பாள் மங்களநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். படித்து முடித்து முதலில் வேலைக்குச் செல்பவர்கள் தேர்வில் வெற்றி பெற விஜயநாதருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள். அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது. கோயிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர், காலைபைரவர், சூரியன், நால்வர் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.



தலபெருமை : சோழர்கால முறைப்படி கட்டப்பட்ட கோயில். இங்கு மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும் ராஜகோபுரம் சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் மங்கள நாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும் பின் இரண்டு கைகளில் ஒரு கையில் அட்சரமாலையும் ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.
 


தல வரலாறு : மகாபாரத போரின்போது பாண்டவர் கவுரவர் படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். இவ்வேளையில் வேதவியாசர் அர்ஜுனரிடம் சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனன் சிவனை வேண்டி தவமிருந்தான். இதையறிந்த துரியோதனர் முகாசுரனை அனுப்பி தவத்தை கலைக்க முயன்றார். பன்றி வடிவில் வந்த அசுரனை அர்ஜுனன் வீழ்த்தினான். அங்கு வந்த ஒரு வேடன் தானே பன்றியை வீழ்த்தியாகச் சொன்னார். இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அவ்வேளையில் சுயரூபம் காட்டிய சிவன் பாசுபத அஸ்திரம் கொடுத்தார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம் ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா? என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம் அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம் என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். அர்ஜுனர் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார். அர்ஜுனனுக்கு விஜயன் என்றும் பெயருள்ளதால் சிவன் விஜயநாதர் என்று பெயர் பெற்றார். தலத்திற்கும் திருவிஜயமங்கை என்ற பெயர் ஏற்பட்டது.
274 Sivalayam : sri Velladainaatha Swami temple
 
Moolavar : Velladainathar
Urchavar : Somaskandar
Amman : Kavianganni
Thala Virutcham : Vilwa
Theertham : Paalkinaru
Agamam Pooja : Sivagama
Old year : 2000 years old
Historical Name : Tirukaruhavur
City : Tirukaruhavur
District :  Nagapattinam
State  : Tamil Nadu
Festival: New Moon day in the month of Thai (January-February) and Full Moon day in the month of Chithirai (April-May) are the festivals grandly celebrated in the temple.      

Temple's Speciality : Velladainathar graces as a Banalinga on a square Peeta in the sanctum sanctorum. River Ganga sprang in the well here on the New Moon day in the Thai month (January-February). Based on this story, the holy spring is opened for the use of devotees on this day only and will be closed during the rest of the year      
             
Opening Time :The temple is open from 6.00 a.m. to 10.30 a.m. and 5.00 p.m. to 7.30 p.m, Sri Velladainathaswami Temple, Pillayar Koil Street, Tirukuruhavur, Vadakal post, Sirkali Taluk, Nagapattinam dist. Phone : +91- 9245 612 705.   




Information : Lord Vinayaka in the temple is on a Lotus seat with an umbrella above Him and two fans called Samaram.  Lord Muruga, against the tradition of facing East, is seen facing the South, a direction attributed to Guru.  Lord Muruga is revered as Jupiter-Dakshinamurthy in this temple.  He graces with His consorts Valli and Deivanai.  Special pujas are performed in His shrine on Thursdays, a day attributed to Guru.  There are shrines for Mother Durga with eight hands and Sattainathar.  There is no shrine for Navagrahas the 9 planets.      Those who had committed anything wrong unknowingly are blessed with mental peace if they sincerely pray to the Lord.
            
Greatness Of Temple : On this day the procession idol of Gnanasambandar is brought to this temple from the Sirkali Brahmmapureeswarar temple. The Presiding deity of this temple (Velladainathar) and Goddess (Kavianganni) grants audience to Sambandar and give him the Theertham. Sambandar returns to Sirkali in the evening. This is celebrated as grand festival  During his pilgrimage, Saivite Saint Sundarar came to this place to worship Shiva, but could not find the temple as the place was a dense jungle then. He sadly continued his journey with his followers. When he felt very hungry, an old man came to him and said that he was feeding Shiva devotees at a nearby place and asked him to come there for a lunch. Sundarar and his followers enjoyed a good feast coupled with hospitality of the host.  After the lunch, Sundarar slept for a while as he was very tired then. When he woke up, he found neither the feeding camp nor any sign of feeding event.  He realized that it was Lord Shiva who quenched his hunger. Lord Shiva appeared before Sundarar and showed him the temple. This Feeding event is celebrated as a great festival on the Full Moon Day of the month of Chithirai (April-May) in the temple.  Devotees believe that worshipping the Lord here would ensure them a life free of hunger.
     
Temple History : Tirugnana Sambandar as a child devotee of Lord Shiva and blessed with a high degree of poetic abilities by Mother Parvathi, fought the Jains who waged a war against Saivism. According to the literary history of Tamilnadu, it was Child Sambandar and the ripe old Saivite saint, who had a first hand knowledge and experience of the Jain designs fought the war together. In the various challenges Sambandar was drawn, he defeated the Jains and re-established the glory of Saivism in Tamilnadu and almost eliminated Jainism from the Tamil soil. As was agreed between Sambandar and the Jains, the latter were hanged after Sambandar won every challenge.  However, Sambandar had to incur the sin of causing the death of the Jains and wanted to go to Kasi to make amends for the sin.  He prayed for the permission of Lord Shiva in Sirkali to proceed to Kasi.  Lord appeared before Sambandar and brought Ganga here itself.  The child saint had a dip in holy Ganga and got relieved of the sin.  A temple was erected here later.
--------------------------------------------------------------------------------------------------------------------
274 Sivalayam : sri Sattainathar temple

Moolavar : Sattainathar, Brahmapureswarar, Thoniyappar
Urchavar : Somaskandar
Amman : Periyanayaki, Tirunilai Nayaki
Thala Virutcham : Parijatham, Pavalamalli
Theertham : 22 Theerthams including Brahmma Theertham
Agamam Pooja : Pancharathra Agama
Old year : 2000 years old
Historical Name : Brahmma Puram
City : Sirkazhi
District : Nagapattinam
State : Tamil Nadu
Singers:Lord of the temple is praised my many a saint as Tirugnanasambandar, Manickavasagar, Arunagiriar, Gananathar, Nambiandar Nambigal, Pattinathar, Sekkizhar, Arunachala Kavi Rayar, Marimutha Pillai and Muthu Thandava Dikshithar. It is said that Saint Tirugnana Sambandar sung his first hymn on Lord after Mother Uma fed Him with milk in the golden vessel when he was crying as a child on the steps of the tank of the temple.  The milk has the Saraswatha power that made the child a poet of excellence.  This event is mentioned in the 75th verse of Soundarya Lahari by Acharya Adi Sankara.  Ganasambandar is mentioned as Drivida Sishu in the verse. In his first verse, the child mentions Lord Shiva wearing the ear ring with sacred ashes all over His body and one that stole his heart.  He names the place as prestigious Brahmmapuram.   This is the 14th Shiva temple on the northern bank of Cauvery praised in Thevaram hymns.      
             
Festival : Brahmmotsavam in the temple begins on the Chithirai Tiruvadhirai day in April - May. The event of Mother Uma feeding Gnanasambandar is celebrated on the second day. The milk fed to the child saint is offered as Prasad. Consuming this milk ensures salvation to the devotee, it is believed. Oil abishek is offered to Lord Uma Maheswarar in the hill temple on the first day of Tamil months Chithirai (April-May); Aadi (July-August); Aipasi (October-November); Thai (January-February) and on Karthikai Deepam in November-December, Margazhi Tiruvadirai in December-January and Shivrathri in February-March. Special pujas are performed on Aadi Pooram in July-August, Navrathri in September-October, Thai new moon day in January-February, Vaikasi Moola Star day in May-June, Aani Rohini Star day in June-July and Sadayam Star day in Aipasi in October-November.
             
Opening Time:The temple is open from 6.00 a.m. to 1.00 p.m. and from 4.00 p.m. to 9.00 p.m, Sri Sattinathaswami Temple, Sirkali-609 110, Nagapattinam district, Phone:+91- 4364-270 235, +91- 94430 53195     
            
Information : Those involved in litigations and seeking child boon pray to Lord and Mother in the temple. Devotees offer vastras to Lord and Mother and contribute for the renovation of the temple.

  
 









Greatness Of Temple : During the Maha Pralaya floods calamity destroying the world, Lord Shiva clothed with 64 arts, using a boat of Ohm Moola Mantra was travelling on the flood waters with Mother Uma. He saw this place-Sirkali unaffected by the floods and alive.  He chose this place and stayed with the name Thoni Appar-God with the boat.  Mother took the name Tiru Nilai Nayaki. Lord Brahmma worshipped Lord Shiva here in the form of Linga-Brahmma Pureeswarar, as Sattinathar destroying pride and arrogance.  Lord graces here in three forms as as Brahmma, Vishnu and Shiva. They granted darshan to child saint Gnanasambandar. The place is revered as Gurumurtham. Lord Sattai Nathar is in the top tier blessing devotees with Lord Bhairava attributes. Lord Vishnu had to face adverse dosha for punishing emperor Mahabali. To prove that Shiva and Vishnu are not different but one, Shiva wore the skin of Vishnu as a shirt. Mother Mahalakshmi misunderstood this as Shiva had destroyed Vishnu and stopped wearing flowers in Her head. As a custom in the temple, women coming to this shrine avoid wearing flowers in their heads.  Men should come to the shrine without shirts.  As Lord Shiva is the supreme head of all Laws-Sattam in Tamil, He is praised as Satta Nathar.  Hence, people involved in litigation seek His blessing to win their cases. Sirkali is the place, where Lord taught spiritual lessons to Mother Parvathi during the Maha Pralaya period.  This is the 11th Shakti Peetas where Mother graces as Mahalakshmi.  Worshipping here relieves the devotee from pride and arrogance.  Sirkali is the only temple where Brahmma-Saraswthi, Shiva-Parvathi and Vishnu-Mahalakshmi and the procession deity bless the devotees from the sanctum sanctorum as in Mount Kailash. Sirkali is also a place of Lord Bhairava importance as in Kasi-Varanasi. Lord Bhairava graces in the temple in His eight forms as Asithanga Bahairava, Guru Bhairava, Chanda Bhairava, Krotha Bhairava, Unmatha Bhairava, Samhara Bhairava, Peeshana Bhairava and Akhala Bhairava. The place is as great as Kasi.  Devotees cannot enter the shrine wearing shirts. Special pujas are performed here on Ashtami days-eighth day of new moon or full moon fortnight. The Jeeva Samadhi  monument of Sattai Muni Siddha one of the 18 siddhas is in the temple with a
peeta-stage above.  People can have the darshan of Lord from this platform. Abhishek is performed here on Fridays.  Punugu-a cosmetic paste is applied at 12.00 p.m with garland of Vada-Vadamala. Pulse porridge is offered as nivedhana. Sage Romasa performed penance in Mount Kailash on Lord Shiva.  He prayed to Lord that He should grant the Kailash darshan to people of South.  Meantime, a contest arose between Vayu and Adisesha about their might.  Adisesha covered the whole Kailash. Vayu could not move the mount.  At the request of Devas, Adisesha slightly raised one of his heads to yield in to Vayu.  Thus a small part of the mount was brought to this place by 20 birds.  A king Kalavithu by name was sad as he had no child.  He came to this Chinna Kayilai-Small Kailash, worshipped Lord and got his boon realized. This is a three tier hill temple. Lord Brahmma Pureeswarar and Mother Tirumalai Nayaki bless the devotees from the base temple. This is praised as Lingamurtham. Six pujas are performed here a day. Lord Brahmma became proud thinking that He was greatest among the Murthis. To teach Him a lesson, Lord made him forget the Pranava Mantra.  Realizing His folly, Brahmma worshipped Lord Shiva here and got his memory restored. As Brahmma worshipped here, the place is known as Brahmmapuram and Lord as Brahmma Pureeswarar. In the middle temple Mother Uma and Lord Maheswarar bless the devotees. He is also praised as Thoni Appar.  Four pujas are performed in this temple.  This part of hill is known as Thoni Malai.
     
Temple History : Tirugnana Sambandar one of the Saivite Gurus was born to Shivapada Hrudayar and Bagavati Ammai.  He is regarded as the incarnation of Lord Muruga. He is praised as Ilaya Pillayar-younger son. He came to Brahmma Theertham with his father.  The father left the boy on the bank of the tank and went for a bath. Hungry child began to cry for food. Lord Shiva asked Mother Parvathi to feed the boy. Mother not only fed the little boy with milk but with wisdom too blended in the milk. Sambandar was happy and sat on the steps of the tank with the milk spots on the face. Shivapad Hrudayar blamed the boy for accepting the milk from somebody. When the father was about to beat the boy, he showed upwards the divine parents who fed him.  Shivapada Hrudayar’s joy knew no bounds to hear the truth. The little child’s first hymn “Thodudaya Sevian” was born her3e to enrich the spiritual literature of Tamil.  Gana Sambandar had sung 67 pathigams of 10 verses each, Tirunavukkarasar 3 pathigams and Sundarar one pathigam on Lord of Sirkali temple.
--------------------------------------------------------------------------------------------------------------------
274 Sivalayam :sri Aranyeswarar temple

Moolavar : Aranyeswarar – Aranya Sundarar
Amman  :  Akhilandeswari
Thala Virutcham : Panneer tree
Theertham :  Amirtha theertham
Agamam Pooja : Kameekam
Old year : 2000 years old
Historical Name : Keezhai Tirukattupalli
City : Tirukattupalli
District  : Nagapattinam
State : Tamil Nadu
Singers: Saints Sambandar and Tirunavukkarasar had sung the praise of the Lord of the temple in their Thevaram hymns.  This is the 12th Lord Shiva temple on the northern bank of Cauveri praised in Thevaram hymns.      
             
Festival :  Shivarathri in February-March; Aipasi Skanda Sashti in October-November; Arudra Darshan in December-January and Vinayaka Chaturti in August-September are the festivals celebrated in the temple.      
             
Temple's Speciality : Lord in the temple is a swayambumurthy. There are seven Lingas in the Temple of which one Linga has two Banas, a different form in this temple.      
             
Opening Time :    The temple is open from 8.00 a.m. to 11.00 a.m. and from 6.00 p.m. to 7.30 p.m, Sri Aranyeswarar Temple , 3/288, Sannadhi street, Tirukattupalli, Tiruvengadu – 609 114. Phone :    +91- 4364 - 256 273, 94439 85770, 98425 93244     


            
Information :  The vimana above the sanctum sanctorum is called Dwaidala Vimana.  Dasalinga is in the prakara. There are seven Lingas here with one having two Banas on the Avudayar. This is a rare and different Linga not commonly seen in Shiva temples. Mentioning this form in his hymn, saint Gnanasambandar says “Lord having Dasalinga with Him”. Tiruvengadu, known for Mercury planet worship is just a kilometer far from here.
     
Greatness Of Temple :  Lord Dakshinamurthy is seated on a square shaped peeta facing west with 6 disciples though in temples He appears with four disciples, Sanakar, Sanathanar, Sananthanar and Sanathkumarar. He is also praised as Rajayoga Dakshinamurthy. As Lord Shiva was in the midst of a jungle Aaranyam He is also called Aranyeswarar and Kattazhagar in Tamil - Lord of the Jungle.  Mother in a separate shrine is facing south. As all prominence is for Lord alone, there is no shrine for the Navagrahas the nine planets. Those who had been demoted from positions and those deprived of promotions despite honest and hard work perform special pujas to Lords Dakshinamurthy and Aaranyeswarar offering vastras. They believe that they will recover their losses. Lord Vinayaka, praised as Nandu Vinayaka was worshipped by a cancer-Nandu in Tamil to regain his original Gandharva personality.  The Nandu is his peeta. He does not have His Mouse vehicle with him as the Nandu plays the role. Lord Aranyeswarar also has His name after a sage of the name who worshipped here. The sculpture showing the sage worshipping Lord Shiva while Mahakalar is blowing the conch, is in the prakara.
     
Temple History : Devas appealed to Indira to protect them from the atrocities of demon Vruddhasura with the might of the boon he obtained from Lord Brahmma. Indira fought the demon and killed him and incurred the evil effect of the killing. He also lost his kingship of the Devas. As advised by his Guru, Jupiter, he came down to earth to worship Lord Shiva for remedy. He came to this jungle region Aaranyam, found a Swayambulinga and performed pujas.  Pleased with his devotion, Lord appeared before Indira and said that the effects of both good and bad deeds had to be experienced by all. Lord stayed here then as Aaranyeswarar.
--------------------------------------------------------------------------------------------------------------------
274 Sivalayam  sri Sapthapureeswarar temple

Moolavar    : Sapthapureeswarar
Amman : Osai Kodutha Nayaki
Thala Virutcham : Kondrai
Theertham : Surya and Ananda theerthams opposite the temple
Old year : 2000 years old
Historical Name : Sapthapuri
City : Thirukolakka
District : Nagapattinam
State : Tamil Nadu
Singers : Saint Sundarar in his Thevaram hymn had mentioned the mercy of the Lord in gifting thalams-sound producing instrument to Saint Gnana Sambadar.  This is the 15th Shiva Temple on the northern bank of Cauvery praised in Thevaram hymns.      
             
Festival : Chithirai Tiruvadhirai festival in April-May is celebrated in Sirkali Sattainathar temple with the milk utsav on the second day. After this event, Saint Gnanasambandar comes to this temple, when Lord Shiva gives the golden plate to the saint. The saint returns to the first temple in a flower decorated palanquin. Theerthavari is celebrated on all Karthikai Sundays in November-December.
             
Opening Time : The temple is open from 7.30 a.m. to 11.00 a.m. and from 4.30 p.m. to 8.00 p.m, Sri Sapthapureeswarar Temple, Tirukolakka : 609 110. Nagapattinam district, Phone:+91- 4364-274 175.     



 
         
Information:Ananda Theertha tank opposite the temple, Vrushbaruda Darshan of Lord on the west of front entrance near a spring, Vahan mandaps while entering the temple, shrines of four Saivite saints, Adhikara Nandhi greet the devotees.  Lords Vinayaka, Somaskanda, Subramania, Mother Lakshmi, Sani Bhagwan, Lord Bhairava and Sun shrines are in the prakara.  Procession deities are safely kept in the mandap right of the prakara.  Mother Ambica is in a separate shrine.  Of the procession deities, noteworthy is the one of Saint Gnana Sambandar holding the golden plate.  Lords Vinayaka, Dakshinamurthi, Lingodhbava, Brahmma and Mother Durga are on the goshta walls. Those unable to speak and facing stammering problems bathe in the Ananda Theertha and pray to Ambica to bless them with the sound as she introduced the sound to a metal plate. (Osai in Tamil means sound. Kodutha means given and Nayaki Mother Goddess. Hence the name Osai Kodutha Nayaki. Lord gave the plate to the saint but it was Mother who gave the life to it with the sound).  Devotees place honey at the feet of Mother, perform archanas and consume it then.  As this is also the place where Mother Mahalakshmi performed penance on Lord Vishnu seeking His hands, women pray in the shrine on Mondays and Fridays for 6 weeks continuously with turmeric archanas to realize their wedding wish.

Greatness Of Temple : Those aspiring excellence in music pray in the temple.  It is noteworthy that Lord who gave the Thalam plate to Ganasambandar and Mother who gave the sound, bless the devotees at the entrance of the temple.  Indira and Sun had gained rich benefits from their prayers to Lord. Mother Mahalakshmi in the temple is a powerful and merciful Goddess pouring all boons to devotees. As the wedding of Mahalakshmi with Lord Vishnu took place here, the place is named Tirukolakka. Presently, the temple is known as Tiru Thalam Udayar Koil.
     
Temple History : Saint Gnanasambandar, fed with the wisdom milk by Mother Parvathi, visited many Shiva temples singing his praise clapping his hands in ecstasy. Seeing the little saint clapping his hands, to relieve him from the pain of doing so, Lord gave him two golden plates, but they produced no sound.  Mother infused the sound energy into them.  Hence, Lord is praised as Thalapureeswarar and Mother Osai Kodutha Nayaki.
--------------------------------------------------------------------------------------------------------------------
 274 சிவாலயங்கள் : அருள் மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்)
அம்மன் : மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை)
தீர்த்தம் : அர்ஜுன தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவிசயமங்கை
ஊர் : திருவிஜயமங்கை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம் : மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர் தண்ணறுஞ் சாந்தமும் பூவு நீர்கொடு விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே. திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 47வது தலம்.  
      
திருவிழா : திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனியில் திருக்கல்யாணம் நடைபெறும்.  
      
தல சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 09:00 மணி முதல் 10:00 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.  அருள் மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை : 612 301, தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91- 435- 294 1912, 94435 86453, 93443 30834 
     

தகவல் : மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர்.

ஆயுள் விருத்தி வழிபாடு : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் இத்தலத்தைப் போற்றி தேவாரம் பாடியுள்ளனர். திருநாவுக்கரசர் எமனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இதனால் ஆயுள் விருத்திக்காகவும் ஆயுள் தோஷம் நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். அம்பாள் மங்களநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். படித்து முடித்து முதலில் வேலைக்குச் செல்பவர்கள் தேர்வில் வெற்றி பெற விஜயநாதருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள். அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது. கோயிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர், காலைபைரவர், சூரியன், நால்வர் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.

ஸ்தல பெருமை : சோழர்கால முறைப்படி கட்டப்பட்ட கோயில். இங்கு மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும் ராஜகோபுரம் சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் மங்கள நாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும் பின் இரண்டு கைகளில் ஒரு கையில் அட்சரமாலையும் ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

ஸ்தல வரலாறு : மகாபாரத போரின்போது பாண்டவர் கவுரவர் படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். இவ்வேளையில் வேதவியாசர் அர்ஜுனரிடம் சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனன் சிவனை வேண்டி தவமிருந்தான். இதையறிந்த துரியோதனர் முகாசுரனை அனுப்பி தவத்தை கலைக்க முயன்றார். பன்றி வடிவில் வந்த அசுரனை அர்ஜுனன் வீழ்த்தினான். அங்கு வந்த ஒரு வேடன் தானே பன்றியை வீழ்த்தியாகச் சொன்னார். இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அவ்வேளையில் சுயரூபம் காட்டிய சிவன் பாசுபத அஸ்திரம் கொடுத்தார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம் ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா? என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம் அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம் என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். அர்ஜுனர் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார். அர்ஜுனனுக்கு விஜயன் என்றும் பெயருள்ளதால் சிவன் விஜயநாதர் என்று பெயர் பெற்றார். தலத்திற்கும் திருவிஜயமங்கை என்ற பெயர் ஏற்பட்டது.
-------------------------
அத்தி வரதர்

தங்க கவசமிட்ட அனந்த பத்மநாபரே இப்போது அந்நிய பயம் நீங்கி தைரியமாக உலகுக்கு காட்சி அளிக்க... 1709ல் துவங்கிய பழக்கம் இப்போதும் தேவையா! அத்தி வரதர் 4  முதல் இரண்டு பதிவை நீக்கி விட்டேன் என்பதால் என் கருத்தில் மாற்றம் உள்ளதாக நினைக்க வேண்டாம். வட கலை / தென்கலை ப்ரச்சனை நமக்கு தேவை இல்லாத ஒன்று... ராமானுஜர் வைணவ சித்தாந்தங்களை பரப்ப ஸ்ரீ ரங்கம் மற்றும் காஞ்சி ஆகிய இரண்டு இடங்களில் பாடசாலைகளை நிருவினார்... அவை, வட கலா சாலை காஞ்சி தென் கலா சாலை ஸ்ரீ ரங்கம் என காலப் போக்கில் வட / தென் கலை ஆகிப் போனதாம். எது எப்படியோ... பாரம்பர்ய திருமங்கை மன்னன் (தென்கலை) பாசுர பாடல்களை வரதருக்குப் முன் பாடக்கூடாது என கைகலப்பில் இறங்கிய பொருக்கிகள் தான் பகுத்தறிவுவாதிகளே விட அதிகம் விஷ்ணுவை அசிங்கப்படுத்தி உள்ளனர். வடகலை / தென்கலை பிரச்சனை பூதாகாரமாக ஒரு சமீபத்திய வைணவ ஆச்சாரியர், A1, அவளுக்கு நக்கிய பைபிள் மாமா வேணு ஆகியோர் மூல காரணம். திருமங்கை மன்னன் பாசுரம் பாடும் போது, சடலம் போர்த்தப் படுவது போல பெருமாள் துணியால் மூடப்பட்டு, இஸ்லாமியர்கள் மெக்காவில் வல இடமாக (சுடு காட்டில் ப்ரேத சமஸ்காரம் போல அப்ரதக்ஷிணமாக) வரதரரை தூக்கிச் சென்ற புறம் போக்கு நாய்களை தண்டிக்காத பெருமாள் சொரியான் சக்களத்தன் ஈனமணியை தண்டிச்சாராம்... ஆண்டாள் ப்ரச்சனையின் போது சைவ வைணவ ஒற்றுமை அதிகமாகவே வெளிப்பட்டது... அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்தின் போது சிவ விஷ்ணு பேத அபஸ்வரம் விகாரமாக வெளியே தெரிந்து...  இன்று வைணவத்துக்கு உள்ளேயே வட / தென் கலை போர். தினமும் சந்தியாவந்தனம் (ஒரு வேளையாவது) செய்து விஷ்ணு வழிபாட்டை தவறாது செய்து வரும் எனக்கே அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது இல்லவே இல்லை.

ஒரு முக்கிய சந்தேகம் கலந்த செய்தி...

மாற்று மதத்தினருக்கு பயந்தே அத்திவரதர் ஜலத்தில் மறைக்கப்பட்டார்...  இனி நிரந்தரமாக வெளியில் ப்ரதிஷ்டை செய்து விடலாம்... சரிதானே...

பட்டர்களுக்கும் / அற வேசி அரசுத்துறை க்கும் நல்ல வருமானம் வருமே!!!

கூட்டத்தை கட்டுப்படுத்த திட்டமிட்டு இப்படி ப்ரசாரம் செய்கிறார்களோ என்று நான் எண்ணுகிறேன்... காரணம்... திருநின்றவூர் ராமர், கோழிகுத்தி வான்முட்டி பெருமாள், வந்தவாசி பொன்னூர் மச்சாவதார பெருமாள் கோவில்களில் எல்லாம் இன்று விளக்கு எரிக்கக் கூட வழி இல்லை...

பழகப் பழக பாலும் புளிக்கும்... இப்போது திரண்டுள்ள கூட்டம்... விளம்பர /செல்ஃபி மோக கூட்டம். பெருமாள் அருள் பாலிக்க... பொருள் பாலிக்க அல்ல... கடவுளை காட்சிப் பொருளாக்கிய காசுக்கு நடத்நப்படும் கூத்து இது. அத்திவரதர் : 5  24 நாள் சயன கோலம்; 24 நாள் நின்ற கோலம்
இப்ப செய்தி உலாவுது... பிண்ணம் ஆகி உள்ளதால் நாளை துவங்க இருந்த நின்ற கோலம் ஆகஸ்ட் 1 முதல் துவங்குமாம்!! இல்லை இல்லை கடைசி 10 நாள் மட்டுமாம்... சேதமாகி விட்டதால் தான் நீரில் விஸர்ஜனம் செய்யப்பட்டதா?! அல்லது நிரந்தர மறு ப்ரதிஷ்டை கோரிக்கையை நிராகரிக்க புதிய பொய்யா?! பிண்ணம் ஆகிவிட்ட வரதரை எதற்காக 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளிக் கொண்டு வந்து ஆராதிக்க வேண்டும்?!
வரதரே நின்ற கோலம்தானே... அவருக்கு ஏன் சயன கோலம்?!
பிண்ணம், 40 வருடம், சயண கோலம் / நின்ற கோல சடங்குகள் / விதிகள் யாரால் எப்போது எந்த அடிப்படையில் வகுக்கப்பட்டது?! அத்திவரதர் : 6
அத்தி மரத்தால் உருவாக்கப்பட்ட திருமேனி... இந்த வரிசையில் இப்போது, கோழி குத்தி வான் முட்டி பெருமாள், திருநின்றவூர் ராமர், வந்தவாசி பொன்னூர் மச்சாவதார பெருமாள் வந்துள்ளார்கள். இதே போல ஒரு தகவல் ... திருவெள்ளரை (ஆதி திருவரங்கம்) செந்தாமரை கண்ணன் ... சுமார் 12+ அடி உயரம்... 100 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர்... இப்போது உள்ள மூலவர்... இலுப்பை மரத்தால் உருவாக்கப் பட்டவர்... எவ்வளவு பெரிய மரம் தேடிக் கொண்டு வந்து உருவாக்கி இருப்பார்கள்... பிரமிப்பாக உள்ளது... எழுத துவங்கிவிடவில்லை... நிறைய தகவல் சேகரித்து / பெரியவர்களுடன் விவாதித்து / தகவல் குறிப்பு எடுத்துக் கொண்டே எழுதுகிறேன். அத்திவரதர் 7... இந்த தொடரில் சில கூடுதல் தகவல்கள்...

மூலவர் திருமேனி பற்றி...

கடு சக்கரா... ஆம், இதுவும் ஒரு விதமான மூலிகை தயாரிப்பு... 1000 கணக்கில் சாளக்ராமங்களை உள்ளே வைத்து மூலிகை கலவை கொண்டு உருவாக்கப்பட்ட திருமேனி... அதன் மீது தங்க கவசம் வைத்து உருவாக்கப்பட்டதே... திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர், திருவட்டாறு ஆதி கேசவர்... (பின்னவர் களவாடப்பட்டார்) அத்திவரதர் 8

திருக்கோவிலூர்... திருவிக்ரமஸ்வாமி... உலகளந்தபெருமாள்...
மரத்திருமேனி... சாத்துப்படி தைலக்காப்பு... தைலக் காப்பிலும் வித்யாசம் உண்டு... மரம் / சுதை / தயாரிப்பு கலவை அனுசரித்து... புணுகு /சாம்பிராணி தைலம் என நிறைய வித்யாசங்கள்... ஸ்ரீ ரங்கத்தில் சுதையால் ஆன அரங்கனுக்கு புணுகுத் தைலம்... திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாளுக்கு சாம்பிராணி தைலம்... அத்திவரதர் 9
சிவாலயங்களில் பெரும்பாலும் கல் திருமேனிதான்... விஷ்ணு ஆலயங்களில் தான் மூலவர் உருவாக்கப்பட்ட விதம் நிறைய வித்யாசம் வகைகள்... வர்ண கலாபம்... என்ற ஒரு வகை... (களபம் என்றால் சந்தனம்)
வர்ண கலாபமும் சுதை தான்... ஆனால் மேல் பூச்சு தைலம் அல்ல... இயற்கை மூலிகை வர்ணம்... திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள்
ஸ்ரீ வில்லிப் புத்தூர் வட பத்ர சாயி  அத்திவரதர் 10 வரதர்  பற்றிய விவாதம் துவங்கி வேறு மரங்கள், சுதை, கல் சக்கரா, வர்ண கலாபம் என நீட்டி... மூலவர் / தைலக்காப்பு என பயனித்து... முருங்கை மரத்தால் ஆன ஒரு தெய்வத் திருமேனி பற்றி சொல்லட்டுமா... இருங்க... அதுக்கு முன்பாக... திருக்கண்ணமங்கை பக்தவத்ஸலன் பற்றி... ஆம், தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கல் திருமேனி பெருமாள் (16 அடி உயரம்) மற்றும் தாயார்கள் இருவர்... வருடம் ஒரே ஒரு திருமஞ்சனம் மட்டுமே... ஆடி அமாவாசை கழிந்த கேட்டை நக்ஷத்திரத்து அன்று... ஜேஷ்டாபிஷேகம் என்று பெயர்...
குறைந்த பட்சம் 400 லிட்டருக்கு மேல் நல்லெண்ணெய்.... எனத் துவங்கி... வித விதமான அபிஷேக த்ரவியங்கள்.... 10 - 12 மணி நேரத்துக்கு நீடிக்குமாம் அபிஷேகம்!!! இங்கு கருவறை உள்ளே இரு பெரிய துவாரங்கள் உண்டு ... அதில் தேனீக்களின் கூடு... தக்ஷிணாயனம் உத்திராயணம் என்று மாறி மாறி வலம் / இட மாடங்களில் கருவறை உள்ளேயே கூடு கட்டுமாம் தேனீக்கள். யாருக்கும் எந்த ஆபத்தும் விளைவிக்காது... (இப்போது இல்லை - களவாணி அரசின் அறமில்லா திருட்டுத்துறை யை நம்ப தேனீக்கள் கூட தயாரில்லை). திருவெள்ளறையில் கூட இரு வாசல்கள் உண்டு... நீங்களே விபரம் தேடுங்கள்... ப்ரயோக சக்கரம் பற்றி... எழுதிவிட்டு பின் முருங்கை மர திருமேனி குறித்து...
சில கோயில்களில் மூலவர் சிவன் மேற்கு நோக்கி இருப்பது ஏன்?

பெரும்பாலும் கோயில் கிழக்கு நோக்கியேஇருக்கும். பழமையான கோயில்கள் மேற்கு நோக்கி இருக்கும். இரண்டுக்கும் வேறுபாடு கிடையாது. சுவாமி எந்த திசை நோக்கி இருந்தாலும், வாசலை கிழக்கு திசையாகப் பாவித்து வணங்க வேண்டும் என சில ஆகமங்களும், மேற்கு திசை நோக்கிய சிவலிங்கம் சிறப்புடையது என சில ஆகமங்களும் கூறுகின்றன. இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் இரண்டுமே சிறப்புடையவை தான்.
------------------------------------------------------------------------------------------------------------
சர்வம் லிங்க மயம்

லிங்கத்திலிருந்தே அனைத்தும் உண்டாயின. அதுபோலவே இறுதியில் லிங்கத்திலேயே எல்லாம் அடங்குகின்றன. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய யாவும் அதிலேயே அடங்கியுள்ளன. எனவே அது லிங்கம் எனப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------
பைரவ விரதம்!

தை மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் பைரவரை குறித்துச் செய்யப்படும் விரதம் இது. செவ்வாய்க்கிழமையை மங்கல வாரம் என்று அழைப்பார்கள். செக்கச் செவேல் என்று சிவந்த ஒளி வீசுவதால் இந்தக் கிரகம் செவ்வாய் எனப் பெயர் பெற்றது. சித்திரை மாத பரணி நட்சத்திரமும், ஐப்பசி மாத பரணி நட்சத்திரமும் பைரவ விரதத்துக்கு உரிய நாட்களாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
காணிக்கைகள் ஏலம்!

பட்டுக்கோட்டைக்கு அருகில், பரக்கலக் கோட்டையில் வெள்ளால மரமாக காட்சி தருகிறார் பொது ஆவுடையார். இவருக்கு, திங்கள்தோறும் இரவு நடைபெறும் பூஜையில் சமர்ப்பிக்கும் நெல், தானியம் போன்ற காணிக்கைகளை, பொங்கல் அன்று ஏலம் விடுவார்கள். அவற்றை ஏலம் எடுத்துச் செல்வதால் வாழ்க்கை வளமாகும் என்பது நம்பிக்கை.
------------------------------------------------------------------------------------------------------------
மிருதங்க தட்சிணாமூர்த்தி!

ஞானமும் மங்கலமும் அருளக்கூடியது தட்சிணாமூர்த்தி தரிசனம். கல்லால மரத்தடியில் சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் நிலையில் அருளும் தட்சிணாமூர்த்தி, பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு  கோலங்களில் அருள்பாலிக்கிறார். அந்தத் தலங்களில் சில இங்கே:

தலை சாய்ந்த நிலை- வேலூர் மாவட்டம்-திருவூறல்.

சிற்ப அழகு- ஆலங்குடி

வீராசன நிலை- சென்னை, திரிசூலம்

யோகாசன மூர்த்தி- அனந்தழர், ஆந்திரா

வியாக்யான மூர்த்தி - காஞ்சி அருகில் அகரம் கோவிந்தவாடி.

நந்தியுடன் கூடிய மூர்த்தி - வள்ளலார்கோயில்-மயிலாடுதுறை

வீணையுடன் தட்சிணாமூர்த்தி-நஞ்சன்கூடு

மிருதங்க தட்சிணாமூர்த்தி-கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.

வீணையுடன் நின்ற நிலையில்- நாகலாபுரம் வேதநாராயணன் திருக்கோயில், திருத்தணி.
------------------------------------------------------------------------------------------------------------
தஞ்சை பெரிய கோயிலில் வாராஹி வழிபாடு!

தஞ்சை பெரிய கோயிலில் சப்தமாதர்களுள் ஒருவரான வாராஹி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இருள் கவ்வும் மாலை வேளையில் இங்குள்ள வாராஹியைத் தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனை தரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார அபிவிருத்தியும் கிடைக்கும். பில்லி, சூனியம், திருஷ்டி மற்றும் எதிரிகளின் தொல்லைகள் நீங்க சனிக்கிழமைகளில் வழிபடுதல் நலம் என்கிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
பூதூவும் கை!

தினமும் வீட்டில் காலையிலும்,மாலையிலும் விளக்கேற்றி வழிபாடுசெய்யும்போது, இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம், ஸ்லோகம் ஜெபிப்பதும், தேவார, திருவாசக, பிரபந்தப் பாடல்களைப் பாடுவதும் அவசியம். பூஜையின் நிறைவில், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, பூக்களை அள்ளி, சுவாமியின் திருவடியில் தூவ வேண்டும். இதற்கு புஷ்பாஞ்சலி என்று பெயர். தெய்வ கைங்கர்யங்களை வலது கையால் தான் செய்ய வேண்டும் என்றாலும், புஷ்பாஞ்சலியின்போது மட்டும், இடக்கையையும் சேர்த்து செய்வதில் தவறில்லை என்கிறது சாஸ்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------
சுயம்புவை வணங்கலாம்!

கோயிலில் கருவறையில் மூலவரும், அதன் அருகில் உற்சவரும் எழுந்தருளியிருப்பர். திருவிழா காலத்தில் உற்சவர் மட்டும் திருவீதி எழுந்தருள்வது வழக்கம். சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கும் அருள்புரிவதற்காக வீதியுலா நடக்கிறது. அப்போது உற்சவர், மூலவரின் அனைத்து சக்தியையும் தன்னோடு எடுத்து வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் மூலவரை தரிசித்தல், அர்ச்சித்தல், வலம் வருதல் போன்ற எந்த வழிபாட்டையும் மேற்கொள்வது கூடாது என்கிறதுசிவயோகி ஸம்வாதம். ஆனால், சுயம்பு மூர்த்தியாக(தானாக தோன்றியது) எழுந்தருளியுள்ள கோயில் களில் மட்டும் மூலவரைத் தரிசிக்கலாம். ஆனால், அர்ச்சனை செய்யவோ, வலம் வரவோ கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------
தந்தையின் பெயரை மாற்றிய மகள்!

தட்சன் என்பவனுக்கு மகளாகப் பிறந்ததால், பார்வதிதேவிக்கு தாட்சாயணி என்ற பெயர் உண்டு. அவன் அவளை சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தான். மருமகனுக்கு மதிப்பளிப்பது உலக இயல்பு. அதிலும், தனது மருமகன் இறைவன் என்பதால் அதீத மதிப்பளித்திருக்க வேண்டும். ஆனால், தட்ச@னா, மருமகன் தனக்கு மதிப்பளிக்க வேண்டுமென விரும்பினான். இதனால் அவனுக்கு பார்வதிதேவி சிவேதரன் என்று பெயர் வைத்தாள். சிவனுக்கு இதரன் என்று இதைப் பிரிக்கலாம். சிவ என்றால் மங்களம். மங்களத்துக்கு இதரன் என்றால் மங்கள குணங்களுக்கு எதிரானவன் என்று தந்தைக்கே பெயர் சூட்ட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானாள். தந்தையே தனக்கு எதிராகத் திரும்பியதால் தன் தந்தையின் பெயரால் ஏற்பட்ட தாட்சாயணி என்ற பெயர் தனக்கு தண்டனை தரப்பட்டது போல உணர்ந்தாள் அவள். எனவே, தன் தந்தைக்கு தட்சன் என்ற பெயரை மாற்றி, சிவேதரன் என்று பெயரைச் சூட்டிவிட்டாள். பாகவதம் ஸ்லோகம் ஒன்றில் தாட்சாயணியின் கதையும், சிவேதர என்ற வார்த்தையும் வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
தனியாக இருந்தால் பயமா?

இக்காலத்தில், பெரும்பாலும் தனிக்குடித்தனம் இருப்பவர்களே அதிகம். கணவர் வேலைக்குப் போய்விட்டால், வீட்டில் இருக்கும் மனைவிக்கு பயமாக இருக்கலாம். பெண்கள் வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால், வெளியாட்களால் பிரச்னை ஏற்படலாம். இப்படிப்பட்டவர்கள் நவதுர்க்கைகளின் பெயரைச் சொன்னாலே போதும். இந்த துதிக்கு சக்தி காப்பு என்று பெயர். மார்க்கண்டேய முனிவருக்கு பிரம்மா உபதேசித்த மந்திரம் இது. சைலபுத்ரீ, பிரும்மசாரிணீ, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனீ, காளராத்ரீ, மகா கவுரி, சித்தி தாத்ரீ என்ற நவ சக்திகளே! உங்கள் திருப்பாதங்களில் சரணடைகிறேன், என்பதே அந்த மந்திரத்தின் பொருள். இந்த வாக்கியத்தை உச்சரித்தாலே போதும். பயம் விலகிப்போகும். இந்த மந்திரத்தைச் சொல்பவர்கள் தீயில் சிக்கி னாலும் தப்பித்து விடுவர். பகைவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர். இருளான பகுதிகளுக்குச் செல்லும் போது பயம் இருக்காது. எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும். செல்வ வளமும் ஏற்படும் என்கின்றன நூல்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
புரியாவிட்டாலும் நன்மை!

சீதக்களப செந்தாமரைப் பூம் என்று துவங்குகிறது அவ்வையார் அருளிய விநாயகர் அகவல். இதைப் படித்தால் புரியவில்லையே என பலர் ஏங்குவதுண்டு. யோக சாஸ்திரத்தின் ஒரு பகுதி இந்த அகவலில் இருப்பதால், எதற்கு வம்பென விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் போன்ற எளிமையான பாடல்களையே பக்தர்கள் பாடுகிறார்கள். நிஜத்தில் விநாயகர் அகவல் பல நன்மைகளைத் தரக்கூடியது. இதைப் புரிந்து படித்தால் தான் பலன் என்பதில்லை! புரியாமல் படித்தாலும் நன்மை தரும். ஏனெனில், அத்தகைய மகத்துவம் அவ்வையாரின் பாடல்களுக்கு உண்டு. குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும் இந்த அகவலைத் தவறாமல் படிக்க வேண்டும். அவ்வையார் பெண் என்பதாலும், குழந்தைக் கவிஞர் என்பதாலும் அவர்களுக்கே இதில் உரிமை அதிகம். இந்த அகவலைச் சொல்வதால் வீட்டுக்குமட்டுமல்ல, நாட்டுக்கும் நன்மை கிடைக்கும். இன்றைய பாதுகாப்பற்ற நிலையில் விநாயகர் அகவல் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
------------------------------------------------------------------------------------------------------------
சிவனுக்கு பிரியமான பூக்கள்!

சிவபெருமானுக்கு என்னென்ன மலர்கள்  பிரியமானவை என்பது பற்றியும், அதை அணிவிப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் அப்பைய தீட்சிதர் என்ற தீவிர சிவபக்தர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் எழுதியுள்ளார். அந்த ஸ்லோகத்தின் பொருளைக் கேளுங்கள்.  பரமேஸ்வரா! உன் மேல் எருக்கையும், த்ரோணம் என்னும் தும்பை மலரையும், அர்ச்சனை செய்தாலே போதும். அது ஒருவனுக்கு மோட்ச சாம்ராஜ்யத்தை என்னும் பேரின்ப வீட்டைத் தந்து விடுகிறது,  என்பதாகும். எருக்கு, தும்பை மலர்கள் பெண்கள் சூடாதவை. எல்லாராலும் ஒதுக்கப்படுபவை, விநாயகருக்கு மட்டுமல்ல, சிவனுக்கும் எருக்கு உகந்ததாகிறது. இனி சிவனுக்கு வில்வமாலையுடன், எருக்கம் மலர்களையும் அர்ச்சனைக்கு எடுத்துச் செல்லலாம். இந்த மலர்களை சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்து அதையே பிரசாதமாகப் பெற்று வந்து, நம் பூஜை அறையில் வைத்துவிட்டால், இறைவனின் தன்மையே நமக்கும் வந்துவிடும். காஞ்சிப்பெரியவர் சொல்லும் தகவல் இது.
------------------------------------------------------------------------------------------------------------
கஞ்சி முகம் என்றால்.. அர்த்தம் கொள்வது எப்படி?

அம்பாள் கோயில்களில் கஞ்சி படைப்பது வழக்கம். குறிப்பாக, ஆடிமாதத்தில்  ஆடிக்கஞ்சி என்றே சொல்வார்கள். ஆனால், கஞ்சி குடிக்காதவள், கம்பஞ்சோறு உண்ணாதவள், வெஞ்சினங்களை (காய்கறிகள் சேர்த்து சமைத்த சாதம்) விரும்பாதவளாக ஒரு அம்பாள் இருக்கிறாள். யார் அவள் என்றால் காஞ்சி காமாட்சியம்மனைக் குறிப்பிடுகிறது ஒரு பாடல். கஞ்சி குடியாளே கம்பஞ்சோறு உண்ணாளே வெஞ்சினங்களொன்றும் விரும்பாளே என்ற பாடல் அது. இதில் கஞ்சி  குடியாளே என்றால் காஞ்சிபுரத்தில் வசிப்பவள் என்று பொருள். இன்னொரு அர்த்தமும் உண்டு. கஞ்சி என்னும் சொல்லுக்கு தாமரை என்றும் ஒரு பொருளுண்டு. கஞ்சி குடியாள் என்றால் தாமரையை தன் முகத்தில் குடிவைத்தவள், அதாவது தாமரை மலர் போன்ற முக அழகுடன் திகழ்பவள் என்றும் ஒரு பொருளுண்டு. அதனால், அழகான பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் கூட இனி கஞ்சி முகத்தவனே, கஞ்சி முகத்தவனே என்றும் வர்ணிக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
கோயில் பூஜையின் போது மணியைவேகமாக ஒலிப்பது ஏன்?

கோயிலில் சுவாமியை தரிசிக்கும் போது ஐம்புலனும் ஒன்றி வணங்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தும் வழிபாட்டில் ஈடுபடும்போது வேறுகாட்சிகளை கவனித்தால் மன ஒருமைப்பாடு குலைந்து விடும். மனம் ஒன்றுபடாமல்  வழிபடுவது வீண் செயல். மணியை வேகமாக ஒலிக்கச் செய்யும் போது, அதன் நாதத்தில் மனம் லயித்து விடுவதால், புலன்கள் செயல் இழந்து விடுகின்றன. ஒன்றியிருந்து நினைமின்காள்; உன் தமக்கு ஊனமில்லை என்னும் திருநாவுக்கரசரின் தேவாரமும் இதை வலியுறுத்துகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
சுவாமியை நேருக்கு நேர் நின்று வணங்கக் கூடாது .. ஏன்?

பொதுவாக பெரியவர்களிடமும், சுவாமியிடமும் நேருக்கு நேர் நின்றுவணங்குதல், பேசுதல் கூடாது. நமது பணிவையும், அன்பையும் தெரிவிக்க ஒருபுறம் சற்று விலகியிருந்து வணங்குவதே முறையாகும். தெய்வங்களை நேரே நின்று வணங்காமல், கடைக்கண் அருட்பார்வை பெற ஒதுங்கியிருந்து வழிபடும்படி சாத்திரங்கள் கூறுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
விரத காலத்தில் பயறுவகை, பாகற்காயைத் தவிர்ப்பது ஏன்?

அப்படி ஒன்றும் வழக்கில் இருப்பதாகத்தெரியவில்லையே! உங்கள் குடும்ப வழக்கமாக இருக்கலாம். வெங்காயம், பூண்டு போன்ற சிலவற்றைத் தவிர பயறு வகை, பாகற்காயைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை.
------------------------------------------------------------------------------------------------------------
கோபத்தைப் போக்க எந்த தெய்வத்தை வணங்குவது?

விநாயகர், முருகன், லட்சுமி நாராயணர், உமாமகேஸ்வரர் போன்ற தெய்வங்களை வழிபட கோபம்அகலும். இது மட்டும் போதாது. ஒரு விஷயத்தில் கோபப்படும் சூழல் ஏற்பட்டால், முதலில்பேச்சைத் தவிர்த்து விட வேண்டும். தனிமையில் நிறைய யோசிக்க வேண்டும். நமக்கு வெற்றியைத் தரும் வழியைத் தேர்ந்தெடுத்து நிதானமாக நிறைவேற்ற வேண்டும். கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. வளைந்து கொடுத்தால் உலகையே வெல்ல  முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------
திருமாலும் சிவராத்திரியும்!

திருமால் பன்றி அவதாரமெடுத்து சிவபெருமானின் திருவடியைத் தேடிச் சென்ற இரவே சிவராத்திரி என்பது பல இலயக்கங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அநேகமாக எல்லா சிவன்கோயில்களிலும் அமைந்துள்ள லிங்கோற்பவ திருவுருவங்களில், மேற்சொன்ன வரலாற்றை விளக்கும் திருமாலை முழுப்பன்றி வடிவத்தில் அல்லது பன்றி முகத்துடன் கூடியவராக அமைத்துள்ளனர். இதற்கு முற்றிலும் மாறாக, சிவலிங்கத்தினின்று வெளிப்படும் சிவபெருமானையும், அவரை திருமால் முழு தேவ வடிவில் மண்டியிட்டு வணங்கிப் பூசிக்கும் நிலையிலும் அமைந்த திருவுருவத்தை தஞ்சை பெரிய கோயிலில்  காண்கிறோம். இது ஓர் ஊழிக்காலத்தில் நீண்ட இரவில் திருமால் சிவபூஜை செய்ததையும், சிவபெருமான் அவருக்கு லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அருள்பாலித்ததையும் குறிக்கும் சிற்பம் என்றும் கூறுவர்.
------------------------------------------------------------------------------------------------------------
எமனும் சிவராத்திரியும்!

சிவராத்திரி வேளையில், பெருமானைப் பூசிக்கும் மார்க்கண்டேயனைப் பிடிக்கவந்த எமன் உதைபடுவது. பின்னாளில் அவனுக்கு சிவராத்திரி மகிமை உரைக்கப்படுவது போன்றவை கதைகளில் காணப்படும் பொது அம்சமாகும். சிவராத்திரியின் அடிப்படைக் கருத்து- ஆன்மாவானது தனது வினைகளை நீக்கிக்கொண்டு, எமவாதனையை அகற்றி சிவபெருமானுடன் ஐக்கியமாவதேயாகும். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவதும் இங்கு எண்ணத் தக்கதாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
அபூர்வ மலையார்!

திருவண்ணாமலை கோயிலின் இரண்டாம் பிராகாரத்தின் தென்மேற்கு முனையில் கிழக்கு நோக்கியவாறு ஒரு சிற்கோயில் உள்ளது. இதனை அடிமுடிகாணாத கோயில் என அழைக்கின்றனர். இங்கு அபூர்வமான அண்ணாமலையார் சிலை ஒன்றுள்ளது. இதில் சிவபெருமானும் அம்பிகையும் எழுந்தருளியிருக்க, பின்னணியில் இடபவாகனம் நிற்கிறது. அதன் பின்னணியில் அண்ணாமலையும், அதன் உச்சியில் தீபமும் காட்டப்பட்டுள்ளன. மூலையின் உச்சியைக் காணமுயல்வதுபோல அன்னப்பறவையும், பீடத்தில் பன்றி வடிவமும் காட்டப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
சிவபெருமானின் எட்டுப்பெயர்கள்!

சிவராத்திரி காலத்தில் சிவபெருமானின் எட்டுப்பெயர்களை ஓயாது ஜெபிக்க வேண்டும். அப்பெயர்கள்: ஸ்ரீபவாய நம; ஸ்ரீசர்வாய நம; ஸ்ரீருத்ராய நம; ஸ்ரீபசுபதயே நம; ஸ்ரீஉக்ராய நம; ஸ்ரீமகாதேவாய நம; ஸ்ரீபீமாய நம; ஸ்ரீஈசாநாய நம.
------------------------------------------------------------------------------------------------------------
தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்த ஆதிசங்கரர்!

ஆதிசங்கரர்,  இந்து மதத்தின் குலகுருவான இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் மேற்கொண்டிருந்த போது, ஒரு ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என்று பிøக்ஷ கேட்டார்.  அந்த பெண் தன்னிடமிருந்த உலர்ந்த நெல்லிக்கனியை தானமாக கொடுத்தார். இந்த தானம் ஆதிசங்கரரின் உள்ளத்தை உருக்கியது. இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்ற அடிப்படையில், ஆதிசங்கரர் மகாலட்சுமியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். இதனால் மகிழ்ந்த மகாலட்சுமி, இவர் 19 ஆம் ஸ்லோகம் பாடிய போது, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள்.

இதன் அடிப்படையில்  கேரளா மாநிலம் காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கனகதாரா யாக மண்டபத்தில் ஏப்ரல் 30 முதல் மே 4ம் தேதி வரை கனகதாரா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் மற்றும் கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகளால் 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகளால், அட்சய திரிதியான மே 2ம் தேதி, காலை 9 மணிக்கு மகாலட்சுமி விக்ரகத்திற்கு கனகாபிஷேகம் நடைபெறுகிறது. கனகதாரா யாகம் முடிந்ததும், அபிஷேகம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி நெல்லிக்கனி மற்றும் எந்திரத்தை பக்தர்கள் வாங்கி சென்றால், சிறந்த உடல் வளமும், செல்வவளமும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

கனகதாரா எந்திரம்  ரூ. 351
தங்க நெல்லிக்கனி  ரூ. 12,001
வெள்ளி நெல்லிக்கனி  ரூ.2001
பிராமண போஜனம்  ரூ.   3,501
லெட்சுமி நாராயண அபிஷேகம்  ரூ. 17,001
பிராமண தட்சிணை  ரூ.1001
அன்னதானம்  ரூ.6001
கனகதாரா அர்ச்சனை  ரூ.101
நெல்லிக்கனி பாரா  ரூ.51
நெல்லிக்கனி சமர்ப்பணம்  ரூ.11

தொடர்புக்கு: காப்பிள்ளி ஸ்ரீகுமார் நம்பூதிரி, மேனேஜிங் டிரஸ்டி, ஸ்ரீகிருஷ்ணன் கோயில், காலடி - 683 574, எர்ணாகுளம் மாவட்டம். போன்: 093888 62321
------------------------------------------------------------------------------------------------------------
மோட்ச சாதனம்!

மோட்சத்திற்கு சாதனமாக இருப்பவை நான்காகும். அவை, சிவார்ச்சனை; உருத்திர பாராயணம்; அஷ்டமி, திங்கட்கிழமை, தேய்பிறைச் சதுர்த்தசி (சிவராத்திரி) ஆகிய மூன்று நாள் உபவாசம்; காசியில் மரணமடைதல் ஆகியவையாகும் இவை நான்கிலும் சிறந்தது சிவராத்திரி விரதமே யாகும். சிவராத்திரி இரவில் சிவபுராணம் கேட்டல், சிவாலய தரிசனம் செய்தல் ஆகியவை மோட்சத்திற்கு எளிய சாதனமாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன். ஒரு பெண் மேட்டுமணியில் அவளின் பயோடேட்டாவை பதிவு செய்தால். நிறைய வரன்கள் வந்த வண்ணம் இருந்தது. பெண்ணின் தந்தை ஒரு டூபாகூர் ஜோசியர் எந்த ஜாதகத்தை கொடுத்தாலும் சரியில்லை என்று சொல்வார். ஆனால் பையன் வீட்டில் சரியாக இருக்கிறது என்று சொல்வார்கள். பிறகு என்னடா விஷயம் என்றால் அந்த பெண் மாதம் லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். இவருக்கு அந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை.  இந்தியில் ஒரு ஜாதகம் வந்து பையன் வீட்டார் ஜாதகம் மிகவும் சரியாக பொருந்தியுள்ளது என்று சொன்னார்கள். ஆனால் பெண்ணின் அப்பா பொருத்தம் இல்லை என்று வழக்கம் போல் சொன்னார். பையன் மிகவும் நல் பையன் வெளி நாட்டில் வேளை. பூரணமாக வேதம் கற்றுள்ளான். சொந்த வீடு உள்ளது. இப்படி இருக்கும் போது தான் விதியை யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு ஏற்ப பையனும் பெண்ணும் தொடர்ந்து போனில் பேசி வர இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைத்து பெண் தனது தாய் தந்தையினரிடம் திருமணம் என்று ஒன்று நடந்தால் இவருடன் தான் என்று தீர்மானமாக சொல்லி விட்டால். ஆனால் அந்த பெண்ணின் தந்தை நீ இவனை திருமணம் செய்து கொண்டால் ஒரு வருடத்தில் நீ செத்து விடுவாய் என்று சொன்னார். பெற்ற பெண்ணிடம் எந்த ஒரு அப்பனும் சொல்ல கூடாத வார்த்தையை இவர் சொல்லியிருக்கிறார். உடனே அந்த பெண் பரவாயில்லை நான் செத்தாலும் பரவாயில்லை அவனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றால். இது பெரிய பிரச்சினையாக வெடித்தது. இருதில் அந்த பெண் அப்படி நான் செத்தால் உங்களுக்கு இருபத்தி ஐந்து லட்சம் கிடைக்கும் அதை வைத்து கொண்டு நீங்கள் சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லிவிட்டு வந்தால் தனது. அக்காவின் கணவர் அத்திம்பேரிடம் சொல்ல அத்திபேரின் பெரும் முயற்சியில் நிச்சயம் நடைபெற்றது பெண்ணின் பெற்றோர் வராமலேயே. அக்காவும் அத்தபேரும் சேர்த்து கல்யாண வேலைகளை செய்து கொண்டு இருக்க ஒரு நாள் பெண்ணின் தந்தை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அப்போதிருந்து இவர்களுக்கு நிச்சயம் செய்த அத்திப்பேரை இவர்கள் கண்டு கொள்ள வில்லை. இவ்வளவுக்கும் கல்யாண பத்திரிகை முதற்கொண்டு அத்திபேர் தான் அடித்து கொடுத்தார்கள். இருதில் திருமணத்திற்கு அத்திம்பேரை அழைக்க வில்லை. அவருக்கு பத்திரிகையும் கொடுக்க வில்லை. இதில் இன்னும் ஏராளமான விட்டு நடைபெற்றது. டைப் செய்ய மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
விநாயகரை எந்தெந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்யலாம்?

அருகம்புல், வன்னி இலை, மரிக்கொழுந்து, அந்தி மந்தாரை, நந்தியாவர்த்தம், செம்பருத்தி, பவளமல்லி, செவ்வரளி, செவ்வந்தி, தாமரை போன்றவை விநாயகருக்கு உகந்தவையே. துளசியால் மட்டும் அர்ச்சிக்கும் வழக்கம் கிடையாது.
------------------------------------------------------------------------------------------------------------
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பது ஏன்?

ஆன்மிகம் மட்டுமில்லாமல் எந்த செயலுக்கும் இது பொருந்தும். எதிரெதிரான இரண்டு விஷயத்தில் ஈடுபட்டால், இரண்டிலும் பலன் கிடைப்பதில்லை. குளிப்பது என்பது உடல் அழுக்கைப் போக்குவது, சேற்றில் வைப்பது என்பது குளிப்பதற்கு மாறானது. செய்வதை திருந்தச் செய் என்பதை இது குறிக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------
நவக்கிரக கோயில்களுக்கு பரிகாரம் செய்வதாக இருந்தால் மட்டுமே செல்ல வேண்டுமா?

நவக்கிரக கோயில்கள் அனைத்திலும் பிரதானமாக கருவறையில் சிவபெருமானே இருக்கிறார். நவக்கிரகங்கள் பரிவார தேவதையாக பிரகாரத்தில் மட்டுமே இருக்கின்றன. தீமை மட்டுமில்லாமல் ஒருவனுக்கு நன்மை செய்வதும் கிரகங்களே. கடவுளின் அடியவர்களான நவக்கிரகங்களை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

பிரம்ம மந்திரம் ஜபித்து பிரும்மம் எனப்படும் பரம்பொருளை மட்டுமே சிந்தித்து வாழ்பவர் களை பிராமணர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவர்களைக் கொல்லுதல், துன்பப்படுத்துதல் போன்றவை பிரம்ம ஹத்தியாகும். ஹத்தி என்றால் அழித்தல். இதே போன்று போரில் ஒருவரைக் கொன்று விட்டால் வீரஹத்தி தோஷம் என்றும், கருவைக் கலைத்தால் ப்ரூணஹத்தி தோஷம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. எந்த விதத்திலும் யாரையும் கொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. கொல்லாமை என்னும் அகிம்சையே ஆன்மிக வாழ்வின் அடிப்படைத் தத்துவம்.
------------------------------------------------------------------------------------------------------------
துளசிமாடத்தில் உள்ள இலையைப் பறித்து பூஜை செய்யக் கூடாதா?

ஆம்! இதனை லட்சுமியின் அம்சமாக கருத வேண்டும். மாடத்தில் உள்ள செடியை துளசிமாதா என்பர். இந்த இலையை லட்சுமி தாயாராக கருதி, விளக்கேற்றி துளசி ஸ்தோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். இளம்பெண்கள் வெள்ளியன்று வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.
------------------------------------------------------------------------------------------------------------
அம்மா தந்த அனுமதி!

விவேகானந்தருக்கு துறவு நாட்டம் எழுந்தது. ஆனால், அவரது தாய் புவனேஸ்வரி அனுமதி தர வேண்டுமே! இதற்காக, வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் அம்மாவிடம் சொல்லி வந்தார். அவரோ புன்னகைத்தபடி, நரேன்! (விவேகானந்தரின் இளமைப் பெயர்) சமையல் அறைக்குச் சென்று கத்தியை எடுத்து வா! என்று சொல்லி விடுவார்.விவேகானந்தரும் கத்தியை எடுத்து வந்து கொடுக்க,இப்போ! என்னப்பா அவசரம்! கொஞ்ச காலம் பொறுமையாய் இரு! என்று பதிலளிப்பார். அம்மாவின் பதிலை ஏற்றுக் கொண்டாலும், அவர் ஏன் தாமதிக்கிறார் என்பதற்கான காரணம் மட்டும், விவேகானந்தருக்கு விளங்கவில்லை. ஒருநாள் அம்மாவின் அனுமதியும் கிடைத்தது.அம்மா! இத்தனை நாளும் மறுத்த நீங்கள், இன்று அனுமதி தர காரணம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர். நரேன்! இத்தனை நாளும், நீ கத்தியை கொண்டு வரும் போதெல்லாம் கைப்பிடியை உன் பக்கமும், கூர்மையான பகுதியை என் பக்கமுமாய் நீட்டியபடி தருவாய். அது சுயநலத்தின் வெளிப்பாடு. ஆனால், இன்று கைப்பிடி என் பக்கமும், கூரிய பகுதி உன் பக்கமுமாக இருந்தது. மற்றவரின் நன்மையில் அக்கறை காட்டும் தியாக மனப்பான்மை தான், துறவுக்கான அஸ்திவாரம் என்றார். துறவு பொதுநலத்திற்குரியது. அதில் சுயநலம் துளியும் இருக்கக்கூடாது என்பதை உணர்த்திய அம்மாவின் திருவடிகளை விவேகானந்தர் வணங்கினார்.
------------------------------------------------------------------------------------------------------------
கொடிமரம் இல்லாத கோயிலில் சுவாமி புறப்பாடு நடத்தலாமா?

தாரளமாகச் செய்யலாம். ஏகதின உற்ஸவம் என்ற அடிப்படையில் சாஸ்திரம் இதை அனுமதிக்கிறது. கொடிமரம் இருந்தால், கொடியேற்றி பத்து நாள் திருவிழா நடத்தலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
விரதத்தை உபவாசம் என்பது ஏன்?

விரதம் வேறு உபவாசம் வேறு. விரதம் என்ற சொல்லுக்கு சிறிதளவு உணவு, பழம் சாப்பிட்டு ஏற்படும் கஷ்டத்தை சகித்துக் கொள்வது. வ்ரு என்பது வேர்ச் சொல்லுக்கு கஷ்டம் என்று பொருள். வ்ருதம் என்பதே விரதம் என்றானது. உபவாசம் என்றால் சமீபத்தில் வசிப்பது. அதாவது முழுமையாக உணவைத் தவிர்த்து, கடவுளின் அருகில் இருப்பதாக கருதுவதாகும். விரதத்தை விட உபவாசம் மேலானது. மாதம் ஒருமுறை இருந்தால் போதும். மனவலிமையும், ஆரோக்கியமும் உண்டாகும். விரத நாளில் வெங்காயம், பூண்டு, மாமிசம் தவிர மற்ற எளிய உணவுகளை அளவு குறைத்து சாப்பிடலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
பழைய துணிமணிகளை ஏழைகளுக்கு கொடுப்பது தானமாகுமா?

ஆகாது. புதிதாக துணிமணி வாங்கிக் கொடுப்பதே வஸ்திர தானம்.
------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளை மனசு வேணுமா?

மந்திரங்களில் சிறந்த காயத்ரியை, வேதத்தின்தாயாகப் போற்றுவர்.  அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில்(4.30-6.00) கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து, காயத்ரி மந்திரம் சொல்வது சிறப்பு. புருவநடுவிலோ அல்லது இதயத்திலோ காயத்ரி வீற்றிருப்பதாக எண்ணியபடி, 108 முறை ஜெபிப்பர். இதனால்,நல்லறிவு, மனஉறுதி, முகப்பொலிவு, உடல்நலம் உண்டாகும். மனம் தூய்மை பெற இதை விட சிறந்தவழி வேறில்லை என சிவானந்தர் குறிப்பிடுகிறார். எல்லா பாவங்களையும், அறியாமையையும்போக்குபவரே! வணக்கத்திற்குரியவரே! உலகைப் படைத்த கடவுளே! உமது புகழை நாங்கள்தியானிக்கிறோம். நீங்கள் எங்கள் புத்தியை நெறிப்படுத்த வேண்டும், என்பது இதன் பொருள்.
------------------------------------------------------------------------------------------------------------
பூஜைக்குரிய திசை!

அம்பிகை தவிர்த்த விநாயகர்,முருகன், சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய தெய்வங்களை வணங்கும்போதுசுவாமியை கிழக்கு நோக்கி வைத்து, நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்வதே சிறந்தது. ஆனால், பெண் தெய்வங்களான காளி, மாரி, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களை வழிபடும்போது நேருக்கு நேராக அமர்ந்து பூஜை செய்யலாம்.அதாவது அம்மன் கிழக்கு நோக்கி இருக்க, நாம் மேற்கு நோக்கியோ அல்லது அம்மன் வடக்கு நோக்கி இருக்க நாம் தெற்குநோக்கியோ பூஜை செய்யலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
நேர்மை மிக்க பெரியவர்!

பெரியவர் ஒருவர் தன் நண்பர்களுடன், வேலூர் மாவட்டம், காங்கேய நல்லூரில் இருந்து (83 கி.மீ.) நடந்து திருவண்ணாமலைக்கு யாத்திரை சென்றார். அந்த சமயம் வேலூரைச் சுற்றி காலரா பரவிக்கொண்டிருந்தது. திருவண்ணாமலையில் நோய் பரவாமல் இருக்க, நோய் பரவிய ஊர்க்காரர்கள்திருவண்ணாமலைக்குள் நுழையக்கூடாதென, சுகாதார துறை அனுமதி மறுத்தது. காங்கேயநல்லூரில் இருந்துவந்தவர்களோ, தாங்கள் அரக்கோணத்தில் இருந்துவருவதாகச் சொல்லி விட்டு திருவண்ணாமலைக்குச் சென்றனர். ஆனால், பெரியவர் மட்டும்,நான் காங்கேயநல்லூர்க்காரன் என்ற உண்மையைச் சொன்னதால்அனுமதி மறுக்கப்பட்டார். அந்த இடத்திலேயே, அண்ணாமலையானுக்கு அரோகரா என்று சொல்லி வணங்கி விட்டு ஊர் திரும்பினார். நேர்மையான நெஞ்சம் கொண்ட பெரியவர் வேறு யாருமல்ல!வாரியார் சுவாமிகளின் தாத்தா சாமியண்ணா தான். ஆண்டுதோறும் அண்ணாமலை தீபம் தரிசிக்கும் அவர், பொய் சொல்ல விரும்பாமல் ஊர் திரும்பியதுகுறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------------------
தலைகீழாகும் இலை!

வீட்டிலேயே தோட்டம் உள்ளவர்கள், பூஜைக்குரிய பூக்களைப் பறித்து சுத்தமான கூடையில் போட வேண்டும். புடவைத் தலைப்பில் போடக்கூடாது. பூக்களை சுவாமியின் பாதத்தில் போடும் போது, காம்பு கீழேயும் பூவிதழ் மேலாகவும் இருக்குமாறு போடுவதே முறையானது. பூ மட்டுமில்லாமல் இலை, பழம் இவற்றிற்கும் இது பொருந்தும்.புஷ்பம் பத்ரம் பலம் சைவ யதோத்பன்னம் ததார்ப்பயேத்என்கிறது சாஸ்திரம். அதாவது, பூக்கள், இலைகள், கனிகள் அனைத்தையும் மேல்நோக்கி படைக்க வேண்டும் என்பதுஇதன் பொருள். ஒரே ஒரு இலைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. வில்வ இலையால் சிவனை அர்ச்சிக்கும்போது தலைகீழாக கவிழ்ந்து இருக்குமாறு அர்ச்சிப்பது சிறப்பு.
------------------------------------------------------------------------------------------------------------
சுயம்புவை வணங்கலாம்!

கோயிலில் கருவறையில் மூலவரும், அதன் அருகில் உற்சவரும் எழுந்தருளியிருப்பர். திருவிழா காலத்தில் உற்சவர் மட்டும் திருவீதி எழுந்தருள்வது வழக்கம். சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கும் அருள்புரிவதற்காக வீதியுலா நடக்கிறது. அப்போது உற்சவர், மூலவரின் அனைத்து சக்தியையும் தன்னோடு எடுத்து வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் மூலவரை தரிசித்தல், அர்ச்சித்தல், வலம் வருதல் போன்ற எந்த வழிபாட்டையும் மேற்கொள்வது கூடாது என்கிறதுசிவயோகி ஸம்வாதம். ஆனால், சுயம்பு மூர்த்தியாக(தானாக தோன்றியது) எழுந்தருளியுள்ள கோயில் களில் மட்டும் மூலவரைத் தரிசிக்கலாம். ஆனால், அர்ச்சனை செய்யவோ, வலம் வரவோ கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------
பூதூவும் கை!

தினமும் வீட்டில் காலையிலும்,மாலையிலும் விளக்கேற்றி வழிபாடுசெய்யும்போது, இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம், ஸ்லோகம் ஜெபிப்பதும், தேவார, திருவாசக, பிரபந்தப் பாடல்களைப் பாடுவதும் அவசியம். பூஜையின் நிறைவில், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, பூக்களை அள்ளி, சுவாமியின் திருவடியில் தூவ வேண்டும். இதற்கு புஷ்பாஞ்சலி என்று பெயர். தெய்வ கைங்கர்யங்களை வலது கையால் தான் செய்ய வேண்டும் என்றாலும், புஷ்பாஞ்சலியின்போது மட்டும், இடக்கையையும் சேர்த்து செய்வதில் தவறில்லை என்கிறது சாஸ்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------
அனுமன் பூஜித்த ஆதி ராமர்!

மந்திராலயம் திருத்தலத்தில் ஆதிராமர் விக்ரகம் உள்ளது. இந்த விக்ரகத்தை முதலில் அனுமன் பூஜித்தாராம். பின்னர் பீமன் மற்றும் பலரால் பூஜிக்கப்பட்டு மத்வாச்சாரியாரிடம் வந்தது. அதன்பின் ஸ்ரீராகவேந்திரரால் பூஜிக்கப்பட்டது. அது முதல் இந்த விக்ரகம் மந்திராலயத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
2ம் நூற்றாண்டு சிவலிங்கம்!

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?

பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !

சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!

அவர் மறைந்ததும், அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. பல ஆண்டுகள் உபாசித்தும் “உபாசனையில் வாக்கு, சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு, மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லை” என்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.

கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும், பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு, தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி, வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை………..

“தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா, மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா”

“என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?”

“மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால, பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு”

“அதுக்கு நா என்ன பண்ணறது?”

“மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும்”

“என்ன படிச்சிருக்கே?”

…………சொன்னார்.

“இத்தனை படிச்சும், ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது”

“என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன்”

“என்னை என்ன செய்ய சொல்றே?”

“மனஸ் சாந்தி அடையணும்”

“நீ என்ன பூஜை பண்றே?”

“அம்பாளை படத்துலேயும், விக்ரஹத்துலேயும், யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்”

“ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?”

“ஆமாம்”

“அப்போ……. இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே? நெறைய படிச்சிருக்கே. படம், விக்ரஹம், யந்த்ரம்….ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா, ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ, நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே, ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே, ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?”

மிகவும் சூடாக பதில் வந்ததும், உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்………..

“ரொம்ப கோவிச்சுண்டுட்டேன.! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனை…ன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம, நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!….ங்கறதாலதாĪ 5;் கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்.

இனிமே…… என்ன கொறையானாலும் எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ… யாரா இருந்தாலும் சரி அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?… நம்பிகை தான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே…..க்ஷேமமா இரு!” என்று அபயஹஸ்தம் “கொடுத்தாள்” !

இனி ?… எனக்கென்ன மனக்கவலை? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை.