சனி, 12 அக்டோபர், 2019

20:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

            20:ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                          (கி.பி. 398 -கி.பி.437 வரை)
ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்'நான்காம் சங்கரர்'என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்இவரின் தந்தை பெயர் வித்யாவதி,வானவியல் வல்லுனர் பிறவி ஊமையாக இருந்த ஸ்ரீ சங்கரேந்திரருக்கு ஸ்ரீவித்யா கநேந்திரர் அருளாள் பேச்சு வந்தது!
உடனே,'மூகபஞ்ச சதீ'என்னும் ஐநூறு அருட் பாடல்களைப் பொழிந்தார். நன்றிக் கடனாக மடத்துக்கே இவரைக் கொடுத்து விட்டனர் இவரின் பெற்றோர்.ஸ்ரீ மூகசங்கரர் காலத்தில் பேரரசனாக இருந்தவன்'சஹாரி விக்ரமாதித்யன்'.அவனது ஆட்சிகாலம் கி.பி.375-413 என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன.அவனுக்குக் கப்பம் கட்டிய வேந்தர்கள் காஷ்மீரப் பகுதிகளை ஆண்ட மாத்ருகுப்தனும்,ப்ரவரசேனனுமாவர்.இருவருமே ஸ்ரீ மூக சங்கரரிடம் பெரும் பக்தி உண்டு.வேலைக்காரனான மாத்ருகுப்தன் அரசனான கதையை சுருக்கமாக பார்ப்போம்.சிருவயதில் மாத்ருகுப்தன்,சஹாரி விக்ரமாதித்யன் அரண்மனையில் சந்தனம் அரைக்கும் தொழிலை செய்து கொண்டிருந்தான்.விக்ரமாதித்யன் காஷ்மீரத்தை வென்று அங்கு முகாமிட்டிருந்த இரவு நேரம்.நள்ளிரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க,மாமன்னன் திடிரென விழித்தான்
விளக்குகளெல்லாம் அனைந்திருந்தன.வேந்தன் விளக்கேற்ற காவலரை அழைத்தான்.மாத்ரு குப்தன் விளக்குடன் வந்தான்.நீ ஏன் தூங்கவில்லை என்று கேட்டான் அரசன்"புதிதாக வெற்றி பெற்ற அரசர் அலுப்பில் உறங்கலாம்.இப்படி உறங்கிய பாண்டவர்களின்
மைந்தர்களையும்,மைத்துனனையும் எதிரிகளின் தளபதியான அச்வத்தாமன் வெட்டியது இரவில்தான்"எனப்பொருள்படும்.
 ஸமஸ்கிருதக் கவிதையைச் சொல்லியபடியே விளக்கேற்றினான் சிறுவன்.மன்னன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!சிருவனுக்கு வெகுமதி தர விரும்பி அவனை காஷ்மீரத்தின் மன்னனாக்க ரகசியமாக அரசாணை பிறப்பித்தான்.பிறகு மாத்ருகுப்தனிடம் தனது முத்திரை மோதிரத்தை அளித்து காஷ்மீர் தலைநகருக்கு அனுப்பினான்.நகர எல்லையில் தனக்களிக்கப்பட்ட அரச மரியாதைகளைக் கண்டு திக்குமுக்காடிப் போனான் மாத்ருகுப்தன்.சஹாரி விக்ரமாதித்யன் எதிர்பார்த்தும் இதைத்தானே!இப்படி எதிர்பாராத விதமாக மணிமுடி சூட்டப்பட்ட மாத்ருகுப்தனுக்கு நாளடைவில் கர்வம் மிகுந்தது.அதனால் எவரையும் மதிப்பதில்லை ஸ்ரீ மூக சங்கரருக்கு இச்செய்தி எட்டியது.அவனது குறையை உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார்.அரசன் இருப்பிடம் சென்றார்.ராமிலன் என்கிற குதிரை மாவுத்தனையும்,
மேது(மெந்தன்)என்கிற யானைப் பாகனையும் அழைத்து தனது அருள் நோக்கால் நினைத்தார்.இருவரும் கவி பாடும் ஆற்றல் பெற்றனர்.ராமிலன்,'மணிப்ரபா'என்ற கவிதை நாடக நூலையும்,மேது'ஹயக்ரீவ வதம்'என்கிற நாடக நூலையும் படைத்தனர்.
கவிதைத்திறன் என்பது'கர்வம் கொள்வதற்கல்ல'என்று புரிந்து கொண்டான் மாத்ருகுப்தன்.அவனது செருக்கு இருந்த இடம் தெரியாது மறைந்தது.மூக சங்கரரின் திருப்பாதங்களைப் பணிந்தான்.
ஸ்வாமி! தங்கள் கட்டளைப்படி ஏதாவது செய்தால் தான் மனம் சமாதானமாகும்"என்று வேண்டினான்.மன்னா!ஜீலம் நதி முதல் சிந்து நதி வரை அடர்ந்த காட்டுப்பகுதியாக இருக்கிறது.கொடிய மிருகங்கள் வாழ்கின்றன.முட்செடிகள் அடர்ந்துள்ளன.ஜனங்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.காட்டைத் திருத்திப் பாதை
அமைத்துக்கொடு"என்றார் ஜகத் குரு.அதை சிரமேற்க்கொண்டு நிறைவேற்றினான் மாத்ரு குப்தன் அந்த நெடுஞ்சாலை'சுஷ்மா'என அழைக்கப்படுகிறது.மாத்ரு குப்தன் ஸேது பந்தம் என்ற காவியத்தைப் படைத்து ஆசார்யாளுக்கு அர்ப்பணித்தான்.அரசாட்சியை ராஜ உரிமை பெற்ற ப்ரவரசேனனிடம் ஒப்படைத்து ஆசார்ய ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்று'ஸார்வ பௌமன்'என்னும் நாமத்தோடு"இளைய குரு"ஆனார்.ப்ரவரசேனன் ஸார்வபௌமர் ஜீ விதகாலம் வரை காஷ்மீர் நாட்டின் வரி வருமானம் முழுவதையும் ஸ்ரீ காமகோடி பீடத்துக்கு அனுப்பி வந்ததாய் ராஜதரங்கணீயம் கூறுகிறது.இப்படி செயற்ரிய செயல்களைச் செய்த மூக சங்கரர் கி.பி.437-ஆம் ஆண்டு,தாது வருடம்,ஆவணி மாதம்,பௌர்ணமியன்று கோதாவரி தீரத்தில் சித்தியடைந்தார்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 59 ॐ
   {கோவிந்தராஜப் பெருமாள்!}

அடுத்ததாய் நாம் காணப் போவது சிதம்பரம் கோயிலுக்கு உள்ளேயே அமைந்திருக்கும் கோவிந்தராஜப் பெருமாள் பற்றிய சில தகவல்கள். ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தை மனதுக்குள்ளேயே கண்டு களித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு பின்னர் தான் தினமும் நேரில் கண்டு ஆனந்திக்க வேண்டியே இங்கே கோயில் கொண்டாரோ எனச் சொல்லும்படிக்கே ஈசனின் தாண்டவக் கோலத்தைப் பார்த்தபடிக்கு கோவிந்தராஜப் பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரு கொடிமரம் கருடனுக்கு ஒரு சன்னதி பலிபீடம் முதலியன உள்ளன. சிறிய ஒரு பிரகாரமும் உள்ளது. நிருத்த சபைக்கு அடுத்து மகாலட்சுமிக்கு எனத் தனியாக ஒரு சன்னதி உள்ளது. இந்தக் கோயிலை ஸ்ரீவைஷ்ணவர்கள் புண்டரீகபுரம் என அழைப்பதால் அன்னையின் திருநாமம் இங்கே புண்டரீகவல்லித் தாயார் ஆகும். விஷ்ணுவின் சன்னதியையும் இந்த விஷ்ணுவின் கோயிலையும் திருச்சித்திரகூடம் என வைஷ்ணவர்கள் அழைக்கின்றனர். முதன் முதலில் இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 8ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் எனச் சரித்திரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சியின் வைகுந்தபெருமாள் கோயிலைக் கட்டிய இவனே இந்தக் கோயிலையும் எழுப்பியதாயும் ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பர், சுந்தரர், சம்மந்தர் காலத்தில் இங்கே விஷ்ணுவுக்கெனக் கோயில் இல்லை எனவும் சொல்லும் இந்தத் தகவல் மாணிக்கவாசகர் காலத்திலேயே இந்தக் கோயில் எழுப்பப் பட்டிருக்கவேண்டுமென்றும் சொல்கின்றது.

"பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த
செம்பொன்மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்திர கூடஞ்சென்று சேர்மின்களே!" என திருமங்கை ஆழ்வாரும்

"செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண்சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள அந்தணர்களோடு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான்றானே!" எனக் குலசேகர ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்வித்திருக்கின்றார்கள் இந்தத் தில்லை கோவிந்தராஜருக்கு. ஆனால் தீவிர சைவர்கள் ஆன சோழமன்னர்கள் காலத்தில் 12ம் நூற்றாண்டில் ஆண்ட 2ம் குலோத்துங்கன் காலத்தில் விஷ்ணு கோயிலில் இருந்து விஷ்ணு விக்ரஹம் எடுக்கப்பட்டுக் கடலில் வீசி எறியப் பட்டதாயும் தெரிய வருகின்றது. பின்னர் அந்த விக்ரஹம் வைஷ்ணவ பக்தர்களால் எடுக்கப்பட்டு திருமலையின் கீழே திருப்பதிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கே ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கோயிலும் கட்டப்பட்டதாய்ச் சரித்திரம் கூறுகின்றது. அதன் பின்னர் வந்த கிருஷ்ண தேவராயரின் குலத்தைச் சேர்ந்த அச்சுதராயன் என்பவன் மகாவிஷ்ணுவின் ஆலயத்தைத் திரும்பக்கட்டிய தோடல்லாமல் விஷ்ணுவின் விக்ரஹத்தையும் அங்கே பிரதிஷ்டை செய்ய ஆவன செய்தான். இது தவிரவும் வைகானச முறைப்படி கோயிலில் தினசரி வழிபாடுகள் நடத்தவும் அதற்கான நிதி உதவியும் அச்சுதராயனால் செய்யப் பட்டது. பின்னர் வந்த வேலூரை ஆண்ட ரங்கராயன் என்பவனால் கோயில் மேலும் புதுப்பிக்கப் பட்டு புண்டரீகவல்லித் தாயாருக்கு விமானமும் எழுப்பப்பட்டு கோவிந்தராஜரின் சன்னதிக்கு முன்னால் இருக்கும் மண்டபமும் புதுப்பிக்கப் பட்டது. 5 கிராமங்களுக்கு வரிவிலக்கு அளித்து அவற்றின் வருமானத்தை விஷ்ணு கோயிலின் வழிபாடுகளுக்கும் கொடுத்தான். தற்காலத்தில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும் விஷ்ணு கோயில் அறங்காவலர்களுக்கும் உள்ள பிரச்னை செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் சுமுகமாய்த் தீர்த்து வைக்கப் பட்டு ராஜா சர் செட்டியார் அவர்கள் விஷ்ணு கோயிலின் திருப்பணிகளையும் செய்து கொடுத்தபின்னர் 1934க்குப் பின்னர் விஷ்ணு கோயிலின் அறங்காவலர்களுக்கும் நடராஜர் கோயிலின் தீட்சிதர்களுக்கு சுமுகமான உறவே இருந்து வருகின்றது. விஷ்ணு கோயிலின் வழிபாட்டு விஷயங்களில் தீட்சிதர்கள் தலை இடுவதில்லை. வைகானஸ முறைப்படியே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் தாங்கள் கருதிய கருத்துக்களை நிலை நாட்டுவதற்கு பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் அடிகளார் கடைச் சங்க காலத்திற்கு பின் தொடங்கி 11ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம் என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளைத் தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து தருமை ஆதீனத் திருவாசக நூல் வெளியீட்டில் மகாவித்துவான் திரு. ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களுடைய கால ஆராய்ச்சித் தொகுப்புரையின் ஒரு பகுதியைச் சுருக்கித் தருகின்றோம்.

திருமலைக் கொழுந்துப் பிள்ளை அவர்கள் முதல் நூற்றாண் டாகவும் பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும் மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும் வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு என்றும் G.U.. போப் ஏழு எட்டு அல்லது 9  ஆம் நூற்றாண்டு என் றும், சூலின் வின்ஸன் 9 அல்லது 10 - நூற்றாண்டு என்றும் Mr. கௌடி 8 லிருந்து 10 ஆம் நூற்றாண்டுக்குள் என்றும் Dr. ரோஸ்ட்டு 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு என்றும், நெல்ஸன் 9 ஆம் நூற்றாண்டு என்றும் K.G. சேஷய்யர் 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் சீனிவாசப் பிள்ளை 9 ஆம் நூற்றாண்டு என்றும் C.K.சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்.

மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம் பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 58 ॐ

மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வெங்கட்ராம் திவாகர்!
சிம்மவர்மன், மகேந்திர பல்லவனின் தாத்தா அதாவது சிம்ம விஷ்ணுவின் தந்தை. சிம்மவர்மனுக்கு தோல் நோய் கண்டவர். இந்நோய் தீர தில்லையில் உள்ள சிவகங்கை குளத்தில் மூழ்கி பெரும் பலன் பெற்றதாக பழைய தகவல்கள் உள்ளன. இவர் ஆண்ட காலம் ஏறத்தாழ கி.பி.550 ஆகும். சைவத் திருமரபில் புகழ்பெற்ற ஐய்யடிகள் காடவர்கோன் சிம்மவர்மன் காலத்தவர். இவர்தான் சிம்மவர்மனை சிதம்பரத்திற்கு இழுத்ததாக சரித்திர ஆசிரியர் (என். சுப்பிரமணியன்-Social and Cultural History of Tamilnadu) எழுதியுள்ளார். ஐய்யடிகள் காடவர் கோனும் ஒரு பல்லவ மன்னர் தாம் என்றாலும் இவர் சிம்மவர்மனுக்கு கீழாகவோ அல்லது உறவாகவோ இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவர் எழுதிய 24 பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. க்ஷேத்திர திருவெண்பா எனும் பெயர் கொண்ட இப்பாடல்கள் தான் தமிழின் முதல் கோயில் பயண நூல். 24 கோயிலகளில் குடி கொண்ட சிவ பெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்களை இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் என எழுதியுள்ளார். 11 ஆவது திரு முறையில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களைப் படித்தாலே தமிழும் தேனும் ஏன் ஒரே வகையில் சேர்க்கப்பட்டது என்பது புரியும். சுந்தரப் பெருமானும் நம்பியாண்டார் நம்பியும் மற்றும் சேக்கிழார் பெருமானும் இப்பெருமானைப் பற்றி எழுதியுள்ளார்கள். அடுத்து கோப்பெருஞ்சிங்கன் (பதிமூன்றாம் நூற்றாண்டு) பிற்காலப் பல்லவ அரசன். மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க ஆசை கொண்டு தோற்றுப் போனவன்) இவன் முதலில் சேந்தநல்லூரை தலை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த சிற்றரசன் தான். ஆனால் காலம் செல்ல செல்ல இவன் சோழப் பேரரசனாக இருந்த மூன்றாம் குலோத்துங்கனையும் மீறி பலம் பெற்றவன். ஏறத்தாழ ஒரு சக்கரவர்த்தி போல ஆட்சி செய்தவன். தில்லை அம்பலத்து கீழவாசல் கோபுரம் இவனால் கட்டப்பட்டது என்பார்கள் சரித்திர ஆசிரியர்கள். இந்த அரசனைப் பற்றிக் காவியமே எழுதப்பட்டது.(காத்யகர்ணாம்ருதம்-சமுஸ்கிருத நூல்) சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆய்வாளர்கள் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் (ஏறத்தாழ 2000 பக்கங்கள் கொண்டது) மற்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆய்வுப் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.

சம காலத் திருப்பணிகள் : விஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவராயருக்குப் பின்னர் வந்த அச்சுத தேவ ராயர், ஸ்ரீரங்க ராயர், வெங்கட ராயர் போன்றவர்களுக்குப் பின்னர் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த திருமலை ராயன், வீரப்ப நாயகன் போன்றவர்களும் பெருமளவில் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள். சேர நாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் நாயனாரும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். ஆனால் இவர் காலத்தில் சற்றே குழப்பம் ஏற்படுகின்றது. சேர நாட்டின் கொல்லம் ஆண்டை ஒட்டி இவர் 9ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இவரும் சுந்தரரும் சமகாலத்தவர். இவர் காலத்தைப் பற்றி www.thevaaram.org என்ன சொல்கின்றது என்று பார்த்தால்:
சுந்தரரும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர். சேரமான் பெருமாள் சுந்தரர் இருவரும் பாண்டிய நாடடைந்த போது பாண்டிய மன்னனும் சோழனும் வரவேற்றனர். கொல்லம் ஆண்டின் தொடக்கத்தோடு சேரமான் பெருமாளின் ஆட்சிக் காலத்தை இணைத்து கி.பி. 825க்கு முன்னும் பின்னும் எனக் கூறுதல் பொருந்தாதெனப் பலரும் மறுத்துள்ளனர். சுந்தரரை வரவேற்ற பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 670-710). ஆகவே இவர் காலம் 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 8ம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம். இவர் எழுதிய "திருக்கைலாய ஞான உலா" திரு கைலையிலேயே ஈசன் முன்னால் அரங்கேற்றப்பட்டுப் பின்னர் மாசாத்துவான் என்பவரால் திருப்பிடவூரில் அரங்கேற்றப்பட்டது என்று சொல்வதுண்டு. பாடல் பக்கம் திறக்க முடியவில்லை. பின்னர் கேரளத்தின் கொச்சியில் ஆண்டு வந்த மகாராஜா ராமவர்மனாலும் கட்டளை மேற்கொள்ளப்பட்டு கொண்டமநாயகன் கட்டளை என்ற பெயரால் நிறைவேற்றப் பட்டது எனவும் அறிகின்றோம். இப்போது பதினெட்டாம் நூற்றாண்டின் காலங்களில் செய்யப்பட்ட திருப்பணிகள் காஞ்சியைச் சேர்ந்த பச்சையப்ப முதலியாரால் கோயிலின் திரு விழாக்களில் முக்கியமான பிரம்மோற்சவம் முறைப்படுத்தப் பட்டதோடு அல்லாமல் திருவாதிரைத் திரு நாளைப் போன்ற முக்கியத்துவம் ஆனித் திருமஞ்சனத்துக்கும் அளிக்கப்பட்டுப் பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டது. நடராஜரின் ரதம் இருக்கும் பீடம் உள்பட ரதங்களையும் மராமத்து செய்து கிழக்குக் கோபுரத்தின் திருப்பணியையும் ஏற்றுச் செய்ய ஆரம்பித்தார் பச்சையப்ப முதலியார். அது பூர்த்தி அடைவதற்குள் இறந்து போகவே அவரின் மனைவியும் சகோதரியும் சேர்ந்து அவர் ஆவலைப் பூர்த்தி செய்தனர். இவரின் தூண்டுதலின் பேரில் மணலியில் வாழ்ந்து வந்த சின்னையா முதலியாரும் சிதம்பரம் கோயிலுக்கு நந்தவனங்களைச் செப்பனிடுதல் மற்றும் கோயிலின் பல திருப்பணிகள் எல்லாவற்றுக்கும் மேல் சித்சபையின் படிக்கட்டுகளை வெள்ளியால் அமைத்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்தார். நாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலும் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப் பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார் அவரின் சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும் நாலு கோபுரங்களின் திருப்பணிகள் கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல் சுற்றுச் சுவர்களைச் செப்பனிடுதல் பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல் சிவகங்கைக் குளத்துப் படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல் திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச் செய்து அளித்தல் விளக்குகள் பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட 64 வருடங்கள் சென்ற பின்னரே 1955ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும் திரு ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாயும் தெரிய வருகின்றது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம்
பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள் :

1) வெற்றிலைப் பாக்கு - தாம்பூலம்

2) முழுத்தேங்காய் - நாரிகேலம்

3) பல தேங்காய் மூடிகள் - நாரிகேல கண்டாணீ

4) வாழைப்பழம் - கதலி பலம்

5) மாம்பழம் - ஆம்ர பலம்

6) விளாம்பழம் - கபித்த பலம்

7)நாகப்பழம் ( நாவல்பழம்  ) - ஜம்பு பலம்

8)பலாப்பழம் - பனஸ பலம்

9) சாத்துக்குடி - நாரங்க பலம்

10) ஆப்பிள் பழம் - காஷ்மீர பலம்

11) பேரிக்காய் - பேரீ பலம்

12) கொய்யாப் பழம் - பீஜா பலம்

13) திராட்சை பழம் - திராட்ஷா பலம்

14) பேரீச்சம் பழம் - கர்ஜீர பலம்

15) பிரப்பம் பழம் - வேத்ர பலம்

16) கரும்பு - இக்ஷூ தண்டம்

17) மாதுளம்பழம் - தாடிமீ பலம்

18) எலுமிச்சம்பழம் - ஜம்பீர பலம்

19) வடை - மாஷாபூபம்

20) மஞ்சள் பொங்கல் - ஹரித்ரான்னம்

21) எள்ளுச்சாதம் - திலோன்னம்

22) சர்க்கரைப் பொங்கல் - குடான்னம்

23) அக்காரவடிசல் - சர்க்கரான்னம்

24) வெண்பொங்கல் - முத்கான்னம்

25) புளியோதரை - திந்திரிணியன்னம்

26) வெள்ளைசாதம் - சுத்தான்னம்

27) எலுமிச்சைசாதம் - ஜம்பீரபலன்னம்

28) தேங்காய் சாதம் - நாரிகேலன்னம்

29) தயிர்சாதம் - தத்யோன்னம்

30) பலவித சாதங்கள் - சித்ரான்னம்

31) சுண்டல் - க்ஷணகம்

32) பால் பாயாசம் - க்ஷீர பாயஸம்

33) வெல்ல பாயாசம் - குட பாயஸம்

34) புட்டு - குடமிச்சபிஷ்டம்

35) முறுக்கு - சஷ்குலி

36) இட்லி - லட்டுகானி

37) கொழுக்கட்டை - மோதகானி

38) அப்பம் - குடாபூபம்

39) மாவிளக்கு - குடமிஸ்ஸபிஷ்டம்

40) அதிரசம் - குடாபூபம்

41) உளுந்து - மாஷம்

42) பயறு - முத்கம்

43) எள் - திலம்

44) கடலை - க்ஷணகம்

45) கோதுமை - கோதுமா

46) அரிசி - தண்டுலம்

47) அவல் - ப்ருதுகம்

48) நெய் - ஆஜ்யம்

49) பருப்பு பாயாசம் - குடபாயஸம்

50) பால் - க்ஷீரம்

51) சுக்கு வெல்லம் கலந்த நீர் - பானகம்

52) வெண்ணெய் - நவநீதம்

53) கல்கண்டு - ரஸ கண்டாளீ

56) மல்லிகைப்பூ - மல்லிகாபுஷ்பம்

57) செவ்வந்திப்பூ - ஜவந்திபுஷ்பம்

58) தாமரைப்பூ - பத்மபுஷ்பம்

59) அருகம்புல் - தூர்வாயுக்மம்

60) வன்னிஇலை - வன்னிபத்ரம்

61) வில்வ இலை - பில்வபத்ரம்

62) துளசி இலை - துளஸிபத்ரம்

63) ஊதுபத்தி / சாம்பிராணி - தூபம்

64) விளக்கு - தீபம்

65) சூடம் - கற்பூரம்

66) மனைப்பலகை - ஆசனம்

67) ரவிக்கைத்துணி - வஸ்த்ரம்

68) மஞ்சள்/குங்குமம் கலந்த அரிசி - மங்களாட்சதை

69) ஜலம் நிரப்பிய சொம்பு - கலசம்

70) திருமாங்கல்ய சரடு - மங்கலசூத்ரம்

71) மற்ற பட்சணங்கள் - விசேஷபக்ஷணம்

72) பூநூல் - யக்ஞோபவீதம்

73) சந்தணம் - களபம்

74) விபூதி - பஸ்பம்

75) வாசனை திரவியங்கள் - ஸுகந்தத்ரவ்யா