திங்கள், 7 அக்டோபர், 2013

படலம் 5: நித்யோத்ஸவ விதி

ஐந்தாவது படலத்தில் நித்யோத்ஸவ விதி பிரிதிபாதிக்கப்படுகிறது. முதலில் நித்யோத்ஸவம், நித்ய பூஜாங்கங்களில் உத்தமம் என ப்ரஸஸ்தி கூறப்படுகிறது. பிறகு சிவனுக்கு முன்போ அதின் இடப்பாகம் பிரஸாத மண்டங்களிலேயோ கோசாணம் மெழுகி விட்டதான ஸ்தலத்தில் லக்ஷணமுடைய பாத்ரம் ஸ்தாபிக்க வேண்டும் என கூறி அன்னலிங்க அக்ஷதலிங்க பாத்ரநிர்மாண பிரகாரம் அன்னலிங்க அக்ஷதலிங்க நிர்மாண பிரகாரமும் கூறப்படுகிறது. இவ்வாறாக புஷ்பலிங்க நிர்மாண பிரகாரமும் சூசிக்கப்படுகிறது. பிறகு நித்யோத்ஸவ விஷயத்தில் அன்னலிங்க, அக்ஷதலிங்க, புஷ்பலிங்கத்தின் உபயோக காலம் நிரூபிக்கப்படுகிறது. பின்பு புஷ்பாக்ஷத லிங்க அன்னலிங்கத்தில் சந்திரசேகர யுக்தம், தத்விஹீநமாகவோ பாசுபதாஸ்திரம் பூஜிக்க வேண்டுமென கூறி அந்த விஷயத்தில் தியானத்திற்கு மிச்ராசாந்தி உக்ரமூர்த்திகளின் ரூபம் நிரூபிக்கப்படுகிறது. அல்லது பாசுபதாஸ்திரமூர்த்தி, சந்திரசேகர மூர்த்தியும் கல்பனீயமென கூறப்படுகிறது. பிறகு பாதுகாநிர்மாண பிரகாரம் கூறப்படுகிறது. பாதுகைகளில் விருஷபரையோ அநந்தரையோ பூஜித்து சுற்றி லோகபாலர்களை பூஜிக்க வேண்டும் என்கிறார். பின்பு நித்யோத்ஸவ விதி பிரகாரம் கூறப்படுகிறது. அதில், லிங்க, பாசுபதாஸ்திர சந்திரசேகரமூர்த்தி, பாதுகம் முதலிய நான்குடன் கூடியதாகவோ பாசுபதாஸ்திரத்துடன் மட்டுமே நித்யோத்ஸவம் செய்ய வேண்டுமென விகல்பிக்கப்படுகிறது. பிறகு உத்ஸவ காலத்தில் கூறிய ராகதாளத்தின் நிரூபணம் பிரதட்சிண பிரகார நிரூபணம், பிரதட்சிணத்திற்குப்பின் செய்ய வேண்டிய கிரியைகளின் நிரூபணம் முடிவில் ஸகளமூர்த்த தேவதேவிகளின் விஷயத்தில் நித்யோத்ஸவ கரண பிரகார சூசனம் இவ்வாறாக ஐந்தாம் படல கருத்து தொகுப்பாகும்.

1. நித்யபூஜைக்கு அங்கமானதும், உத்தமமானதுமான நித்யோத்ஸவ விதியை சொல்கிறேன். சிவனுக்கு எதிரில் அல்லது இடது பாகத்தில் வலது பாகத்தில் சுத்தமான இடத்தில்

2. ஆலயத்தின் முன்போ அல்லது மண்டப ஆரம்பத்திலோ கோமயத்தினால் மெழுகப்பட்ட இடத்தில் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்கப்பட்டதுமான பாத்திரத்தில்

3. ஸ்வர்ணம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் இவைகளில் ஒன்றினால் பதினைந்து அங்குலம் முதல் ஓர் அங்குல அதிகரிப்பால்

4. முப்பத்திரண்டு அங்குலம் வரையில் அளவுடையதாக பாத்திரம் இருக்க வேண்டும். விருப்பமுள்ள கனமுடையதாகவும் வட்ட வடிவமாகவும் கர்ணிகை தளங்களோடு கூடியதாகவும் இருக்க வேண்டும்.

5. அந்த பாத்திரத்தில் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று என்பவைகளாக பிரிக்கப்பட்டு இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்ற பகுதிகளால் கர்ணிகை இருக்கும்.

6. மற்றவைகளால் எட்டு தளமும், பத்து தளமும் ஆகும். அரைபாகம், முக்கால்பாகம், இரண்டு மாத்திரை அளவினாலோ கர்ணிகையின் உயரமாகும்.

7. அவ்வாறே ஓரத்தோடு கூடியதும் அல்லது சாதாரணமானதுமான பாத்திரத்தில் 2 ஆழாக்கு என்ற அளவு முதல் ஓர் ஆழாக்கு வரையிலும் குருணி என்ற அளவுள்ள (3 மரக்கால்) வரை

8. அன்னலிங்கத்திற்காக அன்னமும் அக்ஷதை லிங்கத்திற்காக அரிசியையும் கல்பிக்க வேண்டும். தேன், நெய், இவைகளோடு கலந்து அன்னத்தை பாத்திரத்தின் நடுவில் வைக்க வேண்டும்.

9. அதனால் அன்ன லிங்கம் செய்ய வேண்டும். லிங்கம் ஐந்து மாத்திரை அளவு, உடையதாகவும் ஒரு அங்குலம் முதல் பதினெட்டு அங்குலம் வரை நீளமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

10. மூன்று அங்குலம் முதல் பதினைந்து அங்குலம் வரையில் பரப்பு உடையதாகவும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்து அல்லது ஆறுவரை நுனியின் அளவுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

11. சிறப்பு, பொது என இருவகைக்கும் அன்னலிங்கம் சொல்லப்படுகிறது. மூன்று காலத்திற்கும் அல்லது, காலை, மதியம் என்ற முறையிலோ செய்யலாம்.

12. மதியம் அல்லது காலையில் புஷ்பலிங்கம் சொல்லப்படுகிறது. பிரதோஷ காலத்தில் மாலையில் அக்ஷதையிலான லிங்கமும் அதில் பாசு பதாஸ்ரத்தையும் பூஜிக்க வேண்டும்.

13. சந்திரசேகருடன் கூடியதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். பாசுபதம் மிச்ரம், சாந்தம், உக்ரஹேதுகம் என்று மூவகைப்படும். அழகாகவும் கருணைக் கண்களோடு கூடியதாகவும் இரண்டு அல்லது நான்கு கைகளோடு கூடினவராகவும்,

14. மின்னல் போல் வெண்ணிறமும் ஜடை மகுடம் இவைகள் தரித்தவராகவும், வலது பாகத்தில் அபயம் அக்ஷமாலை இவைகளுடனும் இடது பக்கம் வரதம், பாசம் இவைகளை உடையவராகவும்

15. வரதம், அபயம் முதலிய கைகளோடு கூடியவராகவுமோ, அல்லது அக்ஷமாலை, பாசம், இவைகளை விடுத்து பத்மம், மணி, இவைகளை உடையவராகவுமோ எல்லா லக்ஷணங்களோடு கூடியவராகவும்.

16. அழகுடன் கூடிய சவும்ய மூர்த்தியின் உருவம் சொல்லப்பட்டது. உக்ரமூர்த்தி என்றால் சூலத்தின் அடிபாகமும், அபயமும் வலது பாகத்திலும் சூலத்தில் நுனி, வரதம் இடது பாகத்திலும்

17. கோரமான பார்வையும் மேல் நோக்கிய ஜ்வாலா கேசங்களும் கையில் உள்ள சூல திரிசூலமும் மாறுபட்டதாகவும் அசுமாலையும்கையில் உள்ளதாகவும் ரவுத்திர உருவத்தை மூன்றாக வழிபடலாம்.

18. இவ்விதம் ரவுத்ரம் மிச்ரமானதாகவும் பரசு, சூலம் இவைகளை தரித்து வலது பாகத்தில் பாசம் இடது கையில் மிருகம் இவைகளை உடையதாகவும் மற்றொரு முறை சொல்லப்படுகிறது.

19. வலது பாகத்தில் திரிசூலம், அபயம், பாசம், வரதம் இடது பாகத்தில் என்று இரண்டாக சொல்லப்பட்டது. பிறகு மிஸ்ரம் என்றும் பாசுபதாஸ்திரம் மூன்று விதமாக கூறப்பட்டுள்ளது.

20. புஷ்பம், அக்ஷதை, அன்னம், முதலிய லிங்கங்களிலும் அந்தந்த மந்திரங்களால் பூஜிக்க வேண்டும். அல்லது அந்த அளவிற்கு பிம்ப உருவமைக்கலாம்.

21. வட்ட வடிவமான பீடத்தோடு கூடியதாகவும் பீடமின்றியும் பூஜிக்கலாம். அன்னலிங்க அளவில் அடியும் நுனியும் சமமான அளவுள்ளதாக இருக்க வேண்டும்.

22. கை அளவோடு கூடியதும் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் ஸ்தாலிகையின் அளவு கோலோடு கூடியதுமாகவோ பூஜிக்கலாம்.

23. பிரதிமைக்கு உரிய இலக்கணங்களோடு இந்துசேகர மூர்த்தி (சந்திரசேகரமூர்த்தி) இருக்க வேண்டும். பாதுகை 3 அங்குலம் முதல் ஒவ்வொரு அங்குலம் பெரியதாக

24. பதினைந்து அங்குலம் வரை உள்ளதாக கனம் சொல்லப்பட்டிருக்கிறது. கனத்திற்கு தகுந்த அகலமும் அகலத்திற்கு அரைபாகம் நீளமுமாக அமைக்க வேண்டும்.

25. எட்டு அம்சத்திற்கு அதிகமான நடுஅளவைக்காட்டிலும் ஒன்பது அங்குலம் அதிகமாக இருக்கவேண்டும். அதில் விருஷபத்தை பூஜை செய்ய வேண்டும் அல்லது அனந்தனையும் பூஜை செய்யலாம்.

26. சுற்றிலும் லோக பாலகர்கள் பூஜிக்கப்படவேண்டும். பூஜை ஆரம்பம் அல்லது முடிவு இவைகளில் பூஜித்தாலும் புதிய அன்ன லிங்கத்தோடு கூடியதாக நித்யோத்ஸவம் செய்ய வேண்டும்.

27. இப்படி எல்லாவற்றோடும் கூடியதாக நித்யோத்ஸவம் செய்ய வேண்டும். இரண்டு மூன்று, அல்லது நான்கு என்ற காலகணக்கு முறையில் முற்பகலிலோ அல்லது மாலை வேளையிலோ

28. மதிய வேளையிலோ பாசுபதன் என்ற நித்யோத்ஸவ தேவன் பூஜிக்கப்படுபவனாவான். மஞ்சத்திலே, பல்லக்கிலோ, பரிசாரகன் சிரஸிலோ

29. எழுந்தருளச்செய்து அலங்காரம் முடித்து விதானத்துடன் கூடியதாகவும் குடை சாமரம் பலவித கொடிகளோடு கூடியதாக வேண்டும்

30. பாட்டு ஆடல் இவைகளோடும், வாத்யம், கீதம், இவைகளோடும் தூபம் தீபம், இவைகளோடும் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

31. முதல் பிரதட்சிணம் மங்கிணி தாளத்தோடு கூடியதாக செய்ய வேண்டும். விருஷபத்திற்கு பிரம்மதாளமும் அக்னிக்கு பிருங்கிணீ தாளமும்

32. பெண் தெய்வங்களுக்கு சண்டவாத்யமும் விநாயகருக்கு டக்கரி வாத்யமும் ஷண்முகருக்கு உத்கடவாத்யமும் ஜேஷ்டா தேவிக்கு குஞ்சித தாளமும்

33. துர்கா தேவிக்கு தடபிரஹாரமும் சண்டேஸ்வரர்க்கு விஷமதாளம் செய்ய வேண்டும். கிராமத்திலோ அல்லது நகரத்திலோ அல்லது பிரகாரத்திலோ

34. இரண்டாவதுசுற்று பெரிய பீடத்தின் வரையிலான பிரதட்சிணமாகும். ஒன்றோ இரண்டோ அல்லது மூன்றோ சபரீதாளத்துடன் கூடியதாகவோ பிரதட்சிணம் செய்யலாம்.

35. அல்லது பலிபீடத்துடன் பிரம்ம தாளத்தோடோ அல்லது கணதாளத்துடனோ இரண்டுடனோ பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

36. பைசாசங்களுக்கு மட்டுமே ஓர் பிரதட்சிணத்துடன் சபரீதாளமாகும். கோபுரத்தில் வாத்யமில்லாமலோ அல்லது சங்கத்வனியோடு கூடவோ செய்யலாம்.

37. இந்திரனுக்கு சமதாளமும் காந்தாரஸ்வரமும் ஆகும். அக்னிக்கு பத்தாபணம் தாளமும் பண்கொல்லியும் ஆகும்.

38. தெற்கில் (யமதிக்கில்) பிருங்கிணி தாளம் பண் கவுசிகம். நைருதியில் மல்லதாளமும் பண் நட்டபாடையும் ஆகும்.

39. மேற்க்கில் (வருணதிக்கில்) நவதாளமும் பண்காமரம். வாயுதிக்கில் பலிதாளமும் பண் தக்கேசியும் ஆகும்.

40. வடக்கில் (குபேரதிக்கில்) கோடிகதாளமும் பண் தக்காராகமும், ஈசானத்தில் டக்கரி தாளமும் பண் சாலாபாணியும் ஆகும்.

41. இவ்வாறு பிரதட்சிணம் செய்து மூன்றாவது சுற்றில் உள்ளே நுழைய வேண்டும். கால்களை அலம்பி கொண்டு சிவாலயத்தில் நுழைய வேண்டும்.

42. அல்லது மண்டபத்தின் முகப்பில் பீடத்தில் உள்ள மூர்த்திகளுக்கு பாத்யம் முதலிய உபசாரங்கள் செய்து பிரவேசிக்க வேண்டும்.

43. அன்னம் முதலிய லிங்கத்திலிருந்து தேவனை லிங்கத்தின் வலது பக்கத்தில் பாவிக்க வேண்டும். சிவனுடைய பாதங்கள் (பாதுகைகள்) வலது, இடது பக்கங்களில் பூஜிக்க தகுந்தவைகள்.

44. மற்ற தெய்வங்களுக்கும் தேவியர்களுக்கும் மூலபிம்பம் போல அந்தந்த பிரதிஷ்டா படலங்களில் கூறியபடி வேறு உருவ பிம்பங்களை, நித்யோத்ஸவம் செய்வதற்காக தயார் செய்யலாம்.

45. அதன் மூலமாக நித்யோத்ஸவத்தையும் நடத்தலாம். அந்த அன்னலிங்கம், முதலியவைகளில் அஸ்திரத்தை பூஜிக்க வேண்டும் வாஹனத்தை (விருஷபம் முதலியவைகளை)

46. பாதுகை இரண்டிலும் பூஜிக்கப்பட வேண்டும். மற்றவை எல்லாம் பொதுவானதாகும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் நித்யோத்ஸவ முறையாகிற ஐந்தாவது படலமாகும்.
படலம் 4: ஸ்நபன விதி

நான்காம் படலத்தில் ஸ்நபன விதி கூறப்படுகிறது. அதில் முதலில் அஷ்டமி முதலான திதிகள், விஷுவ அயந ஸங்க்ரமணாதி கால விசேஷங்களிலும் துர்பிக்ஷம், பூகம்பாதி துர்நிமித்தத்திலும், ஜ்வர மார்யாதி ரோக பீடத்திலும், பஞ்சமேற்பட்ட காலத்திலும் அந்ததோஷ நிவ்ருத்திக்காகவும், பிரதிஷ்டா முடிவிலும், உத்ஸவாந்தத்திலும், நித்ய, நைத்திக, காம்ய காலங்களில் ஈசனுக்கு ஸ்நபனம் செயற்பாலது என்று ஸ்நபனத்தின் நிமித்தத்தை சொல்லி உள்ளார். அதில் ஸ்நபனம் அநேக விதமாக விதிக்கப்படுகிறது. மஹாஸ்நபநகர்மாக்களில் அங்குரார்பணம் செய்யுமாறு சூசிக்கப்படுகிறது. பின்பு மண்டப விதாநம், அதன் ஸம்ஸ்காரமும் வர்ணிக்கப்படுகிறது. அதில் சூத்ர ந்யாஸம் முதலாக பஞ்சகலச, நவகலச, பஞ்சவிம்சதிகலச, நான்பத்தொன்பது கலச ஸ்நபனங்களில் கலச ஸ்தாபன விதி நிரூபிக்கப்படுகிறது. இங்கு பஞ்சகலசஸ்நபனம் முதல் ஒவ்வொரு ஆவரணத்தின் அதிக கல்பனத்தால் 49 கலச ஸ்நபனாந்தம் கலச ஸ்தாபன பிரகாரம் கூறப்பட்டுள்ளதாக சூசிக்கப்படுகிறது. பிறகு அஷ்டோத்தர ஸ்நபனவிஷயத்தில் முதல் முறை கூறப்படுகிறது. அதில் முதலில் எட்டு கிரமமாக ஆவரணத்ரயம் கல்பநீயம் என கூறப்படுகிறது. பின்பு ஆயிரத்தெட்டு ஸ்நபன விதியில் பிரதமபிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் சூத்ரந்யாஸ முதலாக சதுரமண்டலத்தில் 40 வியூஹங்கள் கல்பிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு வ்யூஹத்திலும் இருபத்தைந்து கலசங்கள் ஸ்தாபிக்கபடவேண்டுமென கூறப்பட்டுள்ளது. பின்பு அஷ்டோத்திர ஸ்நபன விஷயத்தில் இரண்டாம் விதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் நான்கு திவாரம் கல்பித்து மத்தியில் இருபத்தைந்து கலசம், கோணங்களில் இருபத்தியொரு கலசங்கள் ஸ்தாபிக்கவேண்டும் என்று கலசஸ்தாபனம் சூசிக்கப்படுகிறது. பிறகு ஆயிரத்தெட்டு ஸ்நபன விஷயத்தில் இரண்டாவது விதி கூறப்படுகிறது.

அதில் சூத்ரந்யாஸம் முதலாக சதுரஸ்ர மண்டலத்தில் பதினான்கு ஆவரணத்தில் கலச ஸ்தாபன பிரகாரம் கூறப்படுகிறது. பிறகு கும்பஸ்தாபனத்தின் ஸ்தண்டில கல்ப விஷயத்தில் நெல் அளவு நிரூபணம், அதன் அனுசாரமாக எள், அரிசி அளவு விஷயம், கும்ப அளவு, தோண்டி அளவு விஷயம் கும்பத்தில் சூத்ரவேஷ்டந கூர்ச்சந்யாஸ பிரகாரம் த்ரவ்ய ந்யாஸ, ரத்னந்யாஸ பிரகாரம் இம்மாதிரியான விஷயங்கள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு இருபத்தைந்து கலச ஸ்நபனத்தில் சொல்லிய ஆவரணத்யாகத்தால் ÷ஷாடசஸ்நபன கலச ஸ்தாபனவிதி சித்திக்கிறது. என ÷ஷாடசஸ்நபனவிதி கூறப்படுகிறது. ÷ஷாடசஸ்நபன விஷயத்தில் த்ரவ்ய நிரூபணம் சொல்லப்பட்டுள்ளது. பின்பு நாற்பத்தொன்பது கலச ஸ்நபன விஷயத்தில் த்ரவ்யங்கள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பஞ்சகலச நவகலச. பஞ்சவிம்சதி நாற்பத்தொன்பது கலசஸ்நபன விஷயங்களில் தேவதாந்யாஸ பிரகாரம் வர்ணிக்கப்படுகிறது. அதில் குறிப்பாக முப்பத்தி இரண்டு கலசபிரகாரம் கூறப்படுகிறது. 108 ஸ்நபன விஷயத்தில் த்ரவ்ய நிரூபணம் மூன்று விதமாக கூறப்படுகிறது. அஷ்டோத்தர ஸ்நபன விஷயத்தில் குறிப்பாக தேவதைகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு எண்பத்தி ஒரு ஸ்நபன விதி நிரூபிக்கப்படுகிறது. ஒன்பது வ்யூஹம் கல்பிக்கவும், பிரதிவ்யூகத்திலும் ஒன்பது கலசம் ஸ்தாபிக்கவும் எட்டுதிவாரங்கள் உண்டென்று கூறப்படுகிறது. அஷ்டோத்திர ஸஹஸ்ரஸ்நபன விஷயத்தின் த்ரவ்ய நிரூபணம் குறிப்பாக த்ரவ்ய நிரூபண விஷயத்தில், ரத்னோதக லோஹோதக, தாதூதக, பீஜோதக, கந்தோதக, ம்ருதூதக மார்ஜனோதக, பத்ரோதக, புஷ்போதக, மான்யோதக, அஸ்திரோதக, பலோதக, கஷாயோதக, ஆட்யோதக, காந்தோதக, மூலோதக, பிரம்மகூர்ச்ச, வல்கலோதகம், முதலிய உதகங்களின் லக்ஷணம் கூறப்பட்டுள்ளது. பின்பு அஷ்டோத்தர ஸஹஸ்ரஸ்நபன விஷயத்தில் மூன்றாவது பிரகாரம் விருத்த மண்டலத்தால் கல்பிக்கவும் என பிரதிபாதிக்கப்படுகிறது.

அதில் பதினான்கு ஆவரணங்களில் கலசஸ்தாபனபிரகாரம், கலசசங்க்யை நிரூபணத்துடன் திரவ்யம் கூறப்படுகிறது. ஆயிரத்தி எட்டு ஸ்நபனத்தில் தேவதான்யாஸ பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. ஐநூற்றி எட்டு ஸ்நபனம், இருநூற்றி எட்டு ஸ்பனத்திலும் வியூஹக்ரமமாக கலச விந்யாச பிரகாரம் கூறப்படுகிறது. திரவ்யங்களின் அளவு நிரூபிக்கப்படுகிறது. பிறகு கூறிய திரவ்யா பாவத்தில் கிரஹிக்ககூடிய திரவ்ய நிரூபணம் பிறகு த்ரவ்யந்யாஸ பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஹோம நிரூபணம் அங்கு குண்டம் அல்லது ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்யவும் என்று விகல்பிக்கப்படுகிறது. ஹோம த்ரவ்யங்களின் அளவுமுறை, அவ்வாறே அஷ்டகுண்ட, பஞ்சகுண்ட நான்கு குண்டாநுஸாரமாக ஸமித்நிர்தேசம் ஹோம கர்மபிரகாரம் காணப்படுகிறது. பிறகு லிங்க விஷயத்தில் ஸ்நபன கலசாபிஷேகவிதி கூறப்படுகிறது. பிறகு ஸகல விஷயத்தில் ஸ்நபன கலசாபிஷேகபிரகாரம் சூசிக்கப்படுகிறது. அதில் சித்ராதி ஸகள பிம்பங்கள் விஷயத்தில் தர்பணாதிகளில் ஸ்நபனம் செய்யவேண்டுமென கூறப்படுகிறது தேவிஸ்நபனத்தில் த்ரவ்ய பேதமில்லை தேவாதாபேதம் மட்டும் கூறப்படுகிறது. தேவதா நிரூபணத்தில் விசேஷம் பிரதிபாதிக்கபடுகிறது. ஸர்வாபீஷ்ட சித்திக்கும், க்ஷீராதிகளால் ஸர்வதோஷ நிவ்ருத்திக்கும் ஸ்நபன விசேஷங்களால் பரமனை ஸ்நபனம் செய்க என கூறி அவைகளின் ஸ்நபன விசேஷமும் வேறு பயனும் கூறப்படுகிறது.

அந்தஸ்நபனங்களின் செய்யக்கூடிய கால நிர்தேசம். ஸ்நபன முடிவில் விசேஷதர்சனம் கூறப்படுகிறது. நித்ய கர்மாவில் இருபத்தைந்து கலச ஸ்நபனம் பிரசஸ்தியாகும். உத்தமோத்தம பூஜையில் அஷ்டோத்திரசதம் வரைஸ்நபனம் செய்தல் வேண்டும். நைமித்திக கர்மாவில் பஞ்சவிம்சதி சங்க்யை முதல் ஆயிரத்தெட்டு ஸ்நபனம் வரை செய்தல் வேண்டும். என்ற விஷயங்கள் ஸ்நபன விஷயத்தில் சூசிக்கப்படுகிறது. இவ்வாறு ஸ்நபன விஷயத்தில் நித்யம், நைமித்திகம், காம்யம் என்று மூன்று விதம் பிராயச்சித்த நிவாரணத்திற்காக நித்ய நைமித்திகத்திற்காக ஸ்நபனம் செய்யவேண்டும் காம்யத்திற்காக காம்ய ஸ்நபனம்சூசிக்கப்படுகிறது கிரியா மந்த்ராதி பேதத்தால் தந்திர பேதமும் ஏற்படுகிறது. அதில் சைவ வசனமே செய்ய வேண்டும், வேறு சாஸ்திரத்தால் செய்யக்கூடாது என்று சூசிக்கப்படுகிறது. பிறகு ஸ்நபனாதிகர்ம நிர்வஹிப்பதற்கு கிரஹிக்க வேண்டிய குரு நிரூபணம் விசேஷ பூஜையும் அப்பேற்பட்ட ஆசார்யனாலேயே நிர்வாஹிக்க வேண்டுமென கூறி விசேஷ பூஜாவிதியும் கூறப்படுகிறது. பின்பு நித்ய நைமித்திக கர்மா சரணத்தில் செய்யவேண்டியது நிரூபிக்கப்பட்டுள்ளது அதில் நைமித்திக கர்மாசாரண காலம் இரண்டு விதம் என கூறி அதன் காலவிசேஷம் பிரதிபாதிக்கப்படுகிறது. ஆசார்ய பூஜாவிஷயம் கூறப்படுகிறது. அதில் யாகசாலைக்கு உபயோகிக்கப்பட்ட ஸ்வர்ணாம் பராதிகம் ஆசார்யனுக்கு தரவேண்டும். மற்ற போகத்திற்கு உபயோகிக்க கூடாது என்பதாக நான்காவது படல கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு பரமேஸ்வரனுக்கு அனுஷ்டிக்கப்படவேண்டிய ஸ்நபனத்தை பற்றி சொல்லப்போகிறேன். அஷ்டமியிலோ சதுர்தசியிலோ விஷுவ புண்யகாலத்திலோ அல்லது அயன சங்க்ரமண காலத்திலோ மாதப் பிறப்பிலுமோ.

2. கிரஹணத்தில் மாஸத்தின் நக்ஷத்திரத்தில் திருவாதிரை, இரண்டு பர்வங்கள், பூர்ணிமா, அமாவாசை, நல்ல யோகத்தில் ஞாயிற்றுக்கிழமை அல்லது உத்ஸவத்தின் முடிவில் மூன்று நாட்கள்.

3. யஜமானனின் பிறந்த நாள், இறந்தநாள், அல்லது அதற்கு தொடர்ந்த நாள், அரசன் பட்டாபிஷேக நக்ஷத்திரம், வறுமை, தீமை நிமித்தம் தோன்றிய காலங்களில்

4. பூகம்பம், தீபற்றுதல், ஜ்வரம், வைசூரி முதலிய துன்பங்களாலும் துன்புறுத்தப்பட்டபொழுதும் பிரதிஷ்டையின் முடிவிலும், நோய்கள் ஏற்படும் காலத்திலும் அத்புத சாந்தி காலத்திலும், பஞ்சமேற்படும்பொழுதும்

5. நித்யம், நைமித்தியம், காம்யம் என்ற மூன்று வகைகளிலும் சிவனுக்கு உரிய முறைப்படி ஸ்நபன பூஜை செய்து அபிஷேகம் செய்யவேண்டும். அது பலவகைப்படும். ஸ்னபன பூசை அபிஷேகத்தின் பொருட்டு கலசங்களை வைத்து பூசிப்பது ஆகும்.

6. (அங்குரார்ப்பணம் செய்து) மஹா ஸ்நபனம் கார்யத்தில் முதலில் அங்குரார்ப்பணம் செய்யவேண்டும் முன்பு சொன்ன மண்டபத்திலோ வேதிகை இல்லாமலுமோ செய்யலாம். அல்லது அளவை நோக்காமல் ஸ்நனத்திற்காக முன்பே ஏற்படுத்தபட்ட இடத்தில்

7. ஐந்து முழத்திலிருந்து ஆறு ஏழு முழ அழவுள்ள தாகவும் நான்கு முதல் எட்டு வரையுள்ள காத்ர அளவுள்ளதுமான (காத்ரம் என்பது தேஹம் என்பதாகும்) (தேஹ ஸப்தம் என்பது சுமாராக ஒன்பது தாள அளவாகும். ஒரு தாள அளவு பனிரெண்டு அங்குலம்)

8. எல்லா அலங்காரங்களோடும் கூடியதும் தோரணங்களோடு கூடியதும் நிருத்தம் வாத்யம் முதலியவைகறோடு கூடியதும் இசை ஒலி முதலியவைகளோடு கூடியதும் ஆன மண்டபத்தில்

9. அஸ்திர மந்திரத்தால் பூமியை சுத்திசெய்து வாமதேவ மந்திரத்தால் மெழுகி அகோர மந்திரத்தால் தாள மாத்ர இடைவெளிப்படி (தாளம் என்பது 9 அங்குலமாகும் என்றும் ஓர் அளவு கூறப்படுகிறது) சூத்ர நியாஸம் செய்யவேண்டும்.

10. இரண்டு தாள அளவு சிவ கும்பத்திற்கும், வர்த்தனீ கும்பத்திற்கு ஒரு தாள அளவும், மூன்று தாளம் கர்ணிகைக்கும் உள்ளது ஸாதாரண அளவாகும்.

11. அல்லது கும்பஸ்தாபனம் வடக்கிலுள்ள வீதியில் இருக்குமேயானால் அப்பொழுது கும்பஸ்தாபன நிலை ஏற்றாற்போல இரண்டு தாள அளவு கர்ணிகை யின் அளவாக ஆகும்.

12. நான்கு திக்குகளில் உள்ள தாளங்களில் வைக்கப்படும் ஒவ்வோர் கலசங்களோடு நடுவில் ஓர் கலசமாக பஞ்ச கலச அமைப்பும் மூல திசைகளிலும் ஒன்றாக சுற்றியும் எட்டு வைக்கும் முறையும் நவகலச ஸ்னபனமாகும்.

13. இருபத்தி ஐந்து எண்ணிக்கை வரையில் சுற்றிலும் உள்ளதாக வைக்கப்படுவதும், நாற்பத்தி ஒன்பது கலசங்கள் மற்றும் நூற்றி எட்டு கலசங்களின் அமைப்பும் உண்டு.

14. இரண்டு சுற்றாக வெளியில் வைக்க வேண்டும். நடுவில் உள்ள இருபத்தி ஐந்து கலசங்களை

15. விடுத்து மற்றவைகளை இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ சுற்றிலும் வைத்துவிட வேண்டும். எட்டு வாயில்களை உடையதாகவும் மூன்று வெளி சுற்று உடையதாகவும் வைக்க வேண்டும்.

16. கோணங்களில் ஒன்பது சூத்திரத்திலும் மத்தியில் பதினைந்து சூத்திரத்திலும், கும்பங்களை வைக்க வேண்டும். நடுவில் பதினைந்து என்றால் நடுவில் உள்ள மூன்றை விட்டுவிட வேண்டும்.

17. நூற்றி எட்டின் முறை இது. ஆயிரமாக இருந்தால் நாற்பது வியூஹம் ஆகும். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக இருபத்தி ஐந்து பதம் போட வேண்டும்.

18. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்ற முறையிலும் வியூஹம் உண்டு. நடு வியூஹத்தை சுற்றியும் நான்கு அல்லது எட்டு குண்டங்களை

19. அந்தந்த எண்ணிக்கைக்கு இணையாக வியூஹத்தில் ஹோமத்திற்கு வசதி செய்து கொள்ள வேண்டும். நடுவில் வழி அமைத்து பாதை அமைத்து கொள்ள வேண்டும்.

20. சிவவியூஹத்தை சுற்றிலும் பதினாறு சூத்திர அளவு விட்டுவிடவேண்டும். சூத்திரமுறையில் வைப்பது இதுவரை சொல்லப்பட்டது மற்றொரு முறையும் உண்டு.

21. நூற்றி எட்டின் முறையே நடுவில் இருபத்தி ஐந்தும், வெளியில் ஆக்னேய கோணங்களில் இருபத்தியொன்று என்ற பாதையின் முறையிலிருக்க வேண்டும்.

22. நான்கு திக்குகளிலும் நான்கு வாயில்களாகும். ஆயிரம் முறையில் மீண்டும் சொல்லப்படுகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்ற திக்குகளில் இரண்டு சூத்திரங்கள் வைக்கவேண்டும்.

23. ஒன்றரை முழ அளவு அல்லது ஓர்முழ அளவுள்ளதாக பதினான்கு எண்ணிக்கையில் முறைப்படி வெளிவீதியாக அமைக்கப்படவேண்டும்.

24. அதன் வெளியில் நான்கு பக்கங்களிலோ அல்லது எட்டு பக்கங்களில் ஹோமம் செய்யலாம். தத்புருஷ மந்திரத்தால் ஸ்தண்டிலம் அமைத்து நெல் நான்கு படி அளவுள்ளதாக செய்வது சிறந்ததாகும்.

25. மூன்றுபடி அளவுள்ளது மத்யமமாகும். அதற்கு அடுத்தது இரண்டுபடி குறைவான அளவாகும். அதை காட்டிலும் மிகவும் தாழ்ந்து ஒருபடி நெல் அளவாகும்.

26. நெல்லின்அளவு இதுவே என்ற காரணத்தால் இதற்கு குறைவாக போடக்கூடாது. அப்படி செய்தால் ஆபிசாரதோஷம் ஏற்படும். இது நிச்சயம்!

27. இரண்டுபடி பிடிக்கும் அளவுடைய குடம் முதல் பத்துபடி பிடிக்கும் அளவு வரை சிவகும்பத்தின் அளவு ஆகும். அதற்கு மேற்பட்டது கரகம் எனப்படும்.

28. நெல்லின் பாதி அளவு அரிசி ஆகும். அதில் பாதி எள். அதில் பாதிஅளவு பொறி இருக்கவேண்டும். ஸஹஸ்ர கலசத்தில் எட்டு மரக்கால் என்று சொல்லப்படுகிறது.

29. எட்டுக்கு அதிகமான சிவவியூஹத்தில் நெல்லின் அளவு சொல்லப்பட்டது. ஹ்ருதய மந்திரத்தால் ஸ்வர்ணம் முதலியவைகளினால் ஆன கும்பங்களை வைக்கவேண்டும்.

30. சிவம் என்ற அளவு முதல் ஒவ்வொருபடி அளவாக இருபத்திஏழு வரை அளவுள்ள தன்மை சிவகும்பத்திற்கு ஆகும். அதில் பாதி (தோண்டி) கரகம் எனப்படும்.

31. நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற அளவில் உடைய கலசங்களில் மூன்று, இரண்டு, ஒன்று என்ற முறையில் நூலை சுற்றவேண்டும்.

32. இல்லாவிட்டால் ஒரு நூலால் மூன்று முறை கவச மந்திரத்தினால் சுற்றிய பிறகு கும்பங்களை ஹ்ருதய மந்திரத்தால் வைக்கவேண்டும்.

33. ஈசான மந்திரத்தால் முப்பத்தாறு தர்பங்களை உடைய கூர்ச்சங்களை மூன்றாக பிரித்தவாறு வைக்க வேண்டும். திரவ்யத்தை மூல மந்திரத்தால் வைக்க வேண்டும்.

34. மாணிக்கம், இந்திரநீலம், வைடூர்யம், பவழம், முத்து என்ற ஐந்து ரத்தினங்கள், இல்லாவிடில் தங்கமும் போடலாம்.

35. நிஷ்கம் என்ற அளவில் ஸ்வர்ணத்தை கால் பங்கு அல்லது அதில்பாதி பத்துஉளுந்து அளவோ அல்லது எட்டு உளுந்து அளவோ ஐந்து, நான்கு அளவோ இரண்டு உளுந்து அளவோ மிகவும் குறைந்ததான பட்சத்தில் ஓர் உளுந்து அளவோ ஸ்வர்ணம் போடவேண்டும்.

36. மேற்கூறிய அளவிலிருந்து பாதி அளவு கரகங்களில் போடவேண்டும். திரவ்யங்கள் இருக்க வேண்டிய கலசங்களாவன, பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம் ஆகியவை நான்கு திசைகளிலும் இருக்க வேண்டும்.

37. சந்தனம் கலந்த தீர்த்தம் அல்லது சுத்தமான தண்ணீர் முதலில் சொல்லப்பட்டது. தர்ப்பை தண்ணீர், பால், தயிர், சிறிது சூடான நெய் இவைகளுமாகும்.

38. சந்தனம் கலந்த தீர்த்தம் முதலில் மூலைகளில் முறையாக எட்டு இடங்களிலும் ஆகும். இரண்டாவது ஸ்தாபன முறை சொல்லப்பட்டது. மூன்றாவது முறை சொல்லப்படுகிறது.

39. தேன், பொறி, சாணத்தூள், மஞ்சள் மற்றும் சத்துமாவு, மஞ்ச்பொடி போன்றவைகள் விபூதி, கரும்புச்சாறு, வாழைப்பழம், எள், பலா, கடுகு முதலியனவும்.

40. விபூதி, நல்லெண்ணை, வாழை, எள், கடுகு, தேங்காய், இருவிதமான நார்த்தம்பூ மாதுளை முதலியவைகளை வைக்கலாம்.

41. மாதுளை மற்றும் பக்கத்தில் பலா, மா, இஞ்சி, வாழை, வரகு, பாக்கு மற்றும் இளநீர் கடுகு இவைகளும்

42. எள், பில்வம் அதற்கு பிறகு நார்த்தை இரண்டு (எலுமிச்சை, நார்த்தை) யவை, நீவாரம், பொறி

43. ஸத்துமாவு, முதலிலோ அல்லது கடைசியிலோ மற்றும் தேன் கீழாநெல்லி, வெல்லம், பால் பிறகு கடுகு, கிராம்பு இவைகளும்.

44. தக்கோலம், தயிர், தண்ணீர், எள், விளாமிச்சை வேர், நெய், சாணத்தூள் ஸத்துமாவு, தேங்காய், மஞ்சள் பொடி இவையும்

45. இவ்விதம் மும்முறையிலும் மூறு, இருபத்தி ஐந்துகளாகும் இருபத்தி ஐந்தின் நடுவில் நடுவரிசைகளை விட வேண்டும்.

46. இவ்விதம் செய்த ஸ்தாபனத்தில் கலசங்கள் பதினாறு ஆகும். நான்கு திக்குகளிலும் நான்கு கோணங்களிலும், பாத்யம் முதலியவைகள் எட்டு ஆகும்.

47. இவைவெளிகளில் நடுவிலிருந்து எட்டு எண்ணிக்கை உடையதாகவும் மேலும் நாற்பத்தி ஒன்பது கும்பங்கள் முறையாக சொல்லப்படுகின்றன.

48. வெல்லம், சந்தனம், உலோகம் கீழாநல்லி கச்சோலம், புஷ்பம், பத்ரம், பச்சை கற்பூரம் மற்றும் தண்ணீர் ஜடாமாஞ்சி, மரிக்கொழுந்து சிற்றேலம் அருகம்பில்

49. வன்னி, அருகு, வெள்ளெருக்கு பில்வம், செண்பகம், சங்கங்குப்பி என்ற திரவ்யம், நாயுருவி, விஷ்ணுகிராந்தை, ஊமத்தை.

50. நந்தியாவட்டை, வெண்தாமரை, நாற்பத்தி ஒன்பதாகும் அல்லது வேறு வழியிலும் சொல்லப்படுகிறது.

51. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம், கிழக்கு முதலான திக்குகளிலும் பால், தயிர், நெய், தேன் முதலியவைகள் அக்னி முதலிய திக்குகளிலும்

52. தக்கோலம், விபூதி, சாம்பிராணி, மஞ்சரி, தேங்காய் பில்வம், நாவல் பாதிரி, வெட்டிவேர், பூங்கொத்து கச்சோலம்

53. புண்ணை பூ, சங்கு புஷ்பம், பில்வம் புலிநகக் கொன்றை, ஊமத்தை ஆகிய பதினாறும் இங்கு சொல்லப்பட்டது.

54. அருகு, கடுகு, மா, நார்த்தை, பலா, வாழை, தாமரை, தாழை, வெண்லோத்ரம் (வெள்ளொளுத்தி)

55. கரும்புச்சாறு, பொறி, சண்பகம், சந்தனாதி வாசனைத் தைலம், நீவாரம், குங்குமம், எள், ஸத்துமாவு ஜடாமாஞ்சி, சிற்றேலம்.

56. மாதுளை, சந்தனம், அகில், விளாமிச்சை, மஞ்சள்பொடி இவை கலந்த திரவ்யங்களாகும். ஐந்து கலச ஸ்னபநத்தில் பஞ்ச பிரம்மங்களை ஈசானத்தை விட்டு மற்ற பிரம்ம மந்திரங்களை பூஜிக்க வேண்டும்.

57. எட்டுகலசங்களில் வித்யேசர்களை பூஜிக்க வேண்டும். வெளியில் மூர்த்தீச்வரர்கள், நடுவில் வாம தேவர் முதலியவர்களையும் பூஜிப்பது இருபத்தி ஐந்து எண்ணிகையுள்ள கலச பூஜையாகும்.

58. எட்டு கணேச்வரர்கள் வெளியில், அங்குஷ்ட மாத்ரர் முதலான எட்டு புவனாதிபதிகளையும் கிரோதனன் முதலான எட்டு எண்ணிக்கையுள்ள சத்ருத்ராதிபர் களையோ பூஜிக்க வேண்டும்.

59. ஸ்நபனத்தில் நாற்பத்தி ஒன்பது கலசத்திற்கு தேவதாபூஜை முறை சொல்லப்பட்டது. முப்பத்தி ஆறு பதங்கள் செய்து நடுவில் உள்ள நான்கு அம்சத்தை விட்டுவிட வேண்டும்.

60. முப்பத்தி இரண்டு பதங்களில் பாத்யம் முதலியவைகளை வைக்கவேண்டும். தெற்கில் அரைபாக அளவு ஆரம்பித்து, வடக்கில் அரை பாகம் அளவு வரையில்

61. இங்கு சொல்லப்படாததை நாற்பத்தி ஒன்பது கலச பூஜையைப் போல் சமமாக எண்பத்தியோரு கலச ஸ்னபநமுறை அறிவிக்கப்படுகிறது.

62. நூற்றி எட்டு கலச பூஜை முறைக்கும் மூன்று வகைகள் உள்ளன. சந்தனம், அகில், கீழாநெல்லி, கச்சோலம், புஷ்பம், பத்ரங்கள்.

63. கற்பூரம், வெட்டிவேர், மரிக்கொழுந்து, ஜடாமஞ்சி, சிற்றேலம் அருகம்பில் ஆவரண திரவ்யங்கள் 12 ஆகும்.

64. சண்பகம், சிறுகுறிஞ்சி, தாமரை, கோரோசனை, பில்வம், யவை, வன்னி அருகு தக்கோலம் துங்குமுஸ்தை.

65. நெல்லிப்பழம், வாழைப்பழம், பில்வம், நிலத்தாமரை, சித்தரத்தை செவியம், பொரசு, வெள்ளெருக்கு, அரளி.

66. தாழம்பூ, தும்பப்பூ, ஊமத்தை, லோத்ரம், நாயுருவி, அர்ஜுநம், இச்சி, யானை திப்பிலி, விஷ்ணுகிராந்தை.

67. அரசு, நாகபுஷ்பம் நான்காவது ஆவரண திரவ்யமாகும். துளசி, ஆணைவணங்கி, பெருங் குரும்பை, தேஜநீ என்ற திரவ்யமும்.

68. வாயு விளங்கம், சீரகம், கருப்பு ஜீரகம், தக்கோலம், தேவதாருபிசின், சந்தனக்குழம்பு, குப்பமேனி, செஞ்சந்தனம்

69. கலப்பை மண், புலிநகம், கொன்றை, வல்லகீ என்ற கொடி, தங்கபுஷ்பம், வெண்டைக்காய், சிப்பி, சங்க நகமென்கிற கந்த திரவ்யம், சர்க்கை பெருங்கோரை கிழங்கு.

70. குங்குலியம், திராøக்ஷ, சர்க்கரை, விஷ்ணுக்ராந்தை, ஆல், விருஷபா என்ற ஒஷதி கிடாரங்காய், நாவல், மனச்சிலை.

71. சங்ககுப்பி, கையாந்தரை, செந்நெல், சிவப்பான சிலாவிகாரம் மாம்பழம், வாழைப்பழம், ஜாதி, பாதிரி வெள்ளொளுத்தி முதலியவைகளை

72. இது ஐந்தாவது ஆவரணதிரவ்யமாகும். வேறுவிதமாக கூறப்படுகிறது. வன்னி, அருகு, எருக்கு, பில்வம், சம்பகம் சங்கு புஷ்பம்.

73. நாயுருவி, விஷ்ணுகிராந்தி, கருவூமத்தை, நந்தியாவட்டை, வெண்தாமரை.

புன்னாகம், ஜாதி புஷ்பம், பாதிரி, சிறு குறிஞ்சித் தாழை

74. தாமரை பில்வம், தரைத்தாமரை, தாழம்பூ, துளசி, (அரளீ) மல்லிகை மற்றும் கருப்புக்கொடி நாயுருவி புஷ்பம், விஷ்ணுகிராந்தி, கருவூமத்தை, நந்தியாவட்டை, வெண்டாமரை இவைகளும்.

75. நெரிஞ்சல், தண்ணீர்முட்டான், நீர் வணங்கி, பெருந்தும்பை, தும்பை, பெருங்குமிழிஞ் செடி, குமிழிஞ் செடி

76. இந்த்ரவல்லி, பில்வம், நெல்லிக்காய், கடுக்காய், புலிநகக் கொன்றை, மஞ்சமெழுக்கு, சிவதை என்ற திரவ்யம் (மஞ்சள் கீழாநெல்லி)

77. வெண்ணெய், கச்சோலம், தக்கோலம், ஆடாதொடை, என்ற திரவியங்களில் சஞ்சலா, அதிபலா, பலா என்ற தேவர்களை பூஜிக்க வேண்டும், மேலும் சிம்மம், தினை

78. வெள்ளொளுத்தி மரம், மகிழம், புன்னை மரம், நாகபுஷ்பமரம், நாவல் விளாமரம், அரசு, குங்குலியம், கருப்பு ஜீரகம், சத்துமாவு.

79. எள்ளுடன் கூடிய குங்குமம், துங்க முஸ்தை என்ற திரவ்யம், கருப்பு கோரோஜனை, அகில், பில்வம், சந்தன குழம்பு, திப்பிலி, யானை திப்பிலி.

80. கருப்பு அகில், மனஸ்சிலை, செஞ்சந்தனம், கிராம்பு மஞ்சள்பொடி, தகரம் என்ற கந்தகப்பொருள்.

81. கஷாயோதகம், மார்ஜநோதகத்தை ஹ்ருதய மந்திரத்தால் முடிவில் ஸ்தாபிக்க வேண்டும். கஷாயோ தக மாவது: நான்கு பாலுள்ள மரப்பட்டையால் நீரூடன் கலந்து ஸ்தாபித்து பூஜிப்பதாகும்.

82. மா, நாவல், மரப்பட்டை அதன் சாரமும் சொல்லப்படுகிறது. அருகு, எள், தர்ப்பை நுனி இவைகளுடன் தீர்த்தத்துடன் கலந்து பூஜிப்பது மார்ஜநோதகமாகும்.

83. எண்பத்தி ஒரு குடங்களில் அதிபலர்வரை பூஜிக்க வேண்டும், பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம் திக்குகளிலும், விதிக்குகளில்

84. தயிர், நெய், தேன் பால் இவைகøளை ஆக்னேய திக்கில் வைக்க வேண்டும். எள், வில்வம், சந்தனம், துங்க முஸ்தம் என்ற திரவ்யம்.

85. சண்பகம், வெட்டிவேர், கடுகு, தக்கோலம், பழம், கீழாநெல்லியையும், லோகம் என்ற பெயருள்ள கச்சோலம்.

86. லவங்கம், லவங்க பத்ரம், பச்சை கற்பூரம், வெளியில் பதினாறு திரவ்யங்களை வைக்க வேண்டும். மூன்றாவது ஆவரணத்தில் ஸத்துமாவை அக்னி பாகத்தில் ஐந்து கடங்களில் ஸ்தாபிக்க வேண்டும்.

87. நெல்லிமுள்ளி, விபூதி, மஞ்சள்பொடி, கோசாணத்தூள், இவைகளையும் தேங்காய், எலுமிச்சை மாதுளை.

88. அதன் வெளியில் அக்னி முதலிய கோணங்களில் ஏழு கலசங்களில் வைக்கவேண்டும். வில்வம், சிறுகுறிஞ்சித்தாழை, விஷ்ணுகிராந்தை முதலியவைகளை முறையாக வைக்கப்படவேண்டும்.

89. வில்வத்தோடு கூடியதாக நான்கு ஒன்பது கலசங்களில் வைக்க வேண்டும். குந்துமணி முதல் நிஷ்க அளவுவரை பாத்யம் முதலியவற்றிற்கு தேவையான திரவ்யங்களின் பிரமாணமாகும்.

90. ஒன்று, இரண்டு, மூன்று நான்குபடி வரை பஞ்சகவ்யம் முதலியவைகளுக்கு அளவாகும். முன்கூறிய அளவில் கால் அளவு அல்லது அதில் பாதி மத்யமமாகும்.

91. நெய், எண்ணை அளவும் அவ்விதமே செய்ய வேண்டும். கற்பூரம் குங்குமம் இவைகளுக்கு அளவு விருப்பம்போல் ஆகும்.

92. நடுவில் அஷ்டவித்யேச்வரர்கள் பூஜிக்கதக்கவர்கள். நூறு ருத்திரர்கள் வெளியில் பூஜிக்க வேண்டும். இவ்விதம் மூன்று வகையில் நூற்றி எட்டு கலச முறை வந்துள்ளது.

93. ஒன்பது எண்ணிக்கைகளால் ஒன்பது வியூகங்களோடு இரு திசைகளில் நடுவில் இடைவெளி உடைய இவைகள் எட்டு வாயில்களோடு கூடியதாகவும் எண்பத்தி ஒன்று பூஜிக்கப்படுகிறது.

94. ஆயிரத்தி எட்டு கலச முறை இப்பொழுது சொல்லப்படுகிறது. ஜாதிக்காய், சிற்றேலம், பச்சைக் கற்பூரம், மரப்பட்டைகள், ஏலக்காய், விளாமிச்சை வேர்.

95. இவைகளுடன் கூடியதும் சிவ மந்திரத்தால் அபி மந்திரிக்கப்பட்டதுமான சிவ தீர்த்தத்தால் கும்பங்களையும் வர்த்தனி கலசங்களையும் நிரப்ப வேண்டும்.

96. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்சகவ்யம், தர்ப்பை தண்ணீர், பால், தயிர், நெய் இவைகளை முதல் ஆவரணத்தில் வைக்க வேண்டும்.

97. தேன், யவை, வெல்லம், தர்ப்பை, வாழைப் பழம், கடுகு, தேங்காய், மஞ்சள், மாதுளை.

98. பொறி, மாதுளை, ஸத்து, மா, பலா, விபூதி இவைகள் நடுவில் உள்ள இருபத்தி ஐந்துக்கும் இந்த திரவ்யங்கள் பதினாறு ஆகும்.

99. ரத்னோதகம் லோஹோதகம், தாதூதகம் இவைகள் மற்றும் கந்தோதகம் (சந்தனதீர்த்தம்) முன்பு சொல்லப்பட்ட இவைகள் முறையாக கிழக்கில் உள்ள வியூஹங்களில் இரண்டு கோணங்களில் விடப்பட்டதாக ஸ்தாபிக்க வேண்டும்.

100. மிருதோதகம், மார்ஜனோதகம், பரிமார்ஜனோதம், பத்ரோதகம், புஷ்போதகம் இவைகளை தெற்கிலும், மேற்கில் மான்யோதகம் அஸ்த்ரோதகம், பலோதகம்

101. கஷாயோதகம், ஆட்யோதகம் என்று வைத்தல் வேண்டும். வடக்கில் காந்தம், மூலோதகம் பிரம்ம கூர்ச்சம், சாந்த்யோதகம், வல்கலோதகம் என்பனவாகும்.

102. மாணிக்கம், இந்த்ர நீலம், முத்து, வைடூர்யம், வைரம், புஷ்பராகம், பவழம், ஸ்படிகம், மரகதம் இவைகளையும் சேர்த்து நவரத்னமென்றும் அதில் ஐந்தை

103. உடையது பஞ்சரத்னமென்று சொல்லப்படுகிறது. முதலில் கூறப்பட்ட நவரத்னமோ அல்லது பஞ்சரத்துடனோ கூடிய ஜலம் ரத்னோதகம் எனப்படும். அடுத்து லோஹோதகம் கூறப்படுகிறது. பஞ்சரத்னம் : மாணிக்கம், இந்தரநீலம், வைடூர்யம், பவழம், முத்து இவைகளாகும்.

104. தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, தகரம், ஈயம் பித்தளை வெண்கலம் இவைகளுடன் தீர்த்தம் சேர்ந்தது லோஹோதகம் எனப்படும்.

105. சவுராஷ்டிரம், அஞ்சனம் என்ற கருப்புப் பொடி, மை, மஞ்சள் ஹரிதாளம், மனச்சிலா, கோரோஜனை இவைகளுடன் நீர் கலந்து தாதூதகம் எனப்படும்.

106. நெல், வரகு, செந்நெல், திணை, எள், கடுகு, சாமை, யவை இவை எட்டும் பீஜோதகம் எனப்படும்.

107. வெண்ணை, பச்சை கற்பூரம், அகில், ஏலக்காய், நாகப்பூ, கீழாநெல்லி, விளாமிச்சைவேர், ஜாதிக்காய், கோரைக்கிழங்கு.

108. குங்குமப்பூ வெட்டிவேர், கோரோஜனை, கச்சோலம், ஜாதிக்காய் இவைகளை பொடிசெய்து கலக்கப்பட்ட ஜலம் கந்தோதகம் எனப்படும்.

109. மலை மண் ஆற்றுகரை மண், புற்றுமண், நண்டுவளைமண், காளை முட்டிய மண், ஸமுத்திர மண், நல்ல இடத்திலுள்ள மண், யானை தந்த மண்.

110. இந்த எண்வகை மண் கலந்த நீர்,மிருதோதகம் என்று கூறப்பட்டுள்ளது. நெரிஞ்சில், சிறு குறிஞ்சித்தாழை, விஷ்ணுகிராந்தம், யானை வணங்கி

111. கருநெய்தல், வாகை, மஞ்சள் இவைகளுடன் கூடியது மார்ஜனோதகமாகும். அருகு, தளிர், தாமரை, தர்ப்பை நுனி, வெண் கடுகு இவையும்

112. குமிழஞ்செடி, யானை வணங்கி ஆகியவைகளுடன் கூடியது பரிமாணோதகம் என்று கூறப்பட்டுள்ளது. துளசி, வில்வம், தமாலவிருக்ஷ புஷ்பம், ஜடாமாஞ்சி

113. நாயுருவியோடு கூடியது பத்ரதோயம் எனப்படும். தாமரை, செந்தாமரை, பாதிரி, சண்பகம் இவைகளும்

114. புன்னை, மருதாணி, நார்த்தை, நந்தியா வட்டை, மல்லிகை, வெள்ளெருக்கு, மகிழம்பூ இவைகளோடு கூடியது (புஷ்பதோகம்) புஷ்போதகம் எனப்படும்.

115. கீழாநெல்லி, பெருங்கோரை, தங்கம், சந்தனம், குங்குமம் (பூ) பச்சை கற்பூரம், விளாமிச்சை வேர், இவைகளுடன் கூடியது மாந்யோதகம் எனப்படும்.

116. சூலம், கபாலம், மான், வில் கோடாரி, பாசம், அக்ஷமாலை இவைகளை தங்கத்தால் செய்யப்பட்டதாக தீர்த்தத்துடன் சேர்ப்பது அஸ்திரோதகமாகும்.

117. பலா, தேங்காய், மாதுளை இரண்டு வகை, நார்த்தை இரண்டு வகை, வாழை முதலியன பலோதகம் எனப்படும்.

118. பொரசு, அத்தி, அரசு நாயுருவி, இச்சி, பாதிரி, நாவல் ஆகிய இந்த பட்டைகளோடு கூடியது கஷாய உதகம் ஆகும்.

119. தகடு சம்பந்தப்படுத்த மூன்று திரவ்யங்கள் மூன்று வகை மெழுக்கு, மூன்று சந்தன திரவ்யங்களுடன் கூடியது ஆட்யோதகம் எனப்படும்.

120. சூர்ய காந்தம், சந்திர காந்தம், அயஸ் காந்தம், பிராமகம், நிகுந்தம் என்ற காந்தம் ஆகிய ஐந்தும் காந்தோதகம் என்று சொல்லப்படும்.

121. விளாமிச்ச வேர், வெட்டிவேர், பீவரி என்ற ஒரு வகையான வேர் தாமரை புஷ்பம் சந்தனம் இவைகளுடன் கூடியது மூலோதகமாகும்.

122. கோமூத்ரம், கோமயம், பசும்பால், பசுந் தயிர், நெய் தர்ப்பை - தண்ணீர் இந்த ஆறு பொருட்களோடு கூடியது பிரம்ம கூர்ச்சம் எனப்படும்.

123. மயில்தோகை, பூவரச மரப்பட்டை, கோரோ சனை, கையாந்தகரை ஆனை வணங்கி இவை ஐந்தும் சேர்ந்தது வல்க லோதகம் எனப்படும்.

124. அக்னி மூலையிலிருந்து முறையாக எண்ணெய், பால், தயிர், நெய் இவைகளை வைக்க வேண்டும். நடுவில் உள்ள கலச திரவ்யம் நாற்பது வியூஹங்களுக்கு ஆகும்.

125. பில்வம், குமிழஞ்செடி, தர்பம், மரிக்கொழுந்து, செந்நெல், சம்பகம் விபீதை, நெரிஞ்சில் இவைகள் எட்டும் கர்பாவரண திரவ்யங்களாகும்.

126. சிவப்பு தாமரை, வன்னி, தாமரை, நந்தியாவட்டை, நாயுருவி, அருகு, அரளி, ஸுரஸம் என்ற புஷ்பம்

127. யவை, தும்பைப்பூ, விஷ்ணுகிராந்தை மல்லிகை, ஜாதிபுஷ்பம், பில்வம், வெள்ளெருக்கு, ஓரிதழ் தாமரை.

128. இந்த திரவ்யங்கள் பதினாறும் ஒவ்வொரு வியூகத்திற்கும் மூன்றாவது வரிசையாக வரும். அடுத்து விருத்த கிரமம் சொல்லப்படுகின்றது. சிவகும்பத்தை (வட்டவடிவமாக) நடுவிலும்

129. இதற்கு இடதுபக்கம் வர்த்தனியாகும். ரத்னங்களை எட்டிலும் போடவேண்டும். மாணிக்கத்துடன் கூடிய பஞ்ச ரத்னங்கள் சிவகும்பத்தில் போடவேண்டும்.

130. கர்ணிகையின் வெளியிடத்திலும் தள மத்யத்தில் எட்டு திக்குகளிலும் பாத்யம் முதலியவைகள் ஆயிரம் கலச ஸ்நபனத்தின் வெளியில் வைக்க வேண்டும்.

131. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம், தர்ப்பை ஜலம், பால், தயிர், நெய் இவைகளை முதல் சுற்றில் வைக்க வேண்டும்.

132. இரண்டாவது ஆவரணத்தில் பதினாறு எண்ணிக்கையுள்ள பதங்களில் தங்கமும், இருபத்தி நான்கு எண்ணிக்கையுள்ள மூன்றாவது ஆவரணத்தில் தேங்காயையும் வைக்க வேண்டும்.

133. நான்காவது ஆவரண முப்பத்தி இரண்டு கடங்களில் கரும்புச்சாறு ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும். ஐந்தாவது ஆவரண ஐம்பத்தி ஆறு கடங்களில் தேனை ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும்.

134. அறுபத்தி நான்கு வெளியில் பலமலர்களோடு கூடியதாகவும் ஆறாவது ஆவரணத்தில் பூஜிக்க வேண்டும். எழுபத்தி இரண்டு கலசங்களில் எல்லா விதைகளையும் போட்டு ஏழாவது ஆவரணத்தில் பூஜிக்க வேண்டும்.

135. எட்டாவது ஆவரணத்தில் எண்பத்தி நான்கு கும்பங்களில் வாழைப்பழத்தையும் ஒன்பதாவது ஆவரணத்தில் தொண்ணூற்றி ஆறில் விபூதியையும்

136. பத்தாவது ஆவரணத்திலுள்ள நூறு கலசங்களில், பஞ்சகவ்யமும், நூற்றி நான்கு கலசங்களில் பஞ்சகவ்யமுமாக பதினொன்றாவது ஆவரணத்திலும்

137. 12 ஆவது ஆவரண வெளி நூற்றிஎட்டில் கஷாய உதகமும், பின் உள்ள பதிமூன்றாவது ஆவரணத்திலுள்ள நூற்றி பதினாறில் தாதூதகமும், லோஹோதகமும்

138. வெளியில் உள்ள பதினான்காவது ஆவரணத்தில் உள்ள நூற்றி இருபதில் மிருதோதகம் ஆகும். எல்லா வாசனைகளும், சந்தனம் மற்றும் பொருட்களும் எல்லாவற்றிலும் போடவேண்டும்.

139. நாற்பது வியூஹத்தில் ஒவ்வொர் வியூஹத்திலும் இருபத்தைந்து கலசங்களையோ கடங்களையோ உள்ள வியூஹமாக அமைக்கவேண்டும்.

140. இங்கு வர்த்தனி, சுவர்ணம், கூர்ச்சம், இவைகளோடு கூடியதாக அந்த அந்த திரவ்யங்களுடன் கூடியதாகவும் வைக்க வேண்டும்.

141. திரவ்யங்கள் கலசங்களில் போடும் விஷயத்தில் சதுரம், வட்ட வடிவம் இரண்டுமே சிறந்ததாகும். விஷயத்தில் கூறப்பட்ட திரவ்யங்கள் எல்லாம் கிடைத்து சேர்ப்பது சிறந்த தன்மையை தரும்.

142. பாதியாக இருந்தால் மத்யமம், அதில் பாதி அதாவது கால்பாகம் அதமமாகும். நடுவில் தேவர்கள் வித்யேசர்கள் அதற்குமேல் மற்றகும்பங்களில் மந்திர மஹேச்வரர்களை பூஜிக்க வேண்டும். மத்தியில் சிவனை பூஜிக்க வேண்டும்.

143. அவரே ஆயிரம் நாமங்களால் சிறப்பிக்கப்படுகிறார்கள். ஆகையால் சிவனுடைய பல்வேறு பெயர்களாலேயே பூஜிக்கவேண்டும்.

144. மந்திரம் பொருள் மறைவான அக்ஷரங்களுடன் கூடியதாயும் நான்காம் வேற்றுமையுடனும் பிரணவத்தை முன்னிட்டும், நம: என்ற பதத்தை முடிவில் உள்ளதாயும், ஹோமங்களில் ஸ்வாஹா என்ற பதத்தையும் உபயோகிக்க வேண்டும்.

145. ஆயிரத்தெட்டு என்ற முறையில் ஆசார்யன் வெளிச்சுற்றைவிட வேண்டும். அங்கு தென்கிழக்கு முதலிய நான்கு மூலைகளில் நான்கு வியூகம் ஏற்படுத்த வேண்டும்.

146. உள்ளே உள்ள நாற்கோணங்களில் இவ்வியூ கத்திற்கு வெளியில் இவைகளுக்கு இடைவெளியில் ஹோமத்திற்காக ஸ்தாபிக்க வேண்டும்.

147. அதற்கு வெளியில் பதினாறு வியூஹங்கள் முன்போலவே செய்யவேண்டும். மற்றவை எல்லாம் சமானமாகும். இவை ஐநூற்றி எட்டு ஸ்தானத்தில் ஆகும்.

148. இருநூற்றி எட்டு நடுவில் உள்ள எட்டும் அதன் வெளியில் இருபத்தி ஐந்து கும்பங்கள் திக்குகள், மற்றும் விதிக்குகளில் வைக்க வேண்டும்.

149. வெளியில் பதினாறு எண்ணிக்கை உள்ள தாக திக்கு விதிக்குகளில் வைக்கவேண்டும். எட்டு வியூகங்களாக இருப்பின் இவ்விதம் சொன்ன முறைப்படி ஆகும்.

150. திரவ்யங்களின் அளவு மறுபடியும் விரிவாக சொல்லப்படுகிறது. ரத்னங்கள் உயர்ந்தவைகளாக அதன் தன் அளவால் சொல்லப்படுகிறது.

151. பத்து உளுந்தின் அளவு முதல் நிஷ்கம் என்ற அளவு வரை அதிகரித்ததாக உலோகத்தின் அளவாகும். உலோகத்தின் அளவு எவ்வளவோ அதுவே பாஷாணத்தின் அளவாகும்.

152. நிஷ்கத்தின் கால்பாக அளவிலிருந்து பலம் வரையில் விதை யளவு சொல்லப்படுகிறது. அது வரை அரிசியின் அளவும் சர்க்கரையின் அளவுமாகும்.

153. ஆனால் ஏழு பலம் அளவின் இரண்டு மடங்கு வெல்ல அளவும் வாசனை பொருள் அளவு தாதுக்களை போல் அளவுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

154. பழங்கள், பத்ரசூர்ணங்கள், அதேபோல் பொறி, சத்துமாவு, எள், கடுகு, மஞ்சள் மற்றும் சாணத்தூள் இவைகள் விபூதி அளவுப்படியாகும்.

155. பஞ்சகவ்யம், தயிர், பால் இவைகள் விபூதியை போன்ற அளவாகும். பாலை போலுள்ள அளவையும் அல்லது பாதி அளவிலுமோ நெய்யின் அளவும் பாலின் கால் பாக அளவோ பலம் என்ற அளவினாலோ தேனின் அளவுமாகும்.

156. பழம் இல்லையானால் கிடைத்ததை வைத்து மீதியை தண்ணீரால் நிரப்ப வேண்டும்.

157. நெய்யை போல எண்ணெயின் அளவாகவோ எல்லாம் பாத்திர அளவை பொறுத்தோ சிறந்தது. அரை, கால், அல்லது அதில் பாதி அளவாகவோ ஆகும். புஷ்பம் கை அளவாகும்.

158. மூலிகைகள் அதற்கு இணையாகவும் மருந்துகளில் அதன் உருவ அளவேயாகும். அதேபோல் அதன் பாத்திர அளவுமோ ஆகும். வேர் அளவு சந்தனத்தை போல ஆகும்.

159. காய்ந்த புஷ்பம், பழம், இவைகளின் அளவும் சந்தனத்தை போலாகும். மண் அளவும் முன் போலவே சந்தனத்தை போல் என்று மற்றவையும் இப்படியே என ஊகிக்கலாம்.

160. வைரம் எல்லா ரத்தனங்களுள்ளும் உலோகங்களுக்கும் ஸ்வர்ணமுமாகும். யவை எல்லா விதைகளுக்கும் தாதுக்களுக்குள் ஹரிதாளமும் சிறந்தது ஆகும்.

161. மூலிகைகள் இல்லாவிட்டால் (ஸஹதேவி) நற்குறிஞ்சிதாழை சிறப்பாக சொல்லப்படுகிறது. பழங்கள் இல்லையெனில் வாழைப்பழம் பத்திரங்கள் இல்லை யானால் பில்வ பாத்திரங்கள் ஆகும்.

162. புஷ்பங்களில் நீலோத்பலம் அல்லது தாமரையையோ சொல்லலாம். எல்லா வாசனை பொருட்களின் சந்தனம் சிறந்தது. மண்களில் தர்ப்பையடிமண் சிறந்ததாகும்.

163. மரப்பட்டைகளில் அரசமரப்பட்டை, கிழங்குகளில் பெருங்கோரை கிழங்கும், சர்க்கரை இல்லையெனில் வெல்லத்தையும், கரும்பு தேன் இவையில்லாவிடினும் வெல்லத்தை கிரஹிக்கலாம்.

164. பழம், புஷ்பம், இவைகள் கிடைக்காவிட்டால் அந்த பத்ரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த திரவ்யங்கள் எல்லாவற்றையும் மூலமந்திரத்தால் போட வேண்டும்.

165. பீஜமந்திரத்தினால் மடக்கினாலோ (பாத்திரம்) மாந்தளிர்களாலோ மூடி, ஹ்ருதய மந்திரத்தினால் பலவித வஸ்திரங்களை அணிவிக்க வேண்டும்.

166. வஸ்திரங்களை மிகுந்த கருப்பானவைகளையும் குறைவான வஸ்திரங்களையும் விடுத்து அஸ்திர மந்திரத்தினால் சந்தனம் புஷ்பம், தூபம் இவைகளை அந்தந்த மந்திரங்களாலும் கொடுக்க வேண்டும்.

167. தீபத்தை காண்பித்து லிங்க முத்திரையையும் காண்பித்து கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹோமம் ஆரம்பிக்க வேண்டும்.

168. எல்லா லக்ஷணங்களோடும் கூடிய குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ ஆயிரம் கவச விதானத்தில் ஐநூறு முறை ஹோமம் செய்ய வேண்டும்.

169. குண்டத்திற்கு உரிய முறையில் சொல்லப்பட்டபடி அக்னி ஸம்ஸ்காரங்கள் செய்து சமித், ஆஜ்யம், அன்னம், பொறி இவைகளை முறையாக ஹோமம் செய்ய வேண்டும்.

170. பொரசு, அத்தி, அரசு, ஆல் இவைகளை கிழக்கு முதலான திசைகளிலும், வன்னி, கருங்காலி, நாயுருவி வில்வம் இவைகளை அக்னி பாகத்திலிருந்து முறையாக சமித்துக்களை உபயோகிக்க வேண்டும்.

171. எட்டு பக்ஷத்தில் கூறிய ஸமித்துக்களில் முன்பு கூறப்பட்ட பக்ஷத்தில் கோணங்களை விட்டு விட வேண்டும். முதல் ஐந்து சமித்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வன்னி முதலான சமித்துக்களை விட்டு விடவேண்டும்.

172. நான்கு ஹோம விதானத்தில் பிரதானத்திலோ அல்லது கிழக்கிலோ நூறு அல்லது அதில் பாதி மூலமந்திரத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

173. மூலமந்திர ஹோமத்தில் பத்தில் ஒரு பங்கு பஞ்ச பிரம்ம மந்திரங்களால் நேத்ரமந்திரங்களால் அதே போல் ஆறு அங்க மந்திரங்களாலும் ஹோமம் செய்து திவார பூஜை செய்து உள்ளே செல்ல வேண்டும்.

174. கர்ப்பகிருஹத்தில் நுழைந்து லிங்கத்தை சுத்தி செய்து ஸங்கல்பம் செய்து பீடத்தை அர்ச்சித்து மூர்த்தியை ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

174. பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஸகளீ கரணம் செய்து பிறகு வித்யா தேஹ கல்பனை செய்ய வேண்டும்.

175. பாத்யம், அர்க்யம், ஆசமனம் இம்மூன்றையும் கொடுத்து சந்தனம் புஷ்பம், தூபம், தீபம் இவைகளை மூல மந்திரங்களினால் கொடுத்து எல்லா வாத்யங்களோடும்

176. நடனம், பாட்டு இவைகளோடும் சங்க வாத்ய சப்தத்தோடும் வேதம் ஸ்தோத்திரம் இந்த பாராயணத்தோடும் மணி சப்தத்தோடும்

177. ஜய சப்தத்தோடு கூடியதாகவும் சிவ கும்பம் வர்த்தனி இரண்டையும் எடுத்து இறைவனுக்கு எதிரே முக்காலியின் மேல் வைக்க வேண்டும்.

178. கடத்தில் உள்ள இறைவனுக்கும் தேவிக்கும் பாத்யம் முதலியவைகளையும் சந்தனம் புஷ்பம் தூபம், தீபம் இவைகளையும் கொடுத்து

179. ஆசார்யன் வலது கையால் கும்பத்தை மூடியுள்ள மடக்கு அல்லது மாவிலைகளை எடுத்து கூர்ச்சம் புஷ்பம் இவைகளை சிவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு

180. எடுத்து தத்வ சித்தத்தோடு லிங்கத்தின் தலையில் வைக்க வேண்டும். தேவியையும் இறைவனுக்கு இடது பாகத்தில் பூஜிக்க வேண்டும்.

181. சிவமந்திரத்தை நினைத்துக் கொண்டு கும்பதண்ணீரால் இறைவனை (ஸ்தாபனம்) அபிஷேகம் செய்ய வேண்டும். தேவியை பிண்டிகை ரூபினியாக நினைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

182. ஸத்யோஜாத மந்திரத்தினால் பாத்யத்தை இரண்டு பாதங்களிலும் ஈசானமுதல் ஸத்யோஜா தம் வரையிலான ஐந்து மந்திரங்களால் ஐந்து முகங்களில்

183. ஆசமனத்தையும் சிகையில் அர்க்யத்தையும் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்ய அபிஷேகம் முதலிய ஆரம்பத்திலும் பெரிய மணி சப்தத்தோடு சிரசில் அர்க்யம் கொடுக்க வேண்டும்.

184. எழுப்புதலோடு கூடிய தூபத்தை வைக்கலாம். ஆவரணபூஜை முடிவில் கட்டாயம் தூபத்துடன் கூடியதாக உபஸ்தானம் செய்ய வேண்டும்.

185. பல்வேறுவகையான பழங்கள், பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம் இவைகள் இருப்பின் அவைகளால் பரமேஸ்வரனை அபிஷேகம் செய்ய வேண்டும்.

186. வாசனாதி (பன்னீர்) சந்தன தீர்த்தத்தால் பிரோக்ஷித்து சந்தனத்தால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து அர்ச்சனை விதியில் கூறப்பட்டபடி செய்து ஹோமத்துடன் நிறைவு செய்ய வேண்டும்.

187. ஸகள ஸ்நபனம் என்றால் ஸகளஸ் தாபன முறையில் கூறியபடி ஆஸனம் முதலியவைகளை செய்து கும்பத்தில் மூர்த்தியை தியானிக்க வேண்டும்.

188. பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஸகளீகரணம் செய்து அந்த கலைகளை அங்கு வைக்கவேண்டும். (நியாஸம் செய்ய வேண்டும்)

189. வித்யா தேஹத்தை கல்பனை செய்து அந்தந்த உருவத்தோடு கூடியதாக இறைவனை தியானம் செய்து ஆசார்யன் பாத்யம் முதலியவைகளை ஹ்ருதயமந்திரத்தினால் கொடுக்க வேண்டும்.

190. சந்தனம் தூபம், தீபம், அர்க்யம் இவைகளை செய்து லிங்க முத்திரையையும் காண்பித்து கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும்.

191. கவுரியை வர்த்தினியில் பூஜை செய்து யோனி முத்திரை காண்பித்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து ஆவரண தேவதைகளான ருத்ரர்களை பூஜிக்க வேண்டும்.

192. முன்பு சொன்ன முறையினாலும் முறையாக ஸகளமூர்த்தியின் அருகில் சென்று ஆசனம், மூர்த்தி இவைகளால் பூஜை செய்ய வேண்டும்.

193. சகளீகரணம் செய்து வித்யாதேஹ சரீரத்தை கல்பனை செய்துகொண்டு ஸ்நபனம் முதலியவைகளை செய்து பிறகு பாத்யம், ஆசமனம் அர்க்யம் இவைகளையும் கொடுக்க வேண்டும்.

194. சந்தனம், புஷ்பம், தூபம், தீபத்துடன் மற்றும் இவைகளால் உபசாரம் செய்ய வேண்டும். முன்பு போல் குடத்தையும் எடுத்து சென்று சிவனின் ஹ்ருதயத்தில் மந்திரத்தை ஸமர்ப்பிக்க வேண்டும்.

195. அந்தந்த தேவதையின் மந்திரத்தை அந்த தேவியின் ஹ்ருதயத்தில் ஸமர்ப்பணம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்த பிறகு பாத்யம் முதலியவைகளை கொடுக்க வேண்டும்.

196. ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து மீதமுள்ள கடதீர்த்தங்களை ஈச்வரியிடமும் அபிஷேகம் செய்யலாம் அம்பாளுக்கு தனியாகவும் இருக்கும்போது தேவிக்கும் ஸ்தாபித்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

197. சித்திரத்தில் கண்ணாடி முதலியவைகளான ஸ்வாமிக்கு அதன் பாதத்தின் அடியில் சந்தனம் முதலியவைகளால் ஸ்நபனத்தில் கூறியபடி செய்ய வேண்டும்.

198. தேவியினிடத்தில் ஸ்நபனத்தில் கும்பத்தையோ கரகத்தையோ வைக்க வேண்டும். திரவ்யங்களில் பேதம் இல்லை. தேவதைகளில்தான் பேதம் உண்டு.

199. சாந்தி கலை முதலியவைகள் ஐந்து கும்பம் என்ற தன்மையிலும், ஒன்பதாக இருந்தால் வாமை முதலியவர்களும், தாரிகா முதலியவர்களையும் திக்குகளிலும் பூஜிக்க வேண்டும்.

200. அனந்தன் முதலியவர்களை விதிக்குகளின் கோணங்களில் பூஜிக்க வேண்டும். இது 25 கலச பூஜா முறையாகும். பிருத்வி முதலிய முக்கிய தேவர்களை இடது புறத்திலிருந்து பூஜிக்க வேண்டும்.

201. மேற்படியுள்ள தேவர்களை பெண்பால் உடையதாக பூஜிக்க வேண்டும். இங்கும் பால் முதலியவைகளால் ஸ்நபனம் (அபிஷேகம்) சொல்லப்படுகிறது பிராம்மணர்களே.

202. பால், தயிர், நெய், தேன் பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், கரும்புச்சாறு பழங்கள் எல்லா தான்யம் பொறி சத்துமாவு மற்றும் எல்லாவகை பொருட்களாலும்

203. மஞ்சள் பொடியாலும், பல்வேறு புஷ்பங்களாலும் இளநீர்களாலும் நல்ல பழங்களாலும் சிறந்த இடங்களில் இருக்கின்ற தண்ணீர்களாலும்

204. சந்தனம் மூலிகைகளோடு கூடியதாகவும் சுத்தமான தண்ணீராலும் சந்தனாதி தைலத்தாலும் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களாலும் முன் சொன்ன முறையில்

205. எல்லா தோஷங்கள் அகலவும் நினைத்தது நடக்கவும் அரசர்களுக்கு வெற்றி ஏற்படவும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

206. நீண்ட ஆரோக்யம் பெறவும், நீண்ட ஆயுள் பெறவும் எல்லா நலன்களையும் பெறவும் பலம், காந்தி இவைகள் பெற வேண்டும்.

207. நாட்டின் வறுமை போக்கவும், அதன் துஷ்டர்களை அழிக்கவும் நாட்டின் கலகமேற்பட்ட போதும் ஆச்சர்யமான சமயத்திலும் கெட்ட சகுனங்களிலும்

208. எல்லா உலகங்களையும் வசப்படுத்துவதற்கும் யானை, குதிரை, இவைகளின் வளர்ச்சிக்காகவும் அவைகளின் ரோகங்கள் போவதற்காகவும் நோய் உண்டாகமல் இருப்பதற்கும்.

209. சண்டைகளின் முயற்சிக்கும் தன் ஸேனையின் பலத்திற்கும் இறப்பின்மைக்கும் எதிரி சேனையின் குறைவிற்காகவும் பயத்திற்காகவும் மயக்கத்திற்காகவும்.

210. ஆண் பெண் விலங்குகள் மற்றும் அனைத்தின் நலனிற்காகவும் பிறந்த நாளிலோ அரசன் பட்டாபிஷேக நாளிலோ

211. அந்தந்த சந்திராஷ்டம தினங்களிலோ வைநாசிக நக்ஷத்திரத்திலுமோ அந்த கிரஹண காலங்களிலோ மற்றும் அயன விஷுவகாலங்களிலும் பிரதிஷ்டாகாலங்களிலுமோ

212. உத்ஸவம், பவித்ரோத்ஸவம், மரிக்கொழுந்து சாத்துதல், கிருத்திகா தீபம் மற்றும் மாச நக்ஷத்திரங்களிலும்

213. அஷ்டமி அல்லது சதுர்தசி அல்லது (அமாவாசையை) பவுர்ணமி மார்கழி மாதத்தில் சிறப்பான திருவாதிரையிலும்

214. பிராயச்சித்தமாக செயல்களிலும் நவநைவேத்ய கர்மாவிலும் மக்களுக்கு நன்மை தரும் காலங்களிலும் மக்களை காப்பாற்ற வேண்டிய சமயத்திலும்

215. சிறப்பு பூஜை காலங்களிலும் பக்த உத்ஸவ சமயங்களிலும் ஸ்வாமி வீதி யுலா காலங்களிலும் சிறப்பான வேட்டை உற்சவ நிகழ்ச்சிகளிலும்

216. தினமும் மூன்று வேளைகளிலுமோ அல்லது இரண்டு அல்லது ஒன்று என்ற முறையில் ஆசார்யர்கள் இறைவனுக்கு ஸ்நபனம் செய்ய வேண்டும்.

217. முன்பு சொன்ன முறையிலும் சில சிறப்புக்கள் சொல்லப்படுகின்றன. ஓர் கும்பத்தையோ அல்லது ஐந்து கலசங்களை ஸ்தாபித்து

218. முன் சொன்ன திரவ்யங்களுடனோ அல்லது வர்த்தனீ கும்பத்துடனோ பஞ்ச பிரம்மம் கூடிய ஐந்து கலசங்களுடனோ

219-220. ஒரு திரவ்யத்துடனோ அல்லது வர்த்தனி யோடும் இஷ்டமான பொருள்களை நடுவிலும் குறைந்த பொருட்களுடனோ ஓர் திரவ்யத்தை நான்கு திசைகளிலுமோ வெவ்வேறு திரவ்யங்களையுமோ பாத்யம், ஆசமனம், அர்க்யம் பஞ்சகவ்யம் இவைகளை வைத்தோ செய்யலாம்.

221. ஒன்பது கும்ப விதானத்திலும் இந்த முறை சரியானதே முன்பு கூறியவைகளில் குறைந்தாலும் திக்குகளில் பாத்யம் முதலியவைகளை செய்தாலும் செய்யலாம்.

222. தங்கம் முதலிய பாத்திரங்களில் செய்வது மிகவும் சிறந்ததாகும். முன் சொன்ன பாத்யாதி கர்மாக்களிலும் நித்யகர்மாவில் பாத்யாதிகர்மாக்களை செய்வது சிறப்புற்றதாகும்.

223. இருபத்தி ஐந்து கலசபூஜை முறையிலும் தினச்செயல் முறைகளில் சிறப்பு பெற்றதாகும் மிகச் சிறந்த பூஜையில் நூற்று எட்டு வரையில் செய்யலாம்.

224. தினபூஜைக்கு ஸ்நபனம் செய்தாலும் செய்யலாம். சிறப்பு பூஜைக்கு முன்பு சொன்ன முறையும் சிறந்தது.

225. இருபத்தி ஐந்து முதல் ஆயிரத்தெட்டு வரையில் இடையில் சில சிறப்புக்கள் சொல்லப்படுகின்றன.

226. நாற்கோணங்களை சேர்த்தாவது விட்டாவது இறைவனை தண்ணீரால் முன் சொன்ன முறைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.

227. சிரேஷ்டமான பூஜை செய்யுமிடத்தில் ஸ்நபன பூர்வமாக செய்தல் ஆகும். அது சிறந்த பலனை கொடுக்கும். உத்ஸவம் முதலியவைகளில் கார்ய குறைவை விட வேண்டும்.

228. குறைவான பூஜாகாலங்களில் நல்ல கிரியைகள் உயர்ந்ததல்ல. நித்யம், நைமித்திகம், காம்யம் என்று மூன்று விதமாக ஸ்நபனம் படிக்கப்படுகிறது.

229. நித்ய நைமித்திக கார்யங்களில் அனுசரித்து பாபங்கள் போவதற்கு செய்ய வேண்டும். உலக நன்மைக்காக வேண்டும் தான் விரும்பிய பலனுக்காகவும் காம்ய பூஜை செய்ய வேண்டும். தாழ்ந்ததை ஒரு பொழுதும் செய்யக்கூடாது.

230. அவச்யம் செய்ய வேண்டியதை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற சந்தேகம் வருமே யானால் செய்ய வேண்டியதை செய்தால் மேன்மையும் செய்யாத பொழுது குற்றமும் ஏற்படும்.

231. லோகம், சாஸ்த்ரம் இரண்டிற்கும் சமமாக இருக்குமானால் அதை செய்வது நியாயமாகும். லோக சாஸ்திரங்களால் அதற்கு பொருத்தமில்லையானால் சந்தேகத்தை விட்டு விடலாம்.

232-233. கிரியை மந்திரம் இவைகள் சாஸ்திர பேதமாக இல்லாமலிருந்தாலும் கிரியை மந்திரம் இவைகள் பேதங்களுடன் தந்த்ர பேதமும் இருந்தால் ஆகையால் இவை மூன்றுமே சைவசாஸ்த்ரத்தில் செய்ய வேண்டும். மற்ற சாஸ்திரங்களை கூடாது உரிய முறைப்படி சைவ சாஸ்திரத்தில் உயர்வாக கூறாததை வேறு சாஸ்திர உயர்வை ஏற்கலாம்.

234. சாஸ்த்ர விதிக்கும் அனுபவத்தியிருக்குமேயானால் மற்ற சாஸ்திரத்தினால் உபபத்தி கூற வேண்டும். சாஸ்திரத்தில் பிராயசித்தம் முதலியவைகள் விரிவாக சொல்லப்படவில்லை என்றால் பிற சாஸ்த்ரங்களில் இருந்து எடுத்து கொள்ளலாம்.

235. சாஸ்த்ர முறையில் பொருள் நன்கு இருக்கும் பொழுது அதற்கு அங்கமாக ஸ்ருக் ஸ்ருவம் முதலியவைகள் தன் சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு சாஸ்தரங்களில் இருந்து கூறப்பட்டவைகளை எடுத்து கொள்ளக்கூடாது.

236. இவ்விதம் எல்லாவற்றையும் ஆராய்ந்து எந்த அரசன் செய்கிறானோ அவன் வெகுநாட்கள் சக்ரவர்த்தி யாக இருப்பான்.

237. அவருக்கு நீண்ட ஆயுள் நோயின்மை மனதில் நினைத்த கார்யம் வெற்றி, சந்தோஷம் சிவனிடத்தில் நிலையான பக்தி உடையவராக இருப்பான்.

238. மாறுபட்ட செய்கைகளை கண்டு யார் அலட்சிய படுத்துகிறானோ அந்த அரசன் நிச்சயம் அழிவை அடைவான் இதில் சந்தேகமில்லை.

239. புலன்களை வென்றவரும் ஐந்து கோத்ரத்தினால் பிறந்தவரும் சைவாகமத்தின் ஞானத்தை கரை கண்டவரும் ஆன சிறந்த அனுஷ்டானமுடையவராக ஆசார்யரைக் கொண்டு

240. தன் நாட்டு மக்கள் நன்மைக்காக செயல்களை நிறைவேற்ற செய்ய வேண்டும். ஆசார்யர்களிலே சிறந்த ஆசார்யனை சிவசாஸ்த்ரத்தில் தேர்ச்சி பெற்ற வரை கரஹிக்க வேண்டும்.

241. அவர் மூலமாகவே ஸ்நபனம் முதலியவைகளையும் செய்ய வேண்டும். சிறப்பு பூஜை அவராலேயே நினைத்ததை நிறைவேற்றுவதற்கு அனுஷ்டிக்க பட வேண்டும்.

242. பால், தயிர், நெய், தேன், நெல்லி மாவு, முதலியவைகளால் இறைவனை நன்கு ஸ்நான வேதிகையின் மேல் வைத்து அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

243. சந்தனம் மற்றும் வாஸனை தீர்த்தத்தால் சிவனை அபிஷேகம் செய்து சுத்த துனியால் ஒத்தி எடுக்க வேண்டும். சந்தனம் முதலியவைகளால் பூசி பட்டு முதலியவைகளால் சிவனை அலங்கரிக்க வேண்டும்.

244. சந்தனம் புஷ்பம், மாலைகள் இவைகளுக்கு பிறகு தூபம் தீபம் முதலிய உபசாரங்களும் கற்பூர ஹாரத்தி தீபாராதனை முதலியவைகளை செய்ய வேண்டும்.

245. ஐந்து வகையான சாதங்கள், பாயசம், சுத்தான்னம் இவைகளுடன் பலவகை காய்கறி பக்ஷணங்கள் மற்றும் பலவித பழங்களுடன் காய்கறிகளுடன் கொடுத்து

246. இவைகளை கொடுத்து தாம்பூலம் முகவாஸம் முதலியவை கொடுக்க வேண்டும். ஏலக்காய், லவங்கம், கற்பூரம், ஜாதிபத்திரி தக்கோல சூர்ணம் மற்றும் வாசனை பொருட்கள்

247. சுண்ணாம்புடன் சேர்ந்தது முகவாஸம் எனப்படும். வணங்கி அனுமதி பெற்று ஹோமத்திற்காக குண்டத்தின் அருகில் செல்ல வேண்டும்.

248. ஸ்மித், நெய், ஹவிஸ், எள், இவைகளால் நூற்றிஎட்டு முறை ஹோமம் செய்து நிறைவாக பூர்ணாஹுதி செய்ய வேண்டும்.

249. அதிலிருந்து விபூதி ரøக்ஷ எடுத்து எஜமானருக்கு கொடுக்க வேண்டும். வேண்டியதை பிரார்த்தித்து மீண்டும் மீண்டும் வணங்க வேண்டும்.

250. ஒரு நாள் முதல் ஆரம்பித்து ஏழுநாள் வரை செய்ய வேண்டும். இருமுறை அல்லது மூன்று அல்லது நான்கு ஐந்து என்ற முறைகளினாலோ செய்யலாம்.

251. ஆறு ஏழு என்ற எண்ணிக்கையானது செயலின் பலன் கிடைப்பதற்கு ஆகும். முன்பு கூறப்பட்ட பலனை கொடுக்க கூடியதானது விசேஷமான பூஜையாகும்.

252. நித்யத்தின் முடிவில் விரோதமின்றி நைமித்திகமாகும். நித்யம் செய்து கொண்டு இருக்கும்பொழுது நைமித்திகம் செய்ய வேண்டி இருந்தால்

253. நித்யத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு நைமித்திகத்தை செய்ய வேண்டும். நித்ய சந்த்யாபூஜை அதன் பூஜா காலத்தின் முன்பு நைமித்திகமும் நித்ய பூஜையும் ஏற்பட்டால்

254. நைமித்திகம் தன்னுடைய காலத்தில் நிச்சயமாக செய்யவேண்டும். ஸந்தியை கூட குறுகிய காலத்தில் மற்றொரு கிரியை பகுதியில் செய்ய வேண்டும்.

255. இரு இடங்களிலும் தந்திரங்களாலேயே அனுஷ்டானம் செய்ய வேண்டும். தூபம் நைவேத்யம் வரை உள்ள நித்ய கர்மாவை செய்யவேண்டும்.

256. உரிய காலத்தில் செய்து நைமித்திக செயல்களை பிறகு செய்ய வேண்டும் நைமித்திக பூஜை பெரியதாக இருப்பின் அதன் காலத்தில் ஆரம்பித்து

257. ஒன்று முதலான ஆவரணத்துடன் கூடியதாகவே ஸந்த்யை பூஜை முதலியவைகளை முடித்து ஸந்தியாபூஜை முடிவில் எல்லா கலசங்களாலும் கூறிய முறைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.

258. நைமித்திகம் இரண்டு வந்தால் பெரியதை முதலில் செய்ய வேண்டும். சிறியதை பிறகு செய்ய வேண்டும் அல்லது இரண்டுமே சமமாக இருந்தால் விருப்பப்படி செய்யலாம்.

259. நைமித்திக காலமும் இரண்டு வகைப்படும். சிறியது பெரியது என்ற பிரிவில் அயனம் முதலியவைகள் சிறியவை ஆகும்.

260. கிரஹணம் முதலியவைகள் பெரிய காலங்கள் ஆகும். சூர்யகிரஹணத்தின் ஆரம்பத்திலும் சந்திர கிரஹணம் விடும் பொழுதும் விசேஷ பூஜை செய்ய வேண்டும்.

261. தட்சிணாயனம் வருவதற்கு முன்பும் உத்தராயனம் வந்த பின்பும் விஷுவம் போன்ற காலங்களில் நடுவிலும் ஸ்நபனம் முதலியவைகள் செய்ய வேண்டும்.

262. கன்னி, மிதுனம், மீனம், தனுசு இவைகளில் கடைசியிலும் சிம்மம், விருச்சிகம், கும்பம், விருஷபம் இவைகளில் முதலிலும் ஸ்நபனம் செய்யலாம்.

263. பாதி, ஒன்று அல்லது இரண்டு என்ற முடிவான யாமங்களிலோ அல்லது அரை ஒன்று அல்லது இரண்டு என்ற நாழிகை கணக்கிலோ ஆரம்பத்திலோ முடிவிலோ ஸ்நபனம் முதலிய செயல்களில் எடுத்து கொள்ள வேண்டும்.

264. ஆசார்யனை தங்க அணிகலன்கள் வஸ்திரங்கள் கொடுத்து உபசரிக்க வேண்டும். யாகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தங்கம் ஆடைகள் முதலியவைகளை

265. ஆசார்யனுக்காக கொடுக்க வேண்டும். வேறு ஒன்றுக்கும் உபயோகபடுத்தக் கூடாது. யாகத்தில் உபயோகிக்கப்பட்ட பொருள் அணிகலன் மற்றும் யாக மண்டபத்தில் உள்ள

266. ஸ்தண்டிலம் ஆடை, தங்கம், கும்பமோ, அல்லது கலசமோ முதலியவைகள் தோரணம், ஸ்ருக்ஸ்ருவம் அஷ்டமங்களம் நவரத்னங்கள்

267. ஹோமத்திற்கு செய்த ஹவிஸ், நைவேத்யம் மற்றும் கொட்டகை வலயங்கள் அங்கு உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள்

268. ஐந்து கோத்ரத்தில் பிறந்த ஆசார்யனுக்கே இவைகளை கொடுக்க வேண்டும். ஓர் நிஷ்கம் முதல் பத்து மடங்கு தட்சிணை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும்.

269. எட்டின் ஒரு பகுதி நிஷ்கதானம் ஹீனமாகும். அதில் பாதி அதமமாகும். ஒன்பது விதமாக தட்சிணை க்ஷீத்ரக்ரமமாக கூடி இறைப்பது கீழ்பட்ட செயலாக கூறப்படுகிறது.

270. தினமும் செய்து வந்தால் அபிவ்ருத்தியையும் மனஸ் சந்தோஷத்தையும் கொடுக்கும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் ஸ்நபன முறையாகிற நான்காவது படலமாகும்.
படலம் 3: ஸகளார்ச்சனா விதி!

மூன்றாம் படலத்தில் ஸகளார்ச்சன விதி கூறப்படுகிறது. ஸகளார்ச்சனம் ஸர்வாபீஷ்டமென கூறப்படுகிறது. ஆசார்யன் சவுசாசமனஸ்நான ஸந்தியாவந்தன தர்பணம் முடித்து ஆலயம் நுழைந்து பாத பிரக்ஷõளன ஆசமன பஸ்மதாரணம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஆத்மசுத்தி விஷயத்தில் செய்யவேண்டிய கிரியைகள் நிரூபிக்கப்படுகிறது. பின்பு கரந்யாஸபூர்வம் ஆத்மாசிவயோஜநம் பூதசுத்தி, ஆத்மா சைவதநுகல்பன பிரகாரம் இவ்வாறான விஷயங்கள் பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் கரன்யாஸம் அனுஷ்டிக்கப்படுகிறது. பிறகு ஸ்தான சுத்தி, த்ரவ்ய சுத்தி மந்திர சுத்தி பிரகாரம் ஸம்÷க்ஷபமாக நிரூபிக்கப்படுகிறது. பின்பு த்வாரபூஜை, பேரசுத்தி பிரகாரம் கூறப்படுகிறது. பிறகு ஆஸந கல்பன பிரகாரம் மூர்த்தி கல்பனம் நிரூபிக்கப்படுகிறது. வித்யா தேஹகல்பனம் விசேஷமாக பிரதிபாதிக்கப்படுகிறது. ஸதாசிவன், மஹேசன், ருத்ரன் என மூன்றுவிதமாக சிவதேஹம் கூறப்பட்டுள்ளது. இதுவே வித்யாதேஹமென கூறப்படுகிறது. சிவனுடைய சமயவாயிநியான விமலாசக்தி ஸதாசவ சரீரமாக கூறப்படுகிறது. மஹேச்வரி மூர்த்தி சவும்யரூபிணி, ரவுத்ரீ மூர்த்தி, உக்ரஸ்வரூபிணி, பிரம்மா, விஷ்ணு ருத்ர, மஹேச சதாசிவர் ஆகியவர்கள் காரண தேவர்கள் ஆகும். ஸதாசிவ தேஹத்திற்காக அஷ்டத்ரிம்சத்கலாந்யாஸம் செய்யவேண்டும். ருத்ர ஈசர்களுக்கு சரீரசித்திக்காக ஏகத்ரிம்சத் கலாந்யாஸம் செய்யவேண்டும் என்று ஸ்தான விஷயங்கள் வித்யாதேஹவிஷயத்தில் பிரதிபாதிக்கப்படுகிறது.

இவ்வாறு காலாந்தக கஜாரிமூர்த்திகளின் த்யான விஷயமும் கூறப்படுகிறது. பின்பு முன்பு கூறிய மூர்த்திகளின் ஆவாஹநபிரகாரம் ஸம்÷க்ஷபமாக சூசிக்கப்படுகிறது. பிறகு ஸ்தாபனாதிகம், பாத்யாதிகம், கந்த புஷ்பப தூபதீப நைவேத்யமும் எல்லாமும் லிங்கார்ச்சனை விதிப்படி செய்யவும் என சூசிக்கப்படுகிறது. பிறகு பஞ்சமாவரணம் அல்லது நான்கு, மூன்று, இரண்டு, ஒன்றாவது ஆவரணங்களில் இஷ்டப்பட்ட ஆவரணார்ச்சனம் முன்பு கூறியபடி உள்ள விதியாகும் என்று ஆவரணார்ச்சனை சூசிக்கப்படுகிறது. பிறகு பரிவாராலய, ஸ்வதந்த்ராலயத்தில் பலி அர்ப்பணிக்க வேண்டும். இதில் ஹோமம் நித்யோத்ஸவமாவது செய்ய வேண்டும். இங்கு கூறப்படாத சுத்த ந்ருத்தாதிகள் எல்லாம் லிங்கார்ச்சனைபடி செய்ய வேண்டும். சுத்த ந்ருத்தமின்றி எல்லா கர்மாவும் செய்யலாம் என்று கல்பிக்கப்படுகிறது. நடராஜருக்கு பிரதோஷாதிகளில் நீராஜன விதி விதிக்கப்படுவதாக சூசிக்கப்படுகிறது. உத்ஸவ ஸ்நபன தமநாரோபண பவித்ராரோஹண க்ருத்திகா தீப, வசந்தோத்ஸவ, மாஸோத்ஸவ நவநைவேத்ய கர்ம, பிராயச்சித்த ஜீர்ணோத்தாரண கர்மாக்களில் தேவருக்கு செய்யக்கூடிய விஹிதமான எல்லா கர்மாக்களும் தேவிக்கும் செய்தல் வேண்டும் என்று சூசிக்கப்படுகிறது. தேவி விஷயத்தில் பூரநட்சத்திரத்துடன் கூடிய ஆடி மாதத்திலும் ஐப்பசி மாதத்திலும் பூர கர்மவிதி செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறு ஸகளார்ச்சனை விஷயம் கூறப்பட்டு மஹேச்வர விஷயத்தில் கவுரி. அவ்வாறே சதாசிவ விஷயத்தில் மனோண்மணியையும் அந்தந்த சக்தி மந்திரத்தினால் பூஜிக்கக் கூடிய கவுரியின் ந்யாஸ விஷயத்தில் ஷட்விம்சதி கலாந்யாஸத்தில் மூர்த்தி கல்பனம் செய்தல் வேண்டுமென சூசிக்கப்படுகிறது. இவ்வாறாக மூன்றாவது படல கருத்து தொகுப்பு ஆகும்.

1. எல்லா நன்மைகளையும் அளிக்கக்கூடிய (உருவ) ஸகள பிம்பங்களின் பூஜை முறைகளை கூறுகிறேன். சவுசம், ஆசமனம், ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், தர்பணம் முதலியவைகளைச் செய்துவிட்டு

2. கோயிலை அடைந்து கால்களை அலம்பி ஆசமனம் செய்து விபூதியை தண்ணீரோடு கலந்து பூசிக்கொள்ள வேண்டும்.

3. உரிய முறைப்படி திருபுண்ட்ரம் விபூதி தரித்துக் கொண்டு கரன்யாசம் செய்து சிவபாவனை செய்ய வேண்டும்.

4. பூதசுத்தி செய்து அம்ருதாப்லாவனை செய்து ஆத்மாவில் சிவனை ஆவாஹனமும் செய்து ஈசான மந்த்ரம் முதலான பிரம்ம மந்திரங்களால் கரநியாஸம் செய்ய வேண்டும்.

5. தன் உடலில் கலாநியாசம் செய்து ஈசான மந்திரத்தை சிரசிலும் தத்புருஷ மந்த்ரத்தை முகத்திலும் மாலாமந்திரத்தை தியானித்து

6. மற்றதை முன்போல் செய்து முப்பத்தோறு கலாசக்திகளோடு கூடிய நியாஸம் செய்து, அந்தர்யாகம் செய்து பிறகு ஸ்தான சுத்தியை செய்ய வேண்டும்.
சந்தனம், புஷ்பம், அக்ஷதைகள் சேர்த்து விசேஷார்க்யம் தயார் செய்து கொண்டு

7. நிரீக்ஷணம் முதலிய நான்கு ஸம்ஸ்காரங்களால் திரவயசுத்தி செய்துகொண்டு முன்புபோல் தன்னையும் பூஜை செய்துகொண்டு மந்த்ர சுத்தி செய்துகொள்ள வேண்டும்.

8. அஸ்திரமந்திரத்தால் வாயிலை ஜலத்தினால் தெளித்து (பிரோக்ஷணம் செய்து) விருஷபத்தை எதிரில் பூஜை செய்து வாயிலின் இரண்டு பக்கங்களிலும் மேல் பாகத்தில் வினாயகரையும், ஸரஸ்வதியையும்

9. நந்தி, மஹாகாளர், கங்கை, யமுனை முதலியவைகளை பூஜை செய்து கீழே அஸ்திரத்தையும், பூஜை செய்து உள்ளே செல்ல வேண்டும்.

10. வாஸ்து பிரம்மாவிற்கு புஷ்பங்களை அணிவித்து அர்க்யம் கொடுத்து ஈசான மந்திரத்தால் சிவனுடைய மாலை முதலியவைகளை எடுத்து

11. வஸ்திரத்தினாலோ அல்லது தண்ணீராலோ சுத்தம் செய்து ஆதார சக்தி முதல் அனந்தன், தர்மம், அதர்மம் முதலியவைகளை வணங்கி பூஜை செய்து

12. அதச்சதனம், ஊர்த்வச்சதனம், என்ற இவைகளின் மேல் தாமரையின் கர்ணிகையில் ஹ்ருதய மந்திரங்களோடு கூடிய வாமாதி(களை) சக்திகளை பூஜித்து சிவாஸனம் பூஜை செய்ய வேண்டும்.

13. அங்கு மூர்த்தியை ஆவாஹணம் செய்து வித்யாதேஹம் கல்பிக்க வேண்டும், ஸதாசிவன், மஹேசன், ருத்திரன் என்ற மூன்றாகச் செல்லப்படும் மூர்த்தியின் பெயர்களே

14. சிவதேஹம் என்று சொல்லப்படுவதாகும். அதுவே வித்யாதேஹம் என்று சொல்லப்படுகிறது. எந்த குற்றமற்ற பரிசுத்தமான சக்தி சிவனோடு இணைந்து ஒன்றாகவே இருப்பதாக உள்ளதோ

15. அந்த உருவமே செயல் மாறுபட்டால் ஸதாசிவ சரீரமாக எண்ணப்பட்டது ஆகும். அப்படியே மஹேச்வரியின் உருவம் அழகான உருவமானதாக மஹேச்வரீ என்பதாகும்.

16. அப்படியே உக்ரவடிவத்துடன் உடையவள் ரவுத்திரி எனப்படுகிறாள். இந்த கிரியாசக்திகளுக்கு குண்டலினி சக்திதான் காரணமாக இருக்கிறாள்.

17. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மஹேஸ்வரன், ஸதாசிவன், ஆகிய காரண தேவர்கள் ÷க்ஷத்திரக்ஞர்கள் என்று கூறப்படுகிறார்கள்.

18. பிரம்மா, விஷ்ணு இவர்களின் உருவமானது மாயையின் காரணம் என கூறப்படுகிறது. ருத்திரன், ஈஸ்வரன், ஸதாசிவன் இவர்களின் மூர்த்தி அமைப்பு கிரியா வடிவமாக கூறப்படுகிறது.

19. இவ்வாறாக ருத்திரன், ஈஸ்வரன், ஸதாசிவனுக்கு மூன்றுவிதமாக கூறப்பட்டுள்ளன. அவ்வாறாக சிவனுடைய சரீரத்தை ஞானமயமாக கூறப்பட்டுள்ளது.

20. அந்த மூன்று வகையான சரீரங்களின் சித்தியின் பொருட்டு மூர்த்தியை கல்பிக்க வேண்டும். ஹ்ருதய மந்திரமான ஹாம் என்ற பீஜங்களைக் கொண்டு அந்த மூர்த்தியில் பஞ்சப்ரும்மங்களை சேர்க்க வேண்டும்.

21. பிறகு சாந்தியதீத கலை முதலான கலாந்நியாசத்தை சிவனுக்கு செய்ய வேண்டும். அதன் முறை கூறப்படுகிறது. ஈஸ்வரனுடன் கூடிய சரீரத்தில் சித்தி ஏற்படுவதற்காக 38 கலைகளுடன் கூடிய நியாஸம் கூறப்படுகிறது.

22. ருத்திரன், ஈஸ்வரன் இவர்களின் சரீர சுத்தியின் பொருட்டு 31 எண்ணிக்கையுள்ள கலாந்நியாஸம் செய்ய வேண்டும். 38 எண்ணிக்கையுள்ள கலாந்நியாச மானது முன்பே சொல்லப்பட்டுள்ளது.

23. 31 எண்ணிக்கையுள்ள கலாந்நியாஸத்தில் விசேஷம் சிறிது கூறப்படுகிறது. மஹேஸ்வர விக்ரகத்திற்கும், ருத்திர மூர்த்திக்கும் ஒரு சிரசும், ஒரு முகமும் ஆகும்.

24. அங்கு ஈசானமுக மந்திரத்தினால் ஸகள விக்ரகத்தில் மாலா மந்திரத்தினாலும் விசேஷமாக முன்பு போல் நியாஸம் செய்யவேண்டும்.

25. ஸதாசிவஸ்வரூபத்தை தியானம் செய்து பதினான்காவது ஸ்வரமான ஒள என்ற எழுத்தையும் ஆறாவது எழுத்தான ஊ என்ற எழுத்தையும்

26. சாந்தம் என்றதான ஹ என்ற எழுத்தையும் ஹ்ருதயத்திற்கு உட்பட்டதான ஹாம் என்ற எழுத்தையும் சேர்த்து வித்யாதேகம் கல்பிக்க வேண்டும் (ஓ ஹாம் ஹளம் வித்யாதேகாய நம:) இவ்வாறாக ஸதாசிவ பிம்பம், லிங்கம் இவைகளில் பூஜிக்க வேண்டும்.

27. மஹேசன், நிருத்த மூர்த்தி, முதலியவைகளின் தியானத்தை அமைதி உருவமாக தியானித்து மஹேஸ்வரனுடைய மந்திரத்துடன் கூடியதாக பிம்பம் அமைக்கும் முறைப்படி தியானிக்க வேண்டும்.

28. காலாரிமூர்த்தி, கஜஸம்ஹாரமூர்த்தி இவைகளை ரவுத்ர சொரூபமாக தியானித்து அந்தந்த மூர்த்தி மந்திரத்தோடு வித்யாதேகம் கல்பிக்க வேண்டும்.

29. மஹேசன் ருத்திரமூர்த்தி இவர்களுக்கு ஸதாசிவனை பூஜிக்க வேண்டும். இவர்களுடைய வித்யாதேஹ கல்பனையிலும் மந்திரம் ஸதாசிவனுக்கு போல எல்லா இடங்களிலும் சிவனேதான் ஆகும்.

30. அந்த ஆவாஹண மந்திரம் மந்திரோத்தார விதியில் சொல்லப்பட்டுள்ளது. அந்த முறையிலேயே ஆவாஹணம் செய்ய வேண்டும். முன்பு கூறப்பட்டபடியே சிவனுடைய மூன்று தேஹங்களிலும் ஆவாஹணம் செய்து

31. ஸ்தாபனம் முதலியவைகளையும் பரமேஸ்வரனுக்கு செய்து பிறகு பாத்யம், (ஆசமனம்) சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் முதலியவைகளையும் கொடுத்து

32. தாம்பூல ஸமர்பணம் வரையில் அனைத்தும் நிஷ்களார்ச்சளையில் போல் செய்ய வேண்டும். ஐந்து ஆவரணம், நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று ஆவரணத்தோடு

33. இஷ்டமான ஆவரணத்தோடு கூடியதாக முன் சொன்ன முறையில் ஆசார்யன், பூஜை செய்ய வேண்டும் பரிவாரங்களோடு கூடியிருந்தால் அதில் பலியிட வேண்டும்.

34. ஹோமமும், நித்யோத்ஸவமும் ஸ்வப்ரதான ஆலயத்தில் செய்யவேண்டும். சுத்த நிருத்தம் முதலியவைகள் எவை எவை சொல்லப்படவில்லையோ, அவைகளை நிஷ்கள சிவனுக்கு சொன்னதுபோல் செய்யவேண்டும்.

35. திவார பாலார்ச்சனையோடும், பலி ஹோமம் இவைகளோடு கூடியதாகவும், சுத்த நிருத்தத்தை தவிர்த்தோ எல்லா செயல்களையும் செய்ய வேண்டும்.

36. பிரதோஷம் முதலியவைகளில் நடராஜருக்கு நீராஜநம் செய்யவேண்டும். உத்ஸவம், ஸ்னபநம், மரிக்கொழுந்து சாத்தும் விழா முதலியவைகளிலும்

37. பவித்ரோத்ஸவம், கிருத்திகாதீபம், ஸம்வத்ஸர உத்ஸவம் வஸந்த உத்ஸவம், முதலியவைகள்

38. அந்தந்த மாஸத்தில் மாஸோத்ஸவம், பிராயச்சித்தம், நவநைவேத்யம் (தைபொங்கல்) ஜீர்ணோத்தாரணம், முதலியவைகளை (ஆசார்யர்கள்) செய்ய வேண்டும்.

39. ஸ்வாமிக்கு கூறப்பட்ட எல்லா பூஜை முறைகளையும் தேவிக்கும் செய்யவேண்டும். மேலும் ஆடி மாத பூரநக்ஷத்திரத்திலும் ஐப்பசி மாத பூரநக்ஷத்திரத்திலும்

40. ஆதிசக்திக்கு அன்னம், பழம், புஷ்பமிவைகளால் பிம்பம் முழுவதும் நிரப்பி செய்யப்படும் பூஜையான பூரகர்மாவையும் செய்யவேண்டும். மஹேச்வரனின் சக்தி, கவுரி என்றும் ஸதாசிவனின் சக்தி மனோன்மணி என்பதுமாகும்.

41. மனோன்மணீ மந்திரத்தால் மனோன்மணியில் பூஜை செய்யவேண்டும். கவுரி மந்திரத்தால் கவுரியை இருபத்தாறு கலைகளோடு கூடியவைளாய் பூஜை செய்ய வேண்டும்.

42. ஆதி சக்தியின் மந்திரத்தினால் ஆதி சக்தியை பூஜை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்திரத்தில் உருவ பிம்ப பூஜை முறையாகிய மூன்றாம் படலமாகும்.
படலம் 2 : தெற்கு வாயில் பூஜாமுறை!

இரண்டாவது படலத்தில் தட்சிண திவாரார்ச்சனை விதி கூறப்படுகிறது. அதில் முதலாவதாக தட்சிண திவாரார்ச்சனையின் உத்தமோத்தமம் மத்யமம் அதமம் என்று மூன்று விதமாக ஆகும். பிம்பம் தட்சிணாபிமுகமாயிருப்பின் உத்தமோத்தம பூஜை செய்ய வேண்டும், முகலிங்கம், தட்சிணாபிமுகமாயிருப்பின் மத்யம பூஜை, லிங்கம் தட்சிணாபிமுகமாயிருப்பின் அதம பூஜை செய்ய வேண்டும் என்று பூஜையின் மூன்று விதி கூறப்பட்டுள்ளது. பிம்பங்களில் நடராஜரை தட்சிணாபிமுகபிம்பம் ச்ரேஷ்டம் எனப்படுகிறது.  அவ்யக்த லிங்கம் மோக்ஷத்தையும், வ்யக்த பிம்பம் ஐஸ்வர்த்தையும், மிஸ்ரமான முகலிங்கம் புத்தி முக்தியையும் அளிக்கும் என்பதாக பூஜாபலம் நிரூபிக்கப்படுகிறது.

ஆசார்யன் சவுசாசமன, ஸ்நான, ஸந்த்யோபாஸநம் செய்து, தட்சிணத்வாரமடைந்து சிவார்க்ய ஹஸ்தராக த்வாரத்தை அஸ்த்ர மந்திரத்தால் ப்ரோட்சித்து த்வாரபாலர்களை பூஜிக்க வேண்டும். என கூறி த்வார தேவதார்ச்சனை பிரகாரம் கூறப்படுகிறது. பிறகு தட்சிணாபிமுகலிங்கத்திற்கு அர்ச்சனை விதி நிரூபிக்கப்படுகிறது. அதில் கர்ப்பாவரண, வித்யேசாவரண, கணேசாவரண லோகேசாவரண, அஸ்த்ராவரண பூஜையில் விசேஷம் பிரதி பாதிக்கப்படுகிறது. அதில் லோஹஜம், சைலஜம், மிருண்மயம், தாதுஜம்ரத்னஜம், சித்ரஹீநசிலாபிம்பம் இவைகளில் மூலலிங்க பூஜைபோல் செய்ய வேண்டும். ரத்னஜம்லோஹஜம், பக்வம்ருண்மயபேரம் இவைகளுக்கு இஷ்டமான தினத்தில் பேரசுத்தி செய்ய வேண்டும், பிம்பம் தூசியுடன் இருந்தால் வஸ்த்ரத்தால் துடைக்க வேண்டும், புண்ய தினங்களில் ஸ்நபனம் செய்யவேண்டுமென சொல்லப்படுகிறது. பிம்ப அர்ச்சனை விஷயத்தில் ஆஸன கல்பனம் வித்யாதேஹ கல்பன விதிக்கான விசேஷம் கூறப்படுகிறது. பிரதிமை விஷயத்தில் விசேஷமாக கலாந்யாஸம் கூறப்படுகிறது. பிரதிமை லக்ஷணபப்படி அவைகளின் தியானம் செய்யவேண்டுமென சூசிக்கப்படுகிறது.

பிறகு ஆவாஹன ஸ்தாபன, ஸன்னிதான, ஸந்திரோதனங்களில் விசேஷ அனுஷ்டானம் கூறப்படுகிறது. அவ்வாறே பாத்யாசமநார்க்ய பிரதாந விஷயத்தில் செய்யப்படுகிற விசேஷம் நிரூபிக்கப்படுகிறது. பாத்யாதி விஷயத்தில் கூறப்பட்டுள்ள எல்லா த்ரவ்யமும் உள்ளது சிரேஷ்டமாகும். ஒரு த்ரவ்ய ஹீநம் மத்யமம் இருத்ரவ்ய ஹீநம் கந்யஸம் மூன்று த்ரவ்ய ஹீநம் நீசமாகும். புஷ்பதூபதீபநைவேத்ய தாம்பூலங்கள் மூலமந்திரத்தால் கொடுக்கப்படவேண்டும். காலக்ரமப்படி பலிஹோம நித்யோத்ஸவ நிருத்தங்கள் செய்யவேண்டும் என சூசிக்கப்படுகிறது. பிறகு உத்தமோத்தம மத்யமாதம பூஜைகளின் காலம் பிரதி பாதிக்கப்படுகிறது. லிங்க விஷய, பிரதிமா விஷயத்தில், கர்ஷணாதி பிரதிஷ்டாந்தமான எல்லா கர்மாவும், அவ்வாறே ஸம்வத்ஸரோத்ஸவ, பவித்ராரோஹந மாஸார்சந அங்குரார்ப்பண நித்யார்ச்சநாதிகள், இந்த தந்திரத்தில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே ஆலோசித்து செய்ய வேண்டும். இவ்வாறான பிரகாரமாக நன்றாக கவனித்து தேசிகோத்தமன் உத்தராபி முகலிங்காதி பூஜைகள் செய்யவேண்டுமென கூறப்படுகிறது. முடிவில் ஸ்வாமிக்கு எந்த திக்கில் முகமுள்ளதோ அந்த திக்கே ஈசனுக்கு பூர்வம் என்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. அந்த திசையில் வசத்தால் மற்ற திசைக்கள் கல்பிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டாம்படல கருத்து தொகுப்பாகும்.

1. தெற்கு திவார பூஜையை கூறுகிறேன். அந்த பூஜை மூன்று விதமாகும். லிங்கம், பிம்பம் அல்லது முகலிங்கம் இவைகளில் பூஜிக்கலாம்.

2. பிம்பம் தெற்கு முகமாக இருந்தால் உத்தமமாகும். முகலிங்கம் தெற்குமுகமாக இருந்தால் மத்யமம். மூலலிங்கம் தெற்கு முகமாக இருப்பது அதமமாகும்.

3. பிம்பத்திற்கும் முகலிங்கத்திற்கும் தெற்கு திவாரபூஜையும், நடராஜமூர்த்திக்கும் தெற்கு திவார பூஜை விசேஷமாக கூறப்படுகிறது.

4. லிங்கம் மேற்கு முகமாக இருப்பது உயர்ந்ததாகும். பிம்பத்திற்கு தெற்கு திவாரபூஜை உயர்ந்ததாக கூறப்படுகிறது. அவ்யக்த லிங்கம் மோக்ஷத்தை கொடுப்பதாகவும் வியக்தமான பிம்பங்கள் ஐஸ்வர்யத்தை கொடுப்பதாக வேண்டும்.

5. முகலிங்கம் போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுப்பதாகவும் அறிந்து பூஜிக்க வேண்டும். ஆசார்யன் சரீர சுத்தி, அசமனம், ஸ்நானம் ஸந்தியாவந்தனாதிகளையும் செய்து

6. சிவ அர்க்யத்துடன் தெற்கு திவாரத்தை அடைந்து அதன் வாயிலை அஸ்திரமந்திரத்தினால் பிரோக்ஷித்து முறையாக திவார தேவதைகளை பூஜிக்க வேண்டும்.

7. விநாயகர், ஸரஸ்வதியை மேல்பாகத்தில், வலது பக்கம் கங்கை, நந்தியையும் இடது பக்கத்தில் யமுனையும் மஹாகாளரையும் முறைப்படி சந்தனாதிகளால் பூஜிக்க வேண்டும்.

8. (கற்பகிருகத்தில்) உள்ளே நுழைந்து வாஸ்து பிரம்மாவை, பூஜித்து ஆசார்யன் கிழக்கு முகமாக ஸ்வதந்திர முதலான ஆறு குணங்களையும் உடைய பரமேஸ்வரனை பூஜிக்க வேண்டும்.

9. லிங்க பூஜை விஷயத்தில் முன்பு போல் ஈசான திக்கில் ஈசானத்தையும், தத்புருஷத்தையோ, அகோரத்தையோ தெற்கில் பூஜிக்க வேண்டும்.

10. அகோரத்தையோ ஸத்யோஜாதத்தையோ மேற்கில் பூஜிக்க வேண்டும். ஸத்யோ ஜாதத்தையோ வாம தேவத்தையோ வடக்கில் பூஜிக்க வேண்டும்.

11. தத்புருஷத்தையோ வாமதேவத்தையோ கிழக்கில் பூஜிக்க வேண்டும். ஆக்னேய திக்கில் ஈசானத்தையும் கிழக்கு திக்கில் மனோன்மணியையும் பூஜிக்க வேண்டும்.

12. நைருதி, வாயு, ஆக்னேயம், ஈசானம் ஆகிய திசைகளில் முறையாக ஹ்ருதயாதி மந்திரங்களை பூஜிக்க வேண்டும். அல்லது முன்பு போலவே பூஜிக்க வேண்டும். அஷ்ட வித்யேச்வரர்களை தெற்கு முதலான திக்கில் பூஜிக்க வேண்டும்.

13. கண தேவதைகளை கிழக்கு திக்கிலோ முன் கூறியபடியே பூஜிக்க வேண்டும். கிழக்கு திக்கு முதற்கொண்டு இந்திரன் முதலானவர்களையும் வஜ்ரம் முதலிய தசாயுதங் களையும் பூஜிக்க வேண்டும்.

14. தெற்கு பாகத்தில் விருஷபத்தையும் பலிபீடம் கொடி, முதலியவைகளை முன்பு போல் ஸ்தாபிக்க வேண்டும். முன்பு கூறியபடியே செய்ய வேண்டும்.

15. லிங்கத்தை பூஜிக்கும் விஷயத்தில் இவ்வாறான முறையாகும். பிம்ப உருவ அர்ச்சனை சுருக்கமாக கூறப்படுகிறது. முனிவர்களே கேளுங்கள்.

16. உலோகம், கற்சிலை, மண்ணினால் ஆனது தாது பொருள் ரத்தினங்கள், இவைகளால் ஆன பிம்பத்தாலும் சித்திரங்கள் வரையப்படாத இடத்திலும் கற்சிலையிலும் மூலலிங்க பூஜை செய்ய வேண்டும்.

17. ரத்தின பிம்பம், உலோக பிம்பம், சுட்டமண், இவைகளால் ஆன பிம்பத்திற்கும் விருப்பப்பட்ட தினத்தில் புழுதிகளுடன் கூடியவைகளை பிம்ப சுத்தி செய்ய வேண்டும்.

18. வேஷ்டியால் துடைத்து நல்ல தினத்தில் ஸ்நபனம் செய்ய வேண்டும். மற்ற வகைகளுக்கு அர்ச்சனை செய்யும் முறை மணிகளால் ஆன லிங்கம் பீடம்

19. அல்லது பாணலிங்கத்திலோ கண்ணாடி முதலிய பொருட்களிலோ அர்ச்சனை செய்ய வேண்டும். ஆதாரசக்தி அனந்தன், தர்மன் முதலிய நான்கும்

20. நான்கு யுக ஆசனங்கள் அதச்சதனம், ஊர்த்வச்சதனம் பத்மத்தின் கர்ணிகைகளில் வாமம் முதலான ஒன்பது சக்திகளும் சூர்ய மண்டலம் முதலியவைகளையும் அதன் அதிபர்களையும்.

21. பூஜித்து பிம்ப ஹ்ருதயத்தில் வித்யா தேஹத்தையும், நேத்ரத்தையும் பூஜிக்க வேண்டும். சகளபிம்பத்தின் சிரசில் ஈசானத்தையும் முகத்தில் தத்புருஷனையும் ஸ்மரிக்க வேண்டும்.

22. மற்றவகைகள் சிவலிங்க அர்ச்சனை முறைக்கு சமமானதாகும். பிம்பங்களின் கலாநியாஸம் விசேஷமாக கூறப்பட்டது.

23. பிம்ப லக்ஷணம் கூறப்பட்டு தியானமும் விளக்கப்படுகிறது. ஹ்ருதய பீஜமான ஹாம் என்ற மந்திரத்திற்கு ஐந்தாவது வர்ணமான ஹூம் என்ற இடத்தில் ஆறாவது பீஜமான ஹளம் என்பதை வைத்து ஓம் ஹாம் ஹூம் ஹளம் என்ற பீஜாக்ஷரத்தையும்

24. மூன்று மாத்திரை உடையதாக பிம்பத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு ஆன மந்திரத்தை சொல்லி பிம்ப ஹ்ருதயத்தில் ஆவாஹிக்க வேண்டும்

25. நியாஸம் முறைப்படி செய்து ஸ்தாபித்து ஸந்நிதானம் ஸந்நிரோதனம் இவைகளை செய்து ஹ்ருதய மந்திரத்தால் பாதங்களில் பாத்யம் ஸமர்ப்பிக்க வேண்டும்.

26. பாத்ய திரவ்யங்கள் வெண்கடுகு, சந்தனம், விளாமிச்சைவேர், அருகம்புல் இவைகளுடன் ஏலக்காய், கிராம்பு, பச்சகற்பூரம், ஜாதிக்காய் இவைகள்

27. ஆசமன திரவ்யங்களை தத்புருஷ முகத்தில் கொடுக்க வேண்டும். பால், வெண்கடுகு, நெல்லிமுல்லி, எள், நெல், அக்ஷதை இவைகளுடனும்

28. தர்ப்பை, புஷ்பம், யவை, கடுகு, நெல், அரிசி இந்த திரவ்யங்களுடன் கூடியது அர்க்யமாகும். அந்த அர்க்யத்தை சிரசில் கொடுக்க வேண்டும்.

29. நெல், அரிசி இவைகளுடன் கூடியதும் ஆசமன திரவ்யமாகும். பாத்யாதிகளில் ஐந்தையும் சகளமூர்த்தி நிஷ்களமூர்த்தி

30. சகள நிஷ்கள மூர்த்தி இவைகளின் பூஜையிலும் ஸ்நபன பூஜையிலும் ஹோமத்திலும் பவித்ர உத்ஸவத்திலும் செய்ய வேண்டியதாக கூறப்பட்டுள்ளது.

31. எல்லா திரவ்யத்துடன் கூடிய பாத்யம் முதலான ஜலமானது உத்தமமாகும். ஒரு திரவ்யம் குறைந்த பாத்யம் மத்யமமாகும். இரு திரவ்யங்கள் குறைந்த பாத்யஜலம் அதமமாகும்.

32. மூன்று பொருள் குறைந்த பாத்யம் முதலான ஜலமானது அதமத்திற்கு அதமமாகும். இந்த முறைகள் எல்லா திவார பூஜைக்கும் உகந்ததாகும். சந்தனம் புஷ்பம் தூபம் தீபம் நைவேத்யம் இவைகளையும்

33. தாம்பூலத்தையும், மூலமந்திரத்தினால் பரமேஸ்வரனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். உரிய நேரத்தில் பலி, ஹோமம், உத்ஸவம், நாட்டியம் இவைகளை

34. ஏழரை நாழிகைக்குள் ஸந்த்யா பூஜை ஸ்நபன பூஜை பலிநைவேத்யம், அக்னிகார்யம், நித்ய உத்ஸவம், சுத்த நிருத்தம் இவைகளை செய்ய வேண்டும். மூன்று இரண்டு இவைகளால் குறைந்ததும் ஐந்து இரண்டு இவைகளால் குறைந்ததுமான நேரங்களில் பூஜையில் அங்கங்களையும் ஐந்து ஏழரை நாழிகைகளிலோ பூஜை செய்ய வேண்டும்.

35. உத்தமோத்தம பூஜையானது ஆறு மணி நேரத்திலும், மத்யம பூஜையானது பத்து நாழிகைக்குள்ளும் அதம பூஜையானது ஏழரை நாழகைக்குள்ளுமாகும்.

36. பூஜையின் இடைவெளி காலத்தை எட்டு பாகமாகவோ ஒன்பது பாகமாகவோ பிரித்து பூஜை செய்ய வேண்டும். உழுதல் முறை முதல் பிரதிஷ்டை முறை உள்ள கார்யம் ஸம்வத்ஸரோத்ஸவம்.

37. பவித்ர உத்ஸவம், மாதபூஜை, அங்குரார்பணம் நித்யார்ச்சனை முதலியவைகள் இந்த ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.

38. இவைகளை நன்கு குறிப்பு அறிந்து ஸகளம், நிஷ்களம், சகளநிஷ்களம் ஆகிய மூர்த்திகளுக்கு பூஜை முறைகளை செய்ய வேண்டும். இந்த முறைப்படியே ஆசார்யன் நன்கு கவனித்து.

39. வடக்கு முகமுள்ள பிம்பங்களுக்கும் பூஜைகளை செய்ய வேண்டும். கிழக்கு திக்கு பாகத்தில் நடுவிலும், வியக்தலிங்கபூஜை விபரமாக கூறப்பட்டுள்ளது.

40. மிகுதியாக கூறுவானேன். எவ்வாறு எந்த மூர்த்தியின் சரீரமும் முகமும் உள்ளதோ அந்த மூர்த்தியின் திசையை கிழக்காக நிச்சயிக்கப்பட வேண்டும். பிராம்மண உத்தமர்களே.

41. இந்த முறைப்படியே திசைகளை அறிந்தவர்களால் மற்ற திசைகளை கற்பிக்க வேண்டும்.

இவ்வாறாக தெற்கு திவார பூஜையாகிய இரண்டாவது படலமாகும்.
படலம் 1: மேற்கு வாயில் பூஜாமுறை!

இந்த முதலாவது படலத்தில் மேற்கு நோக்கி இருக்கும் திருக்கோயில் லிங்கத்திலும், ஸகள வடிவத்திலும், முகலிங்கத்திலும் க்ருஹஸ்தாச்ரமத்தை உடைய சிவாச்சார்யனால் பரார்த்த பூஜா முறை செய்யத் தகுந்தது என நிரூபணம் செய்யப்படுகிறது. முதலில் மேற்கு நோக்கி இருக்கின்ற திருக்கோயில்களில் பரார்த்த பூஜை செய்வதால் அரசன், தேசம், இவைகளுக்கு பூர்ண நிறைவையும், போகம், முக்தியையும், பலன் கொடுக்கக்கூடியதாக பலன்கள் நிரூபணம் செய்யப்படுகிறது. சிவாச்சாரியனால் தினம்தோறும் காலையில் அவசியமான சவுச ஸ்னானம் முதலியவைகள் செய்த பிறகு த்விஜன் மனுவிற்கு ஏற்பட்ட அவசியம் செய்யவேண்டிய சந்தியாவந்தனம் நிரூபிக்கப்படுகின்றன. பிராம்மணர்களுக்கு விதிக்கப்பட்ட சவுச, ஸ்நான, ஹோமம், முதலிய விஷயங்களில் ஸ்ருதி, ஸ்மிருதி, முதலியவைகளில் கூறப்பட்ட அனுஷ்டானத்தை, சிவபிராம்ணனால் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என வித்யாசம் காண்பிக்கப்படுகிறது. தன்னுடைய சாஸ்திரத்தில் கூறப்பட்ட ஸந்தியாமந்திர தர்பண விதிகளுக்கு பிறகே சிவ பிராம்மணர்களால் திருக்கோயில் பூஜைக்காக திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. பிறகு ஆன்மசுத்தி, ஸ்தானசுத்தி, த்ரவ்ய சுத்தி, மந்திர சுத்தி, லிங்க சுத்தி என்று சொல்லக்கூடிய ஐந்து சுத்திகளின் நடுவில் முதலில் ஆத்ம சுத்தியானது நிரூபணம் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் கரன்யாஸபூர்வமாய் த்வாதசாந்த ரூபமாக ஜீவான்மசேர்க்கையும், பாஞ்ச பவுதிகமான சரீர சுத்தியும், கரன்யாச, அங்கன்யாச, அஷ்டத்ரிம்சத் கலாந்நியாசத்தினால், சரீரத்தை சிவ சரீரமாக கல்பிதமான முறை அந்தர்யாக பிரகாரங்கள் என்பது முதலான விவரங்கள் கூறப்பட்டு இருக்கின்றன.

பிறகு ஸ்தான சுத்தி த்ரவ்ய சுத்தி கூறப்படுகிறது. த்ரவ்ய சுத்தி நிரூபணத்திலே ஸமயத்திற்கேற்ப பாத்யம், ஆசமனம், அர்க்யங்கள், விஷயத்தில் உத்தம மத்யம, அதம முறைகள் கூறப்பட்டு இருக்கின்றன. பிறகு மந்திர சுத்தி கூறப்படுகிறது. பிறகு சாமான்யர்க்யம் சேர்ப்பது. வழியாக பூஜைகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு லிங்க சுத்தி முறையானது விதிக்கப்படுகிறது. அந்த இடத்தில் த்வார பூஜை செய்தபிறகு தான் ஆசன கல்பனை முறையை நிரூபிக்கப்படுகிறது. பிறகு லிங்க சுத்தி முறையானது விதிக்கப்படுகிறது. அந்த இடத்தில் த்வார பூஜை செய்த பிறகு தான் பஞ்ச சுத்தி செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. பிறகு ஆசன கல்பனை முறை நிரூபிக்கப்படுகிறது. அங்கு அனந்தாசன, ஸிம்மாஸன, யோகாசன, பத்மாசன, விமலாசனங்களின் ஸ்வரூப வர்ணனம், அபிஷேகம் ஆவாஹன காலங்களில் இந்த ஆசனங்களில் தனித்தனியாக கல்பிக்கும் முறையானது காணப்படுகிறது. பிறகு பஞ்சப்பிரும்ம மந்திரம் அஷ்டத்ரிம்சத் கலான்யாசம் முதலியவைகளால் மூர்த்தி கல்பன முறையானது கூறப்படுகிறது. ஆவாஹன, ஸ்தாபன, ஸன்னிதான, ஸன்னிரோதன, அவகுண்டன, அம்ருதீகரண என்று சொல்லக்கூடிய முத்திரைகளை காண்பிக்க வேண்டிய முறை, பாத்யம், ஆசமனம், அர்க்யம், புஷ்பபதானமான முடிவை உடைய பத்து சம்ஸ்காரங்கள் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. கந்தம், புஷ்பம், தூபம், தீபம் உபசாரங்களினால் சிவனை பூஜிக்கவேண்டும் என கூறப்படுகிறது. மந்திர பூர்வமான நைவேத்யம் முக்யமான ஆபரண அர்ப்பணம் தீபாராதனை முறைகள் கூறப்படுகின்றன. கண்ணாடி, குடை, சாமரம், காண்பிப்பது செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

இரவில் தீபதான கடைசியில் நீராஜனம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. மஹா ஹவிர் நிவேதனத்திற்கு பிறகு பலி, ஹோமங்கள் செய்ய வேண்டும். ஸ்நபன காலத்தில் மந்திரம், வீணாகானம் வேதாத்யயனம், ஸ்தோத்திர பாடம் முதலியவைகள் கூறப்படுகிறது. அதற்குமேல் சகல விதமான பாட்டுக்கள், தூபம் முடிவாக அபிஷேக காலத்தில் பாடவேண்டிய முறையானது காண்பிக்கப்படுகிறது. பிறகு பாட்டோடு கூடிய நாட்டிய விதியானது விதிக்கப்படுகிறது. தமிழ்பாஷைகளோடு கூடிய பாட்டோ, ஸம்ஸ்ருத பாஷை முதலிய பதினெட்டு பாஷை பாட்டோடு கூடியதாகவோ, நாட்யம் செய்யவேண்டியது என கூறப்பட்டு இருக்கிறது. அடுத்து ருத்திர கன்னிகையின் லக்ஷணம் கூறப்படுகிறது. முடிவில் சுளுகோதக விசர்ஜனம் செய்யவேண்டும். இதன்படி பூஜா முறையின் கிரியா கலாபங்களை காண்பிக்கப்பட்டது. ஸாதகனால் ஸித்திப்பதற்காக பூஜை முறையினுடைய விதியானது கூறப்படுகிறது. பிறகு சிவாகமத்தில் கூறப்பட்ட மந்திரங்களினால் மட்டும் செய்யப்படுகின்ற பூஜை உத்தமமாகும். சிவாகமங்களில் கூறப்பட்டதும் வேதத்தில் சொல்லப்பட்டதுமான மந்திரங்களினால், செய்யப்படும் பூஜை மத்யமமாகும். வேதத்தில் சொல்லப்பட்ட மந்திரத்தினால் மட்டும் பூஜை செய்வது அதமம் என பூஜா விஷயத்தில் மூன்று தன்மைகள் கூறப்பட்டு இருக்கிறது. பிறகு சைவ மந்திரங்களினுடைய உயர்வுகள் கூறப்படுகின்றன.

பீஜ மந்திரங்களிலிருந்து உண்டானது ருத்திராத்யாயம் என கூறப்படுகிறது. ஆகையினால் ருத்திராத்யாய ஸ்தானத்திலே, பீஜ மந்திரம் சொல்லவேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. பூஜா முறையானது, கூறப்பட்டு இருக்கிறது. முன்பு கூறப்பட்ட பூஜா முறையானது கிழக்கு, தெற்கு, வடக்கு வாயிலை உடைய கோயில்களில் லிங்கம் ஸகலம் முக லிங்க விஷயங்களில் ஒரே ஆகமத்தால் என கூறப்பட்டு மேற்கு வாசல் உள்ள கோயில்களில் விசேஷமாக செய்ய வேண்டியவைகளை கூறப்பட்டு இருக்கிறது. வாசல் படிக்கு நேராக இருக்கின்ற ஈஸ்வரனுக்கு மேல்முகம் கல்பித்து ஈஸ்வரனுடைய இடது பக்கத்திலோ, வலது பக்கத்திலோ, மனோன்மணியை ஸ்தாபித்து இரண்டுகை ஒரு முகத்தோடு கூடிய தேவியையும் அப்படியே கர்பாவரணம், வித்யேசர்கள் கணேச, லோகேச, அஸ்திர ஆவரண விஷயத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கின்றது. ஈசனின் முன்னிலையில் விருஷபம், சூலம், கொடிமரம், கோபுரங்கள் செய்ய வேண்டும், பரிவார அர்ச்சனை விசேஷமாக கூறப்பட்டு இருக்கிறது. ஈசான தேசத்தில் சண்டிகேச ஸ்தானம் உண்டா? என்றும் தெற்கில் விக்னேச ஸ்தானம் கல்பிக்க வேண்டும் என விசேஷமாக கூறப்பட்டு இருக்கிறது. முடிவில் மற்றவையாவும், கிழக்கு வாசல் பூஜையோடு சமானம் என்று கூறப்பட்டு இருக்கின்றது. இந்த பிரகாரம், முதல் படல கருத்து சுருக்கமாகும்.

1. கிருஹஸ்தர்களுக்கு நன்மை அளிப்பதான நிஷ்கள, ஸகள, ஸகள நிஷ்கள திருமேனிகளின் பரார்த்த பூஜையில் மேற்கு திவாரபூஜை இது.

2. மேலும் அந்த பூஜை அரசன் அரசாங்கத்தின் அபிவிருத்தியையும், போக மோக்ஷத்தையும் கொடுப்பதாகும். காலையில் செய்ய வேண்டிய ஸ்நானத்தை செய்துவிட்டு

3. ஸூர்யச்ச என்பது முதலான மந்திரங்களால் மூன்று சந்த்யா காலங்களிலும் தீர்த்தத்தை அருந்தி ததிக்ராவிண்ண என்பதான மந்திரங்களால் தீர்த்த பிரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்.

4. ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: என்பது முதலான மந்திரங்களினால் மூன்று முறை அஞ்சலி ஹஸ்தமாக அர்க்யம் விட வேண்டும். பிறகு அதே மந்திரத்தால் பத்து முறை ஜபிக்க வேண்டும்.

5. வேதம் தர்ம சாஸ்திரம் முதலியவைகளில் கூறப்பட்டுள்ள அனுஷ்டானத்தை பிராம்மண தன்மை சித்திப்பதற்காக தினந்தோறும் செய்ய வேண்டும். இதை செய்யா விட்டாலும் சைவானுஷ்டானத்தை தவறாமல் செய்ய வேண்டும்.

6. அந்த அனுஷ்டானத்தில் அவச்யமான சவுசம், ஸ்நானம், ஆசமனம் இவைகளிலோ ஸந்த்யாவந்தனம் தர்ப்பணம் ஹோமங்களிலும்

7. கிருஹபலி முதலியவைகளிலும் மற்ற பிராம்மணர்களுக்கு விதிக்கப்பட்ட எந்த அனுஷ்டானம் உண்டோ அதை செய்தோ, செய்யாமலோ இருக்கலாம் சைவானுஷ் டானத்தை கட்டாயமாக செய்ய வேண்டும்.

8. தன் சாஸ்த்ரமான சைவ சாஸ்த்ர  ஸ்ந்தியா வந்தன மந்திரங்களும் தர்ப்பணமும் செய்து கால்களை அலம்பிக் கொண்டு தேவாலயத்திற்கு போக வேண்டும்.

9. நன்கு ஆசமனம் செய்து உள்ளே நுழைந்து வடக்கு முகமாக தன் ஆசனத்தில் அமர்ந்து சுத்தமான வெண்மையான விபூதியை குழைத்து அணிந்து

10. கரன்யாஸம் செய்து தேஹமத்தியில் ஸூஷும்நையில் பிரகாசிக்கிற ஹூம்காரத்தை தியானித்து அசைவின்றி பிராணாயாமம் செய்ய வேண்டும்.

11. ஹூம்பட் என்று ரேசகத்துடன் கூடியதாக ஐந்து கிரந்திகளை பிளந்து அதிலிருந்து திரும்பியதாக

12. மூர்த்தி மந்திரத்தினால் ஜீவனை கிரஹித்து ஹூம்காரத்தின் மேல் கும்பகத்துடன் கூடியதாக வாயுவை மேல் நோக்கி சென்றதாக செய்ய வேண்டும்.

13. அந்த வாயுவினாலே திவாத சாந்தத்தில் இருக்கும் சிவனுடன் கூடியதாக சேர்க்க வேண்டும். இது ஆத்ம யோஜனமாகும். பிறகு ப்ருத்வீ முதலான பஞ்ச பூதங்களை சுத்தி செய்ய வேண்டும்.

பஞ்ச பூதங்கள்: ப்ருத்வீ, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் (மண், நீர், நெருப்பு, காற்று, வெளி)

14. பஞ்ச பூதங்களை நிவ்ருத்தி முதலான கலைகளாலும் அதன் அத்வாக்களாலும் வியாபித்திருப்பதாக எண்ணி முதலில் அந்த பூதங்களை சோதிக்க வேண்டும்.

15. பஞ்ச பூதங்களை தஹிப்பதும் ஒன்றுக் கொன்று பரஸ்பரமாக சோதிப்பதை மண்டலத்துடன் கூடியதாக செய்வதும் பூதசுத்தி என கூறப்பட்டுள்ளது.

16. சோதிக்க வேண்டியது இல்லாததும் கலைகளோடு மட்டும் கூடியதான சரீரத்திற்கு திவ்ய தன்மை உண்டாவதற்கு அம்ருதாப்லாவனம் செய்யவேண்டும்.

17. அம்ருத ஸ்வரூபியாகிற குண்டலினீ சக்தியை தியானித்து அதிலிருந்து உண்டான அம்ருதத்தை சொரிதலால் நனைந்ததாக கலைகளோடு கூடிய திவ்ய சரீரத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்.

18. ஹ்ருதயத்தில் ஆஸனத்தை தியானித்து அந்த ஆஸனத்தில் மூர்த்தியாகிற ஆத்மாவை ஸ்தாபிக்க வேண்டும். பிறகு அம்ருதாப்லாவனம் செய்து கரன்யாஸம் செய்ய வேண்டும்.

19. சந்தன பூச்சுடன் கூடிய கைகளை அஸ்த்ர மந்திரத்தால் கையை மேலும் கீழும் சுத்தி செய்து அவைகளில் (உள்ளங்கைகளில்) பிரம்ம மந்திரங்களை நியாஸம் செய்து கரதலத்தில் நேத்ரத்தை நியாஸம் செய்ய வேண்டும்.

20. சிவனின் அங்க மந்திரமான ஹ்ருதய, சிர, சிகா கவச அஸ்திர மந்திரங்களையும் நியாஸம் செய்து அதற்கு முன்னதாக சிவாஸநாய நம: சிவ மூர்த்தயே நம: சிவாய நம: என்று நியாஸம் செய்து திரும்பவும் கையில் சிவனை நியாஸம் செய்ய வேண்டும். கவச மந்திரத்தால் அந்த கையை சுற்றுதலான அவகுண்டனத்தை செய்ய வேண்டும். இவ்வாறு ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட அந்த கையை எல்லா கார்யத்திற்கும் உபயோகிக்க வேண்டும்.

21. கரநியாஸம் கூறப்பட்டு அங்கநியாஸம் கூறப்படுகிறது. தலையில் இருந்து பாதம் வரை பிரம்ம மந்திரமான ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ ஸத்யோஜாத மந்திரங்களையும், அங்க மந்திரமான ஹ்ருதய, சிரஸ், சிகா, கவச நேத்ர அஸ்திர மந்திரங்களையும் நியாஸம் செய்ய வேண்டும்.

22. மூலமந்திரத்தையும் பிரம்ம மந்திரங்களையும் நியாஸம் செய்த பிறகு சிவனை ஹ்ருதயத்தில் ஸ்தாபித்து ஹ்ருதயாதி அங்க மந்திரங்களை அந்தந்த இடங்களில் நியாஸம் செய்து அஷ்டத்ரிம்சத் கலாநியாசம் செய்ய வேண்டும்.

23. நேத்ரங்களில் நேத்ர மந்திரத்தை தியானித்து ஹ: அஸ்த்ராய பட் என்று திக்குகளில் பாவிக்க வேண்டும். பிறகு சிவமந்திரங்களை ஸ்மரித்து மஹாமுத்ரையை செய்ய வேண்டும்.

மஹா முத்ரையில் லக்ஷணம்:

ஒன்றுக்கொன்று பின்னிய கட்டைவிரல்களை உடைய தாய் மற்ற கை விரல்களை நீட்டியதாய் உள்ளது மஹா முத்ரையாகும். இது தேவதைகளை அழைப்பதற்கும் கூடுதல் குறைவு தோஷங்களை போக்கும் கிரியைகளை நிறைவு செய்யும் இலக்கண முடையதாகும்.

24. அஷ்டத்ரிம்சத்கலாநியாஸம் செய்து பஞ்சபிரம்ம மந்திரங்களையும் நியாஸம் செய்ய வேண்டும். ருத்ர சக்தியுடன் கூடியதான அக்ஷர நியாஸத்தை செய்ய வேண்டும்.

25. அக்ஷர நியாஸத்துடன் கூடியதாகவும், கண்டர் முதலான தேவர்களுடன் கூடிய கண்ட நியாஸம் செய்ய வேண்டும். மாத்ருகாநியாஸம் மட்டுமோ செய்தாலும் செய்யலாம்.

26. இவ்வாறே சரீரத்தை சிவமயமாக்கி கொண்டு பிறகு அந்தர்யாகம் செய்ய வேண்டும். ஹ்ருதயத்தில் பூஜையையும் நாபியில் ஹோமத்தையும் இரண்டு புருவத்தின் மத்தியில் ஸமாதியையும் பாவனை செய்ய வேண்டும்.

27. இவ்வாறு ஆத்மசுத்தி கூறப்பட்டது. அதன் பிறகு ஸ்தான சுத்தி சொல்லப்படுகிறது. கையை சொடுக்கி திக்குகளில் சுற்றி அவகுண்டனம் செய்ய வேண்டும்.

28. மூன்று பாத்திரத்தை எடுத்து கொண்டு ஆஸனத்தின் மேல் வைக்க வேண்டும். அவைகளில் முறைப்படி பாத்யம், ஆசிமனம், ஆர்க்யம் இம்மூன்றையும் கல்பிக்க வேண்டும்.

29. சந்தனம், விளாமிச்ச வேர், வெண்கடுகு, அருகம்புல், குங்குமப்பூ, தீர்த்தம் இவைகளுடன் கூடிய பாத்யமானது உத்தமம் ஆகும். குங்குமப்பூ இல்லாத பாத்யம் மத்யமமாகும்.

30. சந்தனம், விளாமிச்ச வேர் இவையுடன் கூடிய ஜலமானது அதம பாத்யமாகும். ஜாதிபத்திரி, விளாமிச்ச வேர், குங்குமபூ, பச்சகற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய் கிராம்பு

31. முரம் என்ற சிற்றேலத்துடன் கூடியது உத்தமமான ஆசமனீய ஜலமாகும். ஏலக்காய், கிராம்பு, பச்ச கற்பூரம், சிற்றேலம், ஜாதிக்காய் இவைகளுடன் கூடியது மத்யமமான ஆசமனம்.

32. ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் இவையுடன் கூடிய ஜலமும் அதமமான ஆசமனீயமாகும். தீர்த்தம், பால், தர்பை நுனி, யவை, அக்ஷதை எள் இவைகளுடன்.

33. நெல், வெண்கடுகு, இவையுடன் சேர்ந்தது உத்தமமான அர்க்ய ஜலமாகும். யவை, வெண்கடுகு, நெல், அரிசி இவையுடன் கூடியது மத்யமமான அர்க்ய ஜலமாகும். நெல் அரிசியுடன் கூடியது.

34. அதமமான அர்க்யமாக கூறி வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. வெண்கடுகு, சந்தனம், விளாமிச்ச வேர், அருகம்புல், இவைகளுடன் கூடியது பாத்யம்.

35. ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், ஜாதிக்காயுடன் கூடிய ஆசமனீய ஜலத்தையோ பூஜைக்கு அங்கமாக உபயோகிக்க வேண்டும்.

36. முன்பு கூறப்பட்டதையோ இப்பொழுது சொல்லப்பட்டதையோ கிரஹித்து மந்திரத்துடன் கூடியதாக பூஜிக்க வேண்டும். யவை, வெண்கடுகு, நெல், நுனி முறியாத அக்ஷதை இவைகளுடன் கூடியதும்.

37. நெல், அரிசி, அக்ஷதைகளுடன் கூடியதுமான ஐந்து அங்கம் அல்லது மூன்று அங்கம் அல்லது கேவலமான அர்க்யத்தையோ

38. பாத்திரத்தை ஹ்ருதய மந்திரத்தால் கற்பித்து மேலும் ஸம்ஹிதா மந்திரத்தை கூறி ஜலத்தை நிரப்பி திரவியங்களை அஸ்த்ரமந்திரத்தால் பிரோக்ஷித்து கவச மந்திரத்தால் அவ குண்டனம் செய்ய வேண்டும்.

39. ஹ்ருதய மந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்து தேனுமுத்ரையை காண்பிக்க வேண்டும். சந்தனத்தினால் திலக மிட்டுக்கொண்டு தலையில் புஷ்பம் வைத்து கொள்ளவேண்டும்.

40. இது திரவ்ய சுத்தி எனப்படும். மந்திரம் அறிந்தவன் ஓம்காரத்திலிருந்து நம: வரை மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது மந்த்ர சுத்தி எனப்படும்.

41. ஸாமாந்யார்க்கத்தை எடுத்து கொண்டு வாயிற் படியின் முன்பாக விருஷபத்தை பூஜிக்க வேண்டும். வினாயகரையும் சரஸ்வதியையும் வாசற்படியின் மேல் பூஜித்து நந்தியையும் கங்கையையும்

42. மஹாகாளரையும் யமுனையையும் முறையாக வாயிற்படியின் வலது இடது பக்கத்தில் பூஜிக்க வேண்டும். அவ்வாறே இரண்டு பக்கங்களிலும் விமலன், சுபாஹுவையும் பூஜிக்க வேண்டும்.

43. வலது காலால் உள்ளே நுழைந்து அஸ்த்திர மந்திரத்தால் திரையை பூஜிக்க வேண்டும். வாஸ்து பிரம்மாவை பூஜித்து நிர்மால்ய பூஜையை செய்ய வேண்டும்.

44. லிங்கத்திலிருந்து நிர்மால்யங்களை எடுத்து சண்டிகேசரிடம் ஸமர்பிக்க வேண்டும். அறிவாளியானவன் சிவலிங்கத்தையும் ஆவுடையாரையும் தீர்த்தத்தால் சுத்தி செய்ய வேண்டும்.

45. இது லிங்க சுத்தி எனப்படும். இவ்வாறு பஞ்ச சுத்தி கூறப்பட்டது. திவார பாலகர்களை பூஜித்த பிறகும் கூட பஞ்ச சுத்திகளை செய்யலாம்.

46. விசேஷமான சுத்தி ஆஸநம் ஸம்ஸ்காரம் இவைகளுடன் கூடியதாக செய்யும் பூஜை பரமேஸ்வரனிட மிருந்து எல்லா பலனையும் கொடுக்க கூடியதாகும்.

47. விசேஷமான சுத்திகள் முன்னதாகவே கூறப்பட்டு ஆஸனம் இப்பொழுது கூறப்படுகிறது. கணபதி, குரு ஆதாரசக்தி இவர்களையும் அனந்தன், தர்மன் முதலியோர்களையும்

48. அதர்மன் முதலானவர்களை அதச்சதனம் ஊர்த்வச்சதனம் பத்மம் கர்ணிகை இவைகளையும் வாமை முதலிய ஒன்பது சக்திகளையும் சூர்யமண்டலம் முதலிய நான்கு மண்டலங்களையும் அதிபதிகளையும் உடையதாக ஆஸன பூஜையை ஈசனுக்கு செய்ய வேண்டும்.

49. முடிவில் அந்தந்த மந்திரங்களை ஸ்மரித்து சிவாஸனம் பூஜிக்க வேண்டும். இவ்வாறு பஞ்சாஸனத்துடன் கூடியதான ஏகாஸன பூஜா முறை கூறப்பட்டது.

50. அனந்தன் ஆதார சக்தி இவையுடன் கூடியது அனந்தாஸனமாகும். தர்மன், அதர்மன், அதச்சனம் உர்த்வச்சதனம் இந்த வர்க்கங்களோடு கூடியது.

51. ஸிம்மாஸநமாகும், யோகாஸனம் சுத்த மாயாதத்வம் வரையிலாகும். எட்டு வித்யேச்வர பாவனை வரையில் பத்மாஸனம் ஆகும். சூர்ய மண்டலம் முதலிய மண்டலங்களுடன் கூடிய பத்மம் விமலாஸனமாகும்.

52. ஸ்நானம் ஆவாஹனம் இவைகளுக்கு முன்பாக தனித்தனியே ஐந்து ஆஸனங்களை பூஜித்து ஆஸனம் சங்கல்பித்து அதற்கு மேல் மூர்த்தி கல்பனம் செய்ய வேண்டும்.

53. மூர்த்தியின் மேல் ஈசானம் முதலிய பிரம்ம மந்திரத்தையும் முப்பத்தி எட்டு கலையுடன் கூடிய அஷ்ட த்ரிம்சத்கலாநியாஸம் செய்ய வேண்டும். அக்ஷர கண்ட நியாஸமாவது செய்ய வேண்டும்.

54. முப்பத்தி எட்டு கலையுடன் கூடிய பஞ்ச பிரம்மத்தை நியாஸம் செய்ய வேண்டும். வித்யாதேஹம் பூஜித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

55. ஸ்தாபனம், ஸந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம் செய்த பிறகு ஹ்ருதயாதி மந்திரத்தால் ஈசனின் அங்கத்தில் நியாஸம் செய்ய வேண்டும்.

56. அதற்கு மேல் ஒரே சிந்தனையோடு சிவனை ஆவாஹிக்க வேண்டும் தேனு முத்ரையையும் மஹாமுத்ரையையும் காண்பிக்க வேண்டும்.

57. பாத்யம், ஆசமனம், அர்க்யம், அருகம்புல், இவைகளை சமர்ப்பிக்க வேண்டும். பத்து ஸம்ஸ்காரங்கள் கூறப்பட்டன. இந்த உபசாரங்களால் சிவனை பூஜிக்க வேண்டும்.

58. வாசனை திரவ்யங்களை கலந்த சந்தனத்தை விருப்பப்படி அணிவிக்க வேண்டும். பலவிதமான புதியதான புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.

59. வெட்டிவேர், சந்தனம், குங்குலியம் முதலிய திரவ்யங்களால் தூபம் கூறப்பட்டு இருக்கிறது. பூஜை செய்யும் ஆசார்யன் கர்த்தாவின் விருப்பத்தை அனுசரித்து நல்லெண்ணெய் நெய் இவைகளால் ஆன தீபங்களை ஏற்ற வேண்டும்.

60. அணையா விளக்குகளை அவ்வாறே ஸமர்ப்பிக்க வேண்டும். மந்த்ர பூர்வமான ஹவிஸும், பருப்பு வகையால் ஆன அன்னத்தை ஆமந்த்ரண ஹவிஸாக சொல்லப்பட்டுள்ளது.

61. ஆபரணங்களை ஸமர்ப்பித்து திரும்பவும் தூபத்தை ஸமர்ப்பிக்க வேண்டும். அவ்விடத்தில் மங்களமான கீதங்களாலும் எல்லா வாத்யங்களாலும்

62. எல்லாவித நடனத்துடன் கூடியதாக வேண்டும் விருஷப கொடியோனான பரமேஸ்வரனை மகிழ்விக்க வேண்டும். தூபம் கொடுத்த பிறகு தீபாராதனை செய்ய வேண்டும்.

63. கட்டை விரல் மோதிர விரலுடன் கூடி வாஸனை யோடு கூடிய விபூதியால் சுற்றுதலை செய்து விபூதியை விட்டு விட்டு பிறகு விபூதியை எடுத்து பரமேஸ்வரனுக்கு திலகமிட வேண்டும்.

64. கண்ணாடியை காண்பித்து, குடை, சாமரம் இவைகளை சமர்ப்பிக்க வேண்டும் தீபங்கள் கொடுத்தபிறகு ராத்ரியில் நீராஜனம் செய்ய வேண்டும்.

65. மஹாஹவிஸ் நிவேதனத்திற்கு பிறகு பலியம் ஹோமத்தையும் செய்ய வேண்டும். ஆமந்த்ரண ஹவிஸ் நிவேதன காலத்தில் பலி அல்லது ஹோமத்தை செய்ய வேண்டும்.

66. பலிஹோமம் இரண்டு கிரியைகளையும் சேர்த்தோ, தனியாகவோ, செய்யலாம். அபிஷேகம் செய்யும் காலத்தில் மந்திரம் பாட்டு வீணை வாசிப்பதோ

67. வேதாத்யயனமோ ஸ்தோத்ர பாடங்களை படிப்பதையுமோ செய்ய வேண்டும். தூபத்தின் முடிவில் மற்ற தமிழ் முதலான பாஷைகளால் பாடுவதும் செய்ய வேண்டும்.

68. அதற்கு பிறகு தமிழ் மொழி முதலியவைகளால் பாடுதல் ஆடுதல் இவைகளுடன் பிழையில்லா ஸம்ஸ்கிருத மொழிகளாலும் பலவித ஸ்வரத்துடன் கூடியதாகவும்

69. பதினெட்டு வித பாஷைகளாலும் பாடலாம். பலவித தேசங்களிலும் உண்டான நாட்யங்களையும் செய்யலாம்.

70. விசேஷமாக உத்ஸவாதி காலங்களில் பற்பல பாடகர்களை கொண்டும் பாடச் செய்தல் வேண்டும். பலவிதமான ஸ்த்ரீகளை கொண்டும் இவ்விதமே நித்யோத்ஸவம் செய்ய வேண்டும்.

71. இளமையாகவும் அழகாகவும் உள்ள பெண்கள் கர்த்தாவின் அபிப்ராயபடி எனக்கு பணிவிடை செய்பவர்களாக கூறப்பட்டு உள்ளார்கள். ருத்ர கன்னிகைகள் என்பது அவர்களின் பெயராகும்.

72. அவர்களுடைய எண்ணிக்கை கிராமத்தில் உள்ள ஜனத்தொகையை அனுசரித்ததாக இருக்க வேண்டும். உத்ஸவத்தினுடைய முடிவில் நித்யோத்ஸவம் முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும்.

73. வாத்யம் வாசிப்பவர்களை எட்டு என்ற எண்ணிக்கை முறைப்படி ஏற்படுத்தவும் அதன் முடிவில் சுத்த நிருத்தமும் அதன் முடிவில் சுளுகோதமும் செய்ய வேண்டும்.

74. பிறகு விஸர்ஜனம் செய்து லயாங்கபூஜை செய்யவேண்டும். சாதகன் பூஜை பலன் சித்திப்பதற்கு லிங்கத் திலிருந்து பூஜையை ஸம்ஹரித்து

75. திரும்பவும் லிங்கத்தை சுத்தி செய்து சந்தனம் முதலியவைகளால் சிவனை பூஜிக்க வேண்டும். இவ்வாறு தினந்தோறும் செய்யாவிட்டாலும் முடிந்த வரையாவது செய்ய வேண்டும்.

76. உத்தமம், மத்யமம், அதமம் என்று என்னுடைய பூஜை மூன்று விதமாகும். சுத்தமான சைவ சம்பந்த மந்திரங்களால் மட்டும் செய்வது உத்தமமாகும்.

77. சிவாகமம் வேதம் இவைகளில் கூறிய மந்திரங்களால் பூஜிப்பது மத்யமமாகும். வேத மந்திரங்களால் மட்டும் பூஜிப்பது அதமமாகும். நித்யம் நைமித்திகமான பூஜையிலும் இந்த முறை கூறப்பட்டுள்ளது.

78. இந்த மூன்று உலகத்திலும் சைவ மந்திரத்திற்கு சமமான மந்திரம் கிடையாது. அதிலும் பீஜாக்ஷரத்தை உடைய மூலமந்திரமானது சிரேஷ்டம் என கூறப்படுகிறது.

79. பீஜ மந்திரங்களுக்கு உற்பத்தி ஸ்தானமாக உள்ள பிரணவம் முதலான மந்திரமும் லக்ஷம் அக்ஷரத்தை உடைய எல்லா மந்திரங்களும் ருத்ராத்யாயம் முதலியவைகளும் சிறந்ததாகும்.

80. அதற்கான பீஜ மந்திரத்தை அந்தந்த ஸ்தானத்தில் உபயோகம் செய்ய வேண்டும். எனக்கு விருப்பமாக உள்ள பீஜமந்திரத்திற்கு சமமான வேறு மந்திரம் இல்லை.

81. கிழக்கு முகம் தெற்கு முகம் வடக்கு முகமாக இருக்கின்ற ஸகள நிஷ்களமான லிங்கத்திற்கும் ஸகள பிம்பத்திற்கும் இது பொதுவான முறையாகும்.

82. ஹே பண்டிதர்களே மேற்கு திவார பூஜையில் உள்ள விசேஷத்தை கேளும். முன்பே எல்லா பூஜை முறைகளும் கூறப்பட்டு சில விசேஷம் கூறப்படுகிறது.

83. திவாரத்தை எதிர்நோக்கி உள்ள முகமாக ஊர்த்வ முகத்தை கல்பிக்க வேண்டும் லிங்கத்தின் இடப்பக்கத்திலோ வலது பக்கத்திலோ மனோன்மணியை ஸ்தாபிக்க வேண்டும்.

84. ஈசனைப் போன்று மனோன்மணியின் உருவமும் இருக்கும் மனோன்மணிக்கு ஒரே முகமும் இரண்டு கைகளும் உள்ளவளாகவோ பூஜிக்க வேண்டும். ஈசான மூர்த்தியை ஈசான திக்கிலோ தென் மேற்கிலோ பூஜிக்க வேண்டும்.

85. தத்புருஷ மூர்த்தியை கிழக்கு திசையிலோ மேற்கு திசையிலோ பூஜிக்க வேண்டும் அகோர மூர்த்தியை தெற்கிலோ வடக்கிலோ பூஜிக்க வேண்டும்.

86. வாமதேவ மூர்த்தியை வடக்கிலோ தெற்கிலோ பூஜிக்க வேண்டும். மேற்கிலோ கிழக்கிலோ ஸத்யோஜாத மூர்த்தியை ஸ்மரித்து பூஜிக்க வேண்டும்.

87. ஹ்ருதய மந்திரத்தை தென்கிழக்கிலோ வடமேற்கிலோ பூஜிக்க வேண்டும். சிரோ மந்திரத்தை வடகிழக்கிலோ தென் மேற்கிலோ சிகா மந்திரத்தை தென் மேற்கிலோ வடகிழக்கிலோ பூஜிக்க வேண்டும்.

88. கவச மந்திரத்தை வடமேற்கிலோ தென் கிழக்கிலோ பூஜிக்க வேண்டும். கிழக்கு முக பூஜை மேற்கு முக பூஜையிலும் அஸ்த்ரமந்திரத்தை நான்கு திக்கிலும் பூஜிக்க வேண்டும்.

89. வித்யேச்வர ஆவரண பூஜையை கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ சுற்றிலும் பூஜிக்க வேண்டும். கணேச ஆவரண பூஜையை வடக்கிலிருந்தோ தெற்கிலிருந்தோ ஆரம்பித்து பூஜிக்க வேண்டும்.

90. லோகேசாவரணத்தை கிழக்கிலிருந்து இருப்பதாகவும் அஸ்த்ரம் முதலியவைகளையும் அவ்வாறே (கிழக்கிலிருந்து) பூஜிக்க வேண்டும். ஸ்வாமிக்கு முன்பாக வ்ருஷபம், சூலம், த்வஜஸ்தம்ப ஸ்தானம் இவைகளும் கோபுரமும் ஏற்படுத்த வேண்டும்.

91. பரிவார தேவதையின் பூஜை கிழக்கிலிருந்து ஆரம்பித்து பூஜிக்க வேண்டும். மேற்கு திசையிலிருந்து தென் மேற்கு திசை வரையிலுமோ பரிவார தேவதார்ச்சனை செய்யலாம்.

92. சுவாமியின் இடதுபுறம் கோமுகமானது வடக்கு நோக்கியதாக அமைக்க வேண்டும். சண்டிகேஸ்வரரை ஈசான திக்கிலும் வினாயகரை நிருதி திக்கிலும் ஸ்தாபிக்க வேண்டும்.

93. மற்ற எல்லா விதமான ஸ்தானம் பூஜை விஷயங்கள் கிழக்கு திவார அர்ச்சனைக்கு சமமானதாக ஆகும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் மேற்கு வாயில் அர்ச்சனை முறையாகிய முதல் படலமாகும்.
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக  சிலர் ஸ்ரீராம ஜெயத்தை  லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். ரா என்றால் இல்லை மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள்.
ஆனி மாதம் யாருக்கு லாபம்?

ஆனி மாதம் எப்படி இருக்கும் (16.06.11 முதல் 16.07.11 வரை) 12 ராசிகளுக்கான பலன்களும் பரிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் (குடும்ப மகிழ்ச்சி)

லட்சியத்துடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேறும் மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக சூரியன், புதன், சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ராசிநாதன் செவ்வாய் பலமற்று இருக்க நட்பு கிரகங்களால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். முன்னேற்றம் தருகிற பாதை எதுவென அறிந்து நடைபோடுவீர்கள். பேச்சில் இனிமையும் சாந்தமும் அதிகரிக்கும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். பணிகள் சிறப்பதற்கான வாய்ப்பு அமைந்து தாராள பணவரவு பெறுவீர்கள்.  அரசு தொடர்புடைய செயல்பாடுகள் எளிதாக நிறைவேறும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு. உடல்நலம் சீராக இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து குடும்ப நலம் காத்திடுவர். தொழிலதிபர்கள் உற்பத்தி, தரம் உயர்ந்து புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவர். ஆதாய பணவரவு உண்டு. பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி கூடுதல் வருமானம் பெறுவர். பிறசலுகைகளும் கிடைக்கும். குடும்பத்தேவை நிறைவேறும். வியாபாரிகள் சந்தையில் குறைந்த போட்டியை எதிர்கொள்வர். விற்பனை பெருகி உபரி வருமானம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணம், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவர். குடும்பப் பெண்கள் கணவருடன் ஒற்றுமை, உற்சாகத்துடன் நடந்து குடும்பநலத்தை சிறப்பாக்குவர். வருமானம் நன்றாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப்பணிகளை நிறைவேற்றுவர். விற்பனை அதிகரிக்கும். நல்ல லாபத்துடன் நிலுவைப்பணமும் வசூலாகும். அரசியல்வாதிகள் கூடுதல் புகழும் எதிர்பார்த்த பதவியும் பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பில் முன்னேற்றமும் தாராள பணவரவும் உண்டு. மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படித்து உயர்ந்த தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தொழில்வளம் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். உஷார் நாள்: 11.7.11 காலை 6.11 முதல் 13.7.11 காலை 10.04 மணி வரை

வெற்றி நாள்: ஜூன் 30, ஜூலை 1, 2
நிறம்: மஞ்சள், வெள்ளை   எண்: 2, 3

ரிஷபம் (உடல்நிலை கவனம்)

தன்னைச் சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவும் ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகமாக செயல்படுகிறார். மற்ற கிரகங்கள் அனைத்தும் மாறுபட்ட பலன் தருகிற இடங்களில் உள்ளனர். இதனால் செயல்களில் நிதானமும், முன்யோசனையும் பின்பற்றுவது அவசியம். தகுதிக்கு மீறிய செயல்திட்டங்களையோ, செலவையோ தவிர்ப்பது நல்லது. பேச்சில் வசீகரம் இருப்பினும், இடம், பொருள் அறிந்து பேசுவது நன்மை பெற உதவும். உடல்நலம் சீராக இருக்க தகுந்த ஓய்வு, ஊட்டம் தரும் உணவுப்பழக்கம் பின்பற்றுவது நல்லது. பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். வழக்கு, விவகாரங்களில் உங்கள் நலம் விரும்புபவர்களின் உதவியால் சமரச தீர்வு பெறலாம். கணவன், மனைவி குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொண்டு ஒற்றுமை மனப்பாங்குடன் நடந்துகொள்வர். குடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும். வெளியூர் பயணங்களை பயன் கருதி மேற்கொள்ளலாம். தொழிலதிபர்கள் சுமாரான உற்பத்தியை பெறுவதற்கு கூட குறுக்கீடுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணியாளர்கள் உடல்நலத்தை சீராக பேணுவதால் மட்டுமே பணிகளை சிறப்பாக நிறைவேற்ற இயலும். அளவான பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் சந்தையில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வர். அளவான விற்பனையும், மிதமான லாபமும் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் கவனமுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத தன்மை இருக்கும். இதனால் நிர்வாகத்தின் கண்டிப்பை தவிர்க்கலாம்.  சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் விற்பனை வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வர். அரசியல்வாதிகள் பிறர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதால் நன்மை பெறலாம். விவசாயிகளுக்கு ஓரளவு மகசூலும் கால்நடை வளர்ப்பினால் தேவையான பணவரவும் கிடைக்கும். மாணவர்கள் புதிய நடைமுறையை பின்பற்றுவதால் ஞாபகத்திறன் வளர்ந்து சராசரி தேர்ச்சி விகிதம் பெறுவர்.

பரிகாரம்: பத்ரகாளியை வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மை வளரும்.
உஷார் நாள்: 16.6.11 காலை 6 முதல் 18.6.11 காலை 8.17 மணி வரை மற்றும் 13.7.11 காலை 10.05 முதல் 15.7.11 மாலை 4.01 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 3, 4
நிறம்: ஆரஞ்ச், சிமென்ட்    எண்: 1, 8

மிதுனம் (பிள்ளைகளால் பெருமை)

பிறர் மனமறிந்து இதமுடன் பேசுகின்ற மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் ராசிக்கு இரண்டாம் இடத்தில் அனுகூலக் குறைவாக அமர்ந்துள்ளார். இதனால் மனதில் நம்பிக்கை குறைவு, கோபம் மிகுதல்,  அவமானப்படுதல் ஆகிய நிலைகளை எதிர் கொள்ளலாம். கவனமுடன் நடப்பதால் சிரமம் தவிர்க்கலாம். இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், ராகு செயல்படுகின்றனர். பணம் வரும் நல்வாய்ப்புக்களை பயன்படுத்துவதால் முன்னேற்றமும் உபரி வருமானமும் கிடைக்கம். திட்டமிட்ட பயணங்களை பணிகளுக்கு தகுந்தவாறு மாறுதல் செய்ய வேண்டியிருக்கும். பிறரது சொந்த விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தம்பி, தங்கைகள் சொல்கிற ஆலோசனை புதிய திருப்பம் தரும். வீடு, வாகனத்தில் தேவையான பராமரிப்பு, பாதுகாப்பு பணி அவசியம். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து படிப்பு, வேலைவாய்ப்பில் சிறப்பிடம் பெறுவர்.  உடல்நல ஆரோக்கியம் பேணுவதில் சில குறுக்கீடு வந்து பின்னர் நலம்பெறும். நிர்ப்பந்த பணக்கடனை சரிசெய்ய நிலுவை பணவரவுகளைப் பெற கூடுதல் முயற்சி செய்வீர்கள். எதிரியால் தொந்தரவு வராத அனுகூல நிலை வளரும். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். மகிழ்ச்சியும் பெருமிதமும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் அதிக கண்காணிப்புடன் உற்பத்தியை உயர்த்துவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் குடும்பத்தேவையின் பொருட்டு பணிபுரிவதில் அக்கறையுடன் ஈடுபடுவர். முக்கிய செலவுகளுக்கான பணவசதி கிடைக்கும். வியாபாரிகள் சந்தைப் போட்டியை சமாளித்து சராசரி விற்பனை இலக்கை அடைவர். ஆதாய பணவரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பொறுப்பாக செயல்புரிந்து நற்பெயரும் சலுகை பயனும் அடைவர். குடும்பப் பெண்கள் திட்டமிட்டு செயல்பட்டு குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். கணவரின் அன்பு, சீரான பணவசதி துணைநிற்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கடும் உழைப்பின் பேரில் நல்ல லாபம் சம்பாதிப்பர். அரசியல்வாதிகள் எதிர்ப்புவளராத அளவிற்கு நடந்துகொள்வது நல்லது. விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பணவரவு திருப்திகரமாகும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிப்பதால் மட்டுமே அதிக மார்க் பெற இயலும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் பணவரவு சீராகி மங்கல நிகழ்வு ஏற்படும்.
உஷார் நாள்: 18.6.11 காலை 8.18 முதல் 20.6.11 மாலை 4.54 மணி வரை மற்றும் 15.7.11 மாலை 4.01 முதல் 16.7.11 நாள் முழுவதும்
வெற்றி நாள்: ஜூலை 5, 6
நிறம்: பச்சை, வெள்ளை   எண்: 2, 5

கடகம் (சம்பள உயர்வு)

பரந்த மனப்பான்மையுடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் இந்த மாதம் மூலம் நட்சத்திரத்தில் கேதுவின் சாரத்தில் தனது சாரத்தை துவங்குகிறார். கேதுவின் மூன்றாம் பார்வை ராசியில் பதிகிறது. இதனால் மனதில் ஆன்மிக சிந்தனை ஊற்றெடுக்கும். தெய்வ சிறப்புகள் தொடர்பான செய்திகள் உங்களைத் தேடிவரும். செவ்வாய், கேது, சுக்கிரன் மற்றும் சனிபகவானின் அருள்பலம் சிறப்பாக உள்ளது. புதிய செயல்பாடுகளுக்கான முயற்சியெடுக்க நல்ல மாதம். முக்கிய தேவைகளுக்கான பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். தம்பி, தங்கைகள் ஆதரவாக நடந்துகொள்வர். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். புத்திரர்கள் ஆர்வமிகுதியால் கவனக்குறைவான செயல்களில் ஈடுபட நேரலாம். கவனமுடன் வழிநடத்துவதால் சிரமம் குறையும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பநலன் காத்திடுவர். சுபநிகழ்வும் ஏற்படும். நண்பர்களின் உதவியால் எதிர்காலத்திற்குரிய சில செயல்பாடுகள் நிறைவேறும். தொழிலதிபர்கள் உற்பத்தியை பெருக்கி கூடுதல் லாபம் அடைவர். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். சம்பளஉயர்வு, பதவி உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரிகள் அதிக கொள்முதல், கூடுதல் விற்பனை என்கிற இலக்குடன் செயல்படுவர். விற்பனை சிறந்து லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைக்கும். குடும்பப்பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். குடும்பத்தேவை திட்டமிட்ட வகையில் பூர்த்தியாகும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உழைப்பால் உற்பத்தி விற்பனையை உயர்த்துவர். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் கூடுதல் புகழ்பெற நல்வாய்ப்பு உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் வருமானம் கூடும். மாணவர்கள் நற்பெயர் பெறும் நோக்கில் படித்து தரத்தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் உடல்நலமும் தொழில் சிறப்பும் ஏற்படும்.
உஷார் நாள்: 20.6.11 மாலை 4.55 முதல் 23.6.11 அதிகாலை 3.39 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 7, 8
நிறம்: வாடாமல்லி, கருநீலம்       எண்: 4, 7

சிம்மம் (உற்பத்தி சுமார்)

நற்செயல்கள் செய்து புகழ் பெறுகின்ற சிம்ம ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் பதினொன்றாம் இடமான ஆதாய ஸ்தானத்தில் உள்ளனர். குருவின் அமர்வு அனுகூலத்துடன் உள்ளது. புதிய முயற்சிகளை துவங்கி வாழ்வில் வளம் பெறுவீர்கள். நியாயமாக பேசினாலும் கூட, உணர்ச்சி வசப்படுகிற சூழ்நிலையை தவிர்ப்பதால் நன்மை கூடும். தம்பி, தங்கைகள் பாசத்துடன் நடந்துகொள்வர். அவர்களுக்கான மங்கல நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். வீடு, வாகன வகையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. புத்திரர்கள் ஆர்வத்துடனும் விவேகத்துடனும் செயல்படுவர். படிப்பில் வளர்ச்சி அதிகரிக்கும். பூர்வசொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல் நலத்திற்கு சிறு அளவிலான சிகிச்சை உதவும். ஒவ்வாத உணவு வகை உண்ணக்கூடாது. கடன் தொந்தரவை ஓரளவு சரிசெய்வீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகள் நிறைவேற புதியவர்களின் உதவி கிடைக்கும். தொழிலதிபர்கள் கடும் முயற்சியால் மட்டுமே உற்பத்தியை தக்க வைக்க இயலும். ஓரளவு வருமானம் உண்டு. பணியாளர்களுக்கு பிரச்னை அதிகமில்லை என்றாலும், உடல்ரீதியான பாதிப்பால் சோர்வு தோன்றும். குடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும் அளவுக்கு வருமானம் இருக்கும். வியாபாரிகள் போட்டியை சமாளிப்பதில் குழப்பநிலையை அடைந்தாலும், விற்பனையில் சரிவு இராது. லாபம் எதிர்பார்க்கும் அளவு இருக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்ற வேண்டும். சிலருக்கு குளறுபடி காரணமாக அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது. குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு போதுமான அளவு பணவரவைப் பெறுவர். சேமிக்கும் நிலை இல்லை. சுயதொழில் நடத்தும் பெண்களுக்கு சுமாரான உற்பத்தி ஓரளவு லாபம் காண்பர். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகப்பணியால் வரவேற்பு பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே திட்டமிட்ட தேர்ச்சியை பெற இயலும்.

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.
உஷார் நாள்: 23.6.11 அதிகாலை 3.40 முதல் 25.6.11 பிற்பகல் 3.21 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 9, 10
நிறம்: ரோஸ், ஆரஞ்ச்   எண்: 3, 9

கன்னி (வரவுக்கேற்ற செலவு)

எல்லாரிடமும் பண்பு, பாசத்துடன் பழகுகிற கன்னி ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளார். சூரியன், ராகு, சுக்கிரனும் நற்பலன் வழங்குவர். தாமதமான பணிகளை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். பேச்சில் நிதானமும் வசீகரமும் ஏற்படும். தம்பி, தங்கைகளுக்கு உரிய ஆலோசனை கூறி அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற உதவுவீர்கள். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். பூர்வ சொத்தில் வருகிற பணவரவுக்கு ஏற்ப கூடுதல் செலவும் உருவாகும். புத்திரர்கள் உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். இஷ்ட தெய்வ அருள் துணைநின்று உதவும். உடல்நலம் சீர்பெற நேரத்துக்கு சாப்பிடுதல், சீரான ஓய்வு பின்பற்றுவது நல்லது. நிர்ப்பந்தம் செய்யும் கடன்களை ஓரளவு சரிசெய்வீர்கள். கணவன், மனைவி புரிதல் தன்மையுடன் நடந்து குடும்ப வாழ்வை மகிழ்ச்சிநிறைந்ததாக்குவர். நண்பர்களால் நற்பெயர் பெற சூழ்நிலை அமைந்து உதவும். தொழிலதிபர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி, தரத்தில் முன்னேற்றம் காண்பர். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் பணவரவில் வளர்ச்சிநிலை காண்பர். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திபணி நடத்துவர். விற்பனை உயர்ந்து அதிக லாபம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் கருத்து வேறுபாடு கொள்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டுச்செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். சுயதொழில் நடத்தும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து அதிக பணவரவு காண்பர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் பணவரவு கூடும். அரசியல்வாதிகள் அரசின் மூலம் சலுகை கிடைக்கப்பெறுவர். மாணவர்கள் கவனமுடன் படித்து எதிர்பார்த்த தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் தாராள பணவரவு கிடைக்கும்.
உஷார் நாள்: 25.6.11 பிற்பகல் 3.22 முதல் 28.6.11 அதிகாலை 2.19 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 11, 12, 13
நிறம்: மஞ்சள், வெள்ளை    எண்: 2, 3

துலாம் (சிறப்பான விற்பனை)

கடின உழைப்பால் வளம் பெறும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், இந்த மாதம் ராசிக்கு அஷ்டம, பாக்ய ஸ்தானங்களில் பிரவேசிக்கிறார். அனுகூலம் தரும் கிரகங்களாக குரு, புதன் செயல்படுகின்றனர். தாழ்வு மனப்பான்மையை விலக்கி செயல்படுவதால் திட்டமிட்ட வளர்ச்சி கிடைக்கும். வார்த்தைகளில் கடினப்போக்கை தவிர்ப்பதால் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்பார்த்த நற்பெயர் பெறலாம். தம்பி, தங்கைகள் சொல்லும் ஆலோசனை புதிய பாதையில் நடைபோட உதவும்.வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படும். புத்திரர்கள் பணம், பொருள் கேட்டு நிர்ப்பந்தம் செய்வர். பணவரவுக்கேற்ப இயன்ற அளவு நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவி பாசத்துடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். உடல்நலம் சீராக இருக்கும். நண்பர்களுடன் சுற்றுலா சென்றுவர அனுகூலம் உண்டு. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தேவைகளை சிக்கனச்செலவில் நிறைவேற்றுவீர்கள். தொழிலதிபர்கள் கூடுதல் முயற்சியால் உற்பத்தியை உயர்த்துவர். சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி நிறைந்த சலுகைகள் பெற அனுகூலம் உண்டு. வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர் கிடைத்து விற்பனையில் வளர்ச்சி காண்பர். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் தாமதப் பணியை நிறைவேற்ற ஆர்வமுடன் செயல்படுவர். பணி இலக்கு நிறைவேறி நற்பெயர் பெற்றுத்தரும். குடும்பப் பெண்கள் பொறுப்பான செயல்களால் கணவரிடம் நன்மதிப்பு பெறுவர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நடத்த அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். லாபம் அதிகரிக்கும். அரிசயல்வாதிகள் புகழை தக்கவைத்துக் கொள்ள கூடுதல் முயற்சியுடன் பணிபுரிவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே படிப்பைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் இடர்விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
உஷார் நாள்: 28.6.11 அதிகாலை 2.20 முதல் 30.6.11 காலை 11.17 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 17,  ஜூலை 14, 15
நிறம்: பச்சை, நீலம்            எண்: 5, 8

விருச்சிகம் (சுமாரான பணவரவு)

நேர்மையுடன் நடந்து செயல்களில் வெற்றி பெறும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் ராகுவும், ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்க்கை பெற்று ஏழாமிடத்தில் உள்ளனர். சுக்கிரன், சனி நற்பலனை வழங்குவர். மனதில் குழப்பமும் நம்பிக்கை குறைவும் ஏற்படலாம். உங்களின் நலன் விரும்புபவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. பேச்சிலும் செயலிலும் மந்தகதி இருக்கும். தம்பி, தங்கைகளின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை வளர்க்கும். வீட்டில் பாதுகாப்பு நடைமுறையும், பயணங்களில் மிதவேகமும் பின்பற்றுவது நல்லது. புத்திரர்கள் செயல்திறனை வளர்த்துக் கொள்வார்கள் என்றாலும், அவர்களது நட்பு வட்டாரம் குறித்து கவனமாயிருங்கள். உடல்நலக்குறைவு ஏற்படலாம். சிறிய பிரச்னைக்கும் உடனடியாக டாக்டரை அணுகுங்கள். கணவன், மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். நியாயமாக செயல்படுவதால் பிரிவு வராத நன்னிலை தொடரும். அறிமுகம் இல்லாத பெண்களுக்கு உதவுவதால் சிரமம் வரலாம். கவனம். பணவரவு சுமாராக இருக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் சற்று பின்னடவைச் சந்திப்பர். லாபம் சுமாராகவே இருக்கும். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்றுவதில் குளறுபடிகளை எதிர்கொள்வர். சலுகைகள் பெறுவதில் அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்தால் எதிர்விளைவே ஏற்படும். வியாபாரிகள் போட்டி அதிகரிப்பால் சஞ்சலம் கொள்வர். அளவான விற்பனை, மிதமான பணவரவு என்ற நிலை இருக்கும். பணிபுரியும் பெண்கள் உடல்நலக் குறைவினால் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். சலுகைகளைக் கேட்பதிலும், தோழிகளுடன் கொடுக்கல் வாங்கலிலும் நிதானம் நல்லது. குடும்பப் பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடு கொள்ளலாம். வீட்டுச்செலவுக்கு சற்று தட்டுப்பாடு ஏற்படலாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான லாபம் காண்பர். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் ஊக்கத்தினால் மனதில் உற்சாகம் பெறுவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், அளவான பணவரவு உண்டு. மாணவர்கள் விளையாட்டு குணத்தை தவிர்ப்பதால் மட்டுமே படிப்பில் தேர்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் கஷ்டம் விலகி வளம் பெறலாம்.
உஷார் நாள்: 30.6.11 காலை 11.18 முதல் 2.7.11 மாலை 5.49 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 18, 19, ஜூலை 15
நிறம்: சிவப்பு, வெள்ளை          எண்: 1, 6

தனுசு (சிறந்த சலுகைகள்)

இனிய வார்த்தை பேசி பிறரை மகிழ்விக்கும் தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ளார். கேது, செவ்வாய் ராசிக்கு ஆறாம் இடத்தில் அனுகூலமாக உள்ளனர். நல்லவர்களின் வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவீர்கள். பேச்சில் நிதானம் இருக்கட்டும். பிறருக்கு உதவுவதிலும் அளவு வேண்டும். தம்பி, தங்கைகள் முன்னேற்றம் அடைவர். வீடு, வாகன வகையில், இப்போது இருக்கிற வசதி நீடிக்கும். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பைப் பெறுவீர்கள். புத்திரர்களை ஊக்கப்படுத்துவதிலும் கண்டிப்பதிலும் மிதமான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். நிலுவைப்பணம் வசூலாகும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்துகொள்வர். அடுத்தவர் குடும்ப விவகாரம் பற்றி தம்பதியர் பேசுவதை தவிர்ப்பது அவசியம். உறவினர்களின் நன்மதிப்பு, உதவி முக்கிய தருணங்களில் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தின் தேவை ஓரளவு நிறைவேறும். எதிர்பாராத வகையில் சிலருக்கு தனபிராப்தி கிடைக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியை உயர்த்துவதில் உள்ள இடையூறை சரிசெய்வர். வளர்ச்சி பெருகி கூடுதல் ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர்கள் தமது பொறுப்பை உணர்ந்து பணியில் ஈடுபடுவர். சம்பள உயர்வு, பிற சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் அபிவிருத்திப் பணிகளைச் செய்வர். விற்பனையை அதிகப்படுத்த சற்று விலையைக் குறைத்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைத்து விடும். நிறுவனத்தின் புகழ் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் தாமதப்பணிகளை நிறைவேற்றி மனநிம்மதி பெறுவர். கொடுக்கல், வாங்கல், சீராகும். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப செலவுகளை திட்டமிடுவது அவசியம். சிலருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் அதிக கவனம் கொள்வர். சுமாரான லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பாக பணி செய்து சமூகத்தில் வரவேற்பு பெறுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூலும், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபமும் கிடைக்கும். மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படித்து கடந்த கால சரிவைச் சரிசெய்வர். தேர்ச்சி விகிதம் கூடும்.

பரிகாரம்: சூரியபகவானை வழிபடுவதால் தொழில் வளர்ச்சியும் உபரி பணவரவும் கிடைக்கும்.
உஷார் நாள்: 2.7.11 மாலை 5.50 முதல் 4.7.11 இரவு 10.12 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 20, 22
நிறம்: நீலம், வெள்ளை              எண்: 2, 8

மகரம் (எதிரிகள் ஜாக்கிரதை)

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் நன்மதிப்பு பெறும் மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ள சூரியன் பதினொன்றாம் இடத்தில் உள்ள ராகு அதிக நற்பலன்களை அள்ளி வழங்குவர். பேச்சிலும் செயல்களிலும் முன்னேற்றம் இருக்கும். சமூகப்பணியை இயன்ற அளவு செய்வீர்கள். தம்பி, தங்கைகள் திறமையுடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேறுவர். வீடு, வாகன பராமரிப்பு, பாதுகாப்பில் கூடுதல் கவனம் பின்பற்ற வேண்டும். தாய்வழி உறவினர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். புத்திரர்கள் உடல்நலக்குறைவிற்கு உட்படலாம். சீரான உணவுப் பழக்கம், சிகிச்சை உடல்நலத்தை சரிசெய்யும். எதிரிகளின் கெடுசெயலை உணர்ந்து மனம் வருந்துவீர்கள். தெய்வவழிபாடு திடநம்பிக்கை வளர உதவும். கணவன், மனைவியிடையே புரிதல்திறன் குறைந்து சச்சரவு வரலாம். விட்டுக்கொடுத்து நடப்பதால் வாழ்க்கை சிறப்பு பெறும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. தொழிலதிபர்கள் உற்பத்தியை பெருக்குவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தாராள பணவரவு உண்டு. பணியாளர்கள் குறித்த காலத்தில் பணிஇலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் போட்டி குறைந்து விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள், தங்கள் செயல்திறனை பயன்படுத்தி பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த பிற சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் பிரச்னை அதிகரிக்காத வாழ்வு தொடர்ந்திடும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து கூடுதல் லாபம் காண்பர். விலை மதிப்புள்ள பொருட்களை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு குறையும். விரும்பிய பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல், அளவான பணவரவு உண்டு. மாணவர்கள் படிப்பதற்கு கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி தரதேர்ச்சியில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் எதிரித்தனம் விலகி வாழ்க்கைமுறை சிறப்பாகும்.
உஷார் நாள்: 4.7.11 இரவு 10.13 முதல் 7.7.11 அதிகாலை 1.06 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 23, 24
நிறம்: பச்சை, ஆரஞ்ச்       எண்: 5, 6

கும்பம் (குடும்ப ஒற்றுமை)

நிகழ்கால நடப்புகளுக்கு ஏற்ப செயல்படும் கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு அனுகூல பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன் செயல்படுகின்றனர். மற்ற கிரகங்களின் அமர்வு எதிரான பலன்களைத் தரலாம். செயல்களில் பொறுமை அவசியம். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வதால் மன அமைதி இருக்கும். உறவினர்களின் உதவியால் புத்துணர்வு பெறுவீர்கள். சமூக நிகழ்வுகளில் ஒதுங்கி இருப்பீர்கள். அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவுவதிலும், அவர்களிடம் உதவி பெறுவதிலும் நிதானம் வேண்டும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் சுயதிறன் வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைவர். நல்லவர்களின் ஆசி குடும்ப நன்மைக்கு துணை நிற்கும். பூர்வசொத்தில் அளவான வருமானம் கிடைக்கும். சிறு அளவில் உடல்நலக்குறைவு ஏற்படலாம். எதிரிகளால் வருகிற குழப்பங்களை முறியடித்து வளர்ச்சி பெறுவீர்கள். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து குடும்பத்தில் சந்தோஷ நிகழ்வை உருவாக்குவர். தொழிலதிபர்கள் இடையூறுகளை சரிசெய்து சுமாரான லாபம் பெறுவர். பாக்கி பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு ஓரளவுக்கு சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளுடன் இணக்கமான போக்கு இராது. வியாபாரிகள் போட்டியை எதிர்கொண்டு விற்பனையில் திருப்திகர நிலை அடைவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் தாமத பணிகளை நிறைவேற்றி நற்பெயரும் சலுகைப்பயனும் அடைவர். குடும்பப் பெண்கள் எதிர்கால தேவைகளை கவனத்தில் கொண்டு செயல்படுவர். மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்தி விற்பனையில் புதிய இலக்கை அடைவர். லாபம் உயர்ந்து சேமிப்பு உருவாகும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளை சமாளித்து புதிய பதவி பெறுவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். கால்நடைகளால் நல்ல வருமானம் உண்டு. மாணவர்கள் நல்லமுறையில் படித்து திட்டமிட்டபடி தேர்ச்சி அடைவர். உடல்நலத்தில் கூடுதல் கவனம் நல்லது.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் தொழில்வளர்ச்சியும் எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும்.
உஷார் நாள்: 7.7.11 அதிகாலை 1.07 முதல் 9.7.11 அதிகாலை 3.29 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 26, 27
நிறம்: நீலம், சிவப்பு  எண்: 8, 9

மீனம் (தேவை நிறைவேறும்)

நல்லதை மட்டுமே மனதில் நினைக்கும் மீன ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இந்தமாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக செவ்வாய், குரு, சுக்கிரன், கேது செயல்படுகின்றனர். பணவரவு அதிகம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். முறையாக பயன்படுத்தி நற்பலன் பெறுவீர்கள். பேசும் வார்த்தை மங்கலத்தன்மையுடன் இருக்கும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து பெறுவீர்கள். தம்பி, தங்கைகள் அன்பு பாராட்டுவர். வீடு, வாகனத்தில் வளர்ச்சி மாற்றம் செய்வீர்கள். பூர்வ சொத்தில் வருகிற வருமானங்களை தகுந்த கண்காணிப்புடன் பெற்றுக்கொள்வது நலம் தரும். உடல்நல ஆரோக்கியம் பேணி காத்திடுவீர்கள். எதிரிகள் தந்த தொந்தரவு குறையும். உறவினர்களின் வருகையால் குடும்பமகிழ்ச்சி அதிகரிக்கும். பணபரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தேவையை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வதால் அலைச்சல், பணச்செலவை தவிர்க்கலாம். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் உற்பத்தியை உயர்த்துவதில் கவனம் கொள்வர். புதிய ஒப்பந்தம் கிடைத்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணிபுரிந்து இலக்கை நிறைவேற்றுவர். சலுகைப்பயன் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரிகள் கொள்முதலை உயர்த்த கடன் பெறுகிற முயற்சியில் ஈடுபடுவர். விற்பனை சீரான முன்னேற்றம் பெறும். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணியில் நற்பெயர் பெறுவர். சலுகைப்பயன் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து மகிழ்வான வாழ்க்கை நடத்துவர். குடும்ப செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும்.  சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உழைப்பால் விற்பனை இலக்கை உயர்த்துவர். நல்ல லாபத்துடன் பாக்கிப்பணமும் வசூலாகும். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெறுவர். பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு தாராள மகசூல் கிடைத்து உபரி பணவரவை பெற்றுத்தரும். மாணவர்கள் நம்பிக்கையுடன் படிப்பதால் தரத்தேர்ச்சி அடையலாம்.

பரிகாரம்: தன்வந்திரியை வழிபடுவதால் உடல்நலமும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும்.
உஷார் நாள்: 9.7.11 அதிகாலை 3.30 மணி முதல் 11.7.11 காலை 6.10 மணி வரை
வெற்றி நாள்: ஜூன் 28, 29
நிறம்: இளம்சிவப்பு, சிமென்ட்    எண்: 1, 4