சனி, 24 ஆகஸ்ட், 2019

உத்தரபாகம்
(பிற்பகுதி) பலச்ருதி: (பயன் கூறுவது)

1. இதீதம் கீர்த்த நீயஸ்ய கேஸவஸ்ய
மஹாத்மந:
நாம் நாம் ஸஹஸ்ரம் திவ்யாநாம்
அஸேஷேண ப்ரகீர்த்திதம்

மகிமை பொருந்தியவரும் போற்றத்தக்கவருமான கேசவருடைய திவ்ய நாமங்கள் ஆயிரமும் ஒன்று விடாமல் (சந்தந மகாராஜாவின் குமாரரான பீஷ்மரால், குந்தி மகனான தருமபுத்திரருக்கு) கூறப்பட்டன.

2. ய இதம் ஸ்ருணுயாந் நித்யம் யஸ்சாபி
பரி கீர்த்தயேத்
நாசுபம் ப்ராப்நுயாத் கிஞ்சித்
ஸோஅமுத்ரேஹ ச மாநவ:

இதைத் தினந்தோறும் கேட்பவனும், கீர்த்தனம் செய்பவனும் இம்மையிலும் மறுமையிலும் யாதொரு கெடுதலையும் அடையான்.

3. வேதாந்தகோ ப்ராஹ்மணஸ் ஸ்யாத்
க்ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தநஸம்ருத்தஸ் ஸ்யாத்
ஸுத்ரஸ் சுக மவாப்நுயாத்

(இதைப் பாராயணம் செய்வதால்) பிராமணன் வேதாந்த ஞானம் பெறுவான். க்ஷத்திரியன் வெற்றி பெறுவான். வைசியன் செல்வம் நிரம்பப் பெறுவான். சூத்திரன் சுகம் பெறுவான்.

4. தர்மார்த்தீ ப்ராப்நுயாத் தர்மம்
அர்த்தார்த்தீ சார்த்த மாப்நுயாத்
காமா நவாப் நுயாத் காமீ ப்ரஜார்தீ
ப்ராப்நுயாத் ப்ரஜா:

தருமத்தை விரும்புபவன் தருமத்தை அடைவான். பொருளை விரும்புபவன் பொருளை அடைவான். இன்பங்களை விரும்புகிறவன் இன்பங்களை அடைவான். மக்களை விரும்புகிறவன் மக்களை அடைவான்.

(112 முதல் 115 வரையான சுலோகங்கள் ஆயிரம் திருநாமங்களைப் பக்தியுன் இசைப்பவனுக்கு எல்லாச் செல்வங்களும் வரும், எல்லாத் துக்கங்களும் விலகும் என்கிறது.)

5. பக்திமாந் யஸ் ஸதோத்தாய சுசிஸ்
தத்கத மாநஸ:
ஸஹஸ்ரம் வாசுதேவஸ்ய
நாம்நா மேதத் ப்ரகீர்த்தயேத்

6. யஸ: ப்ராப்நோதி விபுலம் யாதி
ப்ராதாந்ய மேவ ச
அசலாம் ஸ்ரிய மாப்நோதி ஸ்ரேய:
ப்ராப்நோத் யநுத்தமம்

7. ந பயம் க்வசி தாப்நோதி வீர்யம்
தேஜஸ்ச விந்ததி
பவத்ய ரோகோ த்யுதிமாந்
பலரூப குணாந்வித:

8. ரோகார்த்தோ முச்யதே ரோகாத்
பத்தோ முச்யேத பந்தநாத்
பயாந் முச்யேத பீதஸ்து
முச்யே தாபந்ந ஆபத:

எவன் ஒருவன் நாள்தோறும் காலையில் எழுந்ததும் கடன்களை முடித்து விட்டுத் தூய மனதுடன் வாசுதேவரிடத்தில் மனதைச் செலுத்தி, ஆயிரம் திருநாமங்களையும் இசைக்கிறானோ, அவன் பெரும் புகழைப் பெறுவான்; சுற்றத்தாரிடையே நன்மதிப்பைப் பெறுவான்; அழிவற்ற செல்வத்தை அடைவான்; மேலுலக இன்பத்தையும் (முத்தியையும்) பெறுவான்.

அவன் எங்கும் அச்சத்தை அடையான்; சிறந்த அதிகாரங்களையும் உற்சாகத்தையும் அடைவான்; நோய் அணுகப்பெறான்; ஒளி, வல்லமை, அழகு, குணநலன்கள் ஆகியவை பெறுவான்.

பிணியால் பீடிக்கப்பட்டவன் பிணியிலிருந்தும் விடுபடுவான்; பந்தங்களில் சிக்கியவன் பந்தங்களிலிருந்தும் விடுபடுவான்; பயந்தவன் பயத்தினின்றும் விடுபடுவான்; ஆபத்தில் அகப்பட்டவன் அந்த ஆபத்திலிருந்து நீங்கப் பெறுவான். (கஷ்டங்கள் நீங்கப் பெறுவான்.) (5-8)

9. துர்காண் யதிதரத்யாசு புருஷ :
புரு÷ஷாத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நித்யம்
பக்தி ஸமந்வித:

இந்த ஆயிரம் திருநாமங்களையும் எவனொருவன் பக்தியுடன் புரு÷ஷாத்தமனைக் குறித்துத் துதிக்கின்றானோ, அவன் கடத்தற்கரிய கஷ்டங்களையும் வெகு விரைவில் கடந்து விடுவான்.

(பகவத் ப்ராப்தி)
இரண்டு சுலோகங்கள்.

10. வாஸுதேவா ஸ்ரயோ மர்த்யோ
வாஸுதேவ பராயண:
ஸர்வ பாப விசுத் தாத்மா யாதி ப்ரஹ்ம
ஸநாதநம்:

11. ந வாஸுதேவ பக்தாநாம் அசுபம்
வித்யதே க்வசித்
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம்
நைவோப ஜாயதே

(117,118 ஸ்லோகங்கள் பகவானை அடையத்தக்க பொருளாக நம்பிப் பற்றுபவன் பெறும் பலன்களைச் சொல்லும்.)

வாசுதேவனை அடையப் பெற்றவன், அவரையே புகலிடமாகப் பெற்றதால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டுத் தூயவனாய், எப்பொழுதும் நிலைத்திருக்கும் தன்மையுடைய பிரம்மத்தை அடைகிறான். மேலும், வாசுதேவ பக்தர்களுக்கு எல்லாக்காலத்தும் அசுபங்கள் நேர்வதில்லை. இறப்பு முதலானவற்றிலிருந்து விடுபடுகிறான். (10-11)

(வழிபடுபவன் பெறும் பலன்கள்)

12. இமம் ஸ்தவ மதீயாந: ஸ்ரத்தா பக்தி
ஸமந்வித:
யுஜ்யே தாத்ம ஸுகக்ஷõந்தி ஸ்ரீ த்ருதி
ஸ்ம்ருதி கீர்த்திபி:

பக்தியுடன் கூடிய ஆவலுடன் இந்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்பவன் ஆத்ம சுகம், பொறுமை, செல்வம், நிலையான மனநிலை, நல்ல நினைவாற்றல், மிகுந்த புகழ் ஆகியவற்றை அடைவான்.

(பக்தியின் பயன்)

13. ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம்
ந லோபோ நாசுபா மதி:
பவந்தி க்ருத புண்யாநாம் பக்தாநாம்
புரு÷ஷாத்தமே

புரு÷ஷாத்தமனிடம் பக்தி செய்பவனுக்குக் கோபம், பொறாமை, பேராசை, கெட்ட எண்ணம் ஆகிய எதுவும் இராது. இவை தாமாகவே விலகிப் போகும்.

(பகவானுடைய பெருமை)

14. த்யௌஸ் ஸசந்த்ரார்க்க நக்ஷத்ரா
கம் திஸோ பூர் மஹோததி
வாஸுதேவஸ்ய வீர்யேண
வித்ருதாநி மஹாத்மந:

15. ஸசுராசு ரகந்தர்வம்
ஸய÷க்ஷõரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்ததேதம்
க்ருஷ்ணஸ்ய ஸசராசரம்

சந்திரன், சூரியன், நட்சத்திரங்களுடன் கூடிய ஆகாயமும், திசைகளும், பூமியும், கடல்களும் ஆகிய அனைத்தும் அளவற்ற பெருமை படைத்த வாசுதேவனுடைய திவ்ய சக்தியால் தாங்கப்படுகின்றன. எல்லாமே பகவானின் வசத்தில் உள்ளன.

தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள், நாகர்கள், அரக்கர்கள் மற்றுமுள்ள சராசரங்கள் ஆகிய யாவுமே பகவான் கிருஷ்ணனின் வசத்திலேயே உள்ளன. (14-15)

(சரீர ஆத்ம சம்பந்தத்தின் விளைவு)

16. இந்த்ரியாணி மநோ புத்திஸ்
ஸத்வம் தேஜோ பலம் த்ருதி:
வாஸுதேவாத் மகாந்யாஹு :
÷க்ஷத்ரம் ÷க்ஷத்ரஜ்ஞ ஏவ ச

இந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம், கூர்மை, பலம், தைரியம், தேகம், ஆத்மா ஆகிய யாவுமே வாசுதேவனை ஆத்மாவாக உடையன. அனைத்தும் வாசுதேவமயமே!

(தர்மத்திற்குப் பிரபு அச்சுதனே!

17. ஸர்வா கமாநாமாசார : ப்ரதமம் பரிகல்பதே :
ஆசார ப்ரதமோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத :

ஆசாரமே சாத்திரங்கள் அனைத்துக்கும் முதன்மையானது. ஆசாரமே அகத்தூய்மையும், புறத்தூய்மையும் தரும். ஆசாரத்திலிருந்து உண்டானதே தருமம். இந்தத் தருமத்திற்குப் பிரபு அச்சுதன் ஒருவனே!

(அனைத்தும் பகவானிடத்திலிருந்தே உண்டாகும்.)

18. ரிஷய : பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ :
ஜங்கமா ஜங்கமஞ் சேதம் ஜகந் நாராயணோத்பவம்

ரிஷிகள், பிதிரர்கள், தேவர்கள், ஐம்பெரும் பூதங்கள், போக போக்கியங்கள், நிலையான பொருள்கள், தாவரங்கள் ஆகிய இவை அனைத்தும் பகவானிடமிருந்தே உண்டாயின.

(ஞானத்திற்குக் காரணம் பகவானே)

19. யோகோ ஞாநம் ததா ஸாங்க்யம்
வித்யாஸ் ஸில்பாதிகர்ம ச
வேதாஸ் ஸாஸ்த்ராணி விஞ்ஞாநம்
ஏதத் ஸர்வம் ஜநார்தநாத்

கர்மயோகம்; பக்தியோகம்; ஞானம், ஸாங்க்யம் எனப்படும் ஞானயோகம்; தர்க்கம், வியாகரணம் முதலான வித்தைகள்; சிற்பம் முதலான தொழில்கள் (கலைகள்); வேதங்கள்; சாத்திரங்கள்; இதிகாச புராணங்கள்; விஞ்ஞானம் ஆகிய அனைத்துமே பகவான் ஜனார்த்தனனிடமிருந்தே தோன்றின.

(நிர்வாகச் சிறப்பு)

20. ஏகோ விஷணுர் மஹத்பூதம் ப்ருதக்
பூதாந் யநேகஸ:
த்ரீந் லோகாந் வ்யாப்ய பூதாத்மா
புங்க்தே விஸ்வ புகவ்யய:

பெரிய பொருளாக இருப்பவர் விஷ்ணு. அவர், ஒருவரே! அவரே பலப்பல விதங்களாகப் பார்க்கப்படுகிற ஐம்பெரும் பூதங்கள், மூன்று வித சேதநர்கள் (பக்தர், முக்தர், நித்யர்), மூவுலகங்கள் ஆகியவற்றில் வியாபித்து நிற்கிறார். அந்தராத்மாவாகவும், காப்பவராகவும் இருக்கிறார். அழிவும், மாறுபடும் இல்லாதவராக இருந்து ஆனந்தத்தை அநுபவித்து நிர்வகித்து வருகிறார்.

(மணியான துதி)

21. இமம் ஸ்தவம் பகவதோ
விஷ்ணோர் வ்யாஸேந கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷ : ஸ்ரேய :
ப்ராப்தும் சுகாநி ச

(இந்த தோத்திரத்துக்குப் பொருள் அளவற்ற பெருமைக்குரிய பகவான் மகாவிஷ்ணு. விஷ்ணுவின் அவதாரமான சொல்லின் செல்வர், மஹாஞானி வியாச பகவான் இத்தோத்திரத்தை அருளினார். இவ்விருவரின் மங்களமான மகிமைகள் இத்தோத்திரத்தில் உள்ளன. எனவே, இது இம்மை மறுமை நலன் கருதுவோர் அனைவர்க்கும் ஏற்ற மணியான துதி.)

உயர்வையும் சுகத்தையும் அடைய விரும்பும் எந்த மனிதனும் வியாசபகவானால் கீர்த்தநம் செய்யப்பெற்ற விஷ்ணுவினுடைய இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பானாக.

(மேலான தெய்வத்தை வணங்குகிறேன்)

22. விஸ்வேஸ்வர மஜம் தேவம் ஜகத : ப்ரபுமவ்யயம்
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம்
ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி

ஸ்ரீ விஷ்ணு திவ்யநாம ஸ்தோத்ரம் உத்தர பாகம் சம்பூர்ணம்.

அனைத்துலகுக்கும் ஆண்டவனும், பிறப்பற்றவரும், மேலான ஆனந்த வடிவினரும் உலகின் தலைவரும், மாறுபாடு இல்லாதவருமாகிய தாமரைக் கண்ணனை வழிபடுகிறவர்கள் நிச்சயமாக எந்நாளும் தோல்வி அடையமாட்டார்கள்; தோல்வி அடையவே மாட்டார்கள்.

ஓம் நம: என்று கூறி, எல்லா நன்மைகளும் உண்டாகப் பரம புருஷனை மனம் மொழி மெய்களால் வணங்கி நிற்கிறேன்.

ஸ்ரீஸஹஸ்ர நாம அத்யாயம் முடிவுற்றது.

கருத்துகள் இல்லை: