செவ்வாய், 17 மே, 2022

ஸ்ரீதேவியார்

ஸ்ரீதேதியூர் பெரியவா அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் ஸ்ரீகாயத்ரீ மகிமை

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் அவர்கள் மனைவியுடன் ரயிலில் பயணிக்கும் போது ஸந்த்யாகாலத்தில் ரயில் மாயவரம் ஸ்டேஷன் அடைந்தது.
சாஸ்திரிகளும் ஸந்த்யாவந்தனம் செய்ய ரயிலை விட்டு இறங்கி ஸ்தலசுத்தி செய்து விபூதி இட்டுக்கொண்டு அனுஷ்டானத்தை தொடங்கி காயத்ரி ஜபம் செய்ய தொடங்கினார். ஜபத்தில் லயித்த சாஸ்திரிகள் சூழ்நிலையை மறந்தார்!  
ரயில் கிளம்பும் நேரம் ஆனதும்  கார்டு பச்சைக்கொடி காட்ட  டிரைவர் ரயிலை ஓட்ட  தயாரானார். விசிலும் அடித்தார்.
இதற்குள் ரயில் புறப்படும் நேரம் இது நீங்கள் உங்கள் கணவரின் ஜபத்தை சீக்ரம் முடிக்கச்சொல்லி ரயிலில் ஏறச்சொல்லுங்கள்! இல்லையெனில் ரயிலில் அவர் ஏறமுடியாது  என்று சக பயணிகள் பதற்றபடுத்த மாமியும் ஜபத்தை நடுவில் நிறுத்தமாட்டார் சாஸ்திரிகள் என்று கூறி தானும் பெட்டி சாமான்களுடன் இறங்கி ஜபம் பண்ணும் தன் கணவர் அருகில் போய் நின்று கொண்டார்!


இதற்குள் பலமுறை ப்ரயத்தனம் செய்தும் நின்ற இரயில் கிளம்ப மாட்டேன் என மக்கர் செய்ய டிரைவரும் ஏதோ ரிப்பேர் என்றுஸ்டேஷன் மாஸ்டர் கார்டு  ஆகியோரை கலந்து ஆலோசிக்க தொடங்கினார்.
இதற்கிடையில் நித்யம் செய்யும் ஆவர்த்தி பூர்த்தியாகி கண் திறந்த சாஸ்திரிகள் தன்னருகில் பெட்டியுடன் நிற்கும் மனைவியை பார்த்து நீ ஏன் இறங்கினாய்? என்று கேட்டு, வா ஏறிக்கொள்வோம்! என்று மாமியுடன் மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களில் கிளம்ப மறுத்த ரயிலை கிளப்ப மீண்டும் ஒருமுறை டிரைவர் முயற்சிக்க ரயில் திடுக்கென்று கிளம்பியது! ரயில் கிளம்பி விட்டதே என்று சாஸ்திரிகள் ஜபத்தை நிறுத்தவில்லை!

காயத்ரி மஹிமை ரயிலை மீண்டும் ஓடச்செய்தது அதே இடத்தில் நாம் இருந்தோமேயானால் ஐயோ ரெயில் கிளம்பிவிட்டதே என்று அலறி அடித்துக்கெண்டு காயத்ரீயை விட்டுவிட்டு ரெயிலைபிடித்துக் கொள்வோம் ஆனால் அவர் மகான் ரெயிலை விட்டு விட்டு காயத்ரீயைப்பிடித்தால் காயத்ரீ அவரை
விடாமல் காப்பாற்றினாள்.இதிலிருந்து
அவர் நமக்கு சொல்லும் பாடம்
நீ எதை விட்டாலும் காயத்ரீயை விடாதே
உன்னை யார் விட்டாலும் காயத்ரீ உன்னை விடாது.
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

பாம்புக்கு பால் வார்த்த கதை

பாம்புக்கு பால் வார்த்த கதை


ஸ்ரீகிருஷ்ணின் தந்திரம் இதுவரை கேட்டிராதது...

பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள்.

துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், *ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'*' என்று கேட்டான்.

*திரௌபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள்.*
*கண் கலங்கினாள்.*

அதேநேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர்.

*கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய்.*

நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, *'ஏன் பதில் கூறவில்லை?’* என்பான்.

உடனே நீ, *'தக்ஷகன் முறை’* என்று சொல். *அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்க மாட்டான்'*' என்றார் பகவான்.

கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். *'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'*

ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே, இன்று தக்ஷகன் முறை' என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி.

*அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.*

திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். *''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?''* என்று கேட்டாள்.

கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.

*துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை.*

திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.

*ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர்.*

பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அன்று பௌர்ணமி.

*இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான்.*

கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.

*தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது.*

உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள்; துடிதுடித்தாள்.

*துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான்.*

தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். *தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.*

அதே நேரம், அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். *'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன்.*
*பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’* என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.

அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தியோடு பங்குகொள்கிறான்.

*இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்''* என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.

*இதை தான் நம் பெரியோர்கள் பாம்புக்கு பால் வார்த்த கதை என்று சொல்வது வழக்கத்தில் வந்தது* என்று எத்தனை பேர்களுக்கு தெரியும் ?

*"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"*

🌸|| *ௐ சிவம் சைவம்*|| 🌸
🌸|| *சர்வம் சிவமயம்*||🌸
🌸| *சகலம் சிவனருள்*|🌸
🌸 *திருச்சிற்றம்பலம்* 🌸

சொல்லும் செயலும்

 சொல்லும் சொல் !! செய்யும் செயலில் !! தெளிவாக, நேர்த்தியாக செய்ய என்ன செய்ய வேண்டும் ??

சொல்லவும் !! செய்யவும் !! காரணம் "நான்" என்ற மாயை கடந்து !!

யாரின் இயக்கமான ஒத்துழைப்பு வழியே இவையெல்லாம் நிகழ்கின்றது என்பதை உணர்ந்து !!

உங்கள் இருப்பின் காரணமும்,
சொல் செயல் வழியே உங்களின் விருப்பத்தை விரும்பியபடியே வெளிப்பட வைக்கும்
இறைவனை நினைத்து முன்னிறுத்தி சொல்லி !! செய்து !! பாருங்களேன் ..

முன்னிறுத்துவது நான் என்று இருக்கும்போது ஒருவித தடுமாற்றம் நம்முள் நிகழ்வது எதார்த்தம் தான் !!
காரணம் நாம் எப்போதும் ஓர் நிலை இல்லாது அல்லாடியபடி இருக்கும்போது ?? நான் சொல்கின்றேன் !! செய்கின்றேன் !! என்னும்போது தடுமாற்றமும் சகஜம்தானே ..

அதே என்றும் எங்கும் நிலையாய் நிறைந்து இருந்து எதையும் தன்னுள்ளே கொண்டு இயங்கி இயக்கி அருளும் இறைவனை முன்னிறுத்த உங்கள் செயல் !! சொல் !! போன்றவற்றில் ஓர் தெளிவும் திடமும் இருக்க தானே செய்யும் !!

அவனால் பேசுகிறேன் !! அவன் பேசவிடுவதை பேசுகிறேன் !!
அவன் எதை நினைவில் கொண்டுவந்து எப்படி சொல்லெடுத்து கொடுத்து அதையும் எந்த விதத்தில் ஒலியை வெளிப்படுத்த விடுகிறானோ அங்கனமே பேசுகிறேன் என்று உணர்வில் அவனோடு உறவாடியவண்ணம் நம் வெளிப்படுத்தும் சொல் எத்தகைய தாக்கமும் நமக்கு நேரவிடாது !!
தெளிவாக யாருக்கு என்ன புரியவேண்டுமோ அதை புரிவிக்கும் படி வெளிப்படும் தானே ..

அதே போலவே செயலும் !!
அவனால் செய்யாக்கூடிய சாத்தியக்கூறுகளை பெற்று !!
அவன் செய்யவிட்டதை !!
அவன் என்னை கையாளும் விதமே செய்கிறேன் என்று செய்ய !!
செயலில் நேர்த்தி சிறப்பு தனித்துவம் எல்லாம் வெளிப்படும் தானே !!

எல்லாம் படிக்க !! கேட்க !! நல்லாத்தான் இருக்கு ??
இதுவெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் தானே ..

கண்டிப்பாக சாத்தியமே ..

யாரோ உங்களை திட்டிவிட்டாலோ !! புகழ்ந்து விட்டாலோ !!

நாம் என்ன செய்தலும் !! பேசினாலும் !! அவரின் நினைப்பு நாம் செய்வதில் எல்லாம் அதுவும் நம் சிந்தனையில் இருக்கின்றது தானே !!
அதனோடு தானே நம் அன்றாட நிகழ்வு எல்லாம் நடக்கிறது !!

சொன்னார் இறந்து பலவருடம் ஆனால் கூட
நினைவில் அவர்கள்  செய்தது வழியே உங்களோடு எதிர்த்தோ ?? வருந்தியோ ?? வாழ்வது சாத்தியம் என்றால் !! இதுவும் சாத்தியம் தானே ..

இறந்தவர் கூட வாழும் தகுதிபெற்ற நம்  சிந்தையில் ..

எப்போதும் இருந்து !!
நம்மையும் நாமாக இருக்கவைத்து !!
நம்மோடு என்றும் இருக்கும் நிதர்சனமான இறைவனை உணர்வில் இருத்தி செய்யமுடியும் தானே ..

அப்படி செய்வதால் ??

அந்த சொல் செயல் வழியே விளைவது எது என்றாலும் அது உங்களுடையது இல்லை என்ற மெய் புலப்படும் !!
அதை குறித்து யாரும் புகழ்ந்தாலும் !! இகழ்ந்தாலும் !! அதைப்பற்றி
உங்களுக்கு அக்கறையோ ?? கவலையோ ?? கொள்ள தேவையில்லை தானே ..

நீங்கள் இதுபோல உங்களை ஏமாற்றுக்கொள்வதில் இருந்து விடுவிக்கப்பட்டு !! சுதந்திரமாக !! ஆனந்தமாக !! அமைதியாக !! வாழமுடியும் தானே ...

இதை தான் தவவாழ்வு என்று கூறப்படுகிறது !!

குடும்பத்தை விட்டு காட்டுக்கு சென்று தவம் செய்கிறேன் என்று இறைநினைப்போடு இருப்பது தானே ..
அதையே
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சொல் செயல் எல்லாம் இறைசிந்தையோடு செய்யும் போது அதுவும் தவவாழ்க்கை தானே ..

திருச்சிற்றம்பலம்

நடராஜா நடராஜா