சனி, 10 நவம்பர், 2018

புத்ர பாக்யம் இல்லாதவர்களின் கதி என்ன !!
புத்ர பாக்யம் இல்லாதவர்களின் கதி என்ன !!

தான் வாழும் காலத்தில் சாஸ்த்ரப்படி அனைத்துக் கடமைகளையும் செய்த ஒருவனுக்கு மரணத்திற்கு பின் புத்ரன் இல்லாமல் போனாலோ, புத்ரன் இருந்தும் கர்மா செய்யாமல் போனாலோ அதனால் எந்த நஷ்டமும் இல்லை.

புத்ரன் இல்லாமல் போனால் அத்துடன் சந்ததி முடிவடைந்தது
அந்த வம்சத்தில் அனைவரும் கரையேறி விட்டார்கள் என்றே அர்த்தம்.

புத்ரன் இருந்தும் செய்யாமல் போனால், அவர்கள் கரையேறுவதற்கு
சாஸ்த்ரம் பல்வேறு வழிமுறைகளை வைத்துள்ளது. ஒவ்வொருவரும் ச்ராத்தம் செய்யும் போது அன்ன ஹோமம், ஹோமசேஷம், பித்ரு போஜனம் ஆகிய மூன்று விஷயங்கள் மட்டுமே நேரடியான மூன்று தலைமுறையைச் சேர்ந்த பித்ருக்களுக்காகச் செய்யப்படுகிறது.

இலை எதிரில் சாதம் உதிர்ப்பது, காக்காய்க்கு பிண்டம் வைப்பது போன்றவை தன் வம்சத்தைச் சேர்ந்த இது போன்ற பித்ருக்களுக்குத்தான் போகிறது. மூன்று தலைமுறையில் உள்ள ஒவ்வொருவரும் இங்கு ச்ராத்தம் செய்பவர் உயிருடன் இருந்து ச்ராத்தம் செய்யும் வரை அதே இடத்தில் இருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு வேளை அவர் தன் புண்ணிய காரியங்களாலோ,
பகவான் க்ருபையினாலோ, ஆசார்யாளின் அநுக்ரஹத்தாலோ,
பாகவதர்களின் அருள் வாக்கினாலோ நல்ல கதியை மோக்ஷத்தை அடைந்திருக்கக்கூடும். ஆனால் விதிக்கப்பட்ட சாஸ்த்ரம் எந்தப் பழுதும் இன்றி நடக்க வேண்டும் என்பதற்காக வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல பகவான் தானே பித்ரு ஸ்வரூபியாக நின்று அவற்றை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுகிறான்.

எனவே தான் ச்ராத்தங்களில், ச்ராத்த பலனை தத்தம் செய்யும் போது,
விச்வேதேவா: பித்ருபிதாமஹப்ரபிதாமஹா: என்று கூறாமல்
விச்வேதேவ ஸ்வரூபி, பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ஸ்வரூபி,
ப்ரத்யக்ஷ மகாவிஷ்ணு ஸ்வரூபி 'ஸர்வாகார: பகவான்' (எல்லா ரூபமாகவும் இருப்பவன்) ஶ்ரீஜனார்தன: ப்ரியதாம் என்றே தத்தம் செய்யப்படுகிறது.

எனவே ஒரு யோக்யமான ச்ரேஷ்டமான புத்ரனை உடையவன் 
இருக்கும் போதும் இறந்த பிறகும் (ஸபிண்டீகரணத்தன்று வரை) சில புண்ணியங்களை அடைகிறான். ஒரு அயோக்ய சிகாமணிணைப் புத்திரனாகப் பெற்றவன் இருக்கும் போது பாபங்களை அடைந்தாலும், இறந்த பிறகு அவனால் அவனுக்கு பாபமும் இல்லை, புண்ணியமும் இல்லை. புத்ர பாக்யத்தால் தள்ளாத காலத்தில் அநுஷ்டானத்திற்கு உதவி இருக்கலாம். புத்ர பாக்யமின்றி அநுஷ்டிக்கப்படாததால் அவனுக்கு பாபம் நேராது. புத்ர பாக்யத்தால் பலன் அடைபவன் புத்ரனே அன்றி
பிதாவுக்கு எந்த பெரிய நஷ்டமும் இல்லை !!
தான் வாழும் காலத்தில் சாஸ்த்ரப்படி அனைத்துக் கடமைகளையும் செய்த ஒருவனுக்கு மரணத்திற்கு பின் புத்ரன் இல்லாமல் போனாலோ, புத்ரன் இருந்தும் கர்மா செய்யாமல் போனாலோ அதனால் எந்த நஷ்டமும் இல்லை.

புத்ரன் இல்லாமல் போனால் அத்துடன் சந்ததி முடிவடைந்தது
அந்த வம்சத்தில் அனைவரும் கரையேறி விட்டார்கள் என்றே அர்த்தம்.

புத்ரன் இருந்தும் செய்யாமல் போனால், அவர்கள் கரையேறுவதற்கு
சாஸ்த்ரம் பல்வேறு வழிமுறைகளை வைத்துள்ளது. ஒவ்வொருவரும் ச்ராத்தம் செய்யும் போது அன்ன ஹோமம், ஹோமசேஷம், பித்ரு போஜனம் ஆகிய மூன்று விஷயங்கள் மட்டுமே நேரடியான மூன்று தலைமுறையைச் சேர்ந்த பித்ருக்களுக்காகச் செய்யப்படுகிறது.

இலை எதிரில் சாதம் உதிர்ப்பது, காக்காய்க்கு பிண்டம் வைப்பது போன்றவை தன் வம்சத்தைச் சேர்ந்த இது போன்ற பித்ருக்களுக்குத்தான் போகிறது. மூன்று தலைமுறையில் உள்ள ஒவ்வொருவரும் இங்கு ச்ராத்தம் செய்பவர் உயிருடன் இருந்து ச்ராத்தம் செய்யும் வரை அதே இடத்தில் இருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு வேளை அவர் தன் புண்ணிய காரியங்களாலோ,
பகவான் க்ருபையினாலோ, ஆசார்யாளின் அநுக்ரஹத்தாலோ,
பாகவதர்களின் அருள் வாக்கினாலோ நல்ல கதியை மோக்ஷத்தை அடைந்திருக்கக்கூடும். ஆனால் விதிக்கப்பட்ட சாஸ்த்ரம் எந்தப் பழுதும் இன்றி நடக்க வேண்டும் என்பதற்காக வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல பகவான் தானே பித்ரு ஸ்வரூபியாக நின்று அவற்றை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுகிறான்.

எனவே தான் ச்ராத்தங்களில், ச்ராத்த பலனை தத்தம் செய்யும் போது,
விச்வேதேவா: பித்ருபிதாமஹப்ரபிதாமஹா: என்று கூறாமல்
விச்வேதேவ ஸ்வரூபி, பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ஸ்வரூபி,
ப்ரத்யக்ஷ மகாவிஷ்ணு ஸ்வரூபி 'ஸர்வாகார: பகவான்' (எல்லா ரூபமாகவும் இருப்பவன்) ஶ்ரீஜனார்தன: ப்ரியதாம் என்றே தத்தம் செய்யப்படுகிறது.

எனவே ஒரு யோக்யமான ச்ரேஷ்டமான புத்ரனை உடையவன்
இருக்கும் போதும் இறந்த பிறகும் (ஸபிண்டீகரணத்தன்று வரை) சில புண்ணியங்களை அடைகிறான். ஒரு அயோக்ய சிகாமணிணைப் புத்திரனாகப் பெற்றவன் இருக்கும் போது பாபங்களை அடைந்தாலும், இறந்த பிறகு அவனால் அவனுக்கு பாபமும் இல்லை, புண்ணியமும் இல்லை. புத்ர பாக்யத்தால் தள்ளாத காலத்தில் அநுஷ்டானத்திற்கு உதவி இருக்கலாம். புத்ர பாக்யமின்றி அநுஷ்டிக்கப்படாததால் அவனுக்கு பாபம் நேராது. புத்ர பாக்யத்தால் பலன் அடைபவன் புத்ரனே அன்றி
பிதாவுக்கு எந்த பெரிய நஷ்டமும் இல்லை !!