ஞாயிறு, 10 ஜனவரி, 2021

தாலியின் மகிமை

“தாலி மகிமை”

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார் பாலகிருஷ்ணசாஸ்திரிகள். தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி
இருந்ததாக இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின் போது நடந்த திருமணங்களில் புது மணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் ”தாலம்” என்ற பெயர் தான் தாலியாக
மாறியிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டில் தான் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். வெளியிட்டிருக்கும் “தமிழர் திருமணம்” என்கிற புத்தகம். மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது

அருள் மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில்

அருள் மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில்

மூலவர்:ஏகாம்பரநாதர்
உற்சவர்:உற்சவர்சொர்ணாம்பாள்
அம்மன்:காமாட்சி (ஏழவார்குழலி)
தல விருட்சம்:மாமரம்
தீர்த்தம்:சிவகங்கை
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:கச்சி
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்:பண்டு செய்த பழவினையின் பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டுலா மலரச் செஞ்சடை யேகம்பன் தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே.-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.
 
திருவிழா:பங்குனி உத்திரம் பெருவிழா - 13 நாட்கள் நடைபெறும் - வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.   
       
தல சிறப்புஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள். கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:நிர்வாக அதிகாரி, அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501,போன்:+91- 44-2722 2084.
 
பொது தகவல்:மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.

இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.
 
பிரார்த்தனை:இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
 
 நேர்த்திக்கடன்:சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.  
      
தலபெருமை:காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.

சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.

பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.

தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் - வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.

ஒற்றை மாமரம் : ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.

அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.

இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.
 
 தல வரலாறு:கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.

இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.
 
 சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

அருள் மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்

அருள் மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்
 
மூலவர் :திருநீரகத்தான்
உற்சவர்:ஜெகதீசப்பெருமாள்
அம்மன்:நிலமங்கை வல்லி
தீர்த்தம்:அக்ரூர தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருநீரகம்
ஊர் :திருநீரகம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.
-திருமங்கையாழ்வார்   
       
திருவிழா:வைகுண்ட ஏகாதசி   
       
தல சிறப்பு:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள் பாலிக்கிறார்.   
       
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருநீரகம், காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91- 94435 97107, 98943 88279  
      
பொது தகவல்:இத்தல இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஜெகதீஸ்வர விமானம் எனப்படும்.  இத்தல இறைவனை அக்ரூரர் தரிசனம் செய்துள்ளார்.   
       
பிரார்த்தனை:ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.  
      
நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.  
      
தலபெருமை:பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருநீரகம்  எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம்,  திருக்காரகம், திருகார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.   
       
தல வரலாறு:"நீரகத்தாய்' என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த "திருநீரகம்' முன் காலத்தில் எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார். பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே  இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று தலங்களும் "திருஊரகத்துடன்' வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.   
       
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

பாவம் போக்கும் 12 ஜோதிர்லிங்க துதி!

பாவம் போக்கும் 12 ஜோதிர்லிங்க துதி!
 
புனிதமும் அழகும் நிறைந்த சவுராஷ்டிர தேசத்தில் ஜோதிமயமாக இருப்பவரும்; தலையில் பிறைச் சந்திரனைச் சூடியவரும்; எல்லையற்ற கருணை காரணமாக எல்லாருக்கும் பக்தியை அளிப்பதற்காகவே அவதாரம் செய்தவருமாகிய சோமநாதர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன். மேலான இமயமலையின் தாழ்வுப் பிரதேசத்தில், கேதாரம் என்ற இடத்தில் ஆனந்தமாகக் குடிகொண்டிருப்பவரும்; சிறந்த முனிவர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் யட்சர்களாலும் நாகர்களாலும் எப்போதும் பூஜிக்கப்படுபவரும்; இரண்டற்றவருமான கேதாரேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.
 
மிக உயர்ந்த ஸ்ரீசைலம் என்ற மலையில், அறிஞர்களின் சத்சங்கத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு வசிப்பவரும்; சம்சாரம் என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு உதவும் தோணி போன்றவருமாகிய மல்லிகார்ஜுனர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். நல்லவர்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவந்திகா (உஜ்ஜயினி) நகரத்தில் அவதாரம் செய்தவரும்; தேவர்களுக்குத் தலைவனுமாகிய மகாகாலேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை எனக்கு அகால மரணம் நேராமல் இருக்கும் பொருட்டு வணங்குகிறேன்.  நர்மதை நதி பாயும் தூய்மையான இடத்தில், நல்லவர்களைக் காக்க எப்போதும் மாந்தாத்ரு என்ற ஊரில் வசிப்பவரும்; ஓங்காரேஸ்வரர் என்ற அத்விதீயருமான (இரண்டற்ற) சிவபெருமானை வணங்குகிறேன்.
 
வடகிழக்கு திசையில் கொழுந்துவிட்டு எரியும் தீ ஜ்வாலை உள்ள மயானத்தில் வசிப்பவரும்; கிரிஜா என்ற பார்வதிதேவியுடன் எப்போதும் சேர்ந்திருப்பவரும்; தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவருமாகிய வைத்தியநாதர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். தென்திசையில் மிகவும் அழகிய ஸதங்கம் என்ற நகரத்தில், நன்கு அலங்கரிக்கப்பட்ட அங்கங்களோடு நிகரற்ற செல்வங்கள் நிறைந்தவரும்; உயர்ந்த பக்தியையும் முக்தியையும் வழங்கும் ஒரே தெய்வமாகத் திகழ்பவருமாகிய நாகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன்.
 
தாமிரபரணி நதி கடலில் கலக்கும் இடத்தில், எண்ணற்ற அம்புகளைக் கொண்டு அணையைக் கட்டிய ஸ்ரீராமராவ் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட ராமேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை முறைப்படி வணங்குகிறேன்.
 
அழகாகவும் விசாலமாகவும் இருக்கும் இளாபுரம் என்ற இடத்தில் விளங்குபவரும்; பெருங்கருணையைத் தமது இயல்பாகக் கொண்டவரும்; கிருஷ்ணேஸ்வரர் (குசுருணேஸ்வரர்) என்ற பெயர் பெற்ற வருமாகிய பரமேஸ்வரனைச் சரணடைகிறேன்.
 
புனிதமான ஸஹ்ய மலையில், பவித்ரமான கோதாவரி நதிக்கரையில் எழுந்தருளியிருப்பவரும்; எவருடைய தரிசனத்தால் எல்லாப் பாவங்களும் விலகி விடுகின்றனவோ, அந்த த்ரியம்பகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.
 
டாகினீ, சாகினீ முதலிய பூதகணங்கள் வசிக்கும் இடத்தில், அரக்கர்களால் வணங்கப்படுபவரும்; என்றும் பீமேஸ்வரர் என்று புகழப்படுபவரும்; பக்தர்களுக்கு நன்மை செய்பவருமாகிய சங்கர பகவானுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.
 
காசியில் ஆனந்தபவனத்தில் பேரானந்தத்துடன் வசிப்பவரும், மகிழ்ச்சிக் குவியலாக விளங்குபவரும்; பாவம் அகற்றுபவரும்; வாரணாசியின் தலைவரும்; ஆதரவற்ற அநாதைகளுக்கு நாதனுமாகிய விஸ்வநாதரைச் சரணடைகிறேன்.

கிருஷ்ணர் துதி

கிருஷ்ணர் துதி!

கிருஷ்ணாய வாஸுதேவாய தேவகி நந்தநாய
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோநம:

பொருள் : தேவகிக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனும், வாசுதேவனும், நந்தகோபனின் குமாரனும், கிருஷ்ணனுமாகிய கோவிந்தனை வணங்குகிறேன்.

நம: பங்கஜநாபாய நம: பஞ்சத மாலிநே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாஸ்ரியே

பொருள் : நாபியில் தாமரையை உடையவரும், தாமரை மாலையைத் தரித்தவரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், அழகான பத்ம ரேகையைக் கால்களில் உடையவருமான தங்களைப் பலதடவை வணங்குகிறேன்.

மூகம் கரோதி வாசாலம் பங்கும் வங்கதே கிருஹம்
யத்கிருபா பரமம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

பொருள் : பேசவே இயலாதவரையும் கூட பேச்சாற்றல் மிக்கவராக மாற்றக் கூடியவரும், குடிசையையே மாளிகையாக்கக் கூடியவருமான அந்தப் பரமானந்த மாதவனின் கருணையை வணங்குகிறேன்.

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலையார்ச்சுத:
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்

பொருள் : சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தரித்தவரும், த்வாரகாபுரியின் அதிபரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், பசுக்களைப் பரிபாலிக்கிறவருமான பிரபுவே, தங்களைச் சரணடைந்த என்னைக் காப்பாற்றுங்கள்.

த்வம் ஆதி அந்தோ பூதானாம் த்வமேவ ச பராகதி:
விஸ்வாத்மன் விஸ்வ ஜநக: விஸ்வகர்த்த: பிரபோவ்ய:

பொருள் : உலகத்தை தேகமாகக் கொண்டவரே, உலகத்தைப் படைத்தவரே, உலகத்தை அழிப்பவரே, ஹே பிரபோ, அழிவற்றவரே, பிராணிகளின் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என (ஆக்கல், காத்தல், அழித்தல்) முத்தொழிலையும் செய்பவரே உம்மை வணங்குகிறேன்.

யத்ர யோகேஸ்வர: கிருஷ்ணோ
யத்ர பாத்ரோ தனுர்த்தர:
பத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்
த்ருத்வா நீதிர் மதிர் நம:

பொருள் : எங்கு யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு வில்லேந்திய வீரன் அர்ஜுனன் இருக்கிறானோ அங்கெல்லாம் மகாலட்சுமியின் கடாட்சத்தோடு மிகுந்த ஜெயமும், அழியாத ஐஸ்வர்யமும், நீதியும் நிச்சயம் இருக்கும்.

தேவகி ஸூத கோவிந்த வாஸுதேவ ஜெகத்பதே
தேஹிமே தநயம் கிருஷ்ணா த்வாம் அஹம் சரணம் கத:

பொருள் : தேவகியின் மகனான கோவிந்தனே வாசுதேவனே, உலகத்தின் தலைவனே எனக்கு ஒரு மகனைத் தந்து அருள்வீர்.

பகவான் கூறியது

நாகம் வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே
தத்ர நிதஸ்யாமி யத்ர காயந்தி மத் பக்தா ! நிருத்யே !!

பொருள் : நான் எனது இருப்பிடமான வைகுண்டத்தில் வெகுகாலம் வசிப்பதில்லை. யோகிகளின் இதயத்திலும், வசிப்பதில்லை. எந்த இடத்தில் என் பக்தர்கள் பாடியும் ஆடியும் களிப்படைகிறார்களோ அந்த இடத்தில் நான் வசிப்பேன். அவர்கள் மனதில் நிறைந்திருந்து அவர்கள் வேண்டுவதை அருள்வேன். இது நிச்சயம் !

மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

 மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக் குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள் பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.

ராகு

ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.

முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும்!

முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும்!

முருகன்    -அழகன்.
பிள்ளையார்    -சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.
சித்தன்    -அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.
சேயோன்    -செந்நிறம் உடையவன்.
வேள்    -எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் உடையவன்.
வேலன்    -வெற்றி தரும் வேலை உடையவன்.
அரன் மகன்    -சிவனின் புத்திரன்.
அறுமீன் காதலன்    -கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.
அறுமுகன்    -ஆறு முகங்களை உடையவன்.
குரு    -சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் உரைத்தவன்.
கோழிக்கொடியோன்-சேவலைக் கொடியாக உடையவன்.
கங்கை மைந்தன்    -தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.
கடம்பன்    -கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.
கந்தன்    -வலிமையான தோள்களை உடையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன்.
காங்கேயன்    -கங்கை மைந்தன்
கார்த்திகேயன்    -கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.
குகன்    -மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.
குமரன்    -சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.
குழகன்    -அழகன், இளமையானவன்.
குறிஞ்சி வேந்தன்    -மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.
குன்றெறிந்தோன்    -கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.
கவுரி நந்தனன்    -உமாதேவியின் மைந்தன்.
சண்முகன்    -ஆறு முகம் கொண்டவன்.
சரவணபவன்    -நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.
சிலம்பன்    -காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.
சுரேசன்    -துன்பம் நீக்குபவன்.
சூர்ப்பகைவன்    -எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.
செட்டி    -     உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.
சேந்தன்    -சிவப்பு நிறமுடையவன்
சேவற்கொடியோன்-சேவலைக் கொடியில் தாங்கியவன்.
தெய்வானை காந்தன்-தெய்வானையின் கணவன்.
தேவசேனாபதி    -சேனைக்குத் தலைவன்.
பாவகி, பாவகாத்மஜன்    -பரிசுத்தம் உடையவன்.
மஞ்ஞையூர்தி    -மயிலை வாகனமாகக் கொண்டவன்.
மாயோன் மருகன்-திருமாலின் மருமகன்.
வள்ளி மணாளன்    -வள்ளியின் கணவன்.
பாகுலேயன்    -கார்த்திகேயன்.
விசாகன்    -வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.
சங்கத்தலைவன்    -கலைகளை உணர்ந்த புலவன்.
சாமி  - செல்வன்.
முத்தையன்    -முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.
சுப்பிரமணியன்    -வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.

சத்ய நாராயண விரதமுறையும் பலனும்!

சத்ய நாராயண விரதமுறையும் பலனும்!

அனுஷ்டிக்க விதிமுறைகள்: ஆந்திராவில் மிகவும் பிரபலமானது சத்ய நாராயண விரதம். சமீப காலமாக தமிழக பக்தர்களும் இதைகடைபிடிக்கின்றனர். மகாவிஷ்ணுவே சத்ய நாராயணர். இந்தவிரதத்தை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கடைபிடிக்க வேண்டும். (பவுர்ணமியன்று பெண்களுக்கு வசதிப்படாவிட்டால், தமிழ் மாதப்பிறப்பு அல்லது வளர்பிறை ஏகாதசி திதியன்று விரதமிருக்கலாம்) இந்தவிரதம் எளிமையானது. இதைகணவனும், மனைவியும் சேர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30-6.00 மணிக்குள் உறவினர்கள், நண்பர்கள், அயல்வீட்டாரை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும். சத்ய நாராயணர் படத்தின் முன், நெய் விளக்கேற்ற வேண்டும். பழம், பால், வெல்லம், தேன், கோதுமை நெய் அப்பங்களை சத்திய நாராயணருக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அந்நாளில், சத்யநாராயணர் விரதக்கதைகளை படிக்க வேண்டும். இந்தவிரதத்தைகடைபிடிக்க இத்தனை வாரம் தான் நியதி இல்லை. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், தொடர்ந்து அனுஷ்டித்தால், நம்மை ஜெயிக்க யாரும் இல்லை என்ற நிலை உருவாகும். பணவசதி பெருகும். புதுமணத்தம்பதிகள், வாழ்வின் துவக்கம் முதலே இதைதகடைபிடித்தால் தீர்க்காயுள் உள்ள புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறப்பார்கள். வசதி உள்ளவர்கள், கலசம் வைத்து புரோகிதர்களைதகொண்டு இந்தபூஜையை நடத்தலாம்.

ஆந்திராவில் சத்தியநாராயணர்: ஆந்திர மக்கள் சத்யநாராயண விரதத்தை தவறாமல் கடைபிடிக்கின்றனர். செல்வந்ததம்பதிகள், இந்தவிரதம் துவங்குவதற்கு முன்னதாக ஆறுமாதங்கள் வரை, ஏதாவது ஒரு புனிதத்தலத்தில் தங்கி வந்து இந்தவிரதத்தைதுவங்குகிறார்கள். விரதபூஜையை, பவுர்ணமியன்று பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00) நடத்துகிறார்கள். அன்று, மாலையில் அன்னதானம் செய்யும் நோக்கத்தில் பெருமளவு சமைக்கிறார்கள். சமைத்ததில் கால் பங்கை மட்டும் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் எடுத்துதகொண்டு, மீதியை தானம் செய்து விடுகிறார்கள்.

பணம் வரப்போகுது சொல்பவர் நாரதர்: கலியுகத்தில், மனிதனுக்கு தேவை அதிகம். அவனது தேவைகளை நிறைவேற்ற பணம் வேண்டும். அது கிடைக்க எளிய வழி சத்ய நாராயண விரதம் என்கிறார் நாரதர்.சுதானந்தர் என்பவர் இந்த விரதத்தை முறையாகக் கடைபிடித்ததால், மறுபிறவியில் சுதாமா (குசேலர்) என்னும் பெயரில் பிறந்து, கிருஷ்ண தரிசனத்துடன் பெரும் செல்வத்தைப் பெற்றார். விறகு விற்றுக் கொண்டிருந்த பல்லன் என்ற தொழிலாளி, இந்த விரத மகிமையால், மறுபிறவியில் குகன் என்னும் பெயரில் பிறந்து ராமதரிசனம் பெற்று, அழியாச் செல்வமான முக்தியை அடைந்தான். உல்காமுகன் என்ற அரசரோ, இதை முறையாகச் செய்து, மறுபிறவியில் தசரதராகப் பிறந்து 60ஆயிரம் ஆண்டுகள் சகல செல்வத்துடன் வாழும் பாக்கியம் பெற்றதுடன், ராமனுக்கே தந்தையும் ஆனார்.  ஸ்காந்த புராணத்தில் (கந்த புராணம்) வரும் ஸ்லோகம் ஒன்றில், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கஷ்டங்கள் குறையும். பணமும், தானியமும் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதை படிச்சாலே மோட்சம் தான்!

இதை படிச்சாலே மோட்சம் தான்!

ஏகாதசி விரதமிருந்தால் மோட்சம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசியன்று, மரணம் அடைபவர்கள் எவ்வளவு பாவம் செய்தவராக இருந்தாலும், வைகுண்டத்துக்கு சென்று விடுவார்களாமே... எனக்கு அந்த விரதம் பற்றி எதுவுமே தெரியாதே! சாப்பிடக்கூடாது, தூங்கக்கூடாது என்கின்றனர். இப்படி, கடுமையாக உடலை வருத்திக் கொண்டால் மட்டும் மோட்சம் கிடைத்து விடுமா என்ன... என்று, பலர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். ஆனால், இதெல்லாம் இல்லாமலே, பரந்தாமனை அடைந்து விட்டது ஒரு தயிர்ப்பானை. கிருஷ்ணன், ஒரு வீட்டில் வெண்ணெய் திருடிக் கொண்டிருந்தான். அவ்வீட்டுப் பெண், கிருஷ்ணனை விரட்டி வந்தாள். அவன் அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த தன் நண்பன், ததிபாண்டனிடம், கெஞ்சிக்கூத்தாடி, ஒரு பானைக்குள் ஒளிந்து கொண்டான். நண்பனும் கிருஷ்ணனை மறைத்துக் கொள்ளும் விதமாக, பானை மீது ஏறி அமர்ந்து கொண்டான். அந்தப்பெண், அங்கு வந்து, கிருஷ்ணனைத் தேடிய போது, இங்கு வரவில்லையே... என்று சொல்லி விட்டான் நண்பன். அவள் போனதும், நண்பா... பானையை விட்டு இறங்கு. நான் வெளியே வர வேண்டும்... என்றான் கிருஷ்ணன்.

முடியாது. எனக்கு மோட்சம் அளிப்பதாக வாக்கு கொடு. அப்போது தான் இறங்குவேன்... என்று நிர்ப்பந்தித்தான் ததிபாண்டன். வேறு வழியில்லாமல், கிருஷ்ணனும், உனக்கு மட்டுமல்ல. இந்த பானைக்கும் சேர்த்தே மோட்சம் தருகிறேன். முதலில் பானையை விட்டு இறங்கு... என்று வாக்குறுதி அளித்தான். ஆபத்து காலத்தில், உதவி செய்த காரணத்தால், இப்படி, ஒரு ஜடப்பொருள் கூட மோட்சத்தை அடைந்திருக்கிறது. இந்தக் கதையை தெரிந்து வைத்திருந்தார், ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராக இருந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.
அவர், ஒருமுறை, ரங்கநாதரிடம், ரங்கா... எனக்கு மோட்சம் தா... என்றார். திடீரென ஏன் இப்படி கேட்கிறீர்? என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ரங்கன். அதென்னவோ தெரியவில்லை. எனக்கு இன்றே மோட்சம் வேண்டும்.... மோட்சம் போவதென்றால் சாதாரண விஷயமா... இந்த உலகம் பொய்யானது என்ற ஞானம் உமக்கு வந்து விட்டதா... ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் பற்றியெல்லாம் தெரியுமா? என்று கேட்டார்.

தெரியாது... போகட்டும். யாருக்காவது அன்னதானம் செய்திருக்கிறீரா அல்லது என் பக்தன் தங்க இடவசதியாவது செய்து கொடுத்தீரா?
இல்லை... ரங்கநாதனுக்கு கோபம் வந்து, பாம்பு படுக்கையை விட்டு, எழுந்து விட்டார். ரங்கநாதனை அமர்ந்த கோலத்தில், அநேகமாக பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மட்டும் தான் தரிசித்திருப்பார். ஏனய்யா பிள்ளை பெருமாள் ஒன்றுமே செய்யாமல், மோட்சம் கேட்கிறீரே... அதெப்படி தர முடியும்? என்று கேட்டார் ரங்கன். ஐயங்காரும் சளைக்காமல், ஏ பெருமாளே... என்னை இத்தனை கேள்விகள் கேட்கிறாயே... ஒரு பானைக்கு, எதை வைத்து மோட்சம் கொடுத்தாய்... அதற்கென்ன பக்தியோகம், கர்மயோகம் எல்லாம் தெரியுமா... ஒரு ஜடப் பொருளுக்கே மோட்சம் தந்த நீ, எனக்கு தர மறுப்பதேன்? என்றார் விடாக்கண்டனாய். ரங்கநாதனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. திரும்பவும் படுத்து விட்டார். இந்தச் சம்பவம் மூலம் நாம் அறிவது, ஆன்மிக விஷயங்களை, தெய்வங்களின் வரலாறை நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், இவன், உலகியல் வாழ்வில் என்ன தான் நாட்டம் கொண்டவனாக இருந்தாலும், பக்தி சமாசாரங்களையும் காது கொடுத்து கேட்டிருக்கிறான். இவனை மோட்சத்துக்கு அனுப்பலாம் என்று, பரந்தாமன் முடிவு செய்வான். எனவே, ஆன்மிக நூல்களை நிறைய படியுங்கள். உடலை வருத்தி பட்டினி கிடப்பது என்பதெல்லாம், இரண்டாம் பட்சம் தான்!

விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் (பகுதி-1)

விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் (பகுதி-1)

பூர்வ பாகம் (முற்பகுதி) விஷ்ணு வணக்கம்

1. ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர் புஜம்
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே

வெண்மையான ஆடையை உடுத்தியவரும், எங்கும் நிறைந்துள்ளவரும், நிலவு போன்ற குளிர்ந்த திருமேனி வண்ணத்தைப் பெற்றவரும், நான்கு கைகளை உடையவரும், மலர்ச்சி பொங்கும் திருமுகத்தைக் கொண்டவருமான பகவானை எல்லாத் தடைகளும் நீங்க வேண்டித் தியானிப்போம்.

ஸேனைமுதலியார் வணக்கம்.

2. யஸ்ய த்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரஸ்ஸதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே

யானை முகன் முதலான பரிவாரக் கூட்டங்களுக்குத் தலைவராகவும், தம்மையே தியானம் செய்பவருக்கு வருகின்ற எல்லா இடையூறுகளையும் நீக்கி மகிழ்ச்சி அளிப்ப வருமாகிய ஸேனை முதல்வரின் திருவடிகளை வணங்குகிறோம்.

வியாசர் வணக்கம்.

3. வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே :பௌத்ர மகல்மஷம்
பராஸராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத் தொகுத்தளித்தவர் வியாச பகவான். அவரை முதலில் வணங்குவோம். ஸ்ரீராமாயணத்தில் மிகவும் சிறந்து விளங்குபவர் வசிஷ்டர். வசிஷ்டரின் பிள்ளை சக்தி. சக்தியின் பிள்ளை பராசரர். பராசரரின் பிள்ளை வியாசர். வியாசரின் பிள்ளை சுகப்பிரம்மம்.

இவ்வாறு திருமாலின் தமராகப் பலதலைமுறைகளாக இருந்து வரும் நல்ல மரபில் குற்றமற்ற தவச் செல்வராக விளங்குபவர் வியாச பகவான். இத்தகைய பெருமைக்குரிய வியாச பகவானை முதலில் வணங்குவோம்.

4. வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணுவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:

விஷ்ணு வடிவமாக உள்ள வியாசராகவும், வியாசர் வடிவமாக உள்ள விஷ்ணுவாகவும், வேதக் களஞ்சியமாகவும் உள்ள வசிஷ்டர் குலத்தோன்றலாகிய வியாச பகவானை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம்.

மகாவிஷ்ணு வணக்கம்.

5. அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே

மாறுபாடில்லாதவராகவும், தூய்மை உடையவராகவும், என்றும் உள்ளவராகவும், எப்பொழுதும் ஒரே வடிவத்தை உடையவராகவும், அனைத்தையும் வெற்றி கொள்பவராகவும், பரம்பொருளாகவும் விளங்குகின்ற மகாவிஷ்ணுவை வணங்குவோம்.

6. யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணுவே ப்ரப விஷ்ணவே
ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

சர்வ வல்லமை பொருந்தியவர் விஷ்ணு. பிறவித் துன்பமாகிய தளையானது, அப்பெருமானை நினைத்த மாத்திரத்திலேயே விடுபட்டுப் போய்விடும். அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய மகா விஷ்ணுவை வணங்குவோம்.

(மேலே கூறப்பட்ட ஆறு ஸ்லோகங்களும் மகா பாரதத்தில் உள்ள ஸஹஸ்ரநாமப் பகுதியில் காணப்படவில்லை. எனவே, பாஷ்யகாரர்களும் (விளக்கவுரையாளர்களும்) இவற்றுக்கு விளக்கவுரை எழுதவில்லை. எனினும், நெடுங்காலமாக இந்த ஆறு ஸ்லோகங்களும் பக்தர்களால் வழிவழியாகப் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது என்பர் அறிஞர்.)

பூர்வ பாகம் (முற்பகுதி)
பாகம் 2

வியாசரின் மாணாக்கர் வைசம்பாயனர். ஜனமே ஜயன் என்னும் மன்னனுக்குப் பாரதத்தை உபதேசித்தவர். ஜனமே ஜயன் என்னும் மன்னவன் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பெருமையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் அவாவினால், வைசம்பாயனர் ஜனமே ஜயனுக்கு இதனை உபதேசித்தார்.

ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்துக்குப் பீடிகையாகத் தொடங்குகிறது இந்த வரி.

ஸ்ரீ வைஸம்பாயந உவாச...

ஸ்ரீவைசம்பாயனர் ஜனமே ஜயனிடம் கூறியது.
இப்படித் தொடங்குகிறது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம உபதேசம்.

1. ஸ்ருத்வா தர்மா நஸேஷேண பாவநாநி ச ஸர்வஸ:
யுதிஷ்டிர : ஸாந்த நவம் புநரே வாப்ய பாஷத

எல்லாத் தருமங்களையும், பாவங்கள் அனைத்தையும் போக்கும் முறைகளையும் பீஷ்மர் தருமருக்குக் கூறிவந்தார். இவை அனைத்தையும் ஒன்று விடாமல் தருமர் பீஷ்மரிடம் கேட்டறிந்தார். மேலும் பீஷ்மரை நோக்கித் தருமர் மீண்டும் கேட்கலானார்.

யுதிஷ்டிர, உவாச - (தருமர் கூறியது):

2. கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்
ஸ்துவந்த : கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்

3. கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்

சந்தனு மகாராஜாவுக்கும் கங்காதேவிக்கும் பிறந்தவர் பீஷ்மர். இவர் மகா ஞானி. ஞானத்தைச் சொல்பவர் பீஷ்மர், கேட்பவர் தரும தேவதையின் புதல்வர். சொல்லப்படும் பொருளோ ஆசார்யரால் விரும்பிப் போற்றப்படுகிறது. (கேட்பவனுக்கு நல்லவற்றைச்செய்யும் என்னும் நம்பிக்கையுடனும், நல்ல மனதுடனும் சொல்கிறார். சொல்லும் பீஷ்மரும், கேட்கும் தருமரும் ஒருவருக்கொருவர் பிரியமானவர். எனவே, மேன்மையை அளிக்கும் நல்லவை இங்கே கேட்கப்படுகின்றன.) தர்மங்களில் சிறந்ததாகப் பீஷ்மர் எதைக் கருதுகிறாரோ, அதை வெளியிட வேண்டுமென்று தருமர் கேட்கிறார்:

1. சாஸ்திரங்களில் மிக உயர்ந்த தெய்வமாக - ஒப்பற்ற தெய்வமாகக் கூறப்படும் தெய்வம் எந்தத் தெய்வம் என்று கருதுகிறீர்?

2. இகம், பரம் ஆகிய இரண்டிலும் விருப்பமுடன் அடையத்தக்க பொருளாக இருப்பது எது?

3. யாரைப் புகழ்ந்து பாடி வழிபட்டால் உயர்ந்த நலனைப் பெற முடியும்.

4. யாரை மனதால் தியானித்தும், வாக்கால் திருநாமங்களைச் சொல்லியும், மலர் கொண்டு கையினால் அர்ச்சித்தும் பெறுதற்கரிய பலனைப் பெறமுடியும்?

5. எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாகத் தங்களால் மனதாரக் கருதும் தருமம் எது?

6. பிறத்தல், வளர்தல், மூப்பெய்தல், இறத்தல், புண்ய பாபங்களுக்கேற்பப் பயனை அனுபவித்தல் ஆகியவற்றைக் கொண்ட உயிர்கள் எதை ஜபித்துப் பிறவித் தளையிலிருந்து விடுபட முடியும்? (மோட்ச சாதனத்தைத் தருவது எது?)

(இவ்வாறு கேள்விகள் கேட்ட தருமருக்குப் பீஷ்மர் கூறலானார்.)

ஸ்ரீ பீஷ்ம உவாச:

ஸ்ரீ பீஷ்மர் கூறலானார்:

4. ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புரு÷ஷாத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித:

அசைபவை, அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட உலகத்துக்குத் தலைவனும், தேவர்களுக்கெல்லாம் தேவனும், அளந்து காணமுடியாத பெருமை உடையவனுமாகிய வள்ளல்களில் சிறந்தவனை இடைவிடாத முயற்சியுடன் அவனது ஆயிரம் திருநாமங்களைச் சேதனன் துதி செய்தும்;

5. தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம்
த்யாயந் ஸ்துவந்ந மஸ்யம்ஸ் யஜமா நஸ் தமேவ ச

ஸஹஸ்ரநாமத்துக்குப் பொருளாக உள்ள - மாறுபாடில்லாத அந்தப் பரம்பொருளையே இடைவிடாத நினைவின் தொடர்ச்சியாக - தைல தாரையைப் போல் பக்தியுடன் அர்ச்சித்தும், எனதாவியும் உனதே என்று தாளும் தடக்கையும் கூப்பிக் கோல் போல் விழுந்து வணங்கியும் மேலும் தியானித்தும் வணங்கியும் வழிபடுபவன்;

6. அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வ லோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வ துக்காதிகோ பவேத்

ஆதியும் அந்தமும் இல்லாமல் எல்லாக் காலங்களிலும் இருப்பவனும், எங்கும் நிறைந்துள்ளவனும், எல்லா உலகங்களுக்கும் மேலான தலைவனும், எல்லா நடப்புகளையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவனுமாகிய விஷ்ணுவை எப்போதும் போற்றிவருபவன் எல்லாத் துன்பங்களையும் கடந்து எம்பெருமானைச் சேர்ந்து பகவத் அநுபவமான எல்லையற்ற ஆனந்தத்தை அநுபவிப்பான்.

7. ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்த நம்
லோக நாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம்

வேதத்தினிடமும் தவத்தினிடமும் நட்பு கொண்டவனும், எல்லாத் தருமங்களையும் அறிபவனும், உலகங்களால் கொண்டாடப்படும் புகழை வளர்ப்பவனும், எல்லா உலகங்களுக்கும் தலைவனும், உயர்ந்த ஐஸ்வர்யங்களை இயல்பாக உடையவனும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே கருணை காட்டுபவனும், பரம்பொருளாக இருந்து எல்லா உயிர்களுக்கும் பிறப்பு இறப்பினைக் கூட்டுவிப்பவனுமாகிய பிரம்மத்தையே ஒருவன் போற்றி வருவானாயின், அவன் எல்லாத் துன்பங்களையும் கடந்து செல்பவன் ஆவான்.

8. ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோ மத:
யத் பக்த்யா  புண்டரீகாக்ஷம் ஸ்தவை ரர்ச்சைந் நர: ஸதா

செந்தாமரைக் கண்ணனான பகவானை, மனிதனாகப் பிறந்தவன் எப்போதும் பக்தியுடன் அவனது பெருமைகளைச் சொல்லும் தோத்திரங்களால் வழிபாடு செய்யக் கடமைப் பட்டிருக்கிறான்.

இவ்வாறு வழிபாடு செய்யும் தருமத்தையே எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

9. பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப:
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம்

சிறந்ததும் பெரியதுமாகிய ஒளி எதுவோ, சிறந்ததும் பெரியதுமாகிய தவமே வடிவாக உள்ளது எதுவோ, சிறந்ததும் பெரியதுமாகிய பிரம்மம் எதுவோ, சிறந்த புகலிடம் எதுவோ ஒப்பற்றதாகிய அதுவே அடையத்தக்க புகலிடம்.

10. பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம்
தைவதம் தேவதாநாம் ச பூதாநாம் யோவ்யய: பிதா

பரிசுத்தமானவற்றுள் பரிசுத்தமாகவும், மங்களமானவற்றுள் மங்களமாகவும், தெய்வங்களுக்குள் தெய்வமாகவும், உயிர்களுக்குள் உயிர்தரும் தந்தையாகவும் உள்ளவன் யாரோ, அவனே உலகில் ஒரே தெய்வமாக இருக்கிறான்.

11. யத: ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ் யுக க்ஷயே

12. தஸ்ய லோக ப்ரதா நஸ்ய ஜகந் நாதஸ்ய பூபதே
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம்

உயிர்கள் அனைத்தும் ஆதியுகத்தின் தொடக்கத்தில் எவரிடமிருந்து பிறந்தனவோ, யுகத்தின் முடிவில் மீண்டும் அவை எவரிடத்தில் மறைகின்றனவோ, உலகத்தைத் தாங்கிக் கொண்டிருப்பவரும், உலகத்துக்குக் காரணமானவரும், உலக நாயகருமாக எங்கும் விளங்குபவர் எவரோ அவரே விஷ்ணு. இத்தகைய உயர்வும் சிறப்பும் மிக்க மகாவிஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்கள் பாவங்களையும், பயங்களையும் போக்குவன. அந்த ஆயிரம் நாமங்களையும் என்னிடம் கேட்பாயாக.

(இவ்வாறு அம்புப் படுக்கையில் இருந்தவாறே பீஷ்மர் தருமபுத்திரருக்கு ஆயிரம் நாமங்களைக் கூறலானார். மேலும், பீஷ்மர் தருமருக்குக் கூறுகிறார்.)

13. யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மந:
ரிஷிபி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே

பகவான் அளவிட முடியாத பெருமையுடையவன். அவனே மகாத்மா. எந்தெந்த நாமங்கள் பகவானுடைய கல்யாண குணங்களினாலும், சரிதத்தினாலும் பிரசித்தி பெற்றவையோ, ஆத்ம ஞானிகளான ரிஷிகளால் எங்கும் பாடப்பெற்றவையோ அவற்றை ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு உனக்குச் சொல்லுகிறேன். (இந்த இரண்டாம் பகுதியில் உள்ள ஸ்லோகங்கள் பதின்மூன்றும் மகாபாரதத்தில் உள்ளன. பாஷ்யங்களிலும் உள்ளன.)

(பூர்வ பாகம்(முற்பகுதி)

பாகம் 3

1. ருஷிர் நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாந் ரிஷி:
சந்தோ அநுஷ்டுப் ததா தேவோ பகவாந் தேவகீ ஸுத:

2. அம்ருதாம் ஸுத்பவோ பீஜம் ஸக்திர் தேவகி நந்தந:
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஸாந்த்யர்த்தே விநி யுஜ்யதே

3. விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புரு÷ஷாத்தமம்

வேதவியாசர் ஆயிரம் திருநாங்களைக் கண்டறிந்த மகரிஷி. இந்த ஸ்லோகங்கள் அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்தவை. அநுஷ்டுப் சந்தஸ் என்பது 32 உயிரெழுத்துகளுள்ள ஸ்லோகம். இந்த ஆயிரம் திருநாமங்களுக்குரிய தேவதை, தேவகி புத்திரனான ஸ்ரீகிருஷ்ண பகவான்.

அம்ருதாம் சூத்பவ. என்பது (சந்திர வம்சத்தில் உதித்தவன்) பீஜம் (ஆதாரம்.) தேவகி நந்தனன் என்பது சக்தி. த்ரிஸாமா என்பது (சாம ரிக்குகளால் பாடப்பட்டவன்) இதயம்.

மந்திர ஜபம் சாந்தியின் பொருட்டுப் பயன்படுகிறது. இதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கப்பெறுகிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளவரும், எப்போதும் வெற்றியையே உடையவரும், எல்லாவற்றிலும் உறைபவரும் , பல வடிவங்களைக் கொண்டவரும், அரக்கர்களுக்குப் பகைவரும், புரு÷ஷாத்தமராகவும் உள்ள மஹா விஷ்ணுவை வணங்குகிறேன்.

(இந்த மூன்றாம் பகுதி பாரதத்திலும் இல்லை; பாஷ்யங்களிலும் இல்லை. நடைமுறையில் மட்டுமே உள்ளது.)

பூர்வ நியாஸம்

(மூன்றாம் பாகத்திலுள்ள ஸ்லோகங்கள் உரைநடையாக அநுசந்திக்கும் முறை இனி சொல்லப்படுகிறது.

அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவாந் ரிஷி:

அநுஷ்டுப் சந்த:

ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா
ஸ்ரீமந் நாராயணோ தேவதா
அம்ருதாம் ஸுத்பவோ பாநுரிதி பீஜம்;
தேவகீ நந்தந: ஸ்ரேஷ்டேதி ஸக்தி;;
உத்பவ; ÷க்ஷõபணோ தேவ இதி பரமோ மந்த்ர;;
சங்க ப்ருந் நந்த்கீ சக்ரீ தி கீலகம்;
சார்ங்க தந்வா கதாதர இத்யஸ்த்ரம்
ரதாங்க பாணி ர÷க்ஷõப்ய இதி நேத்ரம்;
த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம்;;
ஆநந்தம் பர ப்ரஹ்மேதி யோநி;;
ருது: சு தர்ஸந: கால இதி திக்பந்த;;
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யாநம்;
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே
ஸ்ரீ ஸஹஸ்ரநாம ஜபே விநியோக;

விஷ்ணுவின் இந்த திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மகாமந்திரநாம ஸ்தோத்ர மகா மந்திரத்துக்குப் பகவான் வேதவியாசர் ரிஷி; அநுஷ்டுப் சந்தஸ்; பரமாத்வான ஸ்ரீமகா விஷ்ணு - ஸ்ரீமந்நாராயணன் தேவதை; சந்திர குலத்துதித்த சூரியன் குலவிளக்கு என்பது பீஜம் (மூலகாரணம்); தேவகீ நந்தனாகிய ஸ்ரீகிருஷ்ணன் சக்தி; உத்பவ: ÷க்ஷõபனோ தேவ; என்பது இதன் உயர்ந்த மந்திரமாம்; திருவாழி, திருச்சக்கரம், நாந்தக வாள் ஏந்தியவன் கீலகம் (அச்சாணி); இதன் காப்பு (கவசம்) த்ரிஸாமா ஸாமக; ஸாம; ஆநந்தம் பரப்ரஹ்ம என்பது யோநி (கர்ப்பம்); ருதுஸ்ஸுதர்சந: கால என்பது திக்குகளை அடக்கிப் பரப்பு; (எத்திக்கிலிருந்தும் தீமை வராமல் இந்த மகாமந்திரத்தால் காப்பு); எங்கும் நிறைந்தவன் என்பது தியானம், எம்பெருமானுக்குக் கைங்கர்யமாக அவனுடைய திருநாமங்களை அநுஸந்தித்துத் தொழுதல் அதாவது ஸ்ரீமஹா விஷ்ணுவின் திருவருள் சித்திக்கும் பொருட்டு ஸஹஸ்ர நாம ஜபத்தில் இதற்குப் பயன் என்பதாம்.

(மூன்றாம் பகுதி வசனம் முற்றுப் பெறுகிறது.)

தியான சுலோகங்கள்

த்யாநம்

1. க்ஷீரோ தந்வ ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்தி காநாம்
மாலா க்லுப்தா ஸநஸ்த : ஸ்படிக மணிநிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க:
கப்ரை ரப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை:
ஆநந்தீ ந : புநீயா தரிநளிந கதா ஸங்க பாணிர் முகுந்த :

2. பூ : பாதௌ யஸ்ய நாபிர் வியத சுரநிலஸ் சந்த்ர ஸுர்யௌச நேத்ரே
கர்ணா வாஸா : ஸிரோ த்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேய மப்தி:
அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸுர நர ககோ போகி கந்தர்வ தைத்யை:
சித்ரம் ரம்ரம் யதே தம் த்ரிபுவந வபுஷம் விஷ்ணு மீஸம் நமாமி

3. ஸாந்தா காரம் புஜக ஸயநம் பத்மநாபம் சுரேஸம்
விஸ்வாதாரம் ககந ஸத்ருஸம் மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம்
வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்

4. மேக ஸ்யாமம் பீத கௌஸேய வாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத் பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரீ காய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம்

5. ஸஸங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸீரு ஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ் ஸ்தல சோபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம்

6. சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸநோ பரி
ஆஸீந மம்புதஸ் யாமம், ஆயதாக்ஷ மலங்க்ருதம்

7. சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ண மாஸ்ரயே

1. தூய்மையான இரத்தினங்களை மணல் பரப்பாக உள்ள திருப்பாற்கடல் எனப்படும் இடத்தில் முத்துமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட ஆசனத்தில் எழுந்தருளியிருப்பவரும், படிக மணிகளைப் போன்ற முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவரும், மேலே விளங்கும் வெண்மையான மேகங்கள் பலவற்றால் துளிக்கப்படும் அமுதத் திவலைகளால் மகிழ்பவரும், திருவாழி திருச்சங்கு கதை பத்மம் ஆகியவற்றைத் திருக்கைகளில் ஏந்தியவரும், மேலே உலவுகின்ற வெண்மையான மேகங்கள் பொழிகின்ற அமிர்த தாரைகளால் மகிழ்பவருமான முகுந்தன் ஸ்ரீமந் நாராயணன் நம்மைப் புனிதர் ஆக்கிக் காப்பாராக!

2. (இந்தச் சுலோகம் பெருமானுடைய பெரு வடிவத்தை வருணிக்கிறது.)

பூமி, பெருமானின் திருவடிகள், ஆகாயம் அவனது நாபி; வாயு பிராணன்; சந்திரனும் சூரியனும் திருக்கண்கள்; திக்குகள் திருச்செவிகள்; தேவலோகம் திருமுடி; அக்கினி திருமுகம்; சமுத்திரம் வயிறு; தேவர், மனிதர், பறவைகள், மிருகங்கள், நாகர், கந்தருவர், அசுரர் எனப்பலரும் உள்ள உலகங்கள் அவனுள் ஆடிக்களிக்கின்றன. மூன்று உலகங்களும் அவனது திருமேனியாக உள்ளன. அனைத்தையும் காப்பவனான இப்படிப்பட்ட விஷ்ணுவை வணங்குகிறேன்.

3. பெருமான் சாந்தமே வடிவானவர்; திருவனந்தாழ்வானாகிற திருவணை மேல் பள்ளி கொள்பவர்; நாபியில் தாமரைப்பூவை அழகாகப் பெற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்; உலகுக்கு ஆதாரமாய் இருப்பவர். ஆகாயம் போல் பரந்துள்ளவர்; மேக வண்ணர்; அனைத்து லக்ஷணங்களும் பொருந்திய திருமேனி உடையவர்; திருமகளின் உள்ளத்தைக் கவர்ந்தவர்; செந்தாமரைக் கண்ணர்; யோகத்தில் இருந்து கொண்டு தியானிக்கும் ரிஷிகளின் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவர்; பிறவிப் பிணியைப் போக்குபவர்; அனைத்துலகுக்கும் தலைவர். இத்தகைய மகா விஷ்ணுவை வணங்குகிறேன்.

4. கருமுகில் போன்ற வண்ணத்தையுடைய திருமேனியர், மஞ்சள் பட்டாடை உடுத்தியவர்; ஸ்ரீவத்சம் எனப்படும் மறுவைத் திருமார்பில் அடையாளமாகக் கொண்டவர்; கௌஸ்துப மணியால் பிரகாசிக்கும் அங்கங்களை உடையவர்; புண்ணிய புருஷர்களால் சூழப் பெற்றவர்; தாமரை போன்ற திருக்கண்களை உடையவர். எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற தலைவர். இப்படிப்பட்ட மகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.

5. சங்கும் சக்கரமும் தாங்கியவராய், முடியும் குண்டலமும் அணிந்தவராய், பொன்னாடை உடுத்தியவராய், தாமரைக் கண்ணராய், மாலை அணிந்த மார்பில் கௌஸ்துபம் ஒளி வீசுபவராய், நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன்.

6. பாரிஜாத மரத்தின் நிழலில் தங்கச் சிம்மாசனத்தில் அமர்ந்தவரும், மேக வண்ணரும், நீண்டு அகன்ற கண்களை உடையவரும், அலங்கரிக்கப்பெற்றவரும்.

7. சந்திரன் போன்ற முகத்தினரும், நான்கு திருக்கரங்களை உடையவரும், ஸ்ரீவத்ஸம் தோன்றும் திருமார்பினரும், ருக்மணி சத்யபாமை ஆகிய இருவருடனும் சேர்ந்து விளங்குபவருமாகிய ஸ்ரீகிருஷ்ணரைச் சரணடைகிறேன்.

(இந்த ஏழும் தியான சுலோகங்கள், இவை மகா பாரதத்திலும், பாஷ்யங்களிலும் இல்லை என்பர் அறிஞர்.)
(தியான ஸ்லோகங்கள் முடிவுற்றன.)

தியான முடிவில் பஞ்ச பூஜை செய்தல் நலம். அவையாவன:
1. லம் - ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி.
2. ஹம் - ஆகாஸாத்மனே புஷ்பை; பூஜையாமி.
3. யம் - வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி.
4. ரம் - அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி.
5. வம் - அம்ருதாத்மனே அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி.
ஸம் - ஸர்வாத்மனே ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி.
***********
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம்

1. ஓம் விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு:
பூத க்ருத்பூத ப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந:

1. விஸ்வம் - இது மேலான நிலையைச் (பரத்வத்தைச்) சொல்லும் திருநாமம்.
2. விஷ்ணு - எல்லாவற்றிலும் அந்தர்யாமியாகப் புகுந்திருப்பவன்.
3. வஷட்கார - எல்லாவற்றையும் தம் வசத்தில் வைத்துக் கொண்டு ஆள்பவன் - நியமிப்பவன்.
4. பூதபவ்ய பவத்ப்ரபு - முக்காலத்திலுள்ள பொருள்களுக்கெல்லாம் தலைவன்.
5. பூதக்ருத் - (தனதிச்சையாலே) எல்லாவற்றையும் படைப்பவன்.
6. பூதப்ருத் - எல்லாவற்றையும் தாங்குபவன்.
7. பாவ: எல்லாப் பொருள்களுடனும் கூடியிருப்பவன்.
8. பூதாத்மா - உலகத்துக்கு உயிராயிருப்பவன்.
9. பூதபாவந- எல்லாப் பொருள்களையும் விருத்தியடையும்படிப் பாதுகாத்து வளரச் செய்பவன்.

2. பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி :
அவ்யய : புருஷஸ் ஸாக்ஷீ ÷க்ஷத்ரஜ்ஞோ அக்ஷர ஏவ ச

10. பூதாத்மா-தூய்மையான இயல்புடையவன்.
11. பரமாத்மா- பரமபுருஷன் (மேலானவன்)
12. முக்தாநாம் பரமாகதி - முக்தி அடைந்தவர் அடையும் உயர்ந்த இடம்.
13. அவ்யய: (முக்தனைத் தன்னைவிட்டு) விலக்காதவன்.
14. புருஷ -(வேண்டியவற்றையெல்லாம்) மிகுதியாகக் கொடுப்பவன்.
15. ஸாக்ஷீ - (தன்னை அனுபவித்து மகிழும் முக்தர்களைப்) பார்த்து மகிழ்பவன்.
16. ÷க்ஷத்ரஜ்ஞ - (முக்தர்கள் தம்மை இடைவிடாமல் அநுபவிப்பதற்குத் தக்க) இடமான விபூதியை அறிந்தவன்.
17. அக்ஷர-(அநுபவிக்க அநுபவிக்க மேலும் மேலும் பெருகும் இன்ப வெள்ளம்) குறையாதவன்.

3. யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர:
நாரஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மாந் கேஸவ : புரு÷க்ஷõத்தம:

18. யோக - மோட்ச சாயுஜ்யத்துக்குத்தானே உபாயமாக இருப்பன்.
19. யோகவிதாம் நேதா - தன்னையை உபாயமாகப் பற்றாதவர்களையும், வலியச் சென்று தானே வழிகாட்டுபவன்.
20. ப்ரதாந புருஷேச்வர - பிரக்ருதியையும், ஜீவாத்மாவையும் எல்லா வகையாலும் நியமித்து நடத்துபவன்.
21. நாரஸிம்ஹவபு:- மனிதனும் சிங்கமும் கலந்த தெய்வீக உருவத்தைப் பக்தனுடைய பயத்தைப்போக்க எடுப்பவன்.
22. ஸ்ரீமாந் - அழகன். (அழகினால் பக்தர்களை மகிழச்செய்து உலகத்தைக் காப்பவன்)
23. கேசவ:- (உவமை கூற முடியாத கருமையும் மனமும் உடைய) கருங்குழலை உடையவன்.
24. புரு÷ஷாத்தம:- புருஷர்களுள் மிகவும் சிறந்தவன்.

4. ஸர்வஸ் ஸர்வஸ் சிவஸ் தாணுர் பூதாதிர் நிதி ரவ்யய:
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர:

25. ஸர்வ - எல்லாமாயிருப்பவன்.
26. சர்வ - அழிப்பவன் - (தீமையை விலக்குபவன்; மங்களம் தருபவன்.)
27. சிவ-மங்களத்தை அளிப்பவன்.
28. ஸ்தாணு - (அடியார்களுக்கு அருள்புரிவதில்) நிலையாய் இருப்பவன்.
29. பூதாதி - எல்லாவற்றாலும் விரும்பப் படுபவன்; எல்லாவற்றையும் சரீரமாக உடையவன்.
30. நிதிரவ்யய: குறைவற்ற நிதியாய் இருப்பவன்.
31. ஸம்பவ - (தேவைப்படும் போதெல்லாம்) அவதாரம் செய்பவன்.
32. பாவந: - வாழ்விப்பவன்.
33. பர்த்தா - ஆதரிப்பவன் (காப்பாற்றுபவன்)
34. ப்ரபவ: சிறப்பாகத் தோன்றுபவன். (தன்னிச்சையால் பிறப்பவன்)
35. ப்ரபு - ஸமர்த்தன். (தனது மேன்மை சிறிதும் குன்றாதவன்)
36. ஈஸ்வர:- ஆளுகின்ற ஈசன்.

5. ஸ்வயம்பூஸ் ஸம்பு ராதித்ய : புஷ்கரா÷க்ஷõ மஹாஸ்வந :
அநாதி நிதநோ தாதா விதாதா தாது ருத்தம:

37. ஸ்வயம்பு - தானே தோன்றியவன்.
38. சம்பு - பேரின்பத்தை விளைவிப்பவன்.
39. ஆதித்ய :- (சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பதால்) சூரியன்.
40. புஷ்கராஜ: தாமரைக் கண்ணன்.
41. மஹாஸ்வந: வழிபடுவதற்கு உவப்பான திருநாமத்தை உடையவன்.
42. அநாதிநிதந: ஆதியும் அந்தமும் இல்லாதவன்.
43. தாதா - படைப்பவன்.
44. விதாதா - கர்ப்பத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்பவன்.
45. தாது ருத்தம - பிரமனைக் காட்டிலும் சிறந்தவன்.

6. அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ : பத்மநாபோ அமரப்ரபு :
விஸ்வகர்மா மநுஸ் த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ :

46. அப்ரமேய: அறிவுக்கெட்டாத பெருமைகளை உடையவன்.
47. ஹ்ருஷீகேச: இந்திரியங்களை அடக்கி ஆள்பவன்.
48. பத்மநாபன்: நாபியிலிருந்து நீண்ட தண்டையுடைய தாமரைப்பூ அழகன்.
49. அமரப்ரபு : தேவர்கள் தலைவனாயிருந்து நிர்வாகம் செய்பவன்.
50. விச்வகர்மா: உலக நடைமுறைகளைத்தானே செய்பவன்.
51. மநு: மனதில் நினைத்த மாத்திரத்திலேயே உலக நியதிகளைச் செய்பவன்.
52. த்வஷ்டா: பெயர்கள், உருவ அமைப்புகள் முதலானவற்றைப் பாகுபாடு செய்பவன்.
53. ஸ்தவிஷ்ட : மிகவும் பெரியவன்.
54. ஸ்தவிர: எக்காலத்தும் நிலைத்திருப்பவன்.
55. த்ருவ : மாறாமல் நிலையாய் இருப்பவன்.

7. அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ : பிப்ரதர்தந:
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம்

56. அக்ராஹ்ய: கிரகிக்க முடியாதவன். (தானே காரணமாகவும் (கர்த்தாவாகாவும் இருப்பவன்)
57. சாச்வத: நிரந்தரமாக இருப்பவன்.
58. க்ருஷ்ண: மிகுந்த மகிழ்ச்சி உடையவன்.
59. லோஹிதாக்ஷ: செந்தாமரைக் கண்ணன்.
60. ப்ரதர்தந: (பிரளய காலங்களில் எல்லாவற்றையும் அழிப்பவன்) தன்னுள் மறைத்து வைத்திருப்பவன்.
61. ப்ரபூத: நிறைந்தவன்.
62. த்ரிககுத்தாமா: (த்ரிககுப்தாமா) - பரமபதத்தை இருப்பிடமாக உடையவன். (மூன்று முகப்புகளை உடைய வராகமாக அவதரித்தவன்)
63. பவித்ரம்: தூய்மையான வடிவினை உடையவன்.
64. மங்களம் பரம்: சிறந்த மங்களமாய் இருப்பவன்.

8. ஈஸாந : ப்ராணத : ப்ராணோ ஜ்யேஷ்ட ஸ்ரேஷ்ட : ப்ரஜாபதி :
ஹிரண்ய கர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதந :

65. ஈசாந: அடக்கி ஆள்பவன்.
66. ப்ராணத: பிராணனைக் கொடுப்பவன். (பலன் தருபவன்)
67. ப்ராண: உயிராக இருப்பவன்.
68. ஜ்யேஷ்ட: முதன்மையானவன்.
69. ச்ரேஷ்ட: மிகவும் மேன்மையுற்றவன்.
70. ப்ரஜாபதி: நித்ய சூரிகளுக்குத் தலைவன். (அமரர்கள் அதிபதி.)
71. ஹிரண்யகர்ப்ப: மிகவும் விரும்பத்தக்க பரம பதத்தில் நித்யவாசம் செய்பவன்.
72. பூகர்ப்ப: பூமிப்பிராட்டிக்கு நாயகன்.
73. மாதவ: திருமகள் கேள்வன்.
74. மதுஸூதந: மது என்னும் அரக்கனை அழித்தவன்.

9. ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம : க்ரம :
அநுத்தமோ துராதர்ஷ : க்ருதஞ : க்ருதி ராத்மவாந்

75. ஈஸ்வர: அனைத்துக்கும் தலைவன்.
76. விக்ரமீ - மிக்க வலிமையுடையவன்.
77. தந்வீ - சாரங்கம் என்னும் வில்லை உடையவன்.
78. மேதாவீ - அனைத்தும் அறிந்தவன்.
79. விக்ரம: கருட வாகனன்.
80. க்ரம: (அளவற்ற ஐஸ்வர்யங்களால்) செழிப்புற்றவன்.
81. அநுத்தம: தனக்கு மேம்பட்டவர் இல்லாதவன்.
82. துராதர்ஷ: கலக்க முடியாதவன்.
83. க்ருதஜ்ஞ : (சேதநர்களால் செய்யப்படும் புண்ணிய பாபரூபமான) செயல்கள் அனைத்தையும் அறிபவன்.
84. க்ருதி: செய்விப்பவன்.
85. ஆத்மவான் - எல்லா ஆன்மாக்களையும் தன்னுடைய ஆன்மாவாக உடையவன்.

10. சுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா : ப்ரஜாபவ :
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வ தர்ஸன:

86. ஸுரேச: பிரமாதி தேவர்களுக்குத் தலைவன்.
87. சரணம் - உபாயமாய் இருப்பவன்.
88. சர்ம - உயர்ந்த பலனாய் இருப்பவன்.
89. விச்வரேதா: அகில உலகங்களுக்கும் காரணமானவன்.
90. ப்ரஜாபவ: பிரஜைகளுக்கு இடமாயிருப்பவன்.
91. அஹ: பகல் போலத் தெளிவாக விளங்குபவன்.
92. ஸம்வத்ஸர: சேதநரிடம் நன்றாக இருப்பவன்.
93. வ்யால: தன்வசப்படுத்துபவன்.
94. ப்ரத்யய: நம்பிக்கை உண்டாக்குபவன்.
95. ஸர்வதர்சந: தனது மகிமைகளை எல்லாம் பக்தர்களுக்கு முழுமையாகக் காட்டுபவன்.

11. அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதி ரச்யுத :
வ்ருஷா கபிரமேயாத்மா ஸர்வ யோக விநிஸ்ருத :

96. அஜ: தடைகளை விலக்குபவள்.
97. ஸர்வேச்வர: (தன்னைப் பற்றியவரைத்) தானே சென்றடைபவன்.
98. ஸித்த: தேடி அலைய வேண்டாதபடித்தானே உபாயமாய் நிற்பவன்.
99. ஸித்தி: அடைய வேண்டிய பேறாக இருப்பவன்.
100. ஸர்வாதி: எல்லாப் பலன்களுக்கும் ஆதிகாரண பூதன்.

(முதல் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

101. அச்யுத: தன்னைப் பற்றியவரை நழுவ விடாதவன்.
102. வ்ருஷா கபி - தர்மமே வடிவான மகா வராக அவதாரமானவன்.
103. அமேயாத்மா - அறிய முடியாதவன்.
104. ஸர்வயோக விநிஸ்ருத: எல்லா உபாயங்களாலும் அடையத்தக்கவன்.

12. வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ் ஸம :
அமோக : புண்டரீகா÷க்ஷõ வ்ருஷகர்மா வ்ருஷா க்ருதி :

105. வஸு: சிறிது அநுகூல புத்தியுள்ளவரிடத்தும் அன்புடன் வசிப்பவன்.
106. வஸுமநா: தன்னை அடைந்தவரைப் பெருஞ் செல்வமாக நினைப்பவன்.
107. ஸத்ய: தன்னை அடைந்தவர்களுக்கு அநுகூலன்.
108. ஸமாத்மா - அடியார் எவரையும் சமமாகப் பாவிப்பவன்.
109. ஸம்மித: (அடியார்க்கு) அடங்கிய பொருளாய் இருப்பவன்.
110. ஸம - எல்லாரிடத்தும் சமமாய் இருப்பவன்.
111. அமோக: (அடியாரின்) உறவு வீண் போகாமல் காப்பவன்.
112. புண்டரீகாக்ஷ - விண்ணோர்க்குக் கண் போனவன்.
113. வ்ருஷகர்மா - நற்செயல்களைச் செய்பவன்.
114. வ்ருஷாக்ருதி - தருமமே வடிவானவன்.

13. ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வ யோநிஸ் சுசிஸ்ரவா :
அம்ருத்ஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா :

115. ருத்ர: (ஆனந்தக்) கண்ணீர் விடச் செய்பவன்.
116. பஹுசிரா: தலைவன் பலவற்றை உடையவன்.
117. பப்ரு: தாங்கி நிற்பவன்.
118. விச்வயோநி: எல்லா உலகத்தவருடன் உறவு கொண்டவன்.
119. சுசிச்ரவா: தூய சொற்களையே கேட்பவன்.
120. அம்ருத: ஆரா அமுதன்
121. சாச்வத ஸ்தாணு: என்றும் நிலைத்து நிற்பவன்.
122. வராரோஹ: அடை யத்தக்க மேலானவன் (பரமபரநாதன்)
123. மஹாதபா: எல்லையில்லாத ஞானமுடையவன். (ஞானமூர்த்தி)

14. ஸர்வகஸ் ஸர்வவித் பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந:
வேதோ வேத விதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி:

124. ஸர்வக: எல்லா உலகங்களையும் தன்னிடம் வைத்துள்ளவன்.
125. ஸர்வ வித் - எல்லாவற்றையும் அடைபவன்.
126. பாநு : விளக்கமாக இருப்பவன்.
127. விஷ்வக் ஸேந: எங்கும் எவரையும் காத்தலுக்குரிய சேனையை உடையவன்.
128. ஜநார்த்தந: பகைவர்களை அழிப்பவன்.
129. வேத: வேத சாஸ்திரங்களைத் தருபவன்.
130. வேதவித் - வேதப்பொருளை ஐயந்திரிபின்றி அறிந்தவன்.
131. அவ்யங்க - வேதாங்கங்கள் நிறைந்திருப்பவன்.
132. வேதாங்க: வேதங்களை அங்கமாக (சரீரமாக) உடையவன்.
133. வேதவித் - வேதப் பொருளான தர்மங்களை அறிந்தவன்.
134. கவி: (அனைத்தையும்) ஊடுருவிப் பார்ப்பவன்.

15. லோகாத்யக்ஷஸ் ஸுராத்ய÷க்ஷõ தர்மாத்யக்ஷ : க்ருதாக்ருத :
சதுராத்மா சதுர் வ்யூஹஸ் சதுர் தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ:

135. லோகாத்யக்ஷ: உலகங்களை நன்கு அறிந்தவன்.
136. ஸுராத்யக்ஷ - தேவர்களை நன்கு அறிந்தவன்.
137. தர்மாத்யக்ஷ: தர்மத்தை நன்கு அறிந்தவன்.
138. க்ருதாக்ருத: இகபரபலன்களை அளிப்பவன்.
139. சதுராத்மா - நான்கு வடிவங்களைத் தரிப்பவன்.
140. சதுர்வ்யூஹ: நான்கு வியூக மூர்த்திகளாக இருப்பவன்.
141. சதுர்த்தம்ஷட்ர: நான்கு முன்பற்களை உடையவன்.
142. சதுர்புஜ: நான்கு திருக்கைகளை உடையவன்.

16. ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி : புநர்வஸு

143. ப்ராஜிஷ்ணு: நான்கு திருக்கைகளுடன் கூடிய உருவத்துடன் பக்தர்களுக்குத் தன்னை ஒளிரச் செய்பவன்.
144. போஜநம் - உணவு, (அநுபவிப்பதற்குப் பொருளாய் இருப்பவன்.)
145. போக்தா - உண்பவன் (அநுபவிப்பவனாக இருப்பவன்,)
146. ஸஹிஷ்ணு: மன்னிப்பவன். (எல்லாப் பாவங்களையும் பொறுத்து அருள்பவன்.)
147. ஜகதாதிஜ: உலக ஆரம்பத்தில் இருப்பவன்.
148. அநக: குற்றமற்றவன்.
149. விஜய: வெற்றியை உடையவன் (வெற்றியை அருள்பவன்)
150. ஜேதா - வெற்றி பெறுபவன்.
151. விச்வ யோநி: உலககாரணன்.
152. புநர்வஸு: (எல்லாத் தேவர்களிடத்தும் அந்தராத்மாவாக வசிப்பவன்) வாழ்பவன்.

17. உபேந்த்ரோ வாமந: ப்ராம்சு : அமோகஸ் சுசிரூர்ஜித:
அதீந்த்ரஸ் ஸங்க்ரஹஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:

153. உபேந்த்ர: இந்திரனுக்குத் தம்பியானவன் (வாமனன்)
154. வாமனன்: ஒப்பற்ற குறள்வடிவினன் (குள்ளன்)
155. ப்ராம்சு: உயர்ந்தவன் (திரிவிக்ரமன்)
156. அமோக: பழுது படாதவன்.
157. சுசி - தூயவன் (அமலன்)
158. ஊர்ஜித: வல்லமை படைத்தவன்.
159. அதீந்த்ர: இந்திரனுக்கு மேம்பட்டவன்.
160. ஸங்க்ரஹ: எளிதில் கிரகிக்கப்படுபவன் (எளிவரும் இயல்பினன்)
161. ஸர்க - (தன்னைத் தானே பல உருவங்களில்) படைத்துக் கொள்பவன்.
162. த்ருதாத்மா-ஆன்மாக்களைத் தரித்திருப்பவன்.
163. நியம: அடக்குபவன். (அடக்கி அருள்புரிபவன்)
164. யம: (அனைத்தையும்) ஆள்பவன்.

18. வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத் ஸாஹோ மஹாபல:

165. வேத்ய: அறியக் கூடியவன். (யாவரும். அறிதற்கு எளிதானவன்)
166. வைத்ய: வித்தைகளைக் கற்றறிந்தவன், (பிறவி நோய்க்கு மருந்தை அறிந்தவன்.)
167. ஸதாயோகீ - எப்பொழுதும் விழித்தே இருப்பவன்.
168. வீரஹா - வீரர்களைக் கொல்பவன்.
169. மாதவ: வித்தைக்கு ஈசன்.
170. மது - தேனைக் காட்டிலும் இனியவன்.
171. அதீந்த்ரிய: புலன்களுக்கு அப்பாற்பட்டவன்.
172. மஹாமாய: மாயை என்னும் திரையினால், தன்னை மறைத்துக் கொள்ளும் சக்தி படைத்தவன்.
173. மஹோத்ஸாஹ: மிகவும் ஊக்கமுடையவன்.
174. மஹாபல: மிகவும் வலிமை வாய்ந்தவன்.

19. மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி:
அநிர்தேஸ்ய வபு: ஸ்ரீ மாந் அமேயாத்மா மஹா அத்ரித்ருக்

175. மஹாபுத்தி: பேரறிவாளன் (எல்லையில்லா ஞானி)
176. மஹாவீர்ய: மிகுந்த வீர்யம் உடையவன்.
177. மஹாசக்தி: மிகுந்த திறமை உடையவன்.
178. மஹாத்யுதி: மிகுந்த ஒளியுள்ளவன்.
179. அநிர்தேச்யவபு: உவமை சொல்லமுடியாத திருமேனி உடையவன்.
180. ஸ்ரீமாந்: திருமேனிக்குத் தகுந்த திருவாபரணங்களான செல்வம் படைத்தவன்.
181. அமேயாத்மா-அளவிட்டு அறியமுடியாதவன்.
182. மஹாத்ரித்ருக் - பெருமலையையும் தாங்கும் திறம் படைத்தவன்.

20. மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்பதி:
அநிருத்தஸ் சுரா நந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி:

183. மஹேஷ்வாஸ: சர மழை பொழிபவன் (வில்லாளி)
184. மஹீபர்த்தா: பூமியைத் தாங்குபவன்.
185. ஸ்ரீநிவாஸ: அலர்மேல் மங்கை உறைமார்பன்.
186. ஸதாங்கி - பக்தர்களுக்குப் புகலிடமாக உள்ளவன்.
187. அநிருத்த: ஒருவராலும் தடைசெய்ய முடியாதவன்.
188. ஸுராநந்த: அமரர்களுக்கு ஆனந்தம் அருளுபவன்.
189. கோவிந்த: தேவர்களால் துதித்தற்குரியவன் (ஏத்தும் சொல் மாலைகளைப் பெறுபவன்)
190. கோவிதாம்பதி: வேதத்தை அறிந்த ஞானிகளால் ஆராதிக்கப்படும் பகவான்.

21. மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம:
ஹிரண்ய நாபஸ் சுதபா : பத்மநாப : ப்ரஜாபதி:

191. மரீசி - கிரணமானவன் (ஒளியானவன்)
192. தமந: அடங்கச் செய்பவன்.
193. ஹம்ஸ: அன்னமாக அவதரித்தவன்.
194. ஸூபர்ண: அழகிய இறக்கைகளை உடையவன்.
195. புஜகோத்தம: திரு அனந்தாழ்வானுக்குத் தலைவன்.
196. ஹிரண்ய நாப: அழகிய நாபியை உடையவன்.
197. பத்மநாப: அழகிய தாமரையைத் தன் நாபியில் உடையவன்.
198. ஸூதபா: சிறந்த ஞான முள்ளவன்.
199. ப்ரஜாபதி: நாபித்தாமரையில் உண்டான பிரமனுக்குத் தலைவன்.

22. அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந் ஸ்திர:
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா சுராரிஹா

200. அம்ருத்யு: இறப்பில்லாதவன். (நித்ய மூர்த்தி)

(இரண்டாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

201. ஸர்வத்ருக் - அனைவரையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.
202. ஸிம்ஹ:- நரசிங்கப் பெருமான்.
203. ஸந்தாதா - பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவன்.
204. ஸந்திமாந் - தன்னைச் சேர்ந்தவரை விடாது என்றும் வைத்திருப்பவன்.
205. ஸ்திர: என்றும் நிலையாய் இருப்பவன்.
206. அஜ: பிறவாதவன். (பிறப்பில்லாதவன்)
207. துர்மர்ஷண: பகைவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒளியை உடையவன்.
208. சாஸ்தா-பகைவர்களைக் கலக்குபவன் (சாசனம் பண்ணுபவன்)
209. விச்ருதாத்மா - வியந்து கேட்கப்படும் சரித்திரம் உடையவன்.
210. ஸுராரிஹா - தேவர்களின் பகைவர்களைத் தொலைப்பவன்.

23. குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம:
நிமி÷ஷா அநிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ :

211. குருர்குருதம: பரமாசாரியன் (குருவுக்கெல்லாம் குரு)
212. தாம: உலகங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவன்.
213. ஸத்ய: அடியார்க்கு நல்லவன்.
214. ஸத்ய பராக்ரம: (வஞ்சனை அற்ற ஆற்றலுடையவன்.
215. நிமிஷ: கண்மூடி (பாகவத விரோதிகளுக்கு அருள் புரியாதவன்)
216. அநிமிஷ: கண்மூடாதவன். (கண்ணிமைக்காமல் பக்தர்களைக் காப்பவன்)
217. ஸ்ரக்வீ - மாலையணிந்தவன் (வைஜயந்தீ என்னும் மாலை அணிந்தவன்.)
218. வாசஸ்பதி - சொல்லுக்கு அதிபதி. (சொல் வல்லான்)
219. உதாரதீ - சிறந்த ஞான முடையவன்.

24. அக்ரணீர் க்ராமணீ : ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்

220. அக்ரணீ - அடியார்களை மேலும் மேலும் உயரச் செய்பவன்.
221. க்ராமணி - தலைவன்.
222. ஸ்ரீமாந் - சிறப்புடையவன்.
223. ந்யாய - நீதிமான்.
224. நேதா - கரைசேர்ப்பவன். (தின்திருவடிக் கீழ் சேர்ப்பவன்)
225. ஸமீரண: சிறந்த செயல்களைச் செய்பவன்.
226. ஸஹஸ்ரமூர்த்தா - ஆயிரம் தலைகளுடையவன்.
227. விஸ்வாத்மா - எங்கும் நிறைந்துள்ளவன்; பரவியுள்ளவன்.
228. ஸஹஸ்ராக்ஷ: ஆயிரம் கண்களை உடையவர். (விராட்ரூபி)
229. ஸஹஸ்ரபாத்: ஆயிரம் கால்களை உடையவர்.

25. ஆவர்த்தநோ நிவ்ருத் தாத்மா ஸம்வ்ருதஸ் ஸம்ப்ர மர்தந:
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீ தர:

230. ஆவர்த்தந: (உலகச் சக்கரத்தைச்) சுழலச் செய்பவன்.
231. நிவ்ருத்தாத்மா - எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன்.
232. ஸம்வ்ருத: நன்கு மறைக்கப்பட்டவன்: மறைந்துள்ளவன்.
233. ஸம்ப்ரமர்த்தந: (அஞ்ஞானமான இருளை அழித்து) உள்ளதை உள்ளபடி உணரச்செய்பவன்.
234. அஹஸ் ஸம்வர்த்தக: காலத்தை நடத்துபவன்.
235. வஹ்நி: உலகங்களைத் தாங்கிப் பரமாகாசமாக இருப்பவன்.
236. அநில:- வாழச் செய்பவன்.
237. தரணீதர:- தாங்குபவற்றையும் தாங்குபவன்.

26. சுப்ரஸாத : ப்ரஸந்நாத்மா விஸ்வத்ருக் விஸ்வபுக் விபு:
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராய்ணோ நர:

238. ஸுப்ரஸாத: மிகவும் அருள் புரிபவன்.
239. ப்ரஸந்நாத்மா - தெளிவான சிந்தை உடையவன்.
240. விச்வத்ருக் - எல்லாவற்றையும் படைப்பவன்.
241. விச்வபுக்விபு:- எங்கும் பரந்திருந்து காப்பவன்.
242. ஸத் கர்த்தா - நல்லார்களை இயல்பாகப் பாதுகாப்பவன்.
243. ஸத்க்ருத - நல்லார்களால் (சாதுக்களால்) வழிபடக்கூடியவன்.
244. ஸாது: தன்னை அண்டியவர்களுக்கு நல்லவன்.
245. ஜஹ்நு:- அடியார் அல்லாதவர்க்குத் தனது பெருமையைக் காட்டாதவன்.
246. நாராயண: நாராயணன். (எல்லா உயிர்களையும் தாங்குபவன்)
247. நர: அழியாதவன்.

27. அஸங்க்யேயோ அப்ர மேயாத்மா விஸிஷ்ட ஸ்ஸிஷ்டக்ருச் சுசி:
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்தி ஸாதந:

248. அஸங்க்யேய: எண்ணில் அடங்காதவன்.
249. அப்ரமேயாத்மா: எல்லாவற்றிலும் பரந்திருப்பவன்.
250. விசிஷ்ட:- தனிச் சிறப்புடையவன்.
251. சிஷ்டக்ருத் - (நற்குண நற்செயல்களை உடைய) சிஷ்டர்களை உயர்த்துபவன்.
252. சுசி: தூய்மையுடையவன். (தன்னியல்பான ஒளியுடையவன்)
253. ஸித்தார்த்த: எல்லாவற்றையும் உடையவன்.
254, 255. ஸித்தித:- சித்திகளை அளிப்பவன்.
256. ஸித்தி ஸாதந:- அடையும் உபாயமாக உள்ளவன்.

28. வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ரு÷ஷாதர :
வர்த்தநோ வர்த்த மாநஸ்ச விவிக்தஸ் ஸ்ருதி ஸாகர:

257. வ்ருஷாஹீ - அடையும் நாள் நல்ல நாளாக இருப்பவன்.
258. வ்ருஷப: கருணையைப் பொழிபவன்.
259. விஷ்ணு: எங்கும் பரந்திருப்பவன்.
260. வ்ருஷபர்வா - தருமமென்னும் படிகளால் அடையத்தக்கவன்.
261. வ்ரு÷ஷாதர:- தருமமே உருவான வயிற்றை உடையவன்.
262. வர்த்தந: (வழிபடுவோரை) வளர்ப்பவன்.
263. வர்த்தமாந - வளர்ச்சி அடைபவன்.
264. விவிக்த:- உலகில் யாரையும் விடத் தனிச் சிறப்புடையவன்.
265. ச்ருதி ஸாகர: வேதக்கடல் (வேத முடிவானவன்)

29. கபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸுநைக
ரூபோ ப்ருஹத் ரூபஸ் ஸிபிவிஷ்ட : ப்ரகாஸந:

266. ஸுபுஜ:- அழகிய தோள்களையுடையவன்.
267. துர்த்தர:- தடுக்க முடியாத வல்லமையுடையவன்.
268. வாக்மீ - பாராட்டும் படியான வாக்குடையவன்.
269. மஹேந்த்ர: சிறந்ததும் அழிவற்றதுமாகிய செல்வம் உடையவன்.
270. வஸுத:- தனமாகவே உள்ளவன்.
271, 272. நைகரூப:- பல உருவங்களை உடையவன்.
273. ப்ருஹத்ரூப: பெரிய உருவத்தை உடையவன்.
274. சிபிவிஷ்ட - ஒளிக்கிரணங்களிலும் வியாபித்துள்ளவன்.
275. ப்ரகாசந:- விளங்கச் செய்பவன்.

30. ஓஜஸ் தேஜோ த்யுதிதர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந:
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி:

276. ஓஜஸ் தேஜோத்யுதிதர:- வலிமை, பராக்கிரமம், ஒளி ஆகிய எல்லாம் உடையவன்.
277. ப்ரகாசாத்மா-ஒளிவடிவானவன்.
278. ப்ரதாபந: பகைவரைத் தனது கோபத்தால் எரித்துவிடுபவன்.
279. ருத்த:- சம்பத்தால் எப்போதும் நிரம்பியிருப்பவன்.
280. ஸ்பஷ்டாக்ஷர:- தெளிவாக எழுத்துகளை உச்சரிப்பவன்.
281. மந்த்ர:- மந்திரமாயிருப்பவன்.
282. சந்த்ராம் சு: வெண்மதிபோன்று குளிர்ந்த ஒளியை உடையவன்.
283. பாஸ்கரத்யுதி:- சூரியனைப்போன்ற ஒளியை உடையவன்.

31. அம்ருதாம் ஸுத்பவோ பாநு: ஸஸ பிந்துஸ் சுரேஸ்வர:
ஒளஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்ய தர்ம பராக்ரம:

284. அம்ருதாம் சூத்பவ:- அமுதமயமான கிரணங்களுடன் சந்திரனுக்குப் பிறப்பிடமாயுள்ளவன்.
285. பாநு:- சூரியன்.
286. சசபிந்து:- தீயவர்களை அழிப்பவன்.
287. ஸுரேஸ்வர:- இமையோர் தலைவன்.
288. ஒளஷதம்:- மருந்தாயிருப்பவன்.
289. ஜகத்ஸேது:- அணையாயிருப்பவன்.
290. ஸத்ய தர்மபராக்ரம:- கல்யாண குணங்களும், பராக்ரமும் என்றும் கொண்டிருப்பவன்.

32. பூதபவ்ய பவந்நாத : பவந : பாவநோ அநல:
காமஹா காம க்ருத் காந்த : காம : காம ப்ரத ப்ரபு :

291. பூதபவ்யபவந்நாத:- முக்காலங்களிலும் உள்ளவற்றுக்குத் தலைவன்.
292. பவந: சஞ்சரிப்பவன்.
293. பாவந: தூய்மை அளிப்பவன்.
294. அநல: (அருள் புரிவதில்) திருப்தி அடையாதவன்.
295. காமஹா - ஆசைகளைப் போக்குபவன்.
296. காமக்ருத் - ஆசைகளை (பக்தர்களுக்கு) வளர்ப்பவன்.
297. காந்த: விரும்பப் படுபவன்.
298. காம:- ஆசைப்படத்தகுந்தவன்.
299. காமப்ரத:- விருப்பங்களைக் கொடுப்பவன்.
300. ப்ரபு:- பிரபுவாய் இருப்பவன்.
(மூன்றாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

33. யுகாதி க்ருத் யுகா வர்த்தோ நைக மாயோ மஹாஸந:
அத்ருஸ்யோ அவ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜித நந்தஜித்

301. யுகாதிக்ருத் - யுக ஆரம்பத்தின் படைப்புக் கடவுள்.
302. யுகாவர்த்த: யுகங்களைத் திரும்பத் திரும்ப வரும்படிச் செய்பவன்.
303. நைகமாய: அநேக மாயைகளை உடையவன்.
304. மஹாசந: (உலகமுண்ட) பெருவயிற்றன்.
305. அதருசய: காணமுடியாதவன்.
306. வ்யக்த ரூப: தெளிவாகக் காணப்படும் திருமேனியை உடையவன்.
307. ஸஹஸ்ரஜித் - காலங்களை வெற்றி கொள்பவன்.
308. அநந்தஜித் - எல்லை காண முடியாத திருமேனியை உடையவன்.

34. இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட : ஸிகண்டீ நகு÷ஷா வ்ருஷ
க்ரோதஹா க்ரோத க்ருத் கர்த்தா விஸ்வ பாஹுர் மஹீதர:

309. இஷ்ட அவிசிஷ்ட: வேறுபாடு எதுவுமின்றி விரும்பப்படுபவர்.
310. சிஷ்டேஷ்ட: பெரியோரால் விரும்பப்படுபவன்.
311. சிகண்டி - சிறந்த தலையணியுடையவன்.
312. நஹுஷ: கட்டுபவன்.
313. வ்ருஷ: (எல்லா விருப்பங்களையும்) பொழிபவன்.
314. க்ரோதஹா - கோபத்தை வென்றவன்.
315. க்ரோதக்ருத் - கோபமுள்ளவன்.
316. கர்த்தா - வெட்டுபவன்.
317. விச்வபாஹு: நன்மை செய்யும் புயங்களை உடையவன்.
318. மஹீதா: பூமியைத் தாங்கி நிற்பவன்.

35. அச்யுத: ப்ரதித :ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ:
அபாந்நிதி ரதிஷ்டாந மப்ரமத்த : ப்ரதிஷ்டித :

319. அச்யுத: நழுவாதவன்.
320. ப்ரதித: புகழ்பெற்றவன்.
321. ப்ராண: உயிரானவன்.
322, 323. வாஸவாநுஜ: இந்திரனுக்குப் பின் பிறந்தவன்.
324. அபாம்நிதி: கடல்களுக்கு ஆதாரமானவன்.
325. அதிஷ்டாநம்: ஆசனமாக இருந்தவன்.
326. அப்ரமத்த: ஊக்கம் உடையவன், விழிப்புடையவன்.
327. ப்ரதிஷ்டித: நிலை பெற்றவன்.

36. ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயு வாஹந:
வாசுதேவோ ப்ருஹத் பாநு ராதிதேவ : புரந்தர:

328. ஸ்கந்த: வற்றச் செய்பவன்.
329. ஸ்கந்ததர: அசுரர்களை அழித்த தேவ சேனாதிபதியைத் தாங்குபவன்.
330. துர்ய: தாங்குபவன்.
331. வரத: வரங்களைத் தருபவன்.
332. வாயு வாஹந: வாயுவை நடத்திச் செல்பவன்.
333. வாஸுதேவ: வாசுதேவன். (எங்கும் வசிப்பவன்)
334. ப்ருஹத்பாநு: மிக்க ஒளியையுடையவன்.
335. ஆதிதேவ: ஊழி முதல்வன்.
336. புரந்தர: இருப்பிடங்களை (அசுரர்களின்) பிளப்பவன்.

37. அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸுரஸ் ஸெளரிர் ஜநேஸ்வர:
அநுகூலஸ் ஸதாவர்த்த : பத்மீ பத்ம நிபேக்ஷண:

337. அசோக: துன்பங்களை அழிப்பவன்.
338. தாரண: தாண்டுவிப்பவன்.
339. தார: காப்பவன்
340. சூர: சமர்த்தன்.
341. சௌரி: சூரனின் பிள்ளை.
342. ஜநேச்வர: பெருவெள்ளம் போன்ற செல்வம் படைத்தவன்.
343. அநுகூல: எல்லைக்குள் நிற்பவன்.
344. சதாவர்த்த: சுழல்கள் பலவற்றை உடையவன்.
345. பத்மீ - தாமரையைக் கையில் உடையவன்.
346. பத்மநிபேக்ஷண: இனிய பார்வையை உடையவன்.

38. பத்ம நாபோ அரவிந்தாக்ஷ : பத்ம கர்ப்பஸ் ஸரீரப்ருத்
மஹர்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹா÷க்ஷõ கருட த்வஜ:

347. பத்மநாப: தாமரை மலரை உந்தியில் பெற்ற தனிப்பெரும் நாயகன்.
348. அரவிந்தாக்ஷ: செந்தாமரைக் கண்ணன்.
349. பத்ம கர்ப்ப: தாமரையை ஆசனமாக உடையவன். (இதயக் கமலத்தில் எழுந்தருளியிருப்பவன்.)
350. சரீரப்ருத் - சரீரத்தைத் தாங்குபவன்.
351. மஹர்த்தி: பெருஞ்செல்வம் உடையவன்.
352. ருத்த: விருத்தியடைபவன்.
353. வ்ருத்தாத்மா - நிறைவுற்ற ஆத்ம வடிவினன்.
354. மஹாக்ஷ: சிறந்த அச்சினை உடைய வாகனமுடையவன்.
355. கருடத்வஜ: கருடக்கொடி உடையவன்.

39. அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர் ஹரி:
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ் ஜய:

356. அதுல: ஒப்பில்லாதவன்.
357. சரப: அழிப்பவன்.
358. பீம: (தன் ஆணையைக் கடப்பவருக்கு) பயங்கரன்.
359. ஸமயஜ்ஞ: காலம் அறிந்தவன்.
360. ஹவிர்ஹரி: அவியுணவை ஏற்பவன்.
361. ஸர்வலக்ஷணலக்ஷண்ய: எல்லாச் சுபலட்சணங்களும் பொருந்தியவன்.
362. லக்ஷ்மீவாந்- பூமகளின் கேள்வன்.
363. ஸமிதிஞ்ஜய: வெற்றி மகளை உடையவன்.

40. விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ:
மஹீதரோ மஹாபாகோ வேகவாந் அமிதாஸந:

364. விக்ஷர: குறைவற்றவன்
365. ரோஹித: சிவந்தவன்.
366. மார்க்க: தேடப்படுபவன்.
367. ஹேது: காரணமாயிருப்பவன்.
368. தாமோதர: உலகங்களை வயிற்றில் தாங்குபவன்.
369. ஸஹ: பொறுமையுள்ளவன்.
370. மஹீதர: பூமியைத் தாங்குபவன்.
371. மஹாபாக - மகா பாக்யமுடையவன்.
372. வேக வாந் - வேகம் உள்ளவன்.
373. அமிதாசந: பெருத்த உணவு உண்பவன்.

41. உத்பவ : ÷க்ஷõபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப : பரமேஸ்வர:
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ:

374. உத்பவ: பந்தத்தை விலக்குபவன்.
375. ÷க்ஷõபண: (படைக்குங்காலத்தில்) கலக்குபவன்.
376. தேவ: விளையாடுபவன்.
377. ஸ்ரீகர்ப்ப: திருமகளைப் பிரியாதவன்.
378. பரமேச்வர: பெரிய மேன்மையை உடையவன்.
379. கரணம்: உபாயமாயிருப்பவன்.
380. காரணம்: இயக்குபவன்.
381. கர்த்தா: செயல்படுபவன்.
382. விகர்த்தா: மாறுதல் அடைபவன்.
383. கஹந - அறிவுக் கெட்டாதவன்.
384. குஹ - காப்பாற்றுபவன்.

42. வ்யவஸாயோ வ்யவஸ் தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநதோ த்ருவ:
பரர்த்தி : பரம ஸ்பஷ்டஸ் துஷ்ட : புஷ்டஸ் சுபேக்ஷண:

385. வ்யவஸாய: விண்மீன்களுக்கு ஆதாரமாய் இருப்பவன்.
386. வ்யவஸ்தாந: காலமாறுதல்களுக்கு அடிப்படையானவன.
387. ஸம்ஸ்தாந: எல்லாவற்றையும் ஒரு கால கட்டத்தில் முடிப்பவன்.
388. ஸ்தாநத: மேலான வீட்டினை (ஸ்தானத்தை) அளிப்பவன்.
389. த்ருவ: நிலைத்திருப்பவன்.
390. பரர்த்தி: மேலான குணபூர்த்தி உள்ளவன்.
391. பரமஸ்பஷ்ட: வெளிப்படையாகக் காணும் மேன்மையுடையவன்.
392. துஷ்ட: மகிழ்ச்சி நிறைந்தவன்.
393. புஷ்ட : நிரம்பியவன்.
394. சுபேக்ஷண: மங்களமான பார்வையுடையவன்.

43. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோநய:
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம:

395. ராம: யாவரையும் மகிழச் செய்பவன்.
396. விராம: பிறரை ஓயச் செய்பவன்.
397. விரத: ஆசையை அறவே நீக்கியவன்.
398. மார்க்க: தேடப் படுபவன்.
399. நேய: கட்டளையிடப் பெறுபவன்.
400. நய: நடத்துபவன்.

(நான்காம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
401. அநய: பகைவரால் அணுக முடியாதவன்.
402. வீர: வீரத்தால் எதிரிகளை நடுங்கச்செய்பவன்.
403. சக்திமதாம் ச்ரேஷ்ட - சக்தி படைத்தவருள் சிறந்தவன்.
404. தர்ம: தருமமே வடிவானவன்.
405. தர்ம விதுத்தம: தருமம் அறிந்தவருள் முதல்வன்.

44. வைகுண்ட : புருஷ ப்ராண : ப்ராணத : ப்ரணவ :ப்ருது:
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ:

406. வைகுண்ட: தடைகளைப் போக்கித் தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்.
407. புருஷ: தூய்மை அளிப்பவன்.
408. ப்ராண: உய்விப்பவன் (உயிராயிருப்பவன்.)
409. ப்ராணத: உயிரை அளிப்பவன்.
410. ப்ரணம்: வணங்கத்தக்கவன்.
411. ப்ருது: பெரும்புகழுக்குரியவன்.
412. ஹிரண்ய கர்ப்ப: பொன்புதையலைப் போன்றவன்.
413. சத்ருக்ந: பகைவர்களை முடிப்பவன்.
414. வ்யாப்த: அன்பு, கருணை போன்றவற்றால் நிரம்பியவன்.
415. வாயு: செல்பவன் (இருக்கும் இடம் தேடி அருள் புரிபவன்)
416. அதோக்ஷஜ: அநுபவிக்க அனுபவிக்கக் குறையாதவன்.

45. ருதுஸ் சுதர்ஸந : கால : பரமேஷ்டீ பரிக்ரஹ :
உக்ரஸ் ஸம்வத்ஸரோ த÷க்ஷõ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண:

417. ரிது: அணுகுபவன்: (தானே வந்து புகுபவன்)
418. ஸுதர்சந: பார்வைக் கினியவன்.
419. கால: தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்.
420. பரமேஷ்டீ: பரமபதத்தில் உள்ளவன்.
421. பரிக்ரஹ: யாவற்றையும் தன்னுடன் சேர்த்துக் கொள்பவன்.
422. உக்ர: (பகைவர்களிடத்துக்) கோபமானவன்.
423. ஸம்வத்ஸர: பொருந்தி வாழ்பவன்.
424. தக்ஷ: விரைந்து செயல்படுபவன்.
425. வச்ராம: ஓய்வெடுக்கும் இடமாயிருப்பவன்.
426. விச்வ தக்ஷிண: எல்லார்க்கும் நல்லவன்.

46. விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு : ப்ரமாணம் பீஜமவ்யயம்
அர்த்தோ அநர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந:

427. விஸ்தார: விஸ்தார மானவன்.
428. ஸ்தாவரஸ்தாணு - ஆறியிருப்பவன். (மனச்சாந்தியுடையவன்)
429. ப்ரமாணம்: பிரமாண மானவன். (அதிகாரியாயிருப்பவன்)
430. பீஜம் அவ்யயம் - அழிவில்லாத வித்தாக இருப்பவன்.
431. அர்த்த: அடையத்தக்கதான பயனாக உள்ளவன்.
432. அநர்த்த: அற்பப் பயனாய் இருப்பவன்.
433. மஹாகோச: வைத்த மாநிதி: (ஊனமில் செல்வன்)
434. மஹா போக: இன்பங்கள் அனைத்தும் அளிப்பவன்.
435. மஹாதந: அளவற்ற பெருந்தனமாய் இருப்பவன்.

47. அநிர் விண்ணஸ் ஸ்தவிஷ்டோ பூர் தர்ம யூபோ மஹாமக:
ந க்ஷத்ர நேமிர் ந க்ஷத்ரீ க்ஷம: க்ஷõமஸ் ஸமீஹந:

436. அநிர்விண்ண: சோம்பல் இல்லாதவன்.
437. ஸ்தவிஷ்ட: பெருத்தவன் (ஸ்தூல வடிவினன்)
438. பூ: அனைத்தையும் தாங்குபவன்.
439. தர்மயூப: தர்மத்தைத் தலைமையாகக் கொண்டவன்.
440. மஹாமக: வேள்வி வடிவானவன்.
441. நக்ஷத்ர நேமி: விண்மீன்களை இயக்குபவன்.
442. நக்ஷத்ரீ: விண்மீன்களை உடையவன்.
443. க்ஷம: பொறுமையுள்ளவன்.
444. க்ஷõம: குறைந்து உள்ளவன் (நுட்பமானவன்)
445. ஸமீஹத: பிறரை இயங்கச் செய்பவன்.

48. யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாம் கதி:
ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்

446. யஜ்ஞ: யாகமாக உள்ளவன்.
447. இஜ்ய: யாகத்தால் வழி படத்தக்கவன்.
448. மஹேஜ்ய: (பிறதெய்வங்களின்) சிறந்த வழிபாட்டையும் ஏற்பவன்.
449. க்ரது: செய்யப்படும் அனைத்துக் கர்மாக்களாலும் ஆராதிக்கப்படுபவன்.
450. ஸத்ரம்: ஸ்திரரூபியானவன் (ரிஷிகளால் பல யாகங்களால் பல காலங்களில் செய்யப்படும் யாக வடிவானவன்.)
451. ஸதாம்கதி: சாதுக்களுக்கு அடையத்தக்கவன்.
452. ஸர்வதர்சீ: எல்லாவற்றையும் பார்த்து அறிபவன்.
453. நிவ்ருத்தாத்மா: எந்தப் பொருளிலும் பற்றில்லாத மனமுடையவன்.
454. ஸர்வஜ்ஞ: தானே சிறந்த தர்மம், தானே சிறந்த பயன் என்பதை அறிந்தவன்.
455. ஜ்ஞாநம் உத்தமம்: மேலான ஞானமயமானவன்.

49. சுவ்ரதஸ் சுமுகஸ் ஸூக்ஷ்மஸ் சுகோஷஸ் சுகதஸ் சுஹ்ருத் :
மநோ ஹரோ ஜித க்ரோதோ வீரபாஹுர் விதாரண:

456. ஸுவ்ரத: கர்மத்தை விடாமல் அநுஷ்டிப்பவன்.
457. ஸுமுக: மலர்ந்த திருமுகம் உடையவன்.
458. ஸுக்ஷம: மிகவும் நுட்பமானவன்.
459. ஸுகோஷ: வேதத்தின் குரலாக உள்ளவன். (வேதங்களாலும், உபநிஷதங்களாலும் ஒலிக்கப்படுபவன்.)
460. ஸுகத: மேலான இன்பமயமான பயன் தருபவன்.
461. ஸுஹ்ருத்- சிறந்த நண்பனாக இருப்பவன்.
462. மநோஹர: மனதைக் கவரக் கூடியவன்.
463. ஜிதக்ரோத: கோபத்தை வென்றவன்.
464. வீரபாஹு: மிக்க பலமுடைய கைகளையுடையவன்.
465. விதாரண: வெட்டுபவன்.

50. ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்:
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்ந கர்ப்போ தநேஸ்வர:

466. ஸ்வாபந: தூங்கச் செய்பவன். (எதிரிகளை நினைவிழக்கச் செய்பவன்.)
467. ஸ்வவச: தன் வசத்தில் எப்போதும் இருப்பவன்.
468. வ்யாபீ: எங்கும் பரந்திருப்பவன்.
469. நைகாத்மா: அநேக உருவங்களில் இருப்பவன்.
470. நைகர்மக்ருத்: அநேக செயல்களைச் செய்பவன்.
471. வத்ஸர: எல்லாப் பொருளிலும், எல்லாரிடத்தும் உள்ளுறைபவன்.
472. வத்ஸல: அன்புடையவன்.
473. வத்ஸீ: குழந்தைகளை (ஆன்மாக்களை) உடையவன்.
474. ரத்ந கர்ப்ப: (சங்கு சக்கரம்) முதலான நிதியை யுடையவன்.
475. தநேஸ்வர: ஐஸ்வர்யங்களை உடனே அளிப்பவன்.

ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்

ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்

வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

அதஸு புஷ்பஸங்காசம் ஹாரநூபுர சோபிதம்
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்த்ர நிபாநநம்
விலஸத் குண்டலதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம்
பர்ஹி பிஞ்சாவசூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீ மூத ஸந்நிபம்
யாதவானாம் சிரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ருக்மிணீ கேலிசம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம்
அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம்!
ஸ்ரீநிகேதம் மஹேஸ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வந்மாலா விராஜிதம்
சங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
கோடி ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி

கிருஷ்ண பாதம்

கிருஷ்ண பாதம்

உலகினை அளந்திட்ட பாதம்!
உயிர்களுள் இழைந்திட்ட பாதம்!
அலர்மேலு அணைத்திட்ட பாதம்!
அணைத்துயிர் பிணைத்திட்ட பாதம்!
புலர்காலை துயில் எழுப்ப
புவியுயிர் மலரிட்ட பாதம்!
மலர் மங்கை ஆண்டா ளுமே
மகிழ்வுடன் மனம் தொட்ட பாதம்!

கற்பகத் தருமலர் பாதம்!
கண்ணனின் சிறுமலர் பாதம்!
வற்றிடா அருள்மலர் பாதம்!
வண்ணனின் வளர்நிறை பாதம்!
பற்றிடும் பதமலர் பாதம்!
பார்த்தனுக் கருளிய பாதம்!
சுற்றிடும் காந்தனின் பாதம்!
சுகம் தரும் சாந்தனின் பாதம்!

தரையினிற் நடந்திட்ட பாதம்!
தமையுடன் கடந்திட்ட பாதம்!
மறையொலி உரைத்திட்டோன் பாதம்!
மனமொழி நிறைத்திட்டோன் பாதம்!
மறைமுனி அழைத்திட்ட பாதம்!
மகிழ்குரு மலைத்திட்ட பாதம்!
உரை சொல்லும் உன்னத பாதம்!
உயர்ந்திட்ட மன்னவ பாதம்!

ஆழிரேகை உயர்த்திட்ட பாதம்!
அகலிகையை உயிர்த்திட்ட பாதம்!
ஆலிலையும் அணைத்திட்ட பாதம்!
ஆயர்குலம் பிணைத்திட்ட பாதம்!
காளிங்க நர்த்தன பாதம்!
காத்தருளும் வித்தக பாதம்!
மாலெனும் உயர்ந்தவன் பாதம்!
மாதுடை கவர்ந்தவன் பாதம்!

கண்ணனாய் ஓடிய பாதம்!
கால்விரல் தேடிய பாதம்!
வண்ணமாய் மாறிய பாதம்!
வனக்குகன் நாடிய பாதம்!
மண்ணினுள் ஆடிய பாதம்!
மணிப் பொன்னும் சூடிய பாதம்!
வெண்ணுறி விரும்பியோன் பாதம்!
வெள்ளத்தை அருந்தியோன் பாதம்!

உலகினைப் படைத்தவன் பாதம்!
உயிர்களைக் காப்பவன் பாதம்!
அழகினிற் கவர்ந்தவன் பாதம்!
அனைத்திற்கும் பகிர்ந்தவன் பாதம்!
துலங்கிடம் துணைவனின் பாதம்!
துணைவரும் இறைவனின் பாதம்!
வழங்கிடும் வள்ளலின் பாதம்!
வாமன வல்லவன் பாதம்!

ஆயருடன் ஆடிய பாதம்!
ஆழ்கடல் தேடிய பாதம்!
மாயனாம் மன்னவன் பாதம்!
மயக்கிடும் என்னவன் பாதம்!
தாயென நிற்பவன் பாதம்!
தரணியின் கற்பக பாதம்!
தூயனாய் ஆள்பவன் பாதம்!
துளசியுள் வாழ்பவன் பாதம்!

அறவழி காட்டிடும் பாதம்!
அருள்நெறி ஊட்டிடும் பாதம்!
உறவென உணர்த்திடும் பாதம்!
உதவிடும் உத்தமன் பாதம்!
சுரங்களின் நாயகன் பாதம்!
சுகம் தரும் தென்றலின் பாதம்!
வரங்களை வழங்குவோன் பாதம்!
வசந்தமாய் துலங்குவோன் பாதம்!

பரமபத பனிமலர் பாதம்!
பக்தர்கள் அணிமலர் பாதம்!
கரம் தரும் கண்ணனின் பாதம்!
கலியுக மன்னனின் பாதம்!
அரசனாய் ஆள்பவன் பாதம்!
அகத்தினுள் வாழ்பவன் பாதம்!
பரம்பொருள் வேந்தனின் பாதம்!
பரவசம் ஈந்தவன் பாதம்!

பொற்கழல் அணிந்தவன் பாதம்!
பொல்கஜன் அழித்தவன் பாதம்!
வற்றிடா செல்வனின் பாதம்!
வழியுரை சொல்பவன் பாதம்!
முற்றிலா முகுந்தனின் பாதம்!
முழுமதி வதனனின் பாதம்!
ஒற்றுமை விமலனின் பாதம்!
ஒளிர்ந்திடும் நிமலனின் பாதம்!

கீதையைப் பகிர்ந்தவன் பாதம்!
கிளிமலர் குழலவன் பாதம்!
பாதையை உரைத்தவன் பாதம்!
பார்த்திப சாரதி பாதம்!
மாதுடை கொடுத்தவன் பாதம்!
மடிதுயர் தடுத்தவன் பாதம்!
பாதுகை வழங்கிய பாதம்!
பரதனும் வணங்கிய பாதம்!

கூடல் அழகரின் சுந்தர பாதம்!
மதுர வல்லியின் மனமகிழ் பாதம்!
ஆடல் மயில் சோலை அழகரின் பாதம்!
அமுத கள்ளழக காந்தனின் பாதம்!
ஈடிலா சீனிவாச வேங்கடன் பாதம்!
வெங்கடாஜலபதியின் பிரஸன்ன பாதம்!
காடு கஜனருள் காளமேக பாதம்!
மோகன வல்லியின் மோகூரான் பாதம்!

கருடவாகன ஸ்ரீ வத்ஸ பாதம்!
கமலக் கண்ணனின் ஸ்ரீஹரி பாதம்!
தருவென வரம் தரும் ஸ்ரீராமர் பாதம்!
தாமோதரனாம் ஸ்ரீதரன் பாதம்!
புரு÷ஷாத்தமனின் புண்ணிய பாதம்!
பீதாம்பரனின் வைகுந்த பாதம்!
பெரு வினை தீர்க்கும் கிருஷ்ணரின் பாதம்!
விதிதனை மாற்றும் விஸ்வரூப பாதம்!

குவலயம் முறித்திட்ட சதுர்புஜ பாதம்!
குவியலாய் வரமிடும் குருவாயூர் பாதம்!
தவமென கிடைத்திட்ட தயாபரன் பாதம்!
தானென துணைவரும் தசாவதாரன் பாதம்!
நவமணி யொளிதரும் நர்த்தன பாதம்!
நம்பினோர்க் கருளிடும் நாரண பாதம்!
உவகையின் மொழியுடை உச்சித பாதம்!
உண்மையின் தத்துவ அச்சுத பாதம்!

பிரளய வெள்ளத்தில் ஆடிய பாதம்!
பிரகலாதன் வாய் சூடிய பாதம்!
இரணியனை வதம் செய்த வீரத்தின் பாதம்!
இலையினிற் இழைந்திட்ட கோகுல பாதம்!
மரணபயம் மாய்த்திடும் மாதவன் பாதம்!
மது சூதனனின் மலரிதழ் பாதம்!
பரமதயாளனின் பத்ம நற் பாதம்!
பாண்டவ தூதனின் பூரண பாதம்!

சங்கு சக்கரனின் சகஸ்ரம பாதம்!
சத்ய நாராயணனின் திவ்ய பொற்பாதம்!
ரங்க நாதனின் சயன பொற்பாதம்!
ராதா கேசவ ராகவ பாதம்!
தங்க நான்மறை மீட்டவன் பாதம்!
மந்தார மத்தினை நிறுத்தியோன் பாதம்!
எங்கும் நிறைந்திட்ட பலராமர் பாதம்!
எண்ணிய தளத்திடும் பரசுராம பாதம்!

அழகிய மணவாளனின் ஆராவதன் பாதம்!
அப்பக் குடத்தானின் அப்பலரெங்க பாதம்!
அழகிய சிங்கரின் குந்த நாயக பாதம்!
ஆதி கேசவ சியாமளமேனியர் பாதம்!
உலகளந்த பெருமானின் திரிவிக்கிரம பாதம்!
உய்யவந்தானின் அபயப்பிரத பாதம்!
நிலாத்திங்கள் துண்டத்தான் அருமாகடற் பாதம்!
காய்சின வேந்தனின் சுந்தரர் ராஜ பாதம்!

மீனாள் உமையாள் அண்ணன் பெருமாள் பாதம்!
சித்திரரத வல்லப பவளகனிவாய் பாதம்!
தேனாய் வரமிடும் ஹரசாப விமோசனர் பாதம்!
மிதிலை வில்முறித்த சீதா மணவாளர் பாதம்!
மானான மாரீசனை வதைத்திட்ட பாதம்!
மாயச் சகடத்தினை உதைத்திட்ட பாதம்!
தேன் துயிலரங்க ரெங்கநாதர் பாதம்!
ஆண்டளக்கும் ஐயன் மணிக்குன்றன் பாதம்!

விஜயராகவ பிரகதவரத பாதம்!
வீரராகவ மரகத மதுர பாதம்!
கஜேந்திர வரத ரமாமணி நயன பாதம்!
சுகந்தவன நாத வீர சயன பாதம்!
வசந்த வல்வில் வாசுதேவ பாதம்!
வையங் காத்திட்ட புஷ்ப பூரண பாதம்!
திசை யெலாம் நிறைந்திட்ட திருநறையாண் பாதம்!
தீபப் பிரகாச யோக நரசிம்மர் பாதம்!

பக்தவச்சலனின் பரமபத பாதம்!
பத்தராவிப் பெருமாள் திவ்யப் பிரகாச பாதம்!
சக்ரதர சந்திர சூடப்பெருமாள் பாதம்!
சௌந்தர்ய ராஜனின் ஜகதீஸ்வர பாதம்!
அக்கரை வண்ண ஆதிவராஹன் பாதம்!
அம்ருத நாராயண கோலப்பிரான் பாதம்!
அகோபில நரசின் அரவிந்த லோசன பாதம்!
அனந்த பத்மநாப ஆதிகேசவ பாதம்!

திருவாழ் மார்பன் ஒப்பிலியப்ப பாதம்!
தேவாதிராஜன் செங்கண்மால் பாதம்!
திருமூழிக் களத்தான் நின்ற நம்பி பாதம்!
காட்கரையப்பன் கமலநாத பாதம்!
திருக்குறளப்பன் தேவப்பிரான் பாதம்!
யதோத்காரி கருணாகர கண்ணபிரான் பாதம்!
உரக மெல்லணையான் சௌமிய நாராயண பாதம்!
இமய வரப்பனாம் மாயப்பிரான் பாதம்!

மகர நெடுங்குழை ராஜகோபால் பாதம்!
வடிவழகி நம்பி ஜகத்ரட்சக பாதம்!
சகல நலந்தரும் சத்யகிரியான் பாதம்!
பத்ரி நாராயண பாலாஜியின் பாதம்!
பகலவ ஒளிதரும் பாம்பணையப்ப பாதம்!
விஜயாசனன சாரங்கபாணி பாதம்!
சுகநலம் அருளிடும் சாரநாதன் பாதம்!
குடமாடு கூத்தனருள் ஆமருவியப்பன் பாதம்!

பவளவண்ணனின் பரிமளரங்க பாதம்!
தோத்தாத்ரி நாதன் கல்யாண நாராயண பாதம்!
தவமென வரம் தரும் வேங்கட கிருஷ்ண பாதம்!
தர்மத்தின் வழி நின்ற தாடாளன் பாதம்!
நவமணி ஒளிதரும் லட்சுமி வராஹ பாதம்!
சயனப் பெருமாள் சாந்த நரசிம்ம பாதம்!
கவலைகள் களைந்திடும் தெய்வநாயகன் பாதம்!
வெண்சுடர்ப் பெருமாள் பேரருளாளன் பாதம்!

சத்திய மூர்த்தியின் ஜகந் நாத பாதம்!
நீலமுகில் வண்ணன் ஆதிப்பிரான் பாதம்!
நித்திரை அழகுடை பாண்டுரெங்க பாதம்!
நீர் வண்ண நாயக கள்வரின் பாதம்!
வைத்த மாநிதி வடபத்ர சாயீ பாதம்!
கோலவில்லிராமன் புண்டரீகாட்சன் பாதம்!
வித்தக பெரிய பெருமாள் சௌரிராஜ பாதம்!
சொன்ன வண்ணம் செய்த நம்பெருமாள் பாதம்!

தாமரைக் கண்ணுடையன் தேவிப் பெருமாள் பாதம்!
தானென துணைவரும் நந்தாவிளக்கு பாதம்!
தாமரையாள் கேள்வன் வேதராஜ பாதம்!
வயலாளி மணவாள கோபாலகிருஷ்ண பாதம்!
ராமஜெனகை நாராயண சலசயனர் பாதம்!
நம்பிக்கை ஒளியூட்டும் நான்மதியர் பாதம்!
வாமனனாய் உருவெடுத்த உலகளந்தோன் பாதம்!
வளங்கள் பெற வரங்கள் தரும் ஸ்ரீ வாரி பாதம்!

கருடாழ்வார் அன்பாய் சுமந்திட்ட பாதம்!
ஹனுமந்தன் நெஞ்சுள் நிறைந்திட்ட பாதம்!
நறுவாழ்வு நலமளிக்கும் நாவாய்குந்தன் பாதம்!
பெண்மையினால் அமுதுகாத்த மோகினியின் பாதம்!
தரணியெலாம் போற்றுகின்ற தாமரைக் கண்ணன் பாதம்!
தசரதனின் செல்வனான ராமசுப பாதம்!
நரசிங்க வல்லியார்க்கு நெகிழ்வு தந்து பாதம்!
நம்பிக்கை நலன் கொடுக்கும் லட்சுமிபதி பாதம்!

வசுதேவர் தேவகிக்கு தரிசனம் தந்த பாதம்!
யசோதா நந்தரிடம் கிருஷ்ணராய் வந்த பாதம்!
சிசுவதை கம்சனவன் ஆணவம் ஒழித்த பாதம்!
பூதகியை தாடகையை புவியினிலே அழித்த பாதம்!
பசுங்கன்று வற்காசுரனை விளாமரத்தில் வதைத்த பாதம்!
அகாசுரன் பகாசுரனின் ஆற்றலெலாம் சிதைத்த பாதம்!
விசுவாச நந்தரையும் இந்திரனிடம் மீட்டோன் பாதம்!
கோவர்த்தனம் பிடித்து கல்மழையில் காத்தோன் பாதம்!

கதிரோனை சக்கரத்தால் மறைத்திட்டோன் பாதம்!
பாண்டவர்க்கு ஆ(ட்)சி தந்து நிறைத்திட்டோன் பாதம்!
துதியாத துரியோதனை சாய்த்திட்டோன் பாதம்!
மதியாத துச்சாதனனை மாய்த்திட்டோன் பாதம்!
பதிவிரதை திரௌபதிக்கு துகில் கொடுத்தோன் பாதம்!
கர்ணனுக்கும் அருள் வழங்கி தாரை ஏற்றோன் பாதம்!
விதுரநீதி தழைத்திடவே விருந்துண்டோன் பாதம்!
விளையாட்டாய் அத்தனையும் ஆட்டுவிப்போன் பாதம்!

விராதனை புவியுள் அமிழ்த்திட்ட பாதம்!
ஜடாயு சபரியன்புள் அமிழ்ந்திட்ட பாதம்!
மராமர மரத்தினையே சிதைத்திட்ட பாதம்!
வாலியை போரினிலே வதைத்திட்ட பாதம்!
இராவண கர்வத்தினை வீழ்த்திட்டோன் பாதம்!
விபீடணர், சுக்ரீவரை வாழ்த்திட்டோன் பாதம்!
பராபரம் தானெனவே உணர்த்திட்ட பாதம்!
பரம்பொருள் கல்கியாக உயர்ந்திட்ட பாதம்!

நாவடி யமர்ந்தோன் நாயக பாதம்!
நலவளம் பகிர்வோன் நற்றுணை பாதம்!
மூவடி யளந்தோன் சேவடி பாதம்!
பாற்கடல் செல்வ விஷ்ணுவின் பாதம்!
கோவடி இசைந்தோன் கோவிந்த பாதம்!
கோசலை மைந்தனின் கோதண்ட பாதம்!
பாவழி நுழைந்தோன் பரந்தாம பாதம்!
திவ்யப் பிரபந்தத் தீபஒளி பாதம்!

முதலாழ்வார் மூவர் பற்றிட்ட பாதம்!
மழிசையர் மங்கையர் சுற்றிட்ட பாதம்!
பதமலர் ஆண்டாள் தொட்டிட்ட பாதம்!
பெரியாழ்வார் நம்மாழ்வார் கற்றிட்ட பாதம்!
மதுரகவி பாணாழ்வார் மகிழ்ந்திட்ட பாதம்!
குலசேகரர் பொடியாழ்வார் நெகிழ்ந்திட்ட பாதம்!
மதிமா முனியிருவர் மயங்கிட்ட பாதம்!
மகிழ்கூரர் ராமானுஜர் வியந்திட்ட பாதம்!

மூவடி யளந்தோனின் பாதத்தைப் பற்றிடுவோம்!
பரமபத வைகுந்த பேரின்பம் பெற்றிடுவோம்!
சேவடி யழகினையே செவிகுளிர உரைத்திடுவோம்!
செவ்விதழழகனையே செந்தமிழில் நனைத்திடுவோம்!
காவலாய் இருக்கும் வேந்தன் காலடியில் கற்றிடுவோம்!
கருணையினால் கவரும் கண்ணன் திருவடியை சுற்றிடுவோம்!
பூவடி நற்பாதத்தை நாவினிக்க நாமுரைக்க
புண்ணியம் கோடிதரும் பூரணன் ஹரியின் பதமே!