சனி, 9 நவம்பர், 2019

ஸ்ருதி ஸ்மருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்.

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம் அஸ்மதாசார்ய  பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர                                                    காஞ்சி சங்கர காமகோடி சங்கர.

வழக்கம் போல் இல்லாமல் தயவு செய்து முழுவதையும் படித்து பார்த்து லைக், கமட் & ஷேர் செய்யவும்.

நண்பர்கள் அனைவருக்கும் அடியேனின் பனிவான வணக்கம்... ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட நமது ஸ்ரீ காஞ்சி காமகோடி மடம் அவர் வழி வந்த ஸ்ரீமடத்தில் இதுவரை எழுபது ஆச்சார்யர்கள் நமக்கு ஜகத் குருக்களாக இன்றும் நமக்கு வழிகாட்டி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வழி வந்த நமது அறுபத்தி எட்டாவது ஆச்சார்யாள் நமது நடமாடும் தெய்வம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளால் தற்போது நடமாடிக்கொண்டிருக்கும் ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பரிபூரண அனுக்கிஹத்துடன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளால் இந்த பாரத தேசம் முழுவதும் எண்ணற்ற வேத பாடசாலைகள், பள்ளிக்கூடங்கள், சி.பி.எஸ் மற்றும் வேதிக் பாடசாலைகள், சங்கரா காலேஜ், சங்கரா மருத்துவமனை, சங்கரா கண் மருத்துவமனை இப்படி பல பல நல்ல கார்யங்களை தங்கு தடையின்றி இன்றைக்கும் வழங்கிக்கொண்டும் நம் சனாதன மதத்திற்கு இவர் ஆற்றிய தொண்டு எண்ணிலடங்கா..... இது போன்று பல நல்ல திட்டங்களை நமது சனாதன தர்மத்திற்கு பல நல்ல காரியங்களை செய்து வரும் நம் குரு நாதரை பற்றி உலகறிய செய்ய ஒரு மிகப்பெரும் முயற்சி செய்வதற்காக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை பற்றிய ஒரு குறும்படம் எடுப்பதற்காக நேற்று காலை சுமார் பன்னிரெண்டு மணிக்கு திரு. மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்கள் இல்லத்தில் முதற் கட்டமாக கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்த முதல் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ சுந்தர்ராம வாஜ்பாயே அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் பல முக்கிய தகவல்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இந்த முயற்சியில் காஞ்சி காமகோடி பக்தர்கள் பேறவை அமைப்பாளர் வலசை ஜெயராமன், மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம், சுந்தராம்பாள் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த குறும் படம் எடுப்பதற்காக மஹா பெரியவாளின் பரிபூரண அனுக்கிஹத்தை பெற்ற பாலகிருஷ்ண சாஸ்திரிகள் அவர்களின் குமாரருமான திரு. எஸ்.பி. காந்தன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள். புது பெரியவாளை  பற்றிய அற்புதங்கள் சேகரிப்பதற்காகவும், புது பெரியவாளின் மிகவும் பழமையான புகைப்படங்கள், வீடியோக்கள், புது பெரியவாளை பற்றிய தங்களுக்கு தெரிந்த அற்புதங்கள் {MIRACLES} பற்றி தெரிந்தவைகளை தயவு செய்து  தெரிவிக்கவும். மேலும் தங்களின் பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிய இது வாய்ப்பாக அமையும். நமது குரு நாதரை பற்றி தங்களுக்கு நடந்த அற்புதங்களை  நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலு‌ம் தொடர்பு கொள்ள : Mahalakshmi Subramanian Cell number : +91 - 9840053289, Mail Id vcsmani@yahoo.com; Valasai Jayaraman : +91 - 9444279696, Mail Id : valasaikjayaraman@gmail.com: Hari Haran. B, Mail Id  cvbhariharan@gmail.com, Cell Number : +91 - 9941258112, +91 - 8667398347
ஆழ்வார்களும் அவதாரமும்

6. ஆண்டாள்

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
பிறந்த காலம் : 9ம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம்
நட்சத்திரம் : ஆடி பூரம் (வளர்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
பாடிய பாடல் : 173
சிறப்பு : கரும்பார் குழல் கோதை என்ற சிறப்பு பெயர் பெற்றவள், திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள். (பூமிப்பிராட்டியாம்சம்)
பிற பெயர்கள் : கோதைப்பிராட்டி, சூடிக்கொடுத்த நாச்சியார்

ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது ஆண்டாளை எடுத்து சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து ரெங்கமன்னாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கியப்பணியாகும். மாதவனின் தோளைத் தழுவும் அந்த மாலையை அவர் மீது கொண்ட காதலால் ஆண்டாள் தம் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து அதன் பின் பெருமாளுக்கு அனுப்பி வைப்பாள். ஒரு முறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதை கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு வேறுமாலை கொண்டு வரும் படி ஆழ்வாரிடம் கூறிவிட்டனர். பகவானின் சேவையில் தவறு வந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில் அந்த மாலையை ஆண்டாள் அணிவதை கண்டார். ஆண்டாளை கண்டித்தார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள். ஸ்ரீ ரங்கப்பெருமாளை திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவையும். காதலின் வரமாக நாச்சியார் திருமொழியையும் காதலின் வீரமாக நாச்சியார் திருமொழியையும் பாடினார். தன் தந்தையிடமும் இந்த தெய்வீக திருமணம் பற்றி கூறினார். ஆழ்வாரும் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றி வந்தார். இதைக்கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் ஆண்டாள் திருமணத்தை சிறப்பாக நடந்த ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல ஆண்டாள் விருப்பப்பட்டாள். ஆண்டாள் பாதம் வலிக்குமே என்றெண்ணிய ரெங்கநாதர் அவளை தன் மார்பில் வீற்றிருக்கும்படியாக செய்தார். பங்குனி உத்திர நன்னாளில் ஆண்டாள் ரெங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது. பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.