சனி, 16 செப்டம்பர், 2023

ஸ்ரீ காஞ்சி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி குரு பரம்பரா....

26. ஸ்ரீ ப்ரஜ்ஞா கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

இருபத்தி ஆறாவது ஆச்சார்யர் [கி.பி. 548 - 564]

ஸ்ரீ ப்ரஜ்ஞா கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ''பினாகி'' நதிக்கரையில் இருந்த சிற்றூரில் பிறந்தவர். ஆந்திர அந்தண குலத்தவர். இவரது தந்தையின் பெயர் ''பிரபாகரன்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''சோணகிரி''.

இவரை பற்றிய வரலாறுகள் தெரியாமலே போனது நமது துரதிர்ஷ்டவசமாக உள்ளது. ஆனால் இவர் சந்திர மௌலீஸ்வர பூஜையும், பசுக்களை பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்...

இவர் கி.பி. 564 ஆம் ஆண்டு, சுபானு வருடம், வைகாசி மாதம், சுக்ல பக்ஷம், அஷ்டமி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 16 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.