வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

ரத ஸப்தமி அர்க்கபத்ர ஸ்நானம்

ரத ஸப்தமி அர்க்கபத்ர ஸ்நானம் 19:02:21

ஸூரிய பகவான் தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி திருப்புவதால் ரத ஸப்தமி என்று பெயர். இந்நாளில் ஏழு எருக்க இலைகள், அக்ஷதை, அருகம்புல், பசுவின் சாணம், மஞ்சள் பொடி, ஆகியவற்றை தலையில் வைத்து கிழக்கு முகமாக கீழ் கண்ட ஶ்லோகம் சொல்லி ஸ்நானம் செய்வதால் ஏழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் நீங்கும். இதற்கு அர்க்கபத்ர ஸ்நானம் என பெயர்

सप्त सप्तिप्रिये देवि सप्त लोक प्रदीपिके ।
सप्तजन्मार्जितं पापं हर सप्तमि सत्वरम् ।।
एतज्जन्म कृतं पापं कृतं सप्तसु जन्मसु ।
सर्वं शोकंच मोहंच माकरी हन्तु सप्तमी ।।
नौमि सप्तमि देवि त्वां सप्तलोकैक मातरम् ।
सप्तार्कपत्र स्नानेन मम पापं व्यपोहय ।।

ஸப்தஸப்தி ப்ரியே தேவி ஸப்தலோக ப்ரதீபிகே ।
ஸப்தஜந்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம் ।।
ஏதஜ்ஜந்ம க்ருதம் பாபம் க்ருதம் ஸப்தஸு ஜந்மஸு ।
ஸர்வம் ஶோகஞ்ச மோஹஞ்ச மாகரீ ஹந்து ஸப்தமீ ।।
நௌமி ஸப்தமி தேவித்வாம் ஸப்தலோகைக மாதரம் ।  
ஸப்தார்க்கபத்ர ஸ்நாநேந மம பாபம் வ்யபோஹய ।।

என்று ஸ்னானம் செய்து 

*रथ सप्तमि स्नानाङ्गम् अर्घ्य प्रदानम् करिष्ये* 

*ரத ஸப்தமி ஸ்நாநாங்கம் அர்க்ய ப்ரதாநம் கரிஷ்யே* 


என்று ஸங்கல்பம் செய்து கீழே உள்ள ஶ்லோகத்தால் அர்க்யம் கொடுக்கவும்.

सप्तसप्ति रथस्थान सप्तलोक प्रदीपक ।
सप्तम्या सहितो देव गृहाणार्घ्यं दिवाकर ।।
दिवाकराय नमः इदमर्घ्यं इदमर्घ्यं इदमर्घ्यं ।।
ஸப்த ஸப்தி ரதஸ்தான ஸப்த லோக ப்ரதீபக  ஸப்தம்யா ஸஹிதோ தேவ க்ரஹாணார்க்யம் திவாகர திவாகராயநம:இதமர்க்யம்
என்று தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு பகவானுக்கு அர்க்யம்விடவும்.

வியாழன், 11 பிப்ரவரி, 2021

பிராமணர்கள் அதுவும் வைதீக குடும்பத்தில் இருப்பவர்கள் மடி, ஆச்சாரம் என்று சொல்லிக் கொண்டு கண்ட இடத்திலும், இதராவாத்திலும் சாப்பிடுகிறார்கள். இதனால் இவர்களின் ஆச்சாரம், சுத்தம், சுகாதாரம் இவை அனைத்தும் போய் விட்டதே. பிறகு எப்படி இவர்களை மற்றவர்கள் மதிப்பார்கள். அடியேன் எல்லோரையும் சொல்ல வில்லை. ஒரு சிலர் அப்படி இருக்கிறார்கள். அதனால் சொன்னேன். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.



இல்லை ஜி தேவையான பதிவு தான் ஜி... அடியேன் சொந்தகாரர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அவர்களின் அக்கா குடும்பம் ரொம்ப ஆச்சாரம். அதனால் அடியேனிடம் இட்லி, தயிர் சாதம் கேட்டார்கள். அடியேனும் ஆத்துக்கு வந்து குளித்து இட்லி, தயிர் சாதம் செய்து எடுத்து கொண்டு போய் கொடுத்தேன். அதை வாங்கி கொண்டு புறப்பட்ட அவர்கள் வழியில் அந்த சாப்பாட்டை தூக்கி எறிந்து விட்டார்கள். இது நேற்று முன் தினம் தான் எனது மாமாவிடம் பேசும் போது மாமா சொன்னார். மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதற்கு அடியேனிடம் கேட்டு இருக்க வேண்டாம். ஒரு வேளை அவரிகளுக்கு பிடிக்க வில்லை என்றால் ஏதாவது ஏழைக்கு கொடுத்து இருக்கலாம். இப்படி தூக்கி எறிந்ததால் தான் இந்த பதிவே போட்டேன். மற்ற படி யாரையும் குறை கூறுவது அடியேனின் விருப்பம் இல்லை. 

புதன், 10 பிப்ரவரி, 2021

வேதம் கூறும் ஒரே ஹோமம்

வேதம் கூறும் ஒரே ஹோமம்

ஹோமங்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம், ஒன்று காம்யார்த்தமான ஹோமங்கள், அதாவது ஒரு குறிப்பிட்ட பலனை வேண்டிச் செய்வது. இரண்டாவது ப்ராயஸ்சித்த ஹோமங்கள், இங்கு நாம் சற்று விரிவாக பார்க்க போகும் கூஷ்மாண்ட ஹோமம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது என்று சொல்லாம். யாகம், ஹோமம் வித்தியாசம். யாகம் ஹோமம் இவை இரண்டும் ஒன்றல்ல, அக்னிஹோத்ர அக்னியில் செய்யப்படுவது யாகங்கள் {அஸ்வமேதம், ஸோம யாகம், வாஜபேயம் முதலியவை} யாகங்களை ஸ்ரௌத கர்மாக்கள் எனக் கூறுவர்.

ஏகாக்னியில் அதாவது ஔபாஸன அக்னியில் அல்லது லௌகீ காக்னியில் செய்யப்படும் அக்னி காரியங்கள் ஹோமங்கள் என குறிப்பிடலாம்.
ஹோமங்கள் ஸ்மார்த்த கார்மாக்கள் என அழைக்கப்படுகின்றன. பல ரிஷிகளும், மஹான்களும் தங்களது தெய்வீக த்ருஷ்டியினால் தகுந்த ப்ரயோகங்களுடன் பல ஹோமங்களை நமக்கு தொகுத்து அருளியுள்ளார்.
எந்த ஹோமமும் வேதத்தில் நேரிடையாகச் சொல்லப் படவில்லை. கூஷ்மாண்டஹோமத்தை மட்டும் தான் வேதத்தில் நேரிடையாகச் சொல்லப்பட்டுள்ளது. கூஷ்மாண்ட ஹோம விவரங்கள் யஜுர் வேதத்தில் பொக்கிஷமாக அமைந்துள்ளது. தைத்தீரிய ஆரண்யக பாகத்தில், இரண்டாவது ப்ரஸ்னத்தில் கூஷ்மாண்ட விதிமுறைகள் உள்ளன.

ஏன்? எதற்கு?

பஞ்ச மஹா பாவத்திற்கு ஸமமான பலவிதமான பாபங்களை கூஷ்மாண்ட
ஹோமத்தினால் தொலையும். சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீக்ஷிதர் அவர்கள் இது விஷயத்தில் கூறுவதை கேளுங்கள். “இந்த ஹோமத்தை உபநயனம், விவாஹம், முதலிய நல்ல கர்மாக்கள் செய்வதற்கு முன்தினம் செய்ய வேண்டும். இன்னும் எப்பொழுதாவது ஒருவன் தான் ஏதாவது பாபத்தை செய்து விட்டேனோ, அதனால் தனக்கு  சுத்தமற்ற தன்மை வந்திருக்குமோ என சந்தேகப்பட்டால் அப்பொழுது இந்த ஹோமத்தை செய்யலாம் என்று வேதம் கூறுகிறது’. பல பாபங்களை தொலைய வேண்டி பல மந்த்ரங்கள் இந்த ஹோமத்தில் காணக் கிடைக்கின்றன. என்னவெல்லாம் பாபங்கள் போகும் என நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா.? அவை இதோ

• தெய்வத்திற்கு கோபம் வரக்கூடிய தவறுகள்.
• பிழைப்புக்காக (குடும்பம் நடத்துவதற்காக) வாக்கினால் சொல்லிய பொய்கள்.
• பிறரைப் பற்றி குற்றங்கூறி (கோள் மூட்டுவது) அதனால் ஏற்படும் பாபங்கள்.
• தாயின் கர்பத்தில் நாம் வாசம் செய்த சமயத்தில் நம்மை அறியாமலேயே நாம் தாய்க்கு ஏற்படத்திய இன்னல்களுக்கும், இந்த ஹோமத்தில் ப்ராயஸ்சித்தம் கிடைக்கின்றது. அது மட்டுமல்ல தாய் தகப்பனாருக்கு தெரிந்தோ, தெரியாமலேயோ நாம் ஏற்படத்திய மனவருத்தங்கள்.
• பல ரோகங்களை அளிக்கும் பாபங்கள்.
• கெட்ட நடத்தை முதலிய செயல்களால் ஏற்பட்ட பாபங்கள்.
• அலக்ஷ்மி (ஏழ்மை) ஏற்படுவதற்காக உள்ள பாபங்கள்.
• பெரியவர்களை நீ என்று சொல்லியது, வைதிகாளை அல்லது ஆச்சார்யர்களை (குல குருமார்களை) அவமானப் படுத்தியது போன்ற பாபங்கள்.
• இப்படி ஏகபட்ட பாபங்கள் விலக வேண்டுமென இந்த ஹோமத்தில்
வேத மந்திரங்கள் மூலம் வேண்டப்படுகின்றது.

ஒருவர் கடன் வாங்கி கொண்டு கொடுக்க முடியாமல் போகும் நிலைமை ஏற்பட்டால் இந்த ஜன்மத்திலேயே நிறைய பொருள்களை அடைந்து அந்த கடனை கொடுக்கும் படியான நிலைமை அவனுக்கு ஏற்படுவதற்கு இந்த ஹோமம் வகை செய்யும். நல்ல சரீரம், நல்ல மனம் இந்த ஹோமத்தினால் அடையலாம். நமது யோக்யதையும் கூடும். கடல் கடந்து சென்று வந்தவர்களும், அந்த தோஷம் நீங்க சுத்தியாக இப்போது கூஷ்மாண்ட ஹோமத்தை அனுஷ்டித்து வருகிறார்கள். இதுவும் ஏற்புடையதே.

எப்படி செய்வது?

பலன்களை அதிகம் தரவல்ல ஹோமமாக இருந்தாலும் இதைச் செய்வது மிகவும் சுலபம். அதிக எண்ணிக்கையில் ருத்விக்குகளோ, அதிக பணமோ இல்லாமலும் செய்யலாம். குறைந்தபட்சமாக ஆசார்யனைத் தவிர ஓரிருவர் இருந்தால் போதும். ஹோம த்ரவ்யங்களின் பட்டியலும் மிக நீளமாக இல்லாமலிருக்கலாம். வசதியுள்ளவர்கள் விஸ்தாரமாகச் செய்ய வேண்டும். தானங்கள் உண்டு. அவை அவரவர்களின் சக்தியைப் பொறுத்தது.
கவனிக்க வேண்டிய விஷயம் மேலும் ஒன்று. கூஷ்மாண்ட ஹோமத்தில் பிரதான ஆஹூதிகளை தவிர ஹோம அங்கமாக பல கிரியைகள் அம்சங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக (1) தீக்ஷாநியமம், (2) முடிந்த அளவு அதிகமான எண்ணிக்கையில் காயத்ரி ஜபம் (3) ப்ராத ஸ்நானம் (4) நாந்தீ சிரார்த்தம் ஆகியவைகளில் சிரத்தை அதிகம் காண்பித்தல் அவசியம்,

மற்றுமொரு விசேஷம்

பொதுவாக எல்லா ஹோமங்களிலும் ஸங்கல்பம் ஆனதும் வாத்யார் கர்த்தாவிடமிருந்து “ ஆசார்ய வர்ணம்” பெற்றுக் கொண்டு வந்திருக்கும் மற்ற சாஸ்திரிகளின் உதவியோடு கர்த்தாவின் சார்பில் அவரே ஹோமங்களை நடத்தித் தருவார். நாம் இதை அறிந்திருப்போம். ஆனால் இந்த கூஷ்மாண்ட ஹோமத்தில் வாத்யார் சொல்ல சொல்ல கர்த்தாவே நேரிடையாக ஔபாஸன அக்னியில் தானே  செய்ய வேண்டும். மொத்தத்தில் இது ஒரு சிரேஷ்டமான வைதீக கர்மா. மேன்மேலும் துக்கங்களை அளிக்கும் பாபங்கள் இந்த கூஷ்மாண்ட ஹோமத்தினால் விலகுகின்றன. சகல மங்களங்களும் உண்டாகும் மன சாந்தி உறுதி. மேலும் விவரங்களை ஆத்து வாத்தியாரிடம்கேட்டு தெரிந்து கொண்டு செய்யவும்.

அருள் மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோவில்

அருள் மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோவில்
 
மூலவர் :  அஞ்சலி வரத ஆஞ்சநேயர்
பழமை :  500 வருடங்களுக்குள்
ஊர் :  சின்னாளபட்டி,
மாவட்டம் :  திண்டுக்கல்
மாநிலம் :  தமிழ்நாடு
 
திருவிழா:சித்திரை மாதப்பிறப்பன்று பத்தாயிரம் கனி அலங்காரம், புரட்டாசி சனிக்கிழமைகளில் முதலாவது சனியன்று ராஜ அலங்காரம் (பேண்ட், சர்ட் அணிந்த அலங்காரம்), இரண்டாவது சனியன்று செந்தூர அலங்காரம், மூன்றாவது சனியன்று பச்சை அலங்காரம், 4வது சனியன்று சஞ்சீவிமலையை தூக்கிய அலங்காரம், 5வது சனியன்று பத்மாசனத்தில் தியான அலங்காரம் ஆகியவை செய்யப்படும். தை மாதப்பிறப்பன்று 5008 கரும்பு அலங்காரத்தில் காட்சி தருவார். ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம் உண்டு. இதுதவிர ஒவ்வொரு வார சனிக்கிழமையும் விசேஷ அலங்காரம் உண்டு. ஆஞ்ச நேயருக்குரிய மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் உண்டு. இங்கு ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் வருஷாபிஷேகம் நடக்கும். அப்போது பஞ்சசூக்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அனுமசகஸ்ர நாமாவளி யாகம் ஆகியவை செய்யப்படும். தொடர்ந்து வரும் மூல நட்சத்திரத்தன்று 508 லிட்டர் பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 7 வருணாபிஷேகம் ஆகியவை நடைபெறும். அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரமும், அதையடுத்து கருடர், வராகர், நரசிம்மர், ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயராகவும் காட்சி தருவார்.   
       
தல சிறப்பு:சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தால் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 16 அடி உயரம் கொண்டவர்..   
       
திறக்கும் நேரம்:காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர், மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி- 624301. திண்டுக்கல் மாவட்டம்,போன்:+91 - 451-245 2477, 94432 26861  
      
பொது தகவல்:கோயிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்களால் எழுதப்பெற்ற 1 கோடி ராமநாமஜெபம் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சுற்றி வந்தால் சுந்தரகாண்டத்தையே பாராயணம் செய்த பலனும், ராமநாமஜெபத்தை 1 கோடி தடவை உச்சரித்த பலனும் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இத்தலத்தில் ஆஞ்சநேயர் ராஜாவாக விளங்குவதால் மகாமண்டபத்தில் அவரது பரிவாரங்களான நளன், நீளன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவந்தன், ஜிதன், ஜுவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகள் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பாகும்.கோயிலின் சுற்றுப்பகுதியில் செல்வத்தின் அதிபதி லட்சுமியும், கல்விக்கதிபதி சரஸ்வதியும் அருள்பாலிக்கிறார்கள். ராமர், சீதா, லட்சுமணர் சிலைகளும் சன்னிதானத்தில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்தக் கோயில்.
 
பிரார்த்தனை:பக்தர்கள் தாங்கள் என்ன வேண்டினாலும் இந்த அனுமான் நிறைவேற்றித்தருவதாக கூறுகிறார்கள்.

தங்களின் நியாயமான வேண்டுதல் நிறைவேற வெண்ணெய் காப்பு சாற்றுதல், பட்டு சாற்றுதல், பழ அலங்காரம் செய்தல், வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி வழிபடுதல் என வேண்டிக்கொள்கிறார்கள்.சனிப்பெயர்ச்சி காலங்களில் இவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷ பாதிப்பு குறையும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
 
நேர்த்திக்கடன்:ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.  
      
தலபெருமை:அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. ""ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்,'' என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர்.ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு.ராமநாமத்தை தவிர வேறு எதையும் அறியாத அவர் தன் னலமில்லாத வீரனாக திகழ்ந் தார். அவர் மிகச்சிறந்த ராம பக்தன். ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தவர். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தவர். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்யமுடியாத செயல்களை இவர் ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே செய்து முடித்தவர்.  சாதாரண செயல்களை செய்து விட்டு தங்களை தாங்களே தற்பெருமையாக புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் கூறியது கிடையாது. அத்துடன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொன்னதும் கிடையாது.

""நான் ராமனின் சாதாரண தூதன், அவரது பணியை செய்வதற்காகவே வந்துள் ளேன். எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும் போது நான் மரணமடைய நேரிட்டால் அதை வரவேற்கிறேன்'' என்று சொன்னவர்.வணங்குபவர் களுக்கு வணக்கம் சொல்லும் ஆண்டவனான ஆஞ்சநேயர் தமிழகத்தில் ஐந்து இடங்களில் அஞ்சலி ஹஸ்த நிலையில் விஸ்வரூபத்தில் அருள்பாலிக்கிறார். "அஞ்சலி ஹஸ்தம்' என்றால் "வணங்கிய நிலை' என்பதாகும். இதில் மிகவும் பழமையானது சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர். நாமக்கல் லில் ஒரு ஆஞ்சநேயரும், சென்னை நங்கநல்லூரில் ஒரு ஆஞ்சநேயரும், தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் 77 அடி உயரத்தில் தமிழகத்தின் மிக உயரமான ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஆனால் சின்னாளபட்டி ஆஞ்சநேயர் நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் ஆனவர் என் பது குறிப்பிடத்தக்கது."அழகான ஆஞ்சநேயர்', "சுந்தர புருஷன்' என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படும் அளவுக்கு இந்த 16 அடி உயர ஆஞ்சநேயரின் புகழ் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கிறது. ஆஞ்சநேயர்களில் கதாயுதத்துடன் இருப்பவர் இவர் ஒருவர் மட்டுமே. சமீப காலத்தில் உருவான இந்தக் கோயில், அவரது விஸ்வரூபம் போல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரைவிலேயே பிரபலமாகி விட்டது.இங்கு ஆஞ்சநேயர் அஞ்சலிஹஸ்த நிலையில் கதாயுதத்துடன் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.இவரது வலது கண் சூரியன். இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போல வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.சிவனைப்போல் ஜடாமுடி என அருள்பாலிக்கும் இவரைப் பார்த்தால் அவரும் நாமும் பேசிக் கொண்டிருப்பதுபோல் தோன்றும். இவரை வணங்கினால் ஆயுள் விருத்தி, சகல செல்வம், கல்வி ஞானம் சிறக்கும். இவரது வால் பாதத்தை நோக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட தரிசனம் காண்பவர்கள் திருமணபாக்கியம், உத்தியோகஉயர்வு, புத்திர பாக்கியம், கிரக தோஷங்களின் நிவர்த்தி, கோர்ட் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்,'' என்கிறார்.
 
தல வரலாறு:ராமாயண காலத்தில் அனுமனின் பாதம் இத்தலத்தில் பதிந்ததாகவும், அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் போது அதிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோயிலின் எதிரில் உள்ள சிறுமலை என்றும் கூறுவதுண்டு.ஒரு முறை கனகராஜ் என்பவரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, தான் இவ்விடத்தில் தியான கோலத்தில் வீற்றிருப்பதாகவும் எனவே இங்கு கோயில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். அதன்பிறகே இந்த கோயில் கட்டப்பட்டது.

பாண்டவர்கள்

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா?

பாண்டு உயிர் பிரியும் தருண‌த்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும்,அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.

பாண்டவர்களும் அவர்களது தந்நதை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.

விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார்.

சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?

யாராவது பிணத்தை தின்பார்களா?

வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.

மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.

அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்.

உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும்
சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.

கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்.

ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.

அதுமற்ற‌வர்கள்கண்களுக்கு
தெரியவில்லை.

சகாதேவனுக்கு மட்டும்
அது தெரிகிறது.

கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.

அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும்
விறகைசுமந்துவந்தார்கள்.

அவர்கள் க‌ளைப்பாவது நியாயம்.

உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.
நீ ஏன் களைத்த‌து போல‌ நடிக்கிறாய்?என்று கேட்கிறான்.

உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது.

சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க ,சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.

எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்,இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது
என்று சகாதேவனிடம்
சத்தியத்தை கிருஷ்ணர்
 வாங்கிக் கொள்கிறார்

தனக்கு முக்காலமும் முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம்
அதிகமாகிவிட்டது.

துரியோதனன்,பாண்டவர்களை
அழிப்பதற்கு ,போருக்கான
சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம்
கேட்க , சகாதேவனும் நாளைக்
குறித்துக்கொடுக்கிறான்.

அந்தளவிற்கு அவன்  ஜோதிடக்கலையில்
உண்மையாக இருந்தான்.

போரில் கர்ணன் இறக்கும்
தருவாயில்தான்,கர்ணன் தன்
உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது.

இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில்
இந்த உண்மையை தெரிந்து
கொள்ளமுடியவில்லையே
என்று ஜோதிடத்தில் நம்பிக்கை
இழக்கிறான்.

18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப்
போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா!ஜோதிடம்
என்பது பொய்தானே என்று
கேட்கிறான்.

அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே
இப்படி கூறலாமா?என்று சொல்கிறார்..

ஜோதிடத்தில் அனைவருடைய
பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன்.

ஆனால் கர்ணன் என்
உடன்பிறந்தவன்
என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.

அப்படியென்றால்
ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும்
கேள்வி எழுப்பினான் சகாதேவன்.

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாரு
பாருங்க பதில்.

அனைத்தையும் நீ ஜோதிடத்தில்
தெரிந்துகொண்டால் பிறகு
நான் எதற்கு???

இந்த பதிலைகேட்டவுடன்
சகாதேவனுக்கு
தூக்கிவாரிப்போட்டது.

அடங்கியது அவன் கர்வம்.

எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே
தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும்.

மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே!

இந்த ரகசியமானது
காஞ்சிமகா பெரியவரிடம்
இருந்து உதிர்ந்தது.

படித்ததை பகிர்ந்துள்ளேன்!

குரு

தெளிவு குரு மேனி காணல்!

தெளிவு குரு மேனி திருநாமம் செப்பல்!!

தெளிவு குரு மேனி திருவார்த்தை கேட்டல்!!!

தெளிவு குரு மேனி உரு சிந்தித்தல் தானே!!!!
--------------------------------------------------
குரு ஏவ பரபிரம்மம்! குரு ஏவ பரம்தணம்!!

குரு ஏவ காமோ! குரு ஏவ பாராயணம்!!

குரு ஏவ பரவிந்தியா! குரு ஏவ பரகதி!!
--------------------------------------------------
யஸ்மாத்தத் உபேதேஷ்டா தஸ்மாத்
குருதரோ குரு: {கார்ய  சம்ஹீதை}
--------------------------------------------------
குருவானவர் பரம்பொருளின் மரு உருவானவர்!

குருவானவர் பெருந்தக்க ஐஸ்வர்யங்களின் இருப்பிடமானவர்!!

குருவானவர் அடையத்தகுந்த விருப்பங்களின் ஊற்றானவர்!!!

குருவானவர் நம் உள்ளத்தை நல்லுரைகளால் பயன்படுத்துபவர் !!!!

குருவானவர் ஆன்மா ஈடேற உயர்ந்த தத்துவத்தை உரைப்பவர்!!!!!

குருவானவர் நமது இருதிப் புகலிடமானவர், நாம் உய்ய வேண்டியவற்றையெல்லாம் உபதேசிப்பதால் அப்பரம்பொருள் குருவுக்கெல்லாம் குருவாவர்...
--------------------------------------------------
மநோஜவம் மாருத – துல்ய – வேகம்

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |

வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்

ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி ||

அக்னி நட்க்ஷத்திரம்

அக்னிநட்சத்திரம்( மே 4  ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. 23 ம் தேதி காலை நிவர்த்தி.)

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் வரை காணப்படும் என்பதால் அந்த நாட்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய் தாக்காத வகையில் குளிர்ச்சியான பொருட்களை உண்ணவேண்டும். இதில் முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மிதமாகவும் பின் 7 நாட்கள் கடுமையாகவும், கடைசி 7 நாட்கள் உஷ்ணம் தணிந்தும் காணப்படும். இது தோஷகாலமாக கருதப்படுவதால் ஏராளமானோர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடுகின்றனர். சூரிய பகவான் சித்திரை மாதம் முதல் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். எனவே மேஷ ராசியில் உள்ள அசுவினி, பரணி, கார்த்திகை போன்ற நட்சத்திரங்கள் அதற்குண்டான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டது. சித்திரை முதல் நாளில் அசுவினியில் நுழையும் சூரியன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சார காலம் முடிந்து கார்த்திகையில் தொடங்கும் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. சந்திரனும் பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதனால் அக்னி நட்சத்திரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காரணம் என்கிறது விஞ்ஞானம். ஆனால் புராணத்தில் அதற்கு சுவையான கதை ஒன்று உண்டு.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை : கார்த்திகை நட்சத்திரத்திற்குரியவர் அக்னி பகவான். இவர் நெருப்பு ரூபமாய் காணப்படுவதால் இதனையே அக்னி நட்சத்திரம் என்கின்றனர். முன்னொரு காலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் இடை விடாது நடை பெற்ற சுவேதகி யாகத்தில் ஊற்றிய நெய்யினை உண்ட அக்னி தேவனுக்கு உடல் நலிவு ஏற்பட்டது. அதற்கு மருந்தாக காண்டவ காட்டை அழித்து உண்பதற்கு அக்னி தேவன் புறப்பாட்டார். இதனை அறிந்து காண்டவ காட்டில் வசித்து வந்த உயிரினங்களும், தாவரங்களும், தங்களை காக்க வேண்டும் என்று வருணபகவானிடம் வேண்டிக் கொண்டனர். வருணபகவானும் விடாது மழை பொழியவே அக்னியால் காட்டை எரிக்க முடியாமல் போனது. காட்டை எரிக்க தனக்கு உதவுமாறு மகாவிஷ்ணுவிடம் அக்னி தேவன் முறையிட்டதால் அவர் அர்ஜுனனை துணைக்கு அனுப்பி வைத்தார். அர்ஜுனனும் தனது அம்புகளினால் காட்டை சுற்றி அரண் எழுப்பி தீ அணையாமல் எரியுமாறு பார்த்து கொண்டார். அப்போது அக்னி தேவனுக்கு திருமால் ஒரு நிபந்தனை விதித்தார். 21 நாட்கள் மட்டுமே காண்டவ காட்டை எரிக்க வேண்டும் என்பதே அது. இதனை ஏற்று அக்னி தேவனும் 21 நாட்கள் மட்டுமே காட்டை எரித்து விட்டு கிளம்பினார். இந்த நாளே அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது என்கின்றன புராணங்கள்... இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது; நார் உரிக்கக் கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான தர்மங்கள் செய்யலாம். தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம். நோயாளிகளுக்கு இளநீர் தரலாம். உடல் ஊன முற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம். ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம். அந்தணர்களுக்கு விசிறி தானம் அளிக்கலாம். அக்னி நட்சத்திரக் கால கட்டத்தில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் பானகம் வழங்குவதும் நல்ல பலன்களைத் தரும். பரணிக்குரிய துர்க்கையையும் ரோகிணிக்குரிய பிரம்மாவையும் சந்தனாபிஷேகம் செய்து வழிபட வாழ்வில் வசந்தம் வீசும்.

அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல் நிலை பாதிக்காமலிருக்க காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம். அக்னி ரூபானை வழிபடுவோம் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அக்னி ரூபாமாய் இருக்கும் சிவ பெருமானையும் தீப்பொறியில் உதித்த முருகனையும், மீனாட்சி அம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவனுக்கும் அபிஷேகம் செய்து குளிர்விக்க வேண்டும் என்கின்றன புராணங்கள்.

சூரிய காயத்திரி: ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்தோ சூர்ய ப்ரசோதயாத்.

அமாவாசை தர்பணம்

அமாவாசை தர்பணம்*  {யஜுர்வேத ஆபஸ்தம்ப  தர்ப்பணம்}

ஆசமனம் அச்யுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ, கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதனா,  த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

பவித்ரம் {மூன்று புல்} வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ; ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி நஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விகாரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதம்யாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து பௌம வாஸர யுக்தாயாம் உத்ராஷாடா நக்ஷத்ர யுக்தாயாம், வைத்ருதி நாம யோக, பவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதம்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் ....  (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்.....ஸோமோபாராக புண்யகாலே வர்கத்வய பித்ரூன் - உத்திஶ்ய ஸோமோபாராக  ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அ_த்ய_ கரிஷ்யே

“ஆயாத பிதரக: ஸோம்யா கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” அஸ்மின் கூர்ச்சே வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய, வெங்கட்ராம, சுப்பிரம்மண்ய ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் வாதுள கோத்ரா: விஜயலக்ஷ்மி, மீனாக்ஷி சுந்தராம்பாள், முத்து லக்ஷ்மி  சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. கௌசிக கோத்ரா: ஸ்ரீராம, கோதண்ட ராம, வைத்தியநாத ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு

ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.

ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும் மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.

இடது காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி  தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து வாதுள கோத்ரான் வெங்கட்ராம ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா வாதுள கோத்ரான் சுப்பிரமணிய சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: வாதுள  கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாத்ரூ வர்க்கம்:

வாதுள கோத்ராஹா விஜயலக்ஷ்மி தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

வாதுள கோத்ராஹா மீனாட்சி சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.

வாதுள கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம் + ஹவேஷு கௌசிக கோத்ரா னு ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.2 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1  கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.2 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.3 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.1,2,3: கௌசிக கோத்ராஹா மீனாட்க்ஷி தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

2.1,2,3: கௌசிக கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

3.1,2,3: கௌசிக கோத்ராஹா வாளாம்பால் தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் வலம் : தேவதாப்பிய: ______

இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.

ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து

கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயமி.

சுந்தர ஸ்வாமிகள்

சுந்தர ஸ்வாமிகள்,கோடகநல்லூர்

1831 ஆம் வருடம் டிசம்பர் 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனுஷ நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் அமாவாசை நாளில் திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அவதரித்தார். ஸ்ரீ சுந்தர சுவாமிகள். ஸ்ரீவத்ஸ கோத்ரத்தைச் சேர்ந்த யக்ஞேஸ்வர சாஸ்திரிகள் காமாட்சி அம்மாள் தம்பதியின் 2வது மகனாகப் பிறந்தார். மூத்தவன் குப்பாணி சிவம்.

அப்பய்ய தீட்சிதரின் பரம்பரையில் அவதரித்தவர் சுந்தர ஸ்வாமிகள். இவர் பிறந்த ஒண்ணரை ஆண்டிலேயே இவரின் பெற்றோர் இறந்தனர். எனவே தாய்மாமனான வேங்கடசுப்பய்யர்தான் சுந்தரத்தை வளர்த்து வந்தார். சிறுவர்களான குப்பாணி சிவம் மற்றும் சுந்தரம் இருவரும் கல்வி பயிலுவதற்காக கங்கை கொண்டானில் இருந்து பக்தமடைக்கு இடம் பெயர்ந்தனர். சுந்தரத்துக்கு 5 வயதில் அட்ச அப்பியாசமும் ஏழு வயதில் உபநயனமும் நடைபெற்றது. பத்தடையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண கனபாடிகளிடம் வேத அத்யயனம் பயின்ற சுந்தரம். கல்விகேள்விகளில் சிறந்து விளங்கினான். இவனது திறனைக் கண்டு வியந்த ஊர்க்காரர்கள் தெய்வீகப் பிறவியப்பா சுந்தரம். இப்படியொரு புள்ள நம்ம ஊர்ல வளர்றதுக்கு நாமெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் என்று பெருமிதம் கொண்டனர்.

சிவபூஜை செய்வதில் ஈடுபாடு கொண்ட சுந்தரம் தினமும் ஒரு லட்சம் முறை பஞ்சாட்ர மந்திரத்தை ஜபித்து வந்தான். மேலும் யாகம், தவம் ஆகியவற்றிலும் கரை கண்டிருந்தான் சுந்தரம். நெல்லை மாவட்டம் அடைச்சாணி எனும் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பய்யரின் மகள் ஜானிக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது சுந்தரத்துக்கு வயது பதினாறு. தன்னுடைய மாப்பிள்ளையின் சிவபக்தியைக் கண்டு வியந்த ராமசுப்பய்யர். சிவ பூஜைக்கான நியமங்கள் சிலவற்றை அவருக்கு போதித்தார். அத்துடன் நெடுநாளாக தான் பூஜித்து வந்த பாணலிங்கம், ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் ஆகிய விக்கிரகங்களையும் வழங்கினார்.

இந்த நிலையில் அடைச்சாணியில் உள்ள விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் என்பவரிடம் மந்திர உபதேசம் பெற்ற சுந்தரம். இவரை தமது குருவாகவும் ஏற்றார். இதையடுத்து பத்தமடைக்கு திரும்பிய சுந்தரம் ஸ்வாமிகள் தன் வாழ்க்கை முறையை மாற்றலானார். கணவரின் எண்ணத்துக்கு தக்கபடி சுவாமிகளின் துணைவியார் ஜானகியும் தியாகங்கள் சிலவற்றைச் செய்தார். பின்னர் தனது குருவின் ஆணைப்படி துணைவியார் ஜானகிக்கு மந்திரங்கள் உபதேசித்து அவரை தனது முதல் சீடராக ஏற்றார். துணைவியாரின் விருப்பமும் இதுவே, இதையெடுத்து சில ஆண்டுகளில் சுவாமிகளை அறிந்த அன்பர்கள் பலர் இவருக்கு சீடர்களானார்கள்.

ஒருமுறை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கோயில்கள் தரிசிக்க யாத்திரை மேற்கொண்டார் சுவாமிகள். பயணத்தின்போது சூத சமஹிதை குறித்து உரை நிகழ்த்தினார். (சிவபக்தி, சிவபூஜை, ஆசனங்கள் அஷ்டமாஸித்தி அஷ்டமாயோகம் ஆகியவை குறித்து சூத புவராணிகர் அருளியதே சூத சம்ஹிதை) சிவபூஜை செய்தார்.

புனித பூமியாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் அன்னபூரணியை தரிசிக்க விரும்பிய சுவாமிகள் யாத்திரை புறப்பட்டார். மதுரை, திருச்சி, திருவையாறு, மாயவரம், சீர்காழி, சிதம்பரம், வேதாரண்யம், விருத்தாசலம் முதலான தலங்களை தரிசித்து அங்கு உள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கி பின்னர் காசியை அடைந்தார். கங்கையில் நீராடினார். கோயில்கள் பலவற்றையும் தரிசித்தார். காசியில் உள்ள யோகிகள் பலரிடமும் உரையாடினார். அப்போது இறை பலமும் எண்ணற்ற கலைகளும் கைவரப்பெற்ற மகா கணபதி சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. அதுவும் எப்படி?

தொடர்ந்து ஆறு மாத காலம் நீருக்கு அடியிலேயே வசிக்கும் யோகப் பயிற்சியை அறிந்த மகா கணபதி சுவாமிகளை அவர் கங்கை நதிக்குள் தவம் இருப்பதை அறிந்து தானும் அங்கு சென்று சந்தித்தார் சுந்தர ஸ்வாமிகளை இருவரும் பல அரிய தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மணிகர்ணிகா கட்ட படித்துறையில் இந்த இரண்டு துறவிகளது கல் விக்கிரகங்களை இன்றைக்கும் தரிசிக்கலாம்.

காசியிலிருந்து நெல்லைச் சீமைக்கு திரும்பிய சுந்தர ஸ்வாமிகள் பத்தமடை, கோடகநல்லூர் சுத்தமல்லி, கடையம் முதலான தலங்களுக்குச் சென்றார். (தனது குரு திருச்சமாதி அடைந்த அடைச்சாணிக்கும் சென்று தரிசித்தார்) கடையத்தில் சேஷாசல தீட்சிதர் என்பவரை சந்தித்த பின் சன்னியாசத்தைப் பெற்றார். அப்போது சுவாமிகளுக்கு வயது 21.

சுவாமிகள் ஒருமுறை சுத்தமல்லியில் தங்கி இருந்தபடி தினமும் சொற்பொழிவாற்றி செய்து வந்தார். திரளென குவிந்திருந்த பக்தர்கள் இடையே வடமொழியில் ஸ்லோகங்கள் சொல்லி அதற்கு தமிழில் விளக்கமும் அளித்தார். கட்டுக்குடுமியும் பூணூலையும் சுவாமிகள் உபந்யாசித்து வந்தபோது ஒருவர் திடீரென எழுந்து உள்ளே சென்றார். சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார்.

அவரைக் கண்டு பலரும் அதிசயித்தனர். காரணம் சுவாமிகளது தலையில் கட்டுக்குடுமி இல்லை. திருமேனியில் பூணூலும் இல்லை. சட்டென அனைத்தையும் துறந்துவிட்டு தன் உபந்யாசத்தை தொடர்ந்தார். இதன், பின்னர் சுவாமிகளின் துறவு வாழ்க்கை முழுமை அடைந்ததாகக் கருதினர் அவரது சீடர்கள்.

தனது 23 ஆம் வயதில் நெல்லை சங்கர மடத்தில் சில காலம் வசித்த சுவாமிகள் அங்கு எதிர்பார்த்த அமைதி நிலை கிடைக்கப் பெறாததால் நெல்லையை அடுத்த கோடக நல்லூரை அடைந்தார். இவர் தாமிரபரணிக் கரையோரத்தில் நெடுநெடுவென வளர்ந்திருக்கும் நாணல் மற்றும் மூங்கில் புதர்களுக்குள் சென்று எவரும் தன்னை அணுக முடியாத நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார். சில தருணங்களில் அப்படியே சமாதி நிலையை எய்தி விடுவார் சுவாமிகள். அப்போது சுவாமிகளுக்கு உணவு எடுத்து வரும் சீடர்கள் சுவாமிகளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல் உணவுடன் திரும்பிச் செல்வார்கள். ஆனால் பக்தனின் பசியை பரமன் பொறுப்பாரா? அன்ன ஆகாரம் எதுவுமின்றி சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது ஆதிசிவனே அந்தணர் வடிவில் அன்னப் பாத்திரத்துடன் தோன்றியதுடன் சுந்தர ஸ்வாமிகளுக்கு தரிசனமும் அருளியுள்ளாராம்.

கோடகநல்லூரில் உள்ள சங்கர மடத்தில் தங்கி சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார் யோகிகளுக்கே உரித்தான பரிபக்குவ நிலையை அடைவதற்கு கோடகநல்லூர் வாசம் உதவியதால் பின்னாளில் ஸ்ரீ கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் ஆனார்.

ஒரு தீபாவளி தினம். காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் உபந்யாசம் செய்தார் சுந்தர ஸ்வாமிகள். ராமச்சந்திர மேத்தா உள்ளிட்ட அடியார்கள் பலரும் திரளான பக்தர்களும் அங்கு இருந்தனர். இரவு, சாஸ்திரம் குறித்த விளக்கங்களை தெளிவுற அறிந்த சுவாமிகள் பரிசுத்தமான ஒவ்வொருவரது உள்ளங்கையிலும் அக்னி பகவான் ஆட்சி செலுத்துகிறார். எனவே நெருப்பின் தாக்கம் உள்ளங்கையில் எப்போதும் குடிகொண்டிருக்கும். ஆகவே உள்ளங்கையில் படாமல் உணவைச் சாப்பிடுவதே உத்தமம் என்றார். இதை ராமச்சந்திர மேத்தா கூர்ந்து கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரான சுப்ரமண்ய பட்டர் தெய்வ அலங்காரம் மற்றும் நைவேத்திய தயாரிப்புக்காக புஷ்பங்கள், அரிசி மற்றும் ஒரு  கொட்டாங்கச்சியில் நெருப்புத் துண்டுகள் ஆகியவற்றுடன் அங்கு வந்தார். திடீரென மழை பெய்யவே கொட்டாங்கச்சியில் இருந்த நெருப்புத் துண்டங்கள் மழையில் நனைந்து அணைந்தது. இது சுவாமிகளது திருவிளையாடல் என்பதை அப்போது எவரும் உணரவில்லை.

சுவாமிகளை வணங்கிய சுப்ரமண்ய பட்டர் பக்தர் எவரையேனும் அனுப்பி நெருப்புத் துண்டங்கள் கிடைக்க உதவும்படி வேண்டினார். உடனே சுவாமிகளும் அங்கு இருந்த ஆவுடையப்ப பிள்ளை என்பவரை அழைத்து அடுக்களைக்குச் சென்று நெருப்புத் துண்டங்களை எடுத்து வரும்படி உத்தரவிட்டார். அப்போது ராமச்சந்திர மேத்தாவுக்கு வந்தது ஒரு யோசனை. மெள்ள சுவாமிகளை நெருங்கி பூஜைக்கு தேவையான நெருப்பை தங்களது உள்ளங்கையில் இருந்து எடுத்துத் தர முடியாதா சுவாமி? என்று பவ்யமாகக் கேட்டார். அங்கு இருந்தவர்கள் அதிர்ந்தனர். சுவாமிகளையா சோதிப்பது? என்று முணுமுணுத்தனர்.

ராமச்சந்திர மேத்தாவைப் பார்த்துப் புன்னகைத்த சுவாமிகள் தாங்கள் மேலே அணிந்திருக்கும் வஸ்திரத்தைத் தாருங்கள் என்று வாங்கிக் கொண்டார். வஸ்திரத்தைத் தனது உள்ளங்கையில் பரபரவென தேய்த்தார். அவ்வளவுதான் தகித்து எழுந்தது நெருப்பு இதைக்கொண்டுபூஜைக்கு தேவையான அக்னி தயார் செய்யப்பட்டது. இதைக் கண்டு விதிர்த்துப் போன மேத்தா சுவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவரை ஆசிர்வதித்த சுவாமிகள் இது இறைவனின் விளையாடலப்பா! கலங்க வேண்டாம் என்றார்.

சிருங்கேரி ஜகத்குரு மகாசன்னிதானம் ஒருமுறை திருநெல்வேலிக்கு விஜயம் செய்திருந்தார். சுந்தர ஸ்வாமிகளைப் பற்றி அறிந்திருந்ததால் அவரை தான் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து அவருடன் பேசி மகிழ்ந்தார் சிருங்கேரி சன்னிதானம். அத்துடன் தன்னைச் சந்திக்கக்கூடி இருந்த மக்கள் இடையே சுந்தர சுவாமிகள் ஓர் அவதார புருஷர் என்று கூறி அவரது பெருமைகளை விவரித்தார்.

சுந்தர ஸ்வாமிகளது காலத்துக்குப் பிறகு வந்தவர்தான் எனினும் காஞ்சி மகா ஸ்வாமிகள் சுந்தர சுவாமிகள் குறித்து தன் பக்தர்களிடம் விவரித்துள்ளனார். அப்போது கோயில் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்து இறைப் பணியில் தங்களை பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். இந்த கைங்கர்யத்தைத் தொன்று தொட்டு செய்து வந்தாலும் சமீப காலத்தில் இவர்களை அதிக அளவில் இறைப்பணியில் ஈடுபடச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுந்தர சுவாமிகள். இவரது காலத்தில் திருமேனியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்சமும் அணியாத நாட்டுக் கோட்டை செட்டியாரைப் பார்ப்பதே அரிது. அந்த அளவுக்கு இவர்களுக்கு சிவபக்தியை புகட்டியவர் சுந்தர சுவாமிகள். இவரது உத்தரவை ஏற்று சிவன்கோயில்கள் பலவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளனார் என்று கூறி உள்ளார் காஞ்சி மகா சுவாமிகள். இந்தத் தகவல் சுந்தர சுவாமிகளது வரலாற்றுத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

செட்டி நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று உபந்யாசம் செய்யும்போது ஏகமூக ருத்ராட்சத்தின் மகிமையை எடுத்துரைப்பார் சுந்தர சுவாமிகள். இதைக்கேட்ட நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பலரும் ஏகமுக ருத்ராட்சத்தை அணியத் துவங்கினர். சுவாமிகளை குருவாக ஏற்று வணங்கி வரும் எண்ணற்ற அன்பர்கள் ஏகமுக ருத்ராட்சத்தை அணிந்திருப்பதைக் காணலாம்.

திருவையாறு பகுதியில் உள்ள ஸப்த கோயில்களுக்கு (திருவையாறு, திருச்சோற்றுத்துறை திருநெய்த்தானம், திருவேதிக்குடி, திருக்கணிகை, திருப்பழனம், திருப்பூந்துருத்தி) 1872ல் கும்பாபிஷேகம் செய்துவைத்தார் சுவாமிகள்.

வைகாசி மாதத்தில் ஒரே நாளில் நேரத்தில் ஏழு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம் என்னவெனில் எல்லா கோயில்களிலும் ஒரே நேரத்தில் அங்கு இருந்தார் சுவாமிகள். இதை அறிந்த அவரின் சீடர்களும் எண்ணற்ற பக்தர்களும் மெய்சிலிர்த்தனர்.

இந்தக் கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்த அந்தணர்கள் மதிய உணவுக்காக அமர்ந்திருந்தனர். அப்போது சயைலில் ஈடுபட்டிருந்த அன்பர் ஒருவர் ஓடிவந்து உணவில் சேர்ப்பதற்கும் அந்தணர்களுக்கு பரிமாறுவதற்கும் நெய் இன்னும் வந்தபாடில்லை என்ன செய்வது? என தவித்தபடி கேட்டார். உடனே சுவாமிகள் அவ்வளவுதானே கோயில் குளத்தில் நான்கு குடங்கள் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்றார்.

நெய் கேட்டதற்கு நீரை எடுத்து வரச் சொல்கிறாரே என்று அந்த அந்தணர் குழம்பியபடி அடி சீக்கிரமா எடுத்துட்டு வாங்க. அந்தணர்கள் பசியுடன் இருக்காங்க அவரை விரட்டினார் சுவாமிகள். உடனே அவர்கள் நான்கு குடங்களிலும் குளத்து நீரை எடுத்துவந்து சுவாமிகள் முன்னே வைத்தார்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அறியும் ஆவலுடன் அனைவரும் காத்திருந்தனர். கையில் கொஞ்சமாக திருநீரை எடுத்த சுவாமிகள் ஸ்ரீஐயாரப்பரை பிரார்த்தித்து திருநீறை நான்கு குடங்களிலும் மெள்ள தூவினார். மறுகணம் குடங்கள் அனைத்திலும் கமகமவென நெய் வாசனை அனைவரும் அதிசயித்துப் போனார்கள். இந்த நெய்தான் அன்னதானத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

இதையடுத்து சில நிமிடங்களில் நெய் எடுத்து வந்து இறங்கினார் வியாபாரி. உடனே அன்பர் ஒருவரை அழைத்த சுவாமிகள் ஒரு குடநெய்யை மட்டும் கோயில் குளத்தில் விட்டுவிடுங்கள். இறைவன் கொடுத்ததை அவனுக்குத் திருப்பித் தருவதுதான் மரியாதை என்றார். அதன்படியே குட நெய் குளத்தில் விடப்பட்டது.

இந்த திருவையாறு கும்பாபிஷேகத்தில் இன்னொரு சம்பவமும் நடந்தது. சுந்தர ஸ்வாமிகளை எப்படியேனும் அவமானப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார். சுவாமிகளுக்கு என் அன்பு காணிக்கை என்று சொல்லி பொட்டலம் ஒன்றை சுவாமிகளுக்கு முன்பு வைத்தார்.

மெள்ள புன்னகைத்த சுவாமிகள் தனது திருக்கரத்தால் அந்தப் பொட்டலத்தைத் தொட்டார். பிறகு அந்த ஆசாமியிடம் பொட்டலத்தைப் பிரிக்கும்படி கூறினார். சுவாமிகளுக்கு அவமானம் நேரப் போவதாக மகிழ்ந்த அந்த ஆசாமி பொட்டலத்தைத் திறந்தார். அதில் சுவையான பழங்கள் இருந்தது கண்டு அதிர்ந்தார். ஏனெனில் பொட்டலத்தில் வைத்திருந்தது மாமிசமாயிற்றே. தை அமாவாசையின் போது 1884 ஆம் ஆண்டு நெல்லை காந்திமதி அம்மன் கோயிலில் லட்சதீபம் ஏற்றுதல், பொதிகை மலை தரிசனம், குறுக்குத்துறை முருகப் பெருமானின் கோயில் விஜயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார் சுவாமிகள். இதையடுத்து புதுக்கோட்டை ஓட்டுத் திண்ணை பரதேசி சுவாமிகளது விருப்பத்துக்கு இணங்க புதுகைக்குச் சென்றார் சுவாமிகள்.

அப்போதுதான் அந்தணர் அல்லாதோருக்கும் பெண்களுக்கும் முறைப்படி தீட்சை வழங்கினார். இங்கு தங்கியிருந்த வேளையில் அரிமளம் சிவராமன் செட்டியார் மற்றும் புதுவயல் அழகப்பா செட்டியார் ஆகிய பக்தர்கள் இருவரும் சுவாமிகளைப் பெரிதும் கவர்ந்தனர்.

இதையடுத்து பல தலங்களுக்கும் சென்றவர் மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சென்றபோது அரிமளம் சிவராமன் செட்டியார் உட்பட பக்தர்கள் பலரும் உடன் சென்றனர். ரெட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்தவர்கள் திருமயத்தை அடைந்தபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது.

எதிரே சாலையில் நின்றபடி வண்டியை புதுக்கோட்டைக்குத் திருப்பு என்று சொல்லி மறைந்தார் சுந்தர ஸ்வாமிகள். வண்டிக்காரனுக்கோ குழப்பம், என்னடா இது? வண்டியில் அசந்து தூங்கிக்கிட்டிருந்த சாமீ திடீர்னு கீழே இறங்கி புதுக்கோட்டைக்குத் திருப்பச் சொல்றாரு என்று. பிறகு வண்டியைத் திருப்பி மீண்டும் புதுக்கோட்டை நோக்கிச் செலுத்தினான். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட சுவாமிகள் இப்ப நாம எங்கேப்பா இருக்கோம் என்று கேட்க, புதுக்கோட்டையை நெருங்கிவிட்டு இருக்கோம். சாமீ என்று பதில் சொன்னான் வண்டிக்காரன். சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னது புதுக்கோட்டைக்கா? ராமேஸ்வரம் போகலையா? என்று கேட்டார். உடனே வண்டிக்காரன் என்ன சாமீ. நீங்கதானே வண்டிக்கு எதிரில் நின்னு புதுக்கோட்டைக்கே போடானு சொன்னீங்க? என்றான். ஆச்சரியப்பட்ட சுவாமிகள் வண்டியிலேருந்து நான் இறங்கவே இல்லியேப்பா என்று உறுதிபட தெரிவித்தார்.

பின்னர் திருமயத்தில் வண்டி எந்த இடத்தில் புதுகைக்குத் திரும்பியதோ அந்த இடத்துக்கு வெகு அருகில் பெரும் புயல் வீசியது. மரங்கள் விழுந்து வீடுகள் சரிந்து சாலையில் சென்ற வண்டிகள் அனைத்தும் நிலை தடுமாறி கவிழ்ந்துவிட்டன. ஆடுமாடுகள் கூட நாசமாகி விட்டன. மறுநாள் விடிந்ததும் இந்த தகவல் தெரிந்தது. அப்போதுதான் சுவாமிகளது உருவத்தில் வந்து இறைவனே தங்களை காப்பாற்றி உள்ளான் எனும் உண்மையை அறிந்து அனைவரும் சிலிர்த்தனர். பின்னர் சுவாமிகளை அரிமளத்துக்கு அழைத்துச் சென்ற சிவராமன் செட்டியார் சிவன்கோயிலுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான சத்திரம் முதலான பணிகளை செய்து முடித்தார். மதுரையில் உள்ள விபூதி மடத்தில் பக்தர்கள் மற்றும் சிஷ்யர்களுடன் சில நாட்கள் தங்கினார் சுவாமிகள். இவரின் சீடரான நாராயணசிவம் என்பவர் தண்ணீரில் அமர்நது யோக நிஷ்டை இருப்பதில் தேர்ந்தவர். எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு வந்து நீரின் மேல் யோகநிஷ்டையில் இருந்தார். நாராயணசிவம். இதைக்கண்ட அன்பர்கள் பலரும் அவரது யோக முறையை வியந்து அதிசயித்தனர். அதுவரை குளத்து நீரில் அமர்ந்தபடி யோகத்தில் இருந்த நாராயணசிவம் திடீரென மெள்ள மெள்ள நீருக்குள் மூழ்கினார். கரையில் நின்றவர்களுக்கு இவரது உடல் தெரியவே இல்லை. அங்கு இருந்த சுவாமிகளின் பக்தரான சுப்ரமண்ய குருக்கள் என்பவர் உடனே காவல்நிலையத்துக்கு ஓடோடிச் சென்று பொற்றாமரைக் குளத்துக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர். இரண்டு நாளாகியும் உடல் கிடைக்கவே இல்லை.

மூன்றாம் நாள், அங்கு வந்தார் சுந்தர சுவாமிகள். நாராயண சிவத்தின் உடலை எப்படியேனும் தென்கரையிலுள்ள விபூதி விநாயகர் சிலைக்கு அருகே கொண்டு வந்து வைத்துவிடுங்கள் என்று காவல்துறையினரிடம் தெரிவித்தார் சுவாமிகள்.

இறந்த நாராயண சிவத்தை உயிர்ப்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் சுவாமிகள் என்பதை அறிந்து கொண்ட போலீசாரும் கோயில் ஊழியர்களும் சுவாமிகளை கேலி செய்தனர். தண்ணீரில் இறந்து மூணு நாளாச்சு. உடலையே இன்னும் கண்டுபிடிக்க முடியலை. இவர் உயிர்ப்பிக்க போறாராமா! என்று கிண்டல் செய்தனர். இருப்பினும் நடப்பதைத்தான் பார்ப்போம் என்று குளத்தில் இறங்கி தேட எத்தனித்தர். அப்போது திடீரென நீரில் உடல் மிதந்தது. அனைவரும் அதிர்ந்து போனார்கள். பின்னர் நாராயண சிவத்தின் உடலை விபூதி விநாயகர் சன்னிதிக்கு அருகே கொண்டு வந்து கிடந்தனர்.

சுவாமிகளை இறைவனை பிரார்த்தித்து நாராயண சிவத்தின் உடல் முழுவதும் திருநீறை அள்ளி பூசினார். சடலத்தின் வலது காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மெள்ள தடவி கொடுத்தார். அவ்வளவுதான், மூன்று நாட்கள் சடலமாகக் கிடந்த நாராயண சிவம் உயரித்தெழுந்தார். பின்னர் சுவாமிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். சுவாமிகளின் அற்புதத்தை அறிந்து அங்கு இருந்தவர்கள் அவரை வணங்கினார்கள்.

இதையடுத்து மதுரையில் இருந்து திருச்சி, திருவையாறு, தஞ்சை, சென்னை முதலிய தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்த சுவாமிகள் பின்னர் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதர் கோயிலின் கும்பாபிஷேகத்தை 1873 ஆம் ஆண்டு நடத்திக் கொடுத்தார்.

தம் வாழ்நாளில் 22 கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்திருக்கிறார் சுவாமிகள். அவர் நடத்திய முதல் கும்பாபிஷேகம் தான் ஸித்தி அடைந்த அரிமளத்தில் உள்ள கோயில். இறுதியில் நடத்திய கும்பாபிஷேகம் இவர் அவதரித்த கங்கைகொண்டானில் உள்ள கோயில்.

தான் சமாதி அடையும் நாள் நெருங்கி விட்டதை தமது சீடர்களிடம் தெரிவித்தார். சுந்தர ஸ்வாமிகள் அதன்படி 1878 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (ஐப்பசி 6) கிருஷ்ண பட்ச தசமி அன்று ஸித்தி அடைந்தார். அரிமளம் சிவராமன் செட்டியாரும் மற்ற சீடர்களும் சுவாமிகளது இறுதி காரியங்களை செய்து முடித்து சுவாமிகளது சமாதியின் மேல் அவர் பூஜித்து வழிபட்ட பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர்.

*அரிமளத்தில் உள்ள ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் அதிஷ்டானம்

இந்து சமய அறநிலையை ஆட்சித் துறைக்கு உட்பட்ட பொன்னமராவதி கொன்னையூர் முத்துமாரி அம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த அதிஷ்டானம்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தேனிப்பட்டி மற்றும் ஏம்பல் செல்லும் பேருந்துகள் அரிமளம் வழியாகச் செல்லும். தவிர அரிமளத்துக்கு நகரப் பேருந்து வசதியும் உள்ளது. அரிமளம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்தால் சுவாமிகளின் அதிஷ்டானத்தை அடையலாம். முகப்பில் ஒரு இரும்பு கேட். உள்ளே நுழைந்தால் நந்தவனம். கருவறை, உள்பிராகாரம், அர்த்தமண்டபம், வெளிப்பிரகாரம் என முழுவதும் கருங்கல் திருப்பணியாய் அமைந்து விஸ்தாராமாகவும் உள்ளது. கருவறையில் சுவாமிகளின் அதிஷ்டானம். சிலா வடிவில் உள்ள ஆவுடையாரின் மேல் சுவாமிகள் வழிபட்ட பாணலிங்கத்தை தரிசிக்கிறோம். இங்கு விபூதி அபிஷேகம் அடிக்கடி நடைபெறும். அதிஷ்டானத்தில் விநாயகர், பின்பக்க கோஷ்டத்தில் லிங்கோத்பவர், வெளியே நாகர் ஆகிய சன்னிதிகளும் உண்டு.

தினமும் காலையில் சுமார் எட்டரை மணியளவில் அபிஷேகம் நடைபெறும். தவிர பவுர்ணமி அன்று மாலை 4 மணிக்கும் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு மற்றும் தேய்பிறை தசமி ஆகிய நாட்களில் பகல் 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி அன்று (பூச நட்சத்திரம்) குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அன்று மாலை சுவாமிகளின் உற்ஸவர் விக்கிரகம் வீதியுலா வரும். சுந்தர ஸ்வாமிகள் இங்கு இருந்தபடி உலகமெங்கும் உள்ள பக்தர்களை இன்றைக்கும் காத்து வருகிறார் என்பது நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் மட்டுமின்றி ஏனைய பக்தர்களது நம்பிக்கை.

தகவல் பலகை

தலம்    : அரிமளம்

சிறப்பு    : ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அதிஷ்டானம்.

எங்கே இருக்கிறது?: புதுக்கோட்டையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமளம். அறந்தாங்கி மற்றும் திருமயத்தில் இருந்தும் சுமார் 22 கி.மீ. தொலைவு.

எப்படிப் போவது?: புதுக்கோட்டையில் இருந்து 22, 27, 27ஏ மற்றும் ஜான்ஸி ஆகிய பேருந்துகளும் அறந்தாங்கியிலிருந்து 6, லதா, எஸ்.எம்.ஆர். ரங்கநாதன், பி.எல்.ஏ ஆகிய பேருந்துகளும் திருமயத்தில் இருந்து 9டி மற்றும் ராஜா ஆகிய பேருந்துகளும் அரிமளம் செல்கின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 12.00 மாலை 4.00 - 7.30

விகாரி வருஷம்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2020 - அன்றைய தினம் திங்கட்கிழமையும் - கிருஷ்ண பக்ஷ சஷ்டியும் - மூலா நக்ஷத்ரமும் - பரிக நாமயோகமும் - வணிஜை கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி மாலை மணி 7.36க்கு (உதயாதி நாழிகை: 33.39)க்கு துலா லக்னத்தில் ஸ்ரீசார்வரி வருஷம் பிறக்கிறது.

கிரக பாதசார விபரங்கள்: லக்னம் - ஸ்வாதி 4ம் பாதம் - ராகு சாரம் சூர்யன் - அசுபதி 1ம் பாதம் - கேது சாரம் சந்திரன் - மூலம் 4ம் பாதம் - கேது சாரம் செவ்வாய் - திருவோணம் 2ம் பாதம் - சந்திரன் சாரம் புதன் - ரேவதி 2ம் பாதம் - புதன் சாரம் குரு - உத்திராடம் 2ம் பாதம் - சூரியன் சாரம் - அதிசாரம் சுக்ரன் - ரோகினி 2ம் பாதம் - சந்திரன் சாரம் சனி - உத்திராடம் 1ம் பாதம் - சூரியன் சாரம் ராகு - திருவாதிரை 1ம் பாதம் - ராகு சாரம் கேது - மூலம் 3ம் பாதம் - கேது சாரம்

கேது தசை இருப்பு: 01 வருஷம் - 04 மாதம் - 20 நாள் சார்வரி வருஷத்தின் நவநாயகர்கள்: ராஜா - புதன் மந்திரி - சந்திரன் அர்க்காதிபதி - சந்திரன் மேகாதிபதி - சந்திரன் ஸஸ்யாதிபதி - குரு சேனாதிபதி - சந்திரன் இரஸாதிபதி - சனி தான்யாதிபதி - புதன் நீரஸாதிபதி - குரு பசுநாயகர் - கோபாலன்

சார்வரி வருஷ வெண்பா: சார்வரி யாண்டதனிற் சாதிபதி னெட்டுமே தீரம றுநோயற் றிரிவார்கள் - மாரியில்லை பூமி விளைவில்லாமற் புத்திரரு மற்றவரும் ஏம மின்றிச் சாவா ரியல்பு. - இடைக்காடர் வாக்கு

பொது பலன்கள்: இந்த சார்வரி ஆண்டை பொறுத்தவரை மிதமான மழை பெய்யும். மத்திய அரசின் நிலையான ஆட்சி அமையும். முக்கிய தலைவர்களுக்கு பல புதிய பதவி உயர்வுகளும் ஏற்படும். மாநில அரசுகளில் உட்பூசல்கள் சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த ஆண்டு 9 புயல்கள் உருவாகி அதில் நான்கு புயல்கள் பலஹீனம் அடைந்து மற்ற புயல்களினால் மிதமான மழை ஏற்படும். ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பும். இந்த ஆண்டு புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வால் நட்சத்திரங்கள் தோன்றும். இந்த ஆண்டு அயல்நாடுகளில் மூலதனம் அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி மூலம் வருவாய் அதிகரிக்கும். இந்த ஆண்டு பூமி, நிலம், வீடு மனை விலை சற்று குறையும். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு, தங்கம் விலை அதிகரிக்கும். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஓரளவு மழையும் - கடல் கொந்தளிப்பும் - கடல் சீற்றங்களும் ஏற்படும். ராகு பகவானுடைய சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு அதிக காற்று ஏற்படும். இதனால் கடலோர மக்களுக்கு உயிர்ச் சேதம், பொருள் சேதம் ஏற்படும். இந்த ஆண்டு மேற்குப் பகுதியில் ஏற்படக்கூடிய காற்று, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தலாம். அயல்நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, வளைகுடா நாடுகளில் ஓரளவு பொருள் சேதம் ஏற்படலாம். இந்த ஆண்டு ராஜாவாக புதன் வருவதால் மத்திய அரசுகளில் நல்ல வருவாயும் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறையில் முதலீடும் அதிகம் ஏற்படும். அரசுகளின் முயற்சியினால் கல்வித்தரம் சர்வதேச அளவில் உயரும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நட்புறவு நீடிக்கும். மந்திரியாக சந்திரன் வருவதால் பெண்களுக்கு இந்த வருடம் நன்றாக இருக்கும். ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் பல புதிய நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். காவல்துறை நவீனமாகும். கார், லாரி, பஸ் இதர வாகனங்கள் நவீன மயமாக்கப்பட்டு விலை ஏறும். இந்த ஆண்டு சேனாதிபதியாக சந்திரன் வருவதால் போர் பதற்றம் தணிந்து பேச்சுவார்த்தைகளில் மூலமாக நாடுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். பொதுவாக இந்த ஆண்டில் சந்திரன் பலமாக இருப்பதால் ராணுவம், காவல்துறை, ஊர்க்காவல்படை ,இதரத் துறைகளில் பெண்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள். மேக அதிபதியாக சந்திரன் இருப்பதால் வருட வெண்பாவையும் தாண்டி ஓரளவு மழை பெய்யும். அணைகள் முக்கால்வாசி நிரம்பும். காய்கறி வகைகள் - பழங்கள் - பருப்பு வகைகள் - எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம் அதிகரிக்கும். நீரஸாதிபதியாக குரு இருப்பதால் மதுவகைகள் - தேயிலை - காப்பி - லாகிரி வஸ்துக்கள் வகைகள் விலையில் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த ஆண்டு ஈரான், ஈராக், அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு குழப்பங்கள், மனக்கசப்புகள் ஏற்படலாம். அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூமி வெடிப்பும் நிலநடுக்கமும் ஏற்படும். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும். இந்த ஆண்டு மத்திய அரசு வரிகளில் மதிப்பை உயர்த்தும்.

ராஜா புதன் பலன் கல்வி நவீன படுத்தப்படும். சர்வதேச உறவுகள் மேம்படுத்தப்படும். பொருளாதாரத்தின் விகிதத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்

மந்திரி சந்திரனின் பலன் இந்த ஆண்டு மந்திரியாக சந்திர பகவான் வருவதால், நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், பெயிண்ட், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் விலை சற்று உயரும்

அதிபதி சந்திரன் பலன் இந்த ஆண்டு அதிபதியாக சந்திரபகவான் வருவதால் பெண்களுக்கு எல்லாத்துறையிலும் முன்னுரிமை அளிக்கப்படும். பெண்களுக்கு அதிகமாக சலுகைகள் வழங்கப்படும்.

மேக அதிபதி சந்திரன் பலன் இந்த ஆண்டு மேக அதிபதியாக சந்திரபகவான் வருவதால் நெல், கோதுமை, தானியங்கள், சோளம், நவ தானியங்கள் நன்கு விளையும்.

ஸஸ்யாதிபதி குருபகவான் பலன் இந்த ஆண்டு சஷ்டி அதிபதியாக குருபகவான் இருப்பதால் மங்கல காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும் மேலும் மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய பூசல்கள் குறையும்

சேனாதிபதி சந்திரன் பலன் சந்திரன் பலத்தால் இந்த ஆண்டு போர் பதற்றம் குறையும்.

ரஸாதிபதி சனி பகவான் பலன் துவர்ப்புச் சுவையுள்ள பொருட்கள் - கசப்புச் சுவையுள்ள பொருட்கள் மருத்துவ குணமுள்ள பொருட்கள் ஆகியவை விளைச்சல் அதிகரிக்கும்

தனாதிபதி புதன் பகவான் பலன் இந்த ஆண்டு கம்பு, கேழ்வரகு, சோளம், சிறு தானியங்கள் அதிகமாக விளையும், அதற்கேற்றார் போல் மழையும் இருக்கும்.

நீரஸாதிபதி குருபகவான் பலன் இந்த ஆண்டு மஞ்சள், குங்குமப்பூ, வாசனை கஸ்தூரி, சந்தனம் போன்றவை நன்கு உற்பத்தியாகும். விலை சற்று ஏறும்

சித்திரை மாதப் பிறப்பின் பலன் இந்த ஆண்டு சித்திரை மாதம் திங்கட்கிழமை அன்று வருவதால் ஓரளவு மறையும். மத்திய மாநில அரசுகளின் திட்டங்களினால் மக்களுக்கு நல்ல பலன்களும் ஏற்படும். பெண்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிகமாக ஈடுபாடு கொள்வார்கள். பெண்களை மதிப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்

மகர சங்கராந்தி பலன் இந்த ஆண்டு வியாழக்கிழமை தை மாதம் பிறப்பதால் நல்ல மழை பெய்யும். மங்கல நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்..

ஊத்துக்காடு

ஊத்துக்காடு

ஊத்துக்காடு எனும் கிராமம் சாலியமங்கலத்திலிருந்து திருக்கருகாவூர் வழியாக ஆவூர் சென்று பாபநாசம் கும்பகோணம் போகும் சாலையில் திருக்கருகாவூரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் அமைந்த கிருஷ்ணத் தலம். இது 1000 – 2000 வருஷங்கள் பழமையானது. கிருஷ்ண ஜயந்தி திருவிழா இங்கு பிரபலமாக நடைபெறும். முன்பெல்லாம் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு இரவு முழுதும் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி நடைபெறும். நாளடைவில் அது நின்றுபோயிற்று.


இங்கு மூலஸ்தானத்து கிருஷ்ண விக்ரகம் காளிங்கன் எனும் ஐந்து தலை நாகத்தின் தலைமீது கிருஷ்ணன் நின்று ஆடுவது போன்ற தோற்ற முடையது. பாம்பின் தலைமீது கண்ணன் நிற்பது போல தோந்றினாலும், பாம்புத் தலைக்கும் கண்ணன் காலுக்கும் இடையில் மெல்லிய நூலிழை போன்ற இடைவெளி உண்டு. இதுவே இங்குள்ள சிறப்பு. அருள்மிகு காளிங்கநர்த்தன கிருஷ்ணன் கோயில் கொண்டிருக்கும் இந்த ஊத்துக்காடு வந்து ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் வழிபடுவது வழக்கம். அதுபோலவே தத்தமது குழந்தைகள் இசையில் வல்லவர்களாக, கலைகளில் சிறந்தவர்களாக ஆக வேண்டுமென்று நினப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.


உத்ஸவர் கிருஷ்ணன் காலுக்கு கொலுசு வாங்கி சாத்தி வழிபடுவது சிறப்பு. காரணம் இந்த கிருஷ்ணன் காளிங்கன் எனும் பாம்பு வடிவுடைய அசுரனை அவன் தலைமேல் ஏறி நின்று, சுற்றிலும் ஆயர்பாடி சிறுவர்கள் பயந்து போய் பார்த்துக் கொண்டிருக்க இவன் அந்த ராட்சச வடிவுடைய அரக்கப் பாம்பை ஆடியே வதம் செய்த காலல்லவா கண்ணனின் கால்கள். அந்தக் கால்களுக்கு கொலுசு அணிவித்து அழகு பார்க்க வேண்டாமா? ஸ்ரீஜயந்தி அன்று கிருஷ்ண பகவானுக்கு நூற்றுக்கணக்கான லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்விப்பர்.




தலவரலாறு:  தேவலோகப் பசுவான காமதேனு, தன் கன்றுகளான நந்தினி, பட்டி மற்றும் இதர பசுக்களுடன் ஊத்துக்காட்டில் வசித்தது. சிவபெருமானுக்கு இந்த காமதேனு மலர்களைக் கொய்து கொண்டு வந்து இங்குள்ள கயிலாசநாதனுக்கு அர்ச்சித்து பூஜித்து வந்தது. இங்கு ஏராளமான பசுக்கள் நிரம்பியிருந்த காரணத்தால் இவ்வூர் “ஆவூர்” என வழங்கப்பட்டது. “ஆ” என்றால் பசு. பசு வந்த இடம் “கோ” வந்து “குடி”யேறிய காரணத்தால் கோவிந்தகுடி என்றாகியது. அது போலவே பட்டி எனும் பசு சிவனை பூசித்தத் தலம் பட்டீஸ்வரம். இப்படி பல ஊர்கள் இருந்த போதும் காமதேனு விரும்பி வசித்தத் தலம் ஊத்துக்காடு.


ஆதி நாளில் இவ்வூர் காமதேனுவின் சுவாசமாக இருந்ததால் “மூச்சுக்காடு” என்றும் நாளடைவில் “ஊத்துக்காடு” என மறுவியது. ஒரு முறை தேவரிஷி நாரதர் இங்கு வந்து இங்கிருந்த பசுக்களிடம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் சரிதையைச் சொன்னார். அப்படிச் சொல்லும்போது, காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஆயர்குலச் சிறுவர்களை அங்கிருந்த ஒரு மடுவில் பெரிய பாம்பு ஒன்று இருந்து துன்புறுத்தி வந்ததையும், அதன் பெயர் காளிங்கன் என்றும், அந்தக் காளிங்கனின் ஆணவத்தை அடக்கக் கண்ணன் அதன் தலைமீது ஏறி நின்று அது சோர்ந்து வீழும்வரை தலைமீது ஆடியதையும் நினைவுகூர்ந்தார். இதனைக் கேட்டு காமதேனு கண்ணனை கண்ணீர் மல்க வணங்கி மகிழ்ந்தது.




காமதேனுவுக்கு ஸ்ரீகிருஷ்ணனை எப்படியாவது தரிசிக்க வேண்டும், அவன் குழலிசையைக் கேட்டு மகிழ் வேண்டுமென்கிற ஆசை உண்டானது. அதை அப்படியே கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டது. அன்பர் குரலுக்கு ஓடோடி வரும் கிருஷ்ணன் காமதேனுவின் கோரிக்கையை ஏற்காமல் இருப்பானா? ஓடோடி வந்தான். வேணுகானம் உள்ளம் உருக வாசித்தான். அப்போது மடுவில் காளிங்கன் தலைமீது தான் ஆடிய காட்சியை அதற்குக் காட்டினான். காமதேனு ஜென்மம் சாபல்யம் அடைந்ததாக உணர்ந்தது.

பிந்நாளில் சோழ மன்னன் ஒருவன் இந்தப் பகுதிக்கு வந்த போது இந்த வரலாற்றைக் கேட்டான், அதற்கேற்றவாரு காளிங்க நர்த்தன கிருஷ்ணனுக்கு இங்கொரு ஆலயத்தை வடித்துக் கொடுத்தான் என்கிறது இவ்வூர் தலபுராணம்.


ஊத்துக்காடு வேங்கடசுப்பையர். (1700 முதல் 1765)


தமிழிசையில் கிருஷ்ணன் மீது பல்வேறு சுவையான பாடல்களைப் பாடியவர் ஊத்துக்காடு வேங்கடகவி என்பார். கர்நாடக இசை வடிவில் உணர்ச்சிப் பிரவாகத்தில் கண்ணன் சந்நிதியில் அவனை நேரில் பார்த்து, பேசி, உணர்ந்து, மகிழ்ந்த நிலையில் பலதரப்பட்ட பாடல்கள், அத்தனையும் தமிழுக்கு ஓர் புது வழியைக் காண்பித்த பாடல்களை அவர் இயற்றியுள்ளார். நூற்றுக்கணக்கான அவருடைய பாடல்கள் நமக்கு இப்போது கிடைத்துள்ளன, இன்னும் எத்தனையோ கிடைக்காமல் போயிருக்கலாம். தமிழ், சமஸ்கிருதம் மராத்தி இப்படி பன்மொழிப் புலமையோடு அவர் பாடல்கள் இருக்கின்றன.  இதுவரை சுமார் 500 பாடல்கள் கிடைத்திருக்கின்றன. கிடைக்காமல் போனவை எத்தனையோ? இவருடைய பாடல்களை இவரது வம்சத்தில் வந்த நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் என்பார் பாடிக் காப்பாற்றி வந்துள்ளார். இன்றும் கூட இவர் வாரிசுகளாக உள்ளவர்கள் இந்தப் பாடல்களைப் பாடி வருகின்றனர்.


‘தமிழ், சம்ஸ்கிருத மொழிகளில் அமைந்த இவரது பாடல்களில் கண்ணன் பற்றிய வர்ணனைகள், கண்ணனின் லீலைகள், அந்தப் பாடல்களில் அமைந்த இனிமை, தாளக்கட்டு, பாடல் வரிகளின் சிறப்பு இவை அத்தனையும் நம்மை புல்லரிக்கச் செய்துவிடும். பாகவத புராணத்தைப் படித்து கண்ணனின் பால லீலைகளை முழுவதுமாகத் தெரிந்து வைத்திருப்பவரால்தான் அத்தனை அழக்காக கண்ணனின் லீலைகளைப் பாட முடியும். பாடல்களின் தாளக் கட்டு கேட்போரை தன்னையறியாமல் தாளம் போடவோ, எழுது ஆடவோ செய்து விடும்.




வேங்கடகவியின் இயற்பெயர் வேங்கடசுப்ரமண்யம். இங்கு வாழ்ந்த சுப்புகுட்டி ஐயர் என்பார் அவரது தந்தையார். வெங்கம்மா என்பது தாயார். மன்னார்குடிக்கு அருகில் வசித்து வந்த இவர்களது முன்னோர்கள் ஊத்துக்காட்டுக்கு குடிபெயர்ந்து வந்தனர். இந்த ஊருக்கு சம்ஸ்கிருத மொழியில் தேனுஸ்வாசபுரம் என்றொரு பெயரும் உண்டு. காமதேனுவுக்கு ஸ்வாசமாக இருந்த ஊர் என்று பொருள். இவரது சகோதரி மகன் ஒருவர் தஞ்சை மராத்திய மன்னன் பிரதாபசிம்ம ராஜாவின் அவையில் இசைக் கலைஞர்காக இருந்திருக்கிறார். அவர் பெயர் காட்டு கிருஷ்ண ஐயர்.


சிறுவயதில் வேங்கடகவிக்கு இசையில் ஆர்வம் இருந்தது. ஆனால் அவருக்குச் சரியான குருநாதர் அமையவில்லை. அப்போது கிருஷ்ண யோகி என்பாரிடம் இசை கற்க இவருக்கு ஆசை. ஆனால் அவர் மறுத்து விட்டார். ஆகையால் அவர் கிருஷ்ண பகவானிடம் முறையிட்டார். அவர்தான் காளிங்கநர்தன கிருஷ்ணன், இவ்வூரின் குடியிருக்கும் இறைவன்.


இவர் வாழ்வில் ஓர் அற்புதம் நிகழ்ந்ததாகச் சொல்வர். ஒரு குழந்தை மேலெங்கும் புழுதி படிந்திருக்க, இவருடைய மடியில் வந்து அமர்ந்து கொண்டதாம். என்ன சொல்லியும் எழுந்திருக்க மறுத்துவிட்டது அந்தக் குழந்தை. அப்போது எங்கிருந்தோ ஒரு வேய்ங்குழலோசை மெல்ல கேட்கத் தொடங்கி மனங்களைக் கொள்ளை கொள்ளத் தொடங்கியது. அதைக் கேட்டு அனுபவித்த வேங்கடகவி அதே நினைவில் மயங்கி வீழ்ந்தார். அவர் கண்விழித்துப் பார்க்க அங்கே கிருஷ்ணன் பாலகனாக வந்து அவர் எதிரே குழலூதிக் கொண்டு நிற்கிறான்.  அப்போது அவர் தன்னுடைய உடலில் மாற்றங்களைக் கண்டார். மனம் இசை வடிவானது, இசை ஊற்றெடுக்கத் தொடங்கியது.

அந்த கிருஷ்ணனே வேங்கடகவிக்கு இசையைப் பயிற்றுவித்ததாகச் சொல்வர். இதற்கு ஆதாரமாக வேங்கடகவியின் ஒரு பாடலைச் சொல்கிறார்கள். அது ஆபோகி ராகத்தில் அமைந்த “குரு பாதாரவிந்தம் கோமளமு” எனும் பாடல். அதில் அவர் சொல்லும் கருத்து: “நான் எந்த புராணங்களையோ, வரலாறுகளையோ படித்ததில்லை; படித்ததாக பாசாங்கும் செய்யவும் இல்லை. எனக்குத் தெரிந்த அனைத்துமே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்னைக் கடைக்கண்ணால் பார்த்து, எனக்கு அளித்த பிச்சை” என்கிறார்.


வேங்கடகவி வாழ்நாளெல்லாம் கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்ததால் திருமண பந்தத்துள் அகப்படவில்லை. பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து கண்ணனைப் பாடிக் கொண்டிருந்தார். அவருடைய பெரும்பாலான பாடல்கள் நாட்டியம் ஆடுவதற்குரிய தாளக்கட்டுடன் அமைந்திருந்தன. அதீதமான சொற்கட்டுகளும், ஜதிகளும் அவர் பாடல்களில் இருந்தன. காளிங்க நர்த்தனம் எனும் பாடல் ஜதிகளும் தாளக்கட்டுகளும் அதிகமுள்ள பாடல். கண்ணன் காளிங்கனின் தலைமீது ஏறி நின்று அவன் தாங்கமுடியாத அளவு அவன் தலைமீது கண்ணன் ஆடிய ஆட்டம், அவன் விஷத்தைக் கக்கி, உடல் சோர்ந்து கீழே விழும்வரை அந்தப் பாடல். கேட்போரை அப்படியே எழுந்து ஆட வைக்கும் வல்லமை படைத்தது. அதனை நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் பாடிப் பிரபலப்படுத்தினார். இப்போது திருமதி அருணா சாய்ராம் அவர்கள் இதனை கச்சேரி தோறும் பாடிவருகிறார்.


இவர் ஒரு தனிமை விரும்பி. ஏகாந்தத்தில் அமர்ந்து கண்ணனை மட்டுமே துணையாகக் கொண்டு தன் பாடல்களைப் பாடியவர். ஆகையால் இவருக்கு சீடர்கள் என்று எவரும் இல்லை. இவர் நள்ளிரவில் தனிமையில் அமர்ந்து யாரும் கேட்காதபடி தனித்தே பாடி வந்தார். கிருஷ்ணன் மட்டுமே அவற்றைக் கேட்கவேண்டுமென்பது அவர் அவா. சில வாக்யேயக் காரர்களைப் போல ஒவ்வொரு பாடலிலும் அவர்கள் முத்திரை வாசகமொன்றை சேர்ப்பது போல இவர் எதையும் அப்படி சேர்த்துப் பாடியதில்லை. ஏதோ நவாவர்ண கீர்த்தனை யொன்றில் (8ஆவது நவாவர்ணம்) அவர் தன் பெயரைச் சொல்கிறார். இதிலிருந்து அவர் தன்னுடைய பாடல்களுக்கு விளம்பரம் எதையும் தேடவில்லை என்பது தெரிகிறது.


அப்படி இவர் பிறர் கேட்கா வண்ணம் பாடினாலும் இவர் பாடுவதைக் கேட்டு அதை எழுதி வைத்தவர்களும் உண்டு. எடுத்துக்காட்டாக இவருடைய “தாயே யசோதா உந்தன் ஆயர் குலத் துதித்த” எனும் பாடலைக் கேட்டு எழுதி வைத்தவர் ருத்ரபசுபதி பிள்ளை எனும் நாதஸ்வர வித்வான்.


இவருடைய படைப்புகளில் தோடியில் தாயே யசோதா, ஆபேரியில் நந்தகோபாலா, ஜெயந்தஸ்ரீயில் நீரஜசாம நீல கிருஷ்ணா, அடாணாவில் மதுர மதுர, ஆரபியில் மரகதமணிமாய, ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இவர் ஏழு ராகமாலிகை, மூன்று தில்லானா, அவை சுருட்டி, சிந்துபைரவி, பூரணிமை ஆகிய ராகங்களில் இயற்றியுள்ளார்.

வேங்கடகவியின் சகோதரர் மூலமாக அவருடைய வாரிசாக வந்தவர் நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர். இவர் வேங்கடகவியின் பாடல்களைப் பிரபலப்படுத்தியவர். 1950களில் இவர் பல ஊர்களில் நிகழ்ச்சிகளை நடத்தி ஊத்துக்காடு பாடல்களை மக்களிடம் கொண்டு சென்றார். அவருடைய ஒலி நாடாக்கள் மூலமாகவும் ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்களை அனைவரும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. காளிங்க நர்த்தனம் இப்படித்தான் பிரபலமடைந்தது.


பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர வேங்கடகவிக்கு இன்னொரு குருவும் இருந்திருக்கிறார். அவர்தான் பாஸ்கரராஜபுரம் எனும் கிராமத்தில் பிறந்து ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்துக்குப் பாஷ்யம் எழுதிய பாஸ்கர ராயர் என்பார். அம்பாள் பேரில் அவருடைய கீர்த்தனங்கள் பிரபலமானவை. அவருடைய தாக்கத்தினால்தான் வேங்கடகவியும் காமாக்ஷி நவாவரண கிருதிகளை இயற்றினார் என்கிறார்கள். இவர் ஒரு கிருஷ்ண பக்தர் மட்டுமல்ல, ஸ்ரீவித்யா உபாசகருமாவார்.


ஊத்துக்காடு வேங்கடகவி பாடல்கள்.


1.   ஆடாது அசங்காது வா கண்ணா, மத்யமாவதி, ஆதி தாளம்.

2.   ஆடி அசைந்து வருகிறான் அய்யன், ஆபோகி, ஆதி

3.   அடி முடி கண்ட தெய்வத்தின் மேல் ஏறி, ஹுசேனி, ஆதி

4.   ஆடின மட்டுக்கும் நீ ஆடடா, மோகனம், ஆதி

5.   ஆடினான், விளையாடினான், சாமா, ஆதி

6.   ஆடும் வரை அவர் ஆடட்டும் அறிந்துகொண்டேனடி, ஹுசேனி, ரூபகம்

7.   அலை பாயுதே கண்ணா, கானடா, ஆதி

8.   அசைந்தாடும், சிம்மேந்திரமத்யமம், ஆதி

9.   ஆனந்த நர்த்தன கணபதிம், நட, ஆதி

10.  பிருந்தாவன நிலையே, ரீதிகெளள, ஆதி

11.  பால சரஸ முரளி, கீரவாணி, ஆதி

12.  என்ன புண்ணியம் செய்தனை, ரீதிகெளளை, ஆதி

13.  என்னத்தைச் சொன்னாலும், வாசஸ்பதி, மிஸ்ரசாபு

14.  எப்படித்தான் என் உள்ளம், நீலாம்பரி, ஆதி

15.  கண்ணன் வருகின்ற நேரம் (காவடிச் சிந்து)

16.  கல்யாணராமா, ஹம்சநாதம், ஆதி

17.  குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொள்ளும், காம்போஜி, ஆதி

18.  மதனாங்க மோஹனா, கமாஸ், ஆதி

19.  முன் செய்த தவப் பயன், ரேவகுப்தி, ஆதி

20.  நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும், ஸ்ரீரஞ்சனி, ஆதி

21.  பால் வடியும் முகம், நாட்டைகுறிஞ்சி, ஆடி

22.  பார்வை ஒன்றே போதுமே, சுருட்டி, ஆதி

23.  புல்லாய் பிறவி, ஜுஞூட்டி, ஆதி

24.  ஸ்வாகதம் கிருஷ்ணா, மோஹனம், ஆதி, திஸ்ரகதி

25.  ஸ்ரீவிக்னராஜம் பஜே, கம்பீர நாட்டை, கண்டசாபு

26.  தாயே யசோதா, தோடி, ஆதி

27.  யாரென்ன சொன்னாலும், மணிரங்கு, ஆதி

28.  எத்தனை கேட்டாலும், பைரவி, ஆதி.


இப்படி ஏராளமான பாடல்கள், பல ராகங்கள், இன்னும் மறைந்து கிடப்பவை எத்தனையோ? பிரபலமான அவருடைய ஒருசில பாடல் வரிகளை இப்போது பார்க்கலாம்.


பல்லவி
பால்வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவச மிக வாகுதே (கண்ணா)

அனுபல்லவி
நீலக்கடல் போலும் நிறத்தழகா -கண்ணா
எந்தன் நெஞ்சம் குடி கொண்டு
அன்று முதல் இன்றும்
எந்த பொருள் கண்டும்
சிந்தனை    செல்லாதொழிய (பால்வடியும்)

சரணம்
வான முகட்டில் சட்று
மனம் வந்து நோக்கினும்
(உன்) மோன முகம் வந்து தோனுதே

தெளிவான தண்ணீர் தடத்தில்
சிந்தனை மாறினும்
(உன்) சிரித்த முகம் வந்து காணுதே

கானக் குயில் குரலில்
கருத்(து) அமைந்திடினும் (அங்கு)
உன் கான குழலோசை மயக்குதே

கருத்த குழலொடு நிறுத்த மயிலிற-
கிறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும்
நீல நதியோடும் வனத்திலே

குழல் முதல் எழிலிசை குழைய வரும் இசையில்
குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு
நளினமான சலனத்திலே

காளிங்கன் சிரத்திலே                                                            கதித்த  பதத்திலே
என் மனத்தை இருத்திக்
கனவு நினைவினோடு
பிறவி பிறவி தோறும்
கனிந்துருக வரம் தருக பரம் கருணை (பால்வடியும்)


பல்லவி
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி ( தோழி/சகியே)

அனுபல்லவி
அழகான மயிலாடவும்  (மிக)
காற்றில் அசைந்தாடும் கொடி போலவும்

மத்யம கால சாஹித்யம்
அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே
தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகுமிதி (/தகுமிகு) என ஒரு பதம் பாட
தகிட ததிமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ
என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு

சரணம்
மகர குண்டலம் ஆடவும் (கண்ணன்)
அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழில் ஆகவும்
காற்றில் மிளிரும் கொடி போலவும் (/துகில் ஆடவும் )
(அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே…)


அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே
(உன்) ஆனந்த மோகன வேணுகானம் அதில் (அலைபாயுதே)

நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா
என் மனம் (அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலெனக்-அளித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ?
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள்
போலவே மனது வேதனை மிகவொடு (அலைபாயுதே)

பல்லவி
புல்லாய்ப் பிறவி தர வேணும் – கண்ணா
புனிதமான பலகோடி பிறவி தந்தாலும்
பிருந்தாவனம் இதிலொரு (புல்லாய்)

அனுபல்லவி
புல்லாகினும் நெடு நாள் நில்லாது – ஆதலினால்
கல்லாய்ப் பிறவி தரவேணுமே – ஒரு சிறு
(மத்யமகாலம்)
கமல மலரிணைகள் அணைய எனதுள்ளம்
புலகிதமூற்றிடும் பவமற்றிடுமே
(புல்லாய்)

சரணம்
ஒருகணம் உன் பதம் படும் எந்தன் மேலே
மறுகணம் நான் உயர்வேன் மென்மேலே
(உன் ) திருமேனி என் மேலே அமர்ந்திடும் ஒருகாலே
(மத்யமகாலம்)
திருமகளென மலரடி பெயர்ந்த உன்னைத்
தொடர்ந்த ராதைக்கு இடந்தருவேனே
திசை திசை எங்கணும் பரவிடும் குழலிசை
மயங்கி வரும் பல கோபியருடனே
சிறந்த ரசமிகு நடம் நீ ஆடவும்
சுருதியோடு  லயமிக கலந்து பாடவும்
திளைப்பிலே வரும் களிப்பிலே
எனக்கிணை யாரென மகிழ்வேனே
தவமிகு சுரரோடு முனிவரும் விய நான்
தனித்த பெரும் பேர் அடைவேனே
எவ்வுயிர்க்கும் உள்கலக்கும் இறைவனே
யமுனைத்துறைவனே எனக்கும் ஒரு (புல்லாய்)
பல்லவி
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்*
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோனும்* (அசைந்தாடும்)

The Kamakshi Temple

The Kamakshi Temple is a famous Hindu temple dedicated to Kamakshi one of the forms of the goddess Parvati. It is located in the historic city of Kanchipuram, near Chennai, India and is popularly associated with Sankaracharya, one of the greatest Hindu gurus. The Meenakshi Temple in Madurai, the Akilandeswari temple in Thiruvanaikaval near Tiruchirappalli and this Kamakshi are the important centers of worship of Parvati as the mother goddess, in the state of Tamil Nadu. The temple was most probably built by the Pallava kings, whose capital was Kanchipuram, around 6 C.E.

The main deity, Kamakshi, is seated in a majestic Padmasana, an yogic posture signifying peace and prosperity, instead of the traditional standing pose. The goddess holds a sugarcane bow and bunch of flowers in the lower two of her arms and has a pasha (lasso), an ankusha (goad) in her upper two arms. There is also a parrot perched near the flower bunch. There are no other Parvati temples in the city of Kanchipuram, apart from this temple, which is unusual in a traditional city that has hundreds of traditional temples. There are various legends that account for this fact. One of them according to Kamakshivilasa is that the Goddess had to absorb all the other shakthi forms to give a boon to Kama, the Hindu god of love. {1} Another legend attributes it to the Raja Rajeswari pose of the deity that signifies an absolute control over the land under the deity's control.[2] Legend has it that Kamakshi offered worship to a Shivalingam made out of sand, under a mango tree and gained Shiva's hand in marriage.

Festivals : Four worship services are offered each day. The annual festival falls in Spring, in the Tamil month of Masi, which runs from mid-March to mid-April. During this time the chariot festival (Ther) and lake festival, (Theppam) are held. Other festivals include Navaratri, Aadi and Aippasi Pooram, Sankara Jayanthi and Vasanta Utsavam in the Tamil month of Vaikasi. All Fridays are considered sacred, though the Fridays in the Tamil months of Adi (mid-July to mid - August) and Thai (mid-January to mid - February) are celebrated.

The Old Kamakshi Devi Temple : The original Kamakshi Devi Temple is what is presently known as Adi Peeteswari or the Adi Peeta Parameswari. This temple is just adjacent to the Kumarakottam, and is near to the presently famous Kamakshi Devi temple. Adi Shankaracharya, the famous 8th-century CE scholar and saint, established the Sri Chakra at this original Kamakshi Devi temple in the trough-like structure in that shrine, This Sri Chakra soon became the All India famous Kamakoti Peeta. The Acharya's Lalitha Trishati Bhashya comments Kamakoti Peetam as Sri Chakra.

The Acarya changed the fierce form of worship into a sowmya form. The Devi in this original Kamakshi temple is called by various names like Kirtimati, Devagarbha in extant Tantric works like Tantrachudamani. She has four hands containing in each of them respectively, Ankusa, PAsa, Abhaya and a Kapala. This description corresponds to those extant old tantric works. Further, Girvanendra Saraswathi describes precisely this swaroopa as Kameswari. Sundaramurthi Nayanar, the Saiva saint of the 12th century is aware of the Kamakottam. He in fact mentions that the Kamakottam has come in existence just at that time

The Siruthondar Puranam of Sekkilar Peruman, written during this time, is aware of both the temples and mentions the original temple as the Yoga Peeta and the present Kamakshi devi temple as Bhoga peetam. The reference to the present Kamakshi Devi as Aram Purappaval (bestower of boons)by Sekilar Peruman is noteworthy, as the present name of the street in which this new temple is located in Kanchipuram is called ArapanakAra Theru. The present Kamakshi temple too, has a Sri Chakra which was established during the 16th Century by NrusimhAdvari, of the famous dathamAnji family. There is a stone inscription inside the new temple, near this Sri Chakra, which states this fact. It is noteworthy that Arunagirinathar a 15th Century Tamil Saint, sings in praise of the Goddess as devi of dark emarald complexion and the mother of Muruga of Kumarakottam. The Original Kamakshi Devi temple i.e. Adi PeeteswariKamakshi Devi temple is just adjucant to the Kumarakottam. Arunagirinathar mentions the Sri Yantra in the Kamakshi Devi temple, which can apply, during the 15th century, only to the original Adi Peeteswari Kamakshi Devi, which contained the Sri Chakra installed by Adi Shankara. Arunagirinathar does not make any reference to the new temple.

Also noteworthy is the fact that this new temple's legend considers the Bangaru Kamakshi at Thanjavur as Dharmadevi This is the metallic counterpart of the stone image of Dharmadevi, which is at present at Thiruparuthikunram (Jina Kanchi) to where it was removed from this present Kamakshi (Tara Devi) temple after the conversion of the Jain Tara Devi temple into Hindu Sakta tradition has become stronger. There is a stone inscription at the Jina Kanchi temple which explains this fact. There are strong evidences that Dharadevi was worshipped in the present day main shrine.

Temple History : Kamakshi Amman Temple is a famous Hindu temple dedicated to Goddess Kamakshi a divine form of Parvati. It is located in the historic city Kanchipuram, near Chennai, India and is popularly associated with Adi Sankaracharya, one of the greatest Hindu saints. Along with Madurai Meenakshi, Thiruvanaikaval Akilandeswari, Vishalakshi Varanasi, Kamakshi is an important part of worship of Parvati. It is interesting to note that the main deity is seated in a majestic Padmasana posture, an yogic posture signifying peace and prosperity, instead of the traditional standing pose in most other temples of Parvati. The goddess holds a sugarcane bow and lotus and parrot in the lower two of her arms (Many of the Hindu god forms generally have four arms) and has the two divine instruments Pasa and Angusa in her upper two arms. It is interesting to note that there are no traditional Parvati or Shakthi shrines in the city of Kanchipuram, apart from this temple, which is unusual in a traditional city that has hundreds of traditional temples. There are various legends attributed to it. One of them according to Kamkshivilasa is that the Goddess had to absorb all the other shakthi forms to give boon to Manmatha (the Hindu god of fertility and love). Another legend attributes it to the Raja Rajeswari pose of the deity that signifies an absolute control over the land under its control, leaving no other forms of Shakthi. Legend has it that Kamakshi offered worship to a Shivalingam made out of sand, under a mango tree and gained Shiva’s hand in marriage.

Kamakshi and Adi Sankaracharya : Adi Sankaracharya is significantly associated in the rich history of the temple. Like many other ancient goddesses, the form of Kamakshi was less benign than the current form. There used to be various forms of animal and human sacrifices in ancient Shakthi temples and it is believed that Adi Sankaracharya led to the more peaceful representation of the goddess by placing a divine Chakra before it. And the goddess agreed to show her benign side in the temple, while the forms of Shakthi outside Kanchipuram still had more angrier forms of Shakthi. There is no verifiable historical proof for this, though it is a part of the local folklore. Symbolic of this, during the festivals when the processional deity is taken for a procession around the temple streets, it takes leave from Sankaracharya, at his shrine in the inner corridor. It is also believed that Sankaracharya defeated Buddhist and other philosophers in this place, sparking a revival for Hinduism.

Quick Bytes : Location : Tamil Nadu, Languages : Tamil, English, Telugu
Major Attractions : Varadaraja, Kamakshi Amman, Ekambareshwar, and other temples, Area : About 11 square kilometers, Temperature : In summers,

Best Visiting Time : All through the year

No words can describe grandeur and mysticism of the city of thousand temples, Kanchipuram. These temples are the epitomes of the entire paraphernalia of the royalty that existed many centuries back. An important hub of both religion as well as Culture, the city is a site worth visiting. Today, it is an important commercial center that attracts tourists from around the world. Apart from that, the city is known for its exquisite beauty and serene surroundings.

Historical Significance : Kanchipuram's history is among the oldest one among the other South Indian cities. In ancient times, it was called Kanchi and reached its zenith in medieval times. The first rulers who made this city part of their kingdom were Pallava. Their rule extended from for a span of five centuries. It was during this period that famous Chinese traveler visited this renowned city and wrote a vivid description about it. It was Pallava rulers who erected a number of magnificent Temples and other architectural wonders here. The later centuries saw the city being ruled by Mughal kings. During the colonial rule, it came under the annexation of British rulers.

Attractions : Kanchipuram's is an eternally revered city that boasts of the presence of innumerable temples dedicated to Hindu gods and goddesses. There are historical references that indicate that Buddhism was also in full vogue here and was widely practiced. The city's rich cultural heritage is a source of attractions to a large number of tourists. A brief explanation of the most popular temples will prove handy to you while visiting thi magnificent city.

Kailashnatha Temple : The exquisite beauty of this temple has earned it the distinction of being one of the most beautiful edifices that adorn the city. Constructed by Pallava king Raja Rajsimha in eighth century, the temple is devoted to Lord Shiva. Notice the fascinating carvings of a number of deities that are present in the interior. The most striking sculpture that will watch your attention is that which depicts a dance rivalry between Shiva and Parvati. Lord Shiva, himself is illustrated in 64 different forms. This indicates that that religion was an important aspect of the society and influenced it in many ways. The architectural beauty of this world is of highest quality.

Kamakshi Amman Temple : An important center of Shakthi worship, the temple is the center of religious activities are organized on a regular basis. The temple comes under the authority of Shanakra Mutt. It is a Chola temple that was constructed in 14th century AD. The Vimana or the tower of the temple is covered with gold. A golden Chariot also adores the temple premises. On every Friday, this chariot is taken out for a spectacular procession. To let the visitors know more about Shankara Mutt, an art gallery has been built that contains pictures related to the life of Adishankaracharya. The temple is one of the jewels of Kanchipuram; a large crowd throngs to the premises daily to offer prayers.

Vaikuntha Perumal Temple : This Vishnu temple of Kanchipuram is located near Kamakshi Amman and is no less important in art and architecture. Built by Nandivarman, a Pallava king in 7th century AD, this exclusive temple depicts Vishnu in his three popular standing, sitting and reclining positions. At walls, you will see scenes related to the battles between Chalukya and Pallava dynasties. Don't forget to visit the hall of 1000 pillars. All the pillars are carved extensively.

Ekambareshwar Temple : The area occupied by this massive temple is about 12 hectares. At the time when Vijaynagar Empire was its glory, a stone wall was built in order to protect it from enemy attack. There are so many attractions here that are worth admiration. These include mandaps, gateways, tanks and countless shrines.

Varadaraja Temple : Called by names like "Hastigiri", "Attuyuran" etc. Varadaraja Temple is a sacred shrine for followers of Lord Vishnu. The deity worshipped here is called Varadaraja Perumal and is called by other names like Deva Perumal, Perarulalan, Devraja etc. There are several myths and legends that are linked with the shrine; a few miracles are also believed to have happened here.

Vedanthangal Bird Sanctuary : Spread over 30 hectares, this sanctuary of Kanchipuram is enriched with several species of fauna like Babool, Barringtonia and thorn vegetation. A delight for bird loves and ornithologists, this sanctuary gives shelter to several migratory and local birds. These include species from countries like New Zealand and Australia. The birds that can be seen in large numbers here are teals, stilts, pintails, sandpipers.

Other Attractions : No discussion of Kanchipuram  is complete without focusing on its splendid silk saris. Silk production is no less than an art here. It excels in production of finest quality of silk. These are the works of skilled artists whose families have been into this profession for last 400 years. The silk is produced from mulberry insects. The vibrancy and smoothness of the silk saris have made them popular all over India. In fcat, silk is one of the priced possessions of the city. The immense popularity of the silk is evident from the fact that every year, in October month, a Silk Festival is organized and is visited by a large number of tourists.

Festivals : Kanchipuram is one of the important religious centers that hold different Festivals like Brahmotsavam, Garuda, Kamakshi Amman, and Mahashivrathri. Some of the festivals are peculiar to some specific temple while the others are common to a lot of temples.

அருள் மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்

அருள் மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்
 
மூலவர் : அஷ்டலக்ஷ்மி, மஹா லக்ஷ்மி, மஹா விஷ்ணு,
அம்மன் : ஆதிலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, தைரியலக்ஷ்மி,கஜலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, தனலக்ஷ்மி
தீர்த்தம் : சமுத்திர புஷ்கரணி (வங்கக் கடல்)
பழமை : 50 வருடங்களுக்குள்
ஊர் : பெசன்ட் நகர்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு
 
விழா : புரட்டாசி நவராத்திரி விழா பத்து நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் விழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லக்ஷ்மி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.   
       
சிறப்பு : கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. {ஓம்கார சேத்திரம்} கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது. இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.   

அருள் மிகு அஷ்டலக்ஷ்மி திருக்கோயில், பெசன்ட் நகர் - 600 090, சென்னை.போன்:+91- 44-2446 6777, 2491 7777, 2491 1763  
      
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்  

தகவல் :ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.   
       
பிரார்த்தனை : இங்கு அஷ்ட லக்ஷ்மிகளாக அருள் பாலிக்கும் மகாலக்ஷ்மியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. உடல் நலம் பெற ஆதி லக்ஷ்மியையும், பசிப்பிணி நீங்க தான்ய லக்ஷ்மியையும், தைரியம் பெற தைரிய லக்ஷ்மியையும், சவுபாக்கியம் பெற கஜ லக்ஷ்மியையும், குழந்தைவரம் வேண்டுமெனில் சந்தான லக்ஷ்மியையும், காரியத்தில் வெற்றி கிடைக்க விஜய லக்ஷ்மியையும், கல்வி ஞானம் பெற வித்யா லக்ஷ்மியையும், செல்வம் பெருக தன லக்ஷ்மிமியை வணங்குதல் நலம்.
      
பெருமை : அஷ்டலக்ஷ்மிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கிறார்கள். கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.
 
ஸ்தல வரலாறு : சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது. அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது. இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

காஞ்சி காமாக்ஷி அம்மன்

காஞ்சி காமாக்ஷி அம்மன்

ஆதிசங்கரர் இத்தலத்தில் தான் ஆனந்த லஹரி பாடினார். மேலும் இவர் அம்பிகையை நினைத்து வழிபட்ட மூககவியின் மூக பஞ்சசதீ துர்வாசரின் ஆர்ய த்விசதி போன்ற ஸ்தோத்திரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆதிசங்கரருக்கு இத்தலத்தில் தனி சன்னிதி அமைந்திருக்கிறது.

தமிழகத்திலேயே உள்ள முக்கியமான சக்தி பீடம், காஞ்சீபுரம். பார்வதி தேவியின் சக்தி பீடங்களில் காஞ்சி காமாக்ஷியும் ஒன்று. அம்மனின் மகிமை பெற்ற தலம் என்று காஞ்சியை சொல்லலாம். அதனால் தான் காமாக்ஷி என்றாலே காஞ்சி காமாக்ஷி என்றே சொல்கிறோம்.

ஒவ்வொரு யுகத்திலும், மகான்கள் அம்பிகையை நினைத்து ஸ்லோகங்களை இயற்றியிருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசர், 2000 ஸ்லோகங்களையும்,  திரேதாயுகத்தில் பரசுராமர், 1500 ஸ்லோகங்களையும், துவாபரயுகத்தில், தெளமியாசர் 1000 ஸ்லோகங்களையும், கலிகாலத்தில் ஆதிசங்கரர் 500 ஸ்லோகங்களையும் காமாக்ஷி அம்பிகையை நினைத்து இயற்றியிருக்கிறார்கள்.

ஸ்தல வரலாறு : காமாக்ஷி, ஒன்பது வயது சிறுமியாக தோன்றி பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்து, விண்ணில் மறைந்தாள். அசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல் தேவர்கள் திகைத்தார்கள். அப்போது காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை உணர்த்தும் விதமாக, 24 தூண்களையும், நான்கு வேதங்களைக் குறிக்கும் வண்ணம்  நான்கு சுவர்களையும் எழுப்பி,  மண்டபம் கட்டுங்கள். அந்த மண்டபத்தில் கன்றுடன் கூடிய பசு, சுமங்கலிப் பெண், தீபம், கண்ணாடி போன்றவை வைத்திருங்கள். அசுரனை அழித்த என்னை காட்டுகிறேன் என்ற அசரீரி கேட்டது. தேவர்கள் அப்படி செய்ய, காமாக்ஷி தேவி, ஒன்பது வயது சிறுமியாக காட்சியளித்து அருள் புரிந்தாள். தேவர்கள், தேவியின் விருப்பப்படி அந்த இடத்தை மறைத்து ஸ்லோகங்களால் வழிபட, மறுநாள் காமாக்ஷி அம்மனாக காட்சி தந்தாள்.

ஸ்தல சிறப்பு : காமாக்ஷி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். லலிதா ஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர் இவரே. அம்மன், இவருக்குத்தான் காட்சி தந்ததாக கூறுகிறது வரலாறு. அம்மன், தங்க விமானத்தின் கீழ் அமர்ந்த நிலையில் அருள் புரிகிறாள். பத்மாசன கோலத்தில் அருள் தருவது மிகவும் விசேஷமானது என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையில் காமாக்ஷியின் அருகில் வலப்புறத்தில் ஒற்றைக்காலில் பஞ்சாக்னி நடுவில் ஒற்றை காலில் நின்ற படி தபஸ் காமாக்ஷி காட்சி தரும் அம்மனும் உண்டு.
அசுரனை வதம் செய்து உக்கிரத்தோடு இருந்த காமாக்ஷி அம்மனை சாந்தப்படுத்த, அம்மனின் திருவுருவத்தின் முன்பு ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து, சாந்தப்படுத்தி அருள் சக்தியாக மாற்றினார்.
ஆதிசங்கரர், இத்தலத்தில் தான் ஆனந்த லஹரி பாடினார். மேலும் இவர், அம்பிகையை நினைத்து வழிபட்ட மூககவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்ய த்விசதி போன்ற ஸ்தோத்திரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆதிசங்கரருக்கு இத்தலத்தில் தனி சன்னிதி அமைந்திருக்கிறது.
காமாக்ஷி ஸ்தூலம், சூட்சமம், காரணம் என்று மூன்று வடிவங்களில் அருள் பாலிக்கிறாள். சக்தி பீடத்தில் முக்கிய தலமான இங்கு, அம்மன் தென் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருக்கிறாள். பிரம்மா, ருத்ரன், சதாசிவன், ஈஸ்வரன், மகாவிஷ்ணு என பஞ்ச பிரம்மாக்களை ஆசனமாக கொண்டு, நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். கைகளில் பாசம்,  அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

ஸ்தல பெருமை : இந்நகரை ஆட்சி செய்த மன்னனுக்கு குழந்தைப்பேறு இல்லை. அதனால் அம்மனை நினைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்தான். மன்னனின் வேண்டுதலில் மனம் இறங்கிய அம்மன், தனது புதல்வன் கணபதியையே மன்னனுக்கு மகனாக பிறக்க அருள் புரிந்தார். கணபதி துண்டீரர் என்னும் பெயருடன் வளர்ந்து, ஆகாசராஜ மன்னனுக்கு பிறகு ஆட்சி செய்தார். கா என்றால் சரஸ்வதி, மா என்றால்  மகேஸ்வரி, க்ஷி என்றால் லட்சுமி என மூன்று தேவிகளும் இணைந்தவள் இவள். காஞ்சி மகா பெரியவர், காமாக்ஷி தேவியைப் பற்றி சொல்லும் போது, மனிதர்களுக்கு மாயை ஏற்படுத்தி அந்த மாயையிலிருந்து விடுவிக்கும் கருணையும் கொண்டவள் காமாக்ஷி என்கிறார்.

ஸ்தல பிரார்த்தனை : அம்மனுக்கு முன்பு இருக்கும் ஸ்ரீ சக்கரத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும், இதை வழிபட்டால் அனைத்து ஐஸ்வர்யங்களும் பெறலாம். குழந்தை வரம், திருமண வரம், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் இவையெல்லாம் நீங்க காமாக்ஷி அம்மன் அருள் பாலிக்கிறாள். எனக்கு எதுவும் வேண்டாம். இந்த உலக மாயையிலிருந்து விடுபட்டால் போதும் என்றால் அருள் தரக் காத்திருக்கிறாள் காஞ்சி காமாக்ஷி.

ஸ்ரீ மஹா மாரியம்மனை வழிபடுங்கள்

ஸ்ரீ மஹா மாரியம்மனை வழிபடுங்கள் கொரோனாவில் இருந்து தப்பிக்க

இன்று உலகையே ஆட்டி வைக்கும் தொற்று பரவல் நோய் *"கொரோனா வைரஸ் நோய்"*

பழைய காலங்களில் மிகப் பெரிய தொற்று நோய்காளாக *"பெரியம்மை, சின்னம்மை, காலரா - கழிச்சல் முதலியவை இருந்தன இந்நோய்களில் இருந்து தம்மை பாதுகாக்க மக்கள் "மாரியம்மனையும் காளியம்மனையும்" வழிபட்டனர்"*

"எவ்வளவோ அறிவார்ந்து இருந்த நம் தமிழ் சமூகத்திற்கு "மேற்கண்ட நோய்கள் வைரஸ் போன்ற விஷக்கிருமிகளால் பரவுகிறது" என்பது தெரியாமலா இருக்கும்??!

"ஆனாலும் வெப்பமயமான தேஜஸை உடைய மாரியம்மனை வேப்பிலை, மஞ்சள் முதலிய பொருட்களால் வழிபாடு செய்தனர்" ஆனாலும் பின்னால் வந்த ஆங்கிலேயே வைத்தியர்கள் "பெரியம்மை முதலியவற்றுக்கு காரணம் வைரஸ் என்று கண்டு பிடித்து மருந்தும் கண்டு பிடித்தனர்"

இந்த விபரங்கள் தெரியும் முன்னமே மக்கள் நோயாளிகளை வேப்பிலை மஞ்சள் முதலியவற்றால் குணப்படுத்த முயற்சித்தல், தனிமை படுத்தல், தொடாமை முதலியவற்றை "மாரியம்மன் வழிபாட்டால் செய்து கொண்டு இருந்தனர்"

பின்னாள் அம்மை நோய் அம்மனை வழிபடாமையால் பரவும் என்றவாறு இது தவறாக கற்பிக்க பட்டு மூடநம்பிக்கை என்று ஒதுக்கப் பெற்றது!! காலக்கொடுமை!! ஆதலால் "இன்றும் "கொரோனா முதலிய விஷக்கிருமிகள் பரவாமல் இருக்க அதன் பாதிப்பில் இருந்து விலக நம் ஊர்களிலேயே கிராமங்களிலேயே, தெரு முனைகளிலேயே கருணா சாகரமாக வீராசனத்தில் வீற்றிருக்கும் அம்பிகையாம் மகாமாரியை வழிபாடு செய்யுங்கள்"

"ஸ்ரீ பரமேஸ்வரனின் பாரியாகிய பார்வதியே வடிவமாக வீற்றிருக்கும் ஸ்ரீமாரியின் வெப்பத்தல் கொடும்பரவல் நோய்கள் நிச்சயம் பொடிப்பொடியாக மறையும்"

அவள் அக்னிமயமானவள், பரமேஸ்வரனுயை அடையாளங்களை தன்னகத்தே கொண்டவள், அக்னிமயமான கேசங்களையும், சடாமகுடத்தையும், பாசாங்குசமும் திரிசூலமும் கபாலமும் கத்தியும் உடுக்கையும் கொண்டு சூர்யகோடி தேஜோ மயமாக வீராசனத்தில் வீற்றிருந்து வெப்பமாயமாக இருந்து தன்னை அடைபவர்களுக்கு குளிர்ச்சியை தரும் சீதளாதேவி என்று அவளது தியான ஸ்லோகம் குறிக்கிறது

"அக்நி ஜ்வாலா சிகாம் அக்னி நேத்ராம் அக்னி ஸ்வரூபிணீம்; கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்; வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம் வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரண பூஷிதாம்" என்பது அவளது ஸ்வரூபத்தை குறிக்கும் தியான ஸ்தோத்திரம்

இவ்வம்மையை அவ்வங்கே எப்படி பாரம்பரியமாக வழிபட்டனரோ அவ்வந்த படியே மாற்றமில்லாமல் அவள் உள்ளங் குளிரும்படி "ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட்டோடும்" விழா எடுத்து வேப்பிலை தோரணம் மஞ்சள் நீராட்டு என்று விழா எடுத்து நம் பாரம்பரியத்தை கைவிடாது அவ்வம்மைக்கு ப்ரீத்தியை உண்டாக்குங்கள்

கொரோனா என்ன அதுனுடைய அப்பன் வந்தாலும் "பாரெல்லாம் படியளக்கும் பரமேஸ்வரனின் பாரியாம் ஸ்ரீமாரி பார்த்து கொள்வாள்"

இவ்வம்மையோடு கூட அவ்வந்த ஊர்களின் கிராம தேவதைகளையும் தக்க வகையில் ப்ரீத்தி செய்து வழிபாடு செய்யுங்கள்

"எல்லோரும் ஸ்ரீ தில்லை கூத்தர் திருவருளால் அவ்வந்த பகுதியின் கிராம, நகர காவல் தெய்வங்களால் ரக்ஷிகப் படுவோம் ஆகுக!!

நரகத்திற்கு செல்ல எளிய வழி

நரகத்திற்கு செல்ல எளிய வழி!!
 

நரகத்திற்கு செல்ல யாருக்குதான் ஆசை இருக்கும்?? ஆனாலும் என்னை போல யாராவது நரகத்திற்கு செல்ல ஆசைப்பட்டால் அதற்கு ஒரு எளிய வழியை திருமுறை பாடல் ஒன்று காட்டுகின்றது!!

திருமுறைகளில் உலக வாழ்க்கை பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கின்றது, அதேசமயம் சிவலோகத்திற்கு செல்லவும் திருமுறைகள் வழிகட்டுகின்றன ஆனால் இதில், "நரகத்திற்கு செல்லவும் வழி காட்டப்படுவது ஆச்சர்யமாக இருக்கின்றது அல்லவா??" இதுநிற்க, இந்த நரக வழியை காட்டும் திருமுறை ஆசிரியரோ ஒரு அரசர், அவருக்கு ஒரு திறமை உண்டு அவரது முன்பு நின்று யார் எதனை நினைத்தாலும் அவருக்கு எதிர் நிற்பவர்  என்ன நினைக்கின்றார் என்று அவருக்கு தெரிந்து விடும்!! அதனால் தான் அவரை கழறிற்று அறிவார் நாயனார் என்பார்கள். இவருக்கு இந்த ஆற்றலை திருவஞ்சைக்களத்து மகாதேவர் அருளியதாக சேக்கிழார் பெருமான், யாவும் யாருங் கழறினவும் அறியும் உணர்வும்" என்று பாடுகின்றார்கள்!!

ஆக இந்நாயனாருக்கு உயிர்கள் யாவும் மனதில் நினைப்பது எதுவானாரும் அதனை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால் மனிதர்கள் பலரின் மனதில் உள்ள விசித்திர ஆசைகளும் தெரிந்திருக்கும்தானே!?

இதன்படி யாரோ ஒரு விசித்திர நபருக்கு "நரகத்திற்கு செல்ல வேண்டும், அந்த சூழல் எப்படி இருக்கும் என்ற சிந்தனை எழுந்திருப்பதனை இந்நாயனார் கண்டறிந்து இருக்க கூடும்!!",

ஏன் நமக்கே கூடத்தான் அந்த "எண்ணெய் கொப்பரை எப்படி இருக்கும்?? என்று பாத்திடனும்" என்ற ஆசை அடிமனதில் இருக்கும்!! கொடிய இடம் என்றாலும் அங்கு போய் ஒருமுறை பார்த்துவிட விரும்புவதானே மனித மனத்தின் விசித்திரங்களுள் ஒன்று??

இப்படி பட்ட விந்தை உளவியல்களுக்கு விடைதர நினைந்த எம்பிரான் "சேரமான் பெருமாள் என்னும் கழறிற்று அறிவார் நாயனார் தாம் பாடிய பொன்வண்ணத்து அந்தாதி என்னும் நூலில் நரகத்திற்கு செல்லும் வழியினையும் காட்டுகின்றார்"

பதினோறாம் திருமுறையில் உள்ள இந்த பொன்வண்ணத்து அந்தாதியின் பதினான்காம் பாடல் இப்படி அமைந்திருக்கிறது,

"உலகு ஆளுறுவீர் தொழுமின்; விண்ணாள்வீர் பணிமின்; நித்தம் பலகாமுறுவீர் நினைமின்; பரமனொடு ஒன்றல் உற்றீர்
நல கா மலரால் அருச்சிமின்; நாள் நரகத்து நிற்கும் அல காமுறுவீர் அரன் அடியாரை அலைமின்களே"

 என்பது அந்த பாடல் அஃதாவது மனித மனங்களில் எழும் விசித்திரமான பல ஆசைகளை தாமாகவே அறிந்த நாயனார் ஒவ்வொருவராக அழைத்து தீர்வு கூறுகிறார் அதில் நிறைவாக "நரகத்திற்கு செல்ல விருப்ப பட்டவர்களையும் அழைத்து கூறுகிறார்", அதனை காணும் முன்னம் மனிதர்களின் மற்றைய ஆசைகளையும் அதற்கான தீர்வுகளையும் கண்டுவிடுவோம்

நாயனார் அழைக்கிறார்:

உலகத்தை ஆளும் விருப்பத்தை உடையவர்களே!! நீங்கள் தினமும் சிவபெருமானை தொழுங்கள் (உலகு ஆளுறுவீர் தொழுமின்), என்றார். அடுத்து,

வான உலகங்களை இந்திர பதவி முதலானவை மூலம் ஆள விரும்புபவர்களே!! நீங்கள் சிவபெருமானை பணிமின்கள் (விண்ணாள்வீர் பணிமின்) என்றார். அடுத்து,

தினமும் உலகியலில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, மக்களாசை முதலிய பல ஆசைகளை கொண்டவர்களே!! நீங்கள் சிவபெருமானை நினைத்து போற்றுங்கள் அத்தனை ஆசைகளும் உங்களுக்கு நிறைவேறும் (நித்தம் பல காமுறுவீர் நினைமின்) என்றார். அடுத்து,

"முக்தி இன்பமாகிய வீடு பேறும் சிவபெருமானொடு கூடிய வாழ்வும் வேண்டும் பிறப்பினை வெறுக்கும் அடியார்களே!! நீங்கள் நல்ல பூங்காவில் விளைந்த புது மலர்களால் இறைவனை தினமும் அருச்சனை செய்யுங்கள் (பரமனொடு ஒன்றல் உற்றீர் நல கா(பூங்கா) மலரால் அருச்சுமின்) என்றார்". அடுத்து, என்னை போன்ற விசித்திர உளவியல் உடைய "நரகத்தையும் பாத்திடுறது என்ற ஆசை உடையவர்களுக்கு தீர்வு சொல்ல அழைக்கிறார்" நாயனார்,

"நாளும் நரகத்தில் நின்று அல்லல் படும் ஆசையை உடையவர்களே!! நீங்கள் தினமும் சிவனடியார்களை துன்புறுத்துங்கள், (நாள் நரகத்து நிற்கும் அல காமுறுவீர் அரன் அடியாரை அலைமின்களே!!) என்றார்" நாயனார்,

"அஃதாவது உங்களுக்கு நரகத்துக்கு செல்ல விருப்பமாக இருக்கிறதா!? அதற்காக  ரொம்ப சிரமப் படாதீர்கள் யாராவது "திருநீறு பூசி", "உத்ராக்கம் போட்டுகொண்டு" "சிவநாமம்" பேசும் அடியார்கள் உங்களை ஏதேனும் தேவை கருதி தேடிவந்தால் இன்று, நாளை என்று அவர்களை அலைக்கழியுங்கள், கஷ்டப் படுத்துங்கள், அவர்களுக்கு பசிக்கு உணவளிக்காதீர்கள், உங்கள் வீட்டிற்கோ வாசலுக்கோ வந்தால் கதவை சாத்திக் கொண்டு வீட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிடுங்கள், மறந்தும் சிவனடியார்களை வணங்கி விடாதீர்கள், இதில் எதாவது ஒன்றை செய்தால் கூட போதும் நரகத்திற்கு நேரடியாக சென்றுவிடலாம்" என்று எளிய வழியை காட்டுகின்றார்  நாயனார்

இந்த வழியை பின்பற்றி  நரகத்திற்கு சென்றால் போதும் அதன் பிறகு, அங்கு நடக்கும் எண்ணெய் சட்டி பொரியல், வறுவல், சாட்டையடி, உலக்கையடி, கும்பிபாகம், கிருமிபோஜனம் முதலிய கவனிப்புகளை எமனும் அவரது பணியாட்களும் பார்த்து கொள்வர்கள்!! என்று நயமாக கூறுகிறார் எம்பிரான் சேரமான் பெருமாள் நாயனார்

அஃதாவது தமிழில் முரண்தொடை  என்றொரு இலக்கிய நயம் உண்டு, சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாமல் முரணாக திரித்து கூறுவது என்று அதற்கு பொருள்,

அதன்படி சிவனடியாரை துன்புறுத்தினால் நரகம் உறுதி என்பதனை முரணாக அழகாக இப்பாடலில் தொகுத்து அளித்து உள்ளார் நாயனார் என்பது அறிந்து இன்புறத் தக்க செய்தியாம்🙏🏻🙏🏻😌

திருச்சிற்றம்பலம்🙏🏻

அமாவாசை தர்பணம்

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ ------- ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ------- சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி  தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ------- ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் ------- சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ ------- சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து ------- ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ------- ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ------- சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: ------- ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாத்ரூ வர்க்கம்:

------- கோத்ராஹா ------- தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

------- கோத்ராஹா ------- சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.

------- கோத்ராஹா ------- தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம் + ஹவேஷு ------- கோத்ரா னு ------- ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.2 ------- கோத்ரான் ------- சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1  ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.2 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.3 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.1,2,3: ------- கோத்ராஹா ------- தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

2.1,2,3: ------- கோத்ராஹா ------- தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

3.1,2,3: ------- கோத்ராஹா ------- தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் வலம் : தேவதாப்பிய: ______

இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.