ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

ஶ்ரீ காயத்ரி மஹா மந்த்ரத்தை இப்படியெல்லாம் நாம் பயன்படுத்த கூடாது. கீழே தரப்பட்டுள்ளதை பார்க்கவும்.

1) ரிங்டோனில் போடக்கூடாது

2) சலூன் கடையோ, டீக்கடையோ, மற்ற கடைகளோ, ஆபீஸிலோ, எந்த அலுவலகத்திலோ பயன் படுத்தக்கூடாது.

3) காலர் டியூனில் கூடாது.

4) ரிவர்ஸ் ஹார்னில் கூடாது.

5) சினிமா, மற்றும் எந்த நிகழ்ச்சியிலும் உபயோகப் படுத்தக்கூடாது.

6) ஆன்மீக இடங்கள் மற்றும் கோவில்களிலும் (பிரைவேட்) வெளிப்படையாக  chanting அனுமதிக்ககூடாது.

7) பெண்கள் ஜபிக்கவே கூடாது.

8) யாருமேகூட வாயால் சொல்லக்கூடாது.

9) உதடே அசையாமல் 'ஜபிக்க வேண்டும்'.

10) பொழுது போக்கு சமாச்சாரம் அல்ல. இப்போது உள்ள இந்த அனர்த்ததுக்கு எல்லாம் காரணம்

நாம் செய்யவேண்டியதை செய்யாததும், செய்யக்கூடாததை செய்வதால் வரும் விபரீதம் மட்டுமே.

வெறும் பூணல் உள்ளவர்கள் பிராமணர்கள் அல்ல.

அன்றாட அநுஷ்டானத்தை தகுந்த முறையில் நடைமுறைப் படுத்துவதிலேயே பிராமணத்தும் பூரணமாக உள்ளது.

அன்றாட அநுஷ்டானம் கடினமானது அல்ல

நேற்று வந்த கம்யூட்டர், போன் கற்றுக்கொள்ள முடியும்.

அநுஷ்டானம் கற்றுக்கொள்ள முடியாதா.

முடியாவிட்டாலும் பரவாயில்லை

மற்றவர்களை திசை திருப்பி  அவர்களை கெடுக்க எந்த முயற்சியும் யாருமே செய்யக்கூடாது.

நம்மை நாம் மதிப்போம்.

நமது சம்ரதாயத்தை மதிப்போம்.

நமது ஆசாரியனை மதிப்போம்.

நமது அன்றாட அநுஷ்டானத்தை மதிப்போம்.

பஞ்ச கச்சம் தெரியாது.

பஞ்சாக்ஷரம் தெரியாது.

பசு பந்தம் தெரியாது.

பாரதத்தின் பெருமை தெரியாது.

பல கோத்ரங்களின் தாத்பர்யம் தெரியாது.

பரந்தாமனையும், பரமசிவனை மட்டும் எப்படி தெரிந்து கொள்வது அவர்களாளும் தான் எப்படி அநுஹ்ரகம் பண்ணமுடியும், நாம் அதற்காக தயாராகவில்லை என்றால்.

யோசித்து நம் வழியில் அமைதியாக பயணிப்போம்

ஸந்த்தோஷம்

தாஸன் 🙏🙏🙏🙏   இது முகநூலில் வந்த பதிவு .

சனி, 29 செப்டம்பர், 2018

சிவன் அருள்பாலிக்கும் தலங்களும் அவற்றின் சிறப்பும்!

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டதால் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

*நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்

*ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்த போது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

*தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன், இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

*கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் வெண்ணெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் தாய் & தந்தையருக்கு இறைவன் அசரீரியாக தன்னை வந்து தரிசனம் செய்த பின்னர் தங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று சொன்ன ஸ்தலம்.

*அமர்நாத்தில் உள்ள பனி லிங்கம் சந்திரனை போலவே 15 நாளில் வளர்ந்து பவுர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

*கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

*அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திரு விஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள் பாலிக்கிறார்.

*செம்பனார் கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்

*பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்டுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

*திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமவுலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும் தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

*ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள அனுமன் காட்டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப் பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

*பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

*தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.

*ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1 காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வரர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

*தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நல்லூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாப்பழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

*காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குத் தெற்கே சிறிது தூரத்தில் ஜ்வரஹரேஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

*மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

விஷ்ணு சிறப்புச் செய்திகள்

*திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரிபாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.

*திருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

*நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.

*திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

*உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

*ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு சக்ரத்துடன் காட்சியளிக்கிறார்.

*திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது

*சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண சிங்கப்பெருமாள் கோயில் செல்ல வேண்டும் இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

*திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

*ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைந்த சிவன்-திருமால் கோயில் இது மட்டுதான்.

*திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு வேதநாராயணன் என்று பெயர்.

*காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர். அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019-ம் ஆண்டு கிடைக்கும்.

*திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

*கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருப்பது வித்தியாசமானது.

*திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன் கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாருக்கு சன்னதி இல்லை.

*பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீ வைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிப்படுகிறார்கள்.

*கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

*மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக்கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு சக்கரம் இல்லை.

*காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.


நாட்டு கவுண்டர், வெள்ளாள கவுண்டர் வேறு வேறா? தெளிவாக பலர் விளக்கியும் மீண்டும் மீண்டும் இது தீர்ந்தபாடில்லை.
 

இதன் நிலைபாடு : சேர நாட்டில் காடுகளை அழித்து நகர்/காணிகளை அமைத்த வெள்ளாளர் காமிண்டன் பட்டம் கட்டிகொண்டு குடிசாதிகளை காத்தனர். பட்டம் என்பது ஒருவருக்குரியது. நாளடைவில் பட்டம் கட்டிகொண்டவரின் பங்காளிகள் பெண் கட்டி பெண் எடுத்த மாமன் மைத்துனர்கள் காமிண்டன் பட்டம் சூட்டி கொண்டனர். ஊரை உருவாக்கிய போது அதனை நிர்வகிக்கும் பொருட்டு ஊர் கவுண்டர் என்று ஒருவரை நியமித்தனர். இதேபோல பண்ணாடி, கொத்துக்காரர் எல்லோரும். நான்கைந்து கிராமம்/ஊரை சேர்த்து ஒரு காணியை நிர்வகிக்கும் பொருட்டு ஒரு காணியாள கவுண்டரை நியமித்தனர். இந்த காணியாள கவுண்டர் வெள்ளாளன் தான். இரண்டு மூன்று காணிகள் சேர்ந்து வளநாடு என்று அறியப்படும். ( அண்ணமாரின் பொன்னிவளநாடு போல ). இதனை நிர்வகிக்க நியமிக்கபடும் வெள்ளாளன் பட்டக்காரன்/நாட்டார்.

இந்த வளநாடுகள் இரண்டு / மூன்று/நான்கு சேர்ந்து ஒரு பெரிய வளநாடாக நிர்வகிக்க பட்டது. ( காங்கேய நாடு 5 வளநாடுகளை கொண்டது.
1. காடையூர் முழுக்காதன்,2.காங்கேயம் செங்கன்னன்,
3.ஆனூர்(பழையகோட்டை) பயிரன் / வள்ளியரச்சல் பில்லன்,
4.பாப்பினி தோடை,
5. வீரசோழபுரம் கன்னந்தை நிர்வாகம்).
இது பெரிய நாட்டார்/ பெரிய பட்டக்காரர் நிர்வாகம்(காங்கேய நாட்டுக்கு மேல உள்ள ஐந்தில் முழுக்காதன்/செங்கன்னன்/பயிரன் மாறி மாறி பெரியபட்டம் கட்டினர்). இதுவும் வெள்ளாளன் தான். கொங்க தேசத்தின் 24 நாடுகள் இதன் படி தான். இந்த 24 நாட்டை நிர்வகிப்பது மூவேந்தரில் ஒருவர். நிர்வாகம் சார்ந்தவரை மட்டும் தான் நாட்டார்/நாட்டான்/நாட்டாமை காரன் (நாட்டு ஆளுமை காரன்)  என்று குறிப்பிடுவர்.

அன்றைய நாளில் வெள்ளாளர் பட்டம் கட்டிகொண்டது முதலில் 

1.கீகரை பூந்துறை ( நாமக்கல் ,ஈரோடு காவேரிக்கு கிழக்கு) ,
2.மேகரை பூந்துறை ( அவல் பூந்துறை , நசியனூர் சுற்றிய பகுதி),
3.காங்கேய ( காங்கேயம் ,வெள்ளகோவில்,முத்தூர், காடையூர் , நத்தகாடையூர் இப்படி 14 காணி).

4. தென்கரை ( தாராபுரம் வடக்கு,மூலனூர், புதுப்பை, ஊதியூர் ......) 
 

இங்கு பட்டம் வெள்ளாளருக்கு முதலில் கட்டினர். பின் வேடுவரிடம் இருந்து வாங்குதல் , மன்னனிடம் பெறுவது என்று மீதமும் பட்டம் கட்டி பட்டக்காரனாக / நாட்டாராக வெள்ளாளர் கொங்க நாடு முழுக்க மாறினர். முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த பட்டக்காரர்/நாட்டார் அந்தஸ்த்து காலத்துக்கு காலம் மாறிவிடும். ஆட்சி மாற்றம் அடிக்கடி நிகழும்.

நாட்டான் என்பது அண்ணன்,  காணியாளன் என்பது தம்பி. இது தான் வித்தியாசம். பொங்கலூர் நாட்டின் நாட்டாரில் வருவது கொடுவாய் ஓதாலன். அதில் ஒருவருடைய மகன் 2பேர் தம்பி 3பேர் பங்கிட்டு கொண்டது தான் குண்டடம், நிழலி, கண்டியன்கோவில்......., இவர்கள் 5 பேரும் காணியாள கவுண்டர்கள். நாட்டாரின் மகன் காணியாளனாக உள்ளான். இப்படி நமக்குள் ஒருவருக்கு பயன்படுத்திய வார்த்தை நாளடைவில் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தினர். உதாரணமாக இன்றும் சில கூட்டங்கள் தங்களை பட்டக்காரர் பங்காளிகள் என்று சொல்வதை காணலாம்.

சில தரவுகள்,

1. கன்னிவாடி கன்னகுல ஆதினத்தின் தலைவரான முத்துச்சாமி கவுண்டர், மோரூர் நாட்டுகவுண்டரான சூரிய காங்கையனின் மகன். இந்த வழி தோன்றல் கன்னிவாடியன் கூட்டம். [கன்னகுல பட்டயம்].

2. சென்னிமலையில் ஈஞ்கூர் ஈஞ்ச குலத்தவரின் கட்டளை மடத்தின் பெயர் ஈஞ்சகுல நாட்டுகவுண்டர் மடம்.

3.இறையமங்களம் கன்னகுலத்தவர் கோவிலில் பொறிக்கபட்டுள்ளது , #கொங்கு_நாட்டு_வெள்ளாளர் சங்கம்.  நாட்டு கவுண்டர் கோவில்.

4. பரஞ்சேர்வழி விழியகுலத்தவர் கீகரை பூந்துறை நாட்டில் அதிகாரம் நாட்டு கவுண்டர் ஆயினர்.

5. பின்பு பருத்திபள்ளி செல்லகுலத்தில் பெண்ணெடுத்து மல்லசமுத்திரம் வளநாட்டை சீராக பெற்று நாட்டு கவுண்டராக விழியகுலத்தவர் மாறினர்.

6.கன்னகுலத்தவர் பாண்டியரால் மோரூர் நாட்டுகவுண்டராய் நியமனம் செய்யபட்டனர். அதற்கு முன்பு மோரூர் நாட்டார் ஆந்தை குலத்தவர். நாட்டார் காலத்துக்கு காலம் மாறும் பதவி.

இப்படி பல உண்டு.,

கீழே தீரன் சின்னமலை கவுண்டர் கிரயம் செய்த பட்டயம் பிரதி உள்ளது. இதில் குறிப்பிடபடும் நாட்டுகவுண்டடரெல்லாம் வெள்ளாளன் அல்லாது யார்?

தென்னிந்திய வர்ணாசிரம கோட்பாட்டின் படி நாட்டார் என்றாலே வெள்ளாளர் (சத்திரியர்) என்று பொருள். நிறைய இடத்தில் பிராமணர் நாட்டார் நகரத்தார்.... என்று வரும்.

   கீகரை ஏழுகரை நாடுகளை (வளநாடு) நிர்வகித்த 8 குலத்தவர் நாட்டு என்று சேர்த்து கொண்டனர். நாட்டு வெள்ளாளர், நாட்டு கவுண்டர் என்று முற்சேர்க்கை. நமது பக்கமும் இது உள்ளது. ஊர் பெரிய வீட்டுகாரரை நாட்டு / நாட்டுதுரை என்று அழைப்பர். வெள்ளைக்காரன் சாதிவாரி கணக்கெடுப்பு செய்து, கீகரையில் நாட்டர் குலமாக இருந்த 8 குலத்தை நாட்டுகவுண்டரென குறிப்பிட்டான்.  நாம் நம்மோடு இருந்த நாட்டார் குலங்களை மறந்து போனோம்.

நமக்குள் சண்டை மூட்டுவதே சிலருக்கு எண்ணம். தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்கலாம். நாமளே முடிவு செய்வது தவறாக கூட இருக்கலாம்.

திருமணம் முடிந்த பின் நாட்டுகல் வழிபடுபது நம் சடங்கு. இது 24 நாட்டுகவுண்டர்களாக பாவிக்கபடும் கல். மங்கல வாழ்த்து நாட்டார் சபை புகுதலை சொல்லும். இந்த நாட்டார் சபை 79 வெள்ளாள கவுண்டரை உடையது. ( கல்லிடைபாடி கல்வெட்டில் எழுவத்தொன்பது வளநாட்டு சபையை சேர்ந்த கன்னந்தை என்று குறிப்பு உள்ளது. கன்னந்தை குலம் நாட்டு கவுண்டரில் ஏது? நாட்டார் சபையில் எப்படி?)

ஊருக்கு ஊர் சம்பிரதாய வழக்கு வேறுபடும். இதே காங்கேயத்தில் நாங்கள் செய்யும் சீர் , தாராபுரத்தில் வேறு படுகிறது. பொள்ளாச்சி, உடுமலை பக்கம் நிறைய வித்தியாசம். வேறு வேறு சாதியென பிரித்து கொள்ள வேண்டுமா?

ஆறு தாண்டி பெண் கொடுக்கும் வழக்கம் நம்மிடம் முன்பு கிடையாது. காவேரி மட்டுமல்ல, அமாராவதி,நொய்யல் கூட அடங்கும்.

கீழே உள்ள படத்தில் குறிப்பிட்ட படி நான் நாட்டு கவுண்டர் வகையறா. ஆனால் நான் வெள்ளாளன். 🙂. எப்படி?? வேறு சாதி என்றால் நானும் வேற சாதி தான். எங்களோடு மணவினையும், அன்னம் தண்ணீர் பொழங்காட்டியும் பரவாயில்லை.



இந்து  சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குச்
                            சிலக் கேள்விகள்

1927ம் வருடம் தொடங்கி கோயில், இந்து சமய அறக்  கட்டளைகள் தமிழக அரசுக் கட்டுப்பாட்டில் வரத் தொடங்கின. 1947ம் வருடம் சுமார் 100 கோயில்களைத் தன் பிடியில் வைத்திருந்த  அரசு  தற்போது 38,000 கோயில்களுக்கு  மேல்  தன்   இரும்புப் பிடியில் வைத்துள்ளது. கோயில்களின் சிறப்பான நிர்வாகத்திற்காகத்தான் அவற்றை எங்கள் வசம் வைத்துள்ளோம் என்று சொல்லும் அரசும், கோயில்களில் அறநிலையத்துறை அதிகாரிகளாக நிர்வாகம் அரசு ஊழியர்களும், இவர்கள் இந்தக் கோயில்களைத் தம் வசம் வைத்துள்ளதை ஆதரிப்பவர்களும் கீழ்கண்ட கேள்விகளுக்குத் தெளிவான, நேரடியான விடை அளிக்க வேண்டும்:

1.  இந்திய அரசியல் சட்டப்படி எல்லா மதத்தினருக்கும் (மைனாரிட்டி சமூகங்கள் உள்பட) ஒரே மாதிரியான  அடிப்படை வழிபாட்டு, நிர்வாக உரிமை கொடுத்துள்ள போது, இந்து சமய கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகளை, அவற்றின் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டும் ஏன் அரசு எடுத்துக்கொள்கிறது? மிக அதிக அளவில் தற்போது பெருகியுள்ள சர்ச்சுகள், மசூதிகள் அவற்றின் சொத்துக்கள், ஆகிவற்றை ஏன் நிர்வகிக்கக் கூடாது?

2.  ஹிந்து சமயத் திருமடங்கள் தனி மத உட்பிரிவைச் சேர்ந்தவை என்று உச்ச நீதி மன்றதின் அரசியல் சாசன அமர்வு சொன்ன பிறகும் (1954) இந்து சமய அறநிலையத்துறை எப்படித் திருமடங்களைக் கட்டுப்படுத்துகிறது. உதாரணம் - திருப்போரூர் சிதம்பரம் ஸ்வாமிகள் மடத்திற்கு அரசு வேலைக்காரனானக் காஞ்சிபுரம் உதவி ஆணையரைத் தக்காராக  7 வருடங்களாக வைத்துள்ளது.

3. கோயில்களின் வழிபாட்டு உரிமைகளில் குறுக்கிட, அரசுக்கு அறநிலையத்துறைச் சட்டத்தில் எந்த இடமும் இல்லாத போது, எப்படி  அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் பாலாலயம், கும்பாபிஷேகம், திருவிழாக்கள் போன்றவற்றை முடிவு செய்கிறார்கள் ?

4. கம்ப ராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என்று மேடைதோரும் பேசிய நாஸ்திகன் அண்ணாதுரை இறந்த தினத்தன்று (பிப்ரவரி 3ம் தேதி) கோயில்கள் உள்ளே இலை போட்டு  அன்னதானம் எந்த ஆகம  விதியின் கீழ் நடக்கின்றது ?  கோட்ஸே தூக்கில் போடப்பட்ட தினத்தில் காந்தி ஆச்ரிமங்களில் அன்னதானம் செய்ய அரசு உத்தரவு  போடுமா? இந்திரா  காந்தி நினைவு  நாளன்று  சீக்கியர்கள்  தங்கள் குருத்வராவில் அன்னதானம்  செய்ய வேண்டும் என்று அரசு  உத்தரவு போட முடியுமா ?

5.  அறநிலையத்துறைச் சட்டம் பிரிவு 25-A ன் படி அறங்காவலராக  இருப்பவர் கோயில் இருக்கும் இடத்தில், அந்த ஊரில்  நல்ல  நடத்தை உள்ளவர், நன்மதிப்பு உள்ளவர் என்ற பெயர் பெற்றிருக்க  வேண்டும்.  கோயில் நிர்வாக விஷயத்தில் கவனம் செலுத்த ஆர்வமும்,  வேண்டிய அளவு நேரமும் உள்ளவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில்,   அறநிலையத்துறை ஊழியர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் கோயில் தக்காராக உள்ளனர்?

6. அறநிலையத்துறைச் சட்டம் 47ம், 49ம் கண்டிப்பாக இந்து சமயக் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு  தலித் அறங்காவலர், ஒரு பெண் அறங்காவலர் நியமனம் செய்யப்பட வேண்டும்  என்று சொல்லும் போது 2011ம் ஆண்டிலிருந்து அவ்வாறு செய்யாமல் தலித்துகளுக்கும்  பெண்களுக்கும் அறநிலையத்துறை ஏன் வஞ்சனை செய்கிறது ?

7. அறநிலையத்துறைச் சட்டப்படி கோயில் கட்டமைப்புகளை அப்படியே வைத்துப் பாதுகாக்க வேண்டும். அவற்றை மாற்றவோ, புதிதாக ஏதும் கட்டவோ கூடாது என்று சொன்னப்  பிறகு, விதிகளை சட்டத்திற்கு மாறாக மோசடியாக இயற்றி, புதிய கோபுரம், மண்டபம் கட்டுதல், பழைய கோபுரம், மண்டபங்கள், கோயில் கதவுகள், தூண்கள்  பழுது என்று சொல்லி அவற்றை அகற்றி விற்பனை செய்தல், புதிய சிலை செய்தல் அவற்றில் தங்கம் சேர்க்கிறேன் என்று மோசடி செய்தல் - இவையெல்லாம் எந்த சட்டத்தின் கீழ் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்கிறார்கள் என்று காட்ட முடியுமா ? 

8. திருக்கோயில் கோபுரங்களுக்கு, கொடிமரங்களுக்குத் தங்க முலாம் பூசுதல் - தங்கத் தேர், வெள்ளித் தேர், தங்கத் தொட்டில்செய்தல் -  பணம் கட்டினால் -  இந்தத்  தேர்களில் சுவாமி பவனி - எவை எல்லாம் எந்த ஆகம  அடிப்படையில் - எந்த அறநிலையத்துறைச் சட்டப் பிரிவின் கீழ் செய்தார்கள் என்று  காட்ட முடியுமா?

9. எந்த ஆகமத்தின் கீழ் நீங்கள் கோயில் உள்ளே அலுவலகங்கள், கழிப்பறைகள் எல்லாம் கட்டிக்கொண்டு கோலோச்சுகிறீர்கள்? கோயில் உள்ளே இவைகள் எல்லாம் கட்டக் கூடாது என்பதை அறநிலையதுறைச் சட்டமும், தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்ட விதிகளும் சொல்கின்றனவே? உங்கள் துறையில் உண்மையில் சட்ட அறிவு உள்ளவர்கள் இருக்கின்றார்களா? அப்படி இருந்தால் அந்த அறிவு - சட்டத்தை மீறுவதற்காகவா?

அறநிலையத்துறையின்  கோயில் நிர்வாக இலட்சணம்:

10. சென்னை ttk சாலையில் தீனதயாளன் வீட்டுக் கிடங்கில் கிடைத்த  200க்கும் அதிகமான கோயில் சிலைகளை இவர்கள்  அடையாளம் காட்டவில்லை - காரணம் இந்தக் கோயில் சிலை என்று அடையாளம் காட்டினால், சிலை காணாமல் போன போது - போலீசிடம் புகார் கொடுக்கவில்லை என்ற உண்மை வெளிப்பட்டு விடும். இப்பொழுது தெரிகிறதா? சிலைக் கடத்தலுக்கு யார் முழு உடந்தை என்று?

11. 1986  ஆண்டிலிருந்து தற்போது வரை சுமார் 50000 ஏக்கர்கள் கோயில், கட்டளை விளை நிலங்கள் காணவில்லை. தற்போது உள்ள 4.75 லட்சம் ஏக்கர் நிலங்களில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர்கள்- ஆக்கிரமிப்பில் உள்ளன அல்லது பல வருடங்களாகக் குத்தகைப் பணம் வரவில்லை. இவர்களுடைய கொள்கை குறிப்பில் ஒரு போதும் நஞ்சை நிலங்கள் குத்தகை வசூல் எவ்வளவு, புஞ்சை நிலங்கள் வசூல் எவ்வளவு, கிராமப்புற மனைகள் வசூல் எவ்வளவு, நகர்ப்புற  மனைகள் குத்தகை வசூல் எவ்வளவு  - என்றெல்லாம்  போட மாட்டார்கள். மேலும் ஒரு ஆண்டு வசூல் எவ்வளவு என்று போடுவதற்கு அவர்களுக்குக் கூடக் கூச்சமாக உள்ளது. அவ்வளவு குறைவான  வசூல். அதானால் மூன்றாண்டு வசூல்  தொகையைத் தான்  குறிப்பிடுகிறார்கள்.  வருடம்தோறும் ரூ. 6000 கோடி வர வேண்டிய கோயில் நிலங்கள் வருமானம், ரூ 120 கோடி கூட  வருவதில்லை. அதாவது வர வேண்டிய தொகையில் 2 சதவிகிதம் கூட வருவதில்லை. இப்படி 2 % குறைவான வசூல் தான் 40 வருடங்களாக இருக்கிறது. இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன விளக்கம் அளிக்க முடியும்? 

• 33,000 ஏக்கர் நிலங்கள் உள்ள  வேதாரண்யம் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களில் 30000 ஏக்கர்கள் ஆக்கிரமிப்பில். கோயில் நிலங்களை அளவீடு செய்ய கோரிக்கை வைக்கிறார் நேர்மையான செயல் அலுவலர். கோரிக்கையை  குப்பையில் போடுகிறார் நாகை மாவட்ட ஆட்சியர். மாவட்ட ஆட்சியர் மீது  ஆணையர் அனுமதி பெற்று வழக்குத் தொடுக்கிறார் நேர்மையான  அலுவலர். பிறகு அந்த வழக்கைத் திரும்பப் பெற ஆணையர் அலுவலக  அதிகாரிகளே அவருக்கு ஏன் அழுத்தம் கொடுத்தனர்?

•  திருச்செந்தூர் அருகில் உள்ள உவரி ஸ்ரீ சாஸ்தா கோயில் நிலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட  கார்னெட் என்னும் விலைமதிப்பு மிகுந்த கற்களை எடுத்தக் கொள்ளையன் மீது மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த உதவி ஆணையரை மிரட்டி அன்றைய ஆணையர் வழக்கினை ஏன் திரும்பப் பெறச் செய்தார்?

• புதுக்கோட்டை அரசர்கள் அந்த மாவட்டக் கோயிலுகளுக்கு வழங்கிய 105,,000 ஏக்கர் நிலங்கள் எங்கே ?

•  தஞ்சை இராஜா சத்திரம் ஒர் இந்து சமய நிறுவனம். இதற்குச் சொந்தமான 33,000 ஏக்கர் நிலங்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் இந்துக்களுக்கு எந்த பயனும் இன்றி வைத்திருப்பதை எதிர்த்து ஏன் உங்கள் துறை நடவடிக்கை எடுக்கவில்லை ?

• கரூர் நகரமும், அதைச் சார்ந்தப் பகுதிகளிலும் உள்ள 850 ஏக்கர் நிலங்கள் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரருக்குச்  சொந்தம். அவற்றை மீட்க 30 வருடங்களுக்கு முன்பு உங்கள்  துறை வழக்கு போடுவதாக பாவலா காட்டிவிட்டு இப்போது வழக்கை கைவிட்டு விடலாம் என்று சொல்லுவது ஏன் ?

• மதுரை நகரில் வண்டியூர் தெப்பக்குளம் அருகில் 50 ஏக்கர்கள் - ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குச் சொந்தமானவை - உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்கு பிறகும் ஏன் மீட்கவில்லை ?

• சிறுமலைப் பகுதியில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலங்களை ஏன்
கையகப் படுத்தவில்லை? 

• அறநிலையத்துறை கைக்குச் செல்லும் முன் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலுக்கு 6300 ஏக்கர்கள் சொந்தம்.
தற்போது 2000க்கும் குறைவான ஏக்கர்களே உள்ளன.

• அதே போல் வடுவூர் ஸ்ரீ இராமர் கோயிலுக்கு இருந்த 5000 ஏக்கர்கள் தற்போது எப்படி 50 ஏக்கர்களாக சுருங்கின?

 12. அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில்  பணத்தை  வெளிப்படையாகக்  கொள்ளை அடித்த காட்சிகள்

• திருவேற்காடு  திருக்கோயில் பணத்தை எடுத்து அறநிலையத்துறை  மந்திரிக்கு ஒரு டோயோட்டா இன்னோவா காரும், அவர் உதவியாளருக்கு மற்றொரு இன்னோவா காரும் வாங்கியுள்ளனர்.

• ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பணத்தில் வாங்கப்பட்ட காரை அமைச்சர் மகன் பயன் படுத்தி வருகிறார்.

• ஏற்கனவே அறநிலையத்துறை ஆணையர் உபயோகத்திற்காக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பணத்தில் கார் வாங்கப் பட்டுள்ளது.

• அமைச்சருக்கு கூடுதல் ஓட்டுநராக ஒருவர் நியமிக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இருந்து அவருக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது.

• மாங்காடு ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் பணத்தில் வாங்கப்பட்ட காரைத்தான் அறநிலையத்துறை ஆணையர் பயன்படுத்துகிறார்.

• அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் காரைப் பயன்படுத்திகிறார்.

• இந்தக் கார்களுக்கானப் பெட்ரோல் டீசல் செலவை கோயிலில் இருந்து மாதந்தோறும் எடுக்கின்றனர்.

• அறநிலையத்துறையின் 10 ஓட்டுனர்கள் மேல் இருக்கின்றனர். இவர்களுள் ஒருவரைத் தவிர மற்றவர் எல்லோரும் கோயில் ஊழியர்கள். கோயில் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளுக்குக் கார் ஓட்டுகின்றனர்.

• சென்னை ஆணையர் அலுவலகத்தில் 12 தட்டச்சு எழுத்தர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கோயில் பணியாளர்கள். கோயில் கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள். புதிதாகச் சங்கம் அமைத்து உங்கள் உரிமைகளுக்கு போராடுகின்றீர்களே?   2 வருடங்கள் ஒருவர் ஒரே இடத்தில் தொடர்ந்து பணி புரிந்தால் அவரை அந்த அலுவலகத்தில் நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற அரசுச் சட்டப்படி அவர்களை அறநிலையத்துறை ஊழியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று உங்கள் சங்கம் சார்பில் போராடுவீர்களா?  இந்தத் தட்டச்சர்களோடு ஸ்ரீ கபாலி கோயில் ஊழியர்கள் இருவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவர் ஆணையர் அலுவலகத்தில் பல வருடங்களாகப் பணி புரிகிறார். ஒருவர் கோட்டையில் அறநிலையத்துறை அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

• திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ சங்கரநாராயணர் கோயில் பணம் ரூ. 80,000/- எடுத்து ஆணையர் அலுவலகத்தில் செராக்ஸ் யந்திரம் வாங்கி உள்ளனர். 

• சென்னையில் மூன்று கோயில்களில் இருந்து பணம் எடுத்து ஆணையர் அலுவலகத்தில் உள்ள தணிக்கைப் பிரிவிற்கு குளிர் சாதன வசதி செய்து கொண்டுள்ளனர்.

• வடபழனி ஸ்ரீ முருகன் கோயில் பணத்தை எடுத்து  ஆணையர் அலுவலகத்தில் கழிப்பறைகள் கட்டியுள்ளனர். திருத்தணி கோயில் பணத்தை எடுத்து ஆணையர் அலுவலகத்தில் கூட்ட அரங்கு, நூலகம், வரவேற்பறை கட்டியுள்ளனர்.

• ஆணையர் அலுவலகத்தில் கணினிகள் வாங்கப் பழனி கோயில் பணம் ரூ.  15.00 லட்சம் அறநிலையத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாக கையாடல் செய்யப்பட்டுள்ளது.

• தஞ்சை இணை ஆணையர் அலுவலகச் செலவிற்காக திங்களூர் என்ற கிராமத்தில் உள்ள கோயில் பணத்தில் இருந்து ரூ. 50,000 கையாடல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் (ஸ்ரீ நாச்சியார் தேவஸ்தானம்) ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயில், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில், மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலஸ்வாமி கோயில், திருவாரூர் ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கோயில் இது போன்ற 45 கோயில்களில் செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததை மாண்புமிகு உச்ச நீதி மன்ற அமர்வு 10.02.1965 தேதி வெளியிட்டத் தீர்ப்பின் மூலம்  தடை செய்துவிட்டது. தற்போது எந்த அதிகாரத்தின் பேரில் அங்கு அறநிலையத்துறை  -  செயல்  அலுவலர்களை வைத்து நிர்வாகம் செய்கிறது என்று உங்களால் காட்ட முடியுமா ?


வெள்ளி, 28 செப்டம்பர், 2018

🌹 அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்🌹

⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.

⚫ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

⚫சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?

⚫அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

⚫எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.

⚫இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

⚫முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

⚫அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

⚫அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

⚫அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

⚫அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

⚫ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

⚫சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

⚫அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

⚫சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.

⚫அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

⚫வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.

⚫அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

⚫அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

⚫உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

⚫ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

⚫நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

⚫அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

⚫எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

⚫முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்🌹

திங்கள், 24 செப்டம்பர், 2018

An account of Upanishadbrahmendra in this Volume is appropriate in more ways than one.  Apart from the fact that the Matha bearing his name has its own importance in Kanchi, there have been close contacts between the Upanishadbrahmendra Matha and the Kamakoti Pitha in the comparatively short period during which the former had come into existence. Elsewhere1, more than once, the present writer has dwelt on the life and works of Upanishadbrahmendra.  In his paper, on Upanishadbrahmendra in the Journal of the Music Academy, Madras2, in which, for the first time, a detailed account of this Sannyasin-author has been given, the present writer has shown that our author was originally called Ramachandrendra – a name found in the colophons of several of his works, as also in his commentary on the Bhagavadgita – and that later he came to be called Upanishadbrahmendra by reason of his systematic and successful effort to write commentaries on the one hundred and eight Upanishads.  It has also been shown in that paper that Upanishadbrahmendra flourished in the 18th century A.D.  The cyclic year and its details mentioned by him at the end of his commentary on Muktopanishad work out to 1751 A.D.  Another dated work of his is the Paramadvaitasiddhantaparibhasha (1709 A.D.) In civil life, he was name Sivarama and was the son of Lakshmi and Sadasiva of Vadhula Gotra, of Brahmapuram on the banks of the Palar.  He was born by the blessings of God Karinatha and Goddess Sivakamasundari enshrined at Krishnanagari or Sattancheri on the banks of the Palar; he says that it is on the prompting of this Deity Lord Sivakamisa that he composed the commentaries on the one hundred and eight Upanishads.  In more than one place in his works, he mentions that the place of his stay in Kanchipura, which is on the way of Kailasanatha temple, was called Agastyalaya or Agastyasrama.  As a Sannyasin, he was the disciple of Vasudevendra. Upanishadbrahmendra was a bibliophile and all his writings, as also other works in Vedanta and Bhakti, were copied and preserved in his Matha.  The present writer had occasion to examine first-hand in connection with his New Catalogus Catalogorum work a large number of Upanishadbrahmendra’s works which the present Swamiji of the Matha, Sri Ishtasiddhindra, was kind enough to lend him.  Manuscripts of Upanishadbrahmendra’s works are also found in the Madras Government Oriental Mss. Library, the Adyar Library and the Oriental Library, Mysore; and many of them bear alternate and longer or shorter names and also the author’s own glosses.  After a careful examination of all these, as also the mutual cross-reference found in his own works, a complete list of his works has been compiled and presented elsewhere3.  Some of these works have also been brought out in print by the Adyar Library4.  On this occasion a brief analytical account may be given of his works and an appreciation of the contribution he made through his works and life. It is proper to begin with the Upanishads the ultimate basis of the two other texts of authority in the Prasthanatraya and also of all further expositions in Vedanta and Bhakti.  The most important and sustained work of Upanishadbrahmendra, which gave him this second name, is his commentaries on the one hundred and eight Upanishads, all of which have been published by the Adyar Library.  The author says that Krishnasuri, Ramananda, Isvara, Hari and Krishnadasa prompted him to write the Upanishad-commentaries5.  All his works giving the author’s name as Ramachandrendra were written before the Upanishad-commentaries and this is borne out also by his mentioning some of them in the Upanishad-commentaries.  On many of his earlier works thus written, he wrote glosses later, as Upanishadbrahmendra.  His work in the field of Upanishads is valuable particularly in regard to the minor ones, on which we have no other commentaries. A second major work of Upanishadbrahmendra in the Upanishadprasthana is the collection of one thousand and eight Mahavakyas from all the Upanishads – the Ashtottarasahasramahavakyavali – and expositions of these in a series of commentaries, the Prabha, the Lochana, the Vivarana and the Kiranavali.  Even at the beginning of his commentary on the Upanishads, he has shown that the Mahavakyas are not just four, but many more. In the Gita-prasthana he has given us a lucid gloss on the Bhagavadgita closely following Sankara’s Bhashya.  In the Sutra-prasthana, there is a short work of his in the form of an adhikarana-index and a concordance of the Sutras and topics, following Sankara’s Bhashya.  In this he correlates the four chapters and the four Padas of each chapter, with aspects of the Pranava and phases of the Brahman, a favourite analysis of his which he uses for the songs too which he composed in sets according to this classification.  Deriving his ideas from the Mandukya and Gaudapada’s Karikas and from the Nadabindupanishad, he equates the four chapters of the Sutras thus: Samanvaya                         Avirodha; Sadhana; Phala; Akara; Ukara; Makara; Ardhamatra; Sthula (Virat); Sukshma (Sutra); Bija; Turya                                        
The four Padas of each chapter are equated with the further sub-divisions resulting from the admixture of the phases in the second principle of classification, Virat-virat, Virat-sutra and so on.  The colophon of I. i of his index of the Adhikaranas run: akarasthulamsakaramatrarudhadya - padasyadhikaranasamkhya––11,  iti vairaje prathamah padah. In the further colophons, we come across equations of other Padas of the Sutras with Nada, Bindu, Kala, Kalatita, Santi, Santyatita, Unmani, Puri (Vaikhari?), Madhyama, Pasyanti and Para. Upanishadbrahmendra’s work on the Brahma-sutra should not be judged by the above concordance alone; at the end of this short work, he says that he wrote a commentary on the Sutra, following Sankara’s Bhashya of course, in 3500 granthas.  The manuscript of this remains to be identified and studied; it may be in the form of a commentary on the Sangraha of the Sutra mentioned above; it is at its end that the author mentions the commentary. brahmasutra-brahmatara-siddhanta-vivritih krita, bhashyasangrahasiddhantavyakhyanagranthasangrahah, panchasato’parilasat trisahasramitirbhavet. The independent Vedantic Prakaranas of the author may now be noticed.  Over a dozen of these are known and as in the case of other works, here too the texts bear the author’s own commentaries.  The Tattvampadarthaikyasataka in one hundred Anushtubhs, published in the Adyar Library Bulletin, with an Introduction by the present writer, brings out the full implication of the great Mahavakya, tat tvam asi, working out, step by step, the manifestation of the Brahman as the Saguna Brahman, the individual souls and the universe through Maya, the three Gunas, etc.  The work may be studied on the background of the older texts, Panchikarana, Vakyavritti, etc. The other Prakaranas, with his own commentaries, are Karmakarmaviveka with Nauka, Tripattattvaviveka, Paramaksharaviveka, Paramadvaitasiddhantaparibhasha, Paramadvaitasudarsanaviveka, Bhedatamomartandasataka, Lingabhangamuktisataka, Sattasamanyaviveka and Vivriti, Svarupadarsanasiddhanjana, Kaivalyashtaka and Siddhantaslokatraya. From what has been said already in connection with his concordance of the Brahma-sutra and its Adhikaranas, it would be clear that our author had a fancy for correlations and equations of the different phases of Brahman, of spiritual pursuit and indeed of the texts of Vedanta with the phases of Pranava.  On the path of Sadhana, he was a worshipper of Pranava and Nada, which as we shall see below, led him to music.  Tara (Pranava) and its four aspects figure out all over his commentaries and Prakaranas.  A certain number of works of his is especially devoted to this approach: Antahpranavavivriti, Bahyapranavavivarana, Brahmasarashodasabhumika, Brahmapranavarthaprakasashodasabhumika, Brahmapranavadipika, Viratpranavavivriti, exposition of Pranava and its phases as signifying srishti, sthiti and samhara and a series of devotional formulae related to the phases of Pranava which will be mentioned in a further section. The tradition of combining Bhakti towards forms of Saguna Brahman, with Advaita has had a long history.  Many Advaitic writers have not only composed appealing Stotras but also written treatises on the doctrine of devotion and the efficacy of reciting and adoring the Lord’s Name (Naman).  Upanishadbrahmendra’s other works, to be dealt with now, belong to this field of Bhakti, Namasiddhanta and music compositions on his Ishtadevata.  Bhaktisvarupaviveka is on the general doctrine of Bhakti.  The Bhagavatasamgrahastuti summarises the stories of the twelve Skandhas of the Srimad Bhagavatapurana in the form of a Stotras, comparable to the Narayaniya.  Another devotional work of his is the Sivamanasapuja. Upanishadbrahmendra’s Ishtadevata was Rama.  In Rama-Bhakti literature, he takes a conspicuous place.  He wrote a commentary on the Adhyatmaramayana, a treatise on Rama’s worship called Ramarchanachidvidyachandrika, a Ramarchana embodying the meaning of the Upanishadic Mahavakyas and a hymn Ramachandradayashtaka. On the Lord’s Name as Saviour (Taraka) and its recital, he wrote the Namarthaviveka or Upeyanamaviveka (text and commentary) in which, besides dealing with all the doctrines of this school, Upanishadbrahmendra enunciated the idea that the name Rama is composed of the vital syllables of both the Narayana ashtakshari mantra (RA) and the Siva Panchakshari mantra (MA).  The present writer has recently edited this work, with a critical Introduction, in the Adyar Library Bulletin. A sequel of this is the practice of Bhajana, singing songs in praise of the Lord and also formulae describing the Lord in a string of epithets and expressing devotion to the Lord, Namavalis and Divyanamasamkirtanas.  What Upanishadbrahmendra did in this line could be classified into three groups.  While all of the compositions in this category are on Rama, one set comprises longer poetic pieces to be rendered in elaborate music and following the model of the Gitagovinda of Jayadeva and the Krishnalilatarangini of Narayanatirtha, viz., the Ramashtapadi and the Ramataranga with Ramatarangaslokas and Ramatarangachandrodaya6.  Another comprises a number of Ramagitas giving expression to his ideas on the phases of Brahman-sutra, Bija, Turya, etc.  The third set is represented by the Namavalis which are found under the names Narayanataranamavali, Pranavanamavali, Vyavaharikapranavanamavali and so on.  The largest corpus of our author’s compositions in this group is the Divyanamasamkirtana consisting of vocatives addressed to Rama both as Supreme Brahman and as Saguna Brahman.  A complete Index of this mass of Upanishadbrahmendra’s Divyanamasamkirtanas, with mention of the Ragas used, is given by the present writer in his paper on our author in the Journal of the Music Academy, Madras, already referred to.  In these, as also in his Upeyanamaviveka, he says that devotion to Rama must be done in Advaitabhavana, with the contemplation of one’s self being identical with the Supreme Being: svananyadhiya tannamasmritih syat; ramo’ham ahameva rama iti bhavayet. At his Agastyesvara Asrama, he had put up a flag, as it were, inviting everybody to step in, participate in the great Satra of devotional singing of the songs and Namavalis composed by him, which was going on incessantly there and appease their spiritual hunger.  Of this Muktisatra established by him, he says in the beginning of Ramataranga: Kanchyamagastyesagrihagneyasimhasanopari, pratishthitam muktisatram dhvajasthapanapurvakam, madiyasiddhasamkalpam jnatva ye bhusuradayah, nirankusaste kurvantu mattarangadikirtanam, ahanyahani satrannabhuktitastriptireshyati, sakrinmatsatrabhuktya tu samtriptirjayate sada. With all this activity, Upanishadbrahmendra proved quite an inspiration in his time of the votaries of the twin paths of devotion and music.  In fact tradition current in the world of Karnatic music says that during his visit to and stay in Kanchi, the great composer Muttusvami Dikshita (A.D. 1776-1835), who wrote his songs in Sanskrit, was asked by Upanishadbrahmendra to set the tunes to the latter’s Ramashtapadi.  The manuscripts of the songs of Tyagaraja (A.D. 1767-1847), the other great Karnatic composer and other literary materials that belonged to him, which are preserved now in the Saurashtra Sabha, Madurai, contain the Srimukha or call sent by Upanishadbrahmendra to Tyagaraja, asking the latter to visit Kanchi.  The influence of Upanishadbrahmendra and his ideas and even expression on Tyagaraja, who also adored Rama with music, is clear and this has been already pointed out by the present writer in his Introductory thesis in the Spiritual Heritage of Tyagaraja7 and his critical Introduction to the Upeyanamaviveka. There are some more songs8 of Upanishadbrahmendra which show that he went on pilgrimage to the Cola-mandala and sang on the deities at Chidambaram, Tiruvayyaru (Tyagaraja’s place) and Srivanchyam. Upanishadbrahmendra was thus ceaselessly active.  He is one of the most prolific writers in the recent history of Advaita and Bhakti.  An authentic exponent of Sankara’s Advaita, he yet introduced several minor ideas and correlations; and this he worked out on the basis of what were already found in the earlier authentic literature, but they became a special characteristic of his writings.  With his piety and spiritual exercises, he combined a practical outlook which explains not only the collection of manuscripts in his Matha, but also the care taken by him to mention at the end of each work of his its extent in terms of the number of granthas.  Many of his works still remain to be studied and a connected account of his ideas will form a useful piece of research. SRI ADHI SANKARAR UTSAVA MOORTHY BY 8.00 A.M. TODAY CARRIED WITH VADYAM AND UMBRELLAS BY RAJAVEEDHI TO UPANISHAD MUTT WHICH IS ON THE WAY TO SRI KAILASHANATHA TEMPLE. SRI ADHI SANKARAR WILL GIVE DHARSHAN THERE UPTO 5.00 P.M. IN UPANISHAD MUTT ONE LOVELY OLD SHIVA TEMPLE WHICH ID WORSHIPPED BY SAINT SRI AGASTHIYAR. AND ABOVE ALL ONE SRI RAMA YANTHRAM IS THERE (IN UPANISHAD MUTT) WHICH IS VERY RARE TO SEE. PLEASE HAVE DHARSAN AND GET BLESSINGS FROM GURU,SRI RAMAR AND SRI SIVA. 25 September 2018 Sri Chandramoulisvaraya Namah:

HH Pujyashri Shankara Vijayendra Saraswati Shankaracharya Swamiji will perform Viswaroopa Yatra on Tue- 25th Sep. Yatra will commence at around 4.30 pm from Shrimatam.The Viswaroopa Yatra is performed on the Bhadrapada Poornima (25 Sep this year), signifying the conclusion of the Chaturmasya Vratam – that begins with the Vyasa Pooja on the Ashada Poornima day. Yatra danam is performed at Shrimatam after which, Pujyashri Acharya proceeds on the Vishvaroopa Yatra in a procession of devotees, dundubhi , and mangala vadyam. After crossing the perimeter of the Kanchipuram Town(this year, towards the Western perimeter at the Kasi Viswanatha Swamy temple on the banks of Sarvateertham Tank), Lord Krishna is invoked with the Shloka Vasudeva sutam Devam, Kamsa Chanoora Mardanam I, Devaki Paramanandam Krishnam Vande jagadgurum II and Sri Krishna Pooja is performed. After this, the XI Chapter of Srimad Bhagavad Gita is chanted, as per customs. Important verses are repeated by the assembled gathering. The puja concludes with deepa Aradhana for Lord Krishna. Devotees can participate in the Yatra, and bring the XI Chapter of the Bhagavad Gita along with them and join in the chanting
சாதுர்மாஸ்ய விரதம்

உலக நலனுக்காக எப்போதும் யாத்திரை செய்து கொண்டே இருக்கும் சந்நியாசிகள் துறவிகள் மழைக்காலத்தில் ஜீவராசிகள் பெருகி அலையுமாதளால் தங்கள் நடமாட்டத்தால் அவற்றுக்குத் துன்பம் நேராதவாறு ஒரே இடத்தில் தங்கி விரதம் மேற்கொள்வார்கள். இந்த விரதமே சாதுர்மாஸ்ய விரதமாகும். மழைக்காலம் தொடங்கினால் எங்கும் உயிரினங்கள் பெருகியிருக்கின்றன. அவற்றுக்கு துறவியாகிய நான் துன்பம் இக்ஷைக்காம்லிருக்கும் பொருட்டு இவ்விடத்திலேயே நான்கு மாதங்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி தாருங்கள் ” என்று துறவிகள் ஊர் பொது மக்களைக் கேட்க அதற்கு மக்கள் தங்களது விருப்பம் போல் தாங்கள் இங்கேயே சந்தோஷமாகத் தங்கியிருங்கள். தங்களுக்கு பணிவிடை செய்யக் காத்திருக்கிறோம். என்று பதில் சொல்வதாக சங்கல்பம் செய்து கொன்வது மரபாகும். அப்படித் தங்கியிருந்து விரதம் மேற்கொள்ளும் காலத்தில் வேதாந்த விசாரத்தில் ஈடுபடுவார்கள். சாதுர்மாஸ்ய விரதத்தின் பிரதான அங்கம் வியாச பூஜை. பராசர் முனிவரின் புதல்வரும் ஞானியருள் மிகச் சிறந்தவருமான வேத வியாசருடைய இயற்பெயர் கிருஷ்ணத்வைபாயனர். இவர் தான் வேதத்தை நான்கு வகைப் படுத்தினார். ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படும் மஹா பாரதத்தை இயற்றியவரும் இவர் தான். பத்ம புராணம் ஸ்கந்த புராணம் கருட புராணம் நாரதீய புராணம் எனப்பெருகும் பதினெட்டு புராணங்களை அருளியவரும் இவர் தான். இவரைச் சிறப்பிக்கும் பொருட்டே வியாச பூஜை அனுஷ்டிக்கப்படுகிறது. ஸ்ரீமத் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ரிஷிகளில் நான் வியாசராக இருக்கிறேன் என்று கூறியிருப்பதால் அந்த அடிப்படையில் கிருஷ்ண பரமாத்மாவை மத்தியில் வைத்து சாதுர்மாஸ்ய வியாச பூஜையை நடத்துவார்கள். வியாச பூஜையில் வியாசரின் நான்கு சீடர்களான பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து ஆகியோரும் ஆதிசங்கரரும் அவரது சீடர்களான பத்ம பாதர் ஸூரேச்வர் ஹச்தாமலகறம் தோடகர் ஆகியோரும் குரு தட்சிணாமூர்த்தியின் மாணவர்களான சனகர் சனந்தனர், சனாதனர் சனத்குமாரர் ஆகியோரும் மற்றும் மஹா ந்ஜாநியர்கலான நாரதர் சுகர் கௌடபாதர் கோவிந்த பகவத்பாதர் ஆகியோரும் பூஜிக்கப்படுகிரார்கள் கடைசியாக சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்கிராமமும் பூஜிக்கப்படுகிறது. இதில் முளையில்லாத அட்சதையைப் பரப்பி நடுவில் கிருஷ்ண விக்கிரகமும் சாளக்கிராமமும் வைத்து எலுமிச்சம்பழத்தை ஆங்காங்கு வைத்து குரு பரம்பரை பூஜை நடைபெறும். உலக நலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் ப்ரீதி செய்வதுடன் வியாச பூஜையும் அனுஷ்டிப்பது தான் துறவிகள் மேற்கொள்ளும் சாதுர்மாஸ்ய விரதத்தின் முக்கிய நோக்கமாகும்.
மஹாளய ஸங்கல்பம்.
25-09-2018  செவ்வாய்--மஹாளய பக்ஷ தர்ப்பணங்கள்.

  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, உத்திரப்ரோஷ்டபதி நக்ஷத்திர,

  வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ப்ரதம தின  தில தர்பணம்  கரிஷ்யே.

      26-09-2018  புதன்

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வீதியாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, ரேவதி நக்ஷத்திர,

  த்ருவ- நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்விதீய தின  தில தர்பணம்  கரிஷ்யே.   

 27-09-2018--வியாழன்  

   ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள குரு வாஸர, அஸ்வினி நக்ஷத்திர,

  வ்யாகாத நாம யோக வணிஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாம் த்ருதீயாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ருதீய தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

 28-09-2018-வெள்ளி --மஹா பரணி

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, அபபரணி நக்ஷத்திர,

  ஹர்ஷ நாம யோக பவ  கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்த்த தின  தில தர்பணம்  கரிஷ்யே.

29-09-2018 ஶனி

    ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, க்ருத்திகா நக்ஷத்திர,

  வஜ்ரம் நாம யோக கெளஸ்துப கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சம தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

30-09-2018 ஞாயிறு
 
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள பானு வாஸர,  ரோஹிணி நக்ஷத்திர,

  ஸித்தி நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சஷ்டம தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

 01-10-2018 திங்கள்.வ்யதீபாதம்

  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,

  வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஸப்தம தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

01-10-2018--திங்கள்-வ்யதீபாதம்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,

  வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்

 அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

  02-10-2018--செவ்வாய்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பெளம வாஸர, ஆருத்ரா நக்ஷத்திர,

  வரீயான் நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே அஷ்டம தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

03-10-2018-புதன்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே  நவம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, புனர்வஸு நக்ஷத்திர,

  பரிக நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம்  நவம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே  நவம தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

 04-10-2018 வியாழன்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர, புஷ்ய நக்ஷத்திர,

  ஸித்த நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே தசம தின  தில தர்பணம்  கரிஷ்யே.

05-10-2018—வெள்ளி

    ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, ஆஶ்லேஷா நக்ஷத்திர,

  சாத்ய நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஏகாதஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

06-10-2018--ஶனி -கஜசாயா

   ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, மகா நக்ஷத்திர,

  சுப நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்வாதஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

    07-10-2018ஞயிறு

   ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர,  பூர்வ பல்குனி நக்ஷத்திர,

  சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ரயோதஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே.

  07-10-2018 ஞயிறு-த்வாபர யுகாதி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர,

  சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்

 அக்ஷய த்ருப்தியர்த்தம்  த்வாபர யுகாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 

  08-10-2018 திங்கள்
  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர,

  ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்தஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே.

08-10-2018 திங்கள்
  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர,

  ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய
 த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

  09-10-2018—செவ்வாய்

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர,

  மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சதச  தின  தில தர்பணம்  கரிஷ்யே.

     09-10-2018—செவ்வாய்  வைத்ருதி

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர,

  மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள

 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம்  வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்

முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. #பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.#ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும். யம லோகத்திற்கு போகும் வழி - ஸ்ரீ கருடப் புராணம்.#பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.#சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.#தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.#போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.#யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.#பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.#போகும்போதா வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.#புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.#குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.#போகும் போதோ வரும் போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
#முதல் நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
அருள்மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோயில் திருப்பாதிரிப்புலியூர் {பகுதி – 2}

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஓம் தமிழ் நாள்காட்டி அன்பர்களே தன்நிகரற்ற தனிச்சிறப்பு வாய்ந்த திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தின் தெய்வங்களான அருள்மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் சுவாமி தோன்றிய வரலாறையும் அத்தலத்தின் சிறப்புகள் சிலவற்றையும் அறிந்து அனுபவித்தோம்.ஆண்டவர் அடியவர்களுக்கு செய்த அற்புத வரலாற்றையும் மகிமைகளையும் இனி காண்போம்.

ஞானசம்பந்தர் வழிபாடு:சமயக் குரவர்களில் முதன்மையானவராக போற்றப்படும் திருஞானசம்பந்தர் இத்தல இறைவன் மீது தேவாரப் பதிகம் பாடியுள்ளார்.திருஞானசம்பந்தர் இரண்டாம் திருமுறை பகுதியில் பாடல் – 1311ல் பாடியுள்ளார்.

முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக் கையைப்பெறு வார்களே
(திருஞானசம்பந்தர்)

மாணிக்கவாசகர் வழிபாடு:மாணிக்கவாசகப் பெருமான் இத்தலத்துப் பெருமானை வழிபட தில்லையிலிருந்து வந்தபோது திருப்பாதிரிப்புலியூருக்கு தென்பால் ஓடிக்கொண்டிருந்த கெடிலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மாணிக்கவாசகப் பெருமான் துயருற்றதை அறிந்த பெருமானார் நதியை நகருக்கு வடதிசையாகச் செல்லுமாறு திருப்பி விட்டு, தனது பக்தரான மாணிக்கவாசகர் தன்னை வழிபட அருள்பாலித்தாக தல வரலாறு கூறுகிறது.

அப்பர் வழிபாடு:திருவதிகை வீரட்டானேசுவரர் இறைவனுக்கு திருத்தொண்டாற்றி வந்தவர் அப்பர் பெருமானின்
(திருநாவுக்கரசர்)தமைக்கையார் திலகவதியார் ஆவார்.அப்பர் பெருமான் சமண சமயத்தைத் தழுவி தருமசேனர் என்ற பெயருடன் அச்சமயத்திற்கு தொண்டாற்றி வந்தார். தனது சகோதரன் பிற சமயம் தழுவியமைக்காக திலகவதியார் மிகவும் வருத்தமுற்றிருந்தார்.தனது சகோதரன் சைவ சமயம் திரும்ப இறைவன் அருள்புரிய வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தார்.அதற்கு மனமிறங்கிய வீரட்டானத்து இறைவன் சூலை நோயை(வாயிற்று வழியை) உண்டாக்கினார்.இந்நிலையில் அப்பர் பெருமான் சூலை நோயால் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் சமண சமயக் குருமார்களால் அவரைக் குணப்படுத்த முடியவில்லை என்றும் அறிந்த திலகவதியார் மேலும் வருத்தமுற்று தனது சகோதரைனைக் காத்தருறுமாறு திரிபுர சம்கார மூர்த்தியான வீரட்டானத்து இறைவனை வேண்டினார்.பெருமானும் அவரது வேண்டுதலை ஏற்று அப்பர் பெருமான் சூலை நோயைத் தீர்த்தருளினார்.

அதனால் அகமகிழ்ந்த அப்பர் பெருமான் கூற்றாயினவாறு விலக்கலீர்(திருமுறை-4,பாடல்-1) என்னும் தனது முதல் தேவாரப் பாடலை திருத்தலத்தில் பாடினார்.அதனால் அகமகிழ்ந்த இறைவன் அவருக்கு திருநாவுக்கரசர் என்ற திருப்பெயரிட்டார் என்பது வரலாறு. பின்னிட்டு திருநாவுக்கரசர் சைவ சமயத்திற்கே திரும்பி திருத்தாண்டாற்றினார்.

அப்பர் பெருமான் சைவ சமயத்தைத் தழுவினார் என்பதையறிந்து சினமுற்ற சமணர்கள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த சமண சமயத்தைச் சார்ந்திருந்த மகேந்திரவர்ம பல்லவன் மூலம் பல்வேறு இன்னல்களை திருநாவுக்கரசருக்கு ஏற்படுத்தினர். புத்த மதத்தைத் தழுவியிருந்த மகேந்திரவர்ம பல்லவன் இப்பகுதியில் கி.பி.600-630 களில் ஆட்சி செய்து வந்தான்.அப்போது புத்தமதத்திலிருந்து தனது தாய் மதமாகிய சைவ மதத்தைத் தழுவியதற்காக திருநாவுக்கரசரை கருங்கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசியபோது திருப்பாதிரிப்புலியூர் இறைவனான அருள்மிகு பாடலீசுவரரை எண்ணி பதிகம் பாடினார்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே.
(திருநாவுக்கரசர்)

அருள்மிரு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் அருளாசியால் அக்கருங்கள்ளே தெப்பமாய் மிதந்தது. அப்பர் பெருமான் அக்கருங்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறிய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும். திருநாவுக்கரசர் கரையேறிய அவ்விடம் கரையேறவிட்டகுப்பம் என்ற பெயரில் அந்த ஊர் இன்றும் உள்ளது.பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் இச்சம்பவத்தை மிக அழகாக பாடியுள்ளார்.திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் பகுதியில் பாடல்-1397ல் குறிப்பிட்டுள்ளார்.

வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியுர்ப் பாங்கரில்
(சேக்கிழார்)

முடிவில் திருநாவுக்கரசர் அவற்றிலிருந்து மீண்டதோடு மகேந்திரவர்ம பல்லவனையும் சைவ சமயம் தழுவச் செய்தார் என்பதும் பின்னிட்டு சமண சமய வழிபாட்டுத் தலங்களையும் மடங்களையும் சைவசமயத் திருக்கோயில்களாகவும் மடங்களாகவும் மககேந்திரவர்ம பல்லவன் மாற்றினான் என்பதும் இறுதியில் சமணசமயமே அழிந்து போனது என்பதும் தனி வரலாறு. இன்றளவும் இத்திருக்கோயிலில் பழமையான புத்தரின் சிலை ஒன்று இன்றும் உள்ளது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.மற்ற சிவத் தலங்கள் அனைத்திலும் நாயன்மார்கரள நின்ற திருக்கோலத்திலேயே நமக்கு அருளாசி வழங்குவர்.இத்திருக்கோயிலில் மட்டும் அப்பர் பெருமான் தனிச் சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அடியவர்கள் வழிபாடு:அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானைப் போற்றி ரிணமொடு குருதி நரம்பு மாறிய என்ற திருப்புகழ் பாடலைப் பாடி இத்தலத்து முருகப் பெருமானை வணங்கியுள்ளார்.வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் இத்தலத்து இறைவனை தரிசித்துள்ளார் என்கிறது தல புராணம்.

கோயில் அமைப்பு:கோயில் இராச கோபுரத்திற்கு முன்பாக 24 கற்றூண்களைக் கொண்டு ஊஞ்சல் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.ஊஞ்சல் மண்டபத்தின் மேல்பகுதியில் வடக்கிலும்,தெற்கிலும்,புராண சைவ சமய வரலாற்றை மையப்படுத்திய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.ஊஞ்சல் மண்டபம் இராச கோபுரத்திற்கு முன்பாக உள்ளதால் கோபுரத்தின் முழு அமைப்பைக் காண முடியாது.இராச கோபுரத்தைக் கடந்தவுடன் குதிரை மண்டபம் மடப்பள்ளி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.அவற்றைக் கடந்ததும் அருள்மிகு பாடலீசுவரர் மற்றும் அருள்மிகு பெரியநாயகி அம்பிகை ஆகியோர் தனித்தனியாக அமைக்கப்பட்ட மிகப்பெரிய சன்னதிகளில் காட்சி தந்து அருள்கின்றனர்.மேலும்,அருள்மிகு நடராசப் பெருமான்,வலம்புரி விநாயகர்,சொன்னவாற்றி விநாயகர்,யுக முனிவர்,கஜலட்சுமி, பராசக்தி அம்மன்,வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர்,பிச்சாடனர், காலபைரவர்,அருந்தவநாயகி, சாமுண்டி ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்கின்றனர்.

சிவகார தீர்த்தம்:சிவகர தீர்த்தம் என்பது சிவனும் சக்தியும் ஆகும். கங்கையானவள் மாசி மகத்தன்று சிவகர தீர்த்தத்தில் நீராடி தனது பாவங்கைளைப் போகிக்கி கொண்ட தீர்த்தக் குளம் இங்கு உள்ளது. அப்போதெல்லாம் கங்கை தனது புண்ணியத்தில் ஒரு பகுதியை இங்கேயே விட்டுச் செல்வாளாம். ஆகவே இத்திருக்குளத்தில் நீராடுவதன் மூலம் கங்கையில் நீராடியதன் பலனைப் பெறலாம் என்பர்.

திருவிழாக்கள்:சித்திரை வசந்தவிழா வைகாசிப் பெருவிழா தேர் பவனி ஆனி மாணிக்கவாசகர் விழா ஆடிப்பூரம் விழா புரட்டாசி நவராத்திரி விழா ஐப்பசி அன்னாபிஷேகம் கார்த்திகை சோமவார விழாக்கள் மார்கழி திருவாதிரை விழா தை சமுத்திர தீர்த்தவாரி ஆகியவை பிரசித்தம்.
இதுவரை நாம் திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தில் அருளாட்சி செய்து வரும் இறைவனின் மகத்துவங்களை எல்லாம் நிறைவாக அறிந்து தரிசித்தோம்.அப்பர் பெருமானுக்கு அருள் செய்ததைப் போல அவனியில் வாழும் அணைத்து உயிர்கட்கும் அருள் செய்ய வேண்டுமென்று வேண்டி வணங்கி திருப்பாதிரிப்புலியூர் வரலாற்றை நிறைவு செய்கிறோம்.

அருள்மிகு பெரியநாயகி
திருவடி மலரடி போற்றி! போற்றி!
அருள்மிகு பாடலீசுவரர்
திருவடி மலரடி போற்றி! போற்றி!
 போக்குவரத்து வசதி

சென்னையிலிருந்து நேரடியாகக் கடலூருக்குப் பேருந்து வசதி உள்ளது. எழும்பூரிலிருந்தும் தாம்பரத்திலிருந்தும் தொடர் வண்டி வசதிகள் உள்ளன.புதுவைக்கு தெற்கே கிழக்கு கடற்கரை சாலையில் 20 கி.மீ. தொலைவில் திருப்பாதிரிப்புலியூர் அமைந்துள்ளது.புதுவையிலிருந்து ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் கடலூருக்கு பேருந்து வசதி உள்ளது.

சன்னதித் தெருவிலும் அதனையொட்டிய பகுதிகளிலும் தங்குமிடங்கள் உள்ளன.பேருந்து நிலையம் மற்றும் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகிலும் தங்குமிடங்கள் ஏராளமாக உள்ளன.

தரிசனம் நேரம்:காலை 06.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை.மாலை 04.00 மணி முதல் இரவு 08.30 வரை.

திருக்கோயில் நிர்வாகம்:தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இத்திருக்கோயில் உள்ளது.

திருக்கோயில் முகவரி:நிர்வாக அதிகாரி,அருள்மிகு பிரகன்நாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோயில்,
திருப்பாதிரிப்புலியூர்,கடலூர்-2
அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,திருவல்லிக்கேணி
                                             {பகுதி:1}

திருவரங்கம் திருவேங்கடம் காஞ்சிபுரம் திருஅயோத்தி திருஅகோபிலம் ஆகிய ஐந்து திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் அமையப்பெற்ற அற்புதத்தலம்.108 வைணவ திவ்ய தேசங்களில் பெருமாள் மீசையுடன் காட்சியளிக்கும் அழகியத் திருத்தலம். கிழக்கு, மேற்கு ஆகிய இரண்டு வாயில்களில் இரண்டு மூர்த்திகள் முதல் மூர்த்தியாக சேவை சாதிக்கும் புண்ணியத் தலம். ஸ்ரீபெரும்புதூர் மாமுனி உடையவர் இராமானுஜர் என்னும் எதிராஜரை இந்த பூமிக்கு தந்தருளிய பெருமாள் குடிகொண்டுள்ள ஒப்பற்ற தலம்.108 வைணவ திவ்ய தேசங்களில் 60வது திருத்தலம். பேயாழ்வார் திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்த திருத்தலம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் போலவே ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும் சிறந்ததொரு திருத்தலம். இவ்வாறு ஏராளமான பெருமைகளையும் மகிமைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும்.

திருவட்டாறு திருசிற்றாறு ஆகிய தலங்களைப் போலவே தீர்த்தத்தின் பெயரால் பெருமை பெற்ற தலங்களில் திருவல்லிக்கேணியும் ஒன்று.இத்தல தீர்த்தத்திற்கு கைரவணீஎன்று பெயர்.கைரவம் என்பதற்கு செவ்வல்லி என்பது பொருள்.புராண காலத்தில் இத்தீர்த்தத்தில் செவ்வல்லி மலர்கள் பூத்துக் குலுங்கிய காரணத்தால் தமிழில் அல்லிக்குளம் என்றும் வடமொழியில் கைரவணி என்றும் குறிப்பிட்டனர்.பிற்காலத்தில் அல்லிக்கேணி என்ற பெயரில் இத்தலம் அழைக்கப்பட்டது.திருமால் குடிகொண்டுள்ள அல்லிக்கேணி என்பதால் இவ்விடம் திருவல்லிக்கேணி எனப் பெயர் பெற்றது.

திருவல்லிக்கேணி திருத்தலத்தில் பரந்தாமனான திருமால் ஐந்து வடிவங்களில், ஐந்து சன்னதிகளில் தனித்தனியாக சேவை சாதிக்கிறார்.

அருள்மிகு வேங்கடகிருஷ்ணன் (பார்த்தசாரதி),
அருள்மிகு மனநாதர் (அரங்கநாதர்),
அருள்மிகு இராமபிரான்,
அருள்மிகு கஜேந்திர வரதர்,
அருள்மிகு தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்).

இந்த ஐந்து மூர்த்திகளின் கருவறைகள் மீதும் ஆனந்த விமானம் பிரணவ விமானம் புஷ்பக விமானம் சேஷ விமானம் தைவீக விமானம் ஆகிய ஐந்து விமானங்கள் அமைந்துள்ளன. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் அமையப் பெற்றது மிகச்சிறந்த ஒன்றாகும். அதில் மனநாதராகிய அரங்கநாதர் சன்னதி மட்டுமே மிகப் தொன்மையானது.

தலைக்குறிப்பு:
மூலவர் :வேங்கடகிருஷ்ணன்
உற்சவர் :பார்த்தசாரதி
தாயார் :ருக்மணி தாயார்
ஆகமம் :வைகானசம்
தீர்த்தம் :கைரவணீ புஷ்கரணி
புராணப்பெயர் :விருந்தாரன்ய செத்திரம்
ஊர் :திருவல்லிக்கேணி

பார்த்தசாரதி வரலாறு:பகவான் கண்ணன் துவாபரயுகத்தின் முடிவில் கிருஷ்ணாவதாரம் எடுத்த நோக்கம் முடிவுற்றதும் வைகுண்டம் செல்கிறார்.அப்போது கலியுகம் தோன்றுவதற்கான தூர்நிமித்தங்கள் ஏற்படுகின்றன.கலியின் கொடுமையால் பூமியில் அதர்மங்கள் தழைத்தோங்கும் என்பதை அறிந்த ஆத்ரேய மகரிசி தனது குருவான வியாச மகரிசியை சந்தித்து, நல்லவர்கள் கலியின் கொடுமையிலிருந்து விடுபட்டு உய்யும் வகையைக் கூறுமாறு வேண்டினார்.

அப்போது வியாசர் அதுவரை தாம் ஆராதித்து வந்த "பார்த்தசாரதி பெருமாளின்" திருமேனி உருவத்தைத் தந்து தென் பாரதத்தில் துளசிவனம் நிறைந்து காணப்படும் விருந்தாரன்யத்தில் உள்ள (ரங்கநாதர்)மனநாதன் திருக்கோயிலில் வைத்து ஆகம முறைப்படி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் ஏற்படும் என்றார்.திருவல்லிக்கேணி தலம் அமைந்துள்ள பகுதி புராண காலத்தில் விருந்தாரண்யம் என்று அழைக்கப்பட்டது.அதன்படியே ஆத்ரேய மகரிசியும் விருந்தாரண்யம் வந்து அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியின் திருவுருவத்தை வைத்து வழிபாடு செய்து வந்தார்.கலியின் கொடுமையிலிருந்து பூமியைக் காக்கும் பொருட்டு பார்த்தசாரதி சுவாமியை இங்கு வைக்கப்பட்டதால் அன்றுமுதல் இக்கோவிலில் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியே முதன்மையான கடவுளாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

வேங்கடவன் திருநாமம்:பிற்காலத்தில் துண்டீரம் என்ற நாட்டை சுமதி என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான்.துண்டீரம் என்பதே துண்டீர மண்டலம் என ஆகி அதுவே திரிந்து பிற்காலத்தில்"தொண்டை மண்டலம்"ஆயிற்று என்பர்.அரசன் சுமதி திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள திருவேங்கடமுடையான் மீது தீவிர பக்தி கொண்டு வழிபட்டு வந்தான்.

இவ்வரசனுக்கு பார்த்தனுக்கு
(அர்ச்சுனனுக்கு) சாரதியாக
(தேரோட்டியாக) விளங்கிய கிருஷ்ணன் திருக்கோலத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே சுமதி தனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு ஏழுமலையானான திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டினான்.அவன் பக்திக்கு மனமிறங்கிய "ஏழுமலையான் வெங்கடேசர்" அவன் கனவில் தோன்றி விருந்தாரண்யம் சென்றால் விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார்.அதன்படியே மன்னன் சுமதி விருந்தாரண்யம் வந்து ஆத்ரேய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டு வந்த அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோலத்தைக் கண்டு மனம் குளிர சேவித்தான்.திருமலையில் உள்ள வேங்கடநாதனே இங்கு கிருஷ்ணனாக காட்சி தருவதைப்போல உணர்ந்தான். எனவே "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தான். அன்று முதல் இன்று வரை இத்திருக்கோயில் மூலவருக்கு "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் இத்தளத்தின் மீது பத்து பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். திருமங்கையாழ்வார் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியை பெரிய திருமொழி பகுதியில், இரண்டாம் பத்து, மூன்றாம் திருமொழியில் அழகாக பாடியுள்ளார்.

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை புரமெரி செய்த
சிவனுரு துயர்களை தேவை பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்
திருவல்லிக்கேணி கண்டேனே.
(திருமங்கையாழ்வார்)

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி தமது குடும்பத்துடன் காட்சியளிக்கிறார். ஒரே கருவறையில் பகவான் தமது உறவினர்களுடன் காட்சியளிக்கும் திருக்கோலத்தை "பஞ்ச வீர வழிபாட்டு மரபு" என்று அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்பு திருத்தங்கல் (89வது திவ்யதேசம்)திருநறையூர் என்னும் நாச்சியார்கோவில்(14வது திவ்யதேசம்)தேரழுந்தூர் (23வது திவ்யதேசம்)ஆகிய திவ்யதேசங்களில் காணப்படுகின்றன.

கருவறையில் மூலவர் அருள்மிகு வேங்கட கிருஷ்ணன், நின்ற திருக்கோலத்தில் இரண்டே திருக்கரங்களுடன் வலது கரத்தில் "பாஞ்ச சன்யம்"என்னும் சங்கை ஏந்தி இடதுகரம் வேங்கடவனைப் போன்று கீழ் முகமாக நோக்கி தான முத்திரையைக் காட்டுகிறது. மேலும் இடுப்பின் மேல்புறம் பேரொளி வீசும் வாள் ஒன்று தொங்குகிறது.

மகாபாரதத்தில் கண்ணபிரான் யுத்தத்தின் போது ஆயுதம் எடுப்பதில்லை என்று துரியோதனனிடம் சபதம் செய்தார். பிறகு வாள் ஏன் உள்ளது? என்ற கேள்வி எழக்கூடும்.இதற்கு வைணவப் பெரியவர்கள் பகவத்கீதையில் நான்காம் அத்தியாயம் 42வது சுலோகத்தில் உள்ளதைக் கொண்டு விளக்கம் அளிக்கின்றனர்.

அஞ்ஞானத்தின் பிடியில், அதாவது உலகப் பற்றில் அடைபட்டுக் கிடந்த பார்த்தனிடம் அஞ்ஞானத்திலிருந்து பிறந்ததும் உள்ளத்தில் உறைவதும் ஆகிய இந்த பற்றிலிருந்து விடுபட ஞானமென்னும் வாளால் வெட்டி, யோகத்தில் நிலைபெறுக! பார்த்தா எழுந்திரு! என்று கூறுகிறார். நம்மைப் போன்ற சாதாரண மக்களிடம் ஏற்படக்கூடிய அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுவதரற்க்காகவே பகவான் இத்தலத்தில் ஞானவாளுடன் சேவை சாதிப்பதாக வைணவப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

பெருமாளுக்கு வலதுபுறம் "ருக்மணி பிராட்டி" அழகிய திருமேனியோடு காட்சி தருகின்றார்.

பெருமாளுக்கு இடதுபுறம் தம்பி சாத்தகி கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகின்றார். சாத்தகி தனது வலது கரத்தில் கட்கம் என்ற குறுவாளை ஏந்தியும், இடது கரத்தில் வரத முத்திரையை காட்டியும் சேவை சாதிக்கிறான்.

சாத்தகி எவ்வாறு கண்ணனுக்கு தம்பி முறை ஆகவேண்டும் என்பதற்கு மகாபாரதத்தில் சில குறிப்புகள் உள்ளன. கண்ணனின் தாயார் தேவகியின் சுயம்வரத்தின் போது ஏராளமான அரசர்கள் வந்தனர். மதுராபுரியின் அரசகுமாரரான வசுதேவருக்காக அவரது சகோதரன் “சினி” என்பவன், சுயம்வரத்தில் கலந்து கொண்ட அணைத்து அசுரர்களையும் வென்று வசுதேவரை தேவகிக்கு மனம் முடித்து வைத்தான். இந்த சினியின் மகனே சத்யகன். சத்யகன் மகனே சாத்தகி. எனவே விருட்னி குலத்து வீரனான சாத்தகி கண்ணனுக்கு தம்பிமுறை ஆகிறான்.

ருக்மணி பிராட்டிக்கு வலதுபுறமாக கண்ணனின் தமையனான பலராமர் கலப்பையுடன் வடக்கு நோக்கியவாறு காட்சி தருகின்றார்.

சாத்தகிக்கு அடுத்ததாக மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோர் தெற்கு நோக்கியவாறு காட்சி தருகின்றனர்.

ஒருமுறை சிவபெருமான் மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் எரித்து விடுகிறார். இந்த மன்மதன் கண்ணனுக்கும், ருக்மணி பிராட்டிக்கும் மகனாகப் பிறக்கின்றான். பேரழகு வாய்ந்த பிரத்யும்னன், சம்பராசுரனின் அரண்மனையில் வசித்து வந்த ரதிதேவியின் அம்சமான மாயாவதி என்பவளைத் திருமணம் செய்கிறான். பிரத்யும்னன் மாயாவதி தம்பதியர்கட்கு பிறந்தவனே அநிருத்தன்.இவன் கண்ணனின் பேரன் ஆவான்.

இதுவரை நாம் திருவல்லிக்கேணி திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள ஐந்து மூர்த்திகளில் ஒருவரான அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி தோன்றிய வரலாற்றை மட்டுமே ஆரிந்துள்ளோம். முழு வரலாற்றையும் அறிந்துகோள்ள இன்று ஒரு நாள் போதுமா?

தொடரும்
வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு  கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில்  புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே,  வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள  வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர என்றால் "கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது,  "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய  சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?

பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே!எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருள்.  இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்.
அம்மன் கோயில்களில் மாவிளக்கு ஏற்றுவது ஏன்?

நம்மையே விளக்காகவும், மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது. அம்மன் கோயில்களில் மட்டுமல்ல, அவரவர் குல தெய்வத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்ய வேண்டும்.
பயம் நீக்கும் நவதுர்க்கை மந்திரம்!

துர்க்காதேவி ஒருத்தி என்றாலும், அவள் ஒன்பது வகைகளில் தெய்வங்களுக்கும், பக்தர்களுக்கும் உதவியிருக்கிறாள். இன்றும், நமக்கு பாதுகாப்பாக நின்று அருளுகிறாள். எனவே, இவளை ஒன்பது வடிவங்களாகக் கருதி ஓம் வனதுர்க்கையே நம: ஓம் சூலினி துர்க்கையே நம: என்று ஒன்பது துர்க்கைகளுக்குரிய மந்திரத்தையும், நாளொன்றுக்கு ஒரு துர்க்கைக்குரிய மந்திரம் வீதம் 108 முறை சொல்ல வேண்டும். இவ்வாறு செய்தால் காரணமற்ற பயம் நீங்கும்.

1. வன துர்க்கை: பிறவிப் பெருங்காட்டை அழிப்பவள்
2. சூலினி துர்க்கை: திரிபுரம் எரிக்க சிவனுடன் சென்றவள்
3. ஜாதவேதோ துர்க்கை: முருகன் உதித்தபோது அக்னிக்கும் வாயுவுக்கும் அருளியவள்
4. ஜுவாலா துர்க்கை: பண்டாசுரனை வதம் புரிய அனல் பிழம்பாகி அரண் அமைத்தவள்
5. சாந்தி துர்க்கை: தட்ச யாகத்தின் போது கோபமடைந்த சிவனை சாந்தப்படுத்தியவள்
6. சபரி துர்க்கை: அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிக்க சென்ற சிவனுடன்  வேட்டுவச்சி வடிவில் சென்றவள்
7. தீப துர்க்கை: பக்தர்களுக்கு ஒளியாய் நின்று உதவுபவள்
8. ஆசுரி துர்க்கை: அமுதம் கிடைக்க திருமாலுக்கு உதவியவள்
9. லவண துர்க்கை: லவணன் என்ற அசுரனை சத்ருக்கனன் வென்று வர  உதவியவள்.
வலம்புரிச் சங்கு தன்மைகள்

*மஹாலக்ஷ்மியீன் இருப்பீடம்
* சொந்தமாக தொழில் செய்பவர்கள் அவர்களின் வியாபார தலங்களில் இச்சங்கினை வைத்தால் தொழில் மேன்மையடைவதோடு பணம் தங்குதடையின்றி புரளும்
*புதுமனை வாங்கி, அங்கு வீடுகட்டிக் குடியேறுபவர்கள் சிறப்பாய் வாழ்ந்திடும்போது கண் திருஷ்டி நீங்கவும்,
*வியாபாரச் சரிவு தடுக்கவும்,
*கடன்கள் தொல்லை தடுக்கவும்,
*கல்வியில் கவனமின்மை நீங்கவும்,
*தொழில் கூடங்களில் தொய்வு தடுக்கவும்,
*எதிரிகளால் தொல்லை தடுக்கவும்,
*தொஷத்தால் வரும் திருமணத்தடை தடுக்கவும்
*வாஸ்து குறைகள் முற்றிலுமாக நீங்கவும்,
*நினைத்த காரிய வெற்றி உண்டாகவும்,
*ஆவி பிரச்னைகளை தீர்க்கவும் இதன் முலம் செய்யும் அபிஷகதிற்கு 10 மடக்கு பலன் இருக்கும இல்லத்தில் இந்த உயிரோட்டமும் சக்தியும் கொண்ட வலம்புரிச் சங்கினை வாங்கி வைத்து வழிபட்டு வந்தால் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் மற்றும் மன அமைதி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
*பூஜை அறையில் சுவாமிக்கு முன்பாக வைக்கவேண்டும். தினமும் அதில் தண்னிர் மாற்ற வேண்டும். அந்த ஜலத்தை வீடு முழுவதும் சுத்தி செய்வதற்கும் உபயோகிக்கலாம். அல்லது முகம் அலம்புவதற்கும் பயன் படுத்திக் கொள்ளலாம்,வலம்புரிச் சங்கு தன்மைகள்

*மஹாலக்ஷ்மியீன் இருப்பீடம்
* சொந்தமாக தொழில் செய்பவர்கள் அவர்களின் வியாபார தலங்களில் இச்சங்கினை வைத்தால் தொழில் மேன்மையடைவதோடு பணம் தங்குதடையின்றி புரளும்
*புதுமனை வாங்கி, அங்கு வீடுகட்டிக் குடியேறுபவர்கள் சிறப்பாய் வாழ்ந்திடும்போது கண் திருஷ்டி நீங்கவும்,
*வியாபாரச் சரிவு தடுக்கவும்,
*கடன்கள் தொல்லை தடுக்கவும்,
*கல்வியில் கவனமின்மை நீங்கவும்,
*தொழில் கூடங்களில் தொய்வு தடுக்கவும்,
*எதிரிகளால் தொல்லை தடுக்கவும்,
*தொஷத்தால் வரும் திருமணத்தடை தடுக்கவும்
*வாஸ்து குறைகள் முற்றிலுமாக நீங்கவும்,
*நினைத்த காரிய வெற்றி உண்டாகவும்,
*ஆவி பிரச்னைகளை தீர்க்கவும் இதன் முலம் செய்யும் அபிஷகதிற்கு 10 மடக்கு பலன் இருக்கும இல்லத்தில் இந்த உயிரோட்டமும் சக்தியும் கொண்ட வலம்புரிச் சங்கினை வாங்கி வைத்து வழிபட்டு வந்தால் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் மற்றும் மன அமைதி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
*பூஜை அறையில் சுவாமிக்கு முன்பாக வைக்கவேண்டும். தினமும் அதில் தண்னிர் மாற்ற வேண்டும். அந்த ஜலத்தை வீடு முழுவதும் சுத்தி செய்வதற்கும் உபயோகிக்கலாம். அல்லது முகம் அலம்புவதற்கும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
எட்டு சிவவிரதங்கள்

1. சோமவார விரதம்;
திங்கள் கிழமைகளில் இருப்பது

2. உமா மகேஸ்வர விரதம்;
கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது

3. திருவாதிரை விரதம்;
மார்கழி மாதத்தில் வருவது

4. சிவராத்திரி விரதம்;
மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது

5. கல்யாண விரதம்;
பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது

6. பாசுபத விரதம்;
தைப்பூச தினத்தில் வருவது

7. அஷ்டமி விரதம்;
வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது

8. கேதார கவுரி விரதம்;
ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.
திருமணம் நடத்த சூப்பர் ஸ்டார் எது?

திருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம் "சுவாதி என்று யஜுர்வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இது நரசிம்மருக்குரிய நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் திருமணம் நடத்தப்பட்டால், அந்தப் பெண் கணவனிடம் கோபித்துக் கொள்ள மாட்டாள். புகுந்தவீட்டிற்கு பெருமையும், பிறந்த வீட்டுக்கு நற்பெயரும் வாங்கித் தருவாள். கணவர், மாமியார், நாத்தனார் பிரச்னை செய்கிறார்கள் என கண்ணைக் கசக்கிக் கொண்டு வீட்டுக்கு வரமாட்டாள் என்றும் யஜுர் வேதத்தின் முதல் அஷ்டகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.  இதுதவிர, ஒரு பெண்ணின் ஜென்ம (பிறந்த) நட்சத்திரத்தில் இருந்து எண்ணும் போது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 24வது நட்சத்திரங்களும் திருமணம் நடத்த சிறந்தவையே.
தெய்வங்களுக்கு வாழைப்பழம் வைப்பது ஏன்?

 எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டு விட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல வாழை மரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.
தாலி கட்டும் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள்…

இந்துக்களை அவமானப்படுத்தும் விசமிகளின் செயல் வருத்தத்திற்குரியது. உண்மைக்கு குரல் கொடுப்பதுகாலத்தின் தேவையாகின்றது. வைதீக முறைப்படி நடைபெறும் திருமணத்தில், தாலி கட்டும் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள் என்ன என்று தெரியுமா ..?!

‘மாங்கலயம் தந்துனானே’ என தொடங்கும் இம்மந்திரத்தில், ”சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதிதுரியஸ்தே மனுஷ்ய ஜாஹ” என்ற வரிகள் வரும்.

விசமிகளால் வெளியிடப்பட்டுள்ள பொய்யான விளக்கம் கீழ்வருமாறு.

”நீ(மணமகள்) முதலில் சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய்,
பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.”

இந்த மந்திரத்திற்கு உண்மையான பொருள் கீழ்வருமாறு:

நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கிறோம். கண்களுக்குச் சூரிய பகவான்; கைகளுக்கு இந்திரன் – இது போன்று. இதே போல குழந்தை ஜனித்ததிலிருந்து அது வளர்ந்து பெரியவனா(ளா)கும் வரை ஒவ்வொரு பருவத்திலும் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. ஓவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்திற்கு – தெய்வத் தன்மைக்குப் ஒப்புமைப் படுத்தியிருக்கிறோம்.

இதன்படி ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம் வரை “ஸோமனின் (Moon God)ஆதிக்கத்தில்” இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போலவே “குளிர்ச்சியாக” இருக்கிறாள். (ஆண்கள் அணியும் வேஷ்டியின் பெயரும் சோமன்).

பிறகு இந்தச் “சோம பருவத்திலிருந்து” “பூப்பெய்தும் பருவம் வரை” விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பியிருக்கும் பெண் குழந்தை. இப்பருவத்தில் அவள் “கந்தர்வனின் ஆதிக்கத்தில்” இருக்கிறாள் அவள். அதாவது விளையாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய கந்தர்வ பருவம்!

பூப்பெய்திய பருவத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை அவள் “அக்னியின் ஆதிக்கத்தில்” – அதாவது அக்னி போன்று எழுந்து தகிக்கும் காம உணர்வுகளுடன் – இருக்கிறாள்.

இப்பொழுதிருக்கும் எவ்வித வசதிகளுமற்ற, எந்தவித நவீனத் தாக்கங்களும், தேவைகளுமற்ற எளிய வாழ்க்கை வாழக்கூடிய காலகட்டத்தை மனதில் கொண்டால், பெண் வீட்டைப் பார்த்துக்கொள்ள, ஆண் வெளியில் வேலை செய்து பொருளீட்டி ஜீவனத்தை நடத்தும் குடும்ப அமைப்பை மனதில் கொண்டால், பருவமடைந்து அக்னியின் பிடியில் இருக்கும் – காம உணர்வுகளில் உந்தப்பட்டுக்கொண்டிருக்கும
ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொடுப்பதே பெற்றவர்களின் முக்கிய கடமையாக இருந்தது – அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கும் பெண் – குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகி, திருமணம் செய்விக்கப்பட்டு ஓர் ஆண்மகனின் கைகளில் ஒப்படைக்கப் படுகிறாள்.

ஆக, நிலவைப் போல் குளிர்ந்து நிற்கும் குழந்தை, விளையாட்டுத் தனம் நிரம்பி அழகு ததும்பும் பருவத்தைக் கடந்து, பூப்பெய்தி, பிறகு அவ்வயதிற்குரிய உணர்வுகளால் உந்தப்பட்டு காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கும் போது, ஆண்மகனைக் கைப்பிடித்து திருமண பந்தத்தின் மூலம் குடும்ப வாழ்க்கையைத் துவங்குகிறாள் – என்று இதைப் புரிந்துகொண்டால் நலம்.
ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை நீரால் அலம்பி விட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.
சிவனின் சிறப்பு செய்திகள்

* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.

* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

* தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

* அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

* காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.

* மகாராஷ்டிரா மாநில் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

* பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்’டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.

* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் “ஜ்வரஹரேஸ்வரர்’ என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திபருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
திருவண்ணாமலை தீர்த்தங்கள்!

தெய்வத் திருமலை திருவண்ணாலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம்.

இந்தத் தீர்த்தங்களிலே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில:

திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும். அங்கு நீராடிய இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப்பெற்று தொடர்ந்து இந்திரப் பதவியை வகிக்கும் பேறு பெற்றான்.

திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னிதேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டான்.
திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவள் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும். அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.

திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.

திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார். அத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும்.

திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார்.
நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம்.

திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.

திருவண்ணாமலைப் பெருமான் கோயிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள்.

திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம். அதில் நீராடுவோரும், அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரக்கடல் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர்.

திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.

விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், கங்கை, பார்வதி, பைரவர், சப்த கன்னியர், அட்டவசுக்கள், தேவர்கள் ஆகியோர் மூழ்கி எழுந்த தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றின் பெருமையை வேதங்களும் அறியாது.

திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும், மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் பத்தாவது நாளில் தீர்த்தவாரி என்ற நிகழ்ச்சி திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.

தீர்த்தவாரி நடைபெறும்போது மக்களின் ஆன்மா குளிர்ச்சியடைகிறது. அதாவது இறைவனோடு இறைபக்தியும் சேர்கிறது. திருவண்ணாமலை திருக்கோயில் இறைவன் மணலூர்பேட்டை சென்று தீர்த்தமாடுவதும், கலசப்பாக்கம் சென்று தீர்த்தமாடுவதும் அந்தந்த ஆற்றிற்கு சிறப்பாகும்.

எல்லா நதிகளும் அங்கு ஒன்றாகக் கலந்து இறைவனை வழிபடுவதாக அர்த்தம். ஆக, தீர்த்தவாரி என்பது மிகவும் முக்கியமானதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள்கூடி இறைவன் தீர்த்தவாரி செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்போது தாங்களும் நீராடுவதால் தங்களுடைய பாவங்களைத் தீர்த்தது போல் ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு மனநிம்மதி அடைகின்றனர்.