வியாழன், 11 பிப்ரவரி, 2021

பிராமணர்கள் அதுவும் வைதீக குடும்பத்தில் இருப்பவர்கள் மடி, ஆச்சாரம் என்று சொல்லிக் கொண்டு கண்ட இடத்திலும், இதராவாத்திலும் சாப்பிடுகிறார்கள். இதனால் இவர்களின் ஆச்சாரம், சுத்தம், சுகாதாரம் இவை அனைத்தும் போய் விட்டதே. பிறகு எப்படி இவர்களை மற்றவர்கள் மதிப்பார்கள். அடியேன் எல்லோரையும் சொல்ல வில்லை. ஒரு சிலர் அப்படி இருக்கிறார்கள். அதனால் சொன்னேன். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.



இல்லை ஜி தேவையான பதிவு தான் ஜி... அடியேன் சொந்தகாரர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அவர்களின் அக்கா குடும்பம் ரொம்ப ஆச்சாரம். அதனால் அடியேனிடம் இட்லி, தயிர் சாதம் கேட்டார்கள். அடியேனும் ஆத்துக்கு வந்து குளித்து இட்லி, தயிர் சாதம் செய்து எடுத்து கொண்டு போய் கொடுத்தேன். அதை வாங்கி கொண்டு புறப்பட்ட அவர்கள் வழியில் அந்த சாப்பாட்டை தூக்கி எறிந்து விட்டார்கள். இது நேற்று முன் தினம் தான் எனது மாமாவிடம் பேசும் போது மாமா சொன்னார். மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதற்கு அடியேனிடம் கேட்டு இருக்க வேண்டாம். ஒரு வேளை அவரிகளுக்கு பிடிக்க வில்லை என்றால் ஏதாவது ஏழைக்கு கொடுத்து இருக்கலாம். இப்படி தூக்கி எறிந்ததால் தான் இந்த பதிவே போட்டேன். மற்ற படி யாரையும் குறை கூறுவது அடியேனின் விருப்பம் இல்லை.