ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

ஶ்ரீ காயத்ரி மஹா மந்த்ரத்தை இப்படியெல்லாம் நாம் பயன்படுத்த கூடாது. கீழே தரப்பட்டுள்ளதை பார்க்கவும்.

1) ரிங்டோனில் போடக்கூடாது

2) சலூன் கடையோ, டீக்கடையோ, மற்ற கடைகளோ, ஆபீஸிலோ, எந்த அலுவலகத்திலோ பயன் படுத்தக்கூடாது.

3) காலர் டியூனில் கூடாது.

4) ரிவர்ஸ் ஹார்னில் கூடாது.

5) சினிமா, மற்றும் எந்த நிகழ்ச்சியிலும் உபயோகப் படுத்தக்கூடாது.

6) ஆன்மீக இடங்கள் மற்றும் கோவில்களிலும் (பிரைவேட்) வெளிப்படையாக  chanting அனுமதிக்ககூடாது.

7) பெண்கள் ஜபிக்கவே கூடாது.

8) யாருமேகூட வாயால் சொல்லக்கூடாது.

9) உதடே அசையாமல் 'ஜபிக்க வேண்டும்'.

10) பொழுது போக்கு சமாச்சாரம் அல்ல. இப்போது உள்ள இந்த அனர்த்ததுக்கு எல்லாம் காரணம்

நாம் செய்யவேண்டியதை செய்யாததும், செய்யக்கூடாததை செய்வதால் வரும் விபரீதம் மட்டுமே.

வெறும் பூணல் உள்ளவர்கள் பிராமணர்கள் அல்ல.

அன்றாட அநுஷ்டானத்தை தகுந்த முறையில் நடைமுறைப் படுத்துவதிலேயே பிராமணத்தும் பூரணமாக உள்ளது.

அன்றாட அநுஷ்டானம் கடினமானது அல்ல

நேற்று வந்த கம்யூட்டர், போன் கற்றுக்கொள்ள முடியும்.

அநுஷ்டானம் கற்றுக்கொள்ள முடியாதா.

முடியாவிட்டாலும் பரவாயில்லை

மற்றவர்களை திசை திருப்பி  அவர்களை கெடுக்க எந்த முயற்சியும் யாருமே செய்யக்கூடாது.

நம்மை நாம் மதிப்போம்.

நமது சம்ரதாயத்தை மதிப்போம்.

நமது ஆசாரியனை மதிப்போம்.

நமது அன்றாட அநுஷ்டானத்தை மதிப்போம்.

பஞ்ச கச்சம் தெரியாது.

பஞ்சாக்ஷரம் தெரியாது.

பசு பந்தம் தெரியாது.

பாரதத்தின் பெருமை தெரியாது.

பல கோத்ரங்களின் தாத்பர்யம் தெரியாது.

பரந்தாமனையும், பரமசிவனை மட்டும் எப்படி தெரிந்து கொள்வது அவர்களாளும் தான் எப்படி அநுஹ்ரகம் பண்ணமுடியும், நாம் அதற்காக தயாராகவில்லை என்றால்.

யோசித்து நம் வழியில் அமைதியாக பயணிப்போம்

ஸந்த்தோஷம்

தாஸன் 🙏🙏🙏🙏   இது முகநூலில் வந்த பதிவு .