செவ்வாய், 19 செப்டம்பர், 2023

36. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

36. ஸ்ரீ சித் சுகாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

முப்பத்தி ஆறாவது ஆசார்யர் கி.பி. 738 - 758

ஸ்ரீ சித் சுகாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் பாலாற்றங்கரையில் உள்ள தோரூரில் தமிழ் அந்தண மரபினத்தவர். இவரின் தந்தையின் பெயர் ''ஸோம கிரி''. பெற்றோர் வைத்த பெயர் ''சுரேசர்'’.

இவரை கூடுதலாக ''சிதாநந்தர்'' என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் தமிழகம் எங்கும் பல யாத்திரைகள் செய்து மக்களுக்கு தனது ஆசிகளையும், அன்பையும் பொழிந்தார்.

ஸ்ரீ சந்திரமௌளீஸ்வர பூஜை செய்வதில் ஆளாதி ப்ரியமுடன் செய்வார்.

இவர் கி.பி. 758 ஆம் ஆண்டு, ஹேவிளம்பி வருடம், ஐப்பசி மாதம், பௌர்ணமி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 21 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.


35. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

35. ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

முப்பத்தி ஐந்தாவது ஆசார்யர் [கி.பி. 710 - 737]

ஸ்ரீ சித்சு சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு ஆச்சார்யர்.

இவர் வேதாசலத்தைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் ''விமலாக்ஷர்''. தந்தை இவருக்குச் வைத்த பெயர் “சுசீல கமலாக்ஷர்''.

சஹ்ய மலைத் தொடரில் காவிரி உற்பத்தியாகும் தலைக் காவேரிப் பகுதியிலுள்ள கவேர முனிவரின் குகையில் நீண்ட நெடும் காலம் உறைந்து தவமாய் தவமிருந்தவர். இவர் "பகுரூப சித்சுகர்” என அழைக்கப்பட்டார்.  இவர் தனது வாழ்நாள் பாதி காலம் கடும் தவத்திலேயே கழித்தார். பேசுவதை விட மௌனமாக இருப்பதையே அதிகம் விரும்பியபடி வாழ்ந்தார்.

இவர் கி.பி.737 ஆம் ஆண்டு, தாது வருடம், ஆடி மாதம், சுக்ல பக்ஷம், சஷ்டி திதியில் சஹ்ய மலையில் சித்தி அடைந்தார்.

இவர் 27 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.


34. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

34. ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று

முப்பத்தி நான்காவது ஆசார்யர் [கி.பி.692 - 710]

ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று வேகவதி ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிறிய ஊரில் பிறந்தார். தந்தையின் பெயர் ''மகா தேவர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''சம்பு''.

இவர் இந்தியா முழுவதும் பல விஜய யாத்திரைகள் புரிந்தவர். செயற்கரிய செயல்கள் புரிந்தவர். ஒரு சமயம் காட்டுத் தீயில் ஒரு குழந்தை அகப்பட்டுக் கொண்டது. அந்த குழந்தையின் பெற்றோர் தவித்தனர். அப்போது அங்கே யாத்திரையாக வந்து கொண்டிருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன் அருள் கருனை கடாக்ஷத்தால் குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொடுத்தார்.

இவர் காஷ்மீர யாத்திரை சென்ற போது காஷ்மீர மன்னன் ''லலிதாதித்யன்'' சபையில் பௌத்த மதத் தீவிரவாதியான "சங்குணன்" அமைச்சனாயிருந்தான். அவன் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை வாதத்திற்கு அழத்தான். ஸ்வாமிகளும் அவனை வாதில் வென்று அத்வைத நெறியை நிலை நாட்டி காஷ்மீரத்திற்க்கும் காஞ்சி மடத்திற்க்கும் ஒரு தொடர்பை ஏற்ப்படுத்தினார்.

இவர் கி.பி.710 ஆம் ஆண்டு, சௌம்ய வருடம், மார்கழி மாதம், அமாவாசை திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 18 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.


33. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

33. ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

முப்பத்தி மூன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 672 - 692]

ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சந்திரபாகா நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் ஆந்திர அந்தணர் குலத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் ''ப்ரௌத ராமண்ணா''. இவருக்கு பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "திம்மண்ணா''.

இவர் பல மொழியிலும் தேர்ச்சி பெற்ற புலவராக இருந்தார். “பாஷா பரமேஷ்டி" என்று போற்றப்பட்டவர். இவர் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கரமடம் மற்றும் மடத்துக்கு சொந்தமான பரத தேசம் முழுவதும் உள்ள மற்ற கட்டிடங்களையும் பழுது பார்த்து விரிவான திருப்பணிகளை செவ்வனே செய்தார். மேலும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சங்கர மடத்தின் கிளைகளை மேற்ப்பார்வை பார்க்க ஆங்காங்கே வேலைக்கு ஆட்களையும் வைத்து திறம்பட செயல்பட்டு வந்தார்

இவர் கி.பி.692 ஆம் ஆண்டு, கர வருடம், புரட்டாசி மாதம், கிருஷ்ணபக்ஷம், சஷ்டி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 20 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.3. ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

முப்பத்தி மூன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 672 - 692]

ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சந்திரபாகா நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் ஆந்திர அந்தணர் குலத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் ''ப்ரௌத ராமண்ணா''. இவருக்கு பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "திம்மண்ணா''.

இவர் பல மொழியிலும் தேர்ச்சி பெற்ற புலவராக இருந்தார். “பாஷா பரமேஷ்டி" என்று போற்றப்பட்டவர். இவர் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கரமடம் மற்றும் மடத்துக்கு சொந்தமான பரத தேசம் முழுவதும் உள்ள மற்ற கட்டிடங்களையும் பழுது பார்த்து விரிவான திருப்பணிகளை செவ்வனே செய்தார். மேலும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சங்கர மடத்தின் கிளைகளை மேற்ப்பார்வை பார்க்க ஆங்காங்கே வேலைக்கு ஆட்களையும் வைத்து திறம்பட செயல்பட்டு வந்தார்

இவர் கி.பி.692 ஆம் ஆண்டு, கர வருடம், புரட்டாசி மாதம், கிருஷ்ணபக்ஷம், சஷ்டி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 20 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.


32. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

32. ஸ்ரீ சிதாநந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

முப்பதாதி இரண்டாவது ஆசார்யர் [கி.பி. 668 - 672]

ஸ்ரீ சிதாநந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர தேசத்து அந்தண குலத்தவர். இவரின் பெற்றோரரின் பெயர் ''கண்ணு சங்கரர்'' பெற்றோர் வைத்த பெயர் ''பத்மநாபர்''.

இவர் ‘'லம்பிகை’' என்னும் யோக சித்தியை அடைவதற்காக சருகுகளை [காய்த்த இலைகளை] மட்டுமே உண்டு வாழ்ந்தார். மிக பெரும் யோகியாகத் திகழ்ந்தவர்.

"லலிதாதித்யன்" [காஷ்மீர் மன்னன்] தன் தென்னகப் படை எடுப்பின் போது ''ரட்டா'' என்னும் கன்னட நாட்டு ராணியின் புதல்வனை ஆட்சி பீடம் ஏற விடாமல் செய்தான். "ஸ்ரீ சிதாநந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்" என்ற இந்த மகானின் பேரருளால் அவனை அரியணையில் அமர்த்தி அனுக்கிரஹத்ததை பற்றி ''ராஜ தரங்கணீ'' யத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ மடத்தில் இருந்து கொண்டு சந்திர மௌலீஸ்வர பூஜையோடு மட்டும் இல்லாமல் ராஜியத்திலும் தலையிட்டு பல நல்ல விஷயங்களை நாட்டு மன்னர்களுக்கு எடுத்து கூறியுள்ளார் இந்த மஹான்...

இவர் கி.பி. 672 ஆம் ஆண்டு, பிரஜோத்பத்தி வருடம், மார்கழி மாதம், சுக்ல பக்ஷம், சஷ்டி திதியில், காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் நான்கு ஆண்டுகள் மட்டுமே பீடத்தை அலங்கரித்துள்ளார்.


31. ஸ்ரீகாஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீகாஞ்சி காமகோடி குரு பரம்பரா....

31. ஸ்ரீ பிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

முப்பத்தி ஒன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 655 - 668]

ஸ்ரீ பிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ''கெடில'' நதிக்கரையில் உள்ள சிற்றூரில் தமிழக அந்தண குலத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் ''அனந்தர்''. தந்தை இவருக்கு வைத்த பெயர் “ஜ்யேஷ்ட ருத்ரர்".

இவர் ''சீலநிதி பிரம்மானந்தகனர்'' என்று போற்றப்பட்டவர். ஒரு முறை காஷ்மீர் அரசன் ''லலிதாதித்யன் கன்னோசி" மன்னன் "யசோவர்மனை" வென்ற பின்னர் தென்னகம் நோக்கிப் படை எடுத்தான். கர்நாடகம், கேரளம், சோழநாடு இவைகளை அவன் வெற்றி கொண்டதாக "ராஜ தரங்கணீயம்" சொல்கிறது.

"யசோவர்மனின்" அரசவைப் புலவர் ''பவபூதி'' சக்தி உபாசகர். அவர் லலிதாதித்யனின் வெற்றிகளை ''மஹா புருஷ விலாசம்'' என்ற நாடக நூலில் விளக்கியுள்ளார். அதில் "லலிதாதித்யன்'' ஆதி முதல் புகழ் பெற்றிருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளை தரிசித்து ப்ரஸாதம் பெற காஞ்சி சென்றான்” என்று கூறப்பட்டிருக்கின்றது.

வெற்றியோடு நாடு திரும்பிய ''லலிதாதித்யன்'' ஆசார்யாள் திரு நாமத்தால் ஒரு அன்ன சத்திரம் கட்டினான். தினமும் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னமிட்டான் என்கிறது ''மஹாபுருஷ விலாசம்''.

இவர் கி.பி. 668 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், கார்த்திகை மாதம், சுக்லபக்ஷம், துவாதசி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 13 ஆண்டுகள் பீடத்தை காலம் அலங்கரித்துள்ளார்.


30. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா...

30. ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு....

முப்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 618 - 655]

ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு. ஆந்திர குலத்தில் அந்தணராக பிறந்தார். இவர் காள ஹஸ்தியில் வாழ்ந்தவர்.

பெற்றோர் வைத்த பெயர் “பாலையா". இவரின் பெற்றோர்கள் பெயர் நமக்கு கிடைக்காததும், இவரை பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விதமான தகவலும் கிடைத்தது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது.

இவர் கி.பி. 655 ஆம் அண்டு, ஆனந்த வருடம், வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 37 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.


29. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

29. ஸ்ரீ பூரண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று....

இருபத்தி ஒன்பாவது ஆச்சார்யர் [கி.பி. 601 - 618]

ஸ்ரீ பூரண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, ஆந்திர அந்தண குலத்தவர். இவரின் தந்தையின் பெயர் ''ஸ்ரீ பதி''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''கிருஷ்ணர்''. இவர் சந்திர மௌலீஸ்வர பூஜை செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். இவரை பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விதமான தகவல்களும் கிடைக்க வில்லை என்பது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது.

இவர் கி.பி. 618 ஆம் ஆண்டு, ஈச்வர வருடம், ஆவணி மாதம், சுக்ல பக்ஷம், ஏகாதசி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 17 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.


28. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

28. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒன்று...

இருபத்தி எட்டாவது ஆச்சார்யர் [கி.பி. 577 - 601]

நேசக்கரமி ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒன்று. இவர் ஆந்திராவில் மைதிலா அந்தண மரபில் தோன்றியவர். இவர் தந்தை பெயர் ''பானுமிச்ரர்’'. பெற்றோர் இவருக்கிட்ட பெயர் ''சேஷ நாராயணர்''. இவரைப் பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விவரம் கிடைக்காதது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது...

இவர் கி.பி.601 ஆம் ஆண்டு, ரௌத்திரி வருடம், ஐப்பசி மாதம், கிருஷ்ண பக்ஷம், தசமி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 24 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.



27. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

27. ஸ்ரீ சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

இருபத்தி ஏழாவது ஆச்சார்யர் [கி.பி. 564 - 577]

ஸ்ரீ சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஆந்திர மாநில அந்தண குலத்தில் பிறந்வர். இவர் பிறந்த ஊரான ஹஸ்திகிரி இவர் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற ஊராக அமைந்தது.

தந்தையின் பெயர் ''மதுசூதனர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''ஹரிகேசவர்''. இவரை பற்றிய கூடுதலான விவரங்களும், தகவல்களும் நமக்கு கிடைக்காதது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது.

இவர் கி.பி. 577 ஆம் ஆண்டு, துன்முகி வருடம் சாந்திரமான வருடப் பிறப்பன்று காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் சுமார் 13 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்....


சாதுர்மாஸ்ய விரதம்...


சாதுர்மாஸ்யம்

ஒவ்வோர் ஆண்டும் ச்ராவண பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரையில் உள்ள காலம் நான்கு மாதத்தில் சாதுர்மாஸ்யம் வரும்.அதாவது ஸ்ராவண ஏகாதசி துவாதசி முதல் கார்த்திகை ஏகாதசி துவாதசி வரையில் உள்ளவைகள் சாதுர்மாஸ்யங்கள்.நாலு மாசம் சாதுர்மாஸ்யம் என்றால் சாதுர்மாஸ்யம் ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை நான்கு மாதம்.அந்த ஆவணி மாதத்தில் ஏகாதசியில் விஷ்ணு பகவான் சயனித்துக் கொள்கிறார்.இதற்கு சயன ஏகாதசி என்று பெயர். கார்த்திகை மாத ஏகாதசியில் விஷ்ணு பகவான் விழித்துக் கொள்கிறார்.இதற்கு உத்ஸான ஏகாதசி என்று பெயர்.அந்த ஆவணி மாத ஏகாதசி முதல் கார்த்திகை மாத ஏகாதசி வரை உள்ள காலங்களை நான்கு மாதங்களை சாதுர்மாஸ்யம் என்று சொல்லுவார்கள்.பொதுவாக அந்தக் காலத்திலே மழை காலம் கூட இருக்கும்.ஆகவே அந்தக் காலத்தில் ஒரே இடத்தில் தங்கி சத்சங்கங்கள்,பஜனைகள்,வேதாந்த காலட்சேபங்கள் முதலியவைகள் எல்லாம் பெரியோர்கள் எல்லாம் செய்வார்கள்.ரிஷிகள் எல்லாம் செய்வார்கள்.நாரத மஹரிஷிகூட அவர் பிறப்பதற்கு முன்பு இது போன்று சாதுக்கள்,மஹரிஷிகள் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய காலத்தை நான்கு மாதம் ஓரிடத்தில் அனுஷ்டானம் செய்த பொழுது அவருடைய தாயார் அவர்களுக்கு சேவை செய்து அந்த ப்ரஸாதத்தினால் நாரத மஹரிஷி பிறந்ததாக வரலாறு உண்டு.

இந்த சாதுர்மாஸ்யம் மொத்தம் இரண்டு வீதம்.ஒன்று, இல்லறத்தார்கள்.ப்ரஹ்மச்சாரிகள் க்ரஹஸ்தர்கள் ஆண் பெண் அனைவரும் நான்கு மாதங்கள் வீட்டை விட்டு வெளியே உட்கார்நது கொண்டு ஒரு பந்தலிலோ கோயிலிலோ அல்லது பொது இடத்திலோ நதி தீரத்திலோ உட்கார்நது கொண்டு இறைவனைப் பற்றி பாடல்கள் ஜபங்கள் பாராயணங்கள் ஸ்தோத்ரங்கள் த்யானங்கள் இவைகளிலேயே காலத்தை கழிப்பது பகவத் சிந்தனையைத் தவிர வேறு ஒன்றும் செய்வது இல்லை.அது ஒரு விதமான சாதுர்மாஸ்யம்.சன்யாசிகள் போன்றவர்கள் நான்கு மாத காலங்களிலும் பன்னிரெண்டு மாதங்களில் எட்டு மாதம் யாத்திரை செய்து விட்டு இந்த நான்கு மாத காலம் எந்தவித யாத்திரையும் செய்யாமல் ஒரே இடத்தில் தங்க வேண்டும்.பொதுவாக சன்யாசிகளுடைய விதி ஒரு நாளைக்கு மேல் ஒரு ஊரில் தங்கக்கூடாது.பெரிய ஊராக இருந்தால் மூன்று நாள் தங்கலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.க்ராமைக ராத்ரம் ஒரு க்ராமத்துக்கு க்ராமம் ஒரு ராத்ரம் தான் தங்கலாம் என்று நியதி.சன்யாசிக்கு மூன்று நாட்கள் பெரிய ஷேத்ரங்களில் தங்கலாம் இப்படி எப்போதுமே போய்க்கொண்டிருக்கும் ஒரு இடத்தில் விச்ராந்தியாக இருந்து சில சாதனைகளை செய்வதற்கும் அதே சமயத்தில் அஹிம்சையை அடிப்படையாக கொண்ட சன்யாசிகளும் ஆனதினால் இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் அதாவது மழைக்காலத்தில் அந்தக் காலம் அப்பொழுது சில புழுக்கள் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும். அவைகளை காலில் மிதிபட்டோ மற்றவை மூலமாகவோ ஹிம்சையாகும்.அந்த ஹிம்சைகூட செய்யாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அஹிம்சையை அடிப்படையாக வைத்துக் கொண்டு நான்கு மாதம் சுற்ற வேண்டாம் என்பதற்காகவும் சாதுர்மாஸ்யம் சன்யாசிகள் அனுஷ்டிப்பார்கள்.அதே நான்கு மாதங்களில் அவர்களும் த்யானங்களை செய்து கொண்டு சாதனை செய்து கொண்டு இருப்பார்கள்.

இதைத் தவிர இந்த சாதுர்மாஸ்ய காலத்திலேயே ஆகாவரண சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. முதல் மாதத்திலே பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். இரண்டாம் மாதத்திலே தயிர் சாப்பிடக் கூடாது.மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம்.மூன்றாவது மாதத்திலே கறிகாய்கள் சாப்பிடக்கூடாது.மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம்.நான்காவது மாதத்திலே இரண்டாகப் பிளக்கக் கூடிய பருப்புகளை சாப்பிடக்கூடாது மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம்.கார்ததிகை மாதம் த்வாதசி அன்று அனைத்தையும் கலந்து வைத்து பகவானுக்கும் படைத்து விட்டு அந்த கார்த்திகை ஏகாதசி அன்று கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் கல்யாணம் செய்து விட்டு துவாதசி அன்று பாராயணம் செய்வது வழக்கம்.பாரணை என்று சொல்லுவார்கள் பாரணை என்றால் உபவாசம் இருந்து மறுநாள் செய்வது பாரணை.அப்படி கார்த்திகை மாதம் ஏகாதசிக்கும் உபவாசம் இருந்து இந்த சாகா வ்ரதம் ப்ரகாரம் ஒவ்வொரு மாசம் ஒன்றை ஒன்றை விட்டு விட்டு கார்த்திகை மாசம் துவாதசி அன்று கிருஷ்ணனுக்கு கல்யாணம் செய்து வைத்து அன்றைய தினம் எல்லா விதப் பொருட்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து பிறகு தாம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு.இது சன்யாசிகள் க்ரஹஸ்தர்கள் ப்ரஹ்மச்சாரிகள் வானப்ரஸ்தர்கள் அனைவரும் செய்யக்கூடியது.பிராமணர்கள் மாத்திரம் அல்ல அனைத்து வகுப்பினரும் கூட செய்வார்கள்.இது மஹாராஷ்டிரத்திலும் ஆந்திராவிலும் மிகவும் பிரசித்தமாக நடைபெற்று வருகிறது.கன்னட தேசத்திலும் சில பேர் செய்கிறார்கள்.தமிழ்நாட்டிலே மிகவும் குறைந்த பேர்கள் தான் இந்த சாகா விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த சாதுர்மாஸ்யத்தை கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு.

சன்யாசிகள் மாத்திரம் தான் சாதுர்மாஸ்யம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ் நாட்டிலே கடைப்பிடிக்கிறார்கள்.அதுவும் நாலு மாசத்திற்கு முடியாததினால் இரண்டு மாசத்திலே செய்யலாம் என்று ஒரு வேத வாக்கியம் இருப்பதினால் நான்கு மாசத்திற்கு பதிலாக நான்கு பட்சமாக வைத்துக்கொண்டு நான்கு பட்சங்களிலே இரண்டு மாசங்களிலே இந்த சாதுர்மாஸ்ய வ்ரதத்தை முடித்து விடுகிறார்கள்.அப்படி நான்கு மாதத்தில் நான்கு பட்சங்களை வைத்துக் கொண்ட இரண்டு மாசத்தில் முடிக்கக் கூடிய சன்யாசிகள் கூட சிலர் சாகா வ்ரதத்தை கடைப்பிடிப்பார்கள் நான்கு மாசமும்.அதாவது பால் சேர்க்காமல் இருப்பது தயிர் சேர்க்காமல் இருப்பது காய்கறிகள் சேர்க்காமல் இருப்பது இரண்டாக பிளக்கக்கூடிய பருப்பு வகைகளை சேர்க்காமல் இருப்பது இந்த விரதத்தை மாத்திரம் நான்கு மாதம் எங்கு இருந்தாலும் கடைப்பிடிப்பார்கள்.இப்படி இந்த வகையிலும் உண்டு. இப்படி சாதுர்மாஸ்யம் என்பது பழங்காலம் தொட்டு வருகிறது.அன்றைய தினம் பூஜையில் முதல் முதல் இந்த சாதுர்மாஸ்ய ஆரம்பம் ஆவணி மாசம் ஏகாதசி அன்று(க்ராவண ஏகாதசி அன்று)முடிவு கார்த்திகை ஏகாதசி த்வாதசி அன்று.ஆனால் சாதர்மாயஸ்த்தைத் தவிர சன்யாசிகள் செய்யகக கூடிய சாதுர்மாஸ்யம் வ்யாஸ பூஜை என்பது பௌர்ணமியிலிருந்து ஆரம்பிக்கும் ச்ராவண பௌர்ணமியிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரையில் நடைபெறும்.அன்றைய தினம் அவர்கள் நான்கு மாதம் வெளியேபோக மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு இந்த கார்யங்களை எல்லாம் செய்வார்கள்.இது ச்ராவண மாத பௌர்ணமியிலிருந்து கார்த்திகை மாதம் பௌர்ணமி வரையில் இருக்கும்.பௌர்ணமிக்கு பௌர்ணமி அவர்களுக்கு விசேஷம்.அது போன்று சாதுர்மாஸ்ய்தைப் பற்றி விசேஷம் உண்டு.அந்த சாதுர்மாஸ்யத்தை முதன் முதலாக அந்தக்காலம் முதல் கடைப்பிடித்து வந்தவர் வேதவியாசர்.ஆகவே அந்த சாதுர்மாஸ்ய ஆரம்பத்தை வேதவியாச பூஜை என்றும் குறிப்பிடுவார்கள்.ஆகவே வியாச பூஜையைத்தான் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் கைக் கொள்வது.