வெள்ளி, 6 செப்டம்பர், 2019

நமது ஆச்சார்யர்களை பற்றி  தெரிந்துகொள்வோம்

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்யர் மற்றும் ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர். அவர்களின் முதலாமானவர் ஆதிசங்கரர் ஆவார். இவரை அனேகமாக அனைவருக்கும் தெரிந்தவர். மற்ற ஆச்சார்யர்களை பற்றி இனி வரும் நாட்களிள் நாம் தெரிந்து கொள்வோம். ஆதிசங்கருக்கு அடுத்தபடியாக பீடத்தை அளங்கரித்தவர் ஸ்ரீ சுரேஸ்வரரின் சிஸ்யர் ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆவார்.

3:ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
(கி.மு. 407 முதல் 364 வரை)

ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் தந்தை பெயர் வர்த்தனர். தந்தை இவருக்கிட்ட நாமம் மஹாதேவர். ஸ்ரீ ஆதிசங்கரர் சர்வக்ஞ பீடமேறியபின் நெல்லை மாவட்டத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் வாதிட வந்தனர். வாதிட்ட சில நாழிகைகளிலேயே அவர்கள் ஒவ்வொருவராய் தோற்க, மூன்று நாள் தொடர்ந்து தளராமல் வாதிட்டார் ஏழு வயதே ஆன மஹாதேவர். நான்காம் நாள் பகவத்பாதரின் கருத்தை ஏற்றுச் சரணடைந்தார். இளம் வயது மஹாதேவரின் விசாலமான ஞானத்தைக் கண்டு அவரை சிஷ்யராக ஏற்று தமது வாரிசாக்கத்திருவுளம் கொண்டார் குரு சங்கரர். அப்பாலகனின் பெற்றோரை வரவழைத்து தமது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள் மகிழ்வுடன் சம்மதித்தனர். குருநாதரே மஹாதேவனுக்கு சந்யாச தீக்ஷை அளித்து சர்வக்ஞாத்மர் என்ற தீக்ஷா நாமத்தை சூட்டினார். இப் பால சந்யாசி சுரேஸ்வராச்சாரியரின் பொருப்பில் விடப்பட்டு சகல சாஸ்திர பண்டிதரானார். 'இந்திர ஸரஸ்வதி' என்ற பட்டம் இவரிலிருந்து தான் தொடங்கியது. தேவேச்வரர் என்றே இவர் சுரேஸ்வரரைக் குறிப்பிடப்படுவார். இவர் ஸ்ரீ சங்கர சூத்ரபாஷ்யத்திற்கு அழகு மிளிரும் நடையில் 1267 பாசுரங்கள் கொண்ட விரிவான விளக்க உரை எழுதி உள்ளார். இந்த விளக்க உரை'சம்க்ஷேபசாரீரகா' எனப்படுகிறது. அத்துடன் கவிதை நடையில் 'சர்வக்ஞவிலாச' எனும் நூலையும் இவர் இயற்றி உள்ளார். அப்போதைய துவாரகா மடத்தின் ஆசார்யரான பிரம்ம ஸ்வரூபருக்கு குருவாக இவர் இருந்தார். இவர் காலத்துச் சோழ மன்னன் மனுகுலாதித்த சோழன் இம்மன்னனைப் பற்றித் தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் காஞ்சியில் கி.மு.364ல் நள ஆண்டு வைகாசி மாதம் கிருஷ்ண பஞ்சமியில் சித்தியடைந்தார்.
நமது ஆச்சார்யர்களை பற்றி  தெரிந்துகொள்வோம்

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்யர் மற்றும் ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர். அவர்களின் முதலாமானவர் ஆதிசங்கரர் ஆவார். இவரை அனேகமாக அனைவருக்கும் தெரிந்தவர். மற்ற ஆச்சார்யர்களை பற்றி இனி வரும் நாட்களிள் நாம் தெரிந்துகொள்வோம். ஆதிசங்கருக்கு அடுத்தபடியாக பீடத்தை அளங்கரித்தவர் ஸ்ரீ சுரேஸ்வரர் ஆவார்.

2: ஸ்ரீ சுரேஸ்வரர்( கி.மு.491முதல் 407)

ஸ்ரீ சுரேஸ்வரருடைய பூர்விக நாமம் மண்டனமிச்சர். இவர் நர்மதா நதிக்கரையில் மாகிஷ்மதி என்ற சிற்றூரில் வசித்து வந்தார். இவரை பிரம்மாவின் அம்சம் என்பர். இவருடைய மனைவி ஸரசவாணி ஸரஸ்வதி அம்சம். இவளும் தன் கணவரைப் போலவே வேத வேதாங்களில் புலமை மிக்கவள். மிச்ரரின் ஞானத்தை அறிந்த ஆதிசங்கரர் தனக்குப் பிறகு அவரே பீடத்தை அலங்கரிக்கக் கூடியவர் என தீர்மானித்து இல்லறத்தில் இருக்கும் அவரை துறவு வாழ்க்கைக்குத் திருப்ப அவர் இல்லம் தேடி வந்தார். அந்த காலங்களில் ஒருவர் ஒருவரை தன்பால் ஈர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் வாதத்துக்கு அழைப்பது வழக்கம். அவ்விதமே மிச்ரரை வாதத்திற்கு அழைத்தார் ஆதிசங்கரர். தோற்றவர் வென்றவர் மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமென்பது நிபந்தனை. இரண்டு மலர்களைக் கொண்டு வந்து இருவர் கழுத்திலும் சூட்டி எவர் மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்று கூறி அவர்களுக்கு நடுவராக இருந்தாள் மிச்ரரின் மனைவி. இருவரும் சளைக்காமல் பலநாள் வாதப்போர் நடத்தினர். மிச்ரர் கழுத்தில் இருந்த மாலை வாடத் தொடங்கியது. கணவனில் பாதி மணைவி. தன்னையும் வாதில் வென்றாலே பூரண வெற்றி என்று ஸரசவாணி தர்க்கம் செய்தாள். அவளையும் தர்க்க சாஸ்திர நெறிப்படி வென்றார் ஆதிசங்கரர். நிபந்தனைப்படி மிச்ரர் சந்நியாச ஆச்ரமத்தை ஏற்றார். ஸ்ரீசுரேஸ்வரர் என்ற தீட்சா நாமத்தை அவருக்கு அளித்தார் சங்கரர். ஆதிசங்கரர் சித்தியடைந்த பின் ஸ்ரீ சுரேஸ்வரர் அனைத்து பீடங்களுக்கும் மேலாளராயிருந்து நிர்வகித்தார். இவர் பல அத்வைத்த நூல்களை எழுதினார். காஞ்சியில் ஒரு பெரும் அக்ரஹாரத்தை அமைத்தார். ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயத்துக்கருகிலுள்ள இந்த அக்ரஹாரம் மண்டனமிச்ரர் அக்ரஹாரம் என வழங்கப்படுகிறது. சுரேஸ்வரர் கி.மு.407ல் சுக்லபட்ச துவாதசியன்று சித்தியடைந்தார். இன்றும் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தில் சரேஸ்வருக்கு தனி சன்னதியும் திருவுருவமும் உள்ளது. இவருக்கு அடுத்து வந்த ஆச்சார்யர்கள் அனைவருக்கும் அவர்களுடைய நாமத்தில் சரஸ்வதி பட்டம் சூட்டப்பட்டது.

ஹர ஹர சங்கர                                                                                                                          ஜய ஜய சங்கர
274 சிவாலயங்கள் : அருள் மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்)
அம்மன் : மங்களாம்பிகை
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : மகாமகம், காவிரி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்குடமூக்கு
ஊர் : கும்பகோணம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர், அப்பர்

நக்கரை யனை நாடொறும் நன்னெஞ்சே வக்கரை உறைவானை வணங்கு நீ அக்கரை யோடு அரவரை யார்த்தவன் கொக்கரை யுடையான் குட மூக்கிலே. திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 26வது தலம்.

விழா : மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத்திருவிழாவும், சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கி.மீ, தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனித்திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடி ஏறி, எட்டாம் நாளில் வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹா மக விழா ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் சார்பிலேயே நடத்தப்படும். தமிழகத்தின் மிகப்பெரிய விழா இது.  
       சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. லிங்கம் கீழே பருத்தும் மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது விஷ்ணு சக்தி பீடம், மந்திரிணி பீடமாகும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 6:00 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு கும்பேசுவரர் திருக்கோயில், கும்பகோணம் : 612 001, தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91-435- 242 0276. 
     
தகவல் : மலையாள ஆண்டின் (கொல்லம்) துவக்க மாதமாக சிம்மம் எனப்படும் ஆவணி உள்ளது. இம்மாதத்தில் சூரியனின் நிலையைப் பொறுத்தே ஆண்டு முழுவதும் சீதோஷ்ண நிலை அமையும். எனவே சூரிய பகவானை மகிழ்ச்சிப்படுத்தும் பொருட்டும் பயிர்களை அழிக்கும் எலிகள் முதலான ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பு பெற நாகராஜாவை வேண்டியும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். உலகம் அழிந்த போது உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான், பிரம்மா மூலம் படைப்புக்கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். இதனால் "கும்பேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். கும்பகோணத்தில் அருள் பாலிக்கும் இவரது தலத்திலும் ஆவணி ஞாயிறன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
ராஜகோபுரம் வழியாக நுழைந்து, நீண்ட மண்டபத்தை கடந்து பலி பீடத்தையும் கொடி மரத்தையும் வணங்கி வாசலில் உள்ள நந்தி தேவரிடம் அனுமதி பெற்று கோயிலுக்குள் நுழைய வேண்டும். கும்பேஸ்வரரை வணங்கிய பிறகு முதல் பிரகாரத்தில் உள்ள அறுபத்தி மூன்று நாயன்மார்கள், சப்த மாதர்கள், காமதேனு, பவலிங்கம், சர்வ லிங்கம், ஈசான லிங்கம், பசுபதி லிங்கம், ருத்ர லிங்கம், உக்ர லிங்கம், பீம லிங்கம், மகாலிங்கம், தெட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசித்து சற்று தள்ளியுள்ள வலஞ்சுழி விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் பிட்சாடனர், முருகன், அட்சயலிங்கம், சகஸ்ரலிங்கம், அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி, கோஷ்டத்திலுள்ள பிரம்மா, சரஸ்வதி ஆகியோரை வழிபட்டு அம்மன் சன்னதியை வணங்க வேண்டும். பிறகு கண்ணாடி அறையில் இறைவன் பள்ளி கொண்டுள்ள காட்சியை கண்டு அஷ்ட புஜ துர்கையை வணங்கி அருகிலுள்ள நவநீத விநாயகர், கிராத மூர்த்தி, பைரவர், கால பைரவர், ஜுரகேஸ்வரர், சாஸ்தா, மகான் கோவிந்த தீட்சிதர், நாகாம்பாள் ஆகியோரை தரிசிக்க வேண்டும். இதன் பிறகு நவக்கிரகமண்டபத்தை சுற்றி கோயிலிலிருந்து வெளியேற வேண்டும். இம்முறைப்படி வணங்கினால் வாழ்வுக்குத் தேவையான பாதுகாப்பு அனைத்தும் கிடைக்கும்.

பிரார்த்தனை : கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
     
பெருமை : நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றி வரும் வகையில் உள்ளது. பெரும்பாலான கோயில்களில் சுவாமி, அம்பாள் பிரகாரங்களை தனித்தனியே சுற்றிவரும் அமைப்பே இருக்கிறது.
இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது. இது சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.
நவராத்திரி மண்டபத்தில் ஒரு சிங்க வாகனம் தனது தலையில் நீண்ட படுக்கை கற்களை தாங்கியபடி அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். கோயிலின் முன்பு பொற்றாமரைக்குளம் இருக்கிறது. மஹாமகத்திற்கு வருபவர்கள் மஹாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக்குளத்திலும் நீராடுவர். நவகன்னியரான நதிகள் மஹாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரை குளத்தில் நீராடினர் என்பது ஐதீகம். வெளிப்பிரகாரத்தில் கும்பமுனிசித்தர் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும்.

மங்கள நாயகி : இத்தல அம்மனுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள் ஆகிய திருநாமங்கள் உண்டு. சம்பந்தர் இவளை "வளர்மங்கை' என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக "மந்திரபீடேஸ்வரி' என்ற திருநாமமும் பெறுகிறாள். அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது. அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள் பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

மஹாமக தீர்த்தம் : ஊரின் நடுவே மூன்று ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை "பூமி குழிந்து தாங்குக' என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. இங்கு தான் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மஹாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது தான் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு ஆகிய ஒன்பது நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுவதாக ஐதீகம். மஹாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும், அவரைச்சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன. சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் "ஆதி விநாயகர்' எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திர பீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறுமுகம், ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இது போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை என கூறப்படுகிறது. இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
சிவபெருமான் வேடர் (கிராதர்) வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இங்கு கிராதமூர்த்திக்கு சன்னதி உள்ளது. மகம் நட்சத்திர நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தால் விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது பிரம்மா தனது படைப்புத்தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம் "நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில்மிதக்க விடு'' எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் ஒரு இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது. கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே "கும்பேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது.

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 28 ॐ

நிருத்த சபைக்கு வந்த நாம் இப்போது அதன் முக்கியமான தரிசனத்துக்குத் தயாராகிறோம். உண்மையில் இந்த நிருத்த சபைதான் மிகப்பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஆதியில் காளியின் வசம் இந்தக் கோயில் இருந்த போது காளி இங்கே தான் வாசம் செய்தாள் என்றும் கூறப் படுகிறது. கனகசபைக்கும் த்வஜஸ்தம்பத்திற்கும் தெற்கே இருக்கும் இந்தச் சபையில் தான் சிவன் காளியுடன் போட்டி போட்டு ஆடித் தன்னுடைய ஆட்டத்திறமையைக் காட்டி ஜெயித்தார். இந்தத் தாண்டவக் கோலம் "ஊர்த்துவத் தாண்டவம்" என்று சொல்லப் படுகிறது. இந்த மூர்த்தி ரூபத்துக்கும் "ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி" என்றே பெயர். அருகாமையில் நாணத்துடன் நிற்கும் காளியின் அழகு கொள்ளையோ கொள்ளை! காணக் கண் கோடி வேண்டும்! சரபருக்கு அருகேயே கோவில் கொண்டிருக்கும் இந்த தாண்டவ மூர்த்தியும், காளியும் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக இந்த வெளிப்பிரகாரத்தில் லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தி மகாலட்சுமி சன்னதிக்கும் நிருத்த சபைக்கும் நடுவில் காணப்படுகிறார் வடக்கு முகமாய். அடுத்து வருவது மகா லட்சுமியின் சன்னதி. தனியாகக் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தாயாரின் மூல விக்ரஹம் "புண்டரீகவல்லித் தாயார்" என்று அழைக்கப் படுகிறது. உற்சவ விக்ரஹமும் கூடவே இந்தக் கோயிலில் காணப் படுகிறது. நவராத்திரிகளில் விசேஷ அலங்காரங்கள் செய்யப் படுவதாய்க் கூறுகிறார்கள். அடுத்துக் காணப்படும் பால தண்டாயுத மூர்த்தியின் சிற்பம் ஒரு தூணில் காணப்படுகிறது. பழனிக்குப் போக விரும்பிய மக்கள் கொள்ளிடத்தின் வெள்ளப் பெருக்கால் போக முடியாமல் தவித்த போது அந்தப் பழனி ஆணடவர் இந்தச் சிற்பத்தில் ஆவிர்ப்பவித்துத் தன்னை வணங்குமாறு சொன்னதாய்ச் சொல்கின்றனர். அடுத்து வருபவர் நம் நண்பர் விநாயகர் ஒரு அருமையான வேலை செய்தவர்! என்ன தெரியுமா? மறைந்து இருந்த ஒரு பொருளைக் காட்டிக் கொடுத்தவர். அதுவும் யாருக்கு? சோழ மன்னனுக்கு! என்ன பொருள்? எந்த மன்னன்? யோசியுங்கள்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
சுவாமிநாத பஞ்சகம்

ஓம் என்ற பிரணவப் பொருளை பரமேஸ்வரனுக்கு விளக்கிக் கூறிய ஞானபண்டிதனான ஸ்கந்தப் பெருமான் சுவாமிமலை என்னும் திவ்ய ஸ்தலத்தில் குன்றின் மீது கோவில் கொண்டு அருள் புரிகிறார். பிரபவ முதல் அக்ஷய வருஷம் வரை உள்ள பிரம்ம புத்ராள் 60 பேர்களும் 60 படிகளாக தங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். படி ஏறும் பக்தர்கள் ஒவ்வொரு படியிலும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு படி ஏறுவார்கள். அல்லது முதல் படியிலும் கடைசி படியிலுமாவது இப்படி செய்துவிட்டுச் செல்வார்கள். குன்றின்மீது ஸ்வாமிநாதன் என்ற பெயர் கொண்டு அருள் செய்யும் சுவாமிநாதனைக் குறித்து செய்யப்படும் இந்த ஸ்ரீ சுவாமிநாத பஞ்சகத்தை தினசரி பாராயணம் செய்வோர்க்கு சர்வ மங்களங்களையும் அளிக்க அவன் காத்திருக்கிறான். அன்பர்கள் பயனடைய வேண்டுகிறோம்.

(நந்தவனத்தோர் ஓர் ஆண்டி என்ற மெட்டு)

ஹேஸ்வாமி நாதார்த்த பந்தோ - பஸ்ம
லிப்தாங்க காங்கேய காருண்ய ஸிந்தோ - (ஹேஸ்வாமி)
ருத்ராக்ஷ தாரிஜ் நமஸ்தே - ரௌத்ர
ரோகம், ஹரத்வம் புராரேர்குரோர்மே
ராகேந்து வக்த்ரம் பவந்தம் - மார
ரூபம் குமாரம் பஜே காமபூரம் -  (ஹேஸ்வாமி)
மாம்பாகி ரோகாதகோராத் - மங்க
ளாம்பாக பாதேன, பங்காத் ஸ்வராணம்
காலாச்ச துஷ்பாக கூலாத் - கால
காலாஸ்ய ஸூனும் பஜேக்ராந்தஸானும் -  (ஹேஸ்வாமி)
ப்ரம்மாதயே யஸ்யசிஷ்யா - ப்ரம்ஹ
புத்ரா: கிரௌ யஸ்ய ஸோபான பூதா:
ஸைன்யம் ஸுராச்சாபி ஸர்வே - ஸாம
வேதாதி கேயம் பஜே கார்த்திகேயம் -  (ஹேஸ்வாமி)
காஷாய ஸம்வீத காத்ரம் - காம
ரோகாதி ஸம்ஹாரி பிக்ஷõன்ன பாத்ரம்
காருண்ய சம்பூர்ண நேத்ரம் - சக்தி
ஹஸ்தம் பவித்ரம் பஜேசம்பு புத்ரம் -  (ஹேஸ்வாமி)
ஸ்ரீ ஸ்வாமி சைலே வஸந்தம் - ஸாது
ஸங்கஸ்ய ரோகான் ஸதா ஸம்ஹரந்தம்
ஓங்கார தத்வம் வதந்தம் - சம்பு
கர்ணே ஹஸந்தம் பஜேஹம் சி சுந்தம் -  (ஹேஸ்வாமி)
ஸ்தோத்ரம் க்ருதம் சித்ரம் - தீக்ஷ?
தானந்த நாமணே ஸர்வார்த்தஸித்யை
பக்த்யா படேத்ய: ப்ரபாதே தேவ
தேவப் ரஸயாதாத் லபேதாஷ்ட ஸித்திம் -  (ஹேஸ்வாமி)
இந்த ஸ்வாமிநாத பஞ்சகத்தை தினமும் பாராயணம் செய்வோருக்கு சர்வ மங்களமும் உண்டாகும்.
------------------------
ஆஞ்சநேயர் ஸ்தோத்திரங்கள்

நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர். ஆஞ்சநேயரே! பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும்.
ஏவல், பில்லி சூன்யங்கள் விலக
ஓம் பராபிசார சமனோ
துக்கக்னோ பக்த மோக்ஷத
நவத்வார புராதாரோ
நவத்வார நிகேதனம்.
------------------------
சர்வ மங்களங்களும் உண்டாக உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்

இந்த மந்திரங்களைப் படிப்பதால் சர்வ மங்களங்களும், எல்லா நன்மைகளும் கிடைப்பதுடன் எல்லா தீமைகளும் விலகும். கால காலனைத் துதிப்பதால் யம பயம்
விலகி நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீட் பாம்
நம: சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வர ப்ரதாப்யாம்
நாராயணே நார்சித பாதுகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் வ்ருஷ வாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ண்வித்த்ர ஸுபூஜிதாப்யாம்
விபூதி பாடீர விலேநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜய விக்ரஹாப்யாம்
ஜம்பாரி முக்யைரபிவந்திதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜர ரஞ்ஜிதாப்யாம்
ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹ்ருதிப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாமதி ஸுந்தராப்யா
மத்யந்த மாஸக்த ஹ்ருதம் புஜாப்யாம்
அசேஷலோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் கலிநாச நாப்யாம்
கங்காள கல்யாண வபுர்தராப்யாம்
கைலாஸ சைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யா மசுபாபஹரப்யாம்
அசேஷலோகைக விசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யா ரதவா ஹநாப்யாம
ரவீந்து வைஸ்வாநர லோசநாப்யாம்
ராகா சசாங்காப முகாம் புஜாம்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம்ச விவர்ஜிதாப்யாம்
ஜநார்தநாப் ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச் சதர மல்லிக தாமப்ருத்ப்யாம்
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
ஜகத்த்ரயீ ரக்ஷண பத்த ஹ்ருத்ப்யாம்
ஸமஸ்த தேவாஸுர பூஜி தாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீயம்
பக்த்யா படேத் த்வாதசகம் நரோய
ஸ ஸர்வ ஸெளபாக்யபலானி: புங்க்தே
சதாயுரந்தே சிவலோகமேதி.
------------------------
ஷட்பதி ஸ்தோத்திரம்

இந்த மந்திரங்களை தினமும் பாராயணம் செய்து வந்தால் பக்தி , வைராக்யம், ஞானம், மோட்சம் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி நன்மையுண்டாகும்.
அவினயம பனய விஷ்ணோ தமய
மனஸ்ஸமய விஷய மிருகத்ருஷ்ணாம்
பூத தயாம் விஸ்தாரய தாரம
ஸம்ஸார ஸாகரத:
திவ்யதுநீம கரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஸ்ரீபதி பதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே
ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகி நஸ்தவம்
ஸாமுத்ரோஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ நதாரங்க:
உத்ருத நகநக பிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ரஸஸித்ருஷ்டே
த்ருஷ்டேபவதி ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார:
மத்யாதி பிரவதைதாரைரவதா ரவதா ஸவதா ஸதாவஸுதாம்
பரமேஸ்வர பரிபால்யோ பவதா வதாப பீதோஹம்
தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த
பவஜலதி மதனமந்த்ர பரமம் தரம பனயத்வம்மே
நாராயண கருணாமய ஸரணம் கரவாணி தாவகௌ ஸரணௌ
இதிஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸதாவஸது.
------------------------
ஆயுர்தேவி ஸ்தோத்திரம்

இது மிகவும் சிறந்த ஸ்தோத்திரம். வியாச மஹா முனிவரால் இயற்றப்பட்டது. இதை குழந்தைகளுக்கு ஆயூஷ்ய ஹோமம் செய்கின்ற நாட்களிலும் ஷஷ்டியப்த பூர்த்தி நாட்களிலும் ஜபம் செய்து ஆயுஷ்ய ஸூக்தத்தோடு ஹோமங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆயுர்தேவியின் அனுக்கிரகத்தால் நோயின்றி ஆயுர் அபிவிருத்தி ஏற்படும். எல்லா நலன்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.

த்யாயேத்: ஹேமாம்புஜா ரூடாம் வரதா பய பாணிகாம்
ஆயுஷா தேவதாம் நித்யாம், ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம்
ஆயுர்தேவீ மஹாப்ராக்ஞ்யே ஸுதிகா க்ருஹவாஸிநீ
பூஜிதா பரயா பக்த்யா தீர்க்கமாயுஹ் ப்ரயச்சமே
ஸிம்ஹஸ்கந்த கதாம்தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
ஸக்திசூல கதாபத்ம தாரிணீம் சந்த்ர மௌளிகாம்
விசித்ர வஸ்த்ர ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்
ஸிம்ஹஸ்கந்த கதாம் தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
ஸிம்ஹஸ்கந்த கதே தேவீ ஸுராஸுர ஸுபூஜிதே
ப்ரபவாத்யப்தகே ஸங்கே ஆயுர்தேவீ நமோஸ்துதே
ஆயுர்தேவீ நமஸ்துப்யாம் வர்ஷதேவீம் நமோஸ்துதே
ஆயுர்தேஹி பலம் தேஹி ஸர்வாரிஷ்டம் வ்யபோஹயா
ஆயுஷ் மதாத்மிகாம் தேவீம் கராள வதனோ ஜ்வலாம்
கோர ரூபாம் ஸதாத்யாயேத் ஆயுஷ்யம் யாசயாம்யஹம்
ஸுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம்
ஸர்வ சத்ரு விநாசாய ஆயுர்தேவி நமோஸ்துதே
ஷஷ்டாம்ஸாம் ப்ரகிர்தைர் ஸித்தாம் ப்ரதிஷ்டாப்யச ஸுப்ரபாம்
ஸுப்ர தாம்சாபி சுபதாம் தயாரூபாம் ஜகத்ப்ரஸும்
தேவீம் ÷ஷாடச ஷ்ருஷாம்தாம் சாஸ்வதஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத்சந்த்ர நிபன்னாம்
நமோ தேவ்யை மஹாதேவ்யை ஸித்யை ஸாந்த்யை நமோ நம
சுபாயை தேவஹேனாயை ஆயுர்தேவ்யை நமோ நம
வரதாயை புத்ர தாயை தனதாயை நமோ நம
ஸ்ருஷ்ட்யை ஷஷ்ட்டாம்ச ரூபாயை ஸித்தாயைச நமோ நம
மாயாயை ஸித்த யோகின்யை ஆயுர்தேவ்யை நமோ நம
ஸாராயை சாரதாயைச பராதேவ்யை நமோ நம
பாலாரிஷ்டார்ரு தேவ்யைச ஆயுர்தேவ்யை நமோ நம
கல்யாண தாயை கல்யாண்யை பலதாயைச கர்மணாம்
ப்ரத்யக்ஷõயை ஸ்வபுக்தானாம் ஆயுர்தேவ்யை நமோ நம
பூஜ்யாயை ஸ்கந்த காந்த்யை ஸர்வேஷாம் ஸர்வகர்மஸு
தேவரக்ஷண காரிண்யை ஆயுர்தேவ்யை நமோ நம
ஸூத்த தத்வ ஸ்வரூபாயை வ்நதிதாயை த்ருணாம்ஸதா
வர்ஜித க்ரோத ஹிம்ஸாயை ஆயுர்தேவ்யை நமோ நம:
------------------------
ஹனுமதஷ்டகம்

நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும். அன்பர்களின் ÷க்ஷமத்தைக் கருதி இந்த ஸ்தோத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.
வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச
தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே
ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே
திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய ச
தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே
பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
வேத வியாசர் அருளிச் செய்த மஹா மந்திரங்கள்.
------------------------
விஸ்வாநாதாஷ்டகம்

ஸ்ரீ வியாச முனிவர் அருளிய இச்சுலோகங்களை சிவபெருமான்சன்னதியில் சொல்லி வேண்டி வழிபட்டால் இடையூறுகள் நீங்கி இகபர சுகம் கிட்டும். இச்சுலோகத்தை ஜெபித்தால் காசி சென்று விஸ்வநாதரை தரிசித்த பலன்களைப் பெறலாம். இது காசி ,விசுவநாதரைப் போற்றிப் பாடப்பட்டது. இதனைப் பயபக்தியோடு தினமும் ஜெபித்து வந்தால் நீடித்த புகழ், கல்விச் செல்வம் பெறலாம். சிவலோக பதவியும் கிட்டும். பிறவிப் பயம் நீங்கும். சோம வாரந்தோறும் விரதமிருந்து காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் சிவபெருமான் சன்னதியில் நின்று இச்சுலோகங்களைக் கூறி வழிபட வேண்டும்.

கங்காதரங்கரமணீய ஜமாகலாபம்
கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
நாராயணப்ரியமநங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
வாசாம கோசரமநேக குணஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்
வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம்
வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம்
பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்
பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்
நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம்
நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம்
தாவாநலம் மரண சோகஜராட வீநாம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்
ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்
நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்
பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ
ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்.
------------------------
நினைத்த காரியங்கள் நிறைவேற
ஜயா சவிஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ
வீணா புஸ்தக தாரிணீ

இச்சுலோகத்தை தினமும் பத்து முறை கூறி வழிபட்டு விட்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெறலாம். சம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.
இச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன.

இச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். சம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
------------------------
சிவநாமா வல்யஷ்டகம்

ஹே சந்த்ர சூட மதநாந்தக சூலபாணே
ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹசே சம்போ
பூதேச பீதபயஸுதன மாமநாதம்
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே பார்வதீஹ்ருதய வல்லப சதத்ரமௌலே
பூதாதூப ப்ரமத நாத கிரீச சஸ
ஹே வாமதேவ பவருத்ர யநிக பரணே
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே நீலகண்ட வ்ருஷ பத்வஜ பஞ்சவக்தர
லோ கேச சேஷ வலய ப்ரமதேச சர்வ
ஹே தூர்ஐடே பசுபதே கிரிஜாபதே மாம்
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே விச்வநாத சிவசங்கர தேவதேவ
கங்காதர ம்ரமத நாயக நந்திகேச
பாணேச்வராந்த கரிபோ ஹர லோக நாத
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
வாரணஸீ புரபதே மணிகர்ணிகேச
வீரேச தக்ஷம சகால விபோ கணேச
ஸர்வக்ஞ ஸர்வ ஸ்ருதையக நிவாஸ தாத
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
கைலாஸ சைலவிநிவாஸ ப்ருஷாகபே ஹே
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகன்னிவாஸ
நாராயணப்ரிய மதாபஹ சக்தி நாத
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
விச்வேச விச்வபவ நாசக விஸ்வரூப த்ரிபுவ
விஸ்வாத்மக திரிபுவனைக குணாதிகேச
ஹே விச்வநாத கருணாலய தீனபந்தோ
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
------------------------
சுகபோக வாழ்க்கை வாழ ஸ்ரீ ஹாலாஸ்யே சாஷ்டகம்

பின்வரும் ஸ்லோகங்களை சிவபெருமான் சன்னதியிலோ அல்லது வீட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பூஜை செய்து வழிபாட்டு பாராயணம் செய்தோ இதன் மகிமையால் சுகபோகங்களை அடையலாம்.
இது கந்தபுராணத்தில் சங்கர ஸம்ஹிதை என்னும் ஸ்லோகப் பகுதியில் குண்டோதரன் என்பவன் மீனாட்சி சுந்தரேஸ்வரனைப் வணங்கி பாடிய பாடல். இப்பாடல் மந்திர வலிமை மிக்கது.
சைலா நீச ஸு தாஸஹாய
ஸகலாம் நாயாந்த வேத்ய ப்ரபோ
சூலோக் ராக்ர விதாரி தாந்தக
ஸுரா ராதீந்த்ர வக்ஷஸ் தல
கலா நீத கலா விலா ஸ
குசல த் ரா யேத நே ஸந்ததம்
ஹாலாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
கோலா ச்சச்ச தரூப மாதவ
ஸுரஜ்யே ஷ்டாதி தூராங் க்ரிக
நீலார் த்தாங்க நிவேச நிர் ஜாது நீ
பாஸ் வஜ்ஜடா மண்டல
கைலாஸா சலவாஸ காம தஹந
த்ரா யேத தே ஸந்ததம்
ஹா லாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
பாலாக்ஷ? ப்ரபவ ப்ரபஞ்ஜ நஸக்
ப்ரோத் யத் ஸ்பு லிங்கச் சடா
தூலா நங்கக சாருஸம் ஹநந்
ஸந்மீ நேக்ஷ?ணாவல்பப
சைலா தப்ர முனகர்கணை ஸ்துத குண
த்ராயேத தே ஸந்ததம்
ஹாலாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
மாலா கல்பித மாலுதா நபணஸன்
மாணிக்ய பாஸ் வத்த நோ
மூலாதார ஜகத்ரயஸ்ய முரஜிந்
நேத்ரார விந்தார்ச்சித
ஸாலாகார புஜா ஸகஸ்ர கிரிச
த்ராயே ததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருப கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
பாலா நித்ய ஸஹஸ்ர கோடி
ஸத்ரு சோத்யத் வேக வத்யகபா
வேலா பூமி விஹார நிஷ்ட
விபு தஸ்ரோதஸ் விநீசேகர
பாலா வர்ண்ய கவித்வ பூமி ஸுகத
த்யாயேததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
கீலாலா வபாவகா நில நபச்
சந்த்ரார்க் யஜ்வாக்ரு தே
கீலகநேக ஸஹஸர ஸங்குல சிகி
ஸத்ம்ப ஸ்வரூபாமித
சோளா தீஷ்ட க்ருஹாங்க நாவிபவத
திராயேததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
ஹாலாஸ்யாகத தேவதை த்யமுநிபிர்
கீதாப தாநக் வணஸ்
லீலா கோடி மனோ ஹராங்க்ரி
கமலாநந்தா பவர்கப்ரத
ஸ்ரீ லீலாகர பத்ம நாபவரத
த்ராயே ததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
லீலா நாதர மோதஹ: கபடதோ
யத்வா கதாம் பாடவீ
ஹாலாஸ்ய திப நீஷ்டமஷ் டகமிதம்
ஸர்வேஷ்டாஸந் தோஹ நம்
ஆலாபா நப லாந் விஹாய ஸததம்
ஸங் கீர்த்தய ந்தீஹ தே
தேலா க்ஷார்த்ர பதா பலாபிரகிலாந்
யோகாந் லபந்தே ஸதா
------------------------
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக ப்ருதிவ்ஸ்வராய ஸ்தோத்திரம்
குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் கீழ்க்கண்ட ப்ருதிவிஸ்வராய தியான ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யலாம். அதிகாலையிலும் மாலையிலும் இரவிலும் இச்சுலோகங்களைச் சொல்லி சிவனை வழிபட வேண்டும் .
நமோ நமஸ்தே ஜகதீச் வராயசிவாய
லோகாஸ்ய ஹிதாய ஸம்பவே
அபார ஸம்ஸார ஸமுத்தராய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்ராய
விஸ்வாதி காய அதிவிமானகாய ஸோமாய
ஸோமார்த்த விபூஷணாய
ஸ்ரீகாள கண்டாய க்ருபாகராய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
ஆஸாம் பராய அம்பர வர்ஜிதாய
திகம்பராய அம்பிகாய யுதாய
குணத்ரயாத்யை: அபவர்ஜிதாய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
மாயா விகாராதி விவர்ஜிதாய
மாயாதி ரூடாய தபஸ்திதிõய
கலாதி ரூடாய கபர்தினே ச
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
கபாலினே காமவிவர் ஜிதாய
கதம்பமாலா கவிதாய பூம்னே
நிரஞ்சனாயாமித தேஜஸே ச
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
------------------------
பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் லிங்காஷ்டக மந்திரம்

உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த லிங்காஷ்டகம் எனும் ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது.
இந்த மந்திரத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.

பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ முனி ப்ரவாச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸர்வஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பானவர்ப் பக்தி ப்ரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸுரரகுரு ஸுரவர் பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சில லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.
------------------------
குடும்ப ஒற்றுமைக்கு துர்காதேவி கவசம்

கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இச்சுலோகம் மிகவும் சிறந்தது.
ச்ருணு தேவி ப்ரவக்ஷ?யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.
------------------------
போகிற போக்கில் கும்பிடலாம்!

விநாயகர் மட்டுமே அனைவரும் அணுகும் விதத்தில் எளியவராக இருக்கிறார். மற்ற தெய்வங்களை தரிசிக்க வேண்டும் என்றால் காலநேரம் பார்த்து நீராடி விட்டு, பூஜைக்குரிய சாமான்கள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போக வேண்டியிருக்கும். அதுவும் பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டு சென்றாலும், சுவாமிக்குப் பக்கத்தில் செல்ல முடியாது. கொஞ்சம் தள்ளியே நிற்கும் படி இருக்கும். ஆனால் விநாயகர் தன்னை நாடி வரும் யாரையும் மறுப்பதில்லை.சாலை ஓரத்திலோ, மரத்தடியிலோ வீற்றிருந்து, பள்ளிக்கூடம், அலுவலகம், கடைத்தெரு என்று போகிற வழியிலேயே நிமிர்ந்து பார்த்து கும்பிட்டால் போதும் என தெருவின் எந்த இடத்திலும் மகிழ்ச்சியோடு காட்சி தருவார்.
------------------------
விநாயகரின் நட்சத்திரம்!

தைத்திரீய ஆரண்யகத்தில் இறைவனைக் குறிக்குமிடத்தில் தந்தின் என வருகின்றது.இது தந்தத்தை உடைய விநாயகரைக்குறிக்கும்.
இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை வியாசர் சொல்ல விநாயகப் பெருமானே எழுதி அருள் செய்தார். ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உண்டு. அதில் உத்திராட நட்சத்திரத்திற்உரிய அதிதேவதை விநாயகப்பெருமான் ஆவார்.
------------------------
பயம் போக்கும் மந்திரம்!

முருகப்பெருமானுக்சரவணபவஎன்ற ஆறெழுத்து மந்திரம் போல,விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அது. இதனை ஓதி வந்தால் மன பயம், பகைத் துன்பம் நீங்கும். முருகப்பெருமான் இந்தமந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று,மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டானஆயிரங்கண்களை இதை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.
------------------------
கணபதி

தடைகளை விலக்கி துவக்கும் எல்லா செயல்களிலும் வெற்றியினை அளிப்பவர் கணபதி. நல் அறிவையும் புகட்டுபவர். மாணவர்களாலும் மாணவிகளாலும் வணங்கப்படுபவர்.

இந்தியாவில் இந்தியர்கள் தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் இவருக்கே முதல் வழிபாடு என்று பழக்கத்தில் பல காலமாக உள்ளது. எதனை எழுதுவதற்கு முன்பும் இவரை நினைத்து பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத துவங்குவார்கள். சாலை ஓரங்களில், இரண்டு சாலைகள் கூடும் இடங்களில் இவர் சிலை வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. இந்து கடவுளர்களில் மிகவும் பிரசித்தமான கடவுளாக விளங்குபவர் கணபதியே.

பஞ்சாயதன பூஜையில் அதாவது சிவன் அம்பாள், விஷ்ணு, சூரியன், வினாயகர் என்பதில் முதலில் வருபவர் கணபதி. கணபதியினை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர். இதனை பின்பற்றுபவர்கள் கணபதியை உலகினை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவங்களிலும் இவர் விளங்குபவராகவும் கருதுகின்றனர்.

பிரம்மவைவர்த்த புராணத்தில் கணபதியே தான் ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்லப்படுவதால், இவர் வைணவர்களாலும் வணங்கப்படுகிறார் என்று ஆகிறது. அவர்கள் இவருக்கு அளிக்கும் பெயர் விஸ்வக்சேனர் என்பதாகும். புத்தர்களும் ஜைனர்களும் கூட கணபதிக்கு முக்கிய இடம் அளிக்கின்றனர்.

கணபதி வழிபாடு இந்திய துணை கண்டத்தில் மட்டும் என்று இல்லாமல், நேபாள், இலங்கை, திபெத், தாய்நாலாந்து, பெர்சியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, என கடல் கடந்தும், சைனா, ஜப்பான், ஜாவா, பாலி, போர்னியா போன்ற அயல் நாடுகளிலும் பரவியுள்ளது. மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் கண்டு எடுக்கப்பட்ட 3,000 இந்து கடவுள் சிலைகளில் கணபதி சிலையும் அதிகமாக உள்ளன. மெக்சிகோவில் இவருக்கு உள்ள பெயர் "வீரகோசா"உருவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அயல் நாடுகளில் வெகு பழமை காலத்திலேயே கணபதி வழிபாடு இருந்துள்ளது. ஈரான் நாட்டில் அரிஸிதான் என்ற இடத்தில் பல வருடங்களுக்கு முன் யானை முகம் கொண்ட ஒரு தகடு அகழ் ஆராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த தகட்டின் காலத்தை 1200 முதல் 1000 H.R. என நிர்ணயித்துள்ளனர்.

தத்துவ ரீதியாக யானை முகத்தானை வர்ணிக்கும் போது மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள ஒற்றுமையை காட்டுவதாக அமையும். யானை முகத்தான் சிறியவற்றிக்கும் (அதாவது மனிதன்) பெரியவற்றிக்கும் (அதாவது யானை) உள்ள ஒற்றுமையை காட்டுகிறது. என்று மேல்நாட்டு அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மிகவும் பழமையான ரிக் வேத வல்லுனர்கள் கடவுளர்களில் மிகச் சிறந்தவராக கணபதியினை கருதுகின்றனர். கணபதியினை குறித்த பல தோத்திரங்கள் வேதங்களில் காணப்படுகின்றன.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கணபதி வழிபாட்டு புனித ஸ்தலங்கள் உள்ளன.

பெரோலி : பழைய காலத்தில் இதற்கு அலாபுர க்ஷேத்திரம் என்று பெயர். இங்கு க்ருஷ்ணேஸ்வரர் (குஷ்மேஸ்வரர்) ஜ்யோதிர் லிங்கம் உள்ளது. இந்த இடத்தின் சிறப்பு என்னவெனில் முருகப்பெருமாள் சிவபெருமானின் அறிவுரைப்படி தாரகாசுரனை கொல்வதற்கு முன்பு இங்கு வந்து கணபதியை வழிபட்டார் என்பதே. இங்குள்ள கணபதியை முருகப்பெருமானே பிரதிஷ்டை செய்தார் என்றும் இவருக்கு வினாயகர் என்ற பெயர் என்று வழக்கில் உள்ளது.

மோரேஸ்வரர் : இந்த பகுதிக்கு புஸ்வானந்த க்ஷேத்திரம் என்று பெயர். இந்த இடம் பூனாவிலிருந்து 40A.e. தொலைவில் உள்ளது. இங்குள்ள கணபதிக்கு முரேச கணேசர் என்று பெயர்.ராஜுரா: இந்த இடத்திற்கு ராஜசதன் க்ஷேத்திரம் என்று பெயர். இது ஜால்னா ரயில் நிலையத்திலிருந்து 14A.e. தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் கணேசர் சிந்துராசுரனை அழித்தபின் வரேன்ய மன்னனுக்கு கணேச கீதை உபதேசித்தது ஒரு சிறப்பு. ராஜுராவை குருக்ஷேத்திரத்தில் உள்ள ஜ்யோதிசார் என்னும் இடத்திற்கு ஒப்பிடுவர். இங்கு தான் அருச்சுனனுக்கு கிருஷ்ணன் கீதையினை உபதேசித்தார்.

பிரயாகை : இது உத்திர பிரதேசத்தில் அலஹாபாத்தில் உள்ளது. இதற்கு ஓங்கார க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. ஆதிகாலத்தில் பிரணவம் (ஓங்காரம்) நான்கு வேதங்களுடன் தோன்றி இந்த இடத்தில் கணேசரை பிரதிஷ்டை செய்ததாகவும் அவரே தன்னை இங்கு பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.

காசி : துண்டிராஜ க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. இங்கு தான் புகழ் மிக்க பிரசித்தமான துண்டிராஜ கணேசர் ஆலயம் உள்ளது.

கும்பகோணம் : தமிழ் நாட்டில் மிகவும் புகழ்பெற்ற புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்று. இதற்கு ஸ்வேதவிக்னேஸ்வர க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. காவேரி நதிக்கரையில் சுத்த கணபதி ஆலயம் இங்கு உள்ளது. மிகுந்த பிரயாசையுடன் அமிர்த்தத்திற்காக கடலை கடைந்ததும் அமிர்தம் கிடைக்காததால் தேவர்கள் இங்கு கணபதியை தொழுத பின் அமிர்தம் பெற்றனர் என்று வரலாறு.

பத்வமால்யா : இது பழமையான ப்ரவால க்ஷேத்திரம். பம்பாய் - புசாவல் ரயில் மார்க்கத்தில் மஹஸ்வாடா ரயில் நிலையத்திற்கு ஐந்து மைல் தொலைவில் பத்மாலயா உள்ளது. இந்த தலம் மிகவும் புகழ் பெற்றது. கார்த்தவீர்யனும் (சஹஸ்ரார்ஜூனன் என்றும் சொல்வதுண்டு) சேஷனும் இங்கு கணபதியை தொழுதுள்ளனர். இவர்கள் இருவரும் பிரதிஷ்டை செய்த இரண்டு கணபதிகள் இன்றும் உள்ளன. இந்த ஆலயத்திற்கு முன்னால் "உகமா"என்ற புகழ்பெற்ற குளமும் உள்ளது.

கலம்பா : இதனை சிந்தாமணி க்ஷேத்திரம் என அழைப்பர். இதன் பழைய பெயர் கடம்பபுரம். கவுதம ரிஷியின் சாபத்திலிருந்து நிவாரணம் பெற இந்திரன் இங்குள்ள சிந்தாமணி கணபதியை வணங்கி சாப விமோசனம் பெற்றான் என்பது வரலாறு.

நாமாலா காவ் : இதுதான் பழமையான அம்லாச்ரம க்ஷேத்திரம். கச்சிகுடா - மன்மாட் ரயில் மார்க்கத்தில் ஜால்னா ரயில் நிலையத்திலிருந்து தோசபுரி வரையில் பேரூந்தில் சென்று அதன் பின் இந்த இடத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஒரு காலத்தில் இருந்தது. தன் தாயின் சாபத்தில் இருந்து விடுபட யமன் இங்கு கணபதியை வணங்கி விடுபட்டான். யமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆசபூரக கணபதி இன்றும் அருள் பாலித்துக் கொண்டுள்ளார். சுபத்தி ப்ரத தீர்த்தம் என்ற புகழ்மிக்க குளம் இங்குள்ளது.

அதோஷா : இதற்கு சாமி விக்னேச க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. நாகபுர - சிண்ட்வாடா ரயில் மார்க்கத்தில் சமரேரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5மைல் தொலைவில் உள்ளது. மஹப்பா சங்கடா, சத்ரு என்ற மூன்று அரக்கர்களை அழிக்க தேவர்களும் ரிஷிகளும் இந்த இடத்தில் கணபதியினை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு. மஹாபலியின் யாகத்திற்கு போகும் முன் வாமன மூர்த்தியும் இங்கு கணபதியை வணங்கி சென்றதாகவும் வரலாறு உண்டு.

லோஷ்யாத்ரி : ஜௌரா தாலுக்காவிற்கு அருகில் பூனா மாவட்டத்தில் இந்த தலம் உள்ளது. தனக்கு கணேசன் மகனாக பிறக்க வேண்டி பார்வதி இந்த இடத்தில் கடும் தவம் செய்ததாக வரலாறு. இதன் பழைய பெயர் பள்ளிபுரா பள்ளால என்ற வைச்யன் தவத்திற்கு மெச்சி கணபதி இங்கு தோன்றியதாக கூறப்படுகிறது. ஆகவே இந்த பகுதிக்கு வல்லாலி வினாயக க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு. பழமையான வரலாற்றில் குறிக்கப்படும் சிந்து தேசம் தற்போது இல்லை ஆனால் குலவ மாவட்டத்தில் உள்ள (மஹாராஷ்டிரம்) பாலி க்ஷேத்திரம் மிகவும் புகழ்மிக்கது.

ஜலசேபுரா : தற்சமயம் இந்த தலம் இல்லை. இந்த இடத்தில் மயன் கணபதி ஆலயம் நிர்மாணம் செய்து வழிபட்டதாக தெரிகிறது. திருபுராவின் அசுரர்களும் இங்கு வழிபட்டுள்ளனர்.

பரினேரா : இதற்கு மங்கள மூர்த்தி க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. இங்கு மங்கள பகவான் (அங்காரகன்) இந்த இடத்தில் கணபதியை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். நர்மதைக் கரையில் இந்த தலம் உள்ளதாக சொல்லப்பட்டாலும் எந்த இடத்தில் உள்ளது என்று நிர்ணயிக்க முடியவில்லை.

கஸ்யபாஸ்ரமம் வரலாற்றில் குறிப்பிட்டிருந்தாலும் இது எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. தன்னுடைய ஆசிரமத்தில் கணபதியினை பிரதிஷ்டை செய்து காச்யபர் வழிபட்டார் என்று கூறப்படுகிறது.

கங்கா - மசாலே : இது பாலசந்திர கணேச க்ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது. கச்சிகுடா மன்மாட் ரயில் மார்க்கத்தில் பர்பானி நிலையத்தில் இருந்து 26மைல் தூரத்தில் உள்ள சிலு நிலையத்தில் இருந்து 15மைல் தூரத்தில் உள்ளது. கோதாவரி நதியின் நடுவில் பாலசந்திர கணேசர் ஆலயம் உள்ளது.

விஜயபுரா : அனலாசுரனை அழிக்க கணபதி தோன்றினார். இது தைலிங்க தேசத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. எங்கு என நிர்ணயிக்கப்படவில்லை. சென்னை - மங்களூர் ரயில் பாதையில் விஜய மங்கலம் என்ற ரயில் நிலையம் உள்ளது. ஈரோடுலிருந்து 16மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள கணபதி மிகவும் பிரத்திபெற்றவர். ஆனால் இந்த தலம் தானா விஜயபுரா என்று உறுதியாக தெரிவதற்கில்லை.

பாஸ்கரபுவனா : கோதாவரிக்கரையில் ஜால்னாவில் இருந்து 33மைல் தூரத்தில் உள்ளது. குருதத்தாத்ரேயர் இங்கு தவம் செய்து விஞ்ஞான கணேசரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு. இந்த கோவில் இன்றும் உள்ளது.

ராஜா நாகாவ் : இது மணிபூர க்ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது. பூனாவிலிருந்து பேரூந்தில் இதனை அடையலாம். திரிபுரத்தின் அசுரர்களை வெற்றி காண முடியாத நிலையில் பரமேஸ்வரன் இந்த இடத்தில் கணபதியை வழிபட்டு வெற்றி கண்டார் என்று வரலாறு. இந்த ஆலயம் தற்போதும் உள்ளது.

தேவுரா : பூனாவில் இருந்து ஐந்து மைலில் உள்ளது. படைப்பு தொழிலில் ஏற்படும் இடர்பாடுகளை களைய பிரம்மா இந்த இடத்தில் கணபதியை வழிபட்டதாக வரலாறு.

சித்ததேகா : பீமா நதிக்கரையில் போரிவில்லி நிலையத்திலிருந்து 5மைல் தூரத்தில் உள்ளது. இதற்கு பழமையான பெயர் சித்தாஸ்ரமம். மது கைடபர்களைக் கொல்ல மஹாவிஷ்ணு இந்த இடத்தில் கணபதியை வணங்கியதாக வரலாறு. வேதவியாசர் த்வாபர யுகத்தின் முடிவில் நான்கு வேதங்களையும் தொகுப்பதில் ஏற்பட்ட இடர்படுகளை களைய இந்த மஹா விஷ்ணுவால் ஏற்படுத்தப்பட்ட சித்தாஸ்ரமத்தில் கணபதியை வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது.

(இந்த கட்டுரைக்கு ஆதாரம் 31.8.1975 பவன்ஸ் ஜர்னல்)
------------------------
பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் நோக்கம் என்ன?

வழிபாடு நடக்கும் இடத்தில் துஷ்டசக்திகள் அண்டக்கூடாது என்பதற்காகவே பூஜை மணியை பயன் படுத்துகிறோம். சிவனுக்குரிய வாகனம் நந்தி. கைலாயத்தின் பாதுகாவலராக இருப்பவர் இவர். சிவ பூஜை நடக்கும் இடத்தை நந்திதேவர் பாதுகாப்பதாக ஐதீகம். விஷ்ணு கோயில்களில் பூஜை  மணியில் சக்கரத்தாழ்வார் இடம் பெற்றிருப்பார்.
------------------------
விநாயகர் சதுர்த்தி

எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் படைத்து  வணங்குகிறோம். இந்த படைப்புகளுக்குக் கூட காரணங்கள் இருக்கிறது. சைவத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு  நிலைகள் உண்டு. சரியை என்றால் பக்குவமில்லாத பக்தி என  பொருள். தற்போது நாம் மேற்கொள்வது சரியைதான். சைக்கிளில் சென்று  கொண்டிருக்கும் ஒருவன் அதில் இருந்தபடியே இறைவனுக்கு வணக்கம் செலுத்திவிட்டு போய்விடுகிறான். இதை மரியாதை குறைவாக  எண்ணக்கூடாது. அவனுக்கு இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்பது சரியாக சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்றே  எடுத்துக்கொள்ள வேண்டும்.

கனி: விநாயகருக்கு கனி படைப்பதின் காரணம், மனிதா! நீ இறைவனால் படைக்கப்பட்டவன். என்றேனும் ஒருநாள் அந்த இறைவனை  அடைந்துதான் ஆக வேண்டும்.  அதற்குரிய முன்னேற்பாட்டை நீ செய்துகொள். பொருள்தேடி அலைவதிலோ, 24 மணி நேரமும்  உழைப்பதிலோ எந்த தவறும் கிடையாது. ஆனால், அந்த உழைப்பின் பலனை நீ என்ன செய்திருக்கிறாய் என்று எண்ணிப்பார். உனது  மனைவி, குழந்தைகள் அனைவருக்கும் அந்த சொத்துக்களை எழுதி வைத்திருக்கலாம். இது உன் குடும்பத்திற்கு மட்டுமே ஆகும். ஆனால்,  இந்த உலகத்திற்காக நீ ஏதாவது செய்ய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறான். குறைந்தபட்சம் ஒரு அன்னதானமாவது செய்தாயா  என யோசித்துப்பார். அப்படி செய்யாமல் இருந்தால் அதை இன்றே செய்துவிடு. ஏனெனில் நீயும் ஒருநாள் எனக்கு படைக்கப்பட்ட கனி  போல பழுத்துவிடுவாய். பழுத்தகனி மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். அதாவது, உன் வாழ்க்கை அழிந்துபோகும். அதற்கு முன்னதாக நீ காய்  பருவத்திலேயே (வாழும்போதே) நல்லதைச் செய்துவிடு, என்பதைக் குறிப்பால் காட்டுவதற்கு ஆகும்.

அவல்: விநாயகருக்கு அவல் படைக்கப்படுகிறது. அவலை அரிசியிலிருந்து தயாரிக்கிறோம். அது உரலில் அங்கும் இங்குமாக புரண்டு  மிகக்கடுமையாய் இடிபடும்.  எந்த அளவுக்கு இடிபடுகிறதோ அந்த அளவுக்கு சுவையான அவல் கிடைக்கிறது. அரிசி உரலுக்குள்  இடிபடுவதுபோல, மனிதனாகப் பிறந்தவனும் பசி, பட்டினி, வறுமை, நோய் நொடி என  வாழ்க்கைச் சூழலில் சிக்கி இடிபட்டுத்தான்  ஆகவேண்டும். அதற்காக இறைவன் மீது வருத்தப்படக்கூடாது. இந்த துன்பங்களுக்கு காரணம் அவரவர் வினைகளே. வகுப்பறையிலுள்ள  உங்கள் பெஞ்சில் செல்லும் எறும்பை நீங்கள் நசுக்கக்கூடாது. கடிக்க வந்தாலும் தூர தள்ளி விட்டால் போதும். மீறி அடித்தால் அடுத்த  பிறவியில் இதே துன்பத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும். எனவே துன்பங்களுக்கு காரணம் அவரவர் செய்த பாவங்களே என்று  குறிப்பிடுவதே அவல் படைப்பதின் தத்துவமாகும்.

அப்பம்:  அப்பம் மாவிலிருந்து தயார் செய்யப்படுகிறது.  மாவு முதலில் பக்குவப்படாமல் இருக்கிறது. அதை உருட்டி, இலையில் வைத்து  தட்டையாக்கி, எண்ணெய்ச்சட்டியில் போட்டு எடுக்கிறோம். பச்சை மாவு உருண்டை எண்ணெய்ச்சட்டிக்குள் விழுந்ததும் சடசடவென  கொதிக்கும். பாவம் செய்த மனமும்  இதுபோல்தான் பதறித் துடிக்கும். எதற்கும் பயப்படும். பரபரப்பு அடையும். சற்று வெந்ததும் மாவின்  சத்தம் அடங்கி போகும். வாழ்க்கையிலும் அனுபவப்பட்டுவிட்டால் வெந்த அப்பத்தைப் போல மனம் பக்குவப்பட்டுவிடும். பக்குவப்பட்ட  மனமுடையவனுக்கு இறையருள் எளிதில் கிடைத்து விடும்.

பொரி: விநாயகருக்கு பொரி படைப்பதன் நோக்கம் மீண்டும் பிறவி எடுக்கக்கூடாது என்பதற்காகத்தான். நெல்லை நிலத்தில் போட்டால்  முளைக்கும். அதையே வறுத்து பொரியாக்கி நிலத்தில் போட்டால் விளையாது. நீ நெல் போல இருக்காதே; பொரியாக மாறிவிடு. பொரிக்கு  எப்படி வளரும் சக்தி கிடையாதோ அதுபோல் மறுபிறவி என்ற சொல்லையே மறந்துவிட்டு இறைவனுடன் ஐக்கியமாகிவிடு, என்பதே  இதன் பொருள்.

இரட்டைப் பிள்ளையார்: சில கோயில்களில் இரட்டைப்பிள்ளையாரை பார்க்க முடியும். விநாயகர் முழுமுதற் கடவுள் என்பதால் சிவன்  உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அவரை வணங்கிய பிறகே எந்த காரியத்தையும் தொடங்குவார்கள் என்பது பொது விதி. விநாயகரே  ஒரு காரியத்தை தொடங்க வேண்டும் என்றாலும் கூட தன் அருகில் மற்றொரு விநாயகரைப் படைத்து வணங்கியபிறகே செயலைத்  தொடங்க வேண்டும் என்பதற்காக இரட்டைப்பிள்ளையார் சன்னதிகள் சில கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சியம்மன்  கோயிலில் இரட்டை விநாயகரைப் பார்க்கலாம். மகாபாரதத்தை விநாயகர் எழுதத் துவங்கும் போது தன்னைத்தானே வணங்கி எழுதத்  துவங்கினார் என்றும் சொல்வதுண்டு.

தோப்புக்கரணம்: விநாயகருக்கு தினமும் 30 தோப்புக்கரணம் போடுவது சிறப்பானதாக அமைகிறது.  இவ்வாறு செய்தால் பக்கவாதம்  வராது. அறிவுச்சுடரை தூண்டுவதற்காகத் தான் தலையில் குட்டிக்கொண்டே தோப்புக்கரணம் போடுகிறோம். அது மட்டுமின்றி ஈகோ  எனப்படும் தாழ்வு, உயர்வு மனப்பான்மையை நீக்கி, சம உணர்வை உண்டாக்குகிறது.

வயிறு: விநாயகருக்கு வயிறு பெரிதாக இருக்கிறது.  இதற்கு அவர் அளவுக்கு அதிகமாக கொழுக்கட்டையைச் சாப்பிட்டதால்  உண்டானதாக வேடிக்கையாக சொல்வதுண்டு. ஆனால், காரணம் அதுவல்ல. மனித உறுப்புகளிலேயே வயிறுதான் சிறப்பான  குணமுடையது. வயிற்றுக்குள் செல்லும் உணவு ஜீரணிக்கப்பட்டு ரத்தமாக மாறி உடல் முழுக்க செல்கிறது. மனிதனும் வயிறைப்  போலவே இருந்து தனக்கென மட்டும் வைத்துக்கொள்ளாமல், பிறருக்கும் உதவ வேண்டும் என்ற தத்துவத்தை  எடுத்து சொல்கிறது.

ஒடிந்த கொம்பு: விநாயகருக்கு ஒரு கொம்பு ஒடிந்ததற்கு புராணக்கதை அனைவருக்குமே தெரியும். அவர் வியாசர் சொல்லச்சொல்ல  பாரதத்தை முதலில் எழுத்தாணி கொண்டுதான் எழுதினார். ஒரு கட்டத்தில் எழுத்தாணி தேய்ந்து விட்டது.  தன் பணியைத்  தடையில்லாமல் செய்ய தனது  தந்தத்தை உடைத்து எழுத ஆரம்பித்தார். எல்லா மனிதர்களுக்குமே ஒரு காரியத்தை செய்யும் போது  தடை வருகிறது, எந்தத் தடையையும் கண்டு நீங்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது. என்ன வசதி இருக்கிறதோ அதைக்கொண்டு  காரியத்தை தொடர்ந்து நடத்தி வெற்றிபெற வேண்டும் என்பதையே உடைந்த கொம்பு எடுத்துக்காட்டுகிறது.

பெருச்சாளி வாகனம்: ஒரு டன் எடையுள்ள யானையை ஒரு பெருச்சாளி தாங்குமா என நீங்கள் கேள்வி கேட்கலாம்.உங்கள் சிந்தனை  நூற்றுக்கு நாறு உண்மை. விநாயகர் யானை வடிவத்தை கொண்டவர். ஆனால், பெருச்சாளியின் மீது அமர்ந்திருக்கிறார். அப்படிஅமர்ந்தால்  பெருச்சாளி நசுங்கிவிடும். இதற்கு என்ன பொருள் தெரியுமா? இறைவனைப் பொறுத்தவரை எளியதும் வலியதும் ஒன்று தான். அவர்  எல்லாருக்கும் ஒரே மாதிரியாகத்தான் அருள் செய்வார். எல்லாரையும் சமமாகவே பாவிப்பார் என்ற தத்துவம் தான்.

அரசமரம்: விநாயக பெருமான் அரசமரத்தடியில் வீற்றிருக்கிறார். கண்ணபரமாத்மா கீதையில் மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்  என சொல்கிறார். கிராமங்களில் ஊர்ப்பஞ்சாயத்து அரசமரத்தின்கீழ்தான் நடக்கிறது. ஹோமங்களின்போது அரசமர சுள்ளிகளைக்  கொண்டுதான் தீ மூட்டுகிறார்கள். சில திருமண வீடுகளில் அரசாணிக்கிளை மணமேடைகளில் கட்டப்படுகிறது. மரங்களை நடுவது  மழைக்காக மட்டுமல்ல. அதிகமாக ஆக்சிஜனை அவை வெளிவிடும் என்பதால்தான்.  அரசமரத்திற்கு 95 சதவீதமும்,  வேப்பமரத்திற்கு 90  சதவீதமும் ஆக்சிஜனை வெளியிடும் சக்தி இருக்கிறது. எனவேதான் அரசும் வேம்பும் இணைந்த நிலையில் விநாயகர் சிலைகளை அதன்  அடியில் வைப்பதுண்டு. மேலும் அரசமர பட்டையில் செனட்டோனியம் என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இப்பொருள் கர்ப்பம் தரிக்கும்  ஆற்றலை  வளர்க்கும். இதன் காரணமாகத்தான் குழந்தை இல்லாத பெண்களை அரசமரத்தை சுற்றிவரச் சொல்கிறார்கள்.

மாவிலைத் தோரணம்: விநாயகர் சதுர்த்தி மற்றும் வீட்டு விசேஷங்களில்  மாவிலை தோரணம் கட்டுகிறார்கள். மாமரத்திற்கு கார்பன்  டை ஆக்சைடை உறிஞ்சும் திறன் உண்டு. ஒரு கோயிலுக்குள் கூட்டமாக மக்கள் நிற்கும்போது சுவாசத்தின் காரணமாக கார்பன்டை  ஆக்சைடை அதிகமாக வெளியிடுவார்கள். இதையே திரும்பத்திரும்ப சுவாசிப்பதால் உடலுக்கு கேடு உண்டாகும். மாவிலைகள்  கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி விடும்.  மங்களகரமான வீடுகளில் மட்டுமின்றி, துக்கவீட்டிலும் மாவிலை தோரணம் கட்டுவதுண்டு.  அடையாளம் தெரிவதற்காக மாவிலையின் நுனியை துக்கவீடுகளில் மேல்நோக்கி கட்டுவார்கள். சுபகாரியம் நடக்கும் வீடுகளில்  கீழ்நோக்கி கட்டுவார்கள்.
இருள் நீக்கியிலிருந்து இருள் நீக்க வந்த இறையருளே!

மாகாதேவர் தந்த மஹா தேவரே!
சரஸ்வதி அம்மாள் சுமந்த சரஸ்வதியே!

ஜனிக்கும் போது கூப்பிய கரங்களுடன் பிறந்தீர்!

இன்று ஜகம் அனைத்தும் உம்மை கை கூப்பி வணங்குகிறது!

அவனிக்கு வரும் போது அனைவரும் அழுது கொண்டு தான் வருகிறோம்!

ஆனால் நீர்மட்டம் தொழுது கொண்டு வந்ததால் தான் உம்மையே தெய்வமென தொழுது கொண்டு கொஞ்சம் நிற்கிறது இவ்அவனி!

சுப்பிரமணியனாய் பிறந்து ஜயேந்திர சரஸ்வதியாய் வந்து ஜகம் அனைத்தும் ஆளும் ஜகத் குருவே!

பொன்மாரி பொழிய வைத்த சங்கரின் வழி வந்த பொன்னாக மின்னும் எங்கள் பொக்கிஷமே!
உயர் பொலிவுடன் திகழும் பொன் மயமே!

உயர் சந்திரகேகரேந்திர சரஸ்வதி மகிழ்ந்த சங்கராச்சாரிய குருதேவா!

சரஸ்வதி புகழும் சதுர்மறை கூறும்
அருளே வா!

சங்கரருக்கு பிறகு மஹா கைலாஷ
சிகரத்தில் அவருக்கு சிலை வைத்த சிகரமே!

பல்கலைக்கழகம் கண்ட பல்கலை வித்தகரே!

சமய தொண்டுடன் சமுதாய தொண்டும் ஆற்றிய வித்தகரே ஆன்மீக குருவே!

குருநாதரின் கனவுகளை நினைவாக்கிய குருபக்த சிகாமணியே!

ஆன்மீக சமாஜத்தின் அருள் பாலித்த அருட்கொடை வள்ளலே!

ஊங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் எங்களை காத்தருள்வாயாக!

ௐ ப்ரத்யக்ஷ ஸ்ரீநிவாஸனே சரணம் சரணம்.

ஜய ஜய சங்கர ஜயேந்திர சங்கர
விஸ்வாமித்திரருக்கு ப்ராம்மணத்தன்மை கிடைத்த வரலாறு...

பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த சம்பாஷனை. அப்பா குந்தி புத்திரனே! முன்னாள் விஸ்வாமித்ரருக்கு ப்ராமணரானதும் ப்ரம்ம ரிஷியானதும் எப்படி என்பதை சொல்கிறேன் கேள்.

பரதனுடைய வம்சத்தில் தர்மத்தில் சிறந்தவனான மிதிலன் என்ற அரசனுக்கு ஜன்னு என்ற புத்திரன் இருந்தான். அந்த ஜன்னுவுக்கு கங்காதேவி பெண்ணானாள். அவனுக்கு ஸிந்துத்வீபன் என்ற புத்திரன் உண்டானான். மஹா பலசாலியான பலாகாஸ்வன் ஸிந்துத்வீபனுடைய புத்திரன். இவனுடைய மைந்தன் தர்மஸ்வரூபமான வல்லபன். வல்லபனுடைய புதல்வன் இந்திரனு கொப்பான குசிகன். அந்த குசிகனுக்கு சிறப்புற்ற காதியெனும் புதல்வன்.
காதி தனக்கு ஸந்ததி வேண்டி வனத்தில் இருக்கையில் அவனுக்கு ஸத்யவதி என்று ஒரு கன்னிகை பிறந்தாள். ப்ருகு வம்சத்தில் உதித்த ச்யவனருடைய புதல்வர் ரிசீகரென்பவர் அந்த கன்னிகையை மணம் முடிக்க கேட்க... அந்த காதி இவரை தரித்திரனென்று நினைத்து ஒதுக்க எண்ணினான். அதனால் அவரை நோக்கி ஒற்றை காது கறுத்தவையும் சந்திரகிரகணம் போல வெண்மையாக பிரகாசிப்பவையும் வாயு வேகமுள்ள ஆயிரம் குதிரைகளை கேட்டார். (கிட்டதட்ட வரதட்சணை) அந்த மஹாத்மாவானவர் வருண பகவானை யாசிக்க அவரும் வரமாக குதிரைகளை தந்தார். அந்த குதிரைகள் கங்கா தீர்த்தில் உருவாயின..(கன்னியா குப்ஜ தேசத்தில் அந்த குதிரைகள் உருவான இடம் அஸ்வ தீர்த்தம் என்று கூறப்படுகின்றன). இதனால் பயந்த காதியானவன் உடனே தன் மகளை ரிஷீக்ருக்கு மணம் முடித்து வைத்தார். அவள் திருமணத்திற்க்கு பிறகு ஒவ்வொரு நாளும் தான் ரிஷீகரிடம் இருந்து கேட்டவைகளை தன் தாய்க்கு சொல்லிக்கொண்டு இருந்தாள். ஒரு நாள் சந்ததி விருத்திக்கான விஷயத்தை ரிஷீகர் கூற அதை தன் தாய்க்கு சொன்னாள். அதனால் அவள் தாயும் சந்ததி விருத்தியை நினைக்க அது ரிஷீக்ருக்கு தெரிந்தது. உடனே அவர் தன் மனைவியை நோக்கி நீயும் உன் தாயும் ஒரு குழந்தைகளை பெறுவீர் என்று கூறி சந்ததி விருத்திக்காக இரண்டு ஹவிஸுகளை கொடுத்து தாயை அரச மரத்தையும் மனைவியை அத்திமரத்தையும் தழுவ சொல்லி சென்றார். ஆனால் தாயானவள் விபரீத புத்தியால் தன் மகளிடம் அவள் வைத்திருகும் ஹவிஸை வாங்கி அரச மரத்துக்கு பதிலாக அத்தி மரத்தை தழுவிணாள். பின்னர் இருவரும் கர்பந்தரித்தனர்.

ஆனால் ரிஷீகர் நடந்ததை கண்டு கொண்டு... மனைவியை நோக்கி சொன்னார். ப்ரியமானவளே! இந்த விபரீத மாறுதலால் நீ சத்திரிய குழந்தையையும் உன் தாய் பிராம்மண புதல்வனையும் பெறுவார்கள். உனக்கு கொடிய செயல் உடைய சத்திரியன் பிறப்பான் என்று கூறினார். இது கண்டு அதிர்ச்சி அடைந்த அவள் மூர்ச்சையடைந்தாள். பின்பு மூர்ச்சை தெளிந்து ரிசீகரை பிராத்தித்தாள். ரிசீகரே! தயவு செய்து எனக்கு கொடிய செய்கை உடைய சத்திரியனை மகனாக பிறக்க செய்யாதீர் என்று கூற அவரும் அப்படியே ஆகட்டும் என்று சொன்னர். இதன் பலனாக ரிஷீகரின் மனைவி சத்தியவதி ஜமதக்னி என்னும் பிள்ளையை பெற்றாள். ஸத்தியவதியின் தாயும் காதியின் மனைவி விஸ்வாத்திரரை பெற்றாள். அதனாலே விஸ்வாமித்ரர் சத்திரியராய் இருந்து பிராமண்ணத்துவத்தை அடைந்து ப்ராமண சந்ததியை உண்டு பண்ணினார் (அவர் சத்திரிய அழுக்கை நீக்க 2000 வருடம் தவம் செய்து"ராஜரிஷி" பட்டம் பெற்று பின் 'ரிஷி' பட்டம் பெற்றார். பின்பு ஆயிரம் வருஷம் உண்ணாமல் தவம் செய்து பிரம்ம தேவரை மகிழ்வித்து ' பிரம்ம ரிஷி' பட்டம் பெற்றார். ஆக 3000 வருட தவத்தால் பிராம்மணத்துவத்தை பூரணமாக அடைந்தார். ஆதாரம் வால்மீகி ராமாயணம்) அவர்களுடைய புதல்வர்கள் பலர் ப்ரம்ம ஞானிகளும் பல கோத்திரங்களுக்கு முதல் புருஷர்களாக இருந்தனர். பகவானான மதுச்சந்தன், தேவராதன், அக்‌ஷீணன், சகுந்தன், பப்ரூ, காலபதன், யாஜ்ஞவல்க்யன், ஸ்தூணன், உலூகன், யமதூதன், ஸைந்தவாயயென், பர்ணஜங்கன், காலவ மஹரிஷி, வஜ்ர ரிஷி, ஸாலங்காயன், லீலாட்யன், நாரதன், கூர்ச்சாமுகன், வாதூலி, முஸலன், வக்‌ஷேக்ரீவன், ஆங்க்ரி, நைகத்ருக், சிலாயூபன், ஸிதன், சுகி, சக்ரகன், மாருதந்தவ்யன், வாதாக்னன், ஆஸ்வலாய்ன், ஸ்யாமயனன், கார்க்யன், ஜாபாலி, ஸுஸ்ருதன், காரீஷி, ஸ்ம்ஸ்ருத்யன், பரன், பௌரவன், தந்து, கபில் மஹரிஷி, தாடகாயன மஹரிஷி, உபகஹனன், ஆஸுராயண ரிஷி, மார்த்தமரிஷி, ஹிரண்யாக்‌ஷன், ஜாங்காரி, பாப்ரவாயணி, பூதி, விபூதி, ஸூதன், ஸூரக்ருத், அராலி, நாசிகன், சாம்பேயன், உஜ்ஜயனன், நவதந்து, பக நகன், ஸேயனந், யதி, அம்போருதன், சாருமத்ஸ்யன், சிரீஷி, கார்த்தபி, ஊர்ஜயோனி, உதாபேஷி, நாரதி மஹரிஷி  ஆகிய விஸ்வாமித்ரர் மைந்தர்கள் அனைவரும் வேதங்களை வெளியிட்ட மஹரிஷிகள் ஆவார்கள். யுதிஷ்டிரரா! ரிஷீக மஹரிஷியால் வெளியிடப்பட்ட அந்த மந்திரம் பெரிது. பாரத சிரேஷ்டனே சந்திரன் சூர்ய அக்னிக்கொப்பான் விஸ்வாமித்ரர் ஜனனம் முழுவதும் என்னால் உனக்கு சொல்லப்பட்டது என பீஷ்மர் யுதிஷ்டிருக்கு உரைத்தார்.

#யுதிஷ்டிரர்
#விஸ்வாமித்ரர்
#விஸ்வாமித்ரசரிதம்
#பீஷ்மர்
#மஹாபாரதம்
#விஸ்வாமித்ரர்_சரிதம்

(இதே இன்னைக்கா இருந்தா நம்மாளுக பூணூல போட்டு நீயும் பிராமணன் தான் அதற்கு சட்டம் போட்டாச்சி ... அப்படின்னு சொல்லிருப்பானுக... இந்த மனுசன் படாத பாடு பட்டிருக்கார்... இதுக்கு தனி கோர்ஸ் டிகிரி கூட ஆரம்பிச்சிருப்பானுக...)

ராம் ராம்
"ஸ்வஸ்தி வாசனம்"
|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார - த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித - ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத - ஸ்ரீமதேகாம்ரநாத - ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத - ஸாக்ஷாத்கார - பரமாதிஷ்ட்டான - ஸத்யவ்ரத நாமாங்கித - காஞ்சீ திவ்யக்ஷேத்ரே - சாரதாமட ஸுஸ்த்திதாநாம் - அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ - ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த - துந்துலித - மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத - சாந்தி தாந்தி பூம்நாம் - ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக - ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம் - நிகில பாஷண்ட ஷண்ட - கண்டகோத்காடநேந - விசதீக்ருத வேத வேதாந்த மார்க - ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய - ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே - ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம் - அந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம் - ததந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

நம் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை இந்த ஸ்வஸ்தி வாசன ஸ்லோகம் பாராயணம் செய்து வணங்குதல் என்பது நம் பாரம்பரியம் என்கின்றனர் நம் பெரியோர்கள். வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.
-----------------------------------------------

காஞ்சி பீடத்தில் அமர்ந்த குருவாம் காமாக்ஷி தாயை பூஜிக்கும் குருவாம்.

காவல் தெய்வமாய் இருக்கும் குருவாம்.

காருண்ய மூர்த்தியாய் வந்த குருவாம்.

துவராடையை உடுத்தும் குருவாம்.
துரிதமாக வந்து காக்கும் குருவாம்.
துணையாக என்றும் இருக்கும் குருவாம்.

துவளா வண்ணம் காக்கும் குருவாம்.

அர்த்தநாரியாய் இருக்கும் குருவாம்.

அற்புதங்கள் பல செய்யும் குருவாம்.

அல்லும் பகலும் காக்கும் குருவாம்.
அழைத்தால் ஓடி வருகின்ற குருவாம்.

ஞானத்திலே உயர்வான குருவாம்.
மோனத்திலே மூழ்கிடும் குருவாம்.
கானம் கேட்டால் மகிழும் குருவாம்.
தானம் செய்திடும் தயாள குருவாம்.

ஊர் ஊராய் நடந்த குருவாம்.
பேர் புகழை விரும்பாத குருவாம்.
பார் முழுதும் போற்றும் குருவாம்.
பார்த்தசாரதியாய் காக்கும் குருவாம்.

குருவே சரணம்
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
அமாவாசை தர்பணம்*  {யஜுர்வேத ஆபஸ்தம்ப  தர்ப்பணம்}

ஆசமனம் அச்யுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ, கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதனா,  த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

பவித்ரம் {மூன்று புல்} வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ; ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி நஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விகாரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதம்யாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து பௌம வாஸர யுக்தாயாம் உத்ராஷாடா நக்ஷத்ர யுக்தாயாம், வைத்ருதி நாம யோக, பவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதம்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் ....  (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்.....ஸோமோபாராக புண்யகாலே வர்கத்வய பித்ரூன் - உத்திஶ்ய ஸோமோபாராக  ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அ_த்ய_ கரிஷ்யே

“ஆயாத பிதரக: ஸோம்யா கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” அஸ்மின் கூர்ச்சே வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய, வெங்கட்ராம, சுப்பிரம்மண்ய ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் வாதுள கோத்ரா: விஜயலக்ஷ்மி, மீனாக்ஷி சுந்தராம்பாள், முத்து லக்ஷ்மி  சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. கௌசிக கோத்ரா: ஸ்ரீராம, கோதண்ட ராம, வைத்தியநாத ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு

ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.

ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும் மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.

இடது காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி  தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து வாதுள கோத்ரான் வெங்கட்ராம ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா வாதுள கோத்ரான் சுப்பிரமணிய சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: வாதுள  கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாத்ரூ வர்க்கம்:

வாதுள கோத்ராஹா விஜயலக்ஷ்மி தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

வாதுள கோத்ராஹா மீனாட்சி சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.

வாதுள கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம் + ஹவேஷு கௌசிக கோத்ரா னு ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.2 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1  கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.2 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.3 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.1,2,3: கௌசிக கோத்ராஹா மீனாட்க்ஷி தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

2.1,2,3: கௌசிக கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

3.1,2,3: கௌசிக கோத்ராஹா வாளாம்பால் தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் வலம் : தேவதாப்பிய: ______

இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.

ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து

கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயமி.
அமாவாசை தர்பணம்*  {யஜுர்வேத ஆபஸ்தம்ப  தர்ப்பணம்}


யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்.

சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம் செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி மாத்யாணிகம் செய்து விட்டு தர்பணம் செய்யவும்.


அமாவாசை தர்ப்பணம்


முதலில் ஆசமனம் அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதனா,  த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.


பவித்ரம் {மூன்று புல்} வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.


ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.


மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி

மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி நஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விகாரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதம்யாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து பௌம வாஸர யுக்தாயாம் உத்ராஷாடா நக்ஷத்ர யுக்தாயாம், வைத்ருதி நாம யோக, பவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதம்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் ....  (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்.....ஸோமோபாராக புண்யகாலே வர்கத்வய பித்ரூன் - உத்திஶ்ய ஸோமோபாராக  ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அ_த்ய_ கரிஷ்யே*

“ஆயாத பிதரக: ஸோம்யா கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” அஸ்மின் கூர்ச்சே வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய, வெங்கட்ராம, சுப்பிரம்மண்ய ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் வாதுள கோத்ரா: விஜயலக்ஷ்மி, மீனாக்ஷி சுந்தராம்பாள், முத்து லக்ஷ்மி  சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. கௌசிக கோத்ரா: ஸ்ரீராம, கோதண்ட ராம, வைத்தியநாத ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு

ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.


ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.


வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.


இடது காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி  தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .


2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து வாதுள கோத்ரான் வெங்கட்ராம ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா வாதுள கோத்ரான் சுப்பிரமணிய சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: வாதுள  கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


மாத்ரூ வர்க்கம்:


வாதுள கோத்ராஹா விஜயலக்ஷ்மி தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


வாதுள கோத்ராஹா மீனாட்சி சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.


வாதுள கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.


மாதா மஹ வர்க்கம் தர்பணம்:


1.1: உதீரதாம் + ஹவேஷு கௌசிக கோத்ரா னு ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


1.2 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


1.3 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.1  கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


2.2 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.3 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.1 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.2 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


3.3 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


1.1,2,3: கௌசிக கோத்ராஹா மீனாட்க்ஷி தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


2.1,2,3: கௌசிக கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


3.1,2,3: கௌசிக கோத்ராஹா வாளாம்பால் தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.


ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத


பூணல் வலம் : தேவதாப்பிய: ______


இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.


உத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.


பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து


கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.


காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயமி.

சிராத்த காய்கறி
புடலங்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், சேப்பங்கிழங்கு, கருனைக்கிழங்கு, பாகற்காய், இஞ்சி, மாங்காய், கறிவேப்பிலை, பழங்கள் மா, பலா, வாழை, வாழயிலை, விரட்டி, சிராய், சமித்து, நெய், பால், தயிர், வத்தலை, பாக்கு, பூ, மாலை,

பாயசம்
தயிர் பச்சடி
மாங்காய் பச்சடி
கொத்தவரங்காய்
அவரைக்காய்
கருனைக்கிழங்கு
வாழைக்காய்
பாகற்காய்
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
மாங்காய் & இஞ்சி
கறிவேப்பிலை துவையல்
வடை
அதிரசம்
தேங்கோழல்
அல்வா
எள்ளு உருண்டை
பயத்த உருண்டை
பழங்கள்
புடலங்கா பொரித்த குழம்பு
வாழை தண்டு மோர் குழம்பு
சீரா ரசம்
தேன்
தயிர்
மஹாளய பட்சம்

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மஹாளய பட்சம் : தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும் உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 28 வரை மஹாளய பட்ச காலமாகும். மஹாளய பட்சம் புரட்டாசி அமாவாசையன்று முடிவடையும். அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மஹாளய பட்ச காலமாகும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும். மஹாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள்ளை தண்ணீருடன் சேர்த்து  அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பரணி மஹாபரணி என்றும் அஷ்டமி மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும். மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புராணங்களில் மஹாளயபட்சம்: கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம், போன்ற தெய்வீக நூல்களில் மஹாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.  இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.  நாம் கலியுகத்தில் வாழ்வதால் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது.  மஹாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற் காகவே பிதுர் லோகத்தில் இருந்து பிதுர் தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.  வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுது போக்கு அம்சங்களை அறவே தவிர்த்து உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒரு நாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல் பழம் கொடுக்கலாம்.  ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர் பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பின்னர் பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

அன்னதானம் செய்த கர்ணன் : பிணிகளில் கொடுமையானது பசிப்பிணி. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசியின் கொடுமை பல தானங்களை செய்த கர்ணனையே வாட்டியது. அதற்கு காரணம் கர்ணன் அன்னதானம் செய்யாது தான் என்று கூறப்பட்டது. அது பற்றிய சுவையான கதை. கர்ணன் தர்மங்கள் பல செய்த மாபெரும் வள்ளல் என்றாலும் கூட அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால் அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ண பரமாத்மா. குருசேத்திர யுத்தத்தின் முடிவில் கர்ணன் இறக்க வேண்டும் என்பது விதி. இதற்காகவே அர்ஜுனனை தயார் செய்து கர்ணன் மீது அம்பு எய்ய சொன்னார் கிருஷ்ணன். ஆனால் அர்ஜூனன் விட்ட சில அம்புகளால் அவனைக் காயப்படுத்தினவே ஒழிய உயிரைப் பறிக்கவில்லை. அதற்குக் காரணம் கர்ணன் செய்த தர்மம்தான்.

தானம் பெற்ற கிருஷ்ணன் : அப்போது அந்தணராக வேடமணிந்துவந்த கிருஷ்ணன் கர்ணன் செய்த தர்மங்களை அவனிடம் இருந்து தானமாக பெற்றார். அதற்காக அவனுக்கு மோட்சம் அளித்தார். சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு அவன் செய்த பொன் நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன ஆனால் அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்த போது தேவர்கள் அவனிடம் கர்ணா… நீ பூமியில் இருந்த போது பொன்னும் மணியுமே தானம் செய்தாய் அன்னதானம் செய்யவில்லை. எனவே நீ இப்போது பூமிக்குச் செல். இப்போது மஹாளயபட்ச காலம். பிதுர்கள் பூமிக்குச் செல்லும் காலம். அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று தர்ப்பணம் செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர். இக்காலத்தில் நீ மறைந்திருந்து அன்னதானம் செய்து வா. பின்பு இங்கு உணவும் கிடைக்கும் என்றனர். இதனையேற்று கர்ணன் பூமிக்கு வந்த காலமே மஹாளய காலம் ஆனது.

உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால் அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மஹாளயபட்ச காலத்தில் நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று பதிநான்கு நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மஹாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மஹாளயபட்ச காலத்தில் நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம் மாதா மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் மஹாளய அமாவாசை என்பது மிகவும் விசேடமானது. மஹாளய அமாவாசைக்கு முன்னர் மஹாளயபட்சம் என்ற ஒன்று ஆரம்பமாகும். எப்படி கிருஷ்ண பட்சம் சுக்கில பட்சம் என்ற இரண்டு உள்ளது. சுக்கில பட்சம் என்றால் வளர் பிறை கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை. அது போல் மஹாளய பட்சம். இது எப்போது ஆரம்பம் ஆகுமென்றால் ஆவணி மாதத்தில் பெளர்ணமி முடிந்த மறுநாள் மஹாளய பட்சம் ஆரம்பமாகும். இதில் தொடங்கி புரட்டாசி மாதத்தில் அமாவாசை வருகிறது அல்லவா அதுவரை அதாவது பெளர்ணமியில் இருந்த அமாவாசை வரையிலான இரு வார காலம் இந்த மஹாளாய பட்சம் ஆகும்.
-----------------------------------------
மெய்கண்டார்

சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் என்று சொல்வார்கள்.  சமயக்குரவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றித் தனித்தனியாக குருவானவர்கள்.  ஆனால் சந்தான குரவர்களோ ஒருவருக்கொருவர் சீடர்கள்.  சந்தான குரவர்களால் சாத்திரங்கள் சொல்லப்பட்டு, மடங்கள் ஸ்தாபிக்கப்பட்டு மடங்களின் மூலம் பாடங்கள் சொல்லப்பட்டன.  சந்தான குரவர்களின் திருவுருவச் சிலைகள் அந்த அந்த மடங்களிலேயே காணப்படும்.  அங்கேயே அவர்களுக்கு வழிபாடுகள் நடைபெறும். அத்தகைய சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர் மெய்கண்டார், அவரின் சீடர், அருள் நந்தி சிவம், அவரின் சீடர் மறைஞான சம்பந்தர், கடைசியாக உமாபதி சிவம். மெய்கண்டாரின் காலம் கி.பி. 1223

மெய்கண்டார் சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர்.  சைவ சித்தாந்த சாத்திரமரபையும், சைவ சமயத்துக்கான குரு மரபையும் தோற்றுவித்தவர் மெய்கண்டாரே ஆகும்.   இவர் பிறந்தது நடுநாட்டின் பெண்ணாடகம் என்னும் ஊராகும்.  கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகே உள்ள பெண்ணாடம் என்னும் ஊரில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அச்சுதக் களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக் கிழார் வசித்து வந்தார்.  அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறே இல்லை.  ஆகவே தம் குலகுருவான சகலாகம பண்டிதர் என்பவரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார். சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்க்கலாம் எனக் கூறிவிட்டு அவ்வாறே கயிறு சார்த்திப் பார்த்தார்.  கயிறு சார்த்திய இடத்தில் திருஞானசம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகத்தின் இரண்டாம் பாடல் கிடைத்தது.

பேயடையா பிரிவெய்தும்; பிள்ளையினோடுள்ளம் நினை
வாயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

என்ற பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடுள்ளம் நினைவாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்”  என்னும் இந்த வரிகளைச் சுட்டிக் காட்டிப் பிள்ளை பிறக்கும் என்று ஆறுதல் கூறித் “திருவெண்காட்டுத் தலம் சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும்; கவலைப்படவேண்டாம்.”  என்று கூறி அனுப்பி வைத்தார்.  உடனே அச்சுத களப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று மூன்று குளங்களான, சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சக்ர தீர்த்தம் போன்றவற்றில் முறையே நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபடலானார்.  ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுத களப்பாளா! இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை;  ஆனால் நீ எம் சீர்காழிப்பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து வழிபட்டு விரதம் இருந்ததால் உனக்குத் திருஞான சம்பந்தனைப் போன்றதொரு தெய்வமகன் பிறப்பான்.”  என்று அருளுகிறார்.  அவ்வாறே அச்சுத களப்பாளருக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறக்கிறது.  குழந்தைக்குத் திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமாள் என்ற பெயரே வைக்கப்பட்டது.  குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்திச் செல்வனாய் விளங்கிற்று.  குழந்தைக்கு மூன்று வயதிருக்கையில் ஒரு அதிசயம் நடந்தது.

திருக்கைலையில் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் கயிலையில் இருந்து அகத்தியரைக் காணவேண்டிப் பொதிகைக்கு ஆகாய மார்க்கமாகப் பறந்து கொண்டிருந்தார்.  அப்போது திருவெண்ணெய்நல்லூரில் மாமன் வீட்டில் இருந்த குழந்தை சுவேதவனப் பெருமாள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார்.  பரஞ்சோதி முனிவர் அவ்வழியே வானவீதியில் செல்கையில் அவருக்கு மேலே செல்லமுடியாமல் தடங்கல் ஏற்பட்டது.  அதிசயித்த முனிவர் காரணம் அறிய வேண்டிக் கீழே நோக்கினார்.  ஜோதிமயமான தேஜஸுடன் கூடிய குழந்தை ஒன்று கீழே விளையாடுவதைக் கண்டார்.  உடனேயே அவருக்கு ஞானதிருஷ்டியில் அக்குழந்தை பெரிய மஹானாக வரப்போவதும், இந்த மூன்றாம் வயதிலேயே குழந்தை உபதேசம் பெறக்கூடிய பக்குவத்தோடு காததிருப்பதையும் உணர்ந்து கொண்டார். உடனே விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கியவர் குழந்தையைத் தம்கைகளால் எடுத்து அணைத்துக்கொண்டு ஸ்பரிச, நயன தீக்ஷைகள் அளித்தார்.

சிவஞான உபதேசமும் செய்வித்தார்.  பரஞ்சோதி முனிவரின் குருவின் பெயர் சத்தியஞான தரிசினி என்பதாகும்.  அந்தப் பெயரையே தமிழாக்கம் செய்து குழந்தையின் ஞான மார்க்கப் பெயரை மெய்கண்டார் என தீக்ஷாதிருநாமமாக  மாற்றியும் அருளிச் செய்தார். பின்னர் வான்வழியே சென்றுவிட்டார்.  அன்றுமுதல் சுவேதவனப்பெருமாள் மெய்கண்டார் ஆனார்.  சமய குரவர்களில் முதல்வரான சம்பந்தர் தம் மூன்றாம் வயதில் எவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அன்னையின் ஞானப்பாலை உண்டு ஞானம் பெற்றாரோ அப்படியே சந்தானகுரவரில் முதல்வரான மெய்கண்டாரும் தம் மூன்றாம் வயதிலேயே குருவால் ஆட்கொள்ளப்பட்டு ஞான உபதேசம் பெற்றார்.  இன்றைய சைவசித்தாந்த சாத்திர மரபைத் துவங்கி வைத்தவர் மெய்கண்டாரே ஆகும். மெய்கண்டாரால் எழுதப் பெற்ற ஒரே சாத்திர நூல் சிவஞானபோதம் ஆகும்.

சகலாகம பண்டிதருக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது.  அவர் தாம் சொல்லிப் பிறந்த குழந்தை இவ்வளவு புகழோடு குழந்தைப்பருவத்திலேயே சீடர்கள் பலரோடும் திகழ்வது கண்டு ஆணவம் தலைக்கேற  ஒருநாள் அவரைக்காணச் சென்றார்.  அப்போது மெய்கண்டார் ஆணவமலம் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார்.  உடனே சகலாகம பண்டிதர் மெய்கண்டாரை ஒரே கேள்வியில் வீழ்த்திவிட நினைத்து “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” எனக்கேட்க, மெய்கண்டார் தம் சுட்டுவிரலை நீட்டி அவரையே காட்டினார்.  தம்மையே ஆணவமலத்தின் சொரூபமாகக் குழந்தை குரு காட்டியதும் சகலாகம பண்டிதரின் ஆணவம் அடங்கிப் பக்குவம் வந்தது.  வயதையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று மெய்கண்டாரின் கால்களில் வீழ்ந்து தம்மையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே மெய்கண்டாரும் அவரைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் வழங்கி அருள் நந்தி என்ற தீட்சாநாமமும் அளித்தார்.  ஏற்கெனவே மெய்கண்டாருக்கு 48 மாணவர்கள் இருந்தனர்.  அருள் நந்தி 49-ஆம் மாணவராக ஆனார்;  சிலநாட்களில் மெய்கண்டாரை அடுத்து இரண்டாம் சந்தான குரவராக ஆனார்.  மெய்கண்டார் எவ்வளவு  காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை.  ஆனால் திருவெண்ணெய் நல்லூரிலேயே முக்தி அடைந்ததாய்த் தெரிய வருகிறது.  அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுவதாயும் தெரியவருகிறது.  திருவாவடுதுறை ஆதீனம் அவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டுபிடித்து அங்கே மெய்கண்டாருக்காக நினைவு நிலையம் கட்டி மெய்கண்டாரின் விக்ரஹமும் நிறுவப் பெற்றதாயும், தெரிந்து கொள்கிறோம்.
திருநெல்வேலி குருக்கு துறையில் தாமிரபரணி புஷ்கர் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. குறுக்கு துறையில் பஷ்கர் நடக்குமா நடக்காதா என்ற நிலையில் இருந்தோம். ஆனால் பெரியவா பரிபூரண அனுகிரஹத்தாலும், முருகப்பெருமானின் அருளாலும் வெகு விமரிசையாக நடந்தது முடிந்ததுள்ளது. இந்த குருக்கு துறையில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் ஸ்நானம் செய்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அனைத்து ஆதீனகுருமார்கள், சாதுக்கள், அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், பொது மக்கள் என அனைவரும் இந்த குருக்கு துறையில் தான் நீராடினார்கள். இந்த அளவுக்கு குருக்கு துறையில் வெற்றி கண்டதற்கு கண்ணுக்கு தெரியாதமல் பலர் உதவி செய்துள்ளார்கள். அதில் முக்கியமாக ஆதீன குருமார்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது மூன்று நாட்களாக புதியதாக பதவி ஏற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், தீயனைப்பு துறை, நகராட்சி துறை, மருத்துவ உதவி குழுக்கள், வயதானவர்களுக்கு பேட்டரியில் இயங்கும் கார்கள், இந்து அறநிலையத் துறை,  இடைவிடாமல் வழங்கப்பட்ட அன்னதானங்கள், சிதம்பரம் தீட்க்ஷதர்களின் யாகங்கள், வேத பண்டிதர்களாள் ஒதப்பட்ட வேத பாராயணம், ஒதுவார் முற்த்திகலாள் ஒதப்பட்ட தேவாரங்கள், நாதஸ்வர சக்ரவர்த்தி செந்தில் வேலன், கடலூர் கோபி பாகவதர் அவர்களின் பஜனை, குமாரி லாவண்யா பாலாஜி அவர்களின் இசை கச்சேரி, ஹுசைன் அவர்களின் சொற்பொழிவு, வடகுடி சுந்தர்ராம தீட்க்ஷதர் அவர்களின் உபன்யாசம், நாட்டிய குழுவினரின் சிவோகம் நாட்டிய நாடகம், தீட்க்ஷதர்களின் அனுதினமும் மாலையில் நடைபெறும் தாமிரபரணி ஆற்றிர்க்கு தீப ஆர்த்தி, தொண்டாற்றும் தன்னாவளர்கள், இவை அனைத்திற்கும் மூல காரணமாக செயல்பட்ட பழனிசெல்வம், பழனிசெல்வத்திற்கு துணையாக திரு நரேன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் தடுப்பு கம்பி அமைத்தல், வரும் வழியில் உள்ள பாலத்தை அகலப்புத்துதல், பெண்களுக்கு உடை மாற்ற தனியாக பெரிய அரை அமைத்தல் போன்றவற்றை செவ்வனே செய்து தந்தது இன்னும் எவ்வளவோ கண்களுக்கு தெரியாமல் பலரும் பல உதவிகளை செய்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வேறு யாராவது முக்கிய அங்கத்தினர் விடுபட்டு இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். குறுக்கு துறையில் பஷ்கர் நடக்ககூடாது என்று நினைத்தவர்களுக்கு அப்பன் முருகப்பெருமான் அவர்கள் மூக்கின் மீது விரல் வைத்தார் போல் புஷ்கர் இன்று மாலை முருகனுக்கு அபிஷேகத்துடன் கொடி இறக்கப்பட்டு தாமிரபரணி அன்னையை விசர்ஜனம் செய்து பன்னிரெண்டு நாள் விழா இன்றுடன் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெகு சிறப்பாக நிறைவடைந்தது எங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு சிறப்பாக இந்த தாமிரபரணி புஷ்கர் தடையில்லாமல் வெற்றிகரமான நடந்தது என்றால் அதற்கு Mahalakshmi Subramanian Valasai Jayaraman இந்த இருவரின் கடின உழைப்பே. மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதிகள் தான் நம் அனைவருக்கும் இது போல் ஒரு புஷ்கர் இருப்பதை இந்த தமிழ் நாட்டிற்கு தெரியப்படுத்தினார்கள். கோடான கோடி பக்தர்கள் இந்த புன்னிய நதியில் நீராடி பாபங்களை போக்கி புன்னியத்தை அடைந்தார்கள் என்றால் அதற்கு இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதியினரையே சேரும். ஐந்து நாட்கள் அடியேன் இங்கே இருந்தது பார்த்ததில் நீராட வந்த மக்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிகமாக இருந்தது. அடியேன் பார்த்த வரை நீராடிய அனைவருக்கும் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என மூன்று வேலையும் தலைவாழை இலை போட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்ட ஒரே இடம் குருக்கு துறை மட்டுமே. மேலும் அவசரமாக செல்பவர்களுக்கு தட்டில் வைத்தும் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டது. மேலும் காவல் துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி துப்புரவு பணியாளரகள் என சுமார் ஆயிரம் பேர் அனுதினமும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வளவு சிறப்பாக நடைபெற்ற இந்த தாமிரபரணி புஷ்கர் தற்கால கமிட்டியை நிருவிய மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம், வளசை ஜெயராமன் அவர்கள் ஒவ்வொரு முறை பேசும் போதும் காஞ்சி பெரியவாளையும், தருமை ஆதீனம் இவர்களை பற்றி முதலில் பேசியது சிறப்பு. இந்த இரு மடாதிபதிகளின் பரிபூரண ஆசீர்வாதத்தால் தான் இந்த குருக்கு துறையில் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. அதே போல் தமிழக அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்கள் இங்கு வந்து தான் முருகன் சன்னிதான படித்துறையில் தான் நீராடினார்கள். அடியேனுக்கு தெரிந்தது இந்த மஹா புஷ்கர் என்று ஒன்றை தமிழகத்திற்கு தெரியப்படுத்தியதே இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களே. அடியேன் ஏற்கனவே ஒரு பதிவில் இந்த அம்மையாருக்கு என்று ஒரு தனி விழா எடுக்க வேண்டும் என்று ஒரு பதிவு செய்திருந்தேன். அதற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தீர்கள். அந்த விழாவானது அடியேனுக்கு தெரிந்தவரை இதுவே சரியான தருணம். இந்த நேரத்தில் இந்த அம்மையாருக்காக ஒரு விழா எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அடுத்தது இந்த அம்மையார் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் செய்ய உள்ளார்கள். அதே போல் அடுத்தது குருபகவான் வரும் ஆண்டு விருச்சிகத்தில் பிரேவேசிக உள்ளார். விருச்சிக ராசி மஹா புஷ்கரம் சிந்து நதியில் நடத்த இந்த அம்மையார் இப்போதே திட்டம் தீட்டி உள்ளார்கள் என்பது மேலும் ஒரு மகிழ்ச்சியான
செய்தி. சென்ற ஆண்டு மாயவரத்தில் முதல் முறையாக இப்படி ஒரு புஷ்கர் இருப்பதை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இந்த தம்பதியினர் மட்டுமே. அதே போல் இந்த ஆண்டும் வெகு சிறப்பாக செயல்பட்டு இந்த புஷ்கர் இனிதே நிறைவுற்றுள்ளது. அவை அனைத்தும் பெரியவாளின் பரிபூரண அனுகிரஹம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

பெரியவா சரணம்.

ஹர ஹர சங்கர                   ஜய ஜய சங்கர


காஞ்சி மஹா பெரியவா தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அடுத்த ஊர் காவேரிப்பட்டணம். 1944-ம் ஆண்டு மஹா பெரியவா அங்கே முகாமிட்டிருந்தார. ஒரு மாத காலமாக மகான் அங்கே தங்கியிருந்தபோது நித்திய நிகழ்ச்சிகளில் தினந்தோறும், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பிரபலங்கள், அரசாங்க அலுவலர்கள் போன்றோர் தவறாமல் பங்கேற்பது உண்டு.

இந்தக் கும்பலில் அஞ்சல்துறை அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். மெத்தப் படித்தவர். காஞ்சி மகான் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர். அதனால் காவேரிப்பட்டணத்திஅதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்த போது ஓயுவு நேரத்தில் மடத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் மகானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்த்து. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிரார் என்பதே, அருள் பெற்றது போலத்தானே?

சில தினங்களில் மகான் வேறு ஊருக்கு தனது முகாமை மாற்றிக் கொண்டார். இது நடந்து பல வருடங்களுக்குப் பின், மகான் வேறு ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தார. நிறைய பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர். அந்த வரிசையில் நின்றவர்களில் அஞ்சல் அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். ஓவ்வொருவராக நகர்ந்த பின் இவர் முறையும் வந்தது. நமஸ்காரம் செய்த பின் தீர்த்ததுக்காக தன் கையை நீட்டினார்.

தீர்த்தம் கொடுக்கும் முன் மகான் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் கண்களைச் சுரிக்கி இவரைப் பார்த்தார். எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் என்று நினைத்த அதிகார் “காவேரிப்பட்டணம் போஸ்ட் மாஸ்டர்.." என்று அடி எடுத்துக் கொடுக்க மகான் புன் முறுவலுடன் அவரை கைகளினால் ஆசீர்வதித்து “பரத்வாஜ கோத்திரம்!” என்றார்.

இரண்டே வினாடிகளில் இந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது. என்றாலும் அதிகாரிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கை தூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால் ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?
பதினைந்து நாட்கள் பூலோகத்தில் தங்கும் முன்னோர்கள்!

வளர் பிறையான சுக்ல பட்சம் தேவதைகள் வழிபாட்டிற்கும் தேய் பிறையான அமரபட்சம் (கிருஷ்ணபட்சம்) முன்னோர்களான பிதுர் வழிபாட்டிற்கும் உகந்தது ஆகும். வருடத்தில் பன்னிரெண்டு கிருஷ்ண பட்சங்கள் வந்தாலும் அதில் பாத்ரபதமாதம் என்னும் புரட்டாசியில் வரும் மகாளயபட்சம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஒரே குடும்பத்தில் பிறந்து பணியின் காரணமாக பல ஊர்களில் வாழ்ந்தாலும் திருமணம் குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி நின்று கொண்டாடுவது போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வந்து தன் வாரிசுகளை நேரில் கண்டு வாழ்த்தும் காலமே மகாளயம் என கருதப்படுகிறது. பிதுர்லோகத்தின் தலைவரான எமதர்மனின் அனுமதியோடு முன்னோர்கள் பூலோகம் வந்து பதினைந்து நாட்கள் தங்குகிறார்கள். இந்த காலகட்டத்தில் மற்ற வழிபாடுகளை குறைத்துக் கொண்டு பிதுர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.