வியாழன், 4 ஜூன், 2020

நாம் அறியாத தகவல்...

கண்டிப்பாக படிங்க நண்பர்களே....●

தோழி  வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது தோழியின்  9 வயது மகன்..

●மாமி நவகிரஹம் ஒன்பது உள்ளது. ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளது. மற்ற இரண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா?

இது பாரபட்சம் இல்லையா? என கேட்டான்.

□அவனை ஆசீர்வதித்து மகனே நல்ல கேள்வி. பகவான் உனக்கு எல்லா நலனும் வழங்கட்டும் என கூறியவாரே,

எங்கே ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன்.

●சூரியன், சந்திரன், அங்காரகன், புதன் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது.

□வாரத்தின் நாட்கள் கூறு என்றேன்.

●ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, என்றான்.

□இப்போ உன் கேள்வி ராகு, கேதுவுக்கு ஏன் வாரத்தில் பங்கு இல்லை என்பதும், அது பாரபட்சம் என்பதும் தானே என்றேன்.

●ஆமாம்  மாமி என்றான்.

□மகனே பகவான் எந்த காரணத்தை கொண்டும் யாருக்கும் பாரபட்சம் செய்யமாட்டான். அதாவது அவன் பகவானை விரும்பினாலும்,  வெறுத்தாலும் பாரபட்சம் காட்டவே மாட்டான்.

ஹிரண்யனுக்கு பல சந்தர்ப்பங்களை கொடுத்தான். பிரஹலாதனுக்கு அவன் செய்த பல கொடுமைகளில் இருந்து

காப்பாற்றி உணர்த்தினான். ஆனாலும் புரியாமல், தூணை காட்டி கேட்டு இங்கு இல்லையேல் உன் உயிரை எடுப்பேன் என கூறியதால் பகவான் தன் பக்தன் பிரஹலாதன் உயிரை காக்க தூணிலிருந்து தோன்றி அரக்கன் ஹிரண்யன் உயிரை எடுத்தான்.

இராமாயணத்தில் இராவணனுக்கு அவன் எல்லா நண்பர்களும், ஆயுதங்களும் இழந்து தனியாக நின்றபோதும், அவனுக்கு ஒரு நாள் சந்தர்ப்பம் கொடுத்தார். அதாவது

இன்றுபோய் நாளை வா என, எதற்காக சண்டை போடுவதற்க்கா இல்லை. சீதையை கொண்டுவந்து ஒப்படைக்க அதன் மூலம் அவனுக்கு இரக்கம் காட்ட ஆனால் அதை இராவணன் செய்யாத்தால் பகவானால் கொல்லப்பட்டான்.

அது போல் தான் பகவான் தேவர்களுக்கும்*, கிரஹங்களுக்கும் பாற்கடலை கடைந்து வந்த அமுதத்தை பகிர்ந்து அளிக்கும் போது இடையில் புகுந்த அரக்கன் அதை பெற   சந்திரன் அதை காட்டி கொடுக்க பகவான் அசுரன் தலையை துண்டித்து விட அமுதம் பெற்ற அவனுக்கு அழிவு இல்லாததால், அவர்களை இரண்டு கிரஹமாக ஆக்கி இராகு, கேது எனப்பெயர் வைத்து அவர்களுக்கு உரியதாக ராகுகாலம், குளிகைகாலம் என இரண்டு காலத்தை கொடுத்துள்ளார்.

மனிதர்கள் இந்த இராகு காலத்தில் எந்த வேலையைச்செய்தாலும், அது சிரமத்தின் பேரில் தான் நடைபெறும். நற்காரியங்கள் கூடுமானவரை செய்யக்கூடாது. அதேபோல் குளிகனில் கெட்ட காரியங்கள்,  அபர காரியங்கள் செய்யக்கூடாது எனக்கூறி அருளினார்.

●மாமி  அது தெரியும், ஆனால் ஏன் மாமி வாரநாட்களில் அவர்களை சேர்க்கவில்லை என்றான்.

□அவனிடம் உன்னிடம் ஒரு பாக்கெட் பிஸ்கட் தான் உள்ளது, அந்த பாக்கெட் பிஸ்கட்டை நீயும் உன் தங்கையும் பிரித்து சாப்பிட எண்ணும் போது, இடையில் உங்கள் நண்பர் இருவர் வந்தால் என்ன செய்வாய் என்றேன்.

●அந்த பிஸ்கட் பாக்கெட்டில் உள்ளதை கூட வந்தவர்களுக்கும் பிரித்து கொடுத்து சாப்பிடுவோம் என்றான்.

□ஏன் அவங்களுக்கு தனியாக ஒன்றை கொடுக்கலாமே என்றதும்,

●எங்கிட்ட ஒரு பாக்கெட் தானே இருக்கு அப்போ அதிலிருந்து தானே கொடுப்பேன் என்றான்.

□சரியாக சொன்னாய், அதே போல்தான் வாரத்துக்கு நாள் ஏழு என ஏழு கிரகஹங்களுக்கும் ஒன்றாக பகவான் உண்டாக்கி, ஒவ்வொரு நாளுக்கும் இருபத்தினான்கு மணி நேரம் என ஏற்படுத்தி நடத்திவரும் போது இடையில் இரு கிரஹங்கள் வருவதால் என்ன செய்ய என யோசித்த பகவான்,

அனைத்து கிரஹங்களுக்கும் வேலை நேரம் சமமாக இருக்கவேண்டும் அதே நேரம் வார நாட்களையும் கூடுதலாக வருமாறு செய்ய கூடாது என்ற எண்ணத்தில்...

ஏழு கிரஹங்களையும் அழைத்து அவர்கள் ஒவ்வொருவர் நேரத்திலும் மூன்று மணிநேரத்தை எடுத்துக்கொண்டான்.

இப்போ சொல்லு ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்.

●இருபத்திநான்கு மணி நேரம் மாமி.

□அதில் மூணு மணி நேரத்தை பகவானுக்கு கொடுத்தது போக மீதி எவ்வளவு உள்ளது.

●இருபத்து ஒரு மணி நேரம் மாமி.

□இப்போ ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் மாதிரி ஏழு நாட்களுக்கும் எடுத்தால் எவ்வளவு.

●இருப்பதொரு மணி நேரம் மாமி.

□இப்போ பெருமாள் கையில் எவ்வளவு மணி நேரம் உள்ளது.

●ஏழு பெருக்கல் மூணு இருப்பத்தியோரு மணி நேரம்.

□இதைத்தான் தன்னால் தலை துண்டிக்கப்பட்டு உடலால் ஒரு கிரஹமாகவும், தலையால் ஒரு கிரஹமாகவும் ஆன ராகு கேதுவுக்கு பிரித்துக்கொடுத்தார்.

●அதுவும் எப்படி?..

□ஒவ்வொரு கிழமையிலும் ராகு காலமாக ஒன்றரை மணி நேரமும் குளிகை காலமாக ஒன்றரை மணி நேரமுமாக..இப்போ சொல்லு உன்னிடம் இருந்த ஒரு பாக்கெட் பிஸ்கட்டை இடையில் வந்தவருக்கு பகிர்ந்தளித்த மாதிரி,ஏற்கனவே இருந்த ஏழு நாட்களையும் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் சமமாக பகிர்ந்தார்.

ராகுவும், கேதுவும் ஒரே உடலின் இரண்டு அங்கம் ஆனதால், அந்த இருபத்தொரு மணி நேரத்தை இரண்டாக பிரித்து ஆளுக்கு பத்தரை மணிநேரம் அதாவது ஒவ்வொரு நாளிலும். ஒன்றரை மணி நேரம் ஏழு நாட்களில் ஏழு பெருக்கல் ஒன்றரை அதாவது பத்தரை மணிநேரமாக கொடுத்துள்ளார்.

இப்போ சொல்லு பகவான் பாரபட்சம் காட்டியுள்ளானா!!!!..

●இல்லை மாமி ஏழு நாட்களை கொண்ட வாரத்தில் ஒவ்வொருவரிடமும் இருந்து மூணு மணி நேரத்தை குறைத்து வேலை நேரத்தை 21 மணி நேரமாக குறைத்து, அதையே இரண்டு பங்கான அசுரனுக்கு பாதி பாதியாக அதாவது பத்தரை மணியாக, அந்த இருபத்தொரு மணி நேரத்தை பிரித்து கொடுத்துள்ளான் அப்படி தானே என்றான். 

□அப்படிதான் மகனே, பகவான் யாரையும் எந்த காரணத்திற்காகவும் வஞ்சிக்கவோ, பாரபட்சம் காட்டவா மாட்டான். நல்லவர்களை அரவனைப்பதும், துஷ்டனுக்கு சந்தர்பம் கொடுத்து திருத்தவும், சில சோதனைகளை செய்வான். அப்போதும் செய்பவன் அவனே என அவனிடம் நாம் சரணடைந்து விட்டால் போதும் அவன் நம்மை ஆட்கொண்டுவிடுவான்.

பகவான் யாரையும் நம்மைபோல் பாரபட்சமாக நடத்த மாட்டான்.
💐🌹🙏💐🌹🙏💐🌹
*லிங்க புராணம் ~ பகுதி — 08*

       சுதரிசனன் வரலாறு
=======================

உத்தம குலத்தில் பிறந்த அந்தணன் சுதரிசனனும்., கற்பிற் சிறந்த மனைவியும்., அன்றாடம் தன் இல்லத்திற்கு வரும் அதிதிகள் மனம் கோணாமல் அவர்களுக்கு உணவிட்டு., மகிழ்வித்து அனுப்பி வந்தனர். ஒருநாள் ஓர் அதிதி வந்தார். அவரையும் எல்லா வகையிலும் உபசரித்து உணவூட்டினர். இடையில் சுதரிசனன் ஓர் அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் மனைவியிடம் அதிதி மனம் கோணாமல் அவரை உபசரிக்குமாறு கூறிவிட்டுச் சென்றான். உணவருந்திய அதிதி அவளிடம் தனக்கு உடல் சுகமும் அளிக்கும்படி கேட்டான். அவள் பதைபதைத்து விட்டாள். கற்புக்குப் பங்கம் வரும்., அல்லது அதிதிக்கு உபசாரக் குறைவு ஏற்படும் என்று எண்ணி செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது சுதரிசனன் வீடு திரும்பினான். அதிதிக்கு எல்லாச் சௌகரியமும் கிடைத்ததா..? பூரண திருப்தியா..? என்று கேட்க மனைவி பதை பதைத்திருக்க., அதிதி அந்தணர் மனைவி அறுசுவை உண்டியுடன்., உடலுக்குச் சுகம் அளித்து திருப்தி கொடுத்தாள் என்று கூறினார். அப்போது அந்தணன் சினமோ., வெறுப்போ கொள்ளாமல்., தன் மனைவியை அவர் அனுபவித்து விட்டதால் அவள் அதிதியின் சொத்து என்று கூறி., அவளையும் உடன் அழைத்துச் செல்லுமாறு வேண்டினான். அப்போது அந்த அதிதி மறைந்து விட்டார். அங்கே அவர்களுக்குச் சிவபெருமான் காட்சி தந்து., தான் அவர் மனைவியைத் தீண்டவும் இல்லை. அவள் கற்புக்கரசி. புனிதமானவள். பிறவிப் பெரும் துயரினின்று நீங்கள் இருவரும் விடுபட்டு என்னிடம் வந்து சேர்வீராக என்று அருள்பாலித்தார். இவ்வாறு அதிதி பூஜையின் மேன்மையைப் பிரம்மன் தாருகாவனத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும்., அம்முனிவர்கள் இறைவன் திருவடிகளிலேயே சரண் புக., அவரை வழிபடின் அவர் அருளால் முனிவர்களின் துன்பங்கள் நீங்கும் என்று அறிவுறுத்தினார். அடுத்து., பிரம்மன் அவர்களுக்குத் துறவின் தன்மையை எடுத்துக் கூறியதுடன் துறவிகள் மட்டுமின்றி மற்றோரும் ஈசன் பேரருளுக்குப் பாத்திரமானவர்களே. தாம் செய்யும் கர்மாக்களை அந்தப் பெருமானுக்கே அர்ப்பணித்து., அனைத்திலும் ஈசனைக் காண்பவர் முக்தி அடைவர் என்றார்.

தொடரும்.....

*ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்*
*ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் |*
*பராத்பரம் பரமாத்மக லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*

*லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேஸஸிவ ஸன்னிதௌ |*
*சிவலோகமவாப்னோதி சிவேன ஸஹ மோததே ||*
வேத அர்த்தம் சொல்பவனுக்கு தெரியாவிட்டாலும் உரிய தேவதைகளுக்குத் தெரியும்!

வேத சப்தத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படி தபஸோ அப்படியே கேட்பதும்.

வேதம் சொன்னால் புரியாது; புரியாத வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம்
வருவதே பெரிய ஏற்றம். வேத சப்தம் நம்மை கேட்கப் பண்ணுகிறது.

அதர்வண வேதம் சொல்கிறது -

இங்கிருந்து ஒருவர் கோவிலுக்குப் போய் பகவானைச் சேவிக்கிறார்.

பகவான் இவரைப் பார்த்தாரா என்று எப்படி தெரிந்து கொள்வது?

பகவான் இவரை அனுக்ரஹித்தானா என்பதற்கு வேதம் ஒரு அளவுகோல் சொல்கிறது.

ஓரிடத்தில் வேத பாராயணம் நடக்கிறது. வேத சப்தத்தைக்கேட்டு அங்கே போய் அவர்
உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறார்.

வேதம் சொல்கிறது-

எப்போது வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு வேத பாராயணத்தைக்
கேட்கிறாறோ அப்போது பகவான் அவரைப் பார்த்து விட்டான் என அர்த்தம்.

பகவான் பார்த்தான் என்பதற்கு அளவுகோல் எது?

வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுதல். வேதத்தைக் கேட்க
ஒருத்தருக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்னும் பகவானின் கடாக்ஷம் அவனுக்கு
கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

பகவானிடத்தில் த்வேஷம் இருந்தால் கூட அவன் பொறுத்துக்கொள்வான்.

வேதத்தின் மீது த்வேஷம் இருந்தால் ஒத்துக் கொள்ள மாட்டான்.

நாம் வேதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

ந்ருஸிம்ஹ அவதாரத்தின் முன்பு பகவான் சொன்னான் 'யதா வேதேஷூ' என்று எவன்
வேகத்தை நிந்திக்கிறானோ அவன் சீக்கிரம் நாசத்தை அடைவான் என்றான்.

அர்த்தம் தெரியா விட்டாலும் வேதத்தைக் கேட்க வேண்டும். கேட்க வேண்டும் என்ற
அபிப்பிராயம் நமக்கு வேண்டும்.

அர்த்தமே தெரியா விட்டாலும் பரவாயில்லை. இது எப்படி சரியாகும் என்று கேள்வி.

வேத மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாமல்ஒருவர் ஹோமம் பண்ணுகிறார்.

அப்போது பலன் சித்திக்குமா என்றால் சித்திக்கும் என்கிறது வேதம்.
ப்ரம்மச்சாரி உபநயனத்தின் போது பிக்ஷாடணம் -பிச்சை எடுக்கக் கற்றுக்
கொள்கிறான்.

அதற்கு அவனுக்குச் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. ஒவ்வொரு வீட்டின் முன்பும்
'பவதி பிஷாந்தேஹி' என்கிறான்.

இவனுக்கு சமஸ்கிருத பாடம் ஆரம்பிக்கவில்லை. ராம சப்தம் கூட தெரியாது. 'தாங்கள்
பிச்சை இடுங்கள்' என்ற அர்த்தமும் தெரியாது.

ஆனால் அதை சொல்லக் கற்றுக் கொண்டுள்ளான். அவனுக்கு என்ன தெரியும்..?

'பவதீ பிஷாந்தேஹி'என்று கூக்குரலிட்டால் பாத்திரம் நிறையும். வீட்டுக் கதவைத்
திறந்து வந்து அந்த வீட்டுப் பெண்மணி பாத்திரத்தில் அரிசியை இடுகிறாள்.
பாத்திரம் நிறைகிறது.

ப்ரம்மச்சாரி அர்த்தம் தெரியாமல் சொல்கிறான். ஆனாலும் பாத்திரம் எப்படி
நிறைகிறது என்றால், இவனுக்குத் தெரியாமல் போனாலும் வீட்டில் உள்ளவர்களுக்குத்
தெரியும்.

அது போல், வேத மந்திரத்திற்கு நமக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும்
தேவதைகளுக்குத் தெரியுமாதலினால் அவர்கள் ஓடி வந்து நாம் கொடுப்பதை ஸ்வீகரித்து
நம்முடைய அபீஷ்டத்தை பூர்த்தி பண்ணுவார்கள்..

முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் ஸ்வாமி.