சனி, 24 ஆகஸ்ட், 2019

ஓம் எனும் பொருளாய் விளங்கும் விநாயகா...

ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி

ஓம் பூமனும் பொருள்தொறும் பொலிவாய் போற்றி

ஓம் திங்கட் சடையோன் செல்வா போற்றி

ஓம் எங்கட் கருளும் இறைவா போற்றி

ஓம் அறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி

ஓம் சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி

ஓம் மாலுக் கருளிய மதகிரி போற்றி

ஓம் பாலெனக் கடல்நீர் பருகினாய் போற்றி

ஓம் பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி

ஓம் மாரதம் அச்சொடி மதவலி போற்றி

ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி

ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி

ஓம் நம்பியாண் டார்கருள் நல்லாய் போற்றி

ஓம் தம்பிக்கு வள்ளியை தந்தாய் போற்றி

ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி

ஓம் கரிமுகத் தெந்தாய் காப்போய் போற்றி

ஓம் ஐந்துகை யுடைய ஐய போற்றி

ஓம் ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி

ஓம் கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றி

ஓம் மயிலறும் இன்ப வாழ்வே போற்றி

ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி

ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி

ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி

ஓம் காக்கஎங் களையுன் கழலினை போற்றியே!
-------------------------
கணபதி துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றுந் தா

அல்லல்போம் வல்லினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல
குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை
-------------------------
விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன்!

விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என விநாயக புராணம் கூறுகிறது. மகப்பேறு பெறமருத இலை, எதிரிகள்  தரும் துன்பம் தொலைய அரசஇலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை. சவுபாக்கியமான வாழ்வு பெற  வெள்ளெருக்கு இலை, புகழ்பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை ஆகியவற்றால் பூஜிக்க வேண்டும். அருகம்புல்,  செம்பருத்தி, எருக்கம்பூ, மாவிலை கொண்டும் அர்ச்சனை செய்தால் இவை எல்லாவற்றையும் ஒரு சேர அடையலாம்.
-------------------------
விநாயகர் சித்தி மந்திரம்!

ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப
ஸாந்தயே.

விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்

ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் நாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம

இந்த மந்திரத்தை தினந்தோறும் மனம் உருகச் சொல்லி விநாயகரை வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களோடு, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.
-------------------------

கருத்துகள் இல்லை: