வியாழன், 26 ஏப்ரல், 2018

ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.

கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு.
அன்பே உருவாய் அருளும்  கருணைக் கடலே அஞ்ஞான இருள் நீக்கும்   ஜகத்குருவே

[1] நாடி வந்தோர் துயர் தீர்க்கும் தீனதயாளனே தேடி வந்தோர் இடர் களையும்  அருட் ப்ரபாவமே

[2] ப்ரஹ்மானந்த சாகரத்தில் அமிழ்ந்துறையும் அம்ருதவர்ஷினியே தருமமே பூத உடல் கொண்டு சஞ்சரித்த  பூர்ண வஸ்துவே

[3] வாஞ்சையுடன் அருள் மழை பொழியும்  காஞ்சிபுர நிவாசனே…
நம்முடைய முன்னோற்கள் வாழ்ந்த வாழ்க்கை

அது ஒரு காலம் ! மறக்க முடியாத நினைவுகள் ! கிட்டத்தட்ட  எல்லோருமே   உரக்க பாடினார்கள்.  குரலும்  ஒரே மாதிரியாக இருந்தது  என்று சொன்னாலும்  தவறில்லை. அவர்களுக்குள்  ஒரே வித்தியாசம் அவரவர்  பிரயோகித்த ஆலாபனைகளும்  அசுர சாதகமும்  குரல் வளமும்   தான்.  எல்லோருக்குமே பக்க வாத்தியம்  ஹார்மோனியம் தான்.  சில சமயம்  கிராமபோன் அவர்கள் பாடல்களை  கிணற்றுக்குள்ளே  இருந்து  பாடுவது போல் கேட்க  செய்தால்  அது  க்ராமபோனின்  கோளாறு.  அது  ரேடியோவில்  அப்படியே  பிரதிபலித்து  சில சாமயம் ஈனஸ்வரத்தில் பாடுவது போலவும்  காட்டியது  அவர்கள் தவறில்லை.  மெழுகு தட்டுகள் (plates ) சுற்றும் போது  வேகமாக  சுற்றினால்  பாடுபவர்  அவசரம் அவசரமாக   ரயிலைப்பிடிக்க ஓடிக்கொண்டே பாடுவது  போல இருக்கும்.  தட்டு மெதுவாக சுழன்றால்  கே. எல்.  சைகால் கால் நீட்டி  ஒரு மரத்தடியில் சாய்ந்து கொண்டு பால முரளியின்  தில்லானா  பாடுவது போல் இருக்கும்.

சிலர்  பாடிவிட்டு  தானே சபாஷ் சொல்லிக்கொள்வதையும்  கேட்டிருக்கிறேன்.  3 நிமிஷ தட்டுக்கள். ஒவ்வொரு தட்டில்  ஒரே  பாடகரின் குரல்  வேறு யாரோ ஒருவர்  பாடும் குரல் மாதிரியாக  கூட  காட்டியது.

மைசூர்  ராஜா அய்யங்கார்  என்பவற்றின் குரல்  அசாத்தியமாக  இருக்கும்.  ஜகதோ தாரணா என்று ஆரம்பித்தால்   சகல  சர்க்கஸ் வேலைகளும்  காட்டி  முடிப்பார்.  கேட்கவும்  கர்ணாம்ருதமாக இருக்கும். இப்போதும் அவர்  பாடியது  you tube ல்  கேட்க  வசதி இருக்கிறது. 

அவருடைய தேவகாந்தாரி ராக  க்ஷீர சாகர சயனா  பாட்டு  பெருமாளையே  ஆஷிசேஷன்  மேலிருந்து எழுந்து  நிற்க  செய்யும். அவ்வளவு  சக்தி வாய்ந்தது.

பி.யூ. சின்னப்பா  என்று ஒருவர் பொடி  போடுபவர்  மூக்கில்  பாடுவது போல்  தோன்றினாலும்  கேட்க  சுவாரஸ்யமாக  இருக்கும்.  சிறந்த  சங்கீத ஞானம் கொண்ட அவர்  ஜகதலப்ராதாபன்  படத்தில் ஒரு  தனி கச்சேரியே மூன்று நிமிஷத்தில் பண்ணினார்.  நிறைய சின்னப்பாக்கள். பிடில், மிருதங்கம், கொன்னக்கோல்,  வீணை, வாய்ப்பாட்டு, கஞ்சிரா , கேட்கவே  சுகமாக இருக்கும்போது பார்க்கவும் செய்தால். சொர்க்கம் தான்.  அவருடைய  நடிப்பு  தத்ரூபமாக  மிருதங்க, கஞ்சிர,  வயலின் வித்வான்களின் அனுபவ பூர்வ  பாவத்தை காட்டியது. இதையே  பின்னால் பல வருஷங்களுக்கு பிறகு திருவிளையாடல்  பாடலில்  சிவாஜி கணேசன்  பல  வித்வான்களாக ''பாட்டும் நானே''  பாடிய காட்சிக்கு  வழி கோலியது.  ஒரிஜினல் ஒரிஜினல் தான்.  பி.யு. சி.  ஒருமுறை  கேளுங்கள்.  அதுவும்  நான் சொன்ன பாட்டை. you   tube ல் இருக்கிறதே.

S.G .கிட்டப்பா ஒரு மறக்க முடியாத  நாடக நடிகர் என்று புகழ் பெறக்காரணமே  அவரது குரலின் கவர்ச்சிக்க்காகவே.  இன்னும்  நிறைய  அவரது  இசைத்தட்டுகள் இருக்கின்றன. நான்  ஒவ்வொருமுறை  கேட்கும்போதும்  அவை  புதிதாகவே அப்போது தான் முதல் முதலாக கேட்பது போன்ற ஆர்வத்தை இன்று காலை வரை  அளிக்கிறது. ஹர்மோனியக்காரன்   அபஸ்வரமாகவோ, அவசரமாகவோ வாசித்தாலும் அவரது  வான முகட்டில் கருட சஞ்சாரத்தை அவனால்  எட்ட முடியாது. கிட்டப்பா  அதை லட்சியம் செய்யாமல்  சபாஷ் தான்  சொல்லிக்கொண்டு  பாடுவார்.  அசுர சாதகம்.  அபார கற்பனை. அதிசயிக்க வைக்கும்  ஆலாபனை பிடிகள். அசாத்திய ராக ஞானம்.

இளம் வயதில் காணமல் போன  எத்தனையோ  அபூர்வங்களில் ஒருவர் கிட்டப்பா.  ஒலி பெருக்கி இல்லாத  காலத்தில்  இப்படி  தொண்டை கிழிய  உரக்க பாடி இன்பமூட்டிய அவர்களை   ஒன்ஸ் மோர்   கேட்டே  பொன் வாத்தை கொன்றுவிட்டார்கள். ஒரு சில  இசை தட்டுகள்  இன்னும்  அவரை ஞாபகப்படுத்தி  கண்ணில்  நீர்  வரவழைக்க  நாம்  கொடுத்து வைத்தது அவ்வளவு தான். ஒரு  வீடியோ கூட  கண்ணில் தென்படவில்லை  என்று அறியும் போது  ஒரு  செல்வத்தை  எப்படி  இழந்து விட்டோம் என்று புரிகிறதா?

இசையால் கவரப்பட்டு  மற்றொரு  துருவ நக்ஷத்ரம் அவரோடு மேடையிலும் வாழ்க்கையிலும்  இணைந்தது. அதுவே  KBS   என்று  உலகறிந்த  கே. பி. சுந்தராம்பாள் .  ஒரு ஞானப் பழத்தை சக்கையாக  பிழிந்து   ''என்ன  என்ன என்ன'' என்று  கேட்பாரே அது  இன்னும்  ஞாபகம் இருக்க வேண்டுமே  சங்கீதப் பிரியர்களுக்கு.


எனக்கென்னவோ கிட்டப்பாவின் பாதிப்பு  அநேக  பின்னோடிகளுக்கு  புகழை அளித்தது  என்று தோன்றுகிறது.   மேலே சொன்ன மைசூர்  ராஜா அய்யங்காரை  விட  அதிக பிரபலம் வாய்ந்த  எம். கே.  தியாகராஜ  பாகவதர்  கிட்டப்பாவை விட  அதிக  புகழ் பெற  ரெண்டு  காரணங்கள் முக்கியம்.

எம். கே.  டி  காலத்தில்  திரைப்படம்  வந்து விட்டது.   அவரது பாடியது  எளிதில் பட்டி தொட்டி  எல்லாம்  பரவி மக்களை அடைந்தது.  மற்றொன்று   எம். கே . டியின் இயற்கை  வசீகரம்.   மனிதர்  தனக்கென்று  ஒரு  சிகை  பாணியை  மட்டும் அல்ல. ஜவ்வாது போட்டு, காதில் மின்னும் வைரம். பட்டு  சட்டை அங்கவஸ்திரம்.   பாடும் போது  முகம் சற்றும் கோணாமல்  சௌலப்யமாக  சங்கதிகளை வாரி  வீசினார்.   பின்னணி  உத்திகள் வளர்ந்து மேனாட்டு இசை வாத்யங்கள்  திரையுலகை  ஆக்ரமிக்க ஆரம்பித்ததால் ஹார்மோனியம் இறந்து விட்டது. அதனால்  அதன்  சப்தமும் வீடுகளிலும்  மேடைகளிலும் திரையிலும்   நின்றது.

 ஒரு பாட்டை மட்டும்  நினைவூட்டுகிறேன்.  எந்த சினிமா  என்று ஞாபகமில்லை.  ''பவழமால் வரை''  என்ற  ஒரு அபூர்வ  பாட்டு  என்னை மிகவும்  உலுக்கியது.   அந்த ஒரு வரியை மட்டுமே   பாடிக்கொண்டு  பலகாலம்  சைக்கிளில் சென்றிருக்கிறேன்.  அவர் பாடலை பாடுவது  இயலாத காரியம்  யாருக்குமே.    காந்த சக்தி கொண்ட குரல் MKT க்கு. இந்த 3 நிமிஷ பாட்டில் அவரது ராக ஆலாபனைகளை  எழுத்தில் வர்ணிக்க  முடியாது.  கேட்டு  ரசித்து மகிழ தான்  முடியும்.என்ன  சங்கதி, என்ன  சஞ்சாரம், என்ன தாளம், என்ன  பாவம்!.  மனிதர்  ஒரு  அபூர்வ பிறவி என்பதில் சந்தேகமே இல்லை.  இன்றும் அவர்  முதல்  சூப்பர் ஸ்டார் என்று  புகழ் பெற்று நிலைத்திருப்பது இதனால்  தான்.   அவரது பாடங்கள்  அவர் பாட்டுக்காகவே  வருஷக்கணக்கில்  ஓடின  என்பது அப்பட்டமான உண்மை. ஒவ்வொரு படத்திலும் அந்த மனிதர் பேசியதைக் காட்டிலும் பாடியதே  அதிகம். 30-40 பாட்டுகள் பல தரப்பட்ட  மனிதர்களையும்  ஈர்த்தது.
  
கிட்டப்பா ஊரிலேயே, செங்கோட்டையிலேயே,   மற்றொரு  டூப்ளிகேட்  தோன்றினார்.  அதேமாதிரி  பாணியில்  அவரைப் பின்பற்றியே  ஆனால்  அனாயாசமாக  கிட்டப்பா  போலவே பாடினார்.  புகழும் பெற்றார்.  அவர்  வேறு யாருமில்லை   டி . ஆர்.  மகாலிங்கம்  தான்.  ஒரே  பெயரில் இருவர்  புகழ் பெற்று  இருந்த காலம்  அது.  ஒருவரை  அதனால்  மாலி  என்று  அழைத்தார்கள்.  மேலும் அந்த மற்றொரு  டி .ஆர். மகாலிங்கம் ஒரு  புல்லாங்குழல் சிம்மம்.   அவரைப் பற்றி  நிறையவே  சொல்ல  ஆவலாக இருக்கிறது.   பின்னால்  ஒரு சந்தர்ப்பம்  அதற்கு உபயோகப் படட்டுமே.
மஹா பெரியவாவின் 100 முத்தான பொன்மொழிகள்

1. நம் தாயாகிய பூமி, நமது விருப்பங்கள் அனைத்தையும் நமக்கு அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைப் பாதுகாத்து போற்றுங்கள்…

2. நம் தந்தையாகிய கடவுள் சகலரிடமும் கருணை காட்டுகிறார். ஆகவே, அவரை வணங்குங்கள்…

3. பெண்கள் சமையலுக்காக வீட்டில் அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்.

4. எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.

5. எடுத்துச் சொல்வதைவிட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.

6. வாழ்க்கையை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதுவது கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.

8. அன்பினால் பிறருடைய குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.

9. தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

10. நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்.

12. பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது கைப்பிடியளவு அரிசி கொடுங்கள்.

13. இரவு துாங்கும் முன் அன்றன்று நடந்த நன்மை, தீமைகளை மனதில் அலசி ஆராய்ச்சி செய்யுங்கள்.

14. காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை பக்தியுடன் வழிபடுங்கள்.

15. அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.

16. அனைவரும் அன்றாடம் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழகுவது அவசியம்.

17. எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.

18. பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.

19. அன்பினால் பிறரை திருத்துவதுதான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.

20. நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக் குறைவானதே.

21. தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் ‘தியாகம் செய்தேன்’ என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.

22. ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

23. கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக்கொள்வோம்.

24. கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.

25. அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது… யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.

26. உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள்… செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.

27. பக்தி உணர்வு இல்லாமல் மனிதன் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வறட்டுத்தனமானது.

28. பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

29. நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

30. நல்ல உணவுகளால் உடல் பலம் பெறுவது போல நல்லவர்களின் நட்பால் மன நலம் காக்கப்படும்.

31. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தால் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.

32. தானத்தில் சிறந்தது அன்னதானம். இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனைத் திருப்திப்படுத்த முடியும்.

33. உடம்பின் அழுக்கு நீராடினால் நீங்கி விடும். உள்ளத்திலுள்ள அழுக்கை தியானப் பயிற்சியால் போக்க முடியும்.

34. கடவுள் நல்ல புத்தி கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி நற்செயல்களில் ஈடுபடுங்கள்.

35. எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.

36. பாவத்தை கணப்பொழுதில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு மட்டுமே இருக்கிறது.

37. நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.

38. எல்லார் இதயங்களையும் நட்பால் வெல்லுங்கள். பிறரையும் தன்னைப் போல் நோக்குங்கள்.

39. பிறருக்கு உபதேசம் செய்யும் முன் நமக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.

40. சேவையில் ஈடுபடுவோருக்கு மனஉறுதியோடு சாந்தமும், புன்சிரிப்பும் மிகவும் அவசியமானவை.

41. புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் ‘நான்’ என்னும் ஆணவம் கூடாது.

42. மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.

43. பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.

44. வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.

45. வெறிநாய் போல நாலா திசையிலும் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க கூடாது. தியானம் மூலம் அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

46. பிறர் துன்பப்படும் போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் முடிந்த உதவியைச் செய்வது நம் கடமை.

47. சண்டையையும் போட்டியையும் தவிர்த்து விடுங்கள். பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். அது பெரிய தவறு என்பதை உணருங்கள்.

48. எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.

49. சமூக சேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.

50. ராமனுக்கு உதவிய அணில் போல தொண்டு சிறிதாக இருந்தாலும் போற்றுவதற்கு உரியதே.

51. நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.

52. தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின் பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.

53. கடவுள் புத்தியைக் கொடுத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.

54.எல்லாம் ஒன்று என்ற விழிப்பு வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், பிறவி ஆகிய துன்பங்கள் நீங்கி விடும்.

55.ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும்.

56. ஆசை வயப்பட்ட மனிதன் கோபத்திற்கு ஆளாகிறான். கோபம் பாவம் செய்யத் தூண்டுகிறது. அதனால், உயிர்களுக்கு பிறவிச் சங்கிலி தொடர்கிறது.

57. பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்துவது அவசியம்.

58. போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது. பணத்தாசையால்தான், மனிதர்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதுகின்றனர்.

59. வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.

60. வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து சேவையில் ஈடுபடுவது அவசியம்.

61. உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.

62. பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.

63. எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தி கூடாது. அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.

64. யாரையும் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை கூடாது. அனைவரிடமும் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்.

65. மனதில் எழும் ஆசைகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைகளை அதிகப்படுத்திக் கொள்வது கூடாது.

66. குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல், பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.

67. மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது. அதனால் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

68. கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.

69. கபடம் சிறிதும் இல்லாத குழந்தை மனம் உள்ளவனாக வாழுங்கள்.

70. கடவுளுக்கு நன்றி சொல்லவே கோவில் வழிபாட்டு முறைகளை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.

71. கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.

72. கோபம் என்னும் எதிரிக்கு மனதில் இடம் கொடுக்காவிட்டால், எப்போதும் நிம்மதியாக வாழலாம்.

73. பந்தைச் சுவரில் எறிந்தால் அது நம்மை நோக்கித் திரும்புவது போல கோபமும் நமக்கு எதிராகத் திரும்பி விடும்.

74. ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன.

75. சிந்தித்துப் பார்த்தால் யார் மீதும் கோபம் கொள்ளும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர முடியும்.

76. பூமியை விட்டுச் செல்லும் முன் ‘என்னிடம் பாவமே இல்லை’ என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.

77. அறியாமையால் மனிதன் மனதாலும், செயலாலும் பாவம் செய்யும் தீய சூழலுக்கு ஆளாகிறான்.

78. வாக்கு, மனம், உடல் இந்த மூன்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும்.

79. உலகிலுள்ள எல்லாம் ஒன்றே என்ற தெளிவு வந்து விட்டால் தீய குணங்கள் யாவும் மறையும்.

80. துன்பத்தில் மட்டுமில்லாமல் கடவுளை இன்பத்திலும் மறப்பது கூடாது.

81. பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும்.

82. மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.

83. எதிலும் அதன் அளவு அறிந்து நடந்தால் மன அமைதியுடன் வாழலாம்.

84. நாம் நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்து வந்தால் போதும். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்.

85. எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே நியாயமான வழியாகும்.

86. ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும், பொது நியாயத்தைச் செய்வது நல்லது.

87. கடவுளைப் பூஜிப்பதால் மனம் சுத்தம் அடைவதோடு, புண்ணியமும் உண்டாகிறது.

88. பூஜை மட்டுமில்லாமல், சாப்பிடும் போது மனதிற்குள், ‘கருணையால் எனக்கு அன்னம் கொடுத்த கடவுளுக்கு நன்றி’ என்று சிந்திப்பது இன்னும் நல்லது.

89. உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

90. பக்தியோடு உண்பதால் மனதில் நல்லெண்ணம் உண்டாகும். இந்த பழக்கம் நாம் நல்லவர்களாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.

91. உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும் பாவமே ஏற்படும்.

92. மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். சாஸ்திரம் இதை ‘கர்ம கோட்பாடு’ என கூறுகிறது.

93. அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.

94. ‘மவுனம் கலக நாஸ்தி’ என்பர். மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது என்பது இதன் பொருள்.

95. பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.

96. அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது.

97. மாணவன் கல்வியை பணிவுடன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் உலகிற்கு பயன் உண்டாகாது.

98. இறைவனின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தினமும் தியானம் செய்யுங்கள்.

99. எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு நன்மை செய்வது புண்ணியம். சுயநலத்துடன் ஆசையால் செய்யும் அனைத்தும் பாவம்.

100. நற்செயலில் ஈடுபடுபவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார்.

ஓம்ஸ்ரீ மஹாபெரியவா திருவடிகளே சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர,
மெய் சிலிர்க்க வைக்கும் காஞ்சி மகா பெரியவரின் வரலாறும் சமீபத்தில் நிகழ்த்திய அதிசயமும்.

"குருவே சரணம்"

என் நெஞ்சில் அமர்ந்த ஸ்ரீஜகத்குருவே
எனக்கு தரிசனம் தர வந்தாயோ குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

கண்ணீர் பெருகிட சிந்துதே மாதுளை மணிபோல்
பார்க்கப் பரவசம் கொண்டேன் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

பாதம் காண்கையில் ஸ்ரீநாராயணா
உன்னைப் பார்க்கையில் ஸ்ரீனிவாசா கோவிந்தா
கனவில் வந்து நீ எழுத வைத்தாயே குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

காலம் கடந்தது நினைவில் நின்றது
பாவம் களைய நீ நேரில் வந்தாயோ
பல அவதாரம் காண காட்சி கொடுத்தாய் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத் குருவே

அஷ்டதிக் பாலரை இருவரை கண்டேன்
அற்புதம் அற்புதம் என்னே உன் திருக்காட்சி குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

மாநகர் காஞ்சியில் வரவழைத்தாய்
கண்டதும் என்மேல் பரிவு கொண்டாய்
எத்தனை தரிசனம் காண்பித்தாய் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே
இராமரின் காட்சியை நேரில் கண்டேன்
இராமனுஜரின் பக்தியை நேரில் கண்டேன்
ஈன்றவர்களின் பாத தரிசனம் கண்டேன் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

முருகா என்றதும் சாமிநாதன் ஆனாய்
நமசிவாய என்றதும் சங்கரன் ஆனாய்
காமாட்சி என்றதும் கருணையோடு பார்த்தாய் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

சரணம் சரணம் கோடி சங்கரா சரணம்
உதயம் உதயம் மனதினுள் இன்னும் உதயம் குருவே
தெவிட்டாத இன்பம், இன்பத்தில் ஒரு வாசம் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

குருவுண்டு பயமில்லை
க்ஷேமம் உண்டு உன்னை நினைக்கையிலே குருவே
என் நெஞ்சோடு நிலை கொண்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹா
ஜகத்குருவே.

புதன், 25 ஏப்ரல், 2018

ரொம்ப நாளாச் சிதம்பரம் பத்தி எழுதணும்னு ஆசை. ஆனால் அது ஒரு தொடராத் தான் வரும். ஆகவே இதிலேயே தொடர்ந்து எழுதணும்னு இருக்கேன். பொதுவாகச் சைவர்களுக்குக் "கோயில்" என்றாலே அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும். ஆனால் இங்கே நடராஜர் வருவதற்கு முன்னாலே சிவலிங்க ஸ்வரூபம் தான் இருந்திருக்கிறது. அதற்குப் பின்னர் தான் நடராஜ ஸ்வரூபம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தில்லை வாழ் அந்தணர்களும் நடராஜரை வழிபடுவதற்காகவே அவரோடு வந்தார்கள். முதன் முதல் இந்த ஸ்தலம் தில்லை வனமாக இருந்தது. ஆகவே இன்றும் இதற்குத் தில்லை என்ற பெயரும் உண்டு. மருத்துவ குணம் நிரம்பிய தில்லை மரத்திற்குப் பல அபூர்வமான விசேஷங்கள் உண்டு. அவை எல்லாவற்றையும் ஓரளவு தருவதற்கும், தில்லை பற்றிய முக்கியமான விவரங்கள் தருவதற்கும் இந்தப் பதிவு. முக்கியமாகத் தில்லை நடராஜரின் தாண்டவ கோல அர்த்தங்கள், கோயிலின் வழிபாட்டு முறை, தில்லை வாழ் அந்தணர்களின் வரலாறு, நடராஜர் முகமதியர் படையெடுப்பின் போது கேரளாவில் போய் இருந்த வரலாறு என்று பல புதிய தகவல்கள் இடம் பெறும். சற்று நிதானமாய்த் தான் எழுதி இருக்கிறேன். பொறுத்து இருந்து படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். \
சிதம்பரத்துக்குப் பலமுறைகள் போயிருக்கிறேன். "சிதம்பர ரகசியம்" என்று சொல்லப்படும் தரிசனமும் பலமுறை கிடைத்துள்ளது. நம்ம நாட்டிலே அதுவும் தமிழ் நாட்டிலே இலக்கியம் பக்தியை வளர்த்ததா? அல்லது பக்தி இலக்கியத்தை வளர்த்ததா என்று சொல்வது ரொம்பவே சிரமமான வேலை. அப்படி ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது இரண்டும்.

இந்தியக் கோயில்களைப் பற்றிப் பார்த்தோமானால் நம்ம பண்பாட்டோடு, கலாசாரமும் கோவில்களைச் சுற்றியே வளர்ந்திருப்பதைக் காணலாம். புராணக் கதைகள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். அப்படி சிதம்பரம் கோயிலைப் பற்றி அறிய வேண்டுமானால் வேத காலத்தில் உபநிஷதங்கள் மூலம் அறிய முடியும். அவை யாவன: "சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஸ்காந்த, ஜாபால தரிசனம், வராஹ இன்னும் சிலவற்றின் மூலம் அறிய முடிகிறது.

புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்கந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சைவம், லிங்கபுராணம் மூலமும் உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலிருந்தும் ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், திலவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அறிய முடியும்.

தற்காலங்களில் நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம், மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும் அறியலாம். இவ்வளவு தொன்மையான ஒரு ஊரைப் பற்றியும் அதன் கோயிலின் மகத்துவத்தைப் பற்றியும் ஓரளவுக்குத் தான் என்னால் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். மேற்கண்ட புராணங்களையோ, உபநிஷத்துக்களையோ நான் அதிகமாய்ப் படித்து அறிந்து கொள்ளவில்லை. என்னோட அறிவுக்கு அவ்வளவு சீக்கிரமா எல்லாம் முடியாது. மற்றபடி ஓரளவுக்கு நான் படித்தும், கேட்டும், சொல்லியும் அறிந்த தகவல்கள் இடம்பெறும்.

முதன்முதல் சிதம்பரம் பற்றியக் குறிப்புக்கள் இடம் பெற்றது "சிதம்பர மகாத்மியம்" என்னும் புத்தகத்தில். கையெழுத்துப் பிரதியாக இருந்த இந்தப் புத்தகத்தில் தான் முதலில் சிதம்பரம் பற்றியும், அதன் கோவில் பற்றியும் குறிப்புக்கள் காணப் படுகின்றன. வேத வியாசரால் எழுதப் பட்ட "ஸ்கந்த மஹாபுராணத்தில்" உள்ள "சனத்குமார சம்ஹிதை" யை ஒட்டி எழுதப் பட்ட இந்தப் புத்தகம் 26 அத்தியாயங்களைக் கொண்டது. மூத்த தலபுராணம் என்று குறிக்கப் படும் இதன் கையெழுத்துப் பிரதியையும் அதன் குறிப்புக்களையும் பற்றி Mackenzie Collections-A study of Chidambaram சொல்லுவது என்னவென்றால்:
இது வியாக்ரபாதர் ஆசிரமமாக இருந்தது. ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவரின் யோகாசிரமமாகவும், அவர் கற்பித்துக் கொண்டிருந்த இடமாயும் இருந்தது. மற்றும் மாணிக்கவாசகர் முக்தி பெற்ற ஸ்தலம் என்னும் குறிப்பும் உள்ளது."மற்ற தலபுராணங்களில் எழுதியுள்ளவை வரும்.
சிதம்பரத்துக்குப் பலமுறைகள் போயிருக்கிறேன். "சிதம்பர ரகசியம்" என்று சொல்லப்படும் தரிசனமும் பலமுறை கிடைத்துள்ளது. நம்ம நாட்டிலே அதுவும் தமிழ் நாட்டிலே இலக்கியம் பக்தியை வளர்த்ததா? அல்லது பக்தி இலக்கியத்தை வளர்த்ததா என்று சொல்வது ரொம்பவே சிரமமான வேலை. அப்படி ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது இரண்டும்.

இந்தியக் கோயில்களைப் பற்றிப் பார்த்தோமானால் நம்ம பண்பாட்டோடு, கலாசாரமும் கோவில்களைச் சுற்றியே வளர்ந்திருப்பதைக் காணலாம். புராணக் கதைகள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். அப்படி சிதம்பரம் கோயிலைப் பற்றி அறிய வேண்டுமானால் வேத காலத்தில் உபநிஷதங்கள் மூலம் அறிய முடியும். அவை யாவன: "சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஸ்காந்த, ஜாபால தரிசனம், வராஹ இன்னும் சிலவற்றின் மூலம் அறிய முடிகிறது.

புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்கந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சைவம், லிங்கபுராணம் மூலமும் உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலிருந்தும் ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், திலவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அறிய முடியும்.

தற்காலங்களில் நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம், மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும் அறியலாம். இவ்வளவு தொன்மையான ஒரு ஊரைப் பற்றியும் அதன் கோயிலின் மகத்துவத்தைப் பற்றியும் ஓரளவுக்குத் தான் என்னால் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். மேற்கண்ட புராணங்களையோ, உபநிஷத்துக்களையோ நான் அதிகமாய்ப் படித்து அறிந்து கொள்ளவில்லை. என்னோட அறிவுக்கு அவ்வளவு சீக்கிரமா எல்லாம் முடியாது. மற்றபடி ஓரளவுக்கு நான் படித்தும், கேட்டும், சொல்லியும் அறிந்த தகவல்கள் இடம்பெறும்.

புண்டரீகபுர மஹாத்மியம்:

தில்லையைப்பற்றிப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் சொல்லுவது:
12 அத்தியாயங்கள் உள்ள இது இரு பாகங்களைக் கொண்டது. பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகம். பூர்வ பாகம் 9 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முழுதும் கிரந்த எழுத்துக்களால் ஆன பதிப்பு. 3 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாம் பாகம் "ரகஸ்ய அத்தியாயம்" என்றும், "பாரத்வாஜ சம்ஹிதை" என்றும் சொல்லப் படுகிறது. இது கையால் எழுதப் பட்டுள்ளது. இதன் முக்கியமான பகுதிகளில், "யந்திர லட்சணம்" "சபா லட்சணம்", "மந்திரபுர சாரம்" பற்றிய வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளது. "சிவ மஹா புராண"த்தில் உள்ள "ஏகாதச ருத்ர சம்ஹிதை"யை ஒட்டி உள்ள இந்தப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் உள்ள ஒரு அத்தியாயம் முழுதும் இந்த க்ஷேத்திரத்தில் உள்ளப் பத்து முக்கிய தீர்த்தங்களைப் பற்றியது.

திலவன மஹாத்மியம்:

ஸ்கந்த புராணத்தில் உள்ள சனத்குமார சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்ட இது 8 அத்தியாயங்களைக் கொண்டது. இதில் பெரும்பாலும் "சிதம்பர ரகஸ்யம்" பற்றியும், அதன் குறிப்புக்கள் பற்றியும், சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள் பற்றியும் கூறுகிறது.

வ்யாக்ரபுர மகாத்மியம்:

இதுவும் ஸ்கந்த புராணத்தில் இருந்து வந்தது. ஆனால் சூத சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்டது. 19 அத்தியாயங்களைக் கொண்டது. இதன் முக்கியத்துவம் எல்லாம் வல்ல அந்த ஆடவல்லானுக்கும், அவனுடைய தேவி காளியாய் வந்து போட்டிக்கு அழைத்ததையும், காளியை அவன் வென்றதையும் குறிப்பிடுவதோடு அல்லாமல், ஆடவல்லானின் முக்கியமான ஒன்பது வித ஆடல் தோற்றங்களைப் பற்றியும் விவரிக்கிறது.

இன்னும் நிறையப் புத்தகங்கள் இருக்கு சிதம்பரத்தைப் பத்தி. அவை யாவன:ஹேம சபாநாத மஹாத்மியம்: இதிலே தான் முதன் முதல் "நந்தனாரை" பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. திருநீலகண்டரைப் பத்தியும் இதிலே தான் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆகையால் இது பின்னாளில் வந்தது எனக் கொள்ளலாம். "நடேச விஜயம்" வெங்கடேஸ்வர தீட்சிதரால் எழுதப் பட்டது. இவர் மராட்டிய அரசரான ஷாஜி-2 ஆட்சியின் போது அவரால் ஆதரிக்கப் பட்டவர். இவரைத் தவிர ராமபத்ர தீட்சிதரால் எழுதப் பட்ட பதஞ்சலி சரித்திரமும் ஷாஜி-2 ஆட்சியின் போது எழுதப்பட்டது. வ்யாசகாலர் என்பவர் எழுதிய "சங்கரவிஜயம்" என்னும் நூலும், ஆதிசங்கரரும் அவருடைய முதன்மைச் சீடரான பத்மபாதரும் சிதம்பரம் வந்தது பற்றியும், நடராஜத் திருமேனியின் ரகசியம் பற்றித் தெரிந்து கொண்டது பற்றியும் எழுதி இருக்கிறார். இன்னும் நீலகண்ட தீட்சிதர் எழுதிய சிவலீலார்ணவத்திலும் , அனந்தாச்சாரியா எழுதிய "ப்ரபன்ன மந்திரத்திலும்" சிதம்பரம் பற்றிக் குறிப்புக்கள் இருக்கின்றன. பிரபன்ன மந்திரத்தில் சிதம்பரம் கோவிலுக்குள் நடராஜர் சன்னதிக்கு அருகேயே இருக்கும் கோவிந்த ராஜரைப் பற்றியும் அவர் எவ்வாறு அங்கே வந்தார் என்பது பற்றியும் இருக்கின்றன.

கங்கா தேவி எழுதிய "மதுரை விஜயத்தில்" சிதம்பரம் கோவில் மாலிக்காஃபூர் படை எடுப்பின் போது சேதமடைந்ததையும், நடராஜர் காப்பாற்றி வைக்கப் பட்டது பற்றியும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. இதைத் தவிர கிருஷ்ணதேவராயர் காலத்தில் சிதம்பரம் கோவில் செப்பனிடப் பட்டது பற்றியும் அறிய முடிகிறது. இது போல் இன்னும் நிறையக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. கோவிலுக்கு உள்ளேயே சில கல்வெட்டுக்களும் கிடைக்கின்றன. தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் என்பவர் தில்லை வாழ் மூவாயிரவர் பற்றியும் கோவில் நடைமுறைகள், வழிபாடு முறைகள் பற்றியும் எழுதி உள்ளார்.

நடேஸ ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் என்பது அந்தத் தில்லை வாழ் நடேசனும், சிவகாமசுந்தரியும் பேசிக்கொள்ளுவது போல் அமைந்தது. இது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளான சிவபெருமான் மஹாவிஷ்ணுவுக்குச் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகளையும், பழக்கங்களையும் கூறியது போல் அமைந்தது. இதைத் தவிர,"பூஜா பதஞ்சலம்" என்னும் நூலில் பதஞ்சலி முனிவர் பற்றியும் சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றியும் ஆதாரபூர்வமான குறிப்புக்கள் இருக்கின்றன. சாதாரணமாக சிவன் கோவில்களில் வழிபாட்டு முறைகள் சைவ ஆகமத்தை ஒட்டியே பின்பற்றப் படும். ஆனால் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகள் "வைதீக" முறையைச் சேர்ந்தது. அது தில்லை வாழ் அந்தணர் மட்டுமே அறிந்த ஒன்று எனவும் அவர்களுக்கு சிவனே நேரிடையாக அந்த உரிமையைக் கொடுத்திருப்பது பற்றியும் பின் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இனி, கோவிலைப் பற்றியும், அதன் அமைப்பைப் பற்றியும், பரிவார தேவதைகள் பற்றியும் சிறுகுறிப்புக்கள் தரப் போகிறேன். "ரகசியம்" கேட்பவர்கள் சற்றே பொறுக்கவும்.