புதன், 20 நவம்பர், 2019

அண்ட பிண்ட ரகசியம் படித்து பாருங்கள் கரைந்து போவிர்கள்...

பகுதி ஒன்று

ரொம்ப பெரிய பதிவு பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்

அண்ட பிண்ட ரகசியத்தை சித்தர்கள் எப்படி கண்டறிந்தனர்? இப்படிப்பட்ட இன்பமும், துன்பமும் ஏற்படுகின்ற இந்த வாழ்க்கைக்கு வழியே இல்லையா? நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்காதா? என்ற கேள்வி எழ ஆரம்பித்தது. எனக்குள்ள அந்தக் கேள்விக்கு மனிதன் கண்டெடுத்த முத்துகளாகிய பிரபஞ்ச அண்ட பிண்டத்தத்துவம். இன்னும் ஆழமாகப் புரிய ஆரம்பித்தது. அதன் முடிவு எங்கு தோற்றமோ? அங்கேதான் முடியும்? என்பதை புரிந்து கொண்டேன் ஆராய முற்பட்டேன். அதன் விளைவு வெட்ட வெளியாக தோன்றியது. அதிலிருந்து தோன்றிய ஜோதி என் கண்முன் தோன்றின. அதிலே முளைத்து எழுந்த அணுவே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகி ஓரறிவு ஐந்தறிவு பிராணி ஆறறிவு மனித ஜீவன் வரையுள்ள பரிணாமத்தைக் கண்டேன் கடைசியாகத் தன்னைத்தானே ஆராய முற்பட்டான். அதன் விளைவு தன்னுடைய இடத்திலே இருக்கும் மூல ஆற்றலை உணர்ந்தேன். எங்கோ தொடங்கிய மூல ஆற்றல் அண்டங்களாக பேரண்டங்களாக வியாபித்துள்ள பூரனமாய் நிறைந்துள்ள அந்த ஆற்றலை கண்டேன். பிரபஞ்சத்தின் சிறிய அணுவான மனிதன் மூல சக்தி என்கிற கயிற்றின் நுனியைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்ச பேராற்றலின் பரமாணுவை அடைந்து அதோடு ஐக்கியமாக முடியும் என்று கண்டு பிடித்தேன். கண்டு பிடித்து அடைந்தவன் சித்தன். வெட்ட வெளியில் ஜோதியாக இருபவனும் சித்தனே. வெட்ட வெளியில் ஜோதியாக இருபவனும் சித்தனே. அதுவே பிரம்மரகசியம் ! அதை அறிந்தவனே பிரம்மரிஷி.

பரமாணுவில் தொடங்கி அணுக்கள் கூட்டம் கூட்டமாக பல்வேறுபட்ட இயக்கங்களை அண்டங்களாக பிண்டங்களாக நடந்து கொண்டு இருக்கின்ற பேரியக்க மண்டலமே (Universe) அதனுடைய முதல் நிலை ஆகாயம் எனப்படும். அதன் அடுத்த நிலையே காற்று எனப்படும். இவை இரண்டும் மோதிக் கொள்வதால் ஏற்படும் போது உண்டான ‘வெப்ப நிகழ்ச்சியே நெருப்பாகும். நீரகவாயு, பிராணவாயு என்ற இருவகையான
வாயுக்கள் குறிப்பிட்ட அளவில் சேருகின்ற போது நீர் ஆகிறது. நீரின் இறுகிய நிலையே மண். இவ்வைந்து நிலைகளும் ஐந்து பௌதிகப் பிரிவுகள் ஆனபடியால் அவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மேற்கண்ட பூதங்கள் பேரியக்க மண்டலத்தில் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் என்று முறையே தோன்றியது. இதே வரிசைக் கிராமமாகத்தான் தாயின் வயிற்றில் பிண்டமான குழந்தையும் வளரும். அண்டம் : -------- பிண்டம் : ------ குழந்தை : -------- # ஆகாயம் ---> தலைபாகம் (ஆகாயம்)---> # ஆக்ஞை # காற்று -----> கழுத்து (காற்று)---> # விசுத்தி # நெருப்பு -------->இருதயம் (நெருப்பு) ---> # அநாதகன் # நீர் --------------> தொப்புள் (நீர்) -----> # மணிபூரகம் # மண் ------------> வயற்றில் (சுக்கில சுரோணித இடம்)---> # சுவாதிஷ்டானம் மேற்கண்ட விளக்கத்தின் மூலம் அண்டத்தின் செயல்பாடு முறைக்கு ஏற்ப பிண்டத்திலும் செயல்படுகிறது என்பதை ஏளிதாக அறியலாம். பரமானுவிலிருந்து தொடங்கி கூட்டம் கூட்டமாக இயங்குகின்ற நிகழ்ச்சிகளின் குணங்களை ஐந்து வகையாகப் பிரிகின்றோம். உணர்வு, ஒலி, ஒளி, சுவை, மணம். இந்த ஐந்து குணங்களும் எப்படித் தோன்றின? என்பதை காணும் போது கவர்ச்சியாக உள்ள அழுத்த இயக்கம் நடைபெறும் இடம் ஆகாயம் என்றும், ஒலி உண்டாகும் இடத்தை காற்று என்றும், ஒளி உண்டாகும் இடத்தை நெருப்பு என்றும், சுவை உண்டாகும் இடத்தை நீர் என்றும், மணம் உண்டாகும் இடத்தை மண் என்றும் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய விஞ்ஞானிகள் கூறும் தொண்ணுத்தி இரண்டு வகையான மூலக்கூறு(Elements)களும் இவ்வைந்து
பூதங்களில் அடங்கியுள்ளன. எழுவகை பிறப்பு எப்படி உண்டாயிற்று?
பூமி என்பது ஐந்து பூதங்களின் ஈர்ப்புச் சக்தி கொண்ட கோள். அது ஐந்து விதமான அணுக்கூட்டத்தின் தொகுப்பு. இந்த அணு தொகுப்பு பூமி அதிலுள்ள அணுக்களுக்குத் தானே முளைக்கின்ற செயல்படுகின்ற ஆற்றல் இல்லை. இது செயல்படுவதற்க்கு சூரியனின் ஒளிசக்தி ஆற்றல் தேவைப்படுகிறது. சூரியகதிர்களின் வீச்சில் பூமியில் ஜீவராசிகள் உண்டாயின. எழுவகை பிறப்பு உண்டான விபரமானது. ஜடப்பொருளான பஞ்சபூதம் ஐந்தும் அதோடு சூரியன், சந்திரன் என்கிற இரண்டும் சேர்ந்து ஏழு ஆற்றல்களும் ஏழுவகையான பிறப்பை உண்டாக்கின. இந்த ஏழுவகைப் பிறப்பு ஒரே மாதிரியாகப் பிறக்காமல் ஏன் மனிதன், தேவர், தாவரம், விலங்கு, ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன என்ற வேறுபாடோடு தோன்றியது எப்படி? என்று ஆய்வு செய்கின்ற போது சூரியனானது தன்னுடைய சூரியக் குடும்பத்தில் உள்ள ஏழு ஆற்றல்களை
கிரகித்தது பூமிக்கு அனுப்புவதால் அந்த ஒளிக்கதிர்கள் பூமியில் படும் போது பூமியில் உள்ள பஞ்சபூதத் தத்துவ அணுக்களின் ஈர்ப்பு தன்மைகேற்ப ஏழுவகையான பிறப்பாக தோன்றியது. இந்த ஏழுவகை பிறப்பானது பஞ்சபூத ஆற்றலும், சூரியக் குடும்பங்களின் ஆற்றலும் ஒருங்கிணைந்து அந்த அணுக்களின் ஈர்ப்பு தன்மையால் உண்டான தன்மைக்கு ஏற்ப பிறப்பு பேதங்கள் உண்டாயின. பிறப்பு பேதங்கள் எனப்படுவது மனிதன்,தேவர், தாவரம், விலங்கு, ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன என்ற பேதம் உண்டாயின.

பிண்டத்தில் உடலின் இயக்கம் எப்படி செயல்படுகிறது?
பூமியில் எப்படி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகள் ஒன்றை ஒன்று ஈர்த்து பூமியாகி செயல்படுகிறதோ அதே போல் இந்த உடலில் கீழ் கண்டவாறு பஞ்சபூத சக்திகள் செயல்படுகின்றன.

1) ஆகாயம் – காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம்

2) காற்று – இருத்தல், நடத்தல், படுத்தல், எழுதல், ஓடல்

3) நெருப்பு – பயம், சோம்பல் , பசி , உறக்கம், புணர்ச்சி

4) நீர் – உதிரம், மூளை, உமிழ்நீர், கொழுப்பு, சுக்கிலம்

5) மண் – மயிர், தோல், நரம்பு , எலும்பு, தசை

பூமியின் இயக்கத்திற்கு இரவு, பகல் மாறி மாறி சூரிய சந்திரர்கள் செயல்படுவதால் பூமியின் செயலும், ஜீவராசிகளும் வாழ்கின்றன. அதே போல மனித உடலான பிண்டத்திலும் இடகலை என்கிற சூரியகலையும், பிங்கலை என்கிற சந்திர கலையும் மாறி மாறி சுவாசம் நடைபெறுவதால் மனித பிண்டம் இயங்குகிறது. பூமியில் பன்னிரெண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இரவும், பகலும் மாறி மாறி செயல் படுவது போல் இந்த மனித உடலில் சூரியகலை, சந்திரகலை, சுவாசம், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி செயல்படும். ஆகவே மேற்கண்ட விளக்கத்தின் மூலம் எந்த சூரிய, சந்திரன் ஆற்றல் பூமியை இயக்குகிறதோ அதே ஆற்றல்தான் இந்த மனித உடலையும் இயக்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பிண்டத்தில் (உடலில் ) நவகிரக செயல்பாடு

பூமி என்பது பிண்டம். பூமிக்கு அண்டம் சூரியக் குடும்பம் என்கிற நவகோட்கள். அதே போல் மனித உடலில் தலைக்கு கீழ்ப்பகுதி பிண்டம் தலைப்பகுதி அண்டமாகிறது. அண்டத்தில் எழு கிரகம் செயல்படுகின்றன. அதே போல் பிண்டத்தில் அதாவது தலைப் பகுதியில் ஏழு துவாரமும் செயல்படுகிறது.

கிரகம் என்றால் என்ன?

கிரகம் என்றால் கிரக்கின்ற பொருள் என்பதாகும். நமது மனித உடலில்
தலைப்பகுதியில் உள்ள கண் -2, காது -2, மூக்கு துவாரம் -2, வாய் - 1 ஆக இந்த ஏழு துவாரங்களும் கிரகிக்கின்ற தன்மையுள்ளவை. கண் காட்சியை கிரகிக்கிறது. வாய் சுவையை கிரகிக்கிறது. கிரகிக்கின்ற தன்மை அண்டத்தில் உள்ளது போல் பிண்டத்திலும் நடைபெறுவது நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

அடுத்த நிழல் கிரகம் என்று ஏன்?
ராகு, கேது என்று இரண்டு கிரகத்தை வைத்தார்கள்? ஆய்வு செய்யும் போது பொது நியதிப்படி ஒரு பொருளை கிரகிக்கின்ற போது மற்றொரு புறம் வெளியே தள்ளுகின்ற செயலும் நடைபெற வேண்டும் என்பது விதி. அந்த அடிபடையிலே தலைப்பகுதியில் கிரகித்து அனுபவித்த அத்தனையும், சுக்கிலம், மலம், மூலமாக மனித உடல் வெளியேறுகிறது. எதற்காக ராகு என்றால் விஷம் என்று பாம்பின் தலையும், கேது என்றால் பாம்பின் உடலும் வைத்தார்கள்? என்ற கேள்வி எழுவது இயல்பு. பாம்பின் தலை என்றால் விஷத்தைக் குறிப்பிடுகிறது. மனித உடலில் விஷத்தை என்பது மலத்தை என்பது பொருள். மலத்தை தள்ளும் இடமே விஷமாகும். அதை தான் மனித உடலில் எருவாயை ராகு என்றனர். அதே போல் கேது என்பது பாம்பின் உடலைக் குறிப்பிட்டர்கள். உடல் என்பது படைப்புக்கு உரியது. படைப்புக்கு காரணமாவது சுக்கிலம் என்பதால் சுக்கில துவாரத்தை மனித உடலில் கேது பாகம் என்றனர். தவிர படைப்பதற்க்கு உரியவையாக இருப்பதால் ஞானகாரகன் என்றும் கூறினர். மேற்சொன்ன சூரியக் குடும்பமாகிய ஏழு கிரகங்களும் வானவில் காட்சியில் ஏழு நிறங்களாகக் காட்சி தந்த அந்த ஏழு நிறங்களே நமது மனித உடலில் ஏழு ஆதார பீடத்திலும் காட்சியளிகிறது. அதே போல் ஏழு ஆற்றல்களே ஏழு ஆதாரமாக
செயல்படுகிறது. இந்த ஏழு சக்திகளும் நமது உடலிலே சப்த தாதுக்களாகச்
செயல்படுகின்றன. இப்படி ஒவ்வொரு செயலும் எப்படி நடைபெறுகின்றன? என்பதை துல்லியமாக கனகிட்டோமானால் அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை. பிண்டத்தில் இல்லாதது அண்டத்தில் இல்லை என்றே தெளிவாக உணரலாம்.

கர்மவினை என்பது உண்மையா?

விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மூலத்தை, மூலசக்தியை ஆராய எத்தனை எத்தனைக் குழப்பங்கள், கணிப்பு, கருவிகள் என்று தேடுகிறான், தேடுகிறான் தேடிக் கொண்டே இருக்கிறான். ஆனால் சித்தன் அதைக் கண்டு பிடித்து சொல்லி உள்ளான். அதை ஏன் ஏற்க யோசிக்கிறார்கள் விஞ்ஞானிகள்? சுப்பிரமணியர் ஞானம் என்ற நூலில் “ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்” என்று இந்த பிரபஞ்சம் முதன் முதலில் (ஜோதி) கனலில் இருந்து கொப்பளித்து வந்த கனலே. குளிரும் போது அது அணுவாக மாறி இப்பிரபஞ்சம் உண்டாவதற்கு காரணமானது என்று அன்றே கூறியுள்ளார்கள். ஆக முதலிலே பிறந்தது “சத்தம்”. சத்தம் என்றால் ஒலி என்று பொருள். ஒலி உண்டாகும் இடத்திலே ஒளியும் உண்டாகும். இது இயற்கை. இப்பிரபஞ்சத் தொடக்கதிற்கு அடிப்படையான முதல் காரணமாக இருப்பது ஒளியும், ஒலியும் தான். அந்த அடிப்படையில் பஞ்சபூத பூமியின் இயக்கத்திற்கு காரணமாக இருப்பது சந்திரன்,
சூரியன் என்கிற ஒளியும், ஒலியும் தான். மனிதனுக்கும் சூரியகலை, சந்திரகலை இயங்குகிறது. அவ்வளவு ஏன்? இன்றைய விஞ்ஞானத்தால் கண்டு பிடிக்கப்பட்ட இயந்திரங்கள், ஜடப்பொருள்கள் இயங்குவதற்கு ஒலி, ஒளி இல்லை என்றால் நடைபெறுமா? நிச்சயமாக நடைபெறாது. எரிபொருளால் ஒலி, ஒளி உண்டாக்கத்தானே இயந்திரங்கள் இயங்குகின்றன. ஆக ஒலி, ஒளி, அதன் அதிர்வு இம்மூன்றும் சேர்ந்தது தான் மூலசக்தி. அதைத்தான் சித்தர்கள் அ, உ, ம “ஓம்” என்று பெயர் வைத்து எல்லா இயக்கங்களுக்கும் ஓம் என்ற மூல சக்திதான் காரணம் என்றனர். இது விஞ்ஞானமில்லையா? இது என்ன மூடத்தனமான கொள்கையா? சிந்தியுங்கள் அன்பர்களே… சிலை வடிப்பவன் எவனொருவன் சிலை முழுவதும் வடித்து சின்னஞ்சிறு உளிகளால் நெளிவு சுளிவு அனைத்தையும் வைத்து சிலை முடிகின்றானோ, அவனால் தான் அந்த
சிலையின் அத்தனை ஆற்றலையும் உணர முடியும், கூறமுடியும். அதே போல இந்த பிரபஞ்சக் கணக்கீட்டை கண்டு பிடித்து பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும், ஜீவராசிகள், தாவரங்கள் அத்தனைக்கும் உரிய ஒப்பீடு தத்துவங்களை அறிந்து இந்த பிரபஞ்சம் இதனை யுகங்களில் அழியும் என்று எவன் சொல்கிறானோ? அவனே அந்தக் கொள்கையில் முழு உண்மையை அறிந்தவனாவான். ஆகவே பிரபஞ்சத்தை கணக்கிட்டு ஆயுள் நிர்ணயம் செய்து பிரபஞ்சம் அழிவதையும், கணக்கிட்டவன் சித்தன். சித்தர்கள் சொன்ன எந்த உண்மையும் காலத்தால் அழிக்க முடியாதது. சமீபத்தில் கிடைத்த செய்தி. மூளையின் பதிவுகளை கண்டு பிடித்த கருவியானது, மூளையில் இன்னொரு அதிர்வலைகள் இருக்கின்றன என்பதை கருவி காட்டியது, அது என்ன? என்ற கேள்விக்கு, விஞ்ஞானிகள் கூறுவது கர்மவினை அதிர்வு கோடு (Intronce) என்றார்களாம். ஆகவே கர்மவினை என்பதை என்றைக்கு ஒத்துக் கொண்டானோ! அப்போதே சித்தர்கள் சொல்லியதை ஒத்துக் கொண்டாக வேண்டும்! முன் பிறப்பு, அடுத்த பிறப்பு உண்டு என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும். கர்மவினை என்பதே முற்பிறப்பின் தொடர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். “ஓம்” என்ற மூலசக்தியே இந்த பிரபஞ்ச இயக்கப் பேரியக்க மண்டலத்தின் மூலசக்தி
என்பதை கோரக்கர் முதல் கொங்கணர், அகத்தியர் ஏன் அனைத்து சித்தர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். “ஓம்” தான் மூலசக்தி என்பதில் எந்த சித்தருக்கும், ஞானிகளுக்கும் வேறுபாடு இல்லை. ஏனென்றால் அவர்கள் அத்தனை பேரும் உண்மையை கண்டவர்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் மத்தியில் ஏன் இத்தனை கருத்து வேறுபாடு? ஆய்வு, ஆய்வுப் பொருள் எல்லாம் என்ற கேள்விக்கு விஞ்ஞான மனிதனுடைய அறிவுக்கு எட்டியவை, அவ்வளவு தான். எத்தனைத்தான் கருவி கரணாதிகள் வைத்துச் செய்தாலும், இவன் அறிவின் எல்லைக் கோட்டின் அளவின் அடிப்படையிலே தான் அந்த கருவிகள் நிர்மாணிக்கப்படும். மனித அறிவுக்கு உண்டான கருவி அதற்கேற்றாற் போல் அந்த அளவிலேயே நமக்கு பதில் சொல்லும். ஆகவே விஞ்ஞானம் முழுமை நிலை பெறவில்லை என்பதே நமக்கு கிடைக்கும் பதில்