ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். {கி. பி. 329 - கி. பி. 367 வரை}


காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.16:ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். {கி. பி. 329 - கி. பி. 367 வரை}

ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர். இவரது தந்தை பெயர் கேசவ சங்கரர். பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் "அச்சுத கேசவர்" இவர் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இவர் பல முறை விஜய யாத்திரைகளை மேற்க்கொண்டவர். அப்போது ச்யாநந்தூர நாட்டு மன்னரான குலசேகரனை தன் அருள் நோக்கால் கவிஞ்சராக்கியவர். ஜைனராக மாரிய அந்தணர்களுக்கு "ஜராத்ருஷ்டி" எனப் பெயரிட்டு அவர்களை சிந்து நதிக்கு அப்பால் செல்லும் படி கட்டளை பிறப்பித்தார். பிற மதங்கள் இப்படி ஆக்கிரமிக்காமலிருக்க அரும்பாடுபட்டவர். இவர் கி. பி. 367ஆம் ஆண்டு அக்ஷய வருடம் சுக்ல பக்ஷம் அஷ்டமியன்று காஷ்மீரத்திலுள்ள 'கலாபூரி' என்னுமிடத்தில் சித்தி அடைந்தார். அந்த ஸ்தலம் அது முதல் இன்று வரை 'உஜ்வல மஹாயதி பரம்' என்றழைக்கப்பட்டுகிறது.