திங்கள், 4 ஜனவரி, 2021

சப்த கந்த கோட்பாடுகள்

சப்த கந்த கோட்பாடுகள்




ஏழு கந்த கோட்பாடுகள்:

நாதகந்தம்

பிரவேஷகந்தம்

பூரிதகந்தம்

அந்தர் சுஷூம்னா கந்தம்

அபிலாட்ச சங்கம கந்தம்

கிரகபதார்த்த கந்தம்

அனலேஷூ கந்தம்

மேற்சொன்ன இந்த சப்தகந்தங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் உன்னதமானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றன. மனிதனின் ஆற்றல், சக்தி போன்றவைகளை இவை குறிப்பதோடு அவற்றால் பல சமயங்களில் மனிதனுக்கு ஏற்படும் பலமாறுதல் நிலைகளையும் சுட்டிக்காட்டுகிறது. அவைகள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம்.

நாதகந்தம் : இது மனிதனை மனிதனாக்கக் கூடியது. அவன் பெற வேண்டிய பரிபூரண, பக்குவ உயர்ந்த நிலைகளுக்கு இறைப் பகுத்தறிவு ஒன்றே மூல காரணம்.

பிரவேஷ கந்தம்: இது ஜீவன்களின் அறிவை ஐந்தறிவு நிலைவரை மேம்படுத்தி நுண்புல உணர்வுகளை நிலைபெறச் செய்வதாகும். மனித சக்தியால் செய்ய முடியாத காரியங்களை எல்லாம் மிக அற்புதமாக செய்து முடிக்கும் ஆற்றல் உடையது இது.

பூரித கந்தம்: நியாயமான, முறையான மனித விருப்பங்களை இந்தச் சக்தியின் மூலம் பெறலாம்.

அந்தர்ஷூம்னா கந்தம்: இது மனித உள்ளத்தில் எழும் ஆசைகளை முறைப்படுத்தி, நிலைப்படுத்தி, தயாராக்கித் தரக்கூடியதாகும்.

அபிலாட்ச சங்கம கந்தம்:  இது மனிதனின் அபிலாக்ஷைகளை (விருப்பங்களை) முறையாகப் பரிணமிக்கச் செய்து அதனைக் காரியசித்தியாக்க உதவுகிறது.

கிரகபதார்த்த கந்தம்: ஊழ்வினை காரணமாக மனிதன் செயலற்றிருப்பதைத் தக்க பரிகாரம், பிராயச்சித்தம் மூலம் சீர்ப்படுத்திக் காரிய சித்திக்குத் துணை புரிகிறது இது.

அனலேக்ஷூ கந்த கந்தம்:  பகைமை, விரோதம், குரோதம், பொறாமை காரணமாக வாழ்வின் லட்சியம் சீர்குலையாமல் பாதுகாத்து சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மனிதனைச் செயல்பட வைக்கிறது இது.

அட்டமா சித்தி

அட்டமா சித்தி


யைப் பற்றி காலங்கி நாதர் கூறுவது.
 
அட்டமா சித்தி என்பது அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிரார்த்தி, பிராகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்னும் எட்டு வகையாகும்.
 
அணிமா என்பது அணுரூபமான ஆன்மாவைப் போன்றதாகும்.
 
மகிமா என்பது மிகவும் பெருமையுடையதாகும். அதாவது மிகப் பருமனாதல்
 
கரிமா என்பது தன் உடல் கண்டிப்பு கட்டுப்பாடு இன்றி கண்டிப்பு கட்டுப்பாடு உள்ளவற்றை ஊருருவிச் செல்லவல்லதாகும்.
 
லகிமா என்பது மேரு மலை போன்ற கனமான வடிவத்தைத் தூக்கினாலும் இலகுத்துவம் உடையவன் ஆதல்.
 
பிரார்த்தி என்பது வேண்டியதை அடைவது. அதாவது நினைத்த போகமெல்லாம் பெறுவது.
 
பிராகாமியம் என்பது நிறைவுடையவனாதல். அதாவன்றி குறைவின்றி இருத்தல். அன்றியும் ஒரு தேகத்திலிருந்து மற்றொரு தேகத்திலே புகுவதும், தான் நினைத்த உருவங்களை எடுத்துக் கொள்ளுதலும், ஆகாயத்தில் சஞ்சரித்தலும் விரும்பிய போகங்களை எல்லாம் அனுபவிப்பதற்குத் தகுதியாதலுமாகும்.
 
ஈசாத்துவம் என்பது ஆட்சியுள்ளவனாதல். அதாவது யாவருக்கும் தேவனாகுதல்.
 
வசித்துவம் என்பது தேவர், அசுரர், பட்சிகள், பூதங்கள், மானிடர்கள், இந்திரன் முதலிய யாவும்/யாவரும் வணங்கி நிற்றல்.

அமர்நாத் குகைக்கோவில்

அமர்நாத் குகைக்கோவில்


:-

செயைகையாக மனிதனையே உருவாக்கும் அளவிற்கு இன்று நாம் அறிவியலில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும் கூட, இயற்கை என்ற மாபெரும் சக்திக்குமுன், அதன் எல்லையில்லா ஆற்றலிடம் மண்டியிட்டு தோற்றுத்துத்தான் போய்விடுகிறோம் என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்காது என்று கருதுகிறேன். எங்கும் எதிலும் அறிவியலின் அபிரிமிதமான வளர்ச்சி புரையோடிகிடக்கும் இந்த காலகட்டத்தில் கூட இன்றைய நவீன விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத கேள்விகள் இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே? அப்படிப்பட்ட கேள்வியில் ஒன்றை பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். அந்த கேள்வி ஒளிந்திருக்கும் இடம்தான் {சுமார் 5000} ஆண்டுகலுக்கும் மேல் பழமைமிக்க இந்துக்களின் புனிததலமான அமர்நாத் குகைக்கோவில் (Amarnath Cave Temple).

விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத அந்த கேள்வியை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் அந்த கோவில் இருக்கும் இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள். இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருப்பதுதான் அமர்நாத் குகைக்கோவில். இந்துக்களின் புராண இதிகாசங்களின்படி இங்குதான் உயிர்களின் மூல ஆதாரமான சிவன், தனது மனைவியான பார்வதிக்கு வாழ்வியலின் ரகசியங்கள் பற்றி போதித்ததாக கூறப்படுகிறது. இந்துக்களின் சிவ வழிபாட்டு தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே பக்தர்கள் யாத்திரையாகவே வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள் என்று இந்துக்களின் இதிகாசங்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன.

இக்கோவிலை அடைய நாம் முதலில், ஸ்ரீநகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இமயமலையின் அடிவாரதத்தில் அமைந்துள்ள பகல்காம் (Pahalgam) என்ற இடத்தை அடைய வேண்டும். பகல்காம் வரை செல்ல சாலை வசதிகள் உண்டு. இந்த பகல்காம் கடல் மட்டத்தில் இருந்து கிட்டதட்ட 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இமயமலையின் அடிவாரத்திலிருந்து அதாவது பகல்காமில் இருந்து அமர்நாத் பனிகுகைக்கு செல்ல செங்குத்தான பனிபாறைகளுக்கு நடுவே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். பக்கதர்கள் பெரும்பாலும் பகல்காமில் இருந்து அமர்நாத்திற்கு, மூன்று அல்லது நான்கு நாட்களில் கால்நடையாக நடந்துதான் செல்கிறார்கள். நடக்க முடியாதவர்கள் குதிரை, பல்லக்கு, டோலி போன்றவற்றில் பயணம் செய்கிறார்கள்.

சுமார் 150 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள், மலையின் மேல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர், குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி, அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி, சிவலிங்கமாக உருப்பெருகிறது. தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரண விஷயம்தான், வியப்பதிர்க்கில்லை. ஆனால் இங்கே ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டங்களில் அதுவும் லிங்க வடிவில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதுதான், இதுவரை புரியாத அதிசயமாக உள்ளது. இதில் எந்த விஞ்ஞானமோ அல்லது செயற்கையோ கிடையாது.

இங்கே இன்னுமொரு அதிசயம் உங்களுக்கு காத்திருக்கிறது, பனிமலை சூழ்ந்த அமர்நாத்தில் எந்த விலங்கினங்களையும், பறவைகளையும் காண முடியாது. காரணம் அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதுதான். இங்குதான் நம் விஞ்ஞானத்தால் இன்றுவரை பதிலளிக்க இயலாத ஆச்சர்யம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. உயிர்கள் வாழ தகுதியற்ற சூழல் நிலவும் அமர்நாத் குகைக் கோவிலில் இன்றுவரை ஒரு ஜோடி மலைபுறாக்கள் மட்டும் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறது, இவை எப்படி உயிர் வாழ்கிறது என்ற கேள்விக்கு இதுவரை இன்றைய நவீன விஞ்ஞானத்திடம் இருந்து பதில் இல்லை.

அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு பெறுவதில்லை. அந்தக் குகையில் வசிக்கும் இந்த ஜோடி புறாக்களைப் தரிசித்தால் மட்டுமே அமர்நாத் யாத்திரை நிறைவு பெறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இறைவனும், இறைவியுமே புறாக்கள் வடிவில் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை. விஞ்ஞானம் தோற்றுப்போன வெகு சொற்ப இடங்களில் அமர்ந்தும் ஒன்று என்பதே உண்மை.

அருள் மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில்

அருள் மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில்


, திருவல்லிக்கேணி
                                             {பகுதி:1}
 
திருவரங்கம் திருவேங்கடம் காஞ்சிபுரம் திருஅயோத்தி திருஅகோபிலம் ஆகிய ஐந்து திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் அமையப்பெற்ற அற்புதத்தலம்.108 வைணவ திவ்ய தேசங்களில் பெருமாள் மீசையுடன் காட்சியளிக்கும் அழகியத் திருத்தலம். கிழக்கு, மேற்கு ஆகிய இரண்டு வாயில்களில் இரண்டு மூர்த்திகள் முதல் மூர்த்தியாக சேவை சாதிக்கும் புண்ணியத் தலம். ஸ்ரீபெரும்புதூர் மாமுனி உடையவர் இராமானுஜர் என்னும் எதிராஜரை இந்த பூமிக்கு தந்தருளிய பெருமாள் குடிகொண்டுள்ள ஒப்பற்ற தலம்.108 வைணவ திவ்ய தேசங்களில் 60வது திருத்தலம். பேயாழ்வார் திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்த திருத்தலம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் போலவே ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும் சிறந்ததொரு திருத்தலம். இவ்வாறு ஏராளமான பெருமைகளையும் மகிமைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும்.

திருவட்டாறு திருசிற்றாறு ஆகிய தலங்களைப் போலவே தீர்த்தத்தின் பெயரால் பெருமை பெற்ற தலங்களில் திருவல்லிக்கேணியும் ஒன்று.இத்தல தீர்த்தத்திற்கு கைரவணீஎன்று பெயர்.கைரவம் என்பதற்கு செவ்வல்லி என்பது பொருள்.புராண காலத்தில் இத்தீர்த்தத்தில் செவ்வல்லி மலர்கள் பூத்துக் குலுங்கிய காரணத்தால் தமிழில் அல்லிக்குளம் என்றும் வடமொழியில் கைரவணி என்றும் குறிப்பிட்டனர்.பிற்காலத்தில் அல்லிக்கேணி என்ற பெயரில் இத்தலம் அழைக்கப்பட்டது.திருமால் குடிகொண்டுள்ள அல்லிக்கேணி என்பதால் இவ்விடம் திருவல்லிக்கேணி எனப் பெயர் பெற்றது.

திருவல்லிக்கேணி திருத்தலத்தில் பரந்தாமனான திருமால் ஐந்து வடிவங்களில், ஐந்து சன்னதிகளில் தனித்தனியாக சேவை சாதிக்கிறார்.

அருள்மிகு வேங்கடகிருஷ்ணன் (பார்த்தசாரதி),
அருள்மிகு மனநாதர் (அரங்கநாதர்),
அருள்மிகு இராமபிரான்,
அருள்மிகு கஜேந்திர வரதர்,
அருள்மிகு தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்).

இந்த ஐந்து மூர்த்திகளின் கருவறைகள் மீதும் ஆனந்த விமானம் பிரணவ விமானம் புஷ்பக விமானம் சேஷ விமானம் தைவீக விமானம் ஆகிய ஐந்து விமானங்கள் அமைந்துள்ளன. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் அமையப் பெற்றது மிகச்சிறந்த ஒன்றாகும். அதில் மனநாதராகிய அரங்கநாதர் சன்னதி மட்டுமே மிகப் தொன்மையானது.

தலைக்குறிப்பு:
மூலவர் :வேங்கடகிருஷ்ணன்
உற்சவர் :பார்த்தசாரதி
தாயார் :ருக்மணி தாயார்
ஆகமம் :வைகானசம்
தீர்த்தம் :கைரவணீ புஷ்கரணி
புராணப்பெயர் :விருந்தாரன்ய செத்திரம்
ஊர் :திருவல்லிக்கேணி

பார்த்தசாரதி வரலாறு:பகவான் கண்ணன் துவாபரயுகத்தின் முடிவில் கிருஷ்ணாவதாரம் எடுத்த நோக்கம் முடிவுற்றதும் வைகுண்டம் செல்கிறார்.அப்போது கலியுகம் தோன்றுவதற்கான தூர்நிமித்தங்கள் ஏற்படுகின்றன.கலியின் கொடுமையால் பூமியில் அதர்மங்கள் தழைத்தோங்கும் என்பதை அறிந்த ஆத்ரேய மகரிசி தனது குருவான வியாச மகரிசியை சந்தித்து, நல்லவர்கள் கலியின் கொடுமையிலிருந்து விடுபட்டு உய்யும் வகையைக் கூறுமாறு வேண்டினார்.

அப்போது வியாசர் அதுவரை தாம் ஆராதித்து வந்த "பார்த்தசாரதி பெருமாளின்" திருமேனி உருவத்தைத் தந்து தென் பாரதத்தில் துளசிவனம் நிறைந்து காணப்படும் விருந்தாரன்யத்தில் உள்ள (ரங்கநாதர்)மனநாதன் திருக்கோயிலில் வைத்து ஆகம முறைப்படி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் ஏற்படும் என்றார்.திருவல்லிக்கேணி தலம் அமைந்துள்ள பகுதி புராண காலத்தில் விருந்தாரண்யம் என்று அழைக்கப்பட்டது.அதன்படியே ஆத்ரேய மகரிசியும் விருந்தாரண்யம் வந்து அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியின் திருவுருவத்தை வைத்து வழிபாடு செய்து வந்தார்.கலியின் கொடுமையிலிருந்து பூமியைக் காக்கும் பொருட்டு பார்த்தசாரதி சுவாமியை இங்கு வைக்கப்பட்டதால் அன்றுமுதல் இக்கோவிலில் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியே முதன்மையான கடவுளாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

வேங்கடவன் திருநாமம்:பிற்காலத்தில் துண்டீரம் என்ற நாட்டை சுமதி என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான்.துண்டீரம் என்பதே துண்டீர மண்டலம் என ஆகி அதுவே திரிந்து பிற்காலத்தில்"தொண்டை மண்டலம்"ஆயிற்று என்பர்.அரசன் சுமதி திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள திருவேங்கடமுடையான் மீது தீவிர பக்தி கொண்டு வழிபட்டு வந்தான்.

இவ்வரசனுக்கு பார்த்தனுக்கு
(அர்ச்சுனனுக்கு) சாரதியாக
(தேரோட்டியாக) விளங்கிய கிருஷ்ணன் திருக்கோலத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே சுமதி தனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு ஏழுமலையானான திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டினான்.அவன் பக்திக்கு மனமிறங்கிய "ஏழுமலையான் வெங்கடேசர்" அவன் கனவில் தோன்றி விருந்தாரண்யம் சென்றால் விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார்.அதன்படியே மன்னன் சுமதி விருந்தாரண்யம் வந்து ஆத்ரேய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டு வந்த அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோலத்தைக் கண்டு மனம் குளிர சேவித்தான்.திருமலையில் உள்ள வேங்கடநாதனே இங்கு கிருஷ்ணனாக காட்சி தருவதைப்போல உணர்ந்தான். எனவே "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தான். அன்று முதல் இன்று வரை இத்திருக்கோயில் மூலவருக்கு "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் இத்தளத்தின் மீது பத்து பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். திருமங்கையாழ்வார் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியை பெரிய திருமொழி பகுதியில், இரண்டாம் பத்து, மூன்றாம் திருமொழியில் அழகாக பாடியுள்ளார்.

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை புரமெரி செய்த
சிவனுரு துயர்களை தேவை பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்
திருவல்லிக்கேணி கண்டேனே.
(திருமங்கையாழ்வார்)

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி தமது குடும்பத்துடன் காட்சியளிக்கிறார். ஒரே கருவறையில் பகவான் தமது உறவினர்களுடன் காட்சியளிக்கும் திருக்கோலத்தை "பஞ்ச வீர வழிபாட்டு மரபு" என்று அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்பு திருத்தங்கல் (89வது திவ்யதேசம்)திருநறையூர் என்னும் நாச்சியார்கோவில்(14வது திவ்யதேசம்)தேரழுந்தூர் (23வது திவ்யதேசம்)ஆகிய திவ்யதேசங்களில் காணப்படுகின்றன.

கருவறையில் மூலவர் அருள்மிகு வேங்கட கிருஷ்ணன், நின்ற திருக்கோலத்தில் இரண்டே திருக்கரங்களுடன் வலது கரத்தில் "பாஞ்ச சன்யம்"என்னும் சங்கை ஏந்தி இடதுகரம் வேங்கடவனைப் போன்று கீழ் முகமாக நோக்கி தான முத்திரையைக் காட்டுகிறது. மேலும் இடுப்பின் மேல்புறம் பேரொளி வீசும் வாள் ஒன்று தொங்குகிறது.

மகாபாரதத்தில் கண்ணபிரான் யுத்தத்தின் போது ஆயுதம் எடுப்பதில்லை என்று துரியோதனனிடம் சபதம் செய்தார். பிறகு வாள் ஏன் உள்ளது? என்ற கேள்வி எழக்கூடும்.இதற்கு வைணவப் பெரியவர்கள் பகவத்கீதையில் நான்காம் அத்தியாயம் 42வது சுலோகத்தில் உள்ளதைக் கொண்டு விளக்கம் அளிக்கின்றனர்.

அஞ்ஞானத்தின் பிடியில், அதாவது உலகப் பற்றில் அடைபட்டுக் கிடந்த பார்த்தனிடம் அஞ்ஞானத்திலிருந்து பிறந்ததும் உள்ளத்தில் உறைவதும் ஆகிய இந்த பற்றிலிருந்து விடுபட ஞானமென்னும் வாளால் வெட்டி, யோகத்தில் நிலைபெறுக! பார்த்தா எழுந்திரு! என்று கூறுகிறார். நம்மைப் போன்ற சாதாரண மக்களிடம் ஏற்படக்கூடிய அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுவதரற்க்காகவே பகவான் இத்தலத்தில் ஞானவாளுடன் சேவை சாதிப்பதாக வைணவப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

பெருமாளுக்கு வலதுபுறம் "ருக்மணி பிராட்டி" அழகிய திருமேனியோடு காட்சி தருகின்றார்.

பெருமாளுக்கு இடதுபுறம் தம்பி சாத்தகி கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகின்றார். சாத்தகி தனது வலது கரத்தில் கட்கம் என்ற குறுவாளை ஏந்தியும், இடது கரத்தில் வரத முத்திரையை காட்டியும் சேவை சாதிக்கிறான்.

சாத்தகி எவ்வாறு கண்ணனுக்கு தம்பி முறை ஆகவேண்டும் என்பதற்கு மகாபாரதத்தில் சில குறிப்புகள் உள்ளன. கண்ணனின் தாயார் தேவகியின் சுயம்வரத்தின் போது ஏராளமான அரசர்கள் வந்தனர். மதுராபுரியின் அரசகுமாரரான வசுதேவருக்காக அவரது சகோதரன் “சினி” என்பவன், சுயம்வரத்தில் கலந்து கொண்ட அணைத்து அசுரர்களையும் வென்று வசுதேவரை தேவகிக்கு மனம் முடித்து வைத்தான். இந்த சினியின் மகனே சத்யகன். சத்யகன் மகனே சாத்தகி. எனவே விருட்னி குலத்து வீரனான சாத்தகி கண்ணனுக்கு தம்பிமுறை ஆகிறான்.

ருக்மணி பிராட்டிக்கு வலதுபுறமாக கண்ணனின் தமையனான பலராமர் கலப்பையுடன் வடக்கு நோக்கியவாறு காட்சி தருகின்றார்.

சாத்தகிக்கு அடுத்ததாக மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோர் தெற்கு நோக்கியவாறு காட்சி தருகின்றனர்.

ஒருமுறை சிவபெருமான் மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் எரித்து விடுகிறார். இந்த மன்மதன் கண்ணனுக்கும், ருக்மணி பிராட்டிக்கும் மகனாகப் பிறக்கின்றான். பேரழகு வாய்ந்த பிரத்யும்னன், சம்பராசுரனின் அரண்மனையில் வசித்து வந்த ரதிதேவியின் அம்சமான மாயாவதி என்பவளைத் திருமணம் செய்கிறான். பிரத்யும்னன் மாயாவதி தம்பதியர்கட்கு பிறந்தவனே அநிருத்தன்.இவன் கண்ணனின் பேரன் ஆவான்.

இதுவரை நாம் திருவல்லிக்கேணி திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள ஐந்து மூர்த்திகளில் ஒருவரான அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி தோன்றிய வரலாற்றை மட்டுமே ஆரிந்துள்ளோம். முழு வரலாற்றையும் அறிந்துகோள்ள இன்று ஒரு நாள் போதுமா?

தொடரும்

தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம்

தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம்




ஶ்ரீ தேவீ ப்ரார்தன
ஹ்ரீம்காராஸனகர்பிதானலஶிகாம் ஸௌஃ க்லீம் களாம் பிப்ரதீம்
ஸௌவர்ணாம்பரதாரிணீம் வரஸுதாதௌதாம் த்ரினேத்ரோஜ்ஜ்வலாம் |
வம்தே புஸ்தகபாஶமம்குஶதராம் ஸ்ரக்பூஷிதாமுஜ்ஜ்வலாம்
த்வாம் கௌரீம் த்ரிபுராம் பராத்பரகளாம் ஶ்ரீசக்ரஸம்சாரிணீம் ||

அஸ்ய ஶ்ரீ ஶுத்தஶக்திமாலாமஹாமம்த்ரஸ்ய, உபஸ்தேம்த்ரியாதிஷ்டாயீ வருணாதித்ய றுஷயஃ தேவீ காயத்ரீ சம்தஃ ஸாத்விக ககாரபட்டாரகபீடஸ்தித காமேஶ்வராம்கனிலயா மஹாகாமேஶ்வரீ ஶ்ரீ லலிதா பட்டாரிகா தேவதா, ஐம் பீஜம் க்லீம் ஶக்திஃ, ஸௌஃ கீலகம் மம கட்கஸித்த்யர்தே ஸர்வாபீஷ்டஸித்த்யர்தே ஜபே வினியோகஃ, மூலமம்த்ரேண ஷடம்கன்யாஸம் குர்யாத் |

த்யானம்
ஆரக்தாபாம்த்ரிணேத்ராமருணிமவஸனாம் ரத்னதாடம்கரம்யாம்
ஹஸ்தாம்போஜைஸ்ஸபாஶாம்குஶமதனதனுஸ்ஸாயகைர்விஸ்புரம்தீம் |
ஆபீனோத்தும்கவக்ஷோருஹகலஶலுடத்தாரஹாரோஜ்ஜ்வலாம்கீம்
த்யாயேதம்போருஹஸ்தாமருணிமவஸனாமீஶ்வரீமீஶ்வராணாம் ||

லமித்யாதிபம்ச பூஜாம் குர்யாத், யதாஶக்தி மூலமம்த்ரம் ஜபேத் |

லம் – ப்றுதிவீதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை கம்தம் பரிகல்பயாமி – னமஃ
ஹம் – ஆகாஶதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை புஷ்பம் பரிகல்பயாமி – னமஃ
யம் – வாயுதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தூபம் பரிகல்பயாமி – னமஃ
ரம் – தேஜஸ்தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தீபம் பரிகல்பயாமி – னமஃ
வம் – அம்றுததத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை அம்றுதனைவேத்யம் பரிகல்பயாமி – னமஃ
ஸம் – ஸர்வதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தாம்பூலாதிஸர்வோபசாரான் பரிகல்பயாமி – னமஃ

ஶ்ரீ தேவீ ஸம்போதனம் (1)
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ ஓம் னமஸ்த்ரிபுரஸும்தரீ,

ன்யாஸாம்கதேவதாஃ (6)
ஹ்றுதயதேவீ, ஶிரோதேவீ, ஶிகாதேவீ, கவசதேவீ, னேத்ரதேவீ, அஸ்த்ரதேவீ,

திதினித்யாதேவதாஃ (16)
காமேஶ்வரீ, பகமாலினீ, னித்யக்லின்னே, பேரும்டே, வஹ்னிவாஸினீ, மஹாவஜ்ரேஶ்வரீ, ஶிவதூதீ, த்வரிதே, குலஸும்தரீ, னித்யே, னீலபதாகே, விஜயே, ஸர்வமம்களே, ஜ்வாலாமாலினீ, சித்ரே, மஹானித்யே,

திவ்யௌககுரவஃ (7)
பரமேஶ்வர, பரமேஶ்வரீ, மித்ரேஶமயீ, உட்டீஶமயீ, சர்யானாதமயீ, லோபாமுத்ரமயீ, அகஸ்த்யமயீ,

ஸித்தௌககுரவஃ (4)
காலதாபஶமயீ, தர்மாசார்யமயீ, முக்தகேஶீஶ்வரமயீ, தீபகலானாதமயீ,

மானவௌககுரவஃ (8)
விஷ்ணுதேவமயீ, ப்ரபாகரதேவமயீ, தேஜோதேவமயீ, மனோஜதேவமயி, கள்யாணதேவமயீ, வாஸுதேவமயீ, ரத்னதேவமயீ, ஶ்ரீராமானம்தமயீ,

ஶ்ரீசக்ர ப்ரதமாவரணதேவதாஃ அணிமாஸித்தே, லகிமாஸித்தே, கரிமாஸித்தே, மஹிமாஸித்தே, ஈஶித்வஸித்தே, வஶித்வஸித்தே, ப்ராகாம்யஸித்தே, புக்திஸித்தே, இச்சாஸித்தே, ப்ராப்திஸித்தே, ஸர்வகாமஸித்தே, ப்ராஹ்மீ, மாஹேஶ்வரீ, கௌமாரி, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேம்த்ரீ, சாமும்டே, மஹாலக்ஷ்மீ, ஸர்வஸம்க்ஷோபிணீ, ஸர்வவித்ராவிணீ, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வவஶம்கரீ, ஸர்வோன்மாதினீ, ஸர்வமஹாம்குஶே, ஸர்வகேசரீ, ஸர்வபீஜே, ஸர்வயோனே, ஸர்வத்ரிகம்டே, த்ரைலோக்யமோஹன சக்ரஸ்வாமினீ, ப்ரகடயோகினீ,

ஶ்ரீசக்ர த்விதீயாவரணதேவதாஃ காமாகர்ஷிணீ, புத்த்யாகர்ஷிணீ, அஹம்காராகர்ஷிணீ, ஶப்தாகர்ஷிணீ, ஸ்பர்ஶாகர்ஷிணீ, ரூபாகர்ஷிணீ, ரஸாகர்ஷிணீ, கம்தாகர்ஷிணீ, சித்தாகர்ஷிணீ, தைர்யாகர்ஷிணீ, ஸ்ம்றுத்யாகர்ஷிணீ, னாமாகர்ஷிணீ, பீஜாகர்ஷிணீ, ஆத்மாகர்ஷிணீ, அம்றுதாகர்ஷிணீ, ஶரீராகர்ஷிணீ, ஸர்வாஶாபரிபூரக சக்ரஸ்வாமினீ, குப்தயோகினீ,

ஶ்ரீசக்ர த்றுதீயாவரணதேவதாஃ அனம்ககுஸுமே, அனம்கமேகலே, அனம்கமதனே, அனம்கமதனாதுரே, அனம்கரேகே, அனம்கவேகினீ, அனம்காம்குஶே, அனம்கமாலினீ, ஸர்வஸம்க்ஷோபணசக்ரஸ்வாமினீ, குப்ததரயோகினீ,

ஶ்ரீசக்ர சதுர்தாவரணதேவதாஃ ஸர்வஸம்க்ஷோபிணீ, ஸர்வவித்ராவினீ, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வஹ்லாதினீ, ஸர்வஸம்மோஹினீ, ஸர்வஸ்தம்பினீ, ஸர்வஜ்றும்பிணீ, ஸர்வவஶம்கரீ, ஸர்வரம்ஜனீ, ஸர்வோன்மாதினீ, ஸர்வார்தஸாதிகே, ஸர்வஸம்பத்திபூரிணீ, ஸர்வமம்த்ரமயீ, ஸர்வத்வம்த்வக்ஷயம்கரீ, ஸர்வஸௌபாக்யதாயக சக்ரஸ்வாமினீ, ஸம்ப்ரதாயயோகினீ,

ஶ்ரீசக்ர பம்சமாவரணதேவதாஃ ஸர்வஸித்திப்ரதே, ஸர்வஸம்பத்ப்ரதே, ஸர்வப்ரியம்கரீ, ஸர்வமம்களகாரிணீ, ஸர்வகாமப்ரதே, ஸர்வதுஃகவிமோசனீ, ஸர்வம்றுத்யுப்ரஶமனி, ஸர்வவிக்னனிவாரிணீ, ஸர்வாம்கஸும்தரீ, ஸர்வஸௌபாக்யதாயினீ, ஸர்வார்தஸாதக சக்ரஸ்வாமினீ, குலோத்தீர்ணயோகினீ,

ஶ்ரீசக்ர ஷஷ்டாவரணதேவதாஃ ஸர்வஜ்ஞே, ஸர்வஶக்தே, ஸர்வைஶ்வர்யப்ரதாயினீ, ஸர்வஜ்ஞானமயீ, ஸர்வவ்யாதிவினாஶினீ, ஸர்வாதாரஸ்வரூபே, ஸர்வபாபஹரே, ஸர்வானம்தமயீ, ஸர்வரக்ஷாஸ்வரூபிணீ, ஸர்வேப்ஸிதபலப்ரதே, ஸர்வரக்ஷாகரசக்ரஸ்வாமினீ, னிகர்பயோகினீ,

ஶ்ரீசக்ர ஸப்தமாவரணதேவதாஃ வஶினீ, காமேஶ்வரீ, மோதினீ, விமலே, அருணே, ஜயினீ, ஸர்வேஶ்வரீ, கௌளினி, ஸர்வரோகஹரசக்ரஸ்வாமினீ, ரஹஸ்யயோகினீ,

ஶ்ரீசக்ர அஷ்டமாவரணதேவதாஃ பாணினீ, சாபினீ, பாஶினீ, அம்குஶினீ, மஹாகாமேஶ்வரீ, மஹாவஜ்ரேஶ்வரீ, மஹாபகமாலினீ, ஸர்வஸித்திப்ரதசக்ரஸ்வாமினீ, அதிரஹஸ்யயோகினீ,

ஶ்ரீசக்ர னவமாவரணதேவதாஃ ஶ்ரீ ஶ்ரீ மஹாபட்டாரிகே, ஸர்வானம்தமயசக்ரஸ்வாமினீ, பராபரரஹஸ்யயோகினீ,

னவசக்ரேஶ்வரீ னாமானி த்ரிபுரே, த்ரிபுரேஶீ, த்ரிபுரஸும்தரீ, த்ரிபுரவாஸினீ, த்ரிபுராஶ்ரீஃ, த்ரிபுரமாலினீ, த்ரிபுரஸித்தே, த்ரிபுராம்பா, மஹாத்ரிபுரஸும்தரீ,

ஶ்ரீதேவீ விஶேஷணானி – னமஸ்காரனவாக்ஷரீச மஹாமஹேஶ்வரீ, மஹாமஹாராஜ்ஞீ, மஹாமஹாஶக்தே, மஹாமஹாகுப்தே, மஹாமஹாஜ்ஞப்தே, மஹாமஹானம்தே, மஹாமஹாஸ்கம்தே, மஹாமஹாஶயே, மஹாமஹா ஶ்ரீசக்ரனகரஸாம்ராஜ்ஞீ, னமஸ்தே னமஸ்தே னமஸ்தே னமஃ |

பலஶ்ருதிஃ
ஏஷா வித்யா மஹாஸித்திதாயினீ ஸ்ம்றுதிமாத்ரதஃ |
அக்னிவாதமஹாக்ஷோபே ராஜாராஷ்ட்ரஸ்யவிப்லவே ||

லும்டனே தஸ்கரபயே ஸம்க்ராமே ஸலிலப்லவே |
ஸமுத்ரயானவிக்ஷோபே பூதப்ரேதாதிகே பயே ||

அபஸ்மாரஜ்வரவ்யாதிம்றுத்யுக்ஷாமாதிஜேபயே |
ஶாகினீ பூதனாயக்ஷரக்ஷஃகூஷ்மாம்டஜே பயே ||

மித்ரபேதே க்ரஹபயே வ்யஸனேஷ்வாபிசாரிகே |
அன்யேஷ்வபி ச தோஷேஷு மாலாமம்த்ரம் ஸ்மரேன்னரஃ ||

தாத்றுஶம் கட்கமாப்னோதி யேன ஹஸ்தஸ்திதேனவை |
அஷ்டாதஶமஹாத்வீபஸம்ராட்போக்தாபவிஷ்யதி ||

ஸர்வோபத்ரவனிர்முக்தஸ்ஸாக்ஷாச்சிவமயோபவேத் |
ஆபத்காலே னித்யபூஜாம் விஸ்தாராத்கர்துமாரபேத் ||

ஏகவாரம் ஜபத்யானம் ஸர்வபூஜாபலம் லபேத் |
னவாவரணதேவீனாம் லலிதாயா மஹௌஜனஃ ||

ஏகத்ர கணனாரூபோ வேதவேதாம்ககோசரஃ |
ஸர்வாகமரஹஸ்யார்தஃ ஸ்மரணாத்பாபனாஶினீ ||

லலிதாயாமஹேஶான்யா மாலா வித்யா மஹீயஸீ |
னரவஶ்யம் னரேம்த்ராணாம் வஶ்யம் னாரீவஶம்கரம் ||

அணிமாதிகுணைஶ்வர்யம் ரம்ஜனம் பாபபம்ஜனம் |
தத்ததாவரணஸ்தாயி தேவதாப்றும்தமம்த்ரகம் ||

மாலாமம்த்ரம் பரம் குஹ்யம் பரம் தாம ப்ரகீர்திதம் |
ஶக்திமாலா பம்சதாஸ்யாச்சிவமாலா ச தாத்றுஶீ ||

தஸ்மாத்கோப்யதராத்கோப்யம் ரஹஸ்யம் புக்திமுக்திதம் ||

|| இதி ஶ்ரீ வாமகேஶ்வரதம்த்ரே உமாமஹேஶ்வரஸம்வாதே
   தேவீகட்கமாலாஸ்தோத்ரரத்னம் ஸமாப்தம் ||

சிவ பஞ்சாக்ஷரி ஸ்தோத்ரம்

சிவ பஞ்சாக்ஷரி ஸ்தோத்ரம்




ரசன: ஆதி ஶம்கராசார்ய

ஓம் னமஃ ஶிவாய ஶிவாய னமஃ ஓம்
ஓம் னமஃ ஶிவாய ஶிவாய னமஃ ஓம்

னாகேன்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேஶ்வராய |
னித்யாய ஶுத்தாய திகம்பராய
தஸ்மை “ன” காராய னமஃ ஶிவாய || 1 ||

மன்தாகினீ ஸலில சன்தன சர்சிதாய
னன்தீஶ்வர ப்ரமதனாத மஹேஶ்வராய |
மன்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை “ம” காராய னமஃ ஶிவாய || 2 ||

ஶிவாய கௌரீ வதனாப்ஜ ப்றுன்த
ஸூர்யாய தக்ஷாத்வர னாஶகாய |
ஶ்ரீ னீலகண்டாய வ்றுஷபத்வஜாய
தஸ்மை “ஶி” காராய னமஃ ஶிவாய || 3 ||

வஶிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீன்த்ர தேவார்சித ஶேகராய |
சன்த்ரார்க வைஶ்வானர லோசனாய
தஸ்மை “வ” காராய னமஃ ஶிவாய || 4 ||

யஜ்ஞ ஸ்வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய ஸனாதனாய |
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை “ய” காராய னமஃ ஶிவாய || 5 ||

பஞ்சாக்ஷரமிதம் புண்யம் யஃ படேச்சிவ ஸன்னிதௌ |
ஶிவலோகமவாப்னோதி ஶிவேன ஸஹ மோததே ||