வியாழன், 5 ஆகஸ்ட், 2021

அக்னி

அக்னி

காற்றின் வகையாக தசவாயுக்களும் அவற்றின் 7 பிரிவுகளும் எப்படி நம்மையும் இந்த பிரபஞ்சத்தையும் வழி நடத்துகின்றதோ ! அதே போல அக்னியும் பலவகையாக நம்மையும் நம் செயல்களையும் வழி நடத்தி சாட்சியாய் ஆதராமாய் உள்ளது.

கிட்டதட்ட 27 வகையான அக்னி உண்டு 27 நட்சத்திர கணக்காட்டம்.

கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்‌ஷிணம், நிர்மந்த்யம், வைத்யுதம், சூரம், ஸ்ம்வர்த்தம், லவுகீகம், ஜடாரம், விஷகம், க்ரவ்யாத், க்‌ஷேமவான், வைஷ்ணவம், தஸ்யுமான், பலதம், சாந்தம், புஷ்டம், விபாவஸு, ஜ்யோதிஸ்மான், பரதம், பத்ரம், ஸ்விஷ்டக்ருத், வஸுமான், க்ருது, ஸோமம், பித்ருமான், அங்கிரஸ் என்பன...

இதில் ஒன்னு ரெண்டுதான் நமக்கு தெரியும்.

உதாரணமா முதல் மூனு அக்னியையும் நித்யம் அக்னி ஹோத்திரம் பண்ணறவங்க ஆராதிப்பாங்க.💥

ஆக்சுவலா யாகம் பண்ணும்போது யூப கம்பம் நடுவாங்க. அது சரியா 21 முழம் இருக்குமாறு வெப்பாங்க... அது கணக்கு என்னான்னா... முதல்  மூனு அக்னிக்கும் ரிஷிகள் 7பேருக்கும் கணக்கு பண்ணி 21 முழம் இருக்கறதா சொல்லுவாங்க..

பசுவின் முகத்தில் இந்த 3 அக்னி இருக்கறதா கணக்கு. விபாவஸு அக்னி அஸ்ட வசுக்களில் ஒருவரா இருக்கார்.⚡️⚡️⚡️

ஔபாசன கர்மாவை பண்ணும் போது க்ருதுவை ஆராதிப்பங்கன்னு நினைக்கேன்... (சரியா தெரியல... தெரிஞ்சவங்க சொல்லலாம்).

எது எப்படியோ நமக்கு முக்கியமான அக்னி ஜடாரம்தான்🔥🔥🔥 ஏன்னா அதுதான் நாம சாப்பிடும் ஆகாரத்தை எல்லாம் ஜீரணம் செய்யுது . அது மட்டும் வேலை செய்யல... நோ அவுட்கோயிங் ... நமக்கெல்லாம் குதிரை வால் மயிர் நுனியின் ஆயிரத்தில் ஒரு பங்குதான் அந்த ஜடார அக்னி இருக்காம். அதுக்கே இப்ப்டி சாப்புடறோம்...

பீமசேனருக்கும் அவரின் அம்சமான மத்வருக்கும் இந்த ஜடாரம் கட்டை விரல் அளவுக்கு இருந்ததா சொல்லுவாங்க. அதனால்தான் எம்புட்டு போட்டாலும் அவிகளுக்கு பத்தாம போகுது. எல்லாத்தையும் முழுங்கிடுவாங்க. அதனாலே பீமருக்கு விருகோதரன்ன்னு பேர்.

அதான் பெரும்பாலும்  அந்தகால பெண்கள் காலம்ப்றம் அடுப்பை பத்த வெச்சி அட்சதையை போட்டு நமஸ்காரம் பண்ணிதான் அன்றைய சமையல்  தொடங்கினாங்க...

ஆனா இன்னைக்கு ... நோ கமெண்ட்ஸ்🙅🤦‍♂️🤫



ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

உபநயனம்

உபநயனம்....

உத்திராயனத்தில் செய்வது சிறந்ததாக இருக்கும்.... தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயனம். யஜுர் வேதிகள் சுக்ராஸ்தமனம் இல்லாத காலத்திலும், ருக் வேதிகள் குரு அஸ்தமனம் இல்லாத காலத்திலும், ஸாம வேதிகள் செவ்வாய் அஸ்தமனம் இல்லாத காலத்திலும், சுக்கிரன், குரு, செவ்வாய் நீச மில்லா காலங்களிலும்
செய்ய வேண்டும்.

வேதம் பயிலக்கூடாத நாட்களிலும் உபநயனம் செய்ய க்கூடாது.
உபநயன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் எந்த கிரஹமும் இருக்க கூடாது. பையனுக்கு சந்திராஷ்டம தினத்திலும் செய்ய கூடாது.
பையனின் சஷ்டாஷ்டக ராசியிலும் லக்னமாக வைக்க வேண்டாம்.
சுக்ல பக்ஷம் சிறந்தது. ஜன்ம சந்திர லக்னங்கள் இல்லாத நாட்களில் செய்ய வேண்டும். தாரா பலம் சந்திர பலம் நன்றாக உள்ள நாட்களில் செய்ய வேண்டும். கசரம் சுத்த மாக இருக்க வேண்டும். பஞ்சகம் சுத்தமாக இருக்க வேண்டும். கரி நாள், தனிய நாட்களில் செய்ய கூடாது. மரண யோகம், உத்பாத யோக நாட்களில் செய்யக்கூடாது.
ஆடி, ஆவணி, புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் செய்யக்கூடாது. அமாவாசை, பெளர்ணமி, பிரதமை. ரிக்தை ஸப்தமி அஷ்டமி, நவமி த்ரயோதசி, சதுர்தசி ஆகிய திதிகளில் உபநயனம் செய்யக்கூடாது.

பையன் ஜன்ம நக்ஷத்திலிருந்து எண்ணி 2,4,6,8,9 வர வேண்டும்.
1,3,5,7 நக்ஷத்திரங்களில் செய்ய க்கூடாது. அந்தந்த தமிழ் மாத விஷ சூன்ய திதி, நட்சத்திரம் லக்னம் வேண்டாம். திதிகளின் விஷ சூன்ய ராசிகளும் வேண்டாம். வருஷம், ருது மாதம், திதி, நக்ஷதிரம் முடிவில் செய்யக்கூடாது. ஒரே நாளில் இரண்டு, நக்ஷத்திரமோ திதியோ உள்ள நாட்களும் வேண்டாம். திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் சிறந்தது.
உபநயனம் செய்ய போகும் தமிழ் மாதத்தில் இரண்டு பெளர்ணமியோ அல்லது இரண்டு அமாவாசையோ அல்லது மாத பிறப்பு இரண்டோ அல்லது மாத பிறப்பு இல்லாமலோ இருக்க கூடாது. திதி, நக்ஷத்திர, லக்ன தியாஜ்யம் இல்லாத லக்னத்தில். உபநயனம் செய்ய வேண்டும்.

பையனின் தாயார் ஆறு மாததிற்கு மேல் கர்பமாக இருந்தால் அந்த பையனுக்கு அப்போது உபநயனம் செய்ய கூடாது. பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் உபநயனம் செய்வதற்கு சிலாக்கியமில்லை.
ஸந்தியா காலங்கள், ராத்திரி, அபராஹ்னம் மலமாசம் சிலாக்கியமில்லை.

ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் சுபம்.

ராகு காலம், யம கண்டம், இல்லமல் இருக்க வேண்டும். சுப ஹோரையில் அமைய வேண்டும். அக்னி நக்ஷத்திர காலமும் சிலாக்கியமில்லை.