சனி, 24 ஆகஸ்ட், 2019

உலகம் போற்றும் அருளாளர்களில் "ஆதிசங்கரர்" முதன்மையானவர்.

கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய
"பிரஸ்னோத்தர
ரத்ன மாலிகா"
என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில... :

கேள்வி (1)
எது இதமானது ?

பதில் (*)
தர்மம்.

(2)  நஞ்சு எது ?

(*)  பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

(3)  மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?

(*)  பற்றுதல்.

(4)  கள்வர்கள் யார் ?

(*)  புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

(5)  எதிரி யார் ?

(*)  சோம்பல்.

(6)  எல்லோரும் பயப்படுவது எதற்கு ?

(*)  இறப்புக்கு.

(7)  குருடனை விட குருடன் யார் ?

(*)  ஆசைகள்
உள்ளவன்.

(8)  சூரன் யார் ?

(*)  கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

(9)  மதிப்புக்கு மூலம் எது ?

(*)  எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

(10)  எது துக்கம் ?

(*)  மன நிறைவு இல்லாமல் இருப்பது.

(11)  உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?

(*)  குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

(12)  தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?

(*)  இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.

(13)  சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?

(*)  நல்லவர்கள்.

(14)  எது சுகமானது ?

(*)  அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

(15)  எது இன்பம் தரும் ?

(*)  நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

(16)  எது மரணத்துக்கு இணையானது ?

(*)  அசட்டுத்தனம்.

(17)  விலை மதிப்பற்றதென எதைக்
குறிப்பிடலாம் ?

(*)  காலமறிந்து செய்யும் உதவி.

(18)  இறக்கும் வரை உறுத்துவது எது ?

(*)  ரகசியமாகச் செய்த பாவம்.

(19)  எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?

(*)  துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !

(20)  சாது என்பவர் யார் ?

(*)  ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

(21)  உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?

(*)  சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

(22)  யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?

(*)  எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

(23)  செவிடன் யார் ?

(*)  நல்லதைக்
கேட்காதவன்.

(24)  ஊமை யார் ?

(*)  சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

(25)  நண்பன் யார் ?

(*)  பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

(26)  யாரை விபத்துகள் அணுகாது ?

(*)  மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.
-----------------------------------------

கருத்துகள் இல்லை: