ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

சதுர்மாஸ்ய விரதம்

சதுர்மாஸ்ய விரதம்


இருக்கும்போது சந்யாசிகளை தரிசனம் செய்தால் கிடைக்கும் புண்ணியத்தை விளக்கமுடியுமா?

மற்றுமொரு நல்ல விஷயத்தை நினைக்க, எழுத பகிர்ந்து கொள்ள என்னை எழுத தூண்டியவர்களுக்கு மிக்க நன்றி.

------------------
சாதுர்மாஸ்யம் குருமார்களை ஆராதிக்க உகந்த காலம். நாரதர், சாதுர்மாஸ்ய காலத்தில் விரதமிருந்த சந்யாஸிகளுக்கு ஸேவை செய்த காரணத்தாலேயே ஞானம் உண்டாகி தேவரிஷியாகும் வாய்ப்பு கிட்டியதாக கூறுகிறார்.

சதுர் என்றால் நான்கு - சாதுர்மாஸ்யம் என்பது நான்கு மாதங்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஒரு விரதம். இது எல்லா ஆஸ்ரமத்தில் இருப்பவர்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் தான். ஆனால் சந்யாஸிகளுக்கு இது கூடுதல் விசேஷம்.

பொதுவில் சந்யாஸிகள் ஒரே இடத்தில் ரொம்ப நாளைக்கு தங்குதல் கூடாது என்கிறது சாஸ்திரம். (அந்த ஊரின் மீதோ மக்களின் மீதோ கூட அவருக்கு பற்றுதல் உண்டாகி விடக்கூடாது என்ற நோக்கில்). இதனால் இவர்களுக்கு பரிவ்ராஜகர்கள் என்று பெயர்.

ஆனால் இப்படி தொடர்து சஞ்சரித்துக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு ஆத்ம விசாரம் செய்யும் நேரம் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்காக விசேஷமாக சொல்லப்படும் காலமே சாதுர்மாஸ்யம். ஆனி மாதத்து பௌர்ணமி முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு சந்யாஸி எங்கும் பயணப்படாமல் ஒரே இடத்தில் தங்கி இருக்க சாஸ்த்ரங்கள் வழிகாட்டுகின்றன. இது மழைக்காலமாகவும் இருப்பதைக் காணலாம்.

மழைக்காலங்களில் பூச்சி, பொட்டுக்கள் வெளியே வரும் வாய்ப்பும் அதிகம். ஒரு சந்யாஸி ப்ரயாணம் மேற்கொள்வதால் அறிந்தோ அறியாமலோ கூட இந்த புழு பூச்சிகளுக்கு துன்பம் உண்டாகலாம் என்ற காரணத்தாலும் இவர்கள் ஒரே இடத்தில் தங்குவது அவசியமாகிறது.

(சக்கரத்தில் சிக்கி பூச்சிகள் சாகுமே என்ற காரணத்தால் சக்க்ரம் வைத்த வண்டியில் கூட ஏறாமல் வாழ்நாள் முழுதும் நடந்தே பயணித்தவர் மஹாபெரியவர்.)

இப்படி பிற உயிர்களுக்கென வாழும் சந்யாஸிகள் ஒரே இடத்தில் தங்கி இருக்கும் காரணத்தால், அவருக்கு சிஷ்யர்கள் ஸேவை செய்யும் காலமே சாதுர்மாஸ்யம்.

(சாதுர்மாஸ்ய காலத்தில் சந்யாஸிகள் மட்டுமே விரதம் அனுஷ்டிப்பது என்ற முறை நம் தமிழகப்பகுதிகளில் தான் பரவலாகக் காணப்படுகிறது. ஆந்திர கர்நாடகப் பகுதிகளில் க்ருஹஸ்தர்களும் உணவுக் கட்டுப்பாடு முதல பலவகைகளிலும் விரதம் காப்பது வழக்கம்)

இன்று சாதுர்மாஸ்யம் என்று வழக்கத்தில் இருந்தாலும் (சதுர் பக்ஷம் எனும்படி 2 மாதங்களே வழக்கத்தில் இருக்கின்றன)

சந்யாஸிகளின் சாதுர்மாஸ்யம் வ்யாஸ பூஜையுடனே துவங்குகிறது. நாம் நம் குருமார்களை வணங்க வேண்டிய காலத்தில் குருமார்கள் அவர்களது குருவான வ்யாஸரை வணங்குகிறார்கள்.

இந்த சாதுர்மாஸ்யமே ஒரு சந்யாஸியின் வயது. அதாவது, ஒரு சந்யாஸியின் வயது அவரது உடலுக்கான வயது அல்ல! அவர் எவ்வளது சாதுர்மாஸ்யம் கடைபிடித்திருக்கிறாரோ அதுவே அவர் வயது. 80 வயது ஆகி இருந்தாலும் தன்னைவிட அதிக சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்த பால சந்யாஸியைக் கண்டால் வணங்கத்தான் வேண்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சாதுர்மாஸ்ய காலமே குருவழிபாட்டுக்கு உகந்த காலம்.

நாம் வணங்கும் இஷ்ட தெய்வமே குருவாக மனித உருவில் வந்திருக்கிறது என்ற உண்மையை முதலில் உணர வேண்டும். குருவுக்கும் நம் இஷ்ட தெய்வத்துக்கும் பேதமில்லை என்பதை முதலில் உணரவேண்டும். இதை உணராமல் குருவை சாதாரண மனிதனாக எண்ணுபவன் எத்தனை பிறவி எடுத்தாலும் அவனுக்கு கதி கிடைக்காது.

அப்படிப்பட்ட குருவுக்கு நாம் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

இந்த சாதுர்மாஸ்ய காலத்தில், அந்த நன்றிக்கடனின் வெளிப்பாடாக தான் பெற்ற நல்வாழ்வுக்காகவும், பெற்ற ஞானத்துக்காகவும், குருவை வணங்க வேண்டும்.

சாதுர்மாஸ்ய காலத்தில் தங்கள் குருவையும், குல ஆசார்யர்களையும் வணங்குவதால் எண்ணில்லா நன்மைகள் விளைகின்றன.

வ்யாஸ பூர்ணிமா, குரு பூர்ணிமா என்றெல்லாம் அழைக்கப்படும் நாளில் அவரவர் குருநாதர்களை குருதக்ஷிணையுடன் சென்று கண்டு வணங்கி ஆசி பெறுதல் வேண்டும்.

குருவில் கருணா கடாக்ஷம் படுவதால் அந்த ஒரு வருஷத்தில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் கரைவதோடு, வாழ்வில் முன்னேற்றம் அடைய ச்ரேயஸ் உண்டாகிறது, தர்மத்தில் கூடுதல் லயிப்பு உண்டாகிறது. (லௌகீக வாழ்வுக்கான முன்னேற்றம் - தனியே சொல்லப்படா விட்டாலும் குருவின் க்ருபையால் உண்டாகிறது).

ஆக சாதுர்மாஸ்யம் அனுஷ்டிப்பவரைக் கண்டாலே ப்ரம்மஹத்தி முதலான பாபங்கள் நீங்கி விடுவதாக பாரஹஸ்பத்ய ஸ்ம்ருதி கூறுகிறது.

சாதுர்மாஸ்ய காலத்தில் ஸந்யாஸிகளை வணங்குவதாலும் சேவை செய்வதாலும் ப்ரம்மஞானம் உண்டாகிறது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

 மொத்தத்தில் இஹவாழ்வுக்கும் பரவாழ்வுக்கும் தேவையான அனுக்ரஹம் கிட்டுகிறது.

ஸர்வம் ஸ்ரீ குரு பாதார்ப்பணமஸ்து

மஹா பெரியவா அஷ்டோத்திர சத நாமாவளி

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீஷ்வர ஜகத்குரு ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர மஹாஸ்வாமி ஸ்ரீசரணாரவிந்த
அஷ்டோத்திர சத நாமாவளி:-



(ஸ்ரீமட பாடம்)
1.           ஓம் ஸ்ரீ சந்த்ரஸேகரேந்த்ர-அஸ்மதாசார்யாய நமோ நம:

2.           ஸ்ரீ சந்த்ரமௌளி-பாதாப்ஜ-மதுபாய நமோ நம:

3.           ஸ்ரீ ஆசார்யபாததிஷ்டானாபிஷிக்தாய நமோ நம:

4.           ஸர்வக்ஞாசார்ய-பகவத்ஸ்வரூபாய நமோ நம:

5.           அஷ்டாங்கயோகனிஷ்டா-கரிஷ்டாய நமோ நம:

6.           ஸனகாதி-மஹாயோகி-ஸத்ருசாய நமோ நம:

7.           மஹாதேவேந்த்ர-ஹஸ்தாப்ஜ-ஸஞ்ஜாதாய நமோ நம:

8.           மஹாயோகி-விநிர்பேத்ய-மஹத்த்வாய நமோ நம:

9.           காமகோடி மஹாபீடாதீஸ்வராய நமோ நம:

10.         கலிதோஷ-நிவ்ருத்த்யேக-காரணாய நமோ நம:

11.         ஸ்ரீ சங்கரபதாம்போஜ-சிந்தனாய நமோ நம:

12.         பாரதீக்ருத ஜிஹ்வாக்ர-நர்தனாய நமோ நம:

13.         கருணாரஸகல்லோல-கடாக்ஷாய நமோ நம:

14.         காந்தி நிர்ஜித-ஸூர்யேந்து-கம்ராபாய நமோ நம:

15.         அமந்தா நந்தக்ருன்-மந்தகமனாய நமோ நம:

16.         அத்வைதானந்தபரித-சித்ரூபாய நமோ நம:

17.         கடீதட-லஸச்சாரு-காஷாயாய நமோ நம:

18.         கடாக்ஷமாத்ர-மோக்ஷேச்சா-ஜனகாய நமோ நம:

19.         பாஹு-தண்ட-லஸத்வேணு-தண்டகாயநமோ நம:

20.         பாலபாக-லஸத்பூதி-புண்ட்ரகாய நமோ நம:

21.         தரஹாஸ-ஸ்புரத்திவ்ய-முகாப்ஜாய நமோ நம:

22.         ஸூதாமதுரிமா-மஞ்ஜு-பாஷணாய நமோ நம:

23.         தபனீய-திரஸ்காரி-ஸரீராய நமோ நம:

24.         தப: ப்ரபா-ஸதாராஜத்-ஸுநேத்ராய நமோ நம:

25.        ஸங்கீதானந்த-ஸந்தோஹ-ஸர்வஸ்வாய நமோ நம:

26.        ஸம்ஸாராம்புதி-நிர்மக்ன-தாரகாய நமோ நம:

27.        மஸ்தகோல்லாஸி-ருத்ராக்ஷ-மகுடாய நமோ நம:

28.       ஸாக்ஷாத்-பரஸிவாமோக-தர்ஸனாயநமோ நம:

29.        சக்ஷுர்கத-மஹாதேஜோ-அத்யுஜ்ஜ்வலாய நமோ நம:

30.        ஸாக்ஷாத்க்ருத-ஜகன்மாத்ரு-ஸ்வரூபாய நமோ நம:

31.        க்வசித்-பாலஜனாத்யந்த-ஸுலபாய நமோ நம:

32.        க்வசின்-மஹாஜனாதீவ-துஷ்ப்ராபாய நமோ நம:

33.        கோப்ராஹ்மண-ஹிதாஸக்த-மானஸாயநமோ நம:

34.        குருமண்டல-ஸம்பாவ்ய-விதேஹாயநமோ நம:

35.        பாவனாமாத்ர-ஸந்துஷ்ட-ஹ்ருதயாய நமோ நம:

36.        பாவ்யாத்யபாவ்ய-திவ்யஸ்ரீ-பதாப்ஜாய நமோ நம:

37.        வ்யக்தாவ்யக்ததராநேக-சித்கலாய நமோ நம:

38.        ரக்தஸுக்ல-ப்ரபாமிஸ்ர-பாதுகாய நமோ நம:

39.        பக்தமானஸ-ராஜீவ-பவனாய நமோ நம:

40.        பக்தலோசன-ராஜீவ-பாஸ்கராய நமோ நம:

41.        பக்த-காமலதா-கல்ப-பாதபாய நமோ நம:

42.        புக்திமுக்தி ப்ரதாநேக-சக்திதாய நமோ நம:

43.        சரணாகத-தீனார்த்த-ரக்ஷகாய நமோ நம:

44.        ஸமாதி-ஷட்க-சம்பத்-ப்ரதாயகாய நமோ நம:

45.        ஸர்வதா ஸர்வதா லோக-சௌக்யதாய நமோ நம:

46.        ஸதா நவநவாகங்க்ஷய-தர்ஸனாய நமோ நம:

47.        ஸர்வ-ஹ்ருத்பத்ம-ஸஞ்சார-நிபுணாய நமோ நம:

48.        ஸர்வேங்கித-பர்ஜ்ஞான-ஸமர்த்தாய நமோ நம:

49.        ஸ்வப்னதர்ஸனபக்தேஷ்ட-ஸித்திதாய நமோ நம:

50.        ஸர்வவஸ்து-விபாவ்யாத்ம-ஸத்ரூபாய நமோ நம:

51.        தீன-பக்தாவனைகாந்த-தீக்ஷிதாய நமோ நம:

52.        ஜ்ஞானயோக-பலைஸ்வர்ய-மானிதாயநமோ நம:

53.        பாவ-மாதுர்ய-கலிதாபயதாய நமோ நம:

54.        ஸர்வபூதகணாமேய-ஸௌஹார்தாய நமோ நம:

55.        மூகீபூதாநேகலோக-வாக்ப்ரதாய நமோ நம:

56.        ஸீதளீக்ருத-ஹ்ருத்தாப-ஸேவகாய நமோ நம:

57.       போகமோக்ஷ-ப்ரதாநேக-யோகஜ்ஞாயநமோ நம:

58.       ஸீக்ரஸித்திகராநேக-ஸிக்ஷணாய நமோ நம:

59.       அமானித்வாதி-முக்யார்த்த-ஸித்திதாய நமோ நம:

60.       அகண்டைக-ரஸானந்த-ப்ரபோதாய நமோ நம:

61.       நித்யாநித்ய-விவேக-ப்ரதாயகாய நமோ நம:

62.       ப்ரத்யகேகரஸாகண்ட-சித்ஸுகாய நமோ நம:

63.       இஹாமுத்ரார்த்த-வைராக்ய-ஸித்திதாய நமோ நம:

64.       மஹாமோஹ-நிவ்ருத்த்யர்த்த-மந்த்ரதாய நமோ நம:

65.       க்ஷேத்ரக்ஷேத்ரஜ் ஞ-ப்ரத்யேக-த்ருஷ்டிதாய நமோ நம:

66.       க்ஷயவ்ருத்தி-விஹீனாத்மஸௌக்யதாய நமோ நம:

67.       தூலாஜ்ஞான-விஹீனாத்மத்ருப்திதாய நமோ நம:

68.       மூலாஜ்ஞான-பாதிதாத்மமுக்திதாய நமோ நம:

69.       ப்ராந்திமேகோச்சாடன-ப்ரபஞ்ஜனாய நமோ நம:

70.       ஸாந்தி-வ்ருஷ்டிப்ரதாமோக-ஜலதாய நமோ நம:

71.       ஏககால-க்ருதாநேக-தர்ஸனாய நமோ நம:

72.       ஏகாந்தபக்தஸம்வேத்ய-ஸ்வகதாய நமோ நம:

73.       ஸ்ரீ சக்ரரத-நிர்மாண-ஸுப்ரதாய நமோ நம:

74.       ஸ்ரீ கல்யாணதராமேய-ஸுஸ்லோகாய நமோ நம:

75.       ஆஸ்ரிதாஸ்ரயணீயத்வ-ப்ராபகாய நமோ நம:

76.       அகிலாண்டேஸ்வரீ-கர்ண-பூஷகாய நமோ நம:

77.       ஸசிஷ்யகண-யாத்ரா-விதாயகாய நமோ நம:

78.       ஸாதுஸங்கநுதாமேய-சரணாய நமோ நம:

79.       அபின்னாத்மைக்யவிஜ்ஞான-ப்ரபோதாய நமோ நம:

80.       பின்ன-பின்ன-மதைஸ்சாபிபூஜிதாய நமோ நம:

81.       தத்தத்விபாக-ஸத்போத-தாயகாய நமோ நம:

82.       தத்தத்பாஷா-ப்ரகடித-ஸ்வகீதாய நமோ நம:

83.       தத்ர தத்ர க்ருதாநேக-ஸத்கார்யாய நமோ நம:

84.       சித்ரசித்ர-ப்ரபாவ-ப்ரஸித்திகாய நமோ நம:

85.       லோகானுக்ரஹக்ருத்கர்ம-நிஷ்டிதாய நமோ நம:

86.       லோகோத்த்ருதி-மஹத்பூரி-நியமாய நமோ நம:

87.       ஸர்வவேதாந்த-ஸித்தாந்த-ஸம்மதாய நமோ நம:

88.       கர்மப்ரஹ்மாத்மகரண-மர்மஜ்ஞாய நமோ நம:

89.       வர்ணாஸ்ரம-ஸதாசார-ரக்ஷகாய நமோ நம:

90.       தர்மார்த்தகாமமோக்ஷ-ப்ரதாயகாய நமோ நம:

91.       பத-வாக்ய-ப்ரமாணாதி-பாரீணாய நமோ நம:

92.       பாதமூல-நதாநேகபண்டிதாய நமோ நம:

93.       வேதசாஸ்த்ரார்த்த-ஸத்கோஷ்டீ-விலாஸாய நமோ நம:

94.       வேதசாஸ்த்ரபுராணாதி-விசாராய நமோ நம:

95.       வேதவேதாங்கதத்வ-ப்ரபோதகாய நமோ நம:

96.       வேதமார்கப்ரமாண-ப்ரக்யாபகாய நமோ நம:

97.       நிர்ணித்ரதேஜோவிஜித-நித்ராட்யாய நமோ நம:

98.       நிரந்தர-மஹானந்த-ஸம்பூர்ணாய நமோ நம:

99.       ஸ்வபாவ-மதுரோதார-காம்பீர்யாய நமோ நம:

100.     ஸஹஜானந்த-ஸம்பூர்ண-ஸாகராய நமோ நம:

101.     நாதபிந்துகலாதீத-வைபவாய நமோ நம:

102.     வாதபேதவிஹீனாத்ம-போததாய நமோ நம:

103.     த்வாதஸாந்த-மஹாபீட-நிஷண்ணாயநமோ நம:

104.     தேஸகாலாபரிச்சின்ன-த்ருக்ரூபாய நமோ நம:

105.     நிர்மானசாந்திமஹித-நிஸ்சலாய நமோ நம:

106.     நிர்லக்ஷய-லக்ஷய-ஸம்லக்ஷய-நிர்லேபாய நமோ நம:

107.     ஸ்ரீஷோடஸாந்த-கமல-ஸுஸ்திதாயநமோ நம:

108.     ஸ்ரீ சந்த்ரஸேகர-ஸ்ரீஸரஸ்வத்யை நமோ நம:

இத்யேதத் குருதேவஸ்ய நாம்னாம் அஷ்டோத்தரம் ஸதம்
படனாத் பூஜனாத் தத்க்ஞானாத் பக்தானாம் இஷ்ட ஸித்திதம்.
ஸர்வம் ஸ்ரீ குரு தேவார்ப்பண மஸ்து.

"ஸ்வஸ்தி வாசனம்"

 "ஸ்வஸ்தி வாசனம்"



|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார- த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித- ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத- ஸ்ரீமதேகாம்ரநாத- ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத- ஸாக்ஷாத்கார- பரமாதிஷ்ட்டான- ஸத்யவ்ரத நாமாங்கித- காஞ்சீ திவ்யக்ஷேத்ரே- சாரதாமட ஸுஸ்த்திதாநாம்- அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ- ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த- துந்துலித- மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத- சாந்தி தாந்தி பூம்நாம்- ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக- ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம்- நிகில பாஷண்ட ஷண்ட- கண்டகோத்காடநேந- விசதீக்ருத வேத வேதாந்த மார்க- ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய- ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே- ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம்- அந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம்- ததந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

நம் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை இந்த ஸ்வஸ்தி வாசன ஸ்லோகம் பாராயணம் செய்து வணங்குதல் என்பது நம் பாரம்பரியம் என்கின்றனர் நம் பெரியோர்கள்.  வாழ்வில் ஒருமுறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.

14: ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 {கி. பி. 272 - கி. பி. 317 வரை}

 நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

14: ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 {கி. பி.  272 - கி. பி. 317 வரை}

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 ஆந்திர தேசத்தவர். 'பாபண்ண ஸோமயாஜி' என்பவரின் புதல்வர். இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம் 'நாயனா'. இவர் மந்திர சாஸ்திரத்தில் வல்லமையுடையவர். ஒரு முறை மலைய மலைப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் இவர் தங்கியிருந்த சமயம் அங்குள்ள மக்கள் அவரை வணங்கி 'பைரவ மூர்த்தி அப்பகுதியிலுள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருப்பதாகவும் அதன் உக்கிரத்தைத் தணிக்க வேண்டும் என்றும் வேண்டினார்களாம். இவரும் மந்திரப் பிரயோகம் செய்து பைரவரை சாந்தப்படுத்தி மக்களின் பீதியைப் போக்கினார். இவர் கி. பி. 317ஆம் ஆண்டு, தாது வருடம், மார்கழி மாதம் அமாவாசையன்று மலைய மலைத்தொடரில் உள்ள அகஸ்திய கிரியில் சித்தியடைந்தார்.