வியாழன், 23 ஜனவரி, 2014

இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......வெந்நீர் வேணாம்..உச்சநீதி மன்றத்தின் ஆணை

கார்த்திகை மாசம்! ஓரளவு குளிர் ஆரம்பித்து விட்டிருந்தது. பெரியவா விடியும்முன் ஸ்நானம் பண்ணுவதால், கோட்டை அடுப்பை மூட்டி, வெந்நீர் போடவேண்டும். ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்பை மூட்ட எழுந்தார்.

"டொக்"கென்று ஒரு சொடக்கு சத்தம் அவரை நிறுத்தியது! தாழ்வார அரைகுறை வெளிச்சத்தில் பெரியவாளின் அற்புத திருமேனி தெரிந்தது.

"இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......வெந்நீர் வேணாம்...."

வெந்நீர் போடாமல் இருக்கலாம். ஆனால், அடுப்பு மூட்டாவிட்டால், நைவேத்யம் தயார் பண்ண முடியாதே!

"வெங்கட்ராமனை கூப்டு!.." திருவாரூர் வெங்கட்ராமையர் என்ற சமையல் கார்யஸ்தர் வந்தார்.

"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ?....அதை பத்த வை! ஸ்வாமி நைவேத்யத்தை அதுல பண்ணு..."

கோட்டை அடுப்புப் பக்கம் யாரும் போகவேயில்லை. கொஞ்சம் தள்ளி உக்ராண அறை வாசலில் இரும்பு அடுப்பு பத்த வைக்கப்பட்டு சமையல் நடந்து கொண்டிருந்தது.

காலை சுமார் ஏழு மணி இருக்கும்....."மியாவ்" என்று மெல்லிசாக குரல் கேட்டது.

"அடேய்! பூனை எங்கேடா வந்துது? நைவேத்யத்துல வாயை வெச்சுடப் போறது!

ஷ்ஷ்ஷூ....ஷூ...!!! குத்து மதிப்பாக விரட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், பூனை ஓடும் சலசலப்பு எதுவும் இல்லை! பூனை எங்கே?

ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்புப் பக்கம் போய் பார்த்தார்..அதற்குள் ஒரு தாய்ப்பூனை. அதன் மேல், தாயின் உடல் கதகதப்பும், கோட்டை அடுப்பின் கதகதப்பும் சேர, தாயின் ஏறி இறங்கும் வயிற்றின் மேல் நாலு பூனைக்குட்டிகள்!!! இன்னும் கண்கூடத் திறக்காமல்!!

ஆஹா! "கோட்டை அடுப்பு இன்னிக்கு மூட்ட வேணாம்...." என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணையின் அர்த்தம் இப்போதல்லவா புரிந்தது!

குளிர் தாங்காமல் தன் குட்டிகளோடு லோக ஜனனியின் திருவடி நிழலுக்கு வந்துவிட்டாள் அந்த அம்மாப் பூனை! அவளை விரட்டிவிட்டு, தனக்கு குளிருக்கு வெந்நீர் போட்டுக் கொள்ளுவாரா என்ன?

பூனைகள் நன்னா தூங்கட்டும்....எனக்கு வெந்நீர் வேணாம்!!

ஏகம் ஸத் ! நமக்கெல்லாம் வெறும் மேல் பூச்சாக சொல்லும் வார்த்தை!

பெரியவாளுக்கு? அவரே அதன் பொருள்!

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
Photo: இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......வெந்நீர் வேணாம்..உச்சநீதி மன்றத்தின் ஆணை

கார்த்திகை மாசம்! ஓரளவு குளிர் ஆரம்பித்து விட்டிருந்தது. பெரியவா விடியும்முன் ஸ்நானம் பண்ணுவதால், கோட்டை அடுப்பை மூட்டி, வெந்நீர் போடவேண்டும். ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்பை மூட்ட எழுந்தார்.

"டொக்"கென்று ஒரு சொடக்கு சத்தம் அவரை நிறுத்தியது! தாழ்வார அரைகுறை வெளிச்சத்தில் பெரியவாளின் அற்புத திருமேனி தெரிந்தது.

"இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......வெந்நீர் வேணாம்...."

வெந்நீர் போடாமல் இருக்கலாம். ஆனால், அடுப்பு மூட்டாவிட்டால், நைவேத்யம் தயார் பண்ண முடியாதே!

"வெங்கட்ராமனை கூப்டு!.." திருவாரூர் வெங்கட்ராமையர் என்ற சமையல் கார்யஸ்தர் வந்தார்.

"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ?....அதை பத்த வை! ஸ்வாமி நைவேத்யத்தை அதுல பண்ணு..."

கோட்டை அடுப்புப் பக்கம் யாரும் போகவேயில்லை. கொஞ்சம் தள்ளி உக்ராண அறை வாசலில் இரும்பு அடுப்பு பத்த வைக்கப்பட்டு சமையல் நடந்து கொண்டிருந்தது.

காலை சுமார் ஏழு மணி இருக்கும்....."மியாவ்" என்று மெல்லிசாக குரல் கேட்டது.

"அடேய்! பூனை எங்கேடா வந்துது? நைவேத்யத்துல வாயை வெச்சுடப் போறது!

ஷ்ஷ்ஷூ....ஷூ...!!! குத்து மதிப்பாக விரட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், பூனை ஓடும் சலசலப்பு எதுவும் இல்லை! பூனை எங்கே?

ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்புப் பக்கம் போய் பார்த்தார்..அதற்குள் ஒரு தாய்ப்பூனை. அதன் மேல், தாயின் உடல் கதகதப்பும், கோட்டை அடுப்பின் கதகதப்பும் சேர, தாயின் ஏறி இறங்கும் வயிற்றின் மேல் நாலு பூனைக்குட்டிகள்!!! இன்னும் கண்கூடத் திறக்காமல்!!

ஆஹா! "கோட்டை அடுப்பு இன்னிக்கு மூட்ட வேணாம்...." என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணையின் அர்த்தம் இப்போதல்லவா புரிந்தது!

குளிர் தாங்காமல் தன் குட்டிகளோடு லோக ஜனனியின் திருவடி நிழலுக்கு வந்துவிட்டாள் அந்த அம்மாப் பூனை! அவளை விரட்டிவிட்டு, தனக்கு குளிருக்கு வெந்நீர் போட்டுக் கொள்ளுவாரா என்ன?

பூனைகள் நன்னா தூங்கட்டும்....எனக்கு வெந்நீர் வேணாம்!!

ஏகம் ஸத் ! நமக்கெல்லாம் வெறும் மேல் பூச்சாக சொல்லும் வார்த்தை!

பெரியவாளுக்கு? அவரே அதன் பொருள்!

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய் , வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால்,தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.


 

 

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?

பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே!எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருள். இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்.
 
வீட்டில் பூஜை செய்யும் போது {கம்}சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர என்றால் "கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்.
 
Photo: வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு  கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில்  புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே,  வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள  வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர என்றால் "கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது,  "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய  சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்.
ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி

அருள்தரும் மகா பிரத்தியங்கிரா தேவி ஆலயம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அய்யாவடி (ஐவர்பாடி) என்ற கிராமத்தில்அமைந்துள்ளது இந்த கோவில் இந்தியாவில் இங்கு மட்டுமே உள்ளது என்பது தனி சிறப்பு. 18 சித்தர்கள் பூஜித்ததும், அகஸ்தியருக்கு காட்சி கொடுத்ததும், மேகநாதன் (இந்திரஜித்) நிகும்பலாயம் செய்ய வேண்டி வந்த இடம் இதுவே.
பஞ்ச பாண்டவர்கள் பூஜித்த ஸ்தலம். இந்த தேவியை தரிசனம் செய்தால் ரணம், ரோகம், கடன், சத்ரு இவைகளை அழித்து நமக்கெல்லாம் வேண்டிய 16 செல்வங்களையும்
கொடு்க்கக்கூடிய தெய்வம் இவள் ஒருவள் மட்டுமே. இத்தேவியை தரிசனம் செய்து எல்லா கஷ்டங்களும் நீங்க நிகுபாலயாகம் செய்து வேண்டும் வரங்களை அடைவீர். பிரதி அமைவாசை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை யாகம் நடைபெறும். இத்திருக்கோவிலில் கரிய வண்ணமுடையவளாய், சந்திர கலை சிரத்தில் பிரகாசிக்க, சூலம், பாசம், டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திய பதினெட்டு கைகளுடன் சிம்மவாகனமாக நான்கு சிங்கங்கள் அவள் முன்னே நிற்க, இடது காலை மடித்து வலது புறமாக கலைமகள் சரஸ்வதியும் வலது புறமாக அவள் மகள் மகாலெட்சுமியும் வண்ணச் சிற்பங்களாக நின்று அருள் புரிகின்றனர். இத்தல விருட்சத்தில் ஒரே ஆலமரத்தில் ஐந்து விதமான இலைகள் உள்ள அதிசயத்தை காணலாம்.

பிரத்தியங்கிரா தேவியின் மூல மந்திரம் :
ஓம் – க்ஷம்
பக்ஷஜ்வாலா ஜீஹ்வே
கராள தம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கரே
க்ஷம் – ஹ்ரீம்பட் – ஸ்வாஹா

தினமும் பக்தியுடன் ஜெபிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய், பில்லி சூனியம் பறந்தோட, பயம் நீங்கி, பாதுகாப்பான வாழ்வி்ல் எல்லா ஆனந்தத்தையும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள். கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ தொலைவில் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது.
புற்று நோய் உபாதைகள் நீங்க ஸ்லோகம்

அஸ்மின் பராத்மன் நநு பாத்ம கல்பே
த்வம் இத்தம் உத்தாபித பத்மயோனி:
அனந்த பூமா மம ரோக ராசிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ

(நாராயணீயம் தசகம்-8 பாடல்-13)

பொதுப்பொருள்: குருவாயூரில் என்றும் நித்யவாசம் செய்யும் பெருமாளே, விஷ்ணுவே நமஸ்காரம். பாத்ம கல்பத்தில் நான்முகனைப் படைத்தவனே, அளவில்லாத பெருமைகளையுடைய நீ என்னுடைய நோய்கள் அனைத்தையும் நீக்கியருள வேண்டும் பெருமாளே.

(பொதுவாக, இதுநாள்வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தே இல்லை என்பார்கள். ஆனால், மேற்கண்ட இந்த ஸ்லோகத்தை மனமுருகிசொல்லி மருத்துவமும் மேற்கொண்ட சிலர் அந்த உபாதையிலிருந்து மீண்டிருப்பதாக அறிய முடிகிறது.

குருவாயூரப்பன் திருவருளால் புற்று நோயும் நீங்கும் என காஞ்சி மகாசுவாமிகள் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகள் தமது அருளுரையில் சொல்லியிருக்கிறார்.)
கோவிலிலும் தனிச்சிறப்பும் !

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.
வைகுண்ட ஏகாதசியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?

ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஏன்?

சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் சஞ்சரிக்கிறார். அதில், மகர ராசிக்குள் அவர் நுழையும் நாளை தைப்பொங்கல் என்று குறிப்பிடுவர். வடநாட்டில் இதை மகர சங்கராந்தி என்பர். இந்நாளில் வீட்டு வாசலில் கோலம் இட்டும், மாவிலைத் தோரணம் இட்டும் அலங்கரிப்பர். மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகியன்று பழைய பொருள்களை தீயிட்டுக் கொளுத்துவதும் வீட்டின் தூய்மைக்காகவே. வேண்டாத பழமையை விலக்கி, புதுமையை வரவேற்கும் விதமாக பொங்கல் அமைந்துள்ளது. அதனால், வாழ்வில் முன்னேறுவதற்கான வழிவகை உண்டாவது இயற்கை. இதனால் தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்வழக்கு ஏற்பட்டது. வயலில் விளைந்த புது நெல்லில் குத்திய அரிசியில் பொங்கலிட்டு, கண் கண்ட தெய்வமான சூரியனுக்குப் படைப்பர். பொங்கல் பானையில் பொங்கும்போது, பொங்கலோ பொங்கல் என்று ஒலி எழுப்புவர். ஒருமித்த குரலில், இதைச் சொல்லும்போது, எல்லா மங்களங்களும், நன்மைகளும் வீட்டிற்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.
மார்க்கபந்து ஸ்தோத்திரம்

அப்பய்ய தீக்ஷிதரின் கல்வி, அனுபூதி முதலியவற்றைக் கண்டு பொறாமையுற்ற சிலர் அவர் மீது சில கொடியவர்களை ஏவினர். கொடியவர்கள் தம்மை மடக்க எண்ணியதை அறிந்த தீக்ஷிதர் பின்வரும் ஐந்து சுலோகங்களால் பரமேஸ்வரனைத் துதித்தார். பரமேஸ்வரன் மார்க்க ஸஹாயனாக வந்து, அந்தக் கொடியவர்களை விரட்டியடித்தார்.

சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹாதேவ தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ

பாலாவநம்ரத்கிரீடம் பால நேத்ரார்ச்சிஷா தக்தபஞ்சேஷுகீடம்
சூலாஹதாராதிகூடம் சுத்த மர்த்தேந்துசூடம் பஜே மார்கபந்தும் (சம்போ)

திவ்யமான கிரீடத்தைத் தரித்தவரும் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தவரும் சூலத்தால் எதிரிகளை வதைத்தவரும் சந்திரனைத் தலையில் தரித்தவரும் வழித்துணைத் தெய்வமாக விளங்குபவருமான மார்க்கபந்துவை வணங்குகிறேன்.

அங்கே விராஜத்புஜங்கம் அப்ரகங்காதரங்கா பிராமோத்தமாங்கம்
ஓம்காரவாடீகுரங்கம் ஸித்தஸம்ஸேவிதாங்க்ரிம் பஜே மார்கபந்தும் (சம்போ)

பாம்பை ஆபரணமாக அணிந்தவர், கங்கையைத் தரித்தவர், ஓங்காரத் தோட்டத்துக்கு மான் போன்றவரும்(பிரணவப் பொருளானவரும்). சித்தர்களால் வணங்கப்பட்ட திவ்ய சரணாரவிந்தங்களை உடையவரும் வழித்துணைத் தெய்வமாக.....

நித்யம் சிதாநந்தரூபம் நிஹ்நுதாசேஷலோகே சவைரிப்ரதாபம்
கார்த்தஸ்வராகேந்த்ரசாபம் க்ருத்திவாஸம் பஜே திவ்யஸந்மார்கபந்தும் (சம்போ)

நித்யரும் சிதானந்த ரூபியும், லோக பாலர்களுக்கு எதிரிகளான அசுரர்களின் பிரதாபத்தையும் அழித்தவரும், பொன்மலையை வில்லாக்கியவரும், யானைத் தோலை அணிந்தவரும் வழித்துணைத் தெய்வமாக....

கந்தர்ப்பதர்பக்நமீசம் காலகண்டம் மஹேசம் மஹாவ்யோமகேசம்
குந்தாபதந்தம் ஸுரேசம் கோடிசூர்யப்ரகாசம் பஜே மார்கபந்தும் (சம்போ)

மன்மதனின் திமிரை அடக்கியவர், விஷத்தைக் கழுத்தில் தரித்திருப்பவர், ஆகாசத்தையே கேசமாக உடையவர், வெண்பற்களை உடையவர், கோடி சூரியனுக்கு நிகரானவர், வழித்துணைத் தெய்வமாக....

மந்தாரபூதேருதாரம் மந்தராகேந்த்ரஸாரம் மஹாகௌர்யதூரம்
ஸிந்தூரதூரப்ரசாரம் ஸிந்துராஜாதிதீரம் பஜே மார்கபந்தும் (சம்போ)

மந்தாரம் என்ற கற்பக விருக்ஷத்தைவிட அதிகமாக வேண்டியவற்றை அருள்பவர், மந்தர மலையைவிட அதிக வலுவுள்ளவர், பார்வதி தேவிக்கு அருகில் உள்ளவர், ரிஷபத்தின் மீது ஏறி சஞ்சாரம் செய்பவர், சமுத்திரராஜனைவிட அதிக தீரராக இருப்பவருமான, வழித்துணைத் தெய்வமாக விளங்குபவருமான மார்க்கபந்துவைப் பூஜிக்கிறேன்.

அப்பய்யயஜ்வேந்த்ரகீதம் ஸ்தோத்ர
ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்தஸித்திம் விதத்தே மார்க
மத்யேபயம் சாதுதோ÷ஷா மஹேச (சம்போ)

அப்பய்ய தீக்ஷிதரால் அருளப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை வெளியே செல்லும்போது பக்தியுடன் படிக்கின்றவருக்கு, பரமேச்வரர் காரிய சித்தியையும் வழியில் பயமின்மையையும் நல்குகிறார்.
காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க )

ராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை செய்யலாம். குறிப்பாக, நவராத்திரி காலத்தில் இதைச் செய்தால் மிகவும் நல்லது.எண் கணிதப்படி ராகுவுக்குரிய எண் 4. இந்த எண் தடைகளை தரும் என்பது நம்பிக்கை. எனவே தான் 22 (கூட்டினால் 4) ஸ்லோகம் கொண்ட அர்ச்சனையை காளிக்காக வடித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது. இந்த ஸ்லோகத்தை வீட்டில் மாரியம்மன் அல்லது துர்க்கை படம் முன் அமர்ந்து சொல்லலாம். கொலு வைத்திருந்தால் மேடை முன் அமர்ந்து சொல்லலாம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, செவ்வரளி மலர்களை தூவ வேண்டும்.

ஓம் காள்யை நம:
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம:
ஓம் பராத்மகாயை நம:
ஓம் முண்டமாலாதராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் கராளிகாயை நம:
ஓம் ப்ரேதவாஹாயை நம:
ஓம் ஸித்தலக்ஷ்மையை நம:
ஓம் கால ஹராயை நம:
ஓம் ப்ராஹ்மை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் கவுமார்யை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் வராஹ்யை நம:
ஓம் நாரஸிம்ஹாயை நம:
ஓம் கபாலின்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:
(4 photos)
சூரியனின் குடும்பம்!

பெற்றோர்:காஷ்யப முனிவர்,அதிதி.
சகோதரர்கள்:கருடன்,அருணன்
மனைவியர்:உஷா,பிரத்யுஷா(சாயாதேவி)
மகன்கள்:எமதர்மன்,சனீஸ்வரர்,அஸ்வினி தேவர்கள்,கர்ணன்,சுக்ரீவன்
மகள்கள்:யமுனை,பத்திரை

பார்த்தபின் சாப்பிடுங்க:தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை, ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

முதல் கடவுள்:மனிதன் தோன்றிய காலம் தொட்டே சூரியவழிபாடு இருந்து வருகிறது. இருளில் தவித்த மனிதன், தினமும் காலையில் கிழக்கு வெளுத்து சூரிய உதயமாவதைக் கண்டு மகிழ்ந்தான். தன் இருகைகளைக் குவித்து வணங்கி வழிபட்டான். விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய தெய்வ வழிபாடுகள் பிற்காலத்திலேயே தோன்றின. சூரிய வழிபாட்டுக்குரிய மதத்தை "சவுரம் என அழைத்தனர். இதனால் சூரியன், "முதல் கடவுள் என்ற சிறப்புக்கு <உரியவராகிறார்.

அம்பாளின் வலக்கண்: சூரியனைச் சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாகக் கொண்டு சூரியநாராயணர் என்றும் சொல்வர். இவர் அம்பிகையின் வலக்கண்ணாக இருப்பதாகவும் கூறுவர். ஜோதிட சாஸ்திரம் சூரியனை நவக்கிரக நாயகனாகப் போற்றுகிறது. இவரைச் சுற்றியே மற்ற கிரகங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. நவக்கிரக மண்டபத்தில் நடுவில் வீற்றிருந்து அருளுகிறார் சூரியன். இதுதவிர, சிவாலயங்களில் இவர் தனது துணைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் தனி சந்நிதியிலும் இருப்பார்.

சூரியமந்திரம் சொல்வோமா:சூரியவழிபாட்டுக்கு உகந்த நாள் ஞாயிறு. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள் சிறந்தவை. திதிகளில் வளர்பிறை சப்தமி ஏற்றது. இந்த நாட்களில் காலையில் நீராடிய பிறகு, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்க வேண்டும்.

நம:ஸவித்ரே ஜகதேச சக்ஷúஷே
ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாச ஹேதவே
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே
ஜபாகு ஸும ஸங்காசம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இதன் பொருளையும் சொல்லலாம்.

பொருள்:உலகிற்குக் கண்ணாக இருப்பவனே! முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே! வேத வடிவமே! முக்குணங்களைப் பெற்றவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே! உமக்கு நமஸ்காரம். காஷ்யப முனிவரின் மகனே! செம்பருத்திப்பூவின் நிறத்தைக் கொண்டவனே! இருளின் எதிரியே! பேரொளி உடையவனே! பாவங்களைப் போக்குபவனே! திவாகரனே! உம்மைப் போற்றுகிறேன். இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும்.
 
நாம் தினமும் குளித்து முடித்தவுடன்

நாம் தினமும் குளித்து முடித்தவுடன் உடம் துடைக்கும் போது முதலில் முதுகை தான் துடைக்க வேண்டும்.பின் தான் முன்பக்கம் துடைக்க வேண்டும்.ஏன்னேண்றால் முன்பக்கம் ஸ்ரீ தேவியும் பின்பக்கம் மூதேவியும் இருப்பாற்கல் முதலில் முன்பக்கம் துடைத்தால் ஸ்ரீ தேவி நம்மைவிட்டு பொய்விடுவாள். மூதேவி நம்மிடம் தொற்க்கொள்வாள்.
 
Photo: நாம் தினமும் குளித்து முடித்தவுடன்

நாம் தினமும் குளித்து முடித்தவுடன்  உடம் துடைக்கும் போது முதலில் முதுகை தான் துடைக்க  வேண்டும்.பின் தான் முன்பக்கம் துடைக்க  வேண்டும்.ஏன்னேண்றால் முன்பக்கம் ஸ்ரீ தேவியும் பின்பக்கம் மூதேவியும் இருப்பாற்கல் முதலில் முன்பக்கம் துடைத்தால்  ஸ்ரீ தேவி நம்மைவிட்டு பொய்விடுவாள். மூதேவி நம்மிடம் தொற்க்கொள்வாள். 
அப்பைய தீட்சிதர்

அப்பைய தீட்சீதருக்கு எல்லா சாஸ்திரங்களும் தெரியும். அவர் மாதிரி எல்லா சாஸ்திரங்களுக்கும் புஸ்தகம் எழுதினவர் ஒருவரும் இல்லை. அத்தகைய பெரியவருக்குத் தம்முடைய பக்தியை சோதித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாகி விட்டது. பைத்தியம் பிடித்தால் அந்த சமயத்தில் கெட்ட வார்த்தைகள் சொல்லாமல், காம வார்த்தைகளைச் சொல்லாமல், ஈசுவர பக்தி பண்ணினால் அப்போது நம்முடைய பக்தி மெய்யானதுதான் என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தார். ஊமத்தங்காய், ஊமத்தம்பூ இவற்றைச் சாப்பிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் என்று அவருக்குத் தெரியும்.

பைத்தியம் பிடிக்கிற மருந்தைச் சாப்பிட்டார். அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. உடனே உளற ஆரம்பித்துவிட்டார். அவர் சொன்னவற்றை எல்லாம் சிஷ்யர்கள் எழுதிக் கொண்டார்கள். ஊமத்தம் பூவின் குணத்தை மாற்றக்கூடிய மருந்தைக் கொடுத்தார்கள். பைத்தியம் தெளிந்துவிட்டது. அவருக்கு பைத்தியம் பிடித்திருந்த காலத்தில் என்ன பிதற்றினார் என்று பார்த்தால் ஐம்பது சுலோகங்கள் ஈசுவரன் மேல் பாடியிருந்தார். அந்த கிரந்தத்துக்கு ஆத்மார்ப்பண ஸ்துதி அல்லது உன்மத்த பஞ்சாசத் என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ.
 
கோவிந்த தீட்சிதரும் மகாமகக் குளமும்!

கும்பகோணம் என்றால் ஆதி கும்பேசுவரர் ஆலயம், மகாமகம் குளம் தவிர இன்னொரு பிரசித்தி பெற்ற நிறுவனம் ராஜா காவ்ய வேத பாடசாலை, இதை நிறுவியவர் கோவிந்த தீட்சிதர் என்ற மகான். இந்தியாவில் மிகப் பழமையானதாகக் கருதப்படுகின்ற இந்த வேதபாடசாலை 1542 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெருமை உடையது. மேலும் ரிக், யஜுர் மற்றும் சாம என்ற மூன்று வேதங்களையும் குருகுல முறையில் கற்றுத் தருகின்ற ஒரே வேத பாடசாலை இது. அந்தக் காலத்தில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீட்சிதர், ஐயன் என்ற பெயராலேயே அறியப்பட்டார். இந்த ஐயன் என்ற பட்டத்தை நிலைநிறுத்தும் வகையில் ஐயன் தெரு, ஐயன் குளம், பசுபதி கோவிலை அடுத்த ஐயம்பேட்டை, திருவாரூருக்கு மேற்கே உள்ள மணக்கால் ஐயம் பேட்டை போன்றவை அமைந்துள்ளன.

கோவிந்த தீட்சிதர் தஞ்சை நாயக்க மன்னர்கள் மூவருக்கு, முதலமைச்சராக இருந்த பெருமையை உடையவர். அச்சுதப்ப நாயக்க மன்னரின் முதலமைச்சராக அவர் இருந்த போது, அரசன் தன் எடைக்கு நிகரான தங்கத்தை துலாபாரமாக நிறுத்துக் கொடுக்க, அதைக் கொண்ட தீட்சிதர் மகாமகக் குளத்தைச் செப்பனிட்டார். குளக்கரையில் உள்ள பதினாறு ஆலயங்களையும் சீர் செய்து அவற்றிற்கு விமானங்களை அமைத்தார். குளத்தின் நான்கு புறங்களிலும் விரிவான படிக்கட்டுகளை அமைத்தார்.

ஆதிகும்பேசுவரர் கோவில் திருப்பணியை முடித்து, நூதன ராஜகோபுரத்தை நிறுவி குடமுழுக்கும் செய்தார் தீட்சிதர். இந்தக் குடமுழுக்கு நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும், தர்ம சாஸ்திரங்களில் அனைத்து மகா தானங்களையும் தீட்சிதர் செய்ததன் நினைவாக உள்ள மகாதானபுரம், திருவிடைமருதூர், மாயூரம், திருவெண்காடு இங்கெல்லாம் உள்ள மகாதானத் தெருக்கள் இவர் நினைவைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. திருவையாறு, தஞ்சை, வெண்ணாற்றங்கரை, திருவலஞ்சுழி, கும்பகோணம், திருவிடைமருதூர் போன்ற ஊர்களில் உள்ள ஜோடியான விமானங்களைக் கொண்ட புஷ்ப மண்டபங்களை நிறுவியவரும் இவர்தான். திருடைமருதூர் புஷ்யோத்ஸவ வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி ரதம் போன்றவையும் இவரது திருப்பணிகளே !சோழர்களுக்குப் பின்னர், ஆலயங்களைத் திருத்தி அமைத்து மறுமலர்ச்சியை உருவாக்கிய மகான் தீட்சிதர் அவர்கள்.

கும்பகோணம் ÷க்ஷத்திர மகாத்மியத்தின் கடைசி சுலோகம்,

கோவிந்த தீட்சிதோ நாம
மகாநாஸீத் கலௌõ யுகே

தேன ÷ஷாடசலிங்காணி
ஸ்தாபிதானி சரோவரே.

என்று இவரைப் போற்றுகிறது. கலியுகத்தில், அனைத்துப் பாவங்களையும் தீர்க்கும் மகாமகக் குளத்தின் கரையில் 16 கோவில்களை நிறுவிய மகான் இவர் என்று இந்த சுலோகம் குறிப்பிடுகிறது. கோவிந்த தீட்சிதர் மற்றும் அவருடைய மனைவி நாகம்மாள் சிலைகள் ஆதிகும்பேசுவரர் ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டன.
பலவித பிரார்த்தனைகளும்.. பலனும்!

திருமணம் கைகூட...: திருக்கண்ணமங்கை என்ற திருத்தலத்துக்கு கிருஷ்ண மங்கள ÷க்ஷத்திரம் என்றும் பெயருண்டு. இங்குள்ள கோயில் மதிற்சுவரில் பல வருடங்களாக ஒரு தேன்கூடு உள்ளது. இந்தத் தேனீக்கள் யாரையும் கடிப்பதில்லை. பெருமாளின் திருமணக் கோலத்தைக் காணவந்த தேவர்கள், அவரது திருமணக் கோலத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தேனீக்கள் உருவில் காட்சி தருகிறார்கள் என்பது ஐதீகம். திருமணம் கைகூட, வழிபட வேண்டிய சிறப்புத்தலம் இது!

குருவருள் பெற...: நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது தேவூர். இங்குள்ளது தேவ குருநாத சுவாமி கோயில். இது ஆலங்குடி, திட்டை கோயில்களுக்கு இணையாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் குருபலன் இல்லாதவர்கள் ஜென்மகுரு, விரய குரு பாதிப்பு உள்ளவர்கள் இந்த கோயிலுக்குச் சென்று தரிசித்தால் ஒப்பற்ற பலனையும் அருளையும் பெறலாம்.

தாரதோஷம் அகல...: நாகை மாவட்டம் குத்தாலத்துக்கு வடகிழக்கே மூன்று கி.மீ. தொலைவிலுள்ளது வேள்விக்குடி. ஜாதகப்படி இரு தார தோஷ அமைப்புள்ளவர்கள் இங்கு வந்து, இங்குள்ள பெண் கன்னிச் சிலைக்கு மங்கல நாண் அணிவித்து சிலையுடன் கோயிலை வலம் வந்து அச்சிலையை கோயிலிலேயே விட்டுச் செல்கின்றனர். இது முதல் தாரக் கணக்கு என்று கருதப்படுவதால், இரண்டாவதாக நடைபெறும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவது நிஜம் என்கின்றனர்.

செயல்கள் வெற்றி பெற...: நாகை மாவட்டம், சிக்கல் தலத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவிலுள்ள ஆவராணியில் ஆனந்த நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள அனுமன் விசேஷமானவர். இவருக்கு வியாழன், சனி மற்றும் அமாவாசை ஆகிய தினங்களில் கட்டமுது படைத்து வழிபடப்படுகிறது. அதாவது, வஸ்திரத்தில் கட்டமுதை வைத்து (தயிர்சாதம்) அனுமனின் திருவயிற்றில் அதை வைத்துக் கட்டி மனதில் வேண்டிக் கொண்டால், நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேறும் என்பது இங்கு நிலவும் நம்பிக்கை.

Kailasanadhar Temple at Kailasa Parai

 

This is near the Kailasa Vinayagar Temple and is a totally dilapidated temple. I don’t think there are daily poojas taking place and so this is usually not in the visitors’ list of temples. This is on top of a small hillock called Kailasa parai on the northern border of Padavedu. There are no steps to climb and actually none required since this is a flat rock. Only the sanctum sanctorum in Gajaprashta style remains with big and beautiful idol of Sri Kailasanadhar along with Uma Devi. Sadly, the idols are vandalized and all the four hands of Lord Shiva are broken. As we all know, it is very rare to see Lord Shiva in human form and one such temple in such a dilapidated state is really paining. The ardent devotees of Lord Shiva better not visit this since you will return with a heavy heart.
Kailasa Parai (left) Sri Uma Maheswarar Temple 1 Sri Uma Maheswarar Temple shrine Sri Uma Maheswarar 1 Sri Uma Maheswarar Temple stones View from the  back side of Sri Uma Maheswarar

There is a sunai (water stream) at the hillock top.
Sunai (Water Stream)

But the location of the temple is awesome. From the hiilock top, the entire Padavedu is visible and it is a beautiful sight in the backdrop of Jawadu hills all around.
Padavdu aerial view from Kailasa Parai 2 Padavdu aerial view from Kailasa Parai 1 From Kailasa Parai