வியாழன், 5 ஆகஸ்ட், 2021

அக்னி

அக்னி

காற்றின் வகையாக தசவாயுக்களும் அவற்றின் 7 பிரிவுகளும் எப்படி நம்மையும் இந்த பிரபஞ்சத்தையும் வழி நடத்துகின்றதோ ! அதே போல அக்னியும் பலவகையாக நம்மையும் நம் செயல்களையும் வழி நடத்தி சாட்சியாய் ஆதராமாய் உள்ளது.

கிட்டதட்ட 27 வகையான அக்னி உண்டு 27 நட்சத்திர கணக்காட்டம்.

கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்‌ஷிணம், நிர்மந்த்யம், வைத்யுதம், சூரம், ஸ்ம்வர்த்தம், லவுகீகம், ஜடாரம், விஷகம், க்ரவ்யாத், க்‌ஷேமவான், வைஷ்ணவம், தஸ்யுமான், பலதம், சாந்தம், புஷ்டம், விபாவஸு, ஜ்யோதிஸ்மான், பரதம், பத்ரம், ஸ்விஷ்டக்ருத், வஸுமான், க்ருது, ஸோமம், பித்ருமான், அங்கிரஸ் என்பன...

இதில் ஒன்னு ரெண்டுதான் நமக்கு தெரியும்.

உதாரணமா முதல் மூனு அக்னியையும் நித்யம் அக்னி ஹோத்திரம் பண்ணறவங்க ஆராதிப்பாங்க.💥

ஆக்சுவலா யாகம் பண்ணும்போது யூப கம்பம் நடுவாங்க. அது சரியா 21 முழம் இருக்குமாறு வெப்பாங்க... அது கணக்கு என்னான்னா... முதல்  மூனு அக்னிக்கும் ரிஷிகள் 7பேருக்கும் கணக்கு பண்ணி 21 முழம் இருக்கறதா சொல்லுவாங்க..

பசுவின் முகத்தில் இந்த 3 அக்னி இருக்கறதா கணக்கு. விபாவஸு அக்னி அஸ்ட வசுக்களில் ஒருவரா இருக்கார்.⚡️⚡️⚡️

ஔபாசன கர்மாவை பண்ணும் போது க்ருதுவை ஆராதிப்பங்கன்னு நினைக்கேன்... (சரியா தெரியல... தெரிஞ்சவங்க சொல்லலாம்).

எது எப்படியோ நமக்கு முக்கியமான அக்னி ஜடாரம்தான்🔥🔥🔥 ஏன்னா அதுதான் நாம சாப்பிடும் ஆகாரத்தை எல்லாம் ஜீரணம் செய்யுது . அது மட்டும் வேலை செய்யல... நோ அவுட்கோயிங் ... நமக்கெல்லாம் குதிரை வால் மயிர் நுனியின் ஆயிரத்தில் ஒரு பங்குதான் அந்த ஜடார அக்னி இருக்காம். அதுக்கே இப்ப்டி சாப்புடறோம்...

பீமசேனருக்கும் அவரின் அம்சமான மத்வருக்கும் இந்த ஜடாரம் கட்டை விரல் அளவுக்கு இருந்ததா சொல்லுவாங்க. அதனால்தான் எம்புட்டு போட்டாலும் அவிகளுக்கு பத்தாம போகுது. எல்லாத்தையும் முழுங்கிடுவாங்க. அதனாலே பீமருக்கு விருகோதரன்ன்னு பேர்.

அதான் பெரும்பாலும்  அந்தகால பெண்கள் காலம்ப்றம் அடுப்பை பத்த வெச்சி அட்சதையை போட்டு நமஸ்காரம் பண்ணிதான் அன்றைய சமையல்  தொடங்கினாங்க...

ஆனா இன்னைக்கு ... நோ கமெண்ட்ஸ்🙅🤦‍♂️🤫