புதன், 22 ஜனவரி, 2014

கல்வியில் மேன்மை பெற

ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந: ஸ்ரீநிகேதந:
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர:
இதைக் கூறினால் கல்வி வளரும்.
இன்பமாய் வாழ

அநந்தாநந்த ஸுகத: ஸுமங்கள ஸுமங்கள:
இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:
ஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய:
காமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித:

இதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.
எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஸ்ரீவல்லப மஹா கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா

வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

சக்தி விநாயக மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்

தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா

சகல காரிய சித்திக்கான எளிய முறை:

செய்யும் காரியங்களில் தடைகள் விலக
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.
கொளத்தூர் சிவாஆலயம்

இறைவன் திருநாமம்:ஸ்ரீ சோமநாதேஸ்வரர்

இறைவி திருநாமம்:ஸ்ரீ அமுதாம்பிகை

ஆலய அமைவிடம்:குளத்தூர் கிராமம்

எப்படி செல்வது ?

வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் மாம்பாக்கம் என்ற ஊரில் உள்ள சந்திப்பில் தென்திசையில் செல்லும் சாலையில் 1.5 கி.மி. சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். பேருந்து தடம் : தி.நகர் -கொளத்தூர் (M51V) தாம்பரம்-மாம்பாக்கம் (55K, 55T, 55V, 115, 555) மாம்பாக்கத்தில் இறங்கி 1.5 கி.மி. கால்நடையாக வரலாம்.

தல வரலாறு

ஸ்ரீ பிரும்ம தேவரின் மானச புத்திரனான தக்கன் அளித்த சாபத்தால் சந்திரன் எழில்குன்றி ஒரு கலையாக உருமாறினான். மனம் வருந்திய சந்திரன் தன பூரண அமுத கலையை அடைய வேண்டி அதனை அளிக்க வல்லவர் ஈசனே என உணர்ந்து இத்தலத்தில் சிவபெருமான் லிங்க திருமேனியை பிரதிஷ்டை செய்து அருகிலேயே சந்திர புஷ்கரணி என்ற குளம் அமைத்து அதில் நீராடி இறைவனை மனமுருகி பூஜித்து வந்தான். இதனால் சிவபெருமான் மகிழ்ந்து, இன்றுமுதல் உன் கலைகள் வளர்ந்தும் தேய்ந்தும் மாறி மாறி தோன்றும் அழியா நிலையினை பெறுவாய் என்ற வரம் தந்தருளி, ஒருகலைசந்திரனை தன சிரசில் சூடிக்கொண்டு பிறைசூடி என்ற திருநாமத்தையும் பெற்றார். சோமனுக்கு அருள் செய்ததால் சோமநாதேஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார்.

தேவ அசுரர்கள் அமுதம் வேண்டி மந்திர கிரியை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பினை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைய, வாசுகி கக்கிய விஷத்தின் வெம்மை தாங்காது தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர். ஈசனும் கருணை கொண்டு ஆலகால விஷத்தினை உண்டு எல்லோரையும் காத்தருளினார். அம்பிகை ஈசன் கண்டத்தில் கை வைத்து விஷம் உள்ளே செல்லாமல் கண்டத்திலேயே நிறுத்தி விஷத்தையும் அமுதமாக்கி அமுதாம்பிகை என்ற திருநாமம் பெற்றாள்.

அறுபத்திமூவரில் ஒருவராக விளங்கிய திரு கலிய நாயனார் திருமரபில் வந்த திரு ராஜு செட்டியார் என்பவர் 1917ஆம் ஆண்டு முட்புதர்களுக்கு இடையில் சிதிலமடைந்த ஒரு கோயிலில் சிவலிங்கம் மற்றும் அம்பாள் திருவடிவமும் இருப்பதைக்கண்டு ,. இடத்தை சுத்தம் செய்து தினந்தோறும் பூஜை செய்து வரலானார். அருகில் உள்ள பழைய கிணற்றை தூர்வாறி ஆழப்படுத்த தொடங்கிய போது, நந்தி தேவர், விநாயகர், முருகன், வள்ளி, தேவசேனா, துர்கை, சண்டிகேஸ்வரர், மற்றும் சாஸ்தா திருஉருவ சிலைகள் கிடைத்தன.

திரு ராஜு செட்டியாரின் அருமை நண்பராக விளங்கிய ஸ்ரீ கி.வா. ஜகந்நாதன் அவர்கள் திருப்பணி குழு தலைவராக இருந்து 1957ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கிழக்கு பார்த்த சுவாமி சன்னதி. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. கோஷ்டத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, துர்கை சன்னதிகள். புதிதாக நவக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. க்ஷேத்ர பாலபைரவராகிய மகா சாஸ்தா மிக பழமையான பெரிய கோயில்களில் இருப்பது வழக்கம். மகா சாஸ்தா திருவடிவம் இங்கிருப்பது ஆலயத்தின் தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது. கிணற்றுக்கு அருகில் இருந்த கல்வெட்டின் மூலம் இக்கோயிலுக்கு அளிக்கப்பட தானங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.

திரு கி.வா. ஜகந்நாதன் அவர்கள் ஸ்ரீ அமுதாம்பிகை பேரில் பல பாடல்கள் பாடி உள்ளார். அவரது சீடரான திரு மயிலம் சிவசுப்பிரமணியன் அவர்கள் அமுதாம்பிகை பதிகம் என்ற நூலை படைத்துள்ளார்.

பரிகார தலம்

பிரதி வெள்ளி கிழமை நாகபிரதக்ஷிணம் நடைபெறுகிறது. திருமண தடை உள்ளவர்கள் நாகபிரதக்ஷிணம் செய்து இத்தலத்தில் வழிபட்டால் திருமணம் கூடி வருகிறது. பௌர்ணமி பூஜை, சோமவார பூஜை இங்கு விசேஷமாக நடைபெறுகிறது. பூர்வ ஜன்ம தீவினையால் ஏற்படும் கொடிய நோய்கள் தீர பிரதி திங்கள்கிழமை வந்து ஸ்ரீ சோமநாதேஸ்வரரையும் ஸ்ரீ அமுதாம்பிகை அம்மையையும் அர்ச்சித்து வழிபாட்டு வந்தால், நல்ல பலன் ஏற்படும்.

இக்கோயில் திருப்பணி தொடங்கப்பட்டு ஸ்ரீ காஞ்சி மடத்து ஆஸ்தான புலவர் மகாவித்வான் வே. சிவசுப்பிரமணியன் அவர்களை தலைவராக கொண்டு ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருப்பணிக்கமிட்டி ஒன்றை நிறுவி நடைபெற்று வருகிறது. இந்த அரிய ஆன்மீக தொண்டில் பங்குகொள்ள விரும்பும் அன்பர்கள் பணமாகவோ, காசோலையாகவோ கீழ்கண்ட விலாசத்துக்கு அனுப்பலாம்.

திரு ஜெயவேல், பொருளாளர், ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருப்பணிக்கமிட்டி, 6/20,
சிவராமன் தெரு, மந்தைவெளி, சென்னை - 600 028. தொலைபேசி 9841081482,
044 249306910 (Cheque in favour of ARULMIGU AMUDHAMBIGAI WITH SRI SOMANATHESWARAR TEMPLE) OR REMIT THROUGH ONLINE WITH DHANALAKSHMI BANK LTD. A/C NO. 0068001000047299.
(6 photos)
SRI PARVATHAVARDHINI SAMETHA SRI RAMALINGESWARAR TEMPLE

இந்த ஆலயம், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள மாரங்கியூர் எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஏராளமான கல்வெட்டுகள் மூலம் இவ்வாலயம் 10ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது என்ற விவரம் தெரிய வருகிறது. புராண காலம் தொட்டே இத்தலம் சிறப்பாக விளங்கி வந்துள்ளது.

புராண வரலாறு:ஸ்ரீ ராமபிரான் வனவாசத்தில் ஸ்ரீ சீதா தேவியை இழந்து எங்கும் அலைந்து தேடி வரும் வேளையில் இவ்விடம் வந்து பெண்ணை ஆற்றின் கரையில் ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத சுவாமியை ச்மரித்து ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அதோடு அமாவாசை அன்று பித்ரு தர்பணமும் செய்து வந்தார். இதை அறிந்து பின்நாளில் இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் , வருட திதி கொடுப்பது விசேஷமாக கருதப்பட்டது. ராமேஸ்வரம் சென்று செய்யும் பலன்கள் இததலத்திலேயே கிட்டுகிறது என்பது திண்ணம். எனவே மாரங்கியூர் வந்து அமாவசை அன்றோ அல்லது வருட திதி அன்றோ மூதாதயருக்கான திவச தர்பணங்கள் செய்தால் பித்ருக்களின் ஆசி கிட்டுவது உண்மை. இவாலயத்தில் அம்பாள் ஸ்ரீ பர்வதவர்த்தினி, காமகோட்ட நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறாள். இவ்வம்பிகையை வழிபட்டால் காஞ்சி காமாக்ஷி தேவியை வழிபட்ட பலன் வந்து சேருகிறது.

சங்க காலத்து தேவி:சங்க காலத்தில் ஸ்ரீ கொற்றவை தேவி வழிபாடு இருந்ததை சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. எட்டு கரங்களில் ஆயுதம் ஏந்தி சிம்ம மற்றும் மான் வாகனத்துடன் காட்சி அளிக்கும் தேவியை போரில் வெற்றி அருளும் தேவியாக வழிபட்டுள்ளனர். இந்த தேவியின் வடிவம் இங்கிருப்பது இத்தலத்தின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஆலயத்தின் தொன்மை:ஆதியில் பல்லவ அரசர்களால் கட்டப்பட்டு, பிறகு ராஜராஜ சோழன் முதல் பிற்கால சோழ அரசர்கள்,பாண்டியர்கள் மற்றும் சிற்றரசர்கள் வரை திருப்பணிகள் செய்யப்பட்டு தற்போது முழுதும் சிதிலமாகி காண்போர் மனதை வருத்த வைக்கிறது. இக்கோயிலில் இருந்த விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், பிக்ஷாடனார், சப்தகன்னி மாதாக்கள் மற்றும் பைரவர் திருஉருவ சிலைகள் இவ்வூர் மக்களால் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஜேஷ்டா தேவி(மூத்த தேவி) வழிபாடு:பல்லவர் காலத்தில் வழிபடபட்ட ஸ்ரீ ஜேஷ்டா தேவி திருவடிவம் இங்கு இருப்பது சிறப்பான அம்சம். இத்தேவியை வழிபடுவதினால் எல்லாவித செல்வங்களும் வந்து சேரும். முக்கியமாக செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் இத்தேவியை வழிபடுவது சிறப்பாகும். தாமரை மலரில் வீற்றிருக்கும் இத்தேவியை இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாதது ஓன்று.

கல்வெட்டுக்கள் ஏராளம்:இக்கோயிலில் உள்ள 27 கல்வெட்டுக்கள் தொல்பொருள் துறையினரால் 1936 ஆம் ஆண்டு படி எடுக்கப்பட்டு விவரங்கள் அறியப்பட்டன. அக்காலத்தில் ராஜேந்திரசிங்க நல்லூர் என்று இவ்வூர் அழைக்கப்பட்டதாகவும், கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றியும், கோயில் திருவிழா போன்றவைகளுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியும் அறிய முடிகிறது. மேலும் இதுதவிர ஸ்ரீ ரா மலிங்கேஸ்வரர் என்ற மூலவருக்கு திருவிராமீச்வரர் என்ற திருநாமமும் இருந்ததை அறிய முடிகிறது.

ஆலய திருப்பணி:இத்தகைய சிறப்பு வாய்ந்த பழமையான ஆலயம் முழுவதும் சிதிலமடைந்த நிலையில் மாரங்கியூர் மக்கள் ஓன்று சேர்ந்து தங்களால் முடிந்த அளவு உதவி செய்து திருப்பணி தொடக்கி உள்ளனர். இதற்காக அறக்கட்டளை ஒன்றை ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் அறக்கட்டளை என்ற பெயரில் நிறுவி உள்ளனர். இந்த தெய்வீக கைங்கர்யத்தில் பங்கு கொள்ளும் அடியவர்கள் பணமாகவோ காசோலையாகவோ கீழ் கண்ட இந்தியன் வங்கி கணக்கில் செலுத்தி விடலாம்.மேலும் விவரங்களுக்கு 9751966768-9159428289, 9843356682-9443538498 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அவனருளாலே அவன்தாள் வணங்கி இந்த தெய்வீக பணி இடையூறு இன்றி விரைவில் நிறைவேற பணிவோமாக.

இந்தியன் வங்கி கணக்கு எண் 6184761697-ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் அறக்கட்டளை
(1737) T புதுப்பாளையம்
IFSC CODE IDIB000T134
(7 photos)
கோயில் கருவறையில் மின்சார விளக்கு ஏன் போடுவதில்லை?

விளக்கில் எண்ணெய் ஊற்றி திரியோடு தீபம் ஏற்றுவது என்பது எவ்வளவோ தத்துவங்களை உள்ளடக்கியது. திரி எரிந்து தீபம் பிரகாசிக்கிறது. நம்மிடத்தில் உள்ள தீய குணங்களும், பாவங்களும் விலகி நல்லறிவும், புண்ணியமும் வெளிப்படவேண்டும் என்பது தான் தீபத்தத்துவமாகும். தீபஸ்ஸத் விஷயா: என ஆகமம் கூறுகிறது. மின்சார விளக்கு ஒளியில் பார்ப்பதை விட தீபஒளியில் சுவாமியைத் தரிசிப்பதே ஆனந்தம். சாஸ்திரம் தோன்றிய காலத்தில் மின்சாரம் கிடையாது. எனவே, அதைப் பற்றி சாஸ்திரங்களில் இல்லை.
காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சக்கரத்தாள்வார் சன்னதியின் எதிரே உள்ள அனந்தசரஸ் குளத்தில், நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் துவங்கியது. மூன்று நாட்களாக நடை பெற்று வரும் உற்சவத்தில், முதல் நாளான நேற்று முன்தினம் வரதராஜபெருமாள், பெருந்தேவி தாயாருடன் அனந்தசரஸ் குளத்தில் உள்ள தெப்பலில் இரவு 7:00 மணிக்கு, எழுந்தருளினார். மேலும், இண்டாம் நாளான நேற்று தெப்பலில் எழுந்தருளிய சுவாமி, குளத்தை 5 முறை வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், மூன்றாம் நாளான இன்றும் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் ஏற்பாடு செய்திருந்தார். இதேபோல், திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ரிஷப தீர்த்தக் குளத்தில் தைபூசத்தன்று தெப்பல் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக கோவில் திருப்பணி நடைபெற்றதினால் தெப்பல் திருவிழா நடைபெறவில்லை. கடந்த செப்டம்பரில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தைபூசத்தில் தெப்ப உற்சவம் நடத்த இந்து அறநிலையத்துறையினர் முடிவுசெய்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் ரிஷப தீர்த்த குளத்தில் தெப்பத்தி்ல் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தெப்பத்தில் திருமுறை இசை, நாதாஸ்வர இசை முழங்க குளத்தில் மூன்றுமுறை தெப்பத்தில் உலா வந்தார். நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக் கூடாது?

விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள். நாள் முழுக்க தெய்வசிந்தனை மாறாமல் பசியோடு இருப்பது விரதம். பசி என்ற நினைப்பு வரும்போதெல்லாம் தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோம் என்ற நினைவும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் விரதத்திற்கு உபவாசம் (கடவுளின் அருகில் வசித்தல்) என்ற பெயரும் உண்டு. அரிசி உணவை உண்டால் தூக்கம் வந்துவிடும். பால், பழம் போன்ற மென்மையான உணவுகளை உண்டு தெய்வ சிந்தனையுடன் நாளை கழிப்பதே முழுமையான விரதம்.
அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:கொற்றவாளீஸ்வரர்
அம்மன்/தாயார்:நெல்லையம்மன்
பழமை:500 வருடங்களுக்குள்
ஊர்:கோவிலூர்
மாவட்டம்:சிவகங்கை
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி

தல சிறப்பு:மகாமண்டபத்தில் ஆடல்வல்லான் சிலை அமைந்திருப்பது சிறப்பு.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில் கோவிலூர், சிவகங்கை.போன்:+91 94892 78792, 94424 39473, 90435 67074.

பொது தகவல்:இக்கோயிலில், வீணை சரஸ்வதி, சர்வ அலங்கார சாரதாம்பிகை, ஊர்த்துவ தாண்டவ நடராஜர், மீனாட்சி திருக்கல்யõணம், ரிஷபவாகனத்தில் சிவபார்வதி, மயில் மீது சண்முகர், வீரசேகர பாண்டியன் ஆகிய சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:வேலைக்கோ, படிக்கவோ செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:காவல் அம்பிகை: சிவபக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியரின் வயல் அறுவடைக்குத் தயாரானது. சுதன்மை, தன் மகள் அரதனவல்லிøயக் காவலுக்கு அனுப்பினாள். விளையாட்டுப் பெண்ணான அரதனவல்லி வயலுக்குப் போகமால் அருகிலிருந்த மலர்ச்சோலைக்கு சென்று விட்டாள். மகளுக்கு சுதன்மை தயிர்ச்சோறு கொண்டு சென்றாள். அங்கே, அவளது மகள் வடிவில், இக்கோயிலின் அம்பாள் காவல் செய்து கொண்டிருந்தாள். அன்புடன் சுதன்மை கொடுத்த சோறை சாப்பிட்டாள். சுதன்மை வீட்டுக்கு வரவும், அரதனவல்லியும் உள்ளே வந்து, அம்மா! பசிக்கிறது, சோறு போடு என்றாள். அதன் பின் அவளை விசாரிக்க, அம்பாளே மகள் வடிவில் வந்தது புரிந்தது. நெல் வயலில் காட்சி தந்தவள் என்பதால், இந்த அம்பிகைக்கு நெல்லையம்மன் என்று பெயர் வந்தது. இவளை வழிபட்டால் நம்மைச் சேர்ந்த பொன், பொருள்,பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் காவலாக துணை நிற்பாள்.

சிறப்பம்சம்: கோயில் முன்புறம் சதுரவடிவில் உள்ள தெப்பம் அனைவரையும் கவரும். நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் உள்ளது. தெப்பக்குளத்தை வெளிப்புறமாகச் சுற்றிவந்தால் ஒரு கி.மீ., தூரம் இருக்கிறது. கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவர் முத்துராமலிங்கதேசிகர். இவரே கோயிலைப் புதுப்பித்து திருப்பணிகளைச் செய்தவர். இவருக்குப் பின் வந்த சிதம்பரதேசிகரின் காலத்தில், ÷காவிலூர் புராணத்தை மீனாட்சி சுந்தரனார் எழுதினார்.

தல வரலாறு:திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவில் பகுதியை வீரபாண்டியன் ஆண்டு வந்தான். இக்கோயிலில் உள்ள காளீசர் அருளால் வாள் ஒன்றை, அந்த மன்னன் பெற்றிருந்தான். அதற்கு கொற்றவாள் என்று பெயர். கொற்றவாளுடன் போர்புரிந்து பகை மன்னர்களை வென்றான். ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது சிவன் மன்னனோடு விளையாடல் புரியத் தொடங்கினார். காட்டில் மாயமான் ஒன்று எதிர்ப்பட்டது. துரத்திச் சென்ற பாண்டியனின் கையிலிருந்த வாளைச் சிவன் காணாமல் போகச் செய்தார். வாளைத் தேடி மன்னன் அலைந்த போது, அங்கு ஒரு அந்தணனையும், புலியையும் சிவன் அவன் முன்னால் வரச்செய்தார். புலிக்குப் பயந்த அந்தணர், அபயம் அபயம் என்று அலறினார். அவர் மீது இரக்கம் கொண்ட மன்னன், புலியுடன் சண்டையிட்டு தன்னுயிரைக் கொடுக்கவும் முன்வந்தான். அப்÷பாது புலியும், அந்தணனும் அந்த இடத்திலிருந்து மறைந்தனர். அங்கிருந்த வன்னிமரத்தடியில் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கம் தென்பட்டது. மன்னனின் கொற்றவாள் அதன் முன் இருந்தது. இது சிவனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்து கொண்ட மன்னன், மனம் மகிழ்ந்து அந்த லிங்கத்தையே மூலவராக்கி, ஒரு கோயில் எழுப்பினான். கொற்றவாளை வழங்கிய சிவன் என்பதால், ராஜகட்க பரமேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. கொற்றவாளீஸ்வரர் என்றும் குறிப்பிடுவர். மதுப்பிரியன் என்ற முனிவரின் தவத்திற்கு அருள்புரிந்த இந்த சிவனுக்கு திரிபுவனஸ்வரர் என்றும் பெயருண்டு.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: மகாமண்டபத்தில் ஆடல்வல்லான் சிலை அமைந்திருப்பது சிறப்பு.
(9 photos)
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்

மூலவர்:காசி விஸ்வநாதர்
அம்மன்/தாயார்:விசாலாட்சி
தல விருட்சம்:வேப்பமரம்
தீர்த்தம்:மகாமக குளம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்: கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடத்தப்படும். ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடக்கிறது.

தல சிறப்பு:வேப்ப மரத்தின் கீழ் இங்கு சிவலிங்கம் உள்ளது சிறப்பாகும்.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்.

பொது தகவல்:சண்டிகேஸ்வரரின் எதிரே துர்க்கை இருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம். இவர்களைத் தவிர சப்த மாதர்கள் பைரவர், சூரியன் சந்திரன் , ஜேஷ்டாதேவி லிங்கோத்பவர் ஆஞ்சநேயர், மகிஷாசுரமர்த்தினி தெட்சிணாமூர்த்தி ஆகியோரும் காட்சிளிக்கின்றனர்.

பிரார்த்தனை:பெண்கள் ருதுவாகவும், திருமணத் தடை நீங்கவும், பாவங்கள் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:சில பெண்கள்வயது அதிகமாக இருந்தும் ருதுவாகாத நிலைமை ஏற்படும் சிலருக்கு எவ்வளவோ வைத்தியம் செய்தும் புத்திர பாக்கியம் இருக்காது. சில பெண்களுக்கு காரணமே இல்லாமல் திருமணம் தள்ளிப்போகும் . இப்படி பெண்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே மகாமக குளத்தின் கரையில் ஸ்பெஷல் கோயில் ஒன்று இருக்கிறது. விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தந்து நவகன்னியரை வழிபட்டால் இந்த பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

நவகன்னியரை 12 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்து பூஜித்து வந்தால் வயது அதிகமாகியும் ருதுவாகாத பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும். சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகும் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.

இத்தலத்தில் உள்ள க்ஷத்திரலிங்கம் அதிக உயரம் உள்ளதாகும் .ஒரு வேப்ப மரத்தின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வேப்பமரத்தின்கீழ் அம்பிகை அல்லது விநாயகர் சிலைகளே அமைக்கப்படும். இங்கு சிவலிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நவகன்னியர்களின் பாவம் போக்க காசியிலிருந்து இறைவன் இங்கு வந்து குடிகொண்டதால் காசி விஸ்வநாதர் என பெயர் பெற்றார் அம்பாள் விசாலாட்சியும் இறைவனுடன் இங்கு தங்கியுள்ளார்.

தல வரலாறு:அயோத்தி மன்னன் ராமன் தன் மனைவி சீதையை பிரிந்து தவித்தார். ராவணனை கொல்வதற்காக இலங்கை செல்லும் வழியில் தனது இயல்பான குணம் மாறி ருத்ராம்சம் பெற இத்தலத்திற்கு வந்து அகத்திய மாமுனிவரை வேண்டினார். குடந்தையில் சில நாட்கள் தங்கியிருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என அகத்தியர் மொழிந்தார் ராமனும் இங்கு தங்கி ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றார் எனவே இத்தலம் காரோணம் என்றும் அழைக்கப்படுகிறது.

நவ கன்னியர்களான கங்கா, யமுனா, நர்மதா சரஸ்வதி காவேரி கொதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா சரயு ஆகியோர் தங்களிடம் மக்கள் தொலைத்த பாவங்களை போக்கிக் கொள்ளும் வழி தெரியாமல் கயிலை சென்று சிவபெருமானை வணங்கினர் மகாமக தினத்தன்று கும்பகோணம் சென்று புனிதநீராடினால் உங்கள் பாவம் நீங்கும் என சிவன் கூறினார். அவ்வாறே ஒன்பது கன்னிகளும் மகா மக குளத்தில் புனித நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்து அங்கேயே அமர வேண்டும் என வேண்டினர். இறைவனும் அதற்கும் அனுமதித்தார். இப்போதும் ஒன்பது கன்னிகளின் பிரம்மாண்டமான சிலைகள் இத்தலத்தில் உள்ளன.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: வேப்ப மரத்தின் கீழ் இங்கு சிவலிங்கம் உள்ளது சிறப்பாகும்.
 
அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:அபிமுகேஸ்வரர்
அம்மன்/தாயார்:அமிர்தவள்ளி
தல விருட்சம்:நெல்லிமரம்
தீர்த்தம்:மகாமக குளம்
பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்:கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் விழா நடக்கும். தினமும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருள்வர்.

தல சிறப்பு:இந்த கோயிலில்தான் மிக உயரமான பைரவர் சிலைஉள்ளது. நவக்கிரக சன்னதியில் இதுமிகவும் வித்தியாசமானது. எட்டு கிரகங்கள் ஒரே உயரத்தில் இருக்க சனி கிரகம் மட்டும் உயரம் கூடுதாக இருக்கிறது.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்.போன்:+91 435-2420187

பொது தகவல்:இது ஒரு நோய் தீர்க்கும் தலம் ஏனெனில் இங்கு நெல்லி மரமே தல விருட்சம் நெல்லிக்காய்க்கு பல நோய்களை நீக்கும் சக்தி உண்டு. இக்கோயிலில் நெல்லிக்காய் படைத்து தானம் செய்தாலே நோயற்ற வாழ்வு வாழலாம்.

பிரார்த்தனை:சனி தோஷம் மற்றம் பிற தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:சனி கிழமைகளில் இங்கு நெய் தீபம் ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:கும்பகோணம் மகாமகத்தின் போது குளக்கரையில் காட்சி தரும் 12 தெய்வங்களுள் ஒருவர் அபிமுகேஸ்வரர். இவர் தேங்காயாக இருந்தது லிங்கமாக மாறியவர்.

சிறப்பம்சம்: இந்த கோயிலில் பைரவர் சிலை முக்கியமானது மகா மக கோயில்கள் பனிரெண்டிலும் உள்ள பைரவர்களைவிட இவர் உயரமானவர்கள். யோக தெட்சிணாமூர்த்தி ஒரு கால் மடித்த நிலையில் அமர்ந்துள்ளார்.. சனி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் வழிபடுவதன் மூலம் பிற தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை சனிக்கிழமைகளில் இவருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். அம்பாள் அமிர்தவள்ளி நினைத்த காரியத்தை நடத்தித் தரக் கூடியவள். அபிமுகேஸ்வரர் சன்னதியின் முன்பு உள்ள துவாரபாலகர்கள் நடராஜரைப் போல நடனமிடும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

தல வரலாறு:முன்னோரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார் , சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத் தோடு சேர்ந்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய் அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயைவை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில்நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய், அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன், என்றார்.

இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது கும்பம் மிதந்தது. கும்பத்திலிருந்த அந்த தேங்காய் சிதறி விழுந்தது. அந்த தேங்காய் லிங்கமாக மாறியது. இவரே அபிமுகேஸ்வரர் ஆவார். அபிமுகம் என்றால் நேர்கொண்ட பார்வை என பொருள். கும்பகோணம் மகாமக குளத்தைப் பார்க்கும் வகையில் இவரது கோயில் குளக்கரையிலேயே அமைந்துள்ளது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இந்த கோயிலில்தான் மிக உயரமான பைரவர் சிலைஉள்ளது. நவக்கிரக சன்னதியில் இதுமிகவும் வித்தியாசமானது. எட்டு கிரகங்கள் ஒரே உயரத்தில் இருக்க சனி கிரகம் மட்டும் உயரம் கூடுதாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!

கிருபானந்த வாரியார் வாரத்தின் ஏழு நாட்களும் இறைவனை வணங்க ஏழு சின்னச்சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப் பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் சொல்லலுங்கள். கந்தவேல் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை:தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றிசேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி
மீயுயர் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி

திங்கட்கிழமை:துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றிசிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதம் போற்றி

செவ்வாய்க்கிழமை:செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி
தெவ்வாதனை இல்லாத பரையோகியர் சிவதேசிக போற்றி
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி

புதன்கிழமை:மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனேஉதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவேபுதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி

வியாழக்கிழமை:மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றிதயாளசீலா தணிகை முதல் தளர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி

வெள்ளிக்கிழமை:அள்ளி வழங்கும் ஆறுமுகத்தரசே விரைசேர் கடம்பணிந்தவள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே
வெள்ளிமலைநேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி

சனிக்கிழமை:கனிவாய் வள்ளி தெய்வயானைக் கணவா உணர்வோர் கதிர்வேலாமுனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசேஇனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழசனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி

இவ்வாறு கிருபானந்த வாரியார் இயற்றிய தினம் ஒரு துதியைக் கூறுவதன் மூலம் இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
ஞானி ஹநுமாரும் அவரது ஞான குருவும்

அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்
தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||
ஆஞ்ஜநேய ஸ்வாமியைப் பற்றிய ச்லோகம்.

துளஸீதாஸ் என்ற பரம பக்தர் ’’ராம் சரித் மானஸ்’ – ‘ராமசரிதமானஸம்’ – என்கிற தலைப்பில் எழுதியிருக்கிற ஹிந்தி ராமாயணம் வடக்கேயெல்லாம் ரொம்ப ப்ரஸித்தம். இங்கே நாம் கம்பராமாயணத்தைக் கொன்டாடுவதைவிட அங்கே அவர்கள் அந்த ராமாயணத்தை ரொம்பவும் பூஜிதையாகக் கொண்டாடிப் பாராயணம் பண்ணுவது வழக்கம். முந்நூறு-முந்நூற்றைம்பது வருஷத்துக்கு முன் எழுதிய புஸ்தகம்தான் அது. தமிழ் மாதிரிப் பழமை பெறாத ஹிந்தி பாஷைக்கு அந்த ராமாயணத்தால் தான் இலக்கிய ரீதீயிலும் ஒரு ஏற்றம் கிடைத்திருக்கிறது. இலக்கியமாகச் சிறப்புப் பெற்றாலும், இலக்கணம் என்று பார்த்தால் அது புலவர் பாஷையில் எழுதினதில்லை. பாமர ஜனங்களும் ரஸித்துப் படிக்கிற மாதிரியான பாஷையிலேயே அதை துளஸீதாஸ் செய்திருக்கிறார். அதனால்தான் அது கம்ப ராமாயணத்தை விடவும் ஸர்வ ஜன ப்ரஸித்தமாக, பாமர-பண்டித ரஞ்ஜகம் என்னும்படியாக இருந்து வந்திருக்கிறது. பக்திக்கு பக்தி, கவிதாரஸத்துக்குக் கவிதா ரஸம் என்று இரண்டுமாக அது இருந்தாலும் அதனுடைய பக்தி சக்தியே பொது ஜனங்களை பலமாகத் தொட்டு வருகிறது.

துருக்கர்கள் ஆட்சியில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்காக பலவந்தம் நடந்து வந்த காலத்தில் எழுதிய புஸ்தகம் அது. அந்த பலவந்தத்தையும் மீறி ஜனங்கள் தாய் மதத்தில் ஒட்டிக் கொண்டிருந்ததற்கு ‘ராம்சரிதமானஸ்’ ஊட்டிய பக்தியும், மத உணர்ச்சியும் ஒரு முக்யமான காரணம். அதிலே வருகிற மஹாவீர பலவந்தரான ஆஞ்ஜநேயரின் ஸாஹஸங்கள் எந்த பலவந்தத்துக்கும் தலை பணியாத ஒரு மனோபாவத்தை ஜனங்களுக்கு ஊட்டியது. துளஸிதாஸே பரம பராக்ரமசாலியான ஆஞ்ஜநேயரின் காப்புக் கவசம் எந்த ஆபத்திலும் பக்தர்களுக்கு இருப்பதைக் காட்டி, ரொம்பவும் வீர சூரம் கொடுக்கும்படியாக ‘ஹநுமான் சாலீஸா’ என்று நாற்பது ஈரடிச் செய்யுள்கள் கொண்ட ஒரு தனி ஸ்தோத்ரமும் எழுதியிருக்கிறார். எவரானாலும் அதைப் படித்து மனப்பாடம் செய்யும்படியாகப் பண்ணும் ஆகர்ஷணம் அந்த ஸ்தோத்ரத்துக்கு உண்டு. படித்தாலே மஹா கோழையான சோப்ளாங்கிகளுக்கும்கூட, ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பலத்தில் தானும் பயில்வானாகி விட்ட மாதிரியான உத்ஸாஹத்தை அது கொடுக்கும். அந்த ஸ்தோத்ரமும் அவர் நாளிலேயே ஜனங்களுக்கிடையே நன்றாக ப்ரஸித்தமாகி, மதமாற்றத்துக்குத் தடுப்பு வேலி போட்டது.

துளஸீதாஸ் ஏதோ கல்பனையில் எழுதினாரென்றில்லாமல் ப்ரத்யக்ஷத்திலேயே ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹத்துக்குப் பாத்திரமானவர். அவருடைய ஜீவ்ய சரித்ரத்தைப் பார்த்தால் அதில் ஆஞ்ஜநேயரோடு அவர் நேர்முகமாகவே எவ்வளவு நெருக்கமாகப் பழகியிருக்கிறாரென்று தெரியும். அவரையே ஆஞ்ஜநேய அம்சமாகச் சொல்வதுண்டு. ஆஞ்ஜநேயர் மாதிரியே அவரும் மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்தான்.

அப்படிப்பட்டவர் பண்ணின ஆஞ்ஜநேய ஸ்தோத்ரம்தான் நான் ஆரம்பத்தில் சொன்னது. அவருடைய ராம் சரித் மானஸில் ஆஞ்ஜநேய ப்ரபாவத்துக்கேயான ஸுந்தர காண்ட ஆரம்பத்தில் வரும் மங்கள ச்லோகங்களில் ஹநுமத்பரமாக வருகிற ச்லோகம்தான் அது. உள்ளே கதை ஹிந்தி பாஷையில் இருந்தாலும், ‘ராம் சரித் மான’ஸில் வரும் மங்கள ச்லோகங்கள் எல்லாம் அழகான ஸம்ஸ்க்ருதத்திலேயே இருக்கும். அப்படி ஒன்றுதான் நான் சொன்னது.

அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்
தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||

’வாதஜாதம் நமாமி’ என்று நமஸ்காரம் பண்ணி முடிகிறது. ‘வாதஜாதன்’ என்பதுதான் இந்த ச்லோகத்தில் ஆஞ்ஜநேயரின் பெயராக வருவது. ‘வாதஜாதன்’ என்றால் ‘வாயுகுமாரன்’. ‘வாதம்’-வாயு; ‘வாயுப் பிடிப்பு’ என்பதை ‘வாதம்’ என்றும் சொல்கிறோமல்லவா? ‘ஜாதன்’ – குமாரன். ‘வாதாத்மஜன்’ என்றும் இதே அர்த்தத்தில் ஆஞ்ஜநேயருக்கு பெயர் உண்டு. ‘வாத(da)ம்’ இல்லை; ‘வாத(ta)ம்’ என்று சொல்ல வேண்டும். ‘வாதம்’ என்றால் பேசுவது; ‘ஆர்க்யூ’ பண்ணுவது.

இந்த ச்லோகத்தை நான் சொல்லக் காரணம், அதில் ‘ஞானினாமக்ரகண்யம்’ – ஞானினாம் அக்ரகண்யம்’ என்று வருவதுதான். அப்படியென்றால் ‘ஞானிகளுக்குள்ளே முதல்வராக எண்ணத் தக்கவர்’. ப்ரஹ்ம ஞானிகள், ஆத்ம ஞானிகள் என்று சொல்லப்படுகிறவர்களில் ஆஞ்ஜநேய ஸ்வாமிக்குத் தலை சிறந்த இடம் என்று ச்லோகம் சொல்கிறது.

பொதுவிலே ஆஞ்ஜநேயருடைய சிறப்புக்களாகச் சொல்லப்படுபவை அவருடைய பலம், அதாவது சரீர பலம், வீர பராக்ரமம், துணிச்சல், கார்ய ஸாமர்த்யம், அபாரமான புத்தி தீக்ஷண்யம், குறிப்பாக வ்யாகரணத்தில் படுத்வம் (இலக்கணத்தில் பேராற்றல்), அப்பழுக்குச் சொல்ல முடியாத ப்ரஹமசர்யம், தன்னுடைய இத்தனை சக்திகளையும் தனக்காக இல்லாமல் பகவத் ப்ரீதியாக தர்மத்துக்கே ப்ரயோஜனப்படுத்தியது, எல்லாவற்றுக்கும் மேலாக ராம பக்தியில் அப்படியே உருகி ராமருடைய அடியார்க்கடியாராக அடங்கிக் கிடந்த விநயம் ஆகியவைதான். சரீர பலம், கார்ய ஸாமர்த்யம், செய்கிற கார்யத்திலேயே ஆடாத, அசையாத ஈடுபாடு ஆகியவற்றால் அவரைப் பெரிய கர்ம யோகியாகவும், அசஞ்சலமான ராம பக்தியால் பக்த யோக சிகாமணியாகவும்தான் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஞான யோகியாக அவரை நம்மில் ரொம்பப் பேர் தெரிந்து கொள்ளவில்லை.

அவர் மஹா புத்திமான். ’புத்திமதாம் வரிஷ்டம்’ என்று சொல்கிறபடி* இருந்தவர் என்பதும் நமக்குத் தெரியுமானாலும், புத்தி வேறே, ஞானம் வேறேதானே? இன்றைக்கு லோகத்தில் பல துறைகளில் மஹா புத்திமான்களாகப் பல பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஞானி என்று சொல்ல முடியுமா? ப்ரஹ்மம் என்ற பரமாத்மாவே ‘தான்’ என்கிற ஜீவாத்மா என்ற அறிவை அநுபவமாகப் பெற்றவனைத்தான் ஞானி என்று சொல்கிறது – ப்ரஹ்மஞானி என்றும், ஆத்மஞானி என்றும் சொல்கிறது. அந்த அறிவைப் பெறவும் நிரம்ப தத்வ சாஸ்த்ரங்கள் படித்து அவற்றில் புத்தியைச் செலுத்தி அலசிப் பார்க்க வேண்டுமாதலால், இங்கேயும் புத்தி அவசியம்தான் என்றாலும், அந்த புத்தி ஆத்ம விஷயத்தில் மட்டுமே ப்ரவர்த்திப்பதாக இருக்க வேண்டும். புத்திமான்களாக மட்டும் இருப்பவர்கள் அப்படி தத்வ சோதனம் செய்பவர்களாக இல்லாமல் வேறே ஸ்ப்ஜெக்டுகளிலேயே புத்தியைப் ப்ரயோகிப்பவர்களாக இருப்பதுதான் ஜாஸ்தி. தத்வ ஆராய்ச்சியே அவர்கள் பண்ணினாலுங்கூட, அது பெரும்பாலும் வெறும் மூளையின் அலசலாகத்தான் இருக்கும்; பரமாத்ம-ஜீவாத்ம ஐக்யத்தை அநுபவித்தாக வேண்டும் என்ற ஹ்ருதய தாபம் கலக்காத மூளையலசலாக மட்டுமே இருக்கிற அது ப்ரயோஜனமில்லை. அது ஞானமுமில்லை. மஹா புத்திமானேயானாலும் அப்படிப் பட்டவர் ஞானிக்கு எங்கேயோ தள்ளி நிற்கிறவரே.

இங்கே ’புத்திமதாம் வரிஷ்ட’ரான ஆஞ்ஜநேயர் மற்ற புத்திமான்களுக்கெல்லாம் வித்யாஸமாக இருக்கிறார். அவர் வேதாந்தத்தின் பரம தாத்பர்யத்தை அறிந்தநுபவித்தவர். அது மட்டுமில்லை. அப்படி அறிந்தநுபவித்தவர்களிலேயும் முதலாமவராக நினைக்கத்தக்கவர், ‘ஞானினாம் அக்ரகண்யர்’ என்று அவரை நேருக்கு நேராக அறிந்திருந்த துளஸீதாஸ் சொல்கிறார்.

லோகமறிந்த ஆஞ்ஜநேயருடைய மற்றப் பெருமைகளில் சிலதையும் அவர் இந்த ச்லோகத்தில் சொல்லியிருப்பதால், அதிகப்படியாக அவர் சொல்லியிருக்கும் இதுவும், அதாவது ஆஞ்ஜநேயர் ஞானி ச்ரேஷ்டர் என்பதும் பரம ஸத்யமாகத்தான் இருக்கவேண்டும்.

அந்த மற்றப் பெருமைகள் என்ன? ‘அதுலித பலதாமம்’ என்று ஆரம்பிப்பது ஆஞ்ஜநேயரின் சரீர பலத்தைச் சொல்வதுதான். ‘அதுலித பலதாமர்’ என்றால் ‘தன்னிகரில்லாத பலத்தின் இருப்பிடமாக இருப்பவர்’. அப்புறம் ‘ஸ்வர்ண சைலாப தேஹம்’ என்பதாக அவருடைய சரீரம் பொன்மலையான மேரு மாதிரிப் பெரிசாக, ப்ரகாசமாக இருப்பதைச் சொல்கிறார். அந்த ஸ்வர்ண வர்ணம் அவருடைய ப்ரஹ்மசர்ய தேஜஸால் ஏற்பட்டது. ‘ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி’ என்று மாணிக்க வாசகர் சொன்னார். ஆஞ்ஜநேய ஸ்வாமியிடமோ உள்ளொளி ஸ்வர்ண காந்தியாக ஊனிலும் ப்ரகாசித்தது; அந்த ஊனை உருக்காமல் அவர் மேரு பர்வதம் மாதிரியான சரீரியாக இருந்தார். ஏனென்றால், அவர் கர்ம யோகியாக அஸாத்யமான கார்யங்களைச் செய்ய வேண்டியிருந்ததே, அதனால்! அந்த அஸாத்யமான கார்யங்களில் ஒன்றைத்தான் அடுத்ததாக வரும் ‘தநுஜ வன க்ருசானும்’ என்பது சொல்கிறது. அப்படியென்றால், காட்டுத் தீ என்று உண்டே, அப்படி அவர் ராக்ஷஸ குலம் என்கிற காட்டை பஸ்மம் பண்ணின அக்னியாயிருந்தவர் என்று அர்த்தம்.

இப்படி அவருடைய கார்ய லோக சதுரத்தைச் சொன்னவிட்டுத்தான் சட்டென்று ஞானி லோகத்துக்குத் துளஸீதாஸ் போய் அவரை ‘ஞானினாம் அக்ரகண்ய’ராக ஸ்தோத்ரிக்கிறார்.

அதற்கப்புறம் அவருடைய மனோ விசேஷத்தைச் சொல்கிறார்: ‘ஸகல குணநிதானம்’. அத்தனை ஸத்குணங்களுக்கும் ஒரு தேக்கமாக, கஜானாவாக அவர் இருந்தாரென்று அர்த்தம். அந்த குணங்களில் ஒன்றாகவே அவருடைய புத்தி தீக்ஷண்யத்தையும் வைத்துக்கொண்டு விடலாம். அதற்கப்புறம், ‘ராமதாஸர்’ என்று ஸேவகராகப் பெயரெடுத்த அவரே ஸுலபத்தில் அடக்கி வைக்க முடியாத வானர ஜாதி முழுதையும் அடக்கித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அதீச்வரனாக – Lord ஆக – இருந்தாரென்பதைச் சொல்கிறார்: ‘வானராணாம் அதீசம்’.அப்படிச் சொன்னதிலேயே figurative – ஆக, ஸுலபத்தில் அடங்காமல் பிய்த்துக் கொள்ளும் இந்த ஜீவாத்மாவின் இந்த்ரியங்களை, மனஸை – குரங்கு மனஸ், குரங்குப் புத்தி என்றே சொல்கிறதை – கட்டுப் படுத்தி வைத்திருந்த ஜிதேந்த்ரியரான ப்ரஹ்மசாரி அவர் என்றும் தெரிவித்துவிடுகிறார்.

முடிவாக, ஆஞ்ஜநேயர் என்ற மாத்ரத்தில் நாம் முதலில் நினைப்பதான அவருடைய ராம் ஸம்பந்தத்தைச் சொல்கிறார்: ‘ரகுபதி வரதூதம்’.ராமசந்த்ர மூர்த்தியின் சிறப்பு வாய்ந்த தூதர் அவர்.

‘வரதூதம்’ என்பதற்குப் பதில் ‘ப்ரிய பக்தம்’ என்றும் இன்னொரு பாடம். ரகுபதியான ஸ்வாமியின் பரம ப்ரியத்தைப் பெற்ற பக்தர், அவரிடம் பரம ப்ரியம் வைத்த பக்தர் என்ற இரண்டு விதத்திலும் இவர் அவருக்கு ‘ப்ரிய பக்தர்’.

ஆஞ்ஜநேய ஸ்வாமியைப் பற்றிய இத்தனை விஷயங்களையும் முதலில் சொல்லி, முடிவாக இந்த விஷயங்களுக்கெல்லாம் பாத்ரமான நபர் யார் என்று பேர் சொல்லி அடையாளம் காட்டவேண்டிய இடத்தில் ‘வாதஜாதம்’ என்று போட்டு அவருக்கு ‘நமாமி’ – ‘நமஸ்கரிக்கிறேன்’ – என்று ச்லோகத்தைத் துளஸீதாஸ் முடித்திருக்கிறார்.

இத்தனையிலும் நமக்கு இப்போது விஷயம் ‘ஞானினாம் அக்ரகண்யம்’ என்பதே. ஆஞ்ஜநேய ஸ்வாமி ப்ரஹ்மஞானிகளுக்குள்ளே ப்ரதம ஸ்தானம் கொடுத்து மதிக்கப்படவேண்டியவர் என்று அது தெரிவிக்கிறது. அவரோடு ப்ரத்யக்ஷமாகப் பழகி அறிந்த துளஸீதாஸ் நமக்குத் தெரிந்த அவருடைய சிறப்புக்களைச் சொல்லும்போது நடுவிலே, மத்யமணி மாதிரி இந்தச் சிறப்பையே சொல்லியிருக்கிறார்.

’அதுலித’, அதாவது நிகரில்லாத, பலம்; ஸ்வர்ண பர்வதமாக மேரு இருக்கிறதே, அது மாதிரியான தேஹம்; ராக்ஷஸ குலம் என்கிற வனத்தை பஸ்மமாக்கும் அக்னியாக இருக்கும் வீர சூரம் என்றிப்படி முன்னால் மூன்று சிறப்புக்கள். ஸகல ஸத் குண நிலயமாக இருப்பது; வானரகணாதிபதியாக இருப்பது; ராமருக்குச் சிறப்பு வாய்ந்த தூதராக இருப்பது என்றிப்படி பின்னால் மூன்று சிறப்புக்கள். இந்த இரண்டு ‘மூன்று’களுக்கும் நடுவிலே, நடுநாயகமாக அவர் ஞானிகளில் அக்ரகண்யராக இருப்பதைச் சொல்லியிருப்பதால், அது சிறப்புக்களிலும் சிறப்பிடம் பெற்றிருப்பதாக ஆகிறது.

ஆஞ்ஜநேயர் ப்ரஹ்மஞானி என்றவுடனே நம்முடைய வைதிக ஸம்ப்ரதாயத்தில் அடுத்த கேள்வி ஒன்று வரும். அநுபவிகள் உருவாக்கியிருக்கிற நம்முடைய ஸம்ப்ரதாயக் கருத்துப்படி ஒருத்தருக்கு ப்ரஹ்மஞானம் கிடைத்திருக்கிறது என்றால், அதைத் தானாக அவர் ஸம்பாதித்திருக்க முடியாது. ப்ரஹம வித்யா உபதேசகரான ஒரு குருவின் உபதேசத்தைக் கேட்டு, அந்த உபதேச பலத்தால், உபதேசிக்கிற குருவின் அநுக்ரஹ பலத்தால்தான் ஸம்பாதித்திருக்க வேண்டும். உபதேசம் பெறுகிற சிஷ்யரும் நிரம்ப ப்ரயாஸை, ப்ரயத்னத்தோடு ஸாதனை பண்ணத்தான் வேணுமென்றாலும் அவர் தாமே பண்ணும் மனன, நிதித்யாஸனாதிகளுக்கு முன்னால் ‘ச்ரவணம்’ என்பதாக அவர் குருவிடம் உபதேசம் பெறுவதுதான் வருகிறது. ச்ரவண-மனன-நிதித்யாஸனம் என்றே படி வரிசை. ‘ச்ரவணம்’ : குருவிடம் உபதேசம் கேட்டுக் கொள்வது: ‘மனனம்’: அப்புறம் அதைச் சிஷ்யர் ஓயாமல் உருப்போடுவது; ‘நிதித்யாஸனம்;: உருப்போட்டதில் அப்படியே தியானத்தில் ஆழ்ந்து போய் அதை அநுபவமாக்கிக் கொள்வது.

ஆகையினால் ஒருவர் ஞானம் பெற்றாரென்றால் அடுத்த கேள்வியாக வருவது, அவர் யாரிடம் ச்ரவணம் செய்தார். அதாவது அவருக்கு ஞானோபதேசம் செய்த குரு யார் என்பதுதான்.

ஞானி ஆஞ்ஜநேயருக்கு உபதேசம் செய்த ஞானாசார்யர் யார்?

அவருடைய பால ப்ராயத்தில் அவருக்கு ஸுர்ய பகவான் குருவாக இருந்து உபதேசித்தாரென்று கதை கேட்டிருக்கலாம். அவதரித்தவுடனேயே அவர் உதிக்கிற ஸுர்யனைப் பார்த்து அது ஒரு செம்பழம் என்று நினைத்து அதைப் பிடிப்பதற்காக ஸுர்ய மண்டலத்துக்கு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தவர். அதற்குச் சில வருஷம் அப்புறம் அந்த ஸுர்ய பகவானிடமே சிஷ்யராக இருந்து பாடம் கேட்டார். உதயகிரியிலிருந்து அஸ்தமன கிரி வரை குருவான ஸுர்யனுக்கு எதிர் முகமாக சிஷ்ய க்ரமத்தில் அவரோடு கூடவே ஸஞ்சாரம் செய்துகொண்டு பாடம் கேட்டார். ஆனால் அது ஞான போதனைப் பாடமில்லை. ஆத்மாநுபவமாக இல்லாமல் மூளை அறிவினால் பெறக்கூடிய மற்ற எல்லாத் துறைகளிலும், மற்ற ஸகல சாஸ்த்ரங்களிலுமே ஸுர்ய பகவான் ஆஞ்ஜநேயருக்கு உபதேசம் செய்தார். முக்யமாக வ்யாகரண சாஸ்த்ரங்கள் ஒன்பதையும் உபதேசித்தார். அது அவருடைய பால ப்ராயத்தில். அவற்றிலெல்லாம் தேர்ச்சி பெற்றுத்தான் அவர் ‘புத்திமதாம் வரிஷ்டம்’ என்னும்படி அறிவாளிகளில் சிறப்பிடம் பெற்றது. ஆனாலும் அறிவாளி வேறே, ஞானி வேறேதானே? ஞானியாக அவர் ஆனது எப்போது? அப்போது அவரை அப்படி ஆக்கிய குரு யார்?

ஆத்ம சாஸ்த்ரத்துக்குத்தான் பரவித்யை என்று பெயர். அது தவிர்த்து மற்ற எல்லா சாஸ்த்ரங்களும் அபரவித்யைதான். ‘பரம்’: superior. ’அபரம்’ : inferior.

அபர வித்யையால் ஆஞ்ஜநேயருடைய புத்தியை சோபிக்க வைத்த குரு ஸுர்யன் என்கிறாற்போல பரவித்யையால் அவருடைய அந்தராத்மாவையே சோபிக்க வைத்த குரு யார்? அவர் இவருக்கு உபதேசித்த கதை எப்போது நடந்தது?

ஆஞ்ஜநேயர் எப்போது ஞானோபதேசம் பெற்றாரென்றால், ராமாயணக் கதை முக்காலே மூணு வீசம் முடிந்து, ராம பட்டாபிஷேகமும் ஆன அப்புறந்தான். அதாவது அவர் ஸுர்யனிடம் உபதேசம் பெற்றுக் கொண்ட பாலப் பிராயத்திலிருந்து எத்தனையோ வருஷம் பின் தள்ளித்தான்.

அவர் பெரியவராகி, ‘ஆஞ்ஜநேய ப்ரபாவம்’ என்று இப்போது நாம் கொண்டாடிக் கொண்டு சொல்கிற மஹத்தான லீலைகளை ராம ஸேவையாகப் பண்ணியாகி விட்டது. ‘ஸமுத்ரம் தாண்டி தூது போனார். அந்த தூதுப் பணியை வெற்றிகரமாக ஆற்றினார். அசோக வனத்தை அழித்தார். லங்கையை தஹனம் பண்ணினார். அப்புறம் ராம-ராவண யுத்தம் வந்தது. அதன்போது ஸேது கட்டுவதிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு கட்டத்திலும் அபாரமான ஸாஹஸ கார்யங்கள் பண்ணினார். ஒரு பக்கம் ராக்‌ஷஸ ஸைன்யத்தை அடித்து நொறுக்கி உயிரைப் போக்கியவரே இன்னொரு பக்கம் ராம-லக்ஷ்மணர்கள் உள்பட ஸ்வபக்ஷ ஸைன்யம் முழுதும் ப்ரஜ்ஞா பங்கமாகிச் சாய்ந்தபோது ஸஞ்ஜீவி பர்வதத்தைக் கொண்டுவந்து உயிர் ஊட்டவும் செய்தார்; - என்றிப்படியெல்லாம் சொல்கிற அவருடைய அத்தனை ப்ரபல லீலைகளையும் அவர் செய்தாகிவிட்டது. அதற்கப்புறம் ராவண வதமாகி, ஸ்வாமி அயோத்தியில் சக்ரவர்த்தியாக ஆண்டு கொண்டிருந்த போது அவருக்கே தம்மை அர்ப்பணம் செய்து கொண்டு ஆஞ்ஜநேயர் ஸேவகம் பண்ணிக் கொண்டிருந்த போதுதான் அவர் ஞானோபதேசம் பெற்றுக் கொண்டது.

‘ராமருக்கே ஸேவகம் என்று ஆத்மார்ப்பணம் செய்து கொண்டவர் அதை விட்டுவிட்டு எங்கே போய், யாரிடம் உபதேசம் வாங்கிக் கொண்டிருக்க முடியும்?” – இப்படிக் கேள்வி எழும்புகிறது.

தம்முடைய உயிருக்குயிரான ராமரை விட்டுவிட்டு அவர் எங்கேயும் போகவில்லை. வேறே எவரிடமோ உபதேசம் பெறவுமில்லை.

ஸ்ரீராம ஸந்நிதியிலேயே, அந்த ராமரிடமேதான் உபதேசம் பெற்றுக்கொண்டார்.

ஆஞ்ஜநேய ஸ்வாமிக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசம் செய்த குரு ராமரேதான்.

ப்ரபு-ஸேவகர் என்ற உறவிலும், பகவான் பக்தர் என்ற உறவிலுந்தான் நாம் பொதுவாக ராம-ஆஞ்ஜநேயர்களைப் பார்ப்பது. இங்கேயோ வேறே ஒரு புதுமையான கோணத்தில் அவர்களை குரு-சிஷ்யர்களாகப் பார்க்கிறோம். ராமகுருவின் சிஷ்யராக ஆஞ்ஜநேயரைப் பார்க்கிறோம். இதிலே தனியான ஒரு விசேஷம் தெரிகிறதோல்லியோ? ஸத்குரு-ஸச்சிஷ்ய உறவைப்போல ஒன்று கிடையாதே! ஆஞ்ஜநேயர் பரம ஸத்புருஷர். ராமரோ ‘ஸத்’ என்றே சொல்லப்படுகிற மெய்ப்பொருளான பரமாத்மா. இரண்டு பேரும் குரு-சிஷ்யர்களாக இருந்ததை நினைத்தாலே புண்யம்.

‘ராஜாராமன்’ என்றே பெயர் கொண்ட சக்ரவர்த்தியாக ஸ்வாமி, இன்றைக்கும் ‘ராம ராஜ்யம்’ என்று சொல்லும்படியான முறையில் தர்ம பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அந்த ராஜாவே ஞானராஜாவாகவும் இருந்துகொண்டு ஆத்மோபதேசமும் பண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய மாமனார் ஜனகர் ராஜர்ஷி (ராஜரிஷி) என்பது ப்ரஸித்தம். மாப்பிள்ளையும் மாமனார் மாதிரிதான். ஒரு பக்கம் கார்ய வீரரான ராஜா; இன்னொரு பக்கம் ஞானச்ரேஷ்டரான ரிஷி; வேதாந்தத்தை வ்யாக்யானம் செய்தவர்.

அவர் ஹநுமாருக்கு உபதேசித்தது மாத்திரமில்லை. அன்றைக்கு லோகத்தில் இருந்த ரிஷிகணங்களுக்கெல்லாமும் அவர் உபதேசித்தார். அந்த ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் அவர் ஸாக்ஷாத் நாராயணாவதாரம் என்று தெரியும். தங்களை ஹிம்ஸித்து வந்த ராவணாதி ராக்ஷஸர்களை நாசம் செய்யவே முக்யமாக அந்த அவதாரம் ஏற்பட்டது என்றும் தெரியும். அந்தக் காரியம் முடிந்து ராமர் ராஜாவாகி ஆட்சி செலுத்த ஆரம்பித்து விட்டார். அப்போது தம்முடைய தர்ம ஆட்சி மூலம் அவர் ஸாதாரண ஜனங்களெல்லாம் லக்ஷ்யமாகக் கொண்டு முன்னேற வேண்டிய தர்ம மார்க்கத்தை அவர்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தார். அதுவும் ஒரு அவதார கார்யந்தான். அதோடு மூன்றாவது கார்யமாக இன்னொன்றையும் அந்த ரிஷிகள் சேர்த்து விட்டார்கள். என்னவென்றால்:

பூர்வாங்கம்-உத்தராங்கம் என்று இரண்டு. பூர்வாங்கம் முதலில் பண்ண வேண்டியது; உத்தராங்கம் பின்னால் பண்ண வேண்டியது. வைதிக ஸம்ப்ரதாயத்தில் இந்த இரண்டை வைத்தே, முதலில் நம்முடைய ஸாமான்ய தசையில் இஹ லோகத்தில் நல்லபடி வாழ்க்கை நடத்திப் பரலோகத்துக்கு ப்ரயத்னம் பண்ணும் பக்குவத்தைப் பெறுவதற்காக தர்மம் என்பதை அறிந்து அப்யஸிக்க வேண்டுமென்றும், அந்தப் பக்குவம் பெற்றவர்கள் அதற்கப்புறம் தர்மம்-அதர்மம் இரண்டுக்கும் அப்பாற்பட்ட ப்ரஹ்மம் என்பதை அறிந்து அநுபவிக்க வேண்டுமென்றும் வைத்தார்கள். ஷட்-தர்சனங்கள் என்று நமக்கு ஆறு சாஸ்த்ரங்கள் இருப்பதில், ‘தர்ம ஜிஞ்ஜாஸா’ என்று முதலில் தர்மத்தை அறிய ஆசைப்பட வேண்டிய நம்மை தர்மத்தில் ஈடுபடுத்துவதற்காகவே பூர்வ மீமாம்ஸை என்கிற தர்சனத்தையும், அதை அறிந்த பிற்பாடு ‘ப்ரஹ்ம ஜிஞ்ஜாஸா’ என்று ப்ரஹ்மத்தை அறிய ஆசைப்படுகிறபோது அந்த ப்ரஹ்மத்தில் ஈடுபடுத்துவதற்காகவே உத்தர மீமாம்ஸை என்ற தர்சனத்தையும் வகுத்துக் கொடுத்தார்கள். அப்புறம் அந்தப் பூர்வ மீமாம்ஸைக்கே மீமாம்ஸை என்ற பெயரும், உத்தர மீமாம்ஸைக்கு வேதாந்தம் என்ற பெயரும் வந்துவிட்டது. தர்ம மார்க்கமான மீமாம்ஸை கர்ம மயமானது. ப்ரஹ்ம மார்க்கமான வேதாந்தம் ஞான விசார மயமானது.

ராக்‌ஷஸ வதம் என்ற முதலாவது அவதார கார்யம் ஆன பிற்பாடு ராமர் சக்ரவர்த்தியாகி ஸாதாரண நிலையிலேயுள்ள லோக ப்ரஜைகளுக்கெல்லாம் தம்முடைய நீதி பரிபாலனத்தாலும், தாம் செய்யும் யஜ்ஞாதி வைதிக கர்மாநுஷ்டானத்தாலும் தர்ம மார்க்கத்தைக் காட்டிக் கொண்டிருப்பதான இரண்டாவது அவதார கார்யத்தையும் பண்ணினார். இப்போதே அவர் ரிஷிகளான தங்களையெல்லாம் ஞான மார்க்கத்தில் நிலைப்படுத்துவதான மூன்றாவது கார்யத்தையும் பண்ணட்டும் என்று அந்தக் கால ரிஷிகள் எல்லாரும் நினைத்து அவரிடம் வந்து கூடினார்கள்.

எந்த அந்தரங்கத்தையும் துளைத்துக் காணக்கூடிய பார்வை பெற்ற அந்த ரிஷிகளுக்கெல்லாம் நன்றாகத் தெரியும் ராமர் உள்ளூர பரம ஞானி என்று. வெளியிலே அவர் மாநுஷமாகக் கூத்தடித்தார்; ஒரு ஸமயம் ரெளத்ர கோபம் கொண்டார்; இன்னொரு ஸமயம் அழு அழு என்று அழுதார் என்றாலும் இதெல்லாம் நடிப்புத்தான் என்று அவர்களுக்குத் தெரியும். உள்ளுக்குள்ளே ஸகுணமாகப் பார்த்தால் அவர் மஹாவிஷ்ணுவே, அதற்கும் உள்ளே நிர்குணமாகப் பார்த்தால் பரப்ரஹமமாகவே இருந்து கொண்டிருக்கிற ஞானி என்று அவர்களுக்குத் தெரியும். ஆகையினால், ஏற்கெனவே தாங்கள் உபதேசம் வாங்கிக் கொண்டு அநுபவம் பெற்றவர்கள்தானென்றாலும், பகவானாகவும் பரப்ரஹ்மமாகவுமே இருக்கப்பட்ட ராமரின் வாயால் மறுபடி உபதேசம் கேட்டால் அப்போதுதான் தாங்கள் பெற்ற அநுபவம் நின்று நிலைத்துத் தங்களுக்கு ஜீவன் முக்தி ஸ்திதி கிட்டும் என்று அவர்கள் கண்டார்கள். அதனால் அவரிடம் கூட்டமாக வந்து வேதாந்தத்தை உபதேசிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்கள்.

உபதேசம் கொடுப்பதற்கு ராமருக்கும் இஷ்டந்தான். ஏன் இஷ்டம் என்றால், ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று பழமொழி அல்லவா? அப்படி, ப்ரஹ்ம வித்யையைத் தான் கற்றுக் கொண்டு பேரின்பம் என்பதையே அடைந்தவர்களுக்கும் அதை மற்றவர்களோடு ‘ஷோ’ பண்ணிக் கொள்ளவேண்டும் என்று இருக்கும். ராமர் ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபம்; ப்ரஹ்மானந்தத்தில் இயற்கையாகவே திளைத்துக் கொண்டிருப்பவர்; அவர் யாரிடமும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை தான். என்றாலும் அவதாரம் என்று நரலீலை பண்ணும் போது அவரும் ஜனங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக குருமுகமாகவே தாம் ப்ரஹ்ம வித்யை கற்றுக் கொன்டதாகத்தான் காட்டினார். நல்ல யெளவனப் பிராயத்திலேயே, ஒரு ராஜகுமாரன் பெறவேண்டிய தநுர்வேதம் உட்பட்ட ஸகல வித்யைகளையும் வஸிஷ்டரின் குருகுலத்தில் பெற்றுக்கொண்டபோதே வேதாந்தத்திலும் – அதுதான் ப்ரஹ்ம வித்யை என்பது; அதிலும் – அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொண்டார். ஆனால் அதோடு அவருடைய ஆர்வம் – ஞான தாஹம் என்பது – தணியவில்லை. அதனால் விஸ்தாரமாகவே வஸிஷ்டரிடமிருந்து ப்ரஹ்ம வித்யோபதேசம் கேட்டும் பெற்றுக் கொண்டார். அந்த உபதேசம் ஒரு பெரிய புஸ்தகமாக இருக்கிறது. அத்வைத வேதாந்தத்தில் ஒரு ‘அதாரிடி’ என்று சொல்லக்கூடிய ‘க்ளாஸிக்’காக அது இருக்கிறது. அதற்கு ’யோக வஸிஷ்டம்’ என்று பெயர். தமிழிலும் அதற்குப் பழமை வாய்ந்த மொழி பெயர்ப்பு இருக்கிறது. அதை ’ஞான வாசிட்டம்’ என்பார்கள். ‘வாசிட்டம்’ என்று மட்டுமேயும் சொல்வதுண்டு. யோகப் புஸ்தகமாக அதைச் சொல்வதைவிட ஞானப் புஸ்தகமாகவே சொல்வதுதான் அதிகப் பொருத்தம். ஸாதனா மார்க்கம் எல்லாவற்றையுமே யோகம் என்று சொல்வதுண்டு – கர்ம யோகம், பக்தி யோகம், ஞான ய