சனி, 2 மே, 2020

#சேலம் பெரியவா இல்லம்
#SALEM PERIYAVA GRUHAM
   
சேலத்தில் தனக்கென ஒர் இடத்தைக் கேட்டு வாங்கி அதில் கடந்த மூப்பத்தி எட்டு ஆண்டுகளாக பல ரூபங்களில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மஹா பெரியவா!
  
பெரியவாளின் பரம பக்தரான ராஜ கோபால் மாமா இந்தியன் காபி போர்டில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அது. அப்போது அவரின் பெற்றோர் சென்னையில் இருந்தார்கள். அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத்தின் மாப்பிள்ளை தான் காஞ்சி மகானின் தீவிர பக்தரான பிரதோஷம் மாமா.

ராஜகோபால் தம்பதிகள் காஞ்சி மஹானிடம் பக்தி கொண்டு இருந்தார்களே தவிர அவ்வளவு நெருக்கம் இல்லை. பிரதோஷம் மாமா ஒரு தடவை இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போய் மஹானைப் பற்றி விவரமாக உபதேசித்த பின்பு தான் இவர் உள்ளத்தில் பெரியவா மீது அளவற்ற பக்தி தோன்றியது. உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருந்த ராஜகோபால் மாமா சேலத்துக்கும் மாறுதல் கிடைக்கப் பெற்றார். சேலத்துக்குத் தனக்கு மாற்றல் கிடைத்த விஷயத்தைப் பெரியவாளிடம் ராஜகோபால் மாமா  சொன்னபோது ''சேலத்தில் உனக்கு வீடு இல்லையா?'' என்று ஒரு கேள்வியைக் கேட்டார் பெரியவா. சென்னையில் பூர்வீக சொத்து இருக்கிறது என்று ராஜகோபால் மாமா சொல்ல... ''சேலத்தில் வீடு இருக்கிறதா என்று தான் கேட்டேன்'' என்றார் மஹான் அழுத்தம் திருத்தமாக.

''இல்லை!'' என்று மெல்லிய குரலில் பதில் சொன்ன ராஜகோபாலின் மனத்தில் அப்போதே ஓர் எண்ணம் ஓடியது... சேலத்தில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கி விட வேண்டும் என்று! சேலத்தில் அவர் உமா நகரில் குடியிருந்தார். அதுவரை சேலத்தில் வீடு வாங்க நினைக்காதவர் மஹானின் கேள்வியால் வீடு வாங்கும் உறுதி கொண்டார். எங்கெங்கோ தேடி கடைசியில் ஒரு நண்பர் மூலமாக ரகுராம் காலனியில் ஒரு வக்கீலின் வீட்டைப் பார்த்துப் பேசி முடித்தார். ''சொந்த வீடு இருக்கிறதா?'' என்று மஹான் கேட்டதை நிறை வேற்றி விட்ட திருப்தி அவருக்கு. வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு தன் மனைவியுடன் காஞ்சிக்குச் சென்ற ராஜகோபால் மாமா மஹானின் முன்னால் போய் நின்றார். வீட்டைப் பார்த்துப் பேசி முடித்ததுமே நேராக காஞ்சிக்குப் போன ராஜகோபால் மாமா மஹானிடம் பவ்வியமாக ''ஒரு வீட்டை சேலத்தில் பார்த்திருக்கிறேன்'' என்றார். மஹானின் அடுத்த கேள்வி ராஜகோபால் மாமாவை வியப்பில் ஆழ்த்தியது... ''வடக்குப் பார்த்த வீடு தானே? உடனே வாங்கிடு!'' வீடு எப்படி இருக்கிறது, எந்தத் திசையை நோக்கி இருக்கிறது என்கிற விவரம் எதையும் மஹானிடம் சொல்லவே இல்லை ராஜகோபால் மாமா... ஆனால் அந்த மஹான் எப்படி கேட்டார்... ''வடக்குப் பார்த்த வீடுதானே?'' மஹானின் அடுத்த கேள்வி, ''என்ன விலை சொல்றான்?'' ''அவன் இன்னமும் குறைச்சுக் கொடுப்பான். வாங்கிடு!'' என்று ஆசி வழங்கினார் மஹான். மஹான் சொன்னபடியே வீட்டின் சொந்தக்காரர் அதன் விலையில் மேலும் நாற்பதாயிரம் ரூபாய் குறைத்துத் தர முன் வந்தார். வீடும் கைமாறியது. அதை வாங்கும் பொருட்டு சென்னை வீட்டை நல்ல விலைக்கு விற்று விட்டார்.

அதன் பின் காரியங்கள் அசுர வேகத்தில் நடக்க ஒரு நல்ல நாளில் வீட்டை வாங்கி தன் மனைவி கீதாவின் பேரில் ரிஜிஸ்தரும் செய்து விட்டார் ராஜகோபால் மாமா. ராஜகோபால்  மாமா தம்பதி மஹானுக்கு முன்னே நிற்கிறார்கள். ஒரு தட்டில் பழம், தேங்காய், பூவுடன், பத்திரத்தை அவர் முன் வைக்கிறார்கள். தட்டைக் கையில் எடுத்து மஹானிடம் நீட்டும் போது தன்னை அறியாமல் ராஜகோபால் மாமா சொல்கிறார்...''மஹா பெரியவா அனுக்ரஹத்தில் மஹா பெரியவா கிரஹம் வாங்கப்பட்டு இருக்கிறது!''
'தங்கள் வீடு’ என்று அவர் சொல்ல வில்லை. 'பெரியவா கிரஹம்’ என்று தன்னிச்சையாக அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
மஹான் ஒரு புன்சிரிப்போடு நிமிர்ந்து ராஜகோபால் தம்பதியைப் பார்த்தார். பிறகு சிறிய டார்ச் வெளிச்சத்தில் பத்திரம் பூராவையும் படித்தார். அதன் பின் கேட்டார்... ''எனக்கே எனக்கா?'' ''பெரியவா அனுக்ரஹம்'' என்றார் ராஜ கோபால் மாமா... பத்திரத்தை மஹான் உடனே திருப்பித் தரவில்லை. சற்று நேரம் கழித்து அந்தத் தம்பதியை தன் அருகில் அழைத்து பத்திரத்தின் மீது தாமரை இதழும் வில்வமும் வைத்துத் தந்தார். வீட்டின் சாவியைக் கையில் எடுத்த மஹா பெரியவா சாவியை ராஜகோபால் மாமா  கையில் தந்து ''சாவியை அவகிட்டே கொடு! அவதானே வீட்டுக்காரி'' என்றார்.

அடுத்தபடியாக பெரியவா சொன்ன விஷயம்.......

''உனக்கும் உன் குழந்தைகளுக்கும் சௌகர்யமாக மேலே வீட்டைக் கட்டிக் கொள்; கீழே நான் இருக்கேன்!'' இவை எப்படிப்பட்ட வார்த்தைகள்! 'பெரியவாளை கீழே விட்டு விட்டு, மேலே போய் எப்படிக் குடித்தனம் பண்ணுவது!’ என்று கவலை வந்தது. மஹானுக்கு அவரது எண்ண ஓட்டம் புரியாதா? ''நான் எல்லா இடத்திலும் இருப்பேன்'' என்பதைப் போல கையைத் தூக்கி ஆசி வழங்கினார். ''எத்தனையோ பேர் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பெரியவா உன் வீட்டை எடுத்துக் கொண்டது உன் மீது அவர் வைத்துள்ள அபிமானத்தையே காட்டுகிறது!'' என்ற பிரதோஷம் மாமா. அந்தத் தம்பதிக்கு தன் வீட்டில் தடபுடலாக விருந்து வைத்து அனுப்பினாராம். இதுதான் சேலம் காந்தி ரோடு, ரகுராம் காலனியில் உள்ள மஹா பெரியவா கிரஹத்தின் வரலாறு.

இந்தக் கிரஹம் இப்போது ஏராளமான பக்தர்கள் ஒரே சமயம் வந்து தரிசனம் செய்யவும், உணவருந்தவும் வசதியாக, மிகவும் விசாலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மஹா பெரியவா இங்கே பல உருவங்களில் காட்சி தருகிறார். ஸ்ரீ விநாயகரும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தியும் விக்கிரக வடிவில் இருக்க கயிலாசபதியும் நந்தியும் இங்கே கொலுவிருக்கிறார்கள். புதிதாக நான்கு அடி உயரமுள்ள ஆஞ்சநேயரும் இங்கு காட்சி தருகிறார். சுமங்கலி பூஜையும் இங்கே நடைபெறுகிறது. அவ்வப் போது ராமபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது. மஹானின் பல்வேறு உருவப் படங்கள் இங்கே ஒரே இடத்தில் காணக் கிடைப்பது மிகவும் சிறப்பு! காலையும் மாலையும் கற்பூர தீபாராதனை நடக்கும். சேலத்தில் உள்ள மஹா பெரியவா கிரஹம் ஒரு புண்ணிய ஸ்தலம். அவசியம் ஒரு முறை அந்த கிரஹத்துக்கு விஜயம் செய்து காஞ்சி மஹானின் பேரருளைப் பெறுங்கள்!

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர!!! ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !! ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !!

SRI SRI SRI MAHA PERIAVA GRAHAM
113, RAGHURAM COLONY
GANDHI ROAD
SALEM 636 007
PHONE:  +91 73977 99878
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

மதுராந்தகம் ராமர் கோயில்

ஏரியைக் காத்த ராமர் இவர். மதுராந்தகம் ஏரிக்கரையின் கீழே இந்தக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இலக்குவன் ஆகிய மூவரும் அருள்பாலிக்கிறார்கள். ஏரியைக் காத்த ராமரின் மற்றொரு திருவுருவமான கருணாகரமூர்த்தியும் இங்கு உருக்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து தெற்கே செங்கல்பட்டுக்கும் விழுப்புரத்திற்கும் இடையே மதுராந்தகம் உள்ளது.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

வரதராஜப் பெருமாள் கோயில்

காஞ்சி நகரின் கடைசியில் ஹஸ்தகிரி குன்றில் அமைந்துள்ள இந்தக் கோயில் பிரும்மாண்ட தோற்றம் கொண்டது. கலைநுட்பம் செழித்த நூறுதூண்கள் நிறைந்த மண்டபம் ஒன்றும் விஜயநகரப் பேரரசு காலத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுமிக்கவளையங்கள் சங்கிலித் தொடராக நான்கு மூலைகளிலும் தொடர்வது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம். இறையருள் தரிசனமும் கலையெழில் தரிசனமும் கிடைக்கும் பெருமாள் திருத்தலம். வெகு நேர்த்தியான ரதி-மன்மதன் குதிரை வீரர்கள் ஆகிய சிற்பங்கள் அணிகலன்களைப்போலக்
காட்சியளிக்கின்றன. இங்கு வைகாசியில் நிகழும் கருடோத்சவம் காண பக்தர்கள் கூட்டம் திரளும்.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

காமாட்சி அம்மன் கோயில்

காஞ்சி நகருக்குப் பெருமைதரும் அம்மன் கோயில். அருள் வழங்கும் அருளாலயம். இங்கு அம்மனின் முன்புள்ள ஸ்ரீ சக்கரத்தையே அம்பிகையாக பாவித்து வழிபடுவது மரவு. ஆதி சங்கரர் கோயில் காமாட்சி அம்மன் பின் புரம் அமைந்துள்ளது. இந்தியாவின் மூன்று முக்கியத் தலங்களில் ஒன்றான இது, கோடிமன்னகர்களால் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் மையப்பகுதியில் தங்கக் கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பங்குனி மாதம் 9 ஆவது சந்திர நாளில் நடக்கும் ரதோற்சவம் பிரசித்திப்பெற்றது.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

ஸ்ரீ வைகுந்த பெருமாள் கோயில்

சிற்பங்கள் செழீத்திருக்கும் கற்கோயில் காஞ்சியின் பெருமை. வரலாற்றில் நிலைக்கும் விதமாக நந்திவர்வ பல்லவன் தலைசிறந்த சிற்பிகளைக்கொண்டு செதுக்கிய கோயில். பிரதான பகுதிகளிலிருந்து சற்று உள்ளடங்கிய ஒரு குறுகிய பாதையின் இறுதியில் இந்த கலைக்கோயில் உள்ளது.வைகுந்த ஏகாதசி இரவில் பக்தர்கள் வழிபடும் முக்கியத்துவம் பெற்றது. இது இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில்பாதுகாக்கப்பட்டு வருகிறது. வைணவ ஆலயம் என்பதால் மதியம் மூடப்பட்டிருக்கும்.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

கைலாசநாதர் கோயில்

பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் கைலாசநாதர் கோயில். இது காஞ்சிபுரம் நகர மத்தியிலிருந்து ஏறத்தாழஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. சுவரோவியங்கள், சிற்பங்கள் மற்றும் கட்டுமானக் கலை ஆகியவற்றால் முக்கியத்துவம் பெற்ற கோயில். கி.பி.8 ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசரால் ராஜசிம்ம பல்லவன் கட்டிய இக்கோயிலை பின்னர் அவரது வழித்தோன்றலான மகேந்திர பல்லவன்மறுசீரமைப்பு செய்தார். மூலவரான கைலாச நாதரைச் சுற்றி 58 லிங்கங்கள்அமைக்கபட்டுள்ளன. இறையருள் குடியிருக்கும் கலைக்கோயில் இது.காஞ்சி சென்றால் கைலாசநாதரைக் கைவிடாதீர்கள்.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

கந்த கோட்டம் சுப்ரமண்யசாமி கோயில்

காஞ்சிநகரம் புராணத்தில் இடம்பெற சுப்ரமணியசாமி கோயிலும் ஒரு காரணம். சிவன், பார்வதி இருவருக்கும் நடுவே முருகன் அமர்ந்திருப்பதுபோல ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலுக்கும் காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவே இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்போது காணப்படும் இக்கோயில்
1915இல் கட்டப்பட்டது.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

ஏகாம்பரேஸ்வரர் கோயில்:தென்னிந்தியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் திகழ்கிறது. கோபுரத்தின் உயரம் 57 மீட்டர்.தொன்மைமிக்க இந்தக் கோயில் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர அரசர்களால்
புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள பிருத்வி லிங்கம் தென்னிந்தியாவின்
பஞ்சலிங்கங்களில் ஒன்று என்ற பெருமையுடையது. விசாலமான ஐந்து தாழ்வாரங்களும் ஆயிரங்கால் மண்டபமும் அழகின் சிறப்பு. இத்தலத்து
அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வரஅம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்கரம் உள்ளது.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். சென்னை  திருச்சி நெடுஞ்சாலையில் சென்னையைத் தொட்டுக்கொண்டிருக்கும்நகரம். இங்கு பழமையான விஜயநகர கோட்டை ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நகரின் மிகப்பெரிய கொளவாய் ஏரியில் படகுசவாரி செய்யும் அனுபவம் ஓர் உற்சாகக் கொண்டாட்டம்.
-------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - வண்டலூர்

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா தமிழ்நாட்டின் சென்னையின் தெற்கில் 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்காவண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன.அமைவிடம்,வண்டலூர்,சென்னை - 600 048. செவ்வாய் விடுமுறை.
கட்டணம் ரூ.15. தொலைபேசி - 22397150.
-------------------------
ஜயேந்திர சரஸ்வதி அவர்கள் அருளிய "தெய்வ வாக்கு"

புத்தகத்தில் இருந்து பழமையான ஹிந்துசமயம் என்ற போஸ்டின்  நேற்றைய

தொடர்ச்சி...

இப்பொழுது மதக் கொள்கைக்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே நிறைய
வித்யாசம் இருக்கிறது... ஆனால் பெளத்தர்கன் மூலமாக பல அரசுகள்  உருவாயின. அரசாட்சிகள் நடை பெற்றன... அரசர்கள் மூலமாக அநேக நாடுகள்  பெளத்த தேசங்களாக மாறத் தொடங்கின. முக்கியமாக பெளத்த  கொள்கையைக் காட்டிலும் அஹிம்சா கொள்கையையே அடிப்படையாகக்  கொண்டு அரசர்கள் மதம் மாறத் தொடங்கினர். அந்தக் காலத்தில் தான்  வழிபாட்டுக்கு ஸ்தலங்களுக்கு பெளத்த கோயில்கள் தோன்ற  ஆரம்பித்தன. சிவன், விஷ்ணு போன்ற கோயில்கள் அவ்வளவு பிரபலமாக  இல்லை. அதாவது  புண்ய க்ஷேத்திரங்களில் மாத்திரம் சிவ, விஷ்ணு ஆலயங்கள் அழியாமல்  இருந்து வந்தன. ஆனால் சிறு தேவதா வழிபாட்டு மூர்த்தங்கள் எல்லா  கிராமங்களிலும் நிறைய இருந்தன...

(கர்மமீமாம்ஸம்... தர்க்கசாஸ்திரம்... சாங்கிய சாஸ்திரம்) இந்த மூன்று  தத்வங்களாலும் வாதம் செய்யப்பட்டு பெளத்த கொள்கைகள்  தோற்தடிக்கப்பட்டன. இந்தக் குழப்ப நிவையில் தான் புராணங்களில்   பரமசிவனாகப் போற்றப்படும் ஆதிசங்கரர் நம் நாட்டின் தென் கோடியில்   கேரளத்தில் காலடி என்னும் க்ஷேத்திரத்தில் அவதரித்தார். அவர்  முப்பத்திரண்டு ஆண்டுகளே இருந்தார். பால்யத்தில் எட்டு வயதிற்குள்ளேயே எல்லாசாஸ்திரங்களையும் எல்லா சக்திகளையுய் பெற்று அன்னையின்  அநுமதியுடன் சன்யாசம் மேற்கொண்டு காசிக்குச் சென்றார்... அங்கு  எல்லா  பண்டிதர்களையும் சந்தித்துப் பேசி வாதத்தில் வென்று பழமையாய் வந்து  கொண்டிருக்கிற வைதீக ஹிந்து தர்மத்தை புளர்த்தாரணம் செய்யத் தொடங்கினார். ஜய ஜய சங்கர ஜயேந்திர சங்கர உங்கள் பொற் பாதங்களில்

அனந்த கோடி நமஸ்காரங்கள்... காஞ்சி மடத்தில் மஹா பெரியவாளின் 
ப்ருந்தாவனத்தில் தாங்கள் சமர்ப்பிக்கும் உச்சிக்கால தீபாராதனையை  தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்களில் அடியேனும் ஒருத்தி. உங்கள் அறையில்  உங்களை வணங்க உள்ளே நுழையும் போதே முகமெல்லாம் புன்னகை தவழ  வாங்கொ வாங்கோ என்று வரவேற்று குசலப்பிரச்னம் விஜாரித்து குங்குமம்  கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களால் குங்குமத்தை தந்து ஆசீர்வாதம்  பண்ணும் அழகை என்ன சொல்வது?
சுவாமி சிவானந்தர்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம்! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால் மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல! மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில் அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால் இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடுவது இல்லை. வாழ்வில் நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி! எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர் தான் சிவானந்த சரஸ்வதி. திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு 1877 ம் வருடம் செப்டம்பர் எட்பாம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்பு ஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தார் வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர் நிலைப் பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான். 1903ம் வருடம் மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினார். பிறகு திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து 1905 ம் வருடம் தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில் அவரின் தந்தை இறந்து போனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே 1913 ம் வருடம் மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி. வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும் எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார். 1923 ம் வருடம் இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர், ரிஷிகேஷ் தலத்தில் ஸ்வாமிகள் விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று 1924 ம் வருடம் ஜூன் ஒன்றாம் தேதி ஸ்வாமிகள் சிவானந்த சரஸ்வதி எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார். அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு 1927 ம் வருடம் கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர் 1934 ம் வருடம் மார்ச் மாதம் உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில் ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புனித வாழ்க்கை சங்கம் எனும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது. ஸ்வாமிகள் சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். ஸ்வாமிகள் தன்னை அறிந்து கொண்டு விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய் எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த ஸ்வாமிகள் சிவானந்த சரஸ்வதி, 1963 ஆம் வருடம் ஜூலை பதிநான்காம் தேதி கங்கைக் கரையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

தொடரும்
தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள்

இந்த அனுபவம் பல பேருக்கு ஏற்கனவே தெரிஞ்சதாக இருக்கும். ஆனால், எத்தனை தடவை படித்தாலும், கேட்டாலும் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் விடுவதை யாராலும் எப்போதும் கட்டுப் படுத்த முடியாது.

பல வருஷங்களுக்கு முன் ஒரு சித்ரா பௌர்ணமியில் திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமிக்கு மஹன்யாஸ ருத்ர ஜபத்துடன் அபிஷேகம் விமர்ஸையாக நடந்தது.

அதை நடத்தி வைத்தவர் திருவாரூர் மிராஸுதார் நாராயணஸ்வாமி ஐயர். பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மத்யான்னம் ருத்ராபிஷேகம் முடிந்ததும் ப்ரஸாதத்தை எடுத்துக் கொண்டு விடியற்காலம் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.

கூட்டம் நெருக்கியடித்தது. பெரியவா பூஜையை முடித்து தர்ஶனம் குடுத்துக் கொண்டிருக்கும் போது, முண்டியடித்துக் கொண்டு ஒருவழியாக பெரியவா முன்னால் ப்ரஸாதத்தோடு நின்றார்.

"இது எந்த க்ஷேத்ரப் ப்ரஸாதம்?"

ரொம்ப வினயத்தோடு.......

" பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சேன். மஹன்யாஸ ருத்ரஜபத்தோட பெரிய அபிஷேகம். பெரியவா ஸந்தோஷப்படுவேளே.... ன்னு எடுத்துண்டு ஓடி வந்தேன்"

பெரியவா அந்த மூங்கில் தட்டையே உற்றுப் பார்த்தார்!

"நாராயணஸ்வாமி.. நீ பெரிய மிராஸுதார்-ன்னாலும், செலவுக்கு இன்னும் யாரையாவது கூட்டு சேத்துண்டு ஸ்வாமிக்கு பண்ணினியோ?"

"இல்ல பெரியவா......! நானே.... என் ஸொந்த செலவுல பண்ணினேன்"..ன்னு அந்த "நானே"க்கு அழுத்தம் குடுத்தார்.

மனஸுக்குள் சிரித்துக் கொண்டார் பெரியவா.

"லோக க்ஷேமார்த்தம் பண்ணினியாக்கும்?"

"இல்ல....... வயல்ல ரெண்டு மூணு வருஷமா வெளச்சலே இல்லே. அதான்........."

குழைந்தார்.

பெரியவா இன்னும் ப்ரஸாதத்தை தொடவே இல்லை.

"ஆத்மார்த்தமாவோ, லோக க்ஷேமார்த்தமாவோ நீ இதைப் பண்ணலேன்னு தெரியறது"

கண்ணை மூடிக் கொண்டார். பதினைந்து நிமிஷம் கழித்து,

"ஸெரி..... ருத்ரஜபத்துக்கு எத்தனை வேதப்ராஹ்மணா வந்திருந்தா? வைதீகாள்ளாம் யாரு? எந்த ஊர்?"

"பதினோரு ப்ராஹ்மணா ஏற்பாடு பண்ணியிருந்தேன்......"

இடுப்பில் சொருகியிருந்த பேப்பரில் இருந்த பெயர்களை வரிஸையாக படிக்க ஆரம்பித்தார்.

கூட்டத்தில் ஒரே நிஶப்தம். பெரியவா ஏன் இவ்வளவு துருவி துருவி கேட்கிறார்? என்று எல்லாருக்கும் குழப்பம்.

அவர் சில வைதீகாளின் பெயர்களை படிக்க ஆரம்பித்ததும்,

"நல்ல அயனான வித்துக்களாத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கே...... அது ஸெரி, ஒன் லிஸ்டுல தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள் பேர் இருக்கான்னு பாரு"

மகிழ்ச்சியுடன் "இருக்கு பெரியவா ! ஜபத்துக்கு அவரும் வந்திருந்தார்"

"பேஷ்! பேஷ்! வெங்கடேஶ கனபாடிகளையும் சொல்லியிருந்தியா.......! ரொம்ப நல்ல கார்யம்! மஹா வேத வித்து! இப்போ கனபாடிகளுக்கு ரொம்ப வயஸாயிடுத்து. கொரல் எழும்பறதுக்கே ரொம்ப ஶ்ரமப்படும். ஜபத்தை மூச்சடக்கி சொல்லறதுக்கு ரொம்ப கஷ்டப்படுவார்! ........."

பெரியவா முடிக்கவில்லை..... மிராஸுதார் உடனே.......

"ஆமா பெரியவா. நீங்க சொல்லறது ரொம்ப ஸெரி. அவர் ஸெரியாவே ருத்ரம் ஜபிக்கலே.! சில நேரம் வாயே தெறக்காம, கண்ண மூடிண்டு ஒக்காந்திருந்தார்.....! அடிக்கடி கொட்டாவி வேற விடறார்......! அதுனால, ஜப ஸங்க்யை [count] வேற கொறையறது......! நேத்திக்கி அவர் ரொம்ப ஶ்ரமம் குடுத்துட்டார்.! ஏண்டா அவரை வரவழைச்சோம்னு ஆயிடுத்து பெரியவா...!"

மிராஸுதார், குற்றப்பத்திரிகை வாஸித்ததுதான் தாமதம், பெரியவா ப்ரளயகால ருத்ரனாக பொங்கி பொரிந்து தள்ளி விட்டார்! வார்த்தைகளில் அவ்வளவு கோவம்!

"என்ன சொன்னே நீ?.... பணம் இருந்தா, எத வேண்ணாலும் பேசலாங்கற திமிரோ? தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகளோட யோக்யதாம்ஸம் பத்தி ஒனக்கென்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால் தூஸு பெறுவியா நீ? அவரைப் பத்தி என்னமா அப்டி சொல்லலாம்?.....

......நேத்திக்கி மஹாலிங்க ஸ்வாமி ஸன்னதில என்ன நடந்ததுங்கறதை நா புரிஞ்சுண்டுட்டேன் ! நா.... கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு.!....

...... நேத்திக்கு ஜபம் பண்ணறப்போ, கனபாடிகள் முடியாம கண்ண மூடிண்டு ஒக்காந்தப்போ, நீ அவர்ட்ட போய் ரொம்ப கடுமையா "ஏங்காணும்! காஸு வாங்கலே நீர்? இப்படி ஜபம் பண்ணாம வாயடைச்சு ஒக்காந்திருக்கீரே!" ன்னு கத்தினியா? இல்லியா?"

எரிமலை குமுற ஆரம்பித்தது! மிராஸுவும், கூட்டமும் விக்கித்துப் போய் நின்றனர்!

நடுநடுங்கி ஸாஷ்டாங்கமாக பாதங்களில் விழுந்து

"தப்புத்தான் பெரியவா. வாஸ்தவம்தான். ஸ்வாமி ஸன்னதில அப்டி அவரைப் பாத்து சொன்னேன். மன்னிச்சுக்கணும் பெரியவா "

உதறலெடுக்க கெஞ்சினார்.

பெரியவா விடவில்லை.

"இரு....! இரு....! நீ அந்த ஒரு தப்பை மாத்ரமா பண்ணினே? சொல்லறேன் கேளு. எல்லார்க்கும் தக்ஷிணை குடுத்தேல்லியோ? ஒவ்வொரு வைதீகாளுக்கும் எவ்வளவு குடுத்தே?"

மென்று விழுங்கி ஈனஸ்வரத்தில் "தலைக்கு பத்து ரூவா குடுத்தேன் பெரியவா"

"ஸெரியா சொல்லு. எல்லா வைதீகாளுக்கும் ஸமமா பத்து பத்து ரூவாயா குடுத்தே? எனக்கு எல்லாம் தெரியும்!"

மடக்கினார்.

மிராஸு மெளனமாக இருந்தார்.

"ஒனக்கு சொல்ல வெக்கமாயிருக்கு போல இருக்கு. நா.... சொல்றேன் கேட்டுக்கோ! வைதீகாளை ஸன்னதில வரிஸையா ஒக்காரவெச்சு தலைக்கு பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே.....!

.....தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்கிட்ட வந்ததும், "இவர்தான் ஸெரியாவே ருத்ரம் சொல்லலியே......! அவருக்கு எதுக்கு மத்தவாளாட்டம் பத்து ரூவா குடுக்கணும்?.ன்னு நீயே தீர்மானிச்சு, ஏழே..... ஏழு ரூவா !!!ஸம்பாவனை பண்ணினே....!...

.....ஏதோ அவரைப் பழி வாங்கிட்டதா எண்ணம் ஒனக்கு.!! ஆனா, அவர் எதையாவது லக்ஷியம் பண்ணினாரா பாத்தியா? நீ குடுத்ததை வாங்கி அப்டியே துண்டுல முடிஞ்சுண்டார். என்ன? நா..... சொல்லறது ஸெரிதானே?"

எல்லாருக்கும் நேற்று நடந்ததை அப்படியே நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்லுவதை பார்த்து திகைப்பதா? அழுவதா? ஆஶ்சர்யப்படுவதா? ஒன்றும் புரியவில்லை.

"மன்னிச்சுடுங்கோ பெரியவா....! ஏதோ அஞ்ஞானத்தால அப்படி நடந்துண்டுட்டேன்...! இனிமே அப்டி நடக்கவே மாட்டேன். ...."

"இரு...! இரு.....! இதோட முடிஞ்சுட்டாத்தான் தேவலையே! ஜபம் பண்ணின ப்ராஹ்மணாளுக்கு மஹாதானத் தெரு ராமசந்த்ர ஐயரோட க்ருஹத்லதானே ஸாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே? ஸாப்பாடெல்லாம் பரமானந்தமா நன்னாத்தான் போட்டே.......! பந்தில நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப்பருப்பு, த்ராக்ஷை எல்லாம் போட்டு சக்கரைப் பொங்கல் பண்ணச் சொல்லி, ஒங்கையால நீயே பரிமாறினே..... ஸெரியா?"

வெலவெலத்துப் போனார் மிராஸு. உண்மைதான்!

"ஸெரி...... அப்டி சக்கரைப்பொங்கலை போடறச்சே பந்தி தர்மத்தோட பரிமாறினதா, ஒம்மனஸாக்ஷி சொல்றதா?........

.....நீ சொல்லவே வேணாம். நானே சொல்லறேன்! நீ சக்கரைப் பொங்கல் போடறச்சே, அது பரம ருசியா இருந்ததுனால, வைதீகாள்ளாம் கேட்டு கேட்டு வாங்கி ஸாப்டா.....! நீயும் நெறைய போட்டே....! ஆனா, தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள்..... வெக்கத்தை விட்டு, "சக்கரைப்பொங்கல் இன்னும் போடுடாப்பா......! ரொம்ப நன்னாருக்கு" ன்னு பல தடவை வாயைவிட்டு கேட்டும்கூட, நீ காதுல வாங்கிண்டு அவருக்கு போடாமலேயே போனியா இல்லியா?....

..... எத்தனை தடவை கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்பிட்டியே! இது தர்மமா? ஒரு மஹா ஸாதுவ இப்டி அவமானப்படுத்திட்டியே!....”

மிகுந்த துக்கத்தில் மௌனமாகிவிட்டார் பெரியவா.

கொஞ்ச நேரம் கழித்து ஸாக்ஷாத் மஹாலிங்கமான பெரியவா பேசினார்......

"மிராஸுதார்வாள்....! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எம்பத்தொறு வயஸாறது. தன்னோட பதினோராவது வயஸ்லேர்ந்து எத்தனையோ ஶிவ க்ஷேத்ரங்கள்ள ஸ்ரீருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்பவுமே அவரோட நாடி நரம்புகள்ளேயும், ஶ்வாஸத்லேயும் ஓடிண்டே இருக்கு. அப்பேர்ப்பட்ட மஹான் அவர்! அவர்கிட்ட நீ நடந்துண்ட விதம்...... மஹா பாபமான கார்யம்"........

மேலே பேச முடியவில்லை பெரியவாளால்! கண்களைமூடிக் கொண்டு மெளனமாக அமர்ந்துவிட்டார். பிறகு மீண்டும்,

"நீ "பந்தி பேதம்" பண்ணின கார்யமிருக்கே....? அது கனபாடிகள் மனஸை ரொம்பவே பாதிச்சுடுத்து. அவர் என்ன கார்யம் செஞ்சார் தெரியுமா? சொல்றேன் கேளு. நேத்திக்கு ஸாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூர் போகலை.! நேரா, திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோவிலுக்கு போனார் "அஸ்மேத" [பெரிய பிராகாரம்] ப்ரதக்ஷிணம் மூணு தடவை பண்ணினார். நேரா மஹாலிங்க ஸ்வாமிக்கு முன்னால போய் நின்னார். கைகூப்பி நின்னுண்டு என்ன ப்ரார்த்திச்சார் தெரியுமா?........"

பெரியவாளால் மேலே பேசமுடியவில்லை.

தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டு சொன்னார்

"கண்ணுலேர்ந்து தாரை தாரையா நீர் வழிய, "அப்பா ஜோதி மஹாலிங்கம்! நா ஒன்னோட பரம பக்தன். பால்யத்துலேர்ந்து எத்தனையோ தடவை ஒன் ஸன்னதில மஹன்யாஸ ஸ்ரீருத்ரம் ஜபிச்சிருக்கேன். நீ கேட்டுருக்கே. இப்போ நேக்கு எம்பத்தோறு வயஸாறது. மனஸ்ல பலமிருக்கே தவிர, வாக்குல அந்த பலம் போயிடுத்துப்பா!.....

.......இன்னிக்கு மத்யான்னம் ஸாப்டறச்சே நடந்தது. ஒனக்கு தெரியாம இருக்காது. அந்த சக்கரைப் பொங்கல் ரொம்ப ரொம்ப நன்னா இருந்ததேன்னு, "இன்னும் கொஞ்சம் போடுங்கோ" ன்னு வெக்கத்தை விட்டு அந்த மிராஸுதார்கிட்ட பல தடவை கேட்டேன். அவர் காதுல விழுந்தும், விழாத மாதிரி நகந்து போய்ட்டார்.....!

.......நேக்கு சக்கரைப் பொங்கல்-ன்னா உஸுருன்னு ஒனக்குத்தான் தெரியுமே! சபலப்பட்டு கேட்டும் அவர் போடலியேன்னு ரொம்ப அப்போ தாபப்பட்டேன். ஆனா, ஸாப்டுட்டு கையலம்பிண்டு வாஸத் திண்ணைக்கு வந்து ஒக்காந்தப்புறந்தான், "இப்பிடியொரு ஜிஹ்வா [நாக்கு] சபலம், இந்த வயஸ்ல நமக்கு இருக்கலாமான்னு தோணித்து..........

.........அப்பா மஹாலிங்கம்! இப்போ அதுக்குத்தான் ஒம்முன்னாடி நிக்கறேன். ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்துலேர்ந்து ஒரு ப்ரதிக்ஞை பண்ணிக்கறேன்......

......எல்லாரும் காஶிக்கு போனா, பிடிச்ச பதார்த்தத்தை விடுவா.........! காஶிலயும் நீதான் இருக்கே! இங்கயும் நீதான்! அதுனால ஒனக்கு முன்னாலே, "இனிமே என் ஶரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும்.... சக்கரப் பொங்கலையோ, இல்லாட்டா, வேற எந்த தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன். இது ஸத்யம்டா..ப்பா மஹாலிங்கம்" ன்னு வைராக்ய ப்ரமாணம் பண்ணிண்டு "அப்பா ஜோதி மஹாலிங்கம்! ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்" ன்னு சொல்லி பன்னண்டு ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர்! ஊருக்கு பொறப்பட்டுட்டார்.......!....

....... இப்போ நீ சொல்லு! நீ பண்ணின கார்யம் தர்மமா? மஹாலிங்க ஸ்வாமி ஒப்புத்துப்பாரா?...”

பெரியவா முடிக்கும்போது மத்யான்னம் மூணு மணி! அன்னிக்கு பிக்ஷையே பண்ணலை! சுற்றி நின்ற அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர்!

நேற்று மஹாலிங்க ஸ்வாமி முன்னால் நடந்தது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது! என்ற கேள்வியை விட ஸத்யப்ரமாணமாக "திருவிடைமரூதூரில் அருள் பாலிக்கும் மஹாலிங்கம் நானே !" என்று பெரியவா ப்ரத்யக்ஷமாக காட்டியதை கண்டு அத்தனை பேரும் ப்ரமித்தனர்.

இது ஒரு ஸாதாரண விஷயமா என்ன?

மிராஸுதார் கன்னத்தில் அறைந்து கொண்டு அலறினார்.

"பெரியவா, நா மஹா பாபம் பண்ணிட்டேன். அஹம்பாவத்ல அப்டி பண்ணிட்டேன். இனி என் ஜன்மாவுல அப்படி நடக்கவே மாட்டேன். ப்ரஸாதத்தை ஸ்வீகரிச்சுக்கோங்கோ! "

பெரியவா வாயை திறக்கவில்லை.

"இருக்கட்டும். இருக்கட்டும். எனக்கு அந்த மஹாலிங்க ஸ்வாமியே ப்ரஸாதம் அனுக்ரஹம் பண்ணுவார்." என்று அவர் முடிப்பதற்குள், ஒரு ப்ராஹ்மணர் கட்டு குடுமி, பஞ்சகச்சம், கழுத்தில் ருத்ராக்ஷ மாலையோடு, கையில் ப்ரஸாதத் தட்டோடு வந்து பெரியவாளை அணுகி,

"என் பேர் மஹாலிங்கம்! திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமிக்கு நேத்திக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராஸுதார் நடத்தினார்..... இங்க என் அக்காவை பாக்க வந்தேன். பெரியவாளுக்கு ப்ரஸாதம் ஸமர்ப்பிச்சுடலான்னு வந்தேன்" என்று நமஸ்காரம் பண்ணப்போனவரை பெரியவா தடுத்து....

" நீங்கள்ளாம் ஶிவ தீக்ஷை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்படாது" என்று சொல்லி அவருக்கு மரியாதை பண்ணச் சொன்னார்.

அவர் போனதும் மிராஸுதார் "திரும்ப திரும்ப ப்ரார்த்திக்கிறேன். பெரியவா! நா பண்ணினது ரொம்ப பாப கார்யம்தான். இதுக்கு நீங்கதான் ஒரு ப்ராயஶ்சித்தம் சொல்லணும்"

மன்றாடினார்.

விருட்டென்று எழுந்து விட்டார் பெரியவா

"இதுக்கு ப்ராயஶ்சித்தம்..... நா சொல்ல முடியாது. தேப்பெருமாநல்லூர் வெங்கடேஶ கனபாடிகள்தான் சொல்லணும்"

"இந்தப் பாவி பண்ணின கார்யத்துக்கு கனபாடிகள் ப்ராயஶ்சித்தம் சொல்லுவாரா பெரியவா?"

பெரியவா சற்று உரக்கச் சொன்னார்

"ஒனக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்லுவார்"

விடுவிடுவென்று உள்ளே போய் விட்டார்.

மிராஸுதார் உடனே தேப்பெருமாநல்லூர் நோக்கி நடையைக் கட்டினார்.

"பாப விமோசனம்" பெற வேண்டும், ப்ராயஶ்சித்தம் பண்ணிட வேண்டும்” என்ற வைராக்யம் இருந்தது.

தேப்பெருமாநல்லூர் அக்ரஹாரத்தில் நுழைந்து, எதிர்ப்பட்ட ஒருவரிடம் வெங்கடேஶ கனபாடிகள் க்ருஹம் எங்கே என்று விஜாரித்தார். அவர் ஒரு வீட்டை சுட்டிக் காட்டினார்....

"துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா? அதான் கனபாடிகள் அஹம். இன்னிக்கு விடியக்காலமேதான் கனபாடிகள் "அனாயாஸேன மரணம்" ன்னு திடீர்னு காலமாயிட்டார்......! போய் பாத்துட்டு வாங்கோ!"

இடிவிழுந்தது போல் இருந்தது!

"ஒனக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்லுவார்"ன்னு பெரியவா சொன்னது இதுதானா?

ப்ராப்தம் இல்லேன்னு பெரியவாளுக்கு தெரிஞ்சிருக்கு!

ஓடிப்போய் வெங்கடேஶ கனபாடிகளுடைய பூத ஶரீரத்துக்கு (ருத்ரத்தால் நிறைந்து இருந்த ஶரீரம்) நமஸ்காரம் பண்ணி, மானஸீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அதன்பிறகு, ஓரிரு வருஷத்துக்குள் ஸொத்தெல்லாம் அழிந்து போய், வடக்கே பல ஶிவாலயங்களில் மடப்பள்ளியில் கைங்கர்யம் பண்ணிவிட்டு, கடைசியில் காஶி க்ஷேத்ரத்தில் காலகதி அடைந்தார்!

தன்னை நிந்தனை பண்ணினால்கூட பகவான் மன்னிப்பான். ஆனால் தன்னையே ஸதா ஆஶ்ரயித்து இருக்கும் ஸாதுக்களை யாராவது அவமதித்தால், பகவானால் பொறுத்துக் கொள்ளவே முடியாது! என்பதற்கு இது ஒரு நல்ல முன் உதாரணம்.

ஆனால், பகவான் கருணாமூர்த்தி! பாபம் பண்ணியிருந்தாலும், பண்ணின பாபத்துக்கு மனஸ் வருந்தி, தண்டனை அனுபவித்தாலும், கடைசியில் "காஶியில் மரித்தால் முக்தி" என்பதற்கேற்ப, அந்த மிராஸுதாரை காஶியில் இறக்க வைத்து மோக்ஷத்தை கொடுத்தது அவனுக்கே உரிய பெருங்கருணைl!

பந்தியில் பேதமே பார்க்கக்கூடாது, யாருடைய வயிற்றிலும் அடிக்கக்கூடாது, வயஸானவர்கள் யாராகயிருந்தாலும் நம் அஹங்காரத்தை அவர்களிடம் காட்டக்கூடாது. உடம்பில் ரத்தம் நன்றாக இருக்கும்வரை, ஆட்டம் போடுவோம். பகவான் ரத்தத்தை கொஞ்சம் சுண்டிவிட்டாலோ! போச்சு!

நாம் கற்று, கடைப்பிடிக்க நிறைய இருக்கிறது...

ஶ்ரீ ஆசார்யாள் பாததூளி 🙏🏻
போதாயன அமாவாஸ்யை தர்பபணம்

22.04.2020 புதன்கிழமை

ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவா + தாமோதரா

வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.

ஶூக்லாம் + ஸாந்தயே, ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்

மமோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

*ஶார்வரி* நாம ஸம்வத்ஸரே *உத்தராயணே வஸந்த்* ருதௌ *மேஷ* மாஸே *க்ருஷ்ண* பக்ஷே *அமாவாஸ்யாயாம்* புண்யதிதௌ *ஸௌம்ய* வாஸர யுக்தாயாம் *ரேவதி* நக்ஷத்ர யுக்தாயாம், *விஷ்கம்ப* யோக, *சகுனி* கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் *அமாவாஸ்யாயாம்* புண்யதிதௌ

ப்ராசீனாவீதி

தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

........கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம்

தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

…............கோத்ராணாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸமத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஶபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்

அமாவாஸ்ய புண்யகாலே தர்ச ச்ராத்தம்  தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால்
துடைத்துக்கொள்ளவும். பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும். கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்

ஆவாஹந மந்த்ரம்

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச// அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி/

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.

ஆஸன மந்த்ரம்

ஸக்ருதாச்சின்னம் பர்ஹி: ஊர்ணாமிருது ஸ்யோநம் பித்ருப்யஸ்தவா, பராம்யஹம், அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதா மஹாஸ்ச்ச அனுகைஸ்ஸஹ//

வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.

ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //

தர்ப்பண மந்த்ரம்





மந்த்ரம்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி பூணுல் வலம்

ப்ரதக்ஷிண மந்த்ரம்

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம: யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே

ப்ராசீனாவீதி பூணுல் இடம்

யதாஸ்தான மந்த்ரம்

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச// அஸ்மாத், கூர்ச்சாத், வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்

மந்த்ரம்

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

மந்த்ரம்

ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர - ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து

பவித்ரத்தை பிரித்து போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்

ஶுபம்
சிருங்கேரி மற்றும் பூரி ஸ்வாமிகள் இவர்கள் இருவருமே காஞ்சி மடம் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட மடம் இல்லை என்று தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கான பதில் இதோ. ஆதிசங்கர் தன்னுடைய சரிரத்தை விடுத்து ஆத்மாவுடன்  கைலாஷம் சென்று சிவ பெருமானிடம் இருந்து பஞ்ச லிங்கங்களை பெற்றுக் கொண்டு தன்னுடைய சரிரத்தில் வந்த பிறகு தான் நான்கு இடங்களில் ஸ்தாபித்தார். ஐந்தாவது லிங்கமான யோக லிங்கத்தை தனக்காக வைத்து பூஜை செய்து வந்தார். அப்படியாக ஒவ்வொரு ஊரா செல்லும் போது காமாக்ஷி கான காஞ்சி வந்தார். இங்கே அம்பாள் உக்ரஹமாக இருப்பதை கண்டு அம்பாளை சாந்தப்படுத்தி ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்தார். பிறகு தனக்காக ஒரு மடத்தை நிறுவினார். அதுவே காஞ்சி மடன். மற்ற மடங்கள் எல்லாம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது ஆனால் காஞ்சி மடம் தான் ஆதிசங்கரரின் நேரடி தொடர்பு. மற்ற மடத்திற்கு அப்படி இல்லை. அதே போல் தன்னுடைய முதல் சிஷ்யரை காசியில் வாதம் செய்து வென்ற சுரேவராச்சாரியர் தான் முதல் சிஷ்யர். ஆதிசங்கர் மற்றும் சுரேவராச்சாரியர் இவர்கள் இருவருக்கு மட்டுமே ஆதிசங்கர், சுரேவராச்சாரியர் என்று பெயர். பின் வந்த  மற்றவர ஆச்சார்யர்களுக்கு கூடவே சரஸ்வதி பட்டம் பெயருடன் சேர்க்கப்பட்டது. மிக முக்கியமான விஷயம் ஆதிசங்கர் காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் அம்பாளுடன் ஐக்கிமானார். என்பதே உண்மை. அடியேன் ஒன்றே ஒன்று கேட்கிறேன் ஆதிசங்கர் இமயமலையில் சித்தி அடைந்தார் என்று இவர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் இந்த பஞ்ச லிங்கங்களை எவ்வாறு மற்ற இடங்களில் நிறுவியிருக்க முடியும்? இமயமலையில் தான் தன்னுடைய சரிரத்தை விடுத்து பரமேஸ்வரனை கான சென்றார் என்பது வரலாறு. சென்றவர் திரும்ப வந்ததால் தானே மற்ற நான்கு இடங்களில் லிங்கங்களை கொடுத்து இருக்க முடியும். இப்போது புரியும் என்று நினைக்கிறேன். இது உண்மையான வரலாறு. இதை மஹா பெரியவா தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் சங்கர சரித்திரத்தை மட்டுமே ஆறநூறு பக்கத்திற்கும் மேல் சொல்லியிருக்கா  வருட கணக்கு மட்டும் இல்லை ஆச்சார்யார்களின் எண்ணிக்கையும் கூட சிருங்கேரியில்  வித்தியாசம் உண்டு.  இந்த விஷயத்தை பற்றி பலவிதமான கருத்துவேறுபாடுகள் உள்ளன... தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகத்தில் மஹாபெரியவாளே... அழகாக அதை விவரிக்கிறார்... ஷ்ருங்கேரியையும் கணக்கில் வைத்துக்கொண்டு அனுக்ரஹிக்கிறார்... சங்கர சரிதம் என்ற பாகத்தில்... மேலும் தெரிந்து கொள்ள தெய்வத்தின் குரல் பாகம் ஐந்தை படிக்கவும்.....
போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!

கலிகாலத்தில் இறைவனின் நாமத்தைச் சொன்னாலே போதும் என்பதை அகிலமெங்கும் பரப்பிய பெருமை ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு உண்டு.திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாளும் இருவரும் சம காலத்தவர்கள்.கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரை அடுத்து அமைந்திருக்கிறது கோவிந்தபுரம்.இங்குதான் போதேந்திரர்.அதிஷ்டானம் கொண்டுள்ளார்.22-8-2008 வெள்ளியன்று இந்த அதிஷ்டானத்துக்கு மகா கும்பாபிஷேக வைபவம் சிறப்பாக நடைபெற்றது.காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் பகவன்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.இவரது காலம் கி.பி. 1638-1692.அன்னிய மதத்தினர் இந்துக் கோயில்களை நாசம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் இவரது நாம ஜப பிரசாரம் முனைப்புடன் துவங்கியது.நாம ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம்.கஷ்டங்களைப் போக்கலாம் பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று நாம ஜபத்தின் மேன்மைகளைப் பல இடங்களிலும் சொல்லி அந்த எளிய வழிபாட்டை மேம்படுத்தினார்.ஒரு மடாதிபதியாக காஞ்சிபுர மடத்தில் அவர் தங்கியிருந்த காலத்தைவிட வெளியே பயணித்து நாம ஜப மேன்மையைப் பரப்பிய காலமே அதிகம் என்று சொல்லலாம்.நாம பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு என்று போற்றப்படுவர் அவர்.

நாம சங்கீர்த்தனம். நாம ஜபம் என்றால் என்ன?

பொதுவாக, பகவன் நாமத்தை எந்த நேரமும் உச்சரித்துக் கொண்டிருப்பது என்பதுதான் இதன் பொருள்.நாம சங்கீர்த்தனம் என்றால் இறைவனின் ஒரு திருநாமத்தை வாத்திய கோஷ்டிகளின் உதவியுடன் ராகம் அமைத்துப் பாடிக்கொண்டே இருப்பது முதலில் பாடிய வரிகளையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டு இருப்பார்கள்.பெரும்பாலும் ஆர்மோனியம் மிருதங்கம்.கஞ்சிரா முதலான பக்கவாத்தியங்களை வாசித்துக்கொண்டு பக்தியில் திளைத்து ஆடிய வண்ணம் நாம சங்கீர்த்தனத்தைச் செய்வார்கள் பாகவதர்கள்.இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் மெய்மறந்து இறை இன்பத்தில் ஐக்கியமாகி விடுவார்கள்.பாகவதர்களுடன் இணைந்து பக்தர்களும் பகவானின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.நாம ஜபம் என்பது தனிப்பட்ட ஒருவரோ அல்லது சிலரோ சேர்ந்து பகவன் நாமங்களை மனதுக்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்லி இறைவனை வழிபடுவது நம சிவாய நாராயணாய ராம ராம கிருஷ்ண கிருஷ்ண என்று அவரவருக்குப் பிடித்த கடவுளின் நாமத்தைச் சொல்லி வழிபடலாம்.கலியுகத்தில் நாம ஜபத்தை யார் வேண்டுமானாலும்.எப்போது வேண்டுமானாலும் உச்சரித்து இறைவனை வணங்கலாம்.இதற்கு கால நேரம் கிடையாது.என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கலிகாலத்தில் பகவன் நாமங்களே நம்மைக் கரை சேர்க்கும் என்று சொன்ன போதேந்திரர் தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ஸ்ரீராம நாமத்தைத் துதித்து வந்தார்.இதிலிருந்தே அவரது பக்தியின் பெருமையை நாம் புரிந்துகொள்ளலாம்.போதேந்திரர் தமிழ்நாட்டில் அவதரித்த காலத்தில்தான் நாட்டில் ஏராளமான மகான்கள் தோன்றினர்.கன்னட தேசத்தில் புரந்தரதாசர். கனகதாசர் முதலானோரும் ஆந்திராவில் ராமதாசர் ஷேத்ரக்ஞர்.மகாராஷ்டிரத்தில் துக்காராம் போன்றோரும் வங்களாத்தில் கிருஷ்ண சைதன்யர் நித்யானந்தர் போன்றோரும் காசியில் கபீர்தாசர் துளசிதாசர் ஆகியோரும் வடக்கே ஸ்வாமி ஹரிதாஸ் ஸ்ரீவல்லபர் குருநானக் குருகோவிந்தசிங் மீரா போன்றோரும் அவதரித்தனர்.மொத்தத்தில் பார்த்தால்.இவர்கள் அனைவருமே பாகவத சம்பிரதாயத்தின் மேன்மையையும் நாம ஜபத்தின் பெருமையையும் பரப்பி இருக்கிறார்கள்.ஒரே காலத்தில் பல்வேறு இடங்களில் பல மகான்கள் அவதரித்துப் பக்தியைப் பரப்ப வேண்டும் என்பது இறைவனின் சங்கல்பம் போலிருக்கிறது.போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அவதார வரலாற்றை அறிந்துகொள்வோம்?புராணம் போற்றும் புண்ணிய நகரம் காஞ்சிபுரத்தில் மண்டனமிஸ்ரர் அக்ரகாரத்தில் வசித்து வந்தவர் கேசவ பாண்டுரங்கன் என்ற அந்தணர்.ஆந்திர தேசத்தில் இருந்து காஞ்சிக்கு வந்து குடியேறியவர். அவருடைய மனைவியின் பெயர் சுகுணா இந்தத் தம்பதிக்கு 1638ல்ஆதிசங்கர பகவத்பாதரின் அம்சமாக போதேந்திரர் அவதரித்தார்.குழந்தை பிறந்த வேளையை வைத்து அதன் எதிர்காலத்தையும் சிறப்பு அம்சங்களையும் கணித்த பாண்டுரங்கன் புருஷோத்தமன் என்று பெயர் சூட்டினார்.அப்போது காஞ்சி காமகோடி மடத்தில் 58வது பீடாதிபதியாக விளங்கிய ஆத்மபோதேந்திரர் என்கிற விஸ்வாதிகேந்திரா சரஸ்வதி ஸ்வாமிகளிடம் உதவியாளராக இருந்து வந்தார் பாண்டுரங்கன்.ஒரு நாள் தந்தை மடத்துக்குப் புறப்படும்போது நானும் வருவேன் என்று அடம் பிடித்தான் ஐந்தே வயதான புருஷோத்தமன் சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு ஸ்ரீமடத்துக்குச் சென்றார்.பீடத்தில் இருந்த ஸ்வாமிகளைக் கண்டதும்.பக்தி உணர்வு மேலிட எவரும் சொல்லாமல் தானாகவே நமஸ்காரம் செய்தான் பாலகன் புருஷோத்தமன்.

விளையும் பயிரின் சாதுர்யம் ஒரு வேதவித்துக்குத் தெரியாமல் இருக்குமா?ஸ்வாமிகள் புருஷோத்தமனைப் பார்த்து புன்னகைத்தார்.ஸ்வாமிகள் முன் கைகூட்டி, வாய் பொத்தி நின்றிருந்தது குழந்தை.பாண்டுரங்கனைப் பார்த்து இந்தக் குழந்தை யாருடையது?என்றார் ஸ்வாமிகள். தங்களுடைய பரிபூரண ஆசீர்வாதத்தோடு பிறந்த இந்தக் குழந்தையும் தங்களுடையதோ.. நம்முடையது என்று நீர் சொல்வதால் இந்தக் குழந்தையை நமக்கே விட்டுத்தர முடியுமா? யதேச்சையாக தான் சொன்ன வார்த்தைகளின் முழுப்பொருள் அப்போதுதான் பாண்டுரங்கனுக்குப் புரிந்தது. சற்றுத் தடுமாறினார்.வாய் தவறி வார்த்தைகளை உதிர்த்துவிட்டோமோ என்று ஐயப்பட்டார்.இருந்தாலும் வாயில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் இறைவனின் சங்கல்பத்தால் எழுந்தவையாக இருக்கும் என்று அனுமானித்தார்.ஸ்வாமிகளைப் பணிந்து தங்களுடைய விருப்பமே என்று விருப்பமும் என்றார்.இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட ஸ்வாமிகள் நல்லது.இன்றைய தினத்தில் இருந்து மடத்தின் குழந்தையாகவே புருஷோத்தமன் பாவிக்கப்படுவான்.தைரியமாகச் செல்லுங்கள் என்றார்.கணவரின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட மனைவி சுகுணா கலங்கவில்லை.பகவானின் விருப்பம் அதுவானால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?என்று தன்னையும்தேற்றிக்கொண்டு கணவரையும் தேற்றினான். மடத்தில் வளர்ந்தாலும் தினமும் பெற்றோரைச் சந்தித்து நமஸ்கரித்து ஆசி பெறும் உயரிய வழக்கத்தைக் கொண்டிருந்தான் புருஷோத்தமன்.ஐந்து வயதில் அட்சர அப்பியாசம் ஏழு வயதில் உபநயனம் பதினாறு வயது முடிவதற்குள் வேதம் வேதாந்தம் போன்றவற்றைத் திறம்படக் கற்று தேர்ந்தான்.சகலத்திலும் உயர்ந்தது நாராயணன் நாமமே என்று தெளிந்த புருஷோத்தமன் தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் ராம நாமத்தை ஜபிப்பதாக ஆசார்யா சன்னிதியின் முன் அமர்ந்து சங்கல்பம் எடுத்துகொண்டான்.(அதன்பின் கடைசிவரை இதைத் தவறாமல் கடைப்பிடித்தும் வந்தார்). அடுத்தடுத்து வந்த காலகட்டத்தில் புருஷோத்தமனின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இறைவனின் திருப்பதம் அடைந்தனர்.

நாளாக நாளாக புருஷோத்தமனின் தேஜஸும் பவ்யமும் கூடிக் கொண்டே வந்தது.ஆசார்ய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அத்தனை தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் விஸ்வாதிகேந்திரர்.உரிய காலம் வந்ததும் அவனைப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்க விரும்பினார் ஸ்வாமிகள்.அதற்குரிய வேளையும் வந்தது.ஒரு தினம் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு காசி யாத்திரை புறப்பட்டார்.அப்போது புருஷோத்தமனும் உடன் வருவதாகச் சொன்னார்.காசியில் சில காலம் தங்க உத்தேசித்துள்ளேன். எனவே நீ இப்போது என்னுடன் வர வேண்டாம்.சிறிது காலத்துக்குப் பிறகு புறப்பட்டு வா என்றார் ஸ்வாமிகள்.புருஷோத்தமனும் ஸ்வாமிகளைப் பிரிய மனம் இல்லாமல் ஒப்புக்கொண்டான். ஸ்வாமிகள் காசியை அடைந்தார்.அப்போது ந்ருஸிம்மாச்ரமி ஸ்வாமிகள் என்னும் மகான் காசி ஷேத்திரத்தில் தங்கி பகவன் நாமங்களைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.இருவரும் சந்தித்து உரையாடி ஆன்மிக விவாதங்களை மேற்கொண்டனர்.அப்போது நாம் சங்கீர்த்தன வைபவங்கள் அதிக அளவில் காசியில் நடந்ததைப் பார்த்து ஸ்வாமிகள் பெருமிதம் கொண்டார்.இந்த அளவுக்குத் தென்னாட்டில் நாம சங்கீர்த்தனம் வளர வேண்டுமானால் அது புருஷோத்தமனால்தான் முடியும். விரைவிலேயே அவனுக்கு மடாதிபதி பட்டம் சூட்டவேண்டும் என்று முடிவெடுத்தார்.குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தன் நண்பனுடன் காசிக்கு யாத்திரை சென்றான் புருஷோத்தமன்.அங்கே புருஷோத்தமனைப் பார்த்த மாத்திரத்தில் பெருமகிழ்வு கொண்டு அவனை ஆனந்தமாக அணைத்து சந்தோஷப்பட்டார் ஸ்வாமிகள்.இருவரும் காஞ்சிபுரம் திரும்பிய பின் ஒரு சுபதினத்தில் புருஷோத்தமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக ஆக்கினார் ஸ்வாமிகள்.அப்போது புருஷோத்தமனுக்கு ஸ்வாமிகளால் சூட்டப்பட்ட திருநாமமே.போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.அதன்பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்று.நாம ஜபத்தின் பெருமைகளைப் பலருக்கும் போதித்தார் போதேந்திரர்.ஏராளமான கிரந்தங்களை இயற்றினார்.விளக்கவுரைகள் எழுதினார்.

ஒரு சமயம் விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகளுடன் போதேந்திரர் யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது உடல் நலம் குன்றி மகா சமாதி அடைந்தார்.விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகள்.குருநாதருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களை முறையாகச் செய்து முடித்து போதேந்திரர் காஞ்சிபுரத்துக்கே திரும்பிவிட்டார்.வெவ்வேறு ஊர்களில் நடக்கும் போதேந்திரரின் நாம ஜப உற்சவங்களுக்குப் பெருமளவில் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள்.இதே காலத்தில்தான் போதேந்திரருக்கு திருவிசநல்லூரில் நாம ஜபத்தில் பிரபலமாக இருந்த ஸ்ரீதர ஐயாவாளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்தே யாத்திரைகள் மேற்கொண்டனர்.கிராமம் கிராமமாகச் சென்று நாம ஜபத்தின் உயர்வைச் சொன்னார்கள்.ஒருமுறை போதேந்திரரும் ஸ்ரீதர ஐயாவாளும் பெரம்பூர் என்கிற கிராமத்துக்கு சிஷ்யகோடிகளுடன் வந்து சேர்ந்தனர்.அந்த ஊரில் வசித்து வந்த ஆசாரமான அந்தணர் ஒருவர் தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளி.பிட்சை ஏற்குமாறு ஸ்வாமிகள் இருவரையும் கேட்டுக் கொண்டார்.அதன்படி அவரது இல்லத்துக்கு ஸ்வாமிகளும் சிஷ்யகோடிகளும் சென்றனர்.போதேந்திர ஸ்வாமிகள் பிட்சை எடுத்து உண்ட பிறகே ஸ்ரீதர ஐயாவாள் பிட்சை எடுத்து உண்பது வழக்கம் எனவே போதேந்திரர் முதலில் பிட்சை எடுத்துக்கொள்ள அமர்ந்தார்.ஸ்ரீதர ஐயாவாளும் சிஷ்யகோடிகளும் ஊர் ஜனங்களும் ஸ்வாமிகளுக்கு எதிரே பவ்யமாக நின்று கொண்டிருந்தனர்.அந்தணர் இல்லதைச் சேர்ந்தவர்கள் ஸ்வாமிகளது இலையில் பிட்சைக்காரன் பதார்த்தங்களை ஒவ்வொன்றாகப் பரிமாறத் தொடங்கினார்கள்.அந்த அந்தணருக்கு ஒரே மகன்.சுமார் ஐந்து வயது இருக்கும்.ஊமை சின்னஞ்சிறுவன் ஆனதாலும் உணவில் மேல் கொண்ட பிரியத்தினாலும் ஸ்வாமிகளின் இலையில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் தனக்கு உடனே வேண்டும் என்று ஜாடையில் சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தான்.அவனைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு துக்கம் வந்தது. ராம நாமத்தை சொன்னால் மோட்சம் அடையலாம்.அப்படி இருக்கும்போது ஊமையான இந்தச் சிறுவன் எப்படி பகவன் நாமத்தைச் சொல்ல முடியும்?எப்படி இவன் கரை ஏறுவான் என்பதே ஸ்வாமிகளின் கவலை.ஆனால் அடுத்து அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதை ஸ்வாமிகள் அறியாதவரா என்ன?

சிறுவனின் பரிதாப நிலையை நேராகப் பார்த்த பிறகு, ஸ்வாமிகளுடைய கவனம் பிட்சையில் செல்லவில்லை.விருப்பம் இல்லாமல் சாப்பிட்டார்.பல பதார்த்தங்களை இலையில் மீதம் வைத்து விட்டு எழுந்து வெளியே வந்து அமர்ந்தார்.அப்போது ஸ்வாமிகளிடம் ஆசி பெற ஏராளமானோர் கூடினர். அந்தணரின் குடும்பத்தினரும் பவ்யமாக நின்றிருந்தனர்.ஊமையான அந்தச் சிறுவன் மட்டும் பசியுடன் ஸ்வாமிகள் சாப்பிட்ட இலைக்கு முன் தவிப்புடன் நின்றிருந்தான்.அவரது இலையில் சில பதார்த்தங்கள் மீதம் இருந்தன.அங்கே வேறு எவரும் இல்லாததால் இலைக்குமுன் அமர்ந்து ஸ்வாமிகள் உண்டது போக மிச்சம் மீதி இருந்த உணவு வகைகள் ஒன்றையும் விடாமல் பரபரவென்று உட்கொண்டான்.பசி எனும் நெருப்பு தற்போது தணிந்துவிட்டதால் சிறுவனின் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொண்டது.அடுத்து நடந்த நிகழ்வை ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.இதுவரை எந்த ஒரு வார்த்தையயுமே உச்சரிக்காமல் இருந்த அவனுடைய வாய் ஸ்ரீராம ராம என்று சந்தோஷமாக உச்சரித்தது.இதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.தனக்குப் பேச வந்துவிட்டதே என்கிற ஆனந்தத்தில் அவன் கூத்தாடினான்.வாய் பேச முடியாத தன் மகனின் வாயில் இருந்து ஸ்ரீராம கோஷம் வருவதைக் கேட்ட அவனுடைய பெற்றோர்.திகைத்துப் போய் வாசலில் இருந்து வீட்டின் உள்ளே ஓடினர்.

மகனே.. மகனே!உனக்கு பேச்சு வந்துவிட்டது.அதுவும் ராம நாம ஜபத்துடன் உன் பேச்சைத் துவக்கி இருக்கிறாய் என்று கூறி அவனுடைய பெற்றோர் கண் கலங்க அவனைக் கட்டித் தழுவினர்.வெளியே வாசலில் அமர்ந்திருந்த அந்த மகான் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.இதெல்லாம் நடந்தது இவருடைய கருணையில்தானே!பேச முடியாத மகன் பேசக் காரணமாக இருந்தது இவரல்லவா?ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை எந்த நேரமும் பகவானின் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருக்கும் போதேந்திரரின் நாவில்பட்ட உணவின் மீதியை உட்கொண்டதால் அல்லவா அந்தச் சிறுவன் பேசினான்!அவன் பேச வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மகான் தனது இலையில் பதார்த்தங்களை மிச்சம் வைத்துவிட்டு எழுந்து சென்றாரோ?மகனுடன் சென்று, அந்த மகானின் திருப்பாதங்களில் விழுந்து தொழுதனர் பெற்றோர்.கோவிந்தபுரத்தில் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்த இடத்துக்கு அருகில்தான் காவிரி நதி!கோடை அல்லாத காலங்களில் கொப்பளித்துக் கொண்டும் கழித்துக் கொண்டும் ஓடும் அந்த நதியின் அழகை ரசிப்பதற்கும் அங்கே கூடும் சிறுவர்களுடன் விளையாடுவதற்காகவும் காவிரிக் கரைக்கு அடிக்கடி செல்வார் ஸ்வாமிகள்.கள்ளங் கபடம் இல்லாத அந்தச் சிறுவர்களுக்கு இணையாக வயது வித்தியாசம் பாராமல் விளையாடுவார் ஸ்வாமிகள்.சிறுவர்களின் ஆனந்தம் கண்டு குதூகலிப்பார்.சில சமயம் ஆற்றங்கரையில் சாகசங்கள் சிலவற்றை செய்து காண்பித்து சிறுவர்களை மகிழ்விப்பார் ஸ்வாமிகள்.இது ஸ்வாமிகளுக்கும் சந்தோஷமாக இருக்கும்.காவிரி ஆற்றங்கரையில் போதேந்திர ஸ்வாமிகள் இருப்பதை சிறுவர்கள் பார்த்துவிட்டால் போதும்.அவர்களுக்கு குஷி பிறந்துவிடும்.துள்ளிக் குதித்து ஓடிவந்து விளையாடுவதற்கென்று ஸ்வாமிகளுடன் ஒட்டிக்கொண்டு விடுவார்கள்.

அது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்றாலும், அன்றைய தினம் நடக்கப் போகும் விளையாட்டுதான் ஸ்வாமிகளின் இறுதியான விளையாட்டு என்பதை. பாவம் அந்தச் சிறுவர்கள் அறியவில்லை!அது கோடை காலம் காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றிப்போய் இருந்தது.நதியின் பெரும் பகுதியில் மணல் தெரிந்தது.தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது.
மணல் பகுதியில் இருந்த குழி ஒன்றுக்குள்.தான் இறங்கிக்கொண்டு மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களிடம் கூறினார் ஸ்வாமிகள்.சிறுவர்கள் ஆனந்தமாக மணலை அள்ளிப் போடுகிற நேரம் பார்த்து ஏ பசங்களா!என் மேல் மணலை அள்ளிப் போட்டு மூடிவிட்டு நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போய்விட வேண்டும்.வீட்டில் எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது.நாளை பொழுது விடிந்ததும் இங்கே வந்து என்னைப் பாருங்கள் என்ன என்றார்.ஸ்வாமிகளுடனான ஒரு விளையாட்டே இது என்று நம்பிய அந்த அப்பாவிச் சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு.குழிக்குள் மணலை நிரப்பினார்கள்.ஸ்வாமிகளது உருவம் மறைந்துவிட்டது.வாங்கடா வீட்டுக்குப் போகலாம்.சாமீ ஜபம் பண்றாரு.இங்கே நாம நின்னா அவருக்குத் தொந்தரவா இருக்கும் என்று இருட்டுகிற வேளையில் அனைவரும் கலைந்துவிட்டனர்.மறுநாள் காலை தங்களது அன்றாட அலுவல்களின் பொருட்டு ஸ்வாமிகளைத் தேடினர் அவரது சிஷ்யர்கள்.ஆசி பெற வேண்டி. ஊர் மக்கள் ஸ்வாமிகளைத் தேடி வந்தனர்.இப்படிப் பலரும் ஸ்வாமிகளைத் தேடி கொண்டிருக்க... அவரைக் காணவில்லை என்கிற தகவல் பரவியது பல இடங்களில் தேடிப் பார்ததனர்.ஸ்வாமிகளுடன் ஆற்றங்கரையில் அடிக்கடி விளையாடும் சிறுவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள் பெரியோர்.அப்போதுதான் முந்தைய தினம் நடந்த சம்பவத்தின் வீரியம் அந்தச் சிறுவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.கண்களில் நீர் கசிய ஸ்வாமிகளின் மேல் மணலைப் போட்டு மூடிய விவரத்தைத் தேம்பித் தேம்பிச் சொன்னார்கள்.

சீடர்களும் ஊர்க்காரர்களும் பதறிப்போய் ஆற்றங்கரைக்கு ஓடினார்கள்.சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் மேடாக இருந்த மணலைக் கைகளால் விலக்க ஆரம்பித்தார்கள்.அவர்கள் மணலை அள்ளிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் அசாரீ வாக்கு ஒன்று எழுந்தது.பக்தர்களே!நாம் இந்த இடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்துகொண்டு ஜீவன் முக்தராக விளங்குவோம். அதோடு, உலக நன்மைக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே இருப்பதால் நமக்கு எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம்.தோண்டுவதை நிறுத்துங்கள் இதற்கு மேலே பிருந்தாவனம் ஒன்றை அமைத்துத் தினமும் ஆராதித்து வாருங்கள்.ஒவ்வொரு நாளும் லட்சத்துக்கு எட்டாயிரம் நாம ஜபம் செய்கிற பக்தர்களுக்கு நாம் தரிசனம் தருவோம் என்று அந்தக் குரல் ஸ்வாமிகளின் மொழியாக ஒலித்தது!இந்த அசரீரி வாக்கைக் கேட்ட அவருடைய பக்தர்களும் சீடர்களும் அதற்கு மேல் குழியைத் தோண்டாமல் மண்ணைப் போட்டு மூடி விட்டார்கள்.அவர் மீது கொண்ட குருபக்தி காரணமாக சில பக்தர்கள். ஆற்று மணலில் விழுந்து தேம்பி அழுதனர்.இன்னும் சிலரோ நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர்.ஸ்வாமிகள் நிரந்தாமாகக் குடிகொண்ட இடத்தில் அவரது அசரீரி வாக்குப்படியே ஒரு துளசி மாடம் அமைத்து மகா அபிஷேகம் நடத்தி தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தனர் அவரது பக்தர்கள். ஆற்றங்கரை மணலுக்குள் ஸ்வாமிகள் ஐக்கியமான தினம் கி.பி.1692ம் வருடம் புரட்டாசி மாதம் பவுர்ணமி.இப்போதும் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பவுர்ணமியில் ஆரம்பித்து.மகாளய அமாவாசை வரை பதினைந்து நாட்கள் ஆராதனை உற்சவம் பாகவதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து குவிக்கிறார்கள்.ஜீவசமாதியில் இருந்துகொண்டு போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்றைக்கும் நாமம் ஜபித்துக்கொண்டு தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்கிறார்.அவரது அதிஷ்டானத்தில் இருந்து வரும் ராம நாம ஒலியைக் கேட்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை தரிசிப்போமா பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சன்னிதி.போதேந்திரரின் அதிஷ்டானம் இவை இரண்டும்தான் இங்கே பிரதானம்.ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் டிரஸ்ட் அமைப்பினர் இந்த அதிஷ்டானத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்கள்.பாலிஷ் செய்யப்பட்ட கருங்கற்களால் அதிஷ்டானத்தைப் புதுமைப்படுத்தி இருக்கிறார்கள்.உயரமான தூண்கள் கொண்ட ஒரு மண்டபத்தின் நடுவே அதிஷ்டானம் இதை வலம் வரலாம்.

கும்பாபிஷேகத்தின் காரணமாக இந்த அதிஷ்டானத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களைச் சற்றுத் தோண்டி எடுத்து சீரமைக்க ஆரம்பித்தார்கள்.அப்போது சுமார் ஆறடிக்குக் கீழே அதிஷ்டானத் தோற்றத்தில் ஓர் அமைப்பு தென்பட்டதது.இது ஆதியில் மருதாநல்லூர் ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளால் அமைக்கப்பட்ட அதிஷ்டானமாக இருக்கலாம் என்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தால் ஆற்று மணல் ஆம்!மணலுக்குள்தானே தன்னை மூடிக்கொண்டார்.இந்த மகான் மருதாநல்லூர் ஸ்வாமிகள்(இவரது காலம் கி.பி 1777-1817 என்பர்)போதேந்திரரின் அதிஷ்டானத்தை அமைத்தது பற்றி தெரிந்து கொள்ளலாம். மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் காலத்தில் தஞ்சையை ஆண்டு வந்த மகாராஜா சத்ரபதி சிவாஜியின் வழி வந்தவர்.ஆன்மிகத்தின் பாதையில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர்.மகான்களைப் போற்றியவர்.மருதநல்லூர் ஸ்வாமிகளின் காலத்தில் கோவிந்தபுரத்தில் உள்ள போதேந்திரரின் அதிஷ்டானத்தை பக்தர்கள் தரிசிக்க முடியமால் இருந்து வந்தது.காரணம் அப்போது கரை புரண்டு ஓடிய காவிரியின் வெள்ளம் போதேந்திரரின் அதிஷ்டானத்தை முழுவதும் முழ்கடித்துவிட்டது.எவரது கண்களுக்கும் அந்த அதிஷ்டானம் தென்படவில்லை.இந்த நிலையில் தஞ்சை மகாராஜாவின் விருப்பப்படி காவிரி நதியைச் சற்றே வடக்குப் பக்கம் திருப்பி போதேந்திரரின் அதிஷ்டானத்துக்கு எதிர்காலத்தில் எந்தவித பாதிப்பும் வராமல் தடுப்பு வேலைகளைத் திறம்பட செய்தார் மருதாநல்லூர் ஸ்வாமிகள்.மக்கள் சக்தியால் முடியாத ஒரு பணியை மகான் சாதித்ததில் பெரிதும் மகிழந்த தஞ்சை மகாராஜா, மருதாநல்லூர் ஸ்வாமிகளை ஏகத்துக்கும் கவுரவித்து மகிழ்ந்தான்.போதேந்திரரின் அதிஷ்டானத்தை மருதாநல்லூர் ஸ்வாமிகள் எப்படிக் கண்டுபிடித்தார்.என்று தகவல் சொல்வார்கள்.சுட்டெரிக்கும் காவிரியின் மணலில் படுத்துக்கொண்டே உருண்டு வருவாரார் தினமும் ஒரு நாள்.மகிழ்ச்சி மேலிட ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன்.இங்குதான் அவரது ஜீவன் உறங்கிக் கொண்டிருக்கிறது. என்று கூத்தாடினார்.

அப்போது உடன் இருந்த அரசு அதிகாரிகளும் பக்தர்களும் அதெப்படி இங்குதான் அவரது ஜீவன் உறங்குகிறது என்பதை சர்வ நிச்சியமாகக் கூறுகிறீர்கள்?ஆற்று மணலில் எல்லாப் பகுதிகளும் எங்களுக்கு ஒரே மாதிரிதானே காட்சி தருகிறது என்று கேட்டார்கள்.அதற்கு மருதாநல்லூர் ஸ்வாமிகள். பக்தர்களே!படுத்துக்கொண்டே ஒவ்வொரு பகுதியிலும் என் காதை வைத்துக் கேட்டுக் கொண்டே வந்தேன்.இந்த இடத்தில் மட்டும்தான் இன்னமும் ராம ராம எனும் நாம கோஷம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது.எனவே இங்குதான் அவரது ஜீவன் ராம நாமாவை உச்சரித்து வருகிறது என்று தீர்மானித்தேன் என்றார்.அடுத்த கணம் அங்கு கூடி இருந்தார்கள் அனைவரும் மணற்பரப்பில் விழுந்து. போதேந்திரரை மானசீகமாகத் தொழுதார்கள்.அதன்பின்தான் போதேந்திரருக்கு இங்கே அதிஷ்டானம் அமைக்கப்பட்டது.கிழக்கு நோக்கிய முகப்பில் அதிஷ்டானத்தின் பிரதான வாயில். முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.தற்போது நித்ய பூஜை அன்னதானம் என்று எதற்கும் இங்கே குறைவில்லை.தினமும் காலை ஆறு மணிக்கு சுப்ரபாத சேவை. எட்டு மணிக்கு உஞ்சவிருத்தி.ஒன்பது மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்.பதினொரு மணிக்கு அதிஷ்டான பூஜை.அதன் பிறகு சமாராதனை அன்னதானம்.

இதேபோல் மாலை நான்கு மணிக்கு சம்பிரதாய பூஜை.
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்

மூலவர் :காமாட்சி அம்மன்
உற்சவர் :காமாட்சி
தல விருட்சம் :செண்பகம்
தீர்த்தம் :பஞ்ச கங்கை
ஆகமம்/பூஜை  :சிவாகமம்
பழமை :3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :கச்சி
ஊர் :காஞ்சிபுரம்
மாவட்டம் :காஞ்சிபுரம்
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:ஆதிசங்கரர்.  
      
திருவிழா:மாசியில் பத்துநாள் பிரம்மோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி திருவிழா, ஐப்பசியில் அவதார உற்சவம் ஆகியவை ஆண்டு திருவிழாக்கள். ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்பு பூஜை நடக்கும். தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, விஜயதசமி, தீபாவளி, பொங்கல் நாட்களில் அம்மன் தங்கரதத்தில் உலா வருவாள்.  
      
தல சிறப்பு:அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.  
      
திறக்கும் நேரம்:காலை 5மணி முதல் 12.30மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் 
    
முகவரி:அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் -631 501. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91 - 44-2722 2609 
     
பொது தகவல்:காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் அன்னபூரணி சன்னதி உள்ளது. ஐப்பசி மாதம் இங்கு அன்னாபிஷேகம் நடக்கும். இந்த சன்னிதானத்தில் தர்ம துவாரம், பிக்ஷத்துவாரம் உள்ளது.

அம்பிகையை வணங்கி பிக்ஷத்துவாரத்தின் வழியாக "பவதி பிக்ஷாம் தேஹி'' என கையேந்தி பிச்சை கேட்க வேண்டும் என்பது விதி. இப்படி செய்து வழிபட்டால் அம்பாள் நம்மை எவ்வித சிரமமும் இன்றி உணவு கொடுத்து காப்பாற்றுவாள் என்பது நம்பிக்கை.
 
பிரார்த்தனை:இத்தலத்தில் உள்ள அம்மன் பக்தர்களை தன் குழந்தைகளைப் போல் பார்ப்பதால் வேண்டிய வரங்கள் எல்லாமே கொடுத்தருள்கிறாள்.
அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ஏற்படுகிறது. இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தவிர திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோசம் ஏற்படுவதில்லை. எனவே நவகிரக தோசம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடல் நலம்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்ததால் தான் ராமர், லட்சுமணர் பிறந்தனர் என்று கூறப்படுவதுண்டு.
 
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு புடவை சாத்துதல் , அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். 
     
தலபெருமை:துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும், ஆதிசங்கரரால் கலியுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு. இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள். பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் "காமகோடி காமாட்சி' என அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது.

இவ்வூரில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.

மகாவிஷ்ணுவின் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்வர் பெருமாள் சன்னதி காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தின் அருகிலேயே இருப்பது சிறப்பான அம்சமாகும்.

இந்த கோயிலின் விசேஷ அம்சம் துண்டீர மகாராஜா சன்னதி ஆகும். இங்கு ஆட்சி செய்த ஆகாசபூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவன் காமாட்சியை நாள்தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான். இவனது பக்திக்கு மகிழ்ந்த அம்மன் தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாக கொடுத்தாள். கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயருடன் அவதரித்தார். ஆகாசராஜனுக்கு பிறகு துண்டீரரே ஆட்சியும் செய்தார்.

துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. துண்டீர மகாராஜா அம்மனை வணங்கிய நிலையில், காமாட்சி சன்னதிக்கு எதிரே உள்ளார். இவரை வணங்க செல்லும் போது மவுனமாக செல்ல வேண்டும். பேசிக்கொண்டு சென்றால் அம்மனை தரிசித்த பலனை இழப்பதுடன் துண்டீர மகாராஜாவின் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்.

சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் காட்சிதருகிறாள். கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு.

கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி உள்ளது பலர் பார்த்திராத ஒன்று.

காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் காமாட்சி கோயிலை தவிர அங்கெல்லாம் வேறு அம்பாள் சன்னதி கிடையாது.

கிருதயுகத்தில் 2000 சுலோகங்களால் துர்வாசராலும், திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களால் பரசுராமராலும், துவாபர யுகத்தில் 1000 சுலோகங்களால் தௌம்யா சார்யாரும், கலியுகத்தில் 500 சுலோகங்களால் மூகசங்கரரும் பாடிய பெருமை காமாட்சிக்கு உண்டு. இந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி ,லட்சுமி, அரூப லட்சுமி, சியாமளா, வாராஹி, அன்னபூரணி, அர்த்தநாரீ ஸ்வரர், தர்மசாஸ்தா, துர்வாச முனிவர், ஆதிசங்கரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

இங்குள்ள பெருமாள் கள்வன் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலுக்குள் உள்ள இவரது சன்னதி 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிற சிறப்பு பெற்றது.

இவ்வாலயத்தினுள் முதல் பிரகாரத்தின் மத்தியில் உள்ள காயத்ரி மண்டபத்தின் மத்தியில்தான் காமாட்சி அம்மன் வீற்றிருக்கிறாள். இம்மண்டபத்தினுள் 24 ஸ்தம்பங்கள் (தூண்கள்) உள்ளன.24 அட்சரங்கள் 24 தூண்களாக காட்சியளிப்பது இங்கு சிறப்பு.இதேநிலையில் இதே போல் மண்டபத்தின் கீழே இருப்பதாவும் ஐதீகம். அதனால் தான் விவரம் அறிந்தவர்களாக இருப்பின் காயத்ரி மண்டபத்திற்குள் சென்று நின்று வணங்கமாட்டார்கள். காரணம் அம்பாள் மீதே நிற்ககூடாது என்ற அச்சம் தான் என்றும் கூறுகின்றனர்.

துர்வாசர் இவர் சிறந்த தேவி பக்தர். லலிதாஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர். இவரே இப்போதுள்ள அம்மனின்மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர். அம்மன் முதன்முதலில் காட்சி தந்ததும் இவருக்கே.

இது அம்மனின் எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சியில் ஒரு காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக விளங்கினாளாம். ஆகையால் இந்த ஸ்ரீ சக்கிரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினாராம். இவருக்கு இக்கோயிலில் தனி சன்னதி உண்டு. இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர்.

காமாஷி தத்துவம் : காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாஷி. கா என்றால் ஒன்று. ம என்றால் ஐந்து. ஷி என்றால் ஆறு. அதாவது ஐந்து திருநாமங்களையும் சக்தி பேதம் மூன்று. சிவபேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள். மற்றும் கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள்.காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பாணமும் இருக்கும்.இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள். பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுகிறார்.
 
தல வரலாறு:பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான். ஆனாலும், அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில், அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால் தான் மரணம்   நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால், அன்னை பராசக்தி காமாட்சியாக அவதாரம் எடுத்து, அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள். கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார்.
 
சிறப்பம்சம்: அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகோடி பீடமாகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அருபதி முன்று அருபத்தி நான்காம் வருடமா என்று சரியாக ஞாபகம் இல்லை... அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த திரு. பக்தவச்சலம் அவர்களை மஹா பெரியவா சந்திக்க வேண்டும் என்று நினைத்தது அவருக்கு தெரிவிக்கப்பட்டது. திரு. பக்தவச்சலம் அவர்கள் நடு நடுங்கி விட்டார். உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் தரிசனம் செய்ய ஆவலாக இருக்கும் ஜகத் குரு என்னை பார்க்க வேண்டும் என்று தகவல் வந்ததை நினைத்து ரொம்பவே பயந்து விட்டார். இருப்பினும் மஹானின் உத்தரவை ஏற்று உடனடியாக திரு. பக்தவச்சலம் அவர்கள் பெரியவர்களை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார். அந்த கருனை கடலான மஹா பெரியவாளை சென்று நமஸ்காரம் செய்தார். மஹா பெரியவா பக்தவச்சலம் அவர்களிடம் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்து தர வேண்டும் என்று சொன்னார். பக்தவச்சலத்திற்க்கோ இன்னும் பயம் அதிமாகி விட்டது. உடனே மஹா பெரியவா இப்போது நமது தேசத்திற்கு ஒரு பெரிய ஆபத்து வரபோகிறது. ஒன்பது கோள்களும் ஒரே நேர் கோட்டில் வரப்போகிறது. அப்படி வரும் போது பெறும் ஆபத்து ஏற்ப்பட வாய்ப்புள்ளது. அதனால் மக்களை அந்த பாதிப்பில் இருந்து காப்பாற்ற திருப்பாவை, திருவெம்பாவை, ஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகம் சிறு சிறு புத்தகங்களாக அச்சு அடித்து அனைத்து கோவில்களிலும் காலை, மாலை ஆகிய இரு வேளையும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து தொடர்ந்து சில காலம் சொல்லி வந்தால் வர இருக்கும் ஆபத்தில் இருந்து லோகத்தை காப்பாற்ற முடியும் என்று சொன்னார்கள். உடனே இதற்கு செவி சாய்த்த அப்போதைய தமிழக முதல்வர் நிச்சயம் செய்கிறேன் என்று சொன்னார். பத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் தலா ஒரு லட்சம் புத்தகங்கள் அச்சு அடிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கோவிலுக்கும் வழங்கப்பட்டது. {ஒரு லட்சம் காபி  அடிபதற்கு இன்று ஒரு மணி நேரம் போதும். ஆனால் அன்றைக்கு இது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பத்து பதினைந்து பிரஸ்களில் சுமார் இரண்டு மாதம் கஷ்ட்ட பட்டு அடித்தார்கள் அப்போதைய தமிழக முதல்வர்} பெரியவாளை தரிசனம் செய்து விட்டு வந்த பக்தவத்சலம் பயம் நீங்கி தெளிவடைந்தார். பிறகு தலைமை செயலகம் சென்ற முதல்வர் பூந்தமல்லி அருகே இருந்த பக்தவத்சலத்திற்க்கு சொந்தமான சுமார் முப்பத்தி மூன்று ஏக்கர் நிலத்தை மஹா பெரியவாளிடம் ஒப்படைத்து இதை வைத்து ஏதாவது ஒரு நல்ல காரியங்களுக்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த நிலத்தை பெரியவர்களிடம் ஒப்படைத்தார் திரு. பக்தவத்சலம். அந்த இடம் தான் தற்போது ஜயேந்திர ஆயுர்வேத கல்லூரியாக செயல் பட்டு வருகிறது. அன்றைக்கு அப்படி ஒரு நிலைமை வரவிருக்கும் முன்பே அந்த பேராபத்தை தடுக்க மஹா பெரியவா முயன்றது போல் இன்று நமக்கு ஒரு மஹா பெரியவா, புது பெரியவா இவர்கள் இல்லாதது நமது துரதிர்ஷ்டமே.  அப்போது இருந்த காலகட்டத்தை விட இப்போது உள்ள காலம் மிக மிக மோசமாகவே இருக்கிறது. இன்று உலகமே அவரவர்க்களின் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக. அதுவும் நம் பாரத தேசம் கடந்த இரண்டு மாதங்களாக பல இன்னல்களை சந்தித்து கொண்டு தான் இருக்கிறது. அன்று போல் இன்று நம்மை காப்பதற்கு உலகை பழைய நிலைக்கு எடுத்து செல்வதற்கு இன்று எந்த மஹானும் இல்லை? பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் போன்றவர்களை அழைத்து தைரியமாக பேசுவதற்கும் சொல்வதற்கும் இந்த பாரத தேசத்தில் ஒருவர் கூட இல்லாதது பெரும் துரதிர்ஷ்டம் தான். பாரத் மாதாகி ஜெய் வந்தே மாதரம், வந்தே ஜகத் குரும், வந்தே ஜகத் குரும், வந்தே ஜகத் குரும், வந்தே ஜகத் குரும்....