வியாழன், 29 ஜனவரி, 2015

சிவ பூஜைக்கேற்ற ஊமத்தம்பூ..!
சிவபெருமானுக்கு உன்மத்தசேகரன் என்று ஒரு பெயர்இருக்கிறது.உன்மத்தம் என்றால் ஊமத்தம்பூ. ஊமத்தம்பூ மீது விருப்பம் கொண்டவன் என்று பொருள்.உன்மத்தம் என்பதற்கு பைத்தியம் என்றும் பொருள் உண்டு.சிவபெருமானுக்கும் பித்தன்(பைத்தியம்)என்றொரு பெயர் இருக்கிறது.எருக்கு, தும்பை ஆகிய பூக்களும் அவருக்கு பிடிக்கும்.அப்பைய தீட்சிதர் என்ற மகான்,பைத்தியம் பிடித்த நிலையிலும்,சிவன் மீது 50 ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்திரத்தைப் பாடினார்.அதற்கு உன்மத்த பஞ்சாசத் என்று பெயர்.அதில் சிவபெருமானே!உன் கருணையை என்னவென்று சொல்வேன்.எளிதாக கிடைப்பதும் மக்களால் பயன்படுத்தாததுமான ஊமத்தை,தும்பை,எருக்கு ஆகிய மலர்களை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு மோட்சத்தை வழங்குகிறாயே என போற்றியுள்ளார்.விலையே இல்லாத இந்த மலர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் கடவுளுக்கு எளிமையே பிடிக்கும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது.


தெரியுமா உங்களுக்கு பாத்ரூமில் பாடினால் அழகு போயிடும்!
பாத்ரூமில் நுழைந்ததும் தன்னை மறந்து பாடுவது சிலரது இயல்பு.ஆனால் சாஸ்திரம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று கேளுங்கள்.எங்கு குளித்தாலும்,கங்கை,யமுனை,கோதாவரி,சரஸ்வதி,நர்மதை,சிந்து, காவிரி ஆகிய ஏழு புண்ணிய நதிகளையும் முதலில் வணங்க வேண்டும்.அதற்குரிய ஸ்லோகமாக,
“கங்கே ச யமுனே ச கோதாவரி சரஸ்வதிநர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு!”
என்று சொல்ல வேண்டும்.அதன் பின் இஷ்ட தெய்வத்திற்குரிய ஸ்லோகமோ அல்லது மந்திரமோ சொல்லலாம்.ஏதும் தெரியாதவர்கள் மவுனமாக நீராட வேண்டும்.வீண்பேச்சோ கண்ட பாட்டுகளையோ சத்தமிட்டுப் பாடக்கூடாது.இதனால் நீருக்கு அதிபதியான வருணன் கோபம் கொள்வதோடு மேனியழகைக் குறையச் செய்து விடுவதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது.இனி பாத்ரூமில் படாதிர்கள்.
ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்!
ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.பித்தம்,தாகம்,விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம்,வாதம்,தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும்.கண்டகாரி,திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.
ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும்.இந்த ருத்ராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி.இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும்.இந்த ருத்ராட்சத்தை துõளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால் பக்கவாத நோயும் குணமாகும்.தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது.ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும்.பிறர் வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம் கை மணிக்கட்டில் 12ம் மேல் கையில் 16ம் மார்பில் 108ம் ஆக தரிக்கலாம்.
ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன்.இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம்.இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.
மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன்.மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.
நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா.மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.
ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன்.இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார்.செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர்.இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன்.களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.
எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான்.பாவங்கள் விலகும்.
ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர்.இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்.பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு.நாக தோஷமும்,பைசாச தோஷமும் விலகும்.
பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது.பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.
ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும் நன்மைகளும் கிடைக்கும்.அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்.

Malibu Hindu Temple
If you are in Valley, Los Angeles or Malibu area, and you don't mind enjoying a little drive, drive towards Las Virgenes canyon in Malibu. Now...... Imagine driving through a canyon on the edge of Los Angeles and seeing a massive Hindu temple.....white against stunning blue sky. That's exactly what one encounters traveling to or from the beach via Las Virgenes Canyon Road.
Malibu Hindu temple
It is an absolutely stunning setting, up in the hills of Malibu Canyon.
A wonderful place to step away from the city, spend some time in meditation or just enjoy the beauty of an authentic Hindu temple.
Built on five acres, the temple is dedicated to Vishnu and has several shrines dedicated to Hindu deities such as Ganesha, Lakshmi and Saraswati. Each shrine has a sculpted dome and intricate carvings appropriate to each deity. The place is simply spectacular!
Address:
1600 Las Virgenes Canyon Rd
Calabasas, CA 91302
(818) 880-5552
Open every day of the year.
So, if you are in the area,stop by:)
It's free, and it's an eye-opening experience.
Enjoy

அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம்
மூலவர் : வரதராஜர் (தேவராஜர்)
அம்மன்/தாயார் : பெருந்தேவி
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : அனந்த சரஸ்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அத்திகிரி, திருக்கச்சி
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
போன்: +91- 44- 2726 9773, 94439 90773
தங்கபல்லி: இவ்விடத்தில் தங்கபல்லி வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும் கிரகண தோசங்களும் விலகி ஷேமம் உண்டாகும். நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.
பல்லி வரலாறு : ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்டு முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என கூறிவிட்டார்.பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.பெருமாள் உங்கள் ஆத்மா வைகுந்தம் செல்ல சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோசம் நீங்கி ஷேமம் உண்டாகும். சூரியன் சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.ஆகையால் இத்தரிசனம் மிக முக்கியமானதாகும். தோஷ நிவர்த்தி பெற இந்த பல்லிகளை வணங்குகிறார்கள்.

Ekapada Shiva,
The Lord stands on apasmara, the Lord stands one legged crushing my ignorance. The Lord Ekapada Shiva stands as the Trinity, as Trimurti Shiva who rises with Lord Brahma and Lord Vishnu on his side.
Shivam Shantham jagnannatham| 
Lokanugraha karakam||
Shivamekapadam nithyam|
Shikaraya namo nama||
This is the Panchakshara, a part of which is the letter Shi, To Lord Shiva who resides in its essence. Who is the keeper of peace and who preserves this world and all its creation. Who creates life in the form of Brahma, who preserves life in the form of Vishnu and who releases the soul in the form of Shiva. To the great Lord Trimurti Shiva I bow.
The all pervading Lord Shiva Trimurti echoes everywhere around me, in the morning sun, in the flame of the lamp I light, in the very form of the Linga worship, in the pure vilva leaves I offer in prayer. He resides deep within my intellect as Ekapada Shiva, crushing my ego to uplift my being.

திருமாங்கல்யத்தில் லட்சுமிகாசு, மணி ஆகியவற்றை கோர்ப்பதன் நோக்கம் என்ன?
திருமணம் முடிந்த மூன்றாம் மாதத்தில்மணப்பெண்ணுக்கு சுமங்கலிகள் நடத்தும் சடங்கு தாலி பெருக்குதல். முதன் முதலில் மஞ்சள் கயிற்றை மாற்றும் சடங்கு இது.
புதிதாக மாற்றும்போது, மங்கல ஆபரணமான தாலியோடு லட்சுமி காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் 
தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.