புதன், 30 செப்டம்பர், 2020

சுந்தரேஸ்வரர் (மீனாட்சி)மதுரை

சுந்தரேஸ்வரர் (மீனாட்சி)மதுரை




உலகப்புகழ் பெற்ற சிவாலயம். பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி சிவ பெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே. சிவனே எல்லாம் வல்ல சித்தராக  எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவ பக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம். இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே  சிவபெருமானுக்கு  நடை பெறுகின்றன

காமாக்ஷி அம்மன் கோவில்.

காமாக்ஷி அம்மன், காஞ்சிபுரம்

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.


தெரிந்து கொள்வோம்

 தெரிந்து கொள்வோம்  !!

1. பீம சாந்தி = 55ஆவது வயது ஆரம்பம். 


2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம்.


3. ஷஷ்டிமாப்த பூர்த்தி சாந்தி = 61ஆவது வயது ஆரம்பம்.


4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம்.

 
5. ரத சாந்தி = 72ஆவது வயது ஆரம்பம். 


6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம். 


7. சதாபிஷேகம் = 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.


8. ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) = பௌத்ர

னுக்கு புத்ரன் பிறந்தால்.
9. ம்ருத்யுஞ்ஜய சாந்தி = 85ஆவது முதல் 90க்குள்.

 
10. பூர்ணாபிஷேகம் = 100 ஆவது வயதில் சுபதினத்தில்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். {கி. பி. 329 - கி. பி. 367 வரை}


காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.16:ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். {கி. பி. 329 - கி. பி. 367 வரை}

ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர். இவரது தந்தை பெயர் கேசவ சங்கரர். பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் "அச்சுத கேசவர்" இவர் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இவர் பல முறை விஜய யாத்திரைகளை மேற்க்கொண்டவர். அப்போது ச்யாநந்தூர நாட்டு மன்னரான குலசேகரனை தன் அருள் நோக்கால் கவிஞ்சராக்கியவர். ஜைனராக மாரிய அந்தணர்களுக்கு "ஜராத்ருஷ்டி" எனப் பெயரிட்டு அவர்களை சிந்து நதிக்கு அப்பால் செல்லும் படி கட்டளை பிறப்பித்தார். பிற மதங்கள் இப்படி ஆக்கிரமிக்காமலிருக்க அரும்பாடுபட்டவர். இவர் கி. பி. 367ஆம் ஆண்டு அக்ஷய வருடம் சுக்ல பக்ஷம் அஷ்டமியன்று காஷ்மீரத்திலுள்ள 'கலாபூரி' என்னுமிடத்தில் சித்தி அடைந்தார். அந்த ஸ்தலம் அது முதல் இன்று வரை 'உஜ்வல மஹாயதி பரம்' என்றழைக்கப்பட்டுகிறது.

வியாழன், 24 செப்டம்பர், 2020

நமஸ்காரம்

ஓம் சிவாய நம: (நமஸ்காரம் பதிவு)
========================================
" நம: என்றால் நமஸ்காரம், என்று பொருள் நமஸ்காரம் என்பவை எல்லாம் பணிவைக் குறிக்கும் வார்த்தைகள்.

 இவற்றில் "நமஸ்காரம்' என்ற சொல்லுக்கு " வணங்குதல் என்று பொருள். "

குரு நமஸ்காரம்
============
நமாமி சத்குரும் சாந்தம் ப்ரத்யக்ஷம் சிவரூபினம் சிரஸா யோகபீடஸ்த்தம்  முக்தி காமார்த்த ஸித்திதம் = குரு கீதை சாந்தமானவரும் ப்ரத்யக்ஷ சிவரூபியும், யோகபீடத்தி லிருப்பவரும், முக்தி காமமாகிய செல்வத்தைத் சித்திக்க செய்பவரும் ஆகிய ஸத்குருவைத் தலையால் வணங்குகிறேன்.

சிலர்  ஸ்ரீருத்ரத்தை பற்றி சந்தேகத்திலிருந்து தெளிவு பெற ஸ்ரீ பரத முனிவரிடம் சென்றனர்.
அதற்கு ஸ்ரீ ருத்ரம் சாக்ஷாத் பரமேஸ்வரனுடையது. ஏனென்றால்
இதில் நம: என்ற பதம் அதிகம் வந்திருப்பதால் ஸ்ரீ பரமேஸ்வரனுடையது, என்றார். அதற்கு விளக்கம் அளிக்கையில்
தைத்திரியம்  “பரப்ரம்மத்தை  நமஸ்காரம் பண்ணத்தகுந்தவர்   “என்று உபாஸிக்க வேண்டும்,
அவ்வாறு செய்தால் நமது விருப்பங்கள் நம்மை நமஸ்கரித்து தானாகவே வந்தடையும் என்கிறது
நமஸ்காரம் நைவேதிகும்.
 

சமயதி" = ஸ்ருதி தெய்வம், ரொம்ப  உயர்ந்தவர், பெரியவர்களை கண்டால் உடனே நமஸ்காரம் பண்ணவேண்டும். அதனால் சுலபமாக அவர்களது அன்பும் அருளும் கிட்டும் எந்த ஒரு இடத்தில் இருக்கும் போதும் ஒருவன் எல்லா நேரங்களிலும், எப்பொழுதுமே
“ருத்ரருக்கு நமஸ்காரம்” என்று ஜபித்துக் கொண்டே இருக்கட்டும். ஏனெனில் “ஸர்வமும் ருத்ரனே” என்று முழங்குகிறது ஸ்ருதி
யஜுர்வேதத்தின் தைத்திரீய சம்ஹிதை, “ஏகம்” - இரண்டற்ற ஒரே பரம் பொருள் ருத்ரனே என்றுரைக்கிறது :
“ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாய தஷ்டே”“ந  தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருஸ்யதே" = ஸ்வேதாஸ்வரோபனிஷத்”
அவருக்கு சமமானவரோ மேலானவரோ காணப்படவில்லை

ஸ்ரீருத்ரத்தில் ஏகதோ, உபயதோ நமஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது
ஸ்ரீ ருத்ரத்தில் மந்த்ரங்களுக்கு ஆதியிலும் ,அந்தத்திலும் நம:
சொல்லை உடைய மந்திரங்கள்  உபயதோ நமஸ்கார மந்திரங்கள் எனப்படும். அதாவது ஒரு வாக்யத்தில் முன்னும் பின்னும் நமஸ்கார பதங்கள் உள்ளன. மற்றும் ஒரு வாக்யத்தின் கடைசியில் நமஸ்கா பதம் சொல்லபடுகின்றது.  “நமோ ஹிரண்ய பாகவே ஸே நான்யே திஸாஞ்ச பதயே நம “ என்று இரண்டு நமஸ்கார பதங்கள் – “ நமோ பாவயச ருத்ராயச “  வாக்யத்தின் கடைசியில் ஒரு நமஸ்கார பதம் உள்ளது.

பரத சாஸ்திரத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கு ஒவ்வொரு முத்திரை உள்ளது. அதில் நமஸ்கார முத்திரை ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு மட்டும் கூறப்பட்டுள்ளது. அதனால் பரமேஸ்வரனுடையது ஸ்ரீ ருத்ரம் எனத்தெளிவுபடுத்தினார்.

=ஸ்ரீ பட்டபாஸ்கர் ஸ்ரீருத்ர பாஷ்யத்திலிருந்து நாம் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அடிமை, பக்தன், குழந்தைகள் அதனால் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து சரணாகதி அடைதலை குறிப்பது ஆகும். ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் நம் நித்யம் செய்யும் பூஜையின் அங்கமாக உள்ளது வீட்டிலும், ஆலயங்களிலும், பூஜையின் முடிவு தரிசனம் செய்த பின் நமஸ்காரம் அவசியம் செய்ய வேண்டும்.

ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் ( சாஷ்டாங்க நமஸ்காரமும்),
பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். ஆலயத்தில் வாஹனமாகிய நந்தி, பலி பீடத்திற்கு பின் அல்லது கொடிமரம் இருந்தால்  அதனடியிலேயே  நமஸ்காரம் செய்ய வேண்டும்.

தெற்கு நோக்கியும், நமது கால்களை மற்ற தெயவங்களுக்கு நேரே தெரியாமல் நமஸ்கரிக்க வேண்டும்.
ஆலயத்தில் இறைவனைத்தவிர யாருக்கும் நமஸ்காரம் பண்ணக்கூடாது.

நாம் பூமியில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது நம் உடம்பில் உள்ள ஸ்டாடிக் எனர்ஜி வெளியேறி கைடனிக் எனர்ஜி ஏற்படுகிறது விஞ்ஞானம்.

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை.
     

சிவபெருமானைப் போன்ற தெய்வம் இல்லை! சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை.
 

திருமந்திரம் அப்பேற்பட்ட ஆதி அந்தமில்லாத ஸ்ரீபரமேஸ்வரனை தினமும் நமஸ்கரிக்கிற பாக்யம்  கிட்டுமேயாகில் நாம் மட்டுமின்றி நம் பரம்பரையே புண்யசாலிகள். அதில் சந்தேகம் வேண்டாம்.
 


மூதேவி என்பதின் முழு பெயர் மூத்த தேவி என்று பெயர்

மூதேவி என வழங்கும் மூத்த தேவி
மூத்ததேவி அதாவது ஜேஷ்டா தேவியின் கொடி காக்கை, வாகனம் கழுதை. மூதேவியை வெயிலுடனும், சீதேவியை மழையுடனும் தொடர்பு படுத்துகிறார்கள். மூதேவிக்கு மற்றொரு பெயர் ஜேஷ்டாதேவி.
இவளின் கைக்கருவி விளக்கமாறு.
மூதேவி தெய்வத்தின் மகன் பெயர் குளிகன் மகள் பெயர் மாந்தி. நாகை மாவட்டம் மயிலாடுதுறை வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. தேவியை குழந்தைப் பேறு வேண்டி மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.        
சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம்.
பிற்காலத்தில் மூதேவி  (மூத்ததேவி) சிவாலயங்களில் இருந்து எடுக்க பட்டதாக தெரிகிறது. இந்த அம்பாளை ஜேஷ்டாதேவி தூம்ரவாராஹி தூமாவதி மகாநித்ரா மகாமாயா மகாராத்திரி மோஹராத்திரி காளராத்திரி என்றும் அழைப்பர். தேவிமகாத்மியத்திலும் இவள் வருகிறாள். இவள் இயற்க்கையான உறக்கமும் மன அமதியையும் தருபவள் நரம்பு தளர்ச்சி நோய்கள் சித்த பிரமையை தீர்ப்பவள். செங்கற்பட்டு ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமத் தர்ம சம்வர்தினி சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் ஜேஷ்டாதேவி தனி சன்னதி கொண்டு அமர்ந்திருக்கிறார். பிரதி சனிக்கிழமை தோறும் ராகு காலத்தில் விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.



குருவாயூர்

பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த பக்தர். அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று அப்பனைத் தரிசனம் செய்வார்.

அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ, தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது. ஆபத்தினை உணர்ந்த அவர், கண்களை மூடி “குருவாயூரப்பா குருவாயூரப்பா,” என்று உரத்துக் கூறினார்.

சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரைமேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார்.

அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உமக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று வினவ, அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி, திகைத்து, செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.

அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அப்பன், “அர்ச்சகரே! என் கையில் ஒரு மோதிரம் இருக்கும், அதைப் பூந்தானத்திடம் கொடுத்துவிடுங்கள், கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன்” என்று கூறினார்.

பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது, அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் அப்பன் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது!! தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.


நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன் கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.
 


நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.

நவராத்திரி இரண்டாம் நாள்

நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!

அம்பிகையை நாளை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி என்றும், "குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப் பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறு குழந்தைகளாக மாறியது. கார்த்திகைப் பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி "கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல் என்றால் "வெற்றி. அந்த சக்தி வேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன்னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.
 


நைவேத்யம்: தயிர்சாதம்
தூவவேண்டிய மலர்: முல்லை

பாட வேண்டிய பாடல்:

இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

15:ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 {கி. பி. 317 -கி.பி . 329 வரை}

நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

15:ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1
{கி. பி. 317  -கி.பி . 329 வரை}




ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1
ஸ்வாமிகள் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் "ஸ்ரீகாஞ்சிபத்ரகிரி". இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம் சுபத்ரர். இவர் ஸ்ரீ அகஸ்திய முனிவரை தரிசித்து அவரிடமே" பஞ்சதசாக்ஷரி" என்ற மந்திர உபதேசத்தை வாங்கிக் கொண்டார். இவர் காமகோடி பீடாதிபதியாகும் போது இவரது வயது பன்னிரண்டு. அப்போதே பெரும் புலமையும், ஞானமும் பெற்றிருந்தார். இவர் கி. பி. 329 ஆம் ஆண்டு சர்வதாரி வருடம், சித்திரை மாதம், சுக்லப்பிரதமையன்று அகஸ்தியமலை அருகில் சித்தியடைந்தார்.

பராசரர்

பராசரர்!

இருமாமுனிவர்கள் வசிஷ்டரும், கோசிகரும். இவர்கள் இருவருக்கிடையில் ஒற்றுமை இருந்ததே இல்லை. பகையுணர்வின் காரணமாக கோசிகன், வசிஷ்டரை பழி வாங்க முயன்று தவவலிமை இழந்து மீண்டும் தபோதனராகப் பலமுறை முயன்று தன் தவ வலிமை பெற்று வந்தார். உதிரன் என்ற அரக்கன் மூலம் தனது தவ வலிமைகளைத் தந்து வசிட்டரின் புதல்வர்களை அழிக்க ஏற்பாடு செய்தார் கோசிகன். வசிட்டரும் அருந்ததியும் இல்லாத சமயம் அவர்களது பிள்ளைகளை மாய்த்து விட்டான். வசிட்டரும், அருந்ததியும் மனமுடைந்து இருந்தனர். வசிட்டரின் மகன் சக்தி என்பவனின் மனைவி திரிசந்தி கருவுற்றிருந்த காரணத்தால் அவளது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள். தகவலறிந்து வந்து தானும் உயிர் துறக்க முற்பட்டாள். வசிட்டரும், அருந்ததியும் தங்களது வாரிசு அவளது வயிற்றில் வளர்வதனால் சாந்தப்படுத்தி கண்ணும் கருத்துமாக திரிசந்தியைப் பாதுகாத்தனர். தக்கதோர் நன்னாளில் திரிசந்தி ஆண் மகவொன்று ஈன்றெடுத்தாள்.

பேரனுக்கு பராசரன் என்று பெயரிட்டு கல்வியறிவூட்டினர். நற்குணம் நற்செயல்களோடு வேத நூல்யாவும் அறிந்தான். அவனது மனத்தில் இருந்த குறையை தாயிடம் கேட்டான். பாட்டி சுமங்கலியாக, தாய் அமங்கலியாக இருப்பதன் காரணம் பற்றி கேள்விகளாகக் கேட்டு துளைத்தெடுக்கும் நிலையில் உண்மையில் நடந்தவற்றை திரிசந்தி உரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தாத்தா, பாட்டி, தாயின் மனமுவந்த ஆசிகள் பெற்று மனத்தை ஒருநிலைப்படுத்தி சிவபெருமானை நோக்கிக் கடுமையாக தவமேற் கொண்டான். நேரில் காட்சி தரும் நிலையும் ஏற்பட்டது. தன் தந்தையைக் காணவும், அரக்கர்களை அழிக்க ஆற்றலும் வேண்டிக் கோரினான். அவனது பக்தியின் வலிமையால் பராசரரின் தந்தையான சக்தி அங்கு தோன்றுமாறு ஈசன் கருணை புரிந்தான். தந்தையைக் கண்டு வணங்கி ஆசிகள் பெற்றான். அரக்கர்களை அழிப்பது எளிதல்ல என்பதால் வேள்வி செய்யுமாறு ஈசன் பணித்தார். ஈசன் உபதேசித்தப்படி சிறந்ததொரு யாகம் மேற்கொண்டான். யாகத்தில் ஏற்படும் புகை முழுவதும் அரக்கர்கள் இருக்குமிடத்தில் பரவி அரக்கர் கூட்டம் அழிந்து விட்டது.

யாரோ செய்த தவறுக்குப் பலர் அழிவதை உணர்ந்த வசிட்டர் தனது பேரன் பராசரரிடம் பலர் அழியக் காரணமாகி பலரைக் கொன்ற பாபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நாம் இறைவனை வேண்டி வழிபடுவதே தக்க செயலாகும் என்று கூறி வேள்வியை நிறுத்துமாறு உபதேசித்தார். அச்சமயம் அங்கு வந்த புலஸ்திய முனிவரும் பராசரரிடம் பிற உயிர்கள் அழியாத நிலையில் தவமேற் கொண்டோர் வாழ்வதே சிறப்பு என விளக்கினார். பாட்டனாரும், புலஸ்தியரும் கூறிய வார்த்தைகட்கு இணங்கி பராசரர் இறைவழிபாட்டில் தன் வாழ்க்கைப் பணி ஏற்றார்.  மூத்தோர் சொல் அமுதமாகும் என்பதை உணர்ந்த காரணத்தால் பராசரர் தனது அறிவை ஞானத்தின் பால் மாற்றி மெய் ஞானம் உணர்ந்திட்ட மஹானாக விளங்கினார் என்றும், அழியாப்புகழுடன் சிறந்த நூல்களை எழுதி வரும் சந்ததிகட்கு வழிகாட்டிய மஹானாகத் திகழ்ந்தார்.


நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன் நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி போர்க்கோலம் பூண்டு சும்ப நிசும்பர்களையும் அவர்களது படைத்தளபதிகளான மது கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும் மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.


நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரியின் முதல் நாளில்  அம்பாளுக்கு “மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். “அண்டம் என்றால் “உலகம். “சரம் என்றால் “அசைகின்ற பொருட்கள். “அசரம் என்றால் “அசையாத பொருட்கள். ஆம்… அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ! ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி....


திருமாலின் தசாவதாரம்

திருமாலின் தசாவதாரம்!

வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம் பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.

மச்சாவதாரம் : திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.

கூர்மாவதாரம் : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக்களித்ததாகச் சொல்வர்.

வராக அவதாரம் : பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.

நரசிம்ம அவதாரம் : அசுரன் இரண்யகசிபு நாராயணனே பரம் பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.

வாமன அவதாரம் : பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.

பரசுராம அவதாரம் : ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.

ராமாவதாரம் : ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும் அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும் தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

பலராம அவதாரம் : கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

கிருஷ்ணாவதாரம் : வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும் பஞ்சபாண்ட வரைக்காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் ஒரு அவதாரம் எடுப்பார். கல்கி அவதாரமாக கலியுகத்தில் எடுத்து உலகை அழித்து நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என எதிர் பார்த்து காத்திருப்போம்.


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 11

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 11
 


திருக்கச்சிநம்பிகள் & இளையாழ்வான்

இளையாழ்வான் தாய் சொன்னது போல் திருக்கச்சி நம்பிகளைத் தரிசிக்கச் சென்றார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சி பேரருளானனுக்கு ஆலவட்டம் வீசும் பணியைச் செய்து கொண்டிருந்தார். பின்னர், திருக்கச்சி நம்பிகளிடம் கங்கை யாத்திரை சென்றதையும், அங்கு நடந்த சம்பவங்களையும் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அனைத்தையும் சொல்லி தனக்கு தாங்கள் தான் குருவாக இருந்து "காலட்சேபம்" பண்ணியருள வேண்டும் என்று வேண்டினார்.

திருக்கச்சி நம்பிகளோ தன்னுடைய குலத்தினைக் காரணம் காட்டி, "நான் அந்தணர் குலத்தில் பிறக்காத காரணத்தால், நான் உனக்கு காலட்சேபம் பண்ணுவது வர்ணாசிரமத்திற்கு எதிரானது" என்று மறுத்துவிட்டார். காஞ்சி பேரருளானனுக்கு சாலக்கிணற்றிலிருந்து அபிசேகத்திற்கு நீர் எடுத்து வரும் பணியை செய்து வருமாறு கூறினார். இளையாழ்வானும் அவ்வாறே செய்தார்.

ஒரு முறை திருக்கச்சி நம்பிகள் ஆலவட்டம் வீசும் பணி செய்து முடித்தபின், ஆலயத்திலேயே அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகளின் கால்களை அமுக்கி, குருவிற்கு செய்யும் பணியாக எண்ணி செய்தார்.

உறங்கி எழுந்த திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வானிடம், "நீர் என்ன செய்தாலும் நான் உன்னை சிஷ்யானாக ஏற்கப்போவது இல்லை" என்றார். இளையாழ்வானுக்கு எப்போதாவது திருக்கச்சி நம்பிகள் தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்வார் என்று, நம்பிக்கையுடன் பேரருளானுக்கு நீர் எடுத்துவரும் பணியைச் செய்து வந்தார்.

 மீண்டும் யாதவப்பிரகாசரிடம் காலட்சேபம்

சில தினங்கள் கழித்து, வடநாட்டிற்கு கங்கை யாத்திரை பயணம் மேற்கொண்ட யாதவப் பிரகாசர் தன் சிஷ்யர்களுடன் திருப்புட்குழி வந்தார். இளையாழ்வான் காஞ்சிபுரத்தில் சாலக்கிணற்றிலிருந்து நீர் எடுத்துவரும் கைங்கரியம் செய்வதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார். 'இளையாழ்வானை கரடி, புலி, விஷ ஜந்துகள் கொன்று விட்டதாகத் தானே நினைத்தோம், இவன் எப்படி இங்கு வந்தான்?' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

இருந்தாலும், தன் சிஷ்யர்களிடம் சொல்லி இளையாழ்வானை காலட்சேபத்திற்கு அழைத்து வருமாறு சொல்ல, இளையாழ்வானும் காலட்சேபம் நடக்கும் திருப்புட்குழிக்கு வந்து சேர்ந்தார். இன்றும் திருப்புட்குழி விஜயாசனப் பெருமாள் திவ்யதேசத்திற்குச் சென்றால், இளையாழ்வான் யாதவப் பிரகாசரிடம் காலட்சேபம் பண்ண இடத்தினை காணலாம்.

இளையாழ்வான் காலட்சேபம் கேட்க வந்ததும் வழக்கம்போல் காலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. இதனிடையே இளையாழ்வானின் அன்னை காந்திமதி இறைவனடி சேர்ந்தார். இளையாழ்வானுக்கு மிகுந்த துயரம். தாய் இறந்த பின்பும் காலட்சேபம் சென்று கொண்டிருந்தார்.

திருக்கச்சி நம்பிகளின் குரு ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியார் காஞ்சிக்கு வருவதை நாளைய பதிவில் அறிந்திடலாம்..

எம்பெருமானார் வாழித்திருநாமங்கள்

எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே!
அருட்கச்சி நம்பியுரை ஆறு பெற்றோன் வாழியே!
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே!
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே!
சுத்த மகிழ்மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே!
தொல் பெரியநம்பி சரண் தோன்றினான் வாழியே!
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே!
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே!

எண்திசை யெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே!
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்கு உரைத்தான் வாழியே!
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே!
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே!
தண்தமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே!
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே!
தெண்திரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே!
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே!.

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனி திருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே!.

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே!
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத் துறந்தான் வாழியே!
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே!
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே!
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே!
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே!
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே!

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)
சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே.
[
 *உபதேச ரத்தினமாலை*

27,★இன்றுலகீர்! சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்*
என்றையினும் இன்றி இதனுக்கு ஏற்றம் என்தான்?*
என்றவர்க்குச் சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர்தம் பிறப்பால்*
 நாற்திசையும் கொண்டாடும் நாள்.

28, ★ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்*
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்!*
ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும்*
சித்திரையில் செய்ய திருவாதிரை.

29, ★எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா*
வந்துதித்த நாள் என்னும் வாசியினால்*
இந்தத் திருவாதிரை தன்னின் சீர்மைதனை நெஞ்சே!*
ஒருவாமல் எப்பொழுதும் ஓர்.

இன்னும் அனுபவிப்போம்...


உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏

புதன், 23 செப்டம்பர், 2020

ஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் அற்புத பலன்கள்

ஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் அற்புத பலன்கள் பற்றிய பகிர்வுகள் :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஆஞ்சநேயர் பிறந்தநாள் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர். "ராமா" என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரத புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும் மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்.

அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சார்த்தி ஆராதிக்க வேண்டும்.

சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும்.

அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவத்து வழிபட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலையை அணிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, தாராபலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம்.  அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம் போன்றவை அனுமனுக்குரிய நைவேத்தியங்களாக அமைகின்றன....

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

ராமானுஜர் பகுதி பத்து

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு பத்து

இன்றைய பதிவில் திருக்கச்சி நம்பிகள் பற்றிப் பார்க்கலாம்.

🌻🌺 திருக்கச்சி நம்பிகள்

சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009ம் ஆண்டு வீரராகவர்-கமலாயர் தம்பதிகள் வாழ்ந்தனர். திருமால் பக்தர்களான இவர்களுக்கு நான்காவதாக பிறந்தவர் 'கஜேந்திர தாசர்'. இவர் தான் பிற்காலத்தில் 'திருக்கச்சி நம்பிகள்' என்று பெயர் பெற்றார். கஜேந்திரதாசர் திருமாலின் மீது பக்தி கொண்டவராய் வளர்ந்து வந்தார்.

முதுமையை எய்தியதும் வீரராகவர், தன் பிள்ளைகள் நால்வருக்கும் சொத்தினை சமமாகப் பிரித்துக் கொடுத்தார். வைசியர்கள் என்பதால் செல்வத்தை மேலும் பெருக்கிக் கொண்டு செல்வந்தர்களாக வாழவேண்டும் என்று வீரராகவர் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை தந்தார். முதல் பிள்ளைகள் மூவரும் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்தனர்.

கஜேந்திரதாசர் மட்டும் பணத்தைப் பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தைக் கழித்தார். ஒரு நாள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகளின் கனவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வந்தார். "கஜேந்திர தாசரே! நந்தவனம் அமைத்து, பூக்களைப் பறித்து மாலையாக்கி நாளும் புஷ்ப கைங்கர்யம் செய்வாயாக! உனக்கு எம் அருளைப் பூரணமாகத் தந்தோம்!" என்று ஆணையிட்டார்.

பூவிருந்தவல்லியில் தந்தை கொடுத்த நிலத்தில் நந்தவனம் அமைத்தார் திருக்கச்சி நம்பிகள். பூக்களைப் பறித்து மாலையாக்கி, நடந்தே பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரம் சென்று வரதராஜருக்கு மாலை அணிவித்து அழகு பார்த்தார். பிறகு சில காலங்கள் கழித்து ஆலவட்டம் கைங்கரியம் செய்து வந்தார். திருக்கச்சி நம்பிகளின் மேலான தூய பக்தியை கண்டு பெருமாளே நேருக்கு நேர் அவருடன் பேசத் தொடங்கி விட்டார்

 இளையாழ்வானும் திருக்கச்சி நம்பியும் :-

அப்படி பூவிருந்தவல்லியில் இருந்து திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் நடந்து செல்கையில் இளையாழ்வான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரிடம் பேசுவார். திருக்கச்சி நம்பிகள் பிராமணன் அல்லாதவர். அதனால் இளையாழ்வானுடன் ஓரளவுடன் மட்டுமே பழகுவார். இளையாழ்வானுக்கோ திருக்கச்சி நம்பிகள் மீது அதிக ஆர்வம். ஏனெனில், இறைவனுக்கே ஆலவட்டம் கைங்கரியம் செய்கிறார் அல்லவா?! அதுவும் இல்லாமல் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுடன் பேசுவார். அதனால் இளையாழ்வானுக்கு திருக்கச்சி நம்பிகளைக் கண்டாலே மரியாதை தானாக வந்துவிடும். சில காலங்கள் திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரத்திற்கு நடந்து வரும் பொழுது அவரைச் சந்திப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் இளையாழ்வான்.

 மோட்சம் உண்டா?

சில காலம் கழித்து, பூவிருந்தவல்லிக்கு வராமல், காஞ்சிபுரத்திலேயே தங்கி ஆலவட்டம் என்னும் விசிறி சேவை செய்யவும் செய்தார் திருக்கச்சி நம்பிகள். பெருமாளுடனேயே பேசும் சக்தி மிக்க திருக்கச்சி நம்பியின் பாதத்தூளியை (கால் தூசு) வணங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஒரு அன்பர். அவர் ஒரு முறை நம்பிகளிடம், "சுவாமி! அடியேனுக்கு மோட்சம் உண்டா?" என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றார். பெருமாளும், "அவருக்கு மோட்சம் உறுதி"  என்று பதில் தந்தார். திருக்கச்சி நம்பிகள் பெருமாளிடம், "பெருமாளே! அடியேனுக்கும் மோட்சம் உண்டுதானே?"  என்று கேட்டார். பெருமாளோ அவரிடம், "அதெப்படி முடியும்! குரு பக்தியோடு சேவை செய்து, பாகவத அபிமானம் பெற்றால் தான் வைகுண்டம் போக முடியும்"  என்று பதில் தந்தார். மறுநாளே குரு ஒருவருக்கு சேவை செய்யும் எண்ணத்தில் ஸ்ரீரங்கம் கிளம்பினார் திருக்கச்சி நம்பி. அங்கு குருவாக இருந்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மாடுமேய்க்கும் வேலையாளாக சேர்ந்து விட்டார்.

 திருக்கோஷ்டியூர் நம்பிகள் உணர்தல்

ஒரு நாள் மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்த மாட்டிற்கு தன் ஆடையைப் போர்த்தி விட்டு தான் அதன் கீழ் படுத்துக் கொண்டிருந்தார். பசுக்கொட்டிலில் நடந்த இந்த நிகழ்வைக் கண்ட கோஷ்டியூர் நம்பிக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. "தம்பி, ஏன் உன் ஆடையை பசுவுக்கு கொடுத்தாய்?" என்று கேட்டார்." மழையில் நனைந்தால் பசுவுக்கு சீதளம் உண்டாகும். அதன் பாலைப் பருகும் உங்களுக்கும் சீதளம் உண்டாகுமே. அதனால் தான் இப்படி செய்தேன்" என்றார்.

திருக்கோஷ்டியூர் நம்பி, இவர் மாடுமேய்ப்பவர் அல்ல, பரம ஞானி என்று உணர்ந்து கொண்டார். பிறகு ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியாரிடமும் சிஷ்யனாக சேர வேண்டும் என்று நினைத்தார் திருக்கச்சி நம்பிகள். அதுவும் நிறைவேறி விட்டது.

ஆளவந்தருடன் ஸ்ரீரங்கத்தில் தங்கி ஸ்ரீரங்கத்திலும் பெருமாளுக்கு விசிறி வீசும் தொண்டு செய்து வந்தார் திருக்கச்சி நம்பி. ரங்கநாதர் அவரிடம், "எனக்கு இங்கே காவிரிக்கரையோர காற்று சுகமாக வீசுகிறது. திருமலை (திருப்பதி) செல். அங்கு எனக்கு ஆலவட்டம் வீசு" என்று ஆணையிட்டார். எனவே திருக்கச்சி நம்பி, திருமலை சென்று வெங்கடேச பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார். அங்கே பெருமாள், "எனக்கு எதற்கு விசிறி? இங்கே, மலைக்காற்று சுகமாக இருக்கிறது. காஞ்சிபுரம் செல், வரதராஜப் பெருமாளுக்கு இந்த சேவையைச் செய்" என்று அனுப்பி வைத்தார். அன்றிலிருந்து காஞ்சிபுரத்தில் ஆலவட்டம் வீசுவதையே கைங்கர்யமாகக் கொண்டிருந்தார் திருக்கச்சி நம்பிகள்.

அவரிடம் தான் இளையாழ்வானின் அன்னை காந்திமதி, பிரச்சினைகளைச் சொல்லி தீர்வு கேட்க இளையாழ்வானை அனுப்பி வைக்கிறார். இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகள் சந்திப்பு பற்றி நாளைய பதிவில் அறியலாம்.

மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே
வரதரின் அன்புத்தொல்லை பல வருடங்களுக்கு முன் காஞ்சி மாநகரம். அனைவரும் நெற்றி நிறைய திருமண் இட்டுக் கொண்டு வாய் நிறைய வரதனின் நாமங்களைப் பாடியபடிவரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரை சேவித்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள் நடுவே கஜேந்திரதாசர் என்ற திருக்கச்சிநம்பிகளும் ஞான ஜோதியாகபிரகாசித்தபடி இருந்தார் அவரது கைகளில்  அழகான  வேலைப்பாடுடன் கூடிய ஒரு  விசிறி இருந்தது ஆம் அந்த  வைணவப் பெரியவர் காஞ்சி  வரதனுக்கு ஆலவட்டக்கைங்கரியம்(பெருமானுக்கு  விசிறி  விடும்சேவை)செய்யவே கோயிலுக்குச் சென்று  கொண்டிருந்தார் உலகமே வரதனின் திருமுன்பு தன் மனதில் இருக்கும் பாரத்தைக் கொட்டுவார்கள். ஆனால்  அந்த  வரதன் ஆசை தீர பேசி மகிழ்வது இந்த மகானுடன்தான் அந்த அளவு பக்தியையும் புண்ணியத்தையும் உடைய உத்தமர் அவர்.இராமாயணத்தின் சபரியே கலியுகத்தில் தனது எளிய பக்தி நெறியை உலகிற்கு போதிக்க நம்பிகளாக அவதரித்தார் சென்ற ஜென்மத்தில் சபரியின் பக்திக்கு மயங்கி அவள் தந்த எச்சில் பழத்தைஉண்டபகவான், இந்த ஜென்மத்தில்அவரோடு பேசி மகிழ்வதில்வியப்பொன்றும் இல்லையே அன்பு என்ற ஓன்றை அவர் மேல் வைத்தால் தன்னையேதரும் தயாபரன் அல்லவா அந்த மாயவன் அன்பே உருவான நம்பிகள் கோயிலுக்குள் நுழைந்தார் எதேச்சையாக வலது பக்கம் அவரது பார்வை சென்றது அங்கு அவர் என்ன கண்டாரோ தெரியாது தன்னை மறந்து வலது பக்கமாக விழுந்து விழுந்து வணங்கத் தொடங்கினார் நம்பிகள் அவரது கண்களில் அருவியைப்போல நீர் வழிந்தபடீ இருந்தது நாராயணா வரதா என்று அவர் நா உச்சரித்து அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு மலைத்துப் போனார்கள நம்பிகளிடம் சென்று சுவாமி இப்படி நீங்கள் ஆனந்தப் பரவசநிலையை அடையக் காரணம் என்ன எதைக் கண்டு இப்படி திக்குமுக்காடிப்போய் இருக்கிறீர்கள்  என்று கேட்டார்கள் அவர் தனது விரலை நீட்டி எதையோ காண்பித்தார் அங்கிருந்தவர்களுக்கு எதுவும் தெரியவில்லை புரியவுமில்லை அங்கே ஒன்றுமில்லையே சுவாமி உங்களுக்குத் தெரியவில்லையா அங்கு சங்கு சக்கரங்களைக் கையில் எந்திக் கொண்டு திருமகளாம் பெருந்தேவி தாயாரின் வலது கையைப் பற்றிக்கொண்டு தேவர்களும் முனிவர்களும் தொழ நமது தேவாதி தேவன் வரதன் உல்லாசமாக வலம் வந்து கொணடீருக்கிறார் பாருங்கள் பாருங்கள் அந்த திசையை வணங்கியபடியே சொன்னார் நம்பிகள் சுவாமி எங்களால் வரதனைக்காணமுடியவில்லை ஆனால் வரதனைக்கண்டு பேசி மகிழும் தங்களைக் கண்டதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம் என்றபடிஅனைவரும் அவர்பாதத்தில் விழுந்தார்கள் புரியதா கண்ணா இந்த திருக்கச்சிநம்பிகள் எம்பெருமான் வரதருடன் பேசி அவரைப் பார்த்துப் பழகிமகிழ்தவர் கடவுளோட பேசினவங்க இருக்காங்களானு தொடர்ந்து காலம்காலமா மக்கள் கேட்டுட்டுஇருக்காங்க இல்லையா ஒவ்வொரு காலத்துலயும் அதுக்கான வாழும் உதாரணங்களை அந்தப் பெருமாளே மக்களுக்கு காட்டிட்டு இருக்கார் இல்லையா மின்டும் தரிசிக்கலாம்
இன்னும் அனுபவிப்போம்...

திருக்கச்சி நம்பிகள் தனக்கு ஆச்சாரியாராக இசையாததால், அவரிடம் சில கேள்விகள் கொடுத்து அவற்றுக்கு பேரருளாளனிடமே பதில்கள் பெற்றுத் தருமாறு வேண்டி, அவர் மூலமாக பேரருளாளன் பணித்ததாக ஆறு வார்த்தைகள் பெற்றார் அவையாவன,

1. பரத்துவம் நாமே - நாமே சகலத்துக்கும் உயர்ந்த சத்தியமான மூலப்பொருள்.

2.. பேதமே தர்சனம். - ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் அவசியமான பேதம் உண்டு என்பதே உண்மையான தத்துவம்.

3. உபாயமும் பிரபத்தியே. - என்னை அடைய ஒரே நேரான வழி நம்மிடம் அடைக்கலம்.

4. அந்திஸ்மிருதியம் வேண்டா - இப்படி வாழ்பவன் உடல் உயிரை விட்டு பிரியும் காலத்தில் நம்மை துதி செய்ய அவசியம் இல்லை.

5. சரீர அவஸானத்திலே மோக்ஷம் - உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவன் என்னிடம் வந்து சேர்வான்.

6.பெரிய நம்பி திருவடிகளிலே ஆஸ்ரயி - பெரிய நம்பிகளை ஆச்சாரியராகக் கொள்

என்பவை இவ்வார்த்தைகள். பின் திருவரஙகம் பெரிய கோவிலில் உள்ள ஆளவந்தாரின் சீடர்களின் விருப்பத்தற்கிணங்க மதத்தலைவராக திருவரங்கம் செல்லும் வழியில் மதுராந்தகத்தில் ஏரி காத்த இராமர் திருக்கோவிலில் பெரிய நம்பியைக் சந்தித்தார். அந்த திருக்கோவிலிலேயே மகிழ மரத்தடியில் பெரிய நம்பி இராமானுஜருக்கு திருவிலச்சினை செய்து தன்னைவிட ஆளவந்தாரை ஆச்சாரியனாக கொண்டிருக்க வேண்டினார். பின் பெரிய நம்பியிடம் காஞ்சியில் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும், ஆளவந்தாரின் கருத்துகளையும் கேட்டறிந்து வந்தார். தனது மனைவியின் குணத்தினால் பெரிதும் துன்பமுற்ற இராமானுஜர், இல்லற வாழ்க்கையை விடுத்து திரிதண்ட சந்நியாசியாக தீட்சை பெற்றார். கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் இவரது பிரதம சீடர்களானார்கள். துறவிகளில் சிறந்தவராக விளங்கியதால் இவர் யதிராஜர் என்னும் திருநாமம் பெற்றார்.

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


ராமானுஜர் பகுதி ஒன்பது

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஒன்பது




கங்கை யாத்திரை சென்றபோது கோவிந்தன் சொன்னதைக்கேட்டு தப்பித்துச் செல்கிறார்  இளையாழ்வான்.

🐚🐚 வேடுவன் வேடுவச்சி

இளையாழ்வான் வழி தெரியாமல், கால் சென்ற பாதையில் ஸ்ரீமந்நாராயணனை மனதில் தியானித்துக் கொண்டு செல்கிறார். இரவுப் பொழுதாகிவிட்டது. அப்போது ஒரு வேடுவ தம்பதியரைக் காண்கிறார். அவர்கள் பயங்கரமான தோற்றம் உடையவர்களாக இருந்தார்கள். இருந்தாலும் கண்களில் கருணை வெள்ளம் ததும்பி இருந்தது.

அவர்கள் யார் தெரியுமா?

இளையாழ்வான் யாருடைய மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே, யாரை நினைத்துக்கொண்டே சென்றாரோ அவர்கள் தான். உலகத்துக்கே படியளக்கும் காஞ்சி வரதராஜப் பெருமாளும், பெருந்தேவி தாயாரும் தான். இளையாழ்வான் வழி தெரியாமல் ஸ்ரீமந்நாராயணனை அழைத்துக் கொண்டே இருந்தார் அல்லவா?! தன்னை நம்பி தன்னுடைய திருநாமத்தை அழைத்த இளையாழ்வானுக்கு அருள் செய்ய வேண்டும் என்று நினைத்தார் பெருமாள். பெருந்தேவி தாயாருடன் தானும் அருள் செய்ய வந்துவிட்டார்.

"அவர்களிடம் சென்று காஞ்சிபுரம் போக வேண்டும். வழி தெரிந்தால் சொல்லுங்கள்" என்று கேட்கிறார். வேடுவனும் வேடுவச்சியும் "நாங்கள் அங்கே தான் செல்கிறோம். நீங்கள் எங்களுடன் சேர்ந்து வாருங்கள்" என்று சொல்ல, இளையாழ்வானும் அவர்களோடு நடந்து சென்றார். இருட்டு அதிகமாக இருந்ததால், பாதை தெரியவில்லை. இதனால் அனைவரும் இரவு தங்கிவிட்டு காலை எழுந்ததும் புறப்படலாம் என்று அங்கேயே படுத்து விட்டார்கள்.

அப்பொழுது வேடுவச்சி குடிக்க தண்ணீர் வேண்டும் என்று தன் கணவனிடம் கேட்கிறாள். உலக உயிர்களை எல்லாம் காக்கும் ஜகந்மாதா, தன் கணவனிடம் குடிக்க நீர் கேட்கிறாள். காஞ்சி வரதராஜரான வேடுவனோ தன் மனைவியிடம் "இங்கே ஒரு கிணறு இருக்கிறது. காலை எழுந்ததும் உனக்கு நீர் கொண்டுவந்து தருகிறேன்" என்று சொன்னார். இதைக்கேட்ட இளையாழ்வானோ, 'காலை விடிந்ததும் முதலில் இந்த பெண்ணிற்குக் குடிக்க நீர் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்' என்று மனதில் எண்ணிக் கொண்டு உறங்கிவிட்டார்.

காலை விடிந்ததும் இளையாழ்வான் அருகில் இருக்கும் கிணற்றில் நீர் கொண்டு வந்து, இரவு உறங்கிய இடத்தினைப் பார்த்தார். வேடுவன் வேடுவச்சியைக் காணவில்லை. அருகில் இருப்பவர்களிடம், "இது எந்த ஊர்?" என்று கேட்க, அவர்களோ "நீர் பிறந்த ஊரையே நீர் மறந்துவிட்டீரா? அதோபாரும், புண்ணிய கோடி விமானம் தெரிகிறது. அருகே கிணறு ஒன்று இருக்கிறது. இது சாலக்கிணறு. இங்கே காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாள் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார். நீர் அவரை உள்ளே சென்று சேவித்துவிட்டு வாரும்" என்றார்கள்.

இதைக்கேட்ட இளையாழ்வானுக்கு ஒரே திகைப்பு. வந்தவர்கள் வரதராஜரும், பெருந்தேவி தாயாரும் என்று உணர்ந்து கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். தரிசனம் செய்த பின் தன் அன்னை காந்திமதியிடம் சென்று யாத்திரையில் நடந்தவற்றையெல்லாம் கூறினார். காந்திமதியோ திருக்கச்சி நம்பிகளிடம் இதைப்பற்றி சொல்லி, அவர் சொல்லும் வழியைப் பின்பற்றுமாறு உரைத்தார். இந்த திருக்கச்சி நம்பிகள் யார் என்பதை நாளைய பதிவில் அறியலாம்
இன்னும் அனுபவிப்போம்...
🌷எதிராசர் வடிவழகு 🌷

பற்பமெனத் திகழ் பைங்கழல்
  உந்தன் பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராட
  பதிந்த மருங்கழகும்

முப்புரி நூலொடு முன்கையில்
  ஏந்திய முக்கோல் தன்னழகும்

முன்னவர் தந்திடு மொழிகள்
   நிறைந்திடு முறுவல் நிலாவழகும்

எப்போதும் கற்பகமே விழி கருணை
   பொருந்திடு கமலக் கண்ணழகும்

காரிசுதன் கழல் சூடிய முடியும்
   கனநற்சிகை முடியும்

எப்பொழுதும் எதிராசர் வடிவழகு
   என் இதயத்துளதால்

இல்லை எனக்கெதிர்
இல்லை எனக்கெதிர்
இல்லை எனக்கெதிரே!

🌸 ஸ்ரீ எம்பார் இயற்றிய எம்பெருமானார் வடிவழகு

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி.

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

ராமானுஜர் பகுதி எட்டு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு எட்டு

 இளையாழ்வானின் திருமண வாழ்க்கை

இளையாழ்வாருக்கு தஞ்சம்மாள் என்ற பெண்மணியுடன் அவரது 16வது வயதில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற ஒரு மாதத்திலேயே அவரது தந்தை அசூரிகேசவாச்சாரியார் இறந்துவிட்டார். இதனால், அவரது அன்னை காந்திமதி கவலையில் மூழ்கினார்.

🌻🌻 யாத்திரை புறப்படுதல்

இளையாழ்வானைக் கொல்ல வேண்டும் என்று அத்வைத ஆச்சாரியார் யாதவப் பிரகாசர் சதித்திட்டம் தீட்டியிருந்தார். அதை தன் சிஷ்யர்களுடன் கலந்து ஆலோசித்தார். வட நாட்டிற்கு கங்கை யாத்திரை போகலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

யாதவப் பிரகாசர் இளையாழ்வானை யாத்திரைக்கு வருமாறு அழைக்க இளையாழ்வானும் தன் அன்னையிடம் யாத்திரைக்குச் செல்ல அனுமதி வாங்கினார். இளையாழ்வானின் அன்னையோ "தந்தையை இழந்துவிட்டோம் என்று கலங்கிக் கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் நீயும் என்னவிட்டு பிரிந்து செல்கிறாயா?" என்று கவலையுடன் கூறினார். இளையாழ்வான் தன் அன்னையை சமாதானப் படுத்திவிட்டு வடநாட்டிற்கு யாதவப் பிரகாசருடன் குழுவாக கங்கை யாத்திரை சென்றார். யாத்திரைக்கு இளையாழ்வானின் மருமகனான கோவிந்தனும் சென்றார்.

🌻🌻 கோவிந்தன் இளையாழ்வான் சம்பாஷணை

கங்கை யாத்திரை செல்லும் வழியில், யாதவப் பிரகாசரின் சில சீடர்கள் ஒன்றாக கூடி கூடி இளையாழ்வானை கங்கையில் தள்ளி விட்டு கொல்வது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இதனைக் கோவிந்தன் கேட்டுவிட்டார். உடனே, பதற்றத்துடன் இளையாழ்வானிடம் ஓடிச்சென்று "உங்களை இங்கே கங்கையில் தள்ளி விட்டுக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள். நீங்கள் உடனே வேறு எங்காவது புறப்பட்டுச் செல்லுங்கள். வேறு எங்கேயாவது சென்று உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்" என்று கூற, இளையாழ்வானும் புறப்படுகிறார்.

இளையாழ்வான் காடு, மலைகள் என எல்லாவற்றையும் கடந்து, பாதை எங்கே செல்கிறது என்று கூட தெரியாமல் நடந்தார். இரவுப் பொழுது வந்தது. இளையாழ்வானுக்கு வழி தெரியவில்லை.

அப்போது இளையாழ்வான் ஒரு வேடுவன், வேடுவச்சியைக் கண்டார். இளையாழ்வான் கண்டவர்கள் யார்? என்பதை நாளைய பதிவில் அறியலாம்.

நாளை மகாளய பட்சம் அமாவாசை 17.09.2020

இளையாழ்வார் என்றிருந்த கற்பகத்தை அற்புதன் செம்மை இராமானுசனாக ஆக்கி நாரயணனை காட்டிய வேதங்கள் களிப்புற செய்த நன்நாள் இன்று

மதுராந்தகத்திலே அன்றொருநாள் கிழக்கில் உதிக்கும் திவாகரனைவிடவும் மேலும் ஒளிபொருந்தியதாய் ஒரு ராமாநுஜ திவாகரன் அவதரித்த நன்நாள்
தெற்கே திருவரங்கத்திலிருந்து வந்த குணபூரணரான ஸ்ரீ பெரியநம்பிகளும் வடக்கே காஞ்சியிருந்து வந்த இளையாழ்வாரும் சக்ரவர்த்தி திருமகன் திருமுற்றத்திலே சேர
மந்திரம்கொண்டு மாமறை வேள்வி காத்தவன் திருமுன்பே வேள்வி வளர்த்து
பண்டைமாவலிதன் பெருவேள்வியில் அண்டமும் நிலமும் அடியொன்றினால் கொண்டவன் எம்பெருமான்.
இராமாநுஜன் என்னும் திருப்பெயர்பெற்று உடையவராய் இருநிலத்திற்கும் உடையவராய் திகழும்  எம்மிராமானுசன் உதித்த நன்நாள் இன்று..

ஆண்டுகள் நாள்திங்களாய் காத்துக்கிடந்தார்  இளையாழ்வார் தன்குருவை அடைய, அதேபோல இளையாழ்வாருக்கு உபதேசிக்க பலகாலம் காத்துக்கிந்த பெரியநம்பிகளும் ஆவணி மாத சுக்லபக்ஷத்திலே மதுராந்தகத்தில் சந்திக்க அங்கேயே இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் வைபவம் நடைபெற அடியேற்கு இன்று தித்திக்குமே என்னும்படியான நன்நாள் இன்று..

கே.13:−  இளையாழ்வார் என்னும் இராமானுஜரின் உடன் பிறந்தோர் எத்தனைப் பேர்? அவர்களின் பெயர்கள் என்ன?.

விடை:− இராமானுஜருக்கு இரண்டு இளைய சகோதரிகள் இருந்தார்கள்.
அவர்களது பெயர் பூமிநாச்சியார், கமலாம்பாள் என்பதாகும்.

கே.14:− இராமானுஜரின் சிற்றன்னையாகிய பெரிய பிராட்டியின் முதல் குழந்தைக்குப் பெயர் சூட்டியது யார்? என்ன பெயர் சூட்டினார்?

விடை:− பெரியபிராட்டியின் முதல் குழந்தைக்கு, "கோவிந்தன்" என்ற திருநாமத்தை,  தாய்மாமன் ஆகிய பெரிய திருமலை நம்பிகளே சூட்டியருளினார்.

கே.15:− குழந்தைக்கு அந்தப் பெயரிடக் காரணம் என்ன?

விடை:− சத் ஆத்ம குணங்களை உடைய அக்குழந்தை, சர்வ வித்தைகளிலும் தேர்ந்தவனாய், வைதிக பட்சத்தில் நிலை நிற்பான் என்கிற தீர்க்க த்ருஷ்டியால், இப்பெயர் இடப்பட்டது.

கே.16:− குழந்தை "கோவிந்தன்" யாருடைய அம்சம்? அவர் எப்போது அவதரித்தார்?

விடை:− குழந்தை "கோவிந்தன்" கருடனின் அம்சமாகும்.
அவர் இராமானுஜர் அவதரித்து எட்டு,ஆண்டுகளுக்குப் பின்னர், கலியுகம் 4127,  குரோதன ஆண்டு (1025ம் ஆண்டு), தைத்திங்கள், பௌர்ணமி திதி, திங்கட்கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.

கே.17:− இராமானுஜரின் சிற்றன்னையின் இரண்டாவது குழந்தையின் பெயர் என்ன? அவரது திருநட்சத்திரம் என்ன?

விடை:− இரண்டாவது குழந்தையின் பெயர் சிறிய கோவிந்தன் என்னும் சிறிய கோவிந்தப் பெருமாள் ஆகும்.
அவர் மாசிமாதம் அச்வினி நட்சத்திரத்தில் அவதரித்தார்

கே.18:− இளையாழ்வார் இராமானுஜர் இளமையில் யாரிடம் வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றார்? எந்த வயது வரை?

விடை:− இராமானுஜர், தமது தந்தை கேசவ சோமாயாஜியிடம், தமது பதினைந்தாவது வயது வரையிலும் வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்தார்.

கே.19:− இராமானுஜரின் கைங்கர்யங்களால் ப்ரீதி அடைந்த ஶ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள், இராமானுஜருக்கு இட்ட திருநாமம் என்ன?

விடை:−  "ஶ்ரீபூதபுரீசர்"

கே.20:− இராமானுஜரின் தங்கைகள் யாருக்கு வாழ்க்கைப் பட்டனர்?

விடை:− முதல் தங்கை பூமிநாச்சியார், புருஷமங்கலம் என்று கொண்டாடப்படுகின்ற மதுரமங்கலம் வாதூல கோத்ரம் அனந்த தீட்சிதருக்கும்,
இரண்டாவது தங்கை கமலாம்பாள், திருக்கச்சி நடாதூர் அக்ரஹாரம் ஶ்ரீவத்ஸ கோத்ரம், குருகைக் காவலப்பரின் திருக்குமாரர் மஹாதயாதீசருக்கும் வாழ்க்கைப்பட்டனர்.

கே.21:− இளையாழ்வார் இராமானுஜருக்கு எந்த வயதில் திருமணமானது?

விடை:− இராமானுஜருக்கு, அவரது 16வது வயதில், தஞ்சாம்பாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தேறியது.

கே.22:− இராமானுஜரின் திருத்தகப்பனார் எப்போது திருநாடு அலங்கரித்தார்? (பரமபதித்தார்?)

விடை:− இராமானுஜருக்குத் திருமணமான மறுமாதமே, அவரது திருத்தகப்பனார் பரமபதித்தார்.

கே.23:− திருத்தகப்பனாரின் மறைவுக்குப் பிறகு, இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றிய இரு நம்பிகள் யார்?

விடை:− பெரிய திருமலை நம்பிகளும், திருக்கச்சி நம்பிகளும் இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றினர்.

கே.24:− தந்தை மறைந்த சோகத்திலிருந்து விடுபட, இராமானுஜரும், அவரது தாயாரும் செய்தது என்ன?

விடை:− ஶ்ரீபெரும்புதூரை விட்டு, திருக்கச்சி என்னும் காஞ்சீபுரம் வந்து குடியேறினார்கள்.

கே.25:− இராமானுஜர் யாரிடம் தமது வேதாந்தக் கல்வியைத் தொடர்ந்தார்?

விடை:− "வேத விருட்சம்"  "வேத சாகரம்" என்றெல்லாம் தொண்டை மண்டலத்திலும், அண்டை மண்டலங்களிலும் புகழ் பெற்றவரான, காஞ்சிக்கு மேற்கே சுமார்
9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருப்புட்குழியின் "யாதவப்ரகாசர்" என்னும் அத்வைத வேதாந்தியிடம், தமது கல்வியை இராமானுஜர் தொடர்ந்தார்.

கே.26:− இராமானுஜர் கூடவே தங்கியிருந்து, உடன்சென்று, யாதவப்ரகாசரிடம், வேதாந்தக் கல்வியைப் பயின்றவர் யார்?.

விடை:− இராமானுஜரின் சிற்றன்னையின் முதல் புதல்வரான கோவிந்தன்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இன்னும் அனுபவிப்போம்.

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


ராமானுஜர் பகுதி ஏழு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஏழு

🌺🌺 குருவை மிஞ்சிய சிஷ்யன்

சீடர்களுக்கு காலை நேரப் பாடங்களை போதித்த பின் எண்ணெய்க் குளியல் எடுக்க எண்ணினார். அந்தக் கால குருகுல வாசத்தில் சீடர்களே குருவுக்குத் தேவையான சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். குரு ஆணையிடுவார். சீடர்கள் மறுக்காமல் சிரம் மேற்கொண்டு செய்வர். எண்ணெய்க் குளியலுக்கு ஆச்சாரியாரின் பாதாதி கேசம் இளையாழ்வான் எண்ணெய் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு மாணவரும் உடனிருந்தார்.

மாணவன்: தேவரீர்! இன்று காலையில் தாங்கள் நடத்திய பாடத்தில் பொருள் விளங்கிக்கொள்ள சற்றுக் கடினமாக உள்ளது.

யாதவ பிரகாசர்: எந்தப் பாடம்?

மாணவன்: சந்தோக்ய உபநிடத்தில் ஆறாவது பகுதியில் வரும் ஏழாவது மந்திரம்.

யாதவ பிரகாசர்: எங்கே அந்த மந்திரத்தை ஒருமுறை கூறு.

மாணவன்: தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக -மேவமக்ஷிணி

யாதவ பிரகாசர்: இதில் உனக்கு என்ன சந்தேகம்?

மாணவன்: இதில் வரும் கப்யாசம் என்ற பதத்தின் பொருள் என்ன?

யாதவ பிரகாசர்: கப்யாசம் என்ற சொல்லை கபி + ஆசாம் என்று பிரி. கபி என்றால் குரங்கு என்று பொருள். ஆசாம் என்றால் பிருட்ட பாகம். அதாவது குரங்கின் ஆசனவாயானது தாமரையைப் போல மலர்ந்திருக்கும். அப்படிப்பட்ட சிவந்த கண்களையுடைய மகாவிஷ்ணு என்று பொருள்.

இந்த விளக்கத்தை இளையாழ்வான் கேட்கிறார். அவருக்கு ஒரே அழுகை. எம்பெருமானுடைய கண்களை குரங்கின் பிருட்டபாகத்துடன் ஆச்சாரியார் உவமை கூறியவுடன் தாங்க முடியாத துக்கம் இளையாழ்வானுக்கு. அந்தத் துக்கம் கண்களில் கண்ணீராக உடைத்துக் கொண்டு வந்தது. அப்படிப் பீறிட்டுக் கொண்டு வந்த கண்ணீர் சூடாக ஆச்சாரியாரின் தொடையில் பட்டது. ஆச்சாரியார் நிமிர்ந்து பார்க்கிறார். எம்பெருமானின் மீது இருந்த மாளாத காதல் காரணமாக இளையாழ்வான் அழுது கொண்டிருந்தார்.

யாதவ பிரகாசர்: இளையாழ்வானே, நான் அப்படி என்ன சொல்லி விட்டேன் என்று நீ அழுகிறாய்?

இளையாழ்வான்: மன்னிக்க வேண்டும் குருவே. எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நித்ய கல்யாண குணங்களைக் கொண்டவன். எனவே அவனுடைய கண்களைக் குரங்கின் பிருட்ட பாகத்துடன் தாங்கள் ஒப்பிட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

யாதவ பிரகாசர்: இது நான் கூறிய விளக்கமில்லை. வழி வழியாக பல ஆச்சாரியர்கள் கூறி வரும் விளக்கம். ஆதிசங்கரர் கூட இதற்கு இப்படித் தான் விளக்கமளிக்கிறார்.

இளையாழ்வான்: மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் கூறட்டும். என் பிரபுவை நான் குறைத்து ஒப்பிட மாட்டேன்.

யாதவபிரகாசர்: அப்படி என்றால் இந்த செய்யுளுக்கு நீயே விளக்கம் கொடு.

இளையாழ்வான்: கப்யாசம் என்ற சொல்லை இப்படியும் பிரிக்கலாம். கம் + பீபதி + ஆசம். இதில் கப் என்றால் தண்ணீர் என்று பொருள். பிபதீ என்றால் குடித்தல் என்று பொருள். எனவே, இதனை "கம் ஜாலம் பிபதீ கபி: ஸுர்ய:" என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் சூரியனால் மலர்ந்தது என்ற பொருள் வரும். எனவே, சூரியனால் மலரும் தாமரையைப் போன்ற கண்களை உடையவன் எம்பெருமான் என்ற அருமையான விளக்கம் கிடைக்கும்.

யாதவ பிரகாசர்: உன் இலக்கண அறிவு பளிச்சிடுகிறது. என்றாலும் நீ அத்வைதத்தை மறுக்கிறாயோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இளையாழ்வான்: நான் அத்வைதத்தை மறுக்கவில்லை. சாஸ்திரத்திலுள்ள, வேதத்திலுள்ள உண்மையான ஒன்றைத்தான் சொன்னேன். மற்றவர்கள் வாய்க்கு வந்தபடி எல்லாவற்றையும் மறை பொருளாகக் கூறுகிறார்கள். நான் வேதத்தில் சொல்லப்படட்டுள்ளதையே இங்கு சொன்னேன்.

அவ்வளவுதான். யாதவப்பிரகாசருக்கு கோவம் தலைக்கேறிவிட்டது. அவரை தீர்த்துக்கட்டி முடித்துவிட வேண்டும் என்று எண்ணினார். அதற்கு ஒரு திட்டம் தீட்ட முடிவு செய்தார்.

இளையாழ்வானின் திருமண வைபவத்தைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

 வாழியெதிராசன் வாழியெதிராசன்

திருக்கோட்டியூர் நம்பி உடையவருக்கு அருளிய 18 வார்த்தைகள்

1, மோக்ஷத்தில் ஆசை உடைய ஜீவன், வாழ்க்கையில் ஆசையை துறக்க வேண்டும்.
2, வாழ்க்கையில் ஆசையை துறந்தால், அஹங்காரம் மமகாரம் நீங்கும்.
3, அஹங்காரம் மமகாரம் நீங்கினால் தேஹ அபிமானம் நீங்கும்.
4, தேஹ அபிமானம் நீங்கினால் ஆத்ம ஞானம் பிறக்கும்.
5, ஆத்ம ஞானம் பிறந்தால்
ஐஸ்வர்ய போகத்தில் வெறுப்பு ஏற்படும்.
6, ஐஸ்வர்ய போகத்தில் வெறுப்பு ஏற்பட்டால் எம்பெருமானிடம்  பற்று ஏற்படும்.
7, எம்பெருமானிடம் பற்று ஏற்பட்டால் மற்ற விஷய ஆசை நீங்கும்.
8, மற்ற விஷய ஆசை நீங்கினால்
பாரதந்த்ரிய ஞானம் உண்டாகும்.
9, பாரதந்த்ரிய ஞானம் உண்டானால் அர்த்த, காம , ராக துவேஷங்கள் நீங்கும்,
10, அர்த்த, காம , ராக துவேஷங்கள் நீங்கினால் ஸ்ரீ வைஷ்ணத்வம் கைகூடும்.
11, ஸ்ரீ வைஷ்ணத்வம் கைகூடினால்
சத்சங்கம் ஏற்படும்.
12, சத்சங்கம் ஏற்பட்டால்  பாகவத சம்பந்தம் ஏற்படும்.
13, பாகவத சம்பந்தம் ஏற்பட்டால் பகவத் சம்பந்தம் ஏற்படும்.
14, பகவத் சம்பந்தம் ஏற்பட்டால் மற்ற பலன்களில் வெறுப்பு ஏற்படும்.
15,  மற்ற பலன்களில் வெறுப்பு ஏற்பட்ட ஜீவன்  எம்பெருமானுக்கு அடிமை ஆவான்
16,  எம்பெருமானுக்கு அடிமையாகும் ஜீவன் , எம்பெருமான் ஒருவனை மட்டுமே சரணமடைவான்.
17, எம்பெருமான் ஒருவனை மட்டுமே
சரணமடைந்த ஜீவன், திருமந்திரத்தையும் அதன் பொருளையும் ஏற்க  தகுதி பெறுகின்றான்
18,  அவ்வாறு தகுதி பெற்ற அதிகாரிக்கே திருமந்திரம் கை புகுரும்.

ஆச்சார்யான் திருவடிகளில் சரணம் !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!


ராமானுஜர் பகுதி ஆறு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஆறு

இளையாழ்வானுக்கும் யாதகப்பிரகாசருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை இன்று பார்க்கலாம்.

🌺🌺 குருகுலம்

யாதவப் பிரகாசர்: தைத்திரிய உபநிஷத்தில் "ஸத்யம், ஞானம், அனந்தம், பிரஹ்ம" என்ற முக்கியமான வாக்கியத்திற்கு அதிலுள்ள சொற்கள் பிரம்மம் ஒன்றையே பொருளாகக் கொண்டவை. பிரம்மம் ஒன்று தான். அதற்கு சொரூபம் இல்லை. அதனைப் பார்க்க முடியாது.

இளையாழ்வான்: பிரஹ்மத்தின் ஸ்வரூப குணங்களைச் சொல்கிறேன்.

யாதவப் பிரகாசர்: சொல்வீர்!

இளையாழ்வான்: ஒரே மலருக்கு செம்மை, மென்மை, மணம், வடிவழகு, நிறை என்ற பல குணங்கள் இருக்கலாம். குணங்களின் இப்பன்மை அவற்றையுடைய மலரின் ஒருமைக்கு முரண் அல்ல. அதேபோல் பிரஹ்மம் ஒன்றே என்பதில் யாதொரு தட்டும் இல்லை என்பது என் விளக்கம்.

விளக்கம்:

அதாவது யாதவப்பிரகாசர் சொல்வது, "பிரஹ்மம் ஒன்று தான்" அதைப்பார்க்க முடியாது என்பது. இது அத்வைதத்தில் உள்ளவை. ஏன் என்றால் இராமானுஜர் அவதரிக்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். அவர் ஒரு சமயம் பூ பறிக்கச் செல்லும் பொழுது, ஒன்று, ஒன்று, ஒன்று என்று வரிசையாகச் சொல்லி பூ பறித்தார்.

ஒன்று, இரண்டு என்று தானே சொல்ல வேண்டும்? ஏன் ஒன்று ஒன்று என்கிறாய் என்று ஆதிசங்கரரின் அன்னை கேட்க தனக்கு அனைத்தும் ஒன்றாகவே தெரிகிறது என்றார். இதன் அடிப்படையில் தான் அத்வைதம் உண்டானது.

இங்கே 'இளையாழ்வான்' சொல்வது, ஏன் இராமானுஜர் பெயரைச் சொல்லாமல் இளையாழ்வான் என்று சொல்கிறேன் என்கிறீர்களா? இராமானுஜருக்கு இன்னும் அந்தப் பேர் வரவில்லை. அது வரும்போது சொல்கிறேன் எப்படி வந்தது என்று.

இப்போ இளையாழ்வான் சொல்கிறார், பிரஹ்மத்திற்கு சொரூபம் உண்டு. அதைப் பார்க்கலாம். விக்கிரங்களாகப் பார்க்கலாம். அதற்கு வடிவழகு உண்டு. அதற்கு கல்யாண குணங்கள் உண்டு என்று பெருமாளின் கல்யாண குணங்களையும், விக்கிரக சொரூபங்களையும் விரிவாக எடுத்துக் கூறினார். வசிஷ்டாத்வைதம் - வசிஷ்டு என்றால் உள்ளது என்று பொருள். பிரம்மத்திற்கு சொரூபம் உண்டு என்பதை இங்கே நிரூபித்தார் இளையாழ்வான்.

இளையாழ்வானின் அறிவுக்கூர்மை, ரஸிக உள்ளம், நாவனமை கண்ட யாதவப்பிரகாசரின் மனதில் புயலைக் கிளப்பியது. முன்னோர் பலரது வரட்டுத் தத்துவ வாதங்கள் இவரது வனப்பு வேதாந்த விளக்கங்களால் தவிடுபொடியாகிவிடும் என்று யோசித்தார் யாதவப்பிரகாசர்.

ஆனாலும் அமைதியாகிவிட்டார் யாதவப் பிரகாசர். நாளைய பதிவில் மற்றொரு சம்பவத்தைக் காணலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

 ஸ்ரீமதே இராமாநுஜாய நம|

நலம் தரும் சொல்லை நான் அறிந்தேன்
அந்த நல்லது நடந்திட அருள் புரிந்தாய்!!

இராமானுஜனே உன் தயவாளே நாராயணனை சரணடைந்தேன்!!

நான் நாராயணனை சரண் புகுந்தேன்!!

எட்டு எழுத்தின் பொருளோ எட்டா இருக்கையில் எத்தனை தடவைகள் நீ நடந்தாய்!!

எத்தனை இடர் கடந்தாய்!
எத்தனை தடை கடந்தாய்!

எங்களை உய்விக்க பொருள் உரைத்தாய்!!

மூவாறு முறை நடந்த முனியரசே!
ஒரு நோவாற மருந்து அளித்த தனியரசே!

நாவாற நான் உன்னை பாடுவது
ஸ்ரீமன் நாராயணன் மந்திரம் ஓதுவதே!!

நரகம் நீ புகுந்தால் வைகுண்டமாகும்!
அந்த நாராயணனையே இடம் பெயர்க்கும்!!

அரங்கனின் அருளாளே பொருள் அறிந்தாய் உந்தன் அருகினில் எதிரி என்று எது நிலைக்கும்!!

கோட்டியூர் கோபுரத்தில் மேலே ஏறி நின்று கோடி உயிர் வாழ வழி உரைத்தாய்!!

ஈட்டிய பொருள் உரைக்க வகை சொல்ல
அந்த நம்பியின் பெருமானா ஆகி நின்றாய்!!

 வாழியெதிராசன் வாழியெதிராசன்

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!


ராமானுஜர் பகுதி ஐந்து

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஐந்து

🌺🌺 ராமானுஜர் அவதாரம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலுக்குச் சென்று வந்தபின், ஓராண்டு கழிந்தது. காந்திமதி கருவுற்றார். கலியுகம் 4118, ஆங்கில ஆண்டு 1017, (கி.பி. 04/04/1017) சித்திரை மாதம் 12ம் தேதி, வியாழக்கிழமை, திருவாதிரை நட்சத்திரம், வளர்பிறை பஞ்சமியன்று அவதரித்தது அந்தத் தெய்வக்குழந்தை. காந்திமதியின் தங்கையான தீப்திமதியும் தன்னுடைய குழந்தையுடன் அக்காவைப் பார்க்க வந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது பரம சந்தோசம் என்று, பெரிய திருமலைநம்பிகள் ஸ்ரீ பெரும்புத்தூர் வந்தார்.

பெரிய திருமலைநம்பிகள் காந்திமதியின் குழந்தையைப் பார்த்தார். அவருக்கு எளிதில் புரிந்து விட்டது. குழந்தை பிறந்து பன்னிரெண்டாவது நாள் பெயர் சூட்டும் விழா நடத்தினார்கள். காந்திமதியின் குழந்தை 'லட்சுமணனின் அவதாரம்' என்பது புரிந்தது. பிறந்த குழந்தையின் தெய்வீகப் பொழிவு கண்டு வாழ்த்தி "லக்ஷ்மணோ லக்ஷ்மீ ஸம்பந்த!!" (திருநிறைச்செல்வன் தெய்வ மகன் இலட்சுமணன்) என்ற பெயருக்கு ஏற்ப, 'இளையாழ்வான்' என்று பெயர் வைத்தார். இளையாழ்வான் என்றால் இராமனுக்கு இளையவன் என்று பொருள்.

"அனந்த: பிரதமம் ரூபம் லக்ஷ்மணச்ச அத:பரம்
பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கச்சித் பவஷ்யதி"

என்பது ஆன்றோர் வாக்கு. திருமாலின் ஐம்படைகளின் (பஞ்ச ஆயுதங்களின்) அவதாரம் தான் இளையாழ்வான் என்றும் சொல்வார்கள்.

திருமலையிலிருந்து வந்து மருமகனுக்குப் பெயர் வைத்தவரோ சாமானியரான மனிதர் அல்ல. அக்காலத்திலேயே ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ வைஷ்ணவ பரமாச்சாரியாருள் அருமைச் சிஷ்யர்களுள் ஒருவர்.

தீப்திமதியின் குழந்தைக்கு கோவிந்தன் என்று பெயரிட்டார். தீப்திமதி சில காலம் கழித்து மற்றொரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த குழந்தைக்கு சிறிய கோவிந்தப் பெருமாள் என்று பெயரிட்டார் பெரிய திருமலைநம்பிகள்.

குழந்தைகள் பிறந்து நான்கு மாதம் கழித்து சூரியனைப் பார்த்தல் என்னும் சடங்கு செய்தார்கள். இராமானுனுக்கும், கோவிந்தனுக்கும் இந்த சடங்கு நடந்தது. பிறகு முதல் சோறு ஊட்டுதல், மொட்டை அடித்தல், காது குத்துதல், உபநயனம் என்று வரிசையாகச் சடங்குகள் நடத்தப்பட்டன.

நெடுநாள் பிள்ளைப் பேறின்றி இருந்த அசூரிகேசவாச்சாரியார், தன் பிள்ளைக்கு உரிய காலத்தில் உபநயாதிகளைச் செய்து அந்தணன் சிறுவன் பெற வேண்டிய தகுதிகளை இளையாழ்வானுக்கு செய்தார்.

இளையாழ்வானுக்கு இளம் வயதிலேயே கல்வியின் மீது ஆர்வம். நன்றாகப் பயின்றார், இறைவன் மீது கொண்ட அன்பும் தானாகவே வளர்ந்தது. வேதம் ஓதி முடித்த இளையாழ்வான், தத்துவ நாட்டத்துடன், காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள திருப்புட்குழி எனும் ஊரில் புகழ்பெற்ற ஆசிரியர் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார். கோவிந்தனும் பயிலச் சென்றார்.

யாதவப் பிரகாசரோ அத்வைதம் கற்பிப்பவர். இளையாழ்வானுக்கு இறைவனுக்கு திருமுகம் உண்டு, அனைத்து கல்யாண குணங்களும் உண்டு என்பவர். இவரிடம் ஏன் அசூரி கேசவாச்சாரியார் வேதம் பயில அனுப்பி வைத்தார் என்றால், அப்பொழுது தான் உண்மையான பரம்பொருள் யார் என்பதையும், பிரம்மம் எப்படிப்பட்டது என்பதையும் நன்றாக உணர முடியும்.

எந்த ஒரு நல்ல விசயம் தெரிந்து கொள்ளும் போதும், அதற்கு மாற்றுக்கருத்து யாரேனும் சொன்னால் அது உண்மையாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம். தவறாகக் கூறினால் வாதம் புரிந்தாவது உண்மையை நிலை நாட்ட முயற்சிப்போம் அல்லவா.

குருவான யாதவப்பிரகாசர், சிஷ்யனான இளையாழ்வான் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நாளை அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

 ஸ்ரீ மதே பாஷ்யககாரர் நம :
ஸ்ரீ ஸ்வாமி திருவாதிரை
ஸ்ரீபெரும்பூதூர்

இந்த உடல் சிறைவிட்டு எப்பொதுழும் யான் ஏகி
அந்தமில் பேரிபத்துள் ஆகுவேன் - அந்தோ
இரங்காய் எதிராசா என்னை இனி உய்க்கை
பரங்காண் உனக்கு உணர்ந்து பார்.

இந்த உடல் என்பது கடுமையாக சிறை போன்று உள்ளது, இதனை
விடுத்து, எல்லையில்லாத இன்பம் அளிக்கவல்ல பரமபதத்திற்கு, அர்ச்சிராதி மார்க்கமாக
நான் எப்போது செல்வேன்? யதிகளின் தலைவரான எம்பெருமானாரே, என் மீது கருணை கொள்ள வேண்டும்,
என்னைக் காப்பது என்ற பாரம் உமக்கு உள்ளது என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்,
கீதையில் கண்ணனும் - க்ஷிபாமி - என்று கைவிட்ட என்னைப்
போன்றவர்களை கரை ஏற்றதல் என்பது, பல்லுயிர்க்கும் வீடு அளிப்பானாய் அவதரித்த உனக்கே பொறுப்பு அல்லவா.

அடியேன் சுகுமாரா ராமாநுஜாய தாஸன்
 ஸ்ரீ மதே பாஷ்யககாரர் நம :
ஸ்ரீ ஸ்வாமி திருவாதிரை

வாழ் யெதிராசன் வாழி யெதிராசன்
வாழி யெதிராசன் வாழி என வாழ்த்துவார் - வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணைகள்
தாழ்த்துவார் விண்ணோர்தலை.

எம்பெருமானார் பல்லாண்டு வாழ்க எம்பெருமானார் பல்லாண்டு வாழ்க எம்பெருமானார் பல்லாண்டு
வாழ்க என்று வாழ்த்துபவர்கள் இவ்விதமான வாழ்த்துபவர்களை
வாழ்த்துபவர்களின் திருவடிகளில் பணிபவர்கள் நித்யஸூரிகளுக்கும் மேலானவர்கள் ஆவர்.

உய்ய ஒரே வழி! உடையவரின் திருவடி!!


ராமானுஜர் பகுதி நான்கு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு நான்கு

🌺🍁 அவதாரத்தருணம்:

குருபரம்பரை ஹாரத்தில் எட்டாவதாக இருப்பவர் ஸ்ரீ இராமானுஜர் என்று பார்த்தோம் அல்லவா? முதலில் ஸ்ரீமந்நாராயணன் பல அவதாரங்கள் எடுத்து நமக்கு நாம் நம் கர்மவினைகள், பாவங்கள் இவற்றை அனுபவித்து முடிவில் மோட்சம் அடைவது வரை கீதைகள் மூலம் உபதேசித்தார்.

இரண்டாவது நம் வாழ்க்கைக்கு ரிக், யஜுர், சாமம், அதர்வணம் வேதங்களைப் படைத்தார். மூன்றாவதாக அந்த வேதங்களை நல்ல முறையில் நாம் பயில சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். நான்காவதாக ஆழ்வார்கள் மூலம் நம் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களைக் கொடுத்தார். ஆனால், ஆழ்வார்கள் அவனது கல்யாண குணங்களை மட்டுமே அனுபவித்து அனுபவித்து அவனிடம் வைகுண்ட பிராப்தி கேட்டு சென்று விட்டார்கள்.

ஐந்தாவது, அந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களையும், மனிதர்களின் அறியாமையை போக்கி, புண்ணிய பாவங்களை அகற்றி, முக்தியடைய ஆச்சார்யார்கள் மூலம் விளக்கினால் தான் சரியாக வரும் என்று நித்ய சூரிகளை பூலோகத்தில் ஆச்சார்யார்களாக அவதரிக்க அனுப்பி வைத்தார் பரந்தாமன்.

இப்போது அந்த ஆச்சார்யார்களுக்கு சரியான சீடன், அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்ட, திட்டங்களை பூலோகத்தில் பரப்புதல், வைஷ்ணவக் கொள்கைகளை எளிய முறையில் பரப்புதல், பக்திக்கு இலக்கணமாக வாழ்தல், சரணாகதி தத்துவமே போதும், கைங்கரியம் ஒன்றே போதும் நம் கர்மவினைகள் அனைத்தும் ஒழிந்து முடிவில் மோட்சம் கிடைக்கும் என்று, கைங்கரியம் ஒன்றையே குறிக்கோளாக வாழ ஒரு மனிதரைப் படைக்க வேண்டும் என்று ஸ்ரீமந்நாராயணனான பரம்பொருள் எண்ணினார்.

வைகுண்டத்தில் இருக்கும் ஆதிசேஷனிடம், "நான் நின்றால், நடந்தால், அமர்ந்தால், குடையாக, சிம்மாசனமாக இருக்கும் தாம் தான் இப்பூலோகத்தில் அவதரித்து கைங்கரியத்தின் சிறப்பை உணர்த்தி, மக்கள் தாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை, கர்மவினை பலன்களை அனைத்திலிருந்தும் விடுபட்டு, புனரபி ஜனனம் - புனரபி மரணம் இதிலிருந்து மீள அவர்களுக்கு மறுபிறவி இல்லாத நிலை, மோட்சம் பற்றி எடுத்துக்கூறி நல்வழிப்படுத்த அவதரிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று கூறினார்.

ஆதிசேஷனும் இறைவனிடம் "தாங்கள் கூறுவதையே செய்கிறேன்" என்கிறார்.

🌺🌺 பார்த்தசாரதி திருக்கோவிலில் வழிபாடு:

சற்றேறக்குறைய ஆயிரத்தோரு ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீ பெரும்புத்தூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோவில்... சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப் பெருமாள், அந்த ஊரில் வசித்தவர் அசூரிகேசவாச்சாரியார். இவர் வேள்வி செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். இவருக்கு 'ஸர்வக்ரது' என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர்.

இந்த 'ஸர்வக்ரது' என்ற சொல்லுக்கு எல்லா வேள்விகளும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால் இவரை 'ஸ்ரீமத் அசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர்' என்று மக்கள் அழைத்தனர். இந்த சமயத்தில் தான் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியார் தான் ஆட்சி செய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் வந்து துறவியாக மாறிவிட்டார்.

அவரது சீடர் பெரியநம்பி. நாத்திகர் கூட அவரது பாடல்களைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்குச் சென்று விடுவார்கள் என்றால் இந்த இனிமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆளவந்தாரிடம் பெரிய திருமலை நம்பி என்பவரும் சீடராக இருந்தார். ஆளவந்தாரை விட பெரிய திருமலைநம்பிக்கு வயது அதிகம். ஆனாலும், பெரிய திருமலைநம்பி ஆளவந்தாரை குருவாக ஏற்றுக் கொண்டார்.

பெரிய திருமலைநம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஸர்வசக்ரது பட்டம் பெற்ற அசூரி கேசவாச்சாரியாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தீப்திமதியை அகரம் என்ற கிராமத்தில் வசித்த கலைநயனப்பட்டர் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். இவர்கள் இருவரின் திருமணத்தையும் சிறப்பாக நடத்திய பெரிய திருமலைநம்பி, எந்நேரமும் ஸ்ரீமந்நாராயணனின் திருவடியை மனதில் நினைத்துக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து இருந்தார்.

அசூர் கேசவாச்சாரியாரும், காந்திமதியும் இல்லற வாழ்க்கையை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்ற செல்வம் இல்லாது போயிற்று. எந்தக் குறையாக இருந்தாலும் தெய்வத்திடம் போனால் மனக்குறைகள் தீரும். இவர்கள் இருவரும் எந்தத் திருக்கோவில் போகலாம், அதிலும் இவர் வேள்விகள் சிறப்பாகச் செய்பவர் அல்லவா?! இவர் "விருந்தாரண்யம் என்று அழைக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமான அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலுக்குச் சென்றனர். திருஅல்லிக்கேணி குளத்தின் பெயரே ஊருக்கும் வந்துவிட்டது. அங்கு சென்ற அவர்கள் மகப்பேறு குறித்து வேள்வியை நடத்தினார்கள்.

யாகம் முடிந்தபின், அசூரி கேசவாச்சாரியாருக்கு தூக்கம் வர கோவிலிலேயே தூங்கி விட்டார். அப்போது அவரது கனவில் வந்த பார்த்தசாரதி பெருமாள், "கேசவா! நீர் ஒழுக்கசீலர், வேள்விகள் இயற்றி என்னைத் திருப்தி செய்பவர், உமது பக்தி ஆழமானது. இனி குழந்தை இல்லை என்ற கவலை உமக்கு இல்லை. நானே உனக்கு குழந்தையாகப் பிறப்பேன். இவ்வுலக மக்கள் பூர்வாச்சாரியார்கள் அருளிய உபதேசங்களின் மகிமைகளைப் புரியாமல், தங்களையே உயர்வாக எண்ணிக் கொண்டுள்ளனர். அகந்தை கொண்டு பல தீமைகள் புரிகிறார்கள். எனவே, அவர்களைக் கடைத்தேற்ற நான் அவதாரம் எடுப்பேன். இனி நீர் ஊர் திரும்பலாம்" என்றார் அந்த பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணன். இதைக்கண்டு விழித்த அசூரி கேசவாச்சார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காந்திமதியும் இதைக்கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். இருவரும் தங்கள் ஊரான ஸ்ரீ பெரும்புத்தூருக்குச் சென்றார்கள்.

(ராமானுஜர் நூற்றந்தாதி)

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானைக் கலைபரவும்
தனி யானையைத் தண்டமிழ்செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை  வந்தெய்தினரே.(3909)
*பொருள்* : சாத்திரங்கள் துதிக்கும் ஒப்பற்ற மதம் கொண்ட யானை போன்றவனை , திருக்கண்ண மங்கையில் நின்று அருளுபவனை , குளிர்ச்சியான தமிழ்ப் பாசுரங்களால் பாடி மகிழ்வித்த நீலன் என்ற திருமங்கை ஆழ்வாரை உலகில் தனக்கு இன்பமாக எண்ணிய ராமானுஜனைத் தஞ்சமென்று வந்து அடைந்தவர்கள் எத்தகைய துயரங்கள் வந்தாலும் வெறுப்படைய மாட்டார்கள். இன்பங்கள் வந்தாலும் மனம் நெகிழாமல் இருப்பார்கள் .

*விளக்கம்* :
*முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம்* - முனிவர்கள் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாகவே எண்ணுவார்கள். ராமானுஜரைப்  பற்றியவர்களும் இவ்வாறே இருப்பார்கள் என்கிறார் .

*கண்ணமங்கை நின்றானை* -  இது  சோழ  நாட்டு திவ்ய  தேசமாகும். விமானம் , மண்டபம்,ஆரண்யம், சரசு , க்ஷேத்திரம் நதி  மற்றும்  நகரம் ஆகிய அனைத்தும் அமுத மயமானதால் இந்த தலம்  *சப்தஅம்ருத  தலம்*  என்று அழைக்கப்படுகிறது.

*கலைபரவும் தனியானையை* திருக்கண்ண மங்கையில் அனைத்து  சாஸ்திரங்களும் (கலைகள்) பெருமாளின் குணங்களைப் பற்றி பரவுகின்றன (துதிக்கின்றன).  எல்லா வேதங்களிலும்  நானே அறியப்படுகிறேன் என்றபடி இங்குள்ள பக்தசவத்சல  பெருமாள் ஒப்பற்ற மதம்  கொண்ட யானை போல திருமங்கை ஆழ்வாருக்குத் தெரிகிறானாம்.

*தனியானையைத் தண்டமிழ்செய்த நீலன்*-  திருமங்கை ஆழ்வார் வெஞ்சினக் களிற்றே  என்கிறார் பெரிய திருமொழியில்.  இதன் பொருள் அவனை அடைய முடியாது என்றாலும் யானை போல் அவனைக் கண்டு களிக்கலாம் என்பதாகும்.. நீலன் என்பது திருமங்கை ஆழ்வாரின் ஒரு பெயராகும்.
=============

எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு   உலகில்  வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற்கு  உதவும் இராமானுசன் எம் உறுதுணையே.(3910)
*பொருள்* : அறிவதற்கு அரியதான வேதங்களை ஆயிரக்கணக்கான இனிய பாசுரங்களால் அறிமுகப்படுத்த உலகில் அவதரித்த சடகோபரை சிந்தையுள் பொருத்திக்கொண்ட மதுரகவி ஆழ்வாருடைய சிறப்பான குணங்களை உயிர்களெல்லாம் பாவம் செய்யாமல் இருக்க எடுத்துரைத்த ராமானுஜரே  எனக்கு உற்ற துணையாவார் .

*விளக்கம்* :
*எய்தற் கரிய மறைகளை* - எய்தல் என்றால் அடைதல் . வேதங்கள் அளவில் அடங்காதவைகள் எனவே இவைகளை முழுதும் அறிந்தவர் எவரும் இலர் . மேலும் இவைகளின் உண்மையான பொருளைத் தானே மறைத்துக்கொண்டிருப்பதாலும் வேதங்கள் மறைகள் எனப்படுகின்றன.

*ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு*- வேதம் அளவற்றது ; இன்தமிழ்  ஆயிரம் என்னும் அளவுடையது .
*தெரியச்  சொன்ன ஆயிரம்* என்று நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கூறுவார்கள். வேதத்தை குறிப்பிட்டவர்கள் மட்டுமே ஓத  முடியும். ஆனால்  நம்மாழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை அனைவரும் இனிது படிக்கலாம் .

*உலகில்  வரும் சடகோபனை* - மற்றவர்கள் முன்வினையின் காரணமாக உலகில் வந்து பிறந்தனர் . நம்மாழ்வாரோ உலகோர் உய்வதற்கென்றே அவதரித்தவர். திருவாய் மொழி என்ற ஆயிரம் பாசுரங்களை இயற்றியவர் . நான்கு  வேதங்களின் சுருக்கமாக திருவாய்மொழி அமைந்துள்ளது என நாம் அறிவோம்.

*சிந்தையுள்ளே பெய்தற் கிசையும் பெரியவர்* - நம்மாழ்வாரைக்  குருவாக கொண்ட மதுரகவி ஆழ்வார் புகழ் பாடும் பாசுரம் இது. இவர் சடகோபனை (நம்மாழ்வாரை ) தனது சிந்தையில் வைத்துப் போற்றியவர் . இத்தனைக்கும் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை விடப் பெரியவர். இருப்பினும் குருவின் மேல் அளவிலாத பக்தி கொண்டு குருவை தவிர எம்பெருமானைக் கூடப் பாட  மாட்டேன் என்று " கண்ணி  நுண் சிறுத்தாம்பு " என்ற ஒப்பற்ற பாசுரங்களை குருவின் மேல் இயற்றி, புகழ் பெற்றவர் .  

*உயிர்களெல்லாம் உய்தற்கு  உதவும் இராமானுசன்* -மதுர கவி ஆழ்வாரின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்த ராமானுஜர்
=============

நாளை அவதாரத்தை அனுபவிக்கலாம்...

உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!


ராமானுஜர் பகுதி மூன்று

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு மூன்று




இராமானுஜர் என்பவர் கடலைப் போன்றவர். அந்த கடலின் முழு சரித்திரத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அப்படி முயன்றால் மிக்க மகிழ்ச்சி. கடலுக்குள் போனால் நீந்தி கரை சேர முடியாது. ஆனால், அந்த கடலையும், கடல் அலைகளையும் நாம் ரசிக்கலாம் அல்லவா?! அந்த கருணைக் கடலின் அவதார நோக்கத்தையும், அவர் செய்த கைங்கர்யங்கள் பற்றியும், கடல் அலைகளைப் போல் அடியேனுக்குத் தெரிந்தவரை பதிவிடுகிறேன். நீங்களும் அந்த பெருங் கருணைக் கடலை ரசித்திடுங்கள்.

இராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம். பஞ்ச ஆயுதங்களின் அம்சமாகவே பிறந்தவர்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திலே குருபரம்பரை என்று சொல்வார்கள். முதலில் குருபரம்பரை பற்றி பார்ப்போம்.

🌻🌹 குருபரம்பரை:

நாமெல்லாம் பூமியில் பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புண்ணியங்களையும், பாவங்களையும் மாற்றி மாற்றி அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். புண்ணியம் அதிகமானால் அதைப் போக்க மறுபிறவி எடுக்கிறோம். பாவங்கள் அதிகமானாலும் மறுபிறவி எடுக்கிறோம். இப்படியே மாற்றி மாற்றி புனரபி ஜனனம், புனரபி மரணம் என மாற்றி மாற்றி பிறவி எடுத்துக்கொண்டே போகிறோம். இதையடுத்து அடுத்த பிறவியே வேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறோம். நாம் செய்த கர்மாக்களை இப்பிறவிலேயே அனுபவித்து விட்டால் அடுத்து நமக்கு வைகுண்டம் தான்.

அப்பேர்ப்பட்ட கர்மாக்களை அழிக்க, நித்ய அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி நித்ய அனுஷ்டாங்களைக் கடைப்பிடித்தால், பாவங்கள் அனைத்தும் தொலைந்துவிடும்.

வேதங்கள் தான் சட்ட திட்டங்கள். ரிக், யஜுர், சாமம், அதர்வண வேதங்களால் சாஸ்திரங்களை வகுத்துக் கொடுத்தார் இறைவன். நமக்கு சரீரம், சாஸ்திரங்கள், ஞானங்கள் கொடுத்தார். ஆழமான கிணற்றில் நாம் விழுந்துவிட்டால், நம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்று எதிர்பார்க்கிறோம் அல்லவா? அப்படி சம்சார சாகரத்தில் விழுந்து, தத்தளித்துக் கொண்டிருக்கும் நம்மைக் காப்பாற்ற இறைவனே வைகுண்டத்திலிருந்து முதலில் கீழிறங்கி வருகிறார். ஆனால், அப்படி அவர் கீழிறங்கி வந்தாலும் அவரால் நம்மைக் கரை சேர்க்க முடிவதில்லை.

ஏனெனில், கண்ணனாக இராமனாக தசாவதார பிறவிகள் எடுத்தார். இரண்டாவதாக நம்மை பகவத் பக்தியிலே ஆழ்த்த பன்னிரண்டு ஆழ்வார்கள் அவதாரம் செய்தார்கள். பெருமானிடத்திலே பக்தியைத் தூண்டி, பெருமானையே அடைய வேண்டிய வழியை, நாலாயிரம் பாசுரங்கள் மூலம் நமக்கு உரைத்தார்கள் ஆழ்வார்கள்.

ஆழ்வார்கள் பிறவி முடிந்தபின், மூன்றாவதாக நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தையே புத்தகமாகக் கொண்டு அதை உபதேசிக்க நித்யசூரிகளை ஆச்சார்யாரார்களாக அனுபவித்து வைத்தார் ஸ்ரீமந்நாராயணன்.

முதல் ஆச்சாரியனாக நாதமுனிகள் திருஅவதாரம் பண்ணினார். அவருக்கு குமாரர் ஈஸ்வர முனிகள் திருஅவதாரம் பண்ணினார். அவருடைய திருக்குமாரராக யமுனாச்சாரியார் திருஅவதாரம் பண்ணினார்.

நாதமுனிகள், யமுனாச்சாரியார் என்ற இந்த திருநாமத்தை வைத்துதான் குருபரம்பரை ஸ்லோகம் உண்டாக்கப்பட்டது. இதை பாடியவர் கூரத்தாழ்வார். குருபரம்பரையை வணங்குகிறேன் என்பது தான் அந்த ஸ்லோகம். ஆச்சார்யார்களையே முத்தாக, இரத்தினமாக செதுக்கப்பட்ட ஹாரம் தான் "குருபரம்பரா ஹாரம்" என்று சொல்வார்கள்.

குருபரம்பரையில் முதல் ஆச்சாரியன் ஸ்ரீமந்நாராயணனான பெரிய பெருமாள். நர நாராயணரில் நரனுக்கு தன்னுடைய திருமந்திரத்தை உபதேசித்தார் அல்லவா? அர்ஜுனனுக்கு ஆச்சார்யனாக இருந்து கீதையைக் கொடுத்த கீதாச்சாரியன் அல்லவா அவன்? அதனால் அவனே முதல் ஆச்சார்யன்.

இரண்டாவது மகாலக்ஷ்மியான பெரிய பிராட்டி - அந்த லக்ஷ்மிக்கு பெருமாள் ஸ்வயம் மகாமந்திரத்தை உபதேசித்தார். அவரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டதால் மகாலக்ஷ்மி இரண்டாவது ஆச்சாரியன்.

மூன்றாவதாக லக்ஷ்மியிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டது விஷ்வக்ஷேனர். அதனால் விக்வக்ஷேனர் மூன்றாவது ஆச்சாரியன். விஷ்வக்ஷேனரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டது நம்மாழ்வார். அதனால் அவர் நான்காவது ஆச்சாரியன். நம்மாழ்வாரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டவர் நாதமுனிகள். அதனால் அவர் ஐந்தாவது ஆச்சாரியன்.

நாதமுனிகளின் சிஷ்யர்கள் - உய்யக்கொண்டார் மற்றும் மணக்கால் நம்பிகள்; மணக்கால் நம்பிகளின் சிஷ்யர் ஆளவந்தார்; அவரது சிஷ்யர் பெரிய நம்பிகள். ஆறாவது ஆச்சாரியராக நாதமுனிகளின் சிஷ்யர் உய்யக்கொண்டார். ஏழாவதாக பெரிய நம்பிகள்.

முதல் தலைவராக/ஆச்சாரியராக நாதமுனிகள். அதன் பின் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள். ஆளவந்தாரின் சீடர்கள் ஐந்து பேர் - 1. பெரிய நம்பிகள், 2. பெரிய திருமலை நம்பிகள், 3. திருக்கோட்டியூர் நம்பிகள், 4. திருக்கச்சி நம்பிகள், 5. திருமலையாண்டான்.

எட்டாவதாக இந்த ஹாரத்தில் இருப்பவர் தான் உலகமே போற்றும் ஸ்ரீ இராமானுஜர்.

இன்னும் அனுபவிப்போம்...

எங்கள் கதியே !
இராமானுச முனியே !

நாட்டியநீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம்களிப்புற்றது, தென்குருகைவள்ளல்
வாட்டமிலா வண்டமிழ்மறை வாழ்ந்தது, மண்ணுலகில்
ஈட்டியசீலத்து, இராமானுசன்றன் இயல்வுகண்டே

விளக்கவுரை :-

அறியாமையின் இடமாக உள்ள இந்தப் பூமியில்,
தான் பெற்றிருந்த பரமபதத்தை விடுத்து, இந்த உலகினரின் சிறுமையைக் பாராமல் எம்பெருமானார் அவதரித்தார். இவரது ஸ்வபாவம் மற்றும் உயர்ந்த குணங்களைக் கண்டு, சூரியனைக் கண்ட இருள் விலகுவது போன்று,
வைதிகம் அற்ற மதங்கள் அனைத்தும் நிர்மூலமாகச் சென்றன. இவரது அவதாரம் ஏற்பட்ட பின்னர் ஸர்வேச்வரனாகிய நாராயணனப் போற்றும் வேதங்கள் அனைத்தும், “நமக்கு இனி குறையில்லை”, என்று கர்வம் அடைந்தன.

மிகவும் உயர்ந்த இடமும், நம்மாழ்வாரின் அவதார இடமும் ஆகிய ஆழ்வார்திருநகரியில் உதித்த நம்மாழ்வார் அருளிச் செய்ததும், அனைத்து புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும், தமிழ் வேதமும் ஆகிய திருவாய்மொழி எந்தக் குறையும் இன்றி வளர்ந்தது.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்

திருவரங்கத்தமுதனார்  திருவடிகளே சரணம்

உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!

ராமானுஜர் பகுதி இரண்டு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு இரண்டு....

நம்மாழ்வார் 32 வருடங்கள் வாழ்ந்தார். அவர் குழந்தையாகப் பிறந்த 16வது நாளில் குழந்தையை ஆழ்வார் திருநகரியிலுள்ள பொலிந்து நின்ற பிரானின் திருக்கோவிலில் ஆலமரத்தின் அருகில் பெற்றோர் இருந்தனர். குழந்தை தவழ்ந்து மெல்ல மரம் ஏறி புளிய மரத்தில் தவம் செய்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அப்போதிலிருந்து 16 வயது வரை தவத்தில் இருந்தார். அதன் பின் 16 ஆண்டுகள் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களில் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி பாசுரங்களைப் பாடினார்.

அவரது சீடர் தான் மதுரகவி ஆழ்வார். அவர் தன் குருவையே இறைவனாகக் கொண்டு பாசுரங்கள் பாடி அனுபவித்தார். அவர் கண்ணிநுண் சிறுதாம்பு பாசுரங்கள் பாடினார்.

குருவான நம்மாழ்வாருக்கு சேவை செய்து வரும் பொழுது, ஒரு நாள் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாரிடம் "நான் வைகுண்டத்திற்குப் புறப்படும் வேலை வந்துவிட்டது" என்றார். இதைக்கேட்ட மதுரகவி ஆழ்வாருக்கு பயங்கர மனவருத்தம். "சுவாமி தாங்கள் இங்கே எங்களுக்காக இருக்கக்கூடாதா?" என்றார். நம்மாழ்வாரோ மதுரகவி ஆழ்வாரிடம், "தாமிரபரணி ஆற்றில் நீர் எடுத்து வாரும்" என்றார்.

மதுரகவி ஆழ்வாரும் நீர் எடுத்து வந்தார். அந்த நீரை காய்ச்சுமாறு நம்மாழ்வார் கூற, மதுரகவி ஆழ்வாரும் காய்ச்சினார். நீரிலிருந்து ஒரு விக்கிரகம் வெளிவந்தது. அதைக்கண்ட மதுரகவி ஆழ்வார், "நான் உங்களுடைய சிலையைக் கேட்டால் நீங்கள் வேறு யாருடைய சிலையைக் கொடுக்கிறீர்கள்" என்றார். நம்மாழ்வாரோ அந்த சிலையைப் பெற்று மறைத்து வைத்துக் கொண்டு, இந்த சிலை உனக்கல்ல என்று கூறி, மறுபடியும் தாமிரபரணி நீர் எடுத்து காய்ச்சச் சொன்னார். மதுரகவி ஆழ்வார் தாமிரபரணி நீர் எடுத்து காய்ச்சினார், அப்போது நம்மாழ்வார் விக்கிரகம் வெளிவந்தது. மதுரகவி ஆழ்வாருக்குச் சந்தோசம். நம்மாழ்வார் வைகுண்டம் சென்றபின் இந்த சிலையையே தொடர்ந்து பூஜித்தார். இந்த சிலை இன்னும் ஆழ்வார் திருநகரியில் புளிய மரத்தின் அருகில் நம்மாழ்வார் சன்னிதியில் உள்ளது.

ஒரு சிலையை மறைத்தார் அல்லவா நம்மாழ்வார். அந்த சிலை தான் இராமானுஜர். நாதமுனிகள் வந்து பாசுரங்கள் கேட்கும் பொழுது, அவர் பாடிய பாசுரங்களையும் கொடுத்து, மற்ற ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களையும் கொடுத்து, "பொலிக! பொலிக!" என்று கூறி இந்த விக்கிரகத்தையும் நாதமுனிகளிடம் கொடுத்தார் நம்மாழ்வார்.

நாதமுனிகள் பூஜித்து, அவர்களுக்குப்பின் பின் பல சீடர்கள் தொடர்ந்து அந்த விக்கிரகத்தை பூஜித்து வந்தார்கள்.

தான் அவதரிக்கும் முன்பே பூஜிக்கப்பட்ட ஒரே குரு இராமானுஜர் தான். இதுவரையில் யாருக்கும் இப்படி பாக்கியம் கிடைக்கவேயில்லை. அந்த சிறப்பு இராமானுஜர் அவதரிக்கும் முன்னமே கிட்டியதால் தான் இராமானுஜரை தெய்வாம்சம் பொருந்தியவர், அந்த இறைவனே இராமானுஜர் என்றெல்லாம் சொல்லலாம். நாளை குரு பரம்பரை பற்றி அறியலாம்.
"
ஶ்ரீமதே சடகோபாய நம
ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"நம்மாழ்வாரும்.... மதுரகவியாழ்வாரும்..."

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியை .... பட்டோலை கொண்டு பாவின் இன்னிசை பாடித் திரிபவர்.... மதுரகவி ஆழ்வார்...
நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள கருத்துக்களை.... தாம் பாடிய "கண்ணிநுண் சிறுத்தாம்பு" பிரபந்தத்தில் அருளிச்செய்தவைகளைக் காண்போம்.....

நம்மாழ்வார் பாடிய ...." நலங்கொள் நான் மறைவாணர்கள்" என்பதை....

"நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்"

என்று பாடியுள்ளார்....

2. நம்மாழ்வார் பாடிய....." அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதமே" என்றதை....

"அண்ணிக்கும் அமுதூறும் " என்றும்...

3. "அடிக்கீழ் புகுந்தேனே" என்பதை

"மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே.... "என்றும்....

4. "பாடி இளைப்பிலும் " என்பதை

"பாடித் திரிவனே" என்றும்....

5. " உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் " என்பதை

"நம்பிக்கு ஆள் உரியன்" என்றும்...

6. "இங்கே திரிந்தேற்கு " என்பதை...

"திரி தந்தாகிலும் " என்றும்....

7. "தாயாய்த் தந்தையாய் " என்பதை...

"அன்னையாய் அத்தனாய்.. " என்றும்.....

8. "ஆள்கின்றான் ஆழியான் " என்பதை....

"என்னை ஆண்டிடும் தன்மையான் " என்றும்....

9. "எமர் கீழ்மேல் எழுபிறப்பும்" என்பதை....

"இன்று தொட்டு எழுமையும்.... " என்றும்....

10." பேரேனென்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்..." என்பதை....

"நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினார்..." என்றும்...

11." வழுவிலா அடிமை செய்ய வேண்டும்" என்பதை....

"ஆட்புக்க காதல் அடிமைப் பயனன்றே " என்றும்....

12."பொருளல்லாத என்னை அடிமை கொண்டான் " என்பதை....

" பயன் அன்றாகிலும், பாங்கு அல்லாராகிலும்.... செயல் நன்றாகத் , திருத்திப் பணிகொள்வான்" என்றும்...

13. "மலர் பாவைக்கன் என் அன்பேயோ..." என்பதை....

" தென்குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய்.. " என்றும்....

14." வைகுந்தமாகும் தம்முரெல்லாம்..." என்பதை....

"நம்புவார்பதி வைகுந்தம் காண்மினே..." என்றும் பாடியுள்ளார்....

இவ்வாறு நம்மாழ்வார் பகவத் விஷயத்தை அனுபவித்த முறையிலேயே... ஆழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வாரும் அடியொற்றி.... அனுபவித்து இருப்பதை அடியோங்களும் படித்து இன்புறுவோம்.....

"நம்மாழ்வார் திருவடிகளே சரணம்"

"மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்"

"ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

காரிமான் உடையநங்கை தம்பதிகளுக்கு புத்திரப்பேறுக்காக ஸ்ரீ அழகிய நம்பியிடம் பிரார்த்திக்கும் சமயம் தாமே ஆழ்வார்திருநகரியில் அவதரிப்போம் என்று சாதித்து அங்ஙனமே அவதரித்தார்.  அவரே திருக்குறுங்குடியில் நம்மாழ்வார் திருக்கோலத்தில் சேவைசாதிக்கும் அற்புதக்காட்சி பல்லக்கு சேர்வையில் சேவிக்கலாம்.
இன்னும்
தொடர்வோம்...

*ஓங்கி உலகளந்த உத்தமன்!*

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்கிறாள் என் தாயார். திருவிக்கிரம அவதாரத்தின் போது தனது திருக்கால்களை எவ்வளவு வேகமாக ஓங்கியிருப்பார் திருவிக்கிரமன் என்று உணர்ந்து ஓங்கி சப்தத்தால் வியக்கவைக்கிறாள்! பின்பு அடுத்தடுத்த நாட்களில் பாஸுரங்களை பாடிக்கொண்டிருந்தாலும், இந்த வியப்பு ஆண்டாளின் திருவுள்ளம் விட்டு அகலவில்லை. அதனால்தான் மீண்டும் 17 வது பாஸுரத்தில், ஓங்கி உலகளக்கும்போது, இந்த அண்டத்தின் மேல் உள்ள ஆவரண ஜலத்தை திருவிக்கிரமன் தன் திருப்பாதத்தால் அறுத்த வைபவத்தை வியந்து *"அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே"* என்று மீண்டும் வியக்கிறாள்!

24 ஆம் பாஸுரத்திலும் "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!!!" என்று வியப்பு நீங்காத ஆண்டாள் உலகளந்த திருவடிகளின் மேன்மையைப் போற்றிப் பாடுகிறார்! இந்தப் "போற்றி"
களிலும் உலகளந்த திருவடிகளுக்குத் தான் முதல் வந்தனம்!!

நாச்சியார் திருமொழியிலும் 2 ஆம் பாஸுரம், 5 ஆம் பாஸுரம், 8 மற்றும் 9 ஆம் பாஸுரங்களில் உலகளந்தானை பாடி வியக்கிறாள்!

நம்மாழ்வார் திருவிக்கிரம ப்ரபாவத்தை 6 ஆம் பத்து 6 ஆம் திருவாய்மொழியில், திருவேங்கடவனிடம் சரணாகதி அனுஷ்டிக்கும் போது, *"எந்நாளே நாம் மண் ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று"* என்கிறார்! திருவிக்கிரம விபவத்தின் போது, எம்பெருமான்தான் ஓங்கி உலகளந்து விட்டாரே! ஆக, இந்த லோகத்திலாகட்டும், அந்த லோகத்திலாகட்டும்.. எவரும் இரண்டு திருப்பாதங்களையும் ஒன்றாக தரிசிக்கவில்லையன்றோ? அதை எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பது? என்கிறார்! நம்மாழ்வாரின் திருவுள்ளம், திருவேங்கடவனை திருவிக்கிரமனாக பற்றியதால், திருவேங்கடவனின் திருக்கமல பாதங்களை தரிசித்தால் போதும்.. திருவிக்கிரம இணைத்தாமரைகளை தரிசித்ததிற்கு ஈடாகுமாம் போலே....குறையும் தீருமாப்போலே!
🙇‍♀🙇‍♀🙏🙏
உய்ய ஒரே வழி! உடையவரின் திருவடி!!
ஓம் ராமானுஜாய :


ராமானுஜர் பகுதி ஒன்று


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 1

"பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னுமாற னடிபணிந்துய்ந்தவன் பல்கலையோர்
தாம்மன்னவந்த விராமானுசன் சரணாரவிந்தம்
நாமன்னிவாழ நெஞ்சே!
சொல்லுவோம் அவன் நாமங்களே!"

- இராமானுஜ நூற்றந்தாதி 1

நாம் அன்னி வாழ நெஞ்சே சொல்லு என் உடையவரின் நாமங்களை. ஏனெனில், ஆழ்வார்கள் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வைணவம் மங்கிய காலம். நாதமுனிகள் நம்மாழ்வார் பாசுரங்களை திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோவிலில் ஆராவமுதன் முன் பாடினார். நம்மாழ்வார் பாசுரங்களை பாடி முடிக்கும் பொழுது, ஆராஅமுதன் கூட்டத்தோடு கூட்டமாக பக்தன் போல் வந்து, இவ்வளவு பாசுரங்களே இப்படி அழகாக இருக்கிறது என்றால் மீதமுள்ள மற்ற பாசுரங்கள் கேட்கும் பொழுது எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

நாதமுனிகள் பிரமித்து போய்விட்டார். ஏனெனில் அவருக்குத் தெரிந்தது நம்மாழ்வார் பாசுரங்கள் தான். அதுவும் 100 பாடல்கள் வரைதான். இவ்வாறு கூட்டத்தில் ஒருவர் மற்ற பாசுரங்கள் பற்றி கூறியதும், உடனே விசாரிக்கத் தொடங்கிவிட்டார் நாதமுனிகள். மற்ற பாசுரங்கள் பற்றி எங்கே சென்று அறிந்து கொள்வது என்று கேட்டுக் கொண்டிருக்க, கூட்டத்தில் ஒருவரோ ஆழ்வார் திருநகரி சென்றால் அனைத்து பாசுரங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்.

நாதமுனிகளோ ஆராவமுதனை வணங்கி உடனே ஆழ்வார் திருநகரி புறப்பட்டு, நம்மாழ்வாரை வணங்கினார். நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார் காலத்துக்குப் பின், வரிசையாக பல சீடர்கள் தொடர்ந்து ஆழ்வார் திருநகரியில் வழிபட்டனர். அவர்களிடம் நாதமுனிகள் நம்மாழ்வாரின் மற்ற பாசுரங்கள் பற்றி கேட்டார். அவர்களோ நம்மாழ்வார் விக்கிரகம் முன் பாசுரங்கள் பாடினால் நம்மாழ்வாரே நேரில் தோன்றி அளிக்கலாம்.. எங்களிடம் அவரது சில பாசுரங்கள் தவிர இல்லை என்று சொன்னார்கள்.

பிறகு நம்மாழ்வார் விக்கிரகம் முன் அமர்ந்து நம்மாழ்வாரின் பாசுரங்களை 12000 முறை பாடினார். அவர் பாடி முடிக்கையில், நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் காட்சி கொடுத்தார். அவருக்கு 4000 திவ்விய பிரபந்தங்களையும் அருளினார். இதைக்கண்ட நாதமுனிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நம்மாழ்வார் தன் மடியிலிருந்த ஒரு அழகான சிறிய சிலையைக் கொடுத்து நாதமுனிகளிடம் இதை தினமும் பூஜிக்கச் சொன்னார். நாதமுனிகளிடம் இந்தச் சிலையைக் கொடுக்கும் பொழுது "பொலிக! பொலிக!" என்று சொல்லிக் கொடுத்தார். கி.பி.1017ல் பிறக்கப்போகிற இராமானுஜருக்குக் கலியுகம் தொடங்கிய போதே கட்டியம் கூறியவர் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் கொடுத்த விக்கிரகம் தான் இன்றும் உலகைக் காத்துவரும் ஸ்ரீ இராமானுஜர். நாதமுனிகள் தான் அறிந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களை உலகறிய வெளியிட்டார். நாதமுனிகள் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களைத் தொகுத்தார்.

அந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களையும் உயிர் மூச்சாக மதித்து, அதை நம்மிடையே எளிய முறையில் பரப்பியவர் இராமானுஜர்.

நம்மாழ்வாருக்கு இராமானுஜரின் சிலை எப்படி கிடைத்தது? அதை நாளைய பதிவில் அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!

ஸ்ரீ இராமானுஜர் சரணம்

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த
ப்ரபந்த காயத்ரி
என்னும்
ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி

பாசுரம் 2
கள்ளார் பொழில் தென் அரங்கன் * கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக்* குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு* ஒன்றறியேன் எனக்கு உற்ற பேரியல்வே.

...........தேன் வழியும் சோலைகளால் சூழப்பட்ட
அழகான திருவரங்கத்தில், அந்த உயர்ந்த
திவ்யதேசம் மூலம் மட்டுமே தனது பெருமைகள்
அனைத்தும் வெளிப்படும்படியாக அழகியமணவாளன்
சயனித்துள்ளான்.  தாமரைமலர் போன்ற
அழகும் செம்மையும் கொண்ட அவனது
திருவடிகளைத் தங்கள் மனதில் நிலை நிறுத்தாமல்
உள்ளவர்களும் இந்த உலகில் உண்டு.  
கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிட்டியும்,
அதற்கு ஏற்ற பாக்கியம் பெறாத இந்த மனிதர்களை
[பெரியபெருமாளின் திருவடிகளைத் தங்கள்
நெஞ்சத்தில் எண்ணாதவர்களை], நான் விலக்க வேண்டும்.  திருக்குறையலூர் என்னும் திவ்யதேசத்தில்
அவதரித்த திருமங்கையாழ்வாரின் திருவடிகளின்
கீழே, எப்போதும் அகலாதபடி பக்தியுடன் இருப்பவர்
எம்பெருமானார் ஆவார்.  அவருடைய மிகவும்
உயர்ந்த குணங்கள் தவிர வேறு எதனையும்
என் மனம் சிந்திப்பதில்லை.  மிகவும் தாழ்ந்தவனாகிய
என் போன்றவனுக்கு இத்தகைய உயர்ந்த நிலை
ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று அறியமுடியவில்லை.......