சனி, 29 செப்டம்பர், 2018

சிவன் அருள்பாலிக்கும் தலங்களும் அவற்றின் சிறப்பும்!

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டதால் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

*நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்

*ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்த போது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

*தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன், இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

*கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் வெண்ணெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் தாய் & தந்தையருக்கு இறைவன் அசரீரியாக தன்னை வந்து தரிசனம் செய்த பின்னர் தங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று சொன்ன ஸ்தலம்.

*அமர்நாத்தில் உள்ள பனி லிங்கம் சந்திரனை போலவே 15 நாளில் வளர்ந்து பவுர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

*கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

*அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திரு விஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள் பாலிக்கிறார்.

*செம்பனார் கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்

*பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்டுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

*திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமவுலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும் தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

*ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள அனுமன் காட்டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப் பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

*பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

*தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.

*ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1 காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வரர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

*தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நல்லூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாப்பழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

*காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குத் தெற்கே சிறிது தூரத்தில் ஜ்வரஹரேஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

*மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

விஷ்ணு சிறப்புச் செய்திகள்

*திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரிபாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.

*திருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

*நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.

*திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

*உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

*ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு சக்ரத்துடன் காட்சியளிக்கிறார்.

*திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது

*சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண சிங்கப்பெருமாள் கோயில் செல்ல வேண்டும் இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

*திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

*ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைந்த சிவன்-திருமால் கோயில் இது மட்டுதான்.

*திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு வேதநாராயணன் என்று பெயர்.

*காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர். அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019-ம் ஆண்டு கிடைக்கும்.

*திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

*கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருப்பது வித்தியாசமானது.

*திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன் கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாருக்கு சன்னதி இல்லை.

*பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீ வைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிப்படுகிறார்கள்.

*கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

*மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக்கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு சக்கரம் இல்லை.

*காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.


நாட்டு கவுண்டர், வெள்ளாள கவுண்டர் வேறு வேறா? தெளிவாக பலர் விளக்கியும் மீண்டும் மீண்டும் இது தீர்ந்தபாடில்லை.
 

இதன் நிலைபாடு : சேர நாட்டில் காடுகளை அழித்து நகர்/காணிகளை அமைத்த வெள்ளாளர் காமிண்டன் பட்டம் கட்டிகொண்டு குடிசாதிகளை காத்தனர். பட்டம் என்பது ஒருவருக்குரியது. நாளடைவில் பட்டம் கட்டிகொண்டவரின் பங்காளிகள் பெண் கட்டி பெண் எடுத்த மாமன் மைத்துனர்கள் காமிண்டன் பட்டம் சூட்டி கொண்டனர். ஊரை உருவாக்கிய போது அதனை நிர்வகிக்கும் பொருட்டு ஊர் கவுண்டர் என்று ஒருவரை நியமித்தனர். இதேபோல பண்ணாடி, கொத்துக்காரர் எல்லோரும். நான்கைந்து கிராமம்/ஊரை சேர்த்து ஒரு காணியை நிர்வகிக்கும் பொருட்டு ஒரு காணியாள கவுண்டரை நியமித்தனர். இந்த காணியாள கவுண்டர் வெள்ளாளன் தான். இரண்டு மூன்று காணிகள் சேர்ந்து வளநாடு என்று அறியப்படும். ( அண்ணமாரின் பொன்னிவளநாடு போல ). இதனை நிர்வகிக்க நியமிக்கபடும் வெள்ளாளன் பட்டக்காரன்/நாட்டார்.

இந்த வளநாடுகள் இரண்டு / மூன்று/நான்கு சேர்ந்து ஒரு பெரிய வளநாடாக நிர்வகிக்க பட்டது. ( காங்கேய நாடு 5 வளநாடுகளை கொண்டது.
1. காடையூர் முழுக்காதன்,2.காங்கேயம் செங்கன்னன்,
3.ஆனூர்(பழையகோட்டை) பயிரன் / வள்ளியரச்சல் பில்லன்,
4.பாப்பினி தோடை,
5. வீரசோழபுரம் கன்னந்தை நிர்வாகம்).
இது பெரிய நாட்டார்/ பெரிய பட்டக்காரர் நிர்வாகம்(காங்கேய நாட்டுக்கு மேல உள்ள ஐந்தில் முழுக்காதன்/செங்கன்னன்/பயிரன் மாறி மாறி பெரியபட்டம் கட்டினர்). இதுவும் வெள்ளாளன் தான். கொங்க தேசத்தின் 24 நாடுகள் இதன் படி தான். இந்த 24 நாட்டை நிர்வகிப்பது மூவேந்தரில் ஒருவர். நிர்வாகம் சார்ந்தவரை மட்டும் தான் நாட்டார்/நாட்டான்/நாட்டாமை காரன் (நாட்டு ஆளுமை காரன்)  என்று குறிப்பிடுவர்.

அன்றைய நாளில் வெள்ளாளர் பட்டம் கட்டிகொண்டது முதலில் 

1.கீகரை பூந்துறை ( நாமக்கல் ,ஈரோடு காவேரிக்கு கிழக்கு) ,
2.மேகரை பூந்துறை ( அவல் பூந்துறை , நசியனூர் சுற்றிய பகுதி),
3.காங்கேய ( காங்கேயம் ,வெள்ளகோவில்,முத்தூர், காடையூர் , நத்தகாடையூர் இப்படி 14 காணி).

4. தென்கரை ( தாராபுரம் வடக்கு,மூலனூர், புதுப்பை, ஊதியூர் ......) 
 

இங்கு பட்டம் வெள்ளாளருக்கு முதலில் கட்டினர். பின் வேடுவரிடம் இருந்து வாங்குதல் , மன்னனிடம் பெறுவது என்று மீதமும் பட்டம் கட்டி பட்டக்காரனாக / நாட்டாராக வெள்ளாளர் கொங்க நாடு முழுக்க மாறினர். முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த பட்டக்காரர்/நாட்டார் அந்தஸ்த்து காலத்துக்கு காலம் மாறிவிடும். ஆட்சி மாற்றம் அடிக்கடி நிகழும்.

நாட்டான் என்பது அண்ணன்,  காணியாளன் என்பது தம்பி. இது தான் வித்தியாசம். பொங்கலூர் நாட்டின் நாட்டாரில் வருவது கொடுவாய் ஓதாலன். அதில் ஒருவருடைய மகன் 2பேர் தம்பி 3பேர் பங்கிட்டு கொண்டது தான் குண்டடம், நிழலி, கண்டியன்கோவில்......., இவர்கள் 5 பேரும் காணியாள கவுண்டர்கள். நாட்டாரின் மகன் காணியாளனாக உள்ளான். இப்படி நமக்குள் ஒருவருக்கு பயன்படுத்திய வார்த்தை நாளடைவில் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தினர். உதாரணமாக இன்றும் சில கூட்டங்கள் தங்களை பட்டக்காரர் பங்காளிகள் என்று சொல்வதை காணலாம்.

சில தரவுகள்,

1. கன்னிவாடி கன்னகுல ஆதினத்தின் தலைவரான முத்துச்சாமி கவுண்டர், மோரூர் நாட்டுகவுண்டரான சூரிய காங்கையனின் மகன். இந்த வழி தோன்றல் கன்னிவாடியன் கூட்டம். [கன்னகுல பட்டயம்].

2. சென்னிமலையில் ஈஞ்கூர் ஈஞ்ச குலத்தவரின் கட்டளை மடத்தின் பெயர் ஈஞ்சகுல நாட்டுகவுண்டர் மடம்.

3.இறையமங்களம் கன்னகுலத்தவர் கோவிலில் பொறிக்கபட்டுள்ளது , #கொங்கு_நாட்டு_வெள்ளாளர் சங்கம்.  நாட்டு கவுண்டர் கோவில்.

4. பரஞ்சேர்வழி விழியகுலத்தவர் கீகரை பூந்துறை நாட்டில் அதிகாரம் நாட்டு கவுண்டர் ஆயினர்.

5. பின்பு பருத்திபள்ளி செல்லகுலத்தில் பெண்ணெடுத்து மல்லசமுத்திரம் வளநாட்டை சீராக பெற்று நாட்டு கவுண்டராக விழியகுலத்தவர் மாறினர்.

6.கன்னகுலத்தவர் பாண்டியரால் மோரூர் நாட்டுகவுண்டராய் நியமனம் செய்யபட்டனர். அதற்கு முன்பு மோரூர் நாட்டார் ஆந்தை குலத்தவர். நாட்டார் காலத்துக்கு காலம் மாறும் பதவி.

இப்படி பல உண்டு.,

கீழே தீரன் சின்னமலை கவுண்டர் கிரயம் செய்த பட்டயம் பிரதி உள்ளது. இதில் குறிப்பிடபடும் நாட்டுகவுண்டடரெல்லாம் வெள்ளாளன் அல்லாது யார்?

தென்னிந்திய வர்ணாசிரம கோட்பாட்டின் படி நாட்டார் என்றாலே வெள்ளாளர் (சத்திரியர்) என்று பொருள். நிறைய இடத்தில் பிராமணர் நாட்டார் நகரத்தார்.... என்று வரும்.

   கீகரை ஏழுகரை நாடுகளை (வளநாடு) நிர்வகித்த 8 குலத்தவர் நாட்டு என்று சேர்த்து கொண்டனர். நாட்டு வெள்ளாளர், நாட்டு கவுண்டர் என்று முற்சேர்க்கை. நமது பக்கமும் இது உள்ளது. ஊர் பெரிய வீட்டுகாரரை நாட்டு / நாட்டுதுரை என்று அழைப்பர். வெள்ளைக்காரன் சாதிவாரி கணக்கெடுப்பு செய்து, கீகரையில் நாட்டர் குலமாக இருந்த 8 குலத்தை நாட்டுகவுண்டரென குறிப்பிட்டான்.  நாம் நம்மோடு இருந்த நாட்டார் குலங்களை மறந்து போனோம்.

நமக்குள் சண்டை மூட்டுவதே சிலருக்கு எண்ணம். தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்கலாம். நாமளே முடிவு செய்வது தவறாக கூட இருக்கலாம்.

திருமணம் முடிந்த பின் நாட்டுகல் வழிபடுபது நம் சடங்கு. இது 24 நாட்டுகவுண்டர்களாக பாவிக்கபடும் கல். மங்கல வாழ்த்து நாட்டார் சபை புகுதலை சொல்லும். இந்த நாட்டார் சபை 79 வெள்ளாள கவுண்டரை உடையது. ( கல்லிடைபாடி கல்வெட்டில் எழுவத்தொன்பது வளநாட்டு சபையை சேர்ந்த கன்னந்தை என்று குறிப்பு உள்ளது. கன்னந்தை குலம் நாட்டு கவுண்டரில் ஏது? நாட்டார் சபையில் எப்படி?)

ஊருக்கு ஊர் சம்பிரதாய வழக்கு வேறுபடும். இதே காங்கேயத்தில் நாங்கள் செய்யும் சீர் , தாராபுரத்தில் வேறு படுகிறது. பொள்ளாச்சி, உடுமலை பக்கம் நிறைய வித்தியாசம். வேறு வேறு சாதியென பிரித்து கொள்ள வேண்டுமா?

ஆறு தாண்டி பெண் கொடுக்கும் வழக்கம் நம்மிடம் முன்பு கிடையாது. காவேரி மட்டுமல்ல, அமாராவதி,நொய்யல் கூட அடங்கும்.

கீழே உள்ள படத்தில் குறிப்பிட்ட படி நான் நாட்டு கவுண்டர் வகையறா. ஆனால் நான் வெள்ளாளன். 🙂. எப்படி?? வேறு சாதி என்றால் நானும் வேற சாதி தான். எங்களோடு மணவினையும், அன்னம் தண்ணீர் பொழங்காட்டியும் பரவாயில்லை.



இந்து  சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குச்
                            சிலக் கேள்விகள்

1927ம் வருடம் தொடங்கி கோயில், இந்து சமய அறக்  கட்டளைகள் தமிழக அரசுக் கட்டுப்பாட்டில் வரத் தொடங்கின. 1947ம் வருடம் சுமார் 100 கோயில்களைத் தன் பிடியில் வைத்திருந்த  அரசு  தற்போது 38,000 கோயில்களுக்கு  மேல்  தன்   இரும்புப் பிடியில் வைத்துள்ளது. கோயில்களின் சிறப்பான நிர்வாகத்திற்காகத்தான் அவற்றை எங்கள் வசம் வைத்துள்ளோம் என்று சொல்லும் அரசும், கோயில்களில் அறநிலையத்துறை அதிகாரிகளாக நிர்வாகம் அரசு ஊழியர்களும், இவர்கள் இந்தக் கோயில்களைத் தம் வசம் வைத்துள்ளதை ஆதரிப்பவர்களும் கீழ்கண்ட கேள்விகளுக்குத் தெளிவான, நேரடியான விடை அளிக்க வேண்டும்:

1.  இந்திய அரசியல் சட்டப்படி எல்லா மதத்தினருக்கும் (மைனாரிட்டி சமூகங்கள் உள்பட) ஒரே மாதிரியான  அடிப்படை வழிபாட்டு, நிர்வாக உரிமை கொடுத்துள்ள போது, இந்து சமய கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகளை, அவற்றின் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டும் ஏன் அரசு எடுத்துக்கொள்கிறது? மிக அதிக அளவில் தற்போது பெருகியுள்ள சர்ச்சுகள், மசூதிகள் அவற்றின் சொத்துக்கள், ஆகிவற்றை ஏன் நிர்வகிக்கக் கூடாது?

2.  ஹிந்து சமயத் திருமடங்கள் தனி மத உட்பிரிவைச் சேர்ந்தவை என்று உச்ச நீதி மன்றதின் அரசியல் சாசன அமர்வு சொன்ன பிறகும் (1954) இந்து சமய அறநிலையத்துறை எப்படித் திருமடங்களைக் கட்டுப்படுத்துகிறது. உதாரணம் - திருப்போரூர் சிதம்பரம் ஸ்வாமிகள் மடத்திற்கு அரசு வேலைக்காரனானக் காஞ்சிபுரம் உதவி ஆணையரைத் தக்காராக  7 வருடங்களாக வைத்துள்ளது.

3. கோயில்களின் வழிபாட்டு உரிமைகளில் குறுக்கிட, அரசுக்கு அறநிலையத்துறைச் சட்டத்தில் எந்த இடமும் இல்லாத போது, எப்படி  அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் பாலாலயம், கும்பாபிஷேகம், திருவிழாக்கள் போன்றவற்றை முடிவு செய்கிறார்கள் ?

4. கம்ப ராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என்று மேடைதோரும் பேசிய நாஸ்திகன் அண்ணாதுரை இறந்த தினத்தன்று (பிப்ரவரி 3ம் தேதி) கோயில்கள் உள்ளே இலை போட்டு  அன்னதானம் எந்த ஆகம  விதியின் கீழ் நடக்கின்றது ?  கோட்ஸே தூக்கில் போடப்பட்ட தினத்தில் காந்தி ஆச்ரிமங்களில் அன்னதானம் செய்ய அரசு உத்தரவு  போடுமா? இந்திரா  காந்தி நினைவு  நாளன்று  சீக்கியர்கள்  தங்கள் குருத்வராவில் அன்னதானம்  செய்ய வேண்டும் என்று அரசு  உத்தரவு போட முடியுமா ?

5.  அறநிலையத்துறைச் சட்டம் பிரிவு 25-A ன் படி அறங்காவலராக  இருப்பவர் கோயில் இருக்கும் இடத்தில், அந்த ஊரில்  நல்ல  நடத்தை உள்ளவர், நன்மதிப்பு உள்ளவர் என்ற பெயர் பெற்றிருக்க  வேண்டும்.  கோயில் நிர்வாக விஷயத்தில் கவனம் செலுத்த ஆர்வமும்,  வேண்டிய அளவு நேரமும் உள்ளவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில்,   அறநிலையத்துறை ஊழியர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் கோயில் தக்காராக உள்ளனர்?

6. அறநிலையத்துறைச் சட்டம் 47ம், 49ம் கண்டிப்பாக இந்து சமயக் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு  தலித் அறங்காவலர், ஒரு பெண் அறங்காவலர் நியமனம் செய்யப்பட வேண்டும்  என்று சொல்லும் போது 2011ம் ஆண்டிலிருந்து அவ்வாறு செய்யாமல் தலித்துகளுக்கும்  பெண்களுக்கும் அறநிலையத்துறை ஏன் வஞ்சனை செய்கிறது ?

7. அறநிலையத்துறைச் சட்டப்படி கோயில் கட்டமைப்புகளை அப்படியே வைத்துப் பாதுகாக்க வேண்டும். அவற்றை மாற்றவோ, புதிதாக ஏதும் கட்டவோ கூடாது என்று சொன்னப்  பிறகு, விதிகளை சட்டத்திற்கு மாறாக மோசடியாக இயற்றி, புதிய கோபுரம், மண்டபம் கட்டுதல், பழைய கோபுரம், மண்டபங்கள், கோயில் கதவுகள், தூண்கள்  பழுது என்று சொல்லி அவற்றை அகற்றி விற்பனை செய்தல், புதிய சிலை செய்தல் அவற்றில் தங்கம் சேர்க்கிறேன் என்று மோசடி செய்தல் - இவையெல்லாம் எந்த சட்டத்தின் கீழ் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்கிறார்கள் என்று காட்ட முடியுமா ? 

8. திருக்கோயில் கோபுரங்களுக்கு, கொடிமரங்களுக்குத் தங்க முலாம் பூசுதல் - தங்கத் தேர், வெள்ளித் தேர், தங்கத் தொட்டில்செய்தல் -  பணம் கட்டினால் -  இந்தத்  தேர்களில் சுவாமி பவனி - எவை எல்லாம் எந்த ஆகம  அடிப்படையில் - எந்த அறநிலையத்துறைச் சட்டப் பிரிவின் கீழ் செய்தார்கள் என்று  காட்ட முடியுமா?

9. எந்த ஆகமத்தின் கீழ் நீங்கள் கோயில் உள்ளே அலுவலகங்கள், கழிப்பறைகள் எல்லாம் கட்டிக்கொண்டு கோலோச்சுகிறீர்கள்? கோயில் உள்ளே இவைகள் எல்லாம் கட்டக் கூடாது என்பதை அறநிலையதுறைச் சட்டமும், தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்ட விதிகளும் சொல்கின்றனவே? உங்கள் துறையில் உண்மையில் சட்ட அறிவு உள்ளவர்கள் இருக்கின்றார்களா? அப்படி இருந்தால் அந்த அறிவு - சட்டத்தை மீறுவதற்காகவா?

அறநிலையத்துறையின்  கோயில் நிர்வாக இலட்சணம்:

10. சென்னை ttk சாலையில் தீனதயாளன் வீட்டுக் கிடங்கில் கிடைத்த  200க்கும் அதிகமான கோயில் சிலைகளை இவர்கள்  அடையாளம் காட்டவில்லை - காரணம் இந்தக் கோயில் சிலை என்று அடையாளம் காட்டினால், சிலை காணாமல் போன போது - போலீசிடம் புகார் கொடுக்கவில்லை என்ற உண்மை வெளிப்பட்டு விடும். இப்பொழுது தெரிகிறதா? சிலைக் கடத்தலுக்கு யார் முழு உடந்தை என்று?

11. 1986  ஆண்டிலிருந்து தற்போது வரை சுமார் 50000 ஏக்கர்கள் கோயில், கட்டளை விளை நிலங்கள் காணவில்லை. தற்போது உள்ள 4.75 லட்சம் ஏக்கர் நிலங்களில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர்கள்- ஆக்கிரமிப்பில் உள்ளன அல்லது பல வருடங்களாகக் குத்தகைப் பணம் வரவில்லை. இவர்களுடைய கொள்கை குறிப்பில் ஒரு போதும் நஞ்சை நிலங்கள் குத்தகை வசூல் எவ்வளவு, புஞ்சை நிலங்கள் வசூல் எவ்வளவு, கிராமப்புற மனைகள் வசூல் எவ்வளவு, நகர்ப்புற  மனைகள் குத்தகை வசூல் எவ்வளவு  - என்றெல்லாம்  போட மாட்டார்கள். மேலும் ஒரு ஆண்டு வசூல் எவ்வளவு என்று போடுவதற்கு அவர்களுக்குக் கூடக் கூச்சமாக உள்ளது. அவ்வளவு குறைவான  வசூல். அதானால் மூன்றாண்டு வசூல்  தொகையைத் தான்  குறிப்பிடுகிறார்கள்.  வருடம்தோறும் ரூ. 6000 கோடி வர வேண்டிய கோயில் நிலங்கள் வருமானம், ரூ 120 கோடி கூட  வருவதில்லை. அதாவது வர வேண்டிய தொகையில் 2 சதவிகிதம் கூட வருவதில்லை. இப்படி 2 % குறைவான வசூல் தான் 40 வருடங்களாக இருக்கிறது. இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன விளக்கம் அளிக்க முடியும்? 

• 33,000 ஏக்கர் நிலங்கள் உள்ள  வேதாரண்யம் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களில் 30000 ஏக்கர்கள் ஆக்கிரமிப்பில். கோயில் நிலங்களை அளவீடு செய்ய கோரிக்கை வைக்கிறார் நேர்மையான செயல் அலுவலர். கோரிக்கையை  குப்பையில் போடுகிறார் நாகை மாவட்ட ஆட்சியர். மாவட்ட ஆட்சியர் மீது  ஆணையர் அனுமதி பெற்று வழக்குத் தொடுக்கிறார் நேர்மையான  அலுவலர். பிறகு அந்த வழக்கைத் திரும்பப் பெற ஆணையர் அலுவலக  அதிகாரிகளே அவருக்கு ஏன் அழுத்தம் கொடுத்தனர்?

•  திருச்செந்தூர் அருகில் உள்ள உவரி ஸ்ரீ சாஸ்தா கோயில் நிலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட  கார்னெட் என்னும் விலைமதிப்பு மிகுந்த கற்களை எடுத்தக் கொள்ளையன் மீது மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த உதவி ஆணையரை மிரட்டி அன்றைய ஆணையர் வழக்கினை ஏன் திரும்பப் பெறச் செய்தார்?

• புதுக்கோட்டை அரசர்கள் அந்த மாவட்டக் கோயிலுகளுக்கு வழங்கிய 105,,000 ஏக்கர் நிலங்கள் எங்கே ?

•  தஞ்சை இராஜா சத்திரம் ஒர் இந்து சமய நிறுவனம். இதற்குச் சொந்தமான 33,000 ஏக்கர் நிலங்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் இந்துக்களுக்கு எந்த பயனும் இன்றி வைத்திருப்பதை எதிர்த்து ஏன் உங்கள் துறை நடவடிக்கை எடுக்கவில்லை ?

• கரூர் நகரமும், அதைச் சார்ந்தப் பகுதிகளிலும் உள்ள 850 ஏக்கர் நிலங்கள் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரருக்குச்  சொந்தம். அவற்றை மீட்க 30 வருடங்களுக்கு முன்பு உங்கள்  துறை வழக்கு போடுவதாக பாவலா காட்டிவிட்டு இப்போது வழக்கை கைவிட்டு விடலாம் என்று சொல்லுவது ஏன் ?

• மதுரை நகரில் வண்டியூர் தெப்பக்குளம் அருகில் 50 ஏக்கர்கள் - ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குச் சொந்தமானவை - உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்கு பிறகும் ஏன் மீட்கவில்லை ?

• சிறுமலைப் பகுதியில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலங்களை ஏன்
கையகப் படுத்தவில்லை? 

• அறநிலையத்துறை கைக்குச் செல்லும் முன் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலுக்கு 6300 ஏக்கர்கள் சொந்தம்.
தற்போது 2000க்கும் குறைவான ஏக்கர்களே உள்ளன.

• அதே போல் வடுவூர் ஸ்ரீ இராமர் கோயிலுக்கு இருந்த 5000 ஏக்கர்கள் தற்போது எப்படி 50 ஏக்கர்களாக சுருங்கின?

 12. அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில்  பணத்தை  வெளிப்படையாகக்  கொள்ளை அடித்த காட்சிகள்

• திருவேற்காடு  திருக்கோயில் பணத்தை எடுத்து அறநிலையத்துறை  மந்திரிக்கு ஒரு டோயோட்டா இன்னோவா காரும், அவர் உதவியாளருக்கு மற்றொரு இன்னோவா காரும் வாங்கியுள்ளனர்.

• ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பணத்தில் வாங்கப்பட்ட காரை அமைச்சர் மகன் பயன் படுத்தி வருகிறார்.

• ஏற்கனவே அறநிலையத்துறை ஆணையர் உபயோகத்திற்காக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பணத்தில் கார் வாங்கப் பட்டுள்ளது.

• அமைச்சருக்கு கூடுதல் ஓட்டுநராக ஒருவர் நியமிக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இருந்து அவருக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது.

• மாங்காடு ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் பணத்தில் வாங்கப்பட்ட காரைத்தான் அறநிலையத்துறை ஆணையர் பயன்படுத்துகிறார்.

• அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் காரைப் பயன்படுத்திகிறார்.

• இந்தக் கார்களுக்கானப் பெட்ரோல் டீசல் செலவை கோயிலில் இருந்து மாதந்தோறும் எடுக்கின்றனர்.

• அறநிலையத்துறையின் 10 ஓட்டுனர்கள் மேல் இருக்கின்றனர். இவர்களுள் ஒருவரைத் தவிர மற்றவர் எல்லோரும் கோயில் ஊழியர்கள். கோயில் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளுக்குக் கார் ஓட்டுகின்றனர்.

• சென்னை ஆணையர் அலுவலகத்தில் 12 தட்டச்சு எழுத்தர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கோயில் பணியாளர்கள். கோயில் கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள். புதிதாகச் சங்கம் அமைத்து உங்கள் உரிமைகளுக்கு போராடுகின்றீர்களே?   2 வருடங்கள் ஒருவர் ஒரே இடத்தில் தொடர்ந்து பணி புரிந்தால் அவரை அந்த அலுவலகத்தில் நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற அரசுச் சட்டப்படி அவர்களை அறநிலையத்துறை ஊழியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று உங்கள் சங்கம் சார்பில் போராடுவீர்களா?  இந்தத் தட்டச்சர்களோடு ஸ்ரீ கபாலி கோயில் ஊழியர்கள் இருவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவர் ஆணையர் அலுவலகத்தில் பல வருடங்களாகப் பணி புரிகிறார். ஒருவர் கோட்டையில் அறநிலையத்துறை அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

• திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ சங்கரநாராயணர் கோயில் பணம் ரூ. 80,000/- எடுத்து ஆணையர் அலுவலகத்தில் செராக்ஸ் யந்திரம் வாங்கி உள்ளனர். 

• சென்னையில் மூன்று கோயில்களில் இருந்து பணம் எடுத்து ஆணையர் அலுவலகத்தில் உள்ள தணிக்கைப் பிரிவிற்கு குளிர் சாதன வசதி செய்து கொண்டுள்ளனர்.

• வடபழனி ஸ்ரீ முருகன் கோயில் பணத்தை எடுத்து  ஆணையர் அலுவலகத்தில் கழிப்பறைகள் கட்டியுள்ளனர். திருத்தணி கோயில் பணத்தை எடுத்து ஆணையர் அலுவலகத்தில் கூட்ட அரங்கு, நூலகம், வரவேற்பறை கட்டியுள்ளனர்.

• ஆணையர் அலுவலகத்தில் கணினிகள் வாங்கப் பழனி கோயில் பணம் ரூ.  15.00 லட்சம் அறநிலையத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாக கையாடல் செய்யப்பட்டுள்ளது.

• தஞ்சை இணை ஆணையர் அலுவலகச் செலவிற்காக திங்களூர் என்ற கிராமத்தில் உள்ள கோயில் பணத்தில் இருந்து ரூ. 50,000 கையாடல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் (ஸ்ரீ நாச்சியார் தேவஸ்தானம்) ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயில், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில், மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலஸ்வாமி கோயில், திருவாரூர் ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கோயில் இது போன்ற 45 கோயில்களில் செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததை மாண்புமிகு உச்ச நீதி மன்ற அமர்வு 10.02.1965 தேதி வெளியிட்டத் தீர்ப்பின் மூலம்  தடை செய்துவிட்டது. தற்போது எந்த அதிகாரத்தின் பேரில் அங்கு அறநிலையத்துறை  -  செயல்  அலுவலர்களை வைத்து நிர்வாகம் செய்கிறது என்று உங்களால் காட்ட முடியுமா ?