செவ்வாய், 31 மே, 2022

குழந்தை சித்தர் பகுதி இரண்டு

[ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால் தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார். அது முதற்கொண்டு குழந்தையானந்த சுவாமிகள் என்று அழைக்கப்படலானார்.]

குழந்தையானந்தர் சித்தர்-2
***** **** ****  **** ***  **** ***   **
(இறுதி பகுதி)

இந்த நிலையில் குழந்தையை எங்கே விடுவது? என்று அவர்கள் யோசித்தனர்.  அடுத்த நொடியில் கோயிலுக்குள்ளே இருந்து பலமான மணியோசை கேட்டது.  வாயில் கதவுகள் தானே திறந்து கொண்டன. மூவரும் கோயிலுக்குள் நுழைந்தனர்.  கர்ப்பக் கிருகத்தின் அருகில் மீனாட்சியின் காலடியில் குழந்தையை விட்டாள் திரிபுரசுந்தரி.  ‘’தாயே! நாங்கள் வேண்டிக் கொண்டபடியே இந்தக் குழந்தையை உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டோம்.  இதைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு’’ என்று கண்ணீர் மல்க வேண்டினாள்.

அர்ச்சகர் வரும் வரையில் காத்திருந்து, குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விட்டு வரும்படியாக காத்தவராயனிடம் சொல்லிவிட்டு, பெற்றோர் அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பினர்.  

மாலை நேரத்தில் தினப்படி கோயில் பூஜைக்காக வந்த அர்ச்சகர், கோயில் கதவுகள் விரியத் திறந்து கிடப்பதைப் பார்த்துப் பதறிக்கொண்டே உள்ளே வந்தார்.   அம்மனின் காலடியில் குழந்தை இருப்பதையும்,  குழந்தையுடன் காத்தவராயன் இருப்பதையும் கண்டார். காத்தவராயன் நடந்தவைகளை விவரமாக எடுத்துக் கூறினார்.  கோயிலின் கதவுகளைப் பூட்டிய சாவி தன்னிடம் இருக்கும் போது,  அவைகள் தாமாகத் திறந்து கொண்ட அதிசயம், மதுரை மீனாட்சி அம்மனின் அருளைத் தவிர வேறு எதனால் இருக்க முடியும்? என்று முடிவுக்கு வந்தார் அர்ச்சகர்.  அம்பிகையைத் தொழுதார், இது அம்மனின் குழந்தை என்று சொல்லிவிட்டு,  குழந்தையை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டார்.   அன்று முதல் குழந்தையானந்தர் அந்தக் கோயிலிலேயே அம்மன் குழந்தையாக, அவளது சொந்தப் பிள்ளையாகவே வளர ஆரம்பித்தார்.  

ஒவ்வொரு நாள் மாலையிலும், அர்ச்சகர் தனது கோயில் வேலைகளை முடித்துக் கொண்டு கதவுகளைப் பூட்டிக் கொண்டு கிளம்புவார். குழந்தை அங்கேயே இருக்கும்.  இரவு நேரங்களில் மீனாட்சியம்மன் மனித உருவில் வந்து குழந்தையுடன் கொஞ்சுவாள்.  அவர்கள் இருவரும் பேசும் பேச்சொலியை அர்ச்சகர் பல சமயங்களில் கேட்டிருக்கிறார்.

தெய்வத்தின் குழந்தையாக அவர் வளருகின்ற  காலத்தில், அவருக்கு உபநயனமும் செய்யப்பட்டது. ராஜகோபாலன் என்று தீக்ஷா நாமமும் சூட்டப்பட்டது.  குழந்தை ராஜகோபாலனுக்கு மனிதர்களின் கர்ம விணைகளைப் போக்கும் மகா சக்தி வந்து குவிந்தது.  அவருக்கு பறவைகளைப் போல பறக்கின்ற சக்தியும் கிடைத்தது.  அஷ்டமா சித்துகளில் ஒன்றான லகிமா எனப்படும் சித்தின் துணையினால், அவர் தனது உடலை லேசாக்கிக் கொண்டு, எடையற்ற நிலையில் ஒரு பறவையைப் போலப் பறந்தார்.  அவரது முகத்தைப் பார்த்தாலே கர்ம வினைகள் மறையும். மனதில் குதூகலம் உண்டாகும்.  அமைதி ஏற்படும்.   சிலர் அந்தக் குழந்தை சித்தரின் முகத்தைக் காண்கிற போது, பேரானந்தப் பரவச நிலையை அடைந்துவிட்டனர்.

இறைவன் அவருக்கு நந்தி வித்தையை அருளிச் செய்தான்.  அவர் தன்னிடம் வந்து தங்களது குறைகளை சொல்லி அழுது குமுறும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை, காது கொடுத்து கருணையோடு கேட்பார்.  அவர்களது நெற்றியில் தன்னுடைய விரலை பதிப்பார்.  அடுத்த நொடியில் அவர்களுடைய பிரச்சனைகள் விலகி துயரங்கள் தீர்ந்துவிடும்.

மனஉளைச்சலாலும், உடல் நோய்களினாலும், வறுமையாலும் பீடிக்கப் பட்ட மனிதர்கள் அவரை அனுகி, தங்கள் துன்பங்களைப் போக்கிக் கொண்டனர். குழந்தையானந்த சித்தரின் ஸ்பரிசத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய் நீங்கி குணமடைந்தனர்.  தோல்வி கண்டு துவண்டவர்கள் வெற்றி நடை போட்டனர்.

அவருடைய புகழ் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து பரவ ஆரம்பித்தது. இதைக் கேள்விப்பட்ட மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள்,  என்ன காரணத்தினாலோ, அவளுக்கு குழந்தையானந்தரை பிடிக்கவில்லை.  அவரது புகழையும், மக்களிடம் அவருக்கு உள்ள செல்வாக்கையும் அவள் வெறுத்தாள்.

கர்மவினையின் காரணமாக, அவள் குழந்தையானந்தருக்கு தொல்லைகள் தர ஆரம்பித்தாள்.  பலப்பல சூழ்ச்சிகள் செய்து அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாள்.   அவளுடைய பொறாமைத்தீ காட்டுத் தீ போல பரவியதால்,  என்ன செய்கிறோம் என்பதை அறியாதவளாக, குழந்தையானந்தரின் பெற்றோருக்கு சொல்ல முடியாத துன்பங்களையும்,  வேதனைகளையும் ஏற்படுத்தினாள்.  இதன் உச்சகட்டமாக சித்தரின் தந்தையார் கொலை செய்யப்பட்டார்.

தன் கணவன் கொலையுண்டதைக் கண்ட மனைவி திரிபுர சுந்தரி,  அவருடன் உடன் கட்டை ஏறினாள்.  ஒருவழியாக ராணி மங்கம்மாவின் ஆட்சி முடிந்து, சொக்கநாத நாயக்கர் அரியணை ஏறினார்.  

அந்த சமயத்தில் தென்னகத்தில்(காசி) இருந்து, கணபதி பாபா என்கிற சித்தர் மகான் ஒருவர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார். அம்மனை தரிசித்த சித்தருக்கு, அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கண்ணில் பட்டான்.  அவனுடைய அழகும், தேஜஸும் அவரைப் பெரிதும் கவர்ந்தன.  ஒரு நிமிடம் கண்களை மூடி தியானித்தார்.  உண்மை பளிச்சென்று புரிந்தது.

‘ஒ! இங்கே இருப்பவன் என்னுடைய சீடன் ‘ என்று அம்பாள் மூலம் உணர்ந்து கொண்டார் பாபா.  சிறுவனை தன் அருகில் வரச் சொல்லி அழைத்தார்.

குழந்தையானந்தரும் அவர் அருகில் வந்தார்.  ‘ஐயா! நானும் உங்களைத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.  வாங்க போகலாம்’ என்று அழைத்ததோடு,  பாபாவின் வலது கரத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

பாபா அவருக்கு பல ஆன்ம விசயங்களைப் போதித்தார்.  பலவிதமான ஆன்ம சக்திகளை வழங்கினார்.  குழந்தையானந்தரும்,  பாபாவும் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களுக்கு சேவை செய்தனர்.

வியாதியினால் வாடி வாழ்க்கையைத் தொலைத்த மக்களுக்கு, மருந்தாக இருந்து நோய் நீக்கினர்.  மனதில் ஏற்படும் குழப்பம், பயம், எண்ணற்ற குடும்பச் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றையும் தீர்த்து வைத்து, ஏழைகளின் குடும்பத்திலும், மனங்களிலும் மகிழ்ச்சி விதைகளைத் தூவி இறைப்பணி செய்து வந்தனர்.

தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல்,  அவர்கள் அங்கிருந்து விஜயநகரம் சென்றும் மக்கள் சேவை செய்தனர்.  பிறகு விதர்ப்ப நாடு சென்று, அங்கேயும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தினர்.  அங்கிருந்து காசிக்குச் சென்றனர்.  காசியில் பல அற்புதங்களை நிகழ்த்திய குழந்தையானந்தர் அங்கேயே சமாதி அடைந்தார்.

காசியில் சமாதி நிலை அடைந்த மகா சித்தர் குழந்தையானந்தர், தமிழகத்தில் மீண்டும் அவதரித்து,  திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால்’ அது தான் உண்மை! சிலகாலம் திருவண்ணாமலையில் தங்கி சித்தாடல்களை நிகழ்த்தினார்.  அவரது கருணையினால் மக்கள் குறைகள் நீங்கினர். வளவாழ்வு பெற்றனர்.  நோயிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.  இவ்வாறு மக்களுக்குத் தொண்டு செய்த அந்த அற்புதச் சித்தர் ஒரு நல்ல நாளில் ஜோதி வடிவத்தில் அண்ணாமலையாருடன் கலந்து விட்டார்.  இது இரண்டாவது சமாதி நிலை.

இந்த இரண்டாவது சமாதியிலும் அவர் முழுமையாக அடங்கிவிடவில்லை.  அவர் செய்ய வேண்டிய பணிகள் மீதமிருந்தன போலும்,  எனவே இரண்டாவது சமாதியில் இருந்தும் அவர் மீண்டார். உயிர்த்தெழுந்து காஞ்சிபுரம் சேர்ந்தார்.   

இரண்டு முறை சமாதியிலிருந்து உயிர்த்தெழுந்த அதிசய சித்தர் என்று கேள்விப் பட்டதும், மக்கள் பெரும் ஆர்வத்தோடு அவரை தரிசிக்க வந்தனர்.  பிறவிப்பயனை பெற்றிட அவரது கருணையை யாசித்தனர்.  வேண்டியவர்களுக்கு வேண்டியவற்றை தடையின்றி வழங்கிய வள்ளல் குழந்தையானந்த சித்தர், சில காலம் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்து,  பின் அங்கிருந்து மதுரைக்கும், தென்காசிக்கும் பயணம் செய்தார்.

தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு நன்மைகளை அளித்தார்.  மேன்மைகளை உருவாக்கினார்.  அவரை தரிசித்தவர்கள் தாங்கள் விரும்பியவற்றை அடைந்தனர். பல புதிய திருப்பங்களைப்  பெற்று வாழ்வில் உயர்ந்தனர்.  இந்த நிலையில் தென்காசியில் குழந்தை சித்தர் சமாதி அடைந்தார்.

பிறகு தென்காசி சமாதியில் இருந்து உயிர்த்தெழுந்து, மதுரையை அடுத்த சித்தாலங்குடிக்கு  வந்து பல சித்தாடல்களை நிகழ்த்தி மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு, குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால், தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார்.

1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலகுண்டு சென்றார்.  அங்கு தனக்கு தன் சீடர்கள் மூலம் ஒரு கோயிலை நிர்மானித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். பின்னர்’ அங்கிருந்து வத்தலகுண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்தாலும், சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.



குழந்தை சித்தர் பகுதி ஒன்று

குழந்தையானந்தர் சித்தர்.
--------------------------------------

மதுரையில் அன்னை மீனாட்சியின் தீவிர பக்தர்களாக வாழ்ந்த தம்பதியர் ராமசாமி ஐயரும், அவரது தர்மபத்தினி திரிபுரசுந்தரி அம்மாளும்.  இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை.  அவர்கள் எல்லா விரதங்களும் அனுஷ்டித்தனர்.  கோயில் குளங்களுக்குச் சென்று வந்தனர்.  புண்ணிய தீர்த்தமாடினர். ஆனாலும் திரிபுர சுந்தரிக்கு புத்திர பாக்கியம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அவர்களது பெற்றோரும், உற்றோரும் சொன்னதன் பேரில்,  அவர்கள் அன்னை மதுரை மீனாட்சியை மனமுருகி வேண்டியதோடு, உருக்கமான ஒரு வேண்டுகோளையும் தெரிவித்தனர்.  ‘’அம்மா உனது அருளால் எனக்குக் குழந்தை பாக்கியம் உண்டானால்,  அந்தக் குழந்தையை உன் கோயிலிலேயே விட்டு விடுகிறோம்’’ என்பதுதான்  அந்த விநோதமான வேண்டுதல்.

இப்படி இவர்கள் வேண்டிக் கொண்டு கோயிலில் இருந்து வீடு திரும்பிய போது, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.  அவர்களது வீட்டில் அழகான இரண்டு ஆண் குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த இரண்டு அழகான குழந்தைகளும் தம்பதியரைப் பார்த்ததும், ‘’இந்தப் பொம்மைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறோம்’’ என்று சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டனர்.

அவர்கள் இருவரும் தாங்கள் காண்பது கனவா? அல்லது நனவா? என்பதே விளங்கவில்லை.  மிக அழகான அந்த இரண்டு குழந்தைகள் யார்?  அவர்கள் யார் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்?,  சுற்றுப் பக்கத்து வீடுகளில் இதுவரையில் அந்தக் குழந்தைகளை தாங்கள் பார்த்தது இல்லையே?  என்று இது போன்ற ஏராளமான கேள்விகளை தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

திரிபுரசுந்தரி குழந்தைகள் கொடுத்த பொம்மைகளை திருப்பிப் பார்த்தார்,  அவருக்கு ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டது.  காரணம் அந்தப் பொம்மையின் அடிப்பாதங்களில் சங்கும் சக்கரமும் வரையப்பட்டு இருந்தது.  அதை அவர் சந்தோஷத்தோடு தனது கணவரிடம் காண்பித்தார்.

‘’ஆஹா!, அம்பாள் கண் திறந்து அனுக்கிரகம் செய்துவிட்டாள்.  நமக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கப் போகிறது.  அதில் ஒரு குழந்தையின் கால்களில் சங்கு, சக்கர ரேகைகள் இருக்கும்,  அதைத்தான் இந்தப் பொம்மை உணர்த்துகிறது.  உடனே இதை பூஜை அறையில் கொண்டு போய் வைத்துக் கொள்’’ என்றார்.

கணவரின் வார்த்தைகளினாலும், நடந்த அதிசயமான நிகழ்ச்சிகளினாலும் பிரமித்துப்போன திரிபுரசுந்தரி பரபரப்பாகிவிட்டார். உடனே லலிதா  சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை முனுமுனுத்தபடி அந்த மரப்பாச்சி பொம்மைகளை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து,  வீட்டில் இருந்த பொரியை நைவேத்தியம் செய்தாள்.

சற்று நேரத்தில், முன்பு வந்த குழந்தைகள் இரண்டு பேரும் தன் வீட்டு வாசலில் வந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சியோடு அவர்களை உள்ளே வரச்சொல்லி அழைத்தாள்.  அவர்கள் இரண்டு பேரும்,  ‘’அந்தப் பொம்மையைக் கொடுங்கள்,  எங்களுக்கு நேரமாகிறது. நாங்கள் போக வேண்டும்’’ என்று ஒரே தொனியில் பரபரப்போடு கேட்டனர்.

இது என்ன? இந்தக் குழந்தைகள் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் வந்து பொம்மைகளை கொடுத்துவிட்டு, இப்போது கேட்கிறார்களே?  ஓ அதுதான் குழந்தை குணம் என்பது என்று நினைத்துக் கொண்டே,  ‘’கொஞ்சம் இருங்கள்,  பூசை அறையிலே வெச்சிருக்கேன்,  கொண்டு வந்து தரேன்’’என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்த திரிபுரசுந்தரி திடுக்கிட்டுப் போனார். காரணம் சற்று நேரத்துக்கு முன்னால் அங்கே வைத்து பொரி நைவேத்தியம் செய்த போது இருந்த இரண்டு பொம்மைகளும் இப்போது காணவில்லை.  அவைகள் மாயமாக மறைந்து விட்டிருந்தன.  குழந்தைகளிடம் வந்து பொம்மை காணவில்லை என்று எப்படி சொல்லுவது? அவர்கள் தான் திருடிவிட்டதாக எண்ண மாட்டார்களா? ஐயோ ஜகதாம்பிகே, இது என்ன சோதனை என்று மனதுக்குள் உருகியபடி கண்களை மூடி உட்கார்ந்தாள்.  மதுரை மீனாட்சியை மனமுருகி வேண்டினாள்.

அடுத்த நொடியில் அவள் அருகே அந்த இரண்டு பொம்மைகளும் வந்தன.  மிகவும் மகிழ்ச்சியோடு அவைகளை கையில் எடுத்தாள்.  அந்தப் பொம்மைகளில் இருந்து தெய்வீக மணம் வீசியது.  இதுநாள் வரையில் அதுபோன்ற வாசனையை அவள் அனுபவித்ததே இல்லை.  அது இந்த உலகத்தின் வாசனையே அல்ல என்பது திரிபுரசுந்தரிக்குப் புரிந்தது.

அடுத்தடுத்து நடக்கும் ஆச்சரியத்தினால் உணர்ச்சிக் கொந்தளிப்பில்  இருந்த அவள்,  கையில் பொம்மைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.  அங்கே இதுவரையில் குழந்தைகளின் பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்து.  இப்போது சட்டென்று அமைதி ஏற்பட்டு விட்டது.  கூடத்தில் நின்ற குழந்தைகளைக் காணவில்லை.

திரிபுரசுந்தரி தன் கணவனை அழைத்து,  குழந்தைகள் எங்கே? என்று கேட்டாள்.  அவர் அங்கு வருகின்ற நேரத்தில் அதிசயப்படும் விதமாக அவள் கையில் இருந்த பொம்மைகளும் திடீரென்று காற்றில் மறைந்துவிட்டது  ஆனால்’ அந்தத் தெய்வீக மணம் மட்டும் பொம்மைகள் இருந்தது உண்மைதான்,  நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் உண்மைதான் என்று சொல்வதைப் போல சாட்சியமாக கூடத்தில் சுற்றி வந்தது.

மூச்சு வாங்க நடந்தவைகளை தன் கணவனிடம் சொல்லி முடித்தாள் திரிபுரசுந்தரி.

அதைக் கேட்ட ராமசாமி ஐயர், ‘’நம் வீட்டுக்கு வந்திருந்த குழந்தைகள் வேறு யாருமல்ல,  சாட்சாத் மீனாட்சி அம்மனும்,  சோமசுந்தரப் பெருமானும் தான்.  அவர்கள் உன் வயிற்றில் உருவாகப் போகும் ஒரு சக்தி மிக்க பேரொளியைப் பற்றிச் சொல்வதற்காக மானுட வடிவத்தில் குழந்தைகளாக வந்திருக்கிறார்கள்.  பயம் வேண்டாம்,  சந்தோஷமாக இரு’’ என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் சென்று அம்மனின் சிலைக்கு முன்பாக அமர்ந்து மனமுருகி வேண்ட ஆரம்பித்தார்.    

இந்த அதிசய நிகழ்ச்சி நடந்த பிறகு, இறைவியின் கட்டளைப்படியே கி.பி 1607 ஆம் வருடம், புஷ்ய மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் திரிபுரசுந்தரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  அவர் தான் குழந்தையானந்த சித்தர்.  

அடுத்த நொடியில் அந்த இடத்தில் உலகையே மயக்கும் விதமாக மிக அற்புதமான வாசனை வீசுவதை மருத்துவப் பெண்களும்,  உறவினர்களும்,  ராமசாமி ஐயரும் உணர்ந்தனர். தெய்வக் குழந்தையான குழந்தையானந்தா சுயம்புவாக அவதாரம் செய்தார் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.  தெய்வீக வாசனையின் காரணமாக தன்னிலை மறந்த அனைவரும் சுயநினைவு அடைந்த போது, அந்தக் குழந்தைக்குப் பக்கத்தில் மற்றொரு குழந்தையும் இருப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்தனர்.

இரண்டு மரப்பாச்சி பொம்மைகளை இரண்டு குழந்தைகள் வந்து கொடுத்தனர் அல்லவா?  அதனால் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை அறிந்த தம்பதியர் பெருமகிழ்ச்சி கொண்டனர்.  இரண்டு குழந்தைகளில் குழந்தையானந்த சித்தரின் பாதங்களில் மட்டும் சங்கு சக்கர ரேகைகள் இருப்பதைப் பெற்றோரும், மற்றோரும் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்து மகிழ்ந்தனர்.

குழந்தையானந்தருக்கு ராமன் என்று பெயர் வைத்தனர்.  மற்றொரு குழந்தைக்கு லட்சுமணன் என்று பெயரிட்டு அழைத்தனர்.  தெய்வீகக் குழந்தையான சித்தரின் சிரிப்பு காண்பவர் அத்தனை பேரையும் மயக்கியது.  அவருடைய சிரிப்பில் மகிழாதவர்களே இல்லை என்றே சொல்லலாம்.  மற்றவர்களுக்கே இத்தனை மகிழ்ச்சியும்,  பூரிப்பும் இருக்குமானால், பெற்றவர்களின் ஆனந்தத்தை வார்த்தைகளினால் விளக்க முடியுமா?

அவர்கள் இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் அளவேயில்லை.  ஆனாலும், அவர்களுடைய மனத்தில் துயரத்தின் ரேகைகள் மிக அழுத்தமாக விழுந்தன.  காரணம் குழந்தை பிறந்த பத்தாவது நாள் மதுரை மீனாட்சியம்மனிடம் அவனை விட்டு விடுவதாக வேண்டிக் கொண்டிருந்தனர் அல்லவா?  அந்த வேண்டுதல் நினைவுக்கு வந்தவுடன் அவர்களுடைய மகிழ்ச்சியும்,  பூரிப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.  மனத்தை சோகமயமான மேகங்கள் சூழ்ந்து கொண்டன.

குழந்தை பிறக்கும்  வரையில் பிறந்தால் போதும்,  அதைப் பார்த்துவிட்டு கோயிலுக்கே நேர்ந்து விட்டு விடலாம் என்று தோன்றியது.  ஆனால்’ இப்போது குழந்தை பிறந்ததும், அதை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் துடித்தாள் திரிபுரசுந்தரி.  அவளது நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமையில் இருந்தது.  வேண்டுதலை நிறைவேற்றாமல் இருக்கவும் கூடாது,  குழந்தையைப் பிரியவும் கூடாது,  இது எப்படி சாத்தியம்?  பெற்ற தாயின் துயரம் யாராலும் போக்க முடியாததாக இருந்தது.  இந்த நிலையில் ராமசாமி ஐயர் ஒரு முடிவுக்கு வந்தார்.    

இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன.  தாங்கள் வேண்டிக் கொண்டபடி குழந்தையானந்த சித்தரை கோயிலில் விட்டு விடலாம்.  ஒரு குழந்தை தங்களிடம் வளரட்டும் என்று தீர்மானம் செய்தார்.  இதன்படிச் செய்தால் நேர்த்திக் கடனையும் நிறைவேற்றிய திருப்தி கிடைக்கும்,  ஒரு குழந்தையும் பெற்றோரிடம் வளரும் என்று அவர் எண்ணமிட்டார்.  இதைச் செயல்படுத்த அவர் காத்தவராயன் என்பவரோடு மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது’ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் கோயில் கதவு சாத்தப்பட்டு விட்டது.  பூஜைகள் முடிந்து அர்ச்சகர் கோயிலை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டிருந்தார்.

தொடரும்,.....


புதன், 18 மே, 2022

படித்ததில் பிடித்தது

நாம் பார்த்தது பிடித்தது அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது பனையபுரம் கோவிலில் உள்ளது என பகிர்ந்துள்ளேன் !
இது எண்ணிக்கூட்டும் கூட்டுத்தொகை அல்ல...
ஒன்று பூமியின் இரு பெரும் சக்தி

இரண்டு சூரியன் சந்திரன்

மூன்று முப்பெரும் தெய்வங்கள் பிர, ஹரி, சிவன் ஆக்கல் காத்தல் அழித்தல்

நான்கு நால்திசையும் அதனுள் அடக்கம்
நாலு சொன்ன வார்த்தைகளை பின்பற்று

ஏழ்பிறப்பும் இறைவன் படைப்பு
5 பஞ்சபூதங்கள் இன்று உலகம் இயங்காது
9
நம்மை உயர்த்துவது சோதிப்பதும் அண்டங்களிலுள்ள ஒன்பது கோள்கள்
6
கலியுககாலத்தில்
கவலை மாற்றி கருணை புரிய
சக்தியும் சிவனும் வேல் கொண்ட அய்யன் ஆறுமுகன் அருளால் அனைவரும் சுபமே
8
என்திசையும் ஈசன் அருளால் கருணைக்கு
திசை எட்டு

1
சக்திகள் ஒன்றாகி சகல உலகிற்கு மூலமே ஆதி சக்தி. அவளே ஓம்சக்தி

இதன்குறிப்புதான் பெரியோர்கள் தருவது

இதை உணர்ந்தவர்களே
18
சித்தர்கள்
இது ஒரு Vedic maths என்று இன்று சொல்வார்கள் ஆனால் அந்த காலம் , அந்த சித்தர்கள் அவர்கள் படித்து உணர்ந்தது , இறைவன் அவர்களுக்கு குருவாக இருந்து கற்று கொடுத்தது !
எல்லாம் காரணமின்றி காவியங்கள் இருக்காது நல்லவர்களே

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம்

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநே ச ஜனார்தனம்  

சயனே பத்மநாபஞ்ச விவாஹே ச பிரஜாபதிம்.

யுத்தே சக்தரம்தேவம்  ப்ரவாஹே ச த்ரிவிக்ரமம்
நாராயணம் தனுத்யாகே ஸ்ரீதரம ப்ரியசங்கமே.
துஸ்வப்னே ஸ்மரகோவிந்தம் ஸங்கடே மதுஸூதனம்
காநரே நாரசிம்ஹஞ்ச பாவகே ஜலசாயினம் .

ஜலமத்யே வராஹஞ்ச பர்வதே ரகுநந்தனம்
கமனே வாமனஞ்சைவ ஸர்வகாலேஷு மாதவம்.

ஷோடசை தானி நாமானி ப்ராத ருத்தாய யஹ் படேத்
ஸர்வாபாப விநிர்முக்தோ விஷ்ணுலோகே மஹீயதே... !!!

பஞ்சாரணியத் தலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்

ஒன்று : பஞ்ச பூத தலங்கள்

1. திருஆரூா் - பிருதிவி {நிலம்}

2. திருஆனைக்கா - அப்பு {நீா்}

3. திருஅண்ணாமலை - தேயு {தீ}

4. திருக்காளத்தி - வாயு {வளி}

5. சிதம்பரம் - ஆகாயம் {விண்}
 ----------‐---------------------------------------------------------

இரணடு : பஞ்ச சபைகள்

1. திருவாலங்காடு - இரத்தினசபை

2. சிதம்பரம் - கனகசபை {பொன்னம்பலம்}

3. மதுரை - ரஜத சபை {வெள்ளியல்பலம்}

4. திருநெல்வேலி - தாமிரசபை

5.திருக்குற்றாலம் - சித்திரசபை
 ----------‐---------------------------------------------------------

மூன்று : சோழநாட்டுப் பஞ்சாரணியத் தலங்கள் ஒரே நாளில் தாிசிக்க வேண்டியவை

1. முல்லைவனம் - திருக்கருகாவூா் - {உஷக்காலதாிசனம்}


2. பாதிாிவனம் - திருஅவளிவநல்லூா் - {காலசந்தி தாிசனம்}


3. வன்னிவனம் - திருஅரதைபெரும்பாழி அாித்துவாரமங்கலம்.
{உச்சிகால தாிசனம்}

4. பூளைவனம் - திருஇரும்பூளை ஆலங்குடி {சாயரட்சை தாிசனம்}

5. வில்வவனம் - திருக்கொள்ளம்பூதூா் {அா்த்தசாம தாிசனம்}
 ----------‐---------------------------------------------------------

நான்கு : தொண்டை நாட்டுப் பஞ்சாரணியத் தலங்கள்

1. பதாி காரணியம் {இலந்தைக்காடு} - திருவெண்பாக்கம்

2. வம்சாரணியம் {மூங்கிற்காடு} -
திருப்பாசூா்

3. வடவாரணியம் {ஆலங்காடு}
திருவாலங்காடு

4. வீகஷாரணியம் {ஈக்காடு} திருவெவ்வுளூா்.

5. நைமிசாரணியம் {தருப்பை} கூவம் திருவிற்கோலம்.
 ----------‐---------------------------------------------------------

ஐந்த : புலியூா் என அழைக்கப்படும் தலங்கள் ஐந்து {வியாக்கிரபாதாிஷி பூஜித்த தலங்கள்}

1. பெரும்பற்றப்புலியூா் - சிதம்பரம்

2. திருப்பாதிாிப்புலியூா் - கடலூா்

3. ஓமாம் புலியூா்

4. எருக்கத்தம் புலியூா் (ராஜேந்திரபட்டினம்)

5. பெரும்புலியூா்

----------‐---------------------------------------------------------

தீபத்தின் மகிமை



நெய் விளக்கில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? கலைமகள், திருமகள், மலைமகள்... தீபத்தின் மகிமை!

🔥 நாம் இறைவனை வழிபடும் வேளைகளில் தீப வழிபாடு என்பது ஒரு முக்கிய பங்காக உள்ளது. வீட்டு பூஜை அறைகள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

🔥 நோய் தொற்றுகளை பரவ விடாமல் தடுக்கும் சக்தி, சில எண்ணெய் வகைகளுக்கும், தீபத்திற்கும் உண்டு. அதனால்தான் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

🔥 அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து அமர்கிறாள். தீபத்தின் சுடரில் திருமகளான லட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம்.

🔥 ஆகவே வீட்டில் காலையும், மாலையும் ஏற்றி வைக்கும் தீபத்தில், முப்பெருந்தேவியரும் எழுந்தருளி கடாட்சம் தருவதாக நம்பிக்கை.

🔥 இல்லங்களில், தினமும் பிரம்மமுகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவது விசேஷம்.

🔥 அதேபோல், மாலையில் 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். இந்த நேரமே பிரதோஷ வேளை ஆகும்.

🔥 நெய் அல்லது எண்ணெயை விளக்கில் பயன்படுத்தும்போது பூரணமாக, அதாவது வழிய வழிய ஊற்றி, பிறகு திரியை வைத்து ஏற்ற வேண்டும்.

🔥 குறிப்பாக, இரண்டு திரிகளை ஒன்றாக்கி விளக்கேற்றுவது மிகவும் விசேஷம். கணவன் ஒரு திரி, மனைவி மற்றொரு திரி. இப்படி இரண்டு திரிகளை இணைத்து விளக்கேற்றினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது உறுதி.

நெய்விளக்கு ஏற்றுதலும்... அதன் பலன்களும்...

🔥 நாம் கோவிலுக்கு சென்று இறைவனிடம் நம் வேண்டுதல்களை வைப்பதோடு விளக்கேற்றியும் வழிபடுகிறோம்.

🔥 அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். இதனால் நாம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும்.

*எண்ணிக்கையின் பலன்கள் :*

🔥 5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வியும், ஞானமும் பெறலாம்.

🔥 9 நெய் விளக்கு ஏற்றினால் நவகிரக தோஷம் நீங்கும்.

🔥 12 நெய் விளக்கு ஏற்றினால் வேலையில் ஏற்பட்ட தடைகள் நீங்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும்.

🔥 18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் நீங்கும்.

🔥 27 நெய் விளக்கு ஏற்றினால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🔥 36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும்.

🔥 48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

🔥 108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கடாட்சத்தை முழுமையாக பெறலாம்.


பஞ்சநத கல்லில் செய்த நடராஜர்

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (ஊட்டத்தூர்) என்ற ஸ்லத்தில் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட அபூர்வ நடராஜ பெருமான் திருமேனி உள்ளது.
 


பஞ்சநத கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது. ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது. சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும். அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிப்பது அழகு! சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில்... இரவு ஊற வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது!

அவ்வை பாடிய விநாயகர் அகவல்

 


சமயக்குரவர்கள் எனப்படும் நால்வரின் முக்கியமானவர், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் சிவபெருமானின் உற்ற தோழனாகவும் இருந்தவர். இவருக்காக சிவபெருமானே வீதியில் இறங்கி நடந்து தூது சென்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. சுந்தரமூர்த்தி சுவாமிகள், தான் இந்த பூவுலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறியதை அடுத்து, கயிலாயம் செல்ல இறைவனால் பணிக்கப்பட்டார். அவரை ஏற்றிச் செல்வதற்காக, கயிலாயத்தில் இருந்து வெள்ளை யானை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், கயிலாயம் புறப்பட்டார்.


அப்போது அங்கு இருந்த நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமான், தானும் கயிலாயம் செல்ல வேண்டும் என்று மனம் உந்தினார். இதனால் தன்னுடைய குதிரை மீது ஏறி, அதன் காதில் பஞ்சாட்சர (நமசிவாய) மந்திரத்தை உச்சரித்தார். உடனே, அந்தக் குதிரை விண்ணில் பறக்கத் தொடங்கியது. இதையடுத்து தனது நண்பரான சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் இணைந்து சேரமான் பெருமானும், திருக்கயிலாயம் நோக்கிச் சென்றார்.

அதனை அறிந்துகொண்ட அவ்வையார், தானும் சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு சேர்ந்து கயிலாயம் செல்ல நினைத்தார். இதற்காக அவர் அப்போது செய்து கொண்டிருந்த விநாயர் பூஜையை அவசரம் அவசரமாக செய்தார். அப்போது அங்கு தோன்றிய விநாயகர், “அவ்வையே.. நீ என்னுடைய பூஜையை எந்த அவசரமும் இன்றி செய். சுந்தரருக்கு முன்பாகவே உன்னைக் கொண்டு போய் கயிலாயத்தில் சேர்ப்பது என் பொறுப்பு” என்றார்.

இதையடுத்து அவ்வையார், ‘சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப்..’ என்று தொடங்கும் விநாயகர் அகவலைப் பாடினார். 72 அடிகள் கொண்ட இந்தப் பாடலை பாடி முடித்து, விநாயகருக்கு உண்டான அனைத்து பூஜைகளையும் அவ்வையார் செய்து முடித்தார்.

அதன்பின்பு, தான் கொடுத்த வாக்குப்படி, விநாயகர் அவ்வையாரை தன்னுடைய துதிக்கையால் தூக்கி, கயிலாயத்தில் சேர்ப்பித்தார். அவர் சென்றடைந்த பிறகே, சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலாயம் வந்து சேர்ந்தனர்.

அவ்வையார் பாடிய விநாயகர் அகவல், விநாயகரை வழிபடும் துதிப்பாடல்களில் முக்கியமானதாக விளங்குகிறது. இந்தப் பாடலில் விநாயகரின் பெருமையும், அழகும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அகவலைப் பாடி, விநாயகரை வழிபாடு செய்பவர்களுக்கு, வாழ்வில் சலக வளங்களும் கிடைக்கப்பெறும்.

பலன்களை அள்ளித்தரும் சுதர்சன கவசம்

கனக ரஹித சக்கரம் பாசூரா ரம்ய சக்கரம்


கிரிவர குரு சக்கரம் கேசவ ஸ்வாமி சக்கரம்

அசுர நிதன சக்கரம் கால தண்டாகினி சக்கரம்

பவது பவது சக்கரம் பந்தாவோ விஷ்ணு சக்கரம்

இப்படி பெருமாள் கையில் இருக்கக் கூடிய சக்கரத்திற்கு பல விதமான மந்திரங்கள் உள்ளன.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கையில் உள்ள சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கான மந்திரத்தை ஒருவர் ஜெபித்தால் எண்ணற்ற பலன்களை பெறுவதோடு எத்தகைய தீய சக்தியாக இருந்தாலும் அதில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஆற்றல் பெறுவார். இப்படி பல அற்புதங்கள் நிறைந்த சுதர்சன கவசம் ஆன்மீக பலன் வாசகர்களுக்காக கீழே கொடுத்துள்ளோம்.மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்த மந்திரத்தை சூரிய கிரகணத்தன்றோ அல்லது சந்திர கிரகணத்தன்றோ விளக்கேற்றிவைத்து 1008 முறை ஜபித்தால் சித்தியாகும்.

நாள் தோறும் இந்த கவசத்தை படித்து வந்தால் நமக்கு எத்தகைய இடையூறுகள் வந்தாலும் தீங்கை விளைவிக்காது. அதோடு எந்த வித தீய சக்தியும் நெருங்க விடாமல் இது கவசம் நம்மை காக்கும் என்று நம்பப்படுகிறது இந்த கவசத்தை சொல்பவர்கள் அன்றைய தினம் கட்டாயம் அசைவ உணவை உண்ணக்கூடாது. அதோடு இல்லத்தையும், மனத்தையும் சுத்தமாக வைத்து இந்த கவசத்தை படிக்க வேண்டும். இதை எல்லாம் மீறி, இது ஒரு சாதாரண கவசம் தானே என்று நினைத்து சுத்தமில்லாமல் இந்த மந்திரத்தை ஜெபித்தால் நமக்கு தீய செயல்கள் ஏற்படும்.

ஸ்ரீசுதர்சன கவசம்

ப்ரஸீத பகவந் ப்ரஹ்மந் ஸர்வமந்த்ரஜ்ஞ நாரத |

ஸௌதர்ஸநம் து கவசம் பவித்ரம் ப்ரூஹி தத்வத்: ||

நாரத:-

ஸ்ருணுஷ்வேஹ த்விஜஸ்ரேஷ்ட பவித்ரம் பரமாத்புதம் |

ஸௌதர்ஸநம் து கவசம் த்ருஷ்டாத்ருஷ்டார்த்த ஸாதகம் ||

கவசஸ்யாஸ்ய ருஷிர் ப்ரஹ்மா சந்தோநுஷ்டுப் ததா ஸ்ம்ருதம் |

ஸுதர்ஸந மஹாவிஷ்ணுர் தேவதா ஸம்ப்ரசஷதே ||

ஹ்ராம் பீஜம் ஸக்தி ரத்ரோக்தா ஹ்ரீம் க்ரோம் கீலகமிஷ்யதே |

ஸிர: ஸுதர்ஸந: பாது லலாடம் சக்ரநாயக: ||

க்ராணம் பாது மஹாதைத்ய ரிபுரவ்யாத் த்ருஸௌ மம |

ஸஹஸ்ரார: ஸ்ருதிம் பாது கபோலம் தேவவல்லப: ||

விஸ்வாத்மா பாது மே வக்த்ரம் ஜிஹ்வாம் வித்யாமயோ ஹரி: |

கண்ட்டம் பாது மஹாஜ்வால: ஸ்கந்தௌ திவ்யாயுதேஸ்வர: ||

புஜௌ மே பாது விஜயீ கரௌ கைடபநாஸந: |

ஷட்கோண ஸம்ஸ்த்தித: பாது ஹ்ருதயம் தாம மாமகம் ||

மத்யம் பாது மஹாவீர்ய: த்ரிணேத்ரோ நாபிமண்டலம் |

ஸர்வாயுதமய: பாது கடிம் ஸ்ரோணிம் மஹாத்யுதி: ||

ஸோமஸூர்யாக்நி நயந: ஊரு பாது ச மாமகௌ |

குஹ்யம் பாது மஹாமாய: ஜாநுநீ து ஜகத்பதி: ||

ஜங்கே பாது மமாஜஸ்ரம் அஹிர்புத்ந்ய: ஸுபூஜித: |

குல்பௌ பாது விஸுத்தாத்மா பாதௌ பரபுரஞ்ஜய: ||

ஸகலாயுத ஸம்பூர்ம: நிகிலாங்கம் ஸுதர்ஸந |

ய இதம் கவசம் திவ்யம் பரமாநந்த தாயிநம் ||

ஸௌதர்ஸந மிதம் யோ வை ஸதா ஸுத்த: படேந் நர: |

தஸ்ர்த்த ஸித்திர் விபுலா கரஸ்தா பவதி த்ருவம் ||

கூஸ்மாண்ட சண்ட பூதாத்யா: யேச துஷ்டா: க்ரஹா ஸ்ம்ருதா: |

பலாயந்தேsநிஸம் பீதா: வர்மணோஸ்ய ப்ரபாவத: ||

குஷ்டாபஸ்மார குல்மாத்யா: வ்யாதய: கர்மஹேதுகா: |

நஸ்யந்த்யேதந் மந்த்ரிதாம்பு பாநாத் ஸப்த திநாவதி ||

அநே ந மந்த்ரிதாம் ம்ருத்ஸ்நாம் துலஸீமூல ஸம்ஸ்த்திதாம் |

லலாடே திலகம் க்ருத்வா மோஹயேத் த்ரிஜகந் நர: ||

இதி ஸ்ரீப்ருகுஸம்ஹிதோக்த ஸ்ரீஸுதர்ஸந

கவசம் ஸம்பூர்ணம் ||

அனுஷா🙏🌹


விலங்குகள் வழிபட்ட சிவ தலங்கள்

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் தங்கள் பிறவியின் பலனை அடைவதற்காக இறைவனை வழிபட்டு வந்ததாக புராணங்களும், பல கோவில் வரலாறுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.


சிவபெருமானை, புலி வழிபட்ட தலம், திருப்புலிவனம். காஞ்சிபுரம், உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருத்தலத்தில் திருப்புலிவன முடையார் என்ற பெயரில் இறைவன் அருள்கிறார். சாபத்தால் புலியாக மாறிய முனிவர் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார்.

சிவபெருமானை, பசு வழிபட்ட தலங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்று சங்கரன்கோவில். திருநெல்வேலி அருகில் உள்ள இந்த திருத்தலத்தில் தேவர்கள் சூழ, இறைவனை அம்பாள் வழிபாடு செய்திருக்கிறாள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’ என்று பொருள். எனவே பசு வழிபட்ட இந்த ஆலயத்தில் உள்ள இறைவி ‘கோமதி’ என்று பெயர் பெற்றிருக்கிறாள்.

சிலந்தி மற்றும் யானை சிவபெருமானை வழிபட்ட தலம், திருவானைக்காவல். திருச்சியில் காவிரி ஆற்றுக்கும் - கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள தலம் இது. இங்கு சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் இருந்தது. சிவலிங்கத்தின் மேல் வலை பின்னிய சிலந்தி, அதன் மூலம் வெயில், மழை, மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தில் விழாமல் தடுத்தது. யானை தன் துதிக்கை மூலம் காவிரி ஆற்றில் நீரும், பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை, சிலந்தி பின்னிய வலையை அழித்துவிட்டு செல்லும். சிலந்தி மீண்டும் வலை பின்னி வழிபாட்டை தொடரும். யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி, அதன் துதிக்கையில் நுழைய இரண்டும் மடிந்தன. இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவன், யானையை சிவகணங்களுக்கு தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாக பிறந்தார்.

எறும்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம், திருவெறும்பூர். அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் உள்ள பிரசாதத்தை எறும்புகள் எடுத்துக்கொள்வதை இன்றும் காணலாம்.

ஈ - வடிவில் அகத்திய முனிவர், சிவனை வழிபட்ட தலம் , திருஈங்கோய்மலை. திருச்சி மாவட்டம், தொட்டியம்- முசிறி செல்லும் வழியில் இந்த திருத்தலம் இருக்கிறது.

பாம்புகள், சிவபெருமானை வழிபட்ட தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்து சிவனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டுள்ளது.

அணில், குரங்கு, காகம் ஆகிய மூன்று ஈசனை வழிபட்ட தலம் ‘குரங்கணில்மூட்டம்.’ சாபத்தால் காகமாக மாறிய எமனும், அணிலாக மாறிய இந்திரனும், குரங்காக மாறிய வாலியும், இங்குள்ள சிவனை வழிபட்டிருக்கிறார்கள். இத்தலம் காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூர் என்னும் இடத்தில் உள்ளது.

மயில், சிவபெருமானை வழிபட்ட தலம் மயிலாடுதுறை. சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை, சிவனை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

கழுகு, சிவபெருமானை வழிபட்ட தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் கழுகுகள் சிவபெருமானை பூஜித்து வருவதாக சொல்லப்படுகிறது.

வண்டு, சிவபெருமானை பூஜித்த தலம் திருவண்டுதுறை. திருவாரூர் மாவட்டம், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்தார். இன்றும் இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலியை கேட்க முடியும்.

நண்டு, சிவபெருமானை வழிபட்ட தலம், திருந்துதேவன்குடி. சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன், இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றான். இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.

சக்கரவாகப் பறவை, சிவபெருமானை பூஜித்த தலம் திருச்சக்கராப்பள்ளி. தஞ்சாவூர் மாவட்டம், திருச்சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோவில் இது.

யானை, சிவனை பூஜித்த தலம், திருக்கொட்டாரம். துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது.

ஆமை, சிவபெருமானை பூஜித்த தலம் திருக்கச்சூர். இங்குள்ள சிவனை வழிபட்டுதான், மந்தார மலையை தாங்கும் சக்தியை திருமால் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

கிளி வழிபட்ட தலம், சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில். கிளியாக மாறிய சுக முனிவர் வழிபட்ட சிவ பெருமான் இங்கு வீற்றிருந்து அருள்கிறார்.

சிட்டுக்குருவி சிவனை பூஜித்த தலம், வட குரங்காடுதுறை. தன்னை வழிபட்ட சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்துள்ளார் இத்தல ஈசன். அதனால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார்.

நவபாஷண பைரவர்

சித்தர்கள் வணங்கும் நவபாஷாண பைரவர் !

சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்.
பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி, சிவகங்கை மாவட்டம்.

இந்த சிலையின் சக்தியை தாங்கும் ஆற்றல் கலியுக மனிதர்களுக்கு இல்லை 🕊️

சுமார் 12000 வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர்.

இவர் காசி ஷேத்திரத்தில் இருந்து இங்கு வந்தவர் என்று கூறுகின்றனர்.

இவரின் சக்தி தற்போதும் மிக மிக அதிகமாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாற்றப்படும் வடை மாலை பிரசாதமாக தருவதில்லை..

அந்த வடை மாலை கோவில் மேல் போட்டு விடுவார்கள் பறவைகளும் அதை தொடுவதில்லை இவரின் அதிர்வுகள் மிகவும் அதிகமாக உள்ளது ..

பழனி முருகர் சிலா ரூபம் செய்வதற்கு முன்பே இதை செய்ததாக செவி வழி செய்தி உண்டு.. வரலாறு சரியாக தெரியவில்லை..

இவருக்கு இரண்டு முகங்கள் உண்டு.. பின்புற முகத்தை காண முடியாது அந்த முகத்தால் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம்..

இவருக்கு வன்னி இலைகளில் பூஜைகள் நடை பெறுகிறது என்பது சிறப்பு.

மிகவும் அபூர்வ சக்தி படைத்த இந்த பைரவர் கண்டராமாணிக்கம் ஸ்ரீ சுகந்தவனேஸ்வரர் என்ற கோவிலில் ஆண்டபிள்ளை நாயனார் என்ற பெயரில் வீற்றிருக்கிறார்.

இவரை வழிபட வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் மிகவும் அவசியம்.

சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரி தோஷம், சகல பாப நிவர்த்தி, நீண்டகால நோய்கள் நிவர்த்தி, அஷ்டமா சித்தி அளிக்க கூடியவர் அதற்கு சாட்சியாக அருகில் பட்டமங்கலம் என்ற இடத்தில் அஷ்டமா சித்தி பொய்கை உள்ளது மிகவும் அதிசயம்.

அனைவரும் இவரை வழிபட்டு சகல பாப விமோசனம் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும்.

அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்.
பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி, சிவகங்கை மாவட்டம்.


செவ்வாய், 17 மே, 2022

ஸ்ரீதேவியார்

ஸ்ரீதேதியூர் பெரியவா அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் ஸ்ரீகாயத்ரீ மகிமை

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் அவர்கள் மனைவியுடன் ரயிலில் பயணிக்கும் போது ஸந்த்யாகாலத்தில் ரயில் மாயவரம் ஸ்டேஷன் அடைந்தது.
சாஸ்திரிகளும் ஸந்த்யாவந்தனம் செய்ய ரயிலை விட்டு இறங்கி ஸ்தலசுத்தி செய்து விபூதி இட்டுக்கொண்டு அனுஷ்டானத்தை தொடங்கி காயத்ரி ஜபம் செய்ய தொடங்கினார். ஜபத்தில் லயித்த சாஸ்திரிகள் சூழ்நிலையை மறந்தார்!  
ரயில் கிளம்பும் நேரம் ஆனதும்  கார்டு பச்சைக்கொடி காட்ட  டிரைவர் ரயிலை ஓட்ட  தயாரானார். விசிலும் அடித்தார்.
இதற்குள் ரயில் புறப்படும் நேரம் இது நீங்கள் உங்கள் கணவரின் ஜபத்தை சீக்ரம் முடிக்கச்சொல்லி ரயிலில் ஏறச்சொல்லுங்கள்! இல்லையெனில் ரயிலில் அவர் ஏறமுடியாது  என்று சக பயணிகள் பதற்றபடுத்த மாமியும் ஜபத்தை நடுவில் நிறுத்தமாட்டார் சாஸ்திரிகள் என்று கூறி தானும் பெட்டி சாமான்களுடன் இறங்கி ஜபம் பண்ணும் தன் கணவர் அருகில் போய் நின்று கொண்டார்!


இதற்குள் பலமுறை ப்ரயத்தனம் செய்தும் நின்ற இரயில் கிளம்ப மாட்டேன் என மக்கர் செய்ய டிரைவரும் ஏதோ ரிப்பேர் என்றுஸ்டேஷன் மாஸ்டர் கார்டு  ஆகியோரை கலந்து ஆலோசிக்க தொடங்கினார்.
இதற்கிடையில் நித்யம் செய்யும் ஆவர்த்தி பூர்த்தியாகி கண் திறந்த சாஸ்திரிகள் தன்னருகில் பெட்டியுடன் நிற்கும் மனைவியை பார்த்து நீ ஏன் இறங்கினாய்? என்று கேட்டு, வா ஏறிக்கொள்வோம்! என்று மாமியுடன் மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களில் கிளம்ப மறுத்த ரயிலை கிளப்ப மீண்டும் ஒருமுறை டிரைவர் முயற்சிக்க ரயில் திடுக்கென்று கிளம்பியது! ரயில் கிளம்பி விட்டதே என்று சாஸ்திரிகள் ஜபத்தை நிறுத்தவில்லை!

காயத்ரி மஹிமை ரயிலை மீண்டும் ஓடச்செய்தது அதே இடத்தில் நாம் இருந்தோமேயானால் ஐயோ ரெயில் கிளம்பிவிட்டதே என்று அலறி அடித்துக்கெண்டு காயத்ரீயை விட்டுவிட்டு ரெயிலைபிடித்துக் கொள்வோம் ஆனால் அவர் மகான் ரெயிலை விட்டு விட்டு காயத்ரீயைப்பிடித்தால் காயத்ரீ அவரை
விடாமல் காப்பாற்றினாள்.இதிலிருந்து
அவர் நமக்கு சொல்லும் பாடம்
நீ எதை விட்டாலும் காயத்ரீயை விடாதே
உன்னை யார் விட்டாலும் காயத்ரீ உன்னை விடாது.
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

பாம்புக்கு பால் வார்த்த கதை

பாம்புக்கு பால் வார்த்த கதை


ஸ்ரீகிருஷ்ணின் தந்திரம் இதுவரை கேட்டிராதது...

பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள்.

துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், *ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'*' என்று கேட்டான்.

*திரௌபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள்.*
*கண் கலங்கினாள்.*

அதேநேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர்.

*கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய்.*

நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, *'ஏன் பதில் கூறவில்லை?’* என்பான்.

உடனே நீ, *'தக்ஷகன் முறை’* என்று சொல். *அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்க மாட்டான்'*' என்றார் பகவான்.

கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். *'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'*

ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே, இன்று தக்ஷகன் முறை' என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி.

*அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.*

திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். *''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?''* என்று கேட்டாள்.

கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.

*துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை.*

திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.

*ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர்.*

பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அன்று பௌர்ணமி.

*இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான்.*

கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.

*தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது.*

உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள்; துடிதுடித்தாள்.

*துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான்.*

தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். *தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.*

அதே நேரம், அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். *'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன்.*
*பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’* என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.

அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தியோடு பங்குகொள்கிறான்.

*இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்''* என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.

*இதை தான் நம் பெரியோர்கள் பாம்புக்கு பால் வார்த்த கதை என்று சொல்வது வழக்கத்தில் வந்தது* என்று எத்தனை பேர்களுக்கு தெரியும் ?

*"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"*

🌸|| *ௐ சிவம் சைவம்*|| 🌸
🌸|| *சர்வம் சிவமயம்*||🌸
🌸| *சகலம் சிவனருள்*|🌸
🌸 *திருச்சிற்றம்பலம்* 🌸

சொல்லும் செயலும்

 சொல்லும் சொல் !! செய்யும் செயலில் !! தெளிவாக, நேர்த்தியாக செய்ய என்ன செய்ய வேண்டும் ??

சொல்லவும் !! செய்யவும் !! காரணம் "நான்" என்ற மாயை கடந்து !!

யாரின் இயக்கமான ஒத்துழைப்பு வழியே இவையெல்லாம் நிகழ்கின்றது என்பதை உணர்ந்து !!

உங்கள் இருப்பின் காரணமும்,
சொல் செயல் வழியே உங்களின் விருப்பத்தை விரும்பியபடியே வெளிப்பட வைக்கும்
இறைவனை நினைத்து முன்னிறுத்தி சொல்லி !! செய்து !! பாருங்களேன் ..

முன்னிறுத்துவது நான் என்று இருக்கும்போது ஒருவித தடுமாற்றம் நம்முள் நிகழ்வது எதார்த்தம் தான் !!
காரணம் நாம் எப்போதும் ஓர் நிலை இல்லாது அல்லாடியபடி இருக்கும்போது ?? நான் சொல்கின்றேன் !! செய்கின்றேன் !! என்னும்போது தடுமாற்றமும் சகஜம்தானே ..

அதே என்றும் எங்கும் நிலையாய் நிறைந்து இருந்து எதையும் தன்னுள்ளே கொண்டு இயங்கி இயக்கி அருளும் இறைவனை முன்னிறுத்த உங்கள் செயல் !! சொல் !! போன்றவற்றில் ஓர் தெளிவும் திடமும் இருக்க தானே செய்யும் !!

அவனால் பேசுகிறேன் !! அவன் பேசவிடுவதை பேசுகிறேன் !!
அவன் எதை நினைவில் கொண்டுவந்து எப்படி சொல்லெடுத்து கொடுத்து அதையும் எந்த விதத்தில் ஒலியை வெளிப்படுத்த விடுகிறானோ அங்கனமே பேசுகிறேன் என்று உணர்வில் அவனோடு உறவாடியவண்ணம் நம் வெளிப்படுத்தும் சொல் எத்தகைய தாக்கமும் நமக்கு நேரவிடாது !!
தெளிவாக யாருக்கு என்ன புரியவேண்டுமோ அதை புரிவிக்கும் படி வெளிப்படும் தானே ..

அதே போலவே செயலும் !!
அவனால் செய்யாக்கூடிய சாத்தியக்கூறுகளை பெற்று !!
அவன் செய்யவிட்டதை !!
அவன் என்னை கையாளும் விதமே செய்கிறேன் என்று செய்ய !!
செயலில் நேர்த்தி சிறப்பு தனித்துவம் எல்லாம் வெளிப்படும் தானே !!

எல்லாம் படிக்க !! கேட்க !! நல்லாத்தான் இருக்கு ??
இதுவெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் தானே ..

கண்டிப்பாக சாத்தியமே ..

யாரோ உங்களை திட்டிவிட்டாலோ !! புகழ்ந்து விட்டாலோ !!

நாம் என்ன செய்தலும் !! பேசினாலும் !! அவரின் நினைப்பு நாம் செய்வதில் எல்லாம் அதுவும் நம் சிந்தனையில் இருக்கின்றது தானே !!
அதனோடு தானே நம் அன்றாட நிகழ்வு எல்லாம் நடக்கிறது !!

சொன்னார் இறந்து பலவருடம் ஆனால் கூட
நினைவில் அவர்கள்  செய்தது வழியே உங்களோடு எதிர்த்தோ ?? வருந்தியோ ?? வாழ்வது சாத்தியம் என்றால் !! இதுவும் சாத்தியம் தானே ..

இறந்தவர் கூட வாழும் தகுதிபெற்ற நம்  சிந்தையில் ..

எப்போதும் இருந்து !!
நம்மையும் நாமாக இருக்கவைத்து !!
நம்மோடு என்றும் இருக்கும் நிதர்சனமான இறைவனை உணர்வில் இருத்தி செய்யமுடியும் தானே ..

அப்படி செய்வதால் ??

அந்த சொல் செயல் வழியே விளைவது எது என்றாலும் அது உங்களுடையது இல்லை என்ற மெய் புலப்படும் !!
அதை குறித்து யாரும் புகழ்ந்தாலும் !! இகழ்ந்தாலும் !! அதைப்பற்றி
உங்களுக்கு அக்கறையோ ?? கவலையோ ?? கொள்ள தேவையில்லை தானே ..

நீங்கள் இதுபோல உங்களை ஏமாற்றுக்கொள்வதில் இருந்து விடுவிக்கப்பட்டு !! சுதந்திரமாக !! ஆனந்தமாக !! அமைதியாக !! வாழமுடியும் தானே ...

இதை தான் தவவாழ்வு என்று கூறப்படுகிறது !!

குடும்பத்தை விட்டு காட்டுக்கு சென்று தவம் செய்கிறேன் என்று இறைநினைப்போடு இருப்பது தானே ..
அதையே
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சொல் செயல் எல்லாம் இறைசிந்தையோடு செய்யும் போது அதுவும் தவவாழ்க்கை தானே ..

திருச்சிற்றம்பலம்

நடராஜா நடராஜா

திங்கள், 16 மே, 2022

வேதங்கள்


வேதம் என்ற சொல் ' வித்' என்ற தாதுவில் இருந்து உண்டானது. இதற்கு அறிதல் என்று பொருள். இதை அறிந்து கொள்ளும் வழி வித்தை எனப்படும். வித்தையினை அறிவினால் தான் பெற முடியும் எனவேதான் வித் என்ற தாதுவிலிருந்து வேதம் ,வித்யா என்ற இரண்டு சொற்களும் உண்டாயின. இந்த
வேதங்கள் என்பது உலகை படைத்து காத்து ரட்சிக்கும் ஈசனின் மூச்சுக் காற்றாக புராணங்கள் கூறுகின்றன.
பரம்பொருளை  அறியும் பேறறிவாக வேதங்கள் திகழ்கின்றது

பரம்பொருளில் இருந்து இடைவெளி வெளிப்பட்டது; ஆகாசம் தோன்றியது; அதிலிருந்து காற்று வந்தது . அந்தக் காற்றானது பொருள் படைத்த ஒலி வடிவைப் பெற்று, உலகின் காதுகளில் வந்து விழுந்தது. காதில் விழுந்த முதல் ஒலி வேதம் என்கிறது ஸனாதனம்.

வேத மந்திரங்கள் காலத்தால் அழிந்து போகாமல் இருக்க ரிஷிகள் இதனை மனனம் செய்து வழிவழியாக தங்கள் சீடர்களுக்கு கற்பித்தனர்.
சுவடிகளில் எழுதிப் படிக்காமல், குரு சொல்ல, சிஷ்யர்கள் காதால் கேட்டு மனனம் செய்து வந்ததால் வேதத்தை "ஸ்ருதி" என்றனர். வேதத்தை காது வழி கேட்டு பாடம் செய்யும் முறைக்கு அத்யயனம் என்று பெயர்.

ஆச்சாரியார் ஒரு முறை ஒரு மந்திரத்தை சொல்ல, மாணவர்கள் பத்து முறை திரும்பத்திரும்ப சொல்லி பாடம் செய்வதை திருவை சொல்லுதல் என்பார்கள்.

"ச்ரோத்ரம்" என்ற சொல்லுக்கு காது என்று பொருள்.  இப்படி வேதத்தை குருவிடமிருந்து காது வழியாக கேட்டு அத்யயனம் செய்தவர்களுக்கு "ச்ரெளதிகள்" என்று பெயர்.

வேதத்தை கற்பிக்கும் குருவானவர் நல்ல ஆச்சாரம் உள்ளவராகவும் வேத லக்ஷணம் ,அர்த்தம், ஆகியவற்றினை நன்கு தெரிந்தவராகவும், நன்கு புரியும்படி கற்பிப்பவராகவும், வேதத்தில் பக்தியும் ,சிரத்தையும் உள்ளவராகவும் இருக்க வேண்டும். கற்றுக்கொள்ளும் மாணவன் ஆசாரம் உள்ளவனாகவும் சோம்பல் இன்றி இருப்பவனாகவும் வேதம் மற்றும் குருவிடம் மிகுந்த பக்தி உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பவை வேதம் கற்பதற்குண்டான நியமங்கள்.

தொடர்வோம்..........

அறுபத்து மூன்று நாயன்மார்கள் 5 - ஆனாயநாயனார்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் தொடர் பதிவு..

5 - ஆனாயநாயனார்
 



பெயர் : ஆனாயர்
குலம்: இடையர்
பூசை நாள் :கார்த்திகை ஹஸ்தம்
அவதாரத் தலம் :திருமங்கலம்
முக்தித் தலம் :திருமங்கலம்

வரலாறு சுருக்கம்:

“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்”
–திருத்தொண்டத் தொகை

சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது.அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார்.
அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும்
சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேசாதவர்....

தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர்.

தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.இப்படி நியதியாக ஒழுகுபவர் ஒரு நாள் தமது குடுமியிற் கண்ணி செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச்சாத்தி கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில்
திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன் மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழ சென்றார்.

அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றையிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டு போய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.

கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்து கொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும் படி காட்டுக்குச் சென்ற பொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனை போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலே போய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார்.

அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. இடையர்கள் சூழப்பட்ட
பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் ஆனாயர் அடைந்து உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன.

எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக் கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்.

விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன. இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,
அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து,

"மெய்யன்பனே; நம்முடைய உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்"
-என்று திருவாய்மலர்ந்தருளி, ஈசன் அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.

தொடரும்.....

ஆத்மா

ஆத்மாவை உணருதல். எப்படி என்று பார்ப்போமா.


பரபிரம்மத்தை உணறதுலே எல்லா மனித பிறவியின் நோக்கம்.
எல்லாமே அவன் என்கின்ற எண்ணம் வந்து விட்டால் எதற்கு மன போராட்டம். மன பக்குவம் தான் தேடலில் ஆரம்பம். எதற்காக வேஷம்? நாம், நாமாக இருப்பதே நலம். அதற்கு சாட்சி நம் மனம் தானே. நல்ல மனதுடன் பிறரோடு பழகும் போது மனதில் மகிழ்ச்சி உருவாகும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் மனநிறைவு உருவாகும். அந்த மனநிறைவு தான் உடலில் புது சக்தியை உருவாக்கும். அந்த மந்திர சக்தி தான் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும்.
நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தால் மட்டுமே, உங்களுக்கு அது தெரிய வரும்.


மனித உடல் இறைவனின் வடிவம். அதை இறைவனின் கோவிலாக மாற்றுவதும், வெறும் கூடாகவே வைத்திருப்பதும் அவரவர் கையில் இருக்கிறது. ஆனால் இதை கோவிலாக மாற்றுவதற்கான எளிதான முறையை சொல்வது தான் நமது நோக்கம். இதற்கு மிகவும் எளிதான வழியாக இருப்பது தான் இறைவனுடைய சிந்தனை. அதாவது மனதை ஆசை, பொறாமை போன்ற எதற்கும் உதவாத எண்ணங்களில் இருந்து மாற்றி இறைவனை தியானிப்பது.
மனதுக்கு திடம் கொடுப்பவை – மன திறம் – மந்திரம் என்பது. சில மந்திரங்களை நாம் குறிப்பிட்ட அதிர்வில் ஜெபிக்க, அந்த சக்தி நம் செயல்களை முறைப்படுத்தி, நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது.


ஒவ்வொருவருக்கும் அவரவர் மூலாதாரத்தில் ஒரு மிகப் பெரும் சக்தி சுருண்டு கிடக்கிறது. முறையான மூச்சுப் பயிற்சியினாலும், மந்திர அதிர்வாலும், இந்த சக்தி தூண்டப்பட்டு மேல் நோக்கி எழும்பும். இந்த நிலையை அடைந்தவருக்கு அவர் எடுக்கும் முயற்சியில் தோல்வியே கிடையாது எனலாம். நாம் இந்த பிறவியில் செய்யும் நன்மை, தீமை எல்லாமே நம் மனதில் பதிவாகிறது இல்லையா? இதை யாரும் மறுக்க முடியாது. இறந்த பிறகும், இந்த நினைவடுக்குகள் அப்படியே தான் நம் ஆன்மாவில் இருக்கின்றன. நாம் அடுத்த பிறவி எடுக்கும் போது நமது நல்ல கெட்ட பலன்களுக்கு ஏற்ப நம் எண்ணங்களை, செயல்களை மனது தீர்மானித்து நம்மை செயல்பட வைக்கிறது.
நவ கிரகங்கள் நம் ஜாதக கட்டங்களில் உட்கார்வதும் அதற்க்கேற்ப்பத்தான். நம் தலை எழுத்து அல்லது விதி எனப்படுவது, இவ்வாறாக எழுதப்படுகிறது.


மிக நேர்த்தியாக முத்துக்கள், ஒரு கயிற்றில் கோர்க்கப்பட்டு இருக்கும் ஒரு முத்து மாலை ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் கோர்க்கப்பட்டுள்ள கயிறு நம் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் கயிறு நிச்சயம் இருக்கிறது இல்லையா? அந்த கயிறு போன்றது தான் நம் ஆத்மா. முத்துக்கள், நம் எண்ணங்கள் போன்றவை. ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் உள்ள இடைவெளியில் நம் ஆத்மாவை நம்மால் உணர முடியும். அப்படி என்றால், என்ன அர்த்தம் என்று உங்கள் மனம் கேட்கிறதா.


ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் இடைவெளி தேவை. அல்லது எண்ணங்களே இல்லாத நிலையை அதிகமாக்க வேண்டும். அந்த நிலை


தான் – நம்மை பரவசப்படுத்தும் நிலை, பரமாத்மா குடிகொண்டுள்ள பேரானந்தமான ஆனந்த நிலை.

பூஜா சங்கல்பம் மந்திரம் பொருள்

பூஜா சங்கல்பம் மந்திரம் பொருள்




மமோபாத்த ஸமஸ்த#- என்னால் அடையப்பெற்ற அனைத்து, #துரித க்ஷயத்வாரா# – பாபங்களின் நிவர்த்தி வாயிலாகவும், #ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்# – இறைவனின் ப்ரீதிக்காகவும், #சுபே சோபனே முஹூர்த்தே# – சுபமான இந் நல்வேளையில், #அத்ய ப்ரஹ்மண# – இன்றைய பிரம்மாவின், #த்விதீய பரார்த்தே# – பிரம்மாவின் ஆயுளில் இரண்டாம் பாகம், #ஸ்வேத வராஹ கல்பே# – ஸ்வேத வராஹ கல்பத்தின், #வைவஸ்வத மன்வந்தரே# – வைவஸ்வத மன்வந்தரத்தின், #அஷ்டாவிம் சதிதமே# – இருபத்தெட்டாவது, #கலியுகே பிரதமே பாதே# – கலியுகத்தின் முதல் கால் பாகத்தில், #ஜம்பூ த்வீபே# – ஜம்பூ த்வீபத்தில், #பாரத வர்ஷே# – பாரத வர்ஷத்தில், #பரத கண்டே# – பரத கண்டத்தில், #மேரோர் தக்ஷிணே பார்ஸ்வே# – மஹா மேருவாகிய ஹிமயத்தின் தென்பக்கம், #சகாப்தே# – சக என்னும் ஆண்டு கணக்கின்படி, #அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே# – நமது தற்கால வழக்கிலுள்ள, #ப்ரபவாதி ஷஷ்டி ஸமவத்ஸரானாம் மத்யே# – பிரபவ முதல் தொடங்கும் அறுபது ஆண்டுகளினிடையே, #அமுக ஸம்வத்ஸரே# – இன்ன பெயருள்ள ஆண்டின், #அமுக அயனே# – இன்ன அயனத்தில், #அமுக ருதௌ# – இன்ன ருதுவில், #அமுக மாசே# – இன்ன மாதத்தில், #அமுக பக்ஷே# – இன்ன பக்ஷத்தில் (பிறையில்), #ஸுபதிதௌ# – சுபதிதி, #அமுக வாசர யுக்தாயாம்# – இன்ன கிழமையும், #அமுக நக்ஷத்ர யுக்தாயாம்# – இன்ன நக்ஷத்திரமும், #சுபயோக சுபகரன# – நல்யோகமும் கரணமும், #விசேஷேன விசிஷ்டாயாம்# – மிக விசேஷமும், #அஸ்யாம் ஸுபதிதௌ# – கூடிய நல்ல நாளில், #ஸ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம்# – நாராயண ப்ரீதிக்காகவும் (பரமேஸ்வரன் மற்றமுள்ள அம்பிகை போன்ற தங்களின் உபாசனைக் கடவுளர்களின் பெயரைச் சொல்ல வேண்டும்) #அஸ்மாகம் ஸஹ குடும்பானாம்# – நமது குடும்பத்தினரின், #க்ஷேம ச்தைர்ய தைர்ய# – க்ஷேமம், ஸ்திரத் தன்மை, தைர்யம், #வீர்ய விஜய ஆயுளாரோக்ய# – வீரம், வெற்றி வியாதியற்ற ஆயுளும், #அஷ்ட ஐஸ்வர்ய# – எட்டு செல்வங்களும், #அபிவ்ருத்யர்தம்# – பெருகும் பொருட்டும், #ஸமஸ்த மங்களா வாப்யர்தம்# – அனைத்து மங்களங்களும் கிடைக்கும் பொருட்டு, #ஸமஸ்த துரிதோப சாந்த்யர்தம்# – அனைத்து பாபங்களின் நிவர்த்திக்காகவும், #தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித# – றம், பொருள், இன்பம், வீடு, நால்வகை, #புருஷார்த்த சித்யர்த்தம்# – பேறுகள் கிட்டவும், #யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி# – சக்திக்கேற்ப, தியானம் ஆவாஹனம் கூடிய, #பூஜாம் கரிஷ்யே# – பூஜையை செய்கிறேன், #பூஜாம் கரிஷ்யாம்# – பூஜையை செய்கிறோம்.

ஸ்ரீமத் பாகவதம் – பரீக்ஷித் சரித்திரம்

ஸ்ரீமத் பாகவதம் – பரீக்ஷித் சரித்திரம் – அஷ்டம ஸ்கந்தத்தின் கதை என்ன?

முதலை வாயில் அகப்பட்டு ‘ஆதிமூலமே’ என்று கதறிய கஜேந்திரனைப் பகவான் காப்பாற்றியதும், கூர்மம் முதலிய அவதாரங்கள் செய்து தேவதைகளுக்கு அமிர்தபானம் கிடைக்கும் படி பகவான் செய்ததும், மஹாபலியை வாமனராகி மூன்றடி மண் யாசித்துத் திருவிக்கிரமராகி உலகை இரண்டடியால் அளந்து அவனைப் பாதாள லோகம் போகும் படி செய்து தேவர்களுக்குப் பகவான் ஸஹாயம் செய்ததும், மத்ஸ்யாவதாரம் செய்து பகவான் ஹயக்ரீவாசுரனைக் கொன்று அவன் திருடிச் சென்ற வேதங்களைப் பிரம்மாவிடம் ஒப்புவிக்கு முன் பிரளயோதகத்தில் வைவஸ்வத மனுவிற்கு ஞானோபதேசம் செய்ததுமே எட்டாம் ஸ்கந்தத்தில் அடங்கிய கதை.


ஸ்ரீமத் பாகவதம் – மூன்றாவது ஸ்கந்தம்

ஸ்ரீமத் பாகவதம் – 3வது ஸ்கந்தம்


– விதுரருக்கு மைத்திரேயர் இருக்கும் இடம், அவரது சிறப்பு முதலியன எவ்வாறு தெரியவந்தது?

விதுரர் தீர்த்தயாத்திரை செய்து கொண்டு வருகையில் யமுனா நதிக்கரையில் பதரிகாசிரமம் நோக்கிப் போய்க் கொண்டிருந்த பகவத் பக்தரான உத்தவ சுவாமியைக் கண்டு இருவரும் ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு க்ஷேம சமாசாரங்களை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது உத்தவரிடமிருந்து யாதவர்கள் ரிஷி சாபத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்ததும், முன் ஜன்மத்தில் வழியாக இருந்து அந்த ஜன்மத்தில் வேடனாக இருந்த ஒருவனது அம்பால் பகவான் பரமபதம் சென்றதையும் கேள்விப்பட்டு மிகுந்த துக்கமடைந்து பகவான் உலகம் விட்டுப் போகையில் சொல்லிப் போன ரகசியாதிகளைத் தனக்குச் சொல்லும்படி உத்தவரை விதுரர் கேட்டார். அவர் தாம் ஒரு விரதத்தோடு பகவான் உத்திரவின்படி சீக்கிரம் பதரிகாசிரமம் போய்ச் சேர வேண்டும் என்றும், தனக்கு ரகசியங்களைப் பகவான் பரமபதம் போகும் தருணத்தில் உபதேசிக்குங்கால் மைத்திரேயர் என்ற மகாமுனியும் அங்கு வந்திருந்தார் என்றும், பகவான் அந்தக் காலத்தில் தன்னையும் விதுரரயும்தான் ஞாபகத்தில் வைத்திருந்தார் என்றும், அப்பொழுது விதுரர் இல்லாமையால் அவருக்குத் தாம் எடுத்துச் சொல்லிய ரகசியங்களை ஆதியோடந்தமாகச் சொல்ல வேண்டும் என்று மைத்திரேயருக்குப் பகவான் உத்தரவு கொடுத்திருக்கிறார் என்றும், மைத்திரேயர் அப்பொழுது ஹரித்வாரத்தில் இருக்கிறார் என்றும், முக்கிய விஷயங்களை உத்தவர் விதுரருக்கு எடுத்துரைத்துப் பதரிகாசிரமம் சென்றார். விதுரருக்குப் பகவான் மேல் பக்தி அதிகரிக்க மைத்திரேயரைச் சீக்கிரத்தில் சென்று அடைந்தார்.

ஞாயிறு, 15 மே, 2022

சிவமே தவம் தவம் சிவம்

சிவமே தவம்..... தவமே சிவம்.....


பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி?.
 ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்...

கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயம் அல்ல.

கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்து உள்ளார்கள்.

சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக் கூடிய மூலவராக உருவாகும் கற்  சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.

அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழி முறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.

கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.

சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன்  ஸ்தபதி அவர்கள் கூறும்போது “சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின் படி உருவாகும்  கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில்  வைக்கப்படுகிறது.

அதாவது தாமிரபரணி போல 3 புண்ணிய நதிகளின்  நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில்  வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட  சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.

ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி  ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய  பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை  வெளியே விடும்.

இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.

இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட  சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும்  கேட்டை உருவாக்கி விடும்.

அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தானிய வாசத்தில் வைக்கிறார்கள்.

அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.

இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி  மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன்  நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட  சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.

ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.

பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.

இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா  மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து  அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

இந்த ஆறு  வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது  ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால்  ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது.

எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.

சரி… ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது  ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம்  குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.

நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை  தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும்  வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.

தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக் கொடுத்து விடும்.

அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து  விடும். அதைப் போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான  நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.

அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள்,  பிரதிஷ்டை செய்யப் போகும் இரண்டு நாளுக்கு முன்னர்தான் திறக்கப்படும்.

இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப் பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம்,  தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம்  இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள்.

இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி
 வாசத்தில் சிலையை வைக்கிறார்கள்.

பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம்  மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை  பெறுகிறது.

புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும்  நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது.  நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள்  சிலையை வைத்து விடுகிறார்கள்.

இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.

தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.

அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.

பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது  வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால்  ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.

ஸ்பரிசவாதி என்னும் இந்த  கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு  மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு  முழுமையான கடவுளாக.....நமசிவாய
"சிவாலயம் செல்வோம்" "சிவனருள் பெறுவோம்"

அனுபவபட்ட பின்பே அனைத்தும்  விளங்கும் அவனருளாலே என்று

சித்திரம், தியானமும்

சித்தரும்‌ தியானமும்

அந்த ஊருக்கு குருபாதம் என்ற சாது ஒருவர் வந்திருந்தார். ஊரின் வடகிழக்கு பகுதியில் குளக்கரை அருகில் உள்ள அரசமரத்தடியில் விநாயகர் கோயில் திண்ணையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு யோசனை செய்து கொண்டு இருந்தார்.

அவர் இமயமலை அடிவாரத்தில் இருந்து போன வாரம் இறுதியில் இங்கு வந்தவர்.

மக்கள் அவரிடம் வந்து ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.

அன்று அம்மாவாசை நள்ளிரவில் காலில் யாரோ ஒருவர் மிதித்து சறுக்கி அய்யோ யம்மா என்று கத்திக் கொண்டே கீழே விழுந்தார். குரு பாதம் கால் மிதிபட்டதும் வலி தாங்காமல் ராமா என்று கத்திக் கொண்டே எழுந்தார் தூரத்தில் எரியும் அந்த விளக்கின் ஒளி அவன் முகத்தில் பட்டு மங்களாக தெரிந்தது கறுத்த முகம் மேல் சட்டை இல்லை வியர்வை ஈரம். மாட்டு மாமிசம் உண்ணும் நபர் மீது இருந்து வரும் ஒரு வித வாசனை . மேலும் இரண்டு சமீபத்தில் பெண் போகம் செய்ததற்கான வாசனையும் இணைந்து ஆண்மை கலந்த ஒரு வாடையுடனும் பரந்த தோள்களுடனும் உள்ள ஒருவன் கீழே கிடந்தான் .

அய்யோ வலிக்குதே என்று முனகிக்கொண்டே இருந்ததால் . கையில் இருந்த டார்ச் லைட்டை முகத்தில் அடித்தார் குரு பாதம்.

கீழே இருந்தவன் சாமி தேள் கொட்டிவிட்டது காப்பாற்றுங்கள் என்று கூறினான்

திருடனுக்கு தேள் கொட்டியது போல்.

ஆம் அவன் பெயர் கருணாகரன் சிறுவயதில் இருந்தே திருட்டு வேலை மட்டுமே.

குரு பாதம் கனிவுடன் அவனுக்கு மருந்து கொடுத்து அவனுக்கு தனக்கு அருகில் உறங்க இடமும் தந்தார்.

அடுத்த நாள் காலை பொன் தகடுகளால் வேய்ந்தது போல ஏரியின் நீர் மீது பொன் ஒளி பரப்பிக் கொண்டு சூரியன் வரத்துவங்கிறது.

கருணாகரன் எழுந்து ஐயா நான் யோசித்து பார்த்தேன் சிறிது காலம் உங்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசை. நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டான்.

குரு பாதம் சரி இரு என்றார்.

உடனே காலை குளித்து விட்டு குரு பாதம் முன்பு அமர்ந்தான் தியானம் பயிற்சி அளிக்கப்பட்டது.

கண்களை மூடி தியானத்தில் மூழ்கினான்.

உள்ளே நிலவரை மெல்லிய வெளிச்சம் விசாலமான அறை மேற் கூரைக்கு அருகில் உள்ள காற்று துவாரம் வழியாக நிலவின் ஒளி நிசப்தம் பக்கத்து அறையில் ஒடிக் கொண்டு இருக்கும் மின்விசிறி சப்தம் மட்டுமே டொடக்கு டொடக்கு என்று கேட்கிறது.

மெதுவாக நகரந்து உள்ளே போக போக ஒரு கடவுளின் விக்ரகம் அது பொன் வெள்ளி ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அழகாக இருக்கிறது. மெதுவாக கைகளை விக்ரகத்தின் மீது வைத்தவன் கொண்டு வந்த கோணியை விக்ரத்தின் மீது போர்த்தி குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு நகர்ந்தான் .
தம்பி தம்பி என்று பின்னால் இருந்து குரு பாதம் அழைக்க திடீரென தியானம் விலகி எழுந்தான் கருணாகரன்.

ஆனால் இவ்வளவு நேரம் தியானத்தில் திருட்டு வேலை செய்திருக்கிறான் அவன்.

மக்களே நாம் கூட இதை போல்தான் தியானம் என்ற பெயரில் திருட்டுக்கு ஒத்திகை பார்க்கிறோம். அதன் பெயர் தியானம் இல்லை.

சிலர் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தவுடன் நிம்மதி அமைதி வரும் என்று கூறுகின்றனர்.

ஆனால் நெரய கஷ்டம் இருந்தால் எனது அட்வைஸ் தியானம் செய்து விடாதீர்கள் . உக்காந்தா உங்க மனமே உங்களை காலி பண்ணி விடும்.

வேலை பாத்துகிட்டே இருந்தா வேதனை தெரியாது. சும்மா உக்கார்ந்தா காலி நீங்கள்

சரி அப்போ தியானம் என்பது என்ன.

முதலில் உங்கள் மனம் அடங்க வேண்டும் பிறகுதான் தியானம் என்பது என்ன என்று புரியவே துவங்கும். தியானத்தால் மனம் அடங்காது.

எவன் ஒருவன் வாழ்க்கையில் சராசரியாக சிக்கலில்லாத சுழலை அமைக்கிறானோ அவனே தியானம் செய்ய முடியும்.

இதைத்தான் யமம். நியமம். ப்ரத்யாகாரம் என்று கூறினார்கள். வள்ளலார் நித்திய கரும விதி என்று கூறினார். இங்கு உள்ளவர்கள் காலமுள்ள போதே ஒழுக்கத்திற்கு வாருங்கள் என்று கூறுவதும் இதைத்தான்.

தியானம் என்பது மனதை சாந்த படுத்தும் ஆப்ரேஷன் கிடையாது. மனதையே வெட்டி அகற்றும் அறுவை சிகிச்சை.

நமக்கு மனதினை பற்றிய எதுவுமே தெரியாத போது தியானம் நடக்காது. தியானம் என்பது மனதினை நம்மிடம் இருந்து வெளியேற்றும் சாதனை . ஆனால் நாமோ தியானம் என்பது ஏதோ பிளான் போட கிடைக்கும் புது ஐடியா கிடைக்கும் ஒரு பயிற்சி என்றும். மன அழுத்தம் போவதற்கு தெரபி போலவும் கையாள்கிறோம்.

திருடன் தியானத்தில் பணபெட்டி கைபிடி காட்சி தருவது போல உங்களுக்கு ஆபீஸ். வீடு. புள்ளை. காதலி ‌ கள்ள காதலி. ரூவா. நகை. வீடு. நிலம். மனைவி மச்சான் மாமியார் அம்மா என மாறி மாறி இதுதான் ஓடும் இதுவல்ல தியானம்.

தெளிந்த ஓடை போல உங்கள் மனதை மாற்ற வேண்டும். அதற்கு ஆசைகளற்ற விருப்பு வெறுப்பற்ற நடுநிலை எதையும் ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம். காமம். தோசம்.மோகம்.ஆச்சர்யம் வெறி என அனைத்தையும் கையாளுதல் பற்றிய புரிதல் தேவை அதை நீங்கள் தியானத்தில் பெற முடியாது. காரணம் அதெல்லாம் அதில் இல்லை. அதெல்லாம் நமது வாழ்க்கை முறையில் இருக்கிறது.

நீங்கள் உங்களுக்கு கீழே உள்ள வேலையாளை வேலையை விட்டு தூக்கி விட திட்டம் போட்டு விட்டு தியானம் செய்தால் அதில் அவன்தான் வருவான்.ஆனால் தியானம் என்பது அப்படி அல்ல.

ஆண்டாண்டுகளாக காடு மேடு மலை வயல் காடு கரை என பரதேசியாய் அலைந்து அனைத்தையும் துறந்து ஆடை வரை பற்றில்லாம் மாறி முழுக்க முழுக்க இறைவனைத் தவிர வேறு எதையும் நினையாமல் அன்னம் தண்ணீர் இல்லாமல் தவம் தியானம் பாராயணம் செய்து கொண்டே இறைமார்க்கத்திற்காக பிரம்மச்சரியம்  இருப்பவர் என்ன பைத்தியமா .

நாம எவ்வளவு ஈசியாக தியானம் செய்கிறோம். அந்த ஆளு எதுக்கு இவ்வளவு கஷ்டபடுறார். அப்போ தியானம் செய்ய துறவு ஒழுக்கம் பற்றின்மை பொது நலம் சரனாகதி ............. இதெல்லாம் தேவையா இல்லையா.

அப்படி தேவை என்றால் நாம தியானம் செய்றது யாரை ஏமாற்ற.

இல்லை அதுமாதிரி எல்லாம் எதுவும் தேவையில்லை ங்க. ஜாலியாவும் இருக்கனும் தியானமும் செய்யலாம். பக்கத்துல உள்ள. பிகரையும் முடிஞ்சா கரெக்ட் பண்ணி வாட்சப்பில் சாட் பண்ணலாம். தியானம் பண்றதெல்லாம் ஈசி ஒரு வாரத்தில் குண்டலினி ஏறி மேல வந்துரும்.

குண்டலினி னா என்னானு சொல்லுங்கள்

 அது குட்டியா இருக்கும் பாம்பு . மொரட்டு முட்டாள்களாக இருக்கின்றோம்

ஞானிகள் கூறுவதை கடைசி வரை கேக்கவே மாட்டோம். பலரும் ஜாதகம் பார்க்க வரும் போது சித்தர் வழிபாடுங்க நாங்க னுவாங்க .

சரி என்ன பண்ணுவீங்க னு கேட்டா ஒரு மாதிரி பாப்பாங்க.

நம்மூரில் உள்ள எந்த சித்தன் தன்னை வழிபட சொன்னது . சித்தர்கள் எழுதியதை படித்து அதன் படி வாழ வக்கில்லை நமக்கு சித்தர் சமாதியில் இரண்டு பத்தி நாலு சூடம் ஏத்துனதும் அப்படியே சித்தர் சற்றுனு வந்து ஒளி தருவார்.

அடப்பாவிகளா சித்தர்களை அசிங்கபடுத்த வேற யாரும் தேவையில்லை.


இரட்டை நாயினை வாகனமாக கொண்ட ஒரே பைரவர் தலம் இலுப்பைக்குடி.

இரட்டை நாயினை வாகனமாக கொண்ட ஒரே பைரவர் தலம் இலுப்பைக்குடி.

மிக பழமையான பைரவர் தலங்களுள் இதுவும் ஒன்று.

காரைக்குடியிலிருந்து மாத்தூர் செல்லும் வழியில்  கிட்டதட்ட ஒரு 6 கி மீ தொலைவில் (அரியக்குடி அருகில்) இலுப்பைக்குடியில் உள்ளது ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் கோவில்.    

இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த ஸ்தலம் என்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

சித்தர்களில் ஒருவரான கொங்கணர் மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் கோயிலில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார்.

அதனால் மாற்றூர் என்கிற மாத்தூர் இறைவன் பேயர் ஐநூற்றீஸ்வர்.

மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வேண்டி வேண்டினார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார்.

பைரவர் இங்கே ஜொலிக்கிறார்.ஒரு கையில் தங்க அட்சயபாத்திரம் ஏந்தி உள்ளார்.

இங்கே வேண்டிக் கொள்ள வீட்டில் ஸ்வர்ணம் பெருகும் என்கிறார்கள்.

இரண்டு நாய்களுடன் காட்சிதருகிறார். பைரவர் சன்னதியில் எந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள். கொஞ்சம் தவத்தில் ஆழ்ந்து சொல்ல சுழலும் ஒரு அலையினை உணரலாம்.

கோவிலின் அம்பாள் சன்னதிக்கு எதிரே ஒரு மிகப்பெரிய குளம் உள்ளது.

பைரவருக்கு அருகே ஒரு சிறிய பலகையில் நாய் உருவம் உள்ளது, நாய்கடி பெற்றவர்கள் இங்கு வந்து இந்த தூணை வளம் வந்து ,  குளத்தில் நீராடி பைரவரை வேண்ட, பைரவர் விஷதன்மையை முறிப்பதாக சொல்கிறார்கள்.

சுயம்பிரகாசேஸ்வரர், சிவன் மிக சிறியவடிவில் உள்ளார்.தெய்வீகம் நிறைந்த அலைகள் சூழ்ந்துள்ளது.

கோயிலின் முன் மண்டபத்தூணில் ஒரு அங்குல அளவிலான விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கிரீடம் அணிந்த நிலையில் உள்ளார். இறைவி சன்னதியின் எதிரில் உள்ள தூணில் வராகி உள்ளார்.

குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமணம் விரைவில் நடைபெற, புத்திர தோஷங்கள் நீங்க இக்கோயிலில் உள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்தும், விசேஷ பூஜைகள் செய்தும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுகின்றனர்.


சிவன் தலையில் கங்கை

 

சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை யார்?

சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர். சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும்.

அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டி ருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை எல்லாம் ஒரு உபாதை கூறும்படி கேட்டான்.

முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.

பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள். “தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வேண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்.”

”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான்என் வலிமையை தாங்க முடியும்” என்று கூறி மறைந்தாள்.

பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார்.

சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கை குடியிருக்கிறாள்.

தங்கம் தோன்றிய கதை பகுதி மூன்று

 தங்கம் தோன்றிய கதை 3

வஸிஸ்டர் பரசுராமர் உரையாடல் தொடர்ச்சி ;

தேவர்கள் அனைவரும் அக்னியை தேடி மறுபடியும் அலையத்தொடங்கினார்கள். அக்னி தவளைக்கு சாபம் கொடுத்துவிட்டு அரசமரத்தில் சென்று தஞ்சம் அடைந்தார். அப்போது தேவர்கள் அக்னியை தேடிவர, அங்குள்ள ஒரு யானையானது " அக்னியானார் அரசமரத்தில் இருக்கிறார் " என்று கூறிற்று. உடனே அக்னியனவர் யானைக்கு " உனது நாவானது தலைகீழாக மாறிப்போகும்" என்று சாபம் கொடுத்து விட்டு அரசமரத்தில் இருந்து வன்னிமரத்தில் புகுந்தார்.

தேவர்கள் தனக்கு உதவி செய்த யானைக்கு வரம் அளித்தனர். யானைகளே! மாறிப்போன நாவினாலும் எல்லா ஆகாரங்களையும் உண்பீர்கள். எழுத்துக்களில் தெளிவில்லாமலே உரத்தகுரலால் வாக்கை சொல்வீர்கள் என்று வரம் தந்து அக்னியை தொடர்ந்தனர்.

பின்பு வன்னிமரத்தில் புகுந்த அக்னியை ஒரு கிளியானது தேவர்களுக்கு காட்டிக்கொடுக்க மீண்டும் அக்னியானவர் கிளிக்கு வாக்கில்லாமல் போவாய் என்று சபித்தார். அதுகண்ட தேவர்கள் கிளிக்கு " நீ! அடியோடே வாக்கில்லாமல் போக மாட்டாய், உன் பேச்சு வளர்ந்த குழந்தையின் பேச்சு போல தெளிவில்லாமலே அழகாக இருக்கும் " என்று வரமளித்தனர்.

( இதுதான் கிளிபேச்சுன்னு சொல்வது).

உடனே தேவர்கள் அக்னியை வன்னிமரத்தில்கண்டு ,அந்த வன்னிமரத்தையே எல்லா கிரியைகளுக்கும் அக்னிஸ்தானமாக செய்தனர். அப்போது முதல் அக்னியானது வன்னிமரத்தில் காணப்படுகிறது.

பிறகு தேவர்கள் அக்னியிடம் உமாதேவியின் சாபம் மற்றும் தாரகன் வதம் பற்றி கூறி வேண்டிக்கொள்ள, அக்னியானவன் கங்கையின் இடத்திற்க்கு சென்று அங்கே கங்கையுடன் சேர்ந்து கர்ப்பத்தை உண்டு பண்ணினார்.கங்கை அக்னியின் வீரியத்தால் மயக்கமுற்று கொடிய தாபத்தை அடைந்து அதை தாங்கமாட்டாமல் போனாள். பின்பு அக்னியிடம் தன்னால் வீர்யத்தை தாங்க முடியவில்லை என்று கூற அக்னி சமாதானம் செய்து கர்பத்தை தாங்கும்படி செய்தார்.

ஆனால் கங்காதேவி , ருத்திரரின் வீர்யமும் கலக்கப்பட்டிருப்பதால் வீர்யத்தை தாங்காமல் மேருமலையில் விட்டாள். பிறகு , அக்னி கங்கையிடம்" உமது கர்ப்பம் ஸுகமாக வளருகிறதா! என்ன குணமுள்ளது ? எவ்வகை நிறமுள்ளது ?என சொல் என்றார்.

அதற்கு கங்கை, குற்றமற்றவனே! அந்த கர்ப்பமானது உன்னை போல பிரகாசமாகவும் தாமரை கடம்ப மலர் போல குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அது சூரியனொளி சேர்ந்தது போல பொன்மயமாக காணப்படுகிறது. அந்த வீரியமானது மலை அருவி நதியில் பாய்ந்ததால் மூவுலகங்களையும் ஒளியினால் விளங்க செய்கிறது.  ஒளியில் உன்னையும் சூரியனையும் போலவும் அழகில் இரண்டாவது சந்திரனை போலவும் இருப்பான் என்றாள். இந்த காரியத்தாலே அக்னிக்கு ஹிரண்யரேதஸ் என்னும் பெயரை கூறுகின்றனர்.

அப்போது அந்த கர்ப்பம் தேவலோகத்தில் நாணல் காட்டை அடைந்தது.அப்போது கிருத்திகை தேவிகள் அன்பு கூர்ந்து முலைப்பால் சுரப்புகளால் வளர்த்தனர். சிறந்த ஒளியுள்ள அந்த குழந்தைக்கு கார்த்திகேயன் என்று பெயர் பெற்றது. ரேதஸ் சிந்தினதால் ஸ்கந்தன் என்றும் குகையில் இருந்ததால் குகன் என்றும் பெயர் பெற்றது. இப்படியாக பொன்னானது அக்னிக்கு பிள்ளையாக பிறந்தது.

பொன்னிலும் ஜாம்பூநதம் என்னும் தங்கம் மிகச்சிறந்தது. அதுவே தேவர்களுக்கு ஆபரணமாகுகிறது. அதனாலே பொன் ஜாதரூபம் என்று சொல்லப்படுகிறது. அது ரத்தினங்களில் பரிசுத்தம். மங்களங்களுக்கு மங்களம். அதனால் பொன் என்பது அக்னி பகவானும் சிவபெருமானும் இருப்பது.

 பரிசுத்தங்களில் பரிசுத்தம் கனகமே! தங்கமானது அக்னியும் ஸோமனுமாக இருப்பதென்று சொல்லப்படுகிறது.

இப்படியாக தங்கமானது வியாபித்து நிற்கிறது.

இதே போலவே அக்னியானது அரச, வன்னி மரத்தில் நிலைத்திருப்பதும்.

#தங்கம்
#பரசுராமர்
#வசிஸ்டர்
#பீஷ்மர்
#மஹாபாரதம்


தங்கம் தோன்றிய கதை பகுதி இரண்டு

தங்கம் தோன்றிய கதை - இரண்டு

வஸிஸ்ட பரசுராம உரையாடல்.

வஸிஸ்டர்  ; ஹே ராமா! உண்மையை ஆராயுங்கால் அக்னியும் சந்திரனும் சேர்ந்துதான் பொன் என்று அறி.

 செம்மறியாடு அக்னி; வெள்ளாடு வருணன்; குதிரை சூரியன் ; யானைகள், மான்கள், ஸர்ப்பங்கள் ,எருமைகள் ஆகிய இவை அஸுரர்கள்.

 ப்ருகு புத்திரரே! கோழிகளும் பன்றிகளும் ராக்‌ஷஸர்கள் ; யஜ்ஞமும் கோக்களும் பாலும் சந்திரனும் பூமி என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

உலகத்தையெல்லாம் கடைந்து ஒர் ஒளிகட்டியான பொன் உண்டாயிற்று. அதுவே சிறந்த ரத்தினம். இதை காரணம் பற்றிதான் தேவர்கள் கந்தர்வர்கள் அரக்கர்களும் மனிதர்களும் பிசாசர்களும் பல அணிகலன்களை கொள்கின்றனர். பொன்னே பூமியையும் கோக்களையும் விட சிறந்த பாவனமாக சொல்லப்படுகிறது. பொன்னை தானமாக கொடுத்தவர் எல்லாம் கொடுத்தவராகிறார். இது அக்னியின் உருவம்.  மேலும் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் ...

இது ஸ்வாயம்புமனு புராணகதை சொல்லும் போது நான் கேட்டது.  அதை கேள். சிவபகவான் ஆனவர் உமா தேவியை மணம் புரிந்து கையிலையில் இருக்கையில் தேவர்கள் வந்து நமஸ்கரித்து பின்வருமாறு சிவபகவானை பார்த்து கூறலானார்கள். ஓ! தேவரே ! உமக்கு உமாதேவியினடத்தில் சேர்கை உண்டாயிற்று. இருவரும் மிக சிறந்தவர்கள். உமது வீரியம் வீணாகாது. உங்கள் இருவருக்கும் பிறக்கும் சந்ததி மிக்க வலிமையுள்ளதாக இருக்கும் . அதை மீறி ஒன்றும் செய்ய இயலாது. ஆதலால் பிரபுவே ! மூவுல நன்மை கருதி எங்களுக்கு வரம் தாரும்.  

நீர் ! இந்த சிறந்த வீர்யத்தை அடக்கும். உங்களிருவருக்கும் பிறக்கும் சந்ததி தேவர்களை அழித்துவிடும். பூமி ஆகாயம் ஸ்வர்கம் ஒன்று சேர்ந்தாலும் உங்கள் இருவரின் வீர்யத்தை தாங்க முடியாமல் அதன் மகிமையால் எரிக்கப்படும் .அதனால் உமக்கு இந்த உமாதேவியினடத்தில் பிள்ளை பிறவாமல் இருக்க வேண்டும் என்றனர். அது கேட்ட சிவபகவான்  "அப்படியே ஆகட்டும்" என்று வரம் கொடுத்தலால் அவர் ஊர்த்வரேதஸாக ஆனார்.

ஆனால் கோபம் கொண்ட உமை, என் சந்ததிக்கு கெடுதல் செய்ததால் தேவர்களுக்கு சந்ததி இல்லாமல் போக கடவது என்று சாபமிட்டார். அந்த சாப காலத்தில் தேவர்கள் கூட்டதில் அக்னி மட்டும் இருக்கவில்லை.  

( கிளாஸ்க்கு ஆப்செண்ட் ஆயிட்டார் )

அப்போது ருத்திர தேவர் வீர்யத்தை அடக்க அதில் சிறிது சிந்தி பூமியில் விழுந்து அக்னியில் சேர்ந்தது.

இது இப்படி இருக்க , தாரகாசுரனுடைய கொடுமை தாங்காமல் தேவர்கள் பிரம்மதேவரை சரணடைந்தனர். உமாதேவியின் சாபத்தால் வீர்யமிழந்த தேவர்களை கண்டார்.  

பிரம்மதேவர், தேவர்களை பார்த்து, தேவர்களே உமையின் சாபகாலத்தில் அங்கு அக்னி இருக்கவில்லை .ஆனால் ருத்திரனுடைய வீர்யம் அக்னியில் கலந்து இரண்டாவது அக்னி போல பெரும் பொருளாயிற்று. அந்த பொருளை அக்னியானவன் கங்கையிடத்தில் உண்டாக்கப்போகிறான். விரைவில் அக்னிபுத்திரன் பிறப்பான். அதனால் அக்னியை தேடி கண்டுபிடியுங்கள் என்று சொன்னார்.அந்த செயலை செய்ய ஊக்குவியுங்கள் என்றார்.

தேவர்கள் அனைவரும் அக்னியை தேடினார். ஆனால் அக்னி தன் தேகத்தை ஜலத்தில் மறைத்து வைத்திருந்தார். அக்னியை தேடி சோர்ந்து வந்த தேவர்களை நோக்கி ஜலத்தில்  மறைந்திருந்த அக்னியின் வெப்பம் தாங்கமுடியாமல் இருந்த ஒரு தவளை தேவர்களை பார்த்து கூறலாயிற்று. தேவர்களே ! அக்னிபகவான் தன் ஒளிகளை ஜலத்தில் சேர்த்து அந்த ஜலத்தில் தூங்குகிறான். அவனால் நாங்கள் தாபமுண்டாக்கப்பட்டோம். அதனால் அவரை எழுப்புங்கள். அந்த ஜலத்தில் நாங்கள் வசிக்க இயலவில்லை என்றது.  

இப்படியாக தன் இருப்பிடத்தை காட்டிக்கொடுத்து கோள் சொன்ன தவளையை அக்னிபகவான் சபித்தார். ஹே! மண்டூகமே ! நீ சுவைகளை அறியாமல் போவாய் என்று கூறி வேறு இடம் சென்றார்.

( இப்படி அடுத்தவங்களை காரண காரியம் இல்லாமல் கோள் சொன்னால் கடைசிகாலத்தில் உண்ணும் உணவின் சுவையறியாமல் வாக்கு தடுமாறி நோயுறுவர் என்பது விதி)

ஆனால், தனக்கு உதவி செய்த தவளைக்கு தேவர்கள் வரம் அளித்தனர். அக்னியின் சாபத்தால் சுவை மறந்தாலும் அனேக வித வாக்குகளை உச்சரிப்பீர்கள். நீங்கள் வளைக்குள் உணவே உயிரோ பிரஜ்ஞையில்லாமல் இருந்தால் இந்த பூமியே உங்களை காப்பாற்றும். இருள் மூடின இரவிலும் சஞ்சரிப்பீர்கள் என்று தவளைக்கு வரமளித்து மீண்டும் அக்னியை தேடிச்சென்றனர்.

( இதனால் தான் தவளைகளின் வாக்கு பலவிதமாக உள்ளது ,அதனால் மழையையும் வருவிக்கின்றது).

#மஹாபாரதம்
#தங்கம்
#அக்னி

இந்த கதை முதலில் பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் ஏற்பட்ட உரையாடலில் பீஷ்மர் வஸிஸ்டருக்கும் பரசுராமருக்கும் நடந்த உரையடலை யுதிஷ்டிரருக்கு சொல்ல தொடங்கினார். அங்கே வஸிஸ்டர் பரசுராமருக்கு ஸ்வாயம்பு மனு தனக்கு (வஸிஸ்டர்) சொன்னதாக ஒரு கதை சொல்ல தொடங்கி உள்ளார்.

ஒரு மெயின் கதையில் உள்ள இரண்டாவது கிளைகதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
தேவர்கள் அக்னியை கண்டுபிடித்தாரா இல்லையா என்று ஒரு சின்ன commercial breakக்கு அப்பறம் நாளை பார்க்கலாம்.

ராம ராம ராம ராம


தங்கம் தோன்றிய கதை பகுதி ஒன்று...

தங்கம் தோன்றிய கதை -1

இது மூன்று பாகங்களாக வெளிவரும். அதனால் PL stay tuned with me...

பீஷ்ம யுதிஷ்டிர சம்வதே...

யுதிஷ்டிரர் : பிதாமஹ! எல்லா கர்மங்களுக்கும் எல்லா யாகங்களுக்கும் பூமி, பசு, பொன் இவைகளை தட்சிணை என்று சொல்கிறார்கள். அதில் பொன்னே முக்கியமாகவும் சிறந்த பரிசுத்தமாகவும் பசு ,பூமியை காட்டிலும் சிறந்ததாக உள்ளது. பொன் என்பது எது? அது எக்காலத்தில் உருவானது? எவ்வுருவமானது? அதன் தேவதை மற்றும் பலனென்ன ?  இது எதனால் சிலாகித்து சொல்லப்படுகிறது என்று கூறும்!!!...

பீஷ்மர் : அரசனே! கேள் ! நான் எனது தந்தை சந்தனு மஹாராஜா மரணமடைந்த போது சிராத்தம் கொடுப்பதற்காக கங்கையின் உற்பத்திக்கு போனேன். அப்போது என் தாயாகிய கங்கையும் உதவி செய்தாள். அப்போது அங்கு வந்த பல ரிஷிகளை அமர வைத்து தர்ப்பண முதலிய கர்மங்களை தொடங்கினேன்.  முதல் கருமத்தை முடித்து பின்பு பிண்டதானம் செய்ய தொடங்கினேன்.

அரசனே! அப்போது பூமியில் இருந்து அழகான தோள் வளையையும் தொங்குகின்ற அணிகளையுமுடைய ஒருகை அந்த பரப்பின தர்பங்களை(தர்பை) ஒதுக்கி கொண்டு கிளம்பிற்று.  அதை பார்த்து என் பிதாவே நேரில் வாங்கி கொள்கிறார் என்று சற்று நேரம் ஆச்சர்யமுற்றேன்.  அதன் பிறகு சாஸ்திரத்தை ஆராயும் போது எனக்கு திரும்பவும் வேறு எண்ணமுண்டாயிற்று..

(இப்படி நடந்திருந்தா... நாமளா இருந்தா சாஸ்திரத்தை காத்துல விட்டிருப்போம்...ஆனா பெரியவங்க அதை செய்யவே இல்லை...)

பிதாவின் கையில் பிண்டதானம் செய்யவேண்டும் என்ற விதி வேதங்களில்லை. மனிதன் கொடுக்கும் பிண்டத்தை பித்ருகள் நேரே வாங்குவதுமில்லை. தர்பங்களில் தான் பிண்டம் கொடுக்கவேண்டும் என்பதுதான் விதிக்கப்பட்டுள்ளது என்ற புத்தி உண்டாயிற்று. அதனால், சாஸ்திரத்தை மீறாமல் பிண்டத்தை தர்பங்களில் வைத்தேன். அதன் பிறகு என் தந்தையின் கை மறைந்தது.

பிறகு, என் கனவில் பித்ருக்கள் தோன்றினர்.  அவர்கள் என்னை பார்த்து "பரதஸ்ரேஷ்டனே! நீ தர்ம காரியத்தில் மயங்காமல் இருக்கிறாய்" இந்த நல்லறிவால் திருப்தி அடைந்தோம்.  

(PL note , பிண்டத்தால் மட்டும் இல்லாமல் பித்ருகள் நம்முடைய நல்ல அறிவாலும் திருப்தி அடைகிறார்கள்)

நீ சாஸ்திர பிரகாரம் செய்ததால் உன்னுடைய தர்மமும் ஆத்மாவும் சாஸ்திர வேதங்களும் பிரம்மதேவரும் ரிஷிகளும் நம்பும்படி செய்யப்பட்டு அசைக்கப்படாமல் நிலை பெற்றனர். நீ நல்ல காரியம் செய்தாய். ஆனால், பூமிக்கும் பசுக்களுக்கும் பிரதியாக பொன்னை (தங்கம்) தானமாக கொடுக்கவேண்டும். இப்படி செய்தால் நாமும் நம்முடைய முன்னோர்களும் பரிசுத்தராவோம். பிறகு நான் கண் விழித்தவுடன் பொன்னை கொடுப்பதில் எண்ணம் வைத்தேன்.

இந்நிலையில், நான் உனக்கு பரசுராமரை பற்றியும் கூற விழைகிறேன். பகவான் பரசுராமர் பூமியை வென்ற பிறகு அசுவமேத யாகம் செய்ய விழைந்தார். அந்த யாகத்தால் சத்திரியர்களை அழித்த  பாபம் விலகினாலும் அதை பரசுராமர் மனம் ஏற்க்கவில்லை. மனம் லேசாயிருப்பதாக உணரவில்லை. அதனால் அந்த மஹாத்மா ரிஷிகளிடம் சென்று கேட்டார்.

அந்த ரிஷிகள் , ஓ! (பரசு) ராமரே!  எதை தானம் செய்தால் நீ பரிசுத்தம் ஆவாய் என்பதை கூறுகிறோம்.  பசுக்களையும் பூமியையும் கொடுத்தால் ஒருவன் பரிசுத்தன் ஆவான். மேலும் சிறந்த பாவனமாகிய மற்றொரு தானத்தை பற்றியும் கூறுகிறோம் . தேவர்களுக்குரியதும் மிக்க ஆச்சர்யமான உருவமுள்ளதும் அக்னியில் பிறந்ததுமாகிய ஸ்வர்ணமென்று பெயர் பெற்ற ஒரு பொருள் முற்காலத்தில் தன் சக்தியினால் உலகை எரித்து கிளம்பியது. அதனால் அதை கொடுப்பவன் பயன் பெறுவான் என்றனர்.

பிறகு அந்த ரிஷிகூட்டத்தில் நடுவில் இருந்த பரசு ராமரை பார்த்து வசிஷ்டர் கூறலானார், (பரசு)ராமா! அனலுக்கொப்பான  ஒளியுள்ள பொன்னானது எப்படி உண்டானது என்பதை கேளும். அது நீர் நினைத்த பலன் கொடுக்கும். இவ்வுலகில் தானத்திற்க்கு முக்கியமாக சொல்லப்படுகிறது.

சிறந்த கைகளையுடயவனே! ஸ்வர்ணமானது எங்கிருந்து வந்தது எப்படி குணங்களில் சிறந்ததானது என்பதை கூறுகிறேன்...... என்று கூறலானார்.

தொடரும்...


27 நட்சத்திரத்திற்குரிய கடவுள்கள்

உங்கள் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் தெரியுமா? 27 நட்சத்திரத்திற்குரிய கடவுள்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய  கடவுள் யார்? அந்த நட்சத்திரத்தில் வேறு யாரெல்லாம் பிறந்துள்ளார்கள் என்பதை அறியலாம்

*அஸ்வினி நட்சத்திரத்தில் அஸ்வத்தாமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி.

*பரணி நட்சத்திரத்தில் துரியோதனன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி.

*கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகேயன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் முருகப் பெருமான்.

*ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகிருஷ்ணன்.

*மிருகசீரிடம் நட்சத்திரத்தில் புருஷமிருகம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.

*திருவாதிரை நட்சத்திரத்தில் கருடன், ருத்ரன், ஆதிசங்கரர் மற்றும் ராமானுஜர் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.

*புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீராமர்.

*பூசம் நட்சத்திரத்தில் பரதன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

*ஆயில்யம் நட்சத்திரத்தில் தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத் தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆதிசேசன் .

*மகம் நட்சத்திரத்தில் சீதை, அர்ச்சுணன் மற்றும் யமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்  ஸ்ரீசூரிய பகவான்.

*பூரம் நட்சத்திரத்தில் பார்வதி,மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆண்டாள் தேவி.

*உத்திரம் நட்சத்திரத்தில் மஹாலக்ஷ்மி மற்றும் குரு பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமகாலட்சுமி தேவி.

*அஸ்தம் நட்சத்திரத்தில் நகுலன்-சகாதேவன், மற்றும் லவ-குசன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகாயத்ரி தேவி.

*சித்திரை நட்சத்திரத்தில் வில்வ மரம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசக்கரத்தாழ்வார்.

*சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீநரசிம்மமூர்த்தி.

*விசாகம் நட்சத்திரத்தில் கணேசர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமுருகப் பெருமான்.

*அனுசம் நட்சத்திரத்தில் நந்தனம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீலட்சுமி நாரயணர்.

*கேட்டை நட்சத்திரத்தில் தர்மன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹ பெருமாள்.

*மூலம் நட்சத்திரத்தில் அனுமன் மற்றும் ராவணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆஞ்சநேயர்.

*பூராடம் நட்சத்திரத்தில் பிரகஸ்பதி பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஜம்புகேஸ்வரர்.

*உத்திராடம் நட்சத்திரத்தில் சல்யன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீவிநாயகப் பெருமான்.

*திருவோணம் நட்சத்திரத்தில் வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஹயக்கிரீவர்.
 
*அவிட்டம் நட்சத்திரத்தில் துந்துபி வாத்தியம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள்.

*சதயம் நட்சத்திரத்தில் வருணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் .

*பூரட்டாதி நட்சத்திரத்தில் கர்ணன், மற்றும் குபேரன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஏகபாதர்.

*உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜடாயு மற்றும் காமதேனு பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமகாஈஸ்வரர்.

*ரேவதி நட்சத்திரத்தில் அபிமன்யு மற்றும் சனிபகவான் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅரங்கநாதன்