சனி, 24 ஆகஸ்ட், 2019

விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் (பகுதி-1)

பூர்வ பாகம் (முற்பகுதி) விஷ்ணு வணக்கம்

1. ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர் புஜம்
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே

வெண்மையான ஆடையை உடுத்தியவரும், எங்கும் நிறைந்துள்ளவரும், நிலவு போன்ற குளிர்ந்த திருமேனி வண்ணத்தைப் பெற்றவரும், நான்கு கைகளை உடையவரும், மலர்ச்சி பொங்கும் திருமுகத்தைக் கொண்டவருமான பகவானை எல்லாத் தடைகளும் நீங்க வேண்டித் தியானிப்போம்.

ஸேனைமுதலியார் வணக்கம்.

2. யஸ்ய த்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரஸ்ஸதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே

யானை முகன் முதலான பரிவாரக் கூட்டங்களுக்குத் தலைவராகவும், தம்மையே தியானம் செய்பவருக்கு வருகின்ற எல்லா இடையூறுகளையும் நீக்கி மகிழ்ச்சி அளிப்ப வருமாகிய ஸேனை முதல்வரின் திருவடிகளை வணங்குகிறோம்.

வியாசர் வணக்கம்.

3. வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே :பௌத்ர மகல்மஷம்
பராஸராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத் தொகுத்தளித்தவர் வியாச பகவான். அவரை முதலில் வணங்குவோம். ஸ்ரீராமாயணத்தில் மிகவும் சிறந்து விளங்குபவர் வசிஷ்டர். வசிஷ்டரின் பிள்ளை சக்தி. சக்தியின் பிள்ளை பராசரர். பராசரரின் பிள்ளை வியாசர். வியாசரின் பிள்ளை சுகப்பிரம்மம்.

இவ்வாறு திருமாலின் தமராகப் பலதலைமுறைகளாக இருந்து வரும் நல்ல மரபில் குற்றமற்ற தவச் செல்வராக விளங்குபவர் வியாச பகவான். இத்தகைய பெருமைக்குரிய வியாச பகவானை முதலில் வணங்குவோம்.

4. வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணுவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:

விஷ்ணு வடிவமாக உள்ள வியாசராகவும், வியாசர் வடிவமாக உள்ள விஷ்ணுவாகவும், வேதக் களஞ்சியமாகவும் உள்ள வசிஷ்டர் குலத்தோன்றலாகிய வியாச பகவானை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம்.

மகாவிஷ்ணு வணக்கம்.

5. அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே

மாறுபாடில்லாதவராகவும், தூய்மை உடையவராகவும், என்றும் உள்ளவராகவும், எப்பொழுதும் ஒரே வடிவத்தை உடையவராகவும், அனைத்தையும் வெற்றி கொள்பவராகவும், பரம்பொருளாகவும் விளங்குகின்ற மகாவிஷ்ணுவை வணங்குவோம்.

6. யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணுவே ப்ரப விஷ்ணவே
ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

சர்வ வல்லமை பொருந்தியவர் விஷ்ணு. பிறவித் துன்பமாகிய தளையானது, அப்பெருமானை நினைத்த மாத்திரத்திலேயே விடுபட்டுப் போய்விடும். அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய மகா விஷ்ணுவை வணங்குவோம்.

(மேலே கூறப்பட்ட ஆறு ஸ்லோகங்களும் மகா பாரதத்தில் உள்ள ஸஹஸ்ரநாமப் பகுதியில் காணப்படவில்லை. எனவே, பாஷ்யகாரர்களும் (விளக்கவுரையாளர்களும்) இவற்றுக்கு விளக்கவுரை எழுதவில்லை. எனினும், நெடுங்காலமாக இந்த ஆறு ஸ்லோகங்களும் பக்தர்களால் வழிவழியாகப் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது என்பர் அறிஞர்.)

பூர்வ பாகம் (முற்பகுதி)
பாகம் 2

வியாசரின் மாணாக்கர் வைசம்பாயனர். ஜனமே ஜயன் என்னும் மன்னனுக்குப் பாரதத்தை உபதேசித்தவர். ஜனமே ஜயன் என்னும் மன்னவன் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பெருமையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் அவாவினால், வைசம்பாயனர் ஜனமே ஜயனுக்கு இதனை உபதேசித்தார்.

ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்துக்குப் பீடிகையாகத் தொடங்குகிறது இந்த வரி.

ஸ்ரீ வைஸம்பாயந உவாச...

ஸ்ரீவைசம்பாயனர் ஜனமே ஜயனிடம் கூறியது.
இப்படித் தொடங்குகிறது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம உபதேசம்.

1. ஸ்ருத்வா தர்மா நஸேஷேண பாவநாநி ச ஸர்வஸ:
யுதிஷ்டிர : ஸாந்த நவம் புநரே வாப்ய பாஷத

எல்லாத் தருமங்களையும், பாவங்கள் அனைத்தையும் போக்கும் முறைகளையும் பீஷ்மர் தருமருக்குக் கூறிவந்தார். இவை அனைத்தையும் ஒன்று விடாமல் தருமர் பீஷ்மரிடம் கேட்டறிந்தார். மேலும் பீஷ்மரை நோக்கித் தருமர் மீண்டும் கேட்கலானார்.

யுதிஷ்டிர, உவாச - (தருமர் கூறியது):

2. கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்
ஸ்துவந்த : கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்

3. கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்

சந்தனு மகாராஜாவுக்கும் கங்காதேவிக்கும் பிறந்தவர் பீஷ்மர். இவர் மகா ஞானி. ஞானத்தைச் சொல்பவர் பீஷ்மர், கேட்பவர் தரும தேவதையின் புதல்வர். சொல்லப்படும் பொருளோ ஆசார்யரால் விரும்பிப் போற்றப்படுகிறது. (கேட்பவனுக்கு நல்லவற்றைச்செய்யும் என்னும் நம்பிக்கையுடனும், நல்ல மனதுடனும் சொல்கிறார். சொல்லும் பீஷ்மரும், கேட்கும் தருமரும் ஒருவருக்கொருவர் பிரியமானவர். எனவே, மேன்மையை அளிக்கும் நல்லவை இங்கே கேட்கப்படுகின்றன.) தர்மங்களில் சிறந்ததாகப் பீஷ்மர் எதைக் கருதுகிறாரோ, அதை வெளியிட வேண்டுமென்று தருமர் கேட்கிறார்:

1. சாஸ்திரங்களில் மிக உயர்ந்த தெய்வமாக - ஒப்பற்ற தெய்வமாகக் கூறப்படும் தெய்வம் எந்தத் தெய்வம் என்று கருதுகிறீர்?

2. இகம், பரம் ஆகிய இரண்டிலும் விருப்பமுடன் அடையத்தக்க பொருளாக இருப்பது எது?

3. யாரைப் புகழ்ந்து பாடி வழிபட்டால் உயர்ந்த நலனைப் பெற முடியும்.

4. யாரை மனதால் தியானித்தும், வாக்கால் திருநாமங்களைச் சொல்லியும், மலர் கொண்டு கையினால் அர்ச்சித்தும் பெறுதற்கரிய பலனைப் பெறமுடியும்?

5. எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாகத் தங்களால் மனதாரக் கருதும் தருமம் எது?

6. பிறத்தல், வளர்தல், மூப்பெய்தல், இறத்தல், புண்ய பாபங்களுக்கேற்பப் பயனை அனுபவித்தல் ஆகியவற்றைக் கொண்ட உயிர்கள் எதை ஜபித்துப் பிறவித் தளையிலிருந்து விடுபட முடியும்? (மோட்ச சாதனத்தைத் தருவது எது?)

(இவ்வாறு கேள்விகள் கேட்ட தருமருக்குப் பீஷ்மர் கூறலானார்.)

ஸ்ரீ பீஷ்ம உவாச:

ஸ்ரீ பீஷ்மர் கூறலானார்:

4. ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புரு÷ஷாத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித:

அசைபவை, அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட உலகத்துக்குத் தலைவனும், தேவர்களுக்கெல்லாம் தேவனும், அளந்து காணமுடியாத பெருமை உடையவனுமாகிய வள்ளல்களில் சிறந்தவனை இடைவிடாத முயற்சியுடன் அவனது ஆயிரம் திருநாமங்களைச் சேதனன் துதி செய்தும்;

5. தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம்
த்யாயந் ஸ்துவந்ந மஸ்யம்ஸ் யஜமா நஸ் தமேவ ச

ஸஹஸ்ரநாமத்துக்குப் பொருளாக உள்ள - மாறுபாடில்லாத அந்தப் பரம்பொருளையே இடைவிடாத நினைவின் தொடர்ச்சியாக - தைல தாரையைப் போல் பக்தியுடன் அர்ச்சித்தும், எனதாவியும் உனதே என்று தாளும் தடக்கையும் கூப்பிக் கோல் போல் விழுந்து வணங்கியும் மேலும் தியானித்தும் வணங்கியும் வழிபடுபவன்;

6. அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வ லோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வ துக்காதிகோ பவேத்

ஆதியும் அந்தமும் இல்லாமல் எல்லாக் காலங்களிலும் இருப்பவனும், எங்கும் நிறைந்துள்ளவனும், எல்லா உலகங்களுக்கும் மேலான தலைவனும், எல்லா நடப்புகளையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவனுமாகிய விஷ்ணுவை எப்போதும் போற்றிவருபவன் எல்லாத் துன்பங்களையும் கடந்து எம்பெருமானைச் சேர்ந்து பகவத் அநுபவமான எல்லையற்ற ஆனந்தத்தை அநுபவிப்பான்.

7. ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்த நம்
லோக நாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம்

வேதத்தினிடமும் தவத்தினிடமும் நட்பு கொண்டவனும், எல்லாத் தருமங்களையும் அறிபவனும், உலகங்களால் கொண்டாடப்படும் புகழை வளர்ப்பவனும், எல்லா உலகங்களுக்கும் தலைவனும், உயர்ந்த ஐஸ்வர்யங்களை இயல்பாக உடையவனும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே கருணை காட்டுபவனும், பரம்பொருளாக இருந்து எல்லா உயிர்களுக்கும் பிறப்பு இறப்பினைக் கூட்டுவிப்பவனுமாகிய பிரம்மத்தையே ஒருவன் போற்றி வருவானாயின், அவன் எல்லாத் துன்பங்களையும் கடந்து செல்பவன் ஆவான்.

8. ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோ மத:
யத் பக்த்யா  புண்டரீகாக்ஷம் ஸ்தவை ரர்ச்சைந் நர: ஸதா

செந்தாமரைக் கண்ணனான பகவானை, மனிதனாகப் பிறந்தவன் எப்போதும் பக்தியுடன் அவனது பெருமைகளைச் சொல்லும் தோத்திரங்களால் வழிபாடு செய்யக் கடமைப் பட்டிருக்கிறான்.

இவ்வாறு வழிபாடு செய்யும் தருமத்தையே எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

9. பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப:
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம்

சிறந்ததும் பெரியதுமாகிய ஒளி எதுவோ, சிறந்ததும் பெரியதுமாகிய தவமே வடிவாக உள்ளது எதுவோ, சிறந்ததும் பெரியதுமாகிய பிரம்மம் எதுவோ, சிறந்த புகலிடம் எதுவோ ஒப்பற்றதாகிய அதுவே அடையத்தக்க புகலிடம்.

10. பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம்
தைவதம் தேவதாநாம் ச பூதாநாம் யோவ்யய: பிதா

பரிசுத்தமானவற்றுள் பரிசுத்தமாகவும், மங்களமானவற்றுள் மங்களமாகவும், தெய்வங்களுக்குள் தெய்வமாகவும், உயிர்களுக்குள் உயிர்தரும் தந்தையாகவும் உள்ளவன் யாரோ, அவனே உலகில் ஒரே தெய்வமாக இருக்கிறான்.

11. யத: ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ் யுக க்ஷயே

12. தஸ்ய லோக ப்ரதா நஸ்ய ஜகந் நாதஸ்ய பூபதே
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம்

உயிர்கள் அனைத்தும் ஆதியுகத்தின் தொடக்கத்தில் எவரிடமிருந்து பிறந்தனவோ, யுகத்தின் முடிவில் மீண்டும் அவை எவரிடத்தில் மறைகின்றனவோ, உலகத்தைத் தாங்கிக் கொண்டிருப்பவரும், உலகத்துக்குக் காரணமானவரும், உலக நாயகருமாக எங்கும் விளங்குபவர் எவரோ அவரே விஷ்ணு. இத்தகைய உயர்வும் சிறப்பும் மிக்க மகாவிஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்கள் பாவங்களையும், பயங்களையும் போக்குவன. அந்த ஆயிரம் நாமங்களையும் என்னிடம் கேட்பாயாக.

(இவ்வாறு அம்புப் படுக்கையில் இருந்தவாறே பீஷ்மர் தருமபுத்திரருக்கு ஆயிரம் நாமங்களைக் கூறலானார். மேலும், பீஷ்மர் தருமருக்குக் கூறுகிறார்.)

13. யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மந:
ரிஷிபி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே

பகவான் அளவிட முடியாத பெருமையுடையவன். அவனே மகாத்மா. எந்தெந்த நாமங்கள் பகவானுடைய கல்யாண குணங்களினாலும், சரிதத்தினாலும் பிரசித்தி பெற்றவையோ, ஆத்ம ஞானிகளான ரிஷிகளால் எங்கும் பாடப்பெற்றவையோ அவற்றை ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு உனக்குச் சொல்லுகிறேன். (இந்த இரண்டாம் பகுதியில் உள்ள ஸ்லோகங்கள் பதின்மூன்றும் மகாபாரதத்தில் உள்ளன. பாஷ்யங்களிலும் உள்ளன.)

(பூர்வ பாகம்(முற்பகுதி)

பாகம் 3

1. ருஷிர் நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாந் ரிஷி:
சந்தோ அநுஷ்டுப் ததா தேவோ பகவாந் தேவகீ ஸுத:

2. அம்ருதாம் ஸுத்பவோ பீஜம் ஸக்திர் தேவகி நந்தந:
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஸாந்த்யர்த்தே விநி யுஜ்யதே

3. விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புரு÷ஷாத்தமம்

வேதவியாசர் ஆயிரம் திருநாங்களைக் கண்டறிந்த மகரிஷி. இந்த ஸ்லோகங்கள் அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்தவை. அநுஷ்டுப் சந்தஸ் என்பது 32 உயிரெழுத்துகளுள்ள ஸ்லோகம். இந்த ஆயிரம் திருநாமங்களுக்குரிய தேவதை, தேவகி புத்திரனான ஸ்ரீகிருஷ்ண பகவான்.

அம்ருதாம் சூத்பவ. என்பது (சந்திர வம்சத்தில் உதித்தவன்) பீஜம் (ஆதாரம்.) தேவகி நந்தனன் என்பது சக்தி. த்ரிஸாமா என்பது (சாம ரிக்குகளால் பாடப்பட்டவன்) இதயம்.

மந்திர ஜபம் சாந்தியின் பொருட்டுப் பயன்படுகிறது. இதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கப்பெறுகிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளவரும், எப்போதும் வெற்றியையே உடையவரும், எல்லாவற்றிலும் உறைபவரும் , பல வடிவங்களைக் கொண்டவரும், அரக்கர்களுக்குப் பகைவரும், புரு÷ஷாத்தமராகவும் உள்ள மஹா விஷ்ணுவை வணங்குகிறேன்.

(இந்த மூன்றாம் பகுதி பாரதத்திலும் இல்லை; பாஷ்யங்களிலும் இல்லை. நடைமுறையில் மட்டுமே உள்ளது.)

பூர்வ நியாஸம்

(மூன்றாம் பாகத்திலுள்ள ஸ்லோகங்கள் உரைநடையாக அநுசந்திக்கும் முறை இனி சொல்லப்படுகிறது.

அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவாந் ரிஷி:

அநுஷ்டுப் சந்த:

ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா
ஸ்ரீமந் நாராயணோ தேவதா
அம்ருதாம் ஸுத்பவோ பாநுரிதி பீஜம்;
தேவகீ நந்தந: ஸ்ரேஷ்டேதி ஸக்தி;;
உத்பவ; ÷க்ஷõபணோ தேவ இதி பரமோ மந்த்ர;;
சங்க ப்ருந் நந்த்கீ சக்ரீ தி கீலகம்;
சார்ங்க தந்வா கதாதர இத்யஸ்த்ரம்
ரதாங்க பாணி ர÷க்ஷõப்ய இதி நேத்ரம்;
த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம்;;
ஆநந்தம் பர ப்ரஹ்மேதி யோநி;;
ருது: சு தர்ஸந: கால இதி திக்பந்த;;
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யாநம்;
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே
ஸ்ரீ ஸஹஸ்ரநாம ஜபே விநியோக;

விஷ்ணுவின் இந்த திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மகாமந்திரநாம ஸ்தோத்ர மகா மந்திரத்துக்குப் பகவான் வேதவியாசர் ரிஷி; அநுஷ்டுப் சந்தஸ்; பரமாத்வான ஸ்ரீமகா விஷ்ணு - ஸ்ரீமந்நாராயணன் தேவதை; சந்திர குலத்துதித்த சூரியன் குலவிளக்கு என்பது பீஜம் (மூலகாரணம்); தேவகீ நந்தனாகிய ஸ்ரீகிருஷ்ணன் சக்தி; உத்பவ: ÷க்ஷõபனோ தேவ; என்பது இதன் உயர்ந்த மந்திரமாம்; திருவாழி, திருச்சக்கரம், நாந்தக வாள் ஏந்தியவன் கீலகம் (அச்சாணி); இதன் காப்பு (கவசம்) த்ரிஸாமா ஸாமக; ஸாம; ஆநந்தம் பரப்ரஹ்ம என்பது யோநி (கர்ப்பம்); ருதுஸ்ஸுதர்சந: கால என்பது திக்குகளை அடக்கிப் பரப்பு; (எத்திக்கிலிருந்தும் தீமை வராமல் இந்த மகாமந்திரத்தால் காப்பு); எங்கும் நிறைந்தவன் என்பது தியானம், எம்பெருமானுக்குக் கைங்கர்யமாக அவனுடைய திருநாமங்களை அநுஸந்தித்துத் தொழுதல் அதாவது ஸ்ரீமஹா விஷ்ணுவின் திருவருள் சித்திக்கும் பொருட்டு ஸஹஸ்ர நாம ஜபத்தில் இதற்குப் பயன் என்பதாம்.

(மூன்றாம் பகுதி வசனம் முற்றுப் பெறுகிறது.)

தியான சுலோகங்கள்

த்யாநம்

1. க்ஷீரோ தந்வ ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்தி காநாம்
மாலா க்லுப்தா ஸநஸ்த : ஸ்படிக மணிநிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க:
கப்ரை ரப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை:
ஆநந்தீ ந : புநீயா தரிநளிந கதா ஸங்க பாணிர் முகுந்த :

2. பூ : பாதௌ யஸ்ய நாபிர் வியத சுரநிலஸ் சந்த்ர ஸுர்யௌச நேத்ரே
கர்ணா வாஸா : ஸிரோ த்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேய மப்தி:
அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸுர நர ககோ போகி கந்தர்வ தைத்யை:
சித்ரம் ரம்ரம் யதே தம் த்ரிபுவந வபுஷம் விஷ்ணு மீஸம் நமாமி

3. ஸாந்தா காரம் புஜக ஸயநம் பத்மநாபம் சுரேஸம்
விஸ்வாதாரம் ககந ஸத்ருஸம் மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம்
வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்

4. மேக ஸ்யாமம் பீத கௌஸேய வாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத் பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரீ காய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம்

5. ஸஸங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸீரு ஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ் ஸ்தல சோபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம்

6. சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸநோ பரி
ஆஸீந மம்புதஸ் யாமம், ஆயதாக்ஷ மலங்க்ருதம்

7. சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ண மாஸ்ரயே

1. தூய்மையான இரத்தினங்களை மணல் பரப்பாக உள்ள திருப்பாற்கடல் எனப்படும் இடத்தில் முத்துமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட ஆசனத்தில் எழுந்தருளியிருப்பவரும், படிக மணிகளைப் போன்ற முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவரும், மேலே விளங்கும் வெண்மையான மேகங்கள் பலவற்றால் துளிக்கப்படும் அமுதத் திவலைகளால் மகிழ்பவரும், திருவாழி திருச்சங்கு கதை பத்மம் ஆகியவற்றைத் திருக்கைகளில் ஏந்தியவரும், மேலே உலவுகின்ற வெண்மையான மேகங்கள் பொழிகின்ற அமிர்த தாரைகளால் மகிழ்பவருமான முகுந்தன் ஸ்ரீமந் நாராயணன் நம்மைப் புனிதர் ஆக்கிக் காப்பாராக!

2. (இந்தச் சுலோகம் பெருமானுடைய பெரு வடிவத்தை வருணிக்கிறது.)

பூமி, பெருமானின் திருவடிகள், ஆகாயம் அவனது நாபி; வாயு பிராணன்; சந்திரனும் சூரியனும் திருக்கண்கள்; திக்குகள் திருச்செவிகள்; தேவலோகம் திருமுடி; அக்கினி திருமுகம்; சமுத்திரம் வயிறு; தேவர், மனிதர், பறவைகள், மிருகங்கள், நாகர், கந்தருவர், அசுரர் எனப்பலரும் உள்ள உலகங்கள் அவனுள் ஆடிக்களிக்கின்றன. மூன்று உலகங்களும் அவனது திருமேனியாக உள்ளன. அனைத்தையும் காப்பவனான இப்படிப்பட்ட விஷ்ணுவை வணங்குகிறேன்.

3. பெருமான் சாந்தமே வடிவானவர்; திருவனந்தாழ்வானாகிற திருவணை மேல் பள்ளி கொள்பவர்; நாபியில் தாமரைப்பூவை அழகாகப் பெற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்; உலகுக்கு ஆதாரமாய் இருப்பவர். ஆகாயம் போல் பரந்துள்ளவர்; மேக வண்ணர்; அனைத்து லக்ஷணங்களும் பொருந்திய திருமேனி உடையவர்; திருமகளின் உள்ளத்தைக் கவர்ந்தவர்; செந்தாமரைக் கண்ணர்; யோகத்தில் இருந்து கொண்டு தியானிக்கும் ரிஷிகளின் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவர்; பிறவிப் பிணியைப் போக்குபவர்; அனைத்துலகுக்கும் தலைவர். இத்தகைய மகா விஷ்ணுவை வணங்குகிறேன்.

4. கருமுகில் போன்ற வண்ணத்தையுடைய திருமேனியர், மஞ்சள் பட்டாடை உடுத்தியவர்; ஸ்ரீவத்சம் எனப்படும் மறுவைத் திருமார்பில் அடையாளமாகக் கொண்டவர்; கௌஸ்துப மணியால் பிரகாசிக்கும் அங்கங்களை உடையவர்; புண்ணிய புருஷர்களால் சூழப் பெற்றவர்; தாமரை போன்ற திருக்கண்களை உடையவர். எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற தலைவர். இப்படிப்பட்ட மகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.

5. சங்கும் சக்கரமும் தாங்கியவராய், முடியும் குண்டலமும் அணிந்தவராய், பொன்னாடை உடுத்தியவராய், தாமரைக் கண்ணராய், மாலை அணிந்த மார்பில் கௌஸ்துபம் ஒளி வீசுபவராய், நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன்.

6. பாரிஜாத மரத்தின் நிழலில் தங்கச் சிம்மாசனத்தில் அமர்ந்தவரும், மேக வண்ணரும், நீண்டு அகன்ற கண்களை உடையவரும், அலங்கரிக்கப்பெற்றவரும்.

7. சந்திரன் போன்ற முகத்தினரும், நான்கு திருக்கரங்களை உடையவரும், ஸ்ரீவத்ஸம் தோன்றும் திருமார்பினரும், ருக்மணி சத்யபாமை ஆகிய இருவருடனும் சேர்ந்து விளங்குபவருமாகிய ஸ்ரீகிருஷ்ணரைச் சரணடைகிறேன்.

(இந்த ஏழும் தியான சுலோகங்கள், இவை மகா பாரதத்திலும், பாஷ்யங்களிலும் இல்லை என்பர் அறிஞர்.)
(தியான ஸ்லோகங்கள் முடிவுற்றன.)

தியான முடிவில் பஞ்ச பூஜை செய்தல் நலம். அவையாவன:
1. லம் - ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி.
2. ஹம் - ஆகாஸாத்மனே புஷ்பை; பூஜையாமி.
3. யம் - வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி.
4. ரம் - அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி.
5. வம் - அம்ருதாத்மனே அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி.
ஸம் - ஸர்வாத்மனே ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி.
***********
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம்

1. ஓம் விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு:
பூத க்ருத்பூத ப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந:

1. விஸ்வம் - இது மேலான நிலையைச் (பரத்வத்தைச்) சொல்லும் திருநாமம்.
2. விஷ்ணு - எல்லாவற்றிலும் அந்தர்யாமியாகப் புகுந்திருப்பவன்.
3. வஷட்கார - எல்லாவற்றையும் தம் வசத்தில் வைத்துக் கொண்டு ஆள்பவன் - நியமிப்பவன்.
4. பூதபவ்ய பவத்ப்ரபு - முக்காலத்திலுள்ள பொருள்களுக்கெல்லாம் தலைவன்.
5. பூதக்ருத் - (தனதிச்சையாலே) எல்லாவற்றையும் படைப்பவன்.
6. பூதப்ருத் - எல்லாவற்றையும் தாங்குபவன்.
7. பாவ: எல்லாப் பொருள்களுடனும் கூடியிருப்பவன்.
8. பூதாத்மா - உலகத்துக்கு உயிராயிருப்பவன்.
9. பூதபாவந- எல்லாப் பொருள்களையும் விருத்தியடையும்படிப் பாதுகாத்து வளரச் செய்பவன்.

2. பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி :
அவ்யய : புருஷஸ் ஸாக்ஷீ ÷க்ஷத்ரஜ்ஞோ அக்ஷர ஏவ ச

10. பூதாத்மா-தூய்மையான இயல்புடையவன்.
11. பரமாத்மா- பரமபுருஷன் (மேலானவன்)
12. முக்தாநாம் பரமாகதி - முக்தி அடைந்தவர் அடையும் உயர்ந்த இடம்.
13. அவ்யய: (முக்தனைத் தன்னைவிட்டு) விலக்காதவன்.
14. புருஷ -(வேண்டியவற்றையெல்லாம்) மிகுதியாகக் கொடுப்பவன்.
15. ஸாக்ஷீ - (தன்னை அனுபவித்து மகிழும் முக்தர்களைப்) பார்த்து மகிழ்பவன்.
16. ÷க்ஷத்ரஜ்ஞ - (முக்தர்கள் தம்மை இடைவிடாமல் அநுபவிப்பதற்குத் தக்க) இடமான விபூதியை அறிந்தவன்.
17. அக்ஷர-(அநுபவிக்க அநுபவிக்க மேலும் மேலும் பெருகும் இன்ப வெள்ளம்) குறையாதவன்.

3. யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர:
நாரஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மாந் கேஸவ : புரு÷க்ஷõத்தம:

18. யோக - மோட்ச சாயுஜ்யத்துக்குத்தானே உபாயமாக இருப்பன்.
19. யோகவிதாம் நேதா - தன்னையை உபாயமாகப் பற்றாதவர்களையும், வலியச் சென்று தானே வழிகாட்டுபவன்.
20. ப்ரதாந புருஷேச்வர - பிரக்ருதியையும், ஜீவாத்மாவையும் எல்லா வகையாலும் நியமித்து நடத்துபவன்.
21. நாரஸிம்ஹவபு:- மனிதனும் சிங்கமும் கலந்த தெய்வீக உருவத்தைப் பக்தனுடைய பயத்தைப்போக்க எடுப்பவன்.
22. ஸ்ரீமாந் - அழகன். (அழகினால் பக்தர்களை மகிழச்செய்து உலகத்தைக் காப்பவன்)
23. கேசவ:- (உவமை கூற முடியாத கருமையும் மனமும் உடைய) கருங்குழலை உடையவன்.
24. புரு÷ஷாத்தம:- புருஷர்களுள் மிகவும் சிறந்தவன்.

4. ஸர்வஸ் ஸர்வஸ் சிவஸ் தாணுர் பூதாதிர் நிதி ரவ்யய:
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர:

25. ஸர்வ - எல்லாமாயிருப்பவன்.
26. சர்வ - அழிப்பவன் - (தீமையை விலக்குபவன்; மங்களம் தருபவன்.)
27. சிவ-மங்களத்தை அளிப்பவன்.
28. ஸ்தாணு - (அடியார்களுக்கு அருள்புரிவதில்) நிலையாய் இருப்பவன்.
29. பூதாதி - எல்லாவற்றாலும் விரும்பப் படுபவன்; எல்லாவற்றையும் சரீரமாக உடையவன்.
30. நிதிரவ்யய: குறைவற்ற நிதியாய் இருப்பவன்.
31. ஸம்பவ - (தேவைப்படும் போதெல்லாம்) அவதாரம் செய்பவன்.
32. பாவந: - வாழ்விப்பவன்.
33. பர்த்தா - ஆதரிப்பவன் (காப்பாற்றுபவன்)
34. ப்ரபவ: சிறப்பாகத் தோன்றுபவன். (தன்னிச்சையால் பிறப்பவன்)
35. ப்ரபு - ஸமர்த்தன். (தனது மேன்மை சிறிதும் குன்றாதவன்)
36. ஈஸ்வர:- ஆளுகின்ற ஈசன்.

5. ஸ்வயம்பூஸ் ஸம்பு ராதித்ய : புஷ்கரா÷க்ஷõ மஹாஸ்வந :
அநாதி நிதநோ தாதா விதாதா தாது ருத்தம:

37. ஸ்வயம்பு - தானே தோன்றியவன்.
38. சம்பு - பேரின்பத்தை விளைவிப்பவன்.
39. ஆதித்ய :- (சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பதால்) சூரியன்.
40. புஷ்கராஜ: தாமரைக் கண்ணன்.
41. மஹாஸ்வந: வழிபடுவதற்கு உவப்பான திருநாமத்தை உடையவன்.
42. அநாதிநிதந: ஆதியும் அந்தமும் இல்லாதவன்.
43. தாதா - படைப்பவன்.
44. விதாதா - கர்ப்பத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்பவன்.
45. தாது ருத்தம - பிரமனைக் காட்டிலும் சிறந்தவன்.

6. அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ : பத்மநாபோ அமரப்ரபு :
விஸ்வகர்மா மநுஸ் த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ :

46. அப்ரமேய: அறிவுக்கெட்டாத பெருமைகளை உடையவன்.
47. ஹ்ருஷீகேச: இந்திரியங்களை அடக்கி ஆள்பவன்.
48. பத்மநாபன்: நாபியிலிருந்து நீண்ட தண்டையுடைய தாமரைப்பூ அழகன்.
49. அமரப்ரபு : தேவர்கள் தலைவனாயிருந்து நிர்வாகம் செய்பவன்.
50. விச்வகர்மா: உலக நடைமுறைகளைத்தானே செய்பவன்.
51. மநு: மனதில் நினைத்த மாத்திரத்திலேயே உலக நியதிகளைச் செய்பவன்.
52. த்வஷ்டா: பெயர்கள், உருவ அமைப்புகள் முதலானவற்றைப் பாகுபாடு செய்பவன்.
53. ஸ்தவிஷ்ட : மிகவும் பெரியவன்.
54. ஸ்தவிர: எக்காலத்தும் நிலைத்திருப்பவன்.
55. த்ருவ : மாறாமல் நிலையாய் இருப்பவன்.

7. அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ : பிப்ரதர்தந:
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம்

56. அக்ராஹ்ய: கிரகிக்க முடியாதவன். (தானே காரணமாகவும் (கர்த்தாவாகாவும் இருப்பவன்)
57. சாச்வத: நிரந்தரமாக இருப்பவன்.
58. க்ருஷ்ண: மிகுந்த மகிழ்ச்சி உடையவன்.
59. லோஹிதாக்ஷ: செந்தாமரைக் கண்ணன்.
60. ப்ரதர்தந: (பிரளய காலங்களில் எல்லாவற்றையும் அழிப்பவன்) தன்னுள் மறைத்து வைத்திருப்பவன்.
61. ப்ரபூத: நிறைந்தவன்.
62. த்ரிககுத்தாமா: (த்ரிககுப்தாமா) - பரமபதத்தை இருப்பிடமாக உடையவன். (மூன்று முகப்புகளை உடைய வராகமாக அவதரித்தவன்)
63. பவித்ரம்: தூய்மையான வடிவினை உடையவன்.
64. மங்களம் பரம்: சிறந்த மங்களமாய் இருப்பவன்.

8. ஈஸாந : ப்ராணத : ப்ராணோ ஜ்யேஷ்ட ஸ்ரேஷ்ட : ப்ரஜாபதி :
ஹிரண்ய கர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதந :

65. ஈசாந: அடக்கி ஆள்பவன்.
66. ப்ராணத: பிராணனைக் கொடுப்பவன். (பலன் தருபவன்)
67. ப்ராண: உயிராக இருப்பவன்.
68. ஜ்யேஷ்ட: முதன்மையானவன்.
69. ச்ரேஷ்ட: மிகவும் மேன்மையுற்றவன்.
70. ப்ரஜாபதி: நித்ய சூரிகளுக்குத் தலைவன். (அமரர்கள் அதிபதி.)
71. ஹிரண்யகர்ப்ப: மிகவும் விரும்பத்தக்க பரம பதத்தில் நித்யவாசம் செய்பவன்.
72. பூகர்ப்ப: பூமிப்பிராட்டிக்கு நாயகன்.
73. மாதவ: திருமகள் கேள்வன்.
74. மதுஸூதந: மது என்னும் அரக்கனை அழித்தவன்.

9. ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம : க்ரம :
அநுத்தமோ துராதர்ஷ : க்ருதஞ : க்ருதி ராத்மவாந்

75. ஈஸ்வர: அனைத்துக்கும் தலைவன்.
76. விக்ரமீ - மிக்க வலிமையுடையவன்.
77. தந்வீ - சாரங்கம் என்னும் வில்லை உடையவன்.
78. மேதாவீ - அனைத்தும் அறிந்தவன்.
79. விக்ரம: கருட வாகனன்.
80. க்ரம: (அளவற்ற ஐஸ்வர்யங்களால்) செழிப்புற்றவன்.
81. அநுத்தம: தனக்கு மேம்பட்டவர் இல்லாதவன்.
82. துராதர்ஷ: கலக்க முடியாதவன்.
83. க்ருதஜ்ஞ : (சேதநர்களால் செய்யப்படும் புண்ணிய பாபரூபமான) செயல்கள் அனைத்தையும் அறிபவன்.
84. க்ருதி: செய்விப்பவன்.
85. ஆத்மவான் - எல்லா ஆன்மாக்களையும் தன்னுடைய ஆன்மாவாக உடையவன்.

10. சுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா : ப்ரஜாபவ :
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வ தர்ஸன:

86. ஸுரேச: பிரமாதி தேவர்களுக்குத் தலைவன்.
87. சரணம் - உபாயமாய் இருப்பவன்.
88. சர்ம - உயர்ந்த பலனாய் இருப்பவன்.
89. விச்வரேதா: அகில உலகங்களுக்கும் காரணமானவன்.
90. ப்ரஜாபவ: பிரஜைகளுக்கு இடமாயிருப்பவன்.
91. அஹ: பகல் போலத் தெளிவாக விளங்குபவன்.
92. ஸம்வத்ஸர: சேதநரிடம் நன்றாக இருப்பவன்.
93. வ்யால: தன்வசப்படுத்துபவன்.
94. ப்ரத்யய: நம்பிக்கை உண்டாக்குபவன்.
95. ஸர்வதர்சந: தனது மகிமைகளை எல்லாம் பக்தர்களுக்கு முழுமையாகக் காட்டுபவன்.

11. அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதி ரச்யுத :
வ்ருஷா கபிரமேயாத்மா ஸர்வ யோக விநிஸ்ருத :

96. அஜ: தடைகளை விலக்குபவள்.
97. ஸர்வேச்வர: (தன்னைப் பற்றியவரைத்) தானே சென்றடைபவன்.
98. ஸித்த: தேடி அலைய வேண்டாதபடித்தானே உபாயமாய் நிற்பவன்.
99. ஸித்தி: அடைய வேண்டிய பேறாக இருப்பவன்.
100. ஸர்வாதி: எல்லாப் பலன்களுக்கும் ஆதிகாரண பூதன்.

(முதல் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

101. அச்யுத: தன்னைப் பற்றியவரை நழுவ விடாதவன்.
102. வ்ருஷா கபி - தர்மமே வடிவான மகா வராக அவதாரமானவன்.
103. அமேயாத்மா - அறிய முடியாதவன்.
104. ஸர்வயோக விநிஸ்ருத: எல்லா உபாயங்களாலும் அடையத்தக்கவன்.

12. வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ் ஸம :
அமோக : புண்டரீகா÷க்ஷõ வ்ருஷகர்மா வ்ருஷா க்ருதி :

105. வஸு: சிறிது அநுகூல புத்தியுள்ளவரிடத்தும் அன்புடன் வசிப்பவன்.
106. வஸுமநா: தன்னை அடைந்தவரைப் பெருஞ் செல்வமாக நினைப்பவன்.
107. ஸத்ய: தன்னை அடைந்தவர்களுக்கு அநுகூலன்.
108. ஸமாத்மா - அடியார் எவரையும் சமமாகப் பாவிப்பவன்.
109. ஸம்மித: (அடியார்க்கு) அடங்கிய பொருளாய் இருப்பவன்.
110. ஸம - எல்லாரிடத்தும் சமமாய் இருப்பவன்.
111. அமோக: (அடியாரின்) உறவு வீண் போகாமல் காப்பவன்.
112. புண்டரீகாக்ஷ - விண்ணோர்க்குக் கண் போனவன்.
113. வ்ருஷகர்மா - நற்செயல்களைச் செய்பவன்.
114. வ்ருஷாக்ருதி - தருமமே வடிவானவன்.

13. ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வ யோநிஸ் சுசிஸ்ரவா :
அம்ருத்ஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா :

115. ருத்ர: (ஆனந்தக்) கண்ணீர் விடச் செய்பவன்.
116. பஹுசிரா: தலைவன் பலவற்றை உடையவன்.
117. பப்ரு: தாங்கி நிற்பவன்.
118. விச்வயோநி: எல்லா உலகத்தவருடன் உறவு கொண்டவன்.
119. சுசிச்ரவா: தூய சொற்களையே கேட்பவன்.
120. அம்ருத: ஆரா அமுதன்
121. சாச்வத ஸ்தாணு: என்றும் நிலைத்து நிற்பவன்.
122. வராரோஹ: அடை யத்தக்க மேலானவன் (பரமபரநாதன்)
123. மஹாதபா: எல்லையில்லாத ஞானமுடையவன். (ஞானமூர்த்தி)

14. ஸர்வகஸ் ஸர்வவித் பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந:
வேதோ வேத விதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி:

124. ஸர்வக: எல்லா உலகங்களையும் தன்னிடம் வைத்துள்ளவன்.
125. ஸர்வ வித் - எல்லாவற்றையும் அடைபவன்.
126. பாநு : விளக்கமாக இருப்பவன்.
127. விஷ்வக் ஸேந: எங்கும் எவரையும் காத்தலுக்குரிய சேனையை உடையவன்.
128. ஜநார்த்தந: பகைவர்களை அழிப்பவன்.
129. வேத: வேத சாஸ்திரங்களைத் தருபவன்.
130. வேதவித் - வேதப்பொருளை ஐயந்திரிபின்றி அறிந்தவன்.
131. அவ்யங்க - வேதாங்கங்கள் நிறைந்திருப்பவன்.
132. வேதாங்க: வேதங்களை அங்கமாக (சரீரமாக) உடையவன்.
133. வேதவித் - வேதப் பொருளான தர்மங்களை அறிந்தவன்.
134. கவி: (அனைத்தையும்) ஊடுருவிப் பார்ப்பவன்.

15. லோகாத்யக்ஷஸ் ஸுராத்ய÷க்ஷõ தர்மாத்யக்ஷ : க்ருதாக்ருத :
சதுராத்மா சதுர் வ்யூஹஸ் சதுர் தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ:

135. லோகாத்யக்ஷ: உலகங்களை நன்கு அறிந்தவன்.
136. ஸுராத்யக்ஷ - தேவர்களை நன்கு அறிந்தவன்.
137. தர்மாத்யக்ஷ: தர்மத்தை நன்கு அறிந்தவன்.
138. க்ருதாக்ருத: இகபரபலன்களை அளிப்பவன்.
139. சதுராத்மா - நான்கு வடிவங்களைத் தரிப்பவன்.
140. சதுர்வ்யூஹ: நான்கு வியூக மூர்த்திகளாக இருப்பவன்.
141. சதுர்த்தம்ஷட்ர: நான்கு முன்பற்களை உடையவன்.
142. சதுர்புஜ: நான்கு திருக்கைகளை உடையவன்.

16. ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி : புநர்வஸு

143. ப்ராஜிஷ்ணு: நான்கு திருக்கைகளுடன் கூடிய உருவத்துடன் பக்தர்களுக்குத் தன்னை ஒளிரச் செய்பவன்.
144. போஜநம் - உணவு, (அநுபவிப்பதற்குப் பொருளாய் இருப்பவன்.)
145. போக்தா - உண்பவன் (அநுபவிப்பவனாக இருப்பவன்,)
146. ஸஹிஷ்ணு: மன்னிப்பவன். (எல்லாப் பாவங்களையும் பொறுத்து அருள்பவன்.)
147. ஜகதாதிஜ: உலக ஆரம்பத்தில் இருப்பவன்.
148. அநக: குற்றமற்றவன்.
149. விஜய: வெற்றியை உடையவன் (வெற்றியை அருள்பவன்)
150. ஜேதா - வெற்றி பெறுபவன்.
151. விச்வ யோநி: உலககாரணன்.
152. புநர்வஸு: (எல்லாத் தேவர்களிடத்தும் அந்தராத்மாவாக வசிப்பவன்) வாழ்பவன்.

17. உபேந்த்ரோ வாமந: ப்ராம்சு : அமோகஸ் சுசிரூர்ஜித:
அதீந்த்ரஸ் ஸங்க்ரஹஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:

153. உபேந்த்ர: இந்திரனுக்குத் தம்பியானவன் (வாமனன்)
154. வாமனன்: ஒப்பற்ற குறள்வடிவினன் (குள்ளன்)
155. ப்ராம்சு: உயர்ந்தவன் (திரிவிக்ரமன்)
156. அமோக: பழுது படாதவன்.
157. சுசி - தூயவன் (அமலன்)
158. ஊர்ஜித: வல்லமை படைத்தவன்.
159. அதீந்த்ர: இந்திரனுக்கு மேம்பட்டவன்.
160. ஸங்க்ரஹ: எளிதில் கிரகிக்கப்படுபவன் (எளிவரும் இயல்பினன்)
161. ஸர்க - (தன்னைத் தானே பல உருவங்களில்) படைத்துக் கொள்பவன்.
162. த்ருதாத்மா-ஆன்மாக்களைத் தரித்திருப்பவன்.
163. நியம: அடக்குபவன். (அடக்கி அருள்புரிபவன்)
164. யம: (அனைத்தையும்) ஆள்பவன்.

18. வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத் ஸாஹோ மஹாபல:

165. வேத்ய: அறியக் கூடியவன். (யாவரும். அறிதற்கு எளிதானவன்)
166. வைத்ய: வித்தைகளைக் கற்றறிந்தவன், (பிறவி நோய்க்கு மருந்தை அறிந்தவன்.)
167. ஸதாயோகீ - எப்பொழுதும் விழித்தே இருப்பவன்.
168. வீரஹா - வீரர்களைக் கொல்பவன்.
169. மாதவ: வித்தைக்கு ஈசன்.
170. மது - தேனைக் காட்டிலும் இனியவன்.
171. அதீந்த்ரிய: புலன்களுக்கு அப்பாற்பட்டவன்.
172. மஹாமாய: மாயை என்னும் திரையினால், தன்னை மறைத்துக் கொள்ளும் சக்தி படைத்தவன்.
173. மஹோத்ஸாஹ: மிகவும் ஊக்கமுடையவன்.
174. மஹாபல: மிகவும் வலிமை வாய்ந்தவன்.

19. மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி:
அநிர்தேஸ்ய வபு: ஸ்ரீ மாந் அமேயாத்மா மஹா அத்ரித்ருக்

175. மஹாபுத்தி: பேரறிவாளன் (எல்லையில்லா ஞானி)
176. மஹாவீர்ய: மிகுந்த வீர்யம் உடையவன்.
177. மஹாசக்தி: மிகுந்த திறமை உடையவன்.
178. மஹாத்யுதி: மிகுந்த ஒளியுள்ளவன்.
179. அநிர்தேச்யவபு: உவமை சொல்லமுடியாத திருமேனி உடையவன்.
180. ஸ்ரீமாந்: திருமேனிக்குத் தகுந்த திருவாபரணங்களான செல்வம் படைத்தவன்.
181. அமேயாத்மா-அளவிட்டு அறியமுடியாதவன்.
182. மஹாத்ரித்ருக் - பெருமலையையும் தாங்கும் திறம் படைத்தவன்.

20. மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்பதி:
அநிருத்தஸ் சுரா நந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி:

183. மஹேஷ்வாஸ: சர மழை பொழிபவன் (வில்லாளி)
184. மஹீபர்த்தா: பூமியைத் தாங்குபவன்.
185. ஸ்ரீநிவாஸ: அலர்மேல் மங்கை உறைமார்பன்.
186. ஸதாங்கி - பக்தர்களுக்குப் புகலிடமாக உள்ளவன்.
187. அநிருத்த: ஒருவராலும் தடைசெய்ய முடியாதவன்.
188. ஸுராநந்த: அமரர்களுக்கு ஆனந்தம் அருளுபவன்.
189. கோவிந்த: தேவர்களால் துதித்தற்குரியவன் (ஏத்தும் சொல் மாலைகளைப் பெறுபவன்)
190. கோவிதாம்பதி: வேதத்தை அறிந்த ஞானிகளால் ஆராதிக்கப்படும் பகவான்.

21. மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம:
ஹிரண்ய நாபஸ் சுதபா : பத்மநாப : ப்ரஜாபதி:

191. மரீசி - கிரணமானவன் (ஒளியானவன்)
192. தமந: அடங்கச் செய்பவன்.
193. ஹம்ஸ: அன்னமாக அவதரித்தவன்.
194. ஸூபர்ண: அழகிய இறக்கைகளை உடையவன்.
195. புஜகோத்தம: திரு அனந்தாழ்வானுக்குத் தலைவன்.
196. ஹிரண்ய நாப: அழகிய நாபியை உடையவன்.
197. பத்மநாப: அழகிய தாமரையைத் தன் நாபியில் உடையவன்.
198. ஸூதபா: சிறந்த ஞான முள்ளவன்.
199. ப்ரஜாபதி: நாபித்தாமரையில் உண்டான பிரமனுக்குத் தலைவன்.

22. அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந் ஸ்திர:
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா சுராரிஹா

200. அம்ருத்யு: இறப்பில்லாதவன். (நித்ய மூர்த்தி)

(இரண்டாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

201. ஸர்வத்ருக் - அனைவரையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.
202. ஸிம்ஹ:- நரசிங்கப் பெருமான்.
203. ஸந்தாதா - பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவன்.
204. ஸந்திமாந் - தன்னைச் சேர்ந்தவரை விடாது என்றும் வைத்திருப்பவன்.
205. ஸ்திர: என்றும் நிலையாய் இருப்பவன்.
206. அஜ: பிறவாதவன். (பிறப்பில்லாதவன்)
207. துர்மர்ஷண: பகைவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒளியை உடையவன்.
208. சாஸ்தா-பகைவர்களைக் கலக்குபவன் (சாசனம் பண்ணுபவன்)
209. விச்ருதாத்மா - வியந்து கேட்கப்படும் சரித்திரம் உடையவன்.
210. ஸுராரிஹா - தேவர்களின் பகைவர்களைத் தொலைப்பவன்.

23. குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம:
நிமி÷ஷா அநிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ :

211. குருர்குருதம: பரமாசாரியன் (குருவுக்கெல்லாம் குரு)
212. தாம: உலகங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவன்.
213. ஸத்ய: அடியார்க்கு நல்லவன்.
214. ஸத்ய பராக்ரம: (வஞ்சனை அற்ற ஆற்றலுடையவன்.
215. நிமிஷ: கண்மூடி (பாகவத விரோதிகளுக்கு அருள் புரியாதவன்)
216. அநிமிஷ: கண்மூடாதவன். (கண்ணிமைக்காமல் பக்தர்களைக் காப்பவன்)
217. ஸ்ரக்வீ - மாலையணிந்தவன் (வைஜயந்தீ என்னும் மாலை அணிந்தவன்.)
218. வாசஸ்பதி - சொல்லுக்கு அதிபதி. (சொல் வல்லான்)
219. உதாரதீ - சிறந்த ஞான முடையவன்.

24. அக்ரணீர் க்ராமணீ : ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்

220. அக்ரணீ - அடியார்களை மேலும் மேலும் உயரச் செய்பவன்.
221. க்ராமணி - தலைவன்.
222. ஸ்ரீமாந் - சிறப்புடையவன்.
223. ந்யாய - நீதிமான்.
224. நேதா - கரைசேர்ப்பவன். (தின்திருவடிக் கீழ் சேர்ப்பவன்)
225. ஸமீரண: சிறந்த செயல்களைச் செய்பவன்.
226. ஸஹஸ்ரமூர்த்தா - ஆயிரம் தலைகளுடையவன்.
227. விஸ்வாத்மா - எங்கும் நிறைந்துள்ளவன்; பரவியுள்ளவன்.
228. ஸஹஸ்ராக்ஷ: ஆயிரம் கண்களை உடையவர். (விராட்ரூபி)
229. ஸஹஸ்ரபாத்: ஆயிரம் கால்களை உடையவர்.

25. ஆவர்த்தநோ நிவ்ருத் தாத்மா ஸம்வ்ருதஸ் ஸம்ப்ர மர்தந:
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீ தர:

230. ஆவர்த்தந: (உலகச் சக்கரத்தைச்) சுழலச் செய்பவன்.
231. நிவ்ருத்தாத்மா - எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன்.
232. ஸம்வ்ருத: நன்கு மறைக்கப்பட்டவன்: மறைந்துள்ளவன்.
233. ஸம்ப்ரமர்த்தந: (அஞ்ஞானமான இருளை அழித்து) உள்ளதை உள்ளபடி உணரச்செய்பவன்.
234. அஹஸ் ஸம்வர்த்தக: காலத்தை நடத்துபவன்.
235. வஹ்நி: உலகங்களைத் தாங்கிப் பரமாகாசமாக இருப்பவன்.
236. அநில:- வாழச் செய்பவன்.
237. தரணீதர:- தாங்குபவற்றையும் தாங்குபவன்.

26. சுப்ரஸாத : ப்ரஸந்நாத்மா விஸ்வத்ருக் விஸ்வபுக் விபு:
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராய்ணோ நர:

238. ஸுப்ரஸாத: மிகவும் அருள் புரிபவன்.
239. ப்ரஸந்நாத்மா - தெளிவான சிந்தை உடையவன்.
240. விச்வத்ருக் - எல்லாவற்றையும் படைப்பவன்.
241. விச்வபுக்விபு:- எங்கும் பரந்திருந்து காப்பவன்.
242. ஸத் கர்த்தா - நல்லார்களை இயல்பாகப் பாதுகாப்பவன்.
243. ஸத்க்ருத - நல்லார்களால் (சாதுக்களால்) வழிபடக்கூடியவன்.
244. ஸாது: தன்னை அண்டியவர்களுக்கு நல்லவன்.
245. ஜஹ்நு:- அடியார் அல்லாதவர்க்குத் தனது பெருமையைக் காட்டாதவன்.
246. நாராயண: நாராயணன். (எல்லா உயிர்களையும் தாங்குபவன்)
247. நர: அழியாதவன்.

27. அஸங்க்யேயோ அப்ர மேயாத்மா விஸிஷ்ட ஸ்ஸிஷ்டக்ருச் சுசி:
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்தி ஸாதந:

248. அஸங்க்யேய: எண்ணில் அடங்காதவன்.
249. அப்ரமேயாத்மா: எல்லாவற்றிலும் பரந்திருப்பவன்.
250. விசிஷ்ட:- தனிச் சிறப்புடையவன்.
251. சிஷ்டக்ருத் - (நற்குண நற்செயல்களை உடைய) சிஷ்டர்களை உயர்த்துபவன்.
252. சுசி: தூய்மையுடையவன். (தன்னியல்பான ஒளியுடையவன்)
253. ஸித்தார்த்த: எல்லாவற்றையும் உடையவன்.
254, 255. ஸித்தித:- சித்திகளை அளிப்பவன்.
256. ஸித்தி ஸாதந:- அடையும் உபாயமாக உள்ளவன்.

28. வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ரு÷ஷாதர :
வர்த்தநோ வர்த்த மாநஸ்ச விவிக்தஸ் ஸ்ருதி ஸாகர:

257. வ்ருஷாஹீ - அடையும் நாள் நல்ல நாளாக இருப்பவன்.
258. வ்ருஷப: கருணையைப் பொழிபவன்.
259. விஷ்ணு: எங்கும் பரந்திருப்பவன்.
260. வ்ருஷபர்வா - தருமமென்னும் படிகளால் அடையத்தக்கவன்.
261. வ்ரு÷ஷாதர:- தருமமே உருவான வயிற்றை உடையவன்.
262. வர்த்தந: (வழிபடுவோரை) வளர்ப்பவன்.
263. வர்த்தமாந - வளர்ச்சி அடைபவன்.
264. விவிக்த:- உலகில் யாரையும் விடத் தனிச் சிறப்புடையவன்.
265. ச்ருதி ஸாகர: வேதக்கடல் (வேத முடிவானவன்)

29. கபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸுநைக
ரூபோ ப்ருஹத் ரூபஸ் ஸிபிவிஷ்ட : ப்ரகாஸந:

266. ஸுபுஜ:- அழகிய தோள்களையுடையவன்.
267. துர்த்தர:- தடுக்க முடியாத வல்லமையுடையவன்.
268. வாக்மீ - பாராட்டும் படியான வாக்குடையவன்.
269. மஹேந்த்ர: சிறந்ததும் அழிவற்றதுமாகிய செல்வம் உடையவன்.
270. வஸுத:- தனமாகவே உள்ளவன்.
271, 272. நைகரூப:- பல உருவங்களை உடையவன்.
273. ப்ருஹத்ரூப: பெரிய உருவத்தை உடையவன்.
274. சிபிவிஷ்ட - ஒளிக்கிரணங்களிலும் வியாபித்துள்ளவன்.
275. ப்ரகாசந:- விளங்கச் செய்பவன்.

30. ஓஜஸ் தேஜோ த்யுதிதர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந:
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி:

276. ஓஜஸ் தேஜோத்யுதிதர:- வலிமை, பராக்கிரமம், ஒளி ஆகிய எல்லாம் உடையவன்.
277. ப்ரகாசாத்மா-ஒளிவடிவானவன்.
278. ப்ரதாபந: பகைவரைத் தனது கோபத்தால் எரித்துவிடுபவன்.
279. ருத்த:- சம்பத்தால் எப்போதும் நிரம்பியிருப்பவன்.
280. ஸ்பஷ்டாக்ஷர:- தெளிவாக எழுத்துகளை உச்சரிப்பவன்.
281. மந்த்ர:- மந்திரமாயிருப்பவன்.
282. சந்த்ராம் சு: வெண்மதிபோன்று குளிர்ந்த ஒளியை உடையவன்.
283. பாஸ்கரத்யுதி:- சூரியனைப்போன்ற ஒளியை உடையவன்.

31. அம்ருதாம் ஸுத்பவோ பாநு: ஸஸ பிந்துஸ் சுரேஸ்வர:
ஒளஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்ய தர்ம பராக்ரம:

284. அம்ருதாம் சூத்பவ:- அமுதமயமான கிரணங்களுடன் சந்திரனுக்குப் பிறப்பிடமாயுள்ளவன்.
285. பாநு:- சூரியன்.
286. சசபிந்து:- தீயவர்களை அழிப்பவன்.
287. ஸுரேஸ்வர:- இமையோர் தலைவன்.
288. ஒளஷதம்:- மருந்தாயிருப்பவன்.
289. ஜகத்ஸேது:- அணையாயிருப்பவன்.
290. ஸத்ய தர்மபராக்ரம:- கல்யாண குணங்களும், பராக்ரமும் என்றும் கொண்டிருப்பவன்.

32. பூதபவ்ய பவந்நாத : பவந : பாவநோ அநல:
காமஹா காம க்ருத் காந்த : காம : காம ப்ரத ப்ரபு :

291. பூதபவ்யபவந்நாத:- முக்காலங்களிலும் உள்ளவற்றுக்குத் தலைவன்.
292. பவந: சஞ்சரிப்பவன்.
293. பாவந: தூய்மை அளிப்பவன்.
294. அநல: (அருள் புரிவதில்) திருப்தி அடையாதவன்.
295. காமஹா - ஆசைகளைப் போக்குபவன்.
296. காமக்ருத் - ஆசைகளை (பக்தர்களுக்கு) வளர்ப்பவன்.
297. காந்த: விரும்பப் படுபவன்.
298. காம:- ஆசைப்படத்தகுந்தவன்.
299. காமப்ரத:- விருப்பங்களைக் கொடுப்பவன்.
300. ப்ரபு:- பிரபுவாய் இருப்பவன்.
(மூன்றாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

33. யுகாதி க்ருத் யுகா வர்த்தோ நைக மாயோ மஹாஸந:
அத்ருஸ்யோ அவ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜித நந்தஜித்

301. யுகாதிக்ருத் - யுக ஆரம்பத்தின் படைப்புக் கடவுள்.
302. யுகாவர்த்த: யுகங்களைத் திரும்பத் திரும்ப வரும்படிச் செய்பவன்.
303. நைகமாய: அநேக மாயைகளை உடையவன்.
304. மஹாசந: (உலகமுண்ட) பெருவயிற்றன்.
305. அதருசய: காணமுடியாதவன்.
306. வ்யக்த ரூப: தெளிவாகக் காணப்படும் திருமேனியை உடையவன்.
307. ஸஹஸ்ரஜித் - காலங்களை வெற்றி கொள்பவன்.
308. அநந்தஜித் - எல்லை காண முடியாத திருமேனியை உடையவன்.

34. இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட : ஸிகண்டீ நகு÷ஷா வ்ருஷ
க்ரோதஹா க்ரோத க்ருத் கர்த்தா விஸ்வ பாஹுர் மஹீதர:

309. இஷ்ட அவிசிஷ்ட: வேறுபாடு எதுவுமின்றி விரும்பப்படுபவர்.
310. சிஷ்டேஷ்ட: பெரியோரால் விரும்பப்படுபவன்.
311. சிகண்டி - சிறந்த தலையணியுடையவன்.
312. நஹுஷ: கட்டுபவன்.
313. வ்ருஷ: (எல்லா விருப்பங்களையும்) பொழிபவன்.
314. க்ரோதஹா - கோபத்தை வென்றவன்.
315. க்ரோதக்ருத் - கோபமுள்ளவன்.
316. கர்த்தா - வெட்டுபவன்.
317. விச்வபாஹு: நன்மை செய்யும் புயங்களை உடையவன்.
318. மஹீதா: பூமியைத் தாங்கி நிற்பவன்.

35. அச்யுத: ப்ரதித :ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ:
அபாந்நிதி ரதிஷ்டாந மப்ரமத்த : ப்ரதிஷ்டித :

319. அச்யுத: நழுவாதவன்.
320. ப்ரதித: புகழ்பெற்றவன்.
321. ப்ராண: உயிரானவன்.
322, 323. வாஸவாநுஜ: இந்திரனுக்குப் பின் பிறந்தவன்.
324. அபாம்நிதி: கடல்களுக்கு ஆதாரமானவன்.
325. அதிஷ்டாநம்: ஆசனமாக இருந்தவன்.
326. அப்ரமத்த: ஊக்கம் உடையவன், விழிப்புடையவன்.
327. ப்ரதிஷ்டித: நிலை பெற்றவன்.

36. ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயு வாஹந:
வாசுதேவோ ப்ருஹத் பாநு ராதிதேவ : புரந்தர:

328. ஸ்கந்த: வற்றச் செய்பவன்.
329. ஸ்கந்ததர: அசுரர்களை அழித்த தேவ சேனாதிபதியைத் தாங்குபவன்.
330. துர்ய: தாங்குபவன்.
331. வரத: வரங்களைத் தருபவன்.
332. வாயு வாஹந: வாயுவை நடத்திச் செல்பவன்.
333. வாஸுதேவ: வாசுதேவன். (எங்கும் வசிப்பவன்)
334. ப்ருஹத்பாநு: மிக்க ஒளியையுடையவன்.
335. ஆதிதேவ: ஊழி முதல்வன்.
336. புரந்தர: இருப்பிடங்களை (அசுரர்களின்) பிளப்பவன்.

37. அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸுரஸ் ஸெளரிர் ஜநேஸ்வர:
அநுகூலஸ் ஸதாவர்த்த : பத்மீ பத்ம நிபேக்ஷண:

337. அசோக: துன்பங்களை அழிப்பவன்.
338. தாரண: தாண்டுவிப்பவன்.
339. தார: காப்பவன்
340. சூர: சமர்த்தன்.
341. சௌரி: சூரனின் பிள்ளை.
342. ஜநேச்வர: பெருவெள்ளம் போன்ற செல்வம் படைத்தவன்.
343. அநுகூல: எல்லைக்குள் நிற்பவன்.
344. சதாவர்த்த: சுழல்கள் பலவற்றை உடையவன்.
345. பத்மீ - தாமரையைக் கையில் உடையவன்.
346. பத்மநிபேக்ஷண: இனிய பார்வையை உடையவன்.

38. பத்ம நாபோ அரவிந்தாக்ஷ : பத்ம கர்ப்பஸ் ஸரீரப்ருத்
மஹர்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹா÷க்ஷõ கருட த்வஜ:

347. பத்மநாப: தாமரை மலரை உந்தியில் பெற்ற தனிப்பெரும் நாயகன்.
348. அரவிந்தாக்ஷ: செந்தாமரைக் கண்ணன்.
349. பத்ம கர்ப்ப: தாமரையை ஆசனமாக உடையவன். (இதயக் கமலத்தில் எழுந்தருளியிருப்பவன்.)
350. சரீரப்ருத் - சரீரத்தைத் தாங்குபவன்.
351. மஹர்த்தி: பெருஞ்செல்வம் உடையவன்.
352. ருத்த: விருத்தியடைபவன்.
353. வ்ருத்தாத்மா - நிறைவுற்ற ஆத்ம வடிவினன்.
354. மஹாக்ஷ: சிறந்த அச்சினை உடைய வாகனமுடையவன்.
355. கருடத்வஜ: கருடக்கொடி உடையவன்.

39. அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர் ஹரி:
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ் ஜய:

356. அதுல: ஒப்பில்லாதவன்.
357. சரப: அழிப்பவன்.
358. பீம: (தன் ஆணையைக் கடப்பவருக்கு) பயங்கரன்.
359. ஸமயஜ்ஞ: காலம் அறிந்தவன்.
360. ஹவிர்ஹரி: அவியுணவை ஏற்பவன்.
361. ஸர்வலக்ஷணலக்ஷண்ய: எல்லாச் சுபலட்சணங்களும் பொருந்தியவன்.
362. லக்ஷ்மீவாந்- பூமகளின் கேள்வன்.
363. ஸமிதிஞ்ஜய: வெற்றி மகளை உடையவன்.

40. விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ:
மஹீதரோ மஹாபாகோ வேகவாந் அமிதாஸந:

364. விக்ஷர: குறைவற்றவன்
365. ரோஹித: சிவந்தவன்.
366. மார்க்க: தேடப்படுபவன்.
367. ஹேது: காரணமாயிருப்பவன்.
368. தாமோதர: உலகங்களை வயிற்றில் தாங்குபவன்.
369. ஸஹ: பொறுமையுள்ளவன்.
370. மஹீதர: பூமியைத் தாங்குபவன்.
371. மஹாபாக - மகா பாக்யமுடையவன்.
372. வேக வாந் - வேகம் உள்ளவன்.
373. அமிதாசந: பெருத்த உணவு உண்பவன்.

41. உத்பவ : ÷க்ஷõபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப : பரமேஸ்வர:
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ:

374. உத்பவ: பந்தத்தை விலக்குபவன்.
375. ÷க்ஷõபண: (படைக்குங்காலத்தில்) கலக்குபவன்.
376. தேவ: விளையாடுபவன்.
377. ஸ்ரீகர்ப்ப: திருமகளைப் பிரியாதவன்.
378. பரமேச்வர: பெரிய மேன்மையை உடையவன்.
379. கரணம்: உபாயமாயிருப்பவன்.
380. காரணம்: இயக்குபவன்.
381. கர்த்தா: செயல்படுபவன்.
382. விகர்த்தா: மாறுதல் அடைபவன்.
383. கஹந - அறிவுக் கெட்டாதவன்.
384. குஹ - காப்பாற்றுபவன்.

42. வ்யவஸாயோ வ்யவஸ் தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநதோ த்ருவ:
பரர்த்தி : பரம ஸ்பஷ்டஸ் துஷ்ட : புஷ்டஸ் சுபேக்ஷண:

385. வ்யவஸாய: விண்மீன்களுக்கு ஆதாரமாய் இருப்பவன்.
386. வ்யவஸ்தாந: காலமாறுதல்களுக்கு அடிப்படையானவன.
387. ஸம்ஸ்தாந: எல்லாவற்றையும் ஒரு கால கட்டத்தில் முடிப்பவன்.
388. ஸ்தாநத: மேலான வீட்டினை (ஸ்தானத்தை) அளிப்பவன்.
389. த்ருவ: நிலைத்திருப்பவன்.
390. பரர்த்தி: மேலான குணபூர்த்தி உள்ளவன்.
391. பரமஸ்பஷ்ட: வெளிப்படையாகக் காணும் மேன்மையுடையவன்.
392. துஷ்ட: மகிழ்ச்சி நிறைந்தவன்.
393. புஷ்ட : நிரம்பியவன்.
394. சுபேக்ஷண: மங்களமான பார்வையுடையவன்.

43. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோநய:
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம:

395. ராம: யாவரையும் மகிழச் செய்பவன்.
396. விராம: பிறரை ஓயச் செய்பவன்.
397. விரத: ஆசையை அறவே நீக்கியவன்.
398. மார்க்க: தேடப் படுபவன்.
399. நேய: கட்டளையிடப் பெறுபவன்.
400. நய: நடத்துபவன்.

(நான்காம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
401. அநய: பகைவரால் அணுக முடியாதவன்.
402. வீர: வீரத்தால் எதிரிகளை நடுங்கச்செய்பவன்.
403. சக்திமதாம் ச்ரேஷ்ட - சக்தி படைத்தவருள் சிறந்தவன்.
404. தர்ம: தருமமே வடிவானவன்.
405. தர்ம விதுத்தம: தருமம் அறிந்தவருள் முதல்வன்.

44. வைகுண்ட : புருஷ ப்ராண : ப்ராணத : ப்ரணவ :ப்ருது:
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ:

406. வைகுண்ட: தடைகளைப் போக்கித் தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்.
407. புருஷ: தூய்மை அளிப்பவன்.
408. ப்ராண: உய்விப்பவன் (உயிராயிருப்பவன்.)
409. ப்ராணத: உயிரை அளிப்பவன்.
410. ப்ரணம்: வணங்கத்தக்கவன்.
411. ப்ருது: பெரும்புகழுக்குரியவன்.
412. ஹிரண்ய கர்ப்ப: பொன்புதையலைப் போன்றவன்.
413. சத்ருக்ந: பகைவர்களை முடிப்பவன்.
414. வ்யாப்த: அன்பு, கருணை போன்றவற்றால் நிரம்பியவன்.
415. வாயு: செல்பவன் (இருக்கும் இடம் தேடி அருள் புரிபவன்)
416. அதோக்ஷஜ: அநுபவிக்க அனுபவிக்கக் குறையாதவன்.

45. ருதுஸ் சுதர்ஸந : கால : பரமேஷ்டீ பரிக்ரஹ :
உக்ரஸ் ஸம்வத்ஸரோ த÷க்ஷõ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண:

417. ரிது: அணுகுபவன்: (தானே வந்து புகுபவன்)
418. ஸுதர்சந: பார்வைக் கினியவன்.
419. கால: தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்.
420. பரமேஷ்டீ: பரமபதத்தில் உள்ளவன்.
421. பரிக்ரஹ: யாவற்றையும் தன்னுடன் சேர்த்துக் கொள்பவன்.
422. உக்ர: (பகைவர்களிடத்துக்) கோபமானவன்.
423. ஸம்வத்ஸர: பொருந்தி வாழ்பவன்.
424. தக்ஷ: விரைந்து செயல்படுபவன்.
425. வச்ராம: ஓய்வெடுக்கும் இடமாயிருப்பவன்.
426. விச்வ தக்ஷிண: எல்லார்க்கும் நல்லவன்.

46. விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு : ப்ரமாணம் பீஜமவ்யயம்
அர்த்தோ அநர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந:

427. விஸ்தார: விஸ்தார மானவன்.
428. ஸ்தாவரஸ்தாணு - ஆறியிருப்பவன். (மனச்சாந்தியுடையவன்)
429. ப்ரமாணம்: பிரமாண மானவன். (அதிகாரியாயிருப்பவன்)
430. பீஜம் அவ்யயம் - அழிவில்லாத வித்தாக இருப்பவன்.
431. அர்த்த: அடையத்தக்கதான பயனாக உள்ளவன்.
432. அநர்த்த: அற்பப் பயனாய் இருப்பவன்.
433. மஹாகோச: வைத்த மாநிதி: (ஊனமில் செல்வன்)
434. மஹா போக: இன்பங்கள் அனைத்தும் அளிப்பவன்.
435. மஹாதந: அளவற்ற பெருந்தனமாய் இருப்பவன்.

47. அநிர் விண்ணஸ் ஸ்தவிஷ்டோ பூர் தர்ம யூபோ மஹாமக:
ந க்ஷத்ர நேமிர் ந க்ஷத்ரீ க்ஷம: க்ஷõமஸ் ஸமீஹந:

436. அநிர்விண்ண: சோம்பல் இல்லாதவன்.
437. ஸ்தவிஷ்ட: பெருத்தவன் (ஸ்தூல வடிவினன்)
438. பூ: அனைத்தையும் தாங்குபவன்.
439. தர்மயூப: தர்மத்தைத் தலைமையாகக் கொண்டவன்.
440. மஹாமக: வேள்வி வடிவானவன்.
441. நக்ஷத்ர நேமி: விண்மீன்களை இயக்குபவன்.
442. நக்ஷத்ரீ: விண்மீன்களை உடையவன்.
443. க்ஷம: பொறுமையுள்ளவன்.
444. க்ஷõம: குறைந்து உள்ளவன் (நுட்பமானவன்)
445. ஸமீஹத: பிறரை இயங்கச் செய்பவன்.

48. யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாம் கதி:
ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்

446. யஜ்ஞ: யாகமாக உள்ளவன்.
447. இஜ்ய: யாகத்தால் வழி படத்தக்கவன்.
448. மஹேஜ்ய: (பிறதெய்வங்களின்) சிறந்த வழிபாட்டையும் ஏற்பவன்.
449. க்ரது: செய்யப்படும் அனைத்துக் கர்மாக்களாலும் ஆராதிக்கப்படுபவன்.
450. ஸத்ரம்: ஸ்திரரூபியானவன் (ரிஷிகளால் பல யாகங்களால் பல காலங்களில் செய்யப்படும் யாக வடிவானவன்.)
451. ஸதாம்கதி: சாதுக்களுக்கு அடையத்தக்கவன்.
452. ஸர்வதர்சீ: எல்லாவற்றையும் பார்த்து அறிபவன்.
453. நிவ்ருத்தாத்மா: எந்தப் பொருளிலும் பற்றில்லாத மனமுடையவன்.
454. ஸர்வஜ்ஞ: தானே சிறந்த தர்மம், தானே சிறந்த பயன் என்பதை அறிந்தவன்.
455. ஜ்ஞாநம் உத்தமம்: மேலான ஞானமயமானவன்.

49. சுவ்ரதஸ் சுமுகஸ் ஸூக்ஷ்மஸ் சுகோஷஸ் சுகதஸ் சுஹ்ருத் :
மநோ ஹரோ ஜித க்ரோதோ வீரபாஹுர் விதாரண:

456. ஸுவ்ரத: கர்மத்தை விடாமல் அநுஷ்டிப்பவன்.
457. ஸுமுக: மலர்ந்த திருமுகம் உடையவன்.
458. ஸுக்ஷம: மிகவும் நுட்பமானவன்.
459. ஸுகோஷ: வேதத்தின் குரலாக உள்ளவன். (வேதங்களாலும், உபநிஷதங்களாலும் ஒலிக்கப்படுபவன்.)
460. ஸுகத: மேலான இன்பமயமான பயன் தருபவன்.
461. ஸுஹ்ருத்- சிறந்த நண்பனாக இருப்பவன்.
462. மநோஹர: மனதைக் கவரக் கூடியவன்.
463. ஜிதக்ரோத: கோபத்தை வென்றவன்.
464. வீரபாஹு: மிக்க பலமுடைய கைகளையுடையவன்.
465. விதாரண: வெட்டுபவன்.

50. ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்:
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்ந கர்ப்போ தநேஸ்வர:

466. ஸ்வாபந: தூங்கச் செய்பவன். (எதிரிகளை நினைவிழக்கச் செய்பவன்.)
467. ஸ்வவச: தன் வசத்தில் எப்போதும் இருப்பவன்.
468. வ்யாபீ: எங்கும் பரந்திருப்பவன்.
469. நைகாத்மா: அநேக உருவங்களில் இருப்பவன்.
470. நைகர்மக்ருத்: அநேக செயல்களைச் செய்பவன்.
471. வத்ஸர: எல்லாப் பொருளிலும், எல்லாரிடத்தும் உள்ளுறைபவன்.
472. வத்ஸல: அன்புடையவன்.
473. வத்ஸீ: குழந்தைகளை (ஆன்மாக்களை) உடையவன்.
474. ரத்ந கர்ப்ப: (சங்கு சக்கரம்) முதலான நிதியை யுடையவன்.
475. தநேஸ்வர: ஐஸ்வர்யங்களை உடனே அளிப்பவன்.
-----------------------------------------

கருத்துகள் இல்லை: