புதன், 2 அக்டோபர், 2019

18:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

                18:ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                              (கி.பி.375-கி.பி.385 வரை)

ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர்.தந்தை பெயர் மதுரா நாதர்.பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் மாதவர்.இவருடைய யோக வல்லமை காரணமாக'ஸ்ரீயோகி திலகர்'என்று மக்களாள் கொண்டாடப்பட்டவர்.இவர் காலத்தில் நரேந்திராதித்யன் காஷ்மீர் மன்னனாக இருந்தான்.இவருடைய மருமகன் சுரேந்திரனும் ஒரு சிற்றரசனே.சுரேந்திரனின் சபையில்'துர்தீதிவி'என்ற நாஸ்திகன்,ஆஸ்தான வித்வானாக புகழ் பெற்றிருந்தான்.ஸ்ரீ யோகி திலகர் பலரை வாதில் வென்ற அனுபவம் இருந்ததால் இவனையும் வாதில் வென்றார்.இதை அறிந்த நரேந்திர ஆதித்யன் பெரும் வியப்போடு இவர் காலடியில் விழுந்து வணங்கி"இன்று முதல் இந்தகாஷ்மீர் அரசுரிமை உங்களுடையது.உங்கள் ஆணைப்படி செயல்படுவேன்"எனக் கூறினான்.அப்பேற்பட்ட பெருமை வாய்ந்த இந்த குருரத்தினம் பத்தாண்டு காலமே குருபீடத்தை அலங்கரித்தார்.கி.பி.385-ஆம் ஆண்டு,தாருண வருடம்,மார்கழி மாதம்,வளர்பிறை பிரதமை அன்று உஜ்ஜயனி அருகில் சித்தியடைந்தார்.