செவ்வாய், 8 அக்டோபர், 2019

நமது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகளைப் பெற:-

நமது வீட்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் அன்று வருகை தருவர். வந்து,அமாவாசை முடியும் வரை இரண்டு நாட்கள் வரை தங்குவர்.

அவர்கள் வருவதும்,வந்து நம்மை ஆசிர்வாதிப்பதும் யுகம் யுகமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.

அப்படி வரும் போது அவர்கள் தங்கும் பொருட்கள் பட்டியல்:

#உரல்

#ஆட்டுக்_கல்,

#செம்புப்_பாத்திரம்,

#நெல்_மூட்டை,

#அரிசிப்பானை,

#நறுமணம்_தரும்_பூக்கள்,

#மூங்கிலில்_செய்யப்பட்டடபொருட்கள்,

#சுரைக்_குடுவை,

#துளசி_மாடம்,

#பசு,

#மிருதங்கம்,

#மாங்கல்யச்_சரடுகள்,

#வெட்டி_வேர்,

#மெட்டி,

#மாசிக்காய்,

#சீந்தல்_கொடி,

#பிரண்டை,

#கஸ்தூரி_மஞ்சள்,

#பஞ்சபாத்திரமும்
உத்திரிணியும்,

#உலக்கை,

#முறம்,

#மண்பானை,

#சந்தனக்_கல்,

#சந்தனக்_கட்டை,

#அம்மி

இவைகளில் ஏதாவது 5 பொருட்களாவது நமது வீட்டில் இருப்பது அவசியம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வந்தாலே நமது அனைத்து கடன்/நோய்/எதிரி/வருமானப் பற்றாக்குறை முழுமையாக நீங்கிவிடும்.

மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம் அல்லது ஆண்டுக்கு மூன்று முறையாவது (ஆடி அமாவசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை) அல்லது புரட்டாசி அமாவாசையிலாவது செய்து வர வேண்டும்.

கூடவே மாதம் தோறும் குலதெய்வ வழிபாடு மற்றும் மாதம் தோறும் சிவராத்திரியன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால் போதுமானது.

கால.மாற்றத்தில் அவர் அவர்களின் செயல்பாடுகள் மூலமாக மேலே கூறப்பட்ட பொருட்கள் நமது வீட்டில் இல்லாமல் போய்வி்ட்டது

எவர் வீட்டிலும் இவை அனைத்தும் இருக்கின்றனவோ அவர்களுக்கு அவர்களது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.