புதன், 16 செப்டம்பர், 2020

13:ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி. பி. 235 - கி.பி. 272 வரை}

நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் அலங்கரித்துளனர்.

 
13:ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி. பி. 235 - கி.பி. 272 வரை}




ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கெடில நதிக்கரையில் உள்ள சிற்றூரில் பிறந்த அந்தண ரத்தினமாவார். ஸ்ரீதர பண்டிதர் இவருக்கு தந்தையாகும் பாக்கியத்தை பெற்றவர். இவருக்கு பெற்றோர்கள் வைத்த நாமதேயம் சேஷய்யா. 'குரு எவ்வழி சீடர் அவ்வழி' என்கிறபடி குருவைப் போல இவரும் ஸ்ரீ காமகோடி பீட நிர்வாகத்தை சிஷ்யரிடம் ஓப்படைத்து மௌன விரதம் மேற்கொண்டு அவதூதர் போல பிரம்ம வரிஷ்டராய் காஞ்சி நகர்ப்புறத்தில் இருந்தார். கி. பி. 272-ல் கர வருஷம் மிருகசீரிஷம், சுக்லப்பிரதமையன்று காஞ்சியில் ஸ்ரீ காயாரோஹணேஸ்வரர் ஆலயத்திலுள்ள சிவலிங்கத்தோடு ஐக்கியமாகி சித்தியடைந்தார்.

12:ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி {கி. பி. 172 - கி. பி . 235}

நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

12:ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி {கி. பி. 172 - கி. பி . 235}




ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1

பாலாற்றங்கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். இவர் வாத்ஸ்யாயன கோத்திரம். தந்தை பெயர் ஸ்ரீ வத்ஸபட்டர். பெற்றோர் இவருக்கு வைத்த நாமதேயம் ஹரி. இவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதியிடம் ஸ்ரீ மட நிர்வாகத்தை ஒப்படைத்து 'சார்வ பௌம' என்னும் சிறப்பான யோக நிஷ்டையைக் கடைபிடித்தவர். கி. பி.235-ஆம் ஆண்டு ஆனந்த வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷ நவமியன்று சேஷாசலத்திலுள்ள ஒரு குகையில் மறைந்தருளி அழியாப் பேரானந்தம் அடைந்தவர்.